Showing posts with label TECHNOLOGY. Show all posts
Showing posts with label TECHNOLOGY. Show all posts

Saturday, 19 September 2020

E.V.R PERIYAR FORECASTED SCIENCE TECHNOLOGY

 


E.V.R PERIYAR  FORECASTED 

SCIENCE TECHNOLOGY




எம் தாத்தா
வீட்டில் எங்கும் அவர் படம் கண்ணில் தட்டுப்படும். அவரது தோற்றம் ஒரு தாத்தாவாக மனதில் உருக் கொடுத்தது. பின்னர் விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு அவர் தான் இந்த இனத்தின் தந்தை என்றும், எம் தலைமுறைக்கு தாத்தா தான் என்றும் புரிந்தது.

அவர் போராடியதற்கான பலனை அனுபவிப்பதால், அவரது போராட்டத்தின் வீச்சை உணராமல் போகலாம் பலர். ஆனால் அவர் தேவையை உணர வைப்பதற்கு சிலர் இருப்பது நிம்மதி.

அவர் ஏதோ வெறும் கடவுள் மறுப்பாளர் என்று சித்தரித்து, அவரை ஒரு வட்டத்திற்குள் அடைக்க ஒரு கூட்டமே முனைந்து இன்றைக்கும் செயல்படுவது தான் அவரது காலம் கடந்து நிற்கும் வெற்றி.

இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் பெண்ணுக்கு சொத்தில் சம உரிமை சட்டம், 1925ல் அவர் எழுப்பிய முழக்கத்தின் பலன். பெண் உரிமைக்கு போராடிய போராளித் தலைவன்.


கள் எதிர்ப்பு போராட்டத்தில் தலைமையேற்க, தன் சொந்த தோப்பில் இருந்த தென்னை மரங்களை வெட்டி சாய்த்த தீரன்.

செல்வாக்கான, செல்வமிடுக்கான குடும்பத்தில் பிறந்து விட்டு, அவற்றை எல்லாம் துறந்து விட்டு, சிறு வயதில் வகித்த அரசியல் பதவிகளை தூக்கி எறிந்து விட்டு, பொது வாழ்வில் ஈடுபட்டு, அவமானங்களை தாங்கிக் கொண்டு கடைசி வரை உழைத்த தலைவன்.

இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக அனுபவிக்கிற சிலவற்றை ஓராண்டுக்கு முன்பாக சொல்லி இருந்தால் நம்பியிருக்க மாட்டோம். ஆனால் எழுபது, எண்பது ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் சொன்ன சிலவற்றை நினைத்தால் பிரமிப்பு தான்.

"தொலைவில் இருப்போரிடம் பேசுவதற்கான கருவி பையில் வைத்துக் கொள்ளக் கூடிய அளவிற்கு வந்துவிடும். ஆணும், பெண்ணும் கூடாமலே குழந்தை பெற்று கொள்ளும் அளவு விஞ்ஞானம் வளரும்". இது அன்றே பெரியார் சொன்னது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தோர் சமூகத்தில் சமய நிலைக்கு வர வேண்டும் என உழைத்து, சமூகநீதி கொள்கை வலுப்பெற அடித்தளம் அமைத்தவர்.


அவர் நினைத்திருந்தால் குடும்ப சொத்தை அனுபவித்துக் கொண்டு, ஈரோட்டில் அத்தனை பதவிகளிலும் கோலோச்சி சொகுசாக வாழ்ந்திருக்கலாம். அடுத்தவர் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகாமல் வாழ்ந்திருக்கலாம். ஆனால் நாம் தான் வாழ்ந்திருக்க முடியாது, வீழ்ந்திருப்போம்.

# அவர் என் தாத்தா தான், நம் இனத்தின் தாத்தா தான் !

Tuesday, 11 August 2020

AFTER 2 YEARS OF DEATH , THE PERSON BECAME FATHER IN INDIA BY TECHNOLOGY



AFTER 2 YEARS OF DEATH , THE PERSON BECAME FATHER IN INDIA BY TECHNOLOGY


இதுவரை கேள்விப்பட்டிராத புதுமையான நிகழ்வாக, புனேவை சேர்ந்த 48 வயது ஆசிரியை தனது மகன் இறந்தபிறகும் மனம் தளராமல் அவரது உயிரணுக்களை கொண்டு இரட்டை குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெறச் செய்திருக்கிறார்.
மகன் இறந்த இரண்டு ஆண்டுகளுக்கு
பிறகு பாட்டியாகியிருக்கும் ராஜஸ்ரீ படீல்

ராஜஸ்ரீ படேல் என்ற அந்த பெண்மணி திருமணமாகாத தனது மகனின் விந்தணுக்களை, 35 வயது கொண்ட ஒரு வாடகைத் தாயின் உதவியுடன் பேத்தி, பேரன் என இரு குழந்தைகளை பெற்றெடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.

ராஜஸ்ரீயின் மகன் பிரத்மேஷ் புனேயில் சின்ஹாட் பொறியியல் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்தார். படிப்பில் சூட்டிப்பான பிரத்மேஷ் முதுகலை பட்டப் படிப்புக்காக 2010ஆம் ஆண்டு ஜெர்மனி சென்றார்.

