Showing posts with label chandra. Show all posts
Showing posts with label chandra. Show all posts

Wednesday, 3 June 2020

MISS KERALA 1972 RANI CHANDRA ,ACTRESS BURN`T IN BOMBAY FLIGHT CRASH 1976,OCTOBER 12








MISS KERALA 1972  RANI CHANDRA ,ACTRESS

BURN`T IN BOMBAY FLIGHT CRASH 1976,OCTOBER 12


ராணி சந்திரா (Rani Chandra, 1949 – 12 அக்டோபர் 1976) என்பவர் மலையாளத் திரைப்பட நடிகை ஆவார். கேரளத்தின் அழகுராணியாகத் தெரிவு செய்யப்பட்டவர்.[1] இவர் பல மலையாள, தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். 1976 ஆம் ஆண்டில் விமான விபத்து ஒன்றில் இறந்தார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]
ராணி சந்திரா திருவிதாங்கூர்–கொச்சியில் 1949 ஆண்டில் சந்திரன், காந்திமதி ஆகியோருக்குப் பிறந்தார்.[1] எர்ணாகுள்ம் புனித தெரேசசு கல்லூரியில் கல்வி கற்றார். இவர் நடனக் குழு ஒன்றை நடத்தி வந்தார்.[2] 1972 ஆம் ஆண்டில் கேரள அழகுராணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]




இவரது முதல் திரைப்படம் அஞ்சுசுந்தரிகள் ஆகும். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். இவர் நடித்த கடைசித் தமிழ்த் திரைப்படம் பத்ரகாளி இவர் இறந்த பின்னர் வெளிவந்தது.

மறைவு[தொகு]




பத்ரகாளி திரைப்படத் தயாரிப்பின் இறுதிக் கட்டத்தில், கதாநாயகியாக நடித்த ராணி சந்திரா கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுப்பதற்காக தனது குழுவினருடனும் குடும்பத்தினருடனும் துபாய் சென்றார்.[4] கலை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 1976 அக்டோபர் 11 இல் பம்பாய் வழியாக சென்னை திரும்புகையில், அவர்கள் பயணம் செய்த விமானம் தீப்பிடித்துக் கொண்டு விமானநிலயத்துக்கு அண்மையில் மோதி விபத்துக்குள்ளானது. ராணி சந்திரா, அவரது தாயார், மூன்று தங்கைகள் அம்புலி (வயது 19), சீதா (18), நிம்மி (13) ஆகியோர் உட்பட அதில் பயணம் செய்த அனைத்து 95 பேரும் உயிரிழந்தனர்.[5]

இதனால், இவர் நடிக்க இருந்த பத்ரகாளி தமிழ்த் திரைப்படத்தின் மீதிக் காட்சியை ஓரளவு அவரைப் போன்றே உருவ அமைப்புள்ள பட்டிக்காட்டு ராஜா படத்தில் நடனமாடிய புஷ்பா என்ற துணை நடிகையை நடிக்க வைத்து எடுத்து முடித்தார் இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர்.[6][6][7][8]



விருதுகள்[தொகு]
1975 சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருது
நடித்த சில திரைப்படங்கள்[தொகு]
மல்லனும் மாதேவனும் (மலையாளம், 1976)
பத்ரகாளி (தமிழ், 1976)
தேன்சிந்துதே வானம் (தமிழ், 1975)
ராதா (தமிழ், 1973)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பலியான ~வாங்கோண்ணா' புகழ் ராணி சந்திரா
பத்ரகாளி என்ற படத்தின் கதாநாயகியாக நடித்தவர் ராணி சந்திரா. இவர் கேரள மாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்தவர். தந்தை பெயர் சந்திரன். தாயார் காந்திமதி. 1965 ஆம் ஆண்டில் கேரள அழகு ராணியாக (‘மிஸ் கேரளா’) ராணி சந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தைத்தொடர்ந்து, மலையாளப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘அஞ்சு சுந்தரிகள்’, ‘சொப்னாடம்’ உட்பட சுமார் 60 மலையாளப்படங்களில் நடித்தார். சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதையும் பெற்றார். தமிழ்ப்பட உலகில் புகழ் பெற வேண்டும் என்பது ராணி சந்திராவின் ஆசை. ‘பொற்சிலை’, ‘தேன் சிந்துதே வானம்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தார். சிறு வேடங்கள். படங்களும் பெரிதாக ஓடவில்லை.

எனவே, தமிழ்ப்பட உலகில் ராணி சந்திராவுக்கு சரியான அறிமுகம் கிடைக்கவில்லை. 1976 இல் ‘பத்ரகாளி’ என்ற படத்தை சொந்தமாகத் தயாரிக்க, டைரக்டர் திருலோகசந்தர் ஏற்பாடு செய்தார்.

எழுத்தாளர் மகரிஷி எழுதிய கதை. வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். பிராமண குடும்பத்தில் நடப்பது போன்ற கதை. கதாநாயகனாக நடிக்க சிவகுமார் ஒப்பந்தமானார். கதாநாயகியாக நடிக்க ஒரு புதுமுகத்தைத் தேடினார்கள். கடைசியில் ராணி சந்திராவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

திறமையும், அழகும் கொண்ட ராணி சந்திராவை ‘காயத்ரி’ என்ற புதிய பெயரில் அறிமுகப்படுத்த திருலோகசந்தர் முடிவு செய்தார். படப்பிடிப்பு வேகமாக நடந்தது. படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சில காட்சிகளே பாக்கி. இந்த சமயத்தில் விதி விளையாடியது. டுபாயில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக அந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் டுபாய் நாட்டுக்கு ராணி சந்திரா (வயது 22) சென்றார்.

அவருடன் தாயார் காந்திமதி, தங்கைகள் அம்புலி (வயது 19), சீதா (18), நிம்மி (13) ஆகியோரும் சென்றார்கள். கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு, விமானத்தில் ராணி சந்திரா திரும்பினார். விமானம் பம்பாய்க்கு வந்து சேர்ந்தது. அந்த விமானத்தில் பழுது ஏற்பட்டு இருந்ததால் வேறு விமானத்தில் இவர்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டனர்.

11.10.1976 நள்ளிரவு 1.40 மணிக்கு (அதாவது 12ம் திகதி அதிகாலை) விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நொடிகளிலேயே விமானம் தீப்பிடித்து விமான நிலையத்திலேயே நொறுங்கி விழுந்தது. விமானத்தில் மொத்தம் 95 பேர் இருந்தார்கள். அனைவரும் கருகி மாண்டனர். ராணி சந்திராவுடன் அவர் தாயாரும், 3 தங்கைகளும் இறந்துபோனார்கள்.

ராணி சந்திராவின் கலைக்குழுவில் இடம்பெற்றிருந்த ஜெயலட்சுமி (பாடகி), சி.கே. கிருஷ்ணகுட்டி (மத்தளம்), எம்.கோதண்டராம் (மிருதங்கம்), பி.எஸ். மாணிக்கம் (ஆர்மோனியம்) ஆகியோரும்பலியானார்கள்.

இதே விமானத்தில் பயணம் செய்த தமிழக சட்டசபை முன்னாள் உறுப்பினரும், காமராஜர் தலைமையிலான பழைய காங்கிரஸ் கட்சித் தலைவருமான பொன்னப்ப நாடாரும் (வயது 53) பலியானார்.

