Showing posts with label 1882. Show all posts
Showing posts with label 1882. Show all posts

Friday, 11 September 2020

SUBRAMANIYA BHARATHIYAR BORN 1882 DECEMBER 11 - 1921 SEPTEMBER 11



SUBRAMANIYA BHARATHIYAR BORN
 1882 DECEMBER 11 - 1921 SEPTEMBER 11


காக்கை சிறகினிலே நந்தலாலா
உந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா

நல்லதோர் வீணை செய்து அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

இந்த அழகிய வரிகள் எல்லாவற்றுக்குமே ஓர் ஒற்றுமையுண்டு அவை அனைத்துமே ஒரே பேனாவில் இருந்து உதிர்ந்த வரிகள் வரகவி என்று அழைக்கப்பட்ட ஒரு கவிஞரால் வடிக்கப்பட்ட கவிதைகள், சினிமாப் பாடல்களாக வந்ததால் அவை பெரும் புகழ்ப் பெற்றன ஆனால் சினிமா நமக்குக் காட்டாத இன்னும் பல அரிய கவிதைகளை தமிழ் உலகுக்கு தந்திருக்கிறார் அந்த அமரகவி அவர்தான் மீசைக் கவிஞன் என்றும் முண்டாசு கவிஞன் என்றும் தமிழ் இலக்கியம் உலகம் போற்றும் மகாகவி பாரதியார். அவருக்கு கவிதை என்ற வானம் வசப்பட்ட கதையைத் தெரிந்துகொள்வோம் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11ந்தேதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் என்னும் ஊரி சின்னச்சாமி அய்யருக்கும் இலக்குமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பாரதியார் அவருக்கு பெற்றோர் இட்ட இயற்பெயர் சுப்ரமணியன் சுப்பையா என அவரை செல்லமாக அழைத்தனர் சுப்பையாவுக்கு 5 வயதானபோது அவரது தாயார் இறந்து போனார் 2 ஆண்டுகள் கழித்து தந்தையார் மறுமணம் செய்து கொண்டார் சிறு வயதிலிருந்தே சுப்பையாவுக்கு மொழி மீது சிறந்த பற்றும் புலமையும் இருந்தது. 7 வயதிலேயே அவர் கவிதைகள் எழுதத் தொடங்கினார் அவருக்கு 11 வயதானபோது அவரது கவி பாடும் ஆற்றலையும் புலமையையும் வியந்து பாராட்டி அவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார். எட்டயபுர மன்னர் அன்றிலிருந்து அவர் பெயர் சுப்ரமணிய பாரதி என்றானது பாரதி தமிழும் கவிதையுமாக தமிழுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, அவரது தந்தையோ தனது மகன் தொழில்நுட்பத் துறையில் தேர்ச்சிப் பெற வேண்டும் என விரும்பி அவரை தமிழ்ப்பள்ளியில் சேர்க்காமல் ஆங்கிலமும் கணிதமும் பயில்வதற்காக திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தார். அங்கு சென்று கல்வி பயின்ற பாரதி படித்துக்கொண்டிருந்தபோதே செல்லம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார் தந்தை ஆனால் பின்னாளில் இது போன்ற பால்ய விவாகத்தை வன்மையாக கண்டித்தார் பாரதி. "பாலருந்தும் மழலையர் தம்மையே கோலமாக மணத்திடைக் கூட்டும் இப்பாதகர்கள் இன்னும் ஆயிராமாண்டு அடிமைகளாக இருந்து அழிவர்" என்று சபித்தார் நல்ல நிலையில் இருந்த பாரதியின் தந்தை எட்டயபுரத்தில் பருத்தி அரவை ஆலை நிறுவ விரும்பினார் அந்த ஆலைக்காக வெளிநாட்டிலிருந்து கப்பல்களில் வந்துகொண்டிருந்த இயந்திரங்களும் உதிரிப் பாகங்களும் கடலில்
மூழ்கவே அவருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. அந்தக் கவலையிலிருந்து மீள முடியாமல் நோய்வாய்ப் பட்டு அவர் இறந்து போனார் அப்போது பாரதிக்கு வயது 16 தான் தந்தையின் மறைவிற்குப் பிறகு பாரதியின் குடும்பத்தில் வறுமை வந்து சேர்ந்தது பிறகு காசிக்குச் சென்று அலகாபாத் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து சமஸ்கிருதத்தையும் இந்தியையும் கற்றார். சமஸ்கிருத மொழியில் முதல் வகுப்பில் தேறினார் ஆங்கிலக் கவிஞர்களான ஷெல்லி, பைரன் போன்றோரின் கவிதைகளில் அவருக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டது அதன்காரணமாக அவர் பின்னாளில் ஷெல்லிதாசன் என்ற புனைப்பெயரி கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இந்தி சமஸ்கிருதம் தவிர்த்து ஆங்கிலம் பெங்காலி ஹச் போன்ற மொழிகளிலும் புலமைப் பெற்றிருந்தார் பாரதி அத்தனை மொழிகளில் புலமைப் பெற்றிருந்ததால்தான் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று துணிந்து சொன்னார்” பாரதி. தீண்டாமையை அறவே வெறுத்தவர் பாரதி அதற்கு தன்னையே முன் உதாரணமாக்கிக்கொண்டார் தீண்டாமை எனும் கொடுமைக்கு ஆளானோரிடம் அன்பு செலுத்தியதோடு அவர்களுக்கு இல்லாதது தனக்கு வேண்டியதில்லை என்று கூறி தான் அணிந்திருந்த பூ நூலை அறுத்தெரிந்தார. நான்கு ஆண்டுகள் காசியில் இருந்துவிட்டு திரும்பிய பாரதி எட்டயபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவைக் கவிஞாராக பணியாற்றினார். 1903 ஆம் ஆண்டு 21 ஆவது வயதில் அவரது எழுத்துக்கள் முதன்முதலில் அச்சில் வந்தன அதற்கு அடுத்த ஆண்டு மதுரை சேதுபதிப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் சுதேசமித்திரன் பத்திரிக்கையின் துணை ஆசிரியராக பொறுப்பேற்றார் 1905 ஆம் ஆண்டு சுதந்திர வேட்கைக் காரணமாக அரசியலில் பிரவேசிக்கத் தொடங்கினார் பாரதி. கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சியுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது சகோதரி நிவேதிதாவை சந்தித்தப் பாரதி அவரையே தந்து ஞான குருவாக ஏற்றுக் கொண்டார் 1907 ஆண்டில் இந்தியா என்ற வார ஏட்டையும் பாலபாரதம் என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். அப்போது பாரதியின் கவணம் இந்திய சுதந்திர போராட்டத்தின் பக்கம் திரும்பியது சுதந்திரத்தை
