Showing posts with label 1968. Show all posts
Showing posts with label 1968. Show all posts

Wednesday, 8 June 2022

MADURAI MANI IYER BIOGRAPHY 1912 OCTOBER 25 -JUNE 8,1968

 

MADURAI MANI IYER BIOGRAPHY 1912 OCTOBER 25 -JUNE 8,1968




மதுரை மணி ஐயர் (அக்டோபர் 251912 - ஜூன் 81968கருநாடக இசையுலகில் புகழ்பெற்ற ஒரு இசைக்கலைஞர். சுவரம் பாடுவதில் வல்லுநராகக் கருதப்பட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன், காலப்போக்கில் இது சுருங்கி மணி ஆனது. மதுரையில் எம். எஸ். இராமசுவாமி ஐயர், சுப்புலக்சுமி ஆகியோருக்குப் பிறந்தவர். தகப்பனார் இராமசுவாமி ஐயர், அக்காலத்தில் பிரபலமான இசைக்கலைஞரான வித்துவான் புஷ்பவனத்தின் சகோதரர்.

சிறு வயதிலேயே கருநாடக இசையை முறையாகக் கற்றுக் கொண்டார். இவரது முதலாவது ஆசிரியர் ஸ்ரீ ராகம் பாகவதர். ராகம் பாகவதர் எட்டயபுரம் ராமச்சந்திர பாகவதருடைய மாணவர். அரிகேசநல்லூர் முத்தையா பாகவதருடன் தொடர்பு ஏற்பட்டு அவரது மதுரை தியாகராஜ சங்கீத வித்தியாலயத்தில் மாணவராகச் சேர்ந்தார்.

மணி ஐயர் தம் பெருநோய் காரணமாகத் திருமணம் செய்துகொள்ளவில்லை.

ஆங்கிலக் கல்வியில் தீவிரமான ஈடுபாடு கொண்டவர் மணி அய்யர். ஆங்கில இலக்கியத்தை விரிவாக வாசித்தவர். தமிழிலக்கியத்தில் தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி போன்றவர்களுடன் நெருக்கமான உறவுள்ளவராக இருந்தார்.



சுவரம் பாடுவதில் நிகரற்று விளங்கிய மதுரை மணி, ராக ஆலாபனைகளை தேவையானபோது விஸ்தாரமாகப் பாடுவார். அந்தந்த கிருதிக்குத் தக்கவாறு சுருக்கமாகவோ, நடுத்தரமாகவோ, விவரித்தோ பாடும் திறன் மணியின் சிறப்பு. அவரால் பிரபலம் அடைந்த கீர்த்தனைகள் ஏராளம். நளினகாந்தி போன்ற அப்போது அபூர்வமாக இருந்த ராகங்களை சர்வ சாதாரணமாக பாடும் திறன் கொண்டவர்.



Madurai Mani Iyer was undeniably one of the greatest exponents of Carnatic music. In fact, it wouldn’t be out of place to declare him among the best musicians India has ever produced. Tales of overflowing audience held in trance during his concerts which often spilled over midnight, or Ricksha-wallahs refusing any passengers until the end of his concert bear testimony to this statement.

Mani Iyer was both a people’s and a pundit’s musician. His music could effortlessly sway a music scholar and a novice at the same time. In his time, he was largely responsible for bringing Carnatic music to the masses, and his ability to attract uninitiated listeners of Carnatic music is unsurpassed and remains undiminished, even 48 years after his demise.

Words such as “Genius” and “inimitable” are usually used to describe his music. However, confining his music to an adjective really does not do justice to it. His music is something divine, it’s a bridge which connects to a place that is otherwise inaccessible to us mortals. It’s an experience.

This website hopes to serve not only as a tribute to the great man and his music, but also as a beacon that spreads his music far and wide. We have tried to make this website interactive so that it becomes a forum for sharing information on Mani Iyer. The blog is open to all and we invite everyone to make a contribution to it. Anything related to Madurai Mani Iyer, be it anecdotes, information, thoughts, analysis of his music, tributes, listening experiences etc. can be shared here. We hope that all of your comments and contributions will create a rich repository of information and provide a greater insight into the life of Ganakaladhara Sri. Madurai Mani Iyer.

Thursday, 22 July 2021

MUTHULAKSHMI REDDY ,ACTIVIST 1886 JULY 30 - 1968 JULY 22

 


MUTHULAKSHMI REDDY ,ACTIVIST  

1886 JULY 30 - 1968 JULY 22

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், சமூகநீதிப் போராளியுமான #முத்துலெட்சுமி மறைந்த நாள் 22 ஜூலை 1968 இன்று..



இந்தி மொழித் திணிப்புக்கு எதிராகப் போராடிய முத்துலட்சுமி, தனது சட்டமன்றச் செயல்பாடுகளின் ஊடாக தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச் சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம், பாலிய விவாகங்களைத் தடை செய்யும் சட்டம் உள்ளிட்டவை கொண்டு வரப் போராடினார். இவரின் முயற்சியால் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்பட்டது.


இரண்டு பெண் குழந்தை பெற்றால் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு இன்னொரு பெண்ணை கோவிலுக்கு நேந்துவிட்டு தேவதாசியாக ஆக்கி விடுவது என்ற அவலநிலை அன்றிருந்தது.


20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவடியாக்கள்) இருந்ததாக தெரியவருகின்றது.


கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிருவாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.


 இன்றைய இளைஞர்களுக்கு இந்த வரலாறு தெரியாது. இன்றைக்குப் பெண்களைப் பார்த்தீர்களேயானால் கம்ப்யூட்டர் எஞ்சினியர்கள், டாக்டர்கள், நீதிபதிகளாக வருகிறார்கள். இவர்களுக்கு அன்னை முத்துலட்சமி செயல்பாடுகளும், பெரியாரின் சமூக சீர்திருத்தங்களையும் பற்றி தெரிய வாய்ப்பில்லை.



முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டான். சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணி இதை எதிர்த்தனர். பெண்விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.


இதற்கு பார்ப்பன பரதேசிகள் சொன்ன காரணம் என்னவென்றால்.. இது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து நான் ஜெயிலுக்குப் போனாலும் போவோமே தவிர, சாஸ்திரத்தை எதிர்த்து நாங்கள் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டோம் என்று கூறி தேவதாசி பெண்களை வைத்தே இந்த தீர்மானத்தை எதிர்த்து போராடவைத்தனர்.


இந்த இக்கட்டான சூழலில் பெரியாரிடம் வந்து இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் என்ன செய்வது என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் ஆலோசனை கேட்டார்கள்.


அதற்கு பெரியார் " நான் சொல்லுகிறபடி நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள்" என்று சொல்லி அனுப்பினார். பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் விளக்கம் கொடுக்க தயாராக இருந்தார்.

 

அப்போது சத்தியமூர்த்தி அய்யர் பேசினான். "தேவர்களுக்கு அடியாள் என்றால் அது கடவுள் தொண்டு என்று அர்த்தம் என்று சொன்னார். அவர்கள் தங்களை அர்ப்பணித்து தொண்டு செய்வதால் புண்ணியம் பல சேர்த்து புண்ணியவதியாகிறார்கள்.'' என்றான்.


அதற்கு முத்துலட்சுமி அம்மையார், எதிர்க்கட்சி பாப்பானர்களை பார்த்து "தேவதாசி ஒழிப்பு தீர்மானத்திற்கு எதிராக பேசும் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன். இதுவரையில் எங்க ஜாதியிலேயே கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். எக்கச்சக்க புண்ணியத்தை சேர்த்து வைத்துள்ளார்கள். 


