Showing posts with label SEPTEMBER 3. Show all posts
Showing posts with label SEPTEMBER 3. Show all posts

Saturday, 4 September 2021

K.S.RAJA ,PRESENTER BORN 1942 FEBRUARY 8 - 1994 SEPTEMBER 3

 

K.S.RAJA ,PRESENTER BORN 

1942 FEBRUARY 8 - 1994 SEPTEMBER 3



பிறப்புபெப்ரவரி 81942
பதுளைஇலங்கை
இறப்பு3 செப்டம்பர் 1994 (அகவை 52)
கொழும்பு



1983 இலங்கை, ஜூலை கலவரம்….. இந்தியா வந்த K.S.ராஜா, அப்போது இங்கு இயங்கி வந்த ஈழ இயக்கங்களுள் ஒன்றான ‘ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி’யில் இணைந்து செயற்பட்டார்.

1987 ஆம் ஆண்டில் ‘இலங்கை – இந்திய ஒப்பந்த’த்தைத் தொடர்ந்து இலங்கை திரும்பிய இவர் இலங்கை வானொலியில் தமது வழக்கமான பணிகளுக்கு திரும்பினார்!

இந்நிலையில், 1989ஆம் ஆண்டு கொழும்பில் இவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது உடல் கொழும்பு கடற்கரையில் இதே செப்டம்பர் 3ல் கண்டெடுக்கப்பட்டது. இவரது ‘நினைவு சமாதி’ கொழும்பு பொரல்லை மயானத்தில் உள்ளது.




சாகும் வரை அறிவிப்பாளராகவே இருக்க விரும்புகிறேன்..!

ஏற்பாடு செய்தவர்களே எதிர் பார்க்கவில்லை. மதுரை காந்தி மியூஸிய திறந்தவெளி அரங்கு திணறியது. எங்கெங்கும் ஆரவாரத் துடன் ரசிகர்கள் கூட்டம்.

இலங்கை வானொலியின் அலை வரிசைகளில் ஆதிக்கம் செய்த அபிமான அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவின் குரலைச் சமீபகாலமாகக் கேட்க முடியாமல் தவித்த வானொலி நேயர்களுக்கு, ஈழப் போராட்ட நிதிக்கு அவர் இங்கு நேரடியாக நிகழ்ச்சிகளைத் தரப்போகிறார் என்ற செய்தி எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. அவர் கம்பீரக் குரலை நேரில் கேட்கவும் அவரைப் பார்க்க வும் ஆர்வத்துடன் பரபரத்தனர்.

'பராக்’ சொல்வதுபோல் முதலில் ஒருவர் 'வருகிறார்... வருகிறார்... கே.எஸ்.ராஜா’ என அறிவிக்க, அதைத் தொடர்ந்து பிரமாண்டமான மியூஸிக். மற்றொருவர் வந்து மைக் பிடிக்க, இவரும் கே.எஸ்.ராஜா p67.jpgவருவதை அறிவிக்கிறாரோ என நாம் எதிர்பார்த்து இருந் தோம். மைக்கைப் பிடித்தவுடன், ''வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில்...'' என அதே மிடுக்கான குரல் ஒலிக்க, ராஜாவின் குரலை நேரில் கேட்ட மகிழ்ச்சியில் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

லேசான சாம்பல் நிற சஃபாரியில் சற்றே குள்ளமாக, தொப்பி வைத்துக்கொண்டு, நாம் சற்றும் எதிர்பார்க்காதபடி வித்தியாசமான ராஜாவாக இருந்தார். தேனிசை மழையின் ஆரம்பத்தில் ஒரு மாணவி, கே.எஸ்.ராஜாவிடமே பர்சனாலிடி பற்றிக் கேட்டுவிட... அவர், ''நீங்கள் எப்படி எதிர்பார்த்தீர்கள்?'' என்றவுடன், ''கொஞ்சம் ஹைட்டா, வெயிட்டா அமிதாப் பச்சன் ஸ்டைலில் இருப்பீர்கள் என்று எதிர்பார்த் தேன்'' என்றார் அந்த மாணவி. ''அமிதாப்புக்கு என்னைப் போன்று அழகான தமிழ்க் குரல் கிடையாதே'' என்றார் கே.எஸ்.ராஜா. அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது. 'பாட்டுக்குப் பாட்டு’ இசை நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே சூடுபிடித்தது. அதிகாலை 3 மணி வரை பார்வையாளர்களைத் தனது பேச்சிலும் கிண்டலிலும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.

மறுநாள் யானைக்கல்லில் உள்ள ஹோட்டல் பிரசிடென்ட்டில் கே.எஸ்.ராஜாவைச் சந்தித்தோம்.

தினமும் வானொலியில், வணக்கம் கூறி விடைபெற்று நழுவிவிடும் ராஜாவைப் பற்றிய முழு விவரம் தெரிய வேண்டாமா?

இயற்பெயர் ஸ்ரீஸ்கந்த ராஜா. அப்பா டாக்டர். அம்மா ஆசிரியை, சிறு வயதில் இருந்தே உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்று அம்மா தான் பழக்கப்படுத்தினாராம். அக்காக்கள் நால்வரும் டாக்டர் கள். முக்கியமாக, பிளாஸ்டிக் சர்ஜரியில். படிப்பு இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் லண்டன் பல்கலைக்கழகத்திலும். கணிதம் மற்றும் ரசாயனப் பட்டதாரி.

