Showing posts with label DOWN FALL. Show all posts
Showing posts with label DOWN FALL. Show all posts

Sunday, 29 April 2018

THE DOWN FALL OF ACTOR PRASANTH





THE DOWN FALL OF ACTOR PRASANTH




பிரசாந்த் -தந்தை சொல் கேட்டு உருப்படாமல் 
போனவர்
வைகாசி பொறந்தாச்சுவில் பிரசாந்த் அறிமுகமான போது அவருக்கு 50,000 ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது. இது எந்த அறிமுக நாயகருக்கும் கொடுக்கப்படாத சம்பளம் என்று இண்டஸ்டிரியில் பேசிக்கொண்டார்கள். அலைகள் ஓய்வதில்லையின் இன்னொரு வடிவமான இந்தப் படம் தேவாவின் பாடல்கள், ஜனகராஜின் காமெடி துணை நிற்க பல தியேட்டர்களில் 200 நாட்களைக் கண்டது. அதன்பின்னர் தொடர்ந்து அவருடைய தலைமுறை நடிகர்களில் பல முதல்களை பிரசாந்த் கண்டு கொண்டே வந்தார்.

மணிரத்னம்,பாலுமகேந்திரா,ஷங்கர் என பெரிய இயக்குநர்களின் படங்களில் முதலில் நடித்த இளைய தலைமுறை நடிகர், உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் ஜோடியாக நடித்த முதல் தமிழ் நடிகர் (இன்று வரைக்கும் பார்த்தால் கூட மூன்றோ நான்கோ பேர்தான் வருவார்கள்), இணைய தளத்தை பயன்படுத்தி ரசிகர்களுடன் தொடர்பில் இருந்த நடிகர், வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் அதிகமாக நடத்திய நடிகர் என்று 90ல் அறிமுகமான பிரசாந்த் 2000 வரை செய்திகளில் இருந்து வந்தார்.
செம்பருத்தி படம் வெளியான நேரத்தில் எல்லாம் பிரசாந்துக்கு பெரிய கிரேஸ் ரசிகர்,ரசிகைகளிடம் இருந்தது. பாலுமகேந்திராவின் வண்ண வண்ன பூக்கள் படத்திலும் செம்பருத்தியிலும் பிரசாந்த் அணிந்து நடித்திருந்த டி சர்ட்கள் இளைஞர்கள் மத்தியில் வெகு பிரபலம். 90களில் ஆசை,காதல் கோட்டை மூலம் அஜீத்தும் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை மூலம் விஜய்யும் தலையெடுக்கும் வரை அரவிந்த்சாமி,பிரபுதேவா மற்றும் பிரசாந்த் தான் இளைய தலைமுறையின் நாயகர்களாக இருந்து வந்தார்கள். அதில் அரவிந்த்சாமியை ஒரு மேனேஜர் போலவே பார்த்தது ரசிகர் சமூகம். பிரபுதேவாவை ஒரு நாயகனாக பார்த்ததை விட டான்ஸராகத்தான் ரசிகர்கள் பார்த்தார்கள். எனவே அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டாராகும் வாய்ப்பு ஒரு கட்டத்தில் பிரசாந்துக்கும் இருந்தது.

நடனமும் ஆடக்கூடியவர், சண்டைக் காட்சிகளும், நாலு பேரை அடித்தால் நம்பும்படி இருக்கும். நிறம், முக அமைப்பு ஒக்கே என இருந்தாலும், ஒரு ஆங்கிரி யங் மேன் என இளைஞர்களுக்கு பிடிக்கக் கூடிய நடிகராய் பிரசாந்தால் மாறமுடியவில்லை. இளைஞர்களைக் கவரும் பாடி லாங்குவேஜும், குரலும் அவரிடம் இல்லை. ஆணழகன் படத்தில் பெண்வேடம் போட்டது போல் சவாலான வேடங்களை அவர் ஏற்று நடித்தாலும், மற்ற வேடங்களில் அவரால் பெரிய வித்தியாசம் காட்ட முடியவில்லை.
ஜீன்ஸ், ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், பார்த்தேன் ரசித்தேன், தமிழ், வின்னர் என அவ்வப்போது ஹிட்டுகளை கொடுத்து வந்தாலும் பிரசாந்துக்கு என ஒரு ஓப்பனிங் அமையவேயில்லை. இயக்குநர்களைப் பொருத்தே அவருடைய ஓப்பனிங் அமைந்தது. அஜீத், விஜய்க்கு அடுத்து மூன்றாவது பிரசாந்த் என்று ஒரு வரிசை வந்தது. அதுவும் சூர்யாவின் வெற்றிக்குப் பின்னால் இல்லாமல் போனது.