வலியுறுத்தும் கட்டுரைகளையும் தலையங்கங்களையும் பிரசுரித்தார், வ.உ.சிக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை கடுமையாக கண்டித்து கட்டுரைகள் எழுதினார். பிரிட்டிஷ் ஆட்சியாளரின் கவணம் பாரதி பக்கம் திரும்பியது பாரதியை கைது செய்ய முனைந்தனர் அதனையறிந்த பாரதி தன் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் ஃப்ரெஞ்சு நாட்டின் ஆதிக்கத்தின் கீழிருந்த பாண்டிச்சேரியில் சிலகாலம் தலைமறைவாக வாழ்ந்தார். அவ்வாறு வாழ்ந்தபோதுதான் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலிசபதம், போன்ற புகழ்பெற்ற அமரக் கவிதைக் கவிதைகளை எழுதினார். அதோடு 1912 ஆம் ஆண்டு பகவத் கீதையை தமிழில் மொழிப் பெயர்த்து வெளியிட்டார் பாரதி பாண்டிச்சேரியில் இருந்தவாறே அவர் இந்தியா பத்திரிக்கையின் மூலம் தொடர்ந்து சுதந்திர வேட்கையைத் தூண்டிவிடும் கட்டுரையை எழுதினார். பாரதியின் குரலுக்கு தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி இந்தியா பத்திரிக்கைக்கு தடை விதித்தது 1918 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து வெளியேரிய பாரதி தமிழ்நாட்டு எல்லையில் பிரிட்டிஷ் போலீசாரால் கைது செய்யப் பட்டு 34 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார். விடுதலையானதும் கடையம் எனும் ஊரில் குடியேரினார் பாரதி அங்கு வறுமையில் வாடிய அவர் தனது சிரமத்தை விவரித்து எட்டயபுர மன்னருக்கு கடிதம் எழுதினார் ஆனால் பாரதிக்கு எந்த உதவியும் கிடைக்க வில்லை. பாரதியின் மனைவி செல்லம்மாள் வீட்டின் வறுமை தெரியாமல் கணவரைப் பராமரித்தார் அத்தகைய மனைவி வாய்த்ததால்தான் குடும்ப கவலையே இல்லாமல் தமிழ்ப்பணியிலும் பொதுவாழ்விலும் ஈடுபட முடிந்தது. பாரதியால் வறுமையில் கூட பாரதியிடம் தன்மானமும் செருக்கும் இருந்தது பொதுவாக கொடுக்குற கை மேலேயும் வாங்குகிற கை கீழேயும் இருக்கும் ஆனால் அந்த இலக்கணத்தையும் மாற்றினார் பாரதி ஒருமுறை அவரின் பணக்கார நண்பர் தட்டில் பணமும் பட்டாடையும் வைத்து பாரதியிடம் நீட்டினார் “தட்டை உமது கையிலேயே வைத்திரும்” என்று கம்பீரமாய் சொன்னபடி தமது கைகளால் அவற்றை எடுத்துக்கொண்டாராம் பாரதி. கவிராஜன் என்பதால் அத்தனை மிடுக்கு என்று கூறுகிறது ஒரு குறிப்பு மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் வயிறு நிறைய வேண்டும் என விரும்பியவர் பாரதி அதனால் வீட்டில் செல்லம்மாள் வைத்திருந்த கொஞ்சம் அரிசியையும் காகங்களுக்கு வாரி இறைத்து விட்டு மதியம் உண்ண உணவு இல்லாமல் அவர் பசியோடு இருந்த நாட்களும் உண்டு. “காக்கைக் குருவி எங்கள் ஜாதி” என்று பாடியவராயிற்றே அவர் ஒருசமயம் நண்பர் ஒருவர் தமக்கு அளித்த பட்டாடையை வழியில் மேலாடையின்றி அவதிப்பட்ட ஓர் ஏழைக்கு போர்த்தி மகிழ்ந்தார் பாரதி. இப்படி தாம் வறுமையில் வாடியபோது கூட மற்றவர்களுக்கு வாரி வழங்கினார் அந்த மகாகவி ஆனால் அவரது வாழ்க்கையில் வறுமையைத் தந்த இயற்கை அவரது ஆயுளிலும் தாராளம் காட்ட மறுத்துவிட்டது. 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தான் வழக்கமாக செல்லும் திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார் பாரதி எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானை அவரை தூக்கி எறிந்தது அதனால் பலத்த காயமுற்று நோய்வாய்ப் பட்டார்.
சிறிது நாட்களில் வயிற்றுக் கடுப்பு நோயால் அவதியுற்று அதே ஆண்டு செப்டம்பர் 11 ந்தேதி தனது 39 ஆவது வயதில் காலமானார்பாரதி. இளம் வயதிலேயே அவர் மாண்டது அவலம் என்றால் அதை விட இன்னும் ஒரு சோகமான நிகழ்வை கவிராஜன் கதை’ என்ற தனது நூலில் குறிப்பிடுகின்றார் கவிஞர் வைரமுத்து. பாரதியின் இறுதி ஊர்வலத்தில் மிகச் சிலரே கலந்துகொண்டனர் அதனைப் குறிப்பிடும்போது: இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவாக இருந்ததாம் தோழர்களே, மகா கவிஞனுக்கு மரியாதை பார்த்தீரோ அவன உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட ஆட்கள் இல்லையே! தமிழ் பாரதிக்கு கிடைத்த வரம் பாரதி தமிழுக்கு கிடைத்த வரம். பாரதி குழந்தைகளுக்காக பாடினார் பெண்களின் முன்னேற்றத்திற்காக் பாடினார் அறியாமை நீங்கவும் ஜாதி வெறியை சாடவும் நாடு விடுதலைப் பெறவும் பாடினார். அந்தத் தீர்க்கத்தரிசியின் பல கனவுகள் பலித்தன அவர் இன்னும் அதிகம் காலம் வாழ்ந்திருந்தால் தமிழ் இன்னும் வளம் பெற்றிருக்கும் தமிழனும் வளம் பெற்றிருப்பான் மனித நேயமும் பெண் முன்னேற்றமும் ஜாதி ஒழிப்பும் சமத்துவமும் வறுமை ஒழிப்பும்தான் பாரதியின் வாழ்க்கைக் கனவுகளாயின அந்தக் கனவுகள் மெய்ப்படும் என்ற தன்னம்பிக்கையை அவர் எப்போதுமே இழந்ததில்லை. நமக்கும்கூட அந்த விதி பொருந்தும் நாம் விரும்பும் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையோடு பயணித்தால் நாம் விரும்பும் வானம் நமக்கும் வசப்படும் என்பதுதான் பாரதியின் 39 ஆண்டுகால வாழ்க்கை நமக்கு சொல்லும் முக்கிய பாடம்..! நாமும் வாழ்க்கையில் நம்பிக்கையோடும் விடாமுற்சியோடும் போராடினால் நமக்கும் அந்த வானம் வசப்படாமலா போகும்! “பயிற்சியும் முயற்சியும் இருந்தால் ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”

