Showing posts with label APRIL 27. Show all posts
Showing posts with label APRIL 27. Show all posts

Saturday, 25 September 2021

FEROZ KHAN ,HINDI ACTOR BORN 1939 SEPTEMBER 25 - 2009 APRIL 27

 

FEROZ KHAN ,HINDI ACTOR BORN

1939 SEPTEMBER 25 - 2009 APRIL 27

ஃபெரோஸ் கான் (ஹிந்தி: फ़िरोज़ ख़ान, உருது: فېروز خان (செப்டம்பர் 25 , 1939- ஏப்ரல் 27, 2009) ஹிந்தி பட உலகில் ஒரு நடிகர், பட எடிட்டர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக இருந்தவர். அவருடைய அதிரடி பாணி , அமெரிக்க கௌபாய் நடை மற்றும் புகை பிடிக்கும் பாங்கு போன்றவை வழக்கமான பாலிவுட் ஹீரோவின் போக்கை முற்றிலும் மாற்றி அமைத்தது. கிழக்கின் க்லின்ட் ஈஸ்ட்வுட் என்று அவர் அழைக்கப்பட்டார். சினிமா தொழிலின் நாகரிக நாயகனாக அவர் இருந்தார்.[4][5][6]



1970கள் மற்றும் 1980களில் அவர் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தோன்றினார். 1980ல் அவர் நடித்து இயக்கிய வெற்றிப் படமான குர்பானி அவருக்கு இந்தியாவின் மிக விரும்பப்பட்ட ஹீரோ என்ற பெயரைத் தந்தது. அத்தகைய சாதனயைத் தொடர்ந்த கான் மேலும் தயாவான் (1988) மற்றும் ஜன்பாஸ் (1986)[1][2] என்ற இரண்டு வெற்றிப் படங்களை இயக்கினார். 1970ஆம் ஆண்டு வெளிவந்த ஆத்மி அவுர் இன்சான் என்ற படத்திற்கான பிலிம்ஃபேரின் சிறந்த துணை நடிகர் விருதை வென்றார், மற்றும் 2000 ஆம் ஆண்டு பிலிம்ஃபேரின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.




ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஃபெரோஸ் கான் இந்தியாவின் பெங்களூரில் ஷியா இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை சாடிக் அலி கான் தனொலி ஆப்கானிஸ்தானின்[4][5][6] காசணி மாகாணத்தை சேர்ந்த ஒரு ஆப்கானியர் ஆவார். அவர் தாயார் பாத்திமா ஈரானைச் சேர்ந்தவரவார். இவர் பெங்களூரில் உள்ள பிஷப் காட்டன் ஆண்கள் பள்ளி மற்றும் புனித கேர்மைன் ஆண்கள் மேனிலைப் பள்ளியில் படித்தார். சஞ்சய் கான், ஷாரூக் கான் (தொழிலதிபர்), சமீர் கான் மற்றும் அக்பர் கான் (இயக்குனர்) இவருடைய சகோதரர்கள் ஆவர். இவருக்கு தில்ஷாத் பிபி என்ற சகோதரி இருந்தார். பெங்களூரில் பள்ளி பருவம் முடிந்த பின் 1960 இல் மும்பை வந்த இவர் டிடி என்ற படத்தில் முக்கிய வேடத்தில் முதல் முறையாக தோன்றினார்.


தொழில் வாழ்க்கை[தொகு]

அடுத்த 5 வருடங்கள். இரண்டாம் தர வேடங்களில் நடிக்க நேர்ந்தது. 1960கள் மற்றும் 1970களின் தொடர்ந்த காலங்களில், குறைந்த பட்ஜெட் படங்களை பிரபலம் இல்லாத நடிகைகளை வைத்து தயாரித்தார். 1962 இல் டார்சன் கோஸ் டு இந்தியா என்ற ஆங்கில பெயரிடப்பட்ட படம் ஒன்றில் சிமி கறேவாளுடன் தோன்றினார். 1965இல் வெளி வந்த ப்ஹனி மஜும்தரின் ஊன்சே லோக் அவருடைய முதல் வெற்றி படமாக அமைந்தது.அதில் ராஜ் குமார் மற்றும் அசோக் குமார் போன்ற பிரபல நடிகர்களுக்கு எதிராக அவருடைய நடிப்பு கவனிக்கப்பட்டதாக அமைந்தது.[7] அதே வருடம் ஆர்சோ என்ற படத்தில் சாதநாவுடன் ஒரு தியாகம் செய்யும் காதலர் வேடத்தில் நடித்தார். இதன் மூலம் முதல் தர இரண்டாம் நிலை வேடங்களில்நடிக்கும் நடிகரானார். ஆத்மி அவுர் இன்சான் (1969) என்ற படம் மூலம் பிலிம்ஃபேரின் சிறந்த துணை நடிகர் விருதை வென்றார். தனது சகோதரர் சஞ்சய் கானுடன் சேர்ந்து உபாசனா ,(1967) மேலா (1971) மற்றும் நகின் (1976) போன்ற வெற்றிப் படங்களில் தோன்றினார்.


திரைப்பட துறையில் சிறந்து விளங்க 1971 ஆம் ஆண்டு ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக மாறினார். அபராத் என்ற திரைபடத்தை அவர் முதல்முறையாக இயக்கினார். ஜெர்மனியில் நடக்கும் கார் பந்தயம் காண்பிக்கப்படும் முதல் இந்திய படமாக அது அமைந்தது. அதில் மும்தாஸ் கதாநாயகியாக நடித்தார். 1975ஆம் ஆண்டு தர்மாத்மா என்ற திரைபடத்தை தயாரித்து, இயக்கி, நடித்து வெளியிட்டார். ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படமாக அது அமைந்தது. மேலும் அவர் நடித்து, இயக்கி மற்றும் தயாரித்த முதல் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. நடிகை ஹேமா மாலினி அப்படத்தில் ஒரு கவர்ச்சிகரமான வேடத்தில் தோன்றினார்.[8] ஹாலிவுட் திரைப்படம் காட்பாதரை மனதில் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.


1970களிலும், 1980களிலும் அவர் பாலிவூடின் முன்னணி நட்சத்திரமாக பல படங்களை இயக்கியும், நடித்தும் திகழ்ந்தார். பகத் தன்ன சாட் (1974) என்ற பஞ்சாபி திரைப்படத்திலும் அவர் நடித்தார். ஜீனத் அமன் உடன் நடித்து 1980இல் வெளி வந்த குர்பானி திரைப்படம் அவருடைய சினிமா வாழ்கையின் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. அத்திரைப்படம் பாகிஸ்தான் பாப் பாடகி நசியா ஹசனுக்கு பின்னணி பாடும் துறையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அவருடைய ஆப் சைசா கோயி[7] என்ற பாடல் மிக பிரபலமானது. 1986இல் ஜான்பாஸ் என்ற மிக பெரிய வெற்றி படத்தை அவர் நடித்து இயக்கினார். சிறந்த நடிகர் குழுவை கொண்ட அப்படம் அவருடைய ஒரு மிகச் சிறந்த படமாக அமைந்தது .[9] அப்படம் சிறந்த பாடல்களையும், சிறந்த ஒளிபதிவையும் கொண்டிருந்தது. 1988ஆம் ஆண்டு அவர் தயாவான் என்ற படத்தை இயக்கி நடித்தார். தென்னிந்திய திரைப்படமான நாயகனின்மறு தயாரிப்பாக அது இருந்தது. யால்கார் (1992) என்ற படத்தை இயக்கி நடித்த பின், நடிப்பிலிருந்து 11 ஆண்டுகள் நீண்ட ஓய்வு எடுத்துகொண்டார்.


அவரின் மகன் ஃபார்டீன் கானின் சினிமா வாழ்க்கை பிரவேசம் 1998இல் வெளியான பிரேம் அக்கன் என்ற தோல்வி படம் மூலம் நிகழ்ந்தது. 2003 இல் வெளியான ஜனஷீன் படத்தை தயாரித்து இயக்கியதின் மூலம் அவர் திரை உலகத்தில் மறுபடியும் பிரவேசித்தார். அப்படத்தில் அவருடைய மகன் ஃபார்டீனும் நடித்தார். அவருடைய படங்களில் எப்போதும் விலங்குகளை நடிக்க வைத்தார். ஜனஷீன் படத்தில் ஒரு சிம்பன்சி மற்றும் சிங்கம் நடிக்க வைக்கப்பட்டது. ஆனால் பீபில் பார் அனிமல்ஸ் ஹரியானா[1] இயக்கத்தின் தலைவர் நரேஷ் கட்யன் அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகருக்கு எதிராக பாரிடபாத் நீதி மன்றத்தில் விலங்குகளுக்கு எதிராக கொடுமை புரிந்ததாக வழக்கு தொடர்ந்தார். அவருடைய மகனுடன் ஏக் கிலாடி ஏக் ஹசினா (2005) என்ற படத்தில் தோன்றிய இவரின் கடைசி படம் வெல்கம் (2007) என்ற திரைபடமாகும்.