பிரசாந்துக்கு இருந்த தலையாய பிரச்சினைகளில் ஒன்று பப்ளியாக இருப்பது. சாக்லேட் பாய் ஹீரோவை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வதேயில்லை. ரசிகைகளுக்குப் பிடித்தாலும் இரண்டு மூன்று ஆண்டுகளில் மாறிவிடுவார்கள். ஒடுக்கு கன்னம், கறுப்பு அல்லது மாநிறம், மீசை இவையெல்லாம் தமிழ் ரசிகர்கள் ஒருவரை ஹீரோவாக ஆராதிக்க தேவை. எம்ஜியார் கூட முதலில் கறுப்பு வெள்ளைப் படங்களில் நடித்து ஓரளவு மக்கள் மனதில் செட்டில் ஆன பின்னர்தான் கலர் படங்களில் நடித்தார். அவர் சின்ன வயதில் கலர் படத்தில் நடித்திருந்தால் இவ்வளவு பெரிய ஹீரோவாக ஆகியிருக்க மாட்டார் எனச் சொல்வார்கள். எவ்வளவோ திறமைகள் இருந்தும் கமல்ஹாசன் இன்றுவரை போராட வேண்டி இருக்கிறது. சிவப்பாக இருந்து ரசிகர் மனம் கவர்ந்த இன்னொருவரான அஜீத்தை எடுத்துக் கொண்டால், அவரும் கூட அழகாயிருந்த போது கூட இவ்வளவு கிரேஸ் இல்லை. சற்று குண்டாகி, நரை விழுந்து அழகு சற்று குறைந்த பின்னால் தான் அவர் பின்னால் பெரும் கூட்டம் கூடியது.
குட்லக் மற்றும் பல படங்களில் அவரது நடிப்பு மிகவும் சுமார் அதனால் பிரசாந்தால் நிறைய ரசிகர்களை கவர முடியவில்லை. மேலும் ஏற்று நடிக்கும் வேடங்களும், ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் வரும் வரை ஏழைப் பங்காளன் ரோல்களாக இருக்க வேண்டும். பணக்கார ரோல்களில் நடித்தால் சட்டென்று ரசிகர்களிடம் இருந்து அன்னியப்பட்டு போய்விடுவார்கள். பிரசாந்த் தன் பெரும்பாலான படங்களில் மல்டி மில்லியனராக நடித்ததும் ரசிகர்களிடம் இருந்து அவர் அன்னியப்பட ஒரு காரணம்.

மக்கள் தொடர்பிலும் பெரிதாக கோட்டை விட்டனர் பிரசாந்தும் அவர் தந்தை தியாகராஜனும்.
பிரசாந்த் இயற்கையிலேயே அமைதியானவர் -அவருடைய வாழ்கையை குட்டி சுவர் ஆக்கிய பெருமை தியாகராஜனை சேர்ந்தது - பேராசை ,பிளாக்மெயில் என்று விரிந்ததில் பிரசாந்தும் மீளவே முடியாமல் சிக்கி கொண்டார் - திருமணம் சம்பந்தமாக கோர்டுக்கு வந்ததும் போனதும் அவர் தியாகராஜன் போன்ற ஆட்களின் துர் போதனை யில் இருந்தார் என்பது நிரூபணம் ஆனது
ஆனால் இவர்களுக்குப் பின் வந்த விஜய், தன் தந்தையின் வழிகாட்டுதல் படி அரிசி மூட்டை வழங்குதல், ரிக்ஷா காரர்களுக்கு உடை வழங்குதல் என ஏழைப்பங்காளன் இமேஜை திட்டமிட்டு வளர்த்தார். தொடக்கத்தில் இதில் தவறு செய்து கொண்டிருந்த அஜீத்தும் பின்னர் பக்காவான பி ஆர் ஓ டீமுடன் களமிறங்கினார். ஆனால் பிரசாந்த் தன் திருமணம் தோல்வி அடைந்ததைக் கூட மீடியாவில் சரிவர ஹேண்டில் செய்யாமல் தோல்வி அடைந்தார்.
இன்னொரு விஷயம் ஜாதி. தமிழகத்தைப் பொறுத்தவரை ஒருவரை தமிழகம் முழுவதும் சேர்ந்து ஆராதிக்க அவர் இந்த மாநிலத்தைச் சாராதவராக இருக்க வேண்டும் அல்லது சிறுபான்மை மதமாய்/ஜாதியாய் இருக்க வேண்டும். முக்கியமாக என்ன ஜாதி என்றே தெரியாமல் இருத்தல் சிறப்பு. ஆதிக்க ஜாதியாய் இருந்தாலும் முழு ஆதரவு கிட்டாது, தாழ்த்தப்பட்ட சமூகமாக இருந்தால் இன்னும் மோசம்.
ஆனால் சீயான் விக்ரத்தை பாருங்கள் -அரசியல் சர்ச்சை ,ஜாதி இவற்றில் ரசிகர்கள் இழுத்து விட்டாலும் இதில் எல்லாம் மூக்கை நுழைக்க மாட்டார்