"96.8 ஒலி வானொலி சிங்கப்பூர்"

பாரதி வாழ்க்கை வரலாறு!

1882 : டிசம்பர் 11 திங்கள் இரவு 9.30 மணி சித்திரபானு, கார்த்திகை 27ஆம் தேதி மூல நட்சத்திரத்தில் பாரதி ஜனனம். பிறப்பிடம் எட்டயபுரம் ஜமீன். தந்தை; சின்னச்சாமி அய்யர்; தாய்; லட்சுமி அம்மாள். இளமைப் பெயர் சுப்பிரமணியன். செல்லப் பெயர்; சுப்பையா.
1887 : தாய் மரணம். சுப்பையாவுக்கு வயது 5.
1889 : தந்தை மறுமணம்; சுப்பையாவுக்கு உபநயனம். இளைஞன் அருட்கவி பொழிகிறான்.
1893 : 11 வயதுச் சுப்பையாவை எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்கள் பெருஞ் சபையில் சோதித்து, வியந்து, பாரதி (கலைமகள்) என்ற பட்டம் அளிக்கின்றனர்.
1894 முதல் 1897 : திருநெல்வேலி ஹிந்து காலேஜில் ஐந்தாம் படிவம் வரை படிப்பு. தமிழ்ப் பண்டிதருடன் சொற்போர்கள்.
1897 : ஜூன். 14 1/2 வயது பாரதிக்கும் 7 வயதுச் செல்லம்மாவுக்கும் திருமணம்.
1898 : ஜூன்; தந்தை மரணம். பெருந்துயர், சஞ்சலம்.
1898 முதல் 1902 : காசியில் அத்தை குப்பம்மாளுடன் வாசம். படிப்பு அலகாபாத் ஸர்வ கலாசாலையில் பிரவேசப் பரீட்சையில் தேர்வு. காசி இந்து கலாசாலையில் ஸமஸ்கிருதம், ஹிந்தி பயின்றார். கச்சம், வால் விட்ட தலைப்பாகை, மீசைப் பழக்கம்.
1902 முதல் 1904 : எட்டயபுரம் வாசம். மன்னருக்குத் தோழர். விருப்பமில்லா வேலை. மதுரை விவேகபாநுவில் தனிமை இரக்கம் என்ற முதல் பாடல் அச்சேறுகிறது.
1904 : ஆகஸ்ட் - நவம்பர்; மதுரை சேதுபதி ஹைஸ்கூலில் தற்காலிகமாகத் தமிழ்ப் பண்டிதர்.
1904 : நவம்பர்; சென்னை சுதேச மித்திரன் உதவியாசிரியர். ஜி. சுப்பிமணிய அய்யரிடம் சிட்சை. சக்கரவர்த்தினி மாதப் பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பு.
1905 : வங்கப் பிரிவினை. சமுக சீர்திருத்தவாதி பாரதி அரசியல் தீவிரவாதியாகிறார். காசி காங்கிரஸ் சென்று திரும்புகையில் விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா தேவியைச் சந்தித்து, ஞான குருவாக ஏற்றல்.
1906 : ஏப்ரல்: சென்னையில் புரட்சிகரமான இந்தியா வாரப் பத்திரிகை உதயம். பாரதி பொறுப்பாசிரியர். மண்டயம் ந. திருமலாச்சாரி, எஸ். ஸ்ரீநிவாஸாச்சாரி, சா. துரைசாமி அய்யர், வி. சக்கரைச்செட்டி, வ.உ.சி நட்பு. விபின சந்திரபாலர் சென்னை விஜயம். பால பாரதா ஆங்கில வாரப் பத்திரிகை ஆரம்பம்.
1907 : டிசம்பர்; சூரத் காங்கிரஸ், திலகரின் தீவிரவாத கோஷ்டிக்கு ஆதரவு. வ.உ.சி., மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியுடன் சென்னைத் தீவிர இளைஞர் கோஷ்டியைச் சூரத் அழைத்துச் செல்கிறார். காங்கிரஸில் பிளவு. திலகர், அரவிந்தர், லஜபதி, பாரதி சந்திப்பு.
1907 : அரசியல் எதிரி, பழுத்த மிதவாதி வி. கிருஷ்ணசாமி அய்யர் பாரதியின் தேசிய கீதங்களில் மோகித்துப் போகிறார். சுதேச கீதங்கள் என்ற தலைப்பில் மூன்று பாடல்கள் கொண்ட நாலு பக்கப் பிரசுரம் நிறைய வெளியிட்டு, இலவசமாய் விநியோகிக்கிறார் கிருஷ்ணசாமி அய்யர்.
1908 : சென்னை தீவிரவாதிகள் கோட்டை. சுயராஜ்ய தினம் சென்னையில் பாரதியாலும், தூத்துக்குடியில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, சுதேசி பத்மநாபய்யங்கார் முதலியோராலும் கொண்டாடப்படுகிறது. பின்னர் மூவர் கைது; வ.உ.சி., சிவாவுக்குத் தண்டனை, சிறை வாசம், வழக்கில் பாரதி சாட்சியம் சொல்கிறார்.
1908 : சுதேச கீதங்கள் என்ற கவிதைத் தொகுதியைப் பாரதி வெளியிடுகிறார். முதல் நூல்.
1908 முதல் 1910 : இந்தியாவும் புதுமை வந்து, பிரெஞ்சிந்திய எல்லைக்குள்ளிருந்து, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது நெருப்பு மழை பொழிகிறது. பத்திரிகையின் செல்வாக்கு அதிகரிப்பது கண்டு, பிரிட்டிஷ் இந்தியாவில் நுழையாதபடி, பிரிட்டிஷ் சர்க்கார் தடுக்கின்றனர். இந்தியா நின்று போகிறது.
1909 : ஜன்மபூமி என்ற இரண்டாவது கவிதைத் தொகுதி வெளியீடு.
1910 : விஜயா தினசரி, சூர்யோதயம் வாரப் பதிப்பு, பாலபாரத ஆங்கில வாரப்பதிப்பு, கர்மயோகி மாதப் பதிப்பு - யாவும் நின்று போகின்றன. சித்ராவளி ஆங்கில - தமிழ் கார்ட்டூன் பத்திரிகைத் திட்டம் நிறைவேறவில்லை.
1910 : ஏப்ரல் : பாரதி ஏற்பாடு செய்ய, அரவிந்தர் புதுவை வருகிறார். வேதநூல் ஆராய்ச்சி.
1910 : நவம்பர் : கனவு என்ற ஸ்வயசரிதை முதலிய பாடல் அடங்கிய மாதா மணி வாசகம் நூல் வெளியீடு. வ.வே.சு அய்யர் வருகை.
1911 : மணியாச்சியில் கலெக்டர் ஆஷ் கொலை. புதுவைத் தேச பக்தர்கள் மீது சந்தேகம். போலீஸ் கெடுபிடிகள்; புதுவையிலிருந்து தேச பக்தர்களை வெளியேற்ற முயற்சிகள். பாரதியின் சிஷ்யகோடிகள் பெருகுகின்றனர்.
1912 : உழைப்பு மிக்க வருடம். கீதை மொழி பெயர்ப்பு, கண்ணன் பாட்டு, குயில், பாஞ்சாலி சபதம் எழுதப் பெறுகின்றன. பாஞ்சாலி சபதம் முதல் பாகம் பிரசுரம்.
1913 முதல் 1914 : சின்னச் சங்கரன் கதை கையெழுத்துப் பிரதி மறைந்து போகிறது. சுப்பிரமணிய சிவத்தின் ஞானபாநு பத்திரிகைக்கு விஷயதானம். தென் ஆப்பிரிக்கா நேடலில் மாதா மணிவாசகம் நூல் பிரசுரம். முதல் மகாயுத்தம் ஆரம்பம். புதுவைத் தேச பக்தர் தொல்லைகள் அதிகரித்தல்.
1917 : கண்ணன் பாட்டு முதல் பதிப்பை பரலி சு. நெல்லையப்பர் சென்னையில் வெளியிடுகிறார்.
1918 : நெல்லையப்பர் சுதேச கீதங்களை நாட்டுப்பாட்டு என்று வெளியிடுகிறார்.
1918 : புதுவை வாசம் சலித்துப்போய், புதுவையை விட்டு நவம்பர் 20 ஆம் தேதி பாரதி கிளம்புகிறார். கடலூர் அருகே கைது. ரிமாண்டில் 34 நாள். முடிவில், வழக்கில்லையென விடுதலை. நேரே மனைவியின் ஊர் கடயத்துக்குச் செல்கிறார்.

1918 முதல் 1920 : கடயம் வாசம். திருவனந்தபுரம், எட்டயபுரம், காரைக்குடி, கானாடுகாத்தான் போய் வருகிறார். எட்டயபுர மன்னருக்குச் சீட்டுக் கவிகள் பயனில்லை. தாகூருடன் நோபல் பரிசுக்காகப் போட்டியிட விருப்பம்; நடைபெறவில்லை.
1919 : மார்ச்; சென்னைக்கு விஜயம். ராஜாஜி வீட்டில் காந்திஜி சந்திப்பு.
1920 : டிசம்பர் : சென்னையில் சுதேசமித்திரனில் மீண்டும் உதவியாசிரியர் வேலை. ஏ. ரங்கசாமி அய்யங்கார் ஆசிரியர். பாரதி கட்டுரைகள் நிறைய எழுதுகிறார்.
1921 : ஜூலை - ஆகஸ்ட்; திருவல்லிக்கேணி கோயில் யானை ஒதுக்கித் தள்ள, யானை காலடியில் கிடக்கிறார். குவளை காப்பாற்றுகிறார். அதிர்ச்சியால் நோயுறுகிறார் கவிஞர்.
1921 : செப்டம்பர்; யானை அதிர்ச்சியால் ஏற்பட்ட நோயிலிருந்து குணமடைந்தாலும் வயிற்றுக் கடுப்பு நோய் பீடிக்கிறது.
1921 : செப்டம்பர் 11; நோய்க்கடுமை. மருந்துண்ண மறுப்பு.
1921 : செப்டம்பர் 12; நள்ளிரவு தாண்டி, காலை 1.30 மணி சுமாருக்கு மறைவு. வயது 39 நிறையவில்லை.
.

பாரதியார் பிறப்பு 1882 டிசம்பர் 11
இறப்பு1921 செப்டம்பர் 11

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி
தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்த கவிஞாயிறு. சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர்.

பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும் அண்மைக்கால தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர்.

“ தேடிச் சோறுநிதந் தின்று

பல சின்னஞ் சிறுகதைகள் பேசி

மனம் வாடித் துன்பமிக உழன்று

பிறர் வாடப் பல செயல்கள் செய்து

நரை கூடிப் கிழப்பருவம் எய்தி

கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்

பல வேடிக்கை மனிதரைப் போலே

நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?



பாஞ்சாலி சபதம்[தொகு]
இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும் மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாகப் பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது. பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப் பெற்றது. பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் உடையது. இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது.

படைப்புகள்[தொகு]
இதழியல் பணியும் விடுதலைப் போராட்டமும்[தொகு]
பாரதியார், முதலில் நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார்.
சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905 - ஆக. 1906), இந்தியா என்ற வார இதழில் (மே 1905 - மார்.1906 / செப். 1906, புதுச்சேரி: 10.19.1908- 17. மே 1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909–1910), தர்மம் (பிப்.1910) என்ற இதழ்களிலும் பாலபாரத யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் "இந்தியா" பத்திரிகை புதுவையில் வெளியானது.

