Showing posts with label THE STORY. Show all posts
Showing posts with label THE STORY. Show all posts

Tuesday, 9 June 2020

THE STORY,F KALINGARAYAN,



THE STORY OF KALINGARAYAN

காலிங்கராயன் வரலாறு:

கி.பி 13 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒரு மாமனிதனின் வரலாறு. தமிழ்நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள கொங்கு நாட்டில் பிறந்த ஒரு மாமனிதன் காலிங்கராயன். அக்காலத்தில் கொங்கு நாடு 24 உள்நாடுகளாகப் பிரிக்கப்பட்டுப் பாளைக்காரர்களால் ஆளப்பட்டு வந்தது. அவற்றுள் ஒன்றான ஈரோடிற்க்கு அருகில் உள்ள பூந்துறையுயைத் தலைமையிடமாகக் கொண்ட பூந்துறை நாட்டில், வெள்ளொடு அருகில் உள்ள கனகபூரம் என்ற சிற்றூரில் கி.பி 1235 ஆம் ஆண்டு காலிங்கராயன் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தான். அவனது இயற்பெயர் லிங்கையன்.

லிங்கையன் சிறுவனாக இருந்த போது சோழ மன்னர் களால் கொங்கு நாடு ஆளப்பட்டு வந்தது. லிங்கையனுக்குச் சுமார் 20 வயது ஆனபோது பாண்டியன் கொங்கு நாட்டின் மீது படையெடுத்து வென்று அதனைச் சோழர்களிடமிருந்து கைப்பற்றினான். பாண்டியன் ஆட்சி மலர்ந்தது. கொங்கு நாட்டின் துணை அரசனாக நியமிக்கப்பட்ட சடையவர்மன் வீர பாண்டியன் ஆட்சியின் கீழ் பாளையக்காரர்கள் வந்தனர்.

இளைஞன் லிங்கையன் பாண்டியர் போர்த்திறத்தை நேரில் கண்டு வியந்து பாண்டியனின் படையில் சேர்ந்தான். பாண்டியன் நடத்திய பல்வேறு போர்களில் லிங்கையன் காட்டிய திறமையைக் கண்டு வியந்த பாண்டிய மன்னன் அவனுக்கு காலிங்காரயன் என்று உயர் பட்டம் வழங்கியதோடு படைத்தலைவனாகவும் பின்னர் போர் நடத்துவதில் மன்னனுக்கு ஆலோசனை கூறும் வேந்தமைச்சனாகவும் ஆக்கினான்.

அதன் பின் கொங்கு நாட்டின் பூந்துறை நாட்டிற்கு அரசியல் அதிகாரியாக நியமித்து அதனை ஆளும் பொறுப்பையும் அளித்தான். உத்திர மந்திரியாகவும் ஆக்கினான்.

நஞ்சையன் என்ற செல்வந்தனின் மகனாக பிறந்த லிங்கையன் இளம் வயதில் தமிழ்மொழி, கணிதம், பூகோளம் ஆகியவற்றை முறையாக கற்றவன். இளமையிலேயே நாட்டுப் பற்று மிகுந்தவனாக இருந்த காலிங்காராயன், பூந்துறை நாடு வறட்சியில் வாடுவதைக் கண்டு கவலையடைந்தான். அதுவும், அருகே காவிரியாறு ஆண்டு முழுவதும் வற்றாத ஜீவ நதியகா ஒடிக் கொண்டிருந்தும், தனது நாடு வறண்டு கிடந்ததை பார்த்து அவன் வேதனை அதிகமாயிற்று. பூந்துறை நாடு மேடு பள்ளமான குறிஞ்சி நிலம் நிலமானதாலும், காவிரி பள்ளத்தில் ஓடியதாலும், அதன் தண்ணீரைப் பயன்படுத்த இயலவில்லை.

பின் பூந்துறை நாட்டின் வடக்குக் பகுதியில் ஓடிய காவிரியின் உபநதிகளில் ஒன்றான பவானியாற்றில் அணை கட்டி வாய்க்கால் மூலம் தன்னாட்டை முடிந்தவரை வளப்படுத்த எண்ணிப் பாண்டியனின் அனுமதிக்காகவும், ஆலோசனைக்காகவும் உதவி வேண்டியும் மதுரை சென்றான்.


வீரமும், விவேகமும் ஒருங்கே பெற்ற கலிங்காராயனை நினைத்துப் பூரித்து போயிருந்த பாண்டிய மன்னன், அவனது நாட்டு பற்றையும் கண்டு, அனைத்து உதவிகளையும் அளிக்க உறுதி தந்து, வாய்க்கால் பணி தொடங்க உளப்பூர்வமான அனுமதியும் அளித்தான்.

அணை கட்டிய காலம்

காலிங்காரயன் அணை கட்டி கால்வாய் வெட்டிய ஆண்டு கலியுக சகாப்தம் 2000 என்று வம்சாவளியும் ஆங்கில வரலாற்று நூலும் கூறுகின்றன. அதன்படி கால்வாய் வெட்டிய காலம் கி.மு. 1101 ஆகிறது. இவ்வாண்டு மிகைப்படக் கூறலாகவே இருக்கின்றது. ஆனால் அவை இரண்டும் குறிப்பிடும் பரம்பரையின் ஆட்சி ஆண்டுகளின் தொகைகளை கூட்டிப்பார்க்கும் பொழுது காலம் கி.பி.13-ம் நூற்றாண்டுதான் வருகிறது. அக்கலாமே கல்வெட்டுகள் அனைத்திலும் காலிங்காராயன் பெயர் கூறப்படும் காலமாகும். கி.பி.-13ம் நூற்றாண்டு கல்வெட்டுக்களிலே மட்டும் காலிங்காராயன் பெயரைக்
காண்கின்றோம். கி.பி.1800-ல் எழுதப்பட்ட ஸ்ரீகைபீது" 582 ஆண்டுகளுக்கு முன்பு கால்வாய் வெட்டப்பட்டததாக கூறுகிறது. கி.பி.1800-ல் இக்கால்வாயைப் பார்வையிட்ட புக்கானன் 400 ஆண்டுகளுக்கு முன் வெட்டப்பட்டது என்று கூறுகின்றார். கல்வெட்டுகளின் கூற்றுப்படி கி.பி.1265-ல் வீரபாண்டியனிடம் அரசியல் அலுவனாக அமர்ந்த காலிங்காராயன் 12 ஆண்டுகாலம் முயன்று கி.பி.1270-ம் ஆண்டு தொடங்கி கி.பி.1282-ம் ஆண்டு பணியை முடித்தான் என்று நம்புவதற்கு போதிய ஆதாரங்கள் தொல்பொருள் ஆவண காப்பகம் எழும்பூர் சென்னையில் உள்ளது. ஜமீன் ஊத்துக்குளி அகத்தூரம்மன் கோயில் கல்வெட்டில் சாலிவாகன சகாப்தம் 1203 கலியுக சகாப்தம் 4382 விய வருடம் தை மாதம் 5-ம் தேதி அணை கட்டி முடித்தாக கூறப்படுகிறது. அதற்கு சரியான ஆங்கில ஆண்டு கி.பி.1282-ம் ஆகும்.

நதிகள் இணைப்பின் முன்னோடி

காலிங்காராயன் கால்வாயில் நீர் மிகுதியாக நொய்யலில் கலப்பதைக் கண்ட காலிங்காராயன் நொய்யலில் ஒரு அணை கட்டி கால்வாய் மூலம் அமராவதி வரை பாசனம் பெறச் செய்ய எண்ணினான். நொய்யலில் ஒரு அணையும் கட்டப்பட்டது. இப்போது ஓட்டை அணை என்ற பெயரில் அழைக்கப்படும் அந்த அணை உடைந்து கிடக்கிறது. நொய்யலின் தென் கரையில் விதரி அத்திப்பாளையத்தில் இருந்து அமராவதி வரை வாய்க்கால் வெட்டும் முயற்சி நடைப்பெற்றது. வெட்டிய கால்வாயின் பகுதி ஆங்காங்கே பல இடங்களில் காணப்படுகின்றன. 27.03.1872ல் அளித்த திட்டம் ஒன்றில் வெட்டன்பர்ன் காலிங்கராயன் கால்வாய் தண்ணீரை நொய்யலில் தேக்கி அதிலிருந்து தென் கரையில் 13000 ஏக்கர் பாயும் வண்ணம் ஒரு திட்டத்தை ரூ.8,71,000 - மதிப்பீட்டில் நிறைவேற்றலாம் என்று கூறியுள்ளார்.

07.01.1800ல் புக்காணன் காலிங்கராயன் விரிவு திட்டம் பற்றி கூறியுள்ளார். எனவே பவானி, நொய்யல், அமராவதி ஆகிய மூன்று நதிகளையும் இணைக்க முயன்றுதன் மூலம் காலிங்கராயன் நதிகள் இணைப்பில் இந்தியாவின் முன்னோடியாக திகழ்கின்றார்.

வாய்க்கால் கோணலின் காரணம்:

பவானியில் தொடங்கி, நொய்யலில் கலக்கும் வரை காலிங்கராயன் வாய்க்கால் வளைந்து நெளிந்து மிகவும் கோணல் கோணலாக இருக்கிறது. அதனால்தான் கோண வாய்க்கால் என்று கூறுகின்றனர். எனவேதான் பாம்பு வழி கட்டியாக கதை உலவுகிறது. பவானி அணை கடல் மட்டத்திலிருந்து 534 அடி உயரம். நொய்யல் ஆற்றில் காலிங்கராயன் கால்வாய் கலக்கும் இடம் கடல் மட்டத்திலிறுந்து 412.48 அடி உயரமாகும். நேர்வழியாக பவானிக்கும் நொய்யலுக்கும் இடையே உள்ள தூரம் 32 மைல். ஆனால் வளைந்து செல்வதால் கால்வாயின் நீளம் 56 ½ மைல் ஆகிறது. காலிங்கராயன் கால்வாய் பவானியிலிருந்து நேராக நொய்யல் வரை செல்லுமானால் வயலுக்கு தண்ணீர் பாயாமல் நேராக விரைந்து ஓடி நொய்யலில் விழுந்து விடும். எனவேதான் நீர் தேங்கி நின்று வயலுக்கு வளப்படுத்துவதாகவும், நீரின் வேகத்தை குறைத்து கரைக்கு வெள்ளத்தினால் ஏற்படும் அழிவுகளைத் தடுப்பதற்காகவும், கால்வாய் வளைந்து வளைந்து மேட்டுப்பாங்கான இடத்திலேயே தொடர்ந்து செல்கிறது. இது காலிங்கராயனின் பொறியியல் திறமையை நன்கு வெளிப்படுத்துகிறது.

கிளை வாய்க்கால்:

காலிங்கராயன் கால்வாயில் மூன்று கிளை வாய்க்கால்கள் உள்ளன.

1. மலையம்பாளையம் பிரிவு வாய்க்கால்

காலிங்கராயன் கால்வாயில் 31.06.430 மைலில் பழனிக்கவுண்டன்பாளையம் அருகே பிரிந்து சுமார் 4 மைல் தூரம் காலிங்கராயன் கால்வாய்க்கு இணையாகவே ஓடி மலையம்பாளையம் அருகே காலிங்கராயன் கால்வாயுடனேயே கலக்கிறது. இக்கால்வாய் சுமார் 675 எக்கர் நிலங்களை வளப்டுத்துகிறது.

2. பெரியவட்டம் பரிசோதனை வாய்க்கால்:

நாகமநாய்க்கன்பாளையத்தில் காலிங்கராயன் கால்வாய் நொய்யலில் கலப்பதற்காக ஆவுடையார்பாறை நோக்கி பாயும் இடத்தில் ஒரு தடுப்பை ஏற்படுத்தி அங்கிருந்து ஒரு கால்வாய் தென்மேற்காக கொண்டு செல்கின்றனர். அது பெரியவட்டம் என்ற ஊரைக் கடந்து சிட்டப்புள்ளாபாளையம் என்கின்ற ஊரில் நொய்யலோடு கலக்கின்றது. அதற்கு காலிங்கராயன் கால்வாய் என்று பெயர் கூறி அழைகின்றனர். இக்கால்வாய் 625 எக்கர் நீலத்திற்கு நீர் அளிக்கின்றது. இதன் நீளம் 1.5.600 மைல் ஆகும்

3. ஆவுடையார்பாறை பிரிவு வாய்க்கால்:

ஆவுடையார்பாறையில் காலிங்கராயன் கால்வாய் நொய்யலோடு கலக்கும் இடத்துக்கு அருகில் மைல் 56.5.234 – ல் கால்வாய்யை ஒரு கலிங்கின் மூலமாக தடுத்து தண்ணீரை மேற்கு நோக்கி கொண்டு செல்கின்றனர். அதற்கும் காலிங்கராயன் கால்வாய் என்று பெயர் கூறுகின்றனர். 200 எக்கர்களை வலப்படுத்தும் இக்கால்வாய் புதுத்தோட்டம் என்ற இடத்தில் நொய்யல் ஆற்றோடு காலக்கிறது. இதன் நீளம் ¼ மைல்

கல்வெட்டு

கோவை மாவட்ட ஆட்சி தலைவர் தூறூறி துறையும், பொறியியலாளர் பேப்பர் துறையும் 1832 – ல் இக்கால்வாய் பழுதுப்பார்த்த விபரத்தை இக் கல்வெட்டு கூறுகிறது. மகாராச கனம் பொருந்திய கும்பினியார் அவர்கள் ஐ. டி. தூறூறி துரை அவர்களுடைய பிரின்சிபால் கலெக்டர் அதிகாரத்தில் பேப்பர் துரை அவர்கள் சிவில் என்ஜீனியிரின் அசூர் மாமரத்து சூப்பிரண்டு சுப்புராயராயராலே பாலம் பாகல்வாடம் பூர்த்தி செய்யப்பட்டது.
கொம்பனை கல்வெட்டு:

மகாராச கனம் பொருந்திய கும்பினியார்களாலே ஐார்ஜி தூறூறி துறை அவர்கள் பிரின்சிபால் கலெக்டர் அதிகாரத்தில் பேப்பர் துறை அவர்கள் அசூர் மாமரத்து சூப்பிரண்டு சுப்புராயராயராலே கீழ்ப்பாலம் பூர்த்தியாய் 1832 வருடம் செப்டம்பர் மாதம் கட்டி முடிக்கபட்டது.