''1966-ல் கொழும்பு ராயல் காலேஜில் படிக்கும்போது, மாணவர் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னை எதிர்த்து நின்றவர் ஒரு சிங்களர். அந்த செயின்ட் தாமஸ், செயின்ட் பீட்டர்ஸ் பகுதிகளில் சிங்களர் கள்தான் அதிகம் என்றாலும், அவர்களும் தமிழரான என்னையே தெரிவு செய்தார்கள். (நடுநடுவே பயங்கரமான தும்மல். தமிழ்நாட்டு க்ளைமேட் ஏற்றுக்கொள்ளவில்லையாம்!)

''சிலோன் யுனிவர்சிட்டியில் கொஞ்ச நாட்கள் புரொஃபஸராகப் பணியாற்றினேன். எக்ஸாம் கவுன்சிலிலும் நியமித்தார்கள். அப்போதெல்லாம் பி.ஹெச்டி. வாங்க வேண்டும் என்றுதான் எண்ணியிருந்தேன். 'ரேடியோவில் அறிவிப்பாளர் கேட்டு விளம்பரம் வந்திருக்கு. நீங்கதான் நன்றாகப் பேசறீங்களே. அப்ளை பண்ணுங்க’னு ஸ்டூடன்ட்ஸ் சொன்னாங்க.

அப்போதெல்லாம் பொதுவாக நாடகத்தில் பேசினவங்களைத்தான் தெரிவு செய்தார்கள். ஆனால், அறிவிப்பாளர் மயில்வாகனம் அவர்கள், எனது உச்சரிப்பினையும் குரல் வளத்தையும் கண்டுகொண்டு, என்னையே அந்தப் பணிக்கு நியமித்தார். எனது முன்னேற்றத்துக்கு அவருடைய உற்சாகமும் உறுதுணையும்தான் முக்கியக் காரணம்'' என்றார் ராஜா.

p67a.jpg
1970-ல் ராஜாவின் நுழைவுக்குப் பின், வானொலி ஒலிப்பரப்பில் ஏற்பட்ட மாறுதல்கள் பற்றிக் கேட்டபோது...

''சாதாரண பொதுமக்களுக்கும் நிலையத்துக்கும் மிகுதியான உறவினை ஏற்படுத்தும் புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினேன். பி.பி.சி-யில் 'ஹீட்பரேட்’ (இசை அணித் தேர்வு) - நிகழ்ச்சி யினை முதன்முதலாக அறிமுகப்படுத்தினேன். 'இசைச் செல்வம்’ நிகழ்ச்சிகூட அதைப் பின்பற்றி அமைக்கப்பட்டதுதான்.

நான் அமைக்கும் 'திரை விருந்து’ நிகழ்ச்சி யினைத் தயாரிப்பாளர் பாலாஜி அவர்கள் மிகவும் பாராட்டியிருக்கிறார். நடிகர் திலகம் அவர்களும் அவருடைய துணைவியாரும் 'ஹீட் பரேட்’ நிகழ்ச்சியினை மிகவும் ரசித்துக் கேட்ப தாகக் கூறியிருக்கிறார்கள்.

மாணவ - மாணவியருக்காக நடத்தப்படும் 'பொது அறிவுக் களஞ்சியம்’ நிகழ்ச்சி, மக்களிடையே மிகுதியான வரவேற்பு. 1981-ல் இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளே அரசுத் தேர்வுக்கு மிகுதியாக வந்திருந்தன. ''தொலைபேசி மூலம் உரையாடும் 'உங்கள் விருப்ப நிகழ்ச்சி’க்கும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு'' என்றார்.

''புதுமை என்றாலே எதிர்ப்புகள் இருக்குமே... தங்களுக்கு?''

''இல்லாமலா என்ன... ஆரம்பத்தில், வழக்க மான ஒலிப்பதிவு முறைக்கு எதிராகச் செயல் படுகிறேன் என்று சொல்லி, முழுமையாக இடையூறு செய்தார்கள். ஆனால், ரசிகர்களின் ஏராளமான கடிதங்கள், அதிகாரிகளின் மனத்தை மாற்றிவிட்டு, என்னையும் விருப்பம்போல் செயல்படவைத்துவிட்டது!''

உரையாடல் கவிதை மீது தொற்றியது.

''இலங்கையில் கவியரசர் கண்ணதாசனுக்கு ஏராளமான ரசிகர்கள். கருணா ரத்தின அபய சேகரர் என்பவர் ஒரு சிங்களக் கவிஞர். அவர் கண்ணதாசனின் தமிழ்க் கவிதைகளைச் சிங்களத் தில் மொழிபெயர்த்துத் தரும்படி கேட்டு, அப்படியே அதனைக் கவியாக வடித்துவிடுவார்'' என்றார் ராஜா.

ராஜா, இலங்கை வானொலியைவிட்டு வெளியேறிய நிகழ்ச்சியைப் பற்றிக் கூறினார்.

p67b.jpg''நான் எழுச்சிப் பாடல்களாக ஒலிபரப்பி னேன். உடன் இருப்பவர்களே பொறாமையினால் காட்டிக்கொடுத்துவிட்டார்கள். பின் என்ன, இடைநிறுத்தம் செய்துவிட்டார்கள். ராணுவத் தினரிடம் சித்ரவதை. நான்கு மாதக்கஷ்டம். அதைத் தொடர்ந்து வட இலங்கை நோக்கிப் பயணமாகிவிட்டேன். யாழ்ப்பாணம் குடா நாடு முழுமையாகப் போராளிகளின் கட்டுப்பாட் டில் இருப்பதால், பிரச்னை எதுவும் இல்லை.

