Showing posts with label இந்திய. Show all posts
Showing posts with label இந்திய. Show all posts

Sunday, 24 May 2020

Constitution of India. இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்





Constitution of India.
இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்
.
இந்தியாவின் அடிப்படை உரிமைகள் என்பது இந்திய அரசியல் சாசனம் தனது மூன்றாவது பகுதியில் வழங்கியுள்ள உரிமைகளுக்கான சாசனம்' ஆகும். இந்தப் பகுதி இந்திய நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் அமைதியான முறையிலும் இணக்கத்துடனும் வாழ்வை மேற்கொள்ள தேவையான குடிமையியல் சுதந்திரங்களை இந்தியர்களுக்கு வழங்குகிறது. 





அமெரிக்காவின் உரிமைகள் சட்டவரைவை (Bill of Rights) மூலமாக கொண்டது. இந்திய அரசியலமைப்பின் சட்டவிதி 12 முதல் 35 வரை ஆறுவகை உரிமைகள் குறித்து விவரிக்கும் அரசியலமைப்பின் மூன்றாவது பகுதி, உரிமைகளுக்கான, இந்தியாவின் மேக்னா கார்ட்டா என அழைக்கப்படுகிறது. 

ஒரு இந்திய குடிமகனின் சமூக உரிமை (சம உரிமை), பேச்சுரிமை (பேச்சு சுதந்திரம்), வெளிபடுத்தும் உரிமை (எழுத்துரிமை), கூடிவாழும் உரிமை மற்றும் அமைதி வழிபாட்டு உரிமை, சுதந்திர சமய உரிமை, சமூக நீதிக் கோரும் உரிமை போன்ற உரிமைகள் இன்றியமையாத உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளன. 

இந்த உரிமைகள் மறுக்கப்படுவதோ அல்லது மீறப்படுவதோ குற்றமுறு செயல்களாக இந்திய தண்டணைச் சட்டக் (இ.த.ச) கூற்றில் வரையறுக்கப்பட்டுள்ளது.

தனக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அதை சுதந்திரமாக அனுபவிக்க கடமைபட்டவர்களாவர். இவ்வடிப்படை உரிமைகள் இனப்பாகுபாடின்றி (சாதி, நிறம், பாலினம்,மொழி), மொழி வேறுபாடின்றி, சாதி மாறுபாடின்றி, அனைத்துக் குடிமக்களும் அனுபவிக்க கடமைபட்டவர்களாவர். இவைகள் மறுக்கப்படும்போது நீதிமன்றங்கள் தலையிட்டு அவற்றை பெற்றுத்தர தயங்காது.

இந்த அடிப்படை உரிமைகள், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகளைச் சார்ந்து இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.டாக்டர் அம்பேத்கர் அடிப்படை உரிமையை, மனிதனின் இருதயமும் உயர்சக்தியும் ஆகும் என்று குறிப்பிடுகிறார். அடிப்படை உரிமையை, நெருக்கடி கால அறிவிப்பின் மூலம், குடியரசுத் தலைவர் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும்.




ஆறு அடிப்படை உரிமைகளாவன[1]

சம உரிமை
சுதந்திர உரிமை
சுரண்டலை எதிர்க்கும் உரிமை
சமய சார்பு உரிமை
கலாச்சாரம் மற்றும் கல்வி கற்கும் உரிமை
அரசியல் அமைப்பை சீர்மைப்படுத்தும் உரிமை
அடிப்படை உரிமைகள்

அடிப்படை உரிமைகள் தங்களுக்குள்ளேயே எவ்விதமான உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. பெரும்பாலும் இவை வெற்றுப் பாத்திரங்களாகவே உள்ளன. ஒவ்வொரு தலைமுறையினரும் தங்கள் வாழ்க்கை அனுபவத்தில்பெற்ற உன்னதமான அனுபவங்களை கொண்டு நிரப்பிக் கொள்ளலாம். கேசவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த விளக்கம்: அடிப்படை உரிமை என்ற அதன் பெயரிலிருந்தே அதன் முக்கியத்துவம் வெளிப்படுகிறது. இதற்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள உத்திரவாதமும் முக்கியத்துவம் நன்கு வெளிப்படுகிறது. மேலும் அரசியலமைப்பினால் உத்திரவாதமும் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இது நாட்டின் அடிப்படை சட்டமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு தனிமனிதனின் உடைமை, அறிவுசார் உரிமை, நீதி மற்றும் ஆன்மிக மேம்பாடு போன்ற அனைத்திற்கும் மிக அத்தியாவசியமாக அடிப்படை உரிமைகள் உணரப்படுகிறது. • 


அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் பகுதி –III ல் சரத்து 12 முதல் 35 வரை உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. • அரசியலமைப்பின் பகுதி –III இந்தியாவின் மகா சாசனம் (Magna carta of India) என அழைக்கப்படுகிறது. • 

இப்பகுதி மிக நீளமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய, நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறும் அடிப்படை உரிமைகள் கொண்டுள்ளது. • நமது அரசியலமைப்பின் அடிப்படை உரிமையானது உலகின் வேறு எந்த நாட்டின் அடிப்படை உரிமைகளை காட்டிலும் அதிக விரிவானது ஆகும். குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாட்டை காட்டிலும் விரிவானதாகும். • அரசியலமைப்பினால் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் அனைத்து நபர்களுக்கும் எவ்வித வேறுபாடும் காட்டுவதில்லை. • அனைத்து தனி நபர்களின் சமத்துவத்தையும், தனி மனிதனின் கௌரவத்தையும், பொதுமக்களின் நலன்களையும் மற்றும் தேசத்தின் ஒற்றுமையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. • அடிப்படை உரிமைகளின் நோக்கம் அரசியல் மக்களாட்சியை (Political Democracy) வளர்ப்பதாகும். உண்மையில் நமது அரசியலமைப்பில் ஏழு (7) அடிப்படை உரிமைகள் இருந்தன. 


1. சமத்துவ உரிமை ஷரத்து 14 முதல் 18 வரை 
2. சுதந்திர உரிமை ஷரத்து 19 முதல் 22 வரை 
3. சுரண்டலுக்கு எதிரான உரிமை சரத்து 23 முதல் 24 வரை 
4. சமய சுதந்திர உரிமை சரத்து 25 முதல் 28 வரை 
5. கலாச்சார மற்றும் கல்வி சரத்து 29 முதல் 30 வரை 
6. அரசியலமைப்பு வாயிலான தீர்வு சரத்து 32 (சரத்து 226 – உயர்நீதிமன்றம்) 
7. சொத்துரிமை (சரத்து 31 1978-ல் 44-வது அரசியலமைப்பு திருத்தம் வாயிலாக நீக்கப்பட்டது. இச்சரத்து தற்போது 300A-வாக உள்ளது. அடிப்படை உரிமைகளின் முக்கியத்துவம் • 


அடிப்படை உரிமைகள் பூர்ணத்துவமானடிவ அல்ல ஆனால் தகுதி வாய்ந்தவை. • அரசானது இவற்றின் மீது போதுமான கட்டுப்பாடுகளை விதிக்க முடியும். • இவை பெரும்பாலும் அரசின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு எதிராக உள்ளன. • நீதிமன்றங்களை அணுகி தீர்வு பெற முடியும். • உச்ச நீதிமன்றம் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் உத்தரவாதமும் வழங்குகின்றது. மேலும் பாதிக்கப்பட்ட நபர் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெற முடியும். • இவைபுனிதமானவையோ அல்லது நிரந்தரமானவையோ அன்று. 

