Showing posts with label FOUNDER. Show all posts
Showing posts with label FOUNDER. Show all posts

Sunday, 27 March 2022

SIR ,SYED, AHEMED, KHAN ,GREAT SCHOLAR OF EDUCATION FOUNDER OF ALIGARH UNIVERSITY 1817 OCTOBER 17 - 1898 MARCH 27

 


SIR SYED AHEMED  KHAN ,GREAT SCHOLAR OF EDUCATION FOUNDER OF ALIGARH UNIVERSITY 1817 OCTOBER 17 - 1898 MARCH 27



சர் சையது அகமது கான். மேற்கத்திய அறிவியல் கல்விதான் இந்தியாவின் இன்றியமையாத தேவை என்று வலியுறுத்திய மிகச் சில இந்திய ஆளுமைகளில் ஒருவர். மே 24, 1877-ம் ஆண்டு தான் நிறுவிய, ‘முகம்மதன் ஆங்கிலோ ஓரியண்டல் காலேஜ்’ எனும் கல்லூரியின் வளர்ச்சிக்காகவே உடல் பொருள், ஆவியை தியாகம் செய்தவர். அந்தக் கல்லூரிதான் உத்தரப் பிரதேசத்தின் அலிகர் நகரில் இன்று அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமாக உருவெடுத்து நிற்கிறது.


இந்தியாவின் பழமையான மத்தியப் பல்கலைக்கழகமான இதில், முஸ்லிம்களுக்கு மட்டும்தான் அனுமதி என பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். வட இந்தியாவின் மதநல்லிணக்கச் சின்னமான இங்கு 1881-ல் பட்டம் பெற்ற முதல் மாணவர் பாபு ஈஸ்வரி பிரசாத் என்ற இந்து. இங்கு முஸ்லிம்களுக்கென்று தனியாக இடஒதுக்கீடு குறித்து 1980-களில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடங்கிய வழக்கு தற்போது உச்ச நீதிமன்ற அமர்வின் நிலுவையில் உள்ளது. முஸ்லிம்கள் இடைக்கால நாகரிகம் மற்றும் கோட்பாடுகளில் இருந்து மாறாமல் இருந்த காலம் அது. இவர்களில் பெரும்பாலானோர், உலகில் நிகழ்ந்துவரும் மாற்றத்தை உணராமல், நாளை வரப்போகும் நவீன உலகை எதிர்கொள்ள முடியாதவர்களாக இருந்தனர். இந்துக்கள், முஸ்லிம்களைவிட அப்போது முன்னேறியிருந்தனர். 1857-ன் துயர நிகழ்ச்சியைத் தொடர்ந்து சர் சையது அகமது கான் கல்வியின் தேவையை உணர்ந்தபோதும், கல்வியை ஓர் இயக்கமாக மாற்ற சில காலம் ஆயிற்று. இதைத்தான், அலிகர் இயக்கம் என நாம் வரலாற்று பாடங்களில் படிக்கிறோம்.


மதரசா என்றாலே முஸ்லிம்கள் மட்டும் பயிலும் இடம் என இன்றைய நிலை உள்ளது. ஆனால், இந்த நிலை காலத்தால் ஏற்பட்ட மாற்றம்தான். இடைக்கால இந்தியாவில், மதரசாக்கள் வெறும் கல்வி நிலையங்களாக மட்டுமே கருதப்பட்டன. அவற்றில், சாதி, மதப் பாகுபாடின்றி முஸ்லிம்கள், இந்துக்கள் என அனைவருமே கல்வி பயின்றனர். இந்நிலையில், தான் வகித்த அரசுப் பணிக்காக 1859-ல் முராதாபாத் சென்ற சர் சையது, அங்கு பாரசீக மதரசாவைத் தொடங்கினார். அவருடைய கல்வி இயக்கத்தின் முதல் பணியில், இந்துக்களும் முஸ்லிம்களும் பயன்பெறும் வண்ணம் உருது, அரபி,பாரசீகம், சம்ஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் என ஐந்து மொழிகளையும் கற்பிக்க ஏற்பாடு செய்தார். இதன் தொடர்ச்சியாக உருவானதுதான் இன்றைய அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்.


