Showing posts with label DIALOGUE. Show all posts
Showing posts with label DIALOGUE. Show all posts

Thursday, 4 November 2021

VIDWAN VE.LAKSHMANAN , ASTROLOGER ,LYRICS ,STORY,DIALOGUE,PRODUCER BIOGRAPHY

 


VIDWAN VE.LAKSHMANAN , ASTROLOGER ,LYRICS ,STORY,DIALOGUE,PRODUCER BIOGRAPHY





வித்வான் வெ.லட்சுமணன் [சோதிட வல்லுநர் | கவிஞர் | கதை, வசனகர்த்தா | தமிழ்ப் பண்டிதர் | பத்திரிகையாளர் | படத் தயாரிப்பாளர்]                                                                   வித்வான் வே.லட்சுமணன்..... இந்த பெயரைக் கேட்டவுடன் உங்களுக்கு சட்டென என்ன தோன்றும்? பிரபல ஜோதிடராயிற்றே என்று தானே? அப்படி இவரை அவ்வளவு எளிதாக சுருக்கி விட முடியுமா? முடியாது என்கிறேன் நான்.

மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு ஆஸ்தான ஜோதிடர் என்பதைத் தாண்டி வே.லட்சுமணனுக்கு பல முகங்கள் உண்டு. கதை வசனக்கர்த்தா, திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என அவர் பயணித்த பாதை மிகப்பெரியது.

எம்ஜிஆர் இயக்கத்தில் மகத்தான வெற்றி பெற்ற நாடோடி மன்னன் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் படத்தின் கதை, வசனம் தான். அப்படத்தின் கதை இலாகாவில் இருந்தது மூன்று பேர். ஆர்எம்.வீரப்பன், வே.லட்சுமணன், எஸ்.கே.டி.சாமி ஆகிய மூவர் தான் அவர்கள்.    1959-இல் வெளிவந்த “அவள் யார்” என்ற படத்தில் தான் முதன்முதலாக இவர் பாடல் எழுதினார். இந்தப் படத்திற்குத் கதை, வசனம் எழுதியது இவரே. இப்படத்தில் 3 பாடல்களை வித்வான் வே.லட்சுமணன் எழுதியுள்ளார். ரகுநாத் பாணிகிரஹி பாடிய நான் தேடும் போது நீ ஓடலாமோ, ஏ.எம்.ராஜா, ஜிக்கி பாடிய கண் காணும் மின்னல்தானோ, பட்டுப்பூச்சி போலும் ராணி என்ற இம்மூன்று பாடல்களே இவரது கற்பனையில் உருவான பாடல்கள். இம்மூன்று பாடல்களுமே திரையிசை ரசிகர்களைக் கொள்ளை கொண்ட பாடல்கள்.



இதே போல எம்ஜிஆர் இயக்கிய அடிமைப்பெண் படத்தின் கதை எழுதியதும் ஆர்எம்.வீரப்பன், வே.லட்சுமணன், எஸ்.கே.டி.சாமி ஆகியோர் தான். இப்படி மகத்தான பல வெற்றிப் படங்களில் எம்ஜிஆரின் பின்னணியில் இருந்த வே.லட்சுமணனை, பட அதிபராக்கியவர் எம்ஜிஆர் தான்.

எம்ஜிஆர் உருவாக்கிய உதயம் புரடொக்சன் கம்பெனியின் இரண்டு முதலாளிகள் பத்திரிகையாளர் மணியன், வே.லட்சுமணன் தான். இவர்களுக்காக இந்த பேனரில் எம்ஜிஆர் நடித்த படம் இதயவீணை. மிகப்பெரிய வெற்றிப்படம் இது. எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்த படம் சிரித்து வாழ வேண்டும். உதயம் புரொக்டசன் தயாரிப்பான இப்படத்தை ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியம் இந்த படத்தை எஸ்எஸ்.பாலன் என்ற பெயரில் இயக்கினார். இந்த படமும் மகத்தான வெற்றி பெற்றது. உதயம் புரடக்சனின் அடுத்த தயாரிப்பும் மகத்தான வெற்றி படம் தான்.

சாந்தாராமின் தோ ஹாங்கி பாராத் என்ற இந்தி படத்தை பல்லாண்டு வாழ்க என்ற பெயரில் வெளியான இந்த படம் தயாரிப்பாளர்களுக்கு லெட்சுமி கடாச்சமாக்கியது.இந்தியில் இறுதியில் கதாநாயகன் இறந்து விடுவார். ஆனால், எம்ஜிஆருக்காக பல்லாண்டு வாழ்க படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டது .

தன்னை நம்பி வந்தவர்களுக்கு உதவிடும் பண்பு எம்ஜிஆரிடம் இருந்தது என்பதற்கு அவர் துவக்கிய உதயம் புரடொக்சன் கம்பெனியே சான்று. 6 படங்களை இவர்கள் தயாரித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் படத்திலேயே வித்வான் வே.லட்சுமணன் தனது பாட்டுப் பயணத்தை துவக்கி விட்டார்.

1952ம் ஆண்டு சுராதா எழுதிய அமரகவி படத்தை எப்.நாகூர் இயக்கினார். இப்படத்திற்கு ஆர்.ராமநாதன், டிஏ.கல்யாணம் இணைந்து இசையமைத்தனர். இப்படத்தில், தியாகராஜ பாகவதர், டிஆர்.ராஜகுமாரி உள்பட பலர் நடித்திருந்தனர்.

முல்லைச் சிரிப்பிலே எல்லாம் என் கையிலே மூவுலகும் வசமாகாதோ வண்டாக நான் பறந்து ....

என்ற பாடலை இப்படத்திற்காக வித்வான் வே.லட்சுமணன் இயற்றினார். இப்பாடலை பி.லீலா, என்எல்.ஞானசரஸ்வதி இணைந்து பாடினர்.

1959ம் ஆண்டு சுதர்ஸன் பிக்சர்ஸ் தயாரித்த அவள் யார் என்ற படத்திற்கு கதை, வசனம் மட்டுமின்றி பாடல்களையும் எழுதினார் வே.லட்சுமணன்.

நான் தேடும் போது நீ ஓடலாமோ, கண் காணும் மின்னல் தானோ, பட்டுப்பூச்சி போலும் ராணி என்ற இப்படப்பாடல்கள் தமிழ் திரையுலகில் லட்சுமணனை பிரபல பாடலாசிரியராக்கியது.

வே.லட்சுமணனின் திறமைக்கு தீனி போட்டவர் என்றால் அது வீணை பாலச்சந்தர் தான். தமிழ் சினிமாவின் தனித்த அடையளமாக விளங்கியவர் வீணை பாலச்சந்தர். அவர் இயக்கிய படங்களில் வே.லட்சுமணன் பெரும் பங்கு வகித்துள்ளார்.

1962ம் ஆண்டு வீணை பாலச்சந்தர் இயக்கிய அவனா இவன் திரைப்படத்தின் திரைக்கதை, வசனத்தை பாலச்சந்தருடன் இணைந்து எழுதியவர் வே.லட்சுமணன் தான். அத்துடன் வீணை பாலச்சந்தரின் அற்புதமான இசையில் எல்ஆர்.ஈஸ்வரி, ரேணுகா பாடிய, கல்யாண பொண்ணு கலங்காதே, பி.சுசீலா பாடிய கல்யாண திருநாள், எல்ஆர்.ஈஸ்வரி, கமலா பாடிய மனம் விட்டு, ராதா ஜெயலட்சுமி பாடிய வானம் ஆயிரம் சூழ, சதன் , சீதா பாடிய வள்... வள்.. வள்ளி.. வள்... வள்.. வள்ளி, ஐ லவ்யூ ட்ரூலி ப்ளீஸ் என்ற வித்தியாசமான பாடல்களையும் வே.லட்சுமணன் எழுதியுள்ளார்.

 டிஎம்.சௌந்தரராஜன் பாடிய மனம் ஒரு குரங்கு என்ற அற்புத பாடலை எழுதியவரும் வே.லட்சுமணன் தான்.

1964ம் ஆண்டு சார்லி - மணியம் இயக்கத்தில் வெளியான நல்வரவு படத்தில் டி.சலபதிராவ் இசையில் 6 பாடல்களை மட்டுமின்றி கதையையும் வித்வான் வே.லட்சுமணன் தான் எழுதினார். இதில் எல்ஆர்.ஈஸ்வரி பாடிய. ஆசையுடன் அவர் அணைத்தார் நாணாமலே பாடலை ரசிக்கலாம்.

கேஜே.யேசுதாஸ் முதல் பாடல்

1964ம் ஆண்டு வீணை எஸ்.பாலசந்தர் இயக்கத்தில் பொம்மை திரைப்படத்தின் கதை வே.லட்சுமணன் எழுதியது தான். அத்துடன் இப்படத்தில் 6 பாடல்களையும் அவர் எழுதியுள்ளார். கானகந்தர்வ குரலோன் கேஜே.யேசுதாஸ் தமிழில் இவர் எழுதிய பாடலை பாடி தான் அறிமுகமாகியுள்ளார். அந்த பாடல்,

நீயும் பொம்மை நானும் பொம்மை

நெனச்சு பாத்தா எல்லாம் பொம்மை...

பழுத்த ஆன்மிகவாதியான வே.லட்சுமணன் இந்த பாடலில் இப்படி எழுதினார்,

தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை

தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை

கோயிலில் வாழும் தெய்வமும் பொம்மை - அதை கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மை....

