Showing posts with label BIOGRAPHY. Show all posts
Showing posts with label BIOGRAPHY. Show all posts

Friday, 17 June 2022

MUMTAJ BIOGRAPHY

 


MUMTAJ BIOGRAPHY 




தாஜ் மஹால்: ஷாஜஹானால் 3 முறை அடக்கம் செய்யப்பட்ட மும்தாஜ் - ஒரு முகலாய காதல் வரலாறு

ரெஹான் ஃபஸல்

பிபிசி செய்தியாளர்

9 ஜனவரி 2022

ஷாஜகான்

பட மூலாதாரம்,WALKER AND CO

(உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், 24வது கட்டுரை இது)



ஷாஜகானின் உயரம் சற்று குறைவாக இருந்தாலும், அவர் பருமனான உடல் மற்றும் பரந்த தோள்கள் பெற்றவர். இளவரசராக இருந்த வரை, தந்தை ஜஹாங்கீர், தாத்தா அக்பர் போன்று மீசையை மட்டுமே வைத்திருந்தார். அரசரான பிறகு தாடி வளர்க்கத் தொடங்கினார்.


ஷாஜகானின் ஆட்சிக் காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தின் பெருமை அதிகம் வெளிப்பட்டது. அவர் தனது தந்தையைப் போல அடிக்கடி மனநிலை மாறும் தன்மை கொண்டவரில்லை. அவர் மென்மையாகவும், கண்ணியமாகவும் பேசுபவர், எப்போதும் முறையான மொழியில் பேசினார்.


முகலாயர்களைப் பற்றிய புத்தகமான 'எம்பரர்ஸ் ஆஃப் த பீகாக் த்ரோன்- த சாகா ஆஃப் தி கிரேட் முகல்ஸ்' என்ற புத்தகத்தை எழுதிய ஆபிரகாம் இரலி, "சுய கட்டுப்பாடு ஷாஜகானுக்கு மிக உயர்ந்த குணமாக இருந்தது. இது மது மீதான அவரது அணுகுமுறையில் பிரதிபலிக்கிறது. 24 வயதில், அதுவும் முதன்முதலாக மதுவை சுவைக்க தந்தை வற்புறுத்தியபோது அதையும் சுவைத்தார். அடுத்த ஆறு வருடங்கள் அரிதாகவே அருந்தினார். 1620-ம் ஆண்டு தெற்கு நோக்கிப் பயணத்தை மேற்கொண்டபோது முழுவதுமாக அந்தப் பழக்கத்தைக் கை விட்டு, மொத்த மதுபான இருப்பையும் சம்பல் ஆற்றில் ஊற்றினார்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


முற்றிலும் மும்தாஜ் மஹலுக்கு அர்ப்பணம்

ஷாஜகான்


பட மூலாதாரம்,WALKER AND CO.

ஷாஜஹான் ஒரு பழமைவாத முஸ்லிமாக வாழ்ந்தாலும், அவர் ஒரு துறவி போல வாழவில்லை. புகழுக்கும் பெருமைக்கும் அவரது தந்தை ஜஹாங்கீரைப் போலவே இவரும் மிகவும் ஆசைப்பட்டார். இத்தாலிய வரலாற்றாசிரியர் நிக்கோலாவோ மனூச்சி, "ஷாஜஹான் அரண்மனையிலிருந்து தனது கவனத்தைத் திசைதிருப்ப இசை மற்றும் நடனத்தை நாடினார். அவர் பலவிதமான இசைக்கருவிகள் மற்றும் கவிதைகள் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரே நன்றாகப் பாடுவார். கஞ்சன் என்றழைக்கப்படும் நடனப் பெண்களின் குழு ஒன்று எப்போதும் தயாராக இருந்தது," என்று எழுதுகிறார்.


ஷாஜஹானின் அராஜகங்கள் குறித்த பல கதைகள் உலவினாலும் அவரது மனைவி மும்தாஜ் மஹல் உயிருடன் இருக்கும் வரை, அவர் முழுவதுமாக அவருக்கான அர்ப்பணிப்புடன் இருந்தார். அவருடைய மற்ற மனைவிகளுக்குக் கூட அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் இல்லை.


Short presentational grey line

வரலாற்றுத் தொடர் 23: இந்தியாவின் குஞ்ஞாலி மரைக்காயர்கள் படை வரலாறு

வரலாற்றுத் தொடர் 22: வைக்கிங் இனத்தின் அதிர வைக்கும் வரலாறு

வரலாற்றுத் தொடர் 21: கொடூரமாக கொல்லப்பட்ட பிரான்சின் கடைசி ராணி

வரலாற்றுத் தொடர் 20: லியானார்டோ டாவின்சியும் ஒருபால் உறவு சர்ச்சையும்

வரலாற்றுத் தொடர் 19: இரக்கமில்லா ஆப்ரிக்க கன்னிப்பெண்கள்

வரலாற்றுத் தொடர் 18: பூடான்: தொலைத்ததை தேடும் 'சாம்ராஜ்ஜியம்'

வரலாற்றுத் தொடர் 17: ஜெனோபியா: பால்மைரா சிற்றரசியின் வரலாறு

வரலாற்றுத் தொடர் 16: ஹிட்லருக்காக குழந்தை பெற்ற 'ஆரிய' கர்ப்பிணிகள்

Short presentational grey line

ஷாஜகானின் அரசவையில் இருந்த வரலாற்றாசிரியர் இனாயத் கான் தனது 'ஷாஜஹன் நாமா' புத்தகத்தில், " அரண்மனையிலோ வெளியிலோ, ஷாஜகானுக்கு மும்தாஜின் மீதிருந்த ஈடுபாட்டில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட மற்ற பெண்கள் மீது இல்லை. அவர் இல்லாமல் இவரால் வாழ முடியாது." என்று எழுதுகிறார்.