ஃபெரோஸ் கான் தன்னுடைய ஒப்புயர்வற்ற பாணியால் அவர் காலத்தில் மற்ற அனைவரையும்விட முன்னிலை வகித்தார். அது அவருடைய திரைப்படங்களிலும், பாடல்களிலும் பிரதிபலித்தது. அவருடைய குர்பானி, தர்மாத்மா போன்ற ஹிந்தி திரைப்படங்கள் காலத்தால் அழியாதவையாகும். அவர் ஒரு சூப்பர் ஸ்டாராக கருதப்படாவிட்டாலும் பல வருடங்கள் அவர் புகழ் பெற்று சிரஞ்சீவியாக விளங்கினார்.


2006 ஆம் ஆண்டு மே மாதம், ஃபெரோஸ் கான் தனது சகோதரரின் திரைப்படமான தாஜ் மஹால் படத்தை ஆதரிக்க வேண்டி பாகிஸ்தான் சென்றார். அப்போது பாகிஸ்தான் ஜனாதிபதி பெர்வேஸ் முஷாரப் அவரை இருட்டடிப்பு செய்தார். அங்கு சென்றபோது அவர் குடித்துவிட்டு பாகிஸ்தான் பாடகர் மற்றும் செய்தியாளர் பாக்ஹ்ர்-ஏ-ஆழம் என்பவரை அவமதித்தார் மற்றும் பாகிஸ்தானை பற்றி அவதுறாக பேசினார் என்று பாகிஸ்தான் உளவு துறை முஷாரப்புக்கு தகவல் கொடுத்திருந்தது. அத்தகவல் கீழ்க்கண்டாவாறு இருந்தது :


"நான் ஒரு கர்வமுள்ள இந்தியன். இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு. பாகிஸ்தான் போல் இல்லாமல் இங்குள்ள இஸ்லாமியர்கள் முன்னேற்றம் அடைந்து கொண்டிருகிறார்கள். நமது ஜனாதிபதி ஒரு இஸ்லாமியர் மற்றும் நமது பிரதமர் ஒரு சீக்கியர் ஆவார். பாகிஸ்தான் இஸ்லாமின் பேரில் உருவாக்கப்பட்டது. ஆனால் இங்கு "இஸ்லாமியர்களே மற்ற இஸ்லாமியர்களைக் கொல்வதைப் பார்க்க முடியும்"


இவை அனைத்தையும் ஃபெரோஸ் கான் மறுதினம் மறுத்தார்.


இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் ஹை கமிஷன், வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்கள் அவருக்கு எதிர்காலத்தில் விசா அளிக்க மறுத்தது.[10]


சொந்த வாழ்க்கை[தொகு]

பெரோஸ் கானுக்கு ஃபார்டீன் கான் என்ற மகன் இருந்தார், இவர் பாலிவுட்டின் முன்னாள் நடிகையான மும்தாஸ் அவர்களின் மகள் நடாஷா கான்யை மணந்துள்ளார். இவருக்கு லைலா கான் என்ற மகள் இருக்கிறாள்[3]இவர் ஃபார்ஹான் ஃபர்னிச்சர்வாலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். லைலா, ரோஹித் ராஜ்பால் என்ற தேசிய நிலை டென்னிஸ் விளையாட்டு வீரரை மணந்து பின்னர் விவாகரத்து செய்தார். பின்னர் 2010 -இல் ஃபர்னிச்சர்வாலாவை மணந்து கொண்டார்.


விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

பிலிம்ஃபேர் சிறந்த புதுமுகம் விருது:டிடி (1960)

பிலிம்ஃபேர் சிறந்த துணை நடிகர் விருது ஆத்மி அவுர் இன்சான்(1970)

பிலிம்ஃபேர்சிறந்த துணை நடிகருக்கான பரிந்துரை இன்டர்நேஷனல் க்றுக்(1974)

பிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது, 2001

பிலிம்ஃபேர்சிறந்த வில்லன் பரிந்துரை ஜனஷீன் திரைப்படம்,(2003)[11]

ஜீ சினி விருது வாழ்நாள் சாதனையாளர்,2008

'தொழிலின் பெருமை' என்ற மாக்ஸ் ஸ்டார்டஸ்ட் விருது,2009[12][13]

பட பட்டியல்

டிடி (1960)

மெயின் சாதி கரனே சலா (1962)

டார்சன் கோஸ் டு இந்தியா (1962) ... பிரின்ஸ் ரகு குமார்

பஹுராணி (1963) ... விக்ரம்

சுஹாகண் (1964) ... ஷங்கர்

சார் தேர்வேஷ் (1964) ... கமர் பக்த்

தீஸ்ரா கவுன் (1965)

ஊன்சே லோக் (1965) ... ரஜினிகாந்த்

ஏக் சபேரா ஏக் லூதெரா (1965) ... மோகன்/விஜய் பிரதாப் சிங்

ஆர்ஷூ (1965) ... ரமேஷ்

தஸ்வீர் (1966)

மெயின் வோஹி ஹூன் (1966) ... விஜய்

ஒஹ் கோயி அவுர் ஹோகா (1967)

ராத் அவுர் தின் (1967) ... திலிப்

சி ஐ டி 909 (1967)

அவுரத் (1967)

ஆக் (1967) ... ஷன்கர்

ப்யாசி சாம் (1969) ... அசோக்

ஆத்மி அவுர் இன்சான் (1969) ... ஜெய் கிஷன் ஜே கே

சபார் (1970) ... சேகர் கபூர்

மேலா (1971)

ஏக் பஹேலி (1971) ... சுதிர்

உபாசனா (1971)

அபராத் (1972) ... ராம் கானா

கஷ்மகாஷ் (1973)

கிஸான் அவுர் பகவான் (1974)

கஹஹோட்டே சிக்கி (1974) ... குதிரை ஓட்டி

கீதா மேரா நாம் (1974)

பகத் தன்ன சாட் (1974) ... ராமு

அஞ்சான் ராஹேன் (1974) ... ஆனந்த்

இன்டர்நேஷனல் க்ரூக் (1974) ... SP ராஜேஷ்

ராணி அவுர் லல்பரி (1975) ... குலிவேர்

கால சோனா (1975) ... ராகேஷ்

ஆ ஜா சனம் (1975) ... Dr. சதீஸ்

தர்மாத்மா (1975) .... ரன்பீர்

ஷராபாத் சோத் டி மைனே (1976)

கபிலா (1976)

நகின் (1976) ... ராஜ்

ஜாது தோனா (1977) ... Dr. கைலாஷ்

தரிந்தா (1977)

சுனொதி (1980)

குர்பானி (1980) ... ராஜேஷ் குமார் / கைலாஷ் நாத்

' க்ஹூன் அவுர் பாணி /0} (1981)

கச்சே ஹீரே (1982) ... கமல் சிங்க்கின் மருமகன்

ஜான்பாஸ் (1986) ... இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சிங்

தயாவான் (1988) ... ஷங்கர் வாக்மரே

மீட் மேரே மன் கா (1991)

யால்கார் (1992) ... ராஜேஷ் அஷ்வினி குமார்

பிரேம் ஆகன் (1998) ...

' ஜனஷீன்(/0} (2003) ... சபா கரீம் ஷா

சித்தப்பா (2005) ... ராமன்

ஏக் கிலாடி ஏக் ஹசீனா (2005) ... ஜெஹன்கிர் கான் (சிறப்பு தோற்றம்)

ஓம் சாந்தி ஓம் (2007) ... அவராக (சிறப்பு தோற்றம்)

வெல்கம் (2007) ... ரன்பீர் தன்ராஜ் சட்டா (RDX)

இறப்பு மற்றும் இறுதி ஊர்வலம்

2009 ஏப்ரல் மாதம் புற்றுநோய்க்கு அவர் பலியானார். அவர் நோய்வாய்பட்டிருந்தபோது பெங்களூரில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு திருமபினார்.


அவர் மிக விரும்பிய பெங்களூர், ஓசூர் ரோடு, ஷியா கபரிஸ்தானில் தனது தாயாரின் சமாதி அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. திரை உலகின் பிரபலங்கள், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். நிஜ வாழ்க்கையை விட பெரிதான அவரது வாழ்க்கை முறைக்காகவும் மற்றும் சினிமாவில் அவரது திறமைக்காகவும் அவர் நினைவுகொள்ளபட்டார்.[2][22]



Whenever we think of retro Hindi films with foot-tapping music, bikini-clad heroines, stylish heroes, and fast car chases we instantly remember Feroz Khan. The flamboyant Khan's movies used to have a high tint of Western culture and style. Be it the exotic international locations or car racing scenes in ‘Apradh’(1972), the Indian version of ‘The Godfather’(1972) in ‘Dharmatma’(1975) (shot in Afghanistan), the very stylish ‘Qurbani’(1980) or the whole cowboy setup in ‘Jaanbaaz’(1986), this Khan was always ahead of his times. Feroz Khan was in the gossip columns for several reasons but one of the very controversial ones was the extra martial affair and a live-in relationship with Jyotika.


