Showing posts with label DANCE. Show all posts
Showing posts with label DANCE. Show all posts

Tuesday, 9 February 2021

HOW DEVADASI DANCE BECOME BHARATHA NATYA THRO` CENTURIES

 

HOW DEVADASI DANCE BECOME 

BHARATHA NATYA THRO` CENTURIES


தமிழர் கலாசாரத்தின் தேவதாசி சதிர் நடனம், 

பரதநாட்டியமாக மாறியது எப்படி? 

#தமிழர்_பெருமை

அபர்ணா ராமமூர்த்தி

பிபிசி தமிழ்

6 செப்டெம்பர் 2020


சோழ சேர பாண்டிய காலத்தில் இருந்தே கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் எந்தளவிற்கு உயர்ந்த மரியாதை அளிக்கப்பட்டது என்பதை பல வரலாற்று நூல்கள் நமக்கு கூறுகின்றன.பட மூலாதாரம்,ADOC-PHOTOS / GETTY

படக்குறிப்பு,

சோழ சேர பாண்டிய காலத்தில் இருந்தே கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் எந்தளவிற்கு உயர்ந்த மரியாதை அளிக்கப்பட்டது என்பதை பல வரலாற்று நூல்கள் நமக்கு கூறுகின்றன.


(தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் 12வது கட்டுரை.)


தேவதாசிகள். இந்த சொல்லின் அர்த்தம் இன்று வேறாக இருக்கலாம். ஆனால், இன்று தமிழகத்தின் பாரம்பரிய நடனமாக விளங்கும் பரதக் கலைக்கு அவர்கள்தான் முன்னோடிகள்.


தமிழ்நாட்டின் பெருமைமிக்க கலாசாரமாக அறியப்படும் பரதநாட்டியத்தை, இந்தியாவில் மட்டுமல்லாது, பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் கற்றுக்கொள்ள விரும்புகின்றனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் பலர் இந்த நடனத்தை கற்றுக் கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


பரதத்தில் அசத்தும் பல்கேரிய பெண்மணி: இந்திய நடனங்களுக்காக உலகளவில் பிரசாரம்

அந்தளவிற்கு தமிழகத்தின் முகமாக இருக்கும் பரதநாட்டியத்தின் தொடக்க வடிவமான சதிர் நடனம் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது.


சோழ சேர பாண்டிய காலத்தில் இருந்தே கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் எந்தளவிற்கு உயர்ந்த மரியாதை அளிக்கப்பட்டது என்பதை பல வரலாற்று நூல்கள் நமக்கு கூறுகின்றன.


சதிர் நடனம், அதன் வரலாறு, இந்த கலை, பரதநாட்டியமாக மாறியது எப்படி என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.


தேவதாசிகளின் சதிர் நடனம்

தேவ என்றால் 'கடவுள்'. தாசி என்பதற்கு அர்த்தம் 'சேவகர்'. இறைவனுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் தேவதாசிகள்.


தேவரடியார்கள் என்றும் அழைக்கப்படும் இவர்கள், ஆடல், பாடல் என பல கலைகளில் வித்தகர்களாக இருந்தார்கள். இறைவனை திருமணம் செய்து கொள்ளும் இவர்களின் பணி, இறைவனுக்காக மட்டுமே இருக்கும்.



தேவதாசிகளின் சதிர் நடனம்

பட மூலாதாரம்,CHRISTOPHER PILLITZ /GETTY

இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்த பெண்கள் சாகித்யா, சங்கீத, சாஷ்திரா ஆகிய மூன்றையுமே கற்றுத் தேர்ந்தவர்களாக இருந்தனர் என்றும் அவர்களின் சதிர் நடனம் என்பது கடவுள் வழிபாட்டின் ஒரு வடிவமாக இருந்தது என்கிறார் நாட்டிய வரலாற்றாய்வாளர் ஆஷிஷ் மோகன் கோகர்.


சதிர் நடனம் குறித்தும், அது பிற்காலத்தில் பரதநாட்டியமாக எவ்வாறு வடிவம் பெற்றது என்பது குறித்தும் பல ஆராய்ச்சிகளை இவர் மேற்கொண்டிருக்கிறார்.


கடந்த நூற்றாண்டில்தான் சதிர் நடனம், பரதநாட்டியமாக உறுபெற்றது என்று அவர் கூறுகிறார்.


தமிழ் வரலாற்றில் நாட்டியம்

தமிழில் நடனக்கலையை நாட்டியம், கூத்து, ஆடல், நர்த்தனம் என்று பல வகைகளாக அழைத்து வந்துள்ளனர்.


சங்கம் மருவிய காலத்திலேயே பரதநாட்டிய முறை இருந்தது என்பதை சிலப்பதிகாரம் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.


இந்நூலில் இந்நாட்டிய முறை குறித்த கருத்துகள் மிகுதியாக காணப்படுகின்றன.


தேவதாசி மரபு கொண்ட சித்தராபதியின் மகளான மாதவி, தனது 5 வயதிலேயே நாட்டியம் கற்க தொடங்கி, பின்னர் 12 வயதில் தலைசிறந்த நடனக்கலைஞராக, காவேரி பூம்பட்டினத்தில் நடந்த இந்திர திருவிழாவில் மன்னர் முன் நடனமாடினார். மனம் மகிழ்ந்து போன சோழ மன்னன் மாதவிக்கு 1008 பொற்காசுகளையும், தலைகோல் பட்டத்தை வழங்கி கௌரவித்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.


உயர்ந்த நிலையில் இருந்த சதிர் நடனக் கலைஞர்கள்

கடவுளுக்கு மட்டுமே சேவை செய்ய தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தேவதாசிகளுக்கு சோழர் காலத்தில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் தரப்பட்டதாக கூறுகிறார் வரலாற்றாய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன்.



உயர்ந்த நிலையில் இருந்த சதிர் நடனக் கலைஞர்கள்

பட மூலாதாரம்,INDIAPICTURES

"கோவிலில் பணிபுரிந்த இவர்கள் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்தார்கள். பல கோயில்களுக்கு தானம் செய்திருக்கிறார்கள். எந்த விதத்திலும் அவர்கள் தாழ்வாக நடத்தப்படவில்லை. சோழர் காலத்தில் எந்த சதிர் நடனக்கலைஞரும் மன்னரின் அரண்மனையிலோ, அந்தப்புரத்திலோ ஆடியதாக வரலாற்றில் இல்லை. கவின் கலைகள் அனைத்தும் கோயில்களில் மட்டுமே அரங்கேற்றப்பட்டன. அவர்களுக்கு தலைமை கடவுள் மட்டுமே" என்று அவர் கூறுகிறார்.


"உதாரணமாக தஞ்சை பெரிய கோயில். 400க்கும் மேற்பட்ட தேவதாசிகள் அங்கு இருந்தார்கள். தேவாரம் பாடுபவர்கள் 50 பேர், 200க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் இருந்தார்கள். இவர்கள் அனைவருக்கும் கோயில் கஜானாவில் இருந்துதான் ஊதியம் வழங்கப்படும். ஆனால், கோயில் நிர்வாகத்தில் பணிபுரிபவர்களுக்கு அரச கஜானாவில் இருந்து ஊதியம் வழங்கப்படும். அரச கஜானாவில் இருந்து தேவரடியார்களுக்கு நிதி சென்றால், அது மன்னருக்கு அடிமை என்ற பொருள் ஆகிவிடும் என்பதால், அவர்களுக்கு கோயில் கஜானாவில் இருந்து வழங்கப்பட்டது. அதாவது அவர்கள் கடவுளுக்கு மட்டுமே அடிமை என்று அர்த்தம். இவை அனைத்தும் கல்வெட்டுகளில் இருக்கிறது."


10ஆம் நூற்றாண்டின் இறுதியில், பல தேவதாசிகளும் செல்வந்தர்களாக இருந்ததற்கான சான்று இருப்பதாக நாட்டிய வரலாற்றாய்வாளர் ஆஷிஷ் மோகன் எழுதியிருக்கிறார்.