இனிமேல் அந்தத் தொண்டை உங்க உயர் சாதி பெண்களே செய்யட்டும். நீங்களும் புண்ணியம்  சேர்த்துக்கொள்ளுங்கள் என்று பேசினார். உங்கள் பிராமண பெண்களே தேவிடியா பணி செய்யட்டும். அதற்கு யாரும் எதிர்ப்பு கூறமாட்டார்கள், உங்கள் சாத்திர சம்பிரதாயங்களும் கேட்டுபோகாது என்றார்.


இதை கேட்ட பார்ப்பனர்களுக்கு, ஒரு செருப்பை வாயில கவ்வ கொடுத்து, இன்னொரு செருப்பை சாணில முக்கி அடித்தது போல் இருந்தது. இவ்வளவு பிரச்சினைகளை மீறித்தான் தேவதாசி ஒழுப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

த.ப.கோ.அந்தியூர்💐💐💐

👍🏻👏🏻🌸🌺🌲👌🍇🌷😂🙏🏻


.முத்துலட்சுமி ரெட்டி (சூலை 30, 1886 - சூலை 22, 1968) இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர். இவர் 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார்.இவர் இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார்.

பிறப்பு

இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1886-ஆம் ஆண்டு நாராயண சாமி, சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாக பிறந்தார். இவரது தந்தையார் நாராயணசாமி பிரபல வழக்கறிஞர். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். தாயார் சந்திரம்மாள் பிரபல பாடகர். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரின் தங்கைகள் சுந்தரம்மாள், நல்லமுத்து மற்றும் இவரின் தம்பி இராமையா ஆவர்.


சொந்த வாழ்க்கை

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற பழைய பஞ்சாங்கம் கோலோட்சிய அந்தக் காலக் கட்டத்தில், எதிர் நீச்சல் போட்டு 4 வயதில் திண்ணைப் பள்ளியில் தொடங்கி, தனது பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் பயில விரும்பிய முத்துலட்சுமிக்கு அவரது தந்தை ஊக்கமளித்தார். ஆனால், வெளியூர் கல்லூரிகளில் பெண்களுக்கு விடுதி வசதி இல்லை. உள்ளூர் கல்லூரியிலோ பெண்களைச் சேர்ப்பதில்லை என்ற கட்டுப்பாடு இருந்தது.


இந்தச் சூழலில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர 4.2.1904 அன்று விண்ணப்பித்தார். அப்போது சமஸ்தான ஆட்சியில் இருந்த அதிகாரிகளில், சில பழைமைவாதிகள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், பெண் கல்வியில் பெரும் ஆர்வமும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட அப்போதைய மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் எதிர்ப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு, முத்துலட்சுமிக்கு கல்லூரியில் பயில அனுமதி அளித்தார்.


அதில் வெற்றி பெற்ற பிறகு, சிறிது காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், கல்வி தடைபட்டது. மேலும், அவரது தாய் சந்திரம்மாள் நோயால் சிரமப்பட்டு இறந்துபோனார். நோயும், அதன் கொடுமைகளையையும் நேரில் அனுபவித்ததால், மருத்துவராக வேண்டும் என்ற வைராக்கியம் அவருக்கு எழுந்தது.


இதைத் தொடர்ந்து, 1907 -ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நாட்டின் முதல் பெண்ணான முத்துலட்சுமி படிப்பில் சிறந்து விளங்கி, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புச் சான்றிதழ்களும், தங்கப் பதக்கங்களும் பெற்று, 1912-ல் நாட்டின் முதல் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார்.


திருமணத்தில் ஆர்வம் இல்லை. [சான்று தேவை]அவருடைய விருப்பம் படிப்பிலும், சமூகப் பணியிலும் இருந்தது. இருப்பினும் சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை மனத்தில் கொண்டு திருமணத்திற்குச் சம்மதித்தார். அவருடைய கணவர் டி. சுந்தரரெட்டி அடையாற்றில் அன்னிபெசன்ட் (Anni Besant) அம்மையாரால் நிறுவப்பட்ட பிரம்மஞான சபையில், மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து திருமணங்களை நடத்தி வந்தார். அங்கேதான் முத்துலட்சுமி - சுந்தரரெட்டி திருமணம் 1914-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடந்தது. இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இராம்மோகன் திட்டக்குழுவின் இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி, தாய் - தந்தையைப் போல ஒரு மருத்துவர். புற்றுநோய் நிபுணராக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார்.[1]


தமிழ்ப் பணிகள்

இந்திமொழிக் கிளர்ச்சியில் பங்குபெற்றார். தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்களின் ஊதிய உயர்வுப் போராட்டம் எனத் தமிழ்ப் பணிகள் செய்தார். மாதர் இந்திய சங்கம் நடத்திய பெண்களுக்கான 'ஸ்திரீ தருமம்' என்னும் மாத இதழின் ஆசிரியராக விளங்கினார்.


சமூகப்பணி

1926-ஆம் ஆண்டு 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாடு, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்த்திய சொற்பொழிவில், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் என்னும் பெருமையைப் பெற்றவர்.

சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் என்னும் பெருமையும் இவருக்கு உண்டு.

அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றார்.

1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவராகத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த ஐந்தாண்டுளில் சில புரட்சி சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அவற்றில், தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம்,பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் போன்ற சில குறிப்பிடத்தக்கவை.

அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க உருவானதே அவ்வை இல்லம் அடையாறில் அமைந்துள்ள இதனை அமைத்தவர் முத்துலட்சுமி.

சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இன்று புற்று நோயாளிகளுக்குப் புகலிடமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குப் பிரதமர் நேரு 1952-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார்.

விருதுகள்

முத்துலட்சுமியின் சேவைகளுக்காக மத்திய அரசு 1956 இல் பத்ம பூஷண் விருது கொடுத்து கௌரவித்தது.


மறைவு

முத்துலட்சுமி 1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி மறைந்தார். [2]

Wednesday, 10 February 2021

BARBARA EVEREST BRITISH ACTRESS BORN 1890 JUNE 19 - 1968 FEBRUARY 9

 


BARBARA EVEREST BRITISH ACTRESS BORN 

1890 JUNE 19 - 1968 FEBRUARY 9



Barbara Everest (19 June 1890 – 9 February 1968) was a British stage and film actress.[1][2] She was born in Southfields, Surrey, and made her screen debut in the 1916 film The Man Without a Soul.[1] On stage she played Queen Anne in the 1935 historical play Viceroy Sarah by Norman Ginsbury.


Selected filmography

A two-story beige brick house with pointed roof topped by several chimneys with pots and a wooden bay window on the front at ground level. In front is a brick wall. There is a circular blue plaque on the left side of the house near the second storey


Everest's London house near Kew Gardens, with blue plaque







Bornin Wandsworth, Surrey, England, UK
Diedin Wimbledon, Surrey, England, UK  (undisclosed)
Birth NameBarbara Mary Everest
Height5' 6½" (1.69 m)

Mini Bio (1)

Barbara Everest was born on June 9, 1883 in Wandsworth, Surrey, England as Barbara Mary Everest. She was an actress, known for Gaslight (1944), The Phantom Fiend (1932) and The Uninvited (1944). She died on February 9, 1968 in Wimbledon, Surrey.

Trivia (1)

Kindly-looking British character actress with lengthy stage experience. Often seen in maternal roles.


