Showing posts with label ANIMAL. Show all posts
Showing posts with label ANIMAL. Show all posts

Sunday, 23 August 2020

JEEVANAYAGAM SYRIL DANIEL ,ANIMAL ANALYST BORN 1927 JULY 9 - 2011 AUGUST 23



JEEVANAYAGAM SYRIL DANIEL ,ANIMAL ANALYST  BORN 1927 JULY 9 - 2011 AUGUST 23



.ஜீவநாயகம் சிரில் டேனியல் (ஜூலை 9, 1927 - ஆகஸ்ட் 23, 2011) ஒரு இந்திய இயற்கையியலாளர். ஜே.சி. என்றும் அறியப்படுகிறார். இந்திய பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள இவர், அவற்றைப் பற்றி நூல்களை எழுதியுள்ளார்.[1][2]

வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு]
இளம் வயதிலேயே இயற்கை மீது நேசம் கொண்டார். இரவில் நரிகள் ஊளையிடுவதும், அவற்றுடன் ஆந்தைகளின் அலறலும் அவரது குழந்தைப் பருவ நினைவுகளாக இருந்துள்ளன. விலங்குகளின் மீதான அவரது தாயின் பாசமும், அவரது தந்தையின் கல்வித்துறை பாண்டித்யமும் அவரை திருவனந்தபுரம் பொது நூலகத்துக்குச் செல்லத் தூண்டியுள்ளன. அங்கிருந்த ஆப்பிரிக்க காட்டுயிர்கள் தொடர்பான நூல்களைப் படித்தார்.

இளைஞராக இருந்தபோது, உலகப் புகழ்பெற்ற பறவை நிபுணர் டாக்டர் சாலிம் அலியால் உத்வேகம் பெற்ற அவர், சாலிம் அலி இணைந்திருந்த பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தில் சேர்ந்து பணிபுரிய ஆரம்பித்தார். 1950லேயே அந்தக் கழகத்தின் காப்பாளராக பொறுப்பேற்ற அவர், அந்த நிறுவனத்தின் முதல் இயக்குநராகவும் பின்னர் மாறினார். 1991இல் ஓய்வு பெற்ற பிறகு, அந்தக் கழகத்தின் கௌரவ உறுப்பினர், கௌரவ செயலராக இருந்து வந்தார்.

தி புக் ஆஃப் இந்தியன் ரெப்டைல்ஸ் (இந்திய ஊர்வன), எ செஞ்சுரி ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி அண்ட் கன்சர்வேஷன் இன் டெவலப்பிங் கன்ட்ரீஸ் (வளரும் நாடுகளில் ஒரு நூற்றாண்டு இயற்கை வரலாறும், பாதுகாப்பும்) உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். இந்தியன் ஒயில்ட்லைஃப் – இன்சைட் கைட்ஸ் என்ற நூலில் சிங்கங்கள் பற்றிய பிரிவை எழுதியுள்ளார். சாலிம் அலியின் நூற்றாண்டு 1996இல் கொண்டாடப்பட்டதை ஒட்டி, அவர் எழுதிய தி புக் ஆஃப் இந்தியன் பேர்ட்ஸ் (இந்திய பறவைகள்) புத்தகத்தை திருத்தி எழுதி 12வது பதிப்பை டேனியல் கொண்டு வந்தார்.

பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் ஆய்விதழின் நிர்வாக ஆசிரியராக இருந்ததுடன், ஹார்ன்பில் என்ற இதழையும் அவர் தொடங்கினார். அந்த இதழ் 2001ஆம் ஆண்டு வெள்ளிவிழாவைக் கொண்டாடியது.

முதுபெரும் காட்டுயிரியலாளர்

நாட்டின் முதுபெரும் காட்டுயிரியலாளர் ஜே .சி. டேனியலுக்கு கடந்த மாதம் 80 வயது ஆனது. சர்வதேச அளவில் 'ஜே.சி.' என்று அறியப்படும் ஜீவநாயகம் சிரில் டேனியல் நாகர்கோவிலில் பிறந்தார். திருவனந்தபுரத்தில் வளர்ந்தார்.

