Showing posts with label KRISHNAN. Show all posts
Showing posts with label KRISHNAN. Show all posts

Wednesday, 15 September 2021

RAMYA KRISHNAN ,INDIAN ACTRESS BORN 1970 SEPTEMBER 15

 



RAMYA KRISHNAN ,INDIAN ACTRESS BORN 1970 SEPTEMBER 15


ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ்தெலுங்குமலையாளம்கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் நடித்துள்ளார்.


வாழ்க்கை வரலாறு[தொகு]

ரம்யா கிருஷ்ணன் 1970 செப்டம்பர் 15 இல் சென்னையில் ஓர் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் பரதநாட்டியம் குச்சுப்புடி நடனம் பயிற்சி எடுத்துப் பல மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

திரைப் பயணம்[தொகு]

ரம்யா கிருஷ்ணன் தனது 14 வயதிலே சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.[1][2] 1983-ஆம் ஆண்டு முதன் முதலாக வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் நடித்தார். அப்போது இவர் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார்.

30 ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்

இந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகை என்று சொன்னாலும் அனைவரும் கைகாட்டி சொல்வது ரம்யா கிருஷ்ணனை தான். அந்தக் காலத்தில் தன்னுடைய அழகாலும் வசீகரத்தாலும் இந்திய அளவில் பிரபலமாக பேசப்பட்ட நடிகையாக வலம் வந்தார்.

ஆரம்பத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜா எங்க ராஜா என்ற படத்தில் கூட நடித்துள்ளார். ஆரம்ப கட்டத்தில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த ரம்யா கிருஷ்ணனுக்கு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம்தான் கேப்டன் பிரபாகரன்.

கவர்ச்சி நிறைந்த இந்தக் கதாபாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வரத்தொடங்கினார். தெலுங்கு என்றால் சொல்லவா வேண்டும்.

தெலுங்கு, ஹிந்தி என கவர்ச்சியில் மிரள வைத்த ரம்யாகிருஷ்ணன் 2003ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவை சேர்ந்த கிருஷ்ணா வம்சி என்ற இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். அவரும் தெலுங்கில் மிகப்பெரிய இயக்குனர் தான்.




இவ்வளவு நாட்களாக ரம்யாகிருஷ்ணன் முதல் மனைவிதான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் இவர் கிருஷ்ணவம்சி என்பவருக்கு இரண்டாவது மனைவி என்ற குண்டை தூக்கிப் போட்டுள்ளார்


குடும்பம்[தொகு]

கிருஷ்ண வம்சி என்கின்ற தெலுங்கு இயக்குனரை ஜூன் 12 2003 இல் திருமணம் செய்து கொண்டார்.[3] இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

சமீபத்தில் இந்தியத் திரைப்பட உலகில் 1000 கோடி ரூபாய் வசூலித்த பாகுபலி திரைப்படம் வாயிலாக உலகம் முழுதும் பிரபலமானவர்களில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் ஒருவர். ரம்யா கிருஷ்ணன் பாகுபலி திரைப்படத்துக்கு முன்பே தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகினருக்கு நன்கு அறிமுகமானவரே. தற்போது திரைப்படங்கள் மட்டுமன்றி தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தனது சொந்தத் தயாரிப்பில் நெடுந்தொடர்களிலும் நடித்து வருகிறார்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் தனது படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள வசதியாக இருக்கும் பொருட்டு சென்னையில் அவரது பெற்றோர் மற்றும் சகோதரி மற்றும் ஒரே மகனுடன் சேர்ந்து தங்கியுள்ளார்.