The Hypocrites (1916) – Helen Plugenet

The Man without a Soul (1916) – Elaine Ferrier

Whosoever Shall Offend (1919) – Maddalena

Not Guilty (1919) – Hetty Challis

The Lady Clare (1919) – Alice

Calvary (1920) – Rachel Penryn

The Joyous Adventures of Aristide Pujol (1920) – Anne

Testimony (1920) – Lucinda

The Bigamist (1921) – Blanche Maitland

A Romance of Old Baghdad (1922) – Mrs. Jocelyn

The Persistent Lovers (1922) – Joyce

Fox Farm (1922) – Kate Falconer

Lily Christine (1932) – Hempel

When London Sleeps (1932) – Madame Lamberti

The Lodger (1932) – Mrs. Bunting

There Goes the Bride (1932) – Mme. Marquand (uncredited)

The World, the Flesh and the Devil (1959) – Mrs. Brophy

The Roof (1933) – Mrs. Foster

She Was Only a Village Maiden (1933) – Agatha

The Lost Chord (1933) – Mother Superior

The Umbrella (1933) – Mrs. Wynne

Love's Old Sweet Song (1933) – Nurse

Home Sweet Home (1933)

The River Wolves (1934)

The Warren Case (1934) – (uncredited)

Passing Shadows (1934) – Mrs. Lawrence

Song at Eventide (1934)

The Lad (1935) – Mrs. Lorraine

Regal Cavalcade (1935) – Undetermined Minor Role (uncredited)

The Passing of the Third Floor Back (1935) – Cook

Scrooge (1935) – Mrs. Cratchit

Love in Exile (1936) – Anna

Men of Yesterday (1936)

The Man Behind the Mask (1936) – Lady Slade

Jump for Glory (1937) – Mrs. Nolan

Old Mother Riley (1937) – Mrs. Briggs

Death Croons the Blues (1937)

Trunk Crime (1939) – Ursula

Discoveries (1939) – Mrs. Venters

Inquest (1939) – Mrs. Wyatt

Meet Maxwell Archer (1940) – Miss Duke

The Second Mr. Bush (1940) – Mrs. Windel-Tod

The Prime Minister (1941) – Baroness Lehzen (uncredited)

This Man Is Dangerous (1941) – Mrs. Cardby

He Found a Star (1941) – Mrs. Cavour

Commandos Strike at Dawn (1942) – Mrs. Olav

Forever and a Day (1943) – Girl's Mother in Air Raid Shelter

Mission to Moscow (1943) – Mrs. Litvinov

Phantom of the Opera (1943) – Aunt

Jane Eyre (1943) – Lady Ingraham

The Uninvited (1944) – Lizzie Flynn

Gaslight (1944) – Elizabeth

The Valley of Decision (1945) – Delia

The Fatal Witness (1945) – Lady Elizabeth Ferguson / Vera Cavanaugh

Wanted for Murder (1946) – Mrs. Colebrooke

Frieda (1947) – Mrs Dawson

Children of Chance (1949) – Francesca

Madeleine (1950) – Mrs. Smith

Tony Draws a Horse (1950) – Mrs. Parsons

An Inspector Calls (1954) – committee member

The Safecracker (1958) – Mrs. Dawson

Upstairs and Downstairs (1959) – 2nd Old Lady

El Cid (1961) – Mother Superior

Dangerous Afternoon (1961) – Mrs. Judson

The Damned (1963) – Miss Lamont

Nurse on Wheels (1963) – Nurse Merrick

The Man Who Finally Died (1963) – Martha Gelman

Rotten to the Core (1965) – Mrs. Dick

Trouble with Junia (1967) – Ada

Franchette: Les Intrigues (1969) – (final film role)

Tuesday, 11 August 2020

the last steam passenger service in Britain On this day in 1968, the 'Fifteen Guinea Special', 11 August 1968:




11 August 1968: the last steam passenger 
service in Britain On this day in 1968, 
the 'Fifteen Guinea Special',.





.கடைசி மெயின்லைன் நீராவி பயணிகள் ரயில் 1968 ஆம் ஆண்டில் லிவர்பூலில் இருந்து மான்செஸ்டர் வழியாக கார்லிஸ்ல் மற்றும் பின்புறம் தடைக்கு முன்னதாக ஓடியது.1968 AUGUST 11
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உள்நாட்டு நிலக்கரியின் குறைந்த விலை என்பது நீராவி ரயில்கள் இரண்டு தசாப்தங்களாக இங்கிலாந்தில் தொடர்ந்து இயங்கின. ஆனால் 1960 களில் எண்ணெயின் விலை வீழ்ச்சியடையத் தொடங்கியதும், 'டீசலைசேஷன்' என்று அழைக்கப்படுவதும் தொடங்கியபோது, ​​அது நீராவிக்கான முடிவின் தொடக்கத்தைக் குறித்தது. டீசல் என்ஜின்கள் வேகமாகவும், பராமரிக்க எளிதாகவும், தூய்மையாகவும் இருந்தன. ஆகஸ்ட் 12, 1968 அன்று, பிரிட்டிஷ் ரயில்வே அனைத்து பிரதான நீராவி போக்குவரத்திற்கும் தடை விதித்தது - இன்னும் சில பாரம்பரிய சேவைகள் இயங்கினாலும், சில லோகோமொடிவ்கள் 1980 கள் வரை தொழில்துறையில் பயன்படுத்தப்பட்டன.

கடைசி மெயின்லைன் நீராவி பயணிகள் ரயில் 1968 ஆம் ஆண்டில் லிவர்பூலில் இருந்து மான்செஸ்டர் வழியாக கார்லிஸ்ல் மற்றும் பின்புறம் தடைக்கு முன்னதாக ஓடியது. பயணத்திற்கு அதிக விலை வசூலிக்கப்படுவதால், இது பதினைந்து கினியா சிறப்பு என்று பெயரிடப்பட்டது - 15 15 15s 0d என்பது இன்று £ 250 க்கு சமம். ஒரு ஒப்பீட்டளவில், இன்று அதே பயணத்திற்கு இரண்டாம் வகுப்பு 'எப்போது வேண்டுமானாலும்' திறந்த வருவாய் £ 101 செலவாகும். செலவு இருந்தபோதிலும், 450 ரயில் ஆர்வலர்கள் 138 ஆண்டுகளுக்கும் மேலான பிரிட்டிஷ் வரலாற்றில் விடைபெற இந்த சுற்றுப்பயணத்தில் இணைந்தனர்.
இறுதி பயணத்தை இழுக்க நான்கு என்ஜின்கள் திருப்பங்களை எடுத்தன: மூன்று பெயரிடப்படாத வகுப்பு 5 கள் மற்றும் பிரிட்டானியா-வகுப்பு ஆலிவர் க்ரோம்வெல், இது பிரிட்டிஷ் ரயில்வேயால் மாற்றியமைக்கப்பட்ட கடைசி நீராவி என்ஜின் ஆகும். நான்கு என்ஜின்களில் மூன்று பாதுகாக்கப்பட்டுள்ளன, ஆலிவர் க்ரோம்வெல் வேலை நிலைக்கு திரும்ப கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகும்.