இயக்கங்கள் அனைத்தும் ஒரு கொடியின் கீழ் இணைய வேண்டும். சமீபத்திய வவுனத் தீவு சண்டை ஒரு ஆரோக்கியமான அறிகுறி'' என்கிறார்.

''இப்போதெல்லாம் ஈழ மக்கள் இலங்கை வானொலியை நம்புவது இல்லை. 'லங்கா புவத்’ - என்பதை 'லங்கா பொய்’ என்றே கேலியாக அழைக்கிறார்கள்.

இந்தியப் பத்திரிகைகள் மற்றும் இந்திய வானொலி நிலையங்களில் ஒலிப்பரப்பாகும் செய்திகளையே நம்புகிறார்கள்'' என்கிறார்.

''சாகும் வரையிலும் அறிவிப்பாளராகப் பணியாற்றவே விரும்புகிறேன். ஆனால், மறுபடியும் இலங்கை வானொலி நிலையம் சென்றால், என்னால் சுதந்திரமாகப் பணியாற்ற முடியாது இல்லையா?''

- அந்தக் கம்பீரமான குரலில், ஓர் இனம் புரியாத சோகம் இழையோடியது!

- பி.இளங்கோவன், ஆர்.தேன்மொழி

K.S..ராஜா பற்றிய ஒரு குறிப்பு: பழைய விகடனில் இருந்து

அமரர் கே.எஸ்.ராஜா 

                                      25ம் ஆண்டு நினைவஞ்சலி


மலர்வு;08.02.1942        உதிர்வு;03.09.1994

எல்லாம் ஒரே இடத்திற்கு போகிறது,எல்லாம் மண்ணிலே
உண்டாகிறது.எல்லாம் மண்ணுக்கே திரும்புகிறது
கே.எஸ்,ராஜா(முன்னாள் வானொலி அறிவிப்பாளார்,
இலங்கை ஒலிபரப்பு் கூட்டுத்தாபனம்,யாழ்ப்பாணம்)

 

மனைவி ரூத்
மகள்: ஷர்மிலா,
மருமகன்: றெக்ஸ்
பேரன்: றிஷான்,ஷான்,
தங்கைமார்: சாரதா(மலேசியா), சுபா (இலங்கை)
தம்பி:  சோமாஸ்கந்தராஜா(லண்டன்)