பாராளுமன்றம் இவற்றை குறைக்கவோ அல்லது நீக்கவோ முடியும். • தேசிய நெருக்கடி நிலை செயல்பாட்டில் இருக்கும் போது அடிப்படை உரிமைகளில் ஷரத்து 20 மற்றும் 21-ஐத் தவிர பிற அடிப்படை உரிமைகளை செயல்படாத வண்ணம் நிறுத்தி வைக்க முடியும். ஷரத்து 19-ஐ யுத்தம் அல்லது அந்நிய படையெடுப்பின் போது செயல்படாமல் தடுத்த நிறுத்த முடியும். 

அரசின் வரையறை (சரத்து 12) ஒருவரது அடிப்படை உரிமையை மீறியது அரசா, இல்லையா என்பதை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக சரத்து 12-ஆனது “அரசு”(ளுவயவந) என்பதில் எவையெல்லாம் அடக்கம் என்பதற்குண்டான வரையறையைக் கொடுக்கிறது. சரத்து 12-ன்படி,“அரசு” என்ற சொல்லில் பின்வருவன அடங்கும். • இந்திய அரசாங்கம் மற்றும் பாராளுமன்றம்; மற்றும் • ஒவ்வொரு மாநிலத்தினுடைய அரசாங்கம் மற்றும் சட்டமன்றம்; மற்றும் • இந்திய ஆட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து உள்ளுர் அதிகார அமைப்புகள் (Local Authorities) அல்லது பிற அதிகார அமைப்புகள் (Other Authorities); அல்லது • 



இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து உள்ளுர் அல்லது பிற அதிகார அமைப்புகள். அடிப்படை உரிமைகளுடன் முரண்படும் சட்டங்கள் (சரத்து 13) சரத்து 13ன் படி அடிப்படை உரிமைகளுக்கு முரண்படுமாறு அல்லது மீறுமாறு சட்டம் ஏதேனும் இயற்றப்பட்டால், அது இல்லாநிலையதாகும் மற்றும் செல்லாததாகும். •

 சரத்து 13(1) – அரசியலமைப்பு தொடங்குவதற்கு முன்பாக, இந்திய எல்லைக்குள் அமலில் உள்ள அனைத்து சட்டங்களும் (Law in force)இ அடிப்படை உரிமைகள் குறித்த வகைமுறைகளுடன் எந்த அளவிற்கு முரண்பட்டதாக உள்ளதோ அந்த அளவிற்கு இல்லா நிலையதாகும். • 

சரத்து 13(2) – குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாகவோ அல்லது மீறுவதாகவோ, அரசு எந்தச் சட்டத்தையும் (law) இயற்றக் கூடாது மற்றும் இந்நிபந்தனைக்கு முரணாக (in contravention) சட்டம் ஏதேனும் இயற்றப்பட்டால், அது அம்முரண்பாடு அளவிற்கு இல்லாநிலையதாக்கப்படும். 

1. சமத்துவ உரிமை (சரத்து 14 – 18) • 

சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் சமமான பாதுகாப்பு சரத்து – 
14. • சாதி, சமய, இன, பால், பிறப்பிட வேறுபாடுகளினால் பாரபட்சம் காட்டாமை சரத்து – 
15. • அரசு வேலைகளில் சமவாய்ப்பு ஷரத்து – 
16. • தீண்டாமை ஒழிப்பு மற்றும் இதன் செயல்பாட்டினை தடுத்தல் 

சரத்து  17. • இராணுவத்திலும் கல்வித் துறையிலும் சாதனை புரிவோருக்கு வழங்கப்படும் பட்டங்களைத் தவிர பிற பட்டங்கள் ஒழிப்பு 

சரத்து – 18. 2. சுதந்திர உரிமை : (ஷரத்து 19 – 22) • இந்திய அரசியலமைப்பு விதி 19 ஏழு (7) அடிப்படை உரிமைகளை குடிமக்களுக்கு உறுதி செய்கிறது. • 

குற்றங்களுக்குத் தண்டனையளிப்பது குறித்த பாதுகாப்பு, (ஷரத்து – 20) • உயிருக்கும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் பாதுகதப்பு (ஷரத்து – 21) • ஆரம்ப கல்வி கற்பதற்கான உரிமை – சரத்து 21A • 
கைது செய்யப்படுவதற்கும், காவலில் வைக்கப்படுவதற்கும் எதிராகப் பாதுகாப்பு – சரத்து 3.

 சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்பு (சரத்து 23 மற்றும் 24) • மனிதர்களை வியாபார பொருளாக கருதி விற்பது மற்றும் கட்டாய வேலை வாங்குவதை தடைசெய்தால் – 

ஷரத்து • 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தொழிற்சாலைகளிலோ, மற்றும் ஆபத்தான வேலைகளில் அமர்த்துவது தடைசெய்யப்பட்டுள்ளது – ஷரத்து 4. சமயச் சுதந்திர உரிமை (சரத்து 25 – 28) • 

மனசாட்சி படி செயல்படவும் சுதந்திரமாக வேலைகளில் ஈடுபடவும் மற்றும் விரும்பும் சமயத்தை பின்பற்றவும் மத பிரச்சாரம் செய்யவும் உரிமை – சரத்து • சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை – சரத்து • சமய வளர்ச்சிக்காக வரி செலுத்தாமல் இருக்க உரிமை – ஷரத்து • சமய போதனைகளுக்குச் செல்லாமலிருக்க உரிமை – சரத்து 5. கலாச்சார மற்றும் கல்வி உரிமை (சரத்து 29 – 30) • 


சிறுபான்னையினர் மொழி, எழுத்து வடிவம் மற்றும் கலாச்சாரங்களை பாதுகாக்கும் உரிமை. ஷரத்து • சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி நிர்வகிக்கும் உரிமை. ஷரத்து 6. அடிப்படை உரிமைகளுக்கான கட்டுப்பாடுகள் (சரத்து 31A, 31B மற்றும் 31C)


 7. அரசியலமைப்பு வாயிலாக தீர்வு பெறும் உரிமை – சரத்து 32 அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி தீர்வுபெற கீழ்க்கண்ட நீதிப்பேராணைகள் வகை செய்கின்றன.

 சமத்துவ உரிமை (சரத்து 14 – 18) சரத்து – 14 • சட்டத்தின் முன் சமம் • சட்டத்தின் “முன் அனைவரும் சமம்” என்பது இங்கிலாந்தில் தோன்றியதாகும். • எந்த நபருக்கும ஆதரவாக சிறப்பு சலுகைகளை மறுத்தல் • சட்டத்தின் முன் எந்த ஒரு தனி நபருக்கும் எவ்வித சலுகைகள் காட்டப்படாது • சட்டத்திற்கு மேல் எதுவும் இல்லை. • அனைவருக்கும் சமமான பாதுகாப்புச் சட்டம் • இக்கருத்து அமெரிக்க அரசியலமைப்பிலிருந்து எடுத்ததாகும். • 


சட்டத்தின் வாயிலாக ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு ஏற்ப சூழ்நிலையின் அடிப்படையில் சமமாக நடத்தப்படுவர். • சமநிலையில் உள்ளவர்களுக்கு சட்டம் சம பாதுகாப்பை வழங்கும். • எந்தப் பாகுபாடும் இல்லாமல் ஒன்றாக கருதப்பட வேண்டும். 