காலிங்கராயன் சாபம்:

காலிங்கராயனைப் பற்றிய ஆச்சரியகரமான உண்மை என்னவென்றால், அவன் அரும்பாடுபட்டு வெட்டிய வாய்காலை தன் சொந்த நிலம் பாய்ச்ச வகை செய்யவில்லை. சாத்தந்தை கோத்திரத்தைச் சேர்ந்த தன் சொந்த பங்காளிகளுக்கும் இந்த வாய்க்கால் பயன்படவில்லை. பங்காளிகளை வெள்ளோட்டிலிருந்து தான் ஏற்படுத்திய வெவ்வேறு ஊர்களுக்குக் குடிபெயருமாறு சொல்லிவிட்டு பெரும்பகுதி தனது குடும்பப் பணத்தைக் கொண்டு வெட்டிய வாய்க்காலை நாட்டுடைமை ஆக்கிவிட்டு தானும், தன் குடும்பமும் நாட்டின் எல்லையை தாண்டி காவிடிக்கா நாட்டில் பொள்ளாச்சி அருகில் உள்ள ஊற்றுக்குழிக்குச் சென்றுவிட்டார்கள். இந்த செய்தியை கேட்டு கலங்காதவர்கள், அன்று பூந்துறை நாட்டில் யாரும் இருந்திருக்க முடியாது.


காலிங்கராயன் கதை


ஈரோடு மாவட்டமும் காலிங்கராயன் என்ற பெயரும் பிரிக்க முடியாதவை. மாவட்டத்தின் ஒரு பகுதி முழுவதும் மஞ்சளாக விளைந்து செழிக்க வலுவான காரணம் காலிங்கராயன் பாசன வாய்க்கால்.

பவானியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து பிரியும் காலிங்கராயன் பாசன வாய்க்காலில் ஆண்டில் பத்து மாதங்களுக்கும் மேலாகத் தழும்பத் தழும்பத் தண்ணீர் சென்றுகொண்டிருக்கும்.

இந்த வாய்க்காலுக்குப் பின்னால் வெவ்வேறு விதமான வரலாறுகள். வெறும் கதைகளோ என்றும் எண்ணச் செய்யும் தகவல்கள். ஆனால், மறுக்க முடியாத உண்மை, தொலைநோக்குடன் இந்தத் தடுப்பு அணையைக் கட்டி வாய்க்காலை வெட்டியவர் - காலிங்கராயன்.

பவானியில் தொடங்கி நொய்யல் வரை கோணல் மாணலாகச் சென்று, வழியெங்கும் கொங்கு மண்ணைச் செழிக்கச் செய்கிறது காலிங்கராயன் வாய்க்கால்.

இந்தக் கோணல்களுக்குத் தொழில்நுட்ப ரீதியாக ஒரு காரணம் கூறப்படுகிறது. வாய்க்கால் தொடங்கு மிடத்தில் கடல் மட்டத்திலிருந்து 534 அடி உயரம். முடிகிற இடமான நொய்யலில் 412 அடி. நேர்க்கோட்டில் தொலைவு 50 கி.மீ. இரண்டுக்கும் இடையேயுள்ள மேடு பள்ளம் காரணமாகத் தண்ணீர் விரைந் தோடிவிடுவதைத் தடுத்து வேகத்தைக் குறைப்பதற்காகவே இத்தனை கோணல்கள்.



 வளைந்து வளைந்து செல்வதால் வாய்க்காலின் நீளமும் சுமார் 90 கி.மீ. ஆக வளர்ந்து, இருபுறமும் பயனடையும் பரப்பும் அதிகரிக்கிறது. அன்றைய தமிழனின் தொழில்நுட்ப சாதனை!

தற்போது காலிங்கராயன் பாசன வாய்க்காலில் 786 மதகுகளின் வழியே பதிவு செய்யப்பட்ட 15,743 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. உண்மையில் பதிவு செய்யப் படாத நிலங்களின் பரப்பும் மேலும் சிலபல ஆயிரங்கள் இருக்கும்.

யார் இந்தக் காலிங்கராயன்? காலிங்கராயனின் கதைதான் என்ன? அறிந்துகொள்ள நமக்குப் பேருதவி யாக இருக்கிறது, ‘ஊற்றுக்குழி பாளையக்காரன் காலிங்கராயன் வமிசாவளி’!



இந்த வமிசாவளியில் ஒன்றேபோல இருந்தாலும் இரண்டு பகுதிகள் என்று கூறலாம். முதல் பகுதி, காலிங்கராயன் பெயர்க் காரணமும் காலிங்கராயன் வாய்க்கால் உருவான கதையும். இரண்டாம் பகுதியில் காலிங்கராயன் பரம்பரையில் நேரிட்டதொரு வீழ்ச்சியும் பின்னர் எழுந்துநின்று நிலைப்படுத்திக் கொண்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வமிசாவளி, அதே தமிழில்.

•••

ஊற்றுக்குழி பாளையக்காரன் காலிங்கராயன் வமிசாவளி தாராபுரம் துக்குடி பொள்ளாச்சி தாலுகா ஊற்றுக்குழி பாளையக்காரர் காலிங்கராயன் கவுண்டர் எனப்பட்டவருடைய வமிசாவளி முதலான கைபீது:

என்னவென்றால்:-

பூர்வத்தில் சோழ தேசத்தில் தொண்டை மண்டலத்து வேளாளரென்று பேர் பிரசித்திபட்ட நற்குடி நாற்பத்தெண்ணாயிரம் பசுங்குடி பன்னீராயிரம் ஆக அறுபதுனாயிரம் கோத்திரக்காரர்களில் பிற்காலம் - ரிஷபகிரி - சோழராஜா மகளை முரை சரிந்த சேர ராஜா பாணிக்கிரஹணம் பண்ணிக்கொண்ட படியினாலே அந்தச் சமயத்தில் நற்குடி நாற்பத்தியெண்ணாயிரம் குடியில் எண்ணாயிரம் குடி சீதனம் கொடுத்த படியினாலே - அப்போ வரப்பட்ட வேளாளருக்கு - தென்திசை நோக்கி வந்தபடியினாலே – தென்திசை வேளாளரென்று பேர் வரப்பட்டது.

சேர தேசத்துக்கு வரப்பட்ட வேளாளருக்கு - சேரனுக்கு கொங்கணரெண்ணும் பேர் இருக்கிற படியினாலே - கொங்கு வேளாளரென்றும் - கொங்கு இருபத்தினாலு நாடுயென்றும் - யேற்படுத்தி இறுக்கும் நாளையில் - அக்காலத்தில் - யென் வம்சஸ்தனான காலிங்க கவுண்டன் என்கிறவன் பூந்துரைநாட்டுக்கு காணியாள (னுஇ) (னுக்கு) மேல்கரை முப்பத்தி ரெண்டு கிறாமத்துக்குச் சேர்ந்த - வெள்ளோடு குடியிருப்புக் காரனாயி - தம்முடய இஷ்ட தெய்வமான - சர்வேஸ்வர பாடகவல்லி நாச்சாற் - தேவஸ்தானம் சீறனேதாரணம் பண்ணிக்கொண்டிருந்தான்...



பூந்துரை னாட்டுக்கு - னட்டானஇ - வெள்ளோட்டு குடியிறுப்புக் காரனஇ யிருக்கும்னாளையில் - கங்கை குலம் - சரதந்த கோத்திரம் காலிங்ககவுண்டன்- யென்குங்குர - தன்னுடைய குமாரனுக்கு – கலியாணம் பண்ண வேணுமென்று நினைச்சு - மாமன் மச்சுனனான - பண்ணகுலத்தாளி வீட்டுல - பெண் கேட்டு கலியாணம் செய்யத் தக்கதாக யோசிச்சு –பெண் சம்மதமாகி அந்த றாத்திரி சாப்புடுகுரதுக்கு சமயல் பண்ணுகிறவன் வந்து இவற்களுக்கு சமயல் பண்ணு குரதுக்கு யெந்த அரிசி போடுகிறது யென்று கேட்க அவாள் கம்பு வெளயிற சீற்மையிலேயிருக்கிற பேர்களுக்கு யெந்த அரிசி யென்று தெரிய போகுது பரறசிதானே போடு போவென்று சொல்ல அதுசேதி மேற்படி காலிங்க கவுண்டன் கேட்டு அவாள் வீட்டிலே சாப்புடாத படிக்கு இறுந்து நெல்லு வெளையும்படியாக நீர் பாங்கு உண்டுபண்ணிக் கொண்டு உங்கள் வீட்டுப் பெண் கொண்டு சாப்பிடுகுரோ மென்று செபுதம் கோறிக்கொண்டு வந்துதம் வூருலே வந்துசேர்ந்து மனதிலே சூடு தோணி இருக்கும் நாளையில் இவர் இஷ்ட தெய்வமான சர்வேஸ்வரரை தன்னுடைய அபீஷ்டம் சித்த வேணுமென்று நினைச்சுயிருக்கு வேளையில் றாத்திரி சொப்பனத்திலே ஒரு விருத பிராமண ரூபமாய் வந்து இந்தச் சர்ப்பம் போற வளியாக வாக்கியால் வெட்டி வைக்கச் சொல்லி காரணமாக சொப்பணமாச்சுது அந்த சொப்பன மானவுடனே கண்முளிச்சு பாற்கும் மிடத்தில் ஒரு சர்ப்பம் பிரதிட்சமாக யிருந்து தான் கண்டு இருக்கப்பட்ட சொப்பனத்தை கண்டு அறிய வேணுமென்று நினைச்சு வீடு விட்டுவெளிஇலே வந்த சமயத்தில் சற்ப்பம் இவனைக் கண்டு முன்னே நடந்தது. அந்த சற்ப்பத்தைத் துடர்ந்து போய்யிந்த வழியாக போகுதென்ரு அடையாளங்கள் போட்டுக்கொண்டு வருகிற போது கொடுமுடி சேத்திரத்திலே சற்ப்பம் நிண்ணுது.



அந்த சற்ப்பம் போன போக்குலே வாக்கியாலு வெட்டி வைக்க வேணுமென்று னினைச்சு பவானி ஆத்தில குறுக்க அணை கட்டி வைக்க வேணுமென்கிறதாக நினைச்சு யிருந்த சமயத்தில் பவானி கூடல் ஸ்தளத்துக்கு மேல் புறத்தில் பவானி யாத்துல சர்ப்பம் குறுக்கே படுத்துக் கொண்டது. அந்த யிடத்துலே அணைக் கட்டி வைக்க வேணுமென்று பவானி கூடலுக்கே வடக்கை வூறாச்சி மலையும் தடமும் சுத்த கிறயத்துக்கு வாங்கி அணை கட்டுகிற சமயத்தில் வெள்ளை வேட்டுவற்யென்ங்குற பாளையக்காரன் அணை கட்டுகுர யெல்லை தன்னதென்று சண்டை பண்ணின படியினாலே வெள்ளை வேட்டுவரை செயிச்சு அணையும் கட்டி வெகு திரவியங்கள் செலவளிச்சு சற்பம் போகியிருந்த அடையாளங்களைப் பிடிச்சு வாக்கியால் வெட்டி கொடுமுடி வரைக்கும் வாக்கியால் வெட்டி வச்சு பவானி அணை முதல் கொடுமுடி ஸ்தளத்து ஆத்து வரைக்கும் முக்காத வழி தூரத்துக்கு சற்ப்பம் போன போக்குலே வாக்கியால் வெட்டின யேளு காத வழி நடை கோணக் கோணலாக வாக்கியால் வெட்டி வச்சான்.