♥மதுரக்குரல் மன்னன்.
அமரர்.கே.எஸ். ராஜா. அவர்களது
23.ஆவது சிரார்த்ததினம்.
(03.09.2017)
பிறப்பு. 08.02.1942.யாழ்ப்பாணம் கரைநகர்.
முழுப்பெயர்.
கனகரட்னம் ஸ்ரீஸ்கந்தராஜா.
தந்தை. மருத்துவர். தாய்.ஆசிரியை.
கல்விகற்றது கொழும்பு ரோயல் கல்லூரி.கணிதம் இராசயன பட்டதாரி.
சிலகாலம் விரிவுரையாளராக பல்கலைகழகத்தில் பணியாற்றினார்.
உடன் பிறந்த சகோதரிகள் நால்வரும்
மருத்தவர்கள்.1970.ஆம் ஆண்டு இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் அறிவிப்பாளராக இணைந்து கொள்கின்றார்.சாதாரண பொது மக்களும். நிலையத்திற்கும் மிகுதியான உறவினை ஏற்படுத்திய
பல புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினார்.
லண்டன் பி.பி.சி. வானொலியில் ஒலிபரப்பான"ஹீட் பரேட்" என்ற நிகழ்ச்சியினை அடிப்படையாக கொண்டு இசையணித்தேர்வு.நிகழ்ச்சியினை அறிமுகம் செய்தார் அது போன்று தொலை பேசியுடன் உனரயாடும்
உங்கள் விருப்பம்.நிகழ்ச்சி.மாணவர்களின்
அறிவுத்திறனை வளர்க்கும் அறிவுக்களஞ்சியம். திரைப்பட இரசிகர்களை மயக்கிய திரைவிருந்து.
இன்னும் பல புதுமையான விளம்பர
நிகழ்ச்சிகள் எல்லாமே நேயர்களின்
அபிமானத்தை வென்று உச்சத்தை தொட்ட நிகழ்ச்சிகளாகும். இவர் வரும்
போது அவருடைய "சிக்னேச்சர்" டியூனை கேட்டவுடனே நமக்குள் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும்.பாடல்.
திரைப்படம்.பாடியோர்.இயற்றியவர்.
இசையமைப்பாளர்.இப்படி மின்னல் வேகத்தில் எல்லா விபரங்களையும் கூறி பாடலை ஒலிபரப்பும் வழக்கத்தை
ஆரம்பித்து வைத்தவரும் இவரே
இவரது வானொலி விளம்பரயுக்தியாலும் குரல்வளத்தாலும் நம்நாட்டில் மட்டுமல்ல முழு தமிழகமே சொக்கிப்போனது.
அன்று தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத காலத்தில் இவர் வானொலியில் செய்த "கிரபிக்ஸ்"
விளையாட்டுகளை இன்று நினைத்தாலும் வியப்பாக இருக்கும்.
நேயர்களின் பெயர்களை மிகவிரைவாக வாசித்துக்கொண்டு போவார் அதில் கீதா. என்று பெயர் வந்தால் உடனே கீதா!ஒரு நாள் பழகும்!....... கீதா! என்ற பதத்தினை மட்டும் ஒலிபரப்பு செய்து நேயர்களை
ஆச்சரியப்படுத்துவார்.
நான் ஏன்? பிறந்தேன். திரைப்படத்திற்காக ஒரு விளம்பரம்.
மக்கள்திலகம்.எம்.ஜி.ராமச்சந்திரன்.
அவரகளே உங்களது இலட்சியம் என்ன?வென்று அவரது ஸ்டைலில்
கேட்பார் அழுவுறவுங்கள சிரிக்வைப்பதும். சிரிக்கிறவுங்கள சிந்திக்வைப்பதும் தான். எனது இலட்சியமென எம்.ஜி.ஆர். பேசும் அந்த
வசனத்தை ஒலிபரப்பு செய்துவிட்டு
அட்டகாசமாக விளம்பரம் செய்வார்.
இப்படித்தான் நீயா? திரைப்படத்தில்
நடிகை ஸ்ரீபிரியா. ராஜா. என்னைவிட்டு
போயிடாதீங்க!...... என்று கதறுவார். அதனை இடைநிறுத்தி நம்ப ராஜாவோ
இல்லை நேயர்களே உங்கள் ராஜா.
விடைபெறும் நேரம் வந்துவிட்டதென
வணக்கம் கூறி விடைபெறுவார். இப்படி
குரு. தீ! . நிறம்மாறாதபூக்கள். தீபம்.
நினைத்ததைமுடிப்பவன்.எதிரொலி.
மீனவநண்பன் எங்கள் தங்க ராஜா.
பட்டாக்கத்தி பைரவன்.காலம்வெல்லும்.
எங்கள் பாட்டன்சொதத்து. இன்னும் பல
திரைப்படங்களுக்கு அவர் செய்த விளம்பரங்கள் புதுமையானவை கேட்பதற்கு சுவாரசியமானவை.
பாடல் ஒலிபரப்பாகும் போது அது இருபக்க இசையாக இருந்தால்
அதனை திருப்பிபோடும் அந்தகணநேரத்தில் வித்தியாசமாக
ஏதாவது கூறி நேயர்களை வியப்பில்
ஆழ்த்துவார்.இப்படித்தான் விடுமுறைவிருப்பம். உலகம் சுற்றும் வாலிபன்.திரைப்படத்தின் பாடல்
பச்சைக்கிளி முத்துச்சரம்!..... பாடலை
ஊரெழுமேற்கு. நுவரெலியா. தரவளைமேற்பிரிவு. நேயர்கள் விரும்புவதாக அறிவிப்பு செய்து பாடலை ஒலிபரப்புகின்றார். இசைதட்டினை திருப்பிபோடும் அந்த சில வினாடிகளில் உலகம் சுற்றும் வாலிபன். இப்போது ஊரெழுமேற்கு.
நுவெரெலியா. தரவளை மேற்பிரிவு.
ஆகிய இடங்களை சுற்றிக்கொண்டிருக்கினறார்.என்று
கூறியதை இன்று நினைத்தாலும் மனம்
இனிக்கிறது.தனது கம்பீரமான குரல் வளத்தால் நேயர்களை வானொலியோடு கட்டிப்போட்டு வைத்த
வித்தகர் அவர். அவர் நம்மைவிட்டு மறைந்தாலும் அந்த வசீகர குரல் இன்றும் எமது செவிகளில் ரீங்காரம்யிட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.....



1983 இலங்கை, ஜூலை கலவரம்….. இந்தியா வந்த K.S.ராஜா, அப்போது இங்கு இயங்கி வந்த ஈழ இயக்கங்களுள் ஒன்றான ‘ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி’யில் இணைந்து செயற்பட்டார்.

1987 ஆம் ஆண்டில் ‘இலங்கை – இந்திய ஒப்பந்த’த்தைத் தொடர்ந்து இலங்கை திரும்பிய இவர் இலங்கை வானொலியில் தமது வழக்கமான பணிகளுக்கு திரும்பினார்!

இந்நிலையில், 1989ஆம் ஆண்டு கொழும்பில் இவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது உடல் கொழும்பு கடற்கரையில் இதே செப்டம்பர் 3ல் கண்டெடுக்கப்பட்டது. இவரது ‘நினைவு சமாதி’ கொழும்பு பொரல்லை மயானத்தில் உள்ளது.


கொலை பற்றிய கருத்துக்கள்[தொகு]

ஈழ இயக்கங்களுள் ஒன்றான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் உறுப்பினரான ரி. மதிவாணன் என்பவர் தெற்காசிய ஊடக சேவை (South Asian Media Service - SAMS)க்கு அளித்த பேட்டியில் கே. எஸ். ராஜா ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் கொலை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.[6] இது குறித்து ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வினவிய போது அவர் இக்குற்றச்சாட்டை நேரடியாக மறுக்காமல் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலைச் செய்யப்பட்டதாக கருதப்படும் சந்தர்ப்பங்களை எடுத்துக் காட்டினார்.[7

