Showing posts with label BANUMATHI. Show all posts
Showing posts with label BANUMATHI. Show all posts

Sunday, 28 February 2021

BANUMATHI RAMAKRISHNA BIOGRAPHY

 


BANUMATHI  RAMAKRISHNA  BIOGRAPHY



தடைகளை உடைத்த வெற்றி!

பதிமூன்று வயதில், இரண்டாம் நாயகி. 18 வயதில், கதாநாயகி, மணப்பெண். 21 வயதில், நட்சத்திர நாயகி, பாடகி மற்றும் ஒரு குழந்தைக்கு அம்மா. 22 வயதில், கதாநாயகி, பாடகி, 'ஸ்டோரி ரைட்டர்' மற்றும் தயாரிப்பாளர் என்று, அடுத்தடுத்த வளர்ச்சிகள்.

புது வெள்ளம் பாய்ந்து வரும்போது, பழசெல்லாம் அடித்துச் சென்று விடும்.

வெற்றி பேரலையில், 'இனி, பானுமதி நடிக்க மாட்டாள்...' என்ற தடை உத்தரவு, வெள்ளத்தில் அடித்துச் சென்றது. தடை போட்டவரே, நடிக்க வைத்து, இயக்கும் சூழல் உருவானது; விதி வலியது.

பரணி நட்சத்திரத்தில், அழகு மகன் பிறந்த நேரம், தங்கள் வாழ்வில் செல்வமும், செல்வாக்கும் பெருகுவது கண்டு பெருமகிழ்ச்சி கொண்டனர்.

ஸ்வர்க்கசீமா கொடுத்த மாபெரும் வெற்றியை பயன்படுத்திக் கொள்ள, 'பானுமதி நடித்தால், படம் நன்றாக ஓடும். அவர், ராசியான நடிகை...' என்று, 'கால்ஷீட்' கேட்டு, தமிழ், தெலுங்கு இயக்குனர்கள் - தயாரிப்பாளர்கள் தேடி வந்தனர்.

'நாமளே சொந்த பட கம்பெனி ஆரம்பிக்கலாமே... நீங்க,'டைரக் ஷன்' பண்ணுங்க...' என்று, புது ஐடியா கொடுத்தார், பானுமதி.

'அருமையான யோசனை. நீ, ஹீரோயினி; நான் இயக்குனர்...' என்று புன்னகைத்தார், ராமகிருஷ்ணா.

'பரணி பிக்சர்ஸ்' என்று பெயர் பதிவு செய்யப்பட்டது. ராமகிருஷ்ணா, ஒரு கதை சொன்னார்.

'கதை நல்லா இருக்கு. ஆனா, கொஞ்சம் அபசகுனமா இருக்கு. நம்ம முதல் படம், குடும்ப கதையாக, குறிப்பா, பெண்களை கவரும் வகையில் இருந்தால் நல்லா இருக்கும்...' என்று, தன் கருத்தை வலியுறுத்தி, சின்ன வயதில், அம்மாவிடம் கேட்ட புராண கதையை சொன்னார், பானுமதி.

எல்லாருக்கும் பிடித்து போனது, கதை. கணவன் - மனைவி சேர்ந்து திரைக்கதை அமைத்தனர். அந்த படம் தான், ரத்னமாலா. கணவன் இயக்க, மனைவி, கதாநாயகியாக நடித்ததோடு, ஒரு பாடலும் பாடினார். மகன் பெயரில் தயாரித்த முதல் படம், 100 நாள் ஓடி, பெரும் வெற்றிவாகை சூடியது.

அடுத்து -

கணவரின் இனிய நண்பர், எல்.வி.பிரசாத் இயக்கி, 'ஹீரோ'வாக நடித்த, கிரஹப்பிரவேசம் படத்தில், ஜோடியாக பானுமதி நடிக்க, ஒப்பந்தம் முடிவானது. படப்பிடிப்பு துவங்கும் நேரத்தில், திடீரென்று பிரசாத்தை நீக்கிவிட முடிவு செய்தார், தயாரிப்பாளர். அப்போது, பெரிய பிரபலமில்லை, எல்.வி.பிரசாத்.

ராமகிருஷ்ணாவிடம், 'இந்த படம் இல்லாமல் போனால், நான் பழையபடி, பம்பாய் போய் ஏதேனும் வேலை பார்க்க வேண்டியது தான்...' என்று, தன்னிலையை சொல்லி கலங்கினார், எல்.வி.பிரசாத்.

அப்போது, 'பிரசாத் இல்லையென்றால், நான் நடிக்க மாட்டேன். வந்து, உங்கள், 'அட்வான்சை' வாங்கிக் கொள்ளுங்கள்...' என்று பானுமதி, ஒரு போடு போட்டதும், ஆடிப்போனார், தயாரிப்பாளர்.

'அம்மாயி, பிரசாத்காரு தான் டைரக்டர்; நீங்க தான், ஹீரோயினி...' என்று, சரண்டராகி விட்டார்.

தன் கணவரின் நண்பரை காப்பாற்றினார். அந்த படம், 100 நாள் ஓடி, எல்.வி.பிரசாத் என்ற திறமையான நடிகர் மற்றும் இயக்குனர், சினிமாவுக்கு வரமாக வாய்த்தார்.

இவர் தான், கே.பாலசந்தர், கமல்ஹாசனை வைத்து, ஹிந்தியில், ஏக் துஜே கேலியே படத்தை எடுத்தவர். ராஜபார்வை படத்தில், மாதவியின் தாத்தாவாக நடித்தவர்.

பானுமதி, தமிழில் ஒப்பந்தமான முதல் படம், ரத்னகுமார். அன்றைய சூப்பர் ஸ்டார், பி.யு.சின்னப்பா தான், 'ஹீரோ!' மொத்தம், 15 பாடல்கள். கர்நாடக, இந்துஸ்தானி மெட்டுகளில் அமைந்த பாடல்களை பாடியிருந்தார், பானுமதி.

சின்னப்பாவும், பானுமதியும், ஒரு கதம்ப பாடலை பாடியிருந்தனர். ஆடி, பாடி, பிச்சை எடுக்கும் காதலர்கள் கதாபாத்திரத்தில் நடித்தனர்.

தமிழில் முதன் முதலில் ஒப்பந்தமான இப்படம் வெளியாக, நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. காரணம், சின்னப்பாவுக்கும், பானுமதிக்கும் ஏழாம் பொருத்தம்.

படப்பிடிப்பு துவங்கிய கொஞ்ச நாளிலேயே முட்டல், மோதல் ஆரம்பமாகி விட்டது. இருவரும் சேர்ந்து நடிக்கும்போதெல்லாம், தலைவலி என்று சொல்லி போய் விடுவார், பானுமதி.

ஒருநாள், குடித்துவிட்டு வந்தார், சின்னப்பா.

'நான், இவரோட நடிக்க மாட்டேன்...' என்று பின் பக்கமாக, காரில், வீட்டுக்கு போய் விட்டார், பானுமதி.


கிருஷ்ணன் - பஞ்சு இயக்கி, ஆரூர்தாஸ்வசனம் எழுதிய, பத்து மாத பந்தம் படத்தில், கர்நாடக இசைப் பாடகி, கல்யாணி பாத்திரத்தில் நடித்ததோடு, ஒரு பாடலையும் எழுதியிருந்தார், பானுமதி. அதில், அவர் பாடிய, 'பாப் மியூசிக்' பாடல், படம் வருமுன்னே வெளியாகி, பெரும் வரவேற்பு பெற்றது; படமும் பெரும் வெற்றி பெற்றது.


Sunday, 24 January 2021

BANUMATHI ,THE PRIDE OF INDIAN CINEMA

 

BANUMATHI ,THE PRIDE OF INDIAN CINEMA






'சபாஷ்' சரியான போட்டி!

போட்டி, எல்லாத் தொழிலிலும் உண்டு. போட்டியிருந்தால் தான் வளர்ச்சி.

சினிமாவில், போட்டி, பொறாமைக்கு பஞ்சமில்லை. அன்றைய திரையுலகில், ஆரோக்கியமான போட்டியிருந்தன. அதனால், சிறந்த படங்கள் கிடைத்தன.

வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில், பத்மினி, வைஜெயந்திமாலா இருவரிடையே ஒரு நடனப் போட்டி.

'சபாஷ்... சரியான போட்டி...' என்று, பி.எஸ்.வீரப்பா சொல்லும் அளவுக்கு, அசத்தலான நடன போட்டி. நிஜத்தில், இரு நடிகையரும், சிறந்த நடனமணிகள். எனவே, நாட்டியம் ஆடி, மிரட்டியிருப்பர்.


இந்த நடன காட்சியால், இயக்குனர் வாசனுக்கு, புதிய தலைவலி ஏற்பட்டது.

