Showing posts with label state. Show all posts
Showing posts with label state. Show all posts

Wednesday, 30 July 2025

JAORA ,PRINCY STATE








JAORA ,PRINCY STATE



Jaora State was founded by 'Abdu'l Ghafur Muhammad Khan, a Muslim of Afghan pashtun descent and a Rohilla in 1808. In 1818 the state became a British protectorate. 'Abdu'l Ghafur Muhammad Khan was a cavalry officer serving the Pashtun leader Muhammad Amir Khan. He later served the Holkar maharaja of Indore State, subduing Rajput territories in northern Malwa and annexing their lands. In return for his services, he was granted the title of Nawab in 1808. The state was confirmed by the British government in 1818 by the Treaty of Mandsaur.

Nawab Muhammad Ismail (ruled 1865-1895) was an honorary major in the British Army. During the reign of Nawab Muhammad Iftikhar Ali Khan (ruled 1895-1947), Piploda became a separate state in 1924, and Panth-Piploda became a province of British India in 1942. Nawab Muhammad Usman 'Ali Khan (ruled 1947-1948) acceded to the Government of India on 15 June 1948.[2]
Jaora State was a 13 gun-salute princely state of the British Raj. It was part of the Malwa Agency


Nawabs of Jaora

6 Jan 1817 - 9 Sep 1825 Abdul Ghafur Mohammad Khan (b. 1775 - d. 1825)
9 Sep 1825 – 29 Apr 1865 Ghows Mohammad Khan (b. 1823 - d. 1865)
9 Sep 1825 - 1827 Musharraf Begum (f) -Regent (d. 1827)
+ Jahangir Khan
1827 - 1840 Borthwick -Regent
30 Apr 1865 - 6 Mar 1895 Ehtesam al-Dowla Mohammad Isra´il Khan aka Nawab Muhammad Khan (b. 1854 - d. 1895)
30 Apr 1865 - 1872 Regents
- Hazrat Nur Khan
- Political Agent Western Malwa
6 Mar 1895 – 15 Aug 1947 Fakhr al-Dowla Mohammad Eftekhar (b. 1883 - d. 1947) `Ali Khan (from 12 Dec 1911, Fakhr al-Dowla Sir Mohammad Eftekhar `Ali Khan)
6 Mar 1895 – 20 May 1906 Sahibzada Yar Muhammad Khan -Regen

Sunday, 9 August 2020

WINE SHOP, BARS - PRIMARY INCOME OF THE TAMILNADU STATE




WINE SHOP,BARS - PRIMARY INCOME 
OF THE TAMILNADU STATE




'மது நாட்டை சீரழித்து விட்டது; 'டாஸ்மாக்' கடைகளை இழுத்து மூடுங்கள், மதுவிலக்கை அமல்படுத்துங்கள்' -

இந்த குரல், தமிழகத்தின் எல்லா மூலை முடுக்கிலிருந்தும் ஒலிக்கத் துவங்கி விட்டது.

உண்மை தான்; இன்று, பள்ளி மாணவர் முதல், பழுத்த கிழம் வரை, அனைத்து பருவத்தினரையும் ஆட்கொண்டு விட்டது மது. குடிப்போரின் எண்ணிக்கை எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறதோ, அந்த அளவுக்கு குடிப்போரின் வயது வரம்பு குறைந்து கொண்டே போகிறது.

சமீபத்தில், சிறுவனை, உறவினர் ஒருவரே மது அருந்தச் செய்து, ரசித்து மகிழ்ந்தது; பள்ளி மாணவி, போதை தலைக்கேறிய நிலையில், நடு ரோட்டில் ஆரவாரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியது போன்ற நெஞ்சைப் பதற வைத்த சம்பவங்கள், சமூக சீர்கேட்டின் உச்சகட்டம்.மாணவியை கண்காணிக்கத் தவறி விட்டதாக பள்ளி நிர்வாகத்தின் மீதும், மகளை கண்டித்து வளர்க்கத் தவறி விட்டதாக பெற்றோர் மீதும், குற்றச்சாட்டுகளை வாரி இறைப்பதால் மட்டும் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது. ஒட்டுமொத்த சமுதாயமும் பொறுப்பேற்று, வெட்கித் தலை குனிய வேண்டிய விஷயம் இது.

தமிழகத்தில், பூரண மதுவிலக்குக் கோரி, கட்சி தலைவர்கள் ஒரு சேரக் குரல் கொடுத்து வருகின்றனர். சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் நல்ல ஒரு முயற்சியின் துவக்கமாகக் கருதி, இதை வரவேற்கலாம். ஆனால், இந்தக் கட்சித் தலைவர்கள், முதலில் தங்கள் கட்சித் தொண்டர்களை மதுப் பழக்கத்தில் இருந்து முற்றிலும் விடுபடுமாறு வலியுறுத்த வேண்டும். அதற்கு, இந்த தலைவர்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா? ஒருவேளை, இந்தக் கட்சிகள் அடுத்து அமையவிருக்கும் ஆட்சியில் பங்கு பெறும் வாய்ப்பை பெற்றால், மதுவுக்கு எதிரான இவர்களது குரல், சட்டசபையில் ஓங்கி ஒலிக்குமா அல்லது பதவிக்காக கொள்கைகள் சமரசம் செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழகத்தின் பிரதான கட்சிகளான, அ.தி.மு.க., அல்லது தி.மு.க.,வே மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமரும் பட்சத்தில், பூரண மதுவிலக்கு என்பது அரிதிலும் அரிதான விஷயமாகிவிடும். காரணம், தமிழகத்தில், இந்த இரு கட்சிகளில், மது விற்பனைக்கு வித்திட்டு வேரூன்றச் செய்தது ஒரு கட்சி என்றால், அதற்கு நிரூற்றி, உரமிட்டு விருட்சமாக்கி, ஆல் போல் தழைக்கச் செய்தது, மற்றொரு கட்சி.ராஜாஜியால் முதன் முதலில் அமல்படுத்தப்பட்டு, தமிழகத்தில் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் நடைமுறையில் இருந்த மதுவிலக்கு, தி.மு.க., ஆட்சியில், 1971ல் முடிவுக்கு வந்தது.

மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு, நஷ்டஈடாக நிதி உதவி வழங்கும் திட்டத்தை, அன்றைய மத்திய அரசு கொண்டு வந்தது; தமிழக அரசு ஏற்கனவே நடைமுறையில் இருந்த மதுவிலக்கை காரணம் காட்டி, மத்திய அரசிடம் நிதி உதவி கோரியது. ஆனால், புதிதாக மதுவிலக்கை கொண்டு வரும் மாநிலங்களுக்கு மட்டுமே இந்த விதிமுறை செல்லும் என்று கூறி இந்திரா அரசு, தமிழக அரசுக்கு நிதி உதவியை மறுத்து விட்டது.

