Showing posts with label movies. Show all posts
Showing posts with label movies. Show all posts

Thursday, 22 July 2021

S.N.TRIPATHI USED " JAIHIND " FIRST TIME IN INDIAN MOVIES BORN 1913 MARCH 14 -1988 MARCH 28

 


S.N.TRIPATHI  USED " JAIHIND " 

FIRST TIME IN INDIAN MOVIES 

BORN 1913 MARCH 14 -1988 MARCH 28



S. N. Tripathi also known as Shri Nath Tripathi (14 March 1913 – 28 March 1988) was an Indian composer, whose active years were from the 1930s to the 1980s.[1][2] Tripathi's multi-faceted work range included being a composer, writer, actor, and director of films. His debut film as an independent composer was Chandan (1942). He was the first composer to make use of the slogan "Jai Hind" (Victory to India) in a song in films, during the end of the British Raj. The song was "Jai Hind, Jai Hind, Jai Hind, Yeh Hind Ki Kahaniyan" from the film Mansarovar (1946).[3] He gained popularity as an actor when he started playing the role of Hanuman in mythological and religious films like Homi Wadia's Hanuman Pataal Vijay (1951).[4]

Tripathi turned to direction in 1957 starting with Rani Roopmati. Two of his films with Nirupa Roy and Bharat BhushanRani Roopmati (1959) and Kavi Kalidas (1959), are cited as having "cinematic merit" and "unforgettable music





Early life[edit]

S. N. Tripathi, was born in Varanasi, Uttar Pradesh. His father, Damodar Dutt Thakur, was a school principal.[2] After obtaining his BSc from Allahabad, Tripathi got his training in classical music from Pandit V. N. Bhatkhande's Morris College of Music in Lucknow.[5]

Career[edit]

As composer[edit]

In 1935, Tripathi arrived in Bombay and found work as a violinist assisting music director Saraswati Devi at Bombay Talkies. His first film as a composer was Chandan (1942).[1] He continued to compose for films like Janam Janam Ke Phere (1957), where the song "Zara Saamne Toh Aao Chhaliye" became the top Binaca Geetmala song.[6] Trained as a classicist, the popularity of his songs from Rani RoopmatiSangeet Samrat Tansen (1962) and other films has been attributed to Tripathi's mixing of Rajasthani folk with musical instruments like shehnai and mandolin, which never "offended sensibilities", yet had the "pulsating dance-like quality".[7] His "experimental compositions" like "Na Kisi Ki Ankh Ka Noor Hoon" and "Lagta Nahin Hai Dil Mera" from the film Lal Qila (1960) remain popular.[6] According to Raju Bharatan, Ustad Amir Khan derisory of film music composers, rated Naushad, S. N. Tripathi and Vasant Desai and to a lesser extent C. Ramchandra as notable composers.[8] He gave music for several mythological and fantasy films and was "tagged as a mythological composer".[2]




As actor[edit]

Interested in acting, Tripathi's first role was in the film Jeevan Naiya (1936). He acted in Uttara Abhimanyu (1946) and then played the role of Hanuman in the Homi Wadia directed Ram Bhakt Hanuman (1948) where he also composed the music, his first prominent role as an actor.[9] He was to continue playing the character of Hanuman in several films, including Homi Wadia's film, Hanuman Patal Vijay (1951).

As director[edit]

Besides acting and composing music, Tripathi began directing films in 1957. He first directorial venture was Rani Roopmati for which he also composed the music. In 1959, Tripathi directed Kavi Kalidas and Pakshiraj as well Ram Hanuman Yudh. He ventured into directing Bhojpuri films like Bidesiya (1963), which became a success at the box-office. He continued to direct films till 1976 when he directed Naag Champa, his last film as a director.[citation needed]

Death[edit]

Tripathi died on 28 March 1988 at the age of 75 years in Mumbai, Maharashtra.[10]

Filmography[edit]

As composer[edit]

  • Chandan (1941)
  • Sewa (1942)
  • Duniya Tumhari Hai (1942)
  • Chudiyan (1942)
  • Panghat (1943)
  • Shararat (1944)
  • Bachpan (1945)
  • Ramayani (1945)
  • Ji Haan (1945)
  • Adhar (1945)
  • Uttara Abhimanyu (1946)
  • Mansarovar (1946)
  • Shri Ram Bhakta Hanuman (1948)
  • Veer Ghatotkach (1949)
  • Saudamini (1950)
  • Shri Ganesh Mahima (1950)
  • Laxmi Narayan (1951)
  • Hanuman Patal Vijay (1951)
  • Aladdin Aur Jadui Chirag (1952)
  • Nav Durga (1953)
  • Tilottama (1954)
  • Durga Puja (1954)
  • Alibaba and 40 Thieves (1954)
  • Inaam (1955)
  • Ratna Manjari (1955)
  • Chirag-e-Cheen (1955)
  • Roop Kumari (1956)
  • Panna (1956)
  • Sati Naag Kanya (1956)
  • Raj Rani Meera (1956)
  • Hatim Tai (1956)
  • Delhi Durbar (1956)
  • Bajrang Bali (1956)
  • Rani Rupmati (1957)
  • Ram Hanuman Yuddha (1957)
  • Paristan (1957)
  • Khuda Ka Banda (1957)
  • Janam Janam Ke Phere (1957)
  • Bhakt Pralhad (1959)
  • Pakshiraj (1959)
  • Kavi Kalidas (1959)
  • Jagga Daku (1959)
  • Sinhal Dweep Ki Sundari (1960)
  • Lal Quila (1960)
  • Chandramukhi (1960)
  • Do Aadmi (1960)
  • Piya Milan Ki Aas (1961)
  • Ram Lila (1961)
  • Jai Chitod (1961)
  • Jadoo Nagri (1961)
  • Amrit Manthan (1961)
  • Shiv Parvati (1962)
  • Sher Khan (1962)
  • Sangeet Samrat Tansen (1962)
  • Naag Devata (1962)
  • Maya Jaal (1962)
  • Bijli Chamke Jamna Paar (1962)
  • Pareeksha (1963)
  • Dev Kanya (1963)
  • Zingaro (1963)
  • Cobra Girl (1963)
  • Bidesiya (1963)
  • Mahasati Anusuya (1964)
  • Shankar Khan (1966)
  • Lav-Kush (1967)
  • Nadir Shah (1968)
  • Lahu Pukarega (1968)
  • Har Har Gange (1968)
  • Shri Krishna Leela (1971)
  • Mahashivratri (1972)
  • Baal Mahabharat (1973)
  • Subhadra Haran (1974)
  • Shri Ram Hanuman Yudha (1975)
  • Naag Champa (1976)
  • Jai Ambe Maa (1977)
  • Jai Ganesh (1978)
  • Sati Savitri (1981)
  • Mahasati Tulsi (1985)
  • 108 Teerthyatra (1987)

Wednesday, 3 March 2021

SILENT MOVIES ACTRESS ARE MORE ZIEGFELD GIRLS

 

SILENT MOVIES ACTRESS ARE MORE 

ZIEGFELD GIRLS



What else do I love besides silent films? The Ziegfeld Follies. The costumes and shows and the girls and the talent...just amazing. I don't think it could be recreated today. I am sure it would have amazing visual effects nowadays, but back then...it was new and state of the art. It was also during a time of gayness, frivolity, and devil-may-care attitudes. I wish I was around for that! If I had been around during that time, I picture being a Ziegfeld Girl, then a silent film actress, and marry Buster Keaton. The end.


Anyways, I love the Ziegfeld Girls. I especially love the pictures taken by Follies photographer, Alfred Cheney Johnston. They are some of the most beautiful pictures I have ever seen.


I am profiling a few of my favorite girls here. Not all of them were silent film stars, but it was during the same time, so I am adding them. They were beautiful ladies and deserve to be remembered for their involvement in the most spectacular stage show of the century.












Adorable lil Ann Pennington! She packed a lot of energy in her 4'10'' body, and this is one of the reasons why I adore her. I saw a clip of her doing The Black Bottom and it was just amazing. She is also a sad example of how some of these stars ended up unknown and living in poverty later in life.




Ann Pennington was born on December 23, 1893 in Wilmington, Delaware.


She made her stage debut in 1911 and entered the Ziegfeld Follies in 1913. She quickly became a star in the Follies and moved out of just being in the chorus. Because she was so well known on the stage, she was able to appear in both the Follies and George White's Scandals.


Ann appeared in a total of 23 movies, 13 of which were silents. Sadly, most of these films are lost or her part in the film is missing or ended up on the cutting room floor. I also read that there isn't any film left of her doing her signature dance moves, but that is false. Like I stated earlier, I have seen a video clip of her doing The Black Bottom...and it wasn't that long ago.




Ann had a bright and shining personality on stage and often wore revealing costumes. But, offstage she could by shy. But, onstage or off, she loved to have fun.


She lived in both New York and California, depending on what she was working on at the time. In California, she was roommates with friend Fanny Brice.


Ann continued to tour on stage dancing until the 1940s when she retired. One of her last big public appearances was at the 1939 World's Fair.



Ann Pennington passed away on November 4, 1971 in New York City. She had been living alone and penniless for years.


She was buried in Valhallia Cemetery in New York. Her funeral and grave were paid for by the Actors Benevolent Guild. Apparently no one from her family attended her funeral (Ann had a sister named Nellie, but I don't know anything about her).


Ann never married but she did have a few beaus. The closest she ever came to marrying was when she was engaged to boxer Jack Dempsey. She was also rumored to have dated George White, but this was never confirmed because Ann never talked about her personal relationships.



George Gershwin played piano for her during Ziegfeld rehearsals, and also wrote several songs for her.


Her nicknames included "Tiny" and "Penny"





This is a video clip I found of Ann dancing her heart out!


https://www.youtube.com/watch?v=87gjzMzX6ng&feature=emb_logo




Monday, 21 September 2020

LOVE FAILURES IN MOVIES

 


LOVE FAILURES IN MOVIES



இந்தியத் திரையில் காதல் தோல்வியின் மிக அழுத்தமான பிம்பம் என்றால் அது 'தேவதாஸ்' தான். சரத் சந்திர சட்டோபாத்யாயா 1917-ல் எழுதிய இந்த வங்க நாவல் பல்வேறு இந்திய மொழிகளில் வெவ்வேறு காலக்கட்டங்களில் சினிமாவாக உருவாகியிருக்கிறது. தெலுங்கு வடிவத்தில் இந்தப் பாத்திரத்தில் நடித்த நாகேஸ்வரராவின் நடிப்பு அவருக்கு மிகுந்த புகழைத் தேடித்தந்தது.



