Showing posts with label KASI. Show all posts
Showing posts with label KASI. Show all posts

Friday, 5 June 2020

MARUTHA KASI ,LYRICS WRITER ,A LEGEND 1920 FEBRUARY 13 -1989 NOVEMBER 29



MARUTHA KASI ,LYRICS WRITER  ,A LEGEND 1920 FEBRUARY 13 -1989 NOVEMBER 29




‘உடுமலை நாராயண கவியைப்போல் பாடல் எழுத இன்னொருவர் பிறக்க வேண்டும்’ என்று இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன் சொன்னபோது, ‘அவரை விட சிறந்த நூற்றுக்கணக் கானவர்களை உருவாக்குவேன் என்று கண்ணதாசன் குரல் கொடுத்தபோது, பலரும் ஏளனமாக சிரித்தார்கள்.  அப்போது அப்படிச் சிரித்தவர்களில் எம்.எஸ்.விஸ்வநாதனும் ஒருவர்.  

அந்த அளவுக்கு அப்போது புகழ் உச்சியில் இருந்த உடுமலை நாராயணகவி, தனது திரைப்பாடல் வாரிசாக மருதகாசியை கருதி, அவர் மேல் அன்பு வைத்திருந்தார்.  மருதகாசியும் உடுமலை நாராயணகவியை தனது குருவாக பாவித்தார். உடுமலையை அன்று சி.ஆர்.சுப்பராமன் புகழ்ந்தது போலவே, இன்று, ‘உலகத்திலேயே கண்ணதாசன் தான் சிறந்த கவிஞன்’என்று இசையமைப்பாளர் இளையராஜா புகழ்கிறார்.   அவரே, கேட்டமாத்திரத்தில் உடனே மெட்டுக்கு பாட்டு எழுதுவதில் வல்லர் கண்ணதாசன் என்றும் புகழ்ந்து வருகிறார்.  ஆனால்,  ஆரம்ப காலங்களில் மெட்டுக்கு பாட்டு எழுதுவது கண்ண தாசனுக்கும் சிரமமானதாகவே இருந்திருக்கிறது.  மெட்டுக்கு பாட்டு என்பதில் அவருக்கு உடன்பாடும் இல்லாமல் இருந்திருக்கிறது.  மெட்டுச்சிறையில் போட்டு மடக்கி, பாடலாசிரியனின் கற்பனையை கொன்று விடுகிறார்கள்’ என்பது கண்ணதாசனின் எண்ணம். ஆனால், மெட்டுக்கு பாட்டு எழுதுவதில்தான் மருதகாசிக்கு மகிழ்ச்சி.  



’வஹினிஞ்சிய பாங்டியா’ என்ற மராத்திய படத்தை தழுவி எடுக்கப்பட்ட தமிழ்ப்படம்‘மங்கையர் திலகம்’.  அதில் ஒரு தாலாட்டுப்பாடல். மாராட்டியப்பாடலின் மெட்டிலேயே தமிழில் எழுத முதலில் கண்ணதாசனை அழைத்தார் இயக்குநர் எல்.வி.பிரசாத்.  அந்த மெட்டுக்கு கண்ணதாசன் எழுதிய பாடலில் பிரசாத்துக்கு திருப்தி இல்லை.  அதன் பின்னர் மருதகாசியை அழைத்தார்.  ‘நீல வண்ண கண்ணா வாடா நீயொரு முத்தம் தாடா’ என்று அவர் எழுதியது,  மூலப்பாடலை விடவும் இது நன்றாக இருக்கிறது என்று பேசப்பட்டது.  இதையடுத்து 1950ல் மந்திரிகுமாரி படத்தில் ‘வாராய் நீ வாராய்’ பாடலை எழுதியதும் மருதகாசிக்கு ஏறுமுகம்தான்.  தஞ்சை ராமையாதாஸ், உடுமலை நாராயணகவி கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் தன் கொடியை பறக்கவிட்டார் மருதகாசி.  

மெட்டுக்கு பாட்டு எழுதுவது என்பது உடுமலை நாராயணகவிக்கு எட்டிக்காயாக இருந்தது.   இந்தி மெட்டுக்கும், வங்காள மெட்டுக்கும் பாடல் எழுதுவதை,  ‘தோசைக்கல்லுக்கு எழுதும் பாடல்’ என்று எரிச்சல் பட்டிருக்கிறார்.   கிராமபோன் ரிக்கார்டுகள் தோசைக்கல்லைப்போல் கறுப்பாகவும், வட்டமாகவும் இருந்ததால், அதில் வரும் மெட்டுக்கு ஏற்றார் போல் பாட்டு எழுத வேண்டியது இருந்ததால் அவ்வாறு குறிப்பிடுவார்.