சரத்து – 15 • அரசு எந்தக் குடிமகனையும் அவனுடைய மதம், இனம், சாதி, பால், பிறப்பிடம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைக் காரணமாகக் காண்பித்து, அவனை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது. • எந்தக் குடிமகனும் அவன் சார்ந்துள்ள மதம், இனம், சாதி, பால், பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் கடை, பொது ஒய்வு விடுதிகள், உணவு விடுதிகள் மற்றும் பொதுவான பொழுதுபோக்கு இடங்களில் நுழையும் போதும் தடைப்படுத்தவோ அல்லது நிபந்தனை விதிக்கப்படவோ கூடாது. • பெண்டிர் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்புச் சட்டங்கள் இயற்றுவதிலிருந்து அரசினை இந்த ஷரத்தில் உள்ள எதுவும் தடுக்காது. • அரசு, சமுதாயத்தில் மற்றும் கல்வியில் பின் தங்கி உள்ள வகுப்பினர்களுக்கு அல்லது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு தனிச் சலுகைகள் அளித்து, அவர்களும் சமுதாயத்தில் முன்னேற்றமடைய தனிச்சிறப்புச் சட்டங்கள் இயற்றுவதற்கு அரசினை எதுவும் தடுக்காது. 

சரத்து 16 • அரசின் கீழுள்ள எந்த அலுவலகத்திலும் பணி அல்லது நியமனம் குறித்த விவகாரங்களில் எல்லா குடிமகன்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். • இந்தியாவின் எப்பகுதியில் வாழ்ந்து வருவதாக இருப்பினும் வேலை வாய்ப்புகளில் அரசு சம வாய்ப்பு அளிக்க மறுக்கக் கூடாது. மதம், இனம், சாதி, பால், இறங்குரிமை, பிறப்பிடம் மற்றும் உறைவிடம், இவற்றின் அடிப்படையில் அரவின் ஒரு அலுவலகத்தில் அல்லது பணியில் ஒரு குடிமகன் அமரத் தகுதியற்றவனாக ஆக்கப்படக் கூடாது. • அரசுப் பணிகளை திறமையாகச் செய்வதற்குரிய தகுதிகளை நிர்ணயிப்பது ஷரத்து 16க்கு எதிராக அமையாது.



விக்ட்டோரிய மகாராணியார் பேரறிக்கை 


புதுச்சேரி, செப். 13: பிரிட்டனிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆவணங்களின் உதவியோடு, இந்திய வரலாற்றின் தொலைந்த சுவடுகளை வெளிப்படுத்தும் வகையிலான ஆவணங்களின் கண்காட்சி புதுச்சேரியில் நடைபெறுகிறது.

இதற்காக, பிரிட்டிஷ் நூலகம், பிரிட்டிஷ் கவுன்சில் உதவியோடு, அந்நாட்டில் உள்ள 1858 முதல் 1950-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட இந்திய ஆவணங்களின் நகல்களைப் பெற்று, "எல்லைக்கு அப்பால்: பிரிட்டனில் இந்திய வரலாற்றுச் சுவடுகள்' என்ற பெயரில், அவை புதுச்சேரி லாஸ்பேட்டை ஜீவானந்தபுரத்தில் உள்ள இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT


POWERED BY PLAYSTREAM


இந்திய வரலாற்றில் இடம்பெற்ற பல முக்கியத் தலைவர்களின் கடிதங்கள், தகவல்கள் அவர்களது கையெழுத்துகளிலேயே எழுதப்பட்டிருந்ததை, நகலெடுத்துப் பார்வைக்கு வைத்துள்ளனர். இவை, கால இயந்திரம் மூலம் கடிதம் எழுதப்பட்ட ஆண்டுக்குச் சென்று பார்த்ததுபோல இருப்பதாகவும், வரலாற்றில் இடம்பெற்ற இந்த கடிதங்கள் காணக்கிடைப்பது அரிது என்கின்றனர் பார்வையாளர்கள்.

இதில் குறிப்பிடத்தக்கதாக, 1857-ம் ஆண்டு நடந்த சிப்பாய் புரட்சிக்குப் பிறகு, விக்டோரியா மகாராணி 1858 நவம்பரில் வெளியிட்ட பேரறிக்கை, அதன் பிறகு அவரது பேரறிக்கையின் 50-வது ஆண்டு விழாவின்போது 1908-ம் ஆண்டு அவர் ஆற்றிய சொற்பொழிவு ஆகியவையும், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இடம்பெற்றோரின் புகைப்படங்களும் உள்ளன.

மேலும், கிழக்கிந்திய கம்பெனியினர் காலத்தில் அவர்கள் பயன்படுத்திய கடிகாரம், 1871-ம் ஆண்டு சூயஸ் கால்வாய் குறித்து சர்.எச்.சி.ராலின்சன் எழுதிய நினைவுக் குறிப்பு, சரோஜினி நாயுடுவின் கவிதைகள், 1913-ம் ஆண்டில் ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய பிரிட்டிஷ் அதிகாரிகள், இந்தியர்களின் விவரம், இந்தியன் இன்பர்மேஷன் என்ற நாளேட்டில் வந்த இந்திய பெண்களின் போர் பற்றிய குறிப்புகள், ராயல் விமானப் படையில் இந்திய மாணவர்கள் எனும் தலைப்பில் இந்தியன் இன்பர்மேஷன் என்ற நாளேட்டில் 1942-ம் ஆண்டு வெளிவந்த கட்டுரை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

முக்கியமாக, 1857-ம் ஆண்டு நடந்த சிப்பாய் புரட்சிக்குப் பிறகு, விக்டோரியா மகாராணி வெளியிட்ட பேரறிக்கையில், வாரிசு இல்லாத மன்னர்கள் குழந்தை தத்தெடுத்துக் கொள்வது, சாதி, மதம் பாராமல் அனைவரையும் சமமாக நடத்துவது உள்ளிட்டவை முக்கிய குறிப்புகளாக இடம்பெற்றுள்ளன. அவரது அறிக்கை, அவரது எழுத்து நடையிலேயே பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

இக் கண்காட்சியை கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் தியாகராஜன் தொடங்கி வைத்தார். முதலமைச்சரின் நாடாளுமன்றச் செயலர் மு.வைத்தியநாதன் முன்னிலை வகித்தார்.