1971 ஆம் ஆண்டில் நீராவி மீதான தடை நீக்கப்பட்டது, இது இப்போது ரயில்வேயில் இயங்கும் பல பாரம்பரிய சிறப்புகளுக்கு வழி வகுத்தது.
11 August 1968: the last steam passenger service in Britain
On this day in 1968, the 'Fifteen Guinea Special', Britain's last mainline steam passenger train, ran from Liverpool to Carlisle, ahead of British Railways' steam ban.
After World War II, the low price of domestic coal meant steam trains continued to operate in the UK for two decades. But when the price of oil started to fall in the 1960s, and so-called 'dieselisation' began, it marked the beginning of the end for steam.
Diesel engines were faster, easier to maintain, and cleaner. And on 12 August 1968, British Railways imposed a ban on all mainline steam traffic – though there were still some heritage services running, and some locomotives were used in industry until the 1980s.
The last mainline steam passenger train ran ahead of the ban on this day in 1968 from Liverpool via Manchester to Carlisle and back. It was named the Fifteen Guinea Special, because of the high prices charged for the trip – £15 15s 0d is the equivalent of £250 today. As a comparison, a second-class 'anytime' open return for the same journey today would cost £101. Despite the cost, 450 rail enthusiasts joined the tour to say their goodbyes to over 138 years of British history.
Four locomotives took turns to pull the final excursion: three nameless Class 5s and the Britannia-class Oliver Cromwell, which was the last steam locomotive to be overhauled by British Railways. Three out of the four locomotives have been preserved, with Oliver Cromwell taking almost four years to restore to working condition.
The ban on steam was lifted in 1971, paving the way for the many heritage specials now operating on the railways.

Wednesday, 22 July 2020

MUTHULAKSHMI REDDY ,ACTIVIST BORN 1886 JULY 30 - 1968 JULY 22



MUTHULAKSHMI REDDY ,ACTIVIST 
BORN 1886 JULY 30 - 1968 JULY 22



.முத்துலட்சுமி ரெட்டி (சூலை 30, 1886 - சூலை 22, 1968) இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர். இவர் 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார்.இவர் இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார்.
பிறப்பு
இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1886-ஆம் ஆண்டு நாராயண சாமி, சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாக பிறந்தார். இவரது தந்தையார் நாராயணசாமி பிரபல வழக்கறிஞர். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். தாயார் சந்திரம்மாள் பிரபல பாடகர். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரின் தங்கைகள் சுந்தரம்மாள், நல்லமுத்து மற்றும் இவரின் தம்பி இராமையா ஆவர்.

சொந்த வாழ்க்கை
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற பழைய பஞ்சாங்கம் கோலோட்சிய அந்தக் காலக் கட்டத்தில், எதிர் நீச்சல் போட்டு 4 வயதில் திண்ணைப் பள்ளியில் தொடங்கி, தனது பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் பயில விரும்பிய முத்துலட்சுமிக்கு அவரது தந்தை ஊக்கமளித்தார். ஆனால், வெளியூர் கல்லூரிகளில் பெண்களுக்கு விடுதி வசதி இல்லை. உள்ளூர் கல்லூரியிலோ பெண்களைச் சேர்ப்பதில்லை என்ற கட்டுப்பாடு இருந்தது.

இந்தச் சூழலில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர 4.2.1904 அன்று விண்ணப்பித்தார். அப்போது சமஸ்தான ஆட்சியில் இருந்த அதிகாரிகளில், சில பழைமைவாதிகள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், பெண் கல்வியில் பெரும் ஆர்வமும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட அப்போதைய மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் எதிர்ப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு, முத்துலட்சுமிக்கு கல்லூரியில் பயில அனுமதி அளித்தார்.

அதில் வெற்றி பெற்ற பிறகு, சிறிது காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், கல்வி தடைபட்டது. மேலும், அவரது தாய் சந்திரம்மாள் நோயால் சிரமப்பட்டு இறந்துபோனார். நோயும், அதன் கொடுமைகளையையும் நேரில் அனுபவித்ததால், மருத்துவராக வேண்டும் என்ற வைராக்கியம் அவருக்கு எழுந்தது.

இதைத் தொடர்ந்து, 1907 -ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நாட்டின் முதல் பெண்ணான முத்துலட்சுமி படிப்பில் சிறந்து விளங்கி, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புச் சான்றிதழ்களும், தங்கப் பதக்கங்களும் பெற்று, 1912-ல் நாட்டின் முதல் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார்.

திருமணத்தில் ஆர்வம் இல்லை. [சான்று தேவை]அவருடைய விருப்பம் படிப்பிலும், சமூகப் பணியிலும் இருந்தது. இருப்பினும் சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை மனத்தில் கொண்டு திருமணத்திற்குச் சம்மதித்தார். அவருடைய கணவர் டி. சுந்தரரெட்டி அடையாற்றில் அன்னிபெசன்ட் (Anni Besant) அம்மையாரால் நிறுவப்பட்ட பிரம்மஞான சபையில், மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து திருமணங்களை நடத்தி வந்தார். அங்கேதான் முத்துலட்சுமி - சுந்தரரெட்டி திருமணம் 1914-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடந்தது. இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இராம்மோகன் திட்டக்குழுவின் இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி, தாய் - தந்தையைப் போல ஒரு மருத்துவர். புற்றுநோய் நிபுணராக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார்.[1]

தமிழ்ப் பணிகள்
இந்திமொழிக் கிளர்ச்சியில் பங்குபெற்றார். தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்களின் ஊதிய உயர்வுப் போராட்டம் எனத் தமிழ்ப் பணிகள் செய்தார். மாதர் இந்திய சங்கம் நடத்திய பெண்களுக்கான 'ஸ்திரீ தருமம்' என்னும் மாத இதழின் ஆசிரியராக விளங்கினார்.

சமூகப்பணி
1926-ஆம் ஆண்டு 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாடு, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்த்திய சொற்பொழிவில், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் என்னும் பெருமையைப் பெற்றவர்.
சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் என்னும் பெருமையும் இவருக்கு உண்டு.
அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றார்.
1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவராகத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த ஐந்தாண்டுளில் சில புரட்சி சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அவற்றில், தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம்,பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் போன்ற சில குறிப்பிடத்தக்கவை.
அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க உருவானதே அவ்வை இல்லம் அடையாறில் அமைந்துள்ள இதனை அமைத்தவர் முத்துலட்சுமி.
சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இன்று புற்று நோயாளிகளுக்குப் புகலிடமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குப் பிரதமர் நேரு 1952-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார்.
விருதுகள்
முத்துலட்சுமியின் சேவைகளுக்காக மத்திய அரசு 1956 இல் பத்ம பூஷண் விருது கொடுத்து கௌரவித்தது.

மறைவு
முத்துலட்சுமி 1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி மறைந்தார். [2]




தேவதாசி சட்டம் கொண்டுவர சட்டமன்றத்தில் உறுதிகுரல் எழுப்பிய முத்துலட்சுமி ரெட்டி! #DrMuthulakshmiReddy

பண்பாடு என்பதே காலம்தோறும் மாறிவருவதுதான். ஆனாலும், அதன் பெரும்பாலான கூறுகள், பெண்களை ஒடுக்கும் விதத்தில் இருப்பது கண்கூடு. உலகம் தழுவிய அளவிலும் இதேபோன்ற முறைகளே இருப்பதைப் பார்க்க முடியும். இதை எதிர்த்து ஒவ்வொரு காலகட்டத்திலும் பலர் போராடியுள்ளனர்; போராடி வருகின்றனர். கணவன் இறந்ததும், அவனை எரிக்கும் சிதையில் மனைவியையும் உயிரோடு எரிக்கும் உடன்கட்டை ஏறும் கொடும் வழக்கம், ராஜாராம் மோகன் ராய் உள்ளிட்டோரின் பெரும் முயற்சியால் முடிவுக்கு வந்தது. அதேபோல, பெண்களைப் பொட்டுக்கட்டி 'தேவதாசி' எனக் கோயிலுக்கு அர்ப்பணிக்கும் பழக்கம் நிலவிவந்தது. பெண்களை அடிமைப்படுத்தும் இந்த முறையை மாற்ற, தமிழகத்தில் பெரியார், மூவலூர் ராமாமிருதம் அம்மையார் உள்ளிட்டோர் போராடினார்கள். இறுதியாகத் 'தேவதாசி ஒழிப்புச் சட்டம்' நிறைவேறியது. இதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.