தடை செய்யப்பட்ட புத்தகங்கள்[தொகு]
பாரதியாரின் பாடல்களைப் பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பர்மா மாகாண அரசு தடைசெய்தது. இதனைப் பின்பற்றி சென்னை மாகாணத்தின் காவல் துறை உத்தரவுமூலம் பாரதியார் பாடல்கள் தடைசெய்யப்பட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாகாணச்சட்ட சபையில் விரிவான விவாதம் 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 8, 9 தேதிகளில் நடந்தது . தீரர் சத்திய மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விவாதத்தில் இலக்கியம் சார்ந்த பல கருத்துகள் பதிவாகியுள்ளன.[8]

தேசியக் கவி[தொகு]

எட்டயபுரத்தில் பாரதி பிறந்த வீடு தற்போது தமிழக அரசால் சீர்செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது.

விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாகப் போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.
தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்க வேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.

ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.

புதுக்கவிதைப் புலவன்[தொகு]
பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவருக்கு முன்பாகக் கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர்.
இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை எனப் புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையைத் தமிழுக்குத் தந்தவர். கேலிச்சித்திரம் (caricature) எனப்படும் வரையும் முறையைத் தமிழுக்கு முதலில் தந்த பெருமை பாரதியையே சாரும்[மேற்கோள் தேவை].

பெண்ணுரிமைப் போராளி[தொகு]
பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே எனப் பெண்ணுரிமையை ஏத்தினார். "போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான்" என்ற பாரதி

பெண்மை வாழ்கவெனக் கூத்திடுவோமடா என்றார். பெண்களின் கல்வியறிவுக்காகச் சட்டங்களைச் செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டார்.

பாரதியார் நினைவுச் சின்னங்கள்[தொகு]

புதுவையில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம்

சுட்டும் விழி சுடர் - பாரதியார் பாடல்

தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை நினைவு இல்லங்களாகப் போற்றி வருகிறது.

இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயரச் சிலை அமைக்கப்பட்டு 13-02-2000 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இங்குப் பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.
இறப்பு[தொகு]

1921 ஆம் ஆண்டு சூலை மாதம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். பிறகு 1921ல் செப்டம்பர் 12 அதிகாலை 01:30 மணிக்கு இறந்தார்.[9][2] கோவில் யானையால் தாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார்.

sivaji ganesan as bharathiyaar
யானை மிதித்து இறந்ததாகத் தகவல்கள் இருந்தாலும், நோய்வாய்ப்பட்டு இறந்ததே உண்மை.[சான்று தேவை] அவர் கடைசி நாட்களைக் கழித்த இல்லம் திருவல்லிகேணியில் உள்ளது.

சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: டிசம்பர் 11, 1882

பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)

பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்

இறப்பு: செப்டம்பர் 11, 1921

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

சுப்ரமணிய பாரதியார் அவர்கள், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.

இளமைப் பருவம்

சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார். .

பாரதியாரின் திருமண வாழ்க்கை

பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.

பாரதியாரின் இலக்கிய பணி

‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார், தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.

விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு
சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார்.

“ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

இறப்பு
1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.

பாரதியாரை நினைவூட்டும் சின்னங்கள்

எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எ’ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர், என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.

சுப்பிரமணிய பாரதியார்

11.12.1882 - 11.9.1921

எட்டயபுரம், தூத்துக்குடி.

'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே' என்ற வரிகளைக் கேட்கும்போதும், பாடும்போதும் மனதுக்குள் நம்மை அறியாமல் ஒரு சக்தி பிறக்கும். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் விடுதலைப்போர் கவிதைகள் மூலமாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டினார். தமிழை நேசிப்பவர்கள் இவரை நேசிப்பார்கள்; புதுமையை விரும்புகிறவர்கள் இவரை விரும்பாமல் இருக்க மாட்டார்கள்; அவர்தான் காலம் கடந்து வாழும் புரட்சிக் கவிஞன் பாரதி.

பாரதியின் இயற்பெயர் சுப்பிரமணியன். சுப்பையா என்பது இவரது செல்லப் பெயர். பள்ளியில் படிக்கும்போதிருந்தே கவிதைகள் எழுதத் தொடங்கி, இளம் வயதிலேயே தமிழ்ப் புலமையுடன் திகழ்ந்தார். பதினொரு வயதில் கவிபாடுவது கண்ட எட்டயபுரம் மன்னர் இவருக்கு 'பாரதி' என்ற பட்டத்தை வழங்கினார். அதன் பிறகே 'சுப்பிரமணிய பாரதி' என்று அழைக்கப்பட்டார்.

கவிஞர் மட்டுமல்ல; எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என்று பலமுகங்கள் இவருக்கு! தமிழ் மட்டுமன்றி சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, தெலுங்கு போன்ற பிறமொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார்.

பாரதியின் பாடல்கள் சுதந்திரப் போரில் மக்கள் அனைவரையும் ஈடுபட வைத்தது. 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்' என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தைப் பாடல்களால் வெளிபடுத்தி 'தேசியக்கவி' ஆனார். 'இந்தியா' பத்திரிகை மூலமாக விடுதலை உணர்வைத் தூண்டும் வகையில் பல கட்டுரைகளை எழுதினார். இவரது எழுத்துக்கு ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி 'இந்தியா' பத்திரிகைக்குத் தடை விதித்து, கைது செய்து சிறையில் அடைத்தது. வ.உ.சி. உடன் நெருங்கிய நட்பில் இருந்தார். விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதாவை சந்தித்து அவரைத் தனது ஞான குருவாக ஏற்றுக் கொண்டார்.

'காலம்னிஸ்ட்' எனப்படும் பத்தி எழுத்துகளையும், அரசியல் கார்ட்டூன்களையும் முதன்முதலாகத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியது பாரதியே. தமிழையும், தமிழ்நாட்டின் சிறப்பையும் பற்றிப் பாட்டு எழுதி அனுப்ப மதுரைத் தமிழ்ச் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியானது. அதற்காக பாரதி எழுதி அனுப்பிய கவிதைதான், 'செந்தமிழ் நாடெனும் போதினிலே'. 1912ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழி பெயர்த்தார். கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி போன்ற புகழ் பெற்ற காவியங்களை எழுதினார்.

மனித நேயம், பெண்கள் முன்னேற்றம், சாதி ஒழிப்பு, சமத்துவம், விடுதலை போன்றவற்றைத் தன் வாழ்க்கையின் கனவுகளாகக் கொண்ட பாரதி, பிற மனிதர்களைப் போல் வீழாமல் தமிழ் இருக்கும்வரை நம்முடன் இருப்பார்.
.

Friday, 4 September 2020

NEW AGE OF ELECTRICITY 1882 SEPT 4 begins







NEW AGE OF ELECTRICITY 1882 SEPT 4 begins

Thomas Alva Edison established the Edison Electric Illuminating Company of New York, now Consolidated Edison, to commercialize his 1879 incandescent lamp invention. On 4 September 1882, Edison’s direct current (dc) generating station at 257 Pearl Street, began supplying electricity to customers in the First District, a one-quarter square mile (0.65 square km) area. This installation was the forerunner of all central electric generating stations.

The milestone plaque may be viewed at the ConEdison headquarters building at 4 Irving Place, New York, NY.

For most of the 19th century, inventors in Europe and in North America worked to bring about electrical lighting. Electric arc lighting was first demonstrated in 1808 by Sir Humphry Davy, the British chemist and physicist. Arc lighting, with its open electric arc leaping between two carbon electrodes, the frequent need to renew the carbon tips, and brilliant and glaring light, was best suited to outdoor use or for very large indoor spaces. While arc lighting achieved commercial acceptance on both sides of the Atlantic Ocean by the 1870s, it was recognized early in the 1800s that incandescent electric lighting would be needed for homes and for most other indoor applications. Thomas Alva Edison, working at his laboratory in Menlo Park, New Jersey, turned his attention to electric light in mid-1878, a relative late-comer in the quest for practical incandescent lighting. By that time, many inventors and experimenters had contributed to the development of dynamos, devices for maintaining constant voltage, lamp technology, and other individual components needed to provide incandescent electric light.


The story of Edison's development of the first practical incandescent light in October 1879 after thousands of experiments with filament materials has been often told and is well known. From the outset, Edison realized that he would have to develop an entire system to generate, deliver, and utilize electric energy. Building on the work of other inventors in some cases and drawing on his own vision and ingenuity, Edison and his associates developed a parallel circuit to use his high-resistance filament lamp, an improved constant voltage dynamo to provide power to the parallel circuit, junction boxes and other components of an underground conduit system, safety fuses and insulating materials, and the necessary consumption meter, light fixtures, and switches. Edison then set up companies to manufacture most of the needed equipment and components.