இக் கண்காட்சிக்கு குறித்து ஆவணக் காப்பக அதிகாரி மு.முருகேசன் கூறியது: வரலாற்று ஆவணங்களைப் பொதுமக்கள் அவ்வளவு எளிதில் பார்க்க முடியாது. பார்க்க விரும்பும் ஆவணம் குறித்து மனு அளித்தால், பரிசீலித்துப் பின்னர் அனுமதி அளிக்கப்படும். ஆனால், பொதுமக்களுக்கு ஆவணங்களின் முக்கியத்துவம், வரலாற்றைக் காப்பதன் அவசியம் புரிய வேண்டும் என்பதற்காக இந்த ஆவணக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் இக் கண்காட்சியை, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகள் உள்பட அனைத்து நாள்களிலும் பொதுமக்கள் பார்வையிடலாம் என்றார்.

இது பிரிட்டிஷ் ஆட்சியின்போது நடந்த நிகழ்வுகள் மட்டுமே இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பிரெஞ்சு காலத்து ஆவணங்களும் வைக்கப்பட்டிருந்தால் இன்னும் வரவேற்பைப் பெற்றிருக்கும் என்றனர் புதுச்சேரி பார்வையாளர்கள்.



இந்திய அரசியலமைப்புச்சட்டம் உருவான வரலாறு

-     வீ.உதயகுமார்


இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். சிலருக்கு அப்படி ஒன்று இருப்பதே தெரியாது. நாம் இந்தியர்கள் என்ற உரிமையை அளிப்பதே இந்த அரசியல் சட்டம் தான். எல்லா குடிமக்களும் அரசியல் சட்டத்தை முழுமையாக படிக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், அதை பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும். அமெரிக்காவில் பாருங்கள், கிண்டர் கார்டனிலிருந்தே அவர்களுடைய அரசியல் சட்டத்தைப்பற்றி சொல்லிக்கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இந்தியாவில் யாராவது இப்படி செய்திருக்கிறார்களா என்று கூட தெரியவில்லை.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒப்புதல் பெற்ற நாள் 1949 நவம்பர் 26. இச்சட்டம் அடுக்கடுக்காக பல பரிணாமங்களுக்கு பின்னரே முழுமையடைந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அரசியல் சட்டத்துக்கு மிகப்பெரிய வரலாற்றுப்பின்னனியும், சிறப்புகளும் உண்டு. உலகிலேயே மிகப்பெரிய அல்லது மிக நீண்ட, எழுத்துப்பூர்வமான அரசியல் சட்டம் நம்முடையதுதான். 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தால் இது முறையாக ஏற்கப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடையும்போது அதற்கென்று தனி அரசியல் சட்டம் வேண்டும். அதற்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என பல தலைவர்கள் குறள் எழுப்பினர். அதைப்பற்றி காண்போம்.
இந்திய அரசியலமைப்புச்சட்டம் உருவாவதற்கான காரணங்கள்:
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா, அதற்கு அடுத்தபடியாக நமது நாடு இந்தியா தான். இந்தியா மதச்சார்பற்ற நாடு ஆகும். நமது நாட்டின் இந்திய அரசியல் அமைப்பு உருவான விதத்தைப் பற்றி காண்போம்.
இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதி 1857ஆம் ஆண்டின் சிப்பாய் கலகம் அல்லது முதல் இந்திய சுதந்திரப்போர் தொடங்கிய பிறகு 1858லிருந்து 1947 வரை ஆங்கிலேயர் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது.
ஒழுங்குமுறைச்சட்டம் 1773:
இந்திய விடுதலை போராட்டம் மற்றும் அரசியல் அமைப்பு உருவாக அடிப்படை காரணமான ஒழுங்குமுறைச்சட்டம் 1773ல் உருவாக்கப்பட்டது. வங்காள ஆளுனர் வங்காளத்தின் தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டார். வாரன் ஹேஸ்டிங்ஸ் முதல் தலைமை ஆளுநர் ஆனார். தலைமை ஆளுநருக்கு உதவி புரிய நான்கு உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. பம்பாய் மற்றும் மெட்ராஸ் ஆளுநர்கள் வங்காள தலைமை ஆளுநருக்கு கட்டுப்பட்டவர்கள் ஆனார்கள்.
கி.பி.1774ல் கொல்கத்தாவில் ஹூக்ளி நதிக்கரையில் உச்சநீதிமன்றம் உருவாக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் 1 தலைமை நீதிபதியும், 3 துணை நீதிபதிகளும் பதவி வகித்தனர். தற்போது, 2015ல் 1 தலைமை நீதிபதியும், 30 துணை நீதிபதிகளும் உள்ளனர்.
பிட் இந்தியச்சட்டம் 1784:
இச்சட்டம் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் அரசியல் நடவடிக்கைகளைப் பிரித்தது. நிர்வாகத்திற்காக இரண்டு விதமான குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை இயக்குனர் குழு மற்றும் கட்டுப்பாட்டுக்குழு.
இதனைத் தொடர்ந்து நான்கு விதமான பட்டையச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