இப்படி யோசித்த லட்சுமணன், அற்புதமான நடனப்பாடலையும் இப்படத்திற்காக எழுதியுள்ளார். எல்.விஜயலட்சுமி நடனமாடும் இந்த பாடலை பி.சுசீலா பாடியுள்ளார்.

எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம்

எப்போடியோ என் மனதைக் கவர்ந்தவராம்...

இந்த விஜயலட்சுமி தான், குடியிருந்த கோயில் படத்தில் எம்ஜிஆருடன் ஆடலுடன் பாடலைக் கேட்டு பாடலுக்கு நடனமாடியவர். பிற்காலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.

பொம்மைக்கு பாட்டு

கருப்பு, வெள்ளை காலப்படங்களில் குழந்தை கேரக்டர்களுக்கு பாடல் வழங்கப்படுவது வாடிக்கையாகவே இருந்துள்ளது. அப்படித்தான் பொம்மை படத்தில் ஒரு பாடல் உள்ளது. சிறுமிக்கு எல்ஆர்.ஈஸ்வரி குரல் கொடுத்திருப்பார். புகழ்பெற்ற இந்த பாடலை வே.லட்சுமணன் தான் எழுதியுள்ளார்.

தத்தித்தத்தி தத்தித்தத்தி நடந்து வரும்

தங்கப் பாப்பா நீ இத்தனை நாள்

எங்கிருந்தாய் சொல்லு பாப்பா...

இந்தப் பாடலுக்கு படத்தின் மெயின் கேரக்டரான பொம்மையும் நடித்துள்ளது. இப்படத்தில் பி.சுசீலா பாடிய நீதான் செல்வம் நீதான் அமுதம் நீதான் எந்தன் என்ற பாடலையும் வே.லட்சுமணன் எழுதியுள்ளார்.

நடுஇரவும், லட்சுமணனும்

இந்திய அளவில் எடுக்கப்பட்ட திகில் படங்களில் இன்றளவும் தமிழில் பெயர் சொல்லும் படமாக இருப்பது நடுஇரவில் திரைப்படம் தான். 1970ம் ஆண்டு வீணை பாலச்சந்தர் இயக்கிய படமிது. 24 கேரக்டர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், அகதா கிறிஸ்டி எழுதிய And Then There Were None என்ற நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. மேஜர் சுந்தர்ராஜன், பண்டரி பாய், சௌகார் ஜானகி, வீணை பாலச்சந்தர் உள்பட பலர் நடித்திருந்தனர். அடுத்தடுதது நடக்கும் கொலைகளை செய்தவர் யார் என்பதை யூகிக்க முடியாதபடி கதை சொல்லப்பட்ட படம்.

இந்த படத்தின் திரைக்கதை வே.லட்சுமணனும், வசனத்தை வீணை பாலச்சந்தரும் எழுதினர். இந்த படத்தின் இசையும் வீணை பாலச்சந்தர் தான். மௌனத்தை விட சிறந்த இசை இல்லையென்பதை இந்த படத்தைப் பார்க்கும் போது நீங்கள் உணரலாம். இந்த படத்தில் பி.சுசீலா பாடிய இந்த பாடல் வே.லட்சுமணன் எழுதிய சிறந்த பாடல் என்று கூறலாம்.

கண்காட்டும் ஜாடையிலே காவியம் கண்டேன் –அந்த காவியத்தில் சோகமெனும் ஓவியம் கண்டேன்

வாடிப்போன முகத்தினிலே வனப்பு மாறவில்லை

வளர்மதி உன் பொன்னொளியை இன்னும் மீறவில்லை...

சௌகார் ஜானகி பாடப்பாட, மேஜர் சுந்தரராஜன் பியோனா வாசிப்பது போன்று எடுக்கப்பட்ட இந்த பாடல், எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு ரசிக்கலாம்.

இந்த படத்தில் எல்ஆர்.ஈஸ்வரியின் அதிரடிப்பாடல் ஒன்றும் உள்ளது.

நாலு பக்கம் ஏரி ஏரியிலே தீவு தீவுக்கொரு ராணி ராணிக்கொரு ராஜா நாலு பக்கம் ஏரி ஏரியிலே தீவு தீவுக்கொரு ராணி ராணிக்கொரு

என வரிகளை மாற்றி மாற்றி பாடும் இந்த பாடலை வே.லட்சுமணன் தான் எழுதினார். எம்ஜிஆர் நடித்த பல படங்களுக்கு கதை எழுதிய வித்வான் வே.லட்சுமணன் ஒரே ஒரு பாடலை தான் எம்ஜிஆருக்கு எழுதினார் .

எம்ஜிஆருக்கு குரல் கொடுத்த எம்எஸ்வி

1966ம் ஆண்டு சாணக்யா இயக்கத்தில் எம்ஜிஆர், சரோஜாதேவி நடித்த படம் நான் ஆணையிட்டால். இந்த படத்தில் மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் இசையில்,

கொடுக்கக் கொடுக்க

இன்பம் பிறக்குமே

என்னைத் தடுத்துத் தடுத்து

வெட்கம் மறைக்குமே

நினைத்து நினைத்து

நெஞ்சம் இனிக்குமே

உன்னை நிறுத்தி நிறுத்தி

பெண்மை சிரிக்குமே...

இந்த பாடலை பாடியது பி.சுசீலா. ஆனால், பாடல் முழுவதும் ஹம்மிங் கொடுப்பது மெல்லிசை மன்னர். எம்ஜிஆருக்கு அவர் பாடிய பாடல் இதுவாகத்தான் இருக்கும்.

1967ம் ஆண்டு சிஎன்.சண்முகம் இயக்கத்தில் வெளிவந்த படம் கற்பூரம்.டிபி. ராமச்சந்திரன் இசையில் மணிமாலா, ஸ்ரீகாந்த் பாடும் டூயட் பாடலை எழுதினார் வே.லட்சுமணன்.

நிலவே உனக்குக் குறையேது

நீ நினைத்ததும் கதிரவன் வரும் போது

அமுதே உனக்குத் தடை ஏது

அருகினில் பருகிட வரும் போது...

.

இந்த பாடலை பிபி.ஸ்ரீனிவாசுடன் இணைந்து பாடியது சூலமங்கலம் ராஜலட்சுமி. இப்படத்தில் எல்ஆர்.ஈஸ்வரி பாடிய , அம்மா வேணுமா இல்லை அப்பா வேணுமா என்ற பாடலையும் வே.லட்சுமணன் எழுதியுள்ளார். சூலமங்கலம் ராஜலட்சுமி மகிழம்பூ படத்தில் பாடிய வேண்டியதை வாரிக்கொள்ள வாருங்கள் என்ற பாடல் தான் வித்வான் வே.லட்சுமணன் எழுதிய கடைசி பாடல் என்று சொல்லப்படுகிறது.

சுமார் 11 படங்களுக்கு கதை, வசனம் எழுதிய வே.லட்சுமணன் குறைந்த அளவு தான் பாடல்களைத் தான் எழுதியுள்ளார் என்றாலும் அத்தனையும் அன்றைய கால கட்ட இசை ரசிகர்களை மகிழ்வித்தவை.

சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வே.லட்சுமணன் வித்வான் பட்டம் பெற்றவர் . அதே பல்கலைக் கழகத்தில் தமிழாசிரியராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு ஜோதிட நூல்கள் மட்டுமின்றி கன்னிப்பாவை,நீலவேணி, பாவை மன்றம் போன்ற புதினங்களையும் எழுதியுள்ளார். இத்தனை பன்முகத்தன்மை கொண்ட மனிதனை ஜோசியத்துடன் மட்டும் முடிச்சிப் போட்டு பார்க்கக் கூடாது என்பதற்காகத் தான் இந்த பதிவே.

-  கட்டுரை தந்த ப.கவிதா குமார்  அவர்களுக்கு நன்றி .

Wednesday, 26 August 2020

MAA.RAA , DIALOGUE WRITER DIED 2014 AUGUST 26



MAA.RAA  , DIALOGUE WRITER  
DIED 2014 AUGUST 26


மா. ரா. என பிரபலமாக அறியப்பட்ட மா. ராமச்சந்திரன் ஒரு எழுத்தாளரும், திரைப்பட கதை வசனகர்த்தாவும், இயக்குநரும், தயாரிப்பாளருமாவார்.

தொழில் வாழ்க்கை
சாண்டோ சின்னப்பா தேவருக்குச் சொந்தமான தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கதை இலாகாவில் பணியாற்றினார். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். முன்னணி நடிகர்களான எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன் போன்றோர் நடித்த படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். இவற்றுள் என் அண்ணன், பலே பாண்டியா, ராமன் தேடிய சீதை என்பன குறிப்பிடத்தக்கவை.[1]

கல்யாண மண்டபம் (1965)[2] என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். அப்பா அம்மா (1974) என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.


சென்னை இராயப்பேட்டையில் ஒரு பதிப்பகத்தை நடத்தி நூல்களை வெளியிட்டார்.

இறப்பு
உடல்நலக் குறைவு காரணமாகத் தனது 81-ஆவது வயதில் சென்னை வேளச்சேரியில் 2014 ஆகஸ்ட் 26 செவ்வாய்க்கிழமை காலமானார்.[

திரைப்பட வசனகர்த்தா மா.ரா. (வயது 81) மாரடைப்பு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஆக.26) காலமானார்.

மா.ரா. என்று அழைக்கப்பட்ட மா.ராமச்சந்திரன், சிறிது காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை அவர் உயிரிழந்தார்.

