Showing posts with label SRIDHAR. Show all posts
Showing posts with label SRIDHAR. Show all posts

Sunday, 2 August 2020

DIRECTOR SRIDHAR BIOGRAPHY



DIRECTOR SRIDHAR BIOGRAPHY




.ஒரு சூப்பர் ஸ்டார் நடிகருக்கு உள்ள ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற முதல் தமிழ் திரைப்பட இயக்குநர், ஸ்ரீதர். தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க டிரென்ட் செட்டர். ஆபாசம், வன்முறை, விரசம், மெகா பட்ஜெட் ஆகியவற்றை எல்லாம் நம்பாமல், மனதைத் தொடும் கதை, பொருத்தமான வசனம், புதிய டெக்னிக்குகள் என்று ஏராளமான வெள்ளிவிழாப் படங்களைக் கொடுத்தவர் ஸ்ரீதர்.

ஸ்ரீதரின் பள்ளிப் பருவம் முதல் இறுதி வரை துணையாக இருந்தவர் கோபு. 40 வெற்றிப் படங்களுக்குக் கதை, வசனம் எழுதியதோடு 14 படங்களையும் இயக்கியுள்ள கோபு, ஸ்ரீதருடன் இணைந்திருந்த அந்த இனிய நாட்களை, நமக்காக நினைவு கூர்கிறார்.

அந்த இனிய ஸ்ரீதர் நாட்கள்
''செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் உயர் நிலைப்பள்ளியில் ஐந்தாவது படிக்கும்போது ஸ்ரீதரை முதன் முதலா சந்தித்தேன். என் வாழ்வே ஸ்ரீதரால் திசைமாறப்போகிறது என்பது அப்போது சத்தியமாக எனக்குத் தெரியாது. எஸ்.எஸ்.எல்.சி. வரை இணைந்து படித்தோம். அப்போதெல்லாம் பள்ளி ஆண்டு விழாவில் ஸ்ரீதர் கதை, வசனம் எழுதி, ஹீரோவாக நடித்த சமூக நாடகம் நடைபெறும். அதில் காமெடியனாக நான் நடிப்பேன். பள்ளி மாணவர்களிடையே, ஸ்ரீதருக்கு அப்போதே நல்ல மவுசு.

ஸ்ரீதர் சென்னைக்கு வந்து செட்டில் ஆகி, 'ரத்த பாசம்’, 'எதிர்பாராதது’ ஆகிய படங்களுக்கு கதை, வசனம் எழுதினார். இரண்டும் பெரிய ஹிட். அதனால், ஸ்ரீதருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இலக்கணத் தமிழில் பேசிய தமிழ் சினிமாவை யதார்த்த உலகத்துக்கு தன் வசனம் மூலம் இழுத்து வந்தவர் ஸ்ரீதர்தான். அதன் பிறகு வீனஸ் பிக்சர்ஸ் கோவிந்தராஜன் (சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனின் தந்தை) வீனஸ் கிருஷ்ணமூர்த்தி (இயக்குநர் மணிரத்னத்தின் சித்தப்பா), ஸ்ரீதர் மூவரும் தயாரிப்பாளர்களாக இணைந்தனர். 'உத்தமபுத்திரன்’, 'அமரதீபம்’ ஆகிய இரு படங்களைத் தயாரித்தார்கள். இரண்டிலும் சிவாஜி கணேசன் கதாநாயகன். கதை வசனம் - ஸ்ரீதர். இயக்கம் டி.பிரகாஷ் ராவ். இரண்டுமே வெற்றிப்படங்கள்.

அந்த இனிய ஸ்ரீதர் நாட்கள்
கதை, வசனத்தில் ஸ்ரீதர் வெற்றி பெற்றதை அடுத்து, வீனஸ் கிருஷ்ணமூர்த்தி அவரிடம், 'நம்ப படங்களை நீயே டைரக்ட் பண்ணேன்’ என்றார். ஸ்ரீதருக்கும் ஆசை வந்துவிட்டது.

அப்போது நான் பாரிமுனையில் இயங் கிவந்த ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனத்தில் உதவி மேனேஜராக இருந்தேன். ஒரு நாள் திடீரென்று என் ஆபீஸுக்கு வந்த ஸ்ரீதர், அவர் புதிதாக வாங்கியிருந்த ஃபியட் காரை எனக்குக் காட்டினார். அத்துடன், 'ஆபீஸில் சொல்லிவிட்டு வா மதுராந்தகம் வரைக்கும் காரிலே போயிட்டு வரலாம்!’ என்றார். கார் கிளம்பியது. 'கார் ஓட்ட எப்போ கற்றுக்கொண்டே?’- நான். 'நேற்றுதான்...’ என்றார் கூலாக. டிரங்க் ரோட்டில் கார் போய்க் கொண்டிருந்தது. அப்போது காரின் ஸ்பீடா மீட்டரில் மைல் கணக்குதான். '100-னு இதிலே போட்டிருக்கே... கார் அவ்வளவு ஸ்பீடு போகுமா!’ என்று தெரியாத்தனமாகக் கேட்டேன். அவ்வளவுதான்... ஸ்ரீதருக்கு ஏதோ உசுப்பிவிட்டாற் போல் இருந் திருக்கும். மறுகணம் கார் 50... 60... 70... 80 மைல் ஸ்பீடில் பாயத் தொடங்கியது. எனக்கோ ஒரே உதறல். நேற்று கார் கற்றுக் கொண்டவன் 80 மைல் வேகத்தில் போனால் என்ன ஆகும்? குறிப்பிட்ட இடம் வந்தபிறகுதான் நிம்மதி அடைந்தேன். பயணத்தின்போதே, 'நான் டைரக்டராகப் போகிறேன். நீ என் அசிஸ்டன்ட் டயலாக் ரைட்டர். இன்னியோடு ஆபீஸ் வேலையை ராஜினாமா செய்யுறே!’ என்று கட்டளையே போட்டார். நான் பெரிதாக யோசிக்கவே இல்லை. அவர் சொன்னபடியே ஆபீஸுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, ஸ்ரீதருடன் சேர்ந்துவிட்டேன். அன்று எடுத்த அந்த முடிவுக்காக, இன்றும் நான் பெருமைப் படுகிறேன். ஸ்ரீதர் யாரிடமும் உதவி இயக்குநராக இருந்தது கிடையாது. ஸ்ரீதரிடம் கர்வம் கிடையாது. தன்னைப் பற்றியும் தனது சாதனைகள் பற்றியும் எப்போதும் யாருடனும் பேசவே மாட்டார்.

ஸ்ரீதரின் கதை, வசனம், இயக்கத்தில் 'கல்யாண பரிசு’ உருவானது. முக்கோணக் காதல் கதை. படம் சூப்பர் ஹிட். ஜெமினி கணேசனுக்கு ரொமான்டிக் ஹீரோவாக கல்லூரி மாணவர், மாணவியரிடையே பெரிய ரசிகர் வட்டம் உருவானது. படத்தில் கே.ஏ.தங்கவேலுவின் நகைச் சுவைக் காட்சிகளுக்குப் பிரமாதமான வரவேற்பு. தன்னை பிரபல எழுத்தாளர் பைரவன் என்று தன் மனைவியிடமே பொய் சொல்லுவார் அவர். அடிக்கடி பொய் சொல்லி அகப்பட்டுக் கொள்ளும் கேரக்டர். ஸ்ரீதருக்கும் எனக்கும் மட்டும் தெரிந்த ஒரு ரகசியத்தை உங்களிடம் இப்போது சொல்கிறேன். பள்ளிக்கூடத்தில் எங்களுடன் வெங்கடேஷ் என்ற ஒரு மாணவன் படித்தான். எதற்கும், எப்போதும், நிறையக் கற்பனையோடு பொய் சொல்லும் அவன் கேரெக்டரைத்தான் ஸ்ரீதரும் நானும் டெவலப் செய்து, தங்கவேலு கதாபாத்திரமாக உருவாக்கினோம்.

1958-ல் ரிலீஸான, 'கல்யாண பரிசு’ படத்தை எல்லோரும் பாராட்டி, 'தென்னாட்டு சாந்தாராம்’ என்று ஸ்ரீதரை உயர்த்திப் பிடித்தார்கள். பின்னணி பாடகர் ஏ.எம்.ராஜாவை இசை அமைப்பாளராக இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தினார் ஸ்ரீதர். படத்தின் எல்லாப் பாடல்களும் ஹிட். படத்தின் டைட்டிலில் 'உதவி வசனம்’ - சடகோபன் என்று வரும். அது என் நிஜப்பெயர். 'கல்யாண பரிசு’ எடுத்தபோது ஸ்ரீதரின் வயசு 26.

அந்த இனிய ஸ்ரீதர் நாட்கள்
அடுத்து ஏ.நாகேஸ்வர ராவ் - சரோஜாதேவி ஜோடி நடித்த தெலுங்குப் படமும், ராஜ்கபூர்- வைஜயந்திமாலா நடித்த 'நஸரானா’ இந்திப் படமும் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியாகி மகத்தான வெற்றி பெற்று, இந்தியா முழுக்கப் புகழ்பெற்றார் ஸ்ரீதர்.

இந்தி 'கல்யாண பரிசு’ ஷூட்டிங்கில், ஒரு ஷாட் எப்படி வைக்க வேண்டும் என்று ராஜ்கபூர், ஒளிப்பதிவாளர் சுந்தரத்திடம் சொன்னார். 'ஐ நோ மை ஜாப், நீங்க சொல்ல வேண்டாம்!’ என்று சுந்தரம் பட்டென்று சொல்லிவிட்டார். நாங்கள் சற்று பயந்தோம். 'பெரிய நடிகர்... டைரக்டராச்சே!’ என்று. ஆனால், சிறிது நேரம் கழித்து, ராஜ்கபூரே தான் பேசிய தற்கு வருத்தம் தெரிவித்தார்.

'மீண்ட சொர்க்கம்’ படத்தின்போது, நடனக் காட்சியில் தனக்கு க்ளோசப் ஷாட் வைக்கும்படி பத்மினி கேட்டார். 'சரி, பப்பிம்மா, அப்படியே வைக்கறேன்!’ என்ற ஸ்ரீதர், 'அடுத்த ஷாட் எங்கே, எப்படி வைக்கணும்மா?’ என்று திருப் பிக்கேட்டார். அதன் பிறகு பத்மினி பேசவேயில்லை. ஜெமினி - பத்மினி நடித்த, 'மீண்ட சொர்க்கம்’ ஸ்ரீதருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. நகைச்சுவை மன்னர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ் ணனின் மனைவியார் என்.எஸ்.கே. மதுரம், அதன் தயாரிப்பாளர்.

அடுத்ததாக ஸ்ரீதர் இயக்கி,  சிவாஜி-சரோஜாதேவி நடித்த 'விடி வெள்ளி’ படம் 100 நாட்கள் ஓடி அவருக்கு மேலும் புகழ் சேர்த்தது.