சுமார் 467.6 ஹெக்டேர் பரப்பளவில் உறைவிடப் பல்கலைக்கழகமாக விரிந்திருக்கும் அலிகர் பல்கலைக்கழக வளாகத்தில், தொடக்கப் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி, அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி, பலதொழில்நுட்பக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மற்றும் பெண்களுக்கென்று தனியாகக் கல்லூரி உட்பட 38 நிறுவனங்கள் இருக்கின்றன. 37,804 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களில் 300 பேர் வெளிநாட்டு மாணவர்கள். 109 துறைகளில் 2000 ஆசிரியர்கள் மற்றும் 7540 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் இருக்கும் இந்தப் பல்கலைக்கழகத்தில் ஒருகாலத்தில் நூற்றுக் கணக்கான தமிழர்களும் பயின்றுவந்தார்கள். இன்றைக்குத் தமிழகத்தில் முக்கியமான கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் திருச்சி ஜமால் முகம்மது, புது கல்லூரி, கீழக்கரை கல்வி நிறுவனங்கள் போன்ற பல நிறுவனங்களின் முன்மாதிரி அலிகர் பல்கலைக்கழகம்தான். இந்து தேசியவாதியான மதன் மோகன் மாளவியாவும், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைப் பார்த்து காசியில் தொடங்கியதே பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்.



இந்திய தேசிய காங்கிரஸ் 1885-ல் தொடங்கப்பட்டு, நாடு முழுவதும் இவ்வியக்கத்தைப் பரப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. இதை, சையது மட்டும் ஆதரிக்கவில்லை. காங்கிரஸின் மூன்றாவது மாநாடு 1887-ல் சென்னையில் நடந்தது. இதில், கலந்துகொள்ள வேண்டாம் என சையது முஸ்லீம்களை கேட்டுக்கொண்டார். இதற்குச் சரியாக 30 ஆண்டுகளுக்கு முன் (1857-ல்) ஏற்பட்ட சிப்பாய்க் கலவரத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அதன் தொடர்ச்சியாக ஆங்கில அரசால் பழிவாங்கப்பட்ட நிலையில், “சமூகத்தில் பின்தங்கியுள்ள முஸ்லிம்கள் போராட இது சரியான நேரம் அல்ல. அவர்கள் கல்வி மேம்பாட்டில்தான் தங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டும்” எனக் காரணம் கூறினார் சையது. ஆனால், அந்த காங்கிரஸ் மாநாட்டில் முஸ்லிம்களும் கலந்துகொண்ட போதும், பெரும்பாலான இந்துக்களும் சையதின் கருத்தை ஆதரித்தனர்.


சையது இங்கிலாந்து பயணம் மேற்கொண்டார். பொதுவாக, தங்களுடைய கல்விக்காகவே இந்தியர்கள் இங்கிலாந்து செல்லும் காலம் அது. ஆனால், இங்கிலாந்து கல்வியை நமது மக்களுக்குத் தருவதற்காக அங்கு செல்ல வேண்டும் என நினைத்தார் சையது. தான் கற்ற கல்வியை மற்றவர்களுக்கே தந்தார். உண்மையான முன்னேற்றமும் சமூக விடுதலையும் கல்வியின் மூலமே சாத்தியம் என்று அவர் நம்பியதைப் பறைசாற்றுகிறது அலிகர் பல்கலைக்கழகம்.


(சர் சையது அகமது கானின் 196 ஆவது பிறந்த நாள் இன்று.)


- சாந்தினி பீ, அலிகர் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் உதவி பேராசிரியர், தொடர்புக்கு: chandnibi@gmail.com




காதலுக்காகப் பெற்றோரையும், ஊரையும் விட்டு ஓடியவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். கல்வி பெறுவதற்காக ஓடியவர்களைப் பற்றிக் கேட்டிருக்க மாட்டோம். 1920-களில் பழனியைச் சேர்ந்த உசைன் நைனார் என்பவர், படிப்பதற்காகவே தன் ஊரை விட்டு ஓடிப்போயிருக்கிறார். படிப்பவர்கள் விவசாய வேலை செய்ய மாட்டார்கள் என்று அவரது குடும்பத்தினர் அஞ்சியதுதான் காரணம். கடைசியில், அவர் சென்று சேர்ந்தது உத்தர பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்.