இதைத் தவிர பொதுவாக, துன்பவியலின் நாயகன் என்கிற பிம்பத்தை இந்தி சினிமாவில் குருதத் அழுத்தமாகக் கொண்டிருந்தார்.




காதல் தோல்வி சார்ந்த திரைப்படங்களை இயக்குநர் ஸ்ரீதர் தமிழில் பெருமளவு உருவாக்கினார். இங்கே ஜெமினிகணேசன் அந்த பிம்பத்தைக் கொண்டிருந்தார்.

இந்த காதல் தோல்வி நாயகனின் வரிசையில் செம்மீனின் 'பரீக்குட்டி' இன்னொரு அழுத்தமான பிம்பம். நடிகர் மது இந்தப் பாத்திரத்தை திறம்பட கையாண்டிருந்தார்.

Saturday, 11 April 2020

ANGAADI THERU MOVIES AND MIDDLE EAST `S SLAVERY




ANGAADI THERU MOVIES AND
 MIDDLE EAST `S SLAVERY



அங்காடித்தெரு’ அவலமும் ,முஸ்லீம் நாடுகளின் செருக்கும்
அங்காடித்தெரு வெளியான பின்னர் எனக்கு வந்த மின்னஞ்சல்களில் கணிசமானவை வளைகுடா நாடுகளில் வேலைசெய்யும் தமிழர்களால் அனுப்பப்பட்டவை. ஒன்றைக்கூட வெளியிட அவர்கள் விரும்பவில்லை. பாதிரியைப்போல நின்று அவற்றை நான் கேட்கவேண்டும் என்று மட்டும் விரும்பினார்கள் என்று பட்டது. அங்காடித்தெரு காட்டும் சுரண்டல் உலகம் வளைகுடாவில் வேலைசெய்யும் அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லபப்ட்டிருந்தது.
கடுமையான தண்டனைகள், கீழ்த்தரமான பாலியல் சுரண்டல் [ ஓரினச்சேர்க்கையாளர்கள் அந்த அளவுக்கு மிகுந்த சமூகம் பிறிதில்லை என்று ஒருவர் எழுதியிருந்தார். அவர் சொன்னத அனுபவங்களே முதுகெலும்பை சில்லிட செய்பவை] ஊதியவெட்டுக்கள் இவற்றுடன் அவ்வப்போது வேலையில்லாமல் அரைப்பட்டினியாக கூரை இல்லாமல் கொடும்வெயிலில் அலைய நேரிடும் துயரங்கள் என அந்த அனுபவங்களைக் கேட்க ரத்தம் கொதித்தது. ஒரு இஸ்லாமிய வாசகரின் கடிதத்தை ஏதாவது இஸ்லாமிய இதழுக்கு அனுப்புங்கள் என்று பதில் எழுதினேன். அவர் மீண்டும் எழுதவில்லை.
இந்த விஷயத்தைப்பற்றி எவர் எழுதினாலும் அவரை இந்துத்துவர் என்று சொல்ல ஒரு பெரும் கும்பலே காத்திருக்கிறது. சீனாவிலோ வளைகுடாவிலோ நிகழும் வன்முறைகள், சுரண்டல்கள் எல்லாம் புனித வன்முறைகள் புனிதச் சுரண்டல்கள் என்று நம்புவதே முற்போக்கு. சராசரி அராபியனின் மனநிலையாக வெளியாகும் இனவெறியும் மதவெறியும் இன்றைய நவீன உலகின் ஆகப்பெரிய அபாயங்கள் என்று சொல்பவன் ஏகாதிபத்திய முத்திரையுடன் மிஞ்சிய வாழ்நாளை கழிக்க நேரும்
சீனா பற்றிய கட்டுரைக்கு எதிர்வினையாக ஒரு வாசகர் காலச்சுவடு இதழில் அதன் ஆசிரியர் எழுதிய இக்கட்டுரையை அனுப்பியிருந்தார். கண்ணன் கூர்மையாகவும் துணிச்சலாகவும் சொல்லியிருக்கிறார்.
என் நண்பர்கள் கூறி கேட்டு இருக்கிறேன்- வளைகுடா நாடு சென்ற வுடன் நம் பாஸ்போர்ட்டை (கடவு சீட்டை) முதலாளிகள் வசம் கொடுக்க வேண்டுமாம். (இப்போது exit பெர்மிட் என்ற நவீன முறை ஏமாற்றம் போல).
எனவே தொழிலார்களின் பிடி முதலாளி வசம். ஊழியர் மீறி போய் எங்கும் புகார் கொடுக்க சென்றால், நிறுவன பணிகளை சரி வர முடிக்க வில்லை, பணம் ஏமாற்றினான் என்று முதலாளி சார்பில் வாதாட ஆயிரம் காரணங்கள் உண்டு.
இதி இருந்து மீது வர என்னதான் தீர்வு.
வறுமை காரணமாக , வெளிநாட்டு வேலை மோகம் மக்களிடம். அடுத்த நாடு ஊழியர்களை வைத்து வேலை வாங்கும் பொது அந்த நாட்டு முதலாளிகளுக்கும் ஒரு கடிவாளம் தேவை படுகிறது. இதற்கு என்ன தான் தீர்வு.
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு
தங்களின் தளத்தில் அங்காடித்தெரு படத்திற்கு பிறகு உங்களுக்கு வந்த மடல்கள் பற்றி எழுதியிருந்தீர்கள். வளைகுடா நாட்டின் தொழிலாளர் சமூகம் பற்றிய பல கருத்துகள் வந்ததாக சொல்லியுள்ளீர்கள்.
வந்திருக்கும், அதை இல்லை என மறுக்கும் அயோக்கிய மன நிலை எனக்கில்லை. உழைப்பு சுரண்டல் மிகுந்த நாடுகளில் வளைகுடா நாடுகளும் ஒன்று. இது உண்மை… அப்பட்டமான உண்மை.
ஆனால், அந்த சுரண்டலுக்கான காரணகர்த்தாக்களை, மூலவர்களை அடையாளப்படுத்துவதில் சில சிக்கல் உள்ளதை.. உங்களைப்போன்ற எழுத்தாளர்கள் முன்வைக்கும் கருத்தில் அறியமுடிகிறது.
வளைகுடா வாழ்வின் சில அனுபவ பதிவாக என் சமீபத்திய கவிதை (கவிதை நூல் என உங்களைப்போறவர்கள் ஏற்கமாட்டீர்கள்) நூலில் சிலவற்றை சொல்லியுள்ளேன் அவை சொற்பமே. கலைஞர் தொலைக்காட்சியின் சந்தித்தவேளையிலும் பதிவு செய்துள்ளேன், ஆனால் நான் முன்வைக்கும் காரணிகள் வேறு.