வீனஸ் பிக்சர்ஸில் பங்குதாரராக இருந்த ஸ்ரீதர், சொந்தமாகப் படம் தயாரிக்க ஆசைப் பட்டார். அதைக் கேள்விப்பட்டதும், 'ஏம்ப்பா, கதை, வசனம் மட்டும் எழுதி நல்ல, பேர், பணம் சம்பாதிச்சால் போதுமே... எதுக்கு படத்தயாரிப்பு செய்து ரிஸ்க் எடுக்கறே?’ என்று நான் எதேச்சையாகக் கேட்டேன். 'துணிச்சலா ஏதாவது செய்யணும்டா... நீ இந்த மிடில் கிளாஸ் மென்டாலிட்டியை தூக்கி எறிடா!’ன்னார். அந்த துணிச்சல்தான் அவரது மிகப்பெரிய பலம். இப்படி 1960-ல் உருவானதுதான் சித்ராலயா. ஒளிப் பதிவாளர்கள் வின்சென்ட், பி.என்.சுந்தரம், ஸ்ரீதரின் தம்பி சி.வி.ராஜேந்திரன், ஸ்டில்ஸ் அருணாசலம், நாகபூஷணம், நான் உட்பட அனைவரும் 50 சதவிகிதம் ஸ்ரீதர் 50 சதவிகிதம் என்று தொடங்கினோம்.

சித்ராலயாவின் முதல் படம் 'தேன் நிலவு’. காஷ்மீரில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம். இந்தியில் ஏற்கெனவே புகழ்பெற்றிருந்த வைஜயந்திமாலாவுக்கும் இது மறக்க முடியாத படம். ஸ்ரீநகரில் 50 நாட்கள் படப்பிடிப்பு என்பதால், ஒரு புதுமையான காரியம் செய்தார் ஸ்ரீதர். 50 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு என்பதால் நடிகர் - நடிகைகள் சென்னைக்கு சென்று வருவதைத் தவிர்க்க... முக்கிய நடிகர், நடிகைகள் அனைவரையும் குடும்பத்தினருடன் அழைத்துச் சென்றார்.

வைஜயந்திமாலா வடநாட்டில் புகழ் பெற்றவர் என்பதால், அவர் கலந்து கொள்ளும் படப்பிடிப்பின்போது கட்டுக்கு அடங்காத கூட்டம் வரும். பி.மாதவன், சி.வி.ராஜேந்திரன், நான் உட்பட படப்பிடிப்பில் ஸ்ரீதருக்கு உதவி செய்ததை விட, கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வேலையைத்தான் அதிகமாகச் செய்தோம். இனி மையான காதல் கதை. காஷ்மீரில் படமாக்கியது படத்துக்கு பெரிய ப்ளஸ் பாயின்ட். 'தேன் நிலவு’ படம் நன்றாக ஓடினாலும், நாங்கள் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை.

எனவே, சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் தயாரிக்க முடிவு செய்தோம். அதுதான், 'நெஞ்சில் ஓர் ஆலயம்’. முக்கோணக் காதல் கதை. விஜயா - வாஹினி ஸ்டூடியோவின் ஒன்பதாவது தளத்தில் உருவாக்கப்பட்ட, ஆஸ்பத்திரி செட்டில் 25 நாட்களில், 'நெஞ்சில் ஓர் ஆலயம்’ படம் உருவானது. அதுவரை, இவ்வளவு குறுகிய காலத்தில், வேறு எந்த ஒரு தமிழ்ப் படமும் எடுக்கப்படவில்லை. ஒரே செட்டில் ஒரு படம் எடுக்கப்பட்டது மற்றொரு சிறப்பு. 'சாத்தியமா?’ என்று மற்றவர்கள் மலைக்கும் நேரத்துக்குள் அதைச் செய்து முடித்தார், ஸ்ரீதர்.

கன்னட நடிகர் கல்யாண்குமார் ஹீரோ. தமிழுக்கு அறிமுகம். நடிகர் பாலாஜியின் சிபாரிசின் பெயரில் நாகேஷை, ஸ்ரீதர் அறிமுகப்படுத்தினார். படத்தில் தேவிகா மட்டுமே பிரபலமானவர். இந்தப் படத்தில் கண்ணதாசன் - எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டணியில் எல்லாப் பாடல்களும் ஹிட். எஸ்.வி.சஹஸ்ரநாமம் நாடக குழுவில், நடித்துக் கொண்டிருந்த முத்துராமனை, அவர் கண்களுக்காகவே தேர்ந்தெடுத்து, இரண்டாவது ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். நேர்த்தியாகக் கதை சொல்லும் ஸ்ரீதரின் திறமை, உணர்ச்சி மிகுந்த டயலாக், க்ளைமாக்ஸில் எதிர் பாராத திருப்பம் - இவை படத்தின் ப்ளஸ் பாயின்ட்டுகள். இருந்தும், படத்தை வாங்க, விநி யோகஸ்தர்கள் எவரும் முன்வரவில்லை.

அந்த இனிய ஸ்ரீதர் நாட்கள்
ஆனாலும் மனம் தளராமல் தன் னம்பிக்கையுடன் எல்லா இடங்களிலும் சொந்தமாகப் படத்தை வெளியிட்டார் ஸ்ரீதர். அது எவ்வளவு பெரிய ரிஸ்க் என்பது திரைத்துறையினருக்குத் தெரியும். அவருடைய நம் பிக்கை பொய்க்கவில்லை. தினமும் ஹவுஸ் ஃபுல் ரிப்போர்ட்தான். படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. சென்னை, மதுரையில் 25 வாரங்கள் ஓடி வெள்ளிவிழா கண்டது. சித்ராலயா பேனருக்கும்... ஸ்ரீதருக்கும் திரைப் படத் துறையில் மதிப்பு கூடியது!

ராஜேந்திரகுமார், ராஜ்குமார், மீனா குமாரி, மெஹ்மூத் போன்ற பிரபல நட்சத்திரங்கள் நடித்து இந்தப் படம், இந்தியில் 'தில் ஏக் மந்திர்’ என்ற பெயரில் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியானது. இந்தியிலும் சூப்பர் ஹிட்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஸ்ரீதரும் நானும் சென்னை காந்தி சிலை அருகே, மெரினா கடற்கரையில் உட்கார்ந்து, அடுத்த படத்துக்கான கதை பற்றிப் பேசுவோம். பிற்காலத்தில்தான் ஹோட்டலில் ரூம் போட்டு கதை டிஸ்கஷன் செய்வது வழக்கமானது. 'நெஞ்சில் ஓர் ஆலயம்’ சீரியஸான படம் என்பதால், அடுத்து லைட்டாக காதல் ப்ளஸ் காமெடி சப்ஜெக்ட் ஒன்றை வண்ணத்தில் உருவாக்க முடிவு செய்தோம். அப்படி உருவானதுதான் 'காதலிக்க நேரமில்லை’.

தமிழின் முதல் ஈஸ்ட்மன் கலர் படம். விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை. இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களும் ஹிட். பெரிய நட்சத்திரக் கும்பல் கொண்ட 'காதலிக்க நேரமில்லை’ படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசித்துச் சிரிக்காத தமிழ் குடும்பம் இருக்காது. கொடூரமான வில்லனாகப் படங்களில் பெயர் எடுத்த குணசித்திர நடிகர் டி.எஸ்.பாலையாவும் நாகேஷ§ம் இணையும் காட்சிகள் நகைச்சுவையின் உச்ச கட்டம்.

'காதலிக்க நேரமில்லை’ டைட்டிலில், கதை-வசனம் 'ஸ்ரீதர்-கோபு’ என்று இருவர் பெயரையும் சேர்த்து, தனி கார்டு போட்டது ஸ்ரீதரின் பெருந்தன்மைக்கு எடுத்துகாட்டு. பட விமர்சனங்களில் பத்திரிகைகள் ஸ்ரீதரை வானளாவப் புகழ்ந்து எழுதின. 'இளமை டச்’ என்பதற்கு ஸ்ரீதர்தான் அதாரிட்டியாகக் கருதப்பட்டார். பள்ளி, கல்லூரி, மாணவ மாணவியர் மற்றும் இளைஞர்களிடையே அவருக்கு பெரிய கிரேஸ் ஏற்பட்டது. அவர் எங்கு சென்றாலும் இளவட்டங்கள் அவரைச் சூழ்ந்து கொண்டன.

ஒரு முறை புகழ் பெற்ற தயா ரிப்பாளரும் இயக்குநருமான வி.சாந்தா ராமை, சந்தித்தபோது அவர் கால்களைத் தொட்டு வணங்கிய ஸ்ரீதர், 'நீங்கள்தான் என் மானசீக குரு’ என்று சொன்னார். சாந்தாராம் அப்படியே ஸ்ரீதரை கட்டித் தழுவி பாராட்டியதை இன்றும் மறக்க முடியாது.

  1965-ம் வருடம், சென்னை ராணி மேரி கல்லூரி மாணவியான தேவசேனாவை, ஸ்ரீதருக்கு திருமணம் செய்ய வீட்டுப் பெரியவர்கள் முடிவு செய்தார்கள். மறக்க முடியாத பல காதல் ஜோடிகளைத் தனது படங்களில் உருவாக்கி ரசிகர்களின் நினைவில் நிறுத்திய ஸ்ரீதர், தனது சொந்த வாழ்வில் எவரையும் காதலிக்கவில்லை!

அந்தக் காலகட்டத்தில் தென்னிந் தியாவை உலுக்கிய திருமணம் அது. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி உட்பட தமிழ் திரை உலக நட்சத்திரங்கள், என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ் உட்படத் தெலுங்குத் திரை உலகம், ராஜ்கபூர், வைஜயந்திமாலா உள்பட ஏராளமான இந்தி நட்சத்திரங்கள் எஸ்.எஸ்.வாசன், ஏவி.எம் செட்டியார், நாகிரெட்டி போன்ற திரைப்படத் தயாரிப்பாளர்கள், அரசியல் தலைவர்கள் என்று ஏராளமான கூட்டம். சென்னை தேனாம்பேட்டை ஆபட்ஸ்பரி மண்டபத்தில் நடந்த திருமணத்தால் அன்றைக்கு மவுண்ட் ரோடே டிராஃபிக்கால் ஸ்தம்பித்தது. சித்ராலயாவின் யூனிட் ஆட்கள் அனைவரையும், நெல்லூருக்கு அழைத்துப் போய், தேவசேனாவின் பெற்றோர், அருமையான விருந்து வைத்தார்கள்.