Right from his bachelorhood days Feroz Khan was branded as a womanizer. Things changed when this casanova met Sundari. It was love at first sight for these two and after a while Feroz and Sundari became the talk of the town. After dating for around five years, they decided to get married in the year 1965. After a few years of marriage, they were blessed with a daughter Laila and son, Fardeen. As time passed, Feroz got busy with his work and Sundari got busy with home and the kids. Like in most marriages, the romance took a back when Feroz strayed.


Feroz met a very attractive air hostess, Jyotika Dhanrajgir from the famous Dhanrajgir family and fell madly in love with her. When Sundari got wind of this affair, she decided to end their marriage. Feroz however, surprised everyone when he moved to Bangalore with Jyotika and began a live-in relationship with her. Feroz and Jyotika tryst with love continued for more than a decade. While Jyotika pressed Feroz to marry her, the handsome star was not too keen to take the plunge. Finally, Jyotika decided to move out of this relationship as she was fed up of Feroz’s fake assurances. In a shocking interview, Feroz denied even knowing Jyotika. This interview shattered Jyotika’s dreams and she left him for good and settled in London.





Feroz was heartbroken when Jyotika left him. Sundari on the other hand, started her own business and was doing well for herself. Feroz was always a friend to her and a dear father to his children. Sundari's new found confidence and independence helped in developing a mature friendship between her and Feroz. Feroz began bonding more with his family. He also realized that Sundari was the only woman who really understood him. Gradually, Feroz came back to Sundari and his estranged kids but the relationship with was never quite the same again, quite understandably. He lived separately under the same roof and started focusing on his work.


The style icon breathed his last on April 27, 2009 in his Bangalore home.Fun Facts -


Sundari had a daughter named Sonia from her previous relationship. Feroz and Sundari decided to keep this as a secret from the media at the time of their marriage. Later Sonia used to work as the continuity in-charge in many of Feroz’ films like ‘Qurbani’ (1980). She used be credited on screen as Sony Shahani. Sonia got married to the world famous business man, Rajendra Sethia.


Feroz and Sundari’s daughter Laila Khan was born in 1970 & son Fardeen Khan was born in 1974.





Feroz was very fond of Mumu (Mumtaaz). They shared a great rapport on the sets and were friends. Later, Feroz’s son Fardeen got married to Mumtaaz’s daughter Natasha Madhwani.


Daughter Laila Khan got married to Farhan Furniturewala. Farhan is the former husband of Pooja Bedi.


Jyotika’s sister Sabrina Dhanrajgir, was the costume designer in Feroz Khan directed film Yalgaar (1992).


COMMENTS


 Sundari and Feroze lived in the same house on two different floors. They never reconciled, and never spoke to each other. She was and is a very strong woman. But just from these pictures,

 Feroze definitely had a type. 


Feroz and sundri hated each other and there was no friendship. They lived in the same building becoz she had no where to go and lived with fardeen. Mumtaz had an affair for many years with feroze but I guess thats normal in bollywood.


Fardeen Khan is having an affair with Rekha Tourani who lives in Dubai.


Feroze was never faithful , this was the last straw. Sundari ket telling him to sort himself out or she'll leave him. He thought these were empty threats as she had no way of supporting herself. He was shocked when she did finally walk out of the marriage . I'm sure it must have been difficult for the lady but I have immense respect for her refusal to put up with a sham of a marriage.


Every Friday, there's a new story about a yesteryear star two timing his wife and kids, starting a life with his mistress and then ending that too to go back to his wife. Poor wives had to put up with this and take these cheating ass men back. SAD




Tuesday, 6 October 2020

VINOD KHANNA , HINDI ACTOR BORN 1948 OCTOBER 6-2017 APRIL 27

 


VINOD KHANNA , HINDI ACTOR 

BORN 1948 OCTOBER 6-2017 APRIL 27




வினோத் கண்ணா (6 அக்டோபர் 1948 – 27 ஏப்ரல் 2017) ஓர் புகழ்பெற்ற இந்திய திரைப்பட நடிகர்,திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.[2]

இளமை
கமலா மற்றும் கிருஷ்ணசந்த் கண்ணாவிற்கு பிறந்த ஐந்து குழந்தைகளில் வினோத்தும் ஒருவர். கிருஷ்ணசந்த் கண்ணா ஆடைகள்,சாயம் மற்றும் வேதிப்பொருட்கள் தொடர்பான வியாபாரம் செய்து வந்தார்.வினோத் கண்ணாவிற்கு மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர்.இந்தியப் பிரிவினையின்போது குடும்பத்துடன் மும்பைக்கு குடிபெயர்ந்தனர்.

மும்பையில் அவர் ராணி மேரி பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை பயின்றார். அதன் பின் மும்பை கோட்டைப் பகுதியிலுள்ள புனித சேவியர் மேல்நிலை பள்ளிக்கு மாற்றப்பட்டார். 1957ஆம் ஆண்டு தில்லிக்கு குடிபெயர்ந்து அங்கு தில்லி பப்ளிக் பள்ளியில் படித்தார். 1960இல் குடும்பம் மீண்டும் மும்பைக்கு மாறியபோதும் தேவ்லாலியிலுள்ள பார்னெசு பள்ளியில் சேர்க்கப்பட்டார். அப்பள்ளியின் தங்குவிடுதியில் இருந்தபோதே அவர் கண்ட இந்தித் திரைப்படம் முகல்-ஏ- ஆசம் அவருக்குத் திரைப்பட ஆர்வத்தைத் தூண்டியது. ஸைடந்ஹாம் கல்லூரியில் வணிகவியலில் பட்டபடிப்பை முடித்தார்.[3]

திரைவாழ்வு



வினோத் கண்ணா 1968ஆம் ஆண்டு சுனில் தத் நடித்த மன் கா பிரீத் என்ற திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார். [4]1968ம் ஆண்டு திரையுலகில் நுழைந்த வினோத் கன்னா, மேரே ஆப்னே, ஜெயில் யாத்ரா, தில்வாலே, வாண்டட் உள்ளிட்ட 141 படங்களில் நடித்துள்ளார்.

அரசியல் வாழ்வு
1997ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பஞ்சாபின் குர்தாஸ்பூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.அதே தொகுதியிலிருந்து 1999ஆம் ஆண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சூலை 2002இல் இந்திய ஆய அமைச்சரவையில் பண்பாடு மற்றும் சுற்றுலா அமைச்சராகப் பணியாற்றினார். ஆறு மாதங்களில் இந்திய வெளிவிவகாரத் துறையில் மாநில அமைச்சராக மாற்றப்பட்டார். 2004ஆம் ஆண்டில் மீண்டும் தமது தொகுதியில் வென்ற வினோத் கண்ணா 2009ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் தோல்வியைத் தழுவினார்.

சொந்த வாழ்க்கை



வினோத் கண்ணா தனது முதல் மனைவி கீதாஞ்சலியை கல்லூரியில் சந்தித்தார். [15] 1971 ஆம் ஆண்டில் கன்னா அவரை திருமணம் செய்து கொண்டார் [48] இத்திருமணத்தின் மூலம் ராகுல் மற்றும் அக்ஷய் பிறந்தனர் . இருவரும் பாலிவுட் நடிகர்கள் ஆனார்கள். 1975 ஆம் ஆண்டில் அவர் ஓஷோவின் சீடராகவும், 1980 களின் முற்பகுதியில் அமெரிக்காவில் ஒரேகனில் உள்ள ரஜினீஸ்புறம் சென்றார். அங்கே ரஜினீஸ் சீடர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதால் 1984-85இந்தியாவிற்கு துரத்தி அடிக்கப்பட்டனர் . இவ்வாறாக ரஜினீஸ்உறவும் முறிந்தது .முதல் மனைவி கீதாஞ்சலியின் உறவும் முறிந்து விவாகரத்து அளிக்கப்பட்டது .

1990 ஆம் ஆண்டில்,கன்னா தொழிலதிபர் ஷரயு டஃப்தாரி மகளான கவிதா டஃப்தாரியை மணந்தார். [51] இந்த திருமணத்தின் மூலமாக 1991 இல் ஷாக்ஷியும் ,பின்னர் ஷிராதா என்ற ஒரு மகளும் பிறந்தனர்

இறப்பு



வினோத்கன்னா கடுமையான வயிற்று போக்கு வியாதியால் துன்பம் அடைந்தார் .எனவே குர்கானில் உள்ள ரெலியன்ஸ் மருத்துவ மனையில் ஏப்ரல்2 , 2017 இல் சேர்ப்பிக்கப்பட்டார் .ஆனால் அவருக்கு சிறுநீர் பையில் புற்று நோய் தாக்கி இருந்ததால் ஏப்ரல் 27 ,2017 இல் மரணம் அடைந்தார் . அன்றே வோர்லி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டார்




Vinod Khanna was one of the most good looking and celebrated actors of his time. He made headlines not only for his films, but also for controversies related to his love affairs and his association with godman Osho or Bhagwan Rajneesh. On the veteran actor's 74th birth anniversary today, his son, Akshaye Khanna's old interview has gone viral in which he talks about his father leaving his family for Osho.