இவர், 1971 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் இருந்து தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராணி சந்திராவின் உடலும், அவருடைய தாயார், 3 தங்கைகள் உடல்களும் சென்னைக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டன. உடல்களைப் பார்த்து ராணி சந்திராவின் தந்தை சந்திரன், சகோதரர் ஜாஜி, மூத்த சகோதரி ஆயிஷா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

திரை உலகினர் திரளாக வந்திருந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். உடல்கள் நுங்கம்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன.

இதற்கிடையே ‘பத்ரகாளி’ படத்தை முடிப்பது எப்படி என்று டைரக்டர் திருலோகசந்தர் தீவிரமாக ஆலோசித்தார். கதையை மாற்ற முடியாது. ராணி சந்திரா சம்பந்தப்பட்ட ‘கிளைமாக்ஸ்’ காட்சியை படமாக்கியே தீர வேண்டும். இந்த இக்கட்டான நிலையில் ராணி சந்திரா மாதிரி தோற்றமுள்ள துணை நடிகை யாராவது கிடைப்பாளா என்று அலசிப் பார்த்தார்.

இறுதியில், ஏறக்குறைய ராணி சந்திரா போலவே தோற்றம் உள்ள புஷ்பா என்ற நடிகை கிடைத்தார். அவரை வைத்து இறுதிக் காட்சிகளைப் படமாக்கினார் திருலோகசந்தர். டைரக்டர், ஒளிப்பதிவாளர் ஆகியோரின் திறமையால் அக்காட்சிகளில் ராணி சந்திராவுக்கு பதிலாக வேறொரு நடிகை நடித்திருக்கிறார் என்று யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை.

படம் 10.12.1976 அன்று ரிலீஸ் ஆயிற்று. பொதுவாக, படம் வெளியாவதற்கு முன் அதன் முக்கிய நட்சத்திரம் இறந்து போனால் அந்தப் படம் சரியாக ஓடாது. இதற்கு முன் உதராணங்கள் பல உண்டு.

ஆனால் ‘பத்ரகாளி’ படம் பிரமாதமாக ஓடியது. அதில் அசல் பிராமணப் பெண்ணாகவே மாறி, ‘வாங்கோண்ணா....’ என்று சிவகுமாருடன் ஆடிப்பாடிய ராணி சந்திராவைப் பார்த்தவர்கள், ‘இவ்வளவு அழகான திறமையான நடிகைக்கா இத்தகைய சோக முடிவு’ என்று கண்கலங்கினர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


ராணி சந்திரா பற்றி ஆரூர் தாஸ் 


பிராமணக் கலாசாரக் கதையான ‘பத்ரகாளி’ தொடர்ந்து படமாகிக் கொண்டிருந்தது. இப்பொழுது அந்த மலையாள மின்னல் மோகினிப்பெண் ராணி சந்திரா வசனம் பேசுவதில் நல்ல தேர்ச்சி பெற்றுவிட்டாள்.

ஆனாலும், அவ்வப்பொழுது, ஆங்காங்கே தாய்மொழியான மலையாளம் சற்றுத் தலைகாட்டியதால் என் பிராமணத் தமிழ் வசனத்திற்கு அந்த ‘ஸ்லாங்’ என்னும் கொச்சை மொழி பொருந்திப்போய்விட்டது.

அந்தப் பெண்ணின் ‘விழி’ அழகாக இருந்தது. அது பழகும் ‘வழி’யும் ஒழுங்காக இருந்தது. அதனால் ‘மொழி’ ஒரு பிரச்சினையாக எனக்குத் தோன்றவில்லை.


ஆனால், உண்மையில் என்னுடன் பிரச்சினை பண்ணியது, கதாநாயகியின் தந்தையாகவும் (தொவப்பனார்) குருக்களாகவும் நடித்த நண்பர் மேஜர் சுந்தர்ராஜன்தான்.

பொதுவாக எனக்கு பிராமணத் தமிழ் பேசவும் எழுதவும் நன்றாக வரும். அதற்குக் காரணம் இளம் மாணவப் பருவத்திலிருந்தே எங்கள் திருவாரூரில் எனக்கு பிராமண நண்பர்கள் அதிகம்.

‘லேங்வேஜ் டிபன்ஸ் ஆன் அசோசியேஷன்’

‘மொழி, நாம் சம்பந்தப்படும் இடத்தைப் பொறுத்தது.’

அதனால், பிராமணர் அல்லாத அதிலும் ஒரு கிறிஸ்துவரான நான் – ஒரு பிறவிப்பிராமண எழுத்தாளரைக் காட்டிலும் சிறந்த முறையில் இந்தப் படத்திற்கான வசனங்களை அமைக்கவேண்டும் என்று என் மனதிற்குள் ஒரு ‘சங்கற்பம்’ செய்து கொண்டேன். அதனால் இக்காலத்துப் பெரும்பாலான பிராமண வீடுகளில் புழக்கத்தில் இல்லாத ‘நேக்கு’ – ‘நோக்கு’ என்ற அக்கால வழக்குச் சொற்களைக் கையாண்டிருந்தேன்.

இதை மாற்றி, மேஜர் சுந்தர்ராஜன் ‘எனக்கு உனக்கு’ என்று கூறிக்கொண்டிருந்தார். அவரைக் கண்டித்து நான் எழுதியிருப்பதை அப்படியே பேசச்சொன்னேன். அதற்கு அவர்...

மேஜர் சுந்தர்ராஜன்:– இப்போல்லாம் எங்க வீடுகள்ளேயே அந்தப் பழைய பிராமணத் தமிழ் அதிகமாகப் பேசப்படுறதில்லே. அதனாலதான்...

நான்:– (குறுக்கிட்டு) எனக்குத் தெரியும் மேஜர். நானே ஒரு பாதிப் பிராமணன். நீர் பூணூல் போட்டுண்டிருக்கீர். நான் போடலை. உமக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் அது ஒண்ணுதான். இது முழுக்க முழுக்க பழைய பிராமணக் கலாசாரத்தைக் கொண்ட ஒரு குருக்கள் குடும்பத்துக்கதை. எனக்கு அந்தப் பழைய ‘பிரமினிக்கல் டிக்ஷன்தான்’ வேணும். அதுக்காகத்தான் நான் சிரமப்பட்டு, ஒவ்வொரு வார்த்தையா பொறுக்கிப் பொறுக்கிப் போட்டிருக்கேன். அதை நீர் சொல்லலேன்னா உம்மை விடமாட்டேன். ‘வித் த பர்மிஷன் ஆப் த டைரக்டர்’ என்று உறுதியாகக் கூறிவிட்டேன்.

இயக்குனர் திருலோகசந்தரும் என் கருத்தில் ஒருமித்திருந்தார். எனக்கும் அவருக்கும் எப்பொழுதுமே ஒரு ‘புரிதல் உணர்வு’ உண்டு. இல்லையேல் அவர் இயக்கத்தில் பெரும்பாலான – இருபது படங்களுக்கு மேல் நான் எழுதியிருக்க வாய்ப்பிருக்காது.

நண்பர் சிவகுமாரின் நாக்கு, கொங்கு நாட்டுத் தமிழ் பேசிப் பழக்கப்பட்டது. அதனால் அவருக்கும் என் பக்கா பிராமணத் தமிழ் சற்று நெருடலாயிருந்தது. அதையும் நான் உணர்ந்திருந்தேன். ஒரு கொங்கு நாட்டுக் கவுண்டரும், ஒரு மதுரை பெரியகுளம் அய்யங்கார் பிராமணரும் சேர்ந்து, இந்த தஞ்சாவூர்க்கார வசனகர்த்தாவை அவ்வப்போது இலைமறைவு காய் மறைவாக எட்டத்தில் இருந்து கேலி பேசுவதை நான் ஜாடைமாடையாகக் கவனித்துத் தெரிந்து கொண்டேன்.