அந்தச் சற்ப்பம் போக்குலே வாக்கியால் வெட்டி வச்சு பவானி ஆத்துலே - சற்ப்பம் படுத்துயிறுந்த இடத்துல - அணையும் கட்டி விச்சு படியினாலே காளிங்க கவுண்டன் யென்னும் பேற்வரப்பட்டு பிரசித்திப்பட்டவனாய் இருக்கும் நாளையில் முன்னாலே சபுத்தம் கோறியிருக்கப்பட்ட பெண்ணை குலத்துல தன்புள்ளைக்கு கலியாணமும் செய்துகொண்டு அம்ச புராணமாயி தெய்வ கடாட்சத்துனால சற்ப்பத்து னாமதேயமான காளிங்கரென்கிற நாமதேயமும் வேளாள சாதியானபடியினாலே கவுண்டர் என்ற நாமதேயமும் இரண்டு நாமதேயமும் சேர்ந்து காளிங்க கவுண்டர் யென்குர பேற் பிறசுத்திப் பவறாயி தான் கட்டிவச்ச அணைக்கு காலிங்க கவுண்டன் அணையென்றும் காலிங்கக் கவுண்டன் வாக்கியா லென்றும் தான் உண்டு பண்ணின நீற்ப்பாங்கு நிலத்தில் வெளயப்பட்ட காலிங்க நெல்லுயென்று வெளயப் பண்ணி சம்மந்த பாத்தியங்களுஞ் செய்துகொண்டுயிருந்தான்.



இப்படி வாக்கியால் வெட்டி அணை கட்டி பிள்ளைக்கு கலியாணம் பண்ணுகிற வரைக்கும் சபுதம் கோரி தீட்சை வளைத்துக்கொண்டு யிருக்கும் சமயத்தில் தெய்வ கடாட்சத்தினாலே மனோபீஷ்டம் நெறவேறி யிருக்கும் சமயத்தில் ஒரு நாள் ஆயாசத்துடனே நித்திரை பண்ணிக்கொண்டு யிருக்கிற சமயத்திலே ஒரு னாசுவண் திட்சை மயிரை வாங்கிப் போட்டு நிலைக்கண்ணாடியை யெதிரே வச்சு வணக்கத்துடனே நிண்ணுக்கொண்டு யிருந்தான். நித்திரை தெளிஞ்சி நெலை கண்ணாடி பார்த்தவுடனே ஆயுஷகாறம் மாகியிருந்தபடியினாலே சந்தோஷம் வந்து நாசுவனைப் பார்த்து உனக்கு என்ன வேணுமென்று கேட்டார். அந்த னாசுவன் யென் பேர் வெளங்கியிறுக்கும்படியாக பண்ண வேணுமென்று மனுவு கேட்டுக்கொண்ட படியினாலே தாம் கட்டுவிச்சு அணையோடும் தான் இறுக்கப்பட்ட காலிங்கன் பாளையத்துக்கு தென்பிறம் நாசுவன் பேறாலே வூரு உண்டுபண்ணி னாசுவன்பாளையமென்றும் பேர் விளங்க பண்ணி அந்த னாசுவனுக்கு அந்த பாளையம் சர்வ மானியமாகக் கொடுத்தார்.

இப்படிக்குக் காலிங்கறாயக் கவுண்டர் யென்கிற பேர் பிறசித்திப் பெற்றவராய் வெள்ளோட்டுக் குடியிருப்புக் காரராயி பூந்துறைனாட்டு நாடாதி பத்தியம் தாம் உண்டு பண்ணின அணை வாக்கியால் பரிபாலனம் பண்ணிக் கொண்டு புள்ளை புள்ளை தலைமுறைக்கும் காலிங்க கவுண்டன் என்கிற நாமதேயம் உண்டானவர்களாய்யிறுந்தார்கள்.



பவானி கூடலுலே கலிங்கக் கவுண்டன்யென் கிறவன் அணை கட்டி வச்சு மேற்பிடுறத்தி பண்ணினது. கலியுக சாகாபுதம் 2000 காலிங்க கவுண்டன் கட்டி யிருக்கப்பட்ட அனைஇலே மேற்படி கவுண்டனையும் சற்ப்பத்தேயும் சிலா பிறதிமை ரூபமாக கல்வெட்டி வச்சு சிலாசாசனமும் யெளுதியிருக்குரது அந்த அணை போட்டு யிறுக்கப்பட்ட இடத்தில் குடிகள் பறம்பரையாஇ வருஷயிறுதியும் உச்சவம் பண்ணிக்கொண்டு வருகுரது வருஷப் பிரதியும் காலிங்கக் கவுண்டன் பிறதிமைக்கி பூசை நெய்வேத்தியம் பண்ணிக்கொண்டு வந்தால் வெள்ளம் வந்து வெள்ளாண்மை வெளஞ்சுக்கொண்டு வருகிறது.

இப்படி ஈஸ்வரர் அனுக்கிறஹத்துநாலே மூர்த்தி கரம் உண்டாகியிருக்கிறது. இஸ்வறா அனுக்கிறஹத்துனாலே காலிங்க கவுண்டன் யென்ங்குர அம்சை புறுஷன் வம்ச பரம்பரையிலே காலிங்க கவுண்டற்யென்று பேர் வச்சுக்கொண்டு வருகிறது.

2

இப்படி காலிங்க கவுண்டர் என்கிற பேர் பிரசித்திப் பட்டவர்களாய் பலாட்டியனாய் வெள்ளோட்டு பூந்துரை னாடாதிபத்தியம் ஆண்டுகொண்டு வரும் நாளையிலே கொங்கு இருவத்தினாலு நாட்டுக்கும் பட்டக்காற்களாகி யிறுக்கப்பட்டவற்கள் சரியிருப்பும் சரிமறியாதிகளும் குடுக்கப்படாது யெந்று சொன்னதுனாலேயும் பூர்வத்தில் சேரமாம் பெறுமாள் சா(த்)தந்த கோத்திரகாற்களுக்கு கார் விடிக்கை நாடு பிறவும் பண்ணிக்கொடுத்து யிறுக்கிற படியினாலேயும் நாட்டு, பட்டக்காரர்கள் சரிமரியாதி நடக்க மாட்டாதென்று சொல்லிக் கொண்ட படியினாலே வெள்ளோடு விட்டு மணவெருப்புனாலே ஆணைமலை சரிவிலே தங்கள் காணியாட்சியான காவிடிக்கநாடு காடு கொண்டு வனமாயிருந்ததில் தங்கள் பசுமாடுகளை விட்டுயிருந்து மாடுகளை சம்ரட்சணை பண்ணுகுரதுக்காக தங்கள் சனங்கள் இருந்த படியினாலே காவிடிக்க நாட்டு வனத்துக்கு வந்து மாடுகளையும் பாத்து மா(ட்)டுகளுக்கு சமரட்சணைக்காக பட்டிகளும் போடுவிச்சு அஞ்சாறு காளைகளும் கட்டிவிச்சு கொங்குயிருவத்திநாலு நாட்டுக்கும் பாளையப்பட்டுகளுக்கும் இவற்களுக் கெல்லாம் அதிகமறியாதெகள் உண்டுபண்ணிக் கொள்ள வேணுமென்று நினைச்சு றாயசமுஸ்தானத்துக்குப் போனார்.

றாய சமுஸ்தானத்தில் காத்துக்கொண்டுயிருக்கும் நாளையில் பனிரெண்டு வருஷம் வரைக்கும் றாயரவர்கள் பேட்டியில்லாமல் கய்யிலே கொண்டு போன திரவியங் களெல்லாம் செலவழிந்து போய் கஷ்டப்பட்டுக் கொண்டு அதிவெஸனத்தை அடஞ்சவனாய் தன்னுடைய இஷ்ட தெய்வத்தைப் பிராத்தனைச் செய்துகொண்டு மனவயிரத்தை அடஞ்சவனாய் பெனுக்கொண்டை பட்டணத்துக்கு வெளியிலே தென்புறம் காளி கோவிலிலே போய் செத்திரமாகப் படுத்துக்கொண்டு இருந்தார்.



சுத்தவுபவாசத்துடனே காளி கோவிலிலே யிருக்கப்பட்ட காலிங்க கவுண்டன் சொப்பனத்துலே பனிரெண்டானாள் றாத்திரி றாயர் குமாரனுக்கு சித்த பிறம்மை பிடுச்சு அது னிவாரணம் யில்லாமல் யிருக்கிற படியினாலே நீ என்னுடைய சன்னியதானத்தில் இருக்கப் பட்ட விபூதியைக் கையிலே கொண்டு போய் அந்த சித்த பிறமையாயிருக்கப்பட்டவன் பேரில் போட்டால் சித்த பிறமை தீந்து றாசகுமாரனாக அரமனை போய் சேர்ந்து யிருப்பான் றாயர் அவர்கள் உன் பேரிலே சந்தோஷமாய் உன் மனோ பீஷ்டம் சித்தியாகும் என்று சொப்பனமாச்சுது.

அந்த சொப்பனத்தைக் கண்டவுடனே பனிரென்று நாள் பட்டினியிருக்கப்பட்டவன் விபூதியெடுத்துக் கொண்டு பெனு கொண்ட பட்டணத்துக்கு வந்து இது சொப்பனத்து சோதனை பாத்துக்கொண்டு வறுகுர சமயத்தில் றாசகுமாரன் பட்டணத்து வீதிகளிலே சித்த பிறமை பிடிச்சு தன்னப்போலே திறியுர குறிப்பை கண்டு பிடிச்சுறாசகுமாரன் பேறிலே காளியெ நினைச்சு விபூதி போட்டன் அந்த விபூதி தூளி றாசகுமாரன் பேறிலே விளுந்தவுடனே சித்த பிறமை தெளிஞ்சவனாய் றாச சின்னம்ங்களுடனே அரமனைக்குப் போய்ச்சேர்ந்தார்.

அக்காலத்தில் நரபதி சிம்ஹ ஸனாதிபதியான பெனு கொண்டை விசயநகரம் ஆளப்பட்ட தேவராயர் அவர்கள் தம்முடைய குமாரனானவனுக்கு சித்த பிறமை விடுதலை பண்ணினவனை தரிவிக்கச் சொல்லி மந்திரி பிரதானிகளுக்கு உத்திரவு செய்த படியினாலே அந்தச் சமயத்தில் தரிவிச்சு றாயர் அவர்கள் ரொம்பவும் சந்தோஷத்துனாலே காலிங்க கவுண்டனை பாத்து உன் சென்மபூமி முதலான விர்த்தாந்தம் என்ன வென்று கேட்குமிடத்தில் பவாநி கூடல் சமீபத்தில் உண்டு பண்ணின அணை வாக்கியால் வரலாறு முதலாகிய சங்கதிகளும் தெயிவ கடாச்சயத்துனாலே காலிங்க கவுண்டன் என்ற பேர் வரப்பட்ட வரலாறும் கொங்கு இருவத்தினாலு நாட்டுலே பட்ட குறுப்பு காரற்களை பாளையக்காற் சமானவசி மறியாதிகள் தாள்வு நடக்கப் பட்டு சமுஸ்தானத்துலே காத்து கொண்டுயிருந்து காளிகாதேவி அனுக்கிரஹம் பண்ணின நாள் வரைக்கும் வரலாறு அறியப் பண்ணிக் கொண்டபடியினாலே றாயர் அவர்கள் ரொம்பவும் சந்தோஷப்பட்டு உன்னுடைய நாமதேயம் என்ன வென்று கேட்டார்கள்.



அப்பொ பேற் அறிய பண்ணிக் கொண்டபடியினாலே றாயற் அவர்கள் உத்திரவு செய்து என்னுடைய வம்சம் உத்தாரம் பண்ணியிறுக்குறபடியினாலே யென்னுடைய பேற் தெயிவ கடாட்சயத்துனாலே உண்டாகிய பேருடனே றாச கடாட்சயத்துனாலே குடுக்கப்பட்ட றாச சபுதத்துடனே காலிங்கறாய கவுண்டன் யென்று பேர் வச்சு உனக்கு யென்ன வேணுமென்று கேட்டார்கள். அந்தசமயத்தில் யென் காணியாட்சியான ஆனைமலை சாற்வுலே கானிக்கை நாடு யென்னப்பட்ட பூமியை தயவு செய்ய வேணுமென்று கேட்டுக்கொண்டார்.

றாயரவர்கள் கடாட்சம் செய்து யாளி, சிமஹல்லா பல்லாக்கு, உபய சாமரம், சுறுட்டி, சூறியபான ஆல வட்டம், வெள்ளைக் கொடை பச்சைக்கொடை, பஞ்சவர்ண கொடை, பஞ்சவர்ண வெட்டுப் பாவாடை, அனும டால், கெறுட டால், மகர டால் பசவங்கர டால் பஞ்சு வற்ன டால், ஆனை மேல் பேறிகை, ஒட்டகை மேல் நகாறு, குதிரை மேல் டங்கா, யெருது மேல் தம்பட்டம், தாரை, சின்னம், யெக்காளம், பூரிகை, சிக்குமேளம் இது முதலான வாத்தியங்கள் பிறுதுகளும் கொடுத்து ரண பாஷிகாம் கலிகிதுறாயி, முத்தொண்டி, பஞ்சொண்டி, ஒண்டிரெக்கு வீர சங்கிலி, னாக்ககாணும் புவி சேறமம், கரடிமயிற் வக்கியபிரீ, தங்கனிகளம், வீரகண்டாமணி, சாமதுரோஹாவெ(ண்)டையும் தங்க மிஞ்சு யிது முதலான ஆபரணங்கள் எல்லாம் அலங்கறிச்சு குதிரைக்கு புலி தோல் மொமட்டு, அண்ட கல்வி, முகசல்லி, பக்கசல்லி, கால்தண்டை கலிகிதுறாயி இது முதலான ஆபரணங்கள் தறிச்சு பட்டத்து குதிரையென்று நெமுகம் செய்து பட்டண பிறவேசம் பண்ணிவிச்சு ஆனைமலை சறிவிலே காவிடிக்கை நாட்டு பூமிக்கு நீயே மானசதாரனாக ஆண்டு அனுபவிச்சுக் கொண்டு வர வேணுமென்று பட்டாபிஷேகம் செய்துபட்டத்து ஆயுதம் கையிலே கொடுத்து அறுபத்து நாலு அமர காரரை மேமுகம் செய்து இரட்ட வாள், பச்ச ஈட்டி, கறீட்டி, வெள்லி ஈட்டி, தங்க கட்டு துப்பாக்கி வெள்ளி முலாம் துபாகி சீனா மானுடை இது முதலான ஆயுதங்களும் கொடுத்தார்கள்.