Having invented and created an entire incandescent lighting system, Edison's task as an entrepreneur and industrialist was to demonstrate his low-voltage direct current (dc) system to the public. Edison's first commercial installation on land was at the printing firm of Hinds, Ketcham & Company in New York City. This installation went into service in January 1881 and, like other small, isolated systems subsequently installed by Edison, served one customer from a dynamo in the basement of the building. Having patterned his incandescent lighting system on then long-established and economical gas lighting systems, Edison's plan was to combine a central power station with a system of conductors to distribute electricity to the end users. He proved the technical feasibility of the central station concept with an installation under the Holborn Viaduct in London, United Kingdom, that operated successfully for about two years beginning in January 1882.

Shortly after announcing his intended development of a practical incandescent lamp in late 1878, Edison began to lay out his vision of a full-scale central station system for installation in New York City to conclusively prove that his dc system worked and was commercially viable. The result was the legendary Pearl Street station, the first permanent central power station for supplying incandescent lighting. The Beginning of dc Electric Service: Pearl Street, 1882 Edison carefully chose the service area and location for his first full-scale central station after conducting extensive market research.
He wanted a densely populated area having a mix of commercial and residential uses. He also well understood the value of newspaper publicity and the need to impress and interest his present and potential financial backers. The area selected, known as the First District, was a rectangular area bounded by Wall Street on the south, by Nassau Street on the west, by the East River on the east, and by Spruce Street and the former Ferry Street on the north. The First District included much of the high-profile downtown business district, the financial capital of the United States. It was also home to the city's influential newspapers, including the New York Times. Edison formed the Edison Electric Illuminating Company of New York, a direct predecessor of the present Consolidated Edison Company of New York (Con Edison) in December 1880 to undertake the project. In April 1881, he secured a franchise from the New York City Board of Aldermen to install electric conduits and wires in the public streets. Edison purchased adjoining buildings at 255 and 257 Pearl Street, just south of the intersection of Pearl and Fulton Streets, for the Pearl Street generating station. Each building measured 25 ft by 100 ft and had four floors. He strengthened the structure of 257 Pearl Street to carry the weight of the dynamos and other heavy equipment on the upper floors, while 255 Pearl Street was held in reserve for possible future expansion of the station.

To supply electric power to the lights within Pearl Street's service area, Edison and his team developed the 27-ton "Jumbo" constant-voltage dynamo, named for a circus elephant then owned by P.T. Barnum. This dynamo was adapted from an earlier design by Werner Siemens in Germany. Each of the six dynamos installed at Pearl Street had a capacity of about 100 kW and could supply about 1,200 lamps. The six dynamos were driven by Armington & Sims reciprocating steam engines supplied by four coal-fired boilers.

The project involved the installation of about 80,000 ft of underground conductors in a manhole and conduit configuration. The original system consisted of two wires in the form of twin half moon shaped copper conductors, separated within the conduit by rope and insulated with beeswax, linseed oil, and asphaltum. The original system operated at 110 V dc. Because of the large amount of costly copper (the main and feeder distribution system was the most expensive component of the entire project) required, Edison quickly supplanted the two-wire configuration with a 220-V, three-wire design that greatly reduced the amount of copper needed for the conductors. This resulted in a significant cost saving.

Edison served as his own chief engineer on all phases of the design and construction of the project. The Pearl Street station was finally completed and put into 2 commercial operation on the afternoon of 4 September 1882. Edison was standing in the office of J. Pierpont Morgan of Drexel, Morgan & Company, one of his principal investors, when he gave the signal to John W. Lieb, chief electrician, to close the switch to start delivering dc power to customers in the First District. While the six dynamos could supply up to 7,200 lamps, there were only some 85 customers having a total of about 400 lamps on the first day of operation.

The events of 4 September 1882 were reported the next day in the New York Times, one of Edison's first incandescent light customers. Perhaps not fully comprehending the world-changing significance of the birth of the electric age, the newspaper published the unnamed reporter's eyewitness account under "Miscellaneous City News." The verbatim account from the 5 September 1882 New York Times can be found on Attachment 1. While the Pearl Street project was not an immediate financial success, it conclusively proved that Edison's system worked and demonstrated the enormous benefits of comprehensive electrification. The initial 400 or so lamps in service in the First District serving fewer than 90 customers on 4 September 1882 grew to about 10,000 lamps serving 513 customers within a year. Similar Edison dc low-voltage central-station electric systems were built in other parts of New York City, and many were licensed for installation in cities and towns throughout North America, Europe, South America, and Japan during the next decade.

The Pearl Street Station Site Today
The Pearl Street station faithfully delivered electric power to its customers from 4 September 1882 to 2 January 1890 with only one interruption, that lasting for three hours. This established an early standard for utility system reliability. A major fire on 2 January 1890 caused extensive damage to the station, but Edison and his coworkers worked around the clock and were able to restore electric service in 11 days. The Pearl Street station was rebuilt after the fire but was retired and dismantled in 1895. Edison sold the buildings at 255 and 257 Pearl Street, and they were later demolished. Of the "Jumbo" dynamos built by Edison for Pearl Street and similar power stations, only "old number nine," a survivor of the 1890 fire, remains and is on display at the Henry Ford Museum at Greenfield Village in Dearborn, Michigan.

The Pearl Street station site today is a public parking facility. In 1917, the American Scenic and Historic Preservation Society and the New York Edison Company (now Con Edison) placed a bronze plaque at the site to commemorate the seminal achievement that took place at that location. The image at the top of the plaque is a drawing of the Pearl Street dynamo room.

The Advent of ac Electric Service
The Pearl Street station and its distribution network was the prototype for central-station electric utility systems, and, in the early years of large-scale electrification, hundreds of Edison systems modeled on Pearl Street and improved versions of the Pearl Street design were installed. However, a low-voltage dc system has inherent disadvantages, the chief one being high line losses that limit the distance that the dc electric power can be economically transmitted. As a result, each dc system was destined to serve a relatively small geographic area having high load density.

By the mid-1880s, alternating current (ac) systems began to compete with Edison's dc system. Inventors such as Nikola Tesla, William Stanley, Michael von Dolivo-Dobrowolsky, Elihu Thomson, Lucien Gaulard, John Gibbs, and others working in Europe and North America all contributed to ac technology. The invention of the ac transformer permitted the economical and efficient long-distance transmission of electric power at high voltages, thereby resolving the major disadvantage of low-voltage dc systems. Promoted by industrialists such as George Westinghouse and others, the advantages of ac electric utility service became obvious, and, by the end of the 19th century, dc systems began a gradual and inevitable decline.

.

Sunday, 28 January 2018

FIRST TELEPHONE INSTALLED IN MADRAS 1882 – JANUARY 28





FIRST TELEPHONE INSTALLED IN MADRAS

1882 – JANUARY 28





1882 – JANUARY 28
சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.
தொலைபேசி

தொலைபேசி (Telephone) என்பது நேரடியாகப் பேசமுடியாத தொலைவில் இருப்பவருடன் பேசப் பயன்படும் ஒரு தொலைதொடர்புக் கருவி. தொலைபேசி குரலைத் திறம்பட செலுத்தவல்ல வடத்திலோ பிற ஊடகத்திலோ, நெடுந்தொலைவுக்கு அனுப்பவல்ல மின்னனியல் குறிகைகளாக மாற்றி, அந்த குறிகைகளை மறுமுனையில் அதே நேரத்தில் பயனர் கேட்கும்படி மீளத் தருகிறது.