முக்கியமாக 9 மற்றும் 12ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையேயான சோழர் காலத்தில் அவர்கள் செல்வ செழிப்பாக இருந்துள்ளனர்.


மன்னர்கள் சிலர் தேவதாசிகளின் நடனத்தால் ஈர்க்கப்பட்டு, கிராமங்களுக்கு அவர்களின் பெயரை சூட்டியிருக்கிறார்கள் என்று எழுதியுள்ள ஆஷிஷ், செல்வம் மிகுந்து இருந்த தேவதாசிகள் கோயில் சேவைகளுக்காக தங்க நகைகள், விலக்குகள், தட்டுகள், எல்லாம் வழங்கியது உண்டு என்கிறார்.


ராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியா மற்றும் கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன்

கரிகாலன் கட்டிய கல்லணை: தமிழர்களின் நீர் மேலாண்மை குறித்து நீங்கள் அறிவீர்களா?

தமிழ் ஏன் உலகச் செம்மொழிகளில் ஒன்று? அதன் சிறப்பும் தொன்மையும் என்ன? #தமிழர்_பெருமை

"நாயக்க மன்னர்கள் காலத்தில் அவர்கள் ஆடல் மகளிராக மட்டுமில்லை. இன்று எப்படி ராஜீய ரீதியான அதிகாரிகள் நிலை இருக்கிறதோ, அதற்கு நிகரான இடத்தில் இருந்தவர்கள் தேவதாசிகள். அவர்களில் கலை கேளிக்கைக்கானது கிடையாது," என்கிறார் நாட்டியக் கலைஞரும், நாட்டியத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஸ்வர்ணமால்யா.


சோழ, பாண்டிய காலம் முடிந்து 14 - 15ஆம் நூற்றாண்டில் வடக்கில் இருந்து முஸ்லிம் படை தமிழகத்திற்கு வந்தபோது இந்த நிலை மாறியது என்று குறிப்பிடும் குடவாயில் சுப்பிரமணியம், அவர்கள் கோயில்கள் மற்றும் அவற்றின் வளங்களை சூறையாடியதோடு, இந்த நடனக்கலைஞர்களை போகப்பொருளாக பயன்படுத்தினார்கள் என்கிறார். அதைத் தொடர்ந்து வந்த விஜயநகர பேரரசும், இவர்களை சரியாக நடத்தவில்லை என்பதால் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், கோயில்களில் நடனம் ஆடுவதற்கு தடை விதிக்கப்பட்டது என்று தெரிவிக்கிறார்.


ஆதரவை இழந்த சதிர் நடனக் கலைஞர்கள்

சதிர் நடனம் என்பது பரதநாட்டியமாக மாறியது குறித்து நாட்டிய வரலாற்றாய்வாளர் ஆஷின் மோகன் கூறுகையில், "தேவதாசிகளின் நடனம் என்பது கேளிக்கை அல்லது பொழுதுபோக்கிற்காக இருக்கவில்லை. அவர்களின் நடனம் இறை வழிபாட்டின் ஒருமுறை. கலை, இசை, நடனம் எல்லாம் கோயில்களுக்கானது.


பண்டைய காலத்தில் ஒரு கிராம பொருளாதாரத்தில் முக்கிய பங்கு கோயில்களுக்கு உண்டு. மக்கள் அதிகம் கூடும் இடமாகவும் அது இருந்தது. அங்கு தேவதாசிகள் நடனம் ஆடுவதை பக்தர்கள் பார்ப்பார்கள். அவர்களுக்கு சம்ஸ்கிருதம், கீர்த்தனை எதுவும் தெரியாது என்றாலும் அவர்கள் அதனை கண்டு களிப்பார்கள்.


கோயில் சமூகத்தில் முக்கிய பங்கு வகித்தது.


பின்னர் 1880களில் பிரிட்டிஷ் காலத்தில் கோயில்களில் நடனம் ஆடும் வழக்கத்திற்கு தடை விதித்தார்கள். அவர்களின் ஆட்சியில் மன்னர்கள், ஜமீன்தார்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். அதன் விளைவாக கோயில்களும், வளங்களும் பாதிக்கப்பட்டன. அதனால் கோயிலுக்கு சொந்தமான தேவதாசிகளும் நேரடியாக பாதிக்கப்பட்டனர். பிரிட்டிஷ் படையால் கிராம பொருளாதாரம் அடிபட கோயில்களிலேயே இருந்து வணங்கி சேவை செய்து கொண்டிருந்தவர்கள், இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்."



ஆதரவை இழந்த சதிர் நடனக் கலைஞர்கள்

பட மூலாதாரம்,ARCHIVE PHOTOS / GETTY

ஆனால், வடக்கில் இருந்த முஸ்லிம், முகலாய மற்றும் பாரசீக படையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறும் ஆஷீஷ் மோகன், பிரிட்டிஷ் விதித்த தடையே 18,19ஆம் நூற்றாண்டுகளில் தேவதாசிகள் சிதறிப்போக காரணமாக அமைந்ததாக கூறுகிறார்.


"18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, வளங்கள் பொருளாதாரம் சிதைந்து போக, மன்னர்களின் ஆதரவும் இல்லை. அதனால் சிறு கோயில்களால் தேவதாசிகளுக்கு ஆதரவளிக்க முடியாமல் போனது. இதனால் அவர்களின் கலையும் பாதிப்புக்குள்ளானது. இந்த காரணத்தால் வேறு தொழில் தேடி அவர்கள் பயணிக்க ஆரம்பித்தனர்."


ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்ட தேவதாசிகள் பலர், பிழைப்பு தேடி மெட்ராஸ், மைசூர் போன்ற பெரும் மாகாணங்களுக்கு செல்லத் தொடங்கினர்.


தேவதாசி முறை ஒழிப்பு

நெருக்கடி காரணத்தினால் தேவதாசிகள் அப்போதைய மெட்ராசில் விலைமாதர்களாக ஆனார்கள், இல்லை அந்த நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்று வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றன.


இந்நிலையில், தேவதாசிகள் முறை என்பது பெண்களை முன்னிலைப்படுத்துவது என்பதால், இந்த ஆணாதிக்க சமூகத்தில் அவர்களின் நடத்தை கேள்விக்குறியாகவே இருந்தது என்று கூறுகிறார் ஸ்வர்ணமால்யா.


இப்படி இருக்கும்போது 1882ல் கோயில்களில் நடனம் ஆடுவதற்கு தடை செய்ய வேண்டும் என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. இந்துக் கோயில்களில், பெண்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் முறைக்கு தடை விதிக்க அறிவுறுத்தப்பட்டது. கல்வி மற்றும் கலாசாரத்தை நிர்வாகத்தில் இருந்து தனியே பிரிக்க வேண்டும் என்பது பிரிட்டிஷாரின் நோக்கமாக இருந்தது என்கிறார் ஆஷிஷ் கோக்கர்.


பின்னர் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல சமூக சீர்த்திருத்தவாதிகள், தேவதாசி முறைக்கு எதிராக குரல் கொடுத்தனர். பெண்கள் கோயில்களுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ளவும், கோயில்களில் நடனம் போன்ற கலைகளை வெளிப்படுத்தவும் தடை விதிக்க வேண்டும் என்பதற்கான சட்ட மசோதா முன்மொழியப்பட்டது.


தேவதாசி முறையை ஒழிக்கப் போராடிய முத்துலட்சுமி ரெட்டி குறித்து தெரியுமா?

முத்துலட்சுமி ரெட்டி (கண்ணாடி அணிந்திருப்பவர்)


பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

முத்துலட்சுமி ரெட்டி (கண்ணாடி அணிந்திருப்பவர்)


இதற்கு சில இந்துக்களும் தேவதாசி சமூகத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


அதனால் தற்காலிகமாக எந்த முன்னேற்றமும் காணாத இந்த மசோதாவை 1928ல் மெட்ராஸ் மாகாணத்தின் முதல் பெண் எம்எல்ஏவான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.


தனது தாய் தேவதாசி முறையால் பாதிக்கப்பட்டதே, இந்த சட்டத்தை கொண்டுவர முத்துலட்சுமிக்கு உந்துதலாக இருந்ததாக கூறப்படுகிறது.