In the early 70s, many celebrities from all over the world got associated with Osho and joined the controversial Rajneesh Movement. While international celebrities like Beatles joined the movement, Indian stars like Parveen Babi, Mahesh Bhatt and Vinod Khanna also followed the cult and became Osho's disciples.

In 1975, Vinod Khanna left his family comprising a wife and two kids, Akshaye and Rahul, and moved to Oregon. Akshaye was just a toddler back then and didn't understand why his father left them. When he turned 15 or 16, he realised who was Osho. The actor talked about his father and how him leaving his family for Osho affected them in an interview to Mid-Day.

Akshaye Khanna said, "(The influence) to not only leave his family, but to take ‘sanyaas’ (renunciation). Sanyaas means giving up your life in totality - family is [only] a part of it. It’s a life-changing decision, which he felt that he needed to take at the time. As a five-year-old, it was impossible [for me] to understand it. I can understand it now."

He added, "In the sense that something must have moved him so deeply inside, that he felt that that kind of decision was worth it for him. Especially, when you have everything in life. And when life doesn’t look as though there’s much more that you can have. A very basic fault-line/ earthquake has to occur within oneself to make that decision. But also stick by it. One can make the decision and say this doesn’t suit me - let’s go back."

ADVERTISEMENT

Akshaye clarified that unlike the common belief that Vinod returned after growing disenchanted with the movement, Vinod Khanna came back only because the commune was disbanded by the US government. He said, “It was just the fact that the commune was disbanded, destroyed, and everybody had to find their own way. That’s when he came back. Otherwise I don’t think he would’ve ever come back."

Vinod Khanna, who made his Bollywood debut with 1968 film Mann Ka Meet, breathed his last on April 27, 2017. He was suffering from cancer. After initially playing negative roles, he got his first break as a hero in Hum Tum Aur Woh (1971). Vinod Khanna also had a political stint when he joined Bharatiya Janata Party (BJP) in 1997 and was elected from Gurdaspur constituency in Punjab. He served as Union Minister for Culture and Tourism in July 2002 in Atal Bihari Vajpayee’s government.

.

Saturday, 16 May 2020

MARY WOLLSTONECRAFT ADVOCATE FOR WOMEN RIGHTS BIOGRAPHY BORN 1759 ,APRIL 27 -1797 SEPTEMBER 10



MARY WOLLSTONECRAFT ADVOCATE
 FOR WOMEN RIGHTS BIOGRAPHY BORN 
1759 ,APRIL 27 -1797 SEPTEMBER 10




Mary Wollstonecraft Biography
Mary Wollstonecraft was a British writer, philosopher and an advocate of women’s rights. This biography provides detailed information about her childhood, life, works, achievements & timeline.

Quick Facts
Birthday: April 27, 1759

Nationality: British

Famous: Quotes By Mary Wollstonecraft Feminists

Died At Age: 38

Sun Sign: Taurus

Born In: Spitalfields

Famous As: Writer
Family:
Spouse/Ex-: William Godwin

Father: Edward John Wollstonecraft

Mother: Elizabeth Dixon

Siblings: Eliza, Everina

Children: Fanny Imlay, Mary Shelley

Died On: September 10, 1797

Place Of Death: London

Personality: INFJ

Mary Wollstonecraft was a famous, eighteenth-century British writer who is best known for her work, ‘A Vindication of the Rights of Women’. She was brought up in London by an abusive father and left home early in order to pursue a career in writing. She worked as a publisher of radical texts and as a translator, before she became a published author. A staunch Anglican, many of her works were inspired by her experiences at the church. During her brief career, she wrote a couple of novels, treatises, a conduct book and a children’s book. Although she was a feminist, she believed that both men and women should be treated as coherent beings, with a social mandate, instituted on reason. Until the late 20th century, her personal life received a lot more attention than her professional life, due to her various ill-fated relationships and a late marriage. Wife of William Godwin, one of the founding fathers of the anarchist movement, Mary Wollstonecraft’s life has been documented by her husband in ‘Memoir’, which sabotaged her reputation for a long period of time. Know more about her life in this brief biography.


Recommended Lists: Writers Philosophers Women's Rights Activists British Women
Childhood & Early Life
Mary Wollstonecraft was the second of seven children born to Edward Wollstonecraft and Elizabeth Dixon. Although the family led a comfortable life when she was a child, they eventually became bankrupt and had to sustain hardships. Her father often turned violent and got physically abusive with her and her mother. Her mother soon passed away and perturbed by her father’s actions, she moved out of her house to earn her own livelihood in 1780.

.
Career

In 1784, Wollstonecraft, her sister Eliza and best friend, Fanny, established a school in Newington Green. The school closed down in 1785, when Mary abandoned it to be with Fanny, who had married and was living in Portugal, but was severely ill. After Fanny's death in 1786, she took up the position as a governess for the Kingsborough family in Ireland, which made her realize that she was not suited for domestic/household work. She finally moved to London and was appointed as a translator to Joseph, Johnson, a publisher of radical texts.
In 1787, drawing from her experiences she wrote ‘Thoughts on the Education of Daughters’ in which she talked about the horror of intelligent women being subject to rich fools.
She became a regular contributor to John’s magazine, ‘Analytical Review’ in 1788.
One of her novels, ‘Mary: A Fiction’ condemned the patriarchal institution of marriage and described its effects on women. It was published in 1788 and became one of her most radical, feminist work.

In 1792, she published her most prominent work, ‘A Vindication of the Rights of Women’, through which she criticized the prevalent belief that women are just household adornments. The ideas presented by her in this book, were clearly revolutionary at the time and caused tremendous controversy.
Apart from her novels, she also wrote a reflective, travel narrative titled ‘Letters Written in Sweden, Norway, and Denmark’, which was published in 1796.

.
‘Mary: A Fiction’ was published in 1788 which received moderate success, but was considered very bold and one of her most radical, feminist works. The book was reprinted in the 1970s and was translated into three languages, in the wake of the second wave of the feminist movement. In 1792, ‘A Vindication of the Rights of Women’, considered her most important work created a new wave of feminist sentiments. It argued that women ought to have an education commensurate with their position in society and that they should not purely be viewed as an objects of pleasure for men. While this publication attracted a lot of negative publicity at the time, it also received positive reviews and was even translated into French.

‘Letters Written in Sweden, Norway, and Denmark’ was published in 1796 and became one of her most popular books. It received positive reviews from the critics and also influenced poets like William Wordsworth. The first travel narratives of its kind, this publication was one of her last works, but earned her great fame towards the end of the 18th century.
.
Personal Life & Legacy

In 1792, while visiting a couple of friends in France, she met Captain Gilbert Imlay and they fell in love. She soon became pregnant and gave birth to their child, Fanny, named after her best friend. In May 1795, she attempted suicide, after facing rejection from Imlay. After two failed suicide attempts she returned to the literary world and soon became involved in a relationship with William Godwin. She soon became pregnant with Godwin’s child and the duo decided to marry, so that their child would be legitimate. They married on March 29, 1797 and moved into independent houses, where they communicated through letters. It was a brief, but a happy relationship. On August 30, 1797, she gave birth to Mary Shelley, her second daughter, but developed some uterine complications during childbirth. Wollstonecraft passed away ten days later due to septicemia.

Following her death, Godwin published ‘Memoirs’ narrating her life and works. With the advent of the feminist movement, many budding writers like Emma Goldman and Virgina Woolf, began embracing her ideologies.Wollstonecraft’s works returned to prominence in the 1960s and 1970s during the second wave of the feminist movement. Six books were published on her life and works which influenced Ayaan Hirsi Ali, a political writer and later, Nobel Laureate, Amartya Sen.

Recommended Lists:British Intellectuals & AcademicsBritish Female Intellectuals & AcademicsTaurus Women
Trivia
This famous author fell in love with the painter, Henry Fuseli, though he was already married. She suggested that the three of them live together to which Fuseli’s wife, quite expectedly, disagreed.
Quotes By Mary Wollstone


.Mary Wollstonecraft was an English writer who advocated for women's equality. Her book 'A Vindication of the Rights of Woman' pressed for educational reforms.
Who Was Mary Wollstonecraft?
Brought up by an abusive father, Mary Wollstonecraft left home and dedicated herself to a life of writing. While working as a translator to Joseph Johnson, a publisher of radical texts, she published her most famous work, A Vindication of the Rights of Woman. She died 10 days after her second daughter, Mary, was born.