அலிகரில் அரபி மொழி மற்றும் சட்டத் துறைகளில் முதுகலைப் பட்டங்கள் பெற்ற பிறகு, நைனார் பல நாடுகளின் உயரிய பதவிகளில் பணியாற்றினார். நைனாரின் அலிகர் கல்வி, அவரது நான்காவது தலைமுறையையும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உட்பட பல வெளிநாடுகளில் பயிலவும், பணியாற்றவும் அடித்தளம் வகுத்திருக்கிறது. நைனார் குடும்பம் மட்டுமல்ல, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான குடும்பங்களில் நிகழ்ந்த நல்ல மாற்றங்களின் பின்னணியில் அவர்கள் பெற்ற அலிகர் கல்வி இருந்துள்ளது.


இன்றும், உபி அல்லது பிஹார் கிராமங்களில் வாழும் குடும்பத்தில் ஒரு மாணவருக்கு இப்பல்கலையில் அனுமதி கிடைத்துவிட்டால், அவரது குடும்பமே அந்த ஊரை விட்டு அலிகருக்கு வந்துவிடுகிறது. தன் பிள்ளையின் கல்விக்காகப் பெற்றோர் தம் விளைநிலங்களை குத்தகைக்குக் கொடுத்துவிட்டு, அலிகரில் வாட்ச்மேன் வேலை செய்வதை இன்றும் பார்க்கலாம். கல்வி வாய்ப்புகளின் வழியாகச் சமூக மாற்றத்துக்குக் காரணமான அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், 1875-ல் சர் சையது அகமது கானால் ‘ஆங்கிலோ ஓரியண்டல் முகம்மதன் கல்லூரி’ எனும் பெயரில் நிறுவப்பட்டது. இந்தச் சம்பவம், இந்திய வரலாற்றில் ‘அலிகர் இயக்கம்’ என்று அழைக்கப்படுகிறது.


முகலாயர் ஆட்சிக் காலத்தில் ஆட்சி மொழியாகப் பாரசீகம் இருந்தது. அதன் பிறகு, ஆங்கிலேயர்கள் காலத்தில் 1842-ல் ஆங்கிலம் ஆட்சிமொழியானது. அதற்கு முஸ்லிம்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர். இந்த நிலையை மாற்றி, ஆங்கிலம் கற்பதால்தான் முன்னேற முடியும் என்பதை சர் சையது முஸ்லிம்களுக்கு உணர்த்தினார். அரபி மற்றும் மறைக் கல்வியைத் தவிர ஆங்கிலம், அறிவியல் என மற்ற பாடங்களைப் படிப்பது இஸ்லாத்துக்கு விரோதமானது என இருந்த காலம் அது. இதனால், சர் சையது அகமது கான் ஒரு ‘காஃபிர் (முஸ்லிம் அல்லாதவர்)’ என அக்காலத்தில் முஸ்லிம் மெளலானாக்களால் ‘ஃபத்வா (மதக் கட்டளை)’ அளிக்கப்பட்டார். ஆனால், இன்று மெளலானாக்கள் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைத் தம் மத அடையாளமாக்கி பெருமை கொள்கின்றனர்.


மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றான இதில், ஆண்டொன்றுக்கு வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 40,000 மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள். இங்கு கலை, அறிவியல், மருத்துவம் மற்றும் பொறியியல் உட்பட 100-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்காகத் தொடங்கப்பட்ட இக்கல்வி நிறுவனத்தில் இந்துக்களும் படிக்கின்றனர். இப்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் மாணவர் ஒரு இந்து. இங்கு படிக்கும் இந்து மாணவர்களின் எண்ணிக்கை தொடக்கம் முதலே கிட்டத்தட்ட சரிபாதியாக இருந்துவருகிறது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இதற்கு அளிக்கப்பட்ட சிறுபான்மை கல்வி நிறுவன அந்தஸ்து உச்ச நீதிமன்ற வழக்காகி இன்னமும் சிக்கலில் உள்ளது.