பிறமொழி மெட்டுக்களுக்கு பாட்டு எழுதும் வாய்ப்பு தனக்கு வந்தபோதெல்லாம் அதை மருதகாசிக்கு அனுப்பிவிடுவார் உடுமலை. அப்படித்தான் தனக்கு வந்த ’அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ பட வாய்ப்பை மருதகாசிக்கு கொடுத்தார் உடுமலை.  ’தேகோஜி சாந்த் நிக்லா பிசே கஜூர் கே’எனும் பாடல் மெட்டுக்கு, அதை தமிழில் மொழி பெயர்த்தால் ‘பாருங்கள் நிலா வந்தது பேரீச்சம் மரத்தின் பின்னே’ என்று வரும்.  ஆனால், மருதகாசியோ,  ‘அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்’’என்று அட்டகாசமாக எழுதினார். அதே போல, ‘படீ ஹீயி கிஸ்மத்கா சாதர் ஸியேஜா ஸியேஜா’ எனும் பாடலை தமிழில் அப்படியே மொழிபெயர்த்தால் ‘கிழிந்து போன விதியெனும் துகிலை தையடா தையடா’ என்று வரும்.  ஆனால் மருதகாசியோ, ‘உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா’ என்று எழுதி அப்பாடலை பெரும் ஹிட் ஆக்கினார்.




கண்ணதாசன் வசனகர்த்தாவாக தனது பாதையை மாற்றிக்கொண்டு வலம் வந்துகொண்டிருந்த காலத்தில் திரையுலகில் முதன்மைக்கவிஞராக கொடிகட்டிப்பறந்தார் மருதகாசி.  பின்னர், கண்ணாதாசன் கொடிகட்டி பறந்த காலத்தில் மருதகாசிக்கு வாய்ப்புகள் குறைந்தன.  இந்த நிலையில், சொந்தப்படம் எடுத்த சோகக்கதை வேறு. நான்காயிரத்திற்கும்  மேற்பட்ட பாடல்கள் எழுதி சம்பாதித்த பணத்தை, ஒரே ஒரு சொந்தப் படத்தைத் தயாரித்து இழந்து  கடனாளி ஆனார். 



மருதகாசி, கே.வி.மகாதேவன், வி.கே.ராமசாமியின் தம்பி முத்துராமலிங்கம், வயலின் மகாதேவன் ஆகிய 4 பேரையும் பங்குதாரர்களாகக் கொண்ட எம்.எம்.புரொடக்ஷன்ஸ் படக்கம்பெனி  சார்பில் ’’அல்லி பெற்ற பிள்ளை’’ என்ற படம் தயாரிக்கப்பட்டது.  31-7-1959-ல் வெளிவந்த இப்படம்  தோல்வியைத் தழுவியது.   இதுகுறித்து மருதகாசியின் தம்பி அ.முத்தையன், ’’என் அண்ணன் ஒரே ஒரு படம் எடுத்தார். குசேலர் ஆனார்’’என்று கூறியுள்ளார்.



பட வாய்ப்புகள் குறைந்து, அல்லி பெற்ற பிள்ளையால் நஷ்டமடைந்து சொந்த ஊருக்கே சென்று விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தார் மருதகாசி.  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலக்குடிக்காடு கிராமத்தில் விவசாய குடும்பத்தில் 13.2.1920ல் பிறந்த மருதகாசியும் விவசாயம் பார்த்து வந்தவர்தான்.  அதன் பின்னர்தான் பாட்டெழுத வந்தார்.   20வயதில் 1940ல் திருமணம் செய்துகொண்டார்.  மருதகாசி - தனக்கோடி அம்மாளுக்கு 6 மகன்கள், 3 மகள்.