தேவர் பிலிம்ஸின் கதை இலாகாவில் முக்கியப் பங்கு வகித்த மா.ரா. - எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபல நடிகர்களின் ஏராளமான படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர். "என் கடமை', "தாய் மீது சத்தியம்', "பலே பாண்டியா', "என் அண்ணன்', "ராமன் தேடிய சீதை' உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார் மா.ரா..

இவருக்கு மனைவி கஸ்தூரி, 3 மகன்கள், 1 மகள் ஆகியோர் உள்ளனர். சென்னை வேளச்சேரி டாக்டர் சீதாபதி நகரில் உள்ள இல்லத்தில் மா.ரா.வின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு வியாழக்கிழமை (ஆக.28) காலை நடைபெறவுள்ளது.

Monday, 10 August 2020

AROOR DASS , MY FAVOURITE DIALOGUE WRITER


AROOR DASS , MY FAVOURITE 
DIALOGUE WRITER


நெஞ்சில் பூத்த பாசமலர்

கற்பனையான சினிமா கதைகளை விட, திரை உலகப் பிரபலங்களின் வாழ்க்கை சுவாரசியம் நிறைந்தவை. அவற்றை அறிந்தவர்கள் ஒரு சிலரே. அவர்களில் முக்கியமானவர் ஆரூர்தாஸ்.தன் திரை உலகப் பயணத்தை எழுதும் அவர், சினிமாவின் மறுபக்கத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறார்.ஆரூர்தாஸ் வசனம் எழுதிய முக்கிய படங்களாவன:–

சிவாஜிகணேசன் நடித்தவை: பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, பார்த்தால் பசி தீரும், புதிய பறவை, இருமலர்கள், தெய்வ மகன், பைலட் பிரேம்நாத், நான் வாழவைப்பேன்,விஸ்வரூபம், தியாகி,விடுதலை, குடும் பம் ஒரு கோவில்,பந்தம்,அன்புள்ள அப்பா.

எம்.ஜி.ஆர். நடித்தவை: தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக்காத்த தனயன், அன்பே வா, குடும்பத்தலைவன், நீதிக்குப்பின்பாசம், வேட்டைக்காரன், தொழிலாளி, தனிப்பிறவி, தாய்க்குத் தலைமகன், ஆசைமுகம், பெற்றால்தான் பிள்ளையா?

ஜெமினிகணேசன் நடித்தவை: வாழவைத்த தெய்வம், சவுபாக்கியவதி, பாசமலர், பார்த் தால் பசி தீரும், திருமகள், பெண் என்றால் பெண்.
இதர படங்கள்: வெள்ளிக்கிழமை விரதம், பத்ரகாளி, இதய கமலம், மகுடம் காத்த மங்கை.

‘டப்பிங்’ படங்கள்:
பூ ஒன்று புயலானது,
இதுதான்டா போலீஸ்,
வைஜயந்தி ஐ.பி.எஸ்,
மை டியர் குட்டிச்சாத்தான்,
அம்மன்,
ஸ்ரீராமபக்த அனுமான்,
ஜிம்போ,
நாட்டியதாரா.

1. நெஞ்சில் பூத்த பாசமலர்

என் சினிமா வாழ்க்கையில், 1960–ம் ஆண்டு ஒரு திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு முதன் முதலாக ‘‘பாச மலர்’’ படத்திற்கு வசனம் எழுதினேன். அது என்னை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.‘‘பாசமலர்’’ வெற்றியினால், சிவாஜியின் 28 படங்களுக்கு வசனம் எழுதினேன். வேறு எந்த ஒரு கதை – வசன கர்த்தாவுக்கும், சிவாஜியின் இத்தனை படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைக்கவில்லை.இன்றளவுக்கும் என் பெயருக்கு புகழ் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் படம், பசுமையான ‘‘பாசமலர்’’ படம்தான்.

இந்தப் பாசமலரைப் பறிப்பதற்கு நான் அதைத் தேடிச்செல்லவில்லை. அதுவாக வலிய என்னை நாடி வந்தது. நான் அதைப் பறித்துக்கொண்டேன். தரித்துக் கொண்டேன். அந்தச் சுவையான கதையை இங்கு சொல்கிறேன்.



1958–59களில் நான் தேவர் பிலிம்சின் ‘‘வாழ வைத்த தெய்வம்’’ படத்திற்கு முதன் முறையாக கதை – வசனம் எழுதி, அதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்ததைத் தொடர்ந்து, என்னை எப்படியாவது சிவாஜிகணேசன் நடிக்கும் படங்களுக்கு எழுதச் செய்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் ஜெமினிகணேசனும், சாவித்திரியும் சேர்ந்து திட்டமிட்டு அதில் முனைப்பாக இருந்தனர். என் அதிர்ஷ்டமும், யோகமும் அவர்கள் இருவருடைய வடிவங்களாக வந்தன! ‘‘பதிபக்தி’’, ‘‘பாகப்பிரிவினை’’ ஆகிய வெற்றிப்படங்களின் மூலம் தொடர்ந்து சிவாஜி நடிக்கும் படங்களை இயக்கிப் புகழேணியில் ஏறிக்கொண்டிருந்த டைரக்டர் ஏ.பீம்சிங்கிடம் என்னைப்பற்றி சாவித்திரியும், சிவாஜியிடம் ஜெமினியும் பரிந்துரைத்து, என்னை எழுத வைக்கவேண்டும் என்று ஏற்பாடு.அந்தச் சமயத்தில்தான் ‘‘பாசமலர்’’ படத்தில் நடிப்பதற்கு ஜெமினியும் சாவித்திரியும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று சாவித்திரி பீம்சிங்கிடம் என்னைப்பற்றிக்கூறி, ‘‘குடும்பக் கதைகளுக்கு அவர் மிக நன்றாக வசனம் எழுதுவார். அவரையே ‘பாசமலர்’ படத்திற்கு எழுதச் சொன்னால் நன்றாக இருக்கும்’’ என்று கூற, அதற்கு அவர், ‘‘நீங்கள் சொன்னால் அது சரியா இருக்கும். எனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லை. சிவாஜி ஒப்புக்கொள்ளணும். அவ்வளவுதான்’’ என்று சொல்லிவிட்டார்.
படம்
‘‘அதை சிவாஜிகிட்டே அவர் (ஜெமினி) சொல்லிக்குவாரு’’ என்றார் சாவித்திரி.

1959–ம் ஆண்டில் ஒருநாள். அன்றைக்கு ஜெமினிக்கும் சாவித்திரிக்கும் ஷூட்டிங் இல்லை. அதனால் நான் சாவித்திரி வீட்டிற்குச் சென்றேன். மூவரும் டிபன் சாப்பிட்டு முடித்து ‘கேரம்’ ஆடத் தொடங்கினோம். சாவித்திரி ஜெமினியைக் கேட்டார்:–
‘‘என்னங்க? பாசமலர் டயலாக் விஷயம் சிவாஜிகிட்டே சொல்லிட்டீங்களா?’’

ஜெமினி:– சொன்னேன். ‘புதுப்பையன்னு சொல்றே. பார்க்கலாம்’னு இழுக்குறான். அதோட (என்னைக்காட்டி) இவன் வேற சிவாஜிகிட்டே வரமாட்டேங்குறான்.

சாவித்திரி (என்னிடம்):– ‘‘ஏன் போகமாட்டேங்குறீங்க?’’

நான்:– ‘‘அண்ணி! அது பெரிய யூனிட்! நான் புதுசு. சிவாஜி என்னை ஏதாவது குறைவா பேசிட்டார்னா, அதைக்கேட்டு நான் பொறுக்கமாட்டேன். பதிலுக்கு ஏதாவது சூடா சொல்லிடுவேன். என்னைப்பத்தி ஒனக்கு நல்லா தெரியும். வீண் வம்பு எதுக்கு? வேண்டாம். எனக்கு தேவர் பிலிம்ஸ் இருக்கு. டப்பிங் படங்கள் இருக்கு. அது போதும்.’’

சாவித்திரி:– அதெல்லாம் சிவாஜி ஒண்ணும் சொல்லமாட்டாரு. அப்படிப் பாத்தா எப்படி முன்னேற முடியும்? நான் சொல்றதைக் கேளுங்கள். பேசாம இவரோட போங்க. கால்ஷீட்டெல்லாம் வாங்க ஆரம்பிச்சிட்டாங்க. திடீர்னு வேற ஒரு ரைட்டரை ‘பிக்ஸ்’ பண்ணிட்டாங்கன்னா, எங்க முயற்சி வீணாப்போயிடும். (ஜெமினியிடம்) இதோ பாருங்க. சிவாஜி எங்கே இருக்கார்னு தெரிஞ்சிக்கிட்டு, இவரை அழைச்சிக்கிட்டுப்போயி அறிமுகப்படுத்தி ‘பிக்ஸ்’ பண்ணிடுங்க. இப்பவே ரொம்ப லேட்டு. வளத்தாதிங்க.

ஜெமினி:– ‘‘சரி. இப்போ ஷூட்டிங்ல இருந்தாலும் இருப்பான். பேசமுடியாது. பன்னெண்டு மணிக்கு மேல ‘லஞ்ச்’ டயத்துக்கு முன்னால அழைச்சிக்கிட்டுப் போறேன்.’’
நான்:– ‘‘அண்ணே! அவசியமா? வேண்டாமே!’’

ஜெமினி:– நீ சும்மாருப்பா. நான் பாத்துக்குறேன்.’’