நிதி நெருக்கடியை சமாளிக்க, மிகுந்த வருத்தத்துடன், மதுவிலக்கை ரத்து செய்வதாக கருணாநிதி அறிவித்திருந்தார். அன்று, மது விற்பனையால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு, 27 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இன்றைய ஒரு நாளைய டாஸ்மாக் வருமானம், அன்றைய ஓராண்டு வருமானத்தை விட மும்மடங்காகப் பெருகியும், நிதி நெருக்கடி தீர்ந்தபாடில்லை. ஆகையால் தான், தமிழகத்தில் அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள், மது விலக்கைப் பற்றி சிந்திக்கவே இல்லை.

இந்தியாவில், சாராயத்தின் மீதான கலால்வரி, 2009 -10ம் ஆண்டு, 48,370 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2012 - 13ம் ஆண்டில், 82,740 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. விற்பனை வரியையும் சேர்த்து, மொத்த வரி வருவாய் மட்டும், ஒரு லட்சத்து, 44 ஆயிரம் கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வரிகளையும் சேர்த்து, இந்திய, 'குடி' மக்கள் ஆண்டு தோறும் குடிக்காக செலவிடும் மொத்த தொகை, ஒரு லட்சத்து, 93 ஆயிரம் கோடி ரூபாய். இது, தமிழகத்தின் ஓராண்டு பட்ஜெட்டை விட அதிகம்.

டாஸ்மாக் நிறுவனத்துக்கு, தமிழகத்தில் உள்ள, 11 மதுபான ஆலைகளில் இருந்து, மது கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பகுதியை மறைமுகமாக நிர்ணயிப்பது, இந்த சாராய ஆலைகளின் அதிபர்கள் தான் என்பது ஜீரணிக்க முடியாத உண்மை.இவற்றில், ஓரிரு நிறுவனங்கள் தவிர, மற்றவை அனைத்திலும், தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளின் முக்கியஸ்தர்கள் தான், பங்குதாரர்களாக இருக்கின்றனர்.

வரிகளின் மூலம் கிடைக்கும் வருமானத்தை தவிர்த்து, அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் முக்கிய துறைகளான போக்குவரத்து மற்றும் மின் துறை, அதலபாதாளத்தில் இருப்பதை நாடே அறியும். இன்று, மாநிலத்தின் மொத்த வருவாயில், கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு வருமானம், டாஸ்மாக் விற்பனை மூலமே கிடைக்கிறது.

இலவசங்கள், மானியங்களுக்காக, தமிழக அரசுக்கு ஆண்டுக்கு, 45 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இந்த தேவையின் ஒரு பகுதியை பூர்த்தி செய்ய, டாஸ்மாக் அத்தியாவசியமாகிறது. மானியங்களை குறைத்து, இலவசங்களை முற்றிலுமாக நிறுத்தினால், மதுக்கடைகளுக்கு உடனே மூடு விழா நடத்தி விடலாம். ஆனால், காசு வாங்கியே ஓட்டளித்துப் பழகிய நம் மக்கள், இலவசங்களை நிறுத்தினால் கொதிப்படைந்து விட மாட்டார்களா?

இலவசங்களை நிறுத்தி, நம் மக்களை பரிதவிக்க வைக்கும் மாபெரும் துரோகத்தை நிச்சயமாக நம் அரசியல்வாதிகள் செய்யத் துணிய மாட்டார்கள். இலவசங்கள் என்பது, தமிழகத்தில் தவிர்க்க முடியாததாகி விட்டது.இந்த சூழ்நிலையில், பொன் முட்டையிடும் வாத்தான டாஸ்மாக்கை கொன்று, குழியில் புதைக்க எந்த அரசுக்குத் தான் மனசு வரும்?

'குடி உயரக் கோன் உயரும்' - இது, அவ்வையார் அருளிச் சென்ற பொன்மொழி. குடிமக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தால், அரசனின் நிலையும் உயரும் என்பது இதன் பொருள்.
'பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து' - இது, வள்ளுவனின் வாக்கு.

நோயின்மை, செல்வம், விளைபொருள் மிகுதி, மக்களின் மன மகிழ்ச்சி, பாதுகாவல் என்ற ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு என்பது இதன் பொருள்.போதைக்கு அடிமையாகி, ஆரோக்கியத்தை தொலைத்து நிற்கும் மக்களிடம், செல்வமும், மன மகிழ்ச்சியும் எப்படி நிலைக்கும்?நல்வாழ்வுக்கும், நல்லாட்சிக்கும் இலக்கணம் வகுத்துத் தந்த வள்ளுவனையும், அவ்வையாரையும் பள்ளிப் படிப்போடு மறந்து விட்டோமே; எப்படி குடி உயரும் கோன் உயரும்?

Friday, 12 June 2020

TAMILNADU -PROGRESSIVE STATE




TAMILNADU -PROGRESSIVE STATE

: ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால்,அது ஒரு நாள் உண்மை என நம்பப்படும் என்பார்கள்,,,அப்படித்தான் தமிழ்நாட்டில் ஒரு பொய் பல வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது,,,

அது "50 வருட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்துவிட்டது" என்பது,,,

நாமும் எதைப்பற்றியும் சிந்திக்காமல், அதை ஆமோதித்துக் கொண்டு, நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டுள்ளோம் !!

கீழே உள்ள புள்ளி விவரங்களை கொஞ்சம் பாருங்கள் !!

உயர்க்_கல்வி

பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம். தமிழ் நாடு - 38.2%. பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 17.6%; மபி - 17.4%; உபி - 16.8%; ராஜஸ்தான் - 18.0%; இந்திய சராசரி : 20.4ரூ.

கல்விநிலையங்களின்தரம்

2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (HRD) வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் படி,

முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்,,,

பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ வெறும் மூன்றுதான். இதேபோல ஹிந்தி பெல்ட் மாநிலங்களான மபி, உபி, பிகார், ராஜஸ்தான் போன்றவற்றிலிருந்து ஒன்றுகூட இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.

முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில், தமிழ் நாடு - 22 ; குஜராத் - 5 ; மபி - 3 ; உபி - 6 ; பீகார் - 1 ; ராஜஸ்தான் - 3.

முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில்

தமிழ் நாடு - 24 ; குஜராத் - 2 ; மபி - 0 ; உபி - 7 ;

பிகார் - 0 ; ராஜஸ்தான் - 4

பொருளாதாரமொத்தஉற்பத்தி(GDP)

இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது #தமிழ்நாடு.

தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் மற்ற தென் மாநிலங்களை விட அதிகமாக உள்ளது.

தமிழகத்தின் மொத்த வருமானம், ஒட்டு மொத்த பாகிஸ்தான் நாட்டின் வருமானத்திற்கு சமம்

ஒரு மாநிலத்தின் வருமானம் இந்தியாவிற்கே சவால் விடும் அண்டை நாட்டின் வருமானத்திற்கு நிகராக உள்ளதென்றால், அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும்.