வரலாறு

J.C.Danielஇளம் வயதிலேயே இயற்கையுடன் அவருக்கு இணக்கமான ஓர் உறவு ஏற்பட்டது. காட்டுயிர்கள் மீதான பிணைப்பை அவரது அன்னையும், கல்வித் தேடலை அவரது தந்தையும் தொடர்ந்து ஊக்குவித்தனர். இதன் காரணமாக, திருவனந்தபுரத்தில் இருந்த சிறந்த பொது நு£லகத்துக்கு அடிக்கடி சென்றார். இயற்கை உலகம் தொடர்பாக உற்சாகமாக கொப்பளித்து எழுந்த அவரது ஆர்வத்துக்கு தீனி போடும் வகையில், ஆப்பிரிக்க காட்டுயிர்கள் தொடர்பான புத்தகங்கள் அங்கு கிடைத்தன. சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்தார் .

டாக்டர் சாலிம் அலியின் பணியால் உத்வேகம் பெற்ற டேனியல், 40 ஆண்டுகளாக பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தில் பணியாற்றினார் (BNHS). 1950களில் காப்பாளராக பணியைத் தொடங்கிய அவர், 1991ம் ஆண்டில் அந்த கழகத்தின் இயக்குநராக (கழகத்தின் முதல் இயக்குநர்) ஓய்வு பெற்றார். அதற்குப் பிறகு, கௌரவ உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தற்போது கௌரவச் செயலாளராக இருக்கிறார்.

யானைகள் பற்றி ஆராய்ந்தவர்களில் முதன்மையானவர். பறவைகள் வலசை போதல் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளார். நீர்நில வாழ்விகள் , ஊர்வன, பறவைகள், பாலுட்டிகள், அவற்றில் குறிப்பாக அழியும் ஆபத்தில் உள்ள ஆசிய யானை, காட்டு எருமை, புலி, வரையாடு, உப்புநீர் முதலை, கானமயில் போன்றவற்றையும், கோடியக்கரை, கிழக்குத் தொடர்ச்சி மலை, மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் உயர்ந்த பகுதிகள், சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் உள்ள தீபகற்ப காடுகளையும் ஆராய்ந்துள்ளார்.

உலக பாதுகாப்பு அமைப்பு, உலக ஊர்வன மாநாடு ஆகியவற்றிலும், குரங்கினம், ஆசிய யானை, முதலை, பாம்புகள் ஆகியவற்றுக்கான மதிப்புமிக்க நிபுணர்கள் குழுக்களிலும் இடம்பெற்றுள்ளார். இந்திய காட்டுயிர் நிறுவனத்தின் பயிற்சி, ஆராய்ச்சி, கல்வி குழுக்களில் இடம்வகித்துள்ளார்.

விருதுகள்

பீட்டர் ஸ்காட் பாதுகாப்பு விருது, சாஞ்சுவரி இதழ் வாழ்நாள் சாதனையாளர் விருது, ஆசிய யானைகள் பற்றி ஆராய்ந்ததற்காக கேரள வேளாண்மை பல்கலைக்கழக விருது, இந்திராகாந்தி பரியாவரன் புரஸ்கார் போன்றவற்றை பெற்றுள்ளார்.

புத்தகங்கள்

இந்திய ஊர்வன, ஒரு நூற்றாண்டு இயற்கை வரலாறு, வளர்ந்துவரும் நாடுகளில் பாதுகாப்பு ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். புத்தகத்தில் சிங்கங்கள் பற்றிய பிரிவை எழுதியுள்ளார். சாலிம் அலியின் புத்தகத்தின் 12வது மறுபதிப்பைக் கொண்டு வந்தார். 1996ம் ஆண்டில் சாலிம் அலியின் நூற்றாண்டு மலரை தொகுத்துள்ளார். பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழக ஆய்வு இதழின் நிர்வாக ஆசிரியராக 37 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறார். இயற்கை ஆர்வலர்களுக்காக ஹார்ன்பில் என்ற இதழைத் தொடங்கினார். 2001ம் ஆண்டு இந்த இதழ் வெள்ளிவிழா கொண்டாடியது. தற்போது 31ம் ஆண்டாக வெளிவந்து கொண்டுள்ளது.
.