ஜெமினி, சிவாஜி பிலிம்சுக்கு போன் பண்ணி அவர் அடையாறு நெப்டியூன் ஸ்டூடியோவில் இருப்பதாக அறிந்து கொண்டார்.

மதியவேளை! வலுக்கட்டாயமாக ஜெமினி என் கையைப்பிடித்து இழுத்துச்சென்று அவர் காரின் முன்சீட்டில் தள்ளி உட்கார வைத்து அவரே ஓட்டிக்கொண்டு போனார்.அடையாறு நெப்டியூன் ஸ்டூடியோ! குறிப்பிட்ட ஒரு மேக்–அப் அறை! கதவைத் தட்டிவிட்டு ஜெமினி உள்ளே சென்றார். நான் அவரைப் பின்தொடர்ந்தேன்.

சிவாஜி சாப்பிட்டு முடித்த நிலையில் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். அன்றைக்குத்தான் நடிகர் திலகத்தை நான் நேருக்கு நேராகப் பார்த்தேன். என் மனதிற்குள் மகிழ்ச்சி மலர்ந்தது!
சிவாஜி ஜெமினியைப் பார்த்து, ‘‘வாடா’’ என்று வரவேற்றார்.
(சிவாஜியைவிட ஜெமினி எட்டு வயது மூத்தவர். ஜெமினி பிறந்தது 1920–ல். சிவாஜி 1928. ஆனாலும் அவர் ஜெமினியை ஒருமையில்தான் அழைப்பார்.)

சிவாஜி:– (என்னைப்பார்த்து அலட்சியமாக) இவன் யாரு?
ஜெமினி:– அதாம்பா. ஏற்கனவே ஒங்கிட்டே சொன்னேன் பாரு – ஆரூர்தாஸ். இவன்தான்.
சிவாஜி (என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு):– ‘‘ஆரூர்தாஸ்! ஆரூர்னா....’’
நான்:– ‘‘திருவாரூர்.’’
சிவாஜி:– அட! நம்ம ஜில்லாக்காரன்! சினிமாவுக்குப் புதுசா வந்திருக்கே போலிருக்கு. இப்போ தேவர் பிலிம்சுக்கு எழுதுறதாவும், குடும்பக்கதைகளுக்கு நல்லா வசனம் எழுதுவேன்னும் இவன் சொன்னான். சாவித்திரியும் சொன்னதா பீம்சிங் சொன்னாரு.

அப்பா ஆரூரான்! இது ரொம்ப பெரிய படம். நான், இவன், சாவித்திரி நடிக்கிறோம். பீம்சிங் டைரக்ட் பண்றாரு. கண்ணதாசன் பாட்டு. விஸ்வநாதன் ராமமூர்த்தி மியூசிக். எல்லாம் பெரிய செட்டு! நீ சின்னப்பையன். தாங்குவியா?’’

(‘தாங்குவியா’ என்ற வார்த்தையைக் கேட்டதும் அவர் பிடித்துக்கொண்டிருந்த சிகரெட்டால் என்னைச் சுட்டதுபோல ‘சுளீர்’ என்றது.)

நான் அவருக்குச் சொன்னேன்:– ‘‘அண்ணே! மடல் பெரிது தாழை. மகிழ் இனிது கந்தம். உடல் சிறியர் என்றிருக்க வேண்டாம். கடல் பெரிது மண்ணீருமாகா – அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும்.’’
சிவாஜி:– ‘‘இதுக்கு என்னா அர்த்தம்?’’
நான்:– ‘‘மடல் பெரிது தாழை – தாழம்பூவோட மடல் பெரிசா இருக்கும். பெண்கள் ஜடையோட சேர்த்து வைச்சிப் பின்னிக்குவாங்க. அடுத்த நாளே அது வாடி வதங்கிப் போயிடும். எடுத்து எறிஞ்சிடுவாங்க. மகிழ் இனிது கந்தம் – மகிழம்பூ பாக்குறதுக்கு சின்னதா இருக்கும். பெண்கள் ஊசி நூல்ல கோர்த்து தலையிலே வச்சிக்குவாங்க, சாமி படத்துக்குப் போடுவாங்க... அது வாடிப்போனாலும் வாசனை போகாது.

கடல் பார்க்கிறதுக்குப் பெரிசா இருக்கும். ஆனால் உப்புத்தண்ணி. அதைக்குடிக்க முடியாது. அந்தக் கடலுக்குப் பக்கத்தில் ஒரு சின்ன ஊத்து தோண்டினால் அந்தத் தண்ணீரைக் குடிக்கலாம். இன்னொண்ணு சொல்றேன்.’’
சிவாஜி:– ‘‘சொல்லு.’’
நான்:– ‘‘உருவுகண்டு எள்ளாமை வேண்டும். உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து.’’
சிவாஜி:– ‘‘இது என்னா?’’
நான்:– ‘‘திருக்குறள்!’’
சிவாஜி:– ‘‘என்னா சொல்றாரு உன் திருவள்ளுவரு?’’
நான்:– ‘‘ஒருவருடைய உருவத்தைப் பார்த்து அவரை இகழாமல் இருக்கணும். ஏன்னா உருள்கின்ற பெரிய தேருக்கு சின்ன அச்சாணி காரணமா இருக்கிறது மாதிரியானவுங்களும் உண்டு. இன்னொரு குறள் சொல்லட்டுமா?’’

சிவாஜி:– ‘‘சொல்லு.’’
நான்:– ‘‘கொக் கொக்க கூம்பும் பருவத்து. மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து.’’
சிவாஜி:– ‘‘அப்படின்னா?’’
நான்:– ‘‘கூம்பி, அதாவது ஒடுங்கிப்போய் இருக்கிற காலத்துல கொக்கு மாதிரி காத்திருக்கணும். நல்ல காலம் வரும்போது அந்தக் கொக்கு மீனைக் குத்துறது மாதிரி விரைந்து செயல்படணும். நான் அந்தக் கொக்கு மாதிரி இப்போ சந்தர்ப்பத்துக்காக காத்துக்கிட்டிருக்கேன். அது வரும்போது குத்தி எடுத்திடுவேன்.’’
சிவாஜி:– ‘‘நல்லா படிச்சிருக்க போலிருக்கு.’’
நான்:– ‘‘நிறைய படிச்சிருக்கேன். நான் தடுக்கி விழுந்து வசனகர்த்தாவாகலே; தமிழ் படிச்சிட்டு வந்திருக்கேன். தஞ்சை கரந்தை தமிழ்க் கல்லூரியில் படிச்சு புலவர் பட்டம் வாங்கி, தமிழாசிரியரா போகவேண்டியவன் தவறிப்போய் தலைவிதி காரணமாக சினிமாவுக்கு வந்திட்டேன். கும்பகோணத்துக்குப் போகவேண்டிய நான் திசை மாறி கோடம்பாக்கத்துல வந்து விழுந்திட்டேன்.
(இதைக்கேட்டு சிவாஜி ஒரு சிறு சிரிப்பு சிரித்தார்).

கடைசியாக உங்களுக்கு ஒண்ணு சொல்லட்டுமா?’’
சிவாஜி:– ‘‘சொல்லு. நீதான் சொல்லிக்கிட்டிருக்கே. நான் கேட்டுக்கிட்டிருக்கேன். நல்லாருக்கு. சொல்லு.’’

நான்:– ‘‘நான் பி.யு.சின்னப்பாவோட தீவிர ரசிகன். சின்ன வயசுல – மாணவப் பருவத்துல அவரோட நடிப்பையும், வசன உச்சரிப்பிலேயும் என் மனதைப் பறிகொடுத்தவன். சின்னப்பா செந்தமிழ் நாடக மன்றம் என்கிற பேரில் என் நண்பர்களைச் சேர்த்து நாடகம் நடத்தி இருக்கிறேன்.

அவர் நடித்த ‘‘கண்ணகி’’ படத்தை அவருடைய நடிப்புக்காகவும், இளங்கோவனுடைய அழகான வசனத்துக்காகவும் பல தடவை பார்த்துப் பார்த்து ரசித்திருக்கிறேன்.அந்தப் படத்தில் இருக்கிற இருபத்திரெண்டு பாட்டுகளும் மொத்த வசனமும் எனக்கு மனப்பாடம். இப்போ கேட்டாலும் சொல்லுவேன். இன்றைக்கு அதுபோல் அழகாக வசனம் பேசுவது நீங்கதான். உங்க வசன உச்சரிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். முனைமுறியாமல் கடைசி எழுத்து தேஞ்சி கீழே விழாமல் தெளிவாக பேசுவீங்க.நீங்க சொன்ன மாதிரி இது பெரிய செட்டுன்னு எனக்கு முந்தியே தெரியும். அந்தப்பயம் எனக்கு இல்லை. உங்களுக்கு எழுத ஒரு சந்தர்ப்பம் கிடைச்சா ஒரு அடி அடிச்சுக் காட்டுவேன். இது உறுதி. பரவாயில்லே. சந்தர்ப்பம் வரும்போது சந்திக்கிறேன். இப்போ உங்களைச் சந்தித்ததில் சந்தோஷம். வர்றேன்’’ என்று சொல்லிமுடித்து, அடி எடுத்து வைத்து நகர இருந்த என்னைத் தடுத்தபடி சிவாஜி என் கையைப் பிடித்துக்கொண்டார்.மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ‘டென்ஷன்’ ஆகிவிட்ட அவர், சிகரெட்டை டிரேயில் திணித்து விட்டு ஜெமினியிடம் சொன்னார்.:

சிவாஜி:– ‘‘கணேசா! இவன் என்னடா என்னென்னமோ சொல்றான். இவன் சொல்லச்சொல்ல எனக்கு பழைய ஞாபகம் வந்திடுச்சி. அன்னிக்கு ‘‘பராசக்தி’’ படத்தில் இருந்து என்னைத் தூக்கிட்டு, எனக்குப் பதிலாக கே.ஆர்.ராமசாமியை வச்சு நான் நடித்திருந்த சீன்களை எல்லாம் மறுபடியும் ஷூட் பண்ண முயற்சி நடக்கிறதாக கேள்விப்பட்டு நான் கண்ணீர் விட்டேன்.
‘இந்தச் சந்தர்ப்பத்தை விட்டா இனி வாழ்நாள் முழுவதும் சாதாரண நடிகனாகவே இருந்து சாகவேண்டியதுதான். நடக்கிறது நடக்கட்டும். என்ன ஆனாலும் சரி. ஒரு அடி அடிச்சிக்காட்டணும்’னு என் மனதுக்குள்ளே முடிவு பண்ணிட்டேன்.