அந்த இனிய ஸ்ரீதர் நாட்கள்
ஸ்ரீதர் எப்போதுமே ஸ்டைலிஷ்ஷாக இருப்பார். உயர்தர வாழ்க்கை வாழ்ந்தவர். அவரது மனைவி தேவசேனாவின் ஆங்கில அறிவு அபாரமானது. தஞ்சாவூர் பெயின்டிங்குகளை ஆர்வத்தோடு சேகரிப்பார். எப்போதும் சினிமா பற்றி மட்டும் நினைக்கும் ஸ்ரீதரையும் அவர்களது மகன் சஞ்சய், மகள் ஸ்ரீப்ரியா உட்பட குடும்பத்தைத் திறம்பட நிர்வாகம் செய்வார். மொத்தத்தில், திரையுலகில் பலர் வியந்தும் பலர் பொறாமைப்படும் பொருத்தமான ஜோடி ஸ்ரீதர்-தேவசேனா. ஸ்ரீதருக்கு அவர் அதிர்ஷ்ட லட்சுமியும்கூட.

  பிரபல புல்லாங்குழல் மேதை ஃப்ளூட் மாலியின் வாழ்க்கையில் இன்ஸ்பயர் ஆகி ஸ்ரீதர் எடுத்த படம் 'கலைக் கோயில்’. ஆர்ட் டைரக்டர் கங்கா, எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து தயாரித்த படம் இது. படத்தின் கதாநாயகன் முத்துராமன் அருமையான வீணை கலைஞன். அவர் தந்தை எஸ்.வி.ரங்காராவ். இருவருக்கும் இடையே ஏற்படும் மனப்போராட்டம்தான் கதை. காலை ஏழு மணிக்கு பூஜை போட்டு, தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த ஸ்ரீதர் திட்டமிட்டிருந்தார். பொதுவாகவே, காலை ஷூட்டிங் என்றால் ரங்காராவ், லேட்டாகத்தான் வருவார். பூஜைக்கும் வரவில்லை. காத்திருந்தோம். டென்ஷன்தான் ஏறியது. என்னை அழைத்து, 'இன்னும் அவர் வரலை. வெயிட் பண்ணுவதில் பிரயோஜனம் இல்லை. அந்த ரோலில் எஸ்.வி.சுப்பையா அண்ணனைப் போட முடிவு பண்ணிவிட்டேன்!’ என்றார். பரபரப்பான அவசர ஏற்பாடுகளுக்குப் பிறகு சுப்பையாவும் வந்தார். படப்பிடிப்பு ஆரம்பமானது.

ஒன்பது மணிக்கு மேல் எஸ்.வி.ரங்காராவ் வந்தார். கோபப்படுவாரோ என்று தயங்கியவாறே, அவரிடம் விஷயத்தைச் சொன்னோம். ஸ்ரீதர் மீது அவருக்கு நல்ல மரியாதை. 'நோ பிராப்ளம், ஹி இஸ் எ ஜென்டில்மேன். என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியும். அவருக்கு என் வாழ்த்துகளைச் சொல்லுங்க!’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். இப்படித்தான் எஸ்.வி.சுப்பையா அதில் நடித்தார். 'கலைக்கோயில்’ படத்தை மிகுந்த கலை நயத்தோடு உருவாக்கினார் ஸ்ரீதர். ஆனால், அது வெளியாகி மூன்று வாரங்கள் மட்டுமே ஓடியது.

அந்த இனிய ஸ்ரீதர் நாட்கள்
'வெண்ணிற ஆடை’ திரைப்படத்தின் மூலம் ஜெயலலிதா, நிர்மலா, ஸ்ரீகாந்த், மூர்த்தி ஆகியோரை அறிமுகப்படுத்தினார் ஸ்ரீதர். கதை அமைப்பு, பாடல்கள், காதல் காட்சிகள் நேர்த்தியாக அமைந்தன.

சென்னை மவுண்ட் ரோடில் ஆனந்த் தியேட்டரில் 'வெண்ணிற ஆடை’ படத்துக்கு அட்வான்ஸ் புக்கிங் செய்வதற்கு வரிசை டி.வி.எஸ். பஸ் ஸ்டாப் வரை நீண்டது என்பது அந்த நாளைய சாதனை. ஸ்ரீதரின் இளமை டச் இதிலும் ஸ்ட்ராங்காக இருந்தது. கடைசியில் எதிர்பாராத திருப்பம் வரும். ஏனோ தெரியவில்லை... படத்துக்கு, சென்ஸார், 'ஏ’ சர்டிஃபிகேட் வழங்கினார்கள். படம் ஹிட் ஆனது. நூறு நாட்கள் ஓடியது.

இந்தப் படத்தில், நிர்மலா நடித்த ரோலில் முதலில் மற்றொரு புதுமுகமாக நடிகை ஹேமமாலினியை அறிமுகப்படுத்த நினைத்தார் ஸ்ரீதர். அவருக்கு மேக்கப் டெஸ்ட் எல்லாம் எடுத்த பிறகு, ஹேமமாலினி மிகவும் ஒல்லியாக இருப்பதாக உணர்ந்தார் ஸ்ரீதர். எனவே, அந்தப் பாத்திரத்துக்குப் பொருந்த மாட்டார் என்று கருதி அவரை நிராகரித்தார்.

அதன் பிறகு மிகவும் குறுகிய காலத்தில் இந்தித் திரைப்பட உலகில், கதாநாயகியாக அறிமுகமாகி... 'கனவுக் கன்னி’ பட்டம் பெற்று, இந்தியில் முன்னணி நட்சத்திரமாகிவிட்டார் ஹேமமாலினி.

  எம்.ஜி.ஆருக்காக ஸ்ரீதர் ஒரு கதையை தயார் செய்தார். எம்.ஜி.ஆருக்கும் அது பிடித்துவிட்டது. 'அன்று சிந்திய ரத்தம்’ என்று பெயர் வைக்கப்பட்ட அந்தப் படத்துக்கு, ஒரே ஒரு நாள் மட்டும் படப்பிடிப்பு நடந்தது. பின்னர் ஏதேதோ காரணங்களால் படம் கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்துதான் ஸ்ரீதர், சிவாஜிக்காக 'சிவந்தமண்’ கதையை எழுதினார்.

'யானைக்கும் அடி சறுக்கும்’ என்பதற்கேற்ப, ஸ்ரீதரை பெரும் சோதனைக்கு உள்ளாக்கிய படம் 'சிவந்த மண்’. சித்ராலயா பேனரில் மிகப்பெரிய பட்ஜெட்டில், ஒரே சமயத்தில் தமிழிலும் இந்தியிலும் எடுக்கப்பட்ட படம். இந்தியில் ராஜேந்திரகுமார், வஹிதாரெஹ்மான், அஜீத் நடித்தனர். பெயர் 'தர்த்தி’. தமிழில் சிவாஜி, காஞ்சனா, ரங்காராவ், நம்பியார் ஆகியோர் நடித்தனர். ஐரோப்பிய நாடுகளில் அதிக நாட்கள் படமாக்கப்பட்ட முதல் படம் என்ற சிறப்பும் இதற்கு உண்டு. ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, பாரீஸ், லண்டன் ஆகிய நகரங்களில் படமாக்கினோம்.

இந்தப் படத்துக்காக பிரமாண்டமான செட்டுகள் பல போட்டோம். ஏராளமான பொருட் செலவில், வாஹினி ஸ்டூடியோவில் பெரிய நதியை உருவாக்கினோம்.

படத்தின் ஹைலைட் 'பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான்...’ என்ற பாடல் காட்சி. எல்.ஆர்.ஈஸ்வரி, அருமையாகப் பாடியிருப்பர். படத்தில் பாட்டுக்கு நடனமாடும் காஞ்சனாவை அராபிய வேட சிவாஜி சாட்டையால் அடித்தபடி இருப்பார்.

'சிவந்த மண்’ தமிழில் நூறு நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. ஆனால், 'தர்த்தி’ சரியாக ஓடவில்லை. ஸ்ரீதர் மிகப்பெரிய நஷ்டத்தை முதன்முதலாக சந்தித்தார். அதிலிருந்து மீள அவருக்குப் பல வருடங்கள் ஆனது. சினிமா பற்றி நன்கு அறிந்த பெரிய ஜீனியஸ் செய்த, மாபெரும் தவறு அது.

  எம்.ஜி.ஆரை வைத்து பல ஆண்டுகள் கழித்து ஸ்ரீதர் தயாரித்து இயக்கிய படம் 'உரிமைக்குரல்’. எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்காக ஸ்ரீதரின் 'டைரக்டர் டச்’களுடன் எடுக்கப்பட்ட படம் எனலாம். இது மாபெரும் வெற்றி அடைந்ததால், ஸ்ரீதருக்கு கணிசமான லாபம் கிடைத்தது. இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமே ஹிட்.

சடையப்பச் செட்டியாருக்காக எம்.ஜி.ஆரை வைத்து ஸ்ரீதர் இயக்கிய படம் 'மீனவ நண்பன்’. இதுவும் வெற்றிப்படமே.

கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா ஜெயசித்ரா நடித்த ஸ்ரீதரின் 'இளமை ஊஞ்சலாடுகிறது’ வியாபார ரீதியாக பெரிய ஹிட் ஆனது. தொடர்ந்து 1981-ம் ஆண்டு, நடிகர் முத்துராமன் மகன் கார்த்திக் மற்றும் ஜெமினி கணேசனின் மகள் ஜெயா ஸ்ரீதர் இருவரையும் இணைத்து நடிக்க வைத்து ஸ்ரீதர் இயக்கிய 'நினைவெல்லாம் நித்யா’, அவருக்கு மிகுந்த திருப்தி அளித்த வெற்றிப் படம்.

ரஜினி, ராதா, ஜெய்சங்கர் நடித்த 'துடிக்கும் கரங்கள்’ ஹிட் ஆனது. ஒரு நடிகைக்கும் அவர் மகளுக்கும் இடையே நடைபெறும் மனப் போராட்டத்தைப் பிரதிபலிக்கும் 'ஆலய தீபம்’, படம் ஸ்ரீதரின் சிறந்த படங்களான கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம் படங்களுடன் ஒப்பிடும் அளவுக்கு அவரது 'டச்’ நிறைந்த படம். இதுவும் நூறு நாட்கள் ஓடிய வெற்றிப்படம்.

சென்னை தேவி குரூப் ஆப் தியேட்டர்ஸ் நிறுவனத்தினர் தயாரித்த 'தென்றலே என்னைத் தொடு’ படத்தில் நடிகர் மோகனுடன், ஜெயஸ்ரீ என்ற புதுமுகத்தை ஹீரோயினாக ஸ்ரீதர் அறிமுகப்படுத்தினார். இனிமையான காதல் கதை. வெள்ளிவிழா கொண்டாடிய படம் இது.