இறுதி நொடிகளில் மும்தாஜ் பெற்ற வாக்குறுதி

ஷாஜஹான் மீது தீராத அன்பு கொண்டிருந்த மும்தாஜ், வெறும் அழகுப் பதுமையாக மட்டும் இல்லாமல், ஜஹாங்கீருக்கு அவர் மனைவி நூர்ஜஹான் இருந்தது போல, அரசாட்சியிலும் ஷாஜஹானுக்கு உறுதுணையாயிருந்தார். ஷாஜஹான் பதவியேற்ற நான்கு ஆண்டுகளுக்குள் மும்தாஜ் மறைந்து விட்டார். அப்படி நேர்ந்திருக்காவிட்டால், முகலாய சாம்ராஜ்யத்தில் மும்தாஜின் செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.


மும்தாஜ்


பட மூலாதாரம்,WALKER AND CO.

இனாயத் கான், "மும்தாஜ் மிகவும் பலவீனமான தனது கடைசி தருணங்களில், சக்கரவர்த்தியிடம் வேறு எந்தப் பெண்ணிடமிருந்தும் குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என்று வாக்குறுதி பெற்றார். தான் கனவில் ஓர் அழகான அரண்மனையையும் தோட்டத்தையும் கண்டதாகவும் தனது நினைவாக அது போன்ற ஒரு கல்லறையை எழுப்பும்படியும் கோரினார்" என்று எழுதுகிறார்.


மும்தாஜ் ஜூன் 17, 1631 அன்று புர்ஹான்பூரில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். 14வது குழந்தையை பெற்றெடுக்கும் போது அவருக்கு 30 மணி நேரம் பிரசவ வலி ஏற்பட்டது.


முன்னதாக, ஷாஜகான் தனது மனைவியைக் கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் ஏழைகளுக்குப் பணத்தை விநியோகித்தார், ஆனால் மருத்துவர்களின் முயற்சிகளையும் மீறி அவர் உயிர் பிரிந்தது.


திடீரென நரைத்த தாடி

இனாயத் கான், "இந்த மரணம் ஷாஜஹானை மிகவும் மோசமாகப் பாதித்தது. அவர் ஒரு வாரம் முழுவதும் தனது அறையை விட்டு வெளியே வரவில்லை, அரண்மனையின் எந்த வேலையிலும் பங்கேற்கவில்லை. அவர் இசையை ரசிப்பது, பாடுவது, நல்ல ஆடைகளை அணிவது என எல்லாவற்றையும் துறந்தார். அடுத்த இரண்டு வருடங்களுக்கு, மும்தாஜ் இறந்த புதன் கிழமைதோறும் வெள்ளை ஆடை மட்டுமே அணிந்தார். அழுது அழுது கண்கள் வலுவிழந்து, கண்ணாடி அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது," என்று எழுதுகிறார்.


ஷாஜகான்


பட மூலாதாரம்,WALKER AND CO.

"இந்தச் சம்பவத்திற்கு முன், அவரது தாடி மற்றும் மீசையில் சில வெள்ளை முடிகள் மட்டுமே இருந்தன, அதை அவர் கையால் பிடுங்கி எறிந்தார். ஆனால் சில நாட்களில், அவரது தாடியில் மூன்றில் ஒரு பங்கு வெள்ளையாக மாறியது. ஒரு கட்டத்தில் அவர் அரியணையைத் துறக்க முடிவு செய்தார். அவரும் மனதில் உறுதி பூண்டார், ஆனால் ராஜ்ஜியம் என்பது தனிப்பட்ட பிரச்னையால் கைவிட முடியாத ஒரு புனிதமான பொறுப்பு என்று நினைத்து அதைச் செய்யவில்லை," என்று அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மும்தாஜ் மஹல் மும்முறை அடக்கம்

மும்தாஜ் மஹல் உடல் முதன்முதலில் புர்ஹான்பூரில் உள்ள தப்தி நதிக்கரையில் உள்ள தோட்டத்தில் புதைக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவரது உடல் அங்கிருந்து தோண்டி எடுக்கப்பட்டு 15 வயது இளவரசர் ஷா ஷுஜாவின் மேற்பார்வையில் ஆக்ராவுக்குக் கொண்டுவரப்பட்டது, அங்கு ஜனவரி 8, 1632 அன்று யமுனைக் கரையில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டார். ஆனால் இதுவும் அவரது இறுதி ஓய்விடமாக அமையவில்லை.


அங்குதான் ஷாஜகான் இன்னொரு கல்லறையைக் கட்டினார், அதற்கு அவர் 'ரவுசா-இ-முனவ்வரா' என்று பெயரிட்டார், இது பின்னர் தாஜ்மஹால் என்று அழைக்கப்பட்டது. இந்தக் கல்லறையைக் கட்டும் பொறுப்பு மிர் அப்துல் கரீம் மற்றும் மகர்மத் கான் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Short presentational grey line

வரலாற்றுத் தொடர் 15: சாஃபோ: லெஸ்பியன் உறவுக்காக உருகிய பெண் கவிஞர்

வரலாற்றுத் தொடர் 14: சீனர்களை விரட்டியடித்த வியட்நாமிய லேடி ட்ரியூ

வரலாற்றுத் தொடர் 13: ரோமானிய துருப்புகளை அலற விட்ட ராணி பூடிக்கா

வரலாற்றுத்தொடர் 12: சீன கடல் கொள்ளை ராணி துணிச்சல் வரலாறு

வரலாற்றுத்தொடர் 11: அலெக்சாண்டர் 32 வயதில் உயிருடன் புதைக்கப்பட்டாரா?