முன்னாலே நாகூர் பாளைப்பட்டு பட்ட குறுப்புக்காற்கள் சரிசமான மறியாதெ குடுக்கரது யில்லை யென்று சொன்ன மனவெறுப்பு னாலே றாயசமுஸ்தானத்திலே காத்துயிருந்து தெய்வ கடாட்சத்துனாலே சகல பிறுதுகள் ஆயுதங்களும் உண்டாய் காவிடிக்கை நாட்டுக்குப் பாளையக்காரனாக காலிங்க ராய கவுண்டர் என்கிற பேர் பிரசித்திப்பட்டராய்ப்பட்டு கட்டியங்களுடனே புறப்பட்டு ஆனைமலை சறவுலே வனாந்திரத்திலே தம்முடைய மாட்டுப் பட்டிகள் இருக்கப்பட்ட யிடத்தில் சேர்ந்து அரமனையுங் கட்டி வீடுகள் உண்டுபண்ணி பூர்வத்தில் வனத்திலே மாடுகளுக்கு ஆதாரமாக தோண்டியிருக்கப்பட்ட ஊற்றுக் குளிகள் இருக்கப்பட்ட யிடத்தில் ஊர் கட்டி விச்சபடியினாலே ஊத்துக்குளியென்று கிராம நாமதேயம் உண்டாய் ஊற்றுக்குழி பாளையக்காரர் என்று பேர் பிரசித்திப் பட்டவனாய் இருந்தார்கள்.

இராயர் சமுஸ்தானத்திலே காலிங்கராயக் கவுண்டர் என்கிற பேர் தெய்வ கடாட்சத்துனாலேயும் ராஜ கடாட்சத்துனாலேயும் பாளையக்காரர் என்று பேர் பிரசித்திப்பட்டு பாளையப்பட்டு உண்டான னாள் முதல் சாலிவாகன சகாபுதம் 1120 முதல் சகாபுதம் 1712 வரைக்கும் ஆண்டு 582க்கு பட்டங்களுடைய வரிசைகளையும் அவாளவாளுடைய சறியேகளும் இதன் கீளே எழுதி வருகிறது.

வம்ச பரம்பரையாய் தெய்வ கடாட்சத்துனாலேயும் ராஜ கடாட்சத்துனாலேயும் காலிங்கராய னென்கிற பேர் வமுச பரம்பரையாய் பட்டகார்களுக்குப் பேர் உண்டாகி வருகிறது. காலிங்கராயன் என்பது ஒரு பட்டப் பெயரே. பாண்டியர் ஆட்சிக் காலத்தில் கொங்கு நாட்டில் பகுதி அலுவலராக இருந்தவர் இந்தக் காலிங்கராயன்.

தெய்வ கடாட்சத்துனாலே சர்ப்பம் போன போக்கு வாய்க்காலும் வெட்டிவிச்சு அணையும் கட்டிவிச்சு காலிங்கராய னென்கிர பேர் பிரசித்திப்பட்டு வமுசா பிவிற்த்தியிலே காலிங்கறாய் னென்கிறவர் காவிடிக்க மனசுபுதாராறாயி காலிங்கறாயர் னென்கிற பேரிலை ஊத்துக்குளி பாளையக்காரர் என்று பட்டாபிஷேகம் அனைவருடைய னாள் வரைக்கும் வெகுகாலமான படியினாலே வமுசங்கள் ஒளுகாயிதெறி(ய) வில்லை அணைக்கும் வாக்கியாலுக்கும் காலிங்கராயன் அணையென்றும் காலிங்கராயன் வாக்கியால் என்றும் பேர் பிரசித்தி படலாச்சுது.

•••

காலிங்கராயன் வாய்க்கால் வெட்டிய ஆண்டு கலியுக சகாப்தம் 2000 என்று வம்சாவளி கூறுவதைப் போலக் கொண்டால் கி.மு. 1101 என்றாகிறது. ஆனால், கி.பி. 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில்தான் காலிங்கராயன் பெயர் காணப்படுகிறது. கி.பி. 1800- இல் வாய்க்காலைப் பார்வையிட்ட புகானன், 400 ஆண்டுகளுக்கு முன்னர் வெட்டப்பட்டதாகப் பதிந்துள்ளார்.

கல்வெட்டுத் தகவல்கள், கிடைக்கும் வரையிலான சான்றுகளின்படி, கி.பி. 1265-இல் வீரபாண்டிய மன்னனின் அலுவலராகப் பணியாற்றத் தொடங்கிய காலிங்கராயன், கி.பி. 1270 ஆண்டு தொடங்கி, 12 ஆண்டு காலத்தில் வாய்க்காலை வெட்டி முடித்துள்ளார். சாலிவாகன சகாப்தம் 1203 கலியுக சகாப்தம் 4382 விய வருஷம் தை மாதம் 5 ஆம் தேதி, அதாவது கி.பி. 1282 ஆம் ஆண்டில், வாய்க்கால் பணி நிறைவு பெற்றதாக ஜமீன் ஊத்துக்குளி அகத்தூரம்மன் கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது.

காலிங்கராயன் வாய்க்கால் மூலம், நதிகள் இணைப்பின் முன்னோடியாக, பவானி ஆறும் நொய்யலும் இணைக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளலாம்.

காலிங்கராயன் வாய்க்காலிலிருந்து மலையம் பாளையம் பிரிவு வாய்க்கால், பெரிய வட்டம் வாய்க்கால், ஆவுடையார்பாறை வாய்க்கால் என மூன்று கிளைகள் பிரிகின்றன.

உறுதிபடத் தெரிய வராத ஏதோ ஒரு காரணத்தால் வாய்க்காலை வெட்டிய காலிங்கராயனோ அவர் குடும்பமோ அல்லது அவருடைய சாத்தந்தை கோத்திரத்தைச் சேர்ந்த பங்காளிகளோ காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்தால் பயன் பெறவில்லை என்றொரு தகவல் இருக்கிறது. பூந்துறை நாட்டிலிருந்த காலிங்க ராயன், வாய்க்காலை மக்கள் பொறுப்பில் விட்டுவிட்டு, உறவினர்களை இந்தப் பாசனப் பகுதிகளிலிருந்து வெளியேறப் பணித்துவிட்டு, குடும்பத்துடன் பொள்ளாச்சி அருகேயுள்ள ஊற்றுக்குழிக்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. வமிசாவளியிலும் ஏதோ மரியாதைக் குறைவு காரணமாக நாட்டைவிட்டுக் காலிங்கராயன் வெளியேறிய தகவல் இடம் பெற்றிருக்கிறது.

காலிங்கராயன் என்பது ஒரு பட்டப் பெயரே. பாண்டியர் ஆட்சிக் காலத்தில் கொங்கு நாட்டில் பகுதி அலுவலராக இருந்தவர் இந்தக் காலிங்கராயன். யாராக இருந்தாலும் இன்றும் என்றும் ஈரோடு மாவட்டத்தின் செழிப்பில் இடம் பெற்றிருக்கும் பெயர் காலிங்கராயன், அவர் வெட்டிய வாய்க்காலில் வழிந்தோடும் நீரால்!

சான்றுகள்:

1) பாளையப்பட்டுகளின் வமிசாவளி - தொகுதி 1, தொல்லியல் ஆய்வுத் துறை, தமிழ்நாடு அரசு

2) காலிங்கராயன் கால்வாய் / புலவர் செ. இராசு

3) காலிங்கராய கவுண்டரின் கதை / எம். பாண்டிய ராஜன் / தினமணி - பெரியார் மாவட்டச் சிறப்பிதழ்/ 31.3.1997




ஈரோடு,

.பவானி அருகே காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். இந்த வாய்க்கால் மூலமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதில் கடைமடை வரை தண்ணீர் சீராக செல்லும் வகையில் பாசூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் காலிங்கராயன் வாய்க்கால் சீரமைக்கும் பணி ஈரோடை அமைப்பு சார்பில் நடக்கிறது.

இதுகுறித்து ஈரோடை அமைப்பின் தலைவரும், ஈரோடு சுதா ஆஸ்பத்திரியின் நிர்வாக இயக்குனருமான டாக்டர் சுதாகர் கூறியதாவது:-

மொத்தம் 95 கிலோ மீட்டர் நீளமுள்ள காலிங்கராயன் வாய்க்காலில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு பொதுப்பணித்துறை சார்பில் ஏற்கனவே கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. கடைமடை பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஈரோடை அமைப்பு சார்பில் பாசூரில் இருந்து ஆவுடையார்பாளையம் வரை சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.13 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி கடந்த வாரம் முதல் தொடங்கி நடந்து வருகிறது. ஏற்கனவே பெரும்பள்ளம் ஓடை, கீரிப்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன்பள்ளம் ஓடை, சூரம்பட்டி அணைக்கட்டு மற்றும் கீழ்பவானி பிரதான வாய்க்கால் ஆகியன தூர்வாரப்பட்டு உள்ளது. தற்போது காலிங்கராயன் வாய்க்கால் தரைதளத்தை தவிர மற்ற இரு கரைகளிலும் கான்கிரீட் அமைக்கப்படும். இந்த பணிகள் ஒரு மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், மலையம்பாளையம், பழனிகவுண்டம்பாளையம் பகுதியில் செல்லும் கிளை வாய்க்கால்களும் தூர்வாரப்படுகிறது.

.

காக்க... காக்க காலிங்கராயனைக் காக்க!
Vikatan Correspondent
உலகின் மிகப் பழமையான வாய்க்கால்களில் ஒன்றாக ஐ.நா. அவையால் அங்கீகரிக்கப்பட்ட வாய்க்கால் ஈரோடு காலிங்கராயன் வாய்க்கால். பவானி ஆற்றில் இருந்து பிரிந்து 56 மைல் தூரம் சீறிப் பாய்ந்து ஓடுகிறது இந்த வாய்க்கால். ஒருகாலத்தில் ஓஹோ என்று விவசாயத்தைச் செழிக்கவைத்த இந்த வாய்க்காலை இன்று பார்த்தால் கண்ணீர்தான் வருகிறது. வரலாறு தெரியாமல் இந்த வாய்க்காலைக் களங்கப்படுத்திவிட்டன தோல் தொழிற்சாலைகள். இதன் நெகிழ்வூட்டும் வரலாற்றை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் ஈரோட்டைச் சேர்ந்த 'இந்தியாவுக்காக இந்தியர்கள்’ அமைப்பின் அகரம் பார்த்திபன்.


காக்க... காக்க காலிங்கராயனைக் காக்க!
##~##

''தன்னைத் தானே நாடு கடத்திக்கொண்ட ஒரு மன்னன் இருந்தான் என்றால், அவர்தான் காலிங்க ராயன். அன்றைய காலகட்டத்தில் தமிழ்நாடு சேர, சோழ, பாண்டிய, தொண்டை, கொங்கு என ஐந்து நாடுகளாக இருந்தது. கி.பி 1282-ல் பாண்டிய மன்னன், வீரபாண்டியனின் பிரதிநிதியாகப் பூந்துறையைத் தலைமை இடமாகக்கொண்டு கொங்கு நாட்டை ஆட்சி செய்தவர் காலிங்கராயன். இவருடைய சொந்த ஊர் வெள்ளோடு. இவர் வாழ்ந்த பகுதிகள் முழுவதும் மேட்டுப் பகுதிகள் என்பதால் இங்கு ஆற்றுப் பாசனம் கிடையாது. கிணற்றுப் பாசனம் மட்டும்தான்.

போதுமான நீர் வசதி இல்லாததால், இங்கு விவசாயம் செழிக்கவில்லை. முக்கிய உணவுப் பயிரான நெல்கூட விளைவிக்க முடியவில்லை. இந்த நிலையில் காலிங்கராயன், தன் மகனுக்குப் பெண் கேட்க தஞ்சைப் பகுதியில் வசிக்கும் தன் சகோதரி வீட்டுக்குப் போனார். அப்போது அந்த வீட்டின் சமையல்காரன், 'இவர் களுக்கு விருந்து சமைக்கப் பழைய அரிசி போடுவதா? புதிய அரிசி போடுவதா?’ என்று கேட்டு இருக்கிறான். அதற்கு காலிங்கராயனின் உறவினர்கள், 'நெல் விளையாத தேசத்துக்காரர்களுக்கு எந்த அரிசியாக இருந்தால் என்ன?’ என்று கேலி செய்திருக்கிறார்கள்.