Thursday, 3 September 2020

SADHGURU JAGGI VASUDEV ,ESHA MAIYAM BORN 1957 SEPTEMBER 3



SADHGURU JAGGI VASUDEV ,
ESHA MAIYAM  BORN 1957 SEPTEMBER 3



.சத்குரு ஜகி வாசுதேவ் (Sadhguru Jaggi Vasudev) ஞானியாகவும் யோகியாகவும் குருவாகவும் திகழ்பவர். இவர் நிறுவியுள்ள ஈஷா அறக்கட்டளை, மத சார்பற்ற, இலாப நோக்கில்லாத ஒரு பொதுத் தொண்டு நிறுவனம். இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, லெபனான், சிங்கபூர், கனடா, மலேசியா, உகாண்டா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல உலக நாடுகளில் யோகா நிகழ்ச்சிகளை ஈஷா அறக்கட்டளை வழங்கிக் கொண்டிருக்கிறது. சமூக மற்றும் சுற்றுபுற நல செயல்பாடுகள் பலவற்றிலும் இந்நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள பொருளாதாரம் மற்றும் சமூகப்பிரிவு (ECOSOC) அமைப்பும் ஈஷாவிற்கு சிறப்பு ஆலோசனை அந்தஸ்தை வழங்கியுள்ளது.
இளமைக்காலம்
கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூரில் ஒரு தெலுங்கு குடும்பத்தில், செப்டம்பர் 3, 1957-இல் சுசீலா மற்றும் டாக்டர் வாசுதேவ் தம்பதியினருக்கு ஜகதீஷ் பிறந்தார். நான்காவதாக பிறந்த இவருக்கு ஒரு சகோதரரும் இரு சகோதரிகளும் உண்டு. இவர் பிறந்தபோது குறிசொல்லும் நாடோடி ஒருவர், இக்குழந்தை மிகவும் அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழ்வான் என்று குறி சொல்லிவிட்டு, 'இந்த பிரபஞ்சத்தை ஆள்பவன்' என்று பொருள்படும் ஜகதீஷ் என்ற பெயரையும் சூட்டிவிட்டுச் சென்றார்.

சத்குருவின் தந்தை இந்திய ரயில்வேயில் கண் மருத்துவராகப் பணிபுரிந்ததால், அவர் குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்து செல்ல வேண்டியிருந்தது. ஜகி என்று அழைக்கப்பட்ட ஜகதீஷ், சிறு வயதிலேயே இயற்கை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். இவர் அடிக்கடி அருகாமையில் உள்ள வனங்களுக்குப் பயணம் செய்வார். சில சமயம் இப்பயணங்கள் 3 நாட்கள் வரை கூட நீடிக்கும். இவர் 11 வயதில், மல்லடிஹள்ளி ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிஜியை சந்தித்து, அவரிடம் எளிய யோகாசனங்களைக் கற்று, தவறாமல் அவற்றைப் பயிற்சி செய்து வந்தார். "ஒரு நாள் கூட தவறாமல் செய்து வந்த இந்த எளிய யோகப் பயிற்சிகளே பிற்காலத்தில் என்னை மிக ஆழமானதோர் அனுபவத்திற்கு இட்டுச் சென்றது," என்று சத்குரு குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிப் படிப்பை முடித்தபின், மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பட்டதாரி ஆனார். அப்போது அவர் வகுப்பில் இரண்டாவது மாணவராகத் தேர்ச்சி பெற்றார். கல்லூரி நாட்களில் பயணம் செய்வதிலும் மோட்டார் பைக்குகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டார். மைசூரில் உள்ள சாமுண்டி மலை அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் மிகவும் பிடித்த இடமாக இருந்தது. அவர்கள் அங்கு அடிக்கடி சந்திப்பதும், இரவுகளில் பைக் ஓட்டிச்செல்வதுமாக இருந்தனர். சத்குரு தனது மோட்டார் பைக்கில் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளார்.

நேபாளின் எல்லையைத் தொட்டபோது அவருக்கு பாஸ்போர்ட் இல்லாத காரணத்தால், நேபாளிற்குள் செல்ல அனுமதி கிடைக்கவில்லை. தான் எங்கு செல்வதையும் எவரும் தடுக்க முடியாதவாறு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை இச்சம்பவம் அவருக்குள் உருவாக்கியது. அவர் பட்டப்படிப்பை முடித்தபின் இந்த எண்ணமே அவரைப் பல தொழில்களைத் துவங்கத் தூண்டி, அவற்றை வெற்றிகரமாக நடத்தச் செய்தது. அவர் செய்த தொழில்களில் கோழிப்பண்ணை, செங்கல்சூளை, கட்டிடத்தொழில் ஆகியவையும் உள்ளடங்கும்.

ஆன்மீக அனுபவம்

அவருடைய 25 ஆம் வயதில், செப்டம்பர் 23, 1982 இல் சாமுண்டி மலைக்கு பைக்கில் சென்றார். அங்கு ஒரு பாறை மீது அமர்ந்தபோது ஒரு ஆழமான ஆன்மீக அனுபவத்தைப் பெற்றார். சத்குரு அந்த அனுபவத்தை விவரிக்கையில், "என் வாழ்க்கையில் அந்த நொடி வரை இது நான் என்றும், அது வேறொருவர், அது வேறொன்று என்றும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் முதல்முறையாக எது நான், எது நானில்லை என்று எனக்கு புரியாமல் போனது. திடீரென நான் என்பது எல்லா இடங்களிலும் பரவிக்கிடந்தது. நான் உட்கார்ந்திருந்த பாறை, நான் சுவாசித்த காற்று, என்னை சுற்றியிருந்த காற்றுமண்டலம், என்று எல்லாவற்றிலும் தெறித்துக் கிடந்தேன். இது கேட்பதற்கு சுத்த பைத்தியக்காரத்தனமாகத் தோன்றலாம்.