Early Life and First Works
Feminist writer and intellectual Mary Wollstonecraft was born on April 27, 1759, in Spitalfields, London. Her father was abusive and spent his somewhat sizable fortune on a series of unsuccessful ventures in farming. Perturbed by the actions of her father and by her mother’s death in 1780, Wollstonecraft set out to earn her own livelihood. In 1784, Mary, her sister Eliza and her best friend, Fanny, established a school in Newington Green. From her experiences teaching, Wollstonecraft wrote the pamphlet Thoughts on the Education of Daughters (1787).

When her friend Fanny died in 1785, Wollstonecraft took a position as governess for the Kingsborough family in Ireland. Spending her time there to mourn and recover, she eventually found she was not suited for domestic work. Three years later, she returned to London and became a translator and an adviser to Joseph Johnson, a noted publisher of radical texts. When Johnson launched the Analytical Review in 1788, Mary became a regular contributor. Within four years, she published her most famous work, A Vindication of the Rights of Woman (1792). In the work, she clearly abhors prevailing notions that women are helpless adornments of a household. Instead, she states that society breeds "gentle domestic brutes” and that a confined existence makes women frustrated and transforms them into tyrants over their children and servants. The key, she purports, is educational reform, giving women access to the same educational opportunities as men.


The ideas in her book were truly revolutionary at the time and caused tremendous controversy. Wollstonecraft also wrote Maria, or the Wrongs of Woman, which asserted that women had strong sexual desires and that it was degrading and immoral to pretend otherwise.

Monday, 27 April 2020

J.C.DANIEL ,BEESMA OF MALAYALAM CINEMA BORN 26 FEBRUARY 1900 - 1975 APRIL 27






J.C.DANIEL ,BEESMA OF MALAYALAM CINEMA 
BORN 26 FEBRUARY 1900 - 1975 APRIL 27


.

மாற்று சினிமாக்களின் களமாக விளங்கும் மலையாள சினிமாவின் முதல் கலை வாசலை திறந்து வைத்தவர் தமிழர் என்பதை நம்ப முடிகிறதா..? ஆம். நம்பிதான் ஆக வேண்டும். மலையாளத்தில் விகதகுமாரன் எனும் முதல் திரைப்படத்தை உருவாக்கியவர் ஜெ.சி டேனியல்.  படத்தின் தயாரிப்பு, இயக்கம், கதை, படப்பிடிப்பு, படத்தொகுப்பு மற்றும் கதநாயகனாகவும் நடித்திருந்தார்.

கேரளத்தின் தென்பகுதியான திருவிதாங்கூரில் நடத்தப்பட்ட டேனியலின் முன்னோடி முயற்சியில் இப்படம் எடுக்கப்பட்டது. அன்றைய திருவிதாங்கூர் பகுதி இன்றைய தமிழ்ப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கியது.

மலையாள சினிமாவின் தந்தையாக மதிக்கப்படும் டேனியல் பிறப்பால் தமிழர் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த நெய்யாற்றின்கரையில் 26.2.1900-ல் ஞானாபர்னம் ஜோசப் டேனியல் ஞானாம்பள் தம்பதியினாருக்கு ஏழாவது மகனாக பிறந்தார்.

பின்பு 1904-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்திஸ்வரத்தில் குடியேறினார். பள்ளி படிப்பையும் அங்கேயே பயின்றார். பின் உயர்கல்விக்காக திருவனந்தபுரத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் சேர்ந்து படித்தார்.


1924-ம் ஆண்டு தனது வாழ்க்கை துணையான ஜானெட்டை இருவீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்.


திரைப்படக் கலை மீதான பெரும் ஆர்வத்தால் அதில் ஈடுபட முயற்சி மேற்கொண்டார். அன்றைய காலகட்டத்தில் எல்லோருக்கும் தெரிந்த புராணக்கதைகள், நல்லத்தங்காள் போன்ற தொன்மக் கதைகள் நடகமாகப்பட்டிருந்தன.

ஆனால் டேனியல் தற்காப்புக் கலையான களரியில் ஆர்வமும் பயிற்சியும் பெற்றிருந்த அவர், மக்களிடையே களரி குறித்த சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரைப்படம் ஒன்றையே இயக்க விரும்பினார்.

தனது நிலங்களை விற்று நிதி திரட்டி பம்பாய்க்கும் சென்னைக்கும் சென்று சினிமா அறிவைத் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அன்றைய சமூகத்தில் அதற்கு மதிப்பு இருக்கவில்லை. அது கீழான செயலாகக் கருதப்பட்டது.


'பம்பாயில் கோவிந்த பால்கே சினிமா பிடித்துப் பணக்காரராகியிருக்கிறார். மதராசில் நடராஜ முதலியாரும் முதல் சினிமா எடுத்துப் பெரிய ஆளாகியிருக்கிறார். திருவிதாங்கூரில் அதைச் செய்து இந்த ஜெ.சி. டேனியல் பெரிய ஆளாவேன்' என்று மனைவி ஜானெட்டிடம் செல்லுவர்.

நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஜெ.சி. டேனியல் தன்னுடைய பகுதியான திருவிதாங்கூரில் முதல் மலையாளப் படத்தைத் தயாரிக்க முயன்றார்.

அக்கால கட்டத்தில் படம் பிடிப்பதே பெரிய விஷயமாய் இருந்திருக்கும். அதிலும் ஒரு பெண்ணை நடிக்க வைப்பது என்பது ஜெ.சி. டேனியல் முன்பிருந்த மிக பெரிசாவலாகும்.


படத்தில் நடிக்கும் பெண்ணை  இழிவாகப் பார்க்கப்படும் நேரம் அது.

அரும்பாடுபட்டுத் திரைப்படத் தயாரிப்பைத் தொடங்கிய டேனியலுக்குக் கலை சார்ந்த சமூகப் பிரச்சனையாக முன் நிற்பது இந்த ஒவ்வாமை.

படத்தில் நடிக்கப் பெண்ணைத் தேடி அலுத்துபோய் உள்ளூர்ப் பெண்ணான ரோசம்மாவை நடிக்க வைக்க முயற்சி செய்தார். ஆனால், ரோசம்மா தீண்டப்படாத சாதி என்று முத்திரை போடப்பட்ட தாழ்த்தப்பட்ட இனப் பெண்

டேனியல் படமாக எடுக்க விரும்பும் படத்தின் கதையில் அவளுக்கு அளிக்கப்படுவது உயர் சாதியான நாயர் பெண்ணின் பாத்திரம். அதை படக் குழுவில் இருக்கும் ஒருவரே எதிர்க்கிறார்.

சினிமாவில் தீண்டாமையும் விலக்கும் இல்லை என்று நம்பும் டேனியல் அவரை சரோஜினி என்ற நாயர் பெண்ணாக நடிக்கவைத்துப் படப்பிடிப்பை முடிக்கிறார்.

திருவாங்கூர் நேஷனல் பிக்சர் இந்த படத்தை தயரித்தனர். படத்தை ஜெ.சி. டேனியல் திருவனந்தபுரத்தில் உள்ள கேபிடல் தியேட்டரில் நவம்பர் 7 1928 திரையிட்டார்.


படத்தின் முதல் திரையிடலே அலங்கோலமாகியது. தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்த பெண் நடிப்பது மட்டுமல்லாமல் உயர் சாதிக்காரியாக வேடம் கட்டுவதைச் சகித்துக்கொள்ள முடியாது என்று சாதிய சமூகம் சீறியது.

அதுமட்டும்மல்லாது ரோசியாக மாறிய ரோசம்மாவைக் கொல்லவும் விரட்டியது. உயிர் தப்பி ஓடும் ரோசி பின்னர் என்ன ஆனார் என்று அறிய முடியாமல் போனது. மலையாள சினிமாவின் முதல் நாயகி தனது முகத்தைத் திரையில் பார்க்கவே முடியாமல் மறைந்து போனார்.  

இந்த சம்பவம் தந்த கசப்புக்கும் தோல்விக்கும் பிறகு கடனாளியான டேனியல் பல் மருத்துவம் கற்று மருத்துவத் தொழில் ஈடுபட்டார். வசதியான வாழ்க்கைக்கு திரும்பிய அவரை, மீண்டும் சினிமா ஈர்த்தது.

மீண்டும் கைப்பொருள் இழந்து வறுமைக்குள் விழுந்தார். மனைவியைத் தவிர மக்களும் சுற்றமும் அவரை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகுகியது. டேனியல் தனது எஞ்சிய வாழ்நாளை அகஸ்தீஸ்வரத்திலும் பாளையங்கோட்டையிலும் வறுமையில் கழித்தார்.