தொடர்ந்து, கமல் - அம்பிகா நடித்த 'நானும் ஒரு தொழிலாளி’ படத்தை ஸ்ரீதர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் எடுத்தார் படம் கை கொடுக்கவில்லை. ஏகப்பட்ட நஷ்டம். கொஞ்சம் இடைவெளிக்குப்பிறகு விக்ரம், ரோகிணி இருவரையும் நடிக்க வைத்து 'தந்துவிட்டேன் என்னை’ என்ற படத்தை ஆரம்பித்தார் ஸ்ரீதர். இந்தப் படம் ஒரு மிடில் கிளாஸ் காதல் கதை. இந்தப் படமும் தோல்விப் படமாக அமைந்தது.

ஸ்ரீதர் தமிழ் திரையுலகின் மாபெரும் சாதனையாளர். இவருக்கு மத்திய அரசு, பத்மஸ்ரீ, பத்மபூஷண் போன்ற விருதுகள் கொடுத்து கௌரவிக்கவில்லை. திரைப்படத்துறை சாதனையாளருக்கு அளிக்கப்படும் தாதா சாஹிப் பால்கே விருதும் அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால், தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் என் நண்பனுக்கு என்றென்றும் நிரந்தரமான இடம் உண்டு என்பதில் சந்தேகமே இல்லை.

அந்த இனிய ஸ்ரீதர் நாட்கள்
1975-80 காலகட்டத்தில் கோபு, வெளித் தயாரிப்பாளர்களுக்கு கதை, வசனம், டைரக்ஷன் செய்திருக்கிறார். ஏவி.எம் நிறுவனத்துக்காக அவர் எழுதி டைரக்ட் செய்த முழு நீள நகைச்சுவைப்படம் 'காசேதான் கடவுளடா’. நடிகர் ஜெய்சங்கர் ஹீரோவாக நடித்த 'தைரியலட்சுமி’, 'காலமடி காலம்’, 'அத்தையா மாமியா’ உள்பட பல படங்களை எழுதி இயக்கியுள்ளார். 'வீட்டுக்குவீடு’ கோபு எழுதி, இயக்கி சூப்பர் ஹிட்டான படம். ஏவி.எம்-மின், 'பாட்டி சொல்லைத் தட்டாதே’ - சூப்பர் ஹிட் படத்துக்கு கதை, வசனம் கோபுதான். இவரது மனைவி கமலா சடகோபன் பிரபல எழுத்தாளர்.

.

Saturday, 9 May 2020

MASTER SRIDHAR ,CHILD ACTOR BORN 1953 MAY 9 - DECEMBER 11,2013



MASTER SRIDHAR ,CHILD ACTOR 
BORN 1953 MAY 9 - DECEMBER 11,2013




.மாஸ்டர் ஸ்ரீதர். நான், பணத்துக்காக,என்னதான் முடிவு, குறத்தி மகன், முருகன் அடிமை, எதையும் தாங்கும் இதயம் போன்ற ஏராளமான தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் கதாநாயகனாகவும் நடித்தவர்.

திரைப்படங்களுடன் சின்னத்திரையிலும் நாடகங்களிலும் நடித்துள்ளார்.இவரது 5-ஆவது வயதிலேயே “கடமையும் நீதியும்” என்ற நாடகத்தில் நடித்துள்ளார். அறிஞர் அண்ணாவின் “எதையும் தாங்கும் இதயம்”படத்தில் சிறு வயது எஸ்.எஸ்.ராஜேந்திரனாக நடித்துள்ளார். இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டிருந்தபோது கதாநாயகனாக நடித்த படம் அருட்பெருஞ்ஜோதி. இப்படம் 1971-இல்
வெளிவந்தது.இப்படத்தில் ராமலிங்கமாக இவர் நடித்திருந்தார்.இவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் “குறத்தி மகன்”. இப்படம் தேசிய விருதைப் பெற்றது. இதில் இவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஜெயசித்ரா. இவர் பிரபல நடிகை இந்திராவை [பேபி இந்திரா] திருமணம் செய்துகொண்டார்.

நடிகர், “மாஸ்டர்ஸ்ரீதர், 60, மாரடைப்பால்மரணமடைந்தார். குழந்தை நட்சத்திரமாக தமிழ்த்திரையுலகில் அறிமுகமானவர், “மாஸ்டர்ஸ்ரீதர். “கர்ணன், கந்தன்கருணை, குறத்திமகன், முருகன்அடிமை, பகவான் ஐயப்பன் உட்பட, 150, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடப்படங்களிலும், நாடகங்களிலும் நடித்துள்ளார். முன்னாள் நடிகையான, “பேபி இந்திரா, இவர் மனைவி; இவர்களுக்கு, 2 மகன்கள் உள்ளனர். சென்னை, கொட்டிவாக்கம், கற்பகாம்பாள் நகரில் வசித்து வந்த ஸ்ரீதர், சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், வீட்டில்
இருந்தபடி சிகிச்சை பெற்றார்; நேற்று அதிகாலை, மாரடைப்பால் இறந்தார். இவரது உடலுக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், தலைவர் சரத்குமார், செயலர் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், குட்டி பத்மினி உட்பட, பல நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தினர். அவரதுஇ றுதிசடங்கு, நேற்று மாலை, சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடந்தது.


Baby Indira is a well-known child artistwho worked during the 1970s and 1980s. She has acted in almost all the south Indian languages. Most of the films done by her are in Kannada. She started her career at an early age with the film Janma Rahasya in 1972. The film starred Dr. Rajkumar and Bharathi Vishnuvardhan in the lead roles. In 1976, she acted in Makkala Bhagya, in which she performed a dual role. She performed as Sheela, the daughter of Vishnuvardhan and Bharathi. This film is a remake of Kuzhandhaiyum Deivamum, a Tamil movie.

In this film, Baby Indira got a good role in reuniting her separated parents. This film earned a good name to her. Puttani Agent 123 was a film that released in the year 1979, which had Baby Indira in the lead role. The story of the film Putani Agent 123 is about the friendship of three children. Baby Indira performed as Radha, the daughter of a police inspector. In the year 1982, she acted in the Tamil movie Darling Darling Darling as the sister of K. Bhagyaraj. Chinnadantha Maga is the movie which was released in the year 1983, which had Baby Indira in a small role.

The film featured Vishnuvardhan and Madhavi and was a remake of a Telugu movie Talli Kodukula Anubandham. She acted as a heroine in Male Banthu Male opposite Arjun in 1984. Baby Indira’s sister Rasi is also an actress, who has performed as child artist in many films. Rasi did an important role in the Tamil film Arangetravelai starring Prabhu and Revathi.



However, as an adult actor, it was his performance in mythological plays that earned him recognition. Especially, his role as Narada in the TV serial, Naragasuran, produced under the banner of National Theatres by this writer and R.S. Manohar jointly and telecast by Doordarshan, Chennai Kendra, in 1991 won him laurels. A highly devoted and disciplined artist, Sridhar would always get deeply involved in the character he donned. He acted as the young Aadi Sankara in the play of that title and appeared as the senior savant when he presented the play under his own banner, Sri Chakra Stage. The play was staged over 200 times. Another milestone was his title role in the play, Thirunavukkarasar, produced by K.R.S. Kumar’s Nataka Kavalar Kalai Koodam. The performance fetched him the R.S. Mahonar’s silver rolling trophy for best actor from Mylapore Academy for the year 2010. He had the privilege of staging his play, Maangani, at the World Tamil Conference in Thanjavur.

Sridhar lent his voice to a number of artists and wrote the lyrics and composed music for devotional CDs including ‘Sri Skandha Geetham’ sung by Nithyasree Mahadevan, Unni Krishnan, Rajkumar Bharati, etc. He presented religious discourse on Zee TV Tamil for “Olimayamaana Yedhirgalam” daily in 2012.



Adi Parasakthi’ (Raj TV) Gnyaanaanandham (Podhigai) and Indrajith (Jaya TV) were some of the serials in which he was featured.

Sunday, 10 November 2019

SIVANTHA MANN WHEN PICTURISED


SIVANTHA MANN WHEN PICTURISED



அந்நிய மண்ணில் ‘சிவந்த மண்’ படமாகிக்கொண்டிருந்தது. படக்குழு அப்போது பாரிஸ் நகரத்தில் முகாமிட்டிருந்தது. அன்று படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலுக்குத் திரும்பி ஆயிற்று. அந்த ஹோட்டலின் பெரிய பூங்காவில் உலா போய்விட்டு தன் அறைக்குத் திரும்பிச் செல்ல லிப்டில் ஏறினார் கோபு. அப்போது உள்ளே நுழைந்தார் ஒருவர்.

அவர் தி.மு.க எம்.பி. முரசொலி மாறன். “என்ன கோபு சார் இங்கே. அதுவும் வேட்டியுடன்?” - மாறன் கேட்டார். “நான்தான் வேட்டி! சிவாஜி, ஸ்ரீதர் எல்லாரும் லுங்கியோட வாக்கிங் போறாங்க. ‘சிவந்த மண்’ ஷூட்டிங், இங்கதான் தங்கியிருக்கோம்” என கோபு பெருமையுடன் சொன்னார். “தப்பு பண்ணிட்டீங்களே கோபு” என்றவர், அவர்கள் படக்குழுவைக் காண வந்தார் மாறன்.

மாறனைப் பார்த்ததும் சிவாஜிக்கும் ஸ்ரீதருக்கும் வியப்பு. நல விசாரிப்புகளுக்குப் பின் முரசொலி மாறன் ஒரு குண்டைத் தூக்கி போட்டார். “ஸ்ரீதர்... இன்னும் ரெண்டு நாள் நீங்க இந்த ஹோட்டல்ல தங்கினீங்கன்னா ‘சிவந்த மண்’ படத்தோட பட்ஜெட் முழுவதையும் இந்த ஹோட்டலுக்கே செலவழிக்க வேண்டியிருக்கும். நல்லவேளை, நான் கோபுவைப் பார்த்தேன். உடனே காலி பண்ணிக்கிட்டு, வெளியிலே நான் சொல்லுற ஓட்டலுல போயி தங்குங்க. வசதியாவும் இருக்கும். சிக்கனமாவும் இருக்கும்” என்றார்.

ஸ்ரீதர் அலறியடித்தபடி டேராவைத் தூக்கச் சொன்னார். ஒரு நாள் தங்கியதற்கான ஹோட்டல் பில் வர, அந்த ஹோட்டல் பில்லைப் பார்த்ததுமே கோபுவின் கண்களில் ரத்த கண்ணீர் “டேய் ஸ்ரீ... இந்த பைசாவுக்கு ‘நெஞ்சில் ஒரு ஆலயம்’ மாதிரி மூணு படங்களை எடுத்திருக்கலாம்” என்று சொல்ல, “தலைக்கு வந்தது முரசொலி மாறனால போச்சு” என்றார் ஸ்ரீதர். அனைவரும் மாறன் கூறிய ஹோட்டலில் தங்கிப் படப்பிடிப்பைத் தொடர்ந்தார்கள்.