'போட்டியில் நான் தோல்வியடைவதாக காட்டாதீர்கள்...' என்று, வைஜெயந்தி மாலாவின் அம்மாவும், பத்மினி தரப்பும் கோரிக்கை வைத்தது. அப்போது, ஒரு யுக்தி செய்தார், வாசன்.

போட்டியின் உச்சகட்டத்தின் போது, ஜெமினிகணேசனை குறுக்கே நுழைய விட்டு, நடனத்தை, 'ட்ரா'வில் முடித்தார்.

இதே போல ஒரு நடிப்புப் போட்டி, அன்னை படத்தில். பானுமதி-, சவுகார் ஜானகியிடையே உருவாகியது. யதார்த்தமாக நடந்த இந்த போட்டியை, இயக்குனர், கிருஷ்ணன் பஞ்சு எப்படி சமாளித்தனர்?

அம்மாவின் இரு மகள்களில், அக்கா பானுமதி, தங்கை சவுகார்ஜானகி. வசதிமிக்க வழக்கறிஞரின் மனைவியாகிறாள், அக்கா; வசதியை கொடுத்த இறைவன், வாரிசு கொடுக்கவில்லை. ஏழையை காதலித்தாள், தங்கை; அவளுக்கு, அழகான குழந்தை பிறக்கிறது. அவள் கணவன், ஒரு விபத்தில் கால் இழக்கிறான்.


தங்கையின் குழந்தையை தத்து எடுக்கிறாள், அக்கா. தங்குவதற்கு வீடு, வசதிகளை செய்து கொடுத்து, 'இந்த குழந்தைக்கு, அம்மா நீ தான் என்பதை, இனி எந்த நிலையிலும் அவன் அறியும்படி நடந்து கொள்ளக்கூடாது...' என்று, தங்கையிடம் சத்தியம் வாங்கிக் கொள்கிறாள்.

அக்கா, மாடியில்; தங்கை, கீழே. கண் முன்னே குழந்தை வளர்கிறது. பெற்ற அம்மா, குழந்தையை நெருங்க விடாமல் கண்காணிக்கிறாள், வளர்ப்பு அம்மா. பெற்ற அம்மா, வளர்ப்பு அம்மா இருவருக்குமிடையே மனப் போராட்டம்.

குழந்தை, இளைஞனாகிறான். ஒருநாள், கடும் காய்ச்சலில் மாடியில் கிடக்கிறான். பெற்ற மகனை காணவும், அவன் நெற்றியில் திருநீறு பூசவும், இரவில், பின்பக்க வழியாக, யாரும் பார்க்காதவாறு மாடிக்கு போய், பூசும்போது, பார்த்து விடுகிறாள், அக்கா.

'செய்து கொடுத்த சத்தியத்தை மீறி, பிள்ளையை என்னிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறாயா, துரோகி...' என்று, தங்கையை திட்டி, இழுத்து போய் வெளியே விடுகிறாள்.


'பத்து மாதம் சுமந்தவள். கண் எதிரில் மகன் உணர்வற்று கிடப்பதை எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்...' என்று கதறுகிறாள், தங்கை.

இப்படி உணர்ச்சிமயமான காட்சியில் நடிக்கும்போது, பெற்ற அம்மா பாசத்தில் கதறும் காட்சியில், சவுகார் ஜானகி நடிப்பு பிரமாதமாக இருந்தது; பானுமதியும் சிறப்பாக நடித்திருந்தார்.

பெற்ற அம்மாவின் கதறலுக்கு தான் ரசிகர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், தன் நடிப்புத் திறன் எடுபடாமல் போய் விடுமோ என்று அஞ்சினார், பானுமதி.

சவுகார்ஜானகி உணர்வுபொங்க நடித்துக் கொண்டிருந்த போது, தனக்கு இருமல் வந்துவிட்டது போல இரும ஆரம்பித்து விட்டார், பானுமதி. உடனே, இயக்குனர், 'கட்' சொல்ல வேண்டிய சூழல்.

அந்தக் காலத்தில், இன்று போல், 'டப்பிங்' செய்வது கிடையாது. படப்பிடிப்பின்போதே, 'லைவ்'வாக வசனத்தை பதிவு செய்வர். அதனால், அந்த காட்சியை மறுபடியும் எடுக்கும்போது, முதல், 'டேக்'கில் நடித்த அளவுக்கு, சவுகார்ஜானகியால் செய்ய முடியவில்லை.

நடிப்பில் போட்டி வந்து விட்டதை புரிந்து கொண்ட இயக்குனர்கள், ஒரு ஐடியா செய்தனர்.

பானுமதி, சவுகார்ஜானகி, இருவரின் உணர்வுப்பூர்வமான நடிப்பையும், தனித் தனி, 'ஷாட்'டாக எடுத்து இணைத்து, அவர்களின் திறமையான நடிப்பைப் பதிவு செய்தனர்.

அன்னை படம் பற்றி குறிப்பிடும்போது, 'எனக்கு ஒதுக்கப்பட்ட கதாபாத்திரம், கொஞ்சம் அசட்டுத்தனமாகவும், வில்லி போலவும் இருந்தது. அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு, நான் மிகவும் போராட வேண்டியிருந்தது. நான் ஒரு எழுத்தாளர் என்பதால், திரைக்கதையில் உள்ள குறைகள் கண்ணில் பட்டன.

'அதையெல்லாம் சரி செய்து, கொஞ்சம், 'பாலிஷ்' பண்ணி எழுத வேண்டி வந்தது. இதை தயாரிப்பாளரின் நல்லதுக்குத் தான் செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டேன்...' என்று, தஞ்சாவூர் கவிராயருக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார், பானுமதி.

'அன்னை படத்தை, ஹிந்தியில் எடுக்க விரும்பினோம். பானுமதி போல, 'பர்பார்ம்' பண்ணக் கூடிய நடிகையைத் தேடினோம். நர்கீஸ், மறுத்து விட்டார். நிருபா ராய் என்ற நடிகையை, பானுமதி வேடத்தில் நடிக்க வைத்து, லாட்லா என்ற பெயரில் எடுத்தோம்.

'பானுமதியை போல, நிருபா ராயால் நடிக்க முடியவில்லை என்பது நிரூபணமானது. நடிகர் - நடிகையர் தேர்வு எந்தளவுக்கு முக்கியம் என்பது புரிந்தது. ஹிந்தியில், லாட்லா படம் தோல்வி...' என்று, 'ஏவி.எம்.60 சினிமா' என்ற தொகுப்பு நுால் சொல்கிறது.

பாடகியாக விரும்பிய பானுமதி, திரை நட்சத்திரம் ஆனது ஏன், எதனால்?


* சினிமா நட்சத்திரங்களின் சோப்பு என்பரே, அந்தச் சோப்பின் விளம்பரத்தில் நடிப்பதற்காக, ஒருமுறை பானுமதியை அணுகினர்.

'நான் அந்த சோப்பில் குளிப்பதில்லை. எனக்கு அந்த சோப்பு பிடிக்காது. நான் வாங்காத சோப்பை, வாங்குங்கள் என்று எப்படி சொல்ல முடியும்...' என்று கேட்டு, திருப்பி அனுப்பி விட்டார்.


— தொடரும்

சபீதா ஜோசப்




பாட்டுக் குயில் மனசுக்குள்ளே!

யார் என்னவாக வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதையெல்லாம் மேலே இருக்கிறவன் தீர்மானிக்கிறான். அவன் திரைக்கதைக்கு நாம் நடிக்கிறோம். பாட்டுக் குயிலாக வேண்டும் என்று ஆசைப்பட்டார், பானுமதி. அவரின் அம்மா, அப்பாவும் அதையே நினைத்தனர். பானுமதியின் ரத்தத்தில் கலந்திருந்தது, சங்கீதம்.

ஆந்திர மாநிலம், ஓங்கோல் நகரின் அருகிலுள்ள தெட்டாவரம் கிராமத்தில், செப்., 7, 1925ல், பானுமதி எனும் துருவ நட்சத்திரம், பொம்மராஜு வெங்கடசுப்பையா- - அம்மணி அம்மாள் தம்பதியின் மூத்த மகளாய் உதயமானார்.

பானுமதியின் அப்பா, ஜமீன்தார்; ஓங்கோல் நகரின் வருவாய் ஆய்வாளர். இதையெல்லாம் தாண்டி, இசையின் மேல் பெருங்காதல் கொண்டவர்.

தியாகராஜ சுவாமிகளின் பாரம்பரியத்தைச் சேர்ந்த, சின்னையா பந்துலுவிடம் முறைப்படி, கர்நாடக சங்கீதம் படித்தவர். தான் பெற்ற இசை இன்பத்தை, மனைவி, மக்களுக்கு சொல்லிக் கொடுத்தார்.