பட்டையச்சட்டம் 1793 (முதல் பட்டையச்சட்டம்):–
இச்சட்டத்தின் படி இந்தியர்களுக்கு கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை.
பட்டையச்சட்டம் 1813 (இரண்டாம் பட்டையச்சட்டம்):–
இந்தியர்களின் கல்வி வளர்ச்சிக்காக ரூபாய் ஒரு இலட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த நிதி பயன்படுத்தவில்லை. ஏனெனில், இந்தியர்கள் கல்வியறிவு பெறுவதை ஆங்கிலேயர்கள் விரும்பவில்லை. இந்தியாவில் வாழும் ஐரோப்பியர் சமய நலன் காக்க கிறிஸ்துவ பேராயர்கள் நியமிக்கப்பட்டனர். ஆங்கில நாட்டு வியாபாரிகளுக்கும், மத போதகர்களுக்கும் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியோடு இந்தியாவில் வசிக்க அனுமதி வழங்கப்பட்டது.
பட்டையச்சட்டம் 1833 (மூன்றாம் பட்டையச்சட்டம்):–
ஆங்கிலேய கம்பெனியின் தனி உரிமை ஒழிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் தான் வங்காள கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் பிரபு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றார்.
பட்டையச்சட்டம் 1853 (நான்காம் பட்டையச்சட்டம்):–
தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய 2௦ உறுப்பினர்கள் கொண்ட இயக்குனரவை 18 உறுப்பினர்களாகக் குறைத்து 6 பேர் ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்டனர். குடிமைப்பணிகளுக்கு இந்தியாவின் உறுப்பினர்கள் போட்டித்தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மத்திய நிர்வாகத்தில் இந்தியர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். சட்ட உறுப்பினர் லால் மெக்காலே நிரந்தர உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இந்திய அரசாங்கச்சட்டம் 1858:
மாநிலங்களின் செயலாளர் என்ற கேபினெட் அமைச்சர் பதவி உருவாக்கப்பட்டது.
விக்டோரியா மகாராணி பேரறிக்கை:
1857ல் சிப்பாய் கலகத்தின் முடிவில் விக்டோரியா மகாராணியார் பேரறிக்கை வெளியிடப்பட்டது.
1858 நவம்பர் 1ஆம் நாள் அலகாபாத் நகரில் மாபெரும் பேரவை கூட்டப்பட்டது. அங்கு மகாராணியின் பேரறிக்கை வெளியிடப்பட்டது. இதனை இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலும், முதல் அரச பிரதிநிதியுமான கானிங் பிரபு வாசித்தார்.
பேரறிக்கையின் அம்சங்கள்:
கட்டுப்பாட்டுக்குழு மற்றும் நிர்வாகக்குழு கலைக்கப்பட்டன. இந்தியசெயலாளர் பதவியும் அவருக்கு உதவி செய்ய 15 பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டு இந்திய நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டது. நாடு இழக்கும் கொள்கை கைவிடப்பட்டது. கொலைக்குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்திய கவுன்சில் சட்டம் 1861:
வைசிராய் அவையில் ஐந்தாவதாக ஓர் உறுப்பினர் சேர்க்கப்பட்டார். கானிங் பிரபு பல்துறைப் பிரிவுகளை உருவாக்கினார். இந்தியர்கள் வைசிராய் செயற்குழுவில் இடம் பெறவில்லை. வைசிராய் அவசர சட்டம் வெளியிட அதிகாரம் பெற்றிருந்தார். அச்சட்டம் 6 மாதங்கள் வரை செல்லும். அனைத்து மாகாணங்களும் ஒரே பொதுவான முறைக்கு மாற்றப்பட்டது. சட்டமன்றம் உருவாக்கப்பட்டது.
இந்திய கவுன்சில் சட்டம் 1892:
இச்சட்டத்தில் சட்டமன்றத்தின் அதிகாரம் மற்றும் பணிகள் ஆகியவை வரையறுக்கப்பட்டன. முதல் முறையாக தேர்தல் கோட்பாடு பற்றி சிறிய அளவில் வலியுறுத்தப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இச்சட்டம் இயற்றப்பட்டது.
இந்திய கவுன்சில் சட்டம் 1909:
இந்தியர்களிடையே ஏற்பட்ட கொந்தளிப்பை கட்டுப்படுத்தவும், இந்திய புரட்சி இயக்கங்களின் ஆதரவை குறைக்கவும் இந்தியர்களுக்கு சில உரிமைகளை வழங்க வேண்டும் என காலனி அரசு முடிவு செய்தது.
இந்திய சட்டமன்றங்களுக்கு இந்திய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க  முதல்முறையாக தேர்தல் முறையை அறிமுகம் செய்தனர். இந்திய உறுப்பினர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டனர். இதில் இஸ்லாமியர்களுக்கு 25% தனி இடங்கள் ஒதுக்கப்பட்டன.
சத்யேந்திர சின்ஹா, வைசிராய் கவுன்சிலின் முதல் இந்தியர் ஆனார். அவர் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
இந்திய அரசுச்சட்டம் 1919:-
இச்சட்டம் இந்தியாவிற்கான உயர் ஆணையர் என்ற புதிய அலுவலர் பதவியை இலண்டனில் ஏற்படுத்தியது. முதல் உலகப்போரின் போது இந்தியர்கள் ஆங்கிலேயர்களுக்கு முழு ஆதரவு கொடுத்தனர். இதனால் ஆங்கிலேயர்கள் போரில் வெற்றி பெற்றனர். இதற்கு கைமாறாக 1919ஆம் ஆண்டு ஆங்கிலேய பாராளுமன்றம் மாண்டேகு-செமஸ்போர்ட்  சீர்திருத்தச் சட்டத்தை இயற்றியது.
இந்திய அரசுச்சட்டம் 1935:-
தற்போது நாம் பின்பற்றும் 75% அரசியலமைப்புச் சட்டங்கள் 1935ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டவையே.
இதன்படி மத்தியவங்கி உருவாக்கப்பட்டது. மேலும் உச்சநீதிமன்றம் அமைய வழிவகுத்தது.
இந்திய அரசுச்சட்டம் 1935ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டம் சைமன் குழுவின் அறிக்கை மற்றும் மூன்று வட்டமேசை மாநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இயற்றப்பட்டது. இச்சட்டம் பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. மாகாணங்களில் தன்னாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மாகாணங்களில் செயல்பட்டு வந்த இரட்டை ஆட்சி ஒழிக்கப்பட்டது.
இந்திய சுதந்திரச்சட்டம் 1947:-
பிப்ரவரி 20, 1947ல் பிரிட்டிஷ் பிரதம மந்திரி கிளமண்ட் அட்லி இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வருகிறதென்றும் அதன் அதிகாரம் போறுப்புள்ளவர்களிடம் அளிக்கப்படும் என்று அறிவித்தார். மவுண்ட்பேட்டன் பிரபு சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆனார். அவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவிற்கு பதவிபிரமாணம் செய்துவைத்தார்.
தொடரும் 





.

Thursday, 10 November 2016

GOVERNMENT OF INDIA இந்திய அரசின் அதிரடி வரலாறு செல்லாத ரூபாய் நோட்டுக்கள்:




GOVERNMENT OF INDIA
இந்திய அரசின் அதிரடி வரலாறு
செல்லாத ரூபாய் நோட்டுக்கள்: 


இந்தியாவில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அரசு அறிவித்து பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும், அரசு இவ்வாறு அதிரடியாக செயல்படுவது இது முதல் முறை அல்ல என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏற்கெனவே, இரண்டு முறை இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. 1946-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், ஆயிரம் மற்றும் பத்தாயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.










 1954-ம் ஆண்டு, ஆயிரம், ஐந்தாயிரம் மற்றும் பத்தாயிரம் ரூபாய் நோட்டுக்கள் மீண்டும் புழக்கத்தில் விடப்பட்டன. ஆனால், 1978-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், மீண்டும் செல்லாது என அறிவிக்கப்பட்டது.



















இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட முடிவுக்கு ஒரு பின்னணி உண்டு. 1970-களிந் துவக்கத்தில், கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டுவர, சில ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவிக்கலாம் என வான்சூ கமிட்டி அறிவித்தது.
ஆனால், அந்தக் கமிட்டியின் பரிந்துரைகள் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டதால், கறுப்புப் பணம் வைத்திருப்போர் உஷாரடைந்து, தங்கள் வசம் உள்ள கறுப்புப் பணத்தை மிக விரைவாக கைமாற்றிவிட்டார்கள்.
கடந்த 1978-ல், ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அரசு, ஜனவரி 16-ல் அவசரச் சட்டம் மூலம் ஆயிரம், ஐந்தாயிரம் மற்றும் பத்தாயிரம் ரூபாய் நோட்டுக்களை விலக்கிக் கொள்ளும் முடிவை அறிவித்தது.

அந்த நடைமுறை குறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், அதுபற்றி விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1978-ஆம் ஆண்டு, ரிசர்வ் வங்கியின் தலைமை கணக்கு அதிகாரி ஆர். ஜானகி ராமன், முக்கியப் பணிக்காக மும்பையில் இருந்து டெல்லிக்குச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டார். டெல்லி வந்து சேர்ந்ததும், உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெற அரசு முடிவெடுத்துள்ளதால், அதற்கான அவசரச் சட்ட வரைவை ஒரே நாளில் தயாரிக்குமாறு அவர் அறிவுறுத்தப்பட்டார்.
அந்த நேரத்தில், மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி மத்திய அலுவலகத்துடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள அவர் அனுமதிக்கப்படவில்லை.
திட்டமிட்டபடி, அவசரச் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, ஜனவரி 16-ம் தேதி காலை குடியரசுத் தலைவர் என். சஞ்சீவ ரெட்டியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஒப்புதல் கிடைத்ததும், அரசின் முடிவு காலை 9 மணிக்கு அகில இந்திய வானொலி செய்தியில் அறிவிக்கப்பட்டது. ஜனவரி 17-ம் தேதி, அனைத்து வங்கிகள் மற்றும் கருவூலங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ஐ.ஜி. படேல், அரசின் முடிவுக்கு ஆதரவாக இல்லை. முந்தைய அரசில் இருந்த சில தலைவர்களைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கருதினார்.