தமிழ் நாடு - 18.80 lakh crore (2nd Place); பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 10.94 lakh crore (5th Place ; மபி - 7.35 lakh crore (10 th Place) ; உபி - 12.37 lakh crore (4 th Place) ; ராஜஸ்தான் - 7.67 lakh crore (7 th Place) ; சத்தீஸ்கர் - 2.77 lakh crore (17 th Place)

சாப்ட்வேர்_ஏற்றுமதி (ஆயிரம் கோடியில்)

தமிழ் நாடு - 75,000 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 1917 ; மபி - 343 ; உபி - 13,740 ; ராஜஸ்தான் - 712; சத்தீஸ்கர் - 18

சிசுமரணவிகிதம் 1000 பிறப்புக்கு

தமிழ் நாடு - 21 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 36 ; மபி - 54 ; உபி - 50 ; ராஜஸ்தான் -47 ; சத்தீஸ்கர் - 46 ; இந்திய சராசரி: 40

ஒருலட்சம்பிரசவத்தில்தாய்இறக்கும்_விகிதம்

தமிழ் நாடு - 79 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 112 ; மபி - 221 ; உபி - 285; ராஜஸ்தான் - 244 ; சத்தீஸ்கர் - 221 ; இந்திய சராசரி : 167

தடுப்பூசிஅளிக்கப்படும்குழந்தைகள்_சதவீதம்

தமிழ் நாடு - 86.7%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 55.2%; மபி - 48.9%; உபி - 29.9%; ராஜஸ்தான் - 31.9%; சத்தீஸ்கர் - 54%; இந்திய சராசரி : 51.2%

கல்வி_விகிதாசாரம்

தமிழ் நாடு - 80.33%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 79%; மபி - 70%; உபி - 69%; ராஜஸ்தான் - 67%; சத்தீஸ்கர் - 71%; இந்திய சராசரி : 74%

ஆண் - பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):-

தமிழ் நாடு - 943 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 890 ; மபி - 918 ; உபி - 902 ; ராஜஸ்தான் - 888 ; இந்திய சராசரி : 919

தனிநபர்வருமானம் (Per Capita Income) - ரூபாயில்

தமிழ் நாடு - 1,28,366 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 1,06,831; மபி - 59,770 ; உபி - 40,373 ; ராஜஸ்தான் - 65,974 ; சத்தீஸ்கர் - 64,442; இந்திய சராசரி : 93,293

தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில், இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் பெரும்பான்மையான இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது.

வீடுகளுக்கு_மின்சாரம் (households having electricity)

தமிழ் நாடு - 98.3%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 96%; மபி - 89.9%; உபி - 70.9%; ராஜஸ்தான் - 91%; சத்தீஸ்கர் - 95.6%

மனிதவளகுறியீடு (Human Development Index)

தமிழ் நாடு - 0.6663 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 0.6164 ; மபி - 0.5567 ; உபி - 0.5415 ; ராஜஸ்தான் - 0.5768 ; சத்தீஸ்கர் - 0.358 ; இந்திய சராசரி : 0.6087

ஏழ்மை_சதவீதம் Poverty (% of people below poverty line)

தமிழ் நாடு - 11.28%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 16.63%; மபி - 31.65%; உபி - 29.43%; ராஜஸ்தான் - 14.71%; சத்தீஸ்கர் - 39.93%; இந்திய சராசரி : 21.92%

ஊட்டசத்துகுறைபாடுகுழந்தைகள் (Malnutrition)

தமிழ் நாடு - 18%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 33.5%; மபி - 40%; உபி - 45%; ராஜஸ்தான் - 32%; சத்தீஸ்கர் - 35%; இந்திய சராசரி : 28%

மருத்துவர்களின்_எண்ணிக்கை(ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு)

தமிழ் நாடு - 149; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 87; மபி - 41 ; உபி - 31; ராஜஸ்தான்-48 ; சத்தீஸ்கர்-23 ; இந்திய சராசரி:36

இன்னும் இது போல சொல்லிக் கொண்டே போகலாம்,,,,

உலக புகழ் பெற்ற பொருளாதார நிபுணரும்,நோபல் பரிசு வென்ற அமெர்த்தியா சென் அவர்கள் , தமிழ்நாட்டின் வளர்ச்சியை பற்றி இவ்வாறாக கூறுகிறார்,,,,

தமிழ்நாட்டைவடமாநிலங்களோடுஒப்பிடுவதேதவறு #முன்னேறியநாடுகளோடுதான்ஒப்பிட_வேண்டும்

இனி எவனாவது தமிழ்நாடு திராவிடக் கட்சிகளால் நாசமாய் போச்சு என்றால், வட மாநிலத்திற்கு போகும் அடுத்த ரயிலில் ஏற்றி அனுப்புங்கள்,,

Sunday, 29 December 2019

MUSLIMS MUST HAVE SEPARATE STATE -POET IQBAL FIRST SPEECH 1930 DECEMBER 29


MUSLIMS MUST HAVE SEPARATE STATE -POET IQBAL FIRST SPEECH 1930 DECEMBER 29



1930 –DECEMBER 29 அலகாபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கவிஞரும், மெய்யியலாளருமான முகமது இக்பால் முஸ்லிம்களுக்கென தனிநாடு கோரிக்கையைக் கொண்ட தனது இரு-நாடுகள் கொள்கையை முன்வைத்தார்.

சர் முகமது இக்பால் (Muhammad Iqbal, உருது: محمد اقبال; நவம்பர் 9, 1877 – ஏப்ரல் 21, 1938) என்பவர் பிரித்தானிய இந்தியாவின் முஸ்லிம் கவிஞரும், இஸ்லாமிய மெய்யியலாளரும், அரசியல்வாதியும் ஆவார். உருது, அரபு, மற்றும் பாரசீக மொழிகளில் இவர் எழுதிய கவிதைகள் தற்காலத்தின் பெரும் இலக்கியப் படைப்புகளாகக் கருதப்படுகின்றன[1]. பிரித்தானிய இந்தியாவில் முஸ்லிம்களுக்கெனத் தனிநாடு கோரிய இவரது தூரநோக்கு பாகிஸ்தான் என்ற நாட்டைப் பின்னர் உருவாக்குவதற்கு ஊக்கமூட்டியது.

வாழ்க்கைக் குறிப்பு
விலை மதிக்க முடியாத படைப்புகளுக்கு சொந்தக்காரராக விளங்கிய அல்லாமா இக்பால் 1873 பிப்ரவரி 22 இல் பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே எழுதுவதில் ஆர்வம் மிகுந்தவராக விளங்கியவர்.