1886 ஜூலை 30-ம் நாள், புதுக்கோட்டையில் பிறந்தவர், முத்துலட்சுமி. தந்தை பிரபல வழக்கறிஞராக இருந்தாலும், பெண்கள் கல்வி கற்பது அபூர்வமான காலம் அது. ஆனால், முத்துலட்சுமிக்கு படிப்பின் மீது பெரும் ஆர்வம். ஆனால், பள்ளிக் கல்வி முடிந்ததுமே திருமணம் செய்துவைக்கும் முயற்சி நடந்தது. இவர் கல்லூரிக்குச் செல்வதில் குறியாக இருந்தார். குடும்பத்தினர் இவரின் மேற்கல்வியை மறுத்ததற்கு முக்கியக் காரணம், புதுக்கோட்டைக் கல்லூரியில் பெண்கள் யாரும் வருவதில்லை. இன்னொரு காரணம், பெற்றோரிடம் பெரிய அளவில் பொருளாதார வசதியில்லை.

முத்துலட்சுமி தளர்ந்துவிடவில்லை. புதுக்கோடை மகாராஜாவின் உதவியோடு கல்லூரியையும் மருத்துவப் படிப்பையும் முடித்தார். ஒரு வரியில் இதைச் சொல்லிவிட்டாலும், அந்தக் காலகட்டத்தில் இது மாபெரும் விஷயம். முத்துலட்சுமிதான் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்றால், அதன் பின்புலம் புரியும். கல்வி அறிவுப் பெறுகையில் அடிமைப்பட்டிருக்கும் தாய்நாட்டைப் பற்றியும் கவலைகொண்டார். சரோஜினி நாயுடு, பாரதியாருடன் உரையாடும் தருணங்கள் இந்த உணர்வை இன்னும் மேலெழுப்பின.


28 வயதில் மருத்துவர் டி.சுந்தர ரெட்டியைச் சடங்குகளைத் தவிர்த்து திருமணம் செய்துகொண்டார். தன்னுடைய விருப்பங்களுக்குக் குறுக்கே நிற்கக்கூடாது என்ற நிபந்தனையுடனே மணமுடித்தார். 1926-ம் ஆண்டு பாரீஸில் நடந்த அகில உலகப் பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு, 'ஆண்களுக்கு நிகராக பெண்கள் நடத்தப்பட வேண்டும்' என முழங்கினார். இதற்கு இடைப்பட்ட காலத்தில், நீதிக் கட்சியின் தலைவராக இருந்த பனகல் அரசரின் உதவியோடு, லண்டனுக்கு மேற்படிப்புக்குச் சென்றார். 1926-ம் ஆண்டு, பெண்களும் தேர்தலில் போட்டியிடும் உரிமை கிடைத்தது. சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினரானார். 

முத்துலட்சுமி சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்ததன் மூலம், எண்ணற்றோரின் துயரங்கள் நீங்கின. பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம், இருதாரத் தடைச் சட்டம்,, பால்ய விவாகத் தடை சட்டம் ஆகியவற்றில் இவரின் பங்களிப்பு அளப்பரியது. அவற்றைவிட குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது, தேவதாசி ஒழிப்புச் சட்டம். இந்தச் சட்டம் வந்துவிடக் கூடாது எனச் சனாதானிகள் ஏராளமான குறுக்கு வேலைகளைச் செய்தனர். இந்தச் சட்டம் குறித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்கலாம் எனச் சிலர் கூறிய யோசனைக்கு, தந்தை பெரியார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். 'குடியரசு' இதழில், 'ஒரு கணமும் எந்தக் காரணத்துக்காகவும் தாமதிக்கக்கூடாது' என உறுதிப்பட எழுதியிருந்தார்.


காலம் காலமாக நாம் பின்பற்றும் வழக்கத்தையும் பண்பாட்டையும் மாற்றக்கூடாது என்றும், தேவதாசி என்பது கடவுளுக்கே பணி செய்யும் அற்புத விஷயம் என்றும் சட்டடபையிலே சிலர் பேசி, இந்தச் சட்டத்தை நிறுத்த முயன்றனர். அதற்குத் தகுந்த பதிலடியாக, 'கடவுளுக்கே செய்யும் பணி என்றால், இனிமேல் உங்கள் வீட்டுப் பெண்களைச் செய்ய சொல்லலாமே' என்றார் முத்துலட்சுமி. 

இந்தப் பதில் பலரையும் மெளனத்தில் ஆழ்த்தியது. தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறியது. அதுவரை சொல்லொண்ணா இன்னல்களில் தவித்த தேவதாசிப் பெண்கள், விடுதலைக் காற்றைச் சுவாதித்தனர். சமூக நீதி வரலாற்றில் முத்துலட்சுமி ரெட்டிக்குச் சிறப்பான இடத்தையும் புகழையும் வழங்கியது இந்தச் சம்பவம். அதன்பின், பல்வேறு பதவிகளை வகித்தார். சுயமரியாதை இயக்க மாநாடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்று உரை நிகழ்த்தினார். சென்னை மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் புற்றுநோய்க்கு தனி மருத்துவமனை தேவை என்பதை வலியுறுத்தினார். இவரின் தொடர் முயற்சியால் 1952-ம் ஆண்டு, அடையாறு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அவரின் சாதனைகளின் பட்டியல் மிக நீளமானது.


1968 ஜூலை 22, முத்துலட்சுமி இயற்கை எய்தினார்.

பெண்கள் கையில் அதிகாரம் கிடைக்கும்போதே, சமூக நீதிக்கான பயணம் விரைவுபடுத்தப்படுகிறது என்பதற்கு முத்துலட்சுமி ரெட்டியின் வாழ்க்கை ஓர் உதாரணம். 1913-ம் ஆண்டில், அதாவது 100 ஆண்டுகளுக்கு முன்பே சடங்கு மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இவரின் பெயரில், 'டாக்டர் முத்துலட்சுமி நினைவு கலப்பு மண நிதி உதவித் திட்டம்' எனும் பெயரில், கலப்பு திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு நிதி அளிக்கப்படுகிறது. முத்துலட்சுமி ரெட்டிக்கு மத்திய அரசு, 'பத்ம பூஷண்' விருது அளித்தது. 