- எஸ்.சாந்தினிபீ,அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின்வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர்.தொடர்புக்கு: chandnibi@gmail.com


அக். 17: சர் சையது அகமது கானின்


200-வது பிறந்தநாள்


Sunday, 8 November 2020

X-RAY ,FOUNDER, WILHELM ,CONRAD ,RONTGEN , ON 1895 NOVEMBER 8

 

 X-RAY ,FOUNDER 

WILHELM CONRAD RONTGEN 

ON  1895 NOVEMBER 8



வில்லெம் கோன்ராடு ரோண்ட்கன் (Wilhelm Conrad Röntgen, இடாய்ச்சு ஒலிப்பு: [ˈvɪlhɛlm ˈʁœntɡən];Wilhelm Conrad Röntgen, மார்ச் 27, 1845 – பெப்ரவரி 10, 1923) என்பவர் ஜெர்மனியைச் சேர்ந்த வூர்ட்ஃசுபர்கு பல்கலைக்கழக இயற்பியலாளர் ஆவார். இவர் நவம்பர் 8, 1895 இல், மின்காந்தக் கதிர்வீச்சு அலைத்தொடர் வரிசையில் ஊடுகதிர் (X-கதிர்) என்று இன்று அழைக்கப்படும் அலைகள் பகுதியைக் கண்டுபிடித்தார். இன்று இவை ஊடுகதிர் அலைகள், X கதிர்கள், புதிர்க்கதிர்கள், ரோண்ட்கன் கதிர்கள் என்று பலவிதமாக அழைக்கப்படுகின்றன. இக்கண்டுபிடிப்பிற்காக இவருக்கு 1901 இல் இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது.


வாழ்க்கைக் குறிப்பு

வில்லெம் ரோண்ட்கன் மார்ச் 27, 1845 இல் ஜெர்மனி, பவேரியா மாகாணத்தில், லென்னெப் என்ற ஊரில் ஒரு துணி தயாரிக்கும் வணிகரும் தொழிலதிபருமான பிரீட்ரிக் கான்ராட் ரோண்ட்கன் என்பவருக்கு ஒரே மகனாகப் பிறந்தார். இவரது தாயார் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த சார்லொட் கொன்சிட்டாசு ஃபுரோவெயின் என்பவராவார். 1848 மார்ச்சு மாத்த்தில் வியாபார நிமித்தம் நெதர்லாந்தின் அப்பெல்டூர்ன் நகருக்கு குடி பெயர்ந்தனர். வில்லெம் அப்பெல்டூர்னில் ஒரு தனியார் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் 1861 முதல் 1863 வரை உட்ரெக்ட்டு தொழில்நுட்பக் கல்லுரியில் உயர் கல்வியையும் பயின்றார். பள்ளி ஆசிரியர் ஒருவரின் படத்தை அவருக்கு மரியாதை இல்லாதவாறு, இவருடன் பயின்ற மாணவ்ர் ஒருவர் வரைந்தார் என்றும், அவர் யார் என்று இவர் அடையாளம் காட்ட மறுத்தார் என்று இவரைக் கல்லுரியில் இருந்து வெளியேற்றினார்கள். பிறகு இவரால், பிற டச்சு சிம்னாசியம் என்னும் பள்ளிகள் எதிலும் சேர இயலவில்லை[1]. 1865 இல், சூரிக்கில் உள்ள ஃபெடரல் பொலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து பொறியியல் பயின்றார். 1869 இல் சூரிக் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.


1872 சூலை 7 ஆம் நாளில் அன்னா பேர்த்தா லூடுவிகு (1872 - 1919) என்பவரை மணந்தார். இவர்களுக்குப் பிள்ளைகள் இல்லாததால் அன்னாவின் சகோதரர் மகளான யோசபீன் பேர்த்தா லூடுவிகு என்பவரைத் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.