மௌலானா அபுல் அலா மௌதுதியின் சந்திப்பு அல்லாமா இக்பாலின் சிந்தனையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அவரது கவிதைப் பயணம் ஆன்மிக வெளிச்சம் மிகுந்த பாதையில் அமைந்தது. மாணவப் பருவத்திலேயே மிகவும் திறமையாகத் திகழ்ந்த இக்பால் இங்கிலாந்தில் சட்டம் பயிலும் மாணவராக இருந்தபோதும் கூட தனது எழுத்துப் பணியினைத் தொடர்ந்தார்.

இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் தனது படிப்பை முடித்துக் கொண்ட இக்பால் சட்டத்துறையில் தொழிலை ஆரம்பித்தார். ஆனாலும் அரசியல், பொருளாதாரம், வரலாறு, மெய்யியல், மற்றும் சமயம் ஆகிய துறைகளிலேயே அவர் நிறைய எழுதினார்.

இக்பால் அவர்களால் எழுதப்பட்ட "சாரே ஜகான் சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா ஹமாரா" என்று தொடங்கும் பாடல் 1947 ஆகஸ்ட்டில் ஆங்கிலேயர் விரட்டியடிக்கப்பட்டு இந்தியாவின் நாடாளுமன்றத்தில் முதன்முதலாக ஒலித்தது. மறைந்த நேரு அவர்களால் அதிகம் கையாளப்பட்ட பாடலும் இதுவாகும்.

Saturday, 2 November 2019

STATE DIVISION AS PER LANGUAGE WISE



STATE DIVISION AS PER LANGUAGE WISE


1917ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் கட்சி மொழிவாரி மாநில காங்கிரஸ் அமைக்க ஒப்புக் கொண்டுவிட்டது என்பதுதான், மொழிவழி மாநிலம் பிறந்ததற்கு ‘கரு’ப்பருவம். மொழிவாரி காங்கிரஸ் சீரமைப்பை அண்ணல் காந்தி ஊக்குவித்தார், ஆதரித்தார்.

1937ல் நேருவின் கருத்தும் இதுவாகத்தான் இருந்தது. ஆனால் 1947ல்அவர் வேறு சிந்தனை கொண்டிருந்தார். நாடு அப்போதுதான் இந்தியா-பாகிஸ்தான் என மத அடிப்படையில் பிரிக்கப்பட்டு இருந்தது. மேலும், அதை மொழிவாரியாகப் பிரிப்பது, இந்திய யூனியன் சிதறுவதை ஊக்குவிப்பதாகாதா? என்று நேரு அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

1947 நவம்பரில் “மொழிவாரி மாநில சீரமைப்பு ஒத்திப் போடப்படுவது தற்போது உள்ள சூழ்நிலையில் ஓரளவு நியாயமானதே” என்று அண்ணல் காந்தியடிகளும் நேருவின் கருத்தை வழிமொழிந்து எழுதினார். தற்காலிகமாக மொழிவாரி மாநிலப் பிரிவினை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு மராத்திய மொழி பேசும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தனி மராத்திய மாநிலத்தை வற்புறுத்தினர். குஜராத்தியைத் தாய்மொழியாகக்கொண்ட காங்கிரஸ் உறுப்பினர்கள், அதேபோல அவர்களுக்கு ஒரு சொந்த மாநிலம் கோரினர். தெலுங்கு, கன்னடம், மலையாளம் அல்லது ஒரியா மொழி பேசுபவர்களின் லட்சியமும் அவ்வாறே இருந்தது.

இக்கூக்குரலை அமைதிப்படுத்த ஒரு புதிய குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் பிரதமராக இருந்த நேரு, உள்துறை அமைச்சராக இருந்த வல்லபபாய் படேல், காங்கிரஸ் கட்சியின் வரலாறு எழுதிவரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான பட்டாபி சீதாராமைய்யா மூவரும் இருந்தனர். இதை ஜே.வி.பி. குழு என்று அழைக்கப்பட்டது.

இக்குழு மொழிவாரி மாநிலக் கொள்கைக்கு எதிரான கருத்தைத் தெரிவித்தது. “மொழி ஒன்றிணைக்கும் சக்தி மட்டுமல்ல, பிரிக்கும் சக்தியும்கூட” என்று வாதிட்டது. ஆனால் காலம் ஜே.வி.பி. குழுவின் கருத்தை நிராகரித்தது.


1952ல் ஆந்திராவில் பொட்டி ஸ்ரீராமுலு ஆந்திர மாநிலப் பிரிவினைக்காக உண்ணாவிரதம் இருந்தார். 58 நாள் உண்ணாவிரதத்தில் பொட்டி ஸ்ரீராமுலு டிசம்பர் 15ம் நாள் இறந்தார். அவருடைய மரணச்செய்தி கலவரத்தை விளைத்தது. இதனால் மேலும் பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியாத கிளர்ச்சிகள் ஏற்படலாம் என்ற அச்சத்தால் நேருவும் வழிக்கு வந்தார். ஸ்ரீராமுலு மறைவுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு “ஆந்திர மாநிலம் அமையும்” என்ற அறிவிப்பை வெளியிட்டார். ஆந்திரப் பிரதேசம் பிரதமர் நேருவின் விருப்பமின்றியே உருவானது.


மொழிவாரி மாநில கோரிக்கைகள் வலுவடைந்தது. இந்த மொழிவாரி சிக்கலைத் தீர்ப்பதற்கான பரவலான கொள்கை குறித்து பரிந்துரை செய்ய, “மாநிலச் சீரமைப்பு ஆணையம்” ஒன்றை அமைத்தது மத்திய அரசு. அந்தக் குழுவில் நீதிபதியான எஸ். பசல் அலி தலைவராகவும், வரலாற்றாசிரியரும், ஐ.சி.எஸ். அதிகாரியுமான கே.எம்.பணிக்கர் மற்றும் சமூகத் தொண்டர் எச்.என்.குன்ஸ்ரு இருவரும் குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

இந்த ஆணையம் 1954, 1955 ஆண்டுகளில் இந்தியா எங்கும் பயணம் செய்தது. பதினெட்டு மாதக் கடுமையான பயிற்சிக்குப் பிறகு 1955 அக்டோபர் மாதம் அறிக்கையைச் சமர்ப்பித்தனர். 1956 நவம்பர் முதல் தேதியன்று 21 மொழி வாரி மாநிலங்கள் நடைமுறைக்கு வந்தன.

ஆந்திரப் பிரிவினையின்போதே, "சென்னை நகரம்" ஆந்திராவிற்கு இல்லை, சென்னை மாகாணத்திற்கே என முடிவாகிவிட்டது. வடக்கு எல்லை கிளர்ச்சியின்போது, அதுபற்றி விசாரணை நடத்தத் தனியாக எல்லைக் கமிஷன் நியமிப்பதாக பிரதமர் நேரு உறுதி கூறிவிட்டதால், அந்தப் பிரச்சினையும் பசல் அலி கமிஷன் விசாரணைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.