என்னைப்பற்றிய ‘மேஜர்’ சுந்தர்ராஜன் – ‘மைனர்’ சிவகுமார் ஆகிய இருவரின் ‘இன்டைரக்ட் காமென்டரி’யுடனும், என் கண்டுபிடிப்பான இந்த விசித்திர நட்சத்திரத்தின் அப்பாவி நடிப்புடனும், அந்தப் பிராமணக்கதை ‘பிக்சரைஸ்’ ஆகிக்கொண்டிருந்தது.

ஒருநாள் மாலை. எதிர்பாராமல் இந்த இள நடிகை என் இல்லத்திற்கு வந்தாள். முன் அறிவிப்பு எதுவும் இன்றி திடீரென வந்தது எனக்கு வியப்பாக இருந்தது. ஆனாலும் அவளை என் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தேன். அவளை ஏற இறங்கப் பார்த்த என் மனைவி முகம் மலர்ந்து...

மனைவி:– சார் சொன்னதைவிட நேருல பார்க்கும்போது நீ இன்னும் ரொம்ப அழகா இருக்கியே. உங்கம்மாவும் உன்னை மாதிரியே இப்படி கலரா இருப்பாங்களா?

அவள்:– இல்லேம்மா. எங்கம்மா மாநிறந்தான். நான் என் பாட்டி மாதிரின்னு அம்மா சொல்வாங்க.

மனைவி:– பரவாயில்லியே. நீ சரியா தமிழ் பேசமாட்டேன்னு இவர் சொன்னாரே. இவ்வளவு நல்லா பேசுறியே.

அவள்:– எல்லாம் சாரோட டிரைனிங்தான்! கோவிலுக்குப் போறேன். அப்படியே உங்களைப் பார்க்கலான்னு வந்தேன்... (என்னிடம்) சார்! நாளைக்கு ஒரு கலை நிகழ்ச்சியில கலந்துக்குறதுக்காக நான் எங்கம்மா, சிஸ்டர்ஸோட துபாய்க்குப் போறேன். ரெண்டு நாள்ள வந்திடுவோம். இதை நேருல சொல்றதுக்காகத்தான் வந்தேன். துபாய்லேருந்து திரும்பினதும் எங்கம்மாவை அழைச்சிக்கிட்டு மறுபடியும் நான் இங்கே வர்றேன் பைம்மா! என்று விடைபெற்றாள். அவள் சென்ற அரை மணி நேரத்திற்குள்ளாக என் தொலைபேசி மணி ஒலித்தது. ரிஸீவரை எடுத்தேன். அந்த நடிகையின் குரல்:–

அவள்:– சார்! நான்தான் பேசுறேன். நாளைக்கு துபாய்க்குப் போறேன்னு போன்ல சொன்னா மரியாதையா இருக்காதுன்னு உங்ககிட்டே – நீங்க இல்லேன்னா அம்மாகிட்டேயாவது நேருல சொல்றதுக்காகத்தான் வீட்டுக்கு வந்தேன். கேரளக் கலை நிகழ்ச்சிகளுக்கு ‘ஆர்கனைஸ்’ பண்ற ஒரு மலபார் பார்ட்டி எங்களை அழைச்சிக்கிட்டுப் போறாங்க. ரெண்டே நாள்தான் அங்கே கேம்ப்!

இந்த புரோகிராம் விஷயம் நம்ம டைரக்டருக்குத் தெரியாது. நான் சொல்லலே. ஏன்னா அக்ரிமெண்ட்படி படம் ஷூட்டிங் முடியிறதுக்கு முந்தி பர்மிஷன் இல்லாம வெளியூர் – அதுவும் துபாய்க்கு போகக்கூடாதுன்னு எங்கே டைரக்டர் சொல்லி ஸ்டாப் பண்ணிடுவாரோன்னு பயந்துதான் சொல்லாம உங்ககிட்டே வந்தேன். தயவு செய்து நான் திரும்பி வர்ற வரைக்கும் நீங்களும் அவர்கிட்டே சொல்லவேண்டாம். ஒன்லி டு டேஸ்! வர்ற சனி, ஞாயிறு ரெண்டு நாள் புரோகிராம் முடிஞ்சதும் திங்கட்கிழமை சாயந்திரம் புறப்பட்டு இங்கே வந்திடுவோம். சரியா?

நான்:– (தயக்கத்துடன்) சரிம்மா...

அவள்:– அப்புறம்... என் ஞாபகார்த்தமா துபாய்லேருந்து உங்களுக்கும், அம்மாவுக்கும் ஏதாவது பொருள் வாங்கிக்கிட்டு வந்து கொடுக்கணும்னு நான் ஆசைப்படுகிறேன். உங்களுக்கு என்ன வேணும்? சொல்லுங்க... பிளீஸ். அம்மாவையும் கேளுங்க.

நான்:– ஒண்ணும் வேண்டாம். கலை நிகழ்ச்சிங்க முடிஞ்சு நீ நல்லபடியா சீக்கிரம் வந்து சேர்ந்தா போதும். ஏன்னா, கிளைமாக்ஸ் ஷூட்டிங்குக்காக டைரக்டர் ‘செட்’ போட்டு ரெடிபண்ணிக்கிட்டிருக்காரு. இந்தச் சமயம் பார்த்து நீ துபாய் போறேங்குறே. அவருக்குத் தெரிஞ்சா கண்டிப்பா போகக்கூடாதுன்னு சொல்லித் தடுத்திடுவாரு. அதனால நான் சொல்லமாட்டேன். எனி ஹவ்! ஹேப்பி ஜர்னி.

அவள்:– தேங்க்ஸ்!

அவள் துபாய்க்கு புறப்பட்டுச் சென்ற அடுத்த ஆறாவது நாள். அன்றைய காலைப் பத்திரிகைகளில் காணப்பட்ட செய்தி:–

‘‘இன்று காலை பம்பாய் ‘ஸாந்தாகுரூஸ்’ விமான நிலையத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட ‘கேரவல்’ பயணிகள் விமானம் அதிகாலை 4.31–க்கு மேலே கிளம்பி உயரே சென்றதும், நடுவானத்தில் தீப்பற்றி எரிந்து கீழே தரையில் விழுந்து நொறுங்கி பலத்த சேதம் அடைந்தது. அதில் பயணம் செய்தவர்கள் ஒருவர்கூட உயிர் பிழைக்கவில்லை. அத்தனை பேருமே எரிந்து கருகி இறந்துவிட்டனர்.’’

இறந்தவர்களின் மரணப் பட்டியலில் – அந்தோ! குறுகிய காலத்திற்குள்ளாக, எங்கள் குடும்பத்தாரின் நெஞ்சங்களில் குடிபுகுந்து அன்பைப்பொழிந்த அந்த இளம் நடிகையின் பெயரும் இருந்தது. அவள் மட்டும் அல்ல. அவளுடைய தாயார் மற்றும் மூன்று சகோதரிகள் – ஆக மொத்தம் ஐந்து பேருமே குடும்பத்துடன் அந்தக் கோர விமான விபத்தில் பலியாகிவிட்டனர்.