நாடு திரும்பிய படக்குழு

“பார்வை யுவராணி கண்ணோவியம்’’ பாடலை ஈபிள் டவரில் படமாக்கிக்கொண்டிருந்தார்கள். ஸ்ரீதரின் மனைவி தேவசேனா பரபரப்புடன் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு வந்தார். அவரது கண்கள் கலங்கி இருந்தன. ஸ்ரீதரின் தாயார் காலமாகிவிட்டதாகத் தகவல் வந்திருப்பதாக அவர் கூறியதும் ஸ்ரீதர் அதிர்ந்து கலங்கிப்போனார். சிறிது நேரத்தில் தன்னைத் தேற்றிக்கொண்டு, கோபுவைத் தனியே அழைத்த ஸ்ரீதர், “கோபு... கஷ்டப்பட்டு பெரிய நட்சத்திரங்களோட கால்ஷீட்டை வாங்கிட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கோம்.

ராஜியை (சி.வி.ராஜேந்திரன்) வச்சுக்கிட்டு மீதிப் படப்பிடிப்பை முடிச்சுட்டு வந்து சேருங்க. நானும் தேவசேனாவும் கிளம்பறோம்” என்று சொன்னவுடன் கோபுவும் ராஜேந்திரனும் மறுத்து விட்டார்கள்.

“எங்களையும் பிள்ளை மாதிரிதானே உங்கம்மா பார்த்தாங்க நாங்களும் வருவோம் ஸ்ரீ” என்று சொல்லிவிட்டனர். சிவாஜி கணேசனிடம் துக்கச் செய்தியைக் கூறியபோது, அவரும் கண்டிப்புடன் கூறிவிட்டார். “கால்ஷீட் எப்ப வேணுமானாலும் கிடைக்கும்… ஆனால் அம்மாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த மறுபடி வாய்ப்பு கிடைக்காதுப்பா! நீ துக்கப்பட்டிருக்கும்போது இங்கே படப்பிடிப்புல எங்களுக்கு எப்படிக் கவனம் போகும். எல்லாரும் கிளம்புவோம் ஸ்ரீதர். நீ எப்பக் கூப்பிடுறியோ அப்ப கால்ஷீட் தரேன்” என்று சிவாஜி கூறினார். அதே உத்திரவாதத்தை ராஜேந்திரகுமாரும் வஹீதா ரஹ்மானும் தந்தனர். உடனே அனைவரும் சென்னைக்குக் கிளம்பினோம்.

தோல்வி கண்ட ‘தர்த்தி’

தாயாரின் காரியங்கள் முடிந்ததும் சென்னையிலேயே பிரம்மாண்ட அரங்கங்களை நிர்மாணித்துப் படப்பிடிப்பைத் தொடர்ந்தார் ஸ்ரீதர். ‘பட்டத்து ராணி பார்க்கும் பார்வை’ பாடலை அமர்க்களமாகப் படம்பிடித்தார். இந்த இடத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியைப் பற்றிக் கூறியே ஆக வேண்டும். தமிழில் எம்.எஸ்.வி போட்டிருந்த இந்தப் பாடல் மெட்டை சங்கர் - ஜெய்கிஷன் மற்றும் லதா மங்கேஸ்கருக்குப் போட்டுக் காட்டியது சித்ராலயா.

ஈஸ்வரியின் பாட்டைக் கேட்ட லதா, “இந்த அளவு சுவாசத்தைக் கையாண்டு முனகுவது என்னால் இயலாத காரியம். அற்புதமாகப் பாடியிருக்கிறார் ஈஸ்வரி!” என்று லதாவே வியந்து பாராட்டினார் என்றால் ‘பட்டத்து ராணி’ பாடலுக்கு இதைவிட வேறு என்ன ஏற்றம் வேண்டும்?

1969 தீபாவளித் திருநாளில் சிவந்த மண்ணும் ஒரு மாதத்துக்குப் பின் ‘தர்த்தி’ படமும் வெளியாயின. ‘சிவந்த மண்’ நன்றாக ஓடினாலும் ‘தர்த்தி’ படுதோல்வியைத் தழுவியது. இதனால் சித்ராலயாவுக்குப் பெருத்த நஷ்டம். இனி, இந்திப் படவுலகில் காலை வைக்க வேண்டாம் என்று ஸ்ரீதர் தீர்மானமான முடிவுக்கு வந்தார்.

இந்த நேரத்தில் சிவாஜி கணேசனைக் கதாநாயகனாக வைத்து, ‘ஹீரோ 72’ என்ற படத்தை அறிவித்தார் ஸ்ரீதர். அந்தப் படமே பின்னர் ‘வைரநெஞ்சம்’ ஆனது. இந்த படத்தின் நாயகியாக பத்மப்ரியா என்ற புது நடிகையை அறிமுகம் செய்யத் தீர்மானித்தார். அசப்பில், பார்ப்பதற்கு ஹேமமாலினியைப் போலவே இருந்தார் பத்மப்ரியா.

இந்த நேரத்தில் கோபு இயக்கிய ‘காசேதான் கடவுளடா’ படம் பெரும் வெற்றியைப் பெற்றது. கோபுவே இயக்குநராகி விட்டார். இனி அவர், ஸ்ரீதருடன் பணி புரிவாரா என்று பத்திரிகைகள் எழுதின. காரணம் அப்போது அவருக்குப் புதிய படங்களும் ஒப்பந்தம் ஆகத் தொடங்கியிருந்தன.

ஒரு நாள் இரவு எட்டு மணி இருக்கும். ஸ்ரீதர் தானே காரை ஓட்டிக்கொண்டு கோபுவின் வீட்டுக்கு வந்தார். உடன் அவர் மனைவி தேவசேனாவும் வந்திருந்தார். அப்போது கோபு கே.கண்ணனுக்காக ஒரு நாடகத்தை எழுதிக்கொண்டிருந்தார். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்த ஸ்ரீதர், திடீரென்று, கோபுவையும் அவரது மனைவி கமலாவையும் தங்களுடன் கிளம்பச் சொன்னார். ஸ்ரீதரைப் பார்த்தபோது ஒருவித பதற்றத்தில் அவர் இருந்ததை ஊகிக்க முடிந்தது.

கோபுவும் அவர் மனைவியும் எங்கே, எதற்கு என்று கேள்வி கேட்காமல் கிளம்பினார்கள். ஸ்ரீதரின் கார் வடபழனி நோக்கி விரைந்து, அங்கிருந்த பிரிவியூ திரையரங்கு ஒன்றில் நுழைந்தது.


ஏதோ ஒரு படத்தைத் தங்களுக்குக் காட்டவே ஸ்ரீதர் தன்னை சம்சாரம் சகிதமாய் அழைத்து வந்திருக்கிறார் என்று தெரிந்துபோனது கோபுவுக்கு. “என்னடா படம்?” என்று கோபு கேட்க, ஸ்ரீதர், “தெலுங்குப் படம்டா, நாகேஸ்வர ராவ் நடிச்சது” என்று மட்டும் கூறினார். படம் ஓடத் தொடங்கியது. அந்த ‘தசரா புல்லோடு’ என்ற தெலுங்குப் படத்தில் நாகேஸ்வரராவ், வாணிஸ்ரீ, சந்திரகலா ஆகியோர் நடித்திருந்தனர். ராஜேந்திர பிரசாத் என்பவர் இயக்கியிருந்தார்.

அதன் தயாரிப்பாளர் ஜக்கம்பத்தி ஆர்ட் பிச்சர்ஸ் ஸ்ரீதருக்கு நன்கு அறிமுகமானவர்கள். படம் தொடங்கியதும் கோபு படத்தின் கதையோட்டத்தில் கரைந்துபோனார். திடீரென்று, கோபுவின் காதுக்கு அருகில் வந்த ஸ்ரீதர், “கோபு... இந்தப் படம் எனக்கு ரொம்பவும் பிடிச்சது. நான் ஏற்கெனவே பார்த்துட்டேன். உனக்குக் காட்டத்தான் இந்த ஸ்பெஷல் ப்ரிவியூ. இந்தப் படத்தோட உரிமையை வாங்கி தமிழ்ல எடுக்கலாம்னு இருக்கேன். நீ அபிப்ராயம் சொன்ன பிறகுதான் இறுதி முடிவு எடுப்பேன்” என்று கிசுகிசுத்தார்.


கோபுவுக்கு மகிழ்ச்சி. “கதை நல்லா இருக்கு. நீ காதல் மன்னன். நிச்சயம் இந்தப் படத்தை இன்னும் பெட்டரா எடுப்பே. நாகேஸ்வர ராவ் ரோலுக்கு சிவாஜியைப் போட்டா நல்லா இருக்கும்” என்று கோபு தன் கருத்தைச் சொல்லிக்கொண்டிருந்தபோதே, ஸ்ரீதர் அவர் காதில் மீண்டும் கிசுகிசுக்க, அதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போனார் கோபு. வழக்கமாக, தெலுங்குப் படங்களைத் தமிழில் எடுக்கும்போது நாகேஸ்வர ராவ் நடித்த படங்களை சிவாஜி கணேசனை வைத்தும், என்.டி ராமராவ் நடித்த படங்களை எம்.ஜி.ஆரை வைத்தும் எடுப்பதை ஒரு ஃபார்முலாவாகவே கடைப்பிடிப்பது வழக்கம்.

அந்த எண்ணத்தில்தான், ஸ்ரீதர் தான் அந்தப் படத்தைத் தமிழில் தயாரிக்கப் போவதாகக் கூறியதும், அவரை உற்சாகப்படுத்தும் எண்ணத்துடன், “சிவாஜி கணேசனைப் போட்டு இந்தப் படம் எடுத்தால் நன்றாக ஓடும்..!” என்று கோபு கூறக் காரணம். ஆனால், ஸ்ரீதர் தனது பால்ய நண்பரின் காதில் இரண்டாம் முறையாக கிசுகிசுத்தது இதைத்தான்..

“கோபு.. இந்தக் கதையைச் சற்றே மாற்றி நான் எம். ஜி. ஆரை வைத்து எடுக்கலாம் என்று இருக்கிறேன்”. ‘தனது ஆருயிர் நண்பனா இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறான்’ என்று அரண்டு போனவராக ஸ்ரீதரைப் பார்த்தார் கோபு.

Sunday, 22 July 2018

SRIDHAR ,TAMIL CINEMA DIRECTOR BORN 1933 JULY 22- 2008 OCTOBER 10









SRIDHAR ,TAMIL CINEMA DIRECTOR
BORN 1933 JULY 22- 2008 OCTOBER 10



இயக்குனர் ஸ்ரீதர்1933–ம் ஆண்டில் ஜூலை மாதம் 22–ம் நாள்
மதுராந்தகத்துக்கு அருகில் உள்ள சித்தாமூர் என்ற கிராமம் . பிறந்தார்

1960களில் ஆரம்பித்து எண்பதுகள் வரை தனது அபார படைப்புகளால் தமிழ் திரையுலகத்தை கட்டிப் போட்டவர்.