கணவனும் - மனைவியும், காலை, மாலை வேளைகளில், தியாகராஜ கீர்த்தனைகளை மனமுருக பாடி, சங்கீத சஞ்சாரம் செய்து கொண்டிருப்பர்.

இசை தம்பதியின் இரு மகள்களில், கண்ணுக்கு லட்சணமாக இருந்த மூத்தவளுக்கு, சாப்பிடும் நேரம் தவிர, மற்ற நேரமெல்லாம், சங்கீதம் தான்.

எப்போதும், ஏதேனும் ஹிந்தி பாட்டு மற்றும் தெலுங்கு கீர்த்தனையை அவர் வாய் அசைப்போட்டபடி இருக்கும். மூத்தவளின் அழகும், காதில் தேனாக பாயும் குரலும் கேட்டு, அப்பாவுக்கு பெருமிதம்.

எந்த ஒரு பாடலையும், ஒருமுறை கேட்டால் போதும், தாள லயத்துடன், அதே பாவத்தோடு, பாடும் ஆற்றல் பெற்றிருந்தார், பானுமதி. மகளின் சங்கீத ஆலாபனை கேட்டு மகிழும் வெங்கடசுப்பையா, மகளை ஊக்கபடுத்த மறந்ததில்லை.

அலுவல் விஷயமாக சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கு செல்லும் போதெல்லாம், அன்றைய கர்நாடக, ஹிந்துஸ்தானி சங்கீத மேதைகளின், 'கிராமபோன் ரெக்கார்டு'களை வாங்கி வந்து, மகளுக்கு கொடுப்பார்.

இப்படி நாளொரு இசையும், பொழுதொரு பாட்டுமாக பானுமதியின் இளம் பருவம், இசையை கைகோர்த்து நடந்தன.

சுடர்விடும் சுட்டித்தனம் அவரிடம் சின்ன வயது முதலே தொற்றிக் கொண்டது. அவர் ஒரு நேர்காணலில், 'சின்ன வயதிலிருந்தே, எனக்கு எதைக் கேட்டாலும், அப்படியே அச்சு அசலாக மனப்பாடம் ஆகிவிடும்.

'புராண, இதிகாசக் கதைகள் கேட்பதிலும், சுலோகங்களை சொல்வதிலும் நான் காட்டிய ஆர்வத்தை பார்த்து, பள்ளிப் படிப்பிலும் நான் சிறந்து விளங்குவேன் என்று நினைத்தார், அப்பா...' என்றார், பானுமதி.

அப்பாவின் நம்பிக்கையை பொய்யாக்கவில்லை. பாடுவதில் கெட்டிக்காரியான தன் மகள், படிப்பிலும் நன்றாக பிரகாசிப்பாள் என்று, வீட்டுக்கு பக்கத்திலேயே இருந்த பள்ளியில் சேர்த்தார்.

அதேபோல, அடுத்த வீட்டு பண்டிதரிடம் சமஸ்கிருத ஸ்லோகங்கள் கற்றுக்கொள்ள அனுப்பினார்; அதையும் முறையாக, ஆழமாக பயின்றார்.

பானுமதிக்கு பாட்டும், படிப்பும் நன்றாக மனப்பாடமாகி வரும் காலகட்டத்தில், 12 வயதின் இறுதியில், ஒரு கண்டம்.

மகளை பெரிய பாடகி ஆக்காமல் ஓய்வதில்லை என்றிருந்த, வெங்கடசுப்பையா, நோய்வாய் பட்டு, படுத்த படுக்கையானார். தமக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயம் வந்து விட்டது. தான் கண் மூடுவதற்குள், மகளை மணக்கோலத்தில் பார்த்து விட நினைத்தார்.

அவரது அவசரத்துக்கு வந்த வரன்கள், இரண்டாம் தாரம், மூன்றாம் தாரமாகவும், ஊனமுற்றவருக்கும் பெண் கேட்டு வந்தனர். இதைக் கண்டு நொந்துப் போனார்.

'கிளியை வளர்த்தது குரங்கு கையில் கொடுக்கவா...' என்று கொதித்தார்.

'முதல்ல, உங்க உடம்பு குணமாகட்டும், அப்புறம் இதெல்லாம் பார்க்கலாம்...' என்று, கடிந்து கொண்டார், மனைவி.


பானுமதி - ராமகிருஷ்ணா தம்பதிக்கு, ஒரே மகன். பரணி நட்சத்திரத்தில் பிறந்ததால், மகனுக்கு, பரணி என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தனர். தங்கள் படப்பிடிப்பு நிலையத்துக்கு, 'பரணி ஸ்டூடியோ' என்றும், பட நிறுவனத்துக்கு, 'பரணி பிக்சர்ஸ்' என்றும் பெயர் சூட்டினர்.

மகன் பரணியை, மருத்துவம் படிக்க வைத்தனர். சினிமா ஸ்டுடியோ, இப்போது, பரணி மருத்துவமனையாக மாறி, சேவை செய்து வருகிறது.



தேடி வந்த வாய்ப்பு!

மகளை பெரிய பாடகி ஆக்காமல் ஓய்வதில்லை என்றிருந்த, வெங்கட சுப்பையா, நோய்வாய் பட்டு, படுத்த படுக்கையானார். தமக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயம் வந்து விட்டது. தான் கண் மூடுவதற்குள், மகளை மணக்கோலத்தில் பார்த்து விட நினைத்தார்.

'உங்க அவசரத்தாலே நம் பெண்ணோட வாழ்வை பாழாக்கிடாதீங்க...' என்று, மனைவி கடிந்து கொண்டதும், தன் முடிவை கை விட்டார்.

உடல் நலம் பெற்றதும், மகளின் ஜாதகத்துடன், தன் நம்பிக்கைக்குரிய ஜோதிடர் ராமையாவை சென்று பார்த்தார்.

ஜாதக ஏட்டைப் பார்த்து, மகளின் எதிர்காலம் எப்படி இருக்கும். பெரிய பாடகி ஆவாளா... திருமண யோகம் எப்படி இருக்கிறது என, சொல்லும்படி, வேண்டிக் கொண்டார், வெங்கட சுப்பையா.

கட்டம் போட்டு பார்த்தவர், 'உங்க மகளோட ஜாதகம் அமோகமா இருக்கு. இவள், கலையுலகில் மிகப்பெரிய இடத்தையும், அந்தஸ்தையும் அடைவாள். இவளோட விவாகம், 18 வயதில் தான் நடக்கும். அவள் விரும்பியபடியே எல்லாம் நடக்கும்...' என்று, ஜோதிடர் நல்வாக்கு சொன்னார்.

அப்பாவான அவருக்கு, ஏக சந்தோஷம்.

'கலையுலகில் உயர்ந்த அந்தஸ்து பெறுவாள், சரி; திருமணம், அவள் விருப்பப்படி நடக்குமா... அது தான் கொஞ்சம் இடிக்கிறது. நம் பேச்சை மீறாதவள், நம் சொல்லுக்கு மரியாதை தரும் பெண், நம்மை மீறி நடக்க மாட்டாள்...' என்று, தனக்குள் சொல்லிக் கொண்டார்.

வீட்டுக்கு வந்ததும், 'ஜோசியர் என்ன சொன்னார்...' என்றார், மனைவி.

'நம் பானு, பெரிய பாடகி ஆக போறா. கலையுலகில் கொடி கட்டிப் பறக்க போறா. அடுத்த வாரம், நான் மெட்ராஸ் போறேன். சினிமா சினேகிதரைப் பார்த்து, 'பெண்ண பாட வைக்க வாய்ப்பு இருக்கா'ன்னு, கேட்க போறேன்...' என்றார், மகிழ்ச்சி பொங்க.

தயாரிப்பாளர் நண்பரைப் பார்க்க, மகளுடன் சென்றார், வெங்கட சுப்பையா.

மகளின் குரல் வளத்தை, இனிமையை சிலாகித்தார்.

'ரொம்ப சந்தோஷம்... நல்ல வாய்ப்பு அமையும்போது பாட வெச்சுடலாம்...' என்றார், நண்பர்.

தன் சொல்லுக்கு மரியாதை கிடைத்த மகிழ்ச்சியில், 'ஒரு பாட்டு பாடிக் காட்டும்மா...' என்றார், மகளிடம்.

புது இடம், புது மனிதர்கள் முன் எப்படி பாடுவது... சற்று கூச்சத்துடனே பாடினார், குட்டிப் பெண், பானுமதி.