அந்த உழைப்பு சுரண்டல்கள் அனைத்தும் முதலாளித்துவ அடிப்படையில் நிகழ்பவை, அவற்றுக்கு துணைப்போகும் இந்திய அல்லது தமிழக தரகுமுதலாளிகளும், இடைத்தரகர்களும் மிக முக்கியமானவர்கள்… இதனையும் ஆய்ந்து கருத்தை வெளிப்படுத்தும் கடமை உங்களுக்கு உண்டு என்பதை மறந்து, தட்டையாக அரபு இசுலாமியர் என்ற எல்லையில் மட்டும் உழைப்புச்சுரண்டல்காரர்களை அடையாளப்படுத்தியுள்ளீர்கள்.
சில.. அல்லது பல அராபியனின் மனநிலையை சராசரியாக அனைவரின் மனநிலையாக வெளிப்படுத்தும் உங்கள் எழுத்து வண்மம் அராபியனுக்கு அப்பால் உள்ள உழைப்பு சுரண்டல் பேர்வழிகளை தப்பிக்கச்செய்ய வழிவகுக்கும் என்பதை உணராதவராகவே உள்ளீர்.
இந்த என் மடலின் நோக்கம் அரபு முதலாளிகள் நல்லவர்கள் என நிறுவுவது அல்ல, தட்டையாக அவர்களை மட்டும் அடையாளம் காட்டுவதால் முழுமையான சுரண்டலை, தொழிலாளர் அவதியை தீர்த்துவிட இயலாது.
இது குறித்து விரிவாக பல செய்திகளை பேசவேண்டும்.. ஆனால் நேரம் சூழல் என்னை இப்போது அனுமதிக்கவில்லை. பிறகொரு சூழலில் விரிவாக பேசலாம்.
இது குறித்த நேர்மையான கருத்தை தெளிவான ஆய்வோடு எழுதுங்கள்..
உண்மையான எழுத்தை எதிர்பார்க்கிறேன்
அன்புடன்
இசாக்
அன்புள்ள நண்பருக்கு,
உங்கள் கடிதம் வழக்கம்போல அவசரமான, தவறான புரிதலில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது. அரபுலகில் மட்டுமே சுரண்டலும் ஒடுக்குமுறையும் உள்ளது என்றோ, அதற்கு இஸ்லாம் காரணம் என்றோ நான் சொல்லவில்லை. பதறவேண்டாம்.
ஒடுக்குமுறையும் சுரண்டலும் வரலாற்றின் எல்லா காலத்திலும் உண்டு. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில்தான் அது உச்சத்தை அடைந்தது. முதலாளித்துவ காலகட்டத்தில் அந்தச் சுரண்டலுக்கு எதிரான அமைப்புகள் உருவாகி வந்தன. அவ்வமைப்புகள் உருவாக்கிய விழுமியங்களும் உருவாகின.
நிலப்பிரபுத்துவ அமைப்பு தடையில்லாத ஆண்டான்-அடிமை மனநிலையை அடிப்படையாகக் கோண்டிருக்கும். அதற்கான விழுமியங்களை உருவாக்கிக்கொண்டிருக்கும். ஆனால் முதலாளித்துவ அமைப்பில் சுரண்டல் இருக்கும், கூடவே அதற்கு எதிர்விசையாகச் செயல்படும் அமைப்புகளும் இருக்கும். தொழிற்சங்கங்கள், ஜனநாயக அரசின் கட்டுப்பாடுகள், ஊடகங்கள், நீதிமன்றங்கள் முதலியவை.
ஆகவேதான் முதலாளித்துவ அமைப்பில் ஒரு சுரண்டல் அல்லது அநீது வெளிப்படுத்தப்பட்டாலே போதும் அது முன்னர்போல தொடர முடியாது என்பது இன்றுவரை உண்மையாக உள்ளது. ஏனென்றால் முதலாளித்துவம் பெருமளவுக்கு ஜனநாயகத்தால் கட்டுப்படுத்தபப்டுவது. ஜனங்களின் ஒப்புதல் இல்லாத ஒன்று அங்கே நிகழ முடியாது. சுரண்டல் கூட!
முதலாளித்துவத்தில் அநீதியும் சுரண்டலும் கண்டிப்பாக உண்டு. ஆனால் அது நிலப்பிரபுத்துவத்தில் இருந்து பலமடங்கு வளர்ந்து மேலெ வந்த ஓர் அமைப்பு. அதில் இருந்து இன்னும் மேலே செல்லலாம், அதுதான் இந்த காலகட்டத்தின் தேடல். ஆனால் முதலாளித்துவத்தின் குறைகளை முன்வைத்து நிலப்பிரபுத்துவத்தை நியாயப்படுத்துவது பிழை. நீங்கள் செய்ய முயல்வது அதை. இஸ்லாமியர் பெரும்பாலும் வாதிடுவதும் அதற்காகவே.
அரபு நாடுகளில் உள்ளது முதலாளித்துவம் அல்ல. கெட்டிதட்டிப்போன நிலப்பிரபுத்துவம் மட்டுமே. இன்றும் அங்கே ஊழியர்களை அடிமைகள் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்கள். அவ்வண்ணம் நடத்துகிறார்கள்.முதலாளித்துவம் அளித்துள்ள ஜனநாயக உரிமையையும், சங்க உரிமையையும் பிற எந்த எந்த வசதியையும் அளிக்காத மூடுண்ட நிலப்பிரபுத்துவ சமூகமாக அரபுலகம் உள்ளது என்பதுதான் உண்மை. அந்த நிலப்பிரபுத்துவ மனநிலையுடன் அராபிய இனவெறி இணைந்துகொள்கிறது. அந்த மன இருளின் விளைவுகளையே நம் மக்கள் அங்கே அனுபவிக்கிறார்கள்.
அராபிய இனவெறிக்கு இந்து இஸ்லாம் என்ற பேதமெல்லாம் கிடையாது. ஆப்ரிக்க நாடுகளில் அராபிய இன வெறியர்களால் கொன்றுகுவிக்கப்பட்ட கறுப்பின மக்கள் இஸ்லாமியர் தானே? உலகமெங்கும் கறுப்பு முஸ்லீம்கள் பட்டினியால் லட்சக்கணக்கில் சாக்கும்போது அராபிய இஸ்லாமியரின் பெட்ரோலியப் பணம் அங்கே உதவிக்குச் செல்லவில்லை என்பதுதானே வரலாற்று உண்மை?. கிறித்தவ மனிதாபிமானத்தின் பணம் தானே சென்றது.
அராபியப்பணம் அராபிய இனவெறியின் விளைவான ஓர் உலக இஸ்லாமிய அரசுக்காக ஆயுதங்கள் வாங்கவும் மதவெறியை பரப்பவும் மட்டுமே செலவிடப்படுகிறது. ஆதிக்க முகம் சுரண்டல் முகம் அன்றி வேறு எந்த முகமும் அதற்கில்லை. இன்றைய நவ உலகின் முதன்மையான அச்சுறுத்தல்கள் மேலைநாடுகளில் குவியும் பெருமூலதனத்தின் அதிகாரமும், சீனாவின் ஏகாதிபத்திய நோக்கும், அராபிய இனவெறியும்தான் என நான் நம்புகிறேன்.
அரபு நாடுகளில் உள்ள அராபிய இனவெறியையும் இஸ்லாமையும் நான் ஒன்றாகப் பார்க்கவில்லை. மாறாக எப்போதும் பிரித்தே பார்க்கிறேன். இஸ்லாம் என்ற நெறியை அராபிய இனவெறி தன் முகமூடியாக போட்டிருக்கிறது என்றே நான் நம்புகிறேன். ஆனால் அந்த வேறுபாட்டை நீங்கள், பெரும்பாலான இஸ்லாமியர், செய்வதில்லை என்பதே என் மனக்குறை. அப்படி ஒரு பிரிவினையை செய்பவர்களையே நீங்கள் இந்துத்துவர் என்றும் இஸ்லாமிய விரோதி என்றும் வன்மத்துடன் எழுதுவதாகவும்சொல்ல ஆரம்பித்துவிடுகிறீர்கள். இக்கடிதத்திலும் அதற்காகவே முயல்கிறீர்கள்.
அராபிய நாடுகளில் சுரண்டலும் அடிமைத்தனமும் உள்ளது என்பதல்ல பிரச்சினை. அவை வேறு இடங்களிலும் உள்ளனவே என்ற பதில் மூலம் எதிர்கொள்ள வேண்டிய கேள்வியும் அல்ல அது. மதவெறி மூலம் அந்த இனவெறியும் ஆதிக்கவெறியும் நியாயப்படுத்தப்படுவதைப்பற்றியே நான் சொல்லியிருக்கிறேன்.
வளைகுடா நாடுகளை நோக்கி நம் மக்களை அடிமைகளாக தள்ளிவிடும் கிராமப்புற வறுமை, அதை பயன்படுத்திக் கொள்ளும் இடைத்தரகர்கள் அவர்களை சுரண்டும் அரசியல்வாதிகள் எதையும் நான் மறுக்கவில்லை. அவற்றை கண்டிக்க தயங்கவும் இல்லை. என்னுடைய கேள்வியின் மையம் வேறு. இத்தனை மோசமான இன வெறி, மதவெறியை ஒரு இலட்சிய சமூகமாக எப்படி சித்தரிக்க முடிகிறது, அதற்கு எப்படி நம் முற்போக்காளர் துணைபோகிறார்கள், அந்த மனநிலை என்ன — அவ்வளவுதான்.
ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் சுரண்டலை ஒருவர் தான் கிறித்தவர் என்பதற்காக நியாயப்படுத்தினாரென்றால், ஓர் அண்ணாச்சி குத்துவிளக்கு ஏற்றி வைத்து முருகனைக் கும்பிடுவதனால் அவரது சுரண்டலை ஓர் இந்து நியாயப்படுத்தினாரென்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? அந்த நியாயத்தை அந்தரங்கமான ஒரு கணத்தில் உங்களுக்குள் பேசிக்கொள்ளும்போதாவது நீங்களும் உணருங்கள். அவ்வளவுதான்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்
நேற்றி இரவுக்காட்சியாக ‘அங்காடித்தெரு’ பார்த்தேன். சமீபகாலத்தில்லே நான் பார்த்த மிகச்சிறப்பான சினிமா இது. நேத்து இரவு முழுக்க என்னால் தூங்கவே முடியவில்லை. என்னை இந்த அளவுக்கு மனதை உருக்கிய ஒரு சினிமா இப்போது நினைவுக்கே வரவில்லை. மன்னிதர்கள் வாழ்க்கைக்காக உசிரைக்கொடுத்து போராடுவதை பார்க்கும்போது மனம் அப்படியே உருகி போகிறது. வசந்தபாலன் காலைத்தொட்டு கும்பிடவேண்டும் என்று நினைத்தேன். எல்லாரும்தான் சினிமா எடுக்கிறார்கள். பணம்பண்ண வேண்டும் புகழ்பெற வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். ஒரு மனிதகதையை சொல்லவேண்டும் மனிதர்களின் துக்கத்தை சொல்லவேண்டும் என்று யாருக்கு தோன்றுகிறது. எப்பேர்ப்பட்ட படம். நிபுணர்கள் குறைகளை எல்லாம் சொல்வார்கள். உலகசினிமாவுடன் ஒப்பிட்டால் சில குறைகளை சொல்லவும் முடியும் என்று படுகிறது. ஆனால் நம்முடைய கண்ணுக்கு முன்னால் உள்ள வாழ்க்கையினை நம்மிலே ஒருத்தர் தானே சொல்ல முடிகிறது. அதுதானே நமக்கு முக்கியம்? படத்தைப் பார்த்துவிட்டு கனத்த மனசுடன் வெளியே வந்தேன்..
ரொம்ப நல்ல படம் என்பதற்கு மேலாக என்ன சொல்ல? சினிமா அப்படித்தான். அது மனசுக்குள்தான் நேரடியாக செல்லுகிறது. மூளை எல்லாம் அப்புறம்தான். படத்திற்கு வசந்தபாலனுடன் சேர்ந்தே நீங்கள் வந்துகொண்டிருக்கிறீர்கள். ஒரு எழுத்தாளனை எப்படி சினிமாவிலே பயன்படுத்துவது என்று வசந்தபாலன் காட்டியிருக்கிறார். எங்களுக்கு தெரிந்த ஜெயமோகனை இந்தப்படத்திலேதான் பார்க்கிறோம்.
யானை வாழும் காட்டிலேதான் எறும்பும் வாழுது
பெண்நாய் ஆண்நாய்க்கு போக்கு காட்டுவது மாதிரி அவனை பின்னாலே சுத்த விடுறே
இந்த ஒரு ஆண்பிள்ளைக்கிட்ட மட்டுமாவது மானரோசத்துடன் இருந்துக்கிறேனே
விக்கத்தெரிஞ்சவன் வாழத்தெரிஞ்ச்வன்
மனுஷன நம்பி கடவிரிச்சேன். குறையொன்றுமில்லை
இனிமே இது குள்ளனுக்கு பொறக்கலைண்ணு யாரும் சொல்ல மாட்டாங்கள்ல?
நாயி குட்டிகளை கொண்டாந்து போடுற மாதிரி கொண்டு போயி போட்டுட்டு போறவன் நான். நாயி சென்மம் தம்பி
போன்ற நுட்பமான வசனங்கள் நீங்கள் எழுதியவை என்று காட்டுகின்றன. ஆனால் சாதாரணமான வசனங்களை துணிந்து போட்டிருக்கும் இடத்திலும் நீங்கள் தெரிகிறீர்கள்.
”இங்க யாருன்னு தங்கச்சி கேட்டுட்டே இருந்தா
நீ என்ன சொன்னே
சிரிச்சேன்”
அதேபோல நக்கல் கிண்டல்களிலும் நீங்கள் தெரிந்துகொண்டே இருக்கிறீர்கள்
”ஏலே நில்லுலே ராகு காலத்திலே பொறந்தவனே
நீருல்லாவே நேரம் பாத்திருக்கணும்?”
இந்த வசனம் போல எத்தனையோ வசனங்களை நாங்கள் உங்கள் கட்டுரைகளிலே வாசித்திருக்கிறோம்.
கவிஞர் முகத்தை பாத்தியா, அடுத்து பத்தாம் கிளாச் கடவுள் வாழ்த்தை எழுதி வச்சிருக்க போறாரு
என்ற வசனம். அதே மாதிரி அந்த கிழவி.
”ஏலே சிங்கப்பூர்ருக்கா போறா இங்கதானே” என்று கேட்கும் குசும்புக்கிழவியும் நமக்கு தெரிந்தவர்தான்
அற்புதமான படம் ஜெயமோகன். சினிமாவில் நீங்கள் இதுவரை செய்த எல்லா வேலைகலும் ஒன்றுக்கொன்று மேலே சென்று கொண்டுதான் இருக்கிறது.
இயக்குநர் நுட்பங்களை வாரி இறைத்துக்கொன்டே போகிறார்
1 முஸ்லீம் பெண் பர்தாவுக்கு மேலே பட்டுப்புடவையை வைத்து பார்ப்பது
2 வாயிலே இருந்து நிப்பிளை எடுத்ததுமே வையும் குழந்தை
3 மொட்டைகளை பார்த்ததும் ஏடுகொண்டலவாடா சரி என்று மாரி கத்துவது
4 அண்ணன் வேலைசெய்யும் கடையின் பையை தங்கச்சி அப்பா படத்துக்கு சமமாக மாட்டுவது
5 அண்ணாச்சியின் செல்போனில் உள்ள ரிங் டோன்
6 அதேசமயம் சோபியா வைத்திருக்கும் ரிங்டோன்
7 அண்ணாச்சி செய்யும் பூசை அவரை வாழ்த்த வந்திருக்கும் சாமியார்
8 சோற்றுக்கான அத்தனை அடிதடிகளுக்கு நடுவிலேயும் நம்மூராலே என்று கேட்டதும் சௌந்தர பாண்டி முகம் மலர்வது
9 கக்கூஸ் கழுவியே முன்னேற ஆரம்பிக்கும் அந்த ஆசாமி
10 மாமூல் போலீஸ் , குப்பை பொறுக்கும் பாய், குள்ளன், சின்னம்மா, தெருவிலே காலையிலே குவியும் குப்பை. அந்தக்குப்பைக்குள் தூங்கும் மனுஷர்கள்