காக்க... காக்க காலிங்கராயனைக் காக்க!
இதைக் கேட்டுப் பொறுத்துக்கொள்ள முடியாத காலிங்கராயன், எங்களுடைய புன் செய் நிலங்களை எல்லாம் நன்செய் நிலங்களாக மாற்றிக் காட்டுகிறேன் என்று சபதம் எடுத்திருக்கிறார். பவானி ஆற்றில் இருந்து தங்களுடைய மேட்டுப் பகுதியை நோக்கி வாய்க்கால் வெட்டி நீரைக் கொண்டுவருவதுதான் காலிங்கராயனின் திட்டம். ஆனால், மேட்டுப் பகுதியை நோக்கி வாய்க்கால் வெட்டுவது சாத்தியம் இல்லை என்று பலரும் சொல்லி இருக்கிறார்கள்.

ஒருநாள் காலிங்கராயனுக்கு ஒரு பாம்பு, மேட்டை நோக்கி வளைந்து நெளிந்து செல்வதுபோலக் கனவு வருகிறது. அதன்படி வாய்க்காலையும் வளைத்து நெளித்து வெட்டுவது என முடிவு எடுக்கிறார். வாய்க்கால் வெட்டுவதற்கு நிதி கேட்டு இவர் தன் இன மக்களிடம் போனபோது, எவருமே உதவ முன் வரவில்லை. அப்போது இவருடைய தாயார், 'தயிர் விற்ற பணம் தாவாரம் வரை கிடக்குது; மோர் விற்ற பணம் முகடு வரை கிடக்குது; எடுத்து வாய்க்காலை வெட்டு’ என்று சொல்லவே, வாய்க்கால் வெட்டும் பணியைத் தொடங்குகிறார். காலிங்கராயன் வாய்க்காலை வெட்டும்போது, அவருக்கு உடல் உழைப்பில் பெரிதும் கைகொடுத்தவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களே.

காக்க... காக்க காலிங்கராயனைக் காக்க!

அவர் சபதம் எடுத்தபடியே வெற்றிகரமாக வாய்க்காலை வெட்டி பவானி ஆற்றுத் தண்ணீரை மேட்டுப் பகுதியை நோக்கிப் பாயச் செய்தார். புன்செய் நிலங்கள் எல்லாம் நன்செய் நிலங்களாகின. அப்போது, 'காலிங்கராயன் தன்னுடைய சொந்தப் பயன்பாட்டுக்காகத்தான் வாய்க்காலை வெட்டினார்’ என்று சிலர் பேசக் கேட்ட காலிங்கராயன், 'இந்த வாய்க்காலில் இருந்து நானோ என்னுடைய சந்ததியினரோ ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூடப் பயன்படுத்த மாட்டோம்’ என்று சொல்லிவிட்டு, ஊத்துக்குளிக்கு இடம் பெயர்ந்துவிட்டார்.

உலகிலேயே மேட்டை நோக்கிப் பாய்கிற ஒரே வாய்க்கால் இது ஒன்றுதான். வளைந்து நெளிந்து பாய்வதால் இதைக் கோணவாய்க்கால் என்றும் சொல்வர். 800 ஆண்டுகள் பழமையான இந்த காலிங்கராயன் வாய்க்காலை, கழிவுகளில் இருந்து காப்பாற்றுவதே தன்மானத் தமிழன் காலிங்கராயனுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்!'' என்கிறார் பார்த்திபன்.   

காக்க... காக்க காலிங்கராயனைக் காக்க!
- கி.ச.திலீபன்
down in Uthukuli near Anaimalai
Breif History of Kalingarayar Canal

During the time of Authondai ChakravarthiChakravarthy, one of the Chola kings, Kalingan of Sathanthai Gothram (a very ancient family), was the ruler of Perianadu Nadumandalam, which was occupied by the VellalarsVellalar, a powerful community in those days. Authondai chakravarthiChakravarthy, with the help of Chera and the Pandya Kings, took possession of Nadumandalam, and with a view to disperse these VellalarsVellalar from their stronghold, he sent some of them with Chera, and some with Pandya, when Sathanthai Kalingan accompanied Chera to Kongunadu.

At that time this country was mostly covered with dense forests and was divided into twenty-four portions.

Pundurai, one of the divisions, consisting of thirythirty-two villages, was bestowed on Sathanthai Kalinga Rayar, he was made chief of that place, with Vvellodu as his capital. He constructed a temple there and dedicated it to Padagavalli Nachiar. He went to his brother-in-law, Pannai-kulathan, at Karur and proposed his daughter for his own son. The betrothal was made, but a slight incident occurred which caused the postponement of the marriage. During his stay, the cook of the bride’s party asked his master whether coarse or fine rice should be cooked for guests. He replied in jest, “What matters it if you cook coarse or fine rice for the people living in dry lands? Cook anything.” Being offended at this remark, Sathanthai Kalinga Rayar, with his party, left the place immediately, saying that he would marry his daughter after he could raise wet crops in his lands. On his return to his capital, with a dejected heart, he prayed to his tutelary deity, God Subramanya, for the grant of wet lands and retired to bed. He vowed a life of penance till his prayer was granted and left his beard to grow in token of his vow. God Ssubramanya, in the form of an old sage, appeared to his vision, while he was asleep and said, “Why art thou dejected? Do not be disheartened; construct an anicut at Bhavani and dig a channel; thy object will be realized.” He asked “Oh! Swami! I am perplexed. I do not where to construct the anicut and in what course to dig the channel.” The sage replied, “A peacock has run chasing a snake from a certain point at the bed of the river Bhavani. There are the traces left. Take that course. “He woke up and straight away went to the point indicated and to his great joy and surprise saw traces of a serpent having been chased by a peacock. Accordingly he began to dig a channel there and construct a dam with stones brought from the Urachi Hills. But it was obstructed by Vellai Vettu Poligar on the ground that the land in question was his own. His objection was overcome and an anicut and a channel as far as Kodumudi were built at an enormous cost. They were named after the serpent Kalingan Channel and Anicut. All the dry lands of Pundurai division were then converted into wet lands. As he was the founder of the Kalingan Channel and Anicut, he added to his name the appellation of Kalingan and called the paddy that was grown in his fields as Kalingan Paddy. As his object was fulfilled, he went again to Karur and celebrated his son’s marriage according to his promise. He then came back to his country and lived with his family in peace and plenty. Since then peacock has become the emblem of the family.

The Kalingan channel and Anicut are said to have been constructed about 2,000 years of Kaliyuga Sakaptam and stone statues of Kalinga Rayar and the serpent were placed near the anicut, and festivals and pujas were performed by his descendants and other riots.

They did not want to reap the benefits of their noble deeds. Later the Kalinga Rayars moved to Anaimalai area converted the forest into a village called it Uthukuli and established a principality of themselves in that territory.


.

Sunday, 17 May 2020

THE STORY OF SASIKALA BECAME SISTER OF JEYALALITHA.




THE STORY OF  SASIKALA BECAME 
SISTER OF JEYALALITHA.
சசிகலா ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை,

1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதல் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பே சசிகலா, ஜெயலலிதாவின் இணைபிரியாத் தோழியாகி இருந்தார். சசிகலா இல்லாமல் ஜெயலலிதா இல்லை என்ற நிலை அப்போதே உருவாகி இருந்தது. அதனால்தான், போயஸ் கார்டன் மற்றும் கட்சிக்குள் இருந்து தினகரன், திவாகரன், நடராசனை ஒதுக்கி வைத்த ஜெயலலிதாவால் சசிகலாவை விலக்கவே முடியவில்லை; விலகவும் அவர் விரும்பவில்லை. அதே நேரத்தில் சசிகலாவின் கணவர் நடராசனிடம் ஜெயலலிதா கொஞ்சம் எச்சரிக்கையைக் கடைபிடிக்க ஆரம்பித்தார். “நம்மை அரியணையில் ஏற்றி வைக்க நடராசனால் இத்தனை திட்டங்களைத் தீட்ட முடிகிறதென்றால்... நம்மை அரியணையில் இருந்து இறக்குவதற்கும் நடராசனால் பல திட்டங்களைத் தீட்ட முடியும்” என்ற எச்சரிக்கை அது. நடராசனின் செயல்பாடுகளும் ஜெயலலிதாவின் உள்ளுணர்வு ஒலித்த எச்சரிக்கைக்கு ஏற்பவே இருந்தன. தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க எம்.பி-க்களை அழைத்துக் கொண்டு போய் மத்திய அமைச்சர்களைச் சந்திப்பது, தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வட்டத்தை தனக்கு நெருக்கமானவர்களைக் கொண்டு நிரப்புவது, தன் தயவு இல்லாமல் ஜெயலலிதாவால் எதையும் செய்ய முடியாது என்று பேசுவது, பேட்டி கொடுப்பது என்று புதிராகவே நடராசன் வலம் வந்தார். கடைசிவரை ஜெயலலிதாவால் அவரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதனால் வெறுத்துப்போய் கொஞ்சம் ஒதுக்கி மட்டும் வைத்தார்.

சசிகலா விவகாரத்தில் அதைக்கூட அவரால் செய்ய முடியவில்லை. தமிழகத்துக்கே முதல்வர் ஆன பிறகும்கூட சசிகலாவின் தயவு இல்லாமல் ஜெயலலிதாவால் செயல்பட முடியவில்லை. முதல்வராகும் வரை இணை பிரியாத்தோழி என்றளவில் இருந்த ‘ஜெயலலிதா-சசிகலா நட்பு’, ஜெயலலிதா முதல்வரான பிறகு, ‘சசிகலா, ஜெயலலிதாவின் உடன் பிறவாச் சகோதரி’ எனச் சொல்லும் கட்டத்தை நோக்கி நகர்ந்தது. தினகரன், திவாகரன், நடராசனுக்குப் பதில் சசிகலாவின் அண்ணன் விநோதகன் போயஸ் தோட்டத்துக்குள் ஆட்சி செய்து கொண்டிருந்தார். தமிழகத்தை கேடு காலம் மெல்லச் சூழத் தொடங்கியது. அதேநேரத்தில், சசிகலா குடும்பத்துக்கு நல்ல யோகம் பொங்கிப் பிரவாகம் எடுக்கத் தொடங்கி இருந்தது. திருத்துறைப் பூண்டியில் விநோதகன் ஆடம்பரத் திருமண மண்டபம் ஒன்றை கட்டத் தொடங்கினார். அந்தக் காலத்திலேயே அது முழுமையான ஏ.சி வசதி செய்யப்பட்ட திருமண மண்டபமாக கட்டப்பட்டது. திருத்துறைப் பூண்டி பேருந்து நிலையமே இடம் மாற்றத்தில் சிக்கி சில நாள்கள் தவித்துப்போனது.

தமிழகத்தின் இருண்ட காலம் தொடக்கம்!

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில், 7 துப்பாக்கிக் சூடுகள் தமிழகத்தில் நடந்தன. ஜெயலலிதாவை விமர்சித்த எதிர்கட்சித் தலைவர்கள் கொலை வெறியோடு துரத்தி துரத்தி தாக்கப்பட்டனர். ப.சிதம்பரத்துக்கு எதிராக, திருச்சி விமான நிலையத்தில் அ.தி.மு.க-வினர் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்தனர். பெயருக்குத்தான் அது கருப்புக் கொடி காட்டும் போராட்டம். ஆனால், உண்மையில் அது சிதம்பரத்தை சின்னபின்னப்படுத்துவதற்கான திட்டம். அதில் இருந்து தப்பித்து, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சிதம்பரம் பட்டபாடு அவர் மனதில் இன்னும் இருக்கிறது. இப்போது அவரைச் சந்தித்து அந்தச் சம்பவம் குறித்துக் கேட்டாலும், அது ஏற்படுத்திய வடுவை அவர் வார்த்தைகளில் உணர முடியும். மணிசங்கர் அய்யர் பாண்டிச்சேரி வரை துரத்தி அடிக்கப்பட்டார். ஆளும்கட்சியை விமர்சித்த பத்திரிகைகளின் குரல்வளைகள் நெரிக்கப்பட்டன. மற்ற ஆட்சிகளிலும் அது நடக்கும். ஆனால், அவதூறு வழக்குகள், தொலைபேசியில் கெட்ட வார்த்தைகளால் நடத்தப்படும் அர்ச்சனை என்ற அளவில் மட்டுமே இருக்கும். ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் ஆளும் கட்சியை, ஜெயலலிதாவை விமர்சித்த பத்திரிகைகளை அடக்க, பாக்ஸர் வடிவேலு போன்ற ரவுடிகள் களம் இறக்கப்பட்டனர். கொலைவெறித் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன.