Thursday, 4 June 2020

ANIMAL BONES - KEELADI

ANIMAL BONES - KEELADI

` உருவத்திலும் அளவிலும் மாறுபட்ட எலும்புகள்..!' - தொல்லியல் ஆய்வாளர்களை உற்சாகப்படுத்திய கீழடி





பண்டைய தமிழர்களின் வாழ்வில் விலங்குகள் முக்கியப் பங்கு வகித்துள்ளதை இதுபோன்ற சான்றுகள் உறுதிசெய்கின்றன.

கீழடி அகழாய்வில் பெரிய அளவிலான எலும்புகள் கிடைத்துள்ளதால், தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில், கடந்த 2014-15-ம் ஆண்டு முதல் மத்திய, மாநில தொல்லியல் துறை மூலமாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழக தொல்லியல் துறை இப்பகுதிகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த முறை, கூடுதலாக கீழடி மட்டுமன்றி கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளும் அகழாய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின், குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கின.இதுவரை அகழாய்வுப் பணிகள் தொடங்கப்படாமல் இருந்த மணலூர் பகுதியிலும் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது. மணலூரில் அகழாய்வில் கிடைத்த உலை போன்ற அமைப்பு, தொல்லியல் ஆய்வாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், கீழடியில் பெரிய அளவிலான எலும்புகள் கிடைத்துள்ளன. ஏற்கெனவே கிடைத்த எலும்புகளைவிட, தற்போது கிடைத்த எலும்புகள் உருவத்திலும் அளவிலும் மாறுபட்டிருப்பதால், தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Monday, 25 June 2018

ELEPHANT -REMARKABLE ANIMAL






ELEPHANT -REMARKABLE ANIMAL


ஏசி அறையிலோ , எட்டு ரூபாய்க்கு 20 எம்பி கிடைக்கும் நெட்டில் எது வேண்டுமானாலும் எழுதலாம்..


அதிகமான Tranquilizer பயன்படுத்தியதால்
தான் யானை இறந்தது என்பது உண்மையாக இருக்கலாம்..ஆனால் காட்டுக்குள் மனிதன் போனதால் யானை ஊருக்குள் வந்ததாக சொல்வதெல்லாம் கண்ணால் பார்க்காமல் சும்மா ஒப்புக்கு எழுதும் கதைகள் தான்..யானைகள் தனக்கென்று ஒரு வழித்தடத்தை நிரந்தரமாக அமைத்துக்கொள்ளும் வழக்கம் உள்ளவை..

இன்று தாய் யானை வரும் அதே வழியில் அதன் குட்டி இன்னும் பத்து ஆண்டுகள் கழித்தும் வரும்..அந்த யானை குட்டி போட்டால் அதுவும் அந்த வழித்தடத்தை பின்பற்றும் .. இது ஆண்டுகள் பலவானாலும் மாறாத யானைகளின் பழக்க வழக்கம்..

உணவுக்காக அலையும் யானைகள் மட்டுமல்ல.. நீருக்காக அந்த வழியை மாற்றும் யானைகள் தடம் மாறி ஊருக்குள் வரும்போது அங்கே கிடைக்கும் பயிர் உணவு வகைகள் , நீர் , அரிசி என அறிந்துகொண்டு விடுகின்றன.அதன் பின்னர் அந்த பகுதியை தங்களின் உணவு கேந்திரமாக மாற்றிக்கொள்கின்றன.

வால்பாறையில் இருக்கும் யானைகள் அடிக்கடி ரேசன்கடைகள் ,மளிகை கடைகளை துவம்சம் செய்து அரிசியை உண்கின்றதாக படித்திருக்கிறீர்களா? வனம் காய்ந்து போய் இருக்கும் நிலையில் யானைகள் இது போன்ற இடமாற்றங்களை செய்வது இயல்புதான்.. அது அல்லாமல் கூட்டமாக வரும் யானைகள் திரும்பி கூட்டமாக செல்லும்.. இதில் வழி தவறி வரும் ஒற்றை யானை , காட்டில் தனியாக உலவும் மனிதனை போலவே அதற்கும் இயல்பான பய உணர்வும் கோபமும் கூடி எதிர் வருவபர்களை , பொருட்களை எல்லாம் நொறுக்கிவிடும்..