மருதகாசியின் தாத்தா பெரும் பண்ணையார்.  அந்த ஊருக்கு நாடகம் நடத்த எம்.ஆர்.ராதா, பாலையா என்று வரும் நாடகக்குழுக்கள் தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் ஏற்பாடு செய்வார் மருதகாசியின் தாத்தா.  அப்படி வந்த பழக்கத்தில்தான் நாடகங்களுக்கு சென்று அதன் மூலமாக சினிமாவுக்கு பாட்டெழுத வந்தார்.   நாடக குழுக்களில் திருச்சி லோகநாதன் இசைமெட்டுக்களுக்கு பாடல் எழுதி வந்தார் மருதகாசி.  1949ல் சேலம் மாடர்ன் தியேட்டர் டி.ஆர்.சுந்தரம், டி.ஆர்.மகாலிங்கத்தை வைத்து, ‘மாயாவதி’என்ற படத்தை எடுத்தபோது, நாடகப்புகழ் கவிஞராக இருந்த மருதகாசியின் பெருமையை திருச்சி லோகநாதன், சுந்தரத்திடம் எடுத்துச்சொல்ல, அப்படத்தின் மூலம் பாடலாசியர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது மருதகாசிக்கு.



பல ஏக்கரில் விவசாயம் செய்ததால் மருதகாசியுடன் 400 பேர் வேலை பார்த்தார்கள். கும்பகோணம் அரசுக்கல்லூரியில் உயர்கல்வி படைத்தாலும் வேலையாட்களுடன் சேர்ந்து மருதகாசியும் ஏர் ஓட்டுவார்.  போர் அடிப்பார். விவசாய குடும்பத்தில் பிறந்து, தானும் ஒரு விவசாயியாக இருந்ததால்தான் அவர் பாடல்களில் தமிழ் மண்ணின் கலாச்சாரத்தையும், விவசாயிகள் நிலையையும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்தார். 

’தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு, தன்
குறையை மறந்து மேலே பார்க்குது பதரு, அதுபோல்
அறிவு உள்ளது அடங்கிக் கிடக்குது வீட்டிலே, எதுக்கும்
ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது நாட்டிலே -அதாலே
மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே’ என்ற மருதகாசியின் வரிகள் எக்காலத்திற்கும் ஏற்றதாக இருக்கிறது.  

’மழை சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு அங்கே..’ என்ற பாடலில், 

‘கஷ்டப்பட்டு ஏழை சிந்தும் நெத்தி வேர்வைபோலே, அவன்
கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப்போலே,
முட்டாப் பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே
துட்டுப் படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தைபோலே
மழை சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு அங்கே’என்று காதல் டூயட்டில் கூட பாமரர்களின் நிலையை பதிவு செய்திருப்பார்.

’கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி’, மணப்பாறை ஏரு பூட்டி’, ‘மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா’, ’ஏர் முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லை’ என்று எடுத்துக்காட்டாக நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.சொந்த ஊருக்கு போய் விவசாயம் பார்த்துக்கொண்டிருந்த மருதகாசியை, மீண்டும் திரையுலகிற்கு அழைத்து வந்து, தனது படங்களில் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து பாட்டெழுத வைத்தார் எம்.ஜி.ஆர்.  நான்காயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி, ’திரைக்கவித் திலகம்’ என்று போற்றப்பட்ட மருதகாசியின் திரையிசை பாடல்கள் அனைத்தும் கடந்த 2007ம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டது.

பொதுவாகவே இசை ரசிகர்களிடம் ஒரு குழப்பம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.  யார் இசையமைத்தது என்று சரியாக தெரியாமல் தாங்களாகவே ஒரு அனுமானத்தில் இவர் இசையமைத்ததுதான் என்ற எண்ண ஓட்டத்திலேயே அந்த பாடலை ரசித்துக்கொண்டிருப்பார்கள். சி.ஆர்.சுப்பராமன் இசையை கே.வி.மகாதேவன் இசை என்றும், கே.வி.எம் இசையை எம்.எஸ்.வி இசை என்றும்,  எம்.எஸ்.வி. இசையை இளையராஜா இசை என்றும், சங்கர்கணேஷ், சந்திரபோஸ் இசையை இளையராஜா இசை என்றும் நினைத்துக்கொள்வதுண்டு.  ஒரு கட்டத்தில் விவரம் தெரியவரும் போதுதான், ‘அடடே!’ என்று வியந்துபோவார்கள்.இசையமைப்பாளர்களுக்கு மட்டுமல்ல, எஸ்.பி.பி. -மனோ, இயேசுதாஸ்-ஜெயச்சந்திரன் போன்ற பாடகர்களின் நிலைமையும் இதேதான்.  மனோ பாடல்களை எஸ்.பி.பி. பாடியது என்றும், ஜெயச்சந்திரன் பாடியதை இயேசுதாஸ் பாடியது என்றும் நினைத்துக்கொள்வதுண்டு.  குரல் வளம் கொஞ்சம் ஒரே ஒத்துப்போவதால் இவர்களைப்போலவே இன்னும் நிறைய பாடகர்களுக்கும் இதே நிலைமைதான்.  