இதுபற்றி, இந்தியப் பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் தான் எழுதிய புத்தகத்தில் படேல் குறிப்பிட்டிருக்கிறார். நிதியமைச்சர் எச்.எம். படேல், அரசின் முடிவு குறித்து தன்னிடம் தெரிவித்தபோது, இதுபோன்ற நடவடிக்கைகளால் பெரிய அளவில் பலன் கிடைக்காது என்று தான் சுட்டிக்காட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முறையற்ற வழிகளில் சம்பாதிப்பவர்களில் பெரும்பாலானவர்கள், தாங்கல் சம்பாதித்ததை ரொக்கமாக வைத்திருப்பது மிகவும் அரிது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Wednesday, 7 September 2016

மலையாள நடிகர் மம்மூட்டி ஒரு இந்திய சரித்திர நாயகன் பிறப்பு 1957 செப்டம்பர் 7


மலையாள நடிகர் மம்மூட்டி 
ஒரு இந்திய சரித்திர நாயகன்  பிறப்பு 
1957 செப்டம்பர் 7




மம்முட்டி (மலையாளம்: മമ്മൂട്ടി, முகமது குட்டி, பிறப்பு: 7 செப்டம்பர் 1951[1]), நான்கு தடவைகள் இந்திய தேசிய விருது பெற்ற நடிகர், இயக்குநர் ஆவார். இவர் மலையாளம் தவிர இந்தி, தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கேரளாவில் ஒரு பிரபல நடிகராவார். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை 1998 இல் பெற்றார். அவரது வாழ்வில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக, முன்னணி நடிகராக 300 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்,[2].


மம்மூட்டி பல முக்கிய விருதுகளை அவரது நடிப்புத் திறமைக்காகப் பெற்றுள்ளார். அவற்றில் சிறந்த நடிகர் பிரிவில் அவர் பெற்ற மூன்று சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள், நான்கு மாநில விருதுகள் மற்றும் எட்டு பிலிம்பேர் விருதுகள் ஆகியவை அடங்கும். 1998 இல், இந்தியத் திரைப்படத்துறைக்கு அவர் அளித்த மிகப்பெரிய பங்களிப்பிற்காக இந்திய அரசாங்கம் அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவப்படுத்தியது.

கைராலி டிவி, பீபிள் டிவி மற்றும் வீ டிவி போன்ற மலையாள தொலைக்காட்சி அலைவரிசைகளை நடத்தும் மலையாள தகவல்தொடர்புகளின் தலைவர் பொறுப்பிலும் மம்மூட்டி இருக்கின்றார்.
[3] வனிதா பத்திரிக்கை அதன் வாசகர்களிடையே நடத்திய ஆய்வின் பிறகு மம்மூட்டியை மிகவும் கவர்ச்சியான நடிகராகத் தேர்ந்தெடுத்தது.[4] மும்மூட்டி, கேரளா முழுவதும் மனிதநேய செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார், மேலும் அக்‍ஷயா திட்டத்தின் நல்லெண்ணத் தூதுவராகவும் இருக்கின்றார்

குடும்பமும் ஆரம்பகால வாழ்க்கையும்[தொகு]


மம்மூட்டி அவர்கள் இந்தியாவின் பழைய திருவாங்கூர்-கொச்சின் மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் அருகில் ஒரு நடுத்தர முஸ்லீம் குடும்பத்தில் 7 செப்டம்பர் 1949 அன்று பிறந்தார், இவரது தந்தை இஸ்மாயில் ஒரு விவசாயி மற்றும் தாய் பாத்திமா இல்லத்தரசி ஆவர். அவரது உடன்பிறப்புகளுடன் அவர் வைக்கம் அருகிலுள்ள சேம்பு என்னும் இடத்தில் வளர்ந்தார்.
அவர் உயர்நிலைப் பள்ளிக்கல்வியை (பட்டப்படிப்புக்கு முந்தையது) கொச்சியிலுள்ள மகாராஜாஸ் கல்லூரியில் முடித்தார், அதன் பிறகு எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார். அவர் மஞ்சேரியில் இரண்டு ஆண்டுகள் சட்டப் பயிற்சியும் எடுத்தார். அவர் சல்பாத் என்பவரை 1980 இல் மணந்தார், இவர்களுக்கு சுருமி என்ற மகளும் தல்குயர் சல்மான் என்ற மகனும் உள்ளனர்.[1]

நடிப்பு வாழ்க்கை[தொகு]


ஆரம்பகால வாழ்க்கை, 1971-1980[தொகு]
மம்மூட்டி 1971 இல் கே. எஸ். சேதுமாதவன் இயக்கிய அனுபவங்கள் பாலிச்சகள் திரைப்படத்தில் முதன்முதலில் தோன்றினார். இருப்பினும் இந்த கதாப்பாத்திரம் நன்மதிப்பைப் பெறவில்லை.[6]


 அப்பொழுது அவர் மகாராஜாஸ் கல்லூரியில் மாணவராக இருந்தார். அதன் பிறகு 1973 இல், கே. நாராயணன் இயக்கிய பிரேம் நசீர் படமான காலச்சக்கரம் திரைப்படத்தில் மற்றொரு வேடத்தைப் பெற்றார்.







அவரது திரைப்பட தொழில் வாழ்க்கை 1979 இல் தொடங்கியது, அப்பொழுது அவர் தலைசிறந்த இயக்குநர் எம்.டி.வாசுதேவன் நாயர் இயக்கிய தேவலோகம் [7] திரைப்படத்தில் அவர் முதல் முன்னணி வேடத்தில் நடித்தார். இருப்பினும், இந்தத் திரைப்படம் வெளியாகவே இல்லை.

1980கள்[தொகு]

எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதி எம். ஆசாத் இயக்கிய வீல்கணுண்டு ஸ்வப்ணங்கள் மம்மூட்டியின் முதல் குறிப்பிடத்தகுந்த திரைப்படம் ஆகும். கே.ஜி ஜியார்ஜ் இயக்கிய மேலா திரைப்படத்தில், அவர் சர்க்கஸ் கலைஞராக நடித்தார், மேலும் ஐ.வி. சசி இயக்கிய திரிஷ்னா திரைப்படம் அவருக்கு கதாநாயகன் எனும் பிரபலத்தை வழங்கியது.