அன்னிக்கு எனக்கு ஒரு வெறி வந்திடுச்சு. அந்த வெறியை இப்போது இவன்கிட்டே பார்க்கிறேன்.

இவன் ஒரு ‘பாசமலர்’ இல்லை, பத்து ‘பாசமலர்’ எழுதுவான். அந்த அளவுக்கு இவன்கிட்டே சரக்கு இருக்கு. இவனை நான் நல்லா புரிஞ்சிக்கிட்டேன். நீ இவனைப் பத்தி சொன்னது சரிதான். பின்னிடுவான்.

நீ இப்பவே இவனை சிவாஜி பிலிம்சுக்கு அழைச்சிக்கிட்டுப் போயி தம்பி ஷண்முகத்துகிட்டே அறிமுகம் பண்ணி வச்சிட்டு, அட்வான்ஸ் வாங்கிக்கொடு. அதுக்குள்ளே நான் அவனுக்குப் போன் பண்ணி சொல்லிவிடுகிறேன். டைரக்டர்கிட்டேயும் சொல்றேன். ராஜாமணி பிக்சர்ஸ் மோகன், சந்தானம் அண்ணேகிட்டே நீ சொல்லிடு’’ என்றார். இதைக்கேட்டுக் கண் கலங்கிய நான், ‘‘நன்றி’’ என்று கரம் கூப்பினேன்.
சிவாஜி தொடர்ந்தார்:– ‘‘இப்போ நீ சொன்னே பாரு, அடிச்சிக்காட்டுவேன்னு. அடிச்சிக்காட்டவேண்டாம். எழுதிக்காட்டு. அதுபோதும். ‘‘ஆல் த பெஸ்ட்’’ என்று கை குலுக்கினார்.

ஜெமினி என்னை சிவாஜி பிலிம்ஸ் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். ஷண்முகத்தின் அறை! அப்போதுதான் தம்பி ஷண்முகம் சிவாஜியுடன் பேசிவிட்டு போன் ரிஸீவரை வைத்தார்.
ஜெமினியைப் பார்த்து ‘‘வாங்கண்ணே! இப்போதான் அண்ணன் சொன்னாரு. ரொம்ப சந்தோஷம்’’ என்று என் கையைப் பற்றிக் குலுக்கினார்.
‘சீனிவாசன்’ என்று கூப்பிட்டார். அவர் வந்தார். அவரிடம் ஆள்காட்டி விரலைக் காட்டினார். அவர் சிவாஜி பிலிம்ஸ் நிர்வாகி என்று பிறகு தெரிந்து கொண்டேன்.என்னைப்பார்த்து ஷண்முகம், ‘‘நீங்க திருவாரூரா?’’ என்றார். ‘‘ஆமா’’ என்றேன். சீனிவாசன் ஒரு கவரைக் கொண்டுவந்து ஷண்முகத்திடம் நீட்டினார். அவர் அதை வாங்கி என்னிடம் கொடுத்து ‘‘நல்லா எழுதுங்க. இது ரொம்ப பெரிய படம். ஆல் த பெஸ்ட்’’ என்றார். ‘‘வித் யுவர் விஷ்ஷஸ். தேங்க்யூ’’ என்றேன். பொறுக்க முடியாத பசியுடன் புறப்பட்டோம்.
.

Tuesday, 28 July 2020

ANTHA NAAL MOVIE 1954 DIALOGUE




ANTHA NAAL MOVIE 1954 DIALOGUE



இப்போது இந்த தீர்மானத்தை எதிர்த்து பேசுவார் 
அதிகாரவர்க்கத்தின் ஒற்றன் ஒழிக
பிரின்சிபாலின்     ஒற்றன் ஒழிக

தலைவர் அவர்களே !
பேசாதே  வெளியே  போ   
உங்கள் கூச்சலால் வெள்ளையனும் வெளியேறப்போவதில்லை 
நானும் வெளியே போகப்போவதும் இல்லை 

அமைதி.... அமைதி ...
ஜனநாயக முறைப்படி எல்லோருக்கும் பேச உரிமை உண்டு 
அந்த உரிமை  மிஸ்டர் ராஜனுக்கும் உண்டு ..உட்காருங்கள்  

.தலைவருக்கு வந்தனம் 
மாணவ சகோதர சகோதரிகளே 
என் விஷயத்தில் நீங்கள் காட்டிய இந்த வரவேற்புக்கு 
என்மனமார்ந்த வந்தனம் 
எப்பேர்ப்பட்ட வரவேற்பு 
உஷ்ணம் கொதிக்கும் வரவேற்பு 
உஷ்ணம் இல்லை என்றால் உடலில் ஜீவன் இல்லை என்பார்கள் 

இப்பேற்பட்ட வரவேற்பு யாருக்கு கிடைத்திருக்கிறது தெரியுமா ?
பெரிய மனிதர்களுக்கு ,மிகப்பெரிய மனிதர்களுக்கு 
இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பாக மனிதன் வாழ 
ஒரு புது வழி காட்டிய ஒரு உத்தமனை ,அந்த கிரேக்க சாக்ரடீஸை 
ஒரு கோப்பை விஷத்தை கொடுத்து மந்திரோபசாரம் நடத்தினார்கள் 
அதற்கு பிறகு வந்த யேசுநாதர் எல்லோரிடத்திலும் அன்பு செலுத்து 
எதிரி வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தை காட்டு
பிறர் பொருளுக்கு ஆசை படாதே என்று சொன்னதற்காக 
ரோமானியர்கள் அவரை சிலுவையில் அறைந்து வரவேற்றார்கள்   

.அந்த பெரிய மனிதருக்கே  இந்த கதி என்றால் 
என்னைப்போன்ற ஒருவன் தன் கருத்தை வெளியிட 
எதிர்ப்பு இருப்பதில் என்ன ஆச்சரியம் 
இலவச சம்பளம்  வாங்குவதில் என்ன கேவலம் ?
அரசாங்கம் என் அறிவுக்கு அளித்த சன்மானம்  அது 
மாணவர்களில்  யார் தான் சொந்த உழைப்பில்  வருவதை 
கொண்டு படிக்கிறார்கள் .நீங்கள் உங்கள் தாய் தந்தையரிடம் 
இலவச பணம் வாங்குகிறீர்கள்    

.தாய் தந்தையற்ற நான் அரசாங்கத்தின் உதவியால் படிக்கிறேன்  
இந்நாட்டில் பிரஜைகளில் ஒருவனான  எனக்கு பேச உரிமை இல்லை 
ஆனால் உதவக்கரைகளின் உளுத்த பிரசாங்கத்திற்கு உங்கள் உற்சாக வரவேற்பு 
உங்கள் தலைவர்கள் யார் ?
இந்த வீரப்பனா ?
இந்த அரசியல் ஆந்தையா ?
யாரடா ஆந்தை ?
நீதான் 

.சுடுகாட்டில் வட்டமிடும் கழுகுபோல் 
சமுதாயத்தில் ஏற்படும்குழப்பங்களை 
எல்லாம் ஜீவனாபாயமாக ஆக்கி கொண்ட 
நீதான் அரசியல் ஆந்தை 

துள்ளதே தம்பி 
உன் ஜாதகம் என் கையில் இருக்கிறது 
நீ எந்த காலேஜ் மாணவன் 
இந்த கூட்டத்திற்கும் உனக்கும் என்ன சம்பந்தம் 
அழைப்பில்லாமல் வந்து அடுத்து கெடுப்பவனே 
பதில் கூறு 

.உண்டியல் குலுக்கும்  இவன் யார் ?
டேய் ! நீ எந்த காலேஜ் மாணவன் 
உசிர் காலேஜுங்க 
.........................................
நிரந்தரமாக வேலையில்லாத நாடோடி 
எழுதப்படிக்க தெரியாத  வீரப்பனுக்கு ம் 
மிருகக்காட்சி சாலையில் கருங்குரங்கிற்கு தீனி போடும் 
வேலையிலிருக்கும் இவனுமா மாணவர் கூட்ட தலைவர்கள் 

.எதற்காக சிரிக்கிறீர்கள் ?
யாரைப்பார்த்து சிரிக்கிறீர்கள் ?
கை தட்டுவதற்கு ஒரு அர்த்தம் வேண்டாம் 
ஒரு புத்தகத்தையோ ,பேனாவையோ 
விரலால் கூட தொட்டறியாத இவன் ,
ஒரு பெரும் மழைக்காக பள்ளிக்கூடத்தில் 
ஒதுங்காத இவன் 
.பகுத்தறிவின் பாசறையை 
ஆராய்ச்சியின் ஆலயத்தை 
கலைதேவியின்.  கொலுமண்டபத்தை   
இடித்து தள்ள வேண்டுமென்கிறான் 
அதற்குநீங்கள் கை தட்டுகிறீர்கள் 
மாணவன் யார் ?
தேசபக்தி எது ?
தேசத்திற்கும் ,நமக்கும் உள்ள தொடர்பு என்ன ?
இதை பற்றி சிறிதாவது சிந்தித்தீர்களா ? 