சமூகப் போராளி டாக்டர்
                 #முத்துலட்சுமி_ரெட்டி.
         பிறந்தநாள் இன்று - சூலை 30.
~~~~~~~~
   
இந்தியாவின் #முதல்பெண்டாக்டர் #முத்துலட்சுமிரெட்டி
அனாதைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்காக சென்னை அடையாறில் #அவ்வை_இல்லத்தைத் தொடங்கினார். தென்னிந்தியாவில் முதல் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைத்த பெருமை இவரையே சாரும்.

இன்று (ஜூலை 30-ந் தேதி) இந்தியாவின் முதல் பெண் டாக்டர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1886-ம் ஆண்டு பிறந்த அவர், திண்ணை பள்ளியில் படித்தார். பெண் கல்விக்கு எதிரான அந்த காலத்தில் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அவருடைய தாயார் சந்திரம்மாள் நோயால் சிரமப்பட்டு இறந்தார். இதனை நேரில் பார்த்ததால் எப்படியும் மருத்துவர் ஆக வேண்டும். நம்முடைய தாயை போன்று நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறு வயது முதலே அவருக்குள் ஆணிவேராக வளர்ந்தது.


1907-ம் ஆண்டு சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த இவர், படிப்பில் சிறந்து விளங்கியதால் பல்வேறு சான்றிதழ்களையும், தங்க பதக்கங்களையும் பெற்றார்.

கர்னல் ஜிப்போர்டு என்ற அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர், தன்னுடைய வகுப்பில் மாணவிகளை உட்கார அனுமதிப்பது இல்லை. ஆனால் அறுவை சிகிச்சை பாடத்தில் முத்துலட்சுமி #தங்கப்பதக்கம் பெற்ற பிறகு, மனம் மாறிய பேராசிரியர், பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில் தனது வகுப்பில் பெண்களும் உட்காரலாம் என்று கூறினார்.

1912-ம் ஆண்டு முத்துலட்சுமி, இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக பட்டம் பெற்றபோது, ‘சென்னை மருத்துவக்கல்லூரி வரலாற்றில் இது பொன்னான நாள்’ என்று எழுதினார் கர்னல் ஜிப்போர்டு. பின்னர் எழும்பூர் மருத்துவமனையில் #முதல்_பெண் #மருத்துவராக பணியில் சேர்ந்தார். லண்டனில் உள்ள செல்சியா மருத்துவமனையில் தாய்சேய் மருத்துவம் மற்றும் புற்றுநோய் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்தார்.

1926-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசிலும், 1933-ம் ஆண்டு அமெரிக்காவில் சிகாகோவிலும் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாடுகளில் இந்திய பிரதிநிதியாக கலந்துகொண்டார். இந்திய மாதர் சங்கத்தின் முதல் தலைவராகவும், சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயராகவும் பணியாற்றி, அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.

பின்னர் 1925-ம் ஆண்டு சட்டசபை துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஐந்தாண்டு பதவிக்காலத்தில் சில புரட்சிகரமான சட்டங்களை நிறைவேற்ற அரும்பாடுபட்டார். அவற்றில் #தேவதாசி #முறைஒழிப்பு, #இருதாரதடைச்சட்டம், #பெண்களுக்கானசொத்துரிமை வழங்கும் சட்டம், #பால்யவிவாக #தடைச்சட்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆணாதிக்கமிக்க அந்த காலத்தில் தேவதாசி ஒழிப்பு சட்டத்திற்காக பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தார். பின்னர் 1947-ம் ஆண்டு ஓமந்தூர் ராமசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது அந்த சட்டம் அமலுக்கு வந்தது.

அனாதைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்காக சென்னை அடையாறில் அவ்வை இல்லத்தை தொடங்கினார். புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்கென நிதி திரட்டி 1952-ம் ஆண்டு அடையாறில் அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவால் அடிக்கல் நாட்டப்பெற்று 1954-ல் தென்னிந்தியாவில் முதல் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைத்த பெருமை இவரையே சாரும். 1956-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்தது. 1968-ம் ஆண்டு தனது 81-வது வயதில் காலமானார்.

இவரது நினைவைப் பெருமைப்படுத்தும் விதமாக தமிழக அரசால்.                   ‘#டாக்டர்முத்துலட்சுமிமகப்பேறு_நிதி #உதவித்திட்டம்’ ஏழை கர்ப்பிணிகளுக்காக தொடங்கப்பட்டது. தற்போது, 2018-ம் ஆண்டு முதல் பேறுகால உதவியாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு டாக்டர் முத்துலட்சுமி பிறந்தநாளான ஜூலை 30-ந் தேதியை அரசு மருத்துவமனைகளில் ‘மருத்துவமனை தினமாக’ கொண்டாட தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் பல்வேறு மருத்துவ சேவைகள், சாதனைகள் மற்றும் வளர்ச்சிகள் பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.

‘#பட்டங்கள்ஆள்வதும்சட்டங்கள் #செய்வதும்
#பாரினில்பெண்கள்நடத்த_வந்தோம்
#எட்டுமறிவினில்ஆணுக்கிங்கேபெண்
#இளைப்பில்லைகாணென்றுகும்மியடி

என்ற மகாகவி பாரதியின் வாக்குக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் #டாக்டர் #முத்துலட்சுமி_ரெட்டி ஆவார். வாழ்க்கையில் எத்திசையில் திரும்பினாலும் தொல்லையும் துயரமும் உங்களுக்கு வந்தாலும் டாக்டர் முத்துலட்சுமியை நினைத்து கொள்ளுங்கள். துணிவும் தன்னம்பிக்கையும் உங்களுக்குத் தானாக வரும்.

#மருத்துவர்முத்துலட்சுமிரெட்டி

புகழ் என்றும் வாழ்க.
.🥦🥦🥦🥦🥦🥦🥦🥦
சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் தவிட்டுபாளையம் அந்தியூர் பெரியார் மாவட்டம்..🙏🙏🙏

Tuesday, 12 May 2020

M.S.S .BHAGYAM TAMIL ACTRESS BORN 1926 ,MAY 12 - 1968



M.S.S .BHAGYAM TAMIL ACTRESS 
BORN 1926 ,MAY 12 - 1968


எம். எஸ். எஸ். பாக்கியம் (M. S. S. Bhagyam, பிறப்பு: மே 12, 1926) ஒரு தென்னிந்திய தமிழ் திரைப்பட, மேடை நாடக நடிகையாவார். 1945 - 1970 காலப்பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் குணசித்திர, நகைச்சுவை, வில்லி வேடங்களில் நடித்துள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

எம். எஸ். எஸ். பாக்கியம் தூக்குத் தூக்கி திரைப்படத்தில் லலிதாவுடன் தோன்றும் காட்சி

வித்யாபதி (1946) திரைப்படத்தில் நாராயண பாகவதர் நம்பியாருடன் பாக்கியம்