வரலாற்றுத் தொடர் 10: நம்பிக்கை துரோகத்தை அனுபவித்த இன்கா நாகரிகம்

வரலாற்றுத் தொடர் 09: எதிரிகளின் ரத்தம் குடித்த திகில் உலக ராஜாக்கள்?

Short presentational grey line

ஜஹாங்கீர் ஆட்சியின் போது தெற்கு இரானில் உள்ள ஷிராஸ் நகரத்திலிருந்து முகமத் கான் இந்தியாவிற்கு வந்தார். ஷாஜகான் அவரை தனது கட்டுமானத் துறை அமைச்சராக்கினார். 1641ஆம் ஆண்டு டெல்லியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஷாஜஹானாபாத்தின் புதிய நகரத்தில் செங்கோட்டையைக் கட்டும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.


மும்தாஜ் மஹல் மும்முறை அடக்கம் செய்யப்பட்டார்

பட மூலாதாரம்,PENGUIN VIKING

படக்குறிப்பு,


மும்தாஜ் மஹல் முதல்முறை அடக்கம் செய்யப்பட்ட இடம்


தாஜ்மஹால் 1560களில் டெல்லியில் உள்ள ஹுமாயூனின் கல்லறையை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டது. இதற்காக 42 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அதன் நான்கு மினாரட்டுகள் 139 அடி உயரம் வரை அமைக்கப்பட்டு மேலே ஒரு குவிமாடம் அமைக்கப்பட்டது.


மகரானாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சலவைக்கல்

தாஜ்மஹாலைக் கட்ட முடிவு செய்த பிறகு, ஷாஜகானின் முதல் சவால் இந்தக் கல்லறைக்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பது.


தாஜ்மஹால் பற்றிய புத்தகத்தை எழுதிய டயானா மற்றும் மைக்கேல் ப்ரெஸ்டன், "ஷாஜஹானின் முதல் நோக்கம் தாஜ்மஹால் இருக்கும் இடம் அமைதியாகவும் ஆக்ரா நகரத்திலிருந்து விலகியும் இருக்க வேண்டும் என்பதுதான். இரண்டாவது நோக்கம் தொலைவிலிருந்தும் பார்க்கக்கூடிய அளவுக்குப் பெரிதான கட்டடமாக இருக்க வேண்டும் என்பது. மூன்றாவது, அதன் தோட்டங்களுக்குத் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் யமுனை நதிக்கு அருகில் இருக்க வேண்டும் என்பது. தான் வாழும் ஆக்ரா கோட்டையிலிருந்து தாஜ்மஹால் தெரியும்படி இருக்க வேண்டும் என்று ஷாஜகான் விரும்பினார். எனவே, ஆக்ரா கோட்டையிலிருந்து ஒன்றரை மைல் தொலைவில் அதை உருவாக்கினார்."


தாஜ்மஹாலின் கட்டுமானப் பணி ஜனவரி 1632 இல் தொடங்கியது. அதுவரை ஷாஜகான் தெற்கில் இருந்தார்.


தாஜ்மஹால்


பட மூலாதாரம்,WALKER AND CO.

அப்போது இந்தியாவுக்கு வருகை தந்த பீட்டர் மண்டி, 'ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பீட்டர் மண்டியின் பயணங்கள்' என்ற தனது புத்தகத்தில், "முதலில் அந்த பகுதியை சுத்தம் செய்து நிலம் சமன் செய்யப்பட்டது. அதன் பிறகு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகலாக உழைத்தனர். கட்டடம் கட்டவும்.ஆழமான அடித்தளம் தோண்டப்பட்டது. அருகில் ஓடும் யமுனா நதியின் நீர் அதில் இறங்காமல் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் யமுனை நதியின் வெள்ளம் தாஜ்மஹாலை சேதப்படுத்தாமல் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. முதல் 970 அடி நீளம் மேலும் 364 அடி அகல மேடை கட்டப்பட்டு அதன் மீது கல்லறை கட்டப்பட்டது." என்று குறிப்பிட்டுள்ளார்.


'உலகின் முதல் கோயில்': மனித வரலாற்றை மாற்றி எழுதும் 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானம்

பழங்கால தமிழர்கள் கோயில் கோபுர கலசங்களில் தானியம் வைத்தது ஏன்?

கட்டடத்தில் பயன்படுத்தப்பட்ட பளிங்கு 200 மைல் தொலைவில் உள்ள மக்ரானாவில் இருந்து கொண்டு வரப்பட்டது. ஒரு போர்த்துகீசியப் பயணி சிபாஸ்டியாவோ மென்ரிக், "தாஜ்மஹாலில் பயன்படுத்தப்பட்ட சில பளிங்குத் துண்டுகள் மிகப் பெரியவை, அவை காளைகள் மற்றும் நீண்ட கொம்புகள் கொண்ட எருமைகள் மூலம் ஆக்ராவிற்கு கொண்டு செல்லப்பட்டன. அவை பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட மாட்டு வண்டிகளில் கொண்டு வரப்பட்டன. இருபத்தைந்து முதல் முப்பது மாடுகள் அந்த வண்டியை இழுத்து வந்தன" என்று குறிப்பிட்டுள்ளார்.