1947ஆம் ஆண்டு தேவதாசி ஒழிப்பு சட்டம் மெட்ராஸில் கொண்டுவரப்பட்டது.


"கோயில்கள், மத இடங்கள், இந்து கடவுள்களுக்கு முன், கோவில் திருவிழாக்களில் பெண்கள் நடனமாவது சட்டவிரோதம் என அறிவிக்கப்படுகிறது" என்றது அச்சட்டம்.


"இதை மீறுபவர்களுக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். இதையும் மீறி நடனம் மற்றும் இசை நிகழ்ச்சி செய்யும் பெண், பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை தேர்ந்தெடுத்ததாக எண்ணப்படும்."


இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சுமார் 35,000 கோயில்களில், பெண் நாட்டிய கலைஞர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.


பரதநாட்டியமான சதிர் நடனம்

தேவதாசிகள் முறை ஒழிய, நடனக் கலையை காக்க வேண்டும் என்று சில படிப்பறிவு மிக்க புத்திஜீவிகள் முடிவு செய்தனர்.


இந்தியாவின் பாரம்பரிய கலைகள், அறிவியல், தத்துவங்கள் ஆகியவற்றை காக்க முடிவு செய்த அடையாறில் உள்ள தியோசபிகல் சொசைட்டியும் இதில் முக்கிய பங்கு வகித்தது.


ருக்மினி தேவி அருண்டேல் மற்றும் இ. கிருஷ்ண ஐயர் ஆகியோரை குறிப்பிடாமல் பரதநாட்டியம் என்ற ஒரு கலை இன்று இருந்திருக்காது.



ருக்மினி தேவி அருண்டேல்

பட மூலாதாரம்,THE INDIA TODAY GROUP

படக்குறிப்பு,

ருக்மினி தேவி அருண்டேல்


கடவுள்களுக்கு முன்பு ஆடப்பட்ட நடனக்கலையை இன்று இருக்கும் பரதநாட்டியமாக மாற்றி அமைத்தவர் ருக்மினி தேவி அருண்டேல்.


இதனை மக்களுக்கான கலையாகவும், பொது இடத்தில் ஆடுவதற்கு ஏற்பவும், மாற்ற பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.


தேவதாசி சமூகத்தை சேர்ந்த தஞ்சாவூர் பாலசரஸ்வதி போன்றோரும், இதனை பொதுமக்கள் முன்பு ஆடும் கலையாக்க வேண்டும் என்ற முயற்சிகள் எடுக்க, இதுபோன்ற கலைகளை வளர்க்க ருக்மினி, சென்னையில் கலாக்ஷேத்திரா என்ற நடன பள்ளியை தொடங்கினார்.


முத்துலட்சுமியின் தேவதாசி ஒழிப்பு முறையை கடுமையான எதிர்த்த இ. கிருஷ்ண ஐயர், நடனக்கலைக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தனார்.


1932ஆம் ஆண்டு மெட்ராஸ் மியூசிக் அகாடமியை தொடங்கிய அவர், இந்த சதிர் நடனத்தை பரதநாட்டியம் என்று பெயர் மாற்ற வேண்டும் என முன்மொழிந்தார்.



இந்த கலையின் பெருமையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்றும் தேவதாசிகள் என்ற சொல் மரியாதை இழக்க, அதில் இருந்து இக்கலையை மீட்க வேண்டும் என்றும் அவர் நினைத்தார்.


1932ஆம் ஆண்டு மெட்ராஸ் மியூசிக் அகாடமியை தொடங்கினார் கிருஷ்ண ஐயர்

பட மூலாதாரம்,THE INDIA TODAY GROUP

படக்குறிப்பு,

1932ஆம் ஆண்டு மெட்ராஸ் மியூசிக் அகாடமியை தொடங்கினார் கிருஷ்ண ஐயர்


இந்நிலையில், இதற்கான ஆடை, அலங்காரங்கள், அணிகலன்கள், மேடைகள் போன்றவற்றை உட்புகுத்தி பக்தியை பிரதானமாக வைத்து, அரங்கேற்றம் செய்தார் ருக்மினி. கதையோடு நடனம் என்ற அம்சத்தையும் அவர் கொண்டு வந்தார்.


இந்த இருவராலுமே, சதிர் நடனக்கலை, பரதநாட்டியமாக மாறி பெரும் வளர்ச்சியை பெற்றது.


ஆனால், 16-17ஆம் நூற்றாண்டுகளிலேயே சதிர் நடனம் எல்லா தரப்பு மக்களுக்காகவும், எல்லா கலையையும் உள்வாங்கிய பரவலான கலையாக இருந்தது தனது ஆய்வில் தெரிய வந்ததாக ஸ்வர்ணமால்யா கூறுகிறார். அந்தக் கலையின் எச்சம்தான் பரதநாட்டியம் என்கிறார் அவர்.


ஸ்வர்ணமால்யா, விராலிமலை முத்துக்கண்ணம்மாள் என்ற தேவதாசி மரபு பெண்ணிடம் தான் சதிர் நடனத்தை கற்றுக் கொண்டதாக கூறுகிறார். அவரது மாணவர்களுக்கும் இந்த நாட்டியத்தை சதிர் நடனமாகவே கற்றுக்கொடுப்பதாக அவர் தெரிவிக்கிறார்.


''அரசாங்கம் தேவரடியார் முறையை ஒழித்துவிட்டது. ஆனால் பரம்பரை பரம்பரையாக கோயில் சேவகம் செய்த எங்களின் நலனில் அக்கறை காட்டாமல் போய்விட்டார்கள். கோயில் சடங்குகளில் இருந்த முக்கியத்துவமும் குறைந்துவிட்டதால், சமூக அந்தஸ்தும் இல்லாமல், வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டோம்'' என முத்துக்கண்ணம்மாள் பிபிசி தமிழிடம் அளித்த பேட்டியில் ஒரு முறை தெரிவித்திருந்தார்.


நவீன கால பரத நாட்டியத்திற்கும், சதிர் நடனத்திற்கும் இருக்கும் வித்தியாசங்களைப் பற்றி பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணனிடம் பேசிய அவர், ''சதிர் நடனத்தில் நாங்கள் பாடிக்கொண்டே ஆடுவோம். நம் நடனத்திற்கு ஏற்றவாறு நாமே பாடவேண்டும் என்பது அடிப்படை பயிற்சி. ஒரு பாடலை புரிந்துகொண்டு ஆடுவது என்பதைத் தாண்டி, அந்த பாடலே நாமாக மாறிக்கொண்டு, முகபாவங்களைக் கொண்டும், உடல் அசைவுகளைக் கொண்டும் இயல்பாக நாங்கள் ஆடுவோம். பாடிக்கொண்டே ஆடுவது என்பது சதிர் நடனத்தின் முக்கிய அங்கம். சதிர் நடனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பரதநாட்டியத்தில் நட்டுவனார் என்ற கலைஞர் பாட, நடனம் ஆடுபவர், முத்திரையுடன் ஆடுவது என்ற விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது,'' என்று விளக்கினார்.


இன்று உலகில் அதிகளவில் கற்றுக் கொள்ளப்படும் தனிக்கலையாக பரதநாட்டியம் இருக்கிறது என்கிறார் ஆஷிக்ஷ் ஷோகர்.


சதிர் நடனத்தில் இருந்து உருவெடுத்தாலும், இன்று பரதநாட்டியம் என்றே உலகளவில் இந்த நடனக் கலை அறியப்படுகிறது. தமிழரின் பாரம்பரிய கலைப் பெருமையின் முகமாகவும் இது இருக்கிறது.