ஆகவே அகில இந்திய ரீதியில் மொழிவாரி மாகாணங்கள் அமைப்பது பற்றியும், தமிழக அளவில் திருவாங்கூர் – கொச்சி சமஸ்தானங்களிலுள்ள தமிழ் தாலுக்காக்கள் பற்றியுமே பசல் அலி கமிஷன் சென்னையில் விசாரணை நடத்தியது.

திருவாங்கூர் – கொச்சி ராஜ்யத்தில் உள்ள கொச்சின், சித்தூர், தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டை, நெய்யாற்றின் கரை, விளவங்கோடு, கல்குளம், அகஸ்தீசுவரம், தோவாளை ஆகிய ஒன்பது தாலுக்காக்களை தமிழ் மாநிலத்தில் அதாவது சென்னை மாகாணத்தில் சேர்க்க வேண்டும் என்று சென்னை மாகாண அரசு கோரியது.

ஆனால், கேரள அரசு வேறு மாதிரியான கோரிக்கையை வலியுறுத்தியது. "சென்னை மாகாண அரசு சொல்வதுபோல செய்தால், கேரள ராஜ்யத்திற்குப் பெரும் கேடு (?) ஏற்படும். அந்தத் தாலுக்காக்களில் வாழும் மக்களின் நலன்களுக்குத் தீங்கு ஏற்படும். இதற்கு மொழி ஒரு ஆதாரமாக இருந்தாலும், அதையே ஒரே ஆதாரமாகக் கொள்ளக்கூடாது. பூகோள, சரித்திர, நிர்வாக, பொருளாதாரக் காரணங்களும், புதிய மாநிலங்கள் அமைக்கும் விஷயத்திலும் சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டும். இந்த நிலைகளைக் கொண்டு சிந்தித்துப் பார்த்தால், தமிழ்த் தாலுக்காக்களைத் திருவாங்கூர் – கொச்சி ராஜ்யத்தில் இருந்து பிரிப்பதற்குக் காரணமே இராது. எனவே அவை கேரள மாநிலத்திலேயே இருக்க வேண்டும்.”

“தேவிகுளம், பீர்மேடு தாலுக்காக்களில் தோட்டத் தொழிலே அதிகம். இந்தத் தாலுக்காக்களில் நிலையான குடிமக்கள் கிடையாது. தோட்டக் காடுகளில் ஒரு வாரத்திற்கு வேலை இல்லையென்றால், இந்தப் பகுதியில் 100க்கு ஒருவர்கூட தங்கியிருக்க மாட்டார்கள். பீர்மேடு, தேவிகுளம் தாலுக்காக்களில் தமிழ் பேசுகிறவர்களும் மலையாளம் பேசுகிறவர்களும் சரிசமமான எண்ணிக்கையில் இருக்கிறார். (இது கேரள அரசு தந்த தவறான தகவல். அப்போது, இந்தத் தாலுக்காக்களில் தமிழர்கள் 82 சதவிகிதம் பேர் இருந்தனர்.) தேவிகுளம், பீர்மேடும்தான் கேரள மாநிலத்திற்கு மலைவாசப் பகுதிகளை அளிக்கவல்லன. மாநிலத்தின் எல்லா முக்கிய நதிகளும் இவ்விரு தாலுக்காக்களில்தான் உற்பத்தி ஆகின்றன. இவற்றில்தான் இந்த மாநிலத்தின் ஹைடிரோ மின்சார அலுவலகமும் பவர் ஸ்டேஷன்களும் இருக்கின்றன.”

“தோவாளை, அகஸ்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு ஆகிய நான்கு தமிழ்த் தாலுக்காக்களும் மிகவும் செல்வம் பொருந்திய பகுதிகளாதலால் இவை கேரளத்திற்குத் தேவைப்படுகின்றன. மேலும், இவைகள் மீன்பிடிக்கும் இடங்களைக் கொண்டிருக்கின்றன. இங்கே முக்கியமான உலோகங்களும், நெல் வயல்களும் உள்ளன.”

கேரளத்தவர்கள் தமிழகத்திலிருந்து கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், உதகமண்டலம் (ஊட்டி) ஆகியவற்றைப் பிரித்தெடுத்து, ஐக்கிய கேரளத்துடன் இணைக்கவேண்டும் என்று விண்ணப்பித்தனர். திருவாங்கூர், கொச்சி ராஜ்யத்தில் உள்ள ஒன்பது தாலுக்காக்களையும் ஐக்கிய கேரளத்திற்கே உரிமையாக்கிவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இதுபோன்ற ஆக்கிரமிப்பு வெறியை அன்றைக்கே கேரளத்தினர் வெளிப்படுத்தினர்.

சுருங்கச் சொன்னால், “மலையாள மொழி வழங்கும் பகுதிகளில் எல்லாம் ஒரு அங்குலம் விடாமல் – மலையாளிகளுக்கே! இது மொழி அடிப்படையில்! இத்துடன் மலையாள மொழி வழங்கும் கேரள நாட்டின் எல்லையில் உள்ள தமிழ்த் தாலுக்காக்களும் மலையாளிகளுக்கே! இது தேவையின் அடிப்படையில்!” என்பதே கேரளாவின் கோரிக்கையாக இருந்தது.

இவர்கள் இப்படி கேட்கும் அளவிற்குத் துணிவு வந்ததற்குக் காரணம், மலையாளியான கே.எம்.பணிக்கர் குழுவில் அங்கம் வகித்ததாகும். மலையாளி எங்கிருந்தாலும் மலையாளிதானே!

பசல்அலி கமிஷன் (மொழிவாரி மாநிலச் சீரமைப்புக் கமிஷன்) தென்னிந்தியா வந்து விசாரணை நடத்தியபோது மலையாளிகளின் மனப்போக்கு எப்படி இருந்தது? என்பதற்கு, பிரபல கேரள வழக்கறிஞர் மன்னார் திரு. கோவிந்தப்பிள்ளை என்ற மலையாளி "கொல்ல கொளத்தூர்" என்ற ஊரில் கூடிய நாயர் சமுதாய சங்கக் கூட்டத்தில் பேசிய பேச்சுதான் உதாரணம்.

“இந்தியாவில் எங்கெங்கும் மலையாளிகள் செல்வாக்குப் பெற்றுள்ள காலம் இது. சர்தார் கே.எம்.பணிக்கர் கூறுவதுதான் பிரதமர் நேருவுக்கு வேதவாக்காகும். பணிக்கரும் அவரது கூட்டத்தினரும் நினைத்தது போலவே காரியங்கள் நடக்கின்றன.”

“சர்வதேச நெருக்கடிகளுக்குப் பரிகாரம் காணும் அதிகாரப் பதவியில் அமர்த்தப்பட்டிருப்பவர் ஒரு மலையாளி.”