திரைப்படக் கலை மீதான பெரும் ஆர்வத்தால் அதில் ஈடுபட்ட டேனியல் அவர் கனவு கண்டபடி பெரும் செல்வந்தராகவோ புகழ் பெற்றவராகவோ ஆகவில்லை. சாபக்கேடாக கலைஞனை ஒட்டிக் கொள்ளும் வறுமையில் தள்ளப்பட்டார். கடனாளியாகித் தலைமறைவாக வாழ்ந்தார். அவரது முன்னோடி முயற்சி அடையாளம் காணமல் போனது.

கடைசி காலத்தில் மனைவி ஜானெட் மட்டும் அவருக்கு உறுதுணையாக இருந்தார். இந்திரா காந்தி பிரதமாராக இருந்த போது டேனியலுக்கு ஒரு விருது கிடைத்தது. அந்த விருதுக்காக சந்தோஷம் அடையும் நிலையில் இல்லை. வெறும் ஓரு துளி கண்ணீர் மட்டும் அந்த விருதை வரவேற்றது.

மாதம் வெறும் அரசிடம் இருந்து வரும் 300 ரூபாய்காக காத்திருந்து காத்திருந்து அது வராமல் போனது தான் கொடுமையின் உச்சம். 1975 ஏப்ரல் 29-ம் தேதி இயற்க்கையாகவே மரணம் எய்தினார்.

அதன்பிறகு வெளிவந்த மலையாள சினிமா எல்லாம் ஜெ.சி டேனியலின் வழி வந்த முயற்சியின் பரிணாம வளர்ச்சியே. ‘விகதகுமாரன்' படத்தின் பிரதிகள் அழிந்து போயிருக்கின்றன. அப்படி ஒரு படம் எடுக்கப்பட்டதற்கான நிலையானஆதாரங்கள் எதுவும் இல்லை என்ற காரணத்தால் அவரது முன்னோடி முயற்சி புறக்கணிக்கப்படுகிறது.

ஆனால் உண்மையான காரணம் ஆதாரமில்லை என்பதல்ல. பேசாப்படமாக எடுக்கப்பட்ட ஒன்றை எப்படி முதல் மலையாளப் படம் என்று சொல்வது? இரண்டாவது அதை எடுத்தவர் ஒரு தமிழர். மூன்றாவது ஒரு மாபெரும் கலையின் முன்னோடி, சாதியில் குறைந்த நபர். அவரை எப்படி முன்னிறுத்துவது?

மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கமலின் 'செல்லுலாய்ட்' திரைப்படத்தின் தமிழ் மாற்று 'ஜெ.சி. டேனியல்'. இந்தியத் திரைப்பட நூற்றாண்டைச் சிறப்பிக்கும் நோக்கில் மலையாளத்தின் முதல் திரைப்படத்தை உருவாக்கிய ஜெ.சி.டேனியலுக்கு மரியாதை அளிக்கும் விதமாக அவரைப் பற்றி படம் எடுத்தார்.

இந்திய சினிமாவின் ஆரம்ப முயற்சிகளை ஒப்பிடும்போது டேனியலின் ‘விகதகுமாரன் ' பல விதங்களில் உண்மையாகவே முன்னோடி முயற்சிதான்.

தொடக்க கால இந்தியப் படங்கள் பெரும்பான்மையும் புராணக் கதைகளை மையமாகக் கொண்டவை. டேனியலின் படம் சமூக நாடகத்தை மையமாகக் கொண்டது.

ஆரம்ப காலப் படங்களில் பெண் வேடங்களில் ஆண்களே நடித்தனர். அல்லது விலைமாதர்களே அந்தப் பாத்திரங்களை ஏற்றனர்.

ஒரு பெண்ணைத் திரைப்படத்தில் பங்கேற்கச் செய்த முதல் இயக்குநர் டேனியல் மட்டுமே. ‘கலைக்குச் சாதியில்லை' என்ற தனது நம்பிக்கையை அழுத்தமாக உணர்த்த அன்றைய தீண்டத்தகாத சாதிப் பெண்ணை நடிக்க வைத்த பெரும் துணிவும் அவருக்கே உரியது.

அவரது துணிவைப் பொது சமூகம் உதாசீனப்படுத்தியது என்ற குற்ற உணர்ச்சியையும் அதற்குக் கழுவாயாக அவரை ஒரு மாநில மொழி சினிமாவின் தந்தையாக இன்று போற்றுகிறது. அது ஏனோ கேரளா  அரசு அவருக்கான உரிமையை வழங்க மறுத்தது.
.



ஜெ.சி.டேனியல் ! மலையாள சினிமாவின் தந்தை ஒரு தமிழர்

ஜெ.சி.டேனியல் - மறக்கப்பட்ட தமிழரின் மரியாதைக்குறிய பதிவு! ஆம் ஆண்டு மலையாளத்தின் முதல் அசையும் திரைப்படமான ‘விகட குமாரன்’ படத்தை எடுத்தவர் தமிழரான ஜெ.சி.டேனியல். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய
பணக்காரர் இவர்(கன்னியாக்குமரி மாவட்டம்
அப்போது கேரள மாநிலத்துடன் இணைந்திருந்தது.  சினிமாவின் மீது உள்ள காதலால் பம்பாய்க்கும், மதராஸுக்கும் சென்று சினிமா கற்றுக்கொண்டு தன் சொத்துக்களை எல்லாம் விற்று சொந்தமாக ஒரு கேமரா வாங்கி தன் சொந்த ஸ்டூடியோவை கேரளாவில் துவங்கினார். இந்தியிலும், தமிழிலும் இதிகாசங்களும் புராணங்களும் திரைப்படங்களாக வந்த நேரத்தில் வாழ்வியலை சொல்லும் சமுகம் சார்ந்த கதையை திரைப்படமாக எடுத்தார் ஜெ.சி.டேனியல். இந்த திரைப்படத்தில் நாயகியாக யாரும் நடிக்கவராத காரணத்தால் கேரளாவில் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கருதப்படுகிற சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் தெருக்கூத்துக் கலைஞரை நாயகியாக நடிக்க வைத்தார். இந்த திரைப்படத்தை அவரே இயக்கி அதில் நடித்தும் இருந்தார்.


திரைப்படத்தில் கதாநாயகி நாயர் சமூகத்தை சேர்ந்தவராக சித்தரிக்கப்பட்டிருந்தது. ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணை எப்படி உயர்ந்த சமூகத்தை சேர்ந்த பெண்ணாக நடிக்க வைக்கலாம் எனக் கூறி அப்போதிருந்த ஆதிக்க சமூகத்தினர் இந்த திரைப்படத்தை திரையிடக்கூடாது என தடுத்து நிறுத்தினர். மூன்று காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்ட அந்த படத்தை தயாரித்த ஜெ.சி.டேனியல் தன் சொத்துக்கள் பறிபோனதால் ஏழ்மையான நிலைக்கு தள்ளப்பட்டார். அந்த படத்தின் பிரதிகள் எரிக்கப்பட்டதால், மலையாளத்தின் முதல் சினிமாவை எடுத்தவர் ஜெ.சி.டேனியல் என்ற பதிவு இல்லமலே போனது. அவர் தமிழர் என்ற காரணத்தால் ஜெ.சி.டேனியலுக்கு சேரவேண்டிய மரியாதையை கேரள அரசாங்கம் கொடுக்க மறுத்தது. இந்த உண்மையை தெரிந்துகொண்ட ஒரு பத்திரிக்கையாளர் எடுத்த முயற்சியால், இப்போது கேரள அரசாங்கம் ஜெ.சி.டேனியலை மலையாள சினிமாவின் தந்தையாக ஏற்றுக்கொண்டுள்ளது. ஜெ.சி.டேனியல் பெயரில் வருடம் ஒருமுறை விருதும் வழங்கப்படுகிறது. 

படம் எடுப்பதற்காக ஜெ.சி.டேனியல் எடுத்த முயற்சிகளையும், படம் எடுத்த பின்னர் அவர் பட்ட துன்பங்களையும் தான் வெள்ளித்திரையில் விளக்குகிறது பிருத்விராஜ், மம்தா உட்பட பலர் நடித்திருக்கும் ஜெ.சி.டேனியல் திரைப்படம். மலையாளத்தில் ரிலீஸாகி 7 மாநில அளவிலான விருதுகளை வென்ற இத்திரைப்படத்தை தற்போது தமிழில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்< இத்திரைப்படத்தில் இடம்பெறும் ’காற்றே காற்றே’, ’அம்மாடி நான்’ என்கிற பாடல்கள் மலையாளத்தில் மாபெரும் வெற்றிபெற்றதோடு தமிழிலும் பல ரசிகர்களை கவந்துள்ளது

SRI RANJANI , TELUGU ACTRESS BORN 1927 FEBRUARY 22 - 1974 APRIL 27


SRI RANJANI , TELUGU ACTRESS BORN 1927 FEBRUARY 22 - 1974 APRIL 27



ஸ்ரீரஞ்சனி (Sriranjani 22 பெப்ரவரி 1927 – 27 ஏப்ரல் 1974) என்பவர் தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகையாவார். இவர் ஸ்ரீரஞ்சனி (சீனியர்) என்பவரின் தங்கை. அதனால் இவர் ஸ்ரீரஞ்சனி (ஜூனியர்) என அழைக்கப்பட்டார்.[1] இவர் பெரும்பாலான திரைப்படங்களில் துன்பத்தில் உழலும் மனைவி பாத்திரங்களில் நடித்தார்.