அங்கு அமர்ந்திருந்த பிரபல தெலுங்கு இயக்குனர், சி.புல்லையா, கை தட்டி, 'அருமையாக பாடுகிறாள். இப்படி பாடி நடிக்கிற வேஷத்துக்கு தான், ஒரு புதுமுகத்தை தேடிக் கொண்டிருந்தேன். இதோ கிடைத்து விட்டாள். என் படத்தின், இரண்டாவது கதாநாயகி, இவள் தான்... உங்க மகளை, நடிக்க வைக்கிறீங்களா?' என்று கேட்டார்.

'நடிப்பா... என் மகளை, பாடகியாக பார்க்க தான் விரும்புகிறேன்...'

'மிஸ்டர் வெங்கட சுப்பையா... உங்க மகள் பாடினால், எத்தனை பேர் கேட்பர். ஒரு கச்சேரியில் பாடினால், அந்த ஊருக்கு மட்டும் தெரியும். சினிமாவில் பாடி நடித்தால், இந்தியாவுக்கே தெரியுமே... உங்க மகளின் பாட்டை இந்தியாவே கேட்க வேண்டாமா...' என்ற, இயக்குனரின் பேச்சு, பானுமதியின் அப்பாவை யோசிக்க வைத்தது.

அவரது தயாரிப்பாள நண்பரும் பரிந்துரைக்க, சம்மதம் கொடுத்தார்.

சினிமாவில் நடிப்பதில் ஆர்வமில்லாத போதும், அப்பாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, தலையாட்டினார், இளம் பெண் பானுமதி.

'கோல்கட்டாவுக்கு புறப்பட்டு வந்திருங்க... அங்கே தான் படப்பிடிப்பு. பிரபல நடிகை புஷ்பவல்லியின் தங்கை வேஷம், உங்க மகளுக்கு... மாதம், 150 ரூபாய் சம்பளம்...' என்றார், இயக்குனர் புல்லையா.

'சம்பளம் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. என் மகளை நிறைய பாட்டு பாட வைங்க...' என்று கேட்டுக் கொண்டார், வெங்கட சுப்பையா.

கோல்கட்டாவில், வரவிக்ரேயம் தெலுங்கு பட, படப்பிடிப்பு துவங்கியது.

13 வயது பானுமதி, அறியாத பெண் காளிந்தியாக, தியாகராஜரின், 'பலுகவேமி நாதெய்வமா' கீர்த்தனையை பாடி, நடித்தார்.

படத்தில் ஒரு சோகமான கட்டம். அதில் அழுது கொண்டே நடிக்க வேண்டும். அழுது பழக்கமில்லாத செல்வச் சிறுமி, நடிப்பது எப்படி என, விழித்தார்.

எப்படியெல்லாமோ சொல்லி காட்டியும், அழுவது போல் அவரால் செய்ய தெரியவில்லை என்றதும், கோபத்தில் கண் சிவக்க, கத்தினார், இயக்குனர். அதைப் பார்த்த பானுமதி, அழ ஆரம்பித்து விட்டார். அவரது நிஜ அழுகை, அப்படியே படமானது.

'உன்னை அழ வைக்கத்தாம்மா அப்படிக் கத்தினேன். உன் மேலே கோபமோ, வருத்தமோ இல்லே...' என்று, 13 வயது நட்சத்திரம் பானுமதியை, சமாதானப்படுத்தினார், இயக்குனர்.

கடந்த, 1939ல் படம் வெளியானது. 'பானுமதியின் பாட்டும் பிரமாதம், நடிப்பும் பிரமாதம்...' என, பத்திரிகைகள் பாராட்டின. படத்தின் மாபெரும் வெற்றியால், அடுத்து, நான்கு படங்களின் வாய்ப்புகள் தேடி வந்தன.

புது நிபந்தனை போட்டார், வெங்கட சுப்பையா.


சென்னை, சாலிகிராமத்தில், டாக்டர் பி.பானுமதி ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் என்ற பெயரில், பள்ளியை நிறுவி, அதன் மூலம் ஏழை குழந்தைகளுக்கு, இலவசமாக கல்வியை வழங்கினார். இப்படி, பல நற்பணிகளை செய்துள்ளார், பானுமதி.


Monday, 7 September 2020

BANUMATHI ACTRESS BORN 1925 SEPTEMBER 7- 2005 DECEMBER 24


BANUMATHI ACTRESS BORN 
1925 SEPTEMBER 7- 2005 DECEMBER 24




பானுமதி. செம்படம்பர் 7,. 1925ஆம் ஆண்டு இன்றைய ஆந்திராவில் உள்ள தொத்தாவரம் என்னும் சிற்றூரில் பொம்மராஜூ வெங்கடசுப்பையா - அம்மனியம்மா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார்

1939ஆம் ஆண்டு வரவிக்கிரயம் என்னும் தெலுகு படத்தின் படப்பிடிப்பு கல்கத்தாவில் நடந்துகொண்டிருந்தது. அது ஒரு முக்கியமான சோகக் காட்சி. அந்தப் படத்தின் நாயகியான 13 வயது பெண்ணுக்கு அந்தச் சோகக் காட்சியில் நடிக்க இயலவில்லை. அவளுக்கு அழுகை வரவில்லை. இயக்குனர் சி.புல்லையா அந்தச் சிறு பெண்ணை நோக்கிக் கத்தி இருக்கிறார். பயந்துபோன அந்தச் சிறுமி அழுதிருக்கிறார். அந்தக் காட்சி வெற்றிகரமாகப் படமாக்கப்பட்டது.

பிறகு அந்த 13வயது சிறுமி தென்னிந்தியச் சினிமாவின் முக்கியமான ஆளுமையாக வலம் வந்தார். நடிகை என்பது மட்டுமின்றி இயக்குனர், பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர், எழுத்தாளர் எனப் பல பரிமாணங்களுடன் புகழ் பெற்றார். அவர்தான் பானுமதி. செம்படம்பர் 7,. 1925ஆம் ஆண்டு இன்றைய ஆந்திராவில் உள்ள தொத்தாவரம் என்னும் சிற்றூரில் பொம்மராஜூ வெங்கடசுப்பையா - அம்மனியம்மா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். பானுமதி சிறு வயதிலேயே இசை ஆர்வம் கொண்டிருந்தார். அவருடைய தந்தை அவருக்குக் கர்நாடக சங்கீதத்தை முறைப்படிக் கற்றுக்கொடுத்தார். தன்னுடைய மகளின் குரல் இந்தியா முழுவதும் கேட்க வேண்டும் என்பதை பொம்மராஜூ இலட்சியமாகக் கொண்டிருந்தார். தன் முதல் படத்திலேயே அவர் தியாகராஜ கீர்த்தனைகள் பாடிப் புகழ் பெற்றார் பானுமதி.

பானுமதி தன் முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாலதி மாதவன், தர்மபத்தினி போன்ற பல தெலுகு படங்களில் நடித்தார். அவர் கிருஷ்ண பிரேமா (1943) படப்பிடிப்புக்காக சென்னை வந்தார். அப்போதுதான் அங்கு உதவி இயக்குனராக இருந்த பலுவை ராமகிருஷ்ணாவை பானுமதி சந்தித்தார். இருவரும் காதல் வயப்பட்டனர். ஆனால் இவர்களின் காதலை பானுமதியின் பெற்றோர் எதிர்த்தனர். படத்தின் தயாரிப்பாளர் ஏ.ராமைய்யாவின் மனைவி கண்ணாமணி மற்றும் சில நண்பர்களின் உதவியுடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இதன் பின்னால் பெற்றோரின் ஆசியும் கிடைத்தது.

திருமணத்திற்குப் பிறகு நடிக்கக் கூடாது என்று பானுமதி முடுவெடுத்திருந்தார். ஆனால் பி.என்.ரெட்டி தன்னுடைய ஸ்வர்க்க சீமா என்னும் படத்தில் பானுமதிதான் நடிக்க வேண்டும் என வேண்டி கேட்டுக்கொண்டார். ராமகிருஷ்ணாவும் இதைக் கடைசிப் படமாக நினைத்து நடித்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதன் பேரில் பானுமதி சம்மதித்தார். ஆனால் அந்தப் படத்தின் மாபெரும் வெற்றி பானுமதிக்கு நட்சத்திர அந்தஸ்தை வழங்கியது. அவர் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார். தமிழில் ரத்னகுமார் படத்தில் பி.யூ.சின்னப்பாவுடனும், முக்தி படத்தில் தியாகராஜ பாகவதருடனும் இணைந்து நடித்தார்.

இச்சமயத்தில் பானுமதியும் அவர் கணவரும் இணைந்து படம் தயாரிக்க முடிவெடுத்தனர். 1947இல் வெளிவந்த ரத்னமாலா அவர்களின் தயாரிப்பில் வந்த முதல் படம். 1952இல் அவர்கள் பரணி ஸ்டுடியோவைத் தொடங்கினர். பானுமதி இயக்கிய முதல் திரைப்படம் சண்டிராணி. இது தமிழ், தெலுகு, இந்தி மொழிகளில் தயாரிக்கப்பட்டது.