தாஜ்மஹால்


பட மூலாதாரம்,WALKER AND CO.

தொழிலாளர்களின் கைகள் வெட்டப்பட்ட கதை புரளி

தாஜ்மஹாலைப் பற்றிய 'தாஜ் மஹால் - பேஷன் அண்ட் ஜீனியஸ் அட் தி ஹார்ட் ஆஃப் த முகல் எம்பயர்' என்ற புத்தகத்தின் ஆசிரியர்களான டயானா மற்றும் மைக்கேல் பிரஸ்டன், "தாஜ்மஹாலைக் கட்டுவதற்கு மூங்கில் மற்றும் மரக் கட்டைகள் மற்றும் செங்கற்களால் ஒரு சாரக்கட்டு செய்யப்பட்டது. வேலை முடிந்தது, எனவே ஷாஜஹானிடம் செங்கற்களின் சாரக்கட்டை இடிக்க ஐந்து வருடங்கள் ஆகும் என்று கூறப்பட்டது. இதையடுத்து கீழே இறக்கப்படும் அனைத்து செங்கற்களும் அந்தத் தொழிலாளர்களுடையது என்று ஷாஜஹான் உத்தரவிட்டார்."


"இதன் விளைவு, ஒரே இரவில் சாரக்கட்டு இடிக்கப்பட்டது. தாஜ்மஹால் முழுமையாகக் கட்டப்படுவதற்கு முன்பே அதை வெளியாட்களின் கண்களில் இருந்து பாதுகாக்க அந்த சாரக்கட்டு கட்டப்பட்டது என்பது ஒரு கட்டுக்கதை. ஒரு மனிதன் தாஜ்மஹாலை ஒருமுறை சுவருக்கு வெளியிலிருந்து பார்த்ததால் அவரது கண் பறிக்கப்பட்டது என்ற கதையும் கட்டுக்கதை தான்" என்று அந்தப் புத்தகம் குறிப்பிடுகிறது.


Short presentational grey line

வரலாற்றுத்தொடர் 08: 'மாயன் நாள்காட்டி': உலகம் அழியும் என்று கணித்தது உண்மையா?

வரலாற்றுத்தொடர் 07: மத்திய அமெரிக்காவை ஆட்டிப்படைத்த ஆஸ்டெக் பேரரசைதெரியுமா?

வரலாற்றுத்தொடர் 06: ரஷ்யாவின் கடைசி ஜார் மன்னரின் குடும்பம் சுட்டுக் கொல்லப்பட்ட ரத்த வரலாறு

வரலாற்றுத்தொடர் 05: பழங்கால மெசபடோமிய நகரான பாபிலோன் வரலாறு

Short presentational grey line

இந்த உலக அதிசயத்தை மீண்டும் உருவாக்க முடியாதபடி தாஜ்மஹாலைக் கட்டிய ஒவ்வொரு தொழிலாளியின் கைகளையும் ஷாஜஹான் வெட்டிய கதையை இங்குள்ள ஒவ்வொரு சுற்றுலா வழிகாட்டியும் சொல்கிறார்கள். ஆனால் இந்தச் சம்பவத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை, எந்த வரலாற்றாசிரியரும் குறிப்பிடவில்லை.


ஷாஜகானின் வாழ்க்கை வரலாற்றை 'ஷாஜஹான் - த ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் த முகல் எம்பயர்" என்ற புத்தகமாக எழுதிய ஃபர்குஸ் நிக்கோல், "தாஜ்மஹாலைக் கட்டிய பெரும்பாலான தொழிலாளர்கள் கன்னோஜில் இருந்து வந்த இந்துக்கள். மலர்களைப் பராமரிப்பவர்கள் போகாராவிலிருந்து அழைக்கப்பட்டனர். காஷ்மீரின் ராம் லாலிடம் தோட்டத்தை உருவாக்கும் ஒப்படைக்கப்பட்டது," என்று குறிப்பிடுகிறார்.


ஷாஜகான்


பட மூலாதாரம்,PENGUIN VIKING

மேலும் தாஜ்மஹாலில் குர்ஆன் வசனங்களை செதுக்கும் பொறுப்பு அமானத் கானுக்கு வழங்கப்பட்டது. தாஜ்மஹாலில் தனது பெயரை எழுத ஷாஜகான் அனுமதித்த ஒரே நபர் இவர்தான்.


குர்ஆன் வசனங்களைத் தவிர, தாஜ்மஹாலில் உள்ள மலர் வேலைப்பாடுகள் மிகவும் கவர்ச்சியாக இருந்தன, இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ரஷ்ய எழுத்தாளர் ஹெலினா பிளாவட்ஸ்கி எழுதினார், "தாஜ்மஹாலின் சுவர்களில் உள்ள சில பூக்கள் மிகவும் தத்ரூபமாக இருந்தன. அவற்றைத் தொட, கைகள் தானாக நீளும்," என்று குறிப்பிடுகிறார்.


Short presentational grey line

வரலாற்றுத்தொடர் 04: இல்லுமினாட்டி ரகசிய சமூகம் எங்கு தோன்றியது? அதன் வரலாறு என்ன?

வரலாற்றுத்தொடர் 03: பேரரசர் நெப்போலியன் வாழ்வு, மரணம் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?