கொல்லப்பட்ட தராசு பத்திரிகை ஊழியர்கள் தாராசு பத்திரிகை ஊழியர்கள் சுப்பிரமணி, சத்தியமூர்த்தி கொல்லப்பட்டனர். நக்கீரன் கோபாலுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான தலைவலி காத்திருந்தது. திடீரென்று நக்கீரன் அலுவலகத்தில் மட்டும் கரண்ட் கட் ஆகும்; திடீரென்று நக்கீரன் அலுவலகத்துக்குள் போலீஸ் படை உள்ளே நுழையும்; விசாரணை என்ற பெயரில் நக்கீரன் கோபாலை படுத்தி எடுத்துவிடுவார்கள். ஆசிட் வீச்சு, ஆட்டோவில் குண்டர்கள், அடி-தடி, ரவுடிகள் ராஜ்ஜியம், துப்பாக்கிச் சூடு, ஒவ்வொரு துறையிலும் ஊழல்... ஊழல்... ஊழல்... என தமிழகம் அல்லோலகல்லோலப்பட்டது. ஆறே மாதத்தில் இந்த ஆட்டம் என்றால், மீதமிருக்கும் நான்கறை ஆண்டுகளையும் கடத்தப் போகிறோம் என்று தெரியாமல் தமிழகம் விழி பிதுங்கி நின்றது. தமிழகம் கண்ட இந்த வேதனைகள் எல்லாவற்றுக்கும் பின்னால் ஆளும் கட்சி இருந்தது; ஆளும் கட்சிக்குப் பின்னால் ஜெயலலிதா இருந்தார்; ஜெயலலிதாவுக்குப் பின்னால் சசிகலா
இருந்தார்; சசிகலாவுக்குப் பின்னால் சசிகலா குடும்பம் இருந்தது. ஆனால், அவர்கள் எல்லாம் வேறு உலகத்தில் இருந்தனர். தமிழக அரசியல் அதுவரை காணாத ஆடம்பரத்தைக் காணத் தொடங்கியது. தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவும் சசிகலாவும் அப்போது அனுபவித்த ஆடம்பரங்களை, அதிகாரத்தின் உச்சத்தை, உலகத்தையே ஒரு காலத்தில் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த விக்டோரியா மாகராணியேகூட அனுபவித்திருப்பாரா? என்பது சந்தேகம் தான். அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அந்த காலத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் சேர்ந்து அரங்கேற்றிய சில சம்பவங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும். கும்பகோணம் மகாமகம், மதுரை உலகத் தமிழ் மாநாடு, வளர்ப்பு மகன் திருமணம், மிரட்டி வாங்கப்பட்ட மாளிகைகள், போயஸ் கார்டன் வீட்டில் இருந்த வைர-வைடூரிய-தங்க நகைகளின் மதிப்பு, ஜெயலலிதா, சசிகலா பெயரில் வாங்கிக்குவிக்கப்பட்ட சொத்துக்களின் கதைகளுக்குள் போய் வரவேண்டும். அந்தச் சொத்துக்கள், சொகுசுகள், ஆடம்பரங்களின் கதைகளுக்குப் பின்னால்தான், ஜெயலலிதா ஏன் சசிகலாவை விலக்கி வைக்கவில்லை என்பதற்கான காரணம் இருக்கிறது. சசிகலா ஏன் ஜெயலலிதாவை விட்டு விலகவில்லை என்பதற்கான காரியமும் அதற்குள்தான் ஒளிந்திருக்கிறது.

1992 பிப்ரவரி 18-ம் தேதி கும்பகோணம் மகாமகம். அதற்கான நாள் நெருங்க நெருங்க பலவிதமான சர்ச்சைகளும், இனம் புரியாத அச்சமும் தமிழகத்தில் பரவிக் கொண்டிருந்தன. கும்பகோணம் மகாமகக் குளத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா நீராடப் போகிறார் என்ற செய்தி மேலும் பதற்றத்தை உருவாக்கியது. கும்பகோணம் முழுவதும் ஜெயலலிதாவின் வானுரய கட்-அவுட்களால் நிறைந்து போனது. அ.தி.மு.க-வினர் தீவிர வசூல் வேட்டையில் இறங்கினர். 17-ம் தேதியே போலீஸ் கெடுபிடிகள் தொடங்கின. ஜெயலலிதா நீராடுவதற்காக பல லட்சங்களைக் கொட்டி குளியலறை அமைக்கப்பட்டது. “முதல்வர் வந்து நீராடிவிட்டுப் போகும்வரை பக்தர்கள் யாரும் குளத்தில் இறங்கக்கூடாது” என்று போலீஸ் கட்டுப்பாடு விதித்தது. திகிலடைந்தவர்கள் மகாமகத்துக்கு முதல் நாளே நீராடிவிட்டுக் கிளம்பினர். மகமகத்தன்று காலை 8.30 மணிக்கு குளத்தருகே பக்தர்கள் மெதுவாகக் கூடத் தொடங்கினர். போலீஸ் அவர்களைக் கட்டுப்படுத்தியது. அந்தக் கட்டுப்பாடு எல்லாம், 9.30 மணி வரை மட்டுமே. அதன்பிறகு, குளத்தில் நின்ற மக்கள் கூட்டம் வேகமாகக் கூடிக் கொண்டே போனது. போலீஸால் அதைக் தடுக்க முடியவில்லை. ஜெயலலிதா நீராடுவதைப் பார்க்க மக்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு அந்த இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டே இருந்தனர். ஜெயலலிதா வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே குளத்தருகே வந்த தேவாராம் ஐ.ஜி. பைனாகுலரில், மக்கள் நெருக்கியடித்து அவதிப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் கையை விட்டு எல்லாம் போய் இருந்தது. அவரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் சூழல் அப்போது. சரியாக காலை 11.32 மணிக்கு ஜெயலலிதா நீராடுவதற்காக பிரத்யோகமாக அமைக்கப்பட்டு இருந்த பகுதிக்கு வந்தார். அங்கிருந்து கூட்டத்தைப் பார்த்துக் கையசைத்தார்.

ஜெயலலிதா கை அசைத்ததை அவருக்கு நேர் எதிரில், வடக்கு வீதிப்பக்கம் இருந்தவர்களால் பார்க்க முடியவில்லை. இடையில் இருந்த ஒரு கோயில் அவர்களை மறைத்தது. எனவே, அந்தப் பகுதியில் இருந்தவர்கள் முன்னுக்கு வந்து பாங்கூர் தர்மசாலா கட்டடத்தின் வெளிப்புறம் இருந்த கிரில் வைத்த கட்டைச் சுவர் மீது ஏற முயன்றனர். அதைத் தொடர்ந்து இரும்பு கிரில் கட்டைச் சுவரோடு சாய்ந்தது. அதில் நசுங்கி பலர் இறந்தனர். அந்தத் துயரம் ஏற்படுத்திய ஓலம், பதற்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெறித்து ஓடத் தொடங்கினர். அதே நேரத்தில் குளத்துக்குள் இருந்தவர்கள் வெளியில் ஏறி ஓடத் தொடங்கினர். இதனால், நேரேதிரில் பதற்றத்தோடு ஓடிய கும்பல், கூட்டம் ஒன்றும் புரியாமல், ஒன்றோடு ஒன்று மோதி, கீழே விழுந்து, நசுங்கி, மூச்சுத் திணறி உயிரைவிட்டது. அதற்கு நூறு அடி தூரத்துக்குள் சசிகலா ஒரு குடத்தில் மகாமகக் குளத்தின் தண்ணீரை அள்ளி அள்ளி ஜெயலலிதாவின் தலையில் ஊற்றினார். அதன்பிறகு ஜெயலலிதா அதேபோல் சசிகலாவின் தலையில் தண்ணீரை ஊற்றினார். கொஞ்சம் தள்ளி மக்கள் உயிரை விட்டுக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சியை வர்ணித்தவர்களின் வர்ணனை ஒலியில் மக்களின் மரண ஓலம் ஜெயலலிதா-சசிகலாவின் காதுகளில் விழவில்லை. போலீஸ் தரப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 48 என்று சொல்லப்பட்டது. ஜெயலலிதாவும் சசிகலாவும் கும்பகோணத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் இரண்டறை மணிக்கு மேல்தான் கிளம்பினார்கள். ஆனால், இறந்த உடல்கள் வைக்கப்பட்டு இருந்த குடந்தை மருத்துவமனைப் பக்கமோ... காயம்பட்டவர்கள் சிகிச்சை பெற்ற அவசர சிகிச்சைப் பிரிவையோ திரும்பிக்கூட பார்க்கவில்லை. ‘ரெட் கிராஸ்’ அமைப்பின் ஆம்புலன்ஸ்கள் மட்டும் இறந்தவர்களையும் காயம்பட்டவர்களையும் தேடி அலறிக் கொண்டிருந்தது.

தமிழகம் முழுவதும் கடும் சர்ச்சைகளை எழுப்பிய இந்த விவகாரத்துக்குப் பின்னால், சசிகலாவின் செல்வாக்கு கார்டனுக்குள் இன்னும் கூடியது. அதன்பிறகு அவர் தினம்தோறும் நமது எம்.ஜி.ஆர் அலுவலகத்துக்குச் செல்ல ஆரம்பித்தார். அதோடு எப்போதும் சசிகலா-நடராசனுக்கு ஆகாத ஆர்.எம்.வீ-யின் அமைச்சர் பொறுப்பும் பறிக்கப்பட்டது.
.

Thursday, 1 November 2018

THE STORY OF SRILANKA , PANDARA VANNIYAN








THE STORY OF SRILANKA ,
PANDARA VANNIYAN






தாய்மண் மீது அடங்காப் பற்றுக் கொண்டு இறுதிவரை போராடிய பண்டார வன்னியன்.
ஒரு நாட்டில் ஓர் இனத்தின் வரலாற்றுப்பாதைகளைப் புரட்டினால் அதில் பல்வேறு உணர்வுகள் வெளிப்படுத்தப்படுவதினை எவராலும் மறுக்க முடியாது. அதுவும் இலங்கைத் தீவில் தமிழினத்தின் வரலாறுகள், துன்பங்கள், துயரங்கள் நிறைந்திருந்தாலும் வீரஞ்செறிந்த நிகழ்வுகளும் ஏராளம் நடந்தேறியுள்ளன.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இராவணனின் வரலாறு, அதன் பின்பு அனுராதபுரத்தில் நீதி தவறாமல் 44 ஆண்டுகள் ஆட்சி புரிந்த எல்லாளன் வரலாறு. யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலியனின் வரலாறு, வன்னியை ஆண்ட மாவீரன் பண்டார வன்னியன் வரலாறு என்பன உயர்ந்தவை. இவர்களின் வரலாற்றை மீட்டுப் பார்த்தால் அதில் பல புனிதத் தன் மைகள் புலப் படுகின்றன. நாம் பண் டார வன்னி யனின் வர லாற்றினை அவரது நினைவு நாளில் நிலை நிறுத்திக் கொள்வோம்.

இலங்கையில் புராதன காலத்தில் காணப்பட்ட இராச்சியங்களில் அடங்காப்பற்று எனப்படும் வன்னிராச்சிய வரலாறுகள் வித்தியாசமானவை. இலங்கையில் வடபகுதியின் வடக்கே ஆனையிறவு பரவைக் கடலையும் கிழக்கே முல்லைத்தீவுக் கடலையும், தெற்கே நுவரகலாவிய மாவட்டத்தையும் மேற்கே மன்னார் கடலையும் எல்லைகளாகக் கொண்ட பிரதேசமே அடங்காப்பற்று எனப்படும் வன்னி ஆகும். இந்த வன்னிப் பிரதேசத்தில் ஆதிகாலத்தில் வேடர்களும் இராவணன் பரம்பரையைச் சேர்ந்த தமிழர்களும் வாழ்ந்ததற்கான தொல்லியல் வரலாறுகளும் வரலாற்றுச் சின்னங்களும் காணப்படுகின்றன.

இப்பிரதேசத்தில் வாழ்ந்த பூர்வீக குடிகள் சுதந்திரமாக இருந்தனர். புவியியல் அமைப்பு, சூழல், சமூக வாழ்க்கை முறை காரணமாக அவர்கள் யாருக்கும் அடி பணியாமல் இருந்தனர். யாழ்ப்பாண ஆட்சியினருக்கோ, சிங்கள ஆட்சியினருக்கோ அடங்காமல் இருந்த பிரதேசம் என்பதால் இப்பகுதி “அடங்காப்பற்று” எனப் பெயர் பெற்றது.

இவ்வாறு சிறப்புப் பெற்ற அடங்காப்பற்று எனப்படும் வன்னி இராயச்சியத்தை ஆரம்பத்தில் ஆண்ட வன்னியர்கள் பனங்காமத்தை தமது தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். பின்பு முல்லைத்தீவைப் பிரதான இடமாக மாற்றினர். இந்த வன்னி இராச்சியத்தை இரண்டு வகையானவர்கள் ஆட்சி புரிந்ததாகக் கூறப்படுகின்றது. வன்னியர்கள் எனப்படுவோரும் மற்றும் மாப்பாணர்களும் ஆட்சி புரிந்தனர்.