பணி

1874 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டின் ஸ்ட்ராஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட இயற்பியல் துறையில் இராபர்ட் குண்ட் அவர்களுடன் பணியில் அமர்ந்தார். 1875-ல் வூர்ட்டென்பர்கு, ஓகெனைம் பல்கலைக்கழகத்திலும், 1876-ல் ஸ்ட்ராஸ்போர்க் பல்கலைக்கழகத்திலும், 1879 முதல் 1885 வரை செருமானியிலுள்ள கெயிசன் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிய பின்னர் 1888-ல் வூர்ட்ஃசுபர்கு பல்கலைக்கழத்திலும் இயற்பியல் துறைத் தலைவராக இருந்தார். 1900 இல் மியூனிக் பல்கலைக்கழகத்தில் இணைந்து இறுதி வரையில் அங்கு இயற்பியல் துறைத் தலைவராக இருந்தார்.


ஆய்வுப்பணி

பல ஆய்வகங்களிலும் அழுத்தம் குறைந்த வளிமங்களில் எவ்வாறு மின்னிறக்கம் நிகழ்கிறது என ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தன. அவரும் இவ்வாய்வில் தன்னை இணைத்துக் கொண்டார். 1895 ஆண்டு வெற்றிட குழாய் உபகரணங்களின் பல்வேறு வெளி விளைவுகளை ஆய்வு செய்துகொண்டிருக்கும் போது உருவாகும் எதிர்முனை கதிர்கள் அருகே உள்ள பேரியம் பிளாடினோசயனைடு பூசப்பட்ட அட்டையானது ஒளிர்வதை கண்டார். அதைத் தொடர்ந்து அவர் இருட்டு அறையில் மேலும் சில சோதனைகளை செய்து பார்த்தபோது இந்த ஒளிர்தலுக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு வகை கதிர்களே காரணம் என்று அறிந்தார். எனினும் அதன் பண்புகள் தெரியாததால் அதற்கு எக்சு கதிர்கள் என்று பெயரிட்டார். பின்னர் அப்பெயரே நிலைத்துவிட்டது. இதை அவர் 1895 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று கண்டறிந்தார். அதற்கு இரண்டு வாரம் கழித்து தனது மனைவியின் கையை முதன்முதலின் ஊடுகதிர் படமெடுத்தார்.

ரோண்ட்கனால் எடுக்கப்பட்ட
ஆல்பேர்ட் ஃவான் கோல்லிக்கர்
என்பவரின் 
கையின் ஊடுகதிர்
 அலைப்
 படிமம்



ரோண்ட்கென் மூலக் கட்டுரையான ஒரு புது வகை கதிர்கள் என்ற தலைப்பில் 28 டிசம்பர் 1895 அன்று வெளியிட்டார். 5 சனவரி 1896 இல் ஒரு ஆஸ்திரிய பத்திரிகை ரோண்ட்ஜென் புதிய வகை கதிர்வீச்சு கதிர்களை கண்டறிந்ததை வெளியிட்டது. அவர் 1895 முதல் 1897 வரை எக்ஸ் கதிர்கள் பற்றி மூன்று ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். இன்று ரோண்ட்ஜென் கதிர்வீச்சு மருத்துவ சோதனையின் தந்தை எனப்படுகிறார்


ரோண்ட்கென் அவரது கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமைகள் கோரியதில்லை மேலும் அவருக்கு நோபல் பரிசு மூலம் கிடைத்த பணத்தை வூர்ட்ஃசுபர்கு பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக அளித்தார். முதல் உலகப் போரின் போது ஏற்பட்ட வறுமை காரணமாக ரோண்ட்கென் முனிச் அருகே உள்ள வெய்தீம் என்ற கிராமத்தில் தன் இறுதி ஆண்டுகளை கழித்தார். ரோண்ட்கென் 1923 ஆண்டு பிப்ரவரி 10 அன்று குடல் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். அவரின் இறப்பிற்கு பின்னர் அவரது விருப்பத்திற்கு ஏற்ப அவரது தனிப்பட்ட மற்றும் அனைத்து அறிவியல் உபகரணங்களும் அழிக்கப்பட்டன.