முன் வாழ்க்கை
ஸ்ரீரஞ்சனி பிறந்தது ஆந்திரப்பிரதேசம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள முருக்கிபுடி கிராமமாகும். இவரது அக்கா மூத்த ஸ்ரீரஞ்சனியும் ஒரு நடிகையாவார். இவர் முதலில் தெலுங்குப் படங்களில் நடித்து வந்தார். இவரது இயற்பெயர் மகாலட்சுமி. இவர் தன் அக்காவுடன் வளர்ந்து, திரைத்துறையில் நடிக்க விரும்பினார். சித்திரப்பு நாராயணமூர்த்தி இவருக்கு நடிக்கும் வாய்ப்பை பீஷ்மா (1944) படத்தில் அளித்தார். பின்னர் கொல்லபாமா, பிரம்மாச்சாரி, கீதாஞ்சலி, மதலாசா, லைலா மஜ்னு போன்ற படங்களில் நடித்தார். இவர் வாழ்வின் திருப்பு
முனையான பாத்திர வாய்ப்பாக குணசுந்தரி கதா ( 1949 ) என்ற படம் புகழ்பெற்ற இயக்குநரான கத்ரி வெங்கட ரெட்டி இயக்கிய படத்தில் கிடைத்தது. இவர் நடித்த குண சுந்தரி பாத்திரம் திரைத்துறையில் இவருக்கு நற்பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. தெலுங்கு படமான குணசுந்தரி கதா படத்தை தமிழில் எடுத்தபோது குண சுந்தரி வேடத்தில் தமிழிலும் ஸ்ரீரஞ்சனியே நடித்து பாராட்டைப் பெற்றார். இதன் பிறகு தலைசிறந்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கத் துவங்கியது. மன்றதண்டம், சங்கராந்தி, பிரேமா, ப்ரதுகு தெருவு, சுவயம்ப்ரபா, ராமாஞ்சநேய யுத்தம் போன்ற பல படங்களில் நடித்தார். என்றாலும் இவரின் குணசுந்தரி கதா பட நடிப்பு எப்போதும் பாராட்டத்தக்கதாக இருந்தது.

இவர் நடித்த தமிழ்ப் படமான பராசக்தி (1952), இவருக்கு நற்பெயரை பெற்றுத் தந்தது. அதே ஆண்டு அவர் எம்.ஜி.ஆருடன் குமாரி என்ற படத்தில் நடித்தார். ரத்தக்கண்ணீர் படத்தில் தொழுநோய் பிடித்த (1954) நாயகனாக நடித்த எம்.ஆர்.ராதாவுக்கு இணையாக நடித்தார். ராஜி என் கண்மணி (1954) படத்தில் ராஜி என்னும் பார்வையற்ற பூக்காரி பாத்திரைத்தை ஏற்று நடித்தார்.[2] இந்தப்படம் சார்லி சாப்ளின் படமான சிட்டி லைட்சு (1931) படத்தின் தழுவல் ஆகும்.

1960 ஆம் ஆண்டு படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெற்றார். மீண்டும் வயதான தாயார், குணச்சித்திர வேடங்களில் நடித்தார். 1974 ஆம் ஆண்டு காலமானார்.



ஸ்ரீ ரஞ்சனி – 22.2.1927-ல் பிறந்து 27.4.1974-இல் மரணமடைந்தார். ’குமாரி’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர். பிரபல தமிழ், தெலுங்கு நடிகை. ‘விக்ரமாதித்தன்’ படத்திலும் நடித்தார். பராசக்தி படத்தில் சிவாஜிகணேசனின் தங்கையாக கல்யாணி என்ற பாத்திரத்தில் நடித்தவர் என்றால் பலருக்கு உடனடியாக ஞாபகம் வரும். தமிழில் ராஜீ என் கண்மணி, பராசக்தி, மூன்றெழுத்து போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.தமிழிலும் தெலுங்கிலுமாக 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சோக வேடங்களில் அதிக படங்களில் நடித்த இவரை ‘கண்ணீர் திலகம்’ என்று கூறலாம். ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், முரிக்கிபுடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். 1949-இல் கத்ரி வெங்கிட ரெட்டி என்பவர் இயக்கிய ‘குணசுந்தரி கதா’ என்ற திரைப்படம் இவரது திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது.
ஸ்ரீரஞ்சனி- அக்காவின் பெயரில் கலக்கிய தங்கை!
Updated: July 15, 2016 11:48 IST

பா.தீனதயாளன்

ஒரு நடிகை எப்படிப்பட்ட பாத்திரம் கொடுத்தாலும் நடிக்கணுமே தவிர, எதிர்ப்புஉணர்வைக் காட்டக் கூடாது. திறமை இருக்குமானால் ஒரு நடிகைக்கு எந்த வேஷமும் நடிக்கக் கூடியதுதான். சிரமத்தைப் பாராமல் வசனத்தை மனப்பாடம் செய். போகப் போக நடிப்பது சுலபமாகிவிடும்.”

திமிறிக்கொண்டு வெளியேறத் துடித்த இளம் தெலுங்கு நடிகைக்கு, இதமாக எடுத்துச் சொல்லி நடிக்கவைக்க வேண்டிய பொறுப்பு இயக்குநர் பஞ்சுவுக்கு. கிருஷ்ணன் – பஞ்சு இரட்டையரில் ஒருவர். மு.கருணாநிதியின் உரையாடலைப் பார்த்துப் பயந்து, பேசக் கஷ்டப்பட்டு பராசக்தியில் சிவாஜியின் தங்கை ‘கல்யாணி’யாக நடிக்க மறுத்து விலக விரும்பினார் ஸ்ரீரஞ்சனி.

விலகிச் சென்றவர் விரும்பி வந்தார்

ஸ்ரீரஞ்சனி நடித்த வாஹினி ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்புகளான ‘வர விக்ரயம்’, ‘குணசுந்தரி கதா’ ஆகியவை ஆந்திராவில் பிரமாதமாக ஓடியவை. ‘எனக்கு அழுகை பிடிக்காது. ஆனால் நீங்கள் என் மனத்தைத் தொட்டுவிட்டீர்கள்!’ என்று ‘வரவிக்ரயம்’ படத்தில் அறிமுகமான பி. பானுமதியின் பாராட்டுதலைப் பெற்றிருந்தார் ஸ்ரீரஞ்சனி.நடிக்கத் தெரிந்தவர். ஆயினும் கலைஞரின் கன்னித் தமிழ் உதடுகளில் ஒட்டாமல் ஓட்டம் பிடித்தது. இரட்டை இயக்குநர்களின் கடின உழைப்பின் பலன், ஸ்ரீரஞ்சனி கொஞ்சம் கொஞ்சமாகக் கல்யாணியாகச் செதுக்கப்பட்டார். தொடர்ந்து அதே பராசக்தி படக் குழு. பி.ஏ. பெருமாளின் நேஷனல் பிக்சர்ஸ் தயாரிப்பு. கிருஷ்ணன் பஞ்சு இயக்கம். தோற்றத்திலேயே அச்சுறுத்தும் முரட்டு ஹீரோவுடன் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம். முதல் நாள் ஷூட்டிங். ஸ்ரீரஞ்சனி நிஜமாகவே நடுநடுங்கினார்.

“என்னைப் பற்றி ஏதாவது சொல்லி சிலர் பயமுறுத்தி இருப்பாங்க. அதைக் கேட்டுட்டு நான் ஒரு ரோக்- அப்படின்னு டிசைட் பண்ணி இருப்பே இல்ல. உண்மையில் நான் நல்லவனுக்கு நல்லவன். பொல்லாதவனுக்குப் பொல்லாதவன். நீ பயப்படாமே வொரி பண்ணிக்காமே ஃப்ரீயா நடி பொண்ணே” என்று சுந்தரத் தெலுங்கில் மனம் திறந்து பேசிய எம்.ஆர். ராதாவின் மனம் திறந்த பேச்சுக்குப் பிறகே அவருடைய மனைவியாக ‘ரத்தக் கண்ணீ’ரில் நடிக்கும் தைரியம் ஸ்ரீரஞ்சனிக்கு வந்தது.