ரம்யா கிருஷ்ணனின் கணவர் தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சி. இருவரும் ‘சந்திரலேகா’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய போது காதலாகி திருமணம் செய்து கொண்டனர். இடையில் கிருஷ்ண வம்சி ஹைதராபாத்திலும், ரம்யா சென்னையிலுமாக வாழ்ந்து வருவது பற்றி பல வதந்திகள் கிளம்பின. ரம்யா கிருஷ்ணன் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார். இருவரும் தனித் தனியே பிரிந்து வாழ்கிறார்கள் என பல விதமாக கிசு கிசுக்கள் பரவின. தற்போது பாகுபலிக்குப் பின் ரம்யாவிற்கான திரைப்பட அங்கீகாரம் வலுப்பட்டுள்ள நிலையில் தனது திருமண வாழ்வு குறித்த வதந்திகளுக்கு மனம் திறந்து பதிலளித்து ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். அவரது பதிலில் இருந்து;

நானும் எனது கணவரும் மனமொத்த தம்பதிகளாகவே வாழ்ந்து வருகிறோம். நான் ஒரு நடிகை, என் வாழ்வில் நான் விரும்பும் வரை தொடர்ந்து நடிக்க விரும்புவது எனது உரிமை. ஒரு நடிகையாக அது எனது கடமையும் கூட. அதை என் கணவர் நன்கு புரிந்து கொண்டார். அவர் ஒரு தெலுங்கு இயக்குனர் என்ற நிலையில் ஹைதராபாத்தில் தங்கி இருக்க வேண்டிய சூழலில் இருக்கிறார். நான் எனது நெடுந்தொடர் மற்றும் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகளில் தடையின்றி கலந்து கொள்ள வசதியாக இருக்கும் பொருட்டு சென்னையில் என் பெற்றோருடனும், மகனுடனும் வசிக்கிறேன். எங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாங்கள் சென்னையிலோ அல்லது ஹைதராபாத்திலோ சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இருவருக்கும் ஒன்றாக விடுமுறை வந்தால் அப்போது குடும்பமாக எங்காவது டூர் செல்கிறோம். தேவைப்படும் போதெல்லாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொடர்பில் தான் இருக்கிறோம்.

இப்போது நானும் என் கணவரும் மரத்தைச் சுற்றி டூயட் பாடி டான்ஸ் ஆடும் வயதில் இல்லை. எங்கள் இருவருக்கும் எதிர்காலக் கடமைகள் இருக்கின்றன. அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் இருவரிடையே நல்ல புரிதல் இருக்கிறது. நாங்கள் இருவருமே ஒருவரது வேலையை மற்றவர் புரிந்து கொண்டு மனமுவந்து விட்டுக் கொடுத்து ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகிறோம். எங்களது திருமண வாழ்க்கை முறிந்து விட்டது என்பதெல்லாம் வதந்தி என்று ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

நடித்துள்ள திரைப்படங்கள்[தொகு]

தமிழ்[தொகு]