.பஞ்சாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் 
செய்கிறார்கள் ,அவர்கள் வாழ்வு வளம் பெற 
நீங்கள் கலாசாலைக்கு செல்லாமல் இருப்பதால் 
இந்த நாட்டுக்கு விடுதலை கிடைத்து விடுமா ? அல்லது 
தலைவர்களுக்கு தான் விடுதலை கிடைத்துவிடுமா ?
ஆக்க வேலையில் ஈடுபடவேண்டிய நாம் சீர்கெட்ட அரசியல் 
சூழலில் சிக்குவதா ?
மாணவப்பருவம்  ஒரு விதை விதைக்கும் பருவம்  
.அதில் வெறுப்புக்கோ ,அரசியல் வேதத்திற்கோ இடம் கிடையாது 
வருங்கால இந்தியாவின் சிற்பி ஆக வேண்டுமானால் 
நாம் இன்று அறிவை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டும் 
நம்மை சுற்றியுள்ள அறியாமையை போக்க வேண்டும் 
கூட்டம் கூடி கூச்சலிடுவதால் இந்த நாடு முன்னேறாது 
வேலை நிறுத்தம் செய்வதோ 
வெறுப்பை வளர்ப்பதோ
மாணவ சமுதாயத்திற்கு முற்றிலும் பொருந்தாது   

ஒழுக்கம் ,கட்டுப்பாடு இவைகளை நாம் இன்று பழகவில்லை என்றால் 
என்றுமே பழக முடியாமல் பொய் விடும் என்று நான் சொல்ல வந்தால் 
நான் ப்ரின்சிபாலின் ஒற்றன் 
அறிவே ஒரு அற்புத சக்தி அதை கொண்டு இந்த நாட்டு மண்ணையெல்லாம் 
பொன்னாக்கி விடலாம் என்று நான் சொல்ல வந்தால் எனக்கு பெயர் துரோகி 
பல்கலை பயின்று பலதொழில் புரிந்து  இந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் 
என்று நான் கூறினால் எனக்குபெயர் துரோகி      

காடு கழனி களை விற்று  கையுள்ளதை எல்லாம் கொடுத்து நீங்கள் 
பெரிய பதவிகளை அடையப்போகிறீர்கள் என்று மனக்கோட்டை கட்டி கொண்டிருக்கும் 
உங்கள் பெற்றோருக்கு துரோகம் செய்யாதீர்கள் என்று 
நான் சொல்ல வந்தால் எனக்கு பெயர் துரோகி 
கை தட்டல் வேண்டாம் 
ஆரவாரம் வேண்டாம் 
ஆறஅமர சிந்தியுங்கள் 
சிந்தித்த பிறகு ஒரு முடிவுக்கு வருவோம்     
..........................................................  

"மணிச்சித்ரத்தாழ்"

Tuesday, 31 July 2018

VIETNAM VEEDU SUNDARAM ,DIALOGUE,DIRECTOR BORN 1940 JULY 31





VIETNAM VEEDU SUNDARAM ,DIALOGUE,DIRECTOR
BORN 1940 JULY 31




Vietnam Veedu" Sundaram born 1940 ,july 31 was a popular Tamil scriptwriter and director.

He has written scripts for nearly all the actors and wrote for 8 films starring Sivaji Ganesan after 1970. His directorial ventures Gauravam, Gnana Paravai, Vijaya, Devi Sri Kumariamman and Payanam are considered cult classics. He was the writer for Tamil classics like Vietnam Veedu, Gnana Oli, Satyam, Grihapravesam, Justice Gopinath Annan Oru Koyil starring Sivaji Ganesan, Naan Yen Pirandhen, Naalai Namadhe starring M. G. Ramachandran. He has directed more than a dozen films and is well known for his family themes. His stories have been made into films in Telugu, Kannada and Hindi.[2] He has turned actor on the small screen and films after 1998 and has to his credit quite a few television serials.

Early life[edit]

Sundaram's mother brought him to Madras from Tiruchirapalli in 1945 to see Mahatma Gandhi at Island Grounds. Then he moved to Madras for good in 1955.

As he was not well educated he was made to work in a factory even at a very young age. In 1955-56 he joined Dunlop factory as a machine operator.

In the mean time he was also working as a service boy in United Amateur Artistes run by Y.G. Parthasarathy, his wife and Pattu. That kindled his interest in drama and cinema. He used to narrate real life incidents with imagination and make it an interesting story. This made him a good storyteller among his friends.Slowly he graduated himself in theatrics and play writing. Soon he became a good screenplay and dialogue writer.

Film career[edit]

He was the mastermind behind creating the highly successful play "Vietnam Veedu," hence the prefix for his name. Vietnam Veedu Sundaram played the hat-trick in films too with the same titles, all acted by the Nadigar Thilagam Sivaji Ganesan, the Thespian of Indian cinema.[3] He is known as the ‘founder’ of social mythology. The well known movies which he wrote include Vietnam Veedu, Gnana Oli, Naan En Piranden, Naalai Namadhe,Satyam, Gruhapravesam, Justice Gopinath, Anaan Oru Koyil, Oru Malarin Payanam, Navagraha Nayaki, Geethanjali, Aayiram Kannudayaal,Dharmam, Piranthn Valarthen, Nambinar Keduvathillai, Jallikattu, Raja Mariyadhai, Velundu Vinaiyillai, Soora Samhaaram. He also wrote story for Kannada film Anupama. He gained national fame for writing the story for 1978 Hindi film Devata starring Sanjev Kumar in the lead.
He cast the ever green K. R. Vijaya in the role of goddess in "Namma Veetu Deivam", the first time social mythology in Tamil, which was remade into Malayalam, Telugu and Kannada. That set the social mythology trend in films and televisions. He has directed more than dozen films and is well known for his family themes with one of them Gouravam being a cult classic.[4] His stories have been made into films in other languages also. He started acting in films since 1999.He turned actor on the small screen from 1998 and has to his credit quite a few television serials. He has worked as a writer for films with many popular stars including M. G. Ramachandran, Sivaji Ganesan, Rajinikanth, Kamal Hassan, K. R. Vijaya, Sathyaraj and Karthik Muthuraman.[5]

Death[edit]

Sundaram died on 6 August 2016 at the age of 73 due to age related ailments.[6] He is survived by his wife Chella and daughter Anu Parthasarathy who is a costume designer.[1][7]

Awards and nominations[edit]
"Vietnam Veedu" Sundaram won the Tamil Nadu State Film Award for Best Dialogue Writer for his magnum opus, Vietnam Veedu in 1970. He also won the Arignar Anna Award in the Tamil Nadu State Film Honorary Award in 1991.

Saturday, 30 June 2018

VINTHAN WRITER ,SCREEN DIALOGUE WRITER , BORN 1916 SEPTEMBER 22-1975 JUNE 30





VINTHAN WRITER ,SCREEN DIALOGUE WRITER , 
BORN 1916 SEPTEMBER 22-1975 JUNE 30





விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன்
DIED ஜூன் 30, 1975

விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 - ஜூன் 30, 1975) புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]
கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார்.

இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் ஓவியம் பயின்றார். அதையும் தொடர முடியவில்லை. ஜெமினி பட நிறுவனத்தில் பணியாற்றினார்.

1938ஆம் ஆண்டு லீலாவதி எனும் பெண்மணியை மணந்தார். இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு அந்த அம்மையார் இறந்துபோக, பின் சரஸ்வதி என்ற பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்தார். ஆறு குழந்தைகள் பிறந்தன.

அச்சகத்தில் பணி[தொகு]

மாசிலாமணி முதலியார் நடத்திய "தமிழரசு" மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். தமிழரசுக்குப் பிறகு ஆனந்த விகடன் அச்சுக் கூடத்தில் வேலை கிடைத்தது. கையெழுத்துப் பிரதிகளிலிருந்து அச்சுக்கோக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தாமும் எழுத வேண்டும் என்ற அவா அவருக்கு ஏற்பட்டது.

கல்கி கிருஷ்ணமூர்த்தியால் 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்கி இதழ், விந்தன் வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆனந்த விகடனில் இருந்து வெளியேறிய டி.எம்.இராஜா பாதர் என்ற அவரது நண்பர் விந்தனுக்கு கல்கி வார இதழில் அச்சுக் கோக்கும் பணியில் சேர உதவினார். கோவிந்தனுடைய அச்சுக் கோக்கும் திறமையைப் பாராட்டியதோடு, அவர் கதைகளும் எழுதுவார் என்பதை அறிந்து, "கல்கி" இதழில் தொடர்ந்து எழுதுமாறு கூறினார். சில மாதங்களில் துணை ஆசிரியராகவும் நியமித்தார். கல்கியின் துணை ஆசிரியராகச் சேர்ந்த விந்தன், குழந்தைகளுக்கு (பாப்பா மலர் பகுதியில்) "விஜி" என்ற பெயரில் பல கதைகள் எழுதினார். விஜி என்ற பெயரை "விந்தன்" என்று பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னவர் "கல்கி" கிருஷ்ணமூர்த்தி தான்.