விபத்து நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே அவர்கள் துபாயிலிருந்து பம்பாய்க்கு திரும்பி வந்துவிட்டார்கள். துபாயில் அவர்கள் வாங்கியதும், பரிசாகப் பெற்றதுமான பல வெளிநாட்டுப் பொருள்களுக்கு சுங்கவரி கட்டுவதற்குப் போதிய இந்தியப் பணம் இல்லாமல், விமான நிலைய பயணிகள் அறையிலேயே அவர்கள் தங்க நேரிட்டுவிட்டது. பிறகு சென்னையில் அவர்களுக்குத் தெரிந்த சிலருடன் தொடர்பு கொண்டு அவர்கள் மூலமாக பம்பாயில் பணம் ஏற்பாடு செய்து வரியைக்கட்டிப் பொருள்களை மீட்டுக்கொண்டு ஒருநாள் தாமதமாகப் புறப்பட்டிருக்கிறார்கள்.

அன்றைக்கு என்று அங்கு காத்திருந்த காலன், விதியின் ஏவுதலால் அவர்களை வானத்திலேயே வைத்துக் காவு கொண்டுவிட்டான்.

விதியின் சதியினால் கொழுந்துவிட்டு எரிந்த தீயின் நாக்குகள், ஒரு வெள்ளை ரோஜாவையும், அதன் குடும்பத்தினரின் உயிர்களையும் கொள்ளை கொண்டுவிட்டது.

இடி விழுந்தது போன்ற இந்தக் கொடிய செய்தியைப் படித்ததுமே நானும் என் மனைவியும் பதறிப்போய் விட்டோம். எங்கள் குடும்ப உறவினர்களை இழந்ததைப் போன்ற துயர நிலைக்கு ஆளானோம். அன்று முழுவதுமே தாங்க முடியாதத் துக்கத்தால் தண்ணீரைத்தவிர வேறு எதையுமே உண்ணாமல் நான் ‘உபவாசம்’ இருந்து என் வயிற்றை வருத்திக் கொண்டேன். அந்த மயக்க நிலையிலும் அவளை என்னால் மறக்க முடியவில்லை.

இன்றுவரையில் – என் சினிமா வாழ்க்கையில் நான் ஒரு முழு நாளும் ‘உபவாசம்’ இருந்தது மூன்று நடிகைகளுக்காக மட்டுமே. ஒருவர் என் அன்பிற்கினிய அண்ணி ‘சாவித்திரி!’ இரண்டாவது எங்கிருந்தோ வந்து என் பாசத்தைப் பகிர்ந்து கொண்ட இந்தப் பத்தரை மாற்றுப் பசும்பொன் பெண்! மூன்றாவது, என் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டு, என் மனதில் இடம் பிடித்த சுடர் விளக்கு சுஜாதா! இம்மூன்று பேரும் மரணித்த நிலையில், அவர்களுடைய முகங்களை இறுதியாகப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவில்லை.



One is not really sure when the first beauty pageant was held in the State. But the first one that really hogged the limelight was the one held at Thrissur in 1965. A high school student from Fathima Girls High School, Fort Kochi, went on to win the Miss Kerala crown. The rumour at that time was that the very intention to organise this contest was to find a new, young heroine for a film they had planned.

The girl who won the crown was Rani Chandra and the film planned was Daivathinte Maranam (Death of God). This film did not take off but the victory in the beauty contest and news that she was going to be cast in a film gave Rani Chandra an unexpected celebrity status. Magazines and newspapers published her photographs and some of them even called her Kerala Beauty.

This entire attention and media glare ignited in Rani Chandra a desire to act in films. Those were days when she was seriously into dance, something she had begun to study when she was just out of her primary school. She continued her dance training even when she was in college. At the back of her mind there remained the burning desire to be a film star.

Rani Chandra did not have to wait long. She made her debut in P.A. Thomas’s Pavappettaval . However, in the credits and song book of this film she is simply referred to as Miss Kerala. The film, released in 1967, had Sathyan, Kamaladevi, Adoor Bhasi and Sukumari in lead roles.

That was the start Rani Chandra was looking for but she had to wait for a whole year to get her first film and her name into the credits. She was cast in an important role in Anchu Sundarikal (1968). The film directed by M. Krishnan Nair had Prem Nazir, Jayabharathi, Adoor Bhasi, G.K. Pillai, Paravur Bharathan in lead roles.

She literally danced her way into Tamil films too. Director A.V. Francis, who happened to watch one of Rani Chandra’s dance performances in Madras, offered her a role in his film Porchilai (1969). Though in her rather brief career she did not act in many Tamil films, Rani Chandra did make an impact in films like Bhadrakali .

Born in 1949 at Alappuzha as the second daughter of Chandran and Kanthimathi, Rani Chandra had acted in school plays before moving seriously into dance. Her family moved to Kochi and this went a long way in nurturing her dance and her desire to star in films. Those days Madras was the centre for Malayalam and Tamil films. As Rani Chandra began to get more and more film offers the family moved to Madras.

Proficient in all the South Indian classical dance forms Rani Chandra had a troupe of her own in which some of the gifted musicians and singers were associated. Dance and films kept her busy.

From a greenhorn Rani Chandra evolved into a fine actor even going on to win the Kerala State award for Best Actress for her role in K.G. George’s debut film Swapnadanam .

Among Rani Chandra’s noted films are Prathidwani , Chembarathi , Nellu , Boyfriend , Amba Ambika Ambalika , Anaavaranam , Hello Darling , Ulsavam , Naathoon , Kaamini , Swapnam , Kaapalika etc.

Like it happens to most stars Rani Chandra was drawn into the vortex of commercial cinema. She really never got that many chances to prove her acting skills. Rani Chandra did get her share of criticism for simply agreeing to do the glamour roles, even doing 13 films in one year. But whenever she got that rare chance, even if it was a character role like in Naathoon or Swapnadanam for that matter, Rani Chandra did prove that she was not just a glamour doll.

Just when Rani Chandra was finding her feet in films Fate cut short her life. She, along with her mother and three sisters died in an Indian Airlines crash on a return flight from Bombay on October 12, 1976. She was returning after a dance performance in West Asia. In a career spanning hardly 10 years and around 60 films, Rani Chandra left behind unfulfilled dreams.