காணொளிக் குறிப்பு,

இந்திய பாரம்பரிய நடனங்களை உலகளவில் பரப்பும் வெளிநாட்டு பெண்மணி

Friday, 4 September 2020

SAYEE AND SUBBULAKSHMI ,DANCE PARTY IN 1950`S





SAYEE AND SUBBULAKSHMI ,
DANCE PARTY IN 1950`S




.SAYEE AND SUBBULAKSHMI'S FILM-INDUSTRY RELATIVES: R. PADMA, P.A. PERIYANAYAKI, AND OTHERS (PART 3)
Saturday, October 5, 2013
Sayee and Subbulakshmi's extended family had many members who were involved in the film industry at that time as actors, playback singers, and technicians behind the scenes. As we learned from the relatives that posted rare details on Richard's blog, the extended family was a closeknit group with connections and bonds in the industry that still last to this day. As I searched for more information to "flesh out" the details of these connections, I discovered that Sayee and Subbulakshmi were closely related to the singer-actresses P.A. Periyanayaki and R. Padma and to AVM Studios sound engineer V.S. Raghavan who did pathbreaking work in Tamil cinema dubbing and syncing. In a twist of fate, some of the films these relatives were involved in had dance direction by Muthuswami Pillai years before P.A. Periyanayaki introduced him to Sayee and Subbulakshmi. And to top it all, a present-generation relative is a talented singer who sang for a just-released Telugu film!



Continuing on from the Muthuswami Pillai series Part 1 and Part 2, here in Part 3, I want to highlight the little information I've been able to find about these relatives and feature some of R. Padma and P.A. Periyanayaki's on-screen singing and dancing performances, one of which is choreographed by Muthuswami Pillai!

My research for this post began when I found the following post on the Facebook account of Nithya Bayya, a Madras-born talented singer and cricketer in the San Francisco Bay Area:
"Came across this wonderful blog post regarding my aunts Sai-Subbalakshmi who were India's famous dance duo in 1940s. Read through the comments and discovered so many facts about my family that i didnt even know. They were actors, singers, sound engineers, cinematographers, dancers ..but most importantly they were pioneers who contributed so much to the world of cinema. I am proud to be a part of such a huge legacy. http://roughinhere.wordpress.com/2008/10/24/sai-subbulaxmi/ Thanks Raghavendra Ganesh, Mom and Dad & Ratchagan for your active participation in proividing so much information. It is also a very humbling experience to see how much they have achieved and how much we need to strive to do something remotely close to what they have done." (Facebook)



Further searching revealed comments Nithya had made on YouTube videos of Sabapathy:
"My grandmother was R Padma, the heroine of the movie sabapathy. Interesting tidbit, her best friends NSK ayya TA Mathuram were godparents to my mom and were responsible for naming her as well. They named her mathuram too..." (YouTube)
"My grandmother R Padma is the heroine of this movie (the bride who is gettng married in this song). Periya Nayaki amma is my grand aunt. Always loved this song..." (YouTube)
In communications with Nithya, I discovered that R. Padma was Sayee's mother-in-law! R. Padma had married Raghavan V.S. and had five children. The oldest child, Santaram V.S., married Sayee; middle child Mathuram Babai had a daughter, Nithya; and the youngest child R. Sudha had a son, Raghavendra Ganesh.

After closely reviewing the comments from Richard's blog and the information from Nithya, I've not been able to nail down exactly how this group connects with P.A. Periyanayaki and Subbulakshmi. Nithya describes P.A. Periyanayaki as her grand aunt, Sayee's relatives note P.A. Periyanayaki was Sayee and Subbulakshmi's mother, and Sujatha Vijayaraghavan in Sruti says P.A. Periyanayaki was the aunt and cousin of Sayee and Subbulakshmi. In any case, whether through marriage or blood, the extended family was clearly very close and active in the film industry. And that activity continues today with Nithya who sang a song in the Telugu movie Kiss which just released last month. Here she is being interviewed on a Bay Area show about her cricket and singing activities—she is warm and engaging, and I wish her well!



R. Padma

According to Randor Guy, R. Padma was a "Lux Soap" model who "was active in Tamil cinema during the 1940's, but never made it to the top" and "is barely remembered today." The "Blast from the Past" and related articles at The Hindu list Padma as an actress in: Vaayaadi (1940), Sabapathy (1941), Prabhavathi (1942), Aayiram Thalaivaangi Apoorva Chintamani (1947), Geeta Gandhi (1949), Devamanohari (1951), and as an actress and singer in En Manaivi (1942).

Sabapathy (1941) - "Naan Angae" - R. Padma played "the hero's educated wife who teaches her husband English" in this film. In the song "Naan Angae" below, she performs a dance! Sabapathy was among the very first films Muthuswami Pillai choreographed for. I was surprised to find that the film title cards credited dance direction to not only V.S. Muthuswami Pillai but also Meenakshisundaram Pillai! This must be Vaitheeswarankoil Meenakshisundaram Pillai, Muthuswami's guardian and the person who first introduced Muthuswami to film choreography through his famous students Yogam and Mangalam (see Part One for more information). Perhaps Sabapathi was sort of an "apprentice" film where Muthuswami learned the ropes under Meenakshisundaram. The dance is fascinating considering how early it was filmed. It is presented not for a male patron or courtly admirers but rather for elders/prospective family members (?) in a respectable, domestic setting. Padma's costume is full of gorgeous details, patterns, and designs, and it has a modern sewn-in pyjama fan. I find Padma's dance abilities lacking and she is quite stiff, but the number is a wonderfully-preserved item of historical interest.

En Manaivi (Tamil, 1942) - "Padanathaip Parkap Parkap Pasi" - In this cute song with vocals by Padma herself, she plays a village woman who is amazed by the music she mysteriously heard while at the beach and sings a song about it and the modern marvels of science. The mysterious music at the beach actually comes from the loudspeaker pole seen at :50, which Randor Guy notes was a real loudspeaker in the Madras High Court Beach that "was a novelty and many people flocked there just to listen to music and sounds coming out seemingly from nowhere" (The Hindu).

P.A. Periyanayaki

P.A. Periyanayaki was one of the famous playback singers in South Indian cinema in the 1940s and 1950s. Randor Guy writes, "Hailing from Panrutti, a small town, some hundred miles from Madras, Periyanayaki was blessed with a ringing, bold, melodious voice. Her musical talent helped her make a foray into films when she was 10 in C. V. Raman’s Urvashiyin Kadhal and she gradually pushed her way up mostly in small but singing roles. She attracted attention in T. R. Raghunath’s Prabhavati. Her big moment came when Meiyappan sent for her for Sri Valli."

In Tamil talkies up through the early 1940s, stars had to be able to both act and sing live on camera, and the most popular singing stars of the period were M.K. Thyagaraja Bagavathar (MKT, the "first superstar of South Indian cinema") and P.U. Chinnappa1. As technology advanced, the concepts of dubbing and synching sound slowly came into use. P.A. Periyanayaki is sometimes popularly remembered as the first playback singer in Tamil cinema, but that credit actually goes to Lalitha Venkatraman in the 1938 film Nandakumar (1938)1,2. But P.A. Periyanayaki could be considered the first "post-synchronization" singer in Tamil cinema and certainly the first popular one. When AVM Studios founder A.V. Meiyappan recalled the prints of Sri Valli (1945), replaced Rukmini's voice with Periyanayaki (who had to match her singing to the already recorded visual image!), and rushed the revised prints out to theaters 1,3, Periyanayaki's songs were a huge success and she "emerged as a much sought-after playback singer" and the film "set the trend of playback singing in the industry"3,4.

Interestingly, the innovative chief of AVM's sound department and the person whom A.V. Meiyappan consulted with to replace Rukmini's songs in Sri Valli was none other than V. Srinivasa Raghavan (V.S. Raghavan), who as noted above was R. Padma's husband and the father-in-law of Sayee! Raghavan had trained "under the legendary audiographer C.E. Biggs of the Gemini studios" and had pioneered the "first dubbed film in the history of the Tamil/Indian cinema" when he mixed in a Tamil dialogue track specifically written to match the lips of the Kannada artists in Harishchandra for the dubbed Tamil version released in 19441.