ஒரு பத்து பதினைந்து நிமிடம் இப்படி இருந்திருப்பேன் என்று நினைத்தேன். ஆனால் பழைய நிலைக்கு திரும்பியபோது, முழு நினைவுடன், கண் திறந்த வண்ணம் உட்கார்ந்தவாறு சுமார் நான்கரை மணி நேரம் கழிந்திருந்ததை உணர்ந்தேன். ஒரு நொடிப்பொழுது போல நேரம் ஓடிவிட்டது," என்று குறிப்பிடுகிறார். இந்த அனுபவம் கிடைத்து 6 வாரங்கள் கழித்து, அவர் தன் தொழிலை நண்பரின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு, தனக்கு ஏற்பட்ட உள்ளனுபவத்தைப் பற்றி மேலும் அறிய விரிவான பயணம் மேற்கொண்டார். ஒரு வருடம் இப்படி தியானத்திலும் பயணத்திலும் கழிந்தபின், சத்குரு தன்னுடைய அனுபவத்தை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள யோகப் பயிற்சிகளை கற்றுத்தர முடிவு செய்தார்.

1983 இல் 7 பங்கேற்பாளர்களுடன் தனது முதல் வகுப்பை மைசூரில் நடத்தினார். சிறிது காலத்தில், கர்நாடகா மாநிலத்திலும் ஐதராபாத்திலும் மோட்டார் பைக்கிலேயே பயணம் செய்து பல யோகா வகுப்புகள் நடத்தினார். அப்போது அவர் தன் கோழிப்பண்ணையின் வருமானத்திலேயே வாழ்க்கையை நடத்தினார், வகுப்புகளுக்கு பணம் வாங்க மறுத்தார். பங்கேற்பாளர்கள் கொடுத்தவை அனைத்தயும் சேமித்து வகுப்பின் கடைசி நாளில் அருகில் உள்ள ஏதோ ஒரு தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்துவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த ஆரம்ப கால வகுப்புகளே, பிற்காலத்தில் ஈஷா யோக வகுப்புகளை வடிவமைக்கும் அடித்தளமாய் அமைந்தன.

பிற்காலத்தில் ஈஷா யோக மையம் நிறுவப்படவிருக்கும் ஊரான கோவையில் தனது முதல் வகுப்பினை 1989 இல் நடத்தினார். 'சஹஜ ஸ்திதி யோகா' என்று அப்போது அழைக்கப்பட்ட அந்த வகுப்புகளில் ஆசனங்கள், பிராணாயாம கிரியாக்கள் மற்றும் தியானம் கற்றுத்தரப்பட்டது. ஆன்மீக ஆர்வம் கொண்டவர்கள் அதிகரித்துக் கொண்டே சென்றதால், 1993 இல் அவர்களுக்கு உறுதுணையாக ஒரு ஆசிரமம் நிறுவ வேண்டுமென சத்குரு தீர்மானித்தார். கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, கோவா என்று பல இடங்களைப் பார்த்தும் அதில் மனநிறைவு இல்லாமல், கடைசியில் கோவையிலிருந்து 40 கி.மி. தூரத்தில், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 13 ஏக்கர் நிலப்பரப்பை தேர்வு செய்தார். 1994 இல் அந்த இடத்தைப் பதிவு செய்து யோக மையம் ஒன்றை நிறுவினார்.

தியானலிங்கம்
1994-இல் சத்குரு ஆசிரம வளாகத்தில் முதல் யோக வகுப்பை நடத்தியபோது, தியானலிங்கத்தைப் பற்றி பேசினார். தியானலிங்கம், யோக முறைப்படி தியானத்திற்காக உருவாக்கப்பட்ட ஓர் இடமாகும். சத்குருவுடைய குரு அவரிடம் தியானகலிங்கத்தை பிரதிஷ்டை செய்யச்சொல்லி ஒப்படைத்த பொறுப்பே, அவர் வாழ்க்கையின் நோக்கமாக இருந்தது என்று சத்குரு கூறியிருக்கிறார். 1996-இல் லிங்கத்திற்கான கல் ஆசிரமத்திற்கு கொண்டுவரப்பட்டது. மூன்று வருடத்திற்குப் பிறகு, 23 ஜூன் 1999-இல் தியானலிங்க பிரதிஷ்டை நிறைவு பெற்று, நவம்பர் 23 ஆம் தேதி பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.

தியானலிங்கம் எந்த மத நம்பிக்கையையும் சாராமல், ஆழ்ந்த தியானம் செய்வதற்கான ஓர் இடமாக விளங்குகிறது. ஸ்டீல், கான்கிரீட், போன்ற எதையும் உபயோகிக்காமல், செங்கல்லும் சுண்ணாம்புக் கலவையும் மட்டுமே பயன்படுத்தி கட்டப்பட்ட 76 அடி உயரமான கூடாரம் கர்பக்கிரகத்தின் மேற்கூரையாக இருக்கிறது.

13 அடி 9 அங்குலம் உயரம் கொண்ட லிங்கம் கறுப்பு நிற அடர்த்தியான கிரானைட் கல்லால் ஆனது. நுழைவாயிலில் உள்ள சர்வ தர்ம ஸ்தம்பம், ஒருமைத்தன்மையின் சின்னமாகத் திகழ்கிறது. இந்து, கிறித்துவம், முஸ்லிம், சீக்கியம், ஜெயின், தாவோயிஸம், ஜோராஸ்ட்ரியானிஸம், யூத மார்க்கம், புத்த நெறி, மற்றும் ஷிந்தோ (ஜப்பானிய மரபு) ஆகிய நெறிகளைக் குறிக்கும் சின்னங்கள் செதுக்கப்பட்டு, உலக மக்கள் அனைவரையும் இந்த ஸ்தம்பம் வரவேற்கிறது.