.‘பத்ரகாளி’ படத்தின் கதாநாயகியாக நடித்த ராணி சந்திரா, விமான விபத்தில் பலியானார். அவருடைய தாயாரும், 3 தங்கைகளும் இதே விபத்தில் மாண்டனர். ராணி சந்திராவுக்கு வயது 22. கேரள மாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்தவர். தந்தை பெயர் சந்திரன். தாயார் காந்திமதி. 1965-ம் ஆண்டில் கேரள அழகு ராணியாக (‘மிஸ் கேரளா’) ராணி சந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, மலையாளப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘அஞ்சு சுந்தரிகள்’, ‘சொப்னாடம்’ உள்பட சுமார் 60 மலையாளப்படங்களில் நடித்தார். சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதையும் பெற்றார். தமிழ்ப்பட உலகில் புகழ் பெறவேண்டும் என்பது ராணி சந்திராவின் ஆசை. ‘பொற்சிலை’, ‘தேன் சிந்துதே வானம்’ ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்தார். சிறு வேடங்கள். படங்களும் பெரிதாக ஓடவில்லை.
எனவே, தமிழ்ப்பட உலகில் ராணி சந்திராவுக்கு சரியான அறிமுகம் கிடைக்கவில்லை. 1976-ல் ‘பத்ரகாளி’ என்ற படத்தை சொந்தமாகத் தயாரிக்க, டைரக்டர் திருலோகசந்தர் ஏற்பாடு செய்தார். எழுத்தாளர் மகரிஷி எழுதிய கதை. வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். பிராமண குடும்பத்தில் நடப்பது போன்ற கதை. கதாநாயகனாக நடிக்க சிவகுமார் ஒப்பந்தம் ஆனார். கதாநாயகியாக நடிக்க ஒரு புதுமுகத்தைத் தேடினார்கள். கடைசியில் ராணி சந்திராவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
திறமையும், அழகும் கொண்ட ராணி சந்திராவை ‘காயத்ரி’ என்ற புதிய பெயரில் அறிமுகப்படுத்த திருலோகசந்தர் முடிவு செய்தார். படப்பிடிப்பு வேகமாக நடந்தது. படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சில காட்சிகளே பாக்கி. இந்த சமயத்தில் விதி விளையாடியது. துபாயில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக, அந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் துபாய் நாட்டுக்கு ராணி சந்திரா சென்றார். அவருடன் தாயார் காந்திமதி, தங்கைகள் அம்புலி (வயது 19), சீதா (18), நிம்மி(13) ஆகியோரும் சென்றார்கள். கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு, விமானத்தில் ராணி சந்திரா திரும்பினார். விமானம் பம்பாய்க்கு வந்து சேர்ந்தது. அந்த விமானத்தில் பழுது ஏற்பட்டு இருந்ததால் வேறு விமானத்தில் இவர்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டனர்.
11-10-1976 நள்ளிரவு 1-40 மணிக்கு (அதாவது 12-ந்தேதி அதிகாலை) விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நொடிகளிலேயே விமானம் தீப்பிடித்து, விமான நிலையத்திலேயே நொறுங்கி விழுந்தது. விமானத்தில் மொத்தம் 95 பேர் இருந்தார்கள். அனைவரும் கருகி மாண்டனர். ராணி சந்திராவுடன் அவர் தாயாரும், 3 தங்கைகளும் இறந்து போனார்கள். ராணி சந்திராவின் கலைக்குழுவில் இடம் பெற்றிருந்த ஜெயலட்சுமி (பாடகி), சி.கே.கிருஷ்ணகுட்டி (மத்தளம்), எம்.கோதண்டராம் (மிருதங்கம்), பி.எஸ்.மாணிக்கம் (ஆர்மோனியம்) ஆகியோரும் பலியானார்கள்.
ராணி சந்திராவின் உடலும், அவருடைய தாயார், 3 தங்கைகள் உடல்களும் சென்னைக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டன. உடல்களைப் பார்த்து ராணி சந்திராவின் தந்தை சந்திரன், சகோதரர் ஜாஜி, மூத்த சகோதரி ஆயிஷா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
திரை உலகினர் திரளாக வந்திருந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். உடல்கள், நுங்கம்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன. இதற்கிடையே ‘பத்ரகாளி’ படத்தை முடிப்பது எப்படி என்று டைரக்டர் திருலோகசந்தர் தீவிரமாக ஆலோசித்தார். கதையை மாற்ற முடியாது. ராணி சந்திரா சம்பந்தப் பட்ட ‘கிளைமாக்ஸ்’ காட்சியை படமாக்கியே தீர வேண்டும். இந்த இக்கட்டான நிலையில், ராணி சந்திரா மாதிரி தோற்றமுள்ள துணை நடிகை யாராவது கிடைப்பாளா என்று அலசிப் பார்த்தார். இறுதியில், ஏறக்குறைய ராணி சந்திரா போலவே தோற்றம் உள்ள புஷ்பா என்ற நடிகை கிடைத்தார். அவரை வைத்து இறுதிக் காட்சிகளைப் படமாக்கினார், திருலோகசந்தர். டைரக்டர், ஒளிப்பதிவாளர் ஆகியோரின் திறமையால் அக்காட்சிகளில் ராணி சந்திராவுக்கு பதிலாக வேறொரு நடிகை நடித்திருக்கிறார் என்று யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை.
படம் 10-12-1976 அன்று ரிலீஸ் ஆயிற்று. பொதுவாக, படம் வெளியாவதற்கு முன் அதன் முக்கிய நட்சத்திரம் இறந்து போனால் அந்தப்படம் சரியாக ஓடாது. இதற்கு, முன் உதாரணங்கள் பல உண்டு. ஆனால், ‘பத்ரகாளி’ படம் பிரமாதமாக ஓடியது. அதில், அசல் பிராமணப்பெண்ணாகவே மாறி, ‘வாங்கோண்ணா…’ என்று சிவகுமாருடன் ஆடிப்பாடிய ராணி சந்திராவைப் பார்த்தவர்கள், ‘இவ்வளவு அழகான -திறமையான நடிகைக்கா இத்தகைய சோக முடிவு’ என்று கண்கலங்கினர்.
http://www.maalaimalar.com/2012/02/17200935/pathrakali-film-actress-dead-p.html -லிருந்து எடுக்கப்பட்டது.
நன்றி:மாலை மலர்
‘செம்பரத்தி’ [1972] மலையாளப் படத்தில் ராணி சந்திரா

NEW DELHI, Tuesday, Oct. 12 (AP)—An Indian Airlines Caravelle jet en route to Madras crashed just after takeoff from Bombay's Santa Cruz Airport early today, killing all 89 passengers and six crew members, India's national news agency Camacher reported.The three‐engine jetliner crash‐landed at the end of the runway after one of its engines caught fire on takeoff at 1:40 A.M., the news reports said.K. D. Gupta, the pilot, tried to bring the plane back down and even signaled the tower for permission, but flames engulfed more of the French‐built aircraft, witnesses reported.

Emergency crews said much of the plane and many of the bodies were charred by fire, according to the reports.The flight from Bombay on the west coast to the southern city of Madras on the east coast had been scheduled for departure earlier on a Boeing aircraft, but that plane developed engine trouble on the ground and was replaced by the Caravelle. Reports said 17 of the 89 passengers and two members of the crew were women. Many friends and relatives who saw the flight off watched from the terminal as flames erupted from one engine and the plane plunged back onto the runway. Officials said Captain Gupta managed to keep the disintegrating aircraft away from airport hangars and gasoline tanks.

India's last major air disaster occurred in New Delhi on May 31, 1973, when an Indian Airlines Boeing 737 on a flight from Madras crashed and burned while approaching Delhi airport, killing 48 of the 65 persons aboard. Bombay was the scene of two near disasters in 1975. An Air France Boeing 747 was destroyed by fire just before takeoff on June 12 but all 360 passengers and crew escaped. On June 17 another Indian Airlines Caravelle with 93 persons aboard overshot the runway at Santa Cruz airport and crash landed, but no one was injured.

It was three minutes after take-off. The "Fasten Your Seat Belts" and "No Smoking" signs still glowed its warning red light. Many of the 89 passengers who had waited out the over-six hour delay at the airport were dozing off. It was the Bombay-Madras flight. Waiting relatives started to depart from the visitor's gallery at Santa Cruz airport. The keen-eyed among them saw the aircraft blossom into a "ball of fire". The plane banked steeply to attempt an emergency landing. At about 200-300 feet above ground level the plane suddenly seemed to "drop like a piece of stone".
Within minutes it was over. As fire engines and ambulances rushed to the crash site, what remained was only the charred remnants of the 89 passengers and six crew members.


As the news of the worst-ever disaster in Indian aviation history hit the headlines, panicky passengers cancelled their otherwise hard-to-get air bookings for the slower, but what they felt safer, form of transport-railways. An airlines' official lamented: "It is probably the safest time to fly, since the airlines are bound to be extra conscious about safety."







.