“பிரதமரின் வெளிநாட்டுக் கொள்கைகளை அமலாக்குபவர் ஒரு மலையாளி.”

“பீஜிங்கிலும், மாஸ்கோவிலும், வாஷிங்டனிலும், இன்று பாரத நாட்டின் சார்பில் பிரதிநிதித்துவம் வகிப்பவர்கள் மலையாளிகளே.”

இந்திய ஜனாதிபதியின் மூன்று மெய்க்காப்பாளர்களில் இருவர் மலையாளிகளே.”

“நேருவின் அந்தரங்கச் செயலாளரும் ஒரு மலையாளிதானே!”

- (தினமலர் – 15-9-1955)

இந்தப் பின்னணி பலத்தால்தான் கேரளத்தவர்கள் ‘ஐக்கிய கேரளம்’ என்ற பெயரில் தமிழகத்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டு ‘ஆதிக்க கேரளம்’ அமைத்துவிட்டார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பசல் அலி கமிஷன் (மொழிவாரி மாநிலச் சீர்திருத்த கமிஷன்) பரிந்துரை வருமாறு :

“சென்னை மாநிலத்தில் உள்ள மலபார் மாவட்டத்தைக் கேரளத்தோடும், தென் கன்னட மாவட்டத்தை கன்னடத்தோடும் சேர்த்துவிட வேண்டும்.”

“திருவாங்கூர் – கொச்சி ராஜ்யத்தில் உள்ள கல்குளம், விளவங்கோடு, அகஸ்தீசுவரம், செங்கோட்டை ஆகிய தமிழ் வழங்கும் தாலுக்காக்களைத் தமிழ்நாட்டுடன் சேர்த்து தனி ராஜ்யம் அமைக்க வேண்டும். அதன் பெயர் ‘சென்னை ராஜ்யம்’ என்றே இருக்க வேண்டும்.”

“சென்னை நகரம் தமிழ் மாநிலத்திற்குரியதாய் அதன் தலைநகரமாகச் செய்யப்பட வேண்டும்.”

“சென்னை மாநில - ஆந்திர மாநில எல்லைச் சிக்கலை அதற்கென நியமிக்கப்படவிருக்கும் ‘எல்லைக் கமிஷன்’ கிராம அடிப்படையில் திருத்தி அமைப்பதை கமிஷன் ஏற்றுக்கொள்கிறது.”

இதுதான் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பசல் அலி கமிஷன் தீர்ப்பாக இருந்தது.

தேவிகுளம் - பீர்மேடு தாலுக்காக்களைத் தமிழகத்திற்குத் தரமுடியாது என்பதற்கு கமிஷன் கூறியிருந்த காரணங்கள் எல்லாம் போலித்தனமானவை. ஒருதலைபட்சமானவை. நடுவு நிலையில் இருந்து பிறழ்ந்தவை. மாநிலங்களை மொழி அடிப்படையில் திருத்தி அமைக்க ஒப்புக்கொண்ட பசல் அலி கமிஷன் தமிழக – கேரள எல்லைகளைத் திருத்தி அமைப்பதில் மொழி அடிப்படையை ஏற்க மறுத்திவிட்டது.

“தேவிகுளம் – பீர்மேடு தாலுக்காக்கள் விஷயத்தில் மொழிவாரி கொள்கையை கமிஷன் முக்கியமாகக் கருதமுடியாது.”

“பல்வேறு பொருளாதார காரணங்களையும், மற்ற காரணங்களையும் உத்தேசித்து தேவிகுளம் – பீர்மேடு தாலுக்காக்கள் திருவாங்கூர் – கொச்சி ராஜ்யத்திற்குத் தேவையானவை.” என்பது கமிஷனின் வாதமாக இருந்தது.

தேவிகுளம் – பீர்மேடு போன்ற தமிழகத்தின் எல்லைப் பகுதிகள் கொள்ளைபோனது மட்டுமின்றி ‘தமிழ்நாடு’ என்கிற தன்மானப் பெயர் கோரிக்கையை ஏற்க மறுத்து ‘சென்னை ராஜ்யம்’ என்று அன்னியர் வைத்த அவமானப் பெயரே நீடிக்க வேண்டுமென்று கமிஷன் தந்த பரிந்துரையை இந்திய அரசும் தனது பிரகடனத்திலே உறுதிப்படுத்தியது.

இந்த நேரத்தில் கேரள மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பட்டம் தாணுப் பிள்ளை, ஒரு காரியம் செய்தார்.

தேவிகுளம், பீர்மேடு பகுதியில் தமிழர்களின் பெரும்பான்மையைக் குறைக்க புதிதாக மலையாளிகளைக் குடியேற்றினார். கொச்சின் – திருவாங்கூர் சிறைச்சாலைகளில் இருந்த ஆயுள் தண்டனைக் கைதிகளையும், மற்ற கைதிகளையும் விடுதலை செய்தார்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஏக்கர் விவசாய நிலம், கூட்டுறவுக் கடன் வசதி, ரொக்கப்பணமாக 5000 ரூபாய் கொடுத்து, தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் குடியேறச் செய்தார்.
அப்படிக் குடியேறிய பகுதிகள்தான் இப்போது கேரளாவில் இருக்கிற கம்பம்மெட்டு, தூக்குப்பாலம், ஆனவிலாசம், உடும்பன்சோலை, பாரத்தோடு போன்ற பகுதிகள்.
மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதற்கு மாறாக நேரு அவர்கள் திடீர் பிரகடனம் ஒன்றை வெளியிட்டார். இந்தியாவை ஐந்து ராஜ்யங்களாகச் செய்யும் ‘தட்சிண ராஜ்யம்’ என்பது அது.

அவை தட்சிண (தெற்கு) ராஜ்யம், உத்திர (வடக்கு) ராஜ்யம், மேற்கு ராஜ்யம், கிழக்கு ராஜ்யம், மத்திய ராஜ்யம் என்பனவாகும்.

தட்சிண ராஜ்யம் என்பது தமிழகத்தின் எல்லைப் பகுதிகளை இழந்திருந்த தமிழகத்திற்கு, தீப்பிடித்த வீட்டில் இடியும் விழுந்ததைப் போன்று வேதனையைத் தந்தது.

தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள், கிளர்ச்சிகள், கடையடைப்புகள், பந்த் போன்ற போராட்டங்கள் வெடித்தன.போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அரசியல் கட்சியினர் கூடிப்பேசி, கூட்டணி கண்டனர். 27-1-1956ம் நாளன்று சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள திரு. ஜி. உமாபதி என்பவரது இல்லத்தில் கூட்டம் நடந்தது.