ஈஷா அறக்கட்டளை
சத்குருவால் நிறுவப்பட்ட ஈஷா அறக்கட்டளை, எந்த ஒரு மதத்தையும் சாராமல், இலாப நோக்கமின்றி, முழுக்க முழுக்க தன்னார்வத் தொண்டர்களால் நடத்தப்படும் ஓர் நிறுவனம். 1992 இல் கோவையில் நிறுவப்பட்ட ஈஷா யோக மையம், ஒருவரின் சுய விழிப்புணர்வு நிலையை அதிகரிக்கக்கூடிய பல்வேறு யோகா நிகழ்ச்சிகளை நடத்துகிறது. சர்வதேச அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூகப்பிரிவு (ணிசிளிஷிளிசி) அமைப்புடன் ஒருங்கிணைந்து ஈஷா அறக்க்கட்டளை செயல்படுகிறது.

சமூக நலத் திட்டங்கள்
சத்குரு துவங்கிய பசுமைக்கரங்கள் திட்டம், நம் சுற்றுச்சூழலை பாதுகாத்து தமிழ்நாட்டின் பசுமைப் போர்வையை 10 சதவிகிதம் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுற்றுசூழல் பாதுக்காப்பிற்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான 'இந்திரா காந்தி பரியவரண் புரஸ்கார்'-ஐ ஜூன் 2010 இல், இந்திய அரசாங்கம் இத்திட்டத்திற்கு வழங்கியது.

இதுவரை சுமார் 8.2 மில்லியன் மரக்கன்றுகளை 2 கோடி தன்னார்வத் தொண்டர்கள் மூலம் நட்டு இத்திட்டம் சாதனை படைத்துள்ளது. ஏழ்மையிலிருக்கும் கிராமப்புற மக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத்தரம் மேம்பட, ஈஷா அறக்கட்டளையின் கீழ் ‘கிராமப் புத்துணர்வு இயக்கம்’ 2003 இல் சத்குருவால் துவங்கப்பட்டது. இத்திட்டம், தமிழ்நாட்டில் சுமார் 54,000 கிராமங்களில் உள்ள 7 கோடி மக்களைச் சென்றடையும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. 2010 வரை சுமார் 4200 கிராமங்களில் உள்ள 70 லட்சம் மக்களை கிராமப் புத்துணர்வு இயக்கம் சென்றடைந்துள்ளது.

ஈஷா வித்யா, இந்தியாவின் கிராமப்புறங்களில் கல்வியையும் படிப்பறிவையும் மேம்படுத்த ஈஷா அறக்கட்டளை துவங்கியுள்ள கல்வித்திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் தற்போது தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் இயங்கிக்கொண்டிருக்கும் 8 ஈஷா வித்யா பள்ளிகளில் சுமார் 4050 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்.

யோகா நிகழ்ச்சிகள்
ஆசிரமம் நிறுவியதற்குப் பின், தொடர்ந்து யோகா வகுப்புகளை ஈஷா யோக மையத்தில் சத்குரு நடத்தத் துவங்கினார். 1996 இல் இந்திய ஹாக்கி குழுவினருக்கென பிரத்தியேகமாக ஒரு யோக வகுப்பு நடத்தினார். 1997 இல் அமெரிக்காவில் வகுப்புகள் நடத்தத் துவங்கினார். 1998 இல் தமிழ்நாட்டு சிறைகளின் ஆயுள் கைதிகளுக்கு யோக வகுப்புகளை எடுத்துச் சென்றார்.

ஈஷா யோகா என்ற பெயரிலேயே அனைத்து யோக வகுப்புகளையும் சத்குரு வழங்குகிறார். 'ஈஷா' என்றால் உருவமில்லாத தெய்வீகம் என்று அர்த்தம். ஈஷா யோகாவின் அடித்தளமாக இருக்கும் ஈஷா யோகா வகுப்புகளில் பங்கேற்பவர்கள், தியானம், பிராணாயாமம் மற்றும் ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சிக்கு தீட்சை பெறுகிறார்கள். சத்குரு கார்ப்பரேட் தலைவர்களுக்கும் வகுப்புகள் நடத்துகிறார். இன்றைய பொருளாதார சூழ்நிலையில், கார்ப்பரேட் தலைவர்கள் அனைவரையும் ஒன்றாக உணரவும், கருணையுடன் இருக்கவும், “அனைவர் நலனையும் கவனத்தில் கொள்ளும் பொருளாதாரம்” உருவாக்கவும், இந்த வகுப்புகள் வழிவகுக்கின்றன.

சத்குருவின் அருளுரை, தியானம், கேள்வி பதில் போன்றவை கொண்ட மஹாசத்சங்க நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் அடிக்கடி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சிகள் மரங்கள் நடுவதை ஊக்குவிக்க ஒரு மேடையாகவும் திகழ்கின்றன. ஆன்மீக ஆர்வம் கொண்டவர்களை ஒவ்வொரு வருடமும் கைலாய மலை, இமயமலை, என்று யாத்திரைகளுக்கும் அழைத்துச் செல்கிறார். 2010 இல் 514 பேருடன் கைலாயம் சென்றதோடு, ஒவ்வொரு வருடமும் சத்குருவுடன் கைலாயம் செல்லும் குழுவே அனைத்திலும் பெரியதாக இருக்கிறது.