இவ்வாறான சூழ்நிலைகளில் கி.பி. 1505ஆம் ஆண்டு இலங்கைக்குள் நுழைந்த போர்த்துக்கேய இனத்தவர்களால் வன்னியின் செட்டிக்குளம், மன்னார் போன்ற பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் பின்பு கி.பி. 1782ஆம் ஆண்டு ஜூலை மாதம் லெப்ரினென் நாகெல பொது மன்னிப்பளித்தபோது சின்னநாச்சி என்பவருக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டது. முல்லைத்தீவிற்கு திரும்பிச் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டார். இவ்வாறான சூழ்நிலைகளில் பண்டாரவன்னியனின் தாயின் பெயர் சின்னநாச்சியாக இருந்திருக்கலாம். சுவாமி ஞானப்பிரகாசரின் பரம்பரைக் குறிப்பின்படி குழந்தை நாச்சனுடைய மகன் பண்டாரவன்னியன் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாகத்தான் பண்டாரவன்னியனின் ஆள்புலம் முல்லைத்தீவு வட்டுவாகல், முள்ளியவளை, ஒட்டுசுட்டான் போன்ற பிரதேசங்களாக இருந்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது.


இவ்வாறான ஒரு சூழ்நிலையில் கி.பி. 1796ஆம் ஆண்டு இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி ஆரம்பமாகின்றது. ஆங்கிலேயர்கள் கோட்டை இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியங்களை இலகுவாக கைப்பற்றிக் கொண்டனர். ஆயினும் கி.பி. 1800ஆம் ஆண்டு பனங்காமத்தில் படைப்பிரிவு ஒன்று இருந்த தாகக் குறிப்பி டப்படுகின்றது. பண்டாரவன்னியன் வன்னியில் கலகங்கள் செய்ததன் காரணமாக ஒல்லாந்தரினால் பதவி நீக்கம் செய்யப்பட்டு பின்னர் ஆங்கிலேயர்களின் மன்னிப்பின்பேரில் வன்னியில் ஒரு சிறு பிரிவிற்கு தலைவனாக நியமிக்கப்பட்டான். ஆனால் பண்டாரவன்னியன் ஆங்கிலேயர்களைத் தனது நாட்டிலிருந்து வெளியேற்றப் போவதாகச் சபதம் செய்து மீண்டும் கலகங்கள் செய்ய ஆரம்பித்தான்.

பண்டாரவன்னியன் பாரிய படையெடுப்பினை மேற்கொண்டு வடபகுதி வன்னி முழுவதையும் தனது ஆட்சியின்கீழ் கொண்டுவந்ததுடன் முல்லைத்தீவையும் கைப்பற்றினான். மேலும் அவனது படையினர் கொட்டியாரத்தையும் கைப்பற்றினர். பண்டாரவன்னியன் அங்கும் சில தனது படை வீரர்களை நிலைகொள்ளச் செய்தான். ஆயினும் குறுகிய காலப்பகுதியில் ஆங்கிலேயர்கள் மீளவும் இதனைக் கைப்பறியதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலைகளில் பண்டாரவன்னியன் 1803ஆம் ஆண்டு கற்சிலை மடுவில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.

இதனை நன்கு அறிந்த ஆங்கிலேயத் தளபதி கப்டன் டிறிபேர்க்கின் தலைமையிலான ஆங்கிலப் படைகள் கி.பி. 1803ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 31ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில் மன்னாரில் இருந்து கற்சிலைமடுவுக்கு வந்து கடுமையான தாக்குதல்களைக் தொடுத்தன. சற்றும் எதிர்பாராத பண்டாரவன்னியனும் அவன் சார்ந்த படைகளும் இதனால் அதிர்ச்சியடைந்தன. இச்சண்டையிலே பண்டாரவன்னியன் தனது இரு கரங்களிலும் வாளேந்திக் கடுமையாகப் போரிட்டாலும் அவன் கற்சிலைமடுவில் வீரமரணடைந்தான். பண்டாரவன்னியனை போரிலே தோற்கடித்தமைக்கு கப்டன் டிறிபேர்க்கிற்கு பண்டாரக்குளம் பரிசாக வழங்கப்பட்டது. பண்டாரவன்னியன் இம்மண்ணிலே மரணித்தாலும் ஒவ்வொரு தமிழர்களது மனங்களிலும் அவன் ஓர் வீரனாக வாழ்ந்து வருகின்றான் என்பதனை எவராலும் மறுக்க முடியாது.

ஒரு சமூக போராட்டமோ ஒரு இனத்தின் போராட்டமோ மழுங்கடிக்கப்படுவது அவ்வினத்தினரிடையே காணப்படும் அறியாமையால் . வரலாறு இதற்க்கான விடைகளை படைக்கிறது . தனது  சமூகத்தின்/இனத்தின்  வரலாற்றை அறியாதவன் சமூகம் நிச்சயம் சிதையும் .

இதில் எந்த போராட்டம் சரி என்பதோ அல்லது எதையுமோ ஆதரித்து எழுதவில்லை . இருந்த வரலாற்றை ஆவணங்களுடன் சமர்ப்பிக்கிறேன் .

வீரம் விளைந்த மண்ணின் மன்னன் பண்டார வன்னியன் பற்றி விரிவாக அறிந்தால் தமிழர் பூமி , அவர்களுக்கு தனியொரு உரிமைகளுடனான இடம் இலங்கையில் இருந்தமைக்கான ஆவணங்கள்  கிடைக்கும் .

மன்னன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவில் இருந்து வற்றாப்பளை அம்மன் கோவில் வரை உள்ள 2000 சதுர மைல் நிலத்தை ஆட்சி செய்து வந்தான் . தனது சகோதரர்களை முக்கிய பதவிகளில் வைத்து ஆட்சி செய்து வந்தான் . தனது தம்பி கைலாய வன்னியனை அமைச்சராகவும் தனது இறுதி சகோதரன் பெரிய மன்னரை தளபதியாகவும் வைத்திருந்தான். அதே நேரம் காக்கை வன்னியன் எனும் மன்னன் வன்னியின் இன்னொரு நிலப்பரப்பை ஆண்டு வந்தான் .

ஒல்லாந்தர்  எமது நாட்டை கைப்பற்ற வந்த போதே தமிழர் ஆட்சி இங்கு இவ்வாறு நிலவியது என்பதை அவர்களின் சிலர் எழுதிய குறிப்பு  ஏடுகளில் காணலாம் . முக்கியமாக மேலைத்தேயர்கள் இலங்கையை கைப்பற்ற காரணம் கடல் வளங்களும் , வணிகமும் , மண் வளங்களையும் பார்த்து மோகம் கொண்டதே . முக்கியமாக இயற்க்கை வளம் கொண்ட திருகோணமலை துறைமுகம்(ஆசியக்கண்டத்தின் திறவுகோல் ) பிரச்சனைகளின்  அடிப்படை எனலாம் . இவற்றுள் மாதோட்டம் துறைமுகமும் ஒன்று .

புவியியலாளர் தொலமி (உலக  வரைபடத்தை முதன் முதலாக வரைந்தவர் ) இலங்கையில் தமிழர் பூமியை தனியாக காட்டி  தமிழர் என்ற ஒரு இனம் அப்போது அந்த பிரதேசத்தில் இருந்ததாக் குறிப்பிட்டு உள்ளார் . வேறு எந்த இனமுமோ இருந்ததமைக்கான சான்று  இல்லை .


இது இவ்வாறு இருக்க மற்றைய பேரரசுகள் பல திருகோணமலைக்கு  ஆக  போரிட்டு மடிந்து போயின . கண்டிய மன்னனுக்கும் ஆங்கிலேயருக்கும்  இடையில்  சண்டை நடந்தது . அந்த நேரத்தில் மாபெரும் மன்னனாக இருந்த ஆங்கிலேயன் ராபர்ட் நொக்ஸ் கண்டிய மன்னனால் மூதூரில் (தற்ப்போது ) வைத்து சிறைப்பிடிக்கப்பட்டான் . பல வருடங்கள் சிறையில் கழித்த ராபர்ட் நொக்ஸ் ஒருவாறு சிறையில் இருந்து தப்பி அனுராதபுரப்பக்கமாக ஓடினான் . அனுராதபுரத்தை அடைந்தவுடன்  அங்குள்ள  மக்களையும்   ஆட்ச்சியையும் பார்த்து வியப்படைந்தான் . ஆட்சி  செய்த மன்னன் கைலாய வன்னியன் . 

மாவீரன் குலசேகரம் வைரமுத்து  பண்டார வன்னியனுக்கு நடந்தது என்ன ?

கண்டிய அரசனுக்கு  கீழ்ப்படியாது  ஆங்கிலேயருக்கு திரை வரி செலுத்தாது ஆட்சி செலுத்தி   வந்தவன் தான் மாவீரன் பண்டாரவன்னியன் . வழமை போல தமிழன் இடம் ஊறியுள்ள துரோகத்தன்மையை காட்டிய வரலாறு . வீரபாண்டிய  கட்டபொம்மன் போல ஒரு வரலாறு இங்கும் உண்டு .

பண்டாரவன்னியனுக்கு சகோதர்கள் ( கைலாய வன்னியன் , பெரிய மைனர் ) இருக்க சகோதரி நளாயினியும் இருந்தாள். நளாயினி தமது அவை புலவர் மீது காதல் கொண்டிருந்தாள் . மன்னன் காக்கை வன்னியன் ( இன்னொரு நிலப்பகுதி மன்னன் ) நளாயினி மீது காதல் கொண்டு எவளவோ கடிதங்களை பண்டாரவன்னியனுக்கு அனுப்பியிருந்தான் . பண்டாரவன்னியன் அதற்க்கு ஒன்றும் கூறவில்லை . இவ்வாறிருக்க புலவரும் நளாயினியும் காதல் கொண்டுள்ளதை கண்ட காக்கை வன்னியன் புலவருடன் போரிட்டான் . புலவர் மன்னனை வாளால் வென்று திருப்பி அனுப்பினான் . புலவனும் அரச குலத்தில் வந்ததை உணர்ந்த மன்னன் தனது சகோதரி காதலுக்கு சம்மதித்தான் .

இதை  மனதில் இருத்திக்கொண்டு இருந்த காக்கை வன்னியன் வெள்ளையர்கள் பண்டாரவன்னியன் மீது படை எடுத்து தோல்வி அடைவதை   உணர்ந்தான் . வெள்ளையர்களுடன்  சேர்ந்து சதி செய்து மன்னனை கொல்ல திட்டமிட்டான் . வழமை போல பாசாங்கு செய்து மன்னனிடம் மன்னிப்பு கேட்டு  தருணம் பார்த்து  ஆங்கிலேய படைகளிடம் சிக்க வைத்தான்

ஒருவனுக்கு அவனுக்கு பிடித்தவர்கள் உறவினர்கள் யார் வேண்டுமென்றாலும் சிலை வைக்கலாம் ஆனால் எதிரியாலேயே வைக்கப்பட்ட சிலை பண்டாரவன்னியன் சிலை .

பலமுறை படை எடுத்தும்  வெல்லப்படமுடியாத அவனை நிறைவில் ஆங்கிலேய தளபதி  ஆனையிறவு திருகோணமலை என மும்முனையிலும் இருந்து படை எடுத்து வந்து வென்றனர். இவ்வாறு வெல்லப்பட்ட அவனுக்கு ஆங்கிலேய தளபதியாலேயே சிலை வைக்கப்பட்டது .

1803/10/31 காலப் பகுதியில் அப்போது ஒட்டுசுட்டான் பகுதியாகவிருந்த  தற்போதைய கற்சிலைமடுப்பகுதியில் ஆங்கிலேயப் படைத்தளபதி கப்டன் "றிபேக்"என்பவனால் தோற்கடித்து கொலை செய்யப்பட்டார்.

இப்பொழுதும் கூட பண்டாரவன்னியனுக்காக அவரை கொலை செய்த ஆங்கிலேயராலேயே  வைக்கப்பட்ட நினைவு கல்  உள்ளது . ராபர் நொக்ஸ்  குறிப்பேட்டில் தான் வடக்காக  தப்பிச்சென்ற போது வயல்வெளிகளையும் எருதுகள் உழுவதையும் அங்குள்ள மக்கள் சிங்கள மொழியை பேசவில்லை என்றும் அவர்களுக்கு சிங்கள மொழியே தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் .

மேலும் அங்கு கயிலாய வன்னியன் ஆட்ச்சிசெய்த நாட்டை கயிலாய வன்னியன் நாடு என்றும் அவன் யாழ்ப்பாணத்தின் தெற்க்கு மற்றும் வன்னியின் கிழக்குப்பகுதியையும் ஆண்டு வந்ததாக அவரது  குறிப்பில் குறிப்பிட்டுள்ளார் . 

இதிலிருந்து காலம் காலமாக தமிழர் வாழ்ந்த பூமி. தமிழர் நாடு எதுவென தெளிவாக காணக்கூடியதாக  உள்ளது . இல்லாத ஒன்றை எவனும் கேட்கப்போவதில்லை .