இதில் பேசும்போது ஒலி அலைகள் ஒரு தகட்டினை அதிரச் செய்கிறது. அந்த அதிர்வுகள் மின் குறிப்பலைகளாக மாற்றப்பட்டதும் பின்னர் இம்மின்னலைகள் மின்கம்பியின் வழியே செலுத்தப்படுகின்றன. மறுமுனையில் மீண்டும் இவை ஒலியலைகளாக மாற்றப்படுவதால், ஒருவர் பேசுவது மற்றொருவர் உலகில் எங்கிருந்தாலும் கேட்க முடிகிறது.
சுழலும் முகப்புத் தட்டுத்
தொலைபேசி, அண்.1940களில்


இக்கருவியைச் சுகாட்லாந்தில் இருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த அலெக்சாண்டர் கிரகாம் பெல் (Alexander Graham Bell) என்பவர் வடிவமைத்து பதிவுரிமம் பெற்றார் என்று பொதுவாகக் கூறப்படினும், 1849-1875 ஆண்டுகளுக்கிடையே பலநாட்டு ஆய்வாளர்கள் முன்னோடியாக உழைத்து தொலைபேசி தொடர்பான பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளனர். தொலைபேசிகள் வணிக, அரசு, தொழிலக, வீட்டு பயன்பாடுகளுக்கு மிகவும் இன்றியமையாத கருவியாகிவிட்டது. இது இன்று மிகப் பரவலாக வழக்கில் உள்ள பொதுப்பயன்கருவி ஆகும் இன்று இக்கருவி கம்பியில்லாமலே மின் குறிகைகளைச் செலுத்தும்படி தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.[1]
நிகழ்காலத் தொலைபேசிகள் அழுந்து
பொத்தானைப் பயன்படுத்துகின்றன

தொலைபேசியின் அடிப்படை உறுப்புகளாக பேசும் ஒலியை வாங்கி செலுத்தவல்ல நுண்பேசி. எனும் அலைசெலுத்தியும் மறுமுனையில் பேச்சை மீளாக்கம் செய்து கேட்க ஓர் அலைவாங்கியும் அமைகின்றன. மேலும் இவற்றோடு உள்வரும் அழைப்பை அறிவிக்க ஒலியெழுப்ப ஒலிப்பியும் அழைக்கும் தொலைபேசி எண்ணை உள்ளிட, சுழல்முகப்பு அல்லது அழுந்து பொத்தான்பலகமும் உறுப்புகளாக அமையும். அனைத்து தொலைபேசிகளும் 1970 கள் வரை சுழலும் முகப்பைப் பெற்றிருந்தன. இவை இப்போது இருகுரல் பல் அலைவெண் குறிகைப் பொத்தான்களால் பதிலீடு செய்யப்பட்டுள்ளன.

இம்முறை முதலில் பொதுமக்களுக்கு 1963 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[2] இந்த அலைசெலுத்தியும் அலைவாங்கியும் கையில் எடுத்து பேசும் முண்டகத்தில் பேசும்போது வாயிலும் கையிலும் அமையுமாறு பொருத்தப்படுகின்றன. முகப்பு முண்டகத்திலோ அதை வைக்கும் அடிஏந்தியிலோ அமையலாம். அலைசெலுத்தி பேச்சு ஒலியலைகளை மின்குறிகைகளாக மாற்றி தொலைபேசி வலையமைப்பு வழியாக கேட்கும் பேசிக்கு அனுப்புகிறது. கேட்கும் பேசி இந்த மின்குறிகையை கேட்க கூடிய ஒலியலைகளாக அலைசெலுத்தியில் அல்லது ஓர் ஒலிபெருக்கிவழி மாற்றுகிறது. தொலைபேசிகள் இருவழித் தொடர்பை நிகழவிடுகின்றன. இதன் பொருள், இருபுறமும் உள்ள மக்கள் தொடர்ந்து ஒருங்கே பேசவும் கேட்கவும் செய்யலாம்.

முதலில் தொலைபேசிகள் நேரடியாக ஒருவாடிக்கையாளர் வீடு அல்லது அலுவலகத்தில் இருந்து மற்றொரு வாடிக்கையாளரது இருப்பிடத்துக்கு இணைக்கப்பட்டது. சில வாடிக்கையாளர்களுக்கு மேல் இம்முறை நடைமுறையில் அரிதாக அமைந்ததால், மையப்படுத்திய நிலைமாற்றிப் பலகைகள் வழியாக உரிய இயக்குவோரால் இணைப்பு நல்கும் முறை வழக்கிற்கு வந்தது. இது கம்பிதொடர் தொலைபேசிச் சேவைக்கு வழிவகுத்தது. இதில் ஒவ்வொரு தொலைபேசியும் அதற்கே உரிய இரு கம்பிதொடரால் மைய நிலைமாற்றிப் பலகைகளுக்கு இணைக்கப்பட்டது. இது பிறகு முழுமையாகத் தன்னியக்கம்வாய்ந்த சேவையாக 1900 களில் உருவாகியது.

20 ஆம் நூற்றாண்டின் நடுவில் கப்பல், தானூர்தி போன்ற இயங்கும் தொலைபேசிகளுடன் தொடர்பு கொள்ள வானொலிவகை அலைசெலுத்த அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 1973 இல் இருந்து தனிப்பயனருக்கான கைப்பேசிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1970 களின் இறுதிக்குள் உலக முழுவதும் பல நகர்பேசி வலையமைப்புகள் இயங்கலாயின. 1983 இல் மேம்பட்ட நகரும் தொலைபேசி அமைப்புகள் தொடங்கப்பட்டன. இவை அலுவலகம் அல்லது வீட்டுக்கு அப்பால் பயனர்கள் இருந்தாலும் தொடர்புகொள்ள ஏற்ற செந்தரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தின. இந்த ஒப்புமை கலப்பேசி அமைப்பு பின்னர் நல்ல பாதுகாப்பும் உயர் இயக்கத் திறமையும் மலிவு விலையில் வட்டாரம் முழுவதும் பரவிய இலக்கவியல் வலையமைப்புகளாக படிமலர்ந்தன. பல நிலைமாற்ற மையங்கள் படிநிலை அமைவில் இணைந்த பொது நிலைமாற்றல் தொலைபேசி அமைப்புகள், உலக முழுவதிலும் உள்ள ஒவ்வொருவரும் தொடர்பு கொள்ளும்படிஅனைவருக்கும் இணைப்புகளை வழங்குகின்றன. E.164 எனும் செந்தர அனைத்துலக எண் அமைப்புவழி, ஒவ்வொரு தொலைபேசியும் ஒரு அடையாளத் தொலைபேசி எண்ணால் வலையமைப்பில் உள்ள மற்றொரு தொலைபேசியுடன் தொடர்புகொள்ள முடிகிறது.

முதலில் பேசுவதற்கு மட்டுமே வடிவமைக்கப்பட்டாலும், பல தொழில்நுட்பங்களின் ஒருங்கு குவிதலால் நிகழ்காலக் கலப்பேசிகள் பல கூடுதல் பயன்களைத் தரவல்லனவாக வடிவமைக்கப்படலாயின. இன்று கலப்பேசிகள் பேச்சுத் தகவலைப் பதிகின்றன; பாடப் பகுதிகளை அனுப்பிடவும் பெறவும் செய்கின்றன; ஒளிப்படங்களைப் பிடித்து காட்சிப்படுத்துகின்றன; காணொலிக் காட்சிகளைப் படம்பிடிக்கின்றன; இசை மீட்டுகின்றன; காட்சி விளையாட்டுகளை விளையாட பயன்படுகின்றன; இணையத்தில் உலாவ விடுகின்றன; ஊர்தி ஒட்ட படிபடியாக வழியைக் காட்டுகின்றன. மெய்நிகர் உலகில் உலவ விடுகின்றன. 1999 அளவில் இருந்து கலப்பேசி துடியான பல செயல்பாடுகளைச் செய்யவல்லனவாகி விட்டன. இவை அண்மையில் அனைத்து இயங்குநிலைத் தொடர்பையும் கணிப்புத் தேவைகளையும் நிறைவேற்றுகின்றன.

அடிப்படை நெறிமுறைகள்[மூலத்தைத் தொகு]

கம்பித்தொடர் தொலைபேசியை நிறுவுதலின் திட்டவிளக்கப்படம்.
மரபான நிலத்தொடர் தொலைபேசி அமைப்பு, அதாவது பழைய எளிய தொலைபேசிச் சேவை,(POTS), வழக்கமாக, முறுக்கிய இரட்டைக் காப்பிட்ட கம்பித் தொடரிலேயே ( விளக்கப்படத்தில் C) கட்டுபாட்டுக் குறிகைகளையும் குரல்சார்ந்த குறிகைகளையும் அனுப்பிப் பெறுகிறது. இந்தத் தொடர் தொலைபேசித் தொடர் எனப்படுகிறது. இதில் அமைந்த கட்டுபாட்டு, குறிகை பரிமாற்ற அமைப்பு மூன்று உறுப்புகளைக் கொண்டுள்ளது அவை ஒலியெழுப்பி, இணைப்பு நிலைமாற்றி, முகப்புத் தட்டு என்பனவாகும். ஒலியெழுப்பி அல்லது மணியடிப்பி அல்லது ஒளிச்சுடர் அமைப்பு (A7), பயனருக்கு வரும் அழைப்புகளை உணர்த்துகின்றன. இணைப்பு நிலைமாற்றி மைய அலுவலகத்துக்கு பயனர் அழைப்பைக் கேட்கவோ அல்லது அழைக்கவோ தன் கைப்பேசியை எடுத்துவிட்டதைக் குறிகையால் அறிவிக்கின்றன. முகப்புத் தட்டு அழைப்பு தொடங்கும்போது, வாடிக்கையாளரின் தொலைபேசி எண்ணை மைய அலுவலகத்துக்குச் செலுத்த பயன்படுகிறது. 1960 கள் வரை சுழல் முகப்புத் தட்டுகளே பயனில் இருந்தன. பின்னர் இவை இருகுரல் பல் அலைவெண் குறிகை முறையால் பதிலீடு செய்யப்பட்டன. இவற்றில் அழுந்து பொத்தான்களும் (A4) வழக்குக்கு வந்தன.