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் மெக்மின்வில் என்ற இடத்தில், 2005 மார்ச் மாதத்தில் 'ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயன்சஸ்' மையத்தின் கட்டுமானப் பணி துவங்கி, ஆறே மாதங்களில் முடிவடைந்தது. இம்மையத்தை உலகின் மேற்கத்திய பகுதிகளில் வாழ்பவர்களுடைய ஆன்மீக வளர்ச்சிக்காக சத்குரு உருவாக்கியுள்ளார். இம்மையத்தில், நடுவில் தூண்களே இல்லாமல் 39,000 சதுர அடி கொண்டு விளங்கும் மஹிமா ஹாலை, 2008 நவம்பர் 7ஆம் தேதியில் சத்குரு பிரதிஷ்டை செய்தார். பெண்மையின் தெய்வீக அம்சமான லிங்கபைரவியை ஈஷா யோக மையத்திற்கு அருகில் 2010 ஜனவரி 30ஆம் தேதி சத்குரு பிரதிஷ்டை செய்தார்.

சர்வதேச மாநாடுகளில் சத்குரு
சத்குரு அவர்கள் 2001 இல், ஐக்கிய நாடுகள் நூற்றாண்டு அமைதி உச்சி மாநாட்டிலும், 2006, 2007, 2008 மற்றும் 2009 ஆண்டுகளில் உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாடுகளிலும் உறையாற்றியுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சத்குருவின் பங்களிப்பிற்கும், அதில் மக்கள் ஈடுபடுமாறு ஊக்கப்படுத்தியதற்கும், 2012 இல் இந்தியாவின் திறன்மிகுந்த 100 மனிதர்களுள் ஒருவராக சத்குரு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006 இல் உருவாக்கப்பட்ட “ஒன் - தி மூவி” என்ற ஆவணப் படத்திலும் சத்குரு இடம் பெற்றுள்ளார்.

சர்ச்சைகள்
கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா மையத்தின் தலைமையகம் காடுகளை ஆக்கிரமித்து கட்டபட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது . பசுமை தீர்ப்பாயத்திடம் அனுமதி பெறவில்லை எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. காடுகள் அழிப்பு என்பது தவறு ஈஷாவை சுற்றி மிகப் பெரிய விவசாயம் நடைபெற்றுக்கொண்டு இருப்பது அவைகள் காடுகள் அல்ல விளை நிலங்கள் தான் என்பதற்கு சான்று.

ஆதியோகி
சத்குரு உலகின் முதல் 112 அடி ஆதியோகி திரு உருவச்சிலை ஈஷா மையத்தில் நிறுவி உள்ளார்கள். இது யோகாவின் மூலத்தின் அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டது. ஆதியோகி திரு உருவச்சிலை பொதுமக்கள் தரிசனத்திற்கு பாரத பிரதமர்

திரு. நரேந்திரமோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது
தமிழ் புத்தகங்கள்
அத்தனைக்கும் ஆசைப்படு - ISBN 81-89780-05-0
செய்... செய்யாதே! - ISBN 978-81-8476-288-4
மூன்றாவது கோணம் - ISBN 978-81-8476-155-9
உனக்காகவே ஒரு ரகசியம் - ISBN 978-81-89936-24-2
கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் - ISBN 978-81-8476-134-4
ஆயிரம் ஜன்னல் - ISBN 978-81-8476-226-6
ஆனந்த அலை - ஆசைப்படு அடைந்துவிடு
ஞானத்தின் பிரம்மாண்டம்
குரு தந்த குரு

CHINESE BEAUTIFUL ACTRESS JIANG QINBIN BORN 1975 SEPTEMBER 3






CHINESE BEAUTIFUL ACTRESS JIANG QINBIN
BORN 1975 SEPTEMBER 3

Jiang Qinqin (born September 3, 1975) is a Chinese actress. She is sometimes credited as Shui Ling (simplified Chinese: 水灵; traditional Chinese: 水靈), a stage name given to her by Taiwanese writer Chiung Yao while she was involved in the production of the television series Tears in Heaven.










Career[edit]
Jiang started learning Beijing Opera at the age of 10 and entered the Beijing Film Academy in 1994 after attaining first place in the entrance examination. She graduated from the academy four years later and joined Beijing Film Studio.In 1997, she starred in Tears in Heaven, an adaptation of a novel by Chiung Yao. Following that, she played a number of tragic roles, including Gu Manlu in Affair of Half a Lifetime (2002), Mu Nianci in The Legend of the Condor Heroes (2003), and Niu Hongmei in A Loud Slap (2004).[1]

Jiang married actor Chen Jianbin on February 22, 2006, whom she co-starred with in Qiao's Grand Courtyard.
Their son was born on January 8, 2007.

SAKSHI MALIK ,WRESTLING CHAMPION BORN 1992 SEPTEMBER 3



SAKSHI MALIK ,WRESTLING CHAMPION
 BORN 1992 SEPTEMBER 3




சாக்சி மாலிக் (Sakshi Malik, செப்டம்பர் 3, 1992) இந்திய மற்போர் வீராங்கனையாவார்.[1] இவர் கிளாஸ்கோவில் நடந்த 2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் பெண்கள் கட்டற்றவகை மற்போர் 58 கிலோ வகுப்பில் இந்தியா சார்பாக பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.[2] 2014இல் தாஷ்கந்தில் நடந்த உலக மற்போர் போட்டிகளிலும் 60 கிலோ வகுப்பில் பங்கேற்றார்.
2016 ஒலிம்பிக்[மூலத்தைத் தொகு]

2016 ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடைப் பிரிவில், கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதி 8-5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று சாக்சி வெண்கலப் பதக்கம் வென்றார். [3] [4]