The "Blast from the Past" and related articles at The Hindu (mostly penned by the fabulous walking encyclopaedia Randor Guy) lists P.A. Periyanayaki in the cast of Utthama Puthran (1940), Prabhavati (1942), Vichitra Vanitha (1947), Krishna Bhakthi (1948), and Geeta Gandhi (1949), and as at least one of the playback singers for Sri Valli (1945), Vichitra Vanitha (1947), Gnanasoundari (1948), Prasanna (1950, Malayalam), Kerala Kesari (1951, Malayalam), Vanasundari (1951), Singari (1951), Ulagam (1953), and Marumagal (1953). She also is said to have played the role of Naradar in Rukmangadhan (1946). Online folks have said she sang for some Telugu films like Beedalapatlu (1950), Ammalakkalu (1953), and Oka Talli Pillalu (1953). And it seems widely known that she sang as herself on screen in Sabapathy (1941). But we also know from the film credits that she did playback for Mallaikkalan (1954) and Telugu remake Aggi Ramudu (according to friend of the blog Gaddeswarup)—presumably for Sayee and Subbulakshmi's numbers! I have wondered if Periyanayaki sang for more of their film dances but couldn't find any mention. P.A. Periyanayaki also had a sister P.A. Rajamani, who sang songs in Bhaktha Gowri (1941) and was in the cast of Prabhavathi (1942).

Sabapathy (Tamil, 1941) - "Sundari Nee" - In this number, a wedding celebration for R. Padma's character (who can be seen as the "blushing bride" a few times), P.A. Periyanayaki gives a vocal performance as herself—I love everything about her from her striking presence and powerful voice to the brooch on her sari pallu. She commands your attention! According to a program invitation card that flashes on the screen before this song, the other female musicians are C.V. Dhanalakshmi on the fiddle and V. Neelambari on the mridangam. Isn't it refreshing to see a live performance on film, especially after being subjected to so much horrendous fake-veena playing on screen! What beautiful preservation of these women's talents on film.

What a beautiful legacy these men and women have created for us audiovisually on screen. In Lakshmi Subramanian's words, these "films give us some glimpses into a world that does not otherwise leave any trace."

Last, I will close with this thumbnail I just found of a beautiful, high-quality image of Sayee-Subbulakshmi in the film Naya Sansar (1959)--click on the image to link to the full version at Osianama, a new and promising online Indian digital archive with a great Indian cinema collection:

Sources Cited:
1. Pillai, Swarnavel Eswaran. "Chapter 3: AVM and Gemini Studios: The Dravidian Movement and the Competing Narratives." Tamil Cinema and the Major Madras Studios 1940-1957. PhD Diss.
2. Guy, Randor. "Blast from the Past: Nandakumar 1938." The Hindu.
3. Guy, Randor. "Blast from the Past: Sri Valli 1945." The Hindu.
4. Vasudevan, K.V. "Manorama in Flashback."
Like
Comment
Comments
Nagarajan K

Write a comment...

Thursday, 15 March 2018

QANDEEL BALOCH ,PAKISTANIC ACTRESS MURDERED BY BROTHER 2016 JULY 15




QANDEEL BALOCH ,PAKISTANIC ACTRESS 
READY TO DANCE IN NUED FOR CRICKET WIN
MURDERED BY BROTHER 2016 JULY 15



Fouzia Azeem (Urdu: فوزیہ عظیم‬‎; 1 March 1990 – 15 July 2016), better known by the name Qandeel Baloch (Urdu: قندیل بلوچ‬‎), was a Pakistani model, actress, and social media celebrity. Baloch rose to prominence due to her videos on social networks discussing her daily routine and various controversial issues.[1]

Baloch first received recognition from the media in 2013, when she auditioned for Pakistan Idol; her audition went viral and she became an Internet celebrity.[2][3] She was one of the top 10 most searched for persons on the internet in Pakistan and both celebrated and criticised for the content of her videos and posts.[4]

During the evening of 15 July 2016, Baloch was asphyxiated while she was asleep in the house where her parents live in Multan.[5] Her brother Waseem Azeem confessed to the murder saying she was "bringing disrepute" to the "family's honour".[6][7][8]

Early life
Baloch was born on 1 March 1990 in Dera Ghazi Khan,[9] Punjab. She hailed from Shah Sadar Din.[9] [10] and an underprivileged family and had six brothers and two sisters. Her first job was as a bus hostess. [11]

Career
Baloch's fame was based on her social media posts – pictures, videos and comments. These were considered bold and outrageous by the largely conservative Pakistani community. Her most popular videos were those of her with her catchphrase "How em luking?"(How am I looking?) and those of her saying "Maire sar mai pain ho raha hai" (I'm getting a headache) in a funny and catchy tone. Her catchphrases became viral and were used by the Pakistani youth in enjoyment. They were also featured of dubbing social media site dubsmash and became widely popular among Indian and Pakistani youth alike.[4] Some international news media compared her to Kim Kardashian;[12] however, local commentators stated that she was more significant than Kardashian, as Baloch "went against the norms of society" and lived life on her own terms.[13] She started to appear on Pakistani talk shows regularly by 2014, either to perform songs or to discuss her rising social media popularity. During her life she served as digital manager at Neptuner Web Solutions[14] in 2016


In June 2016, Baloch met senior cleric Mufti Abdul Qawi in a hotel room to learn more about her faith; the interaction between them brought about mayhem on social media platforms as their photos went viral online.[15][16][17] She also wore a hat with the Mufti's signature.[18] The meeting led to the Mufti being suspended from his position on one of Pakistan's religious committees, and to Baloch being a regular on popular Pakistani current affairs and news programmes. She appeared on various popular Pakistani TV shows with senior anchors such as Mubashir Lucman. She would mostly be on talk shows debating with religious scholars on her western and controversial acts and lifestyle.[19]

A previous stunt which went viral on social media was her promise to strip dance for her followers and to dedicate her dance to cricketer Shahid Afridi if Pakistan won the Twenty20 match against India on 19 March 2016. She released a teaser on social media, which went viral, but Pakistan lost the match.[20] Some Indian media compared her with Poonam Pandey at this point due to her controversial personality.[21][22]

As her media presence grew, Baloch began to use her position to comment on women's position in Pakistani society. The week before she died, she released a music video entitled Ban, which mocked the restrictions placed on women in the country.[19] In an interview with controversial anchor Mubashir Luqman, Baloch named Sunny Leone, Rakhi Sawant and Poonam Pandey as her inspirations.[23] She also said that many organizations, people and media groups were calling her to feature in their shows to increase their own ratings.[24]

Security concerns
Following the June 2016 meeting with Qawi, Baloch kept a press conference and reported that she received death threats both from him and from others, and demanded police protection from the state.[19][25]

At around the same time, Baloch's ex-husband described in the media their brief marriage, revealing intimate details of their relationship. Baloch claimed her husband had been abusive, and cried publicly about the pain of the marriage.[13] Around 14 July 2016, Baloch spoke by phone to a reporter from the Express Tribune paper and stated that she feared for her life.[19] She told the reporter that she had sought protection from the police but on receiving no response, had decided to move abroad with her parents after the Eid al-Fitr holiday as she felt unsafe in Pakistan.[11]

Personal life
Baloch married Aashiq Hussain in 2008, aged 17, and had one son with him.[26][27] Baloch left her husband a year later, saying he was abusive.[11][28] There are reports Baloch was separated from a second marriage.[29]

Death
On 15 July 2016, Qandeel Baloch was drugged and then asphyxiated by her brother M. Waseem Baloch while she was asleep at her parents' home in Multan.[30][11][31] Her death was reported by her father Azeem.[11][32][33] It was first reported as a shooting, but an autopsy report confirmed that Baloch was murdered by asphyxiation while she was asleep,[34] on the night of 15–16 July, around 11:15 p.m. to 11:30 p.m. By the time her body was found she had already been dead for between fifteen and thirty-six hours.[35] Marks on Baloch's body revealed that her mouth and nose were pinned shut to asphyxiate her.[13][36] Police said that they would investigate all sides of the murder including honour killing.[37]

A First Information Report against her brother Waseem and another brother Aslam Shaheen, who allegedly persuaded Waseem to kill their sister, was issued.[38][39] Baloch's father Azeem stated in the FIR that his sons Aslam Shaheen and Waseem were responsible for their sister’s death and had killed her for her money. Her father told the press "my daughter was brave and I will not forget or forgive her brutal murder."[40]