1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் வன்னி ஒரு தனி மாவட்டமாகவே ஆக்கப்பட்டது.
வன்னியின் பாராள மன்ற உறுப்பினராக இருந்த திரு.சி.சுந்தரலிங்கம் அவர்கள் அடங்காப்பற்றின் பெருமையை எடுத்துக் கூறி இப்பிரதேசம் அடங்காப்பற்று ஆக விளங்க வேண்டுமென பாடுபட்டார். பல அபிவிருத்திகளையும் மேற்கொண்டார்.
1892ஆம் ஆண்டின் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் தாயக கோட்பாட்டு இயக்கத்தின் செயற்பாடுகள் தமிழர் வாழும் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் அனைத்திற்கும் வியாபித்தன.
1983 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள இனக்கலவரம் வெடித்தது. இதன் பின்னர் இலங்கை அரசுக்கும் தமிழர் தாயகக் கோட்பாட்டு இயக்கத்திற்கும் இடையில் ஆயுதப்போராட்டம் ஆரம்பித்தது.
1987 ஆம் ஆண்டு கொழும்பரசின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய அரசு “அமைதிப் படை” என்ற பெயரில் படைகளை அனுப்பி இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதியில் தமிழர் வாழும் பிரதேசங்களை ஆக்கிரமித்தது.
1987 ஆம் ஆண்டு அமைதிப்படை என்ற பெயரில் வந்த இந்தியப் படையினர் தமிழர் தாயகக் கோட்பாட்டு இயக்கத்தினை அடிபணியச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் முறுகல் நிலை ஏற்பட்டது.
1987 இல் தமிழர் தாயகக் கோட்பாட்டு இயக்கம் தடைசெய்யப்பட்ட காரணத்தால் அதன் ஆயுதப்போராட்டப் பிரிவு தனது தலமையகத்தினை வன்னியின் முல்லைத்தீவுப்பிரதேசத்திற்கு மாற்றியது.
1987 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முல்லைத்தீவு வன்னிப் பிரதேசங்களில் தமிழர் தாயகக் கோட்பாடு இயக்க ஆயுதப் பிரிவினரை சல்லடை போட்டுத் தேடிய இந்தியப் படையினர் பெரும் தோல்வியை சந்தித்தனர்.
1989 இல் கொழும்பு அரசியல் தலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அமைதிப் படைகள் என்ற பெயரில் வந்த இந்தியப் படைகள் வாபஸ் பெறப்பட்டன.
தமிழர் தாயக கோட்பாட்டு இயக்க ஆயுதப் பிரிவினர் வன்னியில் தங்கியிருந்தனர். இதனால் இப்பிரதேசம் “வன்னிப் பெருநிலப்பரப்பு” என மாறியது.
1990 இல் வன்னியூடாகச் செல்லும் யாழ்ப்பாணம்-கண்டி
ஏ-9 நெடுஞ்சாலை மூடப்பட்டது.
யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்குமான போக்குவரத்துக்கள் கடல் மார்க்கமாகவும் ஆகாய மார்க்கமாக மட்டுமே நடைபெற்றன.
1990 ஆம் ஆண்டு தொடக்கம் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டதனால் வன்னி மீண்டும் இலங்கை ஆட்சிக்குட்படாத அடங்காப்பற்றாக மாறியது.
2000 ஆம் ஆண்டு வன்னியின் வட எல்லையில் இருந்த ஆனையிறவுக் கோட்டையை அடங்காப்பற்றிலிருந்த தமிழர் தாயகக் கோட்பாட்டு இயக்கம் தரைமட்டமாக்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
தமிழர் தாயகக் கோட்பாட்டின் ஆயுதப் பிரிவினர் எந்த நேரமும் அடங்காப் பற்றிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தை தாக்கக் கூடும் என இரங்கையரசு கருதியதால் ஆனையிறவிற்கு அப்பால் முகமாலையில் பாரிய இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டது. இது வரலாறு திரும்பியுள்ளதை நினைவூட்டுகிறது.
2002 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கொழும்பில் அரசியல் தலமைகளின் மாற்றங்கள் ஏற்பட்டன.
நோர்வே நாட்டு அரசின் சமாதான முன்னெடுப்பு முயற்சியின் காரணமாக இலங்கை அரசிற்கும் தமிழர் தாயக கோட்பாட்டு இயக்கத்திற்கும் இடையே சமாதானத்தினை நோக்கிய ஓர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
2002ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் வன்னியூடாக செல்லும் யாழ்ப்பாணம்- கண்டி ஏ-9 நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது.
அந்நியர் ஆட்சி தொடங்கிய காலம் வரை எந்த ஆட்சிக்கும் உட்படாமல் இப்பிரதேசம் அடங்காப் பற்றாக இருந்ததது. பின்னர் ஏனைய மாவட்டங்களைப் போன்று போக்குவரத்துடன் கூடிய பிரதேசமாக மாறியிருந்தது. போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்ட பின்னர் இதுவொரு பெருநிலப்பரப்பாக(அடங்காப் பற்றாக) இருந்தது. மேற்குறிப்பிட்ட ஒப்பந்தத்தின் பெறுபேறாக தொடர்புகள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் “வன்னி” என்ற வட்டத்துள் வந்தது.

Sunday, 28 October 2018

THE STORY OF SAGUNI ,IN MAHABARAT



THE STORY OF SAGUNI ,IN MAHABARAT




மகாபாரதக் கதை பற்றிய அறிமுகம் இருப்பவர்களுக்கு சகுனியைப் பற்றிதெரியாமல் இருக்காது. கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் நின்று விளையாடியவர் இந்த சகுனி தான். இன்னும் சொல்லப்போனால் மகாபாரதக்கதையே சகுனியால் வழிநடத்திச் செல்லப்பட்டது என்று சொல்லலாம். குருசேத்ரா போரின் மாஸ்டர் மைண்டான சகுனி காந்தார அரச குடும்பத்தின் இளவரசன். மகாபாரதத்தின் முக்கிய வில்லான பார்க்கப்படும் சகுனியின் சகோதரி தான் காந்தாரி அதாவது கௌரவர்களின் தாய். சகுனியைப் பற்றி இதுவரை நீங்கள் அறிந்திராத சில சுவாரஸ்யத் தகவல்கள்

#1 சகுனிக்கு கோபம் பாண்டவர்களை பழிவாங்க வேண்டும் என்பதல்ல பீஷ்மரை பழிவாங்க வேண்டும் என்பதே. அந்த பழி வாங்கும் எண்ணத்தை விதைத்து சுபலா மஹாராஜா. சகுனியின் தந்தை. திருதுராஸ்டிரருக்கு காந்தாரியை மணமுடித்து கொடுக்கும் போது தன்னுடைய மகளுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதை மறைத்து விடுகிறார் சுபலா மகாராஜா இந்த விவராம் பீஷ்மரால் கண்டுபிடிக்கப்படுகிறது அதனால் அவமானத்தை சந்திக்கும் சுபலா மஹாராஜா அவரை பழிவாங்க துடிக்கிறார்.

#2 செவ்வாய் தோஷம் இருப்பதால் திருமணத்தில் பிரச்சனை நிகழு, இணைக்கு மரணம் கூட நிகழலாம் என்று சொல்லப்படுகிறது. இதனால் செவ்வாய் தோஷத்தை கழிக்கும் விதமாக காந்தாரிக்கு ஒரு ஆட்டுடன் திருமணம் நடத்தி, அது பலியிடப்படுகிறது. சகுனியின் சகோதரியான காந்தாரிக்கு செவ்வாய் தோஷம் இருப்பதினாலேயே பார்வையற்ற இளவரசரை தனது சகோதரிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும், அதனால் சகுனி கோபம் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இரண்டாவதாக திருதுராஸ்டிரரை மணந்து கொள்கிறார். அப்படியானால் நான் ஒரு விதவையா திருமணம் செய்திருக்கிறேன். இந்த உண்மையை ஏன் மறைத்தீர்கள் என்று சொல்லி காந்தாரியின் குடும்பத்தினர் அத்தனை பேரையும் சிறையில் அடைத்தான் திருதுராஸ்டிரர்.
#3 சிறையில் அடைக்கப்பட்ட அத்தனை பேரும் பசியால் சாக வேண்டும் என்று சொல்லி, எல்லாருக்கும் ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி அரிசி மட்டுமே உணவாக வழங்கப்பட்டது. இதை மட்டுமே சாப்பிட்டு நம் அத்தனை பேரால் உயிர் வாழ முடியாது என்பதை உணர்ந்த மஹாராஜா தன்னுடைய இளைய மகனான சகுனியை அழைத்தார். எங்கள் அத்தனைப் பேரின் உணவையும் உனக்கே தருகிறோம். இங்கிருந்து நீ ஒருவனாவது தப்பிக்க வேண்டும். நம்மை அவமானப்படுத்தியவர்களை பழி வாங்க வேண்டும் என்கிறார்.

#4 மகனும் சம்மதிக்கிறார். ஒரு காலத்திலும் மகன் இதனை மறக்கக்கூடாது என்று சொல்லி, மகனின் காலை திருகி வச்சத்தை ஏற்படுத்துகிறார். மரணப்படுக்கையில் மஹாராஜா இருக்கும் போது மகள் காந்தாரி மற்றும் திருதுராஷ்டிரர் வந்து பார்க்கிறார்கள். எனக்காக என்னுடைய இளைய மகனான சகுனியை மட்டும் விடுதலை செய்து அவனை பார்த்துக் கொள்ள வேண்டும். அவன் உங்களது 100 குழந்தைகளுக்கும் பாதுகாவலனாக விளங்குவான் என்று சொல்லி இதை நிறைவேற்றும்படி சத்தியம் கேட்கிறார். மரணப்படுக்கையில் சொல்லப்பட்ட வார்த்தைகளை மீற முடியாமல் திருதுராஷ்டிரர் சம்மதிக்கிறார்.

#5 தந்தை இறந்த பிறகு அவரது எலும்பினைக் கொண்டு பகடையை தயாரித்து வைத்துக் கொள்கிறார் சகுனி. இது தந்தையின் ஆசைப்படியும், என் சொல்படியும் நடக்கும் வகையில் அந்த பகடை இருக்கிறது.அதனால் தான் இந்த பகடை மர்மம் நிறைந்தது என்று சொல்லப்படுகிறது.

#6 கௌரவர்களின் பாதுகாவலான விளங்குகிறார். கௌரவர்களின் மூத்தவரான துரியோதனனுக்கு மிகவும் நெருக்கமானவராக மாறி தன்னுடைய காயை மெல்ல நகர்த்துகிறார். பாண்டவர்களின் பக்கம் நிற்கும் பீஸ்மரை பழி வாங்க வேண்டும் என்றால் பாண்டவரை வம்பிழுக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி போருக்கு அழைப்பது, பகடை விளையாட அழைப்பது என்று தன் திட்டங்கள் ஒவ்வொன்றாய் நிறைவேற்றிக் கொண்டார்.

#7 தொடர்ந்து கௌரவர்களிடம் பாண்டவர்கள் மீதான வன்மைத்தை வளர்த்தார். அவர்களுக்கு தீங்கு செய்யும் வகையில் பல்வேறு விஷயங்களை தூண்டிவிட்டார். மஹாபாரதம் நடத்தப்பட்டதற்கான ஓர் திறவுகோளாக இவர் இருந்தார் என்றே சொல்லலாம்.

#8 திருதுராஷ்டிரருக்கு உளுக்கா மற்றும் விருக்சுறா ஆகிய இரண்டு மகன்கள் இருந்திருக்கிறார்கள். தங்களுடன் வந்து அமைதியான வாழ்க்கையை வாழுமாறு மகன்கள் எவ்வளவோ அழைத்தும் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றாமல் தான் வர மாட்டேன் என்று சொல்லி மகன்களுடன் செல்ல மறுத்து விடுகிறார்.

#9 மகாபாரதப்போரின் இறுதிநாளான பதினெட்டாம் நாள் பாண்டவர்களின் இளையவரான சகாதேவனால் படுகொலை செய்யப்பட்டு உயிரைத் துறக்கிறார் சகுனி. பீஷ்மர் முள்படுக்கையில் படுத்து உயிர் துறந்த பிறகு தன் தந்தையின் ஆசை நிறைவேற்றிவிட்ட மகிழ்ச்சியில் உயிரைத் துறந்தார் சகுனி.
#10 கேரளாவின் கொல்லம் மாநிலத்தில் உள்ள பவித்ரீஸ்வரம் என்ற இடத்தில் சகுனிக்காக கோவில் ஒன்று இருக்கிறது. சகுனியிடம் இருந்த நற்குணங்களை போற்றும் வகையில் இந்த கோவில் எழுப்பப்பட்டிருக்கிறதாம்


#11 குறவர் இனமக்களின் இஷ்ட தெய்வமாக சகுனி இருக்கிறது. இந்த இடத்தில் தான் சகுனிக்கு மோட்சம் கிடைத்தாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் நாடு முழுவதும் பயணித்ததாகவும், அப்படி பயணிக்கும் போது இந்த இடத்தில் தங்களுடைய ஆயுதுங்களை பகிர்ந்து கொண்டதால், இந்த இடத்திற்கு பகுதீஸ்வரம் என்ற பெயர் வந்திருக்கிறது காலப்போக்கில் இது பவித்தீஸ்வரம் என்று பெயர் பெற்றிருக்கிறது

#12 இந்த கோவிலில் எந்த விதமான பூஜைகளோ சடங்கு சம்பிரதாயங்களோ நடப்பதில்லை சகுனிக்கு இளநீர், வேட்டி,பட்டு போன்றவை காணிக்கையாக வைக்கப்படுகிறது. இன்றைக்கும் அந்த கோவிலை குறவர் இன மக்கள் தான் பராமரித்து வருகிறார்கள்