விருதுகள்

இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு இவருக்கு 1901 இல் வழங்கப்பட்டது. இப்பணப்பரிசு முழுவதையும் அவர் தனது பல்கலைக்கழகத்துக்கே வழங்கி விட்டார். தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமம் பெற அவர் மறுத்து விட்டார்.


ரம்ஃபோர்ட் விருது (1896)

மட்டூச்சி விருது (Matteucci Medal) (1896)

நினைவு சின்னங்கள்


இன்று டுசெல்டார்ஃப் நகருக்கு கிழக்கே 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரெம்ஸ்கிட்-லென்நேப்ராண்ட்கென் பகுதியில் அவர் பிறந்த வீட்டில் டச்சு ரோண்ட்கென் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.



பல மொழிகளில் ரோண்ட்கெனின் பெயர் கதிரியக்க சிகிச்சை மற்றும் அதன் தயாரிப்புகளை குறிக்க "எக்ஸ்ரே" என்ற பெயருக்கு பதில் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துகாட்டாக சப்பானிய மொழியில் "ராண்டோகென்", லித்துவேனிய மொழியில் "ராண்ட்கெனோ", செர்பிய, குரோவேசிய மற்றும் ஈப்ருவில் "ரெண்ட்கென்", மற்றும் துருக்கிய "ரோண்ட்கென்" ஆகியவாறு குறிக்கபடுகிறது.


2004 நவம்பரில் ரோண்ட்கனியம்[2] தனிமத்துக்கு இவரது பெயர் வைக்கப்பட்டது.


படிமங்கள்

Monday, 5 October 2020

CHO RAMASAMY ,FOUNDER OF THUKLAG WEEKLY ,ACTOR BORN 1934 OCTOBER 5 - 2016 DECEMBER 7



CHO RAMASAMY ,FOUNDER OF THUKLAG WEEKLY ,ACTOR BORN 1934 OCTOBER 5 -

2016 DECEMBER 7



சோ ராமசாமி (அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016), பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் என பல்வேறு பொறுப்புகளை மேற்கொண்டவர். சோ என அழைக்கப்பட்டவர். துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் 'அரசியல் நையாண்டி' எழுத்துக்கள் இவருக்கு 'பத்திரிக்கை உலகில்' தனி இடம் வகுத்துத் தந்தது.
வாழ்க்கைக் குறிப்பு
சோ ராமசாமி சென்னையில் பிறந்தவர். இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியிலும் பயின்று இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார். பின் 1953-55-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் (பி.எல்) பட்டம் பெற்றார். 1957 முதல் 1962 வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினார். 1962 முதல் டி.டி.கே (T.T.K) கம்பெனிகளுக்குச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். இவருக்கு 1966 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ’சோ’ எனும் பெயர் பகீரதன் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயராகும்.[1]

கலையுலகம்
1957 ஆம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார். 1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார். பின்னர் 1976ஆம் ஆண்டில் PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார்.

இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.

நாடகத்தில் நாட்டம் வந்தது எப்படி? சோ தனது 20 வயதில் ஒரு நாடகம் பார்த்தபோது நடிப்பில் ஆர்வம் பிறந்தது. அந்த ஆர்வத்தின் காரணமாக முதன்முதலாக ‘கல்யாணி' என்ற நாடகத்தில் ராமசாமி நடித்தார். அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு நாடகங்களில் நடித்து பெயர் பெற்றார். இவருடைய நாடகத்தில் மிக முக்கியமானது முகமது பின் துக்ளக் நாடகம்தான். அது பின்னர் திரைப்பட மாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து துக்ளக் என்ற அந்தப் பெயரைதான் தனது பத்திரிகைக்கும் பெயராக வைத்துக் கொண்டார்.