கல்யாணப்பரிசு.. நெஞ்சில்ஓர்ஆலயம்..! நெஞ்சம்மறப்பதில்லை..காதலிக்க நேரமில்லை..என வரிசையாக வெள்ளி விழாப் படங்கள் கொடுத்த மகா கலைஞன்.

இவரின் படத்தைப் பார்க்க ரசிகர் ரகளை செய்வது போலவே தமிழ் திரை ஜாம்பவான்கள் எம்ஜிஆர்..சிவாஜி…ஜெமினி என அத்தனை நடிகர், நடிகைகளும் தவம் கிடப்பார்கள்.

சிவாஜி பெரிதும் விரும்பிய இயக்குனர் ஸ்ரீதர்…! ஜெயலலிதா..வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி, ஸ்ரீகாந்த்..ரவிச்சந்திரன், கல்யாண்குமார்..என இவர் அறிமுகப்படுத்திய ஹீரோ, ஹீரோயின்கள் அதிகம் பேர் சூப்பர் ஸ்டார்கள் ஆனார்கள்.

ஸ்ரீதர் படத்தில் ஒரு காட்சியில் நடிக்க முடியாதா என்று ஏங்கியவர்கள் ஏராளம். எம்ஜிஆர் படத்தை இயக்க வேண்டும் என்று ஆயிரம் இயக்குனர்கள் தவம் கிடக்க..எம்ஜிஆர் ஆசைப் பட்ட ஒரே இயக்குனர் ஸ்ரீதர்.

அப்போது எம்ஜிஆர் என்பவர் கடவுளின் அவதாரம்…!அவர் முன்பு நிற்க கூட முடியாது. அவர் நடிக்கும் ஸ்டூடியோவில் யாரும் புகைப் பிடிக்க முடியாது. எம்ஜிஆர், ஸ்ரீதர் படத்தில் நடிக்க ஆசைப் பட்டபோது..

தயங்கினார் ஸ்ரீதர்.. “எனக்கு சூட்டிங் ஸ்பாட்டில் புகைப் பிடிக்கும் பழக்கம் இருக்கிறது..என்று கூறினார்.

எம்ஜிஆர் சற்றும் தயங்காமல் அதுக்கென்ன தாராளமாகப் பிடியுங்கள் என்று கூற..திரையுலகமே ஆடிப் போனது.

எம்ஜிஆர் நடித்து ஸ்ரீதர் இயக்கிய இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்..!உரிமைக்குரல், மீனவ நண்பன்.

அதே போல ரஜினி,கமலஹாசன் நடித்த இளமை ஊஞ்சல் ஆடுகிறது’ படம் வெள்ளிவிழாப் படம்…! காலங்கள் ஓடியது..வயதாகி விட்டது இயக்குனர் ஸ்ரீதருக்கு..!

ரஜினி சூப்பர்ஸ்டார் ஆனார். சொந்தப் படம் எடுத்த ரஜினி நலிந்த பழம் பெரும் கலைஞர்களுக்கு உதவும் நோக்கத்தில் பங்குதாரர்கள் ஆக்கி ஒரு தொகை கொடுத்து வந்தார்.

அருணாச்சலம் படம் ஆரம்பித்த ரஜினி..பக்கவாதம் வந்து படுத்த படுகையாக இருந்த இயக்குனர் ஸ்ரீதரைப் போய் பார்த்தார்..!

எனது அருணாச்சலம் படத்தில் நீங்களும் ஒரு பங்குதாரர் என்று கூற.. படார் என்று கோபம் வந்து விட்டது ஸ்ரீதருக்கு.

எனக்கு பிச்சை போடாதே ரஜினி…வேண்டுமானால் உன் கால்ஷீட் கொடு நான் படத்தை இயக்குகிறேன்” என்று கூற ஆடிப் போனார் ரஜினி.

மன்னிப்பு கேட்டு விட்டு வீடு வந்து சேர்ந்தார் சூப்பர்ஸ்டார்..! அப்படி ஒரு இயக்குனர் சிங்கம் போல வாழ்ந்தார் என்றால் அது இயக்குனர் ஸ்ரீதர் தான்..!


நெஞ்சம் மறப்பதில்லை…!

தமிழ் சினிமாவில் புதுமைகளைப் புகுத்தி திருப்புமுனை ஏற்படுத்தியவர், ஸ்ரீதர். விரல் விட்டு எண்ணத்தக்க மிகச்சிறந்த சாதனையாளர்கள் பட்டியலில், ஸ்ரீதர் பெயரும் இடம்பெறும். மதுராந்தகத்துக்கு அருகில் உள்ள சித்தாமூர் என்ற கிராமம் தான் ஸ்ரீதரின் சொந்த ஊர். 1933–ம் ஆண்டில் ஜூலை மாதம் 22–ம் நாள் பிறந்தார். பள்ளியில் படிக்கும்போதே, கதைகள் எழுதுவார். பள்ளி நாடகங்களில் நடிப்பார்.
ஏப்ரல் 30, 2016, 11:30 AM
தமிழ் சினிமாவில் புதுமைகளைப் புகுத்தி திருப்புமுனை ஏற்படுத்தியவர், ஸ்ரீதர்.

விரல் விட்டு எண்ணத்தக்க மிகச்சிறந்த சாதனையாளர்கள் பட்டியலில், ஸ்ரீதர் பெயரும் இடம்பெறும்.

மதுராந்தகத்துக்கு அருகில் உள்ள சித்தாமூர் என்ற கிராமம் தான் ஸ்ரீதரின் சொந்த ஊர். 1933–ம் ஆண்டில் ஜூலை மாதம் 22–ம் நாள் பிறந்தார். பள்ளியில் படிக்கும்போதே, கதைகள் எழுதுவார். பள்ளி நாடகங்களில் நடிப்பார்.

பள்ளிப்படிப்பு முடிந்ததும் எப்படியும் சினிமாவில் நுழைந்து விட வேண்டும் என்று முயற்சி செய்தார். வெற்றி கிடைக்கவில்லை.

டி.கே.சண்முகம்

நாடக உலகில் முடிசூடா மன்னரான டி.கே.சண்முகத்தை ஸ்ரீதர் சந்தித்தார். தான் கொண்டுபோயிருந்த கதைச் சுருக்கத்தை கொடுத்தார்.

கதையை இப்படித் தொடங்கினார் ஸ்ரீதர்:

‘‘ஒரு மனிதன் பிறக்கும் போதே அயோக்கியனாக பிறப்பதில்லை. அவன் வளரும் சூழ்நிலை, பழகும் நண்பர்கள், அவனுடைய வாழ்க்கை முறை இவற்றால்தான் அயோக்கியனாக மாறுகிறான்’’.

இந்த வரிகள், டி.கே.சண்முகத்தைக் கவர்ந்தன. முழுக்கதையையும் கொண்டு வரச்சொன்னார். ஸ்ரீதர், மதுராந்தகத்துக்கு போய் முழுக்கதையையும் கொண்டு வந்தார். அதைப் பார்த்த சண்முகத்துக்கு வியப்பு ஏற்பட்டது.

‘‘கதையை எழுதியது இந்த பையனா? அல்லது வேறு யாராவது எழுதிக் கொடுத்திருக்கிறார்களா?’’ என்று சந்தேகப்பட்டார்.

கதையில் உணர்ச்சிமயமான இரண்டு கட்டங்களை தேர்வு செய்து, அதற்கு அங்கேயே உட்கார்ந்து வசனம் எழுதும்படி சொன்னார். ஸ்ரீதரும் கிடுகிடுவென சிறப்பாக வசனம் எழுதிக்காட்டினார்.

ரத்தபாசம்

மகிழ்ச்சி அடைந்த டி.கே.சண்முகம், ஸ்ரீதரின் கதையை நாடகமாக்க முடிவு செய்தார்.

ஸ்ரீதர் தன் கதைக்கு ‘‘லட்சியவாதி’’ என்று பெயர் சூட்டி இருந்தார். அதை டி.கே.சண்முகம் ‘‘ரத்தபாசம்’’ என்று மாற்றி, 1951–ம் ஆண்டு நவம்பர் 11–ம் நாள் சென்னை ரசிகரஞ்சனி சபாவில் நாடகமாக அரங்கேற்றினார். நாடகம் பெரும் வரவேற்பு பெற்றது.

அதை சினிமாவாக தயாரிக்க ஜூபிடர் பிக்சர்ஸ் அதிபர் சோமு விரும்பினார். இதுபற்றி நடந்த பேச்சுவார்த்தையில், டி.கே.சண்முகமும், ஜூபிடர் சோமுவும் கூட்டாக (அவ்வை – ஜூபிடர் புரெடக்ஷன்ஸ் என்ற பேனரில்) ரத்தபாசம் படத்தை தயாரிப்பது என்று முடிவானது.

ஸ்ரீதர் சிறுபையனாக இருந்ததால், பிரபலமான வசனகர்த்தா யாரையாவது வைத்து வசனம் எழுதலாம் என்று ஜூபிடர் சோமு சொன்னார். அதை முற்றிலுமாக நிராகரித்த சண்முகம், ‘‘ஸ்ரீதர் வயதில் குறைந்தவராக இருந்தாலும், வசனம் எழுதுவதில் மிகத்திறமைசாலி. அவர்தான் படத்துக்கு வசனம் எழுதவேண்டும். இல்லாவிட்டால் படத்தயாரிப்புக்கே நாங்கள் வரவில்லை’’ என்று கூறிவிட்டார். இதனால் ரத்தபாசம் படத்திற்கு ஸ்ரீதரே வசனம் எழுதினார். படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.மணி.

‘ரத்த பாசம்’ படத்தில் டி.கே.சண்முகம், டி.கே.பகவதி ஆகியோருடன் கதாநாயகியாக அஞ்சலி தேவி நடித்தார். படம் 1954–ம் ஆண்டு வெளியாகி, சக்கைபோடு போட்டது. ‘ரத்த பாசம்’ கதை–வசனத்துக்காக, ஸ்ரீதருக்கு 500 ரூபாய் கொடுத்தார், சண்முகம். அக்காலத்தில் அது பெரிய தொகை.

எதிர்பாராதது

இதன்பின், சரவணபவா – யூனிட்டி கம்பெனியார், சிவாஜியை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்து, கதைக்காக அலைந்து கொண்டிருந்தார்கள். அவர் களுக்கு ஸ்ரீதர் கொடுத்த கதை ‘‘எதிர்பாராதது’’.

கதை அவர்களுக்குப் பிடித்திருந்தது. சிவாஜியிடமும் கதையை சொல்லி ஒப்புதல் வாங்கி விட்டார்கள். கதையை ஏற்றுக்கொண்ட சிவாஜி, ஒரு பிரபல வசனகர்த்தாவை வைத்து வசனம் எழுதலாம் என்று கூறினார்.