YearFilmCo-starsNotes
1983வெள்ளை மனசுஒய்.ஜி.மகேந்திராமுதல் படம்
1985படிக்காதவன்ரஜினிகாந்த்அம்பிகா
1986முதல் வசந்தம்பாண்டியன்
1986சர்வம் சக்திமயம்ராஜேஷ்சுதா சந்திரன்மனோரமா
1987பேர் சொல்லும் பிள்ளைகமல்ஹாசன்ராதிகா
1988குங்குமக் கோடுமோகன்சுரேஷ்நளினி
1988காதல் ஓய்வதில்லைகார்த்திக்
1988தம்பி தங்க கம்பிவிஜயகாந்த்
1989மீனாட்சி திருவிளையாடல்விஜயகாந்த்ராதாபரதநாட்டியக் காட்சி மட்டும்
1991கேப்டன் பிரபாகரன்விஜயகாந்த்
1991வா அருகில் வாராஜா
1991சிகரம்ஆனந்த் பாபுஎஸ்.பி.பாலசுப்ரமணியம்ராதா
1992தம்பி பொண்டாட்டிரகுமான்சுகன்யா
1992வானமே எல்லைஆனந்த் பாபுமதுபாலா
1993பொன் விலங்குரகுமான்,சிவரஞ்சனி
1995ராஜா எங்க ராஜாகவுண்டமணிமனோரமா
1995அம்மன்சுரேஷ்சௌந்தர்யா
1999படையப்பாரஜினிகாந்த்சௌந்தர்யா,சிவாஜி கணேசன்சிறந்த நடிகைக்கான filmfare விருது
1999பாட்டாளிசரத்குமார்தேவயாணி
2000பட்ஜெட் பத்மநாபன்பிரபு
2000ரிதம்அர்ஜூன்மீனாஅய்யோ பத்திகிச்சு பாடல்
2000திருநெல்வேலிபிரபுரோஜாபாடல் காட்சி
2001ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரிராம்கி,சங்கவி
2001ராஜ காளி அம்மன்கரண்கௌசல்யா
2001நாகேஸ்வரிகரண்விவேக்
2001அசத்தல்சத்யராஜ்
2001வாஞ்சிநாதன்விஜயகாந்த்,சாக்ஷி
2001நரசிம்மாவிஜயகாந்த்பாடல் காட்சி
2002பஞ்ச தந்திரம்கமல் ஹாசன்,சிம்ரன்
2002பாபாரஜினிகாந்த்மனிஷா கொய்ராலா(சிறப்புத் தோற்றம்)
2002ஆயிரம் பொய் சொல்லிபிரபு
2002ஜுலி கணபதிஜெயராம்சரிதா
2002ஜெயாஸ்ரீமன்மனோரமா
2003அன்னை காளிகாம்பாள்லிவிங்ஸ்டன்
2003பாறைசரத்குமார்மீனா
2003குறும்புஅல்லாரி நரேஷ்ஒரு பாடல் மட்டும்
2003காக்கா காக்கசூர்யாஜோதிகாஒரு பாடல் மட்டும்
2004குத்துசிம்புதக தக தக தகவென ஆடவா பாடல்
2007குற்றப்பத்திரிகைராம்கி
2008ஆறுமுகம்பரத்பிரியாமணி
2010குட்டிப் பிசாசுசங்கீதாகிணத்தடி காளி
2011கனவு மெய்பட வேண்டும்
2013சந்திராசிறப்புத் தோற்றம்2015ஆம்பளவிஷால், ஹன்சிகா மோட்வானி,
2015பாகுபலி 1பிரபாஸ், ரானா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர்ராஜமாதா சிவகாமி தேவி
2017பாகுபலி 2பிரபாஸ், ரானா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர்ராஜமாதா சிவகாமி தேவி
2018தானா சேர்ந்த கூட்டம்சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், செந்தில்ஜான்சி ராணி / அழகு மீனா
2019சூப்பர் டீலக்ஸ்விஜய் சேதுபதி, சமந்தா, ஃபாஹாட் ஃபாசில்ஆபாச நடிகை லீலா
2020வந்தா ராஜாவா தான் வருவேன்சிம்பு, பிரபு
2020தேவ்கார்த்தி
2020உயர்ந்த மனிதன்அமிதாப் பச்சன், எஸ்.ஜே. சூர்யா22 ஆண்டுகளுக்குப் பிறகு அமிதாப்புடன்

Tuesday, 3 July 2018

ADOOR GOPALA KRISHNAN , MALAYALAM, DIRECTOR BORN 1941 JULY 3




ADOOR GOPALA KRISHNAN ,
MALAYALAM, DIRECTOR 
BORN 1941 JULY 3




உலகப் புகழ்பெற்ற கேரள திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan) பிறந்தநாள் இன்று (ஜூலை 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் அடூர் கிராமத்தில் (1941) பிறந்தவர். கலைத் திறன்மிக்க, குறிப்பாக கதகளி ஆடுவதில் சிறந்து விளங்கிய குடும்பம் என்பதால், சிறு வயதிலேயே கலைகளில் திறன் பெற்றிருந்தார். 8 வயதில் நாடகத்தில் நடிக்கத் தொடங்கினார்.

* பள்ளிப்படிப்பு முடிந்ததும் புனே திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து, திரைக்கதை மற்றும் சினிமா இயக்கத்தில் பட்டம் பெற்றார். திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், அரசியல் அறிவியல், பொது நிர்வாகத்தில் பட்டம் பெற்றார். திண்டுக்கல் அருகே அரசு அதிகாரியாக சிறிதுகாலம் பணியாற்றினார்.