தேன்மொழியாள் நாடகம் தந்த `சோ` பகீரதன் என்பவர் எழுதிய `தேன்மொழியாள்` என்ற மேடை நாடகத்தில்தான் சோவிற்கு `சோ` என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த நாடகத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயரையே தன் புனைப்பெயராக பின்னர் மாற்றிக் கொண்டார். அந்தப் பெயர் அவருடைய இயற்பெயரையே மறக்கச் செய்துவிட்டது. இப்போது யாருக்கும் ராமசாமி என்றால் தெரியாது. `சோ` என்றால் உடனே அனைவருக்கும் தெரிந்துவிடும்.

விருதுகள் சட்டம் படித்து, நாடகம், சினிமா என்று தான் இயங்கும் தளத்தை வேறு திசைக்கு மாற்றிக் கொண்ட சோ, பத்திரிகையாளராகவும், அதில் எழுதிய கட்டுரைகளின் மூலம் அரசியல் விமர்சகராகவும் அறியப்பட்டார். பத்திரிக்கைத் துறையில் அவர் ஆற்றிய பணிக்களுக்காக 1986ம் ஆண்டு வீரகேசரி விருது வழங்கப்பட்டது. 1994ல் கொயங்கா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன.

பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு பல்லாயிரத்தாயிரம்!

ChoRamaswamyசோவுக்கு பல முகங்கள் உண்டு. வக்கீல், நாடக ஆசிரியர், நாடக, திரைப்பட நடிகர், திரைப்படக் கதாசிரியர், அரசியல் இதழியலாளர் என்று.

thuglaqஎன்னைப் பொறுத்த வரை அவரது அதிமுக்கியமான முகம் இதழியல் முகம்தான். துக்ளக் நடத்த முதல் ஐந்து ஆறு வருஷங்களாவது மிகுந்த துணிச்சல் வேண்டும். அந்தக் காலகட்டத்தில் முதல்வராக இருந்த கருணாநிதி அவருக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தினார். நெருக்கடி நிலையின் போது அவர் ஜெயிலுக்கு போய் அடி வாங்காதது எப்படி என்று ஆச்சரியமாக இருக்கிறது. He made Thuglaq an institution! நல்ல உதவி ஆசிரியர்கள் இருந்தும் அவருக்கு பிறகு துக்ளக் வராது என்று நினைக்கிறேன், வருத்தமாக இருக்கிறது.

துக்ளக் 45 ஆண்டுகளாக வெளிவருகிறது என்று நினைக்கிறேன். குறைந்தது முப்பது வருஷமாவது அது இளைஞர்களுக்கு அரசியலை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. தமிழகத்தின் முக்கியமான அரசியல் குரலாக இருந்திருக்கிறது. தனக்கென்று ஒரு value system, அந்த விழுமியங்களை வைத்து அரசியலை, அரசியல் தலைவர்களை கறாராக எடை போட்டிருக்கிறது.

தனக்கு தனிப்பட்ட முறையில் நண்பர் என்று தயவு தாட்சணியம் பார்த்ததில்லை. (‘பாபர்’ மசூதி இடிக்கப்பட்டபோது துக்ளக்கின் அட்டைப்படம் வெறும் கறுப்பு அட்டை. அத்வானி மீது இருந்த மதிப்பு மரியாதையால் அவர் ஜகா வாங்கிவிடவில்லை.) தனக்கு நஷ்டம் வரும் என்று போகும் பாதையை மாற்றிக் கொண்டதில்லை. (அறுபதுகளின் கடைசி ஓரிரு ஆண்டுகளில் எம்ஜிஆர் படங்களில் நாகேஷின் இடத்திற்கு சோ வந்துவிட்டார். துக்ளக் ஆரம்பிக்கப்பட்டபோது எம்ஜிஆர் இவரை பத்திரிகை எல்லாம் வேண்டாமே என்று சொல்லிப் பார்த்திருக்கிறார். இவர் கேட்கும் ஜாதி இல்லையே! அதற்குப் பிறகு ஒரு எம்ஜிஆர் படத்தில் கூட சோ நடித்ததில்லை) தன் கருத்துக்களுக்கு எத்தனை தூரம் மக்களிடம் எதிர்ப்பு இருக்கும் என்பது அவரது நிலைப்பாடுகளை மாற்றியதே இல்லை. எண்பதுகளில் பிரபாகரனையும் புலிகளையும் எதிர்த்துப் பேசிய ஒரே குரல் அவருடையதுதான். இவ்வளவு ஏன், அடி விழுமோ என்று கூட அஞ்சியதும் இல்லை. மிசா காலத்தில் மொரார்ஜிக்கும் ஜெயப்பிரகாஷ் நாராயணுக்குமே ஜெயில், கருணாநிதி பையன் என்ற ஒரே காரணத்தால் ஸ்டாலினுக்கு அடி-உதை, எம்.பி.யாக இருந்த சிட்டிபாபு அடி வாங்கியே செத்தார் என்பதெல்லாம்ம் தெரிந்திருந்தும் அடக்கி வாசிக்க மறுத்தார். மிசாவை எதிர்த்து குரல் கொடுத்ததுதான் அவரது இதழியல் வாழ்வின் உச்சம்.