வரலாற்றுத்தொடர் 02: 15,000 ஜப்பானியர்களை 1,500 இந்தியர்கள் வென்ற கதை

வரலாற்றுத்தொடர் 01: சீனப் பெருஞ்சுவரை கட்டத் தொடங்கிய மன்னரின் கல்லறை ரகசியம்

Short presentational grey line

சுவற்றில் புதைக்கப்பட்ட விலைமதிப்பில்லாத ரத்தினங்கள்

தாஜ்மஹாலின் கட்டடத்தில் ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஷாஜகான் ஆர்டர் செய்த 40 விதமான கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.


டயானா மற்றும் மைக்கேல் ப்ரெஸ்டன், "சீனாவின் காஷ்கரில் இருந்து பட்டுப் பாதையில் பச்சைக் கல் கொண்டு வரப்பட்டது. ஆப்கானிஸ்தானில் உள்ள சுரங்கங்களில் இருந்து நீலக் கல் இறக்குமதி செய்யப்பட்டது. அரேபியாவில் இருந்தும் செங்கடலிலிருந்தும் பவளமும் திபெத்திலிருந்து டர்க்கைஸும் கொண்டு வரப்பட்டது. பர்மாவில் இருந்து மஞ்சள் அம்பர் மற்றும் இலங்கையில் இருந்து ரூபி கொண்டு வரப்பட்டது. லசுனியா கல் எகிப்தில் நைல் பள்ளத்தாக்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. சபையர் அசுபமாக கருதப்பட்டது, எனவே அவை அரிதாகவே பயன்படுத்தப்பட்டன" என்று குறிப்பிடுகிறார்கள்.


சுவற்றில் புதைக்கப்பட்ட விலைமதிப்பில்லாத ரத்தினங்கள்

பட மூலாதாரம்,WALKER AND CO.

தாஜ் மஹால் உருவாக்க நான்கு கோடி ரூபாய் செலவு


ஷாஜஹான் கால வரலாற்றாசிரியர் அப்துல் ஹமீத் லஹோரி, தாஜ்மஹால் கட்டுவதற்கான செலவு அப்போதைய மதிப்பில் 50 லட்சம் ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் மற்ற வரலாற்றாசிரியர்கள் இந்த விலை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மட்டுமே என்றும் கட்டடத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் மதிப்பு இதில் அடங்காது என்றும் நம்புகிறார்கள்.


பின்னர் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், சில வரலாற்று ஆய்வாளர்கள் தாஜ்மஹால் கட்டுவதற்கான செலவை அப்போதைய மதிப்பில் 4 கோடி ரூபாய் என மதிப்பிட்டுள்ளனர். கட்டடம் கட்டுவதற்கான அனைத்து பணமும் அரசு கருவூலம் மற்றும் ஆக்ரா மாகாண கருவூலத்தில் இருந்து கொடுக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் தாஜ்மஹால் பராமரிப்புக்காக, முப்பது சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வரும் வருவாயை இப்பணிக்கு பயன்படுத்த வேண்டும் என்று ஷாஜகான் உத்தரவிட்டிருந்தார்.


தாஜ்மஹால்

பட மூலாதாரம்,WALKER AND CO

மும்தாஜ் மஹல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகில் ஷாஜஹானும் அடக்கம்



1659இல் ஷாஜகானின் மகன் ஔரங்கசீப் தனது தந்தையைச் சிறையில் அடைத்தபோது, சில நாட்களுக்குப் பிறகு அவர் நோய்வாய்ப்பட்டார். தனக்கு இன்னும் அதிக நேரம் இல்லை என்று அவர் உணர்ந்தபோது, தாஜ்மஹாலை எப்போதும் பார்க்கக்கூடிய பால்கனியில் வைக்க வேண்டும் என்று அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.


அதே பால்கனியில், காஷ்மீரி சால்வை போர்த்தப்பட்ட ஷாஜகான், 1666 ஜனவரி 21 அன்று இந்த உலகிலிருந்து விடைபெற்றார். அப்போது அவரது மகள் ஜஹான் ஆரா உடன் இருந்தார். சந்தன மரத்தால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் அவரது உடல் கிடத்தப்பட்டது.


அவரது மகள் இறுதிச் சடங்குகளை அரசு முறையில் செய்ய வேண்டும் என்று விரும்பினார், ஆனால் ஔரங்கசீப் அவரது விருப்பத்தை மதிக்கவில்லை. அவர் தாஜ்மஹாலில் அவரது மனைவி மும்தாஜ் மஹாலுக்கு அருகில் குர்ஆன் வசனங்களை ஓதப்பட, அடக்கம் செய்யப்பட்டார்.


ஷாஜகான் மற்றும் முதாஜின் சமாதிகள்

பட மூலாதாரம்,WALKER AND CO

படக்குறிப்பு,

ஷாஜகான் மற்றும் முதாஜின் சமாதிகள்


ஆங்கிலேயர் காலத்தில் மதிப்பிழந்த தாஜ்மஹால்

முகலாயர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, 1803 இல், பிரிட்டிஷ் ஜெனரல் லேக் ஆக்ராவை ஆக்கிரமித்தார். இதன் பிறகு, தாஜ்மஹாலின் சுவர்களில் பதிக்கப்பட்டிருந்த மதிப்புமிக்க கற்கள், தரைவிரிப்புகள், சுவர் தொங்கும் பொருட்கள் மறையத் தொடங்கின.ஆங்கிலேயர்கள் தாஜ்மஹாலின் உள்ளே அமைந்துள்ள மசூதியை வாடகைக்கு விட்டு அதைச் சுற்றி தேனிலவுக் குடில்களைக் கட்டினார்கள். கல்லறையின் மேடையில் இராணுவ இசைக் குழுக்கள் இசைக்கத் தொடங்கின, தாஜ்மஹால் தோட்டத்தில் பிக்னிக் பார்ட்டிகள் தொடங்கின.இந்த நேரத்தில், 1830 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டிங்க் தாஜ்மஹாலை இடித்து அதன் பளிங்குகளை ஏலம் விட நினைத்தார் என்றும் வதந்தி பரவியது.