கம்பித் தொடர்த் தொலைபேசி சேவையின் பெரும்பாலான செலவு, இணைப்பகத்துக்கு வெளியிலேயே அமைகிறது. தொலைபேசிகள் உள்வரும்/வெளியேகும் பேச்சுக் குறிகைகளை ஒரே ஒற்றைக் கம்பியிணையில் மட்டுமே இருவழியிலும் செலுத்துகின்றன. முறுக்கிய இணைகம்பிகள் மின்காந்தக் குறுக்கீட்டையும் குறுக்குப் பேச்சையும் முறுக்காத இணைகம்பிகளைவிட திறம்பட தவிர்க்கின்றன. வலிமை மிகுந்த ஒலிபேசிச் செலுத்தியின் வெளியேகும் பேச்சுக் குறிகை, வலிவு குறைந்த ஒலிபெருக்கி வாங்கியின் குறிகையை மிகாமல் இருக்க, கலவைச் சுருள் (A3) பயனாகிறது. பிற உறுப்புகள் இரண்டுக்கும் இடையில் அமையும் சமனின்மையைச் சமன்செய்கின்றன. சந்திப் பெட்டி (B) மின்னலையை (B2) எதிர்கொண்டு தொடரின் நீளம் முழுவதற்கான தடையத்தை (B1) சரிசெய்து குறிகைத் திறனைப் பெருமம் ஆக்குகிறது. தொலைபேசிகள் இதேபோன்ற சரிசெய்தலை(A8) அகத் தொடரின் நீளத்துக்கும் பெற்றுள்ளன. தரையை ஒப்பிடும்போது தொடரின் மின்னழுத்தம் எதிர்மையதாக அமையும். இந்நிலை துத்தநாக்க் கரிப்பினைத் தவிர்க்கிறது. எதிர்மை மின்னழுத்தம் நேர்மின்னூட்ட பொன்ம மின்னணுக்களை கம்பியின்பால் ஈர்க்கிறது.

1896 இல் இருந்த தொலைபேசி

தொலைபேசியை தொலைபேசி வலையமைப்பில் இணைக்க நான்கு வழிமுறைகள் பயன்படுகின்றன. வழக்கமான ஓரிடத்தில் நிலையாக இருந்து இயங்கும் தொலைபேசியில் அதற்கெனவே மின்கம்பி இணைப்புகள் அமைந்திருக்கும். கம்பியில்லா தொலைபேசி மின்குறிப்பலைகளை 0,1 எனும் இரும எண்மக் ( இரும இலக்கவியல்) குறிப்பலை வடிவிலோ அல்லது ஒப்புமைக் குறிப்பலை வடிவிலோ பயன்படுத்தும். செயற்கைமதித் தொலைபேசிவழித் தொலைத் தொடர்பாடலும் . இணையத்தில் பயன்படும் குரல்வழித் தொலைபேசிகளும் அகல்பட்டை (அகன்ற அலைவரிசை) இணைய இணைப்புக்களைப் பயன்படுத்துகின்றன.

இயங்கும் வழிமுறை[மூலத்தைத் தொகு]
நிலத்தொடர் தொலைபேசி, (A4) எனும் நிலைமாற்றும் இணைப்பையும் (A7 எனும் ஒலியெழுப்பி எச்சரிக்கும் அமைப்பையும்)பெற்றுள்ளது. இது பேசி இணைப்பில் உள்ளபோது பேசியின் தொடரில் இணைந்திருக்கும் நிலைமாற்றி (A4) திறந்திருக்கும். பேசி பிரிந்துள்ளபோது பிற உறுப்புகள் இணைக்கப்படுகின்றன. பிரிந்தநிலையில் இணையும் உறுப்புகளாக, ஒலிசெலுத்தியாக அமையும் நுண்பேசி A2, ஒலிவாங்கியாக செயல்படும் ஒலிபெருக்கி அல்லது கேட்பி A1, முகத்தல், வடித்தல், மிகைத்தலுக்கான சுற்றதர்கள் ஆகியவை அமைகின்றன.

ஒருவர், மற்ற ஒருவரோடு பேசக் கருதி அவரை அழைக்க, தொலைபேசியின் கைம்முண்டகத்தை எடுக்கும்போது, ஒரு நெம்பை இயக்கிட, அது (A4) எனும் இணைப்புதரும் கொக்கியை மூடுகிறது. இச்செயல் ஒலிசெலுத்தி (நுண்பேசி அல்லது பேசி), ஒலிவாங்கி (ஒலிபெருக்கி அல்லது கேட்பி), பிற பேச்சு சார்ந்த உறுப்புகளைத் தொலைபேசித் தொடரில் இணைத்து, தொலைபேசிக்கு மின் திறனைத் தருகிறது.பிரிநிலைச் சுற்றதர் 300 ஓமுக்கும் குறைவான மின் தடையே பெற்றுள்ளதால், தொலைபேசி இணைப்பகத்தில் இருந்து மின் தொடரூடாக(C) நேர்மின்னோட்டத்தைப் பெறுகிறது. இணைப்பகம் இந்த மின்னோட்டத்தைக் கண்டுபித்து, தொடரில் இலக்க ஒலிவாங்கிச் சுற்றதரை இணைக்கிறது; ஆயத்தநிலையைக் குறிப்பிட இணைப்பொலியை அனுப்புகிறது. நிகழ்கால அழுத்துகுமிழ் தொலைபேசியில், அழைப்பவர் என்குமிழ்களை அழுத்தி,
அழைக்கப்படுபவரின் தொலைபேசி எண்ணைப் பதிவார். இக்குமிழ்கள் ஒரு குரலாக்கச் சுற்றதரைக் (காட்டப்படவில்லை) கட்டுபடுத்திட, அது DTMF குரல் ஒலிகளை இனைப்பகத்துக்கு அனுப்புகிறது. ஒரு சுழல்வலயத் தொலைபேசி துடிப்புவகை அழைப்பைப் பயன்படுத்துகிறது; இது மின் துடிப்புகளை அனூப்புகிறது; இந்த்த் துடிப்புகளை இணைப்பகம் எண்ணித் தொலைபேசி எண்ணைக் கணிக்கிறது ( 2010 வரையிலும் பல இணைப்பகங்கள் துடிப்பு வலய அழைப்புக் கருவியையே பயன்படுத்துகின்றன). அழைக்கப்படுபவரின் இணைப்பு கிடைத்தால், இணைப்பகம் இடைவிட்ட 75 அல்ல்து 60 வோல்ட் மாறுமின்னோட்ட அழைப்புக் குறிகையை அனுப்புகிறது. இது அழைக்கப்பட்டவரை அழைப்பு வருவதை அறிவிக்க எச்சரிக்கிறது. அழைக்கப்பட்ட்வர் தொடரிணைப்பு பயனில் இருந்தால், இணைப்பகம் அழைத்தவருக்குப் பயனில் இருப்புக் குறிகையைத் திரும்ப அனுப்புகிறது. அழைக்கப்பட்டவர் பயனில் இருந்தாலும் அழிப்பை நிலுவையில் வைத்து, இணைப்பகம் அழைக்கப்பட்டவருக்கு இடைவிட்ட கேட்புக் குரலை, உள்வரும் அழைப்பை அறிவிக்க, அனுப்புகிறது.

தொலைத்தொடர் தொழில்நுட்பரின் கைக்கருவி என்பது தொலைபேசி வலையமைப்பினை ஓர்வுசெய்ய வடிவமைக்கப்பட்ட தொலைபேசியாகும். இதை மேனிலைத் தொலைபேசித் தொடரிலோ மற்ற அகக்கட்டமைப்பு உறுப்புகளிலோ பொருத்தி ஆய்வை மேற்கொள்ளலாம் .

குறியீடுகள்[மூலத்தைத் தொகு]
தொலைபேசி பழுதுபார்ப்புக்கும் பேசி சார்ந்த அச்சுத் தகவலுக்கும் பயன்படும் வரைபடக் குறியீடுகளில் ℡ (U+2121), ☎ (U+260E), ☏ (U+260F), ✆ (U+2706), and ⌕ (U+2315) ஆகியவை உள்ளடங்கும்.