Waseem was arrested on the evening of 16 July. He confessed to murdering his sister, saying "she [Qandeel Baloch] was bringing disrepute to our family's honour and I could not tolerate it any further. I killed her around 11:30 p.m. on Friday night when everyone else had gone to bed. My brother is not involved in the murder."[6]

Murder Case
The state was named as complainant in her murder case, making it impossible for the victim's family to pardon the perpetrator [41][42][43] (see the Pakistani diyaa law). An Islamic cleric, Mufti Abdul Qavi's has been mentioned in the case's First Information Report (FIR) by her father.[44][45][46] The cleric was previously involved[47] and already being investigated by the Multan police at the time of murder.[48]

Reactions
See also: Honor killing in Pakistan

Baloch's murder was widely condemned by media celebrities and people around the globe,[49][50] while some in Pakistan were more inclined to support her murder.[51] Several personalities, including Madonna, Khloé Kardashian, Miley Cyrus, Jamie Lee Curtis, Faryal Fatima, Rakhi Sawant, Imran Khan, Bilawal Bhutto Zardari, Sharmila Farooqi, Abdul Razaque, Reham Khan, Sanam Baloch, Osman Khalid Butt, Meesha Shafi, Sabz Khan; UK Radio broadcaster on Allfm.org and Published author on Pakistani issues, Nadia Hussain, Ali Zafar,[52] along with many others condemned the incident,[53][54] including filmmaker and activist Sharmeen Obaid-Chinoy who said, "I really feel that no woman is safe in this country, until we start making examples of people, until we start sending men who kill women to jail, unless we literally say there will be no more killing and those who dare will spend the rest of their lives behind bars."[55] She further said, "There is not a single day where you don't pick up a paper and see a woman hasn't been killed... this is an epidemic."[56]

British Prime Minister Theresa May also condemned the murder saying "there is absolutely no honour in so-called honour killings and they should be referred to as acts of terror."[57] May also said it was 'criminal' for women to be murdered by their male relatives on the grounds of defending family 'honour'.[58] The daughter of the Pakistani ex-Prime Minister Maryam Nawaz announced that the government had finalized the draft law against honour killings in the light of negotiations and the final draft will be presented to a committee of joint session of parliament on July 21 for consideration and approval.”[59][60]

Vigils for Baloch were held in Lahore and Karachi.[61] On November 2, 2017, the father of Qandeel Baloch submitted an application to police alleging that his life was in danger from those who planned his daughter's murder.

In popular culture
Baloch's death has drawn mixed reactions from different sections of society in Pakistan. Some called her death an honour killing and some think that the motive was money. An episode in the A-Plus Entertainment series Yeh Junoon was partially based on her life. The series starred Zhalay Sarhadi and Shamoon Abbasi in lead roles. Sharmeen Obaid-Chinoy's untitled documentary film on her life is under production, that will be released in 2017.

On July 27. 2017, Urdu1 started to air a 28-episode biopic television drama titled Baaghi (meaning "Rebel" in Urdu) based on Qandeel's life, where Saba Qamar plays her character. The first episode amassed more than 1,200,000 views on YouTube. [62]

In 2016, Dawn reported that Baloch biography page on Wikipedia was the fourth most read amongst Pakistani personalities in 2016.[63]

In March 2017, The British-Pakistani/Indian-American hip hop group Swet Shop Boys dedicated the track Aaja from their latest album in the memory of Qandeel Baloch. Recorded samples of her voice from her social media content is also used towards the end of the track.[64]

The musical band Bumbu Sauce also released a song on Qandeel Baloch entitled "Vuzzeerrayazam", which gives Qandeel the titles of ‘Prime Minister’ and ‘Qoum ki beti'.

On June 2017, a documentary film Undercover Asia S4: In The Name Of Honour premiered on Channel NewsAsia. Produced by MAKE Productions, it tells how Baloch's bold and sexy videos challenged convention and shocked a nation which later led to fatal consequences.[65]


டி20 போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தால் நிர்வாணமாக நடனம் ஆடத்தயார்:

பாகிஸ்தான் நாட்டு டிவி நடிகையான குவான்டீல் பலூச் என்பவர் அடிக்கடி அதிரடியாக ஏதாவது செய்து, தலைப்புச் செய்திகளில் தனது பெயர் தலைகாட்ட வேண்டும் என்பதில் அதிக விருப்பம் கொண்டவராக விளங்கி வருகிறார்.

முன்னர், ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சாஹித் அப்ரிடியை பைத்தியம் என்று திட்டி இருந்தார்.

இந்த மாதிரி பைத்தியத்தை கேப்டனாக வைத்துக் கொண்டு நாம் எதையுமே வெல்ல முடியாது என கூறி இருந்த குவான்டீல் பலூச், அதற்கும் முன்னதாக நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை அவமரியாதையாகப் பேசிய வீடியோ பேஸ்புக்கில் முன்னர் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் தற்போது குவான்டீல் பலூச் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதுகிறது. இதில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தால் முழுதேசத்திற்காகவும் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக கூறி உள்ளார். மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் அப்ரிடிக்கு சிறப்பு சலுகை ஒன்றையும் அறிவித்துள்ளார். அவர் வெற்றி பெற்றால் அவர் என்ன சொன்னாலும் அதை நான் செய்வேன் என அந்த வீடியோவில் குவான்டீல் பலூச் கூறி உள்ளார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

#WaseemAzeem என்ற சொந்த சகோதரனால் 
தலையணையால் மூச்சை நிறுத்தி 
கொலை செய்யப்பட்டார் july 15,2016

Tuesday, 13 March 2018

DANCE ..SEX...CELEBRATION -RUN TO LONDON KING MALLAIYA SLASHED STORY





DANCE ..SEX...CELEBRATION -RUN TO LONDON
KING MALLAIYA SLASHED STORY





ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்... ....ஓட்டம்

சரிந்த மல்லையாவின் சாம்ராஜ்யம்

இன்றைக்கு இந்தியாவே தேடும் ஒரு நபர் என்றால் அது விஜய் மல்லையாதான். ஏறக்குறைய ரூ.7,000 கோடி கடனை வாங்கி விட்டு, அதை திருப்பித் தராமலே பிரிட்டனுக்கு ஓடிவிட்டார் மல்லையா. மீண்டும் அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து, கடன் தொகையை வசூலிக்க வேண்டும் என்று கதறுகின்றனர் அவருக்கு கடன் தந்த வங்கி அதிகாரிகள். யார் இந்த விஜய் மல்லையா?

இவருக்கு அறிமுகம் தேவையில்லை. கிங்ஃபிஷர் என்கிற ஒற்றை வார்த்தை போதும், இவரைப் பற்றி எடுத்துச் சொல்ல. ஒரு உத்தம தந்தை தனது தொழிலை ஆலமரமாக வளர்த்தெடுத்து தன் மகனுக்குத் தர, அதை தன்னுடைய பல இமாலயத் தவறுகளால் வெட்டி வீழ்த்திய ஊதாரியின் கதைதான் விஜய் மல்லையாவினுடையது. இந்த உத்தம வில்லனின் கதையைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

டிசம்பர் 18, 1955 அன்று கொல்கத்தாவில் விட்டல் மல்லையா, லலிதா ராமையாவுக்கு மகனாகப் பிறந்தார். சில்வர் ஸ்பூன் குழந்தையாகப் பிறந்த விஜய் மல்லையாவின் தந்தை விட்டல் மல்லையா, கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பட்டம் படித்தவர்.

வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் அனுபவம் பெற்றவர். 1947-ல் யுனைடெட் ப்ரூவரீஸ் நிறுவனத்தின் முதல் இந்திய இயக்குநராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்கு வயது 22. அடுத்த ஒரே வருடத்தில் அந்த நிறுவனத்தின் தலைவராகவும் ஆனார்.