Wednesday, 11 July 2018

CHANDRA BOSE ,MUSIC DIRECTOR BORN 1950 JULY 11- 2010 SEPTEMBER 30







CHANDRA BOSE ,MUSIC DIRECTOR 
BORN 1950 JULY 11- 2010 SEPTEMBER 30



.சந்திரபோஸ் (இறப்பு: செப்டம்பர் 30, 2010[1]) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், பாடகரும், நடிகரும் ஆவார்[2][3][4]. 1977 முதல் 90களின் ஆரம்பம் வரை இவர் முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.இசையமைப்பாளராக
வி. சி. குகநாதனின் இயக்கத்தில் 1977-ம் ஆண்டு வெளிவந்த மதுரகீதம் படத்தின் மூலம் அறிமுகமான சந்திரபோஸ் தொடக்க காலத்தில் இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். எம். எஸ். விஸ்வநாதன் இசையில் ஆறு புஷ்பங்கள் படத்தில் சந்திரபோஸ் பாடிய ஏண்டி முத்தம்மா என்ற பாடல் அவரை மிகப் பிரபலமாக்கியது.

பின் "மாங்குடி மைனர்', "மச்சானை பார்த்தீங்களா' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். "மச்சானைப் பார்த்தீங்களா' படத்தில் இடம்பெற்ற "மாம்பூவே சிறு மைனாவே' பாடல் என்றும் நினைவில் நிற்கும் பாடலாகும். இதைத் தொடர்ந்து "மனிதன்', "அண்ணா நகர் முதல் தெரு', "ராஜா சின்ன ரோஜா" உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தார். மனிதன் படத்தில் வரும் வானத்தைப் பார்த்தேன், மனிதன் மனிதன், அண்ணா நகர் முதல் தெரு படத்தில் இடம்பெற்ற 'மெதுவா மெதுவா', சங்கர் குருவில் இடம் பெற்ற 'காக்கிச் சட்ட போட்ட மச்சான்', மக்கள் என் பக்கம் படத்தில் வரும் 'ஆண்டவனைப் பாக்கணும்' போன்ற பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை. வி. சேகரின் இயக்கத்தில் வெளிவந்த "நான் பெத்த மகனே" திரைப்படத்தில் இவர் கடைசியாக இசையமைத்திருந்தார்.

நடிகராக
அண்மைக்காலங்களில் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர் நாடகங்களிலும் நடித்து வந்தார். "கத்திக் கப்பல்' படத்தில் இவரது நடிப்பு பரவலான பாராட்டுகளைப் பெற்றது. தற்போது "சூரன்' என்ற படத்தில் நடித்து வந்தார். "மலர்கள்', "திருப்பாவை", உள்ளிட்ட பல தொலைக்காட்சி நாடகங்களில் இவர் நடித்துள்ளார்.

12 வயதிலேயே பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நடித்த இவர், கலைஞர் நடித்த மணிமகுடம், கலைஞரின் பராசக்தி நாடகம் ஆகியவற்றிலும் நடித்திருக்கிறார்.

இவர் இசையமைத்த சில திரைப்படங்கள்
மாங்குடி மைனர் (1978)
மச்சானை பாத்தீங்களா (1978)
மாதவி வந்தாள் (1980)
சரணம் ஐயப்பா (1980)
முயலுக்கு மூனு கால் (1980)
தரையில் வாழும் மீன்கள் (1981)
ஆடுகள் நனைகின்றன (1981)
பார்வையின் மறுபக்கம் (1982)
விடுதலை (1986)
மனிதன் (1987)
சங்கர் குரு (1987)
அண்ணாநகர் முதல் தெரு (1988)
கலியுகம் (1988)
வசந்தி (1988)
ராஜா சின்ன ரோஜா (1989)
புதிய பாடல் (1989)
முதலாளி அம்மா (1990)
சிகாமணி ரமாமணி (1998)
பட்டிகாட்டு தம்பி
தாய் மேல் ஆணை
பாட்டி சொல்லைத் தட்டாதே
இதய தீபம்
மாநகர காவல்
ஒரு தொட்டில் சபதம்
மதுரகீதம் (1977)[2][3]
இவர் இசையமைத்த சில புகழ் பெற்ற பாடல்கள்
பொய் இன்றி மெய்யோடு (சரணம் ஐயப்பா)
மாம் பூவே.. சிறு மைனாவே (மச்சானைப் பாத்தீங்களா)
ரவி வர்மன் எழுதாத கலையோ (வசந்தி - 1988)
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா (ராஜா சின்ன ரோஜா)
பச்ச புள்ள அழுதிச்சின்னா பாட்டுப் பாடலாம் (புதிய பாதை)
தில்லிக்கு ராஜா-ன்னாலும் பாட்டி சொல்லத் தட்டாதே
காளை காளை முரட்டுக் காளை (மனிதன்)
இவர் பாடிய சில பாடல்கள்
பூஞ்சிட்டுக் குருவிகளா..
ஏண்டி முத்தம்மா.. (ஆறு புஷ்பங்கள்)
மறைவு
நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி 2010 செப்டம்பர் 30 இல் இறந்தார்[5][6]. மறைந்த சந்திரபோசுக்கு இராஜகுமாரி, கீதா என்ற இரு மனைவிகளும், சந்தோஷ்,வினோத் சந்தர் என்ற இரு மகன்களும், கௌரி என்ற மகளும் உள்ளனர்.
.

.




Chandrabose (died September 30, 2010[1]) was an Indian Tamil language music composer and singer.[2][3][4] He has composed music for more than 300 movies between the late 1980s and early 1990s.[5] In 2007 he made his debut on the silver screen as an actor.[6

Personal life
Chandrabose's son, Bose Santhosh, has also worked in films as a composer, working in the Malayalam film Sandwich (2011) and the Tamil films, Meenkothi and Deva Kumaran.[7] He is married twice, since 2007 he started acting in Kalaignar TV serials.[8]

Film composer
He was during the 80s, the official composer of the AVM Productions, in particular the Tamil movies, among which some Rajini Kanth, of this decade.

Filmography
Madhurageetham (1977)[9]
Mangudi Minor (1978)
Machanai Paatheengala (1978)
Tharayil Vaazhum Meengal (1979)[2][3]
Saranam Ayyappa (1980)
Parvaiyin Marupakkam (1982)
Oru Malarin Payanam (1985)
Rajathi Rojakili (1985)
Yemaatrathe Yemaaraathe (1985)
Marumagal (1986)
Viduthalai (1986)
Shankar Guru (1987)
Makkal En Pakkam (1987)
Manithan (1987)
Michael Raj (1987)
Adhu Antha Kaalam (1988)
Annanagar Mudhal Theru (1988)
Kadarkarai Thaagam (1988)
Kai Naattu (1988)
Kaliyugam (1988)
Kadhanayagan (1988)
Thaimel Aanai (1988)
Paatti Sollai Thattathe (1988)
Kalicharan (1988)

En Vazhi Thani Vazhi (1988)
Nallavan (1988)
Kazhugumalai Kallan (1988)
Vasanthi (1988)
Chinna Chinna Aasaigal (1989)
Kuttravali (1989)
Annakili Sonna Kathai (1989)
Idhaya Deepam (1989)
Oru Thottil Sabatham (1989)
Karunguyil Kundram (1989)
Raja Chinna Roja (1989)
Pudhiya Paadhai(1989)
Vaai Kozhuppu (1989)
Vettaiyaadu Vilaiyaadu (1989)
Karunguyil Kundram (1989)
Periya Idathu Pillai (1990)
Muthalaali Amma (1990)
Nangal Puthiyavargal (1990)
Maanagara Kaaval (1991)
Sugamana Sumaigal (1992)
Varavu Ettana Selavu Pathana (1994)
Aval Potta Kolam (1995)
Naan Petha Magane (1995)
Sigamani Ramamani (2001)
Aadhikkam (2005)
Some of the hit songs he composed are:

Maam Poove Siru Mainaave (Machanai Paatheengala (1978))
Poi Inri Meiyodu (K.J. Yesudas) (Saranam Ayyappa (1980))
Kaalai Kaalai Murattu Kaalai (Manithan (1987))
Kakki Sattai Potta Machan (Malaysia Vasudevan & S.P. Sailaja) (Shankar Guru (1987))
Medhuva Medhuva (Annanagar Mudhal Theru (1988))
Dillikku Raajanaalum (Paatti Sollai Thattathe (1988))
Super Star-u Yaarunnu Ketta (Raja Chinna Roja (1989))
Pacha Pulla Azhudhuchunaa Paattu Padalaam (Pudhiya Paadhai (1989))
Thodi Raagam Paadava (K.J. Yesudas & K.S. Chithra) (Maanagara Kaaval (1991))
Some of the songs he sang :

Poonchittu Kuruvigalaa"
Yendi Muthamm yedhu punnagai"
Television
1997 Aachi International
1998 Nimmathi Ungal Choice I
1998 Nimmathi Ungal Choice II - Kannammavin Kadhai
1998 Oru Pennin Kadhai
1998 Mangai
1999 Galatta Kudumbam I
1999 Sontham
1999 Nimmathi Ungal Choice III - Thriveni Sangamam
1999 Galatta Kudumbam II - Galatta Sirippu
1999 Nimmathi Ungal Choice IV - Mavilai Thoranam
2001 Take It Easy Vaazhkai
2007 Porantha Veeda Puguntha Veeda
He is also one of the judges on Idea Super Singer

Thursday, 28 June 2018

BANKIM CHANDRA CHATTOPADHYAY , WRITER OF VANDHE MATHARAM BORN 1838 JUNE 27 -1894 APRIL 8






BANKIM CHANDRA CHATTOPADHYAY , 
WRITER OF VANDHE MATHARAM
BORN 1838 JUNE 27 -1894 APRIL 8




பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (Bankim Chandra Chattopadhyay ( ஜூன் 27, 1838[1] – ஏப்ரல் 8, 1894)[2] ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார்.[3] இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.

வாழ்க்கை
பங்கிம் சந்திரர் 1838 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம்நாள் கொல்கத்தா அருகில் உள்ள கந்தலபாறை என்ற இடத்தில் பிராமணக் குடும்பத்தில் துர்கா சுந்தரி தேவி மற்றும் ஜாதவ் சந்திர சட்டோபாத்தியாயா என்ற தம்பதியரின் மூன்றாவது மகனாகப் பிறந்தார். ஜாதவ் சந்திரர் ஒரு துணை நீதிபதி. நற்பண்பு நிறைந்தவர். பங்கிமின் மூத்த சகோதரரான சஞ்சீவ் சந்திரா ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர். அவருடைய பாலமோ என்ற வங்க மொழியில் எழுதப்பட்ட பயண நூல் முக்கியமான பயண நூல்களில் ஒன்று. பங்கிம் சந்திரர் வங்காளத்திலும் இந்தியாவில் நன்கறியப்பட்ட, ஓர் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவராக, மிகப்பரவலாக அறியப்பட்டவராவார். [3] இவருடைய நாவல்கள், கருத்துக்கட்டுரைகள் ஆகியவை இந்திய மரபுமுறையான கட்டுப்பாடான எழுத்துப்போக்கினை உடைத்தெறிந்தது. இந்தியாவிற்கு வெளியேயும் இவரது எழுத்துக்கள் பிற எழுத்தாளர்களுக்கு ஒரு உத்வேகத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தின.[3]அக்கால வழக்கப்படி அவருக்கு பதினொன்றாம் வயதில் ஐந்து வயது சிறுமி ஒருத்தியுடன் திருமணம் நடை பெற்றது. இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் பிறந்தார், 1859 இல் மனைவி இறந்தபிறகு பின்னர் அவர் ராஜலக்ஷ்மி தேவி என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகள்கள் இருந்தனர்.


பிபின் சந்திர பால் 1906 ஆகஸ்டு மாதம் ஒரு தேசிய இதழைத் தொடங்கிய போது அவ்விதழுக்கு வந்தே மாதரம் எனப்பெயரிட்டார். இது சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடலின் தாக்கத்தால் வைத்த பெயராகும். லாலா லஜபதி ராய் தனது இதழுக்கும் இப்பெயரினையே சூட்டினார்.

கல்வி
மேதினிப்பூரில் 1856ஆம் ஆண்டு வரை ஒரு கான்வென்ட் பள்ளியில் கடுமையான பள்ளிப் படிப்பை முடித்த பங்கிம் கொல்கத்தா பிரெசிடென்சி கல்லூரியில் சட்டம் படிக்க சேர்ந்தார். 1857ஆம் வருடம் கொல்கத்தா பல்கலைகழகத்தின் சட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றார். 1858ம் ஆண்டு பல்கலை கழகத்தில் இளங்கலைத் தேர்வை எழுதினர். ஆறு தாள்கள் கொண்ட மொழிப் பாடமான வங்காள மொழிப் பாடத்திற்கான தேர்வில் அவரால் ஒரே ஒரு தாளில் மட்டும் தேர்வு பெற முடியவில்லை. கருணை மதிப்பெண்கள் போடப்பட்டதால் பங்கிமும் அவர் நண்பர் ஜாது நாத் பாசு அவர்களும் தேர்ச்சி பெற்றனர். கொல்கத்தா பல்கலைகழகத்தின் முதல் பட்டதாரிகள் என்ற சிறப்பை பெற்றனர்.[4]

படிப்பை முடித்துக் கொண்டு 1858 முதல் 1891 இல் அவர் ஓய்வு பெறும் வரை பிரித்தானிய அரசில் துணை நீதிபதியாகவும் பின்னர் துணை ஆட்சியராகவும் பணி புரிந்தார். ஆங்கில அரசாங்கத்துடன் அவ்வப்பொழுது மோதல்கள் நிகழ்ந்தாலும் தன் பணியை அவர் சிறப்புறச் செய்து வந்தார்.[5]

எழுத்துப்பணி
தொடக்கக்காலத்தில் பங்கிமின் எழுத்துப் பணி ஈஸ்வர சந்திரா குப்தா என்பவர் வெளியிட்ட வாரந்தரியான சங்க்பத் பிரபாகர் என்ற இதழில்தான் தொடங்கியது.[6] இது அவர் சிறந்த எழுத்தாளர் ஆவதற்கு நல்ல முன்முயற்சியாக இருந்தது. பங்கிமின் முதல் நாவலான 'ராஜ்மோகனின் மனைவி' (1864) என்ற நாவல் முதன் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வெளியிடப்படாமலே இருந்தது பின்னர் அந்நூலை பங்கிம் வங்காளத்தில் எழுதி வெளியிட்டார். அவர் வங்காள மொழியில் எழுதிய முதல் நாவல் துர்கேஷ் நந்தனி 1865 ஆம் வருடம் வெளியானது. கபால குந்தளம்(1866), மிர்ணாளினி, தேவி சௌதாரிணி மற்றும் 'ஆனந்த மடம்' போன்றவை அவருடைய மிகச் சிறந்த நாவல்கள். அவர் எழுத்தாளராக வாழ்ந்த காலங்களில் ஏராளமான சிறந்த படைப்புகளை நாளிதழ்களுக்கும் தினசரித் தாள்களுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார். அரசியல், பொருளாதாரம், சமுகம், மதம், தத்துவம் மற்றும் விஞ்ஞானம் ஆகியவை குறித்த பல நூல்களை எழுதியுள்ளார்.