தாஜ்மஹால்


பட மூலாதாரம்,RAGHU RAI

1857ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது, பிரிட்டிஷ் வீரர்கள் சில முகலாயக் கட்டடங்களைச் சேதப்படுத்தினர். அவற்றில் ஒன்று மும்தாஜ் மஹாலின் தந்தை ஆசஃப் கானின் அரண்மனை. ஆனால் தாஜ்மஹால் எப்படியோ பாதுகாப்பாக இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், பிரிட்டிஷ் வைஸ்ராய் கர்சன் பிரபு தாஜ்மஹாலைப் புதுப்பிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.


1965ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் போது, அருகிலுள்ள விமானப்படை தளத்தின் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலை எதிர்பார்த்து, இந்திய அரசாங்கம் தாஜ்மஹாலை இரவில் மேலே இருந்து பார்க்க முடியாதபடி ஒரு பெரிய கருப்பு துணியை தைத்துப் போட்டது. இந்தத் துணி 1995ஆம் ஆண்டு வரை பாதுகாப்பாக இருந்தது. ஆனால் எலிகள் அதைக் கடித்துக் குதறிவிட்டன..


பிற செய்திகள்:


தேர்தலில் களமிறங்காமல் முதல்வர் பதவிக்கு வரும் உத்தர பிரதேச அரசியல்வாதிகள்

திருகோணமலை எரிபொருள் தாங்கிகள் உடன்படிக்கை:"இது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி"

பூண்டு, பீட்ரூட் மற்றும் தர்பூசணி: ரத்த அழுத்தத்தை சாதாரணமாக வைத்திருப்பதில் உதவுகிறதா?

இஸ்லாமியர்கள் மீது தொடர்ந்து வெறுப்பை உதிர்க்கும் துறவி நரசிம்மானந்த் இன்னும் சிறையில் அடைக்கப்படாதது ஏன்?

Wednesday, 8 June 2022

MADURAI MANI IYER BIOGRAPHY 1912 OCTOBER 25 -JUNE 8,1968

 

MADURAI MANI IYER BIOGRAPHY 1912 OCTOBER 25 -JUNE 8,1968




மதுரை மணி ஐயர் (அக்டோபர் 251912 - ஜூன் 81968கருநாடக இசையுலகில் புகழ்பெற்ற ஒரு இசைக்கலைஞர். சுவரம் பாடுவதில் வல்லுநராகக் கருதப்பட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன், காலப்போக்கில் இது சுருங்கி மணி ஆனது. மதுரையில் எம். எஸ். இராமசுவாமி ஐயர், சுப்புலக்சுமி ஆகியோருக்குப் பிறந்தவர். தகப்பனார் இராமசுவாமி ஐயர், அக்காலத்தில் பிரபலமான இசைக்கலைஞரான வித்துவான் புஷ்பவனத்தின் சகோதரர்.

சிறு வயதிலேயே கருநாடக இசையை முறையாகக் கற்றுக் கொண்டார். இவரது முதலாவது ஆசிரியர் ஸ்ரீ ராகம் பாகவதர். ராகம் பாகவதர் எட்டயபுரம் ராமச்சந்திர பாகவதருடைய மாணவர். அரிகேசநல்லூர் முத்தையா பாகவதருடன் தொடர்பு ஏற்பட்டு அவரது மதுரை தியாகராஜ சங்கீத வித்தியாலயத்தில் மாணவராகச் சேர்ந்தார்.

மணி ஐயர் தம் பெருநோய் காரணமாகத் திருமணம் செய்துகொள்ளவில்லை.

ஆங்கிலக் கல்வியில் தீவிரமான ஈடுபாடு கொண்டவர் மணி அய்யர். ஆங்கில இலக்கியத்தை விரிவாக வாசித்தவர். தமிழிலக்கியத்தில் தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி போன்றவர்களுடன் நெருக்கமான உறவுள்ளவராக இருந்தார்.



சுவரம் பாடுவதில் நிகரற்று விளங்கிய மதுரை மணி, ராக ஆலாபனைகளை தேவையானபோது விஸ்தாரமாகப் பாடுவார். அந்தந்த கிருதிக்குத் தக்கவாறு சுருக்கமாகவோ, நடுத்தரமாகவோ, விவரித்தோ பாடும் திறன் மணியின் சிறப்பு. அவரால் பிரபலம் அடைந்த கீர்த்தனைகள் ஏராளம். நளினகாந்தி போன்ற அப்போது அபூர்வமாக இருந்த ராகங்களை சர்வ சாதாரணமாக பாடும் திறன் கொண்டவர்.