பானுமதி 1966இல் பத்மஸ்ரீ, 2003இல் பத்மபூசன் ஆகிய விருதுகளால் கெளரவிக்கப்பட்டுள்ளார். தன் சினிமா பங்களிப்புக்காக பல தேசிய, மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ்நாடு இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியற்றியுள்ளார். பானுமதி டிசம்பர் 25, 2005ஆம் ஆண்டு காலமானார். நடிப்பு மட்டுமின்றி மாசிலா உண்மைக் காதலி, பூவாகிக் காயாகிக் கனிந்த மரமொன்று போன்ற பல பாடல்களும் இன்றைக்கு பானுமதி என்னும் ஆளுமைக்கு மங்காத நினைவைப் பெற்றுத் தருபவை.

(தமிழில் ஜெரீ ஜெய்)

1939ஆம் ஆண்டு வரவிக்கிரயம் என்னும் தெலுகு படத்தின் படப்பிடிப்பு கல்கத்தாவில் நடந்துகொண்டிருந்தது. அது ஒரு முக்கியமான சோகக் காட்சி. அந்தப் படத்தின் நாயகியான 13 வயது பெண்ணுக்கு அந்தச் சோகக் காட்சியில் நடிக்க இயலவில்லை. அவளுக்கு அழுகை வரவில்லை. இயக்குனர் சி.புல்லையா அந்தச் சிறு பெண்ணை நோக்கிக் கத்தி இருக்கிறார். பயந்துபோன அந்தச் சிறுமி அழுதிருக்கிறார். அந்தக் காட்சி வெற்றிகரமாகப் படமாக்கப்பட்டது.

பிறகு அந்த 13வயது சிறுமி தென்னிந்தியச் சினிமாவின் முக்கியமான ஆளுமையாக வலம் வந்தார். நடிகை என்பது மட்டுமின்றி இயக்குனர், பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர், எழுத்தாளர் எனப் பல பரிமாணங்களுடன் புகழ் பெற்றார். அவர்தான் பானுமதி. செம்படம்பர் 7,. 1925ஆம் ஆண்டு இன்றைய ஆந்திராவில் உள்ள தொத்தாவரம் என்னும் சிற்றூரில் பொம்மராஜூ வெங்கடசுப்பையா - அம்மனியம்மா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். பானுமதி சிறு வயதிலேயே இசை ஆர்வம் கொண்டிருந்தார். அவருடைய தந்தை அவருக்குக் கர்நாடக சங்கீதத்தை முறைப்படிக் கற்றுக்கொடுத்தார். தன்னுடைய மகளின் குரல் இந்தியா முழுவதும் கேட்க வேண்டும் என்பதை பொம்மராஜூ இலட்சியமாகக் கொண்டிருந்தார். தன் முதல் படத்திலேயே அவர் தியாகராஜ கீர்த்தனைகள் பாடிப் புகழ் பெற்றார் பானுமதி.

பானுமதி தன் முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாலதி மாதவன், தர்மபத்தினி போன்ற பல தெலுகு படங்களில் நடித்தார். அவர் கிருஷ்ண பிரேமா (1943) படப்பிடிப்புக்காக சென்னை வந்தார். அப்போதுதான் அங்கு உதவி இயக்குனராக இருந்த பலுவை ராமகிருஷ்ணாவை பானுமதி சந்தித்தார். இருவரும் காதல் வயப்பட்டனர். ஆனால் இவர்களின் காதலை பானுமதியின் பெற்றோர் எதிர்த்தனர். படத்தின் தயாரிப்பாளர் ஏ.ராமைய்யாவின் மனைவி கண்ணாமணி மற்றும் சில நண்பர்களின் உதவியுடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இதன் பின்னால் பெற்றோரின் ஆசியும் கிடைத்தது.

திருமணத்திற்குப் பிறகு நடிக்கக் கூடாது என்று பானுமதி முடுவெடுத்திருந்தார். ஆனால் பி.என்.ரெட்டி தன்னுடைய ஸ்வர்க்க சீமா என்னும் படத்தில் பானுமதிதான் நடிக்க வேண்டும் என வேண்டி கேட்டுக்கொண்டார். ராமகிருஷ்ணாவும் இதைக் கடைசிப் படமாக நினைத்து நடித்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதன் பேரில் பானுமதி சம்மதித்தார். ஆனால் அந்தப் படத்தின் மாபெரும் வெற்றி பானுமதிக்கு நட்சத்திர அந்தஸ்தை வழங்கியது. அவர் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார். தமிழில் ரத்னகுமார் படத்தில் பி.யூ.சின்னப்பாவுடனும், முக்தி படத்தில் தியாகராஜ பாகவதருடனும் இணைந்து நடித்தார்.

இச்சமயத்தில் பானுமதியும் அவர் கணவரும் இணைந்து படம் தயாரிக்க முடிவெடுத்தனர். 1947இல் வெளிவந்த ரத்னமாலா அவர்களின் தயாரிப்பில் வந்த முதல் படம். 1952இல் அவர்கள் பரணி ஸ்டுடியோவைத் தொடங்கினர். பானுமதி இயக்கிய முதல் திரைப்படம் சண்டிராணி. இது தமிழ், தெலுகு, இந்தி மொழிகளில் தயாரிக்கப்பட்டது.

பானுமதி 1966இல் பத்மஸ்ரீ, 2003இல் பத்மபூசன் ஆகிய விருதுகளால் கெளரவிக்கப்பட்டுள்ளார். தன் சினிமா பங்களிப்புக்காக பல தேசிய, மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ்நாடு இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியற்றியுள்ளார். பானுமதி டிசம்பர் 25, 2005ஆம் ஆண்டு காலமானார். நடிப்பு மட்டுமின்றி மாசிலா உண்மைக் காதலி, பூவாகிக் காயாகிக் கனிந்த மரமொன்று போன்ற பல பாடல்களும் இன்றைக்கு பானுமதி என்னும் ஆளுமைக்கு மங்காத நினைவைப் பெற்றுத் தருபவை.

நடிப்பு, பாடல், இயக்கம், தயாரிப்பு என பல துறைகளில் கொடி கட்டிப் பறந்த பழம்பெரும் நடிகை பானுமதி . தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் முடி சூடா ராணியாக திகழ்ந்தவர் பானுமதி. அந்தக்கால சூப்பர் ஸ்டார்களானஎம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, பின்னர் வந்த எம்.ஜி.ஆர், சிவாஜி என ஜாம்பவான்களுடன் இணைந்து பலபடங்களில் நடித்தவர் பானுமதி. தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ் ஆகியோருடனும் நடித்தவர் பானுமதி. அவர்நடித்த படங்களில் அவரே பாட்டுக்களைப் பாடுவார். அவருக்கு எந்தப் பாடகியும் பின்னணி பாடியதில்லை என்ற சிறப்புப் பெற்றவர். இதுதவிர பல படங்களை தயாரித்துள்ளார், இயக்கியுள்ளார். இப்படிப் பல துறைகளில் கொடி கட்டிப் பறந்த பானுமதியை அஷ்டாவதானி என்றே திரையுலகம் கூறியது. 80 வயதான பானுமதி சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் வசித்துவந்தார். அவருக்கு ஒரே மகன், டாக்டர் பரணி. இவரது பெயரில் சாலிகிராமத்தில் முன்பு இயங்கி வந்த பரணி ஸ்டுடியோவை மருத்துவமனையாக மாற்றி அந்த மருத்துவமனையை நிர்வகித்து வந்தார் பரணி. 100க்கும் மேற்பட்ட படங்களில் பானுமதி நடித்துள்ளார். பத்மஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.தமிழ்நாடு இசைக் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

சென்னை தியாகராயநகர் வைத்தியராமன் தெருவில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். அவரது உடல் நிலை மோசமடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி 24.12.2005 நள்ளிரவில் மரணம் அடைந்தார்.
.

Wednesday, 13 June 2018

ABOUT BANUMATHI IN NADODI MANNAN








ABOUT BANUMATHI IN NADODI MANNAN


நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர். 
பானுமதியின் பெருந்தன்மை

இப்போது இன்னொரு முக்கியமான பகுதிக்கு வருகிறேன்...

நடிக நடிகையர்கள் பற்றி எழுதப் போகிறேன் என்பதை நீங்களே அறிந்து கொண்டிருப்பீர்கள். நான் யாரையாவது முதலில் குறிப்பிட்டு எழுதினால் மற்றவர்கள் முதலில் குறிப்பிட்டவர்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்றோ, திறமை குறைந்தவர்கள் என்றோ கருதக்கூடாது...