பயன்பாடு[மூலத்தைத் தொகு]

2009 ஆம் ஆண்டின் முடிவில், உலக அளவில் ஏறத்தாழ 6 பில்லியன் நகர்பேசிகளும் நிலத்தொடர் இணைந்த தொலைபேசிகளும் நடப்பில் இயங்குகின்றன. இவற்றில் 1.26 பில்லியன் நிலத்தொடர் இணைந்த தொலைபேசிகளும் 4.6 பில்லியன் நகர்பேசிகளும் அடங்குகின்றன

Sunday, 11 September 2016

பாரதியார் பிறப்பு 1882 டிசம்பர் 11 இறப்பு 1921 செப்டம்பர் 11


பாரதியார்  பிறப்பு 1882  டிசம்பர் 11
இறப்பு1921 செப்டம்பர் 11  





நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி




தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்த கவிஞாயிறு. சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். 


பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும் அண்மைக்கால தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர்.

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

பாஞ்சாலி சபதம்[தொகு]


இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும் மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாகப் பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது. பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப் பெற்றது. பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் உடையது. இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது.

படைப்புகள்[தொகு]

இதழியல் பணியும் விடுதலைப் போராட்டமும்[தொகு]

பாரதியார், முதலில் நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார்.
சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905 - ஆக. 1906), இந்தியா என்ற வார இதழில் (மே 1905 - மார்.1906 / செப். 1906, புதுச்சேரி: 10.19.1908- 17. மே 1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909–1910), தர்மம் (பிப்.1910) என்ற இதழ்களிலும் பாலபாரத யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் "இந்தியா" பத்திரிகை புதுவையில் வெளியானது.

தடை செய்யப்பட்ட புத்தகங்கள்[தொகு]

பாரதியாரின் பாடல்களைப் பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பர்மா மாகாண அரசு தடைசெய்தது. இதனைப் பின்பற்றி சென்னை மாகாணத்தின் காவல் துறை உத்தரவுமூலம் பாரதியார் பாடல்கள் தடைசெய்யப்பட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாகாணச்சட்ட சபையில் விரிவான விவாதம் 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 8, 9 தேதிகளில் நடந்தது . தீரர் சத்திய மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விவாதத்தில் இலக்கியம் சார்ந்த பல கருத்துகள் பதிவாகியுள்ளன.[8]








தேசியக் கவி[தொகு]

எட்டயபுரத்தில் பாரதி பிறந்த வீடு தற்போது தமிழக அரசால் சீர்செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது.
விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாகப் போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.


தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்க வேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.


ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.

புதுக்கவிதைப் புலவன்[தொகு]

பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவருக்கு முன்பாகக் கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர்.
இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை எனப் புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையைத் தமிழுக்குத் தந்தவர். கேலிச்சித்திரம் (caricature) எனப்படும் வரையும் முறையைத் தமிழுக்கு முதலில் தந்த பெருமை பாரதியையே சாரும்[மேற்கோள் தேவை].

பெண்ணுரிமைப் போராளி[தொகு]

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே எனப் பெண்ணுரிமையை ஏத்தினார். "போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான்" என்ற பாரதி
பெண்மை வாழ்கவெனக் கூத்திடுவோமடா என்றார். பெண்களின் கல்வியறிவுக்காகச் சட்டங்களைச் செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டார்.



பாரதியார் நினைவுச் சின்னங்கள்[தொகு]
புதுவையில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம்

சுட்டும் விழி சுடர் - பாரதியார் பாடல்
தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை நினைவு இல்லங்களாகப் போற்றி வருகிறது.
இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயரச் சிலை அமைக்கப்பட்டு 13-02-2000 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இங்குப் பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.

இறப்பு[தொகு]

1921 ஆம் ஆண்டு சூலை மாதம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். பிறகு 1921ல் செப்டம்பர் 12 அதிகாலை 01:30 மணிக்கு இறந்தார்.[9][2] கோவில் யானையால் தாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார்.
sivaji ganesan as bharathiyaar










யானை மிதித்து இறந்ததாகத் தகவல்கள் இருந்தாலும், நோய்வாய்ப்பட்டு இறந்ததே உண்மை.[சான்று தேவை] அவர் கடைசி நாட்களைக் கழித்த இல்லம் திருவல்லிகேணியில் உள்ளது.




சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு  எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.


பிறப்பு: டிசம்பர் 11, 1882

பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)

பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்

இறப்பு: செப்டம்பர் 11, 1921

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

சுப்ரமணிய பாரதியார் அவர்கள்,  சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார்.  அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.

இளமைப் பருவம்

சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார்.    .

பாரதியாரின் திருமண வாழ்க்கை

பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.

பாரதியாரின் இலக்கிய பணி

‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார்,  தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.

விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு

சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார்.

“ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

இறப்பு

 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.














பாரதியாரை நினைவூட்டும் சின்னங்கள்

எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


பாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எ’ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர்,  என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.





சுப்பிரமணிய பாரதியார்
11.12.1882 - 11.9.1921 
எட்டயபுரம், தூத்துக்குடி.
'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே' என்ற வரிகளைக் கேட்கும்போதும், பாடும்போதும் மனதுக்குள் நம்மை அறியாமல் ஒரு சக்தி பிறக்கும். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் விடுதலைப்போர் கவிதைகள் மூலமாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டினார். தமிழை நேசிப்பவர்கள் இவரை நேசிப்பார்கள்; புதுமையை விரும்புகிறவர்கள் இவரை விரும்பாமல் இருக்க மாட்டார்கள்; அவர்தான் காலம் கடந்து வாழும் புரட்சிக் கவிஞன் பாரதி.
பாரதியின் இயற்பெயர் சுப்பிரமணியன். சுப்பையா என்பது இவரது செல்லப் பெயர். பள்ளியில் படிக்கும்போதிருந்தே கவிதைகள் எழுதத் தொடங்கி, இளம் வயதிலேயே தமிழ்ப் புலமையுடன் திகழ்ந்தார். பதினொரு வயதில் கவிபாடுவது கண்ட எட்டயபுரம் மன்னர் இவருக்கு 'பாரதி' என்ற பட்டத்தை வழங்கினார். அதன் பிறகே 'சுப்பிரமணிய பாரதி' என்று அழைக்கப்பட்டார்.
கவிஞர் மட்டுமல்ல; எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என்று பலமுகங்கள் இவருக்கு! தமிழ் மட்டுமன்றி சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, தெலுங்கு போன்ற பிறமொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார்.
பாரதியின் பாடல்கள் சுதந்திரப் போரில் மக்கள் அனைவரையும் ஈடுபட வைத்தது. 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்' என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தைப் பாடல்களால் வெளிபடுத்தி 'தேசியக்கவி' ஆனார். 'இந்தியா' பத்திரிகை மூலமாக விடுதலை உணர்வைத் தூண்டும் வகையில் பல கட்டுரைகளை எழுதினார். இவரது எழுத்துக்கு ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி 'இந்தியா' பத்திரிகைக்குத் தடை விதித்து, கைது செய்து சிறையில் அடைத்தது. வ.உ.சி. உடன் நெருங்கிய நட்பில் இருந்தார். விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதாவை சந்தித்து அவரைத் தனது ஞான குருவாக ஏற்றுக் கொண்டார். 
'காலம்னிஸ்ட்' எனப்படும் பத்தி எழுத்துகளையும், அரசியல் கார்ட்டூன்களையும் முதன்முதலாகத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியது பாரதியே. தமிழையும், தமிழ்நாட்டின் சிறப்பையும் பற்றிப் பாட்டு எழுதி அனுப்ப மதுரைத் தமிழ்ச் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியானது. அதற்காக பாரதி எழுதி அனுப்பிய கவிதைதான், 'செந்தமிழ் நாடெனும் போதினிலே'. 1912ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழி பெயர்த்தார். கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி போன்ற புகழ் பெற்ற காவியங்களை எழுதினார். 

மனித நேயம், பெண்கள் முன்னேற்றம், சாதி ஒழிப்பு, சமத்துவம், விடுதலை போன்றவற்றைத் தன் வாழ்க்கையின் கனவுகளாகக் கொண்ட பாரதி, பிற மனிதர்களைப் போல் வீழாமல் தமிழ் இருக்கும்வரை நம்முடன் இருப்பார்.