Madurai Mani Iyer was undeniably one of the greatest exponents of Carnatic music. In fact, it wouldn’t be out of place to declare him among the best musicians India has ever produced. Tales of overflowing audience held in trance during his concerts which often spilled over midnight, or Ricksha-wallahs refusing any passengers until the end of his concert bear testimony to this statement.

Mani Iyer was both a people’s and a pundit’s musician. His music could effortlessly sway a music scholar and a novice at the same time. In his time, he was largely responsible for bringing Carnatic music to the masses, and his ability to attract uninitiated listeners of Carnatic music is unsurpassed and remains undiminished, even 48 years after his demise.

Words such as “Genius” and “inimitable” are usually used to describe his music. However, confining his music to an adjective really does not do justice to it. His music is something divine, it’s a bridge which connects to a place that is otherwise inaccessible to us mortals. It’s an experience.

This website hopes to serve not only as a tribute to the great man and his music, but also as a beacon that spreads his music far and wide. We have tried to make this website interactive so that it becomes a forum for sharing information on Mani Iyer. The blog is open to all and we invite everyone to make a contribution to it. Anything related to Madurai Mani Iyer, be it anecdotes, information, thoughts, analysis of his music, tributes, listening experiences etc. can be shared here. We hope that all of your comments and contributions will create a rich repository of information and provide a greater insight into the life of Ganakaladhara Sri. Madurai Mani Iyer.

Monday, 30 May 2022

Paulette Noizeux BIOGRAPHY BORN 1887 MAY 30 - 1971 APRIL 9

 

Paulette Noizeux BIOGRAPHY BORN 

1887 MAY 30 - 1971 APRIL 9



Paulette Noizeux

From Wikipedia, the free encyclopedia
Jump to navigationJump to search
Paulette Noizeux
PauletteNoizeux1918.jpg
Paulette Noizeux, from a 1918 publication.
Born
Marie-Paule Cœuré

30 May 1887
Died9 April 1971 (aged 83)
Other namesPaulette Roquevert
Occupationactor
Years active1908–1968
Spouse(s)Noël Roquevert

Paulette Noizeux (30 May 1887 – 9 April 1971)[1] was a French stage and film actress who began her career on the stages of France and New York in the 1910s. Her career spanned sixty years.[2]

Born Marie-Paule Cœuré in Saint-OmerPas-de-CalaisFrance, Paulette Noizeux made her film debut in the 1911 Abel Gance-directed film short La Digue, opposite actors Jean Renoir and Jean Toulout. The film is notable for being Gance's directoral debut.[1] She would go on to have a prolific stage career in her native France, as well as appearing on Broadway in several plays from 1917 to 1918.[3]

Noizeux was married to stage and screen actor Noël Roquevert. Her last film appearance was a small part in the 1968 Norbert Terry-directed Swiss/French joint film production Jeunes filles bien... pour tous rapports (English release title: The Sexy Dozen), in which her husband also appeared.

Paulette Noizeux died in Paris in 1971 at the age of 83.

Saturday, 21 May 2022

ELIZABETH FRY ,ACTIVIST OF ENGLAND BIOGRAPHY

 

ELIZABETH FRY ,ACTIVIST  OF ENGLAND BIOGRAPHY


எலிசபெத் ஃப்ரை அறக்கட்டளையின் வரலாறு


எலிசபெத் கர்னி 1780 இல் இங்கிலாந்தின் நார்விச்சில் ஒரு நல்ல வசதியுள்ள குவாக்கர் (நண்பர்கள் சங்கம்) குடும்பத்தில் பிறந்தார். 1800 ஆம் ஆண்டில் அவர் ஒரு குவாக்கராக இருந்த ஜோசப் ஃப்ரையை மணந்தார். 1813 ஆம் ஆண்டில், எலிசபெத் ஃப்ரை நியூகேட் சிறைச்சாலைக்கு தனது முதல் வருகையை மேற்கொண்டார், அங்கு அவர் பெண்கள் மற்றும் குழந்தைகளை பயங்கரமான நிலையில் கண்டார். எலிசபெத் சீர்திருத்தத்திற்காக பணியாற்றத் தொடங்கினார், பாலினப் பிரிவினைக்காக பிரச்சாரம் செய்தார், பெண் கைதிகளுக்கான பெண் மேட்ரன்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (பெரும்பாலும் பின்னல் மற்றும் தையல்) மற்றும் மத போதனை.

 

1817 ஆம் ஆண்டில், எலிசபெத் ஃப்ரை பெண் கைதிகளை மேம்படுத்துவதற்கான சங்கத்தை உருவாக்கினார், மேலும் 12 பெண்களைக் கொண்ட ஒரு குழுவும் பாராளுமன்றம் உட்பட அதிகாரங்களை வற்புறுத்தியது. 1820 களில் அவர் சிறை நிலைமைகளை ஆய்வு செய்தார், சீர்திருத்தத்தை ஆதரித்தார் மற்றும் சீர்திருத்தத்திற்காக பிரச்சாரம் செய்ய பல குழுக்களை நிறுவினார். 1823 இல் சிறைச் சீர்திருத்தச் சட்டம் இறுதியாக நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

 




எலிசபெத் ஃப்ரை தனது சிறைச் சீர்திருத்த நடவடிக்கைகளுக்காக மிகவும் பிரபலமானவர் என்றாலும், அவர் மனநல புகலிடங்களில் சீர்திருத்தங்களை விசாரிப்பதிலும் முன்மொழிவதிலும் ஈடுபட்டார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படும் ஒவ்வொரு குற்றவாளிக் கப்பலையும் பார்வையிட்டு, தண்டனைக் கப்பல் முறையை சீர்திருத்தினார். நர்சிங் தரத்தை மேம்படுத்த அவர் பணியாற்றினார் மற்றும் ஒரு நர்சிங் பள்ளியை நிறுவினார், இது அவரது தொலைதூர உறவினரான புளோரன்ஸ் நைட்டிங்கேலை பாதித்தது. அவர் உழைக்கும் பெண்களின் கல்விக்காகவும், ஏழைகளுக்கு சிறந்த வீட்டுவசதிக்காகவும், சூப் சமையலறைகளை நிறுவுவதற்கும் பொறுப்பேற்றார்.