பிரத்மேஷுக்கு மூளையில் கட்டி இருப்பது 2013ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. நோய் முற்றிய நிலைய்ல் இருந்ததால் சிகிச்சைகள் பலனளிக்காமல் 2016இல் பிரத்மேஷ் இறந்தார். அவரது விந்தணுக்கள் பாதுகாப்பாக பதப்படுத்தப்பட்டிருந்தது.
தனது மகனின் அன்பை விரும்பிய தாய், அவருடைய உறைய வைக்கப்பட்ட விந்தணுக்களில் இருந்து அவரின் மறைவுக்கு பிறகு மகனை தந்தையாக்கினார். அதுவும் ஒன்றல்ல இரண்டு குழந்தைகள்.

ராஜஸ்ரீ படீலுடன் பிபிசி நிருபர் உரையாடினார். அப்போது பேரிய ராஜஸ்ரீ, 'இழந்த என் மகன் பிரத்மேஷ் திரும்பிவிட்டான், ஒன்றுக்கு இரண்டாக. என் மகனின் மீது உயிராக இருந்தேன். அவன் மிகவும் புத்திசாலி. அவனுக்கு மூளையில் கட்டி இருப்பதாக தெரிந்தபோது ஜெர்மனியில் பொறியியல் முதுகலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தான்' என்று சொல்கிறார்.
பிரத்மேஷ் படீல்

நோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டதால் பிழைக்க வைப்பது கடினம் என்று கூறிய மருத்துவர்கள், அவனுக்கு கீமோதெரபி மற்றும் பிற சிகிச்சைகளை தொடங்குவதற்கு முன்பே விந்தணுக்களை பாதுகாத்து வைக்குமாறு அறிவுறுத்தினார்கள்' என்று அவர் மேலும் சொன்னார்.

தனது மரணத்திற்கு பிறகு விந்தணுக்களை பயன்படுத்தும் உரிமையை தாய்க்கும், சகோதரி த்யானஸ்ரீக்கும் கொடுத்தார் திருமணமாகாத பிரத்மேஷ். மகனை பற்றிய கவலையில் இருந்த ராஜஸ்ரீக்கு அப்போது இதன் முக்கியத்துவம் தெரியவில்லை.

தனது மகனை மீட்டுக் கொடுக்கும் வழி இது என்று தெரிந்துக் கொண்ட அவர், தனது மகனின் வாரிசை பெற விரும்பினார்.
பிரத்மேஷ் மற்றும் ப்ரீஷா

குடும்பத்தை சேராத பெயரறியா நன்கொடையாளரிடம் இருந்து கருமுட்டை பெறப்பட்டு, உறைநிலையில் பாதுகாக்கப்பட்ட பிரத்மேஷின் விந்தணு சேர்த்து செயற்கை கருத்தரித்தல் முறையில் கரு உருவாக்கப்பட்டது. பிறகு குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் கருவில் வைக்கப்பட்டது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது 27 வயது மகன் பிரத்மேஷ் இறந்தபோது துக்கம் அனுஷ்டிக்க மறுத்த ராஜஸ்ரீ, வாடகைத் தாய் மூலம் தனது மகனை உயிர்பிக்கமுடியும் என்று உறுதியுடன் நம்பினார்.தனது விடமுயற்சியினால், பிப்ரவரி 12ஆம் தேதியன்று தனது மகனின் இரண்டு குழந்தைகளுக்கு பாட்டியானார் 48 வயது ராஜஸ்ரீ. ஆண் குழந்தைக்கு ப்ரத்மேஷ் என்ற தனது மகனின் பெயரையும், கடவுளின் கொடை என்ற பொருள் கொண்ட 'ப்ரீஷா' என்ற பெயரை பெண் குழந்தைக்கும் வைத்திருக்கிறார் ராஜஸ்ரீ.

தொழில்நுட்பத்தின் மூலம் தனது மகனின் வாரிசுகளை தன்னிடம் கொண்டுவந்திருக்கிறார் ராஜஸ்ரீ. விந்தணுக்களை ஜெர்மனியின் விந்து வங்கியில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடைமுறைகளை பூர்த்தி செய்தார் அவர். அதே நேரத்தில் செயற்கை கருத்தரித்தல் (IVF) நடைமுறைகளுக்காக புனேயில் இருக்கும் சஹ்யாத்ரி மருத்துவமனையை அணுகினார் ராஜஸ்ரீ.
மருத்துவர் சுப்ரியா புரானிக்


சஹ்யாத்ரி மருத்துவமனையின் IVF வல்லுநர் மருத்துவர் சுப்ரியா புரானிக் இது ஒரு வித்தியாசமான அனுபவம் என்று கூறுகிறார். IVF நடைமுறைகள் வழக்கமானதாகவே இருந்தாலும், ஒரு தாய் தனது மகனை எப்படியாவது திரும்ப பெற விரும்பி, அதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டது ஆச்சரியமானது என்று அவர் சொன்னார்.

"கர்ப்ப காலம் முழுமையிலும் அவர் அது பற்றி மிகவும் நேர்மறையான எண்ணங்களையே கொண்டிருந்தார்" என்று சுப்ரியா புரானிக் தெரிவித்தார்.