அப்படித்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி எழுதிய பாடல்கள் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கும் பல பாடல்களை எழுதியவர் அ.மருதகாசி.  மருதகாசி எழுதிய சில பாடல்களைச்சொன்னால் உங்களுக்கே இது புரியும்.


’காவியமா? நெஞ்சின் ஓவியமா?’
’மாசில்லா உண்மைக் காதலே’
‘வசந்த முல்லை போலே வந்து’
’முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல’
‘அழகான பொண்ணுநான் அதுக்கேத்த கண்ணுதான்’
‘வாராய் நீ வாராய்’
‘ஆடாத மனமும் உண்டோ’
’நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே’
‘தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்’
‘உலவும் தென்றல் காற்றினிலே’
‘சித்தாடை கட்டிகிட்டு’
’மாட்டுக்கார வேலா உன் மாட்டைக் கொஞ்சம் பார்த்துக்கடா’
‘தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்’
‘என்னை விட்டு ஓடிப் போக முடியுமா’
‘கோடி கோடி இன்பம் பெறவே’
‘மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏருபூட்டி’
’கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி’
‘சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா’
’சத்தியமே லட்சியமாய் கொள்ளடா’
’கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்’
‘இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள’
‘ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்’









.

Tuesday, 31 July 2018

WILL AURANGAZEEB ,DEMOLISH KASI VISVANATHAR TEMPLE ?









WILL AURANGAZEEB ,DEMOLISH 
KASI VISVANATHAR TEMPLE ?



ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா?

வெங்கட் நாகராஜ் தனது காசி பயண அனுபவத்தை பற்றி எழுதிய இடுகையை பார்த்தேன். மிக சாதுர்யமாக தனது பாசிச கருத்துக்களை மென்மையாக சொல்லி நஞ்சை எப்படி விதைக்கிறார் என்று பாருங்கள்.

//கி.பி. 490 ஆம் வருடம் காசி விஸ்வநாதர் ஆலயம் கட்டப்பட்டது. பதினோறாம் நூற்றாண்டில் மீண்டும் ஹரிச்சந்திர மஹாராஜா ஒரு கோவிலைக் கட்டியிருக்கிறார். 1194 ஆம் அண்டு முகம்மது கோரி நடத்திய படையெடுப்பின் போது இந்தக் கோவிலையும், வாரணாசியில் இருந்த மற்ற கோவில்களையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிடவே, இது மீண்டும் கட்டப்பட்டிருக்கிறது.

பிறகு வந்த குத்புதின் ஐபக்கால் மீண்டும் இடிக்கப்பட்டு, அவரது மறைவிற்குப் பின் பல அரசர்களால் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. 1351-ம் ஆண்டு ஃபீருஸ் ஷா துக்ளக் என்பவரால் மீண்டும் இடிக்கப்பட மறுபடியும் நிர்மாணிப்பதில் நீண்ட இடைவெளி. அக்பரின் ஆட்சியில் வருமானத் துறை மந்திரியாக இருந்த தோடர் மால், 1585-ம் வருடம் மீண்டும் ஒரு கோவிலைக் கட்டியிருக்கிறார்.

1669-ஆம் வருடம் அரசாட்சி புரிந்த ஔரங்கசீப் காசி விஸ்வநாதர் கோவிலை முற்றிலும் இடிக்க ஆணையிடுகிறார். கோவில் தரைமட்டமாக்கப்பட்டு அவ்விடத்தில் கியான்வாபி மாஸ்க் என்ற மசூதி கட்டப்படுகிறது. கோவிலின் முக்கிய பூஜாரியாக இருந்தவர் சிவலிங்கத்தோடு கோவிலின் பின்பக்கம் இருந்த ஞானவாபி கிணற்றுக்குள் குதித்து விடுகிறார். இப்போதும் இந்தக் கிணறு காசி விஸ்வநாதர் கோவிலில் இருக்கிறது. எப்போதும் சிவன் கோவில்களில் சிவலிங்கத்திற்கு எதிரே அவரது வாகனமான ரிஷப வாகனம் இருக்கும். தற்போதைய மசூதியை நோக்கி அக்காலத்தில் இருந்த ரிஷப வாகனம் இருக்கிறது. //