11 கர்கள் ஓடும் சாலையின் விளிம்புவரை வரும் கைக்குழந்தை. அதை அறியாமல் உறங்கும் அம்மா
12 தங்கச்சிக்காரியின் எஜமானியம்மாவின் கதாபாத்திரம்.
என்று சொல்லிக்கொன்டே போகலாம்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்
அன்புள்ள ஜெ
அங்காடித்தெரு படம் பார்த்தேன். மனசை பிழிந்துவிட்டது. நான் கடவுளை மாதிரியே இதுவும் சொல்லப்படாத வாழ்க்கைஅயிச் சொல்கிறது. ஆனால் இது இன்னமும் நமக்கு தெரிந்த யதார்த்தமாக இருக்கிறது. இந்த ஒரு படத்தில் இயக்குநர் எங்கேயோ போய்விட்டார். இதுமாதிரி படத்தில் அத்தனை விஷயங்கலும் கவனமாகப் பார்த்துச்செய்யப்பட்ட ஒரு படம் மிகவும் குறைவாகவே வருகிறது ஜெயமோகன். நான் நேற்று பகல்காட்சியும் இரண்டாவது ஆட்டமும் தொடர்ந்து பார்த்தேன். இரண்டாம் முறை எங்காவது கவனக்குறைவு தெரிகிறதா என்று பார்த்தேன். நான் சினிமாவிலே உதவி இயக்குநராக இருக்கிறேன். இந்தப்படம் எங்களுக்கெல்லாம் ஒரு பாட புஸ்தகம் மாதிரி.
சினிமா என்றாலே காஸ்டிங் தான் என்பதற்கு காதல், அங்காடித்தெரு இரண்டும்தான் சரியான உதாரணம். எல்லாமே அசல் உடங்குடி பணகுடி முகங்கள். நானும் இந்தப்பகுதிதான். கோட்டையூர். ஒரு முகம்கூட சோடை போகவில்லை. செல்வராணி முகம் சரியான நெல்லை முகம். சௌந்தர பாண்டி முகமும் அப்படித்தான். எல்லாரையுமே பார்த்துப் போட்டிருக்கிறார். மாரிமுத்துவின் அப்பா, லிங்குவின் குடும்ப முகங்கள் எல்லாமே மிகவும் சரியாக இருக்கின்றன. ஆளெடுக்கும் நெல்லை முகங்கள் கூட சரியாக இருக்கின்றன. வேலைக்கு வருபவர்கள் வேரு ஆளெடுப்பவர்கள் வேறு ஏரியா என்று தெரிகிறது
அதேபோல நடிப்பு. புதுமுகங்களை இந்த அளவுக்கு சரியாக வேலை வாங்கிய படம் மிகவும் அபூர்வம். எழுதப்படிக்க தெரியாது என்று ஒரு பையன் சொல்லும் இடத்திலே எக்ஸ்பிரஷன் எல்லாம் எத்தனை கச்சிதமாக இருக்கின்றன. அந்த மாமி அப்படியே ஒரு பணக்காரவீட்டு அல்பம் என்பதை சும்மா வந்தாலே தெரிகிறது. காஸ்டிங் சரியாக இருந்து நடிப்பையும் வாங்கிவிட்டால் பாதிப்படம் முடிந்துவிட்டது என்று தெரிகிறது.
‘அங்காடித் தெரு’ அப்படி இல்லை. தெருவணிகப் பிழைப்பில் வருகிற சின்னச்சின்னக் கேரக்டர்கள்தாம் படத்தின் செறிவும் சுவாரஸ்யமும். வணிக வாய்ப்புக்கு மோப்பம் உள்ளவன் அத் தெருவில் தோற்பதற்கு வாய்ப்பில்லை என்பதற்கு அந்தக் கட்டணக் கழிப்பறை நாயகன் காட்டு! அவன் கையில் ஒரு ரூபாய் வரும்படி வந்த அக்கணமே, கதை மோப்பம் பிடிக்கத் தெரிந்த என்னைப் போன்ற நாய்மூளைகளுக்குக் கதைமுடிவின் அறிச்சி தட்டிவிடும் என்றாலும் தமிழ்ப்பட இயக்குநர்களை நம்பமுடியுமா சாமி என்று வேண்டுதலோடுதான் மீதிப் படம் பார்த்தேன்.
தங்கச்சிப் பாப்பா வயசுக்கு வருகிறது; நாயகியை நள்ளிரவில் ஆட்டோக் காரர்கள் வளைக்கிறார்கள்; தங்கச்சி அஸாமுக்கு அனுப்பிவைக்கப் படுகிறாள்; சாலை விபத்து என்று காட்டப் பட்டாலும் அது, நாயகன் நாயகி ப்ளாட்பாரத்தில் கைகோர்த்து நிற்பதை (வில்லனாகப்பட்ட) சூப்பர்வைசர் பார்த்ததற்கு அப்புறமாய் நிகழ்கிறது – தமிழ்ப்படம் பார்த்துப் பார்த்து ஐம்பதுக்கு மேல் வளர்ந்துகெட்ட ஓர் ஆளுக்கு டென்சன் வருமா வராதா? ‘நன்றி ஆண்டவரே’ என்று கடவுளையும் இயக்குநரையும் தொழுதுவிட்டுத்தான் தியேட்டரை விட்டேன்.
குறை என்று ஒன்றாவது சொல்ல வேண்டுமோ? ‘தீட்டு’ என்கிற கான்செப்ட் பாராட்டும் பிராமணாள் ஆத்துக் கிழவிக்கு மாற்றாக, இந்து வழிபாட்டில் இடம் உண்டு என்று காண்பிக்கிற கோவிற் காட்சியில், அந்த அம்மா முகம் – அந்தப் பூசாரி நிறம் – ‘casting’ பொருத்தமில்லை.
வசந்தபாலன் போலவே நல்ல நல்ல இயக்குநர்கள் உங்களுக்கும் ஏனை எழுத்தாளர்களுக்கும் வாய்க்கவேண்டும்; தமிழ்த் திரையுலகம் சிறக்கவேண்டும் என்பது என் ஆசை.
– ராஜசுந்தரராஜன்
அன்புள்ள ராஜ சுந்தரராஜன்
உங்களுக்கு படம் பிடித்திருந்தது அறிந்து மிகுந்த மனநிறைவு. பாராட்டுகளிலேயே சில பாராட்டுகளுக்கு அடிவரி உண்டல்லவா? அங்காடித்தெரு பரவலாக அனைவருக்கும் பிடித்திருக்கிறதென்பது செய்திகளாக வந்துகொண்டே இருக்கிறது. உண்மையான உணர்ச்சிகளை அழுத்தமாகவே காட்டலாம் ,எந்த அளவுக்கு நுட்பமாகச் சொன்னாலும் போய்ச்சேரும் என்பதற்கான உதாரணம் அது. நல்ல இயக்குநர்கள் நல்ல வாய்ப்புகள் அமையவேண்டுமென நானும் விரும்புகிறேன். கவி சொல் பலிக்கட்டும்.[[அது உண்மையான கோயில் உண்மையான பூசாரி ]
உங்கள் பாராட்டும் வாழ்த்தும் வசந்தபாலனுக்கும் பெரிய பரிசு . பெரிய பொறுப்பும் கூட
அன்புடன்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்…
அங்காடித் தெரு, “உரையாடல் ஜெயமோகன்” என்கிற ஒரு காரணத்தால் முதல் நாளிலேயே பார்த்துவிட்டேன். படம் பற்றி நிறைய சொல்ல நினைத்தாலும், அதுவே ஒரு தனிக் கட்டுரையாகி விடும் என்பதால், கொஞ்சமாய் சுருக்கி, நான் அடைந்த சுகத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
எத்துனை முறை ரெங்கநாதன் தெருவில் சுற்றி அலைந்திருந்தாலும், சத்தியமாய் அங்கே விற்பனை பிரிவில் இருக்கும் இவர்களைப் பற்றி யாருமே சிந்தித்திருக்க வாய்ப்பில்லை. வசந்தபாலனுக்கு முதல் சபாஷ். ஆனால் அவர் மட்டுமே இந்தக் கதையை சிந்திருத்திருந்தால் இதன் அழுத்தம் வேறு மாதிரியாகத்தான் இருந்திருக்கும். உரையாடல் மட்டுமே நீங்கள் செய்திருக்க வாய்ப்பில்லை. பலக் காட்சிகளை பார்க்கும்போது அதில் உங்கள் எழுத்தின் வீரியத்தை தான் என்னால் உணர முடிந்தது. இருந்தாலும் படம் நெடுக வசனகர்த்தாவாகிய நான் தெரிய வேண்டும் என்று பாடுபடாமல் கதைக்கேற்றவாறு உரையாடலை மாற்றி கதையோடு ஒன்றிப் போயிருக்கும் உங்களை எப்படிப் பாராட்ட…?
அந்தக் குள்ள மனிதனுக்கு குழந்தை பிறந்ததும் அவன் மனைவி பேசும் வசனங்கள்.. ஜெயமோகன் டச். கனி எனும் கதாபாத்திரம் துடுக்காக பேசும்போது வளைந்து நெளிந்து செல்லும் உரையாடல், அறை சூப்பர்வைசர் என்ன செய்தார் என்பதை விளக்கும்போது நெஞ்சில் தைக்கிறது.
இப்படியே இன்னும் நான் எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் அது இந்தப் படைப்பிற்கு தேவையில்லை. உரையாடல் என்றால் இனி ஜெயமோகன் தான் என்று ஆழப்பதிந்து விட்டீர்கள். வாழ்த்துகள் சொல்லமாட்டேன். வணங்குகிறேன்.
படம் பார்த்த இரவு என் நெஞ்சத்தை கணக்க செய்து விட்டது. படத்தை பார்க்கும்போது எனக்குள் நான் செய்துக் கொண்ட சத்தியம் இனி இதுப் போன்ற பெரியக் கடைகளில் பொருட்கள் வாங்குவதில்லை.
குறிப்பு: இருந்தாலும் ஆரம்பக் காட்சிகள் மட்டும் கொஞ்சம் யதார்த்தத்தை மீறியதாக இருந்தது. உதாரணமாக அவர்கள் உண்ணும் அறை, மற்றும் முறை.)–
மோ. அருண்
அன்புள்ள ஜெயமோகன்…
அங்காடி தெரு மிகச்சிறப்பான படம். அதன் கதையோட்டத்திலே வரக்கூடிய நுட்பங்களை ஏற்கனவே கடிதங்களிலே பலர் எழுதிவிட்டார்கள். ஒரு நண்பர் பத்து தொழிற்சங்கங்கள் செய்யாத வேலையை செய்த படம் என்று சொன்னார். உண்மைதான். மனசு கனத்துவிட்டது. படம் முடிந்தபின்னாலே எதையுமே பேசாமல் தனிமையிலே நடந்து வருகிறோம். அதுதான் இதன் வெற்றி சார். வசந்தபாலனை தமிழில் இப்போது இருக்கக்கூடிய இயக்குநர்களிலே முதலிடத்துக்குக் கொண்டு போய்விட்டது இந்தப் படம். இதுவரையிலான மிகச்சிறந்த தமிழ் சினிமா இயக்குநர்களின் வரிசையிலேயே முக்கியமான ஒரு இடத்துக்குக் கொண்டுசென்று விட்டது. அவருக்கு வணக்கம் தெரிவிக்கிறேன்.
படத்திலே உள்ள மூன்று முக்கியமான விஷயங்கள். லிங்குவும் கனியும் கேரக்டர் வளர்ச்சி அடைவது முதலிலே சொல்ல வேண்டிய விசயம். லிங்கு கனியை கருங்காலி அவமானப்படுத்தியசெய்தி கேட்கும்போது வருத்தம்தான் படுகிறான். ஆனால் கனி மீது காதல் வந்தபிறகு அந்த செய்தியைக் கேட்டதும் மிருகமாகவே மாறிவிடுகிறான். அதேமாதிரி கனி லிங்குவை காதலிக்கும் முன்னாடி கருங்காலி செய்வதற்கு சம்மதிக்கிறாள். பிறகு முடியலை என்று சொல்லி கதறி அழுகிறாள். அந்த மாற்றம்தான் கதையே. அந்த காதல் வந்தபிறகு அவர்கள் ரெண்டுபேரும் மெச்சூர் ஆகிவிடுகிறார்கள். எது வந்தாலும் சமாளிக்கலாம் என்ற நிலை வந்துவிடுகிறது. அதன் பின்பு அவர்கள் அடிக்கடி கைகோர்த்துக்கொள்வதை நாம் காண்கிறோம். அந்தக் காட்சிகளுக்கெல்லாம் இயக்குநர் குளோஸப் வச்சிருக்கிறார்.
அதேமாதிரி வயசு வந்தபெண்ணை குப்பை மாதிரி போட்டு வைக்கிறார்கள் ஒரு வீட்டிலே. அது ஒரு சாதி மீது உள்ள விமர்சனமாக சிலர் சொன்னார்கள். அப்படி இல்லை. அவர்கள் தங்கள் வீட்டுப் பெண்ணையே அப்படித்தான் போட்டு வைப்பார்கள். அது ஒரு மனசு அவ்வளவுதான். அதேசமயம் அதே தீட்ட்டன பெண்ணை ஏற்றுக்கொள்கிறது என்பது இன்னொரு ஆசாரம். அங்கே தீட்டான பெண்ணுக்குத்தான் முதல் இடம். சாமியே தீட்டு உள்ள சாமி. சிலர் இந்து மததை கேவலப்படுத்துகிறது என்று சொன்னார்கள். அப்படி இல்லை. இந்துமதத்திலே எதுவுமே விதி என்று இல்லை என்றுதான் சொல்கிறது. அப்படி ஒரு பக்கம் இருந்தால் இப்படியும் ஒரு பக்கம் இருக்கிறது இல்லையா? அது இந்துமதத்துக்குப் பெருமைதானே?
அதேமாதிரி கருங்காலியை வில்லன் மாதிரி டெவெலெப் செய்யாமல் ஒரு கதாபாத்திரமாகவே காட்டியிருக்கிறதும் நன்றாய் இருக்கிறது. லிங்கு கனி இருவரையும் இடமாற்றம் செய்ததும் கருங்காலி படத்தில் வராமலாகிவிடுகிறான். ஆனால் இங்கே இன்னொரு ஆள் அதேமாதிரி நடந்துகொள்கிறான். அதாவது கருங்காலி என்பது ஒரு மனுசன் இல்லை. ஒரு பதவிமட்டும்தான். அண்ணாச்சிகூட வில்லன் இல்லை. அவருக்கு வியாபாரம் மட்டும்தான் முக்கியம். அதுக்கு பிரச்சினை வருமென்றால் விட்டுவிடுவார். ஆகவே அந்த நிறுவனம்தான் வில்லன். அதையும் நன்றாக காட்டியிருக்கிறார்
உள்ளத்தை உருக்கும் படம் ஜெ சார். நன்றிகள்
நேரிலே பார்க்கிறேன். நிறைய பேசவேண்டும்.
சண்முகம்
அரபுக்களின் உற்பத்தி முறையும் வளர்ச்சியும் முதலாளித்துவத்தின் வளர்ச்சி போன்று காணப்பட்டாலும் அது மத அமைப்பில் கட்டப்பட்ட ஒரு வகை நிலப்பிரபுத்துவ சாயலையே கொண்டிருக்கின்றது. சகிப்புத்தன்மையை மதம் சார்ந்த அறிவு தடுத்துவிடுவதால், நவீன கல்விமுறையால் கிடைக்க வேண்டிய இயல்பான மனித நேயம் கிடைக்காமல் போய்விடுகின்றது. ஐரோப்பாவில் வாழும் அரபுகள் இஸ்லாமிய அடிப்படைவாத வெற்றிக்காகப் போராடுகின்றார்கள். அதேவேளை CNN அமெரிக்க பெண் செய்தியாளரும் தலயில் துண்டு போடா வேண்டும் என் வற்புறுத்துகின்றார்கள். அவர்களது உலகப் பார்வையை கல்வியால் மாற்றப்பட வேண்டும். அது சாத்தியமானாதா
என்பது பல நுற்றாண்டுக்குப் பின்னர் வாழப்போகும் மக்களுக்கு மாத்திரமே சிலவேளை தெரியக்கூடும். இன்ஷா அல்லா.