இதை ஸ்ரீதரிடம் பட அதிபர்கள் கூறினார்கள். ஸ்ரீதர் திடுக்கிட்டார். பிறகு, ‘‘எனக்கு மூன்று நாள் அவகாசம் கொடுங்கள். முழுவசனத்தையும் எழுதிக் கொடுக்கிறேன். அதை சிவாஜிக்குப் படித்துக் காட்டுகிறேன். சிவாஜிக்குப் பிடித்திருந்தால், என் வசனத்தை வைத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் கதையையும் வசனத்தையும் என்னிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். கதையை மட்டும் தர எனக்கு விருப்பம் இல்லை’’ என்றார்.

சொன்னபடியே மூன்று நாட்களில் முழு வசனத்தையும் எழுதி முடித்தார். அதை சிவாஜியிடம் கொண்டு போய் வாசித்துக்காட்டினார். சிவாஜிக்கு ரொம்பவும் மகிழ்ச்சி.

‘‘வசனங்கள் பிரமாதம்! இந்தத் தம்பியே நம்ம படத்துக்கு வசனம் எழுதட்டும்’’ என்று கூறிவிட்டார்.

‘எதிர்பாராதது’ புதுமையான கதை அமைப்பைக் கொண்டது. சிவாஜிக்கு ஜோடி பத்மினி. இருவரும் போட்டிபோட்டு நடித்தனர். படம் மகத்தான வெற்றி பெற்றது. ஸ்ரீதர் புகழ் மழையில் நனையலானார்.

பிறகு ஸ்ரீதர் வசனம் எழுதியபடம் ‘மகேஸ்வரி’. இது மார்டன் தியேட்டர்ஸ் தயாரிப்பு.

டப்பிங் படம்

‘எதிர்பாராதது’ படத்தயாரிப்பாளர்களில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தியும், ஸ்ரீதரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

கிருஷ்ணமூர்த்தி, சரவணபவா – யூனிட்டி கம்பெனியில் இருந்து வெளிவந்தார். இருவரும் சேர்ந்து படத்தயாரிப்பில் இறங்குவது என்றும், அதற்கு முன்னோட்டமாக ஒரு தெலுங்குப் படத்தின் உரிமையை வாங்கி தமிழில் ‘டப்’ செய்யலாம் என்றும் ஸ்ரீதரும் கிருஷ்ணமூர்த்தியும் முடிவு செய்தார்கள்.

என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், சாவித்திரி ஆகியோர் நடித்த ஒரு தெலுங்குப் படத்தை பார்த்தார்கள். டி.பிரகாஷ்ராவ் இயக்கியிருந்த அந்தப்படம் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் உரிமையை வாங்கினார்கள். அக்காலத்தில் ‘டப்பிங்’ வசனம் எழுதுவதற்கென்றே சிலர் இருந்தார்கள். ‘டப்பிங்’ வசனம் எழுத விரும்பாத ஸ்ரீதர், அந்த எழுத்தாளர்களைக் கொண்டு வசனம் எழுதச் செய்யலாம் என்று விரும்பினார்.

ஆனால், ‘நீங்களே வசனத்தை எழுதுங்கள்’ என்று கிருஷ்ணமூர்த்தி வற்புறுத்தியதால், ஸ்ரீதர் எழுதினார்.

ஸ்ரீதர் வசனம் எழுத, அதை டப்பிங் பேசுகிறவர்களுக்கு பயிற்சி அளிக்க ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் வேறு யாருமில்லை. பிற்காலத்தில் கதை – வசன ஆசிரியராகவும், டைரக்டராகவும், ஸ்டூடியோ அதிபராகவும் உயர்ந்த கே.எஸ்.கோபால கிருஷ்ணன் தான்.

‘லட்சாதிபதி’ என்ற பெயரில் வெளிவந்த அந்தப்படம் வெற்றிகரமாக ஓடியது.

பிறகு என்.எஸ்.கிருஷ்ணனின் சகோதரர் திரவியம் தயாரித்த ‘புனர் ஜென்மம்’ படத்துக்கு ஸ்ரீதர் வசனம் எழுதினார். படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் நடுத்தரமாக ஓடியது.

பிறகு நாகேஸ்வரராவ் தயாரித்த ‘எங்கள் வீட்டு மகாலட்சுமி’, ‘மஞ்சள் மகிமை’ ஆகிய இருபடங் களுக்கு வசனம் எழுதினார். எங்கள் வீட்டு மகாலட்சுமிக்கு ஒன்பதாயிரமும், மஞ்சள் மகிமைக்கு பதினைந்தாயிரமும் சம்பளமாக கொடுத்தார்கள்.

இதற்கு அடுத்தபடி நாகேஸ்வரராவ் தயாரித்த படத்தின் பெயர் ‘தூய உள்ளம்’. அந்தப்படத்திற்கு ஸ்ரீதருக்கு இருபத்தைந்தாயிரம் கொடுத்தார்கள். துரதிஷ்டவசமாகப் படம் ஓடவில்லை.

இதன்பிறகு, தமிழில் படம் தயாரிப்பதை நாகேஸ்வரராவ் நிறுத்திக் கொண்டார். தெலுங்கில் மட்டும் எடுக்கலானார்.

சொந்தப்படம்

இதன்பின் ஸ்ரீதர், அவருடைய நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜன் மூவரும் சேர்ந்து, சொந்தமாகப் படம் எடுக்க தீர்மானித்தார்கள். ‘வீனஸ் பிக்சர்ஸ்’ உதயமாயிற்று.

ஸ்ரீதர் கற்பனை செய்து வைத்திருந்த ‘அமரதீபம்’ கதையைச் சொன்னார். மற்ற இருவருக்கும் அது பிடித்திருந்தது.

கதாநாயகனாக சிவாஜி கணேசனையும், இரு கதாநாயகிகளாக பத்மினி, சாவித்திரி ஆகியோரையும் நடிக்க வைப்பது என்றும், இயக்குனராக பிரகாஷ்ராவ், இசையமைப்பாளராக சலபதிராவ் ஆகியோரை ஒப்பந்தம் செய்யலாம் என்றும் தீர்மானித்தனர்.

ஆனால் படம் தயாரிக்க போதிய பணம் இல்லை. சிவாஜியிடம் ஸ்ரீதர் சென்று அமரதீபம் கதையைச் சொன்னார். கதை அவருக்கு பிடித்துவிட்டது. ‘கதை பிரமாதம்’ என்று ஸ்ரீதர் கையைப் பிடித்து குலுக்கினார்.

உடனே ஸ்ரீதர், ‘‘அண்ணே! உங்களுக்கு அட்வான்ஸ் கொடுக்க இப்போது எங்களிடம் பணம் இல்லை. உங்கள் பெயரைப் போட்டு விளம்பரம் செய்ய அனுமதி கொடுங்கள். விளம்பரத்தைப் பார்த்தால், விநியோகஸ்தர்களும் பைனான்சியர்களும் பணம் கொடுப்பார்கள். அப்போது உங்களுக்கு அட்வான்ஸ் தருகிறோம்’’ என்றார்.

சிவாஜி ஒரு புன்னகையுடன் சம்மதம் தெரிவித்தார்.

பத்மினி, சாவித்திரி ஆகியோரும் ஸ்ரீதரின் கோரிக்கையை ஏற்றனர்.

நாளிதழ்களில் ‘அமரதீபம்’ பற்றி முழுப்பக்க விளம்பரங்கள் வெளிவந்தன. அதைப் பார்த்த பைனான்சியர்கள், முதலீடு செய்ய போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தனர். படவேலைகள் வேகமாகத் தொடங்கியது.

கல்யாணப் பரிசு

உத்தமபுத்திரன் படத்திற்கு அடுத்தபடி என்ன படம் தயாரிக்கலாம் என்று ஸ்ரீதரும், வீனஸ் பிக்சர்ஸ் பங்குதாரர்களும் ஆலோசித்தார்கள்.

ஸ்ரீதர் மனதில் அப்போது ‘கல்யாணப்பரிசு’ கதை உருவாகியிருந்தது. அதை சொன்னார். கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜன் இருவருக்கும் கதைபிடிக்கவில்லை. ‘‘நீ எழுதிய அமரதீபம் கதையில் ஒரு இளைஞனை இரண்டு பெண்கள் காதலிக்கிறார்கள். இந்தக் கதையும் அது மாதிரியே இருக்கிறது. இது வேண்டாம். வேறு கதை யோசி’’ என்றார் கிருஷ்ணமூர்த்தி.

பிறகு ஒருநாள் கடற்கரையில் ஸ்ரீதர், ‘சித்ராலயா’ கோபு, ஒளிப்பதிவாளர் வின்சென்ட், உதவி ஒளிப்பதிவாளர் சுந்தரம், ‘ஸ்டில்’ திருச்சி அருணாசலம் ஆகியோர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நண்பர்களிடம் ‘கல்யாணப்பரிசு’ கதையைச் சொன்னார், ஸ்ரீதர்.

கதையை கேட்டவர்கள், ‘‘ஆஹா! பிரமாதம்!’’ என்று புகழ்ந்தார்கள். ‘‘இந்த கதையையா கிருஷ்ணமூர்த்தி நிராகரித்தார்!’’ என்று வியப்பு தெரிவித்தனர்.

ஸ்ரீதருக்கு மகிழ்ச்சியும், நம்பிக்கையும் ஏற்பட்டன. கதைக்கு மேலும் மெருகேற்றி, மீண்டும் கிருஷ்ணமூர்த்தியிடம் சொன்னார். அப்படியும் அவர் திருப்தி அடையவில்லை. ‘‘சரி, வேறுவழி இல்லை என்றால் இக்கதையை எடுப்போம்’’ என்று அரை மனதுடன் சொன்னார்.

படத்தை யார் இயக்குவது என்ற கேள்வி எழுந்தது.

‘‘ஸ்ரீதர் இந்தக்கதையை அணுஅணுவாக ரசித்து உருவாக்கி இருக்கிறார். அவரே இயக்கினால் நன்றாக இருக்கும்’’ என்று சித்ராலயா கோபு, வின்சென்ட், திருச்சி அருணாசலம் ஆகியோர் சொன்னார்கள்.

அதற்கும் கிருஷ்ணமூர்த்தி அரை மனதுடன் சம்மதித்தார்.

இயக்குனர் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஏற்கனவே ஸ்ரீதருக்கு இருந்தது. எனவே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்தார்.

அதே சமயம், முன் ஜாக்கிரதையுடன், ‘‘முதல் பகுதியை நான் இயக்குகிறேன். அதை போட்டுப்பார்ப்போம். படம் நன்றாக இருந்தால் தொடர்ந்து இயக்குகிறேன். திருப்தி இல்லை என்றால், வேறு யாராவது இயக்கட்டும்’’ என்று கூறினார்.

இதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.