முதலில் நடிகையர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறேன். படத்தில் வந்த வரிசைக் கிரமத்திலே எழுத விரும்புகிறேன். திருமதி பி.பானுமதி அவர்கள் தான் படத்தில் முதலாவதாக வருகிறவர்கள்....

அவர்கள் நடிப்பைப் பற்றியும் ஒத்துழைப்பைப் பற்றியும் எழுதுவதற்கு முன் மூன்று ஆண்டுகட்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்ச்சியையும் இங்கு குறிப்பிடுவது அவசிய மென்று கருதுகிறேன்.

சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸாரின் ‘அலிபாபா’ படத்தில் நானும் திருமதி பானுமதி அவர்களும் நடித்துக் கொண்டிருந்த நேரம் ‘நாடோடி மன்னன்’ விளம்பரம் - ஜெண்டாவின் கைதி என்ற ஆங்கிலக் கதையின் தழுவல் என்று வெளியிடப்பட்டது. இரண்டு, மூன்று நாட்களுக்கு பிறகு பரணி பிக்சர்சாரின் விளம்பரமும் வெளி வந்தது. அவர்களுடைய விளம்பரம் வெளிவந்த அன்று, எங்கள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. தொலைபேசியில் என்னுடன் பேசிய திருமதி. பானுமதி அவர்கள் சொன்னார்கள் :

‘நாங்கள் எடுக்கும் கதையையே நீங்களும் எடுக்கப் போகிறீர்களாமே ! நமக்குள் போட்டி வேண்டாம். உங்கள் கதையை மாற்றிக் கொள்ளுங்கள். நாங்கள் பல மாதங்களாகச் செலவு செய்து எல்லாமே தயாராகி விட்டன’ என்றார்.


நான் சொன்னேன் : ‘நான் பல ஆண்டுகளாக உருவாக்கி வந்த உருவம் இது. எனது வாழ்வில் ஒரு திருப்பத்தை விரும்பி அதற்காக இக்கதையைத் தேர்ந்தெடுத்தேன். அதிலும் நானே டைரக்‌ஷன் பொறுப்பையும் ஏற்கப் போகிறேன்’ என்று. இது பற்றி மேலும் பேச்சு நடந்தது. முடிவாகச் சொன்னேன், ‘நான் ஜெண்டாவின் கைதி என்ற கதையில் உள்ள மன்னனாக மாற்றப்படும் காட்சியை மட்டும் தான் வைத்துக் கொள்ளப் போகிறேன் மற்றவை எல்லாமே வேறாகத்தானிருக்கும் ;உங்களுக்கும் கதையை மாற்ற முடியாதிருக்குமானால் நீங்களும் எடுங்கள். நமக்குள் போட்டா போட்டியே வராது. உங்கள் கதை ஜெண்டாவின் கைதியின் நேர்ப்பதிப்பு , எனது கதை வேறு’ என்று சொன்னேன்.

உண்மையில் எனக்கும் குழப்பம் ; அவர்களுக்கும் அந்த நிலை தான்.

சில நாட்களுக்குப் பிறகு சொன்னார்கள் : ‘நாங்கள் அந்தக் கதை எடுப்பதை நிறுத்திவிட்டோம். சந்தேகமில்லாமல் தாங்கள் படத்தை எடுக்கலாம்’ என்று. நன்றி தெரிவித்தேன் உண்மையான உள்ளத்துடன். நாடோடி மன்னனில் தனக்கு நடிக்கும் வாய்ப்பு இருக்கும் என அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை அப்போது.
எந்த நலத்தையும் எதிர்பாராமல் அவர்கள் விட்டுக் கொடுத்தார்கள் என்பது தான் உண்மை.


தன்னிடமிருக்கும் கதையைத் தருவதாகவும், திரு. ஏ.கே.வேலன் அவர்கள் தான் கதை வசனம் எழுதியிருப்பதாகவும், அதைப் பயன் படத்திக் கொள்ளலாமென்றும் சொன்ன பெருந்தன்மையை எவ்வளவுதான் போற்றினாலும் போதாது....
நான் எங்கு தொழில் செய்தாலும் சுதந்திரமாக இருக்கவும், தொழில் செய்யவும் விரும்புகிறவன். இதே குணத்தைப் படைத்தவர் திருமதி. பானுமதி அவர்கள். இருவரும் விட்டுகொடுக்காத மனோபாவம் உள்ளவர்கள். எம்.ஜி.ஆர்.தானே டைரக்ட் செய்து, தான் சொந்தத்தில் எடுக்கும் இப்படம் ஒழுங்காக முற்றுப்பெறுமா, பானுமதி அவர்கள் படத்தில் இருப்பார்களா படம் வெளிவரும்போது?..... என்றெல்லாம் சந்தேகப்பட்டவர்கள் (அதை விட எனது வீழ்ச்சியைக் காண ஆசைப்பட்டவர்கள் என்றால் பொருந்தும்) வெட்கித் தலைகுனியும்படி ஒத்துழைத்ததோடுமல்ல, தான் ஏற்ற ‘மதனா’ என்ற பாத்திரத்தை, வேறு எவரும் இவர் போல் திறமையாக நடித்திருக்க முடியாது என்று மக்களைச் சொல்லும்படி செய்துவிட்டார். இவ்வாறு புகழப்படுவதைவிட ஒரு நடிகையின் வெற்றிக்கு வேறென்ன சான்று வேண்டும்.

Sunday, 24 December 2017

ILAYARAJA -BANUMATHI - AN INTERVIEW



ILAYARAJA -BANUMATHI  -
AN INTERVIEW 



இசைஞானி - பானுமதி சந்திப்பு
*************************************************************************

♫ வணக்கம்

பானுமதி: வணக்கம். வாங்க. வழக்கமா நான் காலையில ”வாக்” போவேன். நீங்க வர்றதினால போகல.

♫ எனக்கு ரொம்ப நாளாகவே ஆசை. உங்களை மீட் பண்ணி மியூஸிக் பற்றி டிஸ்கஸ் பண்ணனும்னு. இன்னைக்குத்தான் அதுக்கு வேளை வந்திருக்கு. உங்க பாட்டுகளை மேடையில் பலமுறை பாடியிருக்கேன். சொல்லப்போனால் நான் உங்க Fan. இப்போ உங்க பாட்டுகளை நிறைய சேகரிச்சு வச்சிருக்கேன்.

பானுமதி: அப்படியா..!! ரொம்ப சந்தோஷம். இப்போ கொஞ்ச நாளாகவே உங்க பாட்டை அடிக்கடி கேட்கிறேன். You are a Genius..! ஆமா.! உங்களைப் பற்றி நான் எடுத்திருக்கிற முடிவு அதுதான். என் பாட்டு கலெக்‌ஷன் வச்சிருக்கிறதா சொன்னீங்களே. என்னென்ன பாட்டு வச்சிருக்கீங்க?

♫ என்னால முடிஞ்சவரை கலெக்ட் பண்ணியிருக்கேன். ‘லைலா-மஜ்னு’ படத்தில் நீங்கள் பாடிய ‘காசுக்கு மூணு சீட்டு’ (ராகத்துடன் அந்தப் பாடலைப் பாடிக்காட்டுகிறார்) எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு. சின்னப் பையனாக இருந்தப்பவே அந்தப் பாட்டை பாடுவேன்னா பாருங்களேன்.

பானுமதி: Very Good.! நானும் கூட அப்படித்தான். சின்ன வயசிலிருந்தே பாட ஆரம்பிச்சுட்டேன். நம்ப மாட்டீங்க. நான் முறையா சங்கீதம் கத்துக்கிட்டதில்ல. ஆனா எனக்கு ஆர்வம் ஜாஸ்தி. கேட்ட உடனே பாடுவேன். நடிப்பு விஷயத்திலே அப்படி இல்லே. மத்தவங்க மாதிரி இருக்கக்கூடாதுங்கிறதுல கண்டிப்பா இருப்பேன். வித்தியாசமா இருக்கணும்னு நினைப்பேன்.

♫ நீங்க முதல்ல நடிச்ச படம் எதும்மா?

பானுமதி: First .. Book ஆன படம் ரத்னகுமார்.

♫ அந்தப் படத்திலே கூட ‘அம்மா தாயே’ன்னு ஒரு கர்நாடிக் பாட்டு வருமில்ல?

பானுமதி: ரொம்ப நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்களே..! (’கலைமாதும் மலைமாதும் இருபுறம் அமர்ந்து’ என்ற பாடலை முழுவதும் பாடுகிறார்). காலையில என் வாய்ஸ் நல்லா இருக்காது. ஈவினிங்தான் நல்லா இருக்கும். (பல பாடல்களைப் பாடிக்காட்டுகிறார் பானுமதி).