* திருவனந்தபுரம் சித்திரலேகா ஃபிலிம் சொசைட்டி, சித்திரலேகா ஃபிலிம் கோ-ஆபரேட்டிவ் ஆகிய அமைப்புகளை நிறுவினார். இவை கேரள திரைப்படக் கலாச்சாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தன. இவரது முதல் திரைப்படமான ‘ஸ்வயம்வரம்’ 1972-ல் வெளிவந்தது. முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

* சினிமாவில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்தார். ‘சினிமா வெறும் கேளிக்கைக்கானது மட்டும் அல்ல; கலை, கலாச்சாரத்தை வளர்ப்பதிலும் முக்கிய பங்காற்ற முடியும்’ என்பதை தனது திரைப்படங்கள் மூலம் நிரூபித்தார்.

* திரைக்கதையும் இவரே எழுதினார். மென்மையாக கதை சொல்வ தோடு, சிந்திக்கவும் தூண்டியவர். வழக்கமான, பழைய பாணியை மாற்றி, புதுமையான உத்திகளை இவர் கையாண்டது, மகத்தான வெற்றியை ஈட்டித் தந்தது. இதை பல இயக்குநர்களும் பின்பற்றினர்.

* நிழல்குத்து, கதாபுருஷன், விதேயன் உள்ளிட்ட 11 முழு நீளப்படங்கள், கலாமண்டலம் கோபி, சோழப் பாரம்பரியம், யட்சதானம் உள்ளிட்ட ஏறக்குறைய 30 குறும்படங்கள் மற்றும் ஆவணப் படங்களையும் இயக்கியுள்ளார்.

* குறைந்த படங்களே இயக்கினாலும் இவரது அனைத்து படங்களும் உலகப்புகழ் பெற்றன. ‘ரியலிஸம்’ எனப்படும் எதார்த்தத்தை பிரதிபலிக்கும் சினிமாக்களையும் தாண்டி, புதுமையான கலைப்படங்களை அளித்தவர். கேரள சினிமா ரசிகர்களின் ரசனைத் தரத்தை உயர்த்தியவர் எனப் போற்றப்பட்டார்.

* ‘கொடியெட்டம்’, ‘எலிப்பத்தாயம்’, ‘முகாமுகம்’, ‘மதிலுகள்’ போன்ற சிறந்த படைப்புகள் மூலம் நாட்டின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்தார். இவரது கதை சொல்லும் பாணி தனித்துவம் வாய்ந்தது. ‘சினிமாயுடே லோகம்’, ‘நிர்மால்யம்’, ‘எலிபத்தாயம்’ உட்பட பல நூல்களையும் எழுதியுள்ளார்.

* பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், தாதாசாஹிப் பால்கே, ‘ஸ்வயம்வரம்’ படத்துக்காக தேசிய விருது, சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது 4 முறை, சிறந்த திரைக்கதை எழுத்தாளருக்கான தேசிய விருது 3 முறை, கேரள மாநில திரைப்பட விருதுகள், பிரிட்டிஷ் திரைப்பட இன்ஸ்டிடியூட் விருது, யுனிசெஃப் திரைப்பட பரிசு, ஓசிஐசி திரைப்பட பரிசு, இன்டர்ஃபிலிம் பரிசு என நீள்கிறது இவரது பரிசுப் பட்டியல்.

* இன்று 75-வது வயதில் அடியெடுத்து வைக்கும் ‘அடூர்’, 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள ‘பின்னேயும்’ திரைப்படம், படப்படிப்பு நிறைவடைந்து விரைவில் வெளிவர உள்ளது. உலகம் முழுவதும் உள்ள கலாரசிகர்களை தனது அடுத்த படைப்புக்காக ஆவலோடு காக்க வைத்திருக்கிறார் இந்த உலகப் புகழ்பெற்ற இயக்குநர்.