சரோஜா தேவி

‘கல்யாணப்பரிசு’ படத்தின் ஹீரோவாக, ஜெமினி கணேசன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

பி.ஆர்.பந்தலு தயாரித்த ‘தங்கமலை ரகசியம்’ படத்தில் நடனக்காட்சி ஒன்றில் சரோஜாதேவி இடம் பெற்றிருந்தார். அவர் தோற்றமும், முகபாவங்களை வெளிப்படுத்திய விதமும் சிறப்பாக இருந்ததால், கதாநாயகி வேடத்திற்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.

அவருடைய அக்காவாக நடிக்க விஜயகுமாரி ஒப்பந்தம் ஆனார். படப்பிடிப்பு தொடங்கியது. ஒரு பகுதி தயாரானதும், படத்தைப் போட்டுப் பார்த்தார்கள். படத்தில் புதுமையும் இளமையும் கைகோர்த்திருந்ததை எல்லோரும் உணர்ந்து ‘ஓகே’ சொன்னார்கள்.

படம் வேகமாக வளர்ந்தது. முதல் பிரதி தயாரானதும் போட்டுப்பார்த்தார்கள்.

கிருஷ்ணமூர்த்திக்கு கிளைமாக்ஸ் பிடிக்கவில்லை, ‘மாற்றிவிடலாம்’ என்றார்.

படம் பார்த்தவர்களில் சிலர் ஸ்ரீதருக்கு ஆதரவாக இருந்தார்கள். வேறு சிலர், கிருஷ்ணமூர்த்தியின் கருத்தை ஆதரித்தார்கள்.

ஸ்ரீதர் ஒரு சமரச யோசனையைத் தெரிவித்தார். ‘‘சில பிரிண்டுகள் இந்த கிளைமாக்சுடன் இப்படியே போகட்டும். வேறு சில பிரிண்டுகளில் கிளைமாக்சை மாற்றி ரிலீஸ் செய்வோம். மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, பிறகு ஒரே மாதிரி கிளைமாக்ஸ் வைப்போம்’’ என்று கூறினார்.

கிருஷ்ணமூர்த்தி சிறிது யோசித்தார். பிறகு, ‘‘அதெல்லாம் வேண்டாம்பா. உன் இஷ்டப்படியே கிளைமாக்ஸ் இருக்கட்டும்’’ என்று சொல்லிவிட்டார்.

நிம்மதி அடைந்த ஸ்ரீதர், கிருஷ்ணமூர்த்திக்கு நன்றி தெரிவித்தார்.

1959, ஏப்ரல் 9–ந்தேதி கல்யாணப்பரிசு வெளியானது. ரசிகர்களின் தீர்ப்பை அறிவதற்கு, நண்பர்களுடன் காசினோ தியேட்டருக்குச் சென்றார், ஸ்ரீதர். பால்கனியில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தார்.

படத்தில் முக்கியமான கட்டம். தன் சகோதரிக்காக தன் காதலை தியாகம் செய்ய முடிவு செய்யும் கதாநாயகி, அது பற்றி தன் காதலனிடம் கேவிக்கேவி வசனம் பேசுகிறாள்.

‘‘அத்தான் (கேவல்)... நீங்கள் (கேவல்).... என்னுடைய (கேவல்)... இப்படி கேவலுடன் கதாநாயகி பேசியபோது தியேட்டரில் நூற்றுக்கணக்கான ‘கேவல்’கள் ஒலித்தன. அதாவது அந்த உருக்கமான கட்டத்தில் அதிகமான கேவல்கள் வந்ததால் ரசிகர்கள் கேலி செய்கிறார்கள் என்பதை ஸ்ரீதர் புரிந்து கொண்டார். ‘‘வார்த்தைக்கு வார்த்தை கேவல் ஒலி கொடுக்கச் சொல்லி, தவறு செய்து விட்டோமே’’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டார், ஸ்ரீதர்.

‘‘படம் அடிவாங்கி விட்டது. கிளம்புங்கள், போகலாம்’’ என்று நண்பர்களிடம் கூறிவிட்டு, வெளியே சென்றார், ஸ்ரீதர்.

அவருடைய மனநிலையை புரிந்து கொண்டார், தியேட்டர் மானேஜர். ‘‘பாதிப்படத்தில் போகாதீர்கள் சார். கொஞ்ச நேரம் ஆபீஸ் ரூமில் இருங்கள். படம் முடியும் போது தான் ரசிகர்களின் சரியான ரியாக்ஷன் தெரியவரும்’’ என்றார்.

வேறுவழியின்றி அதற்கு ஸ்ரீதர் சம்மதித்தார்.

படம் முடிந்தது. வெளியே வந்த ரசிகர்கள், ‘‘படம் பிரமாதம்’’ என்றும் ‘‘கிளைமாக்ஸ் அற்புதம்; ஸ்ரீதர் டைரக்ஷன் அபாரம்’’ என்றும் கூறிக்கொண்டு போனது ஸ்ரீதர் காதில் விழுந்தது. மகிழ்ச்சியால் திளைத்தார். கதாநாயகி மீண்டும் மீண்டும் கேவிய அந்த ஒரு கட்டம் தவிர, மற்றபடி படம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டார்.

படம் வெற்றி பெற்றுவிட்டது. என்பதை வீனஸ் யூனிட் தெரிந்து கொண்டது. என்றாலும், அந்த வெற்றி மிகவும் பிரமாண்டமானதாக – வரலாற்றுச் சிறப்பு கொண்டதாக இருக்கும் என்று நினைக்கவில்லை.

திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் 100 நாட்கள் வெள்ளிவிழா என்று ஓடி சாதனை படைத்தது, ‘கல்யாணப்பரிசு’.

இயக்குனர்களில் நட்சத்திர அந்தஸ்து பெற்றார், ஸ்ரீதர்.

இந்தியில் கல்யாணப்பரிசு

‘கல்யாணப்பரிசு’ பிறகு இந்தியில் ‘நஸ்ரானா’ என்ற பெயரில் படமாக்கப்பட்டது. கதாநாயகனாக ராஜ்கபூரும், கதாநாயகியாக வைஜெயந்தி மாலாவும் நடித்தார்கள் டைரக்ஷன் ஸ்ரீதர்.

இந்திப்படமும் பெரிய வெற்றி பெற்றது.

‘மீண்ட சொர்க்கம்’, (ஜெமினி கணேசன், பத்மினி), ‘விடிவெள்ளி’ (சிவாஜி கணேசன், சரோஜாதேவி) ஆகிய படங்களும் ஸ்ரீதருக்கு புகழ் சேர்த்தன.

வெளிப்படங்களையும் ஸ்ரீதர் இயக்குவது குறித்து, வீனஸ் பிக்சர்ஸ் பங்குதாரர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது. இதனால் வீனஸை விட்டு விலகிய ஸ்ரீதர், ‘சித்ராலயா’ பட நிறுவனத்தை தொடங்கினார்.

இதன் முதல் தயாரிப்பு: ‘தேன் நிலவு’. அப்படத்தில் ஜெமினி கணேசனும், வைஜெயந்தி மாலாவும் இணைந்து நடித்தனர். ஸ்ரீதரின் சாதனைகள் தொடர்ந்தன.

திருமணம்

இதற்கிடையே, 1963–ம் ஆண்டு அக்டோபர் 28–ந் தேதி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஆபஸ்ட்டரி மாளிகையில் ஸ்ரீதரின் திருமணம் நடந்தது. மணமகள் பெயர் தேவசேனா. அப்போது அவர் ராணிமேரி கல்லூரி மாணவி. திருமணத்திற்குப் பிறகும் அவர் படிப்பைத் தொடர்ந்தார்.

திருமணத்திற்கு பிறகு ஸ்ரீதர் உருவாக்கிய படம் ‘‘காதலிக்க நேரமில்லை’’. முழு நீள நகைச்சுவை படம். அதுவும் வண்ணப்படம்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்குப் படிக்க வந்த ரவிச்சந்திரன் கதாநாயகன் ஆனார். விமானத்தில் ‘ஏர் ஹோஸ்ட்டஸ்’ பணியில் இருந்தது வசுந்தரா. அவர் ‘காஞ்சனா’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு கதாநாயகி ஆனார். முத்துராமன், டி.எஸ்.பாலையா, ராஜஸ்ரீ, நாகேஷ் ஆகியோரும் நடித்தனர். படம் பெரிய வெற்றி பெற்றது.

ஜெயலலிதா அறிமுகம்

‘‘காதலிக்க நேரமில்லை’’ படத்திற்கு பிறகு ஸ்ரீதர் எடுத்தபடம் ‘வெண்ணிற ஆடை’. இந்தப்படத்தில் தான் இன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிமுகம் ஆனார்.

கதாநாயகன் வேடத்துக்கு ஸ்ரீகாந்த் ஒப்பந்தம் ஆனார். மற்றும் மூர்த்தி, நிர்மலா ஆகிய புதுமுகங்களும் நடித்தனர். (இவர்கள் பிறகு ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, என்றும் ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா என்றும் அழைக்கப்பட்டனர்)

14–4–1965 அன்று ‘வெண்ணிற ஆடை’ ரிலீஸ் ஆகியது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்த காரணத்தால், ஆரம்பத்தில் வரவேற்பு சுமாராக இருந்தபோதிலும், போகப்போக கூட்டம் அதிகரித்து, படம் 100 நாட்கள் ஓடியது.

ஸ்ரீதரின் வெற்றிப்பயணம் தொடர்ந்தது. ஒருபடத்தை வெளிநாடுகளுக்குச் சென்று பிரமாண்டமாகத் தயாரிக்க எண்ணிய ஸ்ரீதர், சிவாஜி கணேசனையும், காஞ்சனாவையும் நடிக்க வைத்து, ‘சிவந்த மண்’ படத்தை எடுத்தார்.

படம் வெற்றிகரமாக ஓடியது. பிற்காலத்தில் சில இந்திப்படங்கள் சரியாக ஓடவில்லை. தமிழிலும் ‘ஓ மஞ்சு’, ‘அலைகள்’ தோல்வி அடைந்தன. அதனால் சித்ராலயா நிறுவனம் நஷ்டம் அடைந்தது.

நிலைமையை சமாளிக்க, எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் சந்தித்துப் பேசினார்.ஸ்ரீதர் இயக்கத்தில் ‘உரிமைக்குரல்’ படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். சம்மதித்தார். இந்தப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக லதா நடித்தார்.படம் பெரும் வெற்றி பெற்றது. ‘சித்ராலயா’வின் பொருளாதாரம் சீரடைந்தது.

இதற்கிடையே, ஸ்ரீதரை பக்கவாத நோய் தாக்கியது. அதனால் அவரால் மேலும் சினிமா இயக்க முடியவில்லை. சக்கர நாற்காலியில் தான் நடமாடினார்.

தமிழ்த்திரை உலகில் சரித்திர சாதனைகள் நிகழ்த்திய ஸ்ரீதர் 20–10–2008 அன்று காலமானார்.