♫ ஆகா. நானே உங்களைப் பாடச் சொல்லிக்கேட்கணும்னு நினைச்சேன். நீங்களே பாடிட்டீங்க. Thanks.

பானுமதி: அந்தப் பாடல்களெல்லாம் சி.ஆர். சுப்பராமன்தான். He is Just like You.

♫ ஐயோ… அவங்களோட என்னை… அவங்க எங்கே.?? நான் எங்கே..??

பானுமதி: Real Genius அவர். He knows Classical just like SatyaNarayana. English, Carnatic Music’ம் நல்லாவே தெரியும். அதுபோலவே இந்த Generation’க்கு இளையராஜா வந்தாச்சு.

♫ பெரிய ஜீனியஸைப் போய் இளையராஜா மாதிரின்னு சாதாரணமா சொல்லிட்டீங்களேம்மா. வருத்தமா இருக்கு. எம்.எஸ்.விஸ்வநாதன் சார் மாதிரி Talented முன்னால நான் சாதாரணம். அவருக்கு நீங்கதான் First Chance கொடுத்ததுன்னு.. … ..??

பானுமதி: நான்தான். அதை நானே சொல்றது நாகரிகமில்ல. அவரே சொல்லி இருக்காரு.

♫ எனக்குத் தெரியும். நீங்க சொல்லித் தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்.

பானுமதி: சண்டிராணி படம் ஸ்டார்ட் பண்ணிய சமயம். அப்ப சுப்பராமன் சார்கிட்டே ஆல் இன் ஆல் ஆக இருந்தார் விஸ்வநாதன். நான் அப்பவே அவரை வாட்ச் பண்ணியிருக்கேன். ரொம்ப சுறுசுறுப்பு. ‘ஸ்பார்க்’ மாதிரி ரொம்ப ஸ்மார்ட்டா இருப்பார். மேலே வரக்கூடிய எல்லாத் திறமைகளும் அவரிடம் இருந்தது. சண்டிராணி படத்துக்கு மூணு லாங்குவேஜ்ல மியூஸிக் பண்ணினாரு.

♫ விஸ்வநாதன் சாரோடு ராமமூர்த்தி சாரை நீங்கதானே சேர்த்தது?

பானுமதி: ஆமா, அதே படத்துலதான்.

♫ அப்பவெல்லாம் இசை அமைக்கிறவங்களுக்கும் மற்ற மியுஸீஷியன்களுக்கும் நிலைமை எப்படி இருக்கும்?

பானுமதி: பிக்சர் காண்டிராக்ட். அதை மாதச் சம்பளமாகக் கொடுப்போம். முன்னால நடிப்புல மட்டுமில்ல. மியூஸிக்லேயும் ஹெல்த்தி காம்பெட்டிஷன் இருந்துச்சு. சுப்பையா நாயுடு, ஜி. ராமநாதன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இவங்களை உருவாக்கிய சுப்பராமன், ஏ.வி.எம்.ல சுதர்சன், மகாதேவன் இப்படி நிறைய Talent’ஆனவங்க இருந்தாங்க.

மியூஸிக் டைரக்டருக்கு சினிமா டச்சப் தெரிஞ்சிருக்க வேண்டியது அவசியம். சிலர் பிரபல்யமாகாமலே இருப்பதற்குக் காரணம், கர்நாடிக் ஞானம் குறைச்சலா இருப்பதுனாலதான். மியூஸிக் தெரிஞ்சதுனால சொல்றேன். எல்லோருமே மியூஸிக் டைரக்டராகணும்னு நினைக்கிறாங்க. நெனைச்சா மட்டும் போதுமா?

♫ உங்க டைம்ல இருந்த மாதிரி வாய்ஸ் உள்ள ஆர்ட்டிஸ்ட் இப்போ இல்லீங்களே?

பானுமதி: நான் ஒண்ணு சொல்லட்டுமா? இன்னைக்கு நான் ப்ளேபேக் பண்ணினா, இப்ப அதிகமா சம்பாதிக்கிற ஆர்ட்டிஸ்ட்டை விட உறுதியா அதிகம் சம்பாதிப்பேன்.

♫ அதையேதான் நானும் கேட்கணும்னு நெனைச்சேன்.

பானுமதி: பணம் வாங்கிட்டு கண்ட Characterலேயும் act பண்ண எனக்குப் பிடிக்காது. Money is not the main thing’னு விட்டுவிட்டேன். அது போல நான் எல்லா வேஷமும் போடமாட்டேன்.

*************************************************************************

கிடைத்த இரண்டு பக்கங்களிலும் இருந்தது இவ்வளவு மட்டுமே. இனி விடுபட்ட பகுதிகள் திரு. ராஜேந்திரகுமார் அவர்கள் Facebook’ல் தந்திருந்த பின்னூட்டத்திலிருந்து..

” She praised him a lot and called him 'Mohana Raja' because of his beautiful usage of that raga. Then she expressed her desire to sing in his music and he was shocked and thought she was joking. But she was very firm.(finally her dream came true much later when she directed 'Periyamma' and sang in his music. She sang in 'Chembarauththi too). He then told her that his wife was expecting and asked her to suggest a name. She immediately said 'Mohanan' if it is a boy and 'Mohana' if it is a girl (No marks for guessing who that 'child' was. But somehow, he chose a different name!). .”

*************************************************************************
நண்பர் Vijay SA @tekvijay அவர்களின் Twitlonger’லிருந்து
இந்த பேட்டி சொல்லும் விஷயங்கள் பல!


இசைஞானி தானே தேடிச்சென்று பானுமதி அம்மாவை சந்தித்து பேசுகிறார். இன்றைக்கு உள்ள பெரிய MDக்கள் யாரும் இதுபோல், ஒரு இசை ஜாம்பவானை சந்தித்து பேசுகிறார்களா! இசைஞானியை தவிர்த்து என்றாலும்கூட மற்ற இசை ஜாம்பவான்களை சந்திக்கிறார்களா? அப்படியே சந்தித்தாலும் அவர்களிடம் கேள்வி கேட்க விஷயம் இருக்குமா?

ராஜா கேட்கும் கேள்விகள், அவர் சின்னப்பையனாக இருந்தபோதும் சரி இண்டஸ்ட்ரிக்குள் நுழைந்து வேலைபார்த்தபோதும் சரி, இசைத்துறை பற்றின பல விஷயங்களை கவனித்துள்ளார் என்பதை இந்த பேட்டி காட்டுகிறது!

சி.ஆர் சுப்புராமன் பெயரை ராஜா அடிக்கடி சொல்லி அவர்கள் இசை உலகிற்கு ஆற்றிய பங்களிப்பை குறிப்பிட்டு சொல்வதுண்டு! அப்பேர்ப்பட்ட மேதையை ராஜாவுடன் ஒப்பிட்டு சொல்கிறார் பானுமதி அம்மா! இது தான் வாழ்த்து! இதுதான் ராஜாவின் உண்மையான திறமைக்கு தகுந்த பாராட்டு!

ஆனால் உடனே ராஜா அதை மறுக்கிறார்! இதுதான் ஐயா அடக்கம்! இக்கால எம்டிக்கள் நோட்ஸ் எடுக்கவேண்டியது இங்குதான்! இசை நோட்ஸ் எழுதத்தான் தகராறு [ ;) ] இந்த நோட்ஸாவது எடுங்கள்!

ராஜா இந்த ஒப்பீட்டை மறுத்ததுடன் நிற்காமல், எம் எஸ் வி போன்ற திறமைசாலி முன் தான் சாதாரணம் என்கிறார்! (மறுபடியும் நோட்ஸ் ப்ளீஸ்!) அத்துடன் நிற்காமல், எம் எஸ்வி ஐயாவுக்கு முதன்முதலில் வாய்ப்பளித்தது பானுமதி அம்மா என்ற வரலாற்றுத்தகவலை சொல்கிறார். மெல்லிசை மன்னர்கள் இருவரையும் இணைத்ததும் பானுமதி தான் என்கிற சரித்திர உண்மையும் ராஜா சொல்கிறார்! பானுமதி அவர்கள் காலத்தில் சினிமா இசைத்துறை எப்படி இருந்தது என்ற தகவலையும் கேட்டு தெரிந்துகொள்கிறார் ராஜா!

ராஜா எப்போதும் பெண்களை தன் அருகில் அண்டவிடமாட்டார் என சொல்லப்படுவது நாம் அறிந்ததே. ஆனால் ஒரு சீனியர் அவர் பெண்ணாக இருந்தாலும் சென்று சந்தித்து மரியாதை செலுத்துவதில் ராஜாவுக்கு எந்த தயக்கமும் இல்லை!