‘வெள்ளித்திரை’ என்ற வார்த்தையே வாழ்வின் எல்லையாக வரையறுத்துக் கொண்டு செயலாற்றும் பலர், நாளைய திரை உலகம் நம்மையும் உற்றுப் பார்க்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார்கள். திரையில் வரும் நட்சத்திரங்கள் அனைவரையும் மக்கள் அறிவர். ஆனால், அந்தத் திரையின் பின்னணியில் இருக்கும் படக்குழுவினரை இயக்கி, தரமான ஒரு படத்தை உருவாக்கும் இயக்குநர்களில் ஒரு சிலரை மட்டுமே மக்கள் அறிவர். அந்த வரிசையில், மலையாளத் திரை உலகில் தனக்கென ஒரு சிறப்பான முத்திரைப் பதித்த மாபெரும் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். இந்தியாவின் முதன்மையான திரைக் கலைஞர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணனின் இளமைக்கால வாழ்க்கை, குடும்ப உறவினர்கள், கடந்துவந்த வாழ்க்கைப் பாதை போன்றவற்றை ஒரு பகுதியாகவும், திரையுலக அனுபவங்கள், இயக்கிய திரைப்படங்கள் மற்றும் சக கலைஞர்களுடனான தொடர்புகள் போன்ற நிகழ்வுகளை மற்றொரு பகுதியாகவும் தொகுத்துள்ளார் நூலாசிரியர் கௌதமன் பாஸ்கரன். இவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘Adoor Gopalakrishnan’ என்ற நூலின் தமிழாக்கத்தை, இயல்பான நடையில் மொழிபெயர்த்துள்ளார் ராணிமைந்தன். அடூரின் திரைப்படங்கள் குறித்த சுவாரஸ்யமான நிகழ்வுகளும், படக்காட்சிகளும் இந்த நூலில் இடம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. அடூரின் எண்ணத்திரையில் ஓடிய வண்ணக்காட்சிகள் இப்போது எழுத்து வடிவில் உங்கள் ரசனைக்காக.

ஜெ நீங்கள் ஜெனரல் பிக்சர்ஸ் ரவி பற்றி எழுதியிருந்த அன்றைக்குத்தான் நான் அடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப்பத்தாயம் படத்தைப்பார்த்தேன். தொடர்ந்து வேகமாகச்செல்லும் படங்களைப் பார்த்து சலித்துப்போயிருந்ததனால் மெதுவாகப்போகும் இந்த கிளாஸிக் படம் என்னை மிகவும் கவர்ந்தது. பலகோணங்களில் தொடர்ந்து சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது. stunning visuals கொண்ட பல படங்களைப் பார்த்திருக்கிறேன். இப்படிச் சாதாரணமாகப் போகும் ஒரு படத்தின் visuals என் கண்ணிலே தங்கியிருக்கும் என்று நினைக்கவில்லை. முக்கியமான காரணம் என்னவென்றால் நானும் ஒரு எலிதான். எலிப்பத்தாய வாழ்க்கைதான். …


Monday, 1 January 2018

SUJATHA KRISHNAN MALAYSIAN TAMIL ACTRESS BORN 1979 ,JANUARY 1




SUJATHA KRISHNAN  
MALAYSIAN TAMIL ACTRESS 
BORN 1979 ,JANUARY 1






சுஜாதா கிருஷ்ணன் (Sujatha Krishnan) (பிறப்பு: ஜனவரி 1, 1979 - இறப்பு: ஜூன் 25, 2007) மலேசியாவில் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகை. சுஜாதா என்பது இவருடைய இயற்பெயர். இவர் நடித்த கடைசிப் படம் நூர்ஹாலிசா எனும் மலாய்ப் படமாகும். இவர் ஒரு பாடகியாக மலேசியத் திரையுலகில் அறிமுகமானார். பின்னர், பல தொலைக்காட்சித் திரைப்படங்கள், தொடர் நாடகங்களில் நடித்தார். உள்ளூர் விளம்பரப் படங்களிலும் நடித்து இருக்கிறார்.