எம்.ஜி.ஆர். – சிவாஜிக்கு இணை
1952-ல் பராசக்தி, 1954-ல் இல்லற ஜோதி, ரத்தக்கண்ணீர் என ஸ்ரீரஞ்சனி நடித்தவை பகுத்தறிவுப் பாசறை முத்திரைகளோடு இன்றும் பரபரப்பாகப் பேசப்படுபவை. சிவாஜி கணேசனின் மனைவியாக ஸ்ரீரஞ்சனி நடித்த இல்லற ஜோதி, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு. அடையாறு ஏரியில் எம்.ஜி.ஆருடன் படகில் டூயட் பாடி நடித்த படம் ‘குமாரி’. அது முகவரியற்றுப் போனது. சார்லி சாப்ளின் நடித்துப் பெரும் வெற்றிபெற்றது சிட்டி லைட்ஸ். ஜெமினியின் தயாரிப்பாக அது ‘ராஜி என் கண்மணி’ என்ற தலைப்பில் தமிழுக்கு ஏற்ப உருமாறியது. டைட்டில் ரோலில் ஸ்ரீரஞ்சனிக்குக் கிடைத்த மிக அரிய சந்தர்ப்பம்.

‘மல்லிகைப்பூ ரோஜா… முல்லைப் பூ வேணுமா…

தொட்டாலே கை மணக்கும் பட்டான ரோஜா’

என்று பாடி நடிக்கும் பார்வையற்ற பூக்காரியாக ஸ்ரீரஞ்சனியை வாரி அணைத்துக்கொண்டனர் தமிழ் ரசிகர்கள்.

காதலிக்குக் கண் கிடைக்கக் காரணம் காதலன் நாயகன் டி.ஆர்.ராமசந்திரன். காதலியோ கண் மருத்துவரை மணந்துகொள்ள, ஏமாந்துபோவார். ராமச்சந்திரன் முதன்முதலில் முழு நீள குணச்சித்திர நடிகராக இந்தப் படத்தில் மாறியிருந்தார்.
‘ராஜி என் கண்மணி’
எல்லாராலும் எதிர்பார்க்கப்பட்ட ‘ராஜி என் கண்மணி’ தோல்வியைச் சந்தித்தது.

“ஜெமினி ஸ்டுடியோ எனக்குக் கிட்டாத பொருளாகத் தோன்றியது. அதில் தயாராகும் ஒரு படத்துக்கு நான் ஹீரோயின் என்றவுடன் பெருமை பிடிபடவில்லை. ஜெமினிக்குள் நுழைந்து நானும் மேக்-அப் போட்டு கதாநாயகியாக நடித்ததை மிகப் பெரிய பாக்கியமாகக் கருதினேன். காரணம் ஜெமினியின் ‘மங்கம்மா சபதம்’.அதில் நடித்த வசுந்தரா தேவியின் தீவிர ரசிகை ஆனேன். வசுந்தரா தேவி ஒரு விதமாகப் பளபளக்கும் ஆடை அணிந்து, தோள்களைக் குலுக்கி ஆடிய நடனம் இன்னமும் என் கண் முன்னே நிற்கிறது. அவர்தான் எனக்கு சினிமா மீது மோகத்தை உண்டாக்கினார்.‘ராஜி என் கண்மணி’யின் டைரக்டர் கே.ஜே. மகாதேவன். கல்கியின் ‘தியாக பூமி’ படக் கதாநாயகன். ஹாலிவுட் படங்களில் அலாதி மோகம் அவருக்கு. பல மேல் நாட்டுப் படங்களைப் பார்த்து, ஏதேதோ ஐடியாக்களைத் தமிழ்ப் படத்தில் புரியவைக்கப் பார்த்தார். ஆனால் ஜனங்களுக்குப் புரியவில்லை” என்று 1971-ல் பேட்டியளித்திருக்கிறார் ஸ்ரீரஞ்சனி.

ஏமாற்றமும் ஏற்றமும்

‘விக்ரமாதித்தன்’ படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடி என்று நம்பவைத்து, கடைசியில் வில்லன் பி.எஸ். வீரப்பாவுடன் இணை சேர்ந்த ஏமாற்றமும் ஸ்ரீரஞ்சனிக்கு உண்டு. ஸ்ரீரஞ்சனியின் இயற்பெயர் மகாலட்சுமி. சினிமாவுக்காக அவரது அக்காவின் பெயரான ஸ்ரீரஞ்சனியைச் சூட்டிக்கொண்டார். அக்காவின் மீது அவ்வளவு பாசம். அவரது அக்கா சினிமாவில் நடித்தாரா என்பது தெரியவில்லை. ஆனாலும் ஸ்ரீரஞ்சனிக்கு ஏற்றம் தந்து கொண்டாடிய ஆந்திரத் திரையுலகம் என்ன காரணத்தாலோ அவரை ஜூனியர் ஸ்ரீரஞ்சனி என்றே அழைத்தது. சினிமா நடிகைகள் செயற்கை வெளிச்சத்தில் கதறி அழுது, இன்னொரு குடும்பத்துக்காக மெழுகாகக் கரைந்து உருகி ஓடி ஒளி தருவது ஸ்ரீரஞ்சனிக்கும் நேர்ந்தது.

அக்கா ரஞ்சனியும் நல்ல பாடிநடிக்கக்கூடிய நடிகை தான் .ஆந்திராவில் கிருஷ்ண விலாச நாடக சமாஜம் நாடக மன்றத்தில் கிருஷ்ணன் ,அபிமன்யு ,சத்தியவான் போன்ற கதா பாத்திரத்திலும் நடித்தவர் .சி .புல்லையா இயக்கிய லவகுசா ,1934  ஸ்ரீ க்ரிஷ்ணலு  ௧௯௩௫ போன்ற படத்திலும் நடித்தவர் .ரஞ்சனிக்கு 21  வயது மூத்தவர்  .இயக்குனர் மல்லிகார்ஜுன ராவ்   இவருடைய மகன் ஆவார்  . தன் அக்காவின் அகால மறைவு 1939 க்குப் பிறகு, அக்காவின் கணவர் நாகமணியையும், அவரது மூன்று குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளும் தவிர்க்க முடியாத பொறுப்பு ஸ்ரீரஞ்சனிக்கு. தொடர்ந்து அரிதாரம் பூச அதிக அவகாசம் அமையவில்லை.

வெற்றிகரமாக ஓடிய டி.ஆர். ராமண்ணாவின் ஓரிரு வண்ணச் சித்திரங்களில், ஸ்ரீரஞ்சனியை ஜெயலலிதாவின் அம்மா வேடத்தில் பார்க்க முடிந்தது. அதன் பிறகு வி.எஸ். ராகவனின் மனைவியாகவும் பிரமிளா, பி.ஆர். வரலட்சுமி, ஜெயசித்ரா ஆகிய அன்றைய அறிமுக நடிகைகளின் தாயாராகவும் பல படங்களில் நடித்த ஸ்ரீரஞ்சனிக்கு ‘இயக்குநர் திலகம்’ கே.எஸ். கோபாலகிருஷ்ணன் ‘வாழையடி வாழை’ திரைப்படத்தில் மனத்துக்கு நிறைவான வேடம் அளித்தார். அடுத்து அஞ்சுகம் பிக்சர்ஸின் வெற்றிப் படமான ‘பூக்காரி’யில் மு.க. முத்துவின் அன்னையாகத் தோன்றினார் ஸ்ரீரஞ்சனி.

நடித்த படங்கள்
இண்டி கோடலு (1974)
ஜீவன தரங்காலு (1973)
பலே தம்முடு (1969)
நேனன்டே நேனே (1968)
பங்காரு பஞ்சாரம் (1965)
ஸ்ரீ கிருஷ்ணார்ஜுண யுத்தம் (1963)
மஹாகவி காளிதாசு (தெலுங்கு, 1960)
கிருஷ்ண லீலலு (1959)
பிரேமே தெய்வம் (1957)
பெங்கி பெல்லாம் (1956)
உமா சுந்தரி (1956)
சந்தானம் (1955)
ஸ்ரீ கிருஷ்ண துலாபாரம் (1955)
ரத்தக்கண்ணீர் (1954)
சந்த்ரஹாரம் (1954)
அமரசந்தேசம் (1954)
பேதமனசுலு (1954)
ராஜி என் கண்மணி (1954)
இல்லற ஜோதி (1956)
திலகம் (1960)
ஒரே வழி
ப்ரதுகு தெருவு (1953)
காதல் (1952)
மணவாட்டி (1952)
பராசக்தி (1952)பெண்குலத்தின் பொன் விளக்கு
பிரேமா (1952)
ராஜேஸ்வரி (1952)
குமாரி (1952)
சங்ராந்தி (1952)
மந்த்ரதண்டம் (1951)

வாலி சுக்ரீவா (1950)
அன்பே தெய்வம் (1956)
லைலா மஜ்னு (1949)
குணசுந்தரி கதா (1949)
கீதாஞ்சலி (1948)
மதலசா (1948)
பெண்குலத்தின் பொன் விளக்கு (1949)
ப்ரேம ரதம் (1947)
கிரகப்பிரவேசம் (1946)
பீஷ்மா (1944)