எழுத்தாளராக[தொகு]
1946 இல் விந்தன் எழுதிய "முல்லைக் கொடியாள்" என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளிவந்தது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் அந்தத் தொகுதிக்கு முதல் பரிசை அளித்தது. விந்தனின் எழுத்துக்குத் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு ஏற்பட்டதால், "பொன்னி" மாத இதழ் ஆசிரியர், விந்தனைத் தொடர்களை எழுதுமாறு வேண்டினார்.

"கண் திறக்குமா?" என்ற கதையை 1947இல் "நக்கீரன்" என்ற புனைப்பெயரில் எழுதினார். "பாலும் பாவையும்" என்ற கற்பனையும் கருத்தும் நிறைந்த தொடர் ஒன்றை எழுதினார். "பாலும் பாவையும்" விந்தனுக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. ஏவி.எம்.நிறுவனத்தார், "பாலும் பாவை"யும் கதையைத் திரைப்படமாக்க விரும்பியதால், கல்கி அலுவலகத்திலிருந்து பதவி விலகி, திரைப்படம் நோக்கிப் பயணித்தார்.சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி வைதீக மரபைத் தூக்கிப்பிடிக்கும் ‘பஜகோவிந்தம்’(1956) எழுதினார். இந்நூலுக்குப் புடைநூலாக ‘பசிகோவிந்தம்’ (1956) என்ற நூலை விந்தன் எழுதினார் . இவ்விரு நூல்களையும் வெளியிட்டவர் பெண்ணாடம் ராமசாமி . [1]

திரைப்படவுலகில்[தொகு]

ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த வாழப் பிறந்தவள் படத்துக்கு வசனமும்,

"அன்பு" என்ற படத்துக்கு வசனமும், ஒரு பாடலும்,

கூண்டுக்கிளி என்ற படத்துக்கு வசனமும் எழுதினார்.

குழந்தைகள் கண்ட குடியரசு, 
பார்த்திபன் கனவு திரைப்படங்களுக்கு வசனமும் பாடல்களும் எழுதினார்.

கையில் கிடைத்த சொற்ப பணத்தைக் கொண்டு "புத்தகப் பூங்கா" என்ற பதிப்பகமும் "மனிதன்" என்ற மாத இதழையும் தொடங்கினார் விந்தன். "அன்பு அலறுகிறது", "மனிதன் மாறவில்லை" என்ற இரு நாவல்களை எழுதினார்.

இறுதிக் காலம்[தொகு]
பிரபல எழுத்தாளர் சாவி ஆசிரியராக இருந்த தினமணி கதிர் இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். மக்கள் எழுத்தாளர் விந்தன், 1975ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி காலமானார். அவர் மறைவுக்குப் பிறகு அவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

விந்தன் எழுதிய நூல்கள்[தொகு]
தமிழ்நாட்டரசு 2008 - 09 இல் விந்தன் எழுதிய நூல்கள் நாட்டுடமை ஆக்கியது. நாட்டுடமை ஆன நூல்களின் பட்டியல்.

அன்பு அலறுகிறது
இந்திய இலக்கியச் சிற்பிகள்
இலக்கியப்பீடம் 2005
எம்.கே.டி.பாகவதர் கதை
ஒரே உரிமை
ஓ, மனிதா
கண் திறக்குமா?
காதலும் கல்யாணமும்
சுயம்வரம்
திரையுலகில் விந்தன்
நடிகவேல் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்
பசிகோவிந்தம்
பாலும் பாவையும்
பெரியார் அறிவுச் சுவடி
மனிதன் இதழ் தொகுப்பு
மனிதன் மாறவில்லை
மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்
விந்தன் இலக்கியத் தடம்
விந்தன் கட்டுரைகள்
விந்தன் கதைகள் - 1
விந்தன் கதைகள் -2
விந்தன் குட்டிக் கதைகள்
வேலை நிறுத்தம் ஏன்?


Tuesday, 19 June 2018

SURATHA ,LYRICS,DIALOGUE WRITER BORN 1921 NOVEMBER 23 - 2006 JUNE 19





SURATHA ,LYRICS,DIALOGUE WRITER
BORN 1921 NOVEMBER 23 - 2006 JUNE 19


சுரதா (நவம்பர் 23, 1921 - ஜூன் 19, 2006) தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். தஞ்சை மாவட்டம் பழையனூர் (சிக்கல்) என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் திருவேங்கடம்-சண்பகம் அம்மையார் ஆவர். பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார். சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.

பாரதிதாசனுடன் தொடர்பு[தொகு]
1941 சனவரி 14 இல் பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதல் கண்டு பழகிய சுரதா அவருடன் சிலகாலம் தங்கியிருந்து அவரது கவிதைப் பணிக்குத் துணை நின்றுள்ளார். பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக் கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது.

கவிதை இயற்றல்[தொகு]
சுரதாவின் சொல்லடா என்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்னும் இதழ் 1947 ஏப்பிரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது.

பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகம் தந்தை பெரியார், கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பொழுது அந்த நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமைக்கு உரியவர் சுரதா. அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இருந்தபொழுது அவரின் உதவியாளராக இருந்தார்.

நாராயணன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு புதுக்கோட்டை யிலிருந்து வெளிவந்த தலைவன் இதழின் துணை ஆசிரியராக பணியாற்றினார். அக்காலத்தில் பல சிறுகதைகளை எழுதினார். கவிஞர் திருலோகசீதாராமின் சிவாஜி இதழில் தொடக்கக் காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்துள்ளன. திருச்சிராப்பள்ளி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.

திரைப்படத் துறையில்[தொகு]
சுரதாவின் கலையுணர்வினைக் கண்ட கு.ச.கிருட்டிணமூர்த்தி என்பவர் இவரைத் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். 1944 ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார். மிகக் குறைந்த அளவுக்கான பாடல்களையே அவர் எழுதியுள்ளார். சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அவரது இரண்டு பாடல்கள், 'அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு', மற்றும் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா' ஆகியவை. 100 இற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.

எழுத்துப்பணி[தொகு]

சுரதாவின் முதல் நூல் சாவின் முத்தம். இதனை வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946 மார்ச்சு மாதம் வெளியிட்டார். 1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார். 1954 இல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார்.

1955 இல் காவியம் என்ற வார இதழைத் தொடங்கினார். இவ்விதழைத் தொடர்ந்து இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.

1971 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழில் சுரதா திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னாளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டு சுவரும் சுண்ணாம்பும் என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது (1974).

பாரதிதாசனின் தலைமாணாக்கராகக் கருதத்தகும் கவிஞர் சுரதா, பல நூல்களாக இருந்த பாவேந்தர் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுத் திருவாசகன், கல்லாடன் பெயரில் அந்த நூல் வெளிவரக் காரணமானார். உலகின் அரிய செய்திகளைப் பட்டியலிட்டுக் காட்டும் சுரதா இல்லத்தில் அரிய நூல்கள் கொண்ட நூலகத்தை உருவாக்கினார்.

தமிழ், கவிதை, புகழ் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரவலர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை இணைத்துச் சில வினோதக் கவியரங்கங்களை நடத்துபவராக இருந்தார் சுரதா. படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் முதலியவை அவை. கவியரங்குகளைக் கொண்டாட்ட நிகழ்வாக மாற்றியதில் அவருக்கு மிகுந்த பங்குண்டு.

பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966 இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.

பெற்ற சிறப்புகள்[தொகு]

1969 இல் தேன்மழை என்ற சுரதாவின் கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.
1972 இல் தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது.
1978 இல் ம.கோ.இரா. தலைமையில் அமைந்த அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.
தமிழக அரசு சுரதாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர் குடும்பத்திற்குப் பத்து இலட்சம் உரூவா பரிவுத்தொகை வழங்கியுள்ளது(2007).
1982 இல் சுரதாவின் மணிவிழாவையொட்டி நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த விழாவில் ரூபா அறுபதாயிரம் பரிசாகத் தரப்பெற்றது.
1982 இல் சுரதாவின் கவிதைப் பணிகளைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் கவியரசர் பட்டம் வழங்கப்பட்டது.
1987 இல் மலேசியாவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்றார்.
1990 இல் கலைஞர் அரசு பாரதிதாசன் விருதினைச் சுரதாவுக்கு வழங்கியது.
1990 இல் கேரளாவில் மகாகவி குமரன் ஆசான் விருது சுரதாவுக்குக் கிடைத்தது.
சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ரூபா ஒரு இலட்சம் இராசராசன் விருது வழங்கப்பட்டுள்ளது.
29.09.2008 இல் சென்னையில் சுரதாவுக்கு நினைவுச்சிலை நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப் பெற்றுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இச்சிலை அமைக்கப்பட்டது.
சுரதாவின் கவிதைகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. சுரதாவின் கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தாய்மண்ணை வணங்குவதாக அனைவரும் கூறுவோம். ஆனால், உண்மையில் தாய்மண்ணைப் போற்றி வணங்கியவர் உண்டென்றால் அவர் உவமைக் கவிஞர் சுரதா ஒருவர்தான். தான் பிறந்த மண்ணையும் தமிழறிஞர்கள் பிறந்த ஊர் நிலத்தின் மண்ணையும் சேமித்து வணங்கியவர். தமிழறிஞர்கள் பிறந்த ஊர் தோறும் சென்று அங்குள்ள மண்ணை எடுத்து மண் கலயத்தில் சேர்த்து வந்தார். ‘’அவற்றைத் திரட்டி என்ன செய்யப் போகிறேன். என்பது ஒரு கனவு’’ எனக் கூறி வந்தவர், அதனை நிறைவேற்றாமலே மறைந்து விட்டார்.