ஒரு திறமையான கலைஞன் எப்போதுமே தன் சீனியர்களை சந்திப்பதில் ஆர்வம் கொண்டிருப்பான். சந்திப்பது மட்டுமல்ல, சரியான கேள்விகளை அவர்களிடம் கேட்டு, சரியான பதில் பெற்று, அந்த சந்திப்பை/பேட்டியை ஒரு வரலாற்று ஆவணமாக இருக்கச்செய்வான். கமல் சிவாஜியை சந்தித்து பேட்டி கண்டதும் இப்படித்தான்!

ராஜா, கமல் போன்ற கலைஞர்கள் எப்போதும், 'தான் மட்டுமே' என்று இருப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தத்தம் துறையின் மேதைகளை சுட்டிக்காட்டியபடியே இருப்பார்கள்! அதெல்லாம், போலி Humilityக்காக அல்ல, என்பது, அந்த மேதைகள் பற்றி ராஜா/கமல், சொல்லி ஹைலைட் செய்யும் விஷயத்தில் இருந்தே தெரிந்துகொள்ளலாம்! ஆக, இவர்கள் தனி ஆள் அல்ல, இவர்களின் துறை eco system இன் தொடர்ச்சி தான்! தத்தம் துறை மேதைகளை பற்றி இந்த இரு மேதைகளும் சொல்லாமல் இருக்கவே முடியாது!

சி.ஆர் சுப்புராமன் அவர்கள் இசையமைத்த சினிமா பாடல் "சின்னஞ்சிறு கிளியே" இது கர்நாடக சங்கீத மேடைகளில் பாடப்படுகிறது, பூபாள இசை, இவை எல்லாம் சி.ஆர் சுப்புராமன் அவர்கள் தந்தது என்று ஒரு நிகழ்ச்சி மேடையில் ராஜா குறிப்பிட்டார். இது ஒரு மிகச்சிறிய உதாரணம் தான்! இதுபோல் தன் துறை முன்னோடிகளை பற்றி பல நிகழ்வுகளை பெருமையாக எப்போதுமே சொல்லிக்கொண்டிருப்பவர் தான் ராஜா!

இப்பேர்ப்பட்ட மனிதரைத்தான், கர்வி என்று சில அறியாதவர்கள் விடாமல் சொல்லிக்கொண்டிருக்கும் கூத்தும் நடைபெறுகிறது!

எனக்கு முன்பு மையம்.காம் இல் ஒரு ரசிகர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது - "Ilaiyaraja is the last link between the oldest of the old and the Newest of the New!" இதை விட சிறப்பாக சொல்லிவிட முடியாது! நன்றி!

Thursday, 12 October 2017

BANUMATHI , EXTRA-ORDINARY TALENTED ACTRESS


BANUMATHI , EXTRA-ORDINARY TALENTED ACTRESS 




அப்பா பொம்மராஜு வெங்கட சுப்பையாவிடம் கர்நாடக சங்கீதமும் வேறொரு குருவிடம் இந்துஸ்தானியையும் கற்றார் பானுமதி. அப்பா வாங்கிவரும் கிராமபோன் ரெக்கார்டுகளில் உள்ள பாடல்களை ஒருமுறை கேட்டு, அப்படியே பாடும் திறமை அவருக்கு இருந்தது. மகளை சினிமா பாடகியாக்க வேண்டும் என்பது அப்பாவின் கனவு. திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதும் அவரது கனவு மகளின் திருமணமாக மாறியது.

வரன் பார்த்தார்கள். முதலில் வந்தவருக்கு உடல் குறைபாடு. அடுத்ததாக வந்தவர் மூன்றாம் தாரம். பெண்ணின் திருமணம் கேள்விக்குறியாகிவிடுமோ என்று கலங்கினார் அப்பா. அந்த நேரத்தில் வந்துசேர்ந்தார் டைரக்டர் சி. புல்லையா. ‘வரவிக்ரயம்’ தெலுங்குப் படத்தில் பானுமதியை இரண்டாவது கதாநாயகியாக நடிக்கவைக்க விரும்பினார்.

‘பெண்ணுக்குத் திருமண ஏற்பாடு நடக்கும் நேரத்தில் சினிமாவில் நடித்தால் சொந்தபந்தம் என்ன சொல்லும்? வந்துபோகிற மூன்றாந்தார வரன்கள்கூட வரமாட்டார்களே’ என்று பயந்த வெங்கடசுப்பையா மறுத்தார். புல்லையா பிடிவாதம் பிடித்தார். குடும்ப ஜோதிடரிடம் பானுமதியின் ஜாதகத்தைக் காட்டினார்கள். ‘இந்தப் பெண் கலைத்துறையில் உச்ச நிலையை அடைவாள்’ என்று கணித்துச்சொன்னார் அவர்.

பானுமதி நடித்த முதல் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்தது. படத்தில் அவரது நடிப்பையும், ‘பலுக வேமிநா தெய்வமா…’ என்று பாடிய பாடலையும் பத்திரிகைகள் பாராட்டின. பானுமதிக்கு அடுத்தடுத்து கதாநாயகி புரமோஷனுடன் வாய்ப்பு வந்தது. ‘மாலதி மாதவம்’, ‘தர்மபத்தினி’, ‘பக்திமாலா’, ‘கிருஷ்ண பிரேமா’ படங்களில் ‘கதாநாயகன் என் மகளின் கையைப் பிடிக்கக் கூடாது, அவளது தோளில் சாயக் கூடாது’ என்று ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு நடிக்கவைத்தார் அப்பா.

அவரது பாதுகாப்பு வளையத்தை மீறிய பானுமதி, ‘கிருஷ்ண பிரேமா’ படத்தின் துணை இயக்குனர் ராமகிருஷ்ணாவைக் காதலித்தார். விவரம் வீட்டுக்குத் தெரிந்தது. “அவரையே கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன். நீங்கள் மறுத்தால் மீறுவதைத் தவிர வேறு வழியில்லை” என்று அப்பாவிடம் தைரியமாகக் கூறினார் பானுமதி.

மகள் ஒரு சினிமாக்காரரை மணப்பதில் அப்பாவுக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும், மகளின் பிடிவாதத்தால் குடும்ப கெளரவத்துக்கு அவமானம் நேர்ந்துவிடுமோ என்று பயந்து, ஒப்புக்கொண்டார்.

‘நடிக்கக் கூடாது, கச்சேரிகளில் பாடக் கூடாது’ என்று திருமணம் ஆவதற்கு முன்பே பானுமதிக்குக் கட்டளை போட்டார் ராமகிருஷ்ணா. காதலின் மீதுள்ள காதலால், கலைத்துறையின் மீதுள்ள காதலைக் கழற்றிவைத்தார் பானுமதி. ‘பாட்டுன்னா எம்பொண்ணுக்கு உயிர். அவளை கச்சேரி பண்றதுக்காவது அனுமதிக்கணும்’ என்று அப்பா கேட்டுக்கொண்டதை ராமகிருஷ்ணா கேட்டுக்கொள்ளவில்லை.

திருமணம் முடிந்து குடும்பப் பொறுப்பை ஏற்றார் பானுமதி. நாட்களும் வாரங்களும் மாதங்களும் யார் பேச்சையும் கேட்காமல் ஓடிக்கொண்டிருந்தன. அந்த ஓட்டத்தின் ஒரு நாளில் பானுமதியைத் தேடி வந்தார் பிரபல இயக்குனர் பி.என்.ரெட்டி. ‘ஸ்வர்க்க சீமா’ படத்தில் நடிக்கக் கேட்டுக்கொண்டார். பக்கவாட்டில் பலமாகத் தலையாட்டிவிட்டார் ராமகிருஷ்ணா. இயக்குநரும் மாதக்கணக்கில் விரட்டிப் பார்த்து நொந்துபோய், ‘அவ பிரபல்யம் அடைஞ்சா அத தாங்கிக்க முடியாதுன்னுதானே நீ மறுக்கிறே?’ என்று கேட்ட கேள்வி ராமகிருஷ்ணாவை உறுத்தியது. இந்த ஒரு படத்தில் மட்டும் நடிக்கட்டும் என ஒப்புக்கொண்டார்.

‘ஸ்வர்க்க சீமா’ படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. அடுத்தடுத்து வாய்ப்பு வந்தது. ராமகிருஷ்ணாவால் மறுக்க முடியவில்லை. பி.என். ரெட்டி மட்டும் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்காவிட்டால், எம்.ஜி.ஆருடன் ‘நாடோடி மன்னன்’, ‘மதுரை வீரன்’, ‘மலைக்கள்ளன்’, ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’; சிவாஜியுடன் ‘தெனாலிராமன்’, ‘அம்பிகாபதி’, ‘கள்வனின் காதலி’, ‘அறிவாளி’, ‘ரங்கோன் ராதா’ படங்களில் நாம் பானுமதியைப் பார்த்திருக்க முடியாது.

படங்கள் உதவி: ஞானம்