ஆளும் காங்கிரஸ் சார்பில் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தி.மு.கழகம் சார்பில் அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், ஜஸ்டிஸ் கட்சி சார்பில் சர் பி.டி.ராஜன், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ப.ஜீவானந்தம், மணலி கந்தசாமி, தமிழரசு கழகம் சார்பில் ம.பொ.சிவஞானம், ஜி. உமாபதி, தி.க.சண்முகம், மேலும் பாவேந்தர் பாரதிதாசன், சி.பா.ஆதித்தனார், நாரண.துரைக்கண்ணன், பன்மொழிப்புலவர் க. அப்பாதுரை மற்றும் சில சிறிய அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். போராட்டக் குழுவிற்குத் தலைவராக பி.டி.ராஜன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.

ஹர்த்தால் போராட்டம் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது. ஹர்த்தால் வெற்றிபெற பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. அண்ணா அவர்கள் நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் பேசி மக்கள் ஆதரவைத் திரட்டினார். சேலம் மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டியிலும், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கள்ளக்குறிச்சியிலும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுவிட்டது.

நேரு கொண்டுவந்த தட்சிணப் பிரதேசத் திட்டம் அவராலேயே திரும்பப் பெறப்பட்டது. தமிழ் மாநிலம் அமைவது உறுதியாகிவிட்டது. இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் தமிழகத்திற்குப் பெறமுடியாமலேயே போய்விட்டது.

தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை இழந்ததன் வலியை முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையில் இப்போது அனுபவிக்கிறோம். முல்லைப்பெரியாறு அணை தமிழ்நாட்டில் சேர்ந்திருந்தால் முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டில் இருந்திருக்கும். இடுக்கி அணையும் தமிழ்நாட்டில் இருந்திருக்கும்.

Monday, 3 September 2018

INDORE ,THE PRINCY STATE





INDORE ,THE PRINCY STATE

Maratha Raj (Holkar Era)

By 1720, the headquarters of the local pargana were transferred from Kampel to Indore, due to the increasing commercial activity in the city. On 18 May 1724, the Nizam accepted the rights of the Maratha Peshwa Baji Rao I to collect chauth (taxes) from the area. In 1733, the Peshwa assumed the full control of Malwa, and appointed his commander Malhar Rao Holkar as the Subhedar (Governor) of the province.[19] Nandlal Chaudhary accepted the suzerainty of the Marathas.

On 29 July 1732, Bajirao Peshwa-I granted Holkar State by merging 28 and one-half parganas to Malhar Rao Holkar, the founding ruler of Holkar dynasty. His daughter-in-law Ahilyabai Holkar moved the state's capital to Maheshwar in 1767, but Indore remained an important commercial and military centre.

British Occupation (Indore/Holkar State)

In 1818, the Holkars were defeated by the British during the Third Anglo-Maratha War, in the Battle of Mahidpur by virtue of which the capital was again moved from Maheshwar to Indore. A residency with British resident was established at Indore, but Holkars continued to rule Indore State as a princely state mainly due to efforts of their Dewan Tatya Jog. 



During that time, Indore was established the headquarters of British Central Agency. Ujjain was originally the commercial centre of Malwa. But the British administrators such as John Malcolm decided to promote Indore as an alternative to Ujjain, because the merchants of Ujjain had supported anti-British elements.[2

















Rulers (title Maharaja Holkar)[edit]


NameBirthDeathReign
Malhar Rao I Holkar I169417661731 – 20 May 1766
Male Rao Holkar II1745176720 May 1766 – 5 Apr 1767
Ahalya Bai Holkar (III)(f), regent17251795Apr 1767 – 13 Aug 1795
Tukoji Rao I Holkar IV1723179713 Aug 1795 – 29 Jan 1797
(also listed as co-ruler from Apr 1767)
Kashi Rao Holkar V?180829 Jan 1797 – Jan 1799
Khande Rao I Holkar VI17981806Jan 1799 – 1806
Yashwant Rao I Holkar177618111806 – 27 Oct 1811
(regent from Jan 1799)
Malhar Rao III Holkar VII18011833Nov 1811 – 27 Oct 1833
Maharani Tulsi Bai (f), regent?1817Nov 1811 – 20 Dec 1817
Martand Rao Holkar VIII1830184927 Oct 1833 – 2 Feb 1834
Hari Rao Holkar IX179518432 Feb 1834 – 24 Oct 1843
Khande Rao II Holkar X1828184424 Oct 1843 – 17 Feb 1844
Maharani Maji (f), first regency?184924 Oct 1843 – 17 Feb 1844
Tukoji Rao II Holkar XI
(knighted 25 Jun 1861)
1835188627 Jun 1844 – 17 Jun 1886
Maharani Maji (f), second regency (s.a.)?184927 Jun 1844 – Sep 1849
Shivaji Rao Holkar XII
(knighted 30 Jun 1887)
1859190817 Jun 1886 – 31 Jan 1903
Tukoji Rao III Holkar XIII
(knighted 1 Jan 1918)
1890197831 Jan 1903 – 26 Feb 1926
Yashwant Rao II Holkar XIV
(knighted 1 Jan 1935)
1908196126 Feb 1926 – 15 Aug 1947
Usha Devi Holkar,1961Present


Sunday, 2 September 2018

BARODA, STATE NEW NAME VADODARA


BARODA STATE NEW NAME VADODARA




Baroda State was a former Indian State. Vadodara's more recent history began when the Maratha general Pilaji Gaekwad conquered Songadh from the Mughals in 1726.[12] Before the Gaekwads captured Baroda, it was ruled by the Babi Nawabs, who were the officers of the Mughal rulers. Most notably, from 1705–1716, Sardar Senapati Khanderao Dabhade led the Maratha Empire forces in Baroda. Except for a short period, Baroda continued to be in the reign of the Gaekwads from 1734 to 1948.



Initially detailed to collect revenue on behalf of the Peshwa in Gujarat, Pilaji Gaekwad remained there to carve out a kingdom for himself. Damajirao, who was son and successor of Pilaji Gaekwad, defeated the Mughal armies and conquered Baroda in 1734.[12] His successors consolidated their power over large tracts of Gujarat, becoming easily the most powerful rulers in the region.