சிவப்பு நிறம், பணக்கார களை, தவறான மக்கள் தொடர்பு, ஜாதி மட்டுமே பிரசாந்தின் வீழ்ச்சிக்கு முழுக்க முழுக்க காரணம் கிடையாது.

அவை ஒரு சில காரணிகளே. அவர் ஏற்று நடித்த வேடங்களில் நல்ல நடிப்புத்திறமையைக் காட்டி தன்னை ஒரு நல்ல நடிகனாக நிலைப்படுத்தி இருந்தால் நல்ல உயரங்களுக்குச் சென்றிருப்பார்.

Saturday, 21 April 2018

DOWN FALL -GERMAN MOVIE சர்வாதிகாரம் வீழ்ந்த கதை







DOWN FALL GERMAN MOVIE- சர்வாதிகாரம் வீழ்ந்த கதை




DOWN FALL - சர்வாதிகாரி ஹிட்லரின் கடைசி நிமிடங்கள்...
DOWN FALL  படத்தின் கதை:


      ஒரு சர்வாதிகாரியின் படத்தை எப்படி ஆரம்பிக்க போகின்றார்கள் என்று ரொம்ப ஆர்வமாக இருந்தேன்.. ஹிட்லருக்கு பதுங்கு அறையில் இருக்கும் போது அவர் சொல்வதை குறிப்பெடுத்து அதனை டைப்செய்து கொடுக்க சில பெண்களுக்கு நேர்முக தேர்வு நடப்பதில் தொடங்குகின்றது படம்.... ஹிட்லர் பதுங்கு குழியில் ஜெர்மன் தோல்வி செய்திகள் கேட்பதில் இருந்து... நாலாவது படையணி(Fourth Army) என்ன செய்து கொண்டு இருக்கின்றது? என்று கேட்டு கத்துவதில் இருந்து... தோல்வியால் துவண்டு திருமணம் செய்து கொண்டு, புதுமனைவியுடன் தற்கொலை செய்து இறப்பது வரை இந்த படம் பதிவு செய்கின்றது..



     எல்லாம் முடிந்து ஜெர்மன் படைகள் ரஷ்ய படைகளிடம் தோல்வியை சந்தித்து முன்னேறி பெர்லினை நோக்கி வந்து கொண்டு இருக்கும் போது பாதள அறையில் உள்ள ரகசிய இடத்தில் ஹிட்லர் வாழ்ந்த சில நாட்களை இந்த படம் மி நுட்பமாய் பதிவு செய்து இருக்கின்றது....
சமகாலத்தில் வாழ்ந்த ஒரு சர்வாதிகாரியின் அந்திமகாலம்(End of Life) எப்படி இருந்து இருக்கும்? அது நம் கண் முன் நிறுத்தி இருக்கின்றார்கள்....
தீவிரவாதி, ஒய்பெர்ஸ் சண்டயில் 40000 குழந்தைகள் கொன்றதில் பங்கு பெற்றவன், எழுத்தாளர், சர்வாதிகாரி,ஓவியன்,அரசியல்வாதி,மது பழக்கத்தை விட்டவன்... நான்வெஜ்(Non-Veg ) சாப்பிடாதவன் என்ற பன்முக தன்மை கொண்ட ஹிட்லரின் கடைசி காலத்தை பற்றி அறிய இந்த படத்தை பார்க்கவும்....

வாழ்வில் இந்த படத்தை தவறாமல் பார்ககவேண்டிய படம் இது....
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...



     ஒரு வரலாற்று படத்தை எடுக்க போகின்றோம் என்றால் அதுக்கு நிரம்ப பொறுமையும், ஆராய்ந்து உண்மைகனை தெரிந்து கொள்ள வேண்டும்... பட்ஜெட் இல்லை என்று எந்த சப்பை காரணமும் சொல்லாமல் ஷாட் வைக்க வேண்டும்... எங்கேயும் காம்பரமைஸ் ஆக கூடாது... இந்த படம் முழுவதும் இதனை நாம் உணரலாம்.