திருமணமானபின் கொல்கத்தாவிலிருந்து பெங்களூருவுக்கு வந்து குடியேறினார். உடல்நலக் குறைவு இருந்தபோதிலும் யுனைடெட் ப்ரூவரீஸ் நிறுவனத்தை பிரமாண்ட நிறுவனமாக வளர்த்தெடுத்தார்.

1983-ல் அவர் இறந்ததும் யுனைடெட் ப்ருவரீஸ் நிறுவனத்தின் தலைவராக அவரது ஒரே மகனான விஜய் மல்லையா பொறுப்பேற்க வேண்டியிருந்தது. அப்போது அவருக்கு வயது 28.

உலகின் இரண்டாவது பெரிய மதுபான நிறுவனம்!

யுனைடெட் ப்ரூவரீஸ் தன் கைக்கு வருவதற்குமுன்பே, தனது 18 வயதில் ஹோக்ஸ்ட் லைஃப் சயின்ஸ் நிறுவனத்தின் இயக்குனரானார் விஜய் மல்லையா. காமர்ஸ் பட்டப் படிப்பு முடித்த இவர், தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் பிசினஸ் மேலாண்மையில் டாக்டர் பட்டம் வாங்கியவர். அவர் பொறுப்பேற்றபிறகு யுனைடெட் ப்ரூவரீஸ் பெயரை உலக அளவில் பிரபலமாக்க அயராது உழைத்தார். அப்போது இருந்த மல்லையாவுக்கும் இப்போது நாம் பார்க்கும் மல்லையாவுக்கும் மலையளவு வித்தியாசம் இருந்தது. அவருடைய கடின உழைப்பு அசாத்தியமானதாக இருந்தது. எதற்கும் தயங்கியதில்லை, பயம் என்றால் என்னவென்று அவருக்குத் தெரியாது. இவைதான் அந்த நிறுவனம் உலகளவில் இரண்டாவது பெரிய மதுபான நிறுவனமாக வளரக் காரணம்.

மஹாராஷ்டிரா அரசு ஸ்ட்ராங் பீருக்கான கலால் வரியை உயர்த்திய போது ஷா வாலஸ் உட்பட அனைத்து மதுபான நிறுவனங்களும் செய்வதறியாது தடுமாறின. ஆனால், அந்தச் சூழ்நிலையைச் சாமர்த்தியமாக சமாளித்ததோடு, தன் நிறுவனத்தை விரிவுப்படுத்திய அதே நேரத்தில் தடுமாற்றத்தில் இருந்த பல நிறுவனங்களைக் கைப்பற்றவும் செய்தார். இதனால் அவருடன் நட்புடன் இருந்த மனு மற்றும் கிஷோர் சாப்ரியா சகோதரர்களுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது. சாப்ரியா சகோதரர்கள், மல்லையாவின் தொழிலுக்கு பக்கபலமாக இருந்தார்கள். அவர்களின் பிரிவு மல்லையாவுக்கு முதல் இழப்பு.


உறவு முறிந்ததுடன், கிஷோர் சாப்்ரியா மல்லையாவுக்கு போட்டியாக அலைட் ப்ரூவரீஸ் அண்ட் டிஸ்டில்லர்ஸ் என்ற மற்றொரு மதுபான நிறுவனத்தைத் தொடங்கி மிகப் பெரிய அளவில் வளர்ந்தார். ஆனால், விஜய் மல்லையாவும் சளைக்காமல் உழைத்து, இந்தியாவின் முதன்மை மது உற்பத்தி நிறுவனமாக தனது நிறுவனத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

ஷா வாலஸ், ஹெர்பர்ட் சன்ஸ் ஆகிய நிறுவனங்களைக் கையகப்படுத்தியபிறகு உலக அளவில் டியாஜியோ நிறுவனத்துக்கு அடுத்த பெரிய மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு சொந்தக்காரராக ஜொலித்தார் மல்லையா. இந்தியச் சந்தையில் கிங்ஃபிஷர் பீரின் மார்க்கெட் ஷேர் 50%. ஏறக்குறைய இந்தியா தவிர்த்து, 52 நாடுகளில் இதன் விற்பனை செமஜோர். மதுபானத்துக்கு பெயர் போன நகரமாக பெங்களூரு மாறியதற்கு இவரது தொழில் விரிவாக்கத் திட்டங்கள் மிக முக்கியமானவை. இந்த நிறுவனத்தின் அமெரிக்க கிளை மென்டோசினோ புரூவிங் கோ என்ற பெயரில் இயங்குகிறது.

இவருடைய யுனைடெட் ப்ரூவரீஸ் குழுமம், மதுபானங்கள் உற்பத்தி, விமானச் சேவை, ரியல் எஸ்டேட், பொறியியல் துறை, உர உற்பத்தி, உயிரியல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் என பல்வேறு துறைகளில் தனது தொழிலை ஆலமரமாக விஸ்தரித்தது. சனோஃபி இண்டியா மற்றும் பேயர் கிராப் சயின்ஸ் இண்டியா, மங்களூர் கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் ஆகியவை இவருடைய பிற நிறுவனங்கள்.

இதுபோன்ற அறுபது நிறுவனங்களை உள்ளடக்கிய பன்னாட்டு குழுமமாக யுனைடெட் ப்ரூவரீஸ் வளர்ந்தது. இதன் வருவாய் அவர் பொறுப்பேற்ற 15 ஆண்டுகளில் 64% உயர்ந்து, 1998 - 1999-களில் ரூ.74 ஆயிரம் கோடியாக இருந்தது.

சரிவுக்கான மூன்று காரணங்கள்!

“இந்த கணத்துக்காகத்தான் காத்திருந்தோம். நம் ஒட்டுமொத்த கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் குழுவும் ஏர்லைன்ஸ் கனவை சாத்தியப் படுத்த பாடுபட்டிருக்கிறது. இறுதியாக இந்த விண்ணை ஆள நாம் தயாராகி இருக்கிறோம். வாருங்கள் பறக்கலாம். இதுவே உங்கள் வாழ்க்கையின் பொன்னான தருணங்களாக அமையட்டும்” என்று கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அறிமுகப்படுத்தப் பட்ட அன்று மல்லையா செய்த இந்த முழக்கத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மாநிலங்களவை உறுப்பினராக அரசியல் களத்திலும் இருந்ததால், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என அங்கிருந்த அனைவரும் அந்த முழக்கத்தை கேட்டு ஆர்ப்பரித்தனர். குலுக்கப்பட்ட பீர் பாட்டில்கள் பொங்கி வழிந்தன. ஆனால், அந்த கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸே தன் பிசினஸ் வாழ்வுக்கு சாவுமணி அடிக்கப் போவதை அப்போது அவர் உணரவே இல்லை.

கிங்ஃபிஷரைத் தொடங்கிய போது, ‘விமானங்களைவிட வாடிக்கையாளர் சேவைதான் நம் நோக்கம் என்ற மல்லையா, விமானப் பணியாளர்கள் 5,500 பேரை அவரே நேர்காணல் செய்து தேர்வு செய்தார்.

அழகான, அருமையான வசதியான விமானம், நல்ல உணவு, நல்ல, அழகான பணிப்பெண்கள் மற்றும் பொழுதுபோக்கு எனப் பெயர் பெற்றது. முதல் வகுப்பு பயணிகளுக்கு இலவச மதுவும் தரப்பட்டது.

இந்தியாவில் கிங்ஃபிஷருக்கு மவுசு கூடியது. ஆனால், இது மட்டும் போதாது; உலகின் அத்தனை மூலைக்கும் தன் விமானம் செல்ல வேண்டும் என்று விரும்பினார். ஆனால், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் கழிந்தபிறகே ஒரு விமான நிறுவனம், சர்வதேச சேவையைத் தொடங்க முடியும் என்ற சட்டம் அப்போது இருந்ததால், நொடிந்து கிடந்த ஏர் டெக்கான் நிறுவனத்தை வாங்கினார். அங்குதான் அவருடைய வீழ்ச்சி ஆரம்பம் ஆனது.

பறக்க நினைத்தார்; பாதாளத்தில் விழுந்தார்!