பாராகுவாட் எனும் களைக் கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.[1] அப்போது அவருக்கு வயது 28. இறப்பதற்கு முன்னர் சுஜாதா கிருஷ்ணன் மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி வேல்பாரியின் தனிச் செயலாளராகப் பணிபுரிந்தார். வேல்பாரி, மலேசியாவின் பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த டத்தோ ஸ்ரீ சாமிவேலுவின் மூத்த புதல்வர் ஆவார்.

சுஜாதாவின் இறப்பில் மர்மங்கள் நிறைந்துள்ளன என்று மக்கள் கூட்டணியைச் சேர்ந்த மலேசிய நீதிக்கட்சி காவல் துறையிடம் புகார் செய்தது. சிலாங்கூர், காப்பார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். மாணிக்கவாசகம் அந்தப் புகார் மனுவைச் செய்தார். சுஜாதாவின் இறப்பிற்கும் சா. வேல்பாரிக்கும் தொடர்புகள் இருக்கலாம் என்றும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.[2]


வரலாறு[மூலத்தைத் தொகு]
சுஜாதா கிருஷ்ணன், கேமரன் மலையில் இருக்கும் ரிங்லெட் நகரில் பிறந்தவர். ரிங்லெட் தமிழ்ப்பள்ளியில் தன் தொடக்கக் கல்வியைத் தொடங்கினார். சிறு வயதாக இருக்கும் போதே அவருடைய குடும்பம் கோலாலம்பூருக்கு மாற்றலாகிச் சென்றது. தன்னுடைய தொடக்க, உயர்நிலைக் கல்வியைக் கோலாலம்பூரிலும் ஈப்போவிலும் பெற்றார்.

பேராக் மாநிலத்தின், ஈப்போ மாநகருக்கு அருகில் இருக்கும் ஜெலாப்பாங் புறநகர்ப் பகுதியில் வளர்ந்தவர். இப்போது அவருடைய இல்லம் தாமான் புஞ்சாக் ஜெலாப்பாங்கில் இருக்கிறது. பள்ளியில் படிக்கும் போதே பாடுவதில் திறன் பெற்று இருந்தார். உள்ளூர் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல பாடல் போட்டிகளிலும் வாகை சூடியுள்ளார்.

மலேசியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்[மூலத்தைத் தொகு]

மேல்படிப்பு படிப்பதற்காக கோலாலம்பூர் வந்த போது, மலேசியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. தனியார் நிறுவனங்களின் விளம்பர படங்களிலும் நடித்தார். மேடை நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்தார்.

இந்தக் காலக் கட்டத்தில் டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலுவின் புதல்வர் வேல்பாரியின் நட்பு கிடைத்தது. மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்த வேல்பாரிக்கு செயலாளினியாகப் பணியில் சேர்ந்தார். 1999இல் இருந்து 2007வரை அவருக்கு உதவியாளராக இருந்துள்ளார்.

தெரியாமல் குடித்துவிட்டேன்[மூலத்தைத் தொகு]

சுஜாதாவின் சொகுசு மாடிவீடு கோலாலம்பூர், ஈப்போ சாலையில் சாங் சூரியா கூட்டுரிமை வீட்டுப்பகுதியில் இருந்தது.[3] 2007 ஜூன் மாதம் 21ஆம் தேதி அவர் பாராகுவாட் எனும் களைக் கொல்லி மருந்தை அருந்தினார்.

சிலாங்கூர், கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். களைக் கொல்லி மருந்தை ‘தெரியாமல் குடித்து விட்டேன்’ என்று சொல்லி வந்தார்.[4] நான்கு நாட்கள் கழித்து 2007 ஜூன் 25இல் காலமானார்.

மலேசியத் திரைபட நடிகையாக இருந்து புகழ் பெற்றதைக் காட்டிலும், அவருடைய இறப்பிற்குப் பின்னர்தான் அவர் மிகவும் பிரபலம் அடைந்தார். அவருடைய இறப்பைப் பற்றிய விசாரணைகள் மலேசிய நீதிமன்றங்களில் நடைபெற்ற போது, முடிவுகளை அறிந்து கொள்வதில் மலேசிய மக்கள் ஆர்வம் காட்டினர்.