1982 இல், கே.ஜி ஜியார்ஜ் இயக்கிய துப்பறியும் திரில்லர் படமான யவனிகா (1982) திரைப்படத்தில் அவர் காவல்துறை அதிகாரி வேடத்தில் அவர் நடித்தது,
 மம்மூட்டி நேர்மையான காவல்துறை அதிகாரியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிரடி மற்றும் துப்பறியும் விறுவிறுப்புப் படங்களில் நடிக்கும் போக்கிற்கு அது தொடக்கமாக அமைந்தது.[8]






1981 இல், அஹிம்சா திரைப்படத்தில் அவர் நடித்தற்காக சிறந்த துணை நடிகர் பிரிவில் முதல் மாநில விருதைப் பெற்றார்.

1982-1984 காலகட்டம் மம்மூட்டியை முக்கியமான மலையாள சினிமாவில் வணிக ரீதியாக எதையும் செய்யக்கூடிய கதாநாயகனாக மதிப்பிட்டது. பத்மராஜனின் கூடேவிதே மற்றும் ஜோஷியின் ஆ ராத்திரி இரண்டும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதிய ஆள்கூட்டத்தில் தனியே மற்றும் ஆதியொழுக்குகள் போன்ற திரைப்படங்களில் அவரது நடிப்பு அவரை அர்த்தமுள்ள நடிகராக நிலைநாட்டியது.[9].

1982 முதல் 1986 வரையிலான ஐந்து ஆண்டுகள் காலகட்டத்தில் மம்மூட்டி கதாநாயகனாக 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்தார்.[10]

எம். டி. எழுதி ஐ.வி. சசி இயக்கிய ஆதியொழுக்குகள் திரைப்படத்தில் கருணன் பாத்திரத்தில் அவர் நடித்தது, அவருக்கு சிறந்த நடிகர் பிரிவில் மாநில விருதையும் பிலிம்பேர் விருதையும் பெற்றுத் தந்தது. மம்மூட்டி, பாலு மகேந்திரா இயக்கிய யாத்திரா திரைப்படத்தில் வன அதிகாரி வேடத்தில் நடித்ததற்காக மாநில சிறப்பு ஜூரி விருதையும் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார். நிறக்கூட்டு (1985), நியூ டெல்லி(1987)
 மற்றும் தனியாவர்த்தனம்(1987) ஆகியவை 80களில் அவரது குறிப்பிடத்தகுந்த பிற படங்களாகும்.

நியூ டெல்லி அவரது நடிப்புத் தொழிலில் முக்கியமான திரைப்படமாகும்.[11] அந்தத் திரைப்படம் "த அல்மைட்டி" என்ற இர்விங் வாலஸ் எழுதிய நாவலை ஓரளவு அடிப்படையாகக் கொண்டது.[12]

1980களின் இறுதியிலிருந்து 1990கள் வரை[தொகு]

1988 இல் மம்மூட்டி மலையாள சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றை தனது ஒரு CBI டைரிக் குறிப்பு திரைப்படத்தைக் கொண்டு அளித்தார்.
 ஒரு CBI டைரிக் குறிப்பு கேரளாவிலும் அதேபோன்று தமிழ்நாட்டிலும் பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றை உருவாக்கியது. முதல் CBI திரைப்படம் ஒரு CBI டைரிக் குறிப்பு வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, மூன்று மர்மக் கொலை சம்பந்தமான தொடர்ச்சிகள் அதே நடிகர்களைக் கொண்டு அதே கதாப்பாத்திரங்களில் தயாரிக்கப்பட்டன, 

அவை: ஜகார்த்தா (1989), 
சேதுராம ஐயர் CBI (2004) மற்றும் 
நேரரியன் C.B.I (2005), அனைத்தும் 
கே மதுவால் இயக்கப்பட்டு எஸ்.என். ஸ்வாமி எழுதியது, இவற்றில் மும்மூட்டி சேதுராம ஐயராக புத்திசாலித்தனமான ஆனால் யூகிக்க முடியாத CBI அதிகாரியாகத் தோன்றினார்.
 சுயசரிதை கதைகளைக் கொண்ட எம்.டி. வாசுதேவன் நாயரின் இரண்டு திரைப்படங்களில் மம்மூட்டி நடித்தார். அவற்றில் ஒன்று அக்‌ஷரங்கள் ஐ.வி. சசியால் இயக்கப்பட்டது, மற்றொன்றான சுக்ரதம் படத்தை ஹரிகுமார் இயக்கினார்.

மம்மூட்டி ஒரு வடக்கன் வீரக்கதா திரைப்படத்தில் நடிப்பு வாழ்வின் உச்சத்தை தொட்டார்; அத்திரைப்படம் எம்.டி. வாசுதேவன் நாயரால் எழுதப்பட்டு டி.ஹரிஹரன் அவர்களால் இயக்கப்பட்டது. 
அவரது தெளிவான சேகவார் (கூலிப் படைவீரன்),
 கதநாயகனாக இல்லாமல் எதிர்மறைப் பாத்திரமாக இருந்தாலும் அவருக்கு தேசிய விருதை வென்று தந்தது. 

அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய மதிலுகள் படத்தில் மும்மூட்டியின் நடிப்பு விருதுக்காகக் கருதச்செய்தது. ஐ.வி சசி இயக்கிய முருகயா வில் வேட்டைக்கார வருணியாக அவரது வேடம் மற்றும் மற்றொரு திரைப்படம் மஹாயனம் ஆகியவையும் மாநில விருதுக்கு கருதச்செய்தன. மம்மூட்டி, பரதன் இயக்கிய அமரம் திரைப்படத்தில் அவது சிறந்த நடிப்பிற்காக பிலிம்பேர் விருதை வென்றார்.

மம்மூட்டி தனது இரண்டாவது தேசிய விருதை, அடூர் கோபாலகிருஷ்ணனின் விதேயன் மற்றும் டிவி சந்தரனின் பொந்தன் மாடா ஆகியவற்றில் தனது நடிப்பிற்காகப் பெற்றார். 

அவர் இரண்டு படங்களில் தனது வேடங்களுக்காக மாநில விருதையும் பெற்றார். கொச்சின் ஹனீபா இயக்கிய வால்ட்சல்யம் படத்தில் அவரது நடிப்பும் மாநில விருதுக்குக் கருதப்பட்டது.






தற்போதைய சகாப்தம், 2000 முதல் தற்போதுவரை[தொகு]

மம்மூட்டி தனது மூன்றாவது தேசிய விருதை டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் திரைப்படத்திற்காக வென்றார்,
 இது ஜாபர் படேல்[13] இயக்கிய அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிக் கூறும் ஆங்கில மொழி திரைப்படம் ஆகும், இத்திரைப்படம் இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டது.