எனென்றால் ரஷ்ய படைகள் நெருங்கிய போது அவர்கள் கைக்கு எந்த ஆதாரமும் கிடைத்துவிடாமல் இருக்க எல்லாத்தையும் தீயிட்டு கொளுத்த சொன்னவன்... அந்த நேர்முக தேர்வில் கலந்து கொண்டு ஹிட்லர் முதல் வருகையை ரொம்ப சிம்பிளாக பதிவு செய்தாலும், அந்த பெண்கள் கண்களில் காட்டும் அந்த ஆர்வம் உற்சாகம் வாய்ப்பே இல்லை(No Change)... 

அப்படி ஒரு பெரிய சர்வாதிகாரியை, ஜெர்மனியில் வாழ்ந்த பல லட்சகணக்கான நேசிப்பை அந்த கண்களில் உள்ள ஆச்சர்யத்தின் மூலம் காட்சி படுத்தி இருப்பார்கள்(Brilliant Screenplay)..
ஜெர்மனிக்கா போரிட்ட சிறுவர்களுக்கு மெடல்  கொடுத்து பதுங்கு குழியில் இருக்கும் போது கூட மெடல் கொடுத்து உற்சாகபடுத்தியவன்... அந்த மெடல் கொடுக்கும் போது அந்த சிறுவர்களின் சந்தோஷத்தை பார்க்க வேண்டுமே???...
தளபதிகள் போர் நிலவரத்தை சொல்ல பரபரப்பாய் கேமரா அவர்களோடு கேமரா டிராவல் ஆவது, நம்மையும் அந்த கூட்டத்தில் ஒருவனாக உணரவைக்க செய்த முயற்சிகள்.


      ஹிட்லர் இறக்கும் வரை சிம்ம செப்பனம்தான்....
ஹிட்லருக்கு பயம் வந்த பிறகு அதை காட்டிக்கொள்ளாமல் நடப்பது மிக அற்புதம்... எப்ப வேண்டுமானாலும் பிடிபடலாம்னு இருக்கற நிலையிலும் ஒருத்தனுக்கு தேச துரோகம் பட்டம் கொடுத்து அவனை சாகடிப்பதும், அந்த ஒருத்தன் சாகும் போது கூட  ஜெர்மனி யும் ஹிட்லரையும்(ஹிட்லர் மேல் உள்ள பக்தி) வாழ்த்தி விட்டு சாவதும் அருமையான காட்சி.....
கேமராமேன் Rainer Klausmann யை கோவில் கட்டி கும்பிட வேண்டும்.. பதுங்கு அறை செட்டில் கேமராவை தூக்கி கொண்டு ஓடுவது, நிற்பது நடப்பது என பல செய்கின்றது... எந்த இடத்திலும் பிரேமில் வைத்த லைட் கூட தெரியாமல் எடுத்தது அருமை...


அதே போல் எல்லா காட்சிகளும் ஹேன்ட்ஹெல்ட் ஷர்ட்டுகள்தான்... பதுங்கு அறையில் டிராலி(Movable Machine Camera ) உபயோகபடுத்தியது போல் எனக்கு நியாபகம் இல்லை...
செட் போட்ட ஆர்ட் டைரக்டர் சம்மா சொல்ல ரொம்ப அற்புதமாக செய்து இருக்கின்றார்....நிறைய இளைய படைவீரர்கள் இறந்து போய் விட்டார்கள்... பலருக்கு மருத்துவ உதவி இல்லை என்று சொல்லும் போது ரகசிய அறையில் உட்கார்ந்து கொண்டு...  "அது அவர்கள் தலையேழுத்து அதற்கு தானே அவர்களை படையில் எடுத்தது" என்று வியாகியானம் பேசுவது ஹிட்லரின் சுயநலத்தையும், கடைசி கட்ட திமிரையும்(Survivel of  Fittest) காட்டுகின்றது....



     ஜெர்மனிக்கா போரிட்ட சிறுவர்களுக்கு மெடல் தந்து அவர்களை ஊக்கு விப்பதும் அவர்கள் பெருமை அடைவதும் அந்த கால நிகழ்வை அப்பட்டமாக காட்டக்கூடிய காட்சிகள்...எந்த உதவியும் இல்லாமல் எந்த கம்யூனிகேஷனும் இல்லாமல் பல வீரர்ர்கள் இறந்து போவது... தலமை இல்லாமல் ஒரு சாம்ராஜ்யம் எப்படி எல்லாம் சின்னா பின்னமாகிவிடும் என்பதை மிக அழகாக காட்சி படுத்தி இருக்கின்றார்கள்...