இது போலத்தான் கோவைப்பகுதிகள் முழுவதும் சுற்றும் யானைகள் மலைகளில் இருந்து இறங்கி வழி மாறி வருகின்றன..உடனே இவர்கள் யானை இருக்கும் இடத்தில் வீடு கட்டிவிட்டார்கள் , அதை செய்தார்கள் இதை செய்தார்கள் என கதைகளை அவிழ்த்து ஒப்பாரி வேறு வடிக்கிறார்கள்..உண்மையில் மதுக்கரை பகுதியில் பல்லாண்டுகளாக யானைகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன..

யானை இருக்கும் இடத்தில் வீடு கட்டினார்கள் என்ற பொதுவான வாதத்தை அந்த பகுதியை சாராதவர்கள் சொல்வது நகைப்பாக இருக்கிறது..அந்த பகுதிகள் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசிக்கிறார்கள்.. ஏன் எல்லா யானைகளும் ஒற்றையாக திரியவில்லை.. ஏன் எல்லா யானைகளும் மிரண்டு சுற்றவில்லை என்ற ஒரு கேள்வியே போதுமானது இதற்கு விடை சொல்ல.

எட்டிமடை , வாளையார் , மதுக்கரை ,அறிவொளிநகர் என எல்லா இடங்களிலும் வருடத்தில் பாதி நாட்கள் யானைகள் நடமாடும்.. இரவுக்குள் மலைகளில் தஞ்சமாகிவிடும்..மலைகளில் ஏற்படும் வறட்சி , நீர் இன்மை இது போன்றவை அல்லாத , உணவு தேடும் பழக்கத்தின் விளைவுகள்தான் இவை தவிர சும்மா ஏதோ சமூக அக்கறை உங்களுக்கு மட்டுமே உள்ளதாக கற்பனையில் எழுதித்தள்ளாதீர்..

யானைகள்.பற்றி இன்னும் சில தெரிந்து கொள்ளுங்கள்..

யானைகள் மிக அதிகமான ஞாபக சக்தி கொண்டவை

யானைகள் மொழி வேறுபாடை அறிந்தவை..

யானைகள் அதன் கூட்டத்திற்கு ஊக்கமளிக்கும் குணம் கொண்டவை..

யானைகள் மனிதனின் அசைவுகளை உணர வல்லவை..

யானைகள் துக்கம் அனுஷ்டிக்கும் பழக்கம் உள்ளவை..

#இதில் முதல் பழக்கம் ஒரு நாள் கண்ட உணவு உள்ள இடத்தை மீண்டும் தேடி வரும் அளவு அபார நினைவாற்றல் கொண்டவை..முக்கியமாக யானைகளை வேண்டுமென்றே கொல்லும் அளவு வனத்துறையினர் மோசமானவர்கள் அல்ல.. மயக்க மருந்து என்னும் Tranquilliser கொடுக்கும் போது கோபத்தில் ,மிரட்சியில் அலையும் யானைக்கு பி பி செக் செய்துவிட்டெல்லாம் கொடுக்க முடியாது..இதில் யானையின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தால் இது போன்ற யானை பலிகள் தவிர்க்க இயலாது..

வன விலங்கு நலனின் உங்களை விட பல மடங்கு அக்கறை உள்ளவர்கள் அவர்கள்.. அதனால்தான் முதுமலை , பந்திப்பூர் , முண்டந்துறை என எல்லா இடங்களிலும் புலிகளின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது..

அழிவின் விளிம்பில் இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை கிர் காடுகளில் மட்டும் 520 தாண்டி இருக்கிறது..ஏசி அறையிலோ , எட்டு ரூபாய்க்கு 20 எம்பி கிடைக்கும் நெட்டில் எது வேண்டுமானாலும் எழுதலாம்..

உண்மைகள் நேரில் பார்த்தோ கேட்டோ தெரியாத வரை !