பாக்கியத்தின் இயற்பெயர் மருங்காபுரி செல்லம்மாள் சிவபாக்கியம் என்பதாகும். இவர் மே 1926 இல் திருச்சி மருங்காபுரி என்னும் ஊரில் அவ்வூர் சமீன்தாரின் மேலாண்மையாளராகப் பணியாற்றிய நல்லசிவம் பிள்ளை, செல்லம்மாள் ஆகியோரின் இரண்டாவது மகளாகப் பிறந்தார். இவருக்கு ஒன்றரை வயதான போதே தாயார் செல்லம்மாள் இறந்து விட்டார். அதன் பின்னர் செல்லம்மாளின் தாயார் இரு பேத்திகளையும் வளர்த்து வந்தார்.[1] மருங்காபுரியில் ஆறாம் வகுப்பு வரை கல்வி கற்றார். அப்போது பாக்கியத்தின் பாட்டனார் இறக்கவே, பாட்டியால் அவரை மேலும் படிக்க வைக்க முடியவில்லை. அந்த நேரத்தில் வளையாபட்டியில் சடையப்ப கொத்தனார் என்பவர் நாடகக் கம்பனி ஒன்றை நடத்தி வந்தார். அக்கம்பனியில் பாக்கியம் சேர்ந்து ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி பெற்றார். அக்கம்பனி மூடப்படவே, இவர் கோட்டயம் பி. கைலாசம் ஐயர் என்பவரிடம் முறைப்படி கருநாடக இசை பயின்றார்.[1] அப்போது டி. பி. பொன்னுசாமி பிள்ளையின் நாடகக் கம்பனி பொன்னமராவதிக்கு வந்தது. உடனேயே அக்கம்பனியில் சேர்ந்து கொண்டார் பாக்கியம். அக்கம்பனியின் இழந்த காதல் நாடகத்தில் சரோஜா என்ற பாத்திரத்தில் நடித்தார். கண்டிராஜா, இராமாயணம் ஆகிய நாடகங்களிலும் நடித்தார். சில காலத்தில் இக்கம்பனி என்னெஸ்கே நாடகக் கம்பனியுடன் இணைக்கப்பட்டதை அடுத்து பாக்கியம் அங்கிருந்து விலகினார்.[1]

வைரம் அருணாசலம் செட்டியார் "சிறீ ராம பாலகான சபா" என்ற புதிய நாடகக் கம்பனியை ஆரம்பித்து பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்தார். பாக்கியமும் பாட்டியிடம் அனுமதி பெற்று கம்பனியிலே சேர்ந்தார். காரைக்குடி சண்முக விலாசு அரங்கில் நடந்த பக்த சாருகதாசர் நாடகத்தில் நகைச்சுவை வேடமேற்று நடித்தார். தாகசாந்தி நாடகத்தில் கதாநாயகியாகவும், திருமழிகை ஆழ்வார், குடும்ப வாழ்க்கை, விஜயநகர சாம்ராச்சியம், செயிண்ட் பிலோமினா, எதிர்பார்த்தது ஆகிய நாடகங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்தார். காரைக்குடி, திருச்சி, திருவாரூர் போன்ற இடங்களில் நாடகங்களை அரங்கேற்றிய வைரம் கம்பனி 1945 இல் சென்னைக்கு வந்து ஓராண்டு தங்கியிருந்து நாடகங்களை நடத்திய போது பாக்கியமும் அவர்களது நாடகங்களில் பங்கேற்று சென்னை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார்.[1]

திரைப்படங்களில் நடிப்பு
திருச்சி ஓ. ஆர். பாலு என்பவரின் சிபாரிசில் ஜுப்பிட்டரின் ஒப்பந்த நடிகையானார் பாக்கியம். வித்யாபதி (1946) இவர் நடித்த முதல் திரைப்படம் ஆகும். அதில் நாராயண பாகவதரின் (எம். என். நம்பியார்) மனைவியாகத் தோன்றி நடித்தார். ராஜகுமாரியில் பகுணியாக நடித்தார். தொடர்ந்து கஞ்சன், அபிமன்யு, மோகினி (காளியம்மாவாக), வேலைக்காரி, கன்னியின் காதலி (மேகலையின் தோழி சிங்காரமாக), விஜயகுமாரி (விசித்ரமாக), கிருஷ்ண விஜயம்[1] உட்பட நான்கு ஆண்டுகளுள் ஜுபிட்டரின் 11 படங்களில் நடித்துப் புகழடைந்தார். ஜுபிட்டரின் ஏக்த ராஜா (இந்தி மர்மயோகி) இந்தித் திரைப்படத்திலும் நடித்தார்.[2]

சொந்த வாழ்க்கை
எம். எஸ். எஸ். பாக்கியம் 1949 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை, குளிப்பிரையைச் சேர்ந்தவரும், கொழும்பு வணிகருமான இராமநாதன் செட்டியாரின் வளர்ப்பு மகனான எஸ். ஆர். எம். எஸ். லட்சுமணன் செட்டியார் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்து கொண்டார்.[1] பாக்கியம் திருச்சி வானொலி நிலையத்தினரின் வானொலி நாடகங்களிலும் நடித்திருந்தார்.[2]1950-1970-களில் தமிழ்ப் படங்களில் தம் திறமையினைத் தடம் பதிப்பித்த  பழம்பெரும் நடிகை. குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நகைச்சுவை மற்றும் வில்லியென மாறுப்பட்ட கதாபாத்திரங்களிலும் தனது திறமையை நிரூபித்துக் காட்டியவர்.இவரது இயற்பெயர் எம்.எஸ்.சிவபாக்கியம். நடிகை எம்.எஸ்.எஸ்.பாக்கியம் காரைக்குடி வைரம் அருணாச்சலம் செட்டியார் நடாத்தி வந்த ‘ஸ்ரீ ராம பால கால வினோத சபா’ என்ற நாடக்குழுவில் நடித்துக் வந்தவர். காரைக்குடி வைரம் அருணாசலம் செட்டியார் அவர்கள் 1943-ம் ஆண்டு முதல் 1953-ம் ஆண்டு வரை பூரீராம பால கான சபா என்னும் நாடக நிறுவனத்தை நடத்தினார்.

இந்த நிறுவனத்தில், திருமழிசை ஆழ்வார், ஏழைப் பெண், தாகசாந்தி, குடும்ப வாழ்க்கை, புயலுக்குப் பின், பக்த சாருகதாசர், புரட்சி, இன்ப இரவு, பிலோமினா, விஜய நகர சாம்ராஜ்யம், எதிர்பார்த்தது, அன்னை, ஆகிய பல அருமையான நாடகங்களை நடத்திப் புகழ் பெற்றார்.


இதே நாடகக் குழுவில்தான் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன், நவரசத்திலகம் ஆர்.முத்துராமன், பழம்பெரும் நடிகர் ‘சட்டாம்பிள்ளை’ கே.என்.வெங்கட்ராமன், எம்.கே.முஸ்தபா மற்றும் நகைச்சுவை நடிகை மனோரமாவின் கணவர் எஸ்.எம்.ராமநாதன் போன்ற கலைஞர்கள் அப்போது நடித்து வந்தனர்.

சிங்காரி [1954], தூக்கு தூக்கி [1954], மர்மயோகி [1951], அன்னை, சதாரம், ஏழைப்பங்காளன் [1963], பூமாலை [1965] ராஜா வீட்டுப் பிள்ளை [1969], அன்பே வா [1965], தாலி பாக்கியம், கருப்புப் பணம் [1967], முத்துச்சிப்பி [1968], ’பார் மகளே பார்’ [1963], பூவும் பொட்டும், கண்ணன் என் காதலன் [1970], நடு இரவில் [1970], எதையும் தாங்கும் இதயம் [1962] போன்ற 100-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் தனது பங்களிப்பை நல்கியுள்ளார். தூக்கு தூக்கி படத்தில் லலிதாவின் அரண்மனைத் தோழியாக ‘பெரும் தேவி’ என்ற கதாபாத்திரத்திலும் அன்பே வா படத்தில் பி.டி.சம்பந்தத்தின் மனைவியாகவும் வருவார். பூவும் பொட்டும் படத்தில் நடித்த போது காலமானார்.

1968-ஆம் ஆண்டிலேயே இவர் காலமாகிவிட்டாரென தெரிகிறது..