மறைவு

உடல் நலக் கோளாறு காரணமாக அவர் தனது பணியிலிருந்து 1891 ஆம் வருடம் விருப்ப ஒய்வு பெற்றார்.அதன் பின்னர் ஆன்மிகத்தில் ஈடுபட்டார். 1894ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் நாள் தனது 56 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

Wednesday, 20 June 2018

NITU CHANDRA ,MODEL AND ACTRESS BORN 1984 JUNE 20




NITU CHANDRA ,MODEL AND ACTRESS 
BORN 1984 JUNE 20





நீத்து சந்திரா (Nitu Chandra, ஜூன் 20, 1984) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் ஆடல் அலங்கார விளம்பரத் தோற்றங்களில் தோன்றும் வடிவழகி ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[மூலத்தைத் தொகு]
நீத்து சந்திரா இந்தியாவில், பீகார் மாநிலத்தில், பாட்னா நகரத்தில், ஜூன் 20, 1984 அன்று பிறந்தார். அவர் பாடலிபுத்ரா காலனியில் வசித்து வந்தார்; பாட்னாவில் உள்ள நோட்ரே டாம் அகாடமி பள்ளிக்கூடத்தில் படித்தார்.[1] இந்தி திரைப்பட உலகத்தில் நுழைவதற்கு முன்னர், நீத்து ஒரு விளையாட்டு
வீராங்கனையாக புகழ் பெற்றார். இவர் டைக்குவாண்டோ என்ற விளையாட்டில் கருப்பு இடைவார் (பிளாக் பெல்ட்) தகுதி பெற்றவராவார். அவர் இந்தியாவின் சார்பாக 1996 ஆம் ஆண்டில் ஹாங் காங் நகரத்தில் நடைப்பெற்ற சர்வதேச டைக்குவாண்டோ போட்டியில் கலந்து கொண்டார். மேலும் 1995 ஆம் ஆண்டில் புது டில்லியில் நடைப்பெற்ற உலக கோர்ப்பால் எனப்படும் உலக வலைப்பந்தாட்ட போட்டியிலும் கலந்துக் கொண்டார். அவர் தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை (1996) இளம் 16 வயதிலேயே முடித்துவிட்ட்டார்..[2]

ஒரு வியாபாரியான நீத்துவின் தந்தை, ஆரம்பத்தில் இவர் மாடல் தொழிலில் தனித்திறமையை வெளிப்படுத்துவதில் விருப்பமின்றி இருந்தார், ஆனால் அவரது தாயார் நீரா இவர் பக்கம் நின்றார். தில்லி பல்கலைக்கழகத்திற்குட்பட்ட ஐ.பி. கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் பொழுதே விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கினார். அக்காலகட்டத்தில் பிரபல நிறுவனங்களுக்காக பன்னிரண்டுக்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்தார்.

தொழில் வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
அவர் 2005 ஆம் ஆண்டில் திரைப்பட உலகில் காலடி எடுத்து வைத்தார், முதல் முதலாக கரம் மசாலா என்ற படத்தில் ஸ்வீட்டி என்ற ஒரு விமானப் பணிப்பெண் வேடத்தில் தோன்றினார். 2007 ஆம் ஆண்டில் இவர் மதூர் பண்டார்கர் தயாரித்த "டிராபிக் சிக்னல்", படத்தில் தோன்றினார்.[3] நீத்து சந்திரா ரசியா சாஜன் என்ற வீடியோ தொகுப்பில் ஜுபீன் கர்குடன் இணைந்து இஸ்மாயில் தர்பார் இசை அமைப்பில் மிகவும் நளினமாக நடனம் ஆடியுள்ளார். 2008 ஆம் ஆண்டின் முன்பகுதியில், இவர் நான்கு படங்களில் நடித்தார். அவர் மாதவனுடன் நடித்த "யாவரும் நலம்" என்ற தமிழ் மொழிப் படம் வெற்றி பெற்றது பெரிய வெற்றிப்படமாக திகழ்ந்தது. பின்னர் ராம் கோபால் வர்மாவின் ரன் மற்றும் ஜாக் முந்த்ரவின் அபார்ட்மென்ட் ஆகியவற்றிலும் நடித்தார்.

20 மார்ச் 2008 அன்று, 7 சீஸ் டேக்நோலோஜீஸ் என்ற நிறுவனம், நீத்து சந்திரா முதன்மை வேடத்தில் நடிக்கும் ஒரு முப்பரிணாம விளையாட்டை உருவாக்கப் போவதாக அறிவித்தது. நீத்து (தி ஏலியன் கில்லர்) என்ற தலைப்புடன் கொண்ட அந்த விளையாட்டில், ஒரு வித்தியாசமான விளையாட்டுக் கதையை அடிப்படையாக கொண்டது; இதில் நீத்து பூமிக்கு எதிராக செயல்படும் வேற்றுலக வாசிகளை அழிக்கும் வேடமேற்றார். நீது சந்திரா ஆசிய அகாடெமி போர் பிலிம் அண்ட் டெலிவிஷனை சார்ந்த சர்வதேச திரைப்பட மற்றும் தொலைக்காட்சி மன்றம் மற்றும் சர்வதேச திரைப்பட மற்றும் தொலைக்காட்சி ஆராய்ச்சி மன்றத்தின் முழுநாள் உறுப்பினர் ஆவார். மாக்சிம் இந்தியா இதழின் ஜனவரி 2009 இதழின் முன்னட்டையில் நீத்துவில் படம் ல் வெளியானது.[4].


கீதாஞ்சலி குழுமத்தை சார்ந்த ஹூப் என்ற தயாரிப்புப் பொருளின் சின்னத் தூதுவராகவும் நீது சந்திரா செயல்படுகிறார். மேலும் இவர் மைசூர் சாண்டல் சோப்பின் வணிகரீதியான விளம்பர படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.







Filmography[edit]

As Actress[edit]

YearFilmRoleLanguageNotes
2003VishnuHero FriendTelugu
2005Garam MasalaSweetyHindi
2006GodavariRajiTelugu
2007Traffic SignalRaniHindi
2008One Two ThreeInspector Mayawati ChautalaHindi
2008Summer 2007Digamber's wifeHindi
2008Oye Lucky! Lucky Oye!SonalHindi
2009Satyameva JayateBasara PapaTelugu
2009Yavarum NalamPriya ManoharTamil
200913BHindi
2010Mumbai CuttingHindi
2010RannYasmin HussainHindi
2010Theeradha Vilaiyattu PillaiTejaswiniTamil
2010ApartmentNeha BhargavHindi
2010No ProblemSophiaHindiSpecial appearance
2010SadiyaanHindi
2011Yuddham SeiTamilSpecial appearance in song "Kannitheevu Ponna"
2011Kucch Luv JaisaaRiaHindi
2013Aadhi BaghavanRani Sampatha / KarishmaTamilSIIMA Award for Best Actress in Negative role
2013SettaiTamilSpecial appearance in song "Laila Laila"
2014ManamTeluguCameo appearance
2014PowerKannadaSpecial appearance
2015ThilagarTamilSpecial appearance
2013Block 12[23]Greek
2017Singam 3TamilSpecial Appearance
2017Vaigai ExpressRadhika/ JyothikaTamilDual Role
2017Brahma.comNeetu ChandraTamil

As producer[edit]

YearFilmLanguageNotes
2011DeswaBhojpuri
2016Mithila MakhaanMaithili

Television[edit]


Year(s)ShowRoleChannelNotesRef.
2017-presentRangoliHost/presenterDD National[24]