எந்த அளவு அவதூறுகளை பரப்ப முடியுமோ அந்த அளவு திட்டம் போட்டு சிலர் பரப்பி வருகின்றனர். ஒரு இடத்தை சுற்றிப் பார்ப்பவர் அதன் அழகை சொல்லி விட்டு அல்லது அங்குள்ள மக்களை சொல்லி விட்டுதான் செல்வார்கள். அதை விடுத்து சர்ச்சைக்குரிய அதன் இடிப்பை வலிந்து திணித்து வெறுப்பை நாசூக்காக விதைக்கிறார். முதலில் கோவில் என்பது வழிபாட்டு தலம் மட்டும் அல்ல. அந்நாட்டின் பொன்னையும் விலையுயர்ந்த சொத்துக்களையும் பாதுகாத்து வைக்கும் பெட்டகமாக இருந்தது. எனவே வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் முதலில் கண் வைப்பது நம் நாட்டு கோயில்களைத்தான். பல இந்து மன்னர்கள் கோவிலை கொள்ளையடித்துள்ளார்கள். சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாறுகளே இதற்கு சாட்சி! ஆனால் அவற்றை எல்லாம் எழுத மாட்டார்கள்.

இந்த பதிவை எழுதியவர் முகலாயர்களுக்கு எந்த வேலையும் இல்லாமல் ஒவ்வொரு முறையும் இடிப்பதும் பிறகு கட்டுவதுமாக விஸவநாதர் ஆலயத்தின் வரலாற்றை எழுதுகிறார். இடித்தது மொகலாயர் ஆட்சி. அதே ஆட்சியில் அந்த கோவில் எப்படி திரும்பவும் கட்டப்பட்டது? அதை எப்படி அரசு அனுமதிக்கும்? நம் காலத்தில் இடிக்கப்பட்ட பாபரி மசூதியை இன்று வரை கட்ட முடிகிறதா? அறிவியல் வளர்ந்த காலத்திலேயே நிலைமை இப்படி இருக்க 1000 வருடங்களுக்கு முந்தய நிலையை சொல்ல தேவையில்லை. இதுதான் யதார்த்தம்.

பொதுவாக அரசர்கள் பெரும்பான்மை மக்களை அனுசரித்து செல்லவே ஆசைப்படுவர். ஏனெனில் அவர்களுக்கு சிக்கலின்றி ஆட்சி செலுத்த வேண்டும். ராமர் கோவில் கட்டுவோம் என்று சூளுரைக்கும் பிஜேபி தான் ஆட்சியில் அமர்ந்தால் அதை திரும்பி கூட பார்க்காது. இவ்வளவுதான் இவர்களின் மதப்பற்று. ஏனெனில் அவர்களின் ஆட்சி அமைதியாக செல்ல வேண்டும். காசி விசுவநாதர் கோவிலைப் பற்றி பல்கலைக்கழக பேராசிரியர் எழுதிய ஒரு கட்டுரையை முன்பு சேமித்து வைத்திருந்தேன். அதனை தற்போது அப்படியே தருகிறேன். ஒளரங்கசீப்பின் ஆட்சியும் காசி விசுவநாதர் கோவிலின் இடிப்பின் வரலாற்றையும் சற்று நோக்குவோம்.

------------------------------------------------------------------------
--

அரசர்கள் பிற மதத்தினரை துன்புறுத்துவதும், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் வரலாற்று உண்மை. ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து சுட்டான். இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை வீழ்த்தினர். இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஒரு போது ஜைனத் திருத்தலங்களாகவும், புத்த விகாரங்களாகவும் இருந்தவையே. இந்து மன்னர்களில் சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங்களையும், வைஷ்ணவப் பிரிவினர் சைவத் திருத்தலங்களையும் தாக்கியதுண்டு, தகர்த்ததுண்டு. வைஷ்ணவர்களைக் கொன்று குவித்து, சிதம்பரத்தில் உள்ள கோவிந்தராஜர் சிலையை கடலில் எரிந்ததால்தான் சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் 'கிருமி கண்ட சோழன்' என்றழைக்கப்பட்டான் என்பது வரலாறு.

இது இங்ஙனமிருக்க ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர முஸ்லிம், அவர் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பது மட்டும் பிரபலப்படுத்தப்படுகிறது. உண்மையில் ஒளரங்கசீப் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார் என்பதும், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

ஒளரங்கசீப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள். அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் லி ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள்.

இதைத்தவிர அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள்.


அக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் இருந்ததில்லை. ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்?

இதுமட்டுமல்ல. ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். 
உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் 
சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், 
சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், 
வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில.

தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஒளரங்கசீப் உதவினார். ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி வந்தனர். வைணவம் வளர்ந்தது. ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடைப்படுத்தவில்லை.

ஒளரங்கசீப் ஒரு வைதீக முஸ்லிம். இதனால் உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு என்னும் கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர். இதனால் மத மாற்றத்தை இவர் ஊக்குவிக்கவில்லை. சத்திரபதி சிவாஜியின் பேரன், சாம்பாசியின் மகன் ஷாகு, இவருடைய மாளிகையில் தன் ஏழாம் வயது முதல் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வளர்ந்தார்.

ஒளரங்கசீப்பின் புதல்வி ஜுனைத்துன்னிசாவினால் வளக்கப்பட்டார். சிவாஜி, சாம்பாஜி, இராஜாராம் என அனைவரும் மறைந்து விட்ட நிலையில், ஒளரங்கசீப்பின் அவையிலும், முகலாயர்களின் சுற்றுச் சார்புகளிலும் சுமார் 25 ஆண்டுகள் வளர்க்கப்பட்டும், ஷாகு இந்து மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்கப்பட்டதிலிருந்து, ஒளரங்கசீப்பின் தாராள மனப்பான்மை தெளிவாகப் புரியும்.

அதேபோல் இராஜபுத்திர இராணி ஹாதி, 'ஜோத்பூரை தனது வாரிசுக்கு உரிமையாக்கினாள். அங்குள்ள இந்து ஆலயங்களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை நிர்மாணிக்கிறேன் என்று சொன்னபோது அதனை ஏற்றுக் கொள்ளாதவர் ஒளரங்கசீப்.

விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ரங்கராயலு தானும் தனது உற்றார் உறவினர்களும், குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாக அறிவித்த போதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர்.

ஒளரங்கசீப் குறித்து வரலாற்று மாமேதை ஜாதுநாத் சர்கார் குறிப்பிட்டுள்ளதை உற்றுநோக்கினால் ஒளரங்கசீப்பின் மதசகிப்புத்தன்மை புரியும்.

தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஒளரங்கசீப் கவனமாக இருந்தார்.

''பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்கு ட்படுத்தக்கூடாது'' என்பது குறித்து இவரின் பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது. பேராசிரியர் கே.கே.தத்தா வின் Islam and Indian Culture(1578 - 1802) என்றும் நூல் ஒளரங்கசீப் இந்துக்களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம் வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச ஆணைகளையும் பட்டியலிடுகிறது.


''ஒளரங்கசீப்பின் ஆட்சியின்போது பாரசீகர்கள், கிருத்தவர்கள், இந்துக்கள் ஆகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது'' என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஒளரங்கசீப்பின் தாராளத்தன்மை யையும் மத சகிப்புத்தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.

பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதி யளித்தார்.

தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இளவரசி மட்டும் திரும்பவே இல்லை. இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்ப ட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.

நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர். மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது.

இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture) என்னும் நூலில் தரப்பட்டுள்ளது.

அதிர்ச்சி அடைந்த இந்து மன்னர்கள் இக்குற்றச் செயலு க்குக் காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனக் கோரினர். கற்பக்கிருகத்தின் நேர் கீழே இது நடந்ததால் கோவிலின் புனிதம் கெட்டு விட்டதா கவும் கருதப்பட்டது. அதனால் விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்படவும், அந்தக் கோவில் இடிக்கப்படவும், குற்றவாளியான கோவில் பூசாரி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவும் ஔரங்கசீப் உத்தரவு பிறப்பித்தார்.

டாக்டர் பட்டாபி சீதாராமையா, டாக்டர் பி.எல்.குப்தா ஆகியோர் இச்சம்பவத்தை ஆதாரங்களுடன் தங்கள் புத்தகங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.

ஆனால் வரலாற்றுப் புத்தகங்களில், கோவில் இடிக்கப்படக் காரணமான சம்பவங்கள் மறைக்கப்பட்டு, அநீதி இழைக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்த ஔரங்கசீப் குற்றவாளியாகச் சித்தரிக்கப் பட்டிருக்கி றார்.

இந்திய வரலாறு எந்த அளவிற்கு பாரபட்சமான முறையில் திரிக்கப்பட்டு சாயமேற்றப்பட்டு உருமாறிக் கிடக்கிறது என்பதற்கு இச்சம்பவங்கள் மிகச்சிறிய உதாரணங்கள்.

மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மை வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற வரலாறு வேறு. நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா?

ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். இல்லையேல் விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்.