நடிகர்களையும், போன்ற நகைச்சுவை நடிகைகளையும், நல்ல எழுத்தாளர் நாஞ்சில் ராஜப்பாவையும் இந்த நிறுவனம் உருவாக்கிக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் நின்றபின், ஆர். முத்துராமன், ராமனாதன்,குலதெய்வம்ராஜகோபால் போன்ற நடிகர்களின் கூட்டு நிர்வாகத்தில் வைரம் நாடக சபா என்ற பெயரில் சில காலம் நடத்தி, நீதிபதி, சந்திப்பு, கடமை, சாந்தி, கட்ட பொம்மன் ஆகிய பல நாடகங்களை அரங்கேற்றினர். இந்த நிறுவனமும் நீடித்து நடத்த முடியாமல் சில மாதங்களில் நிறுத்தப்பட்டது.டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக்குழு, ஈரோட்டில் 1944ம் ஆண்டு திரு. ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர் களின் தலைமையில், மிகச் சிறப்பாக நாடகக் கலை முதல் மாநாடு நடத்தியதை முன்பே குறிப்பிட்டுள்ளேன். இரண் டாவது நாடக மாநாடு, தஞ்சைகரந்தையில் அடுத்த ஆண்டி லேயே நடந்தது. இதையடுத்து அதே 1945-ம் ஆண்டு இறுதியில் மிகச் சிறப்பாக மூன்றாவது நாடக மாநாடு, வைரம் செட்டியார் நாடகக் குழுவின் ஆதரவில் சென்னையில்

இவரைக் குறித்த மேலதிகத் தகவல் எதுவும் கிடைத்ததில்லை.

நடித்த சில படங்கள்
வித்யாபதி (1946)
கஞ்சன் (1947)
அபிமன்யு (1948)
மோகினி (1948)
வேலைக்காரி (1949)
கன்னியின் காதலி (1949)
விஜயகுமாரி (1950)
கிருஷ்ண விஜயம் (1950)
மர்மயோகி (1951)
ராணி (1952)
மாப்பிள்ளை (1952)[3]
சிங்காரி (1954)
தூக்கு தூக்கி (1954)
கல்யாணம் செய்துக்கோ (1955)
நல்ல தங்கை (1955)
மேனகா (1955)
சதாரம் (1956)
உத்தம புத்திரன் (1958)
திருமணம் (1958)
பாகப்பிரிவினை (1959)
மகாலட்சுமி (1960)
பலே பாண்டியா (1962)
அன்னை (1962)
ஏழை பங்காளன் (1963)
குழந்தையும் தெய்வமும் (1965)
அன்பே வா (1965)
தாலி பாக்கியம் (1966)
மெட்ராஸ் டு பாண்டிச்சேரி (1966)
கறுப்புப் பணம் (1967)
முத்துச் சிப்பி (1968)
பூவும் பொட்டும் (1968)
ராஜா வீட்டுப் பிள்ளை (1969)
கண்ணன் என் காதலன் (1970)
நடு இரவில் (1970)

Monday, 16 March 2020

MY LAI MASSACRE 1968 ,MARCH 16 IN SOUTH VIETNAM


MY LAI MASSACRE 1968 ,MARCH 16 
IN SOUTH VIETNAM



மை லாய் படுகொலைகள் (My Lai Massacre) என்பது தெற்கு வியட்நாமில் மார்ச் 16, 1968 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கப் படைகளினால் 347 முதல் 504 வரையான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாவர்.


கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த பெரும்பாலானோர் பாலியல் வதை, அடிக்கப்பட்டு, அல்ல்து துன்புறுத்தப்பட்டனர். பெரும்பாலானோரின் உடல்கள் பெரும் சிதைவுக்குள்ளாகிக் கண்டுபிடிக்கப்பட்டன[1]. இப்படுகொலைகள் வியட்நாம் போரின் போது சோன் மை என்ற கிராமத்தில் மை லாய் மற்றும் மை கே ஆகிய பகுதிகளில் இடம்பெற்றது[2],[3]. ஆரம்பத்தில் 26 அமெரிக்கப் போர்வீரர்கள் இப்படுகொலைகளுக்குக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், 2ம் லெப். வில்லியம் கேலி என்பவனுக்கு மட்டுமே தண்டனை கிடைத்தது. முதலில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டாலும், இது பின்னர் 3 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு, அத்தண்டனையை தனது வீட்டிலேயே கழித்தான்.


இப்படுகொலை நிகழ்வானது உலகின் பல இடங்களிலும் அமெரிக்காவுக்கெதிராக எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் வியட்நாம் போரில் ஐக்கிய அமெரிக்காவின் ஈடுபாடு குறித்து உள்நாட்டிலும் பெரும் எதிர்ப்புகள் தோன்றின.

நிகழ்வு
அவன் அந்தக் குழந்தையை .45 ஆல் சுட்டான். ஆனாலும் அது தப்பியது. நாம் எல்லோரும் சிரித்தோம். அவன் எழுந்து மீண்டும் மூன்று அல்லது நான்கு அடிகள் கிட்டவாகச் சென்று மீண்டும் சுட்டான். அதுவும் தப்பியது. நாங்கள் சிரித்தோம். அதன் பின்னர் அவன் மீண்டும் அக்குழந்தைக்கு நேர் முன்னாகச் சுட்டான். இம்முறை குறி தப்பவில்லை.[4][5]

மார்ச் 16, 1968 : அமெரிக்க இராணுவத்தினர் சுட சற்று முன்னர் வியட்நாமிய பெண்கள், குழந்தைகள்[6]. (ரொனால்ட் ஹேபெல் எடுத்த படம்)
பின்னணி



டிசம்பர் 1967 இல் தெற்கு வியட்நாமில் அமெரிக்க இராணுவத்தின் ஒரு பகுதி தரையிறங்கியது. முதல் ஒரு மாதம் பெரிதாக எந்தத் தாக்குதலும் இடம்பெறவில்லை. ஆனாலும் அடுத்தடுத்த மாதங்களில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதல்களில் 28 அமெரிக்க இராணுவத்தினர் படுகாயமடைந்தனர். இவர்களில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

ஜனவரி 1968 இல் வியட் கொங் படைகள் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதலில் இறங்கினர். அவர்களில் பெரும்பாலானோர் சோன் மை கிராமத்தில் ஒளிந்திருப்பதாக அமெரிக்கப் படைகளுக்கு தகவல் எட்டியது.

அமெரிக்கப் படைகள் இக்குக்கிராமங்கள் மீது பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டனர். அக்கிராமத்தைப் பலமாகத் தாக்கி அனைவரையும் கொன்று விடும்படி கேணல் "ஒரான் ஹெண்டர்சன்" என்பவன் தனது படைகளுக்கு உத்தரவிட்டான்[7]. அநேகமாக பொது மக்கள் காலை 07:00 மணிக்கு முன்னர் சந்தைகளுக்கு சென்று விடுவரென்றும் மீதமுள்ளோர் வியட் கொங் தீவிரவாதிகளாகவோ அவர்களின் ஆதரவாளர்களாகவோ இருப்பர் என்றும் தாக்குதல் தொடங்க முன்னர் கப்டன் ஏர்னெஸ்ட் மெடினா என்பவன் தனது படைகளுக்குக் கூறினான்[8].

படுகொலைகள்

இறந்த மனிதன் மற்றும் குழந்தையின் உடல்கள். ரொனால்ட் ஹேபேர்ல் எடுத்த படம்
மார்ச் 16 இல் சார்லி கம்பனி என்ற அமெரிக்க முதலாம் பட்டாலியன் முதலில் ஹெலிகப்டர் தாக்குதலை ஆரம்பித்துத் தரையிறங்கியது. அங்கு எதிர்ப்பு எதுவும் இருக்கவில்லை. அமெரிக்கப் படைகள் முதலில் சந்தேகத்துக்கிடமான பகுதிகளைத் தாக்கினர். முதலாவது பொதுமக்கள் தொகுதி ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் சந்தேகத்திக்கிடமாக அசையும் எதனையும் சுட்டுக் கொல்லப் பணிக்கப்பட்டனர். தானியங்கித் துப்பாக்கிகள் மூலம் பல பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்[9]. கிட்டத்தட்ட 70 முதல் 80 வரையான கிராம மக்கள் கிராமத்தின் நடுவில் வளைத்துப் பிடிக்கப்பட்டு இரண்டாம் லெப்டினண்ட் வில்லியம் கலி என்பவனினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு தொகுதி மக்களைச் சுட்டுக் கொல்ல மறுத்த அமெரிக்கப் படையினன் ஒருவனின் துப்பாக்கியைப் பறித்து வில்லியம் கலி தன் கையால் அவர்களைச் சுட்டுக் கொன்றான்[2].


.