மரண விசாரணை[மூலத்தைத் தொகு]
சுஜாதா இறந்த பின்னர், அவருடைய இறப்பில் சூது நடந்து இருக்கலாம். அது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று காப்பார் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் எஸ். மாணிக்கவாசகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.[5] மலேசியத் தலைமை காவல்துறை சுயேட்சையான விசாரணைக் குழு ஒன்றை அமைத்து உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று மாணிக்கவாசகம் கேட்டுக் கொண்டார்.[6]

சுஜாதாவின் இறப்பிற்கும் வேல்பாரிக்கும் தொடர்புகள் உள்ளன என்று எஸ். மாணிக்கவாசகம் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார். இருவரும் காதலர்களாக இருந்தனர். சுஜாதா வாங்கிய 420,000 மலேசிய ரிங்கிட் சொகுசு வீட்டிற்கு, வேல்பாரி 200,000 மலேசிய ரிங்கிட் அன்பளிப்பாகக் கொடுத்து இருக்கிறார்.[7]

அத்துடன் 229,095 மலேசிய ரிங்கிட் மதிப்புள்ள ’மாஸ்டா ஆர்.எக்ஸ் 8’ ரக விலையுயர்ந்த காரையும் வாங்கிக் கொடுத்து இருக்கிறார் என்று குற்றம் சாட்டினார். பின்னர், நீதிமன்றத்தின் விசாரணைகளில் அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என நிரூபிக்கப்பட்டன.[8]

வேல்பாரி மறுப்பு[மூலத்தைத் தொகு]

2009 மார்ச் 16ஆம் தேதி சுஜாதாவின் திடீர் மரணம் குறித்த மரண விசாரணை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது.[9] மரண விசாரணை நீதிபதி முகமட் பாய்சி செ அபு என்பவரின் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அரசு தரப்பில் அரசுக் குற்றவியல் வழக்குரைஞர் கீதன் ராம் வின்செண்ட் வழக்கு நடத்தினார்.[10] வேல்பாரியின் சார்பில் வழக்குரைஞர் கே.குமரேந்திரன் வாதாடினார்.

விசாரணையின் போது, தனக்கும் சுஜாதாவிற்கும் எவ்வித நெருக்கமான தொடர்புகள் இல்லை என்றும், தங்களுக்குள் உரிமையாளர் - ஊழியர் எனும் சாதாரண உறவு மட்டுமே இருந்தது என்றும் வேல்பாரி (வயது 49) கூறினார்.[11] அலுவலக நிகழ்ச்சிகளுக்காகத் தான் போகும் இடங்களுக்கு தன்னுடன் சுஜாதாவும் வருவார் என்று வேல்பாரி தெரிவித்தார்.[12]

காதல் உணர்வுகள் இல்லை[மூலத்தைத் தொகு]

சுஜாதாவிற்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் மிகையாகச் செலவு செய்ததை வேல்பாரி ஒப்புக் கொண்டார். ஆனால், தனக்கும் சுஜாதாவிற்கும் காதல் உணர்வுகள் இருந்தன என்பதை மட்டும் முற்றாக மறுத்துவிட்டார்.

வேல்பாரியும் அவருடைய மனைவி ஷைலா நாயரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட திருமணப்படம் ஒன்று கிழிக்கப்பட்டு, சுஜாதா தங்கி இருந்த வீட்டின் படுக்கை அறையில் கிடந்தது. அதைப் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்று வேல்பாரி கூறினார்.[13][14]

இந்தியாவில் சுஜாதாவிற்கு மருத்துவ சிகிச்சை[மூலத்தைத் தொகு]

சுஜாதாவிற்கு கி. யுகேந்திரன் (28), கி. சுரேந்திரன் (26) என இரு சகோதரர்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில் தங்கிப் படிப்பதற்கான செலவுகளை தான் ஏற்றுக் கொண்டதாக வேல்பாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.[15][16]