சிறுகதை எழுத்தாளர் செகசிற்பியன் உவமைக்கவிஞர் பட்டத்தை இவருக்கு வழங்கியவர். சிலருக்கே பட்டங்கள் பொருந்தி வரும். ‘உவமைக் கவிஞர்’ என்பது சுரதாவிற்குப் பொருந்துவதுபோல் வேறு யாருக்கும் பொருந்தாது. விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதுபோல், அவரது முதல் கவிதையிலேயே அவரது உவமை வளம் புலப்பட்டது.

நடுவிரல் போல் தலைதூக்கு – நம்

நாட்டாரின் இன்னலைப் போக்கு

என்பதே அவரது முதல் கவிதையின் தொடக்கவரிகளாகும். இதன் மூலம் நாட்டுநலன்பற்றிய தன் ஆர்வத்தையும் வெளிப்படுத்திவிட்டார் அவர்.

மரபுக் கவிஞரான இவர், எளிய ஆனால் புதுப்புது உவமைகளை உருவாக்கிக் கையாண்டு புகழ் பெற்றார். மாநிறத்தைக் ‘கருப்பின் இளமை’ என்றும் பல்லியைப் ‘போலி உடும்பு’ என்றும் அழுகையைக் ‘கண்மீனின் பிரசவம்’ என்றும் நீர்க்குமிழிகளை ‘நரைத்த நுரையின் முட்டை’ என்றும் வெண்ணிலவைச் ‘சலவை நிலா’ என்றும் விண்ணுக்கு மேலாடை பருவமழை மேகம் என்றும், வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம் என்றும் பதினொன்று என்பதைப் பத்துக்கு மேலாடை என்றும் பாடல்கள் அனைத்திலும் உவமையை வாரி வழங்கிய உவமைக் கடல் இவர்.

‘முதன்முதலில்’ என்னும் பட்டியலில் பல முதன்முதலில் என்பதற்குச் சொந்தக்காரர் உவமைக் கவிஞர் சுரதா. 1944 இல் ‘மங்கையர்க்கரசி’ என்னும் திரைப்படத்திற்கு உரையாடல் எழுதினார். இதன் மூலம், குறைந்த அகவையில் முதலில் திரைப்பட உரையாடலை எழுதியவர் என்னும் பெருமை பெற்றார்.

பி.யூ.சின்னப்பாவைக் கதைநாயகனாக் கொண்டு வெளிவந்த இப்படத்தின் உரையாடல்கள் மிகவும் புகழ்பெற்றன. எனவே, இத் திரைப்பட உரையாடலை நூலாக வெளியிட்டார். திரைப்படத்தின் உரையாடல் நூல்வடிவில் வெளிவந்தது அதுவே முதன்முறையாகும்.

தமிழக அரசு ஏற்படுத்திய பாவேந்தர் விருது முதன்முதலில் (1987இல்) இவருக்கே வழங்கப்பட்டது. ‘வீட்டுக்குவீடு கவியரங்கம்’, ‘முழுநிலாக் கவியரங்கம்’, ‘படகுக் கவியரங்கம்’, ‘ஆற்றுக் கவியரங்கம்’ எனப் புதுமையான முறைகளில் கவியரங்கம் நடத்துவதில் இவரே முதலாமவர்.

கவிதைகளில் திரைப்படச் செய்திகளைத் தந்து இதழ் நடத்தியதிலும் இவரே முதலாமவர். தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் படைப்பிலக்கியப் பெரும்பரிசான இராசராசன் விருது (1897 இல் பிறந்த)சுத்தானந்த பாரதியாருக்கு முதலில் (1984 இல்) வழங்கப் பெற்றது. எனினும் இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் முதலில் (1995) இவ்விருது பெற்றவர் இவரே. சுரதாவின் தேன்மழை நூலுக்காக இவ்விருது வழங்கப்பெற்றது.

தமிழ்நாடு அரசு கலைமாமணி விருதும் வழங்கியது. கேரள அரசும் இவரது கவிப்புலமையை மதித்து, இவருக்கு மகாகவி குமரன் ஆசான் விருது வழங்கியது. மூவாயிரம் கவியரங்கங்களில் பங்கேற்று மிகுதியான கவியரங்கங்களில் பங்கேற்ற கவிஞர் என்பதில் முதலிடத்தைப் பிடித்தார். இப்படி இவரது சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

திருவேங்கடம்-செண்பகம் இணையருக்கு 23.11.1921இல் பிறந்த இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் இராசகோபால் என்பதுதான். பாரதியின் தாசனாக மாறிக் கவிஞர் சுப்புரத்தினம் தம் பெயரைப் பாரதிதாசன் எனச் சூட்டிக் கொண்டார். இவரின் தாசனாக விளங்கி – சுப்புரத்தினம் தாசன் என்பதன் சுருக்கமாக – சுரதா எனப் பெயரை மாற்றிக் கொண்டார்.

பாவேந்தர் பாரதிதாசன் என்ற கவிஞர் பரம்பரை உருவானதுபோல்,அப்பரம்பரை வரிசையில், சுரதா பரம்பரை என்று சொல்வதுபோல் – நீலமணி, பொன்னிவளவன், பனப்பாக்கம் சிதா, நன்னியூர் நாவரசன், முருகுசுந்தரம் என – ஓர் அணி உருவானது. இந்த அணியில் சுரதாவின் மகன் கல்லாடனுக்கும் மருமகள் இராசேசுவரி கல்லாடனுக்கும் இடம் உண்டு.

சாவின் முத்தம், சுவரும் சுண்ணாம்பும், துறைமுகம், சிரிப்பின் நிழல்(பாடல் தொகுப்பு), அமுதும் தேனும் , தேன்மழை (கவிதைத் தொகுப்பு), பாரதிதாசன் பரம்பரை, வினாக்களும் சுரதாவின் விடைகளும், உதட்டில் உதடு, எச்சில் இரவு, எப்போதும் இருப்பவர்கள், கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர், சிறந்த சொற்பொழிவுகள், சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு), சொன்னார்கள், தமிழ்ச் சொல்லாக்கம், தொடாத வாலிபம், நெஞ்சில் நிறுத்துங்கள், பட்டத்தரசி, பாவேந்தரின் காளமேகம், புகழ்மாலை, மங்கையர்க்கரசி, முன்னும் பின்னும், வார்த்தை வாசல், வெட்ட வெளிச்சம் ஆகியவை உவமைக் கவிஞர் சுரதாவின் படைப்புகளாகும்.

சுரதாவின் ‘சொல்லடா’ என்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த ‘பொன்னி’ என்னும் இதழ் 1947 ஏப்பிரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது. கவிஞர் திருலோகசீதாராமின் ‘சிவாசி’ இதழில் தொடக்கக் காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்துள்ளன. 1954 முதல் ‘முரசொலி’ இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார். இவ்வாறு இதழ்களில் கவிதைகளும் கதைகளும் எழுதி வந்த சுரதா, இதழ்ப்பணியில் நேரடியாக ஈடுபட்டார். நாராயணன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த ‘தலைவன்’ இதழின் துணை ஆசிரியராக இருந்து பணியாற்றினார். 1955 இல் காவியம் என்ற வார இதழைத் தொடங்கினார். இவ்விதழைத் தொடர்ந்து இலக்கியம்(1958), ஊர்வலம்(1963), விண்மீன்(1964), சுரதா(1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.

ஏறத்தாழ 100 திரைப்படப்பாடல்கள் எழுதியுள்ளார். அவற்றுள் ‘அமுதும் தேனும் எதற்கு?’, ‘அமுதைப் பொழியும் நிலவே’, ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’, ‘மண்ணுக்கு மரம் பாரமா?’, முதலானவை இன்றைக்கும் யாராலும் மறக்கமுடியாதவை.

‘உவமைக்கவிஞர்’ சுரதா அவர்களின் காலத்தால் அழியாத அற்புத‌ படைப்புகள்
சுவரும் சுண்ணாம்பும் (பாடல் தொகுப்பு, 1974)
துறைமுகம் (பாடல் தொகுப்பு, 1976)
அமுதும் தேனும், 1983
தேன்மழை (கவிதைத் தொகுப்பு, 1986)
பாரதிதாசன் பரம்பரை (தொ.ஆ), 1991
சிரிப்பின் நிழல் (பாடல் தொகுப்பு)
வினாக்களும் சுரதாவின் விடைகளும்
உதட்டில் உதடு
எச்சில் இரவு
எப்போதும் இருப்பவர்கள்
கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்
சாவின் முத்தம்
சிறந்த சொற்பொழிவுகள்
சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு)
சுவரும் சுண்ணாம்பும்
சொன்னார்கள்
தமிழ்ச் சொல்லாக்கம்
தொடாத வாலிபம்
நெஞ்சில் நிறுத்துங்கள்
பட்டத்தரசி
பாவேந்தரின் காளமேகம்
புகழ்மாலை
மங்கையர்க்கரசி
முன்னும் பின்னும்
வார்த்தை வாசல்
வினாக்களும் சுரதாவின் விடைகளும்
வெட்ட வெளிச்சம்
மறைவு[தொகு]
இவர் தன்னுடைய 84ம் வயதில் 19.06.2006 அன்று சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்