After the Maratha defeat in the Third Battle of Panipat in 1761,[12]
control of the empire by the Peshwas weakened as it became a loose confederacy, and the Gaekwad Maharajas ruled the kingdom until it acceded to Independent Republic of India in 1949. In 1802,[12] the British intervened to defend a Maharaja that had recently inherited the throne from rival claimants, and Vadodara concluded a subsidiary alliance with the British that recognised the Kingdom as a Princely state






Kirti Mandir, the cenotaph of the Gaekwads in Baroda.
See also: Gaekwad dynasty
Pilaji Rao Gaekwad (1721–1732)
Damaji Rao Gaekwad (1732–1768)
Sayaji Rao Gaekwad I (1768–1778)
Fatehsinh Rao Gaekwad I (1778–1789)
Manaji Rao Gaekwad (1789–1793)
Govind Rao Gaekwad (1793–1800)
Anand Rao Gaekwad (1800–1818)
Sayaji Rao II Gaekwad (1818–1847)
Ganpat Rao Gaekwad (1847–1856)
Khande Rao Gaekwad (1856–1870)
Malhar Rao Gaekwad (1870–1875)
Sayajirao Gaekwad III (1875–1939)
Pratap Singh Gaekwad (1939–1951)

Fatehsinghrao Gaekwad II (1951–1988)

Friday, 2 February 2018

RAJKUMARI ,AMRIT KAUR OF KAPURTHALA STATE , BECAME FREEDOM FIGHTER BORN FEBRUARY 2, 1889



RAJKUMARI ,AMRIT KAUR 
OF KAPURTHALA STATE , BECAME 
FREEDOM FIGHTER BORN FEBRUARY 2, 1889






Rajkumari Amrit Kaur DStJ (2 February 1889 – 6 February 1964) was the first health minister of India and served for ten years in the capacity. She was an eminent Gandhian, a freedom fighter, and a social activist. Kaur was also a member of the Constituent Assembly, the body that framed the constitution of India.
Early life[edit source]
Amrit Kaur was born on 2 February 1889 in Lucknow, Uttar Pradesh (then United Provinces), India. She and her seven brothers were the eight children of Rājā Harnam Singh, a member of the princely family of Kapurthala State in the Punjab region[1] and his wife Rāni Harnām Singh, who was the daughter of a Bengali Presbyterian mother and an Anglican father.

She had her early education in Sherborne School For Girls in Dorset, England, and had her college education at Oxford University. After completing her education in England, she returned to India.







Ninety-three cases of penicillin, a gift from the Canadian Red Cross to India arrived at New Delhi in a special plane from Canada on 17 October 1947. Presenting the penicillin to Amrit Kaur, the then Health Minister in the Government of India at the Palam aerodrome. Dr. Jivraj Mehta, Director General of Health Services appears on the left and standing on the right is Sardar Balwant Singh Puri of the Indian Red Cross.













Participation in India's Freedom Movement[edit source]
Raja Harnam Singh enjoyed the confidence of many Indian National Congress (INC) party leaders, including Gopal Krishna Gokhale. After her return to India from England, she got interested in India's freedom struggle through the occasional visits of those leaders to her father's home. After meeting in person Mahatma Gandhi in 1919 in Bombay (Mumbai), she felt drawn to his thoughts and vision for the country. The notorious Jallianwala Bagh massacre of mostly Sikhs the same year by the British Raj troops convinced her of the necessity of India's gaining its freedom from the Raj. She joined the INC, and began to participate in India's struggle for freedom, and also in social reform activities in India.

She co-founded the All India Women's Conference in 1927, became its secretary in 1930, and president in 1933.

For her participation in Gandhi-led 240-mile Dandi March in 1930, British Raj authorities imprisoned her.

She went to live at Mahatma Gandhi's ashram in 1934, and took up the austere life there despite her aristocratic background. She served as one of Gandhi's secretaries for sixteen years.

As a representative of the INC, in 1937 She went on a mission of goodwill to Bannu, in the present day Khyber-Pakhtunkhwa. The British Raj authorities charged her with sedition and imprisoned her.

In 1942, she participated in the Quit India Movement, and the Raj authorities imprisoned her again.

She championed the cause of universal suffrage, and testified before the Lothian Committee on Indian franchise and constitutional reforms, and before the Joint Select Committee of British Parliament on Indian constitutional reforms.

She served as the Chairperson of the All India Women's Education Fund Association. She was a member of the Executive Committee of Lady Irwin College in New Delhi. The British Raj appointed her as a member of the Advisory Board of Education; (she resigned from that Board during the Quit India Movement). She was sent as a member of the Indian delegation to UNESCO conferences in London and Paris in 1945 and 1946, respectively. She also served as a member of the Board of Trustees of the All India Spinners' Association.

She worked to reduce illiteracy, and eradicate the custom of child marriages and the purdah system for women, which were prevalent then among some Indian communities.

Post-independence service[edit source]

She was a part of Constituent Assembly[2] and a member of Sub-Committee on Fundamental Rights and Sub-Committee on Minorities. [3] After India's independence, Amrit Kaur became part of Jawaharlal Nehru's first Cabinet; she was the first woman to hold Cabinet rank. She was assigned the Ministry of Health and was one of only two Indian Christians in the Cabinet (along with John Mathai). In 1950, she was elected the president of World Health Assembly, becoming the first woman and the first Asian to hold that post; for the first 25 years of that organisation's history, only two women held that post.

Kaur was a strong moving force behind the establishment of the All India Institute of Medical Sciences in New Delhi, and became its first president. For establishing the institute, she secured aid from New Zealand, Australia, West Germany, Sweden, and US. She and one of her brothers donated their ancestral property and house (named Manorville) in Simla, Himachal Pradesh to serve as a holiday home for the staff and nurses of the Institute.

Kaur served as the Chairperson of the Indian Red Cross society for fourteen years. During her leadership, the Indian Red Cross did a number of pioneering works in the hinterlands of India. She initiated the Tuberculosis Association of India and the Central Leprosy Teaching and Research Institute in Madras (Chennai). She started the Amrit Kaur College of Nursing and the National Sports Club of India.


From 1957 until her death in 1964, she remained a member of Rajya Sabha. Between 1958 and 1963 Kaur was the president of the All-India Motor Transport Congress in Delhi. Until her death, she continued to hold the presidencies of the All India Institute of Medical Sciences, the Tuberculosis Association of India, and the St. John's Ambulance Corps. She also was awarded the Rene Sand Memorial Award.

She died in New Delhi on 6 February 1964.[4][5] Today, her private papers are part of the Archives at the Nehru Memorial Museum & Library, at Teen Murti House, Delhi.[6]

Quotes[edit source]
About the Plight of Harijans:

It is a crying shame that the people who cater for our services are relegated in most towns to live in the most abominable dwellings—if, indeed we can call their hovels by this name.

About Child Marriages:

Child marriage is eating as a canker into the vitality of our national life. Girls become mothers while they are children themselves, and bring into the world offspring who are, in the very nature of things, the victims of disease and ill health.

About the Plight of Women:

The abolition of early marriage and purdah...will remove two of the main obstacles in the way of the spread of female education. Needless to say that the position of the widows in Hindu homes, marriage laws and the laws relating to the inheritance of property by women need radical alteration.

In the realm of educational reform, we have urged ever since our inception that there should be free and compulsory education. Again, as far as proper facilities for the female education are concerned until such time as universal, free and compulsory primary education as well as an adequate supply of infant and girls’ schools equipped with trained women teachers are introduced, we must continue to do our utmost to have the system of education in our existing institutions changed.