 

எலிசபெத் ஃப்ரை 1845 இல் இறந்தார். அவரது பணியை நினைவுகூரும் வகையில், லண்டன் மேயர் ஒரு கூட்டத்தைக் கூட்டினார், அதில் அவரது நினைவாக முன்னாள் கைதிகளுக்காக ஒரு நிறுவனத்தை நிறுவ முடிவு செய்யப்பட்டது - எலிசபெத் ஃப்ரை ரெஃப்யூஜ். 1925 இல் இது ஒரு தொண்டு நிறுவனமாக மறுசீரமைக்கப்பட்டது மற்றும் தகுதிகாண் பெண்களுக்கான விடுதியாக மாறியது, இது 1949 இல் உள்துறை அலுவலகத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. இது 1962 இல் ரீடிங்கிற்கு மாற்றப்பட்டது, அங்கு அவரது நினைவாக வேலை தொடர்கிறது.

 

காலங்கள் மாறிவிட்டன மற்றும் எலிசபெத் ஃப்ரை அறக்கட்டளை, அதன் தொண்டு அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொண்டாலும், இப்போது சுதந்திரமாக நிர்வகிக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட வளாகமாக வரையறுக்கப்பட்ட விடுதியை சொந்தமாக வைத்திருக்கிறது மற்றும் நிர்வகிக்கிறது. நாங்கள் ஆதரிக்கும் பெண்களுக்கு இன்றியமையாத கூடுதல் சேவைகளை வழங்குவதற்காக அங்கீகரிக்கப்பட்ட வளாகங்கள் மற்றும் நிதி சேகரிப்புகளை வழங்குவதற்கும் நிர்வகிப்பதற்கும் நீதி அமைச்சகத்துடனான ஒப்பந்தத்தின் மூலம் இது நிதியைப் பெறுகிறது.

 




இந்த அமைப்பு அறக்கட்டளை ஆணையத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பொருந்தக்கூடிய சட்டங்களால் நிர்வகிக்கப்படுகிறது.

The History of Elizabeth Fry Charity

Elizabeth Gurney was born in Norwich, England in 1780 to a well-off Quaker (Society of Friends) family. In 1800 she married Joseph Fry who was also a Quaker. In 1813 Elizabeth Fry made her first visit to Newgate prison where she observed women and children in terrible conditions. Elizabeth began working for the reform, campaigning for segregation of the sexes, female matrons for female prisoners, education and employment (often knitting and sewing) and religious instruction.

 

In 1817 Elizabeth Fry created the Association for the Improvement of Female Prisoners and along with a group of 12 other women lobbied authorities including Parliament. In the 1820s she inspected prison conditions, advocated reform and established more groups to campaign for reform. In 1823 prison reform legislation was finally introduced in Parliament.

 

Whilst Elizabeth Fry is most well known for her prison reform activities, she was also involved in investigating and proposing reforms in mental asylums. For more than 25 years she visited every convict ship leaving for Australia and promoted reform of the convict ship system. She worked to improve nursing standards and established a nursing school which influenced her distant relative, Florence Nightingale. She worked for the education of working women, for better housing for the poor and was responsible for the establishment of soup kitchens.

 

Elizabeth Fry died in 1845. Wishing to commemorate her work, the Lord Mayor of London convened a meeting at which it was decided to found an institute for ex-prisoners in her memory – the Elizabeth Fry Refuge. In 1925 it was reconstituted as a charitable organisation and became a hostel for women on probation which in 1949 was officially approved by the Home Office. It moved to Reading in 1962 where the work continues in her memory.

 

Times have changed and the Elizabeth Fry Charity, although retaining its charitable status, now owns and manages a hostel defined as an Independently Managed Approved Premises. It receives funding through a contract with the Ministry of Justice to provide and manage the Approved Premises and fundraises to provide vital additional services to the women we support.

 

The organisation is regulated by the Charity Commission and governed by the applicable laws of England and Wales.


Wednesday, 4 May 2022

FEARLESS NADIA FILM ACTRESS BIOGRAPHY

 

FEARLESS NADIA  FILM ACTRESS BIOGRAPHY

Fearless Nadia was an actress and stuntwoman, who is most remembered as the masked, cloaked adventurer in Hunterwali released in 1935, which was one of the earliest female-lead Indian films. She toured India as a theatre artist and began working for Zarko Circus in 1930. She was introduced to Hindi films by Jamshed "J.B.H." Wadia. In 1967-68, when she was in her late 50s, she appeared in a James Bond spoof called Khiladi. Fearless Nadia was born as Mary Ann Evans in Perth, Western Australia. In 1928, she returned to Bombay with her mother and a son, Robert Jones. An Armenian fortune teller had foretold that a successful career lay ahead but she would have to choose a name starting with the letter ‘N’. She chose the name Nadia because it was “exotic-sounding”.