இந்தியாவில் மிகப் பெரிய நெட்வொர்க்காக இருந்த, கேப்டன் ஜிஆர் கோபிநாத்துக்குச் சொந்தமான ஏர் டெக்கானை 2007-ல் வாங்கி, அதனை பின்னர் கிங்ஃபிஷர் ரெட் என்று பெயர் மாற்றம் செய்தார். செப்டம்பர் 2008-ல் கிங்ஃபிஷர் தனது முதல் சர்வதேச விமான சேவையை பெங்களூருவிலிருந்து லண்டனுக்கு தொடங்கியது.

சரியாக 2008, உலகப் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகி பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தது. அதன்பிறகு சில ஆண்டுகள்தான் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் தாக்குப் பிடித்தது. ஆனால், போகப் போக நஷ்ட மடைந்து நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திணறியது.

பின்னர் அதன் வீழ்ச்சி தீவிரமானது. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அதன் மொத்த 66 விமான சேவைகளில் 28 விமான சேவைகளை நிறுத்தியது. மேலும், பண நெருக்கடி அதிகமாகி, வாடிக்கையாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் தரவேண்டிய பாக்கி அதிகமானது. வங்கிகளில் தொடர்ந்து கடன் வாங்கி வந்தார் மல்லையா. அவர் ஒரு வங்கியையும் விட்டு வைக்கவில்லை. அவர் வாங்கிய மொத்தக் கடன் ரூ.7,000 கோடி.

வாங்கிய கடனில் பெரும்பாலானவை யுனைடெட் ப்ரூவரீஸ் பெயரில் வாங்கப்பட்டிருந்தன. அதில் வந்த லாபத்தையும், வாங்கிய கடனையும் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸில் முதலீடு செய்தார். அதில் லாபம் பெயருக்குக்கூட இல்லை. போகப் போக மதுபான நிறுவனத்திலும் நஷ்டம் ஏற்பட தொடங்கியது.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்!

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் இனி இல்லை. விரைவில் தன்னுடைய யுனைடெட் ஸ்பிரிட்ஸ் மீதான உரிமையும் கைவிட்டு போக இருக்கிறது என்ற நிலையிலும் விஜய் மல்லையாவின் கொண்டாட்டம் ஒருபோதும் குறையவில்லை. அவரது அழகு மாடல் பெண்களைக் கொண்ட காலண்டர்களோ, ஐபிஎல் கிரிக்கெட் ஏலங்களோ நிற்கவில்லை. 2003-லிருந்து கிங்ஃபிஷர் காலண்டரை வெளியிட்டு வருகிறார். ஒவ்வொரு வருடமும் ஒரு நாடு, பல நூறு அழகிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட அழகி களுடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஒரே திருவிழாதான் மல்லையாவுக்கு.

ஏர்லைன்ஸின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. பணியாளர்கள் அனைவரும் 15 மாதங்கள் ஊதியம் தராததால், போராட்டம் செய்யும் முடிவுக்கு வந்தனர். பணியாளர் ஒருவரின் மனைவி பணப் பிரச்னையால் தற்கொலையும் செய்து கொண்டார். இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய விஜய் மல்லையா, ஏதோ ஒரு குட்டித் தீவில் உல்லாசமாக இருந்தார்.

அவரது மகன் அந்த வருட கிங்ஃபிஷர் காலண்டருக்காக அழகான பெண்களை நேர்காணல் செய்துகொண்டும், அவர்களோடு கடற்கரையில் வாலிபால் ஆடிக்கொண்டும் அதனை அவ்வப்போது ட்விட்டரில் பதிவு செய்துகொண்டும் இருந்தார்.

இவருக்கு கடன் தந்த வங்கிகளும், வேலை இழந்த ஊழியர்களும் இவரை கண்டபடி ஏசிக் கொண்டிருக்க, அதை எல்லாம் கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல், இரு மாதங்களுக்கு முன்பு இந்த வருடத்துக்கான காலண்டரை வெளியிட்டார் மல்லையா. அதன் முதல் காப்பியை உலக பிரபல பாப் பாடகர் என்ரிக் எலியாஸ்க்கு வழங்கி அதனை ட்விட்டரில் பதிவிட்டார். இந்த காலண்டரை வெளியிடும் நிகழ்ச்சியில் உலக அழகிகள் முதல் பாலிவுட், ஹாலிவுட் நடிகைகள் வரை அனைவரும் பல கோடி கொடுத்து அழைத்து வரப்பட்டார்கள்.

இந்திய வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத ஜாம்பவான்கள் பலர் இருந்தாலும், விஜய் மல்லையாவின் இந்த ஆடம்பரக் கொண்டாட்டங்களே அவருக்கு எதிரான நடவடிக்கைகளை வங்கிகள் தீவிரப்படுத்த காரணமாகின. இதுதான் அவரது வீழ்ச்சிக்கான மூன்றாவது காரணம்.


அடுத்து என்ன?

மல்லையாவின் யுனைடெட் ப்ரூவரீஸின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் தற்போது 5 சதவிகிதத்துக்கும் குறைவாக வருவாய் ஈட்டி வருகிறது. மல்லையா யுனைடெட் ஸ்பிரீட்ஸ் நிறுவனத்தில் தனக்கிருந்த பங்குகளில் 25% டியாஜியோவிடம் விற்றுவிட்டார். இப்போது 10 சதவிகிதத்துக்கும் குறைவாகவே பங்கு வைத்திருக்கிறார்.

வங்கிகளுக்குத் தரவேண்டிய ரூ.7,000 கோடி கடன் இப்போது அவரது கழுத்தை நெறிக்கிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கடன் வசூலிப்பு முகமையிடம் மல்லையா மீது புகார் பதிவு செய்து அவரது அனைத்து சொத்துக்களையும் முடக்கிவிட்டது. டியாஜியோ தருவதாக இருந்த ரூ.515 கோடி பணத்தையும் தற்காலிகமாக முடக்கியது. இதனை அடுத்து எப்போது வேண்டுமானாலும் மல்லையா கைது செய்யப் படலாம். அவரது பாஸ்போர்ட் முடக்கப்படலாம் என்கிற பேச்சு பலமாக எழுந்தது. ஆனால் மல்லையாவோ, ‘நான் ஒரே செட்டில்மென்டில் கடனை அடைப்பேன். நான் மோசடிக்காரன் அல்ல, ஓடி ஒளியமாட்டேன்’ என்று உதார் விட்டார்.

அவரது வழக்கின் அடுத்த வாய்தா மார்ச் 28-ம் தேதி அன்று நடக்கிறது. அதே சமயம், மல்லையா மீது அமலாக்கப் பிரிவு கறுப்புப் பண மோசடி வழக்கும் பதிவு செய்துள்ளது. இனிமேல் இங்கிருந்தால் ஆபத்து என்றுணர்ந்த மல்லையா, ரகசியமாக பிரிட்டனுக்கு சென்றுவிட்டார்.

இனி அவர் மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப வருவாரா, வாங்கிய கடனை திரும்பத் தருவாரா என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

பங்குச் சந்தையில் மல்லையாவின் நிறுவனங்கள்!

யுனைடெட் ப்ரூவரீஸ் - 2002-ல் ரூ.11-க்கு தொடங்கிய இதன் பங்குகள், தற்போது ரூ.800-க்கு வர்த்தகமானது. இது அதிகபட்சமாக ரூ.1,100 வரை விலை உயர்ந்திருக்கிறது.

யுனைடெட் ஸ்பிரிட்ஸ் ஜனவரி 2000-ல் ரூ.295க்கு வர்த்தகமாகத் தொடங்கிய இதன் பங்கு வர்த்தகம் இன்று ரூ.2,400-ல் வர்த்தகமாகிறது. இது அதிகபட்சமாக ரூ.4,000 வரை விலை உயர்ந்திருக்கிறது.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் 2006-ல் ரூ.86-க்கு வர்த்தகமாகத் தொடங்கியது. இன்று இந்தப் பங்கு வர்த்தகமாகவில்லை. இது அதிகபட்சமாக ரூ.316 வரை விலை உயர்ந்திருக்கிறது.