Friday, 15 June 2018

J.C.DANIEL ,MALAYALAM MOVIES BEESMAR 1900 NOVEMBER 28-1975 APRIL 27








J.C.DANIEL ,MALAYALAM MOVIES 
BEESMAR 1900 NOVEMBER 28-1975 APRIL 27



இது மலையாள திரையின் பீஸ் மர் கதை

எட்டாண்டுகளுக்கு முன்பு மலையாளத்திரையுலகின் பிதாமகர் என்று சொல்லத்தக்க நடிகர்-இயக்குநர் ஒருவர் என்னிடம் சொன்னார். ‘மலையாள சினிமாவின் தொடக்கப்புள்ளிகள் மூன்று நாடார்கள். மூவருமே உங்கள் ஊர்க்காரர்கள். நீ மலையாள சினிமாவின் நாற்றங்காலில் இருந்து வந்திருக்கிறாய்…’
அவர் குறிப்பிட்டது ஜெ.சி.டானியல் நாடார், சுந்தர்ராஜ் நாடார், சத்யநேசன் நாடார் என்ற நடிகர் சத்யன். மூவரும் உறவினர்கள் என்பதும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்பதும் இன்னும் ஆச்சரியம்

1893ல் குமரிமாவட்டத்தில் அகஸ்தீஸ்வரத்தில் பிறந்தவர் ஜெ.சி.டானியேல். செல்வந்த நாடார் குடும்பத்தில் பிறந்தவர். அவரது அப்பா ஒரு அலோபதி மருத்துவர். நாகர்கோயிலில் உயர்நிலைப்படிப்பை முடித்து திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் இளங்கலைப்படிப்பை முடித்தார். அப்போது திருவனந்தபுரத்தில் காபிட்டால் என்ற திரையரங்கில் ஊமைப்படங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவற்றில் மனம் ஈடுபட்ட அவர் திரைப்படக்கலையைப் படிப்பதற்காக சென்னைக்குச்சென்றார்.
ஆனால் சென்னை ஸ்டுடியோக்களுக்குள் அவரை அனுமதிக்கவில்லை. ஆகவே அங்கிருந்து மும்பைக்குச் சென்றார். மும்பையில் வெவ்வேறு படப்பிடிப்புநிலையங்களில் டானியேல் உதவியாளராகப் பணியாற்றினார். மெதுவாகத் திரைக்கலையைக் கற்றுத்தேர்ந்தார்

டானியேல் திருவனந்தபுரம் பேட்டை பகுதியில் ஒரு ஸ்டுடியோவை ஆரம்பித்தார். பனச்சமூடு பகுதியில் அவருக்குத் தாய்வழிச்சொத்தாகக் கிடைத்த நூறு ஏக்கர் தென்னந்தோப்பை விற்று இந்த ஸ்டுடியோவை அமைத்தார். திருவிதாங்கூர் நேஷனல் ஸ்டுடியோஸ் அங்கே அமைந்தது. அதுதான் கேரள மண்ணின் முதல் திரைப்படத் தயாரிப்பரங்கு.