ஜாபர் படேல் அம்பேத்கர் படத்தில் மம்மூட்டி பற்றி தெரிவித்த கருத்துக்கள்:

Anyone who has seen the film will agree that Dr Ambedkar could not have been possible without Mammootty. How did the filmmaker settle on him? I was making a film in English and I went all around the world, met and saw actors in Canada, United States and United Kingdom. Physically, many actors in America came close but I was not sure about how they would portray the whole sensibility and inner turmoil. I was also not happy about the gestures. I had shortlisted 2-3 people and knew that it would be troublesome as I would have to get them here and train them. So I was not really happy. Then I decided to do something about Mammootty, who was hiding in my mind for a very long time.
மம்மூட்டி காழ்ச்சா வில் ஆபரேட்டர் மாதவன் உருவத்திற்காக மாநில விருதை வென்றார். புதுமுகம் அன்வர் ரஷீத் இயக்கிய ராஜமாணிக்யம் மலையாள சினிமாவில் அனைத்துக் காலத்திலும் மிகப்பெரிய வெற்றியுடன் ரசிகர்கள் மனம் கவர்ந்தது.[14] 2006 இல், மம்மூட்டி துருப்புக்குலன் திரைப்படத்தை உருவாக்கினார், அதில் வரும் கதாப்பாத்திரம் குலன் மீது குழந்தைகளிடையே கடுங்கோபம் உண்டானது, பின்னர் அந்தப் பாத்திரத்தை வைத்து 'சூப்பர் குலன்' எனற கார்ட்டூன் தொடர் கிட்ஸ் காமிக்ஸ் மூலம் தொடங்கப்பட்டது.[15]

மம்மூட்டியின் அதிரடி நகைச்சுவைத் திரைப்படம் மாயாவி , 2007 இன் சிறந்த வசூலைப் பெற்ற படமானது.

Wednesday, 10 August 2016

இந்திய குடியரசின் நான்காவது ஜனாதிபதி வி.வி .கிரி பிறப்பு 1894 ஆகஸ்ட் 10


இந்திய குடியரசின் நான்காவது ஜனாதிபதி 
வி.வி .கிரி பிறப்பு 1894 ஆகஸ்ட் 10 



வி.வி .கிரி என்றழைக்கபெற்ற வராககிரி வேங்கட கிரி (10 ஆகஸ்ட் 1894 - 23 ஜூன் 1980)இந்திய குடியரசின் நான்காவது ஜனாதிபதி ஆவார்.



பிறப்பு முதல் பட்டம் வரை[தொகு]

முந்தய மதராஸ் பிராந்தியத்தின் கஞ்சம் மாவட்டம் பெர்தம்புரை சேர்ந்த தெலுங்கை தாய்மொழியாய் கொண்ட வராககிரி வேங்கட ஜோகயா-வின் மகன் கிரி .இன்னகரமும் அதன் மாவட்டமும் தற்பொழுது ஒரிசா மாநிலத்தில் உள்ளது.இவரது தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீல்.



1913-ஆம் ஆண்டு டுப்ளின்-இல் உள்ள உநிவர்சிட்டி கல்லூரிக்கு சட்டம் பயில சென்றார்.ஆனால் 1916 -ஆம் ஆண்டு அயர்லாந்து -இல் உள்ள சின் பியன் இயக்குத்துடன் இவர் கொண்ட தொடர்பால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த ஈடுபட்டால் அவருக்கு எமன் தே வலேரா , மைகேல் கோல்லின்ஸ்,பாட்றிக் பியர்ஸ் , தேச்மொண்டு பித்ச்கரல்து ,எஒஇன் மச்நேஇல் ,ஜேம்ஸ் காங்நோல்லி மற்றும் பலருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.
vvgiri.jpg
பிறந்த நாள்:10 ஆகஸ்ட் 1894
இறந்த நாள்:23 ஜூன் 1980
இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவி வரிசை:4 ஆவது குடியரசுத் தலைவர்
தற்காலிகமாக
பதவி ஏற்பு:3 மே 1969
பதவி நிறைவு:20 ஜூலை 1969
முன்பு பதவி வகித்தவர்:ஜாகீர் உசேன்
அடுத்து பதவி ஏற்றவர்:முகம்மது இதயத்துல்லா
First Term
பதவி ஏற்பு:24 ஆகஸ்ட் 1969
பதவி நிறைவு:24 ஆகஸ்ட் 1974
முன்பு பதவி வகித்தவர்:முகம்மது இதயத்துல்லா
அடுத்து பதவி ஏற்றவர்:பக்ருதின் அலி அகமது





























தொழில்[தொகு]

தாயகம் திரும்பியதும் , அவர் தொழிலாளர் இயக்கத்தில் பொது செயலராக பெரிதும் ஈடுபட்டார். பின்பு அகில இந்திய தொடர்வண்டிதொழிலாளர்கள் பேரவையின் அதிபராகவும் மற்றும் அகில இந்திய தொழில்சங்க அவையின் அதிபராக இருமுறை பதவி வகித்தார்.


கிரி பேரரசுக்குரிய சட்டபேரவையில்
 1934-ஆம் ஆண்டு உறுப்பினரானார்..

1936-ஆம் ஆண்டு நடைபெற்ற மதராஸ் பொது தேர்தலில் , கிரி காங்கிரஸ் வேட்பாளராக போப்பிளியின் ராஜாவை எதிர்த்து போப்பிளியிலே போட்டியிட்டு வென்றார். மதராஸ் பிராந்தியத்தில் சி. ராஜகோபாலச்சாரி அமைத்த காங்கிரஸ் அரசில் 1937-ஆம் ஆண்டு தொழில் மற்றும் தொழிலாளர் அமைச்சர் ஆனார்.

1942-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்தபொழுது "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்துக்கு ஆதரித்து அவர் தொழிலாளர் இயக்குதுக்கே திரும்பினார் . ஆங்கில அரசு அவரை சிறையில் தள்ளியது.

இந்திய சுதந்திரத்துக்கு பின்னர் , அவர் இலங்கைக்கு உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார் . அதன் பின் 1952- ஆம் ஆண்டு சட்டசபைக்கு போட்டியிட்டார்.முதல் லோக் சபாவிற்கு பதபத்னம் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.1954-ஆம் ஆண்டு ராஜினாமா செய்யும் வரை தொழிலாளர் மந்திரியாக பதவி வகித்தார்.


உத்தர பிரதேசம்(1957-1960) , கேரளா(1960-1965) மற்றும் மைசூர் (1965-1967)மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றினார்.

1967-ஆம் ஆண்டு இந்தியாவின் துணை-அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சாகிர் ஹுச்சைனின் பதவிக்கால மரணத்தினால் 1969-ஆம் ஆண்டு கிரி தற்காலிக அதிபர் ஆனார். அதிபர் பதவிக்கான தேர்தலிலும் போட்டியிட முடிவு செய்தார். இந்திரா காந்தியின் அரசோ நீளம் சஞ்சிவ ரெட்டியை ஆதரித்தது , எனினும் இந்திரா காந்தி அவர்களின் கடைசி-நிமிட முடிவு மாற்றத்தால் இவரே 1974-ஆம் ஆண்டு வரை அதிபராக பணியாற்றினார்.

இந்தியாவின் தலைசிறந்த விருதான , பாரத ரத்னாவை 1975-ஆம் ஆண்டு பெற்றார் கிரி.

கிரி ஒரு திறன்வாய்ந்த எழுத்தாளர் மற்றும் சிறந்த பேச்சாளர்.இவர் "தொழில் நிறுவனங்களின் உறவுகள்" மற்றும் "இந்திய தொழில் நிறுவனங்களில் உழைப்பாளர் பிரச்சனைகள்" போன்ற தலைப்புகளில் புத்தகங்கள் எழுதி உள்ளார்.