சுஜாதாவுக்கு அடிக்கடி வயிற்றுவலி வரும். அவரைச் சிறப்பு மருத்துவரிடம் வேல்பாரி அழைத்துச் செல்வார். சுஜாதாவிற்கு கர்ப்பப்பையில் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஈப்போ சாலையில் இருக்கும் டாமாய் மருத்துவமனைக்கு, சுஜாதாவை அவருடைய இரு தம்பிகளுடன் அழைத்துச் செல்வதும் உண்டு.[17]

அந்த நோயைக் குணப்படுத்த அவரை இந்தியாவிற்கும் அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சிகள் வேல்பாரியின் மனைவி ஷைலா நாயருக்குத் தெரியும். ஆனால், அவர் தங்களுடன் சேர்ந்து இந்தியாவிற்கு வந்தது இல்லை.[18]

ஆஸ்திரேலியாவில் சுஜாதாவின் தம்பிகள்[மூலத்தைத் தொகு]
சுஜாதாவையும் அவருடைய குடும்பத்தாரையும் இரு முறை இந்தியாவிற்கு அழைத்துச் சென்றதாகவும் அதற்கான செலவுகளைத் தானே ஏற்றுக் கொண்டதாவும் நீதிமன்றத்தில் வேல்பாரி மேலும் கூறினார். ஆஸ்திரேலியாவில் படித்த சுஜாதாவின் தம்பிகளைப் பார்க்க வேல்பாரியும் சுஜாதாவும் அங்கு ஒன்றாகவே சென்றனர்.

அந்தச் சமயங்களில் வேல்பாரியின் மனைவி ஷைலா நாயர் அவர்களுடன் வெளிநாடுகளுக்கு வரவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.[19]

2009 ஜூலை 10ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த மரண விசாரணையில் 23 பேர் சாட்சியம் அளித்தனர். அவர்களில் கடைசியாக, செந்தூல் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.பி. ஜில்கிப்ளி பாஜார் என்பவர் சாட்சியம் அளித்தார்.

தீர்ப்பு[மூலத்தைத் தொகு]
2009 செப்டம்பர் 29இல் விசாரணை நீதிமன்றம் தன் தீர்ப்பை வழங்கியது. சுஜாதாவின் மரணத்தில் எவ்வித சூதும் நடைபெறவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டது உண்மை என தீர்ப்பு வழங்கியது. அத்துடன் சுஜாதாவின் மரணத்தில் இருந்த மர்மங்கள் ஒரு முடிவுக்கும் வந்தன

Monday, August 6, 2007

After Vell Paari, works Minister Samy Vellu’s son, threatened to sue those who link him to Actress Sujathas suicide, now it is district police chief Kumaran’s turn. According to Malaysikini, he is contemplating to take action on those who made defamatory statements against him. 
This police chief was sitting on the case for more than a month doing nothing. Sujatha was not only a well known actress but personal assistant to Vell Paari and having romantic relationship.

Any ordinary police man ought to know that this case should be thoroughly investigated especially when high profile personalities are involved. Police chief Kumaran did not until a police report was made. The taking over of the case by Malaysian police headquarters is evident of his total failure.

Justice for Actress

Sunday, August 5, 2007
Two of the three Tamil newspapers, Makkal Osai and Malaysia Nanban, were highlighting Sujatha’s death daily in their front page almost every day, last week. Tamil Nesan has been playing a low profile on the issue. However, there are no new breakthroughs in the police investigation and the dailies are merely rehashing the same old facts.

According to Makkal Osai, Malaysian Headquarters police (Bukit Aman) have inspected Sujatha’s condominium and taken finger prints. This is, after all, more then one month after Sujatha’s death. So far, the dailies failed to get any information from Sujatha’s parents, relatives and her close friends.
sujatha
Meanwhile, Malaysia Nanban questioned how Sujatha was able to get paraquat, a weed killer poison used in plantations, which is a controlled item where the buyers can be traced.