டானியேலுக்கு எல்லாமே சவால்களாக இருந்தன. முக்கியமாகத் தொழில்நுட்பப் பயிற்சி உள்ள ஊழியர்கள் அமையவில்லை. அவர்களை சென்னையிலிருந்தும் மும்பையில் இருந்தும் கொண்டுவரவேண்டியிருந்தது. படப்பிடிப்பு நிபுணர்கள் லண்டனில் இருந்து வந்தனர். அவர் நினைத்ததைவிட ஆறுமடங்கு அதிகமாக செலவு இழுத்தது. ஆனால் பிடிவாதக்காரரான டானியேல் படநிறுவனத்தை முழுமையாக்கிப் படத்தையும் எடுத்துமுடித்தார்

நான்குலட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட ஊமைப்படமான விகதகுமாரன் கேரளத்தின் முதல்படம். கேரள வாழ்க்கையைக் காட்டிய முதல் படம் அதுவே. 1928இல் ஆரம்பித்த படப்பிடிப்பு முடிந்து 1930 அக்டோபர் 23 ஆம் தேதி திருவனந்தபுரம் காப்பிட்டோல் அரங்கிலும் நாகர்கோயில் பயோனியர் அரங்கிலும் படம் வெளியாகியது.

விகதகுமாரன் அல்லது The Lost child என்பது படத்தின் தலைப்பு. முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ஒன்றை பூதநாதன் என்ற வில்லன் திருடிக்கொண்டு கொழும்பு சென்றுவிடுகிறான். அங்கே அந்தக்குழந்தையை ஒரு திருடனாக வளர்க்கிறான். திருடப்பட்ட சிறுவனின் தங்கை சரோஜம் அழகிய இளம்பெண்ணாக வளர்கிறாள். அவளை அந்த ஊருக்கு வரும் இளைஞன் சந்திரகுமார் காதலிக்கிறான்

மேல்படிப்புக்காக லண்டன் செல்லும் சந்திரகுமார் வழியில் கொழும்புவில் இறங்கும்போது பூதநாதனின் ஆட்களால் கொள்ளையடிக்கப்படுகிறான். பொருட்களை இழந்து கொழும்புவில் வேலைதேடி அலையும்போது காணாமல்போன இளைஞனான அவன் சந்திக்கிறான். இருவரும் சேர்ந்து பூதநாதனிடமிருந்து தப்புகிறார்கள். ஊர் திரும்பும் சந்திரகுமார் சரோஜத்தைக் காண்கிறான். அந்த இளைஞனின் முதுகில் உள்ள மச்சத்தைக்கொண்டு அது தன் அண்ணன் தான் என்று அறிகிறாள் சரோஜம். அவன் அம்மா வந்து கண்ணீருடன் மகனைக் கட்டிப்பிடிக்கிறாள்

அப்போது பூதநாதன் அங்கே வருகிறான். கடுமையான சண்டை நடக்கிறது. பூதநாதனை சந்திரகுமார் அடித்து வீழ்த்துகிறான். பூதநாதன் தப்பி ஓட சந்திரகுமாரும் சரோஜமும் மணம்செய்துகொள்கிறார்கள். படம் மங்கலமாக முடிகிறது. இதுதான் விகதகுமாரனின் கதை

இதில் சந்திரகுமார் ஆக டானியேலே நடித்திருந்தார். கதையும் அவருடையதே. இயக்கியதும் டானியேல்தான். படப்பிடிப்பு திருவனந்தபுரத்திலும் கொழும்புவிலும் நடந்தது. டானியேல் அக்காலத்தில் முறையாக அடிமுறை கற்றவர். ஆகவே படத்தில் நான்கு கம்புச்சண்டைக்காட்சிகளும் ஒரு கைச்சண்டையும் இடம்பெற்றிருந்தன.

படத்தின் கதைநாயகியாக நடிக்க அக்காலத்தில் பெண்கள் தயாராகவில்லை. நாயகிக்காக மும்பையில் இருந்து கொண்டுவந்த பெண்ணுக்குக் கேரளப்பெண்ணாக நடிக்கத்தெரியவில்லை. ஆகவே டானியேல் ரோசம்மா என்ற ஒரு புலையர் சாதிப்பெண்ணைக் கண்டடைந்தார். அவள் ஏற்கனவே மேடைகளில் குறவன் குறத்தி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தவள். அவளை நாயகியாக நடிக்கவைத்தார். அவளுக்கு ரோசி என்று பெயர் சூட்டினார்.

படம் வெளியான முதல்நாளே பெரும் எதிர்ப்பைச்சந்தித்தது. படத்தில் ஒரு புலையப்பெண் நாயர்பெண் போல உடையும் நகைகளும் அணிந்து நடிப்பதைக் கண்டு நாயர்களும் நம்பூதிரிகளும் கொதித்தெழுந்தார்கள். விகதகுமாரன் வெளியீட்டுக்கு வந்திருந்த புகழ்பெற்ற வழக்கறிஞர் மள்ளூர் கோபித்துக்கொண்டு அரங்கிலிருந்து வெளிநடப்பு செய்தார். கேரளம் முழுக்க முதல்நாளே படம் நிறுத்தப்பட்டுவிட்டது.

பெரும் நஷ்டத்தைச் சந்தித்த டானியேல் கடன்காரர்களுக்குப் பதில் சொல்லமுடியாமல் மதுரைக்குத் தப்பி ஓடினார். அங்கே யாருக்கும்தெரியாமல் வாழ்ந்தார். அப்போது பல்மருத்துவம் கற்றுத் தேர்வெழுதி வென்று மருத்துவராக ஆனார்.

காரைக்குடியில் மருத்துவராகப் பணியாற்றினார். மீண்டும் வாழ்க்கை சீரடைந்தது அப்போது அவரிடம் பல்மருத்துவம் செய்வதற்காக வந்த பிரபல நடிகர் பி.யூ.சின்னப்பா டானியேலை திரைப்படத்துறைக்கு வருமாறு அழைத்தார். வற்புறுத்தி சென்னைக்குக் கொண்டுசென்றார். ஆனால் அங்கே சின்னப்பாவை ச்சுற்றி இருந்த ஒரு கும்பலும் சின்னப்பாவும் சேர்ந்துகொண்டு டானியேலின் மொத்தப்பணத்தையும் பிடுங்கிக்கொண்டு துரத்தியடித்தனர். அதே கும்பல் பின்னாளில் சின்னப்பாவையும் அனாதையாகத் துரத்தியடித்தது. இரண்டுவருடம் நாடோடியாக அலைந்தபின் டானியேல் மனைவியிடம் வந்துசேர்ந்தார்.

அவரது மனைவி பெயர் ஜேனட். அவருக்கு நான்கு மகன்கள். அகஸ்தீஸ்வரத்திலும் நாகர்கோயிலிலும் டானியேல் பல்மருத்துவராகப் பணியாற்றினார். பிள்ளைகள் வெளியூருக்குப் பணிக்குச்சென்றார்கள். குடிப்பழக்கமிருந்தமையால் மிச்சமிருந்த பணத்தையும் இழந்து கடைசிக்காலத்தில் வறுமையால் மிகவும் வாடினார்
.
அப்போது டானியேல் கேரள அரசின் நலிந்த திரைக்கலைஞர்களுக்கான பென்ஷனுக்காக விண்ணப்பம் செய்தார். அவர் எடுத்தபடம் மலையாளப்படம் அல்ல என்றும், அவர் கேரளத்தில் வாழ்கிறார் என்றும் சொல்லி அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. திட்டமிட்டு அவரை நிராகரித்தவர் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான மலையாற்றூர் ராமகிருஷ்ணன்.

அது முழுக்கமுழுக்க சாதிப்பற்றின் விளைவு. முதல் மலையாளப் படம் என்று சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம் எடுத்த பாலன் என்ற படத்தையே அதுவரையிலான வரலாறு சுட்டிக்காட்டிவந்தது. சுந்தரம் அய்யர், ராமகிருஷ்ணனும் அய்யர். அந்த வரலாறு மாற்றப்படுவதை மலையாற்றூர் ராமகிருஷ்ணன் விரும்பவில்லை.

டானியேலைப்பற்றி கேள்விப்பட்டு அவரைப்பற்றித் தொடர்ந்து எழுதி அவர்தான் மலையாள சினிமாவின் முதல்வர் என்பதை நிறுவப் பாடுபட்டவர் இதழாளரும் எழுத்தாளருமான சேலங்கோட்டு கோபாலகிருஷ்ணன் என்பவர். பாடலாசிரியர் வயலார் ராமவர்மாவும் முன் முயற்சி எடுத்துக்கொண்டார். ஆனால் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் பதவியில் இருக்கும் வரை எதுவும் நடக்கவில்லை. விகதகுமாரனின் பிரதி அழிந்துவிட்டது. டானியேலிடம் இருந்தது அந்தப்படத்தின் சில புகைப்படங்களும் விளம்பரப்பிரசுரங்களும் மட்டும்தான். அவற்றை மலையாற்றூர் ஏற்றுக்கொள்ளவில்லை.