இன்னும் கொஞ்ச நேரத்தில் ரஷ்ய படையிடம் மாட்ட போகின்றோம் என்பது தெரிந்து பதுங்கு மாளிகையில் பெரிய தலைகள் எல்லாம் தண்ணியை போட்டு விட்டு , பெண்களை ஆடவிட்டு வேடிடிக்கை பார்பது - போகின்ற போக்கில் காட்டி இருப்பது அற்புதம்....
இந்த படத்தை எல்லா பள்ளி மாணவர்களுக்கும் போட்டு காட்ட வேண்டும் என்பது என் எண்ணம்.... ஒரு வரலாற்று ஆவணம் இந்த படம்....Bruno Ganz ஹிட்லராக வாழ்ந்து இருக்கின்றார்...  ஹிட்லர் மற்றவர்கள் மீது   எரிந்து விழும் கோபத்தை(What an acting that...)  நீங்கள் ரசிக்கலாம், அவர் சாப்பிடும் போது கை ஆடிக்கொண்டே இருக்கும் மேனாரிசத்தை நீங்கள் பார்க்கலாம்... 

முன் பக்கம் விழும் முடியை கோதி விடுவதை ரசிக்கலாம்... அதிலும் "இந்த உலகத்தை தூய்மை படுத்த வேண்டும் என்று தான் நினைதேன். அதை ஏன் இந்த மக்கள் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்" என்று இறக்கும் முன் அப்பாவியாக ஹிட்லர் கேட்கும் போது பாராட்டுகளை அள்ளுகிறார்.
இறக்கும் முன் எல்லோருக்கும் கை கொடுத்து விட்டு சிலநிமிடங்கள் அந்த மிடுக்கு குறையாமல் பேசுவது அற்புதம்....

     இறக்கும் முன் நடக்கும் திருமணத்துக்கு, பயத்தில் முகத்தில் பவுடர் அதிகமாக அடித்துகொண்டு வரும் ஒரு காட்சி வாழ்கை முடிய போகின்றது என்று சலித்துகொள்ள அந்த ஒரு காட்சி போதும்...

     இன்னும் சில மணி நேரத்தில் ரஷ்ய படையினர் வந்து விடுவார்கள் என்பதை யார் ஹிட்லரிடம் சொல்வது என்று பயந்து கொண்டு இருக்குங்ம தளபதிகள்... அதே போல் எல்லலா இடத்திலும் இருக்கும் அல்லக்கைகள் போல் ஹிட்லர் பக்கத்தில் இருந்ததும் கொடுமை....



     கோயபல்ஸ் மனைவி எல்லா குந்தைகளுக்கும் விஷம் கொடுப்பது... ஒருவரை ஒருவர் சுட்டுக்கொள்வது எனவும், கண் முடித்தனமாக ஹிட்லருக்காக உயிரை விட்டவர்களை நினைக்கும் போது எந்த அளவுக்கு ஒரு தலைவனாக தனது பேச்சால் கட்டி போட்டு இருக்கின்றான் என்று நினைக்கும் போது ஆச்சர்யம் மேலோங்கி இருக்கின்றது...
ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டு இரண்டு நாள் கழித்து கூட பல படைதளபதிகள் தற்கொலை செய்து கொள்வதும், ஜெர்மனிக்காக உயிர்விட்டு விசுவாசத்தை காட்டுவதும் கொடுமை...

      இந்த படம் பெஸ்ட் பாரின் பிலிமுக்கான ஆஸ்கார் அவார்டு வாங்கியது... இந்த படம் ஜெர்மன் படம்...



     ஹிட்லரோடு சமகாலத்தில் வாழ்ந்த படைதளபதிகள் பதுங்குழியில் இருந்த உதவியாளர்கள் என எல்லோரிடமும் பேசி அவர்கள் தந்த அடிப்படையில் இந்த படம் எடுக்கபட்டது...

     இந்த படம் பார்த்த பின்பு ஹிட்லரை ரசிப்பீர்கள்.. அதுதான் இந்த படத்தின் பலம்



Directed by Oliver Hirschbiegel
Produced by Bernd Eichinger
Written by Joachim Fest
Bernd Eichinger
Traudl Junge
Melissa Müller
Starring Bruno Ganz
Alexandra Maria Lara
Corinna Harfouch
Ulrich Matthes
Juliane Köhler
and
Thomas Kretschmann
Music by Stephan Zacharias
Cinematography Rainer Klausmann
Editing by Hans Funck
Distributed by Constantin Film
Newmarket Films (English subtitles)
Release date(s) September 16, 2004 (Germany)
February 18, 2005 (USA)
Running time Theatrical cut:
155 minutes
Extended cut:
178 minutes
Country Germany


Italy
Austria
Language German
Russian
Budget €13.5 million[1]
Gross revenue $92,180,910[1]