1975இல் டானியேல் தன் 78 ஆவது வயதில் ஆதரவற்ற முதியவராகக் காலமானார். அதற்கு அடுத்தவருடம் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் பதவி விலகியபின் கேரள அரசின் கவனத்துக்கு டானியேலின் வரலாற்றைக் கொண்டு செல்லமுடிந்தது. அப்போது பதவிக்கு வந்த ஏ.கே.ஆண்டனியின் அரசு டானியேலின் விதவையான ஜேனட்டுக்கு ஓய்வூதியம் அளிக்க ஆணையிட்டது. டானியேலின் பங்களிப்பு வரலாற்றிலும் இடம்பெற்றது.

1992இல் கேரள அரசின் திரைப்பட வளர்ச்சி நிறுவனம் அளிக்கும் வாழ்நாள் சாதனைக்கான திரைவிருதுக்கு ஜெ.சி.டானியேல் விருது என்று பெயரிடப்பட்டது. டானியேல் இன்று மலையாளத் திரையின் முதல்வராக, பிதாமகராக வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறார்.

ஏ.சுந்தர்ராஜின் கதையும் வேறல்ல. அவர் 1933இல் மலையாளத்தின் முதல்பேசும்படமான மார்த்தாண்ட வர்மாவை எடுத்தார். வி.வி.ராவ் படத்தை இயக்கினார். ராஜேஸ்வரி ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்திற்காக அக்காலத்தில் இரண்டு லட்சம் ரூபாய் செலவில் சுந்தர்ராஜ் இந்தப்படத்தை எடுத்தார். இதுவும் ஒரேஒரு நாள்தான் ஓடியது. இப்படத்தின் கதை சி.வி.ராமன்பிள்ளை எழுதியது என்றும் உரியமுறையில் அனுமதிபெறாமல் படம் எடுக்கப்பட்டது என்றும் குற்றம்சாட்டிப் படத்துக்கு எதிராக அந்நாவலை வெளியிட்ட நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது. தடைபெற்றுப் படப்பெட்டிகளைக் கைப்பற்றியது. நொடித்துப்போன சுந்தர்ராஜ் ஊரைவிட்டு ஓடினார். நாகர்கோயிலில் முதியவயதில் கைவிடப்பட்டவராக இறந்தார்.
நல்லவேளையாக மார்த்தாண்டவர்மாவின் பிரதி சேலங்கோட்டு கோபாலகிருஷ்ணனால் மீட்கப்பட்டது. பதிப்பகம் மூடப்பட்டபின் அந்தத் திரைப்படப்பிரதி அவர்களின் கிடங்கில் கைவிடப்பட்டுக் கிடந்தது. சுந்தர்ராஜுக்குத் தன் படத்தின் மதிப்பு தெரிந்திருந்தமையால் நாற்பதுவருடங்களுக்குமேல் அவர் வருடம்தோறும் வந்து அந்த ஃபிலிமை சுத்தம்செய்து கொடுத்துவிட்டு செல்லும் வழக்கம் கொண்டிருந்தார். ஆகவே படம் பெரும்பாலும் தப்பித்தது.
சுந்தர்ராஜின் படமும் சாதிவெறியால்தான் தடுக்கப்பட்டது என்பது இன்று தெரிகிறது. அவர் எடுத்தது சி.வி.ராமன்பிள்ளையின் கதையை அல்ல. அன்று கேரளநாட்டார்வழக்கில் பிரபலமாக இருந்த மார்த்தாண்டவர்மாவின் தொன்மத்தைத்தான். அந்த தொன்மத்திற்கு சி.வி.ராமன்பிள்ளை உரிமைகொண்டாட முடியாது. ஆனால் அதை அன்றைய நீதிமன்றம் கருத்தில்கொள்ளவில்லை.
மலையாற்றூர் ராமகிருஷ்ணன் டானியேலை அங்கீகரிக்க மறுத்தது அவர் எடுத்தபடம் கிடைக்கவில்லை என்பதற்காக. ஆனால் மார்த்தாண்டவர்மா கிடைத்தபோதும் அதை அவர் கண்டுகொள்ள மறுத்தார். படத்தை பூனா ஃபிலிம் ஆர்கைவ்ஸ் வாங்கச்செய்வதில் சேலங்கோட்டு கோபாலகிருஷ்ணன் வெற்றிபெற்றார்
மூன்றாவது நாடாரான சத்யன் முதல் இருவருக்கு மாறாகத் திரைப்படத்தில் பெரும் வெற்றி பெற்றார். மலையாளத்திரையுலகின் அரசன் என்று அறியப்பட்டார். ‘சத்யனின் சிம்மாசனம்’ என்ற சொல்லாட்சியே மலையாளத்தில் உள்ளது. ஒரு நடிகர் நன்றாக நடித்தால் அவர் அந்த சிம்மாசனத்தில் சற்று நேரம் அமர்ந்திருந்தார் என்று சொல்வார்கள்.
*

ஜே.சி.டானியேலின் வாழ்க்கையைப்பற்றி சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் எழுதிய நூல், ஆர்.கோபாலகிருஷ்ணன் எடுத்த ஆவணப்படம் , ரோசியைப்பற்றி வினு ஆரகாம் எழுதிய ‘ நஷ்டநாயிகா’ என்னும் நாவல் ஆகியவற்றின் அடிப்படையில் கமல் திரைக்கதை எழுதி இயக்கிய ‘செல்லுலோய்ட்’ ஜெ..சி.டானியேலுக்கு மிக ஆத்மார்த்தமாக அளிக்கப்பட்ட மகத்தான நன்றியறிவிப்பு எனலாம்.
சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் [ஸ்ரீனிவாசன்] தற்செயலாக டானியேலைப்பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தேடிச்சென்று அகஸ்தீஸ்வரத்தில் சந்திக்கிறார். மனக்கசப்படைந்து இருக்கும் டானியேல் முதலில் அவரை சந்திக்க விரும்புவதில்லை. மரியாதையுடன் திருப்பியனுப்புகிறார். சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் அவரது மனைவி ஜேனட்டிடம் ஒரு நீண்ட பேட்டி எடுக்கிறார். ஜேனட் அந்தப்படம் எடுக்கும்போது கூடவே இருந்தவர்
பேட்டி பிரசுரமானதை வாசித்துக்கேட்ட டானியேல் கோபாலகிருஷ்ணனை வரச்சொல்லிக் கடிதமனுப்புகிறார். தன்னுடைய திரைமுயற்சியைப்பற்றி விரிவாகச் சொல்கிறார். ஜேனட்டும் அவரும் உற்சாகமான இளமையுடன் திருவிதாங்கூர் நேஷனல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்கள். நடிக்க ஆளில்லாமல் ரோசம்மாவைக் கண்டுபிடித்து அவளுக்குப்பயிற்சி கொடுத்து நடிக்கச்செய்கிறார்கள். அவள் பெயரை ரோசி என்று மாற்றுகிறார்கள்.
படம் வெளியானபோது சாதிவெறியர்களின் கடும் எதிர்ப்பு உருவாகிறது. படம் நிறுத்தப்படுகிறது. டானியேல் கடனாளியாக மதுரைக்குச்செல்கிறார். ரோசியின் வீட்டை எரித்து அவள் தந்தையைக் கடுமையாகத் தாக்குகிறார்கள் உயர்சாதியினர். தப்பி ஓடி இருளில் மறைகிறாள் ரோசி.[ ரோசி அதன்பின் செய்திகளில் வரவே இல்லை. அவளை ஒரு லாரி ஓட்டுநர் சாலையில் கண்டெடுத்து மணம் புரிந்துகொண்டதாகவும் 1970 வரை நாகர்கோயிலில் வாழ்ந்ததாகவும் ஒரு பேச்சு உண்டு]
மலையாள சினிமாவின் முதல் கதாநாயகி அவள் நடித்த படத்தைப்பார்க்க திரையரங்கில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. தன் முகம் திரையில் தெரிவதை அவள் பார்க்கவேஇல்லை. அன்றைய இரவில் மறைந்த அவள் பின்னர் வெளிவரவும் இல்லை. இந்த உண்மைக்கதையில் இருக்கும் வரலாற்றுசோகம் படத்தில் அற்புதமாகப் பதிவாகியிருக்கிறது.
டானியேலை வெளிச்சத்துக்குக் கொண்டுவர சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் முயல்கிறார். வறுமையில் வாடும் டானியேலுக்கு ஒரு பென்ஷனாவது வாங்கிக்கொடுக்கலாமென நினைக்கிறார். ஆனால் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் அதை எல்லாவகையிலும் தடுக்கிறார். மலையாற்றூர் ராமகிருஷ்ணன் இப்படத்தில் பெயர்சொல்லப்பட்டு நேரடியாகக் குற்றம் சாட்டப்படுகிறார். ‘நீங்களும் அய்யர் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரும் அய்யர்…அதுதான் இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம் இல்லையா?’ என சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் நேரடியாகக் கேட்பதுபோலவே படத்தில் காட்சி இருக்கிறது
இடதுசாரியாக இருந்த மலையாற்றூரின் சாதிய நோக்கு முன்னரே சிலரால் சொல்லப்பட்டுவிட்டதுதான். சேலங்காட்டு கோபாலகிருஷ்ணனின் நூல் நாற்பதாண்டுகளுக்கு முன்னரே அதை நிறுவியும் விட்டது. ஆனால் சினிமா என்ற மாபெரும் ஊடகத்தின்மூலம் கேரளத்தின் முக்கியமான எழுத்தாளராகிய மலையாற்றூர் முழுமையாகவே அழிக்கப்பட்டுவிட்டார் என்றே சொல்லவேண்டும். இனி அவரது எந்தப்படைப்பும் இயல்பான வாசிப்பைப் பெறமுடியாது. வருத்தமான விஷயம்தான் , ஆனால் வரலாறு ஈவிரக்கமற்றது.இனி எஞ்சிய நாள் முழுக்க டானியேல் ஒளியையும் மலையாற்றூர் இருளையும் பெறுவார்கள்!
டானியேல் அனாதையாக இறக்கிறார். அவர் இறந்தபின் அவர் அங்கீகரிக்கப்படுகிறார். அவரது தந்தையைப்பற்றிய ஆவணப்பட வெளியீட்டுவிழாவில் அவரது கடைசி மகன் ஹாரீஸ்நாடார் மேடையேறுகிறார். அந்த நாள் வரை அவர் தன் தந்தையைப் பொறுப்பில்லாத ஊதாரி என்று வெறுத்துவந்ததாகவும் அந்தமேடையில்தான் அவர் எப்படிப்பட்ட மாமனிதர் என்று தெரியவந்ததாகவும் ஹாரீஸ் சொல்கிறார்.
அந்தப்படச்சுருளை இளமையில் தீவைத்துக் கொளுத்தியவர் ஹாரீஸ்தான். ஆனால் அதற்காக வருந்தினாலும் டானியேல் மகனின் கோபத்தைப் புரிந்துகொள்கிறார். ஒருபோதும் அதை தன் மகன் அழித்தான் என்று அவர் சொல்லவில்லை. பல நிருபர்கள் கேட்டும்கூட அது அழிந்துவிட்டது என்று மட்டுமே சொன்னார், மகன் தீவைத்ததைச் சொல்லி அதை வரலாறாக ஆக்கவில்லை. அவர் புறக்கணிக்கப்பட்டதும் அங்கீகாரமில்லாமல் இறந்ததும் அந்தப் படம் அழிந்தமையால்தான்.
மேடையில் ஹாரீஸ் அப்படிப் படத்தை அழித்தவன் தானே என்கிறார். கண்ணீருடன் தன் தந்தையை அப்போது வெறுத்ததாகவும் இப்போது புரிந்துகொள்வதாகவும் சொல்கிறார். படம் மகனின் கண்ணீரில் முடிகிறது. அது மலையாள சினிமாவில் இன்றிருக்கும் அனைவரின் கண்ணீரும்தான். அனைவருமே டானியேலின் பிள்ளைகள் அல்லவா?
டானியேலாகவும் ஹாரீஸாகவும் பிரிதிவிராஜ் அற்புதமாக நடித்திருக்கிறார். ஒருவேளை அவரது திரைவாழ்க்கையின் மிகச்சிறந்த படம் இதுவாகத்தான் இருக்கும். இளமையில் கற்றறிந்த இளைஞனாக உற்சாகமும் துருதுருப்புமாக இருக்கும் டானியேல், பின் நொடித்துப்போய்க் கலங்கும் டானியேல், மீண்டு எழும் டாக்டர் டானியேல், கடைசியில் கைவிடப்பட்டு அனாதையாக சாகும் முதிய டானியேல். ஒவ்வொரு முகமும் மிகையற்ற கச்சிதம்.
டானியேலின் மனைவி ஜேனட் ஆக மம்தா மோகன்தாஸ் அழகாக நடித்திருக்கிறார். மற்ற சிறு கதாபாத்திரங்கள் எல்லாமே கச்சிதம். வயலார் ராமவர்மாவாக நடிப்பவரும் சரி மலையாற்றூராக நடிப்பவரும் சரி அப்படியே அவர்களின் சாயலில் இருக்கிறார்கள்.
படத்தின் மிகச்சிறந்த இன்னொரு நடிப்பு ரோசியாக நடிக்கும் புதுமுகம் சாந்த்னி. இந்த வரலாற்றுப்படத்தின் உணர்ச்சிமிக்க ஓர் அத்தியாயம் ரோசியின் வாழ்க்கை. தீண்டாமை உச்சத்தில் இருந்த காலகட்டத்தைச்சேர்ந்த புலையப்பெண் அவள். நகைகளோ நல்ல உடைகளோ அவளால் கனவில் கூட அடைய முடியாதவை. சட்டென்று அவை எல்லாமே அவளைத்தேடிவருகின்றன. தனக்களிக்கப்பட்ட உடைகளை உடைமாற்றும் அறையில் இருளில் நின்று மார்போடு அணைத்து அழும் ரோசி ஒரு மகத்தான கதாபாத்திரம்
சினிமா நவீன உலகம். அங்கே தீண்டாமை இல்லை. அங்கே ரோசி ஒரு நடிகை. ஆனால் ரோசியால் அந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நாற்காலியில் அமர முடியவில்லை. ஏன் சோறுகூட சாப்பிடமுடியவில்லை- கஞ்சி போதும் என்கிறாள். மெல்லமெல்ல அவள் அதற்குள் வந்து சேரும்போது படம் முடிகிறது. கனவு கலைகிறது. ரோசிக்கு ஊதியம் வழங்கி அவளை அனுப்பும்போது ஜேனெட் அவளுக்கு அவளுடைய உடைகளை அளிக்கிறாள். நாயர்பெண்ணாக வாழ்ந்த ரோசி புலையப்பெண்ணாக மீண்டும் மாறிக் கண்ணீருடன் விடைபெறுகிறாள். கனவு நினைவில் எஞ்சியிருப்பதுபோல அந்த உடை கையில் இருக்கிறது
தன்னுடைய சினிமாவைப்பார்க்க காபிடோல் திரையரங்குக்குச் செல்கிறாள் ரோசி. அவளை வற்புறுத்திக் கூட்டிவந்தவர் டானியேல்தான். ஆனால் தலைமைதாங்க வந்த வழக்கறிஞர் மள்ளூர் கோபித்துக்கொள்ளவே ரோசி உள்ளே விடப்படவில்லை. தன் முகத்தைத் திரையில் பார்க்கும் அதிருஷ்டம் அவளுக்குக் கிடைக்கவில்லை. அன்றிரவே வீடு கொளுத்தப்பட்டு அவள் துரத்தியடிக்கப்படுகிறாள். சினிமா என்னும் கனவு, தொழில்நுட்பம் உருவாக்கிய மாபெரும் மாற்று யதார்த்தம், அழிகிறது.
அழியவில்லை, அந்த வரலாற்றுக்கணத்தில் அது பிறக்கிறது என்று காட்டுகிறார் கமல். நுணுக்கமான இயக்கம் கொண்ட படம் இது. ஒவ்வொரு காட்சியிலும் செலுத்தப்பட்டிருக்கும் கவனம் குறியீட்டு ரீதியாக மேலும் மேலும் வாசிக்கப்படவேண்டியது.
உதாரணமாகத் திரைப்படத்திற்குள் நிகழும் யதார்த்தமும் வெளியே உள்ள சமூக யதார்த்தமும் தலைகீழாக இருப்பதைக் காட்டும் காட்சிகளைச் சுட்டிக்காட்டலாம். ’இப்போது ஏன் குத்துவிளக்கு, இது பகல் அல்லவா?’ என்கிறார் ஒருவர் படப்பிடிப்பின் போது. ‘சினிமாவுக்குள் இது இரவு’ என்கிறார் தொழில்நுட்பம் தெரிந்தவர். அங்கே புலையப்பெண் உயர்சாதிப்பெண்ணாக வந்து நிற்கிறாள். இங்கே அந்த ஆச்சரியம் தாளாமல் தவிக்கிறார்கள் பிறர்.

டானியேல் முதல்முறையாக ஃபிலிமைக் காணும் காட்சி அதை முழுமைசெய்கிறது. எல்லாக் காட்சியும் அதற்குள் தலைகீழாக இருக்கிறது. அவரது முகம் மலர்கிறது. ஆம், அவர் தான் கண்ட சமூக யதார்த்தத்தைத் தன் கலைக்குள் தலைகீழாக ஆக்கிவிட்டிருக்கிறார்.

அப்பாவின் நினைவுக்கூட்டத்துக்காக வரும் ஹாரீஸ் நாடார் வெளியே மோகன்லாலின் மசாலாப்படம் வெளியான அன்று பெட்டியுடன் நடனமிடும் ரசிகர் கும்பலைக் கண்டு திகைத்து பின் மெல்ல புன்முறுவல் செய்யும் காட்சி அதைப்போல மிக கவித்துவமானது.
படத்தின் அப்பட்டத்தன்மை மலையாளசினிமாவுக்கே உரியது. எல்லா வரலாற்றுமாந்தர்களும் குறைநிறைகளுடன் அப்படியே வருகிறார்கள்.

‘தெரியாமல் முன்னோடியாக ஆகிவிட்டேன்…மன்னிக்கணும் மன்னிக்கணும்’ என்று நோய்ப்ப டுக்கையில் கைகூப்பும் சுந்தர்ராஜ் ஓர் எல்லை. மறுபக்கம் பி.யூ.சின்னப்பா ஒரு ஏமாற்றுப்பேர்வழியாக வருகிறார்.

மிகக்குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு மிகச்சிறந்த கலை இயக்கம் அமைந்திருக்கிறது. 1930 முதல் 1980 வரையிலான காலம் சரியாகவும் அழகாகவும் காட்சிக்குள் வந்திருந்தது. கலை இயக்குநர் . இந்தப்படத்தின் சிறப்பான அம்சம் இந்தியாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான வேணுவின் அற்புதமான ஒளிப்பதிவு. காலங்கள் வழியாக உணர்வுகள் வழியாக ஒழுகிச்செல்லும் அனுபவத்தை அளிக்கிறது இது.

திரைப்படங்கள் ஒவ்வொன்றையும் ஒரு ’ஃபிலிம் பிரேம்’ என்று உவமிக்கலாம். சமகாலம் என்பது அந்த புரஜக்டரின் ஒளிச்சட்டம். அந்தச் சதுரத்தின் வழியாக அவை வேகமாக ஓடிக்கொண்டே இருக்கின்றன. கணநேரம் மட்டுமே அவற்றின் ஆயுள். தன்னைக் காட்சியாக விரித்ததுமே அடுத்ததற்கு இடம் விட்டு அவை மறைகின்றன. ஆனால் அவற்றில் ஆயிரத்தில் ஒன்று நிரந்தரம் பெறுகிறது. விளக்கொளியில் எப்போதுமிருக்கிறது. அப்படிப்பட்ட படங்களில் ஒன்று இது.

மரணப்படுக்கையில் டானியேல் கிடக்கிறார். மார்பைத் தடவிக்கொடுக்கிறார் ஜேனெட். எதிர்ச்சுவரில் இரவின் ஒளியில் நிழல்கள் ஆடுகின்றன. அதை ஒரு சினிமாவாகப் பார்த்துக்கொண்டே இறக்கிறார் டானியேல். அந்த ஒரு காட்சி மலையாள சினிமா உள்ளவரை அழியாமலிருக்கும்.

படம் பார்த்தபின் இயக்குநர் கமலிடம் தொலைபேசியில் பேசினேன். ’உங்கள் கருத்துக்காக எதிர்பார்த்திருந்தேன்’ என்று சொன்னார். ’ஒரு குமரிமாவட்டத்தினனாகப் பெருமைப்படுகிறேன். நன்றி சொல்கிறேன்’ என்று சொன்னேன்.