துக்ளக்கில் அவரது கேள்வி-பதில் கடைசி வரை விரும்பிப் படிக்கப்பட்டது. ஒண்ணரை பக்க நாளேடு மிகவும் பாப்புலர்.

அரசியல் விளைவுகளை அனேகமாக ஊகித்துவிடுவார். அரசியலில் ஒரு தீர்க்கதரிசி என்றே சொல்லலாம். புலிகளை பற்றி எண்பதுகளில் குறை சொன்ன ஒரே பத்திரிகையாளர் அவர்தான். புலிகள் ராஜீவ்-ஜெயவர்த்தனே உடன்பாட்டை நிறைவேற விடமாட்டார்கள் என்று சரியாக கணித்தார். வி.பி. சிங்கை ஆதரிப்பது ஜனதாவுக்கு தற்கொலைக்கு சமமானது என்று அவர் கணித்தது சரியாக அமைந்தது. சரண் சிங், ராஜ் நாராயண் ஆகியோர் மொரரஜியின் முதுகில் குத்தக்கூடும் என்று சந்தேகப்பட்டார். அப்படியே ஆயிற்று. ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது மாதிரி 2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெ வெல்வார் என்று சொன்னது மட்டும் தவறாகிவிட்டது.

அவரது கருத்துக்கள் மாறுவதே இல்லை. காமராஜின் ஆட்சி பொற்காலம், மொரார்ஜி, சந்திரசேகர் போன்றவர்கள் அப்பழுக்கில்லாதவர்கள், வி.பி. சிங் ஒரு துரோகி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகியோரை செலுத்துவது தேச பக்தியே, பெண் சுதந்திரம் என்பது பம்மாத்து, நரேந்திர மோடிதான் இன்றைய இந்தியாவின் சிறந்த தலைவர், புலிகள் அயோக்கியர்கள் இந்த மாதிரி பல. இவற்றை எப்போதும் மறுபரீசீலனை செய்யமாட்டார், வறட்டுப் பிடிவாதம் தெரியும். ஆனால் நேர்மையாகவே நல்ல நகைச்சுவையுடன் தன் அபிப்ராயங்களை வெளிப்படுத்துவார், இதை வெளியே சொன்னால் நம்மை பிற்போக்கு என்பார்கள் என்பதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல.

ஆனால் கடைசி பத்து பதினைந்து வருஷத்தில் அவரது நடுநிலைமை போய்விட்டது. நடுநிலை என்றால் எல்லா அரசியல் நிகழ்வுகளையும் ஒரே value system வைத்து பார்த்தார். அதனால் எம்ஜிஆர், கலைஞர், இந்திரா, ஜனதா கட்சி ஒருவரையும் விட்டதில்லை. மொரார்ஜி, காமராஜ் மீது அவருக்கு பெரும் மரியாதை இருந்தது, ஆனால் அவர்களது குறைகளையும் சொல்லுவார்.

என் கணிப்பில் என்று அவர் பா.ஜ.க. மத்தியில் அரசை அமைக்கக் கூடும் என்று உணர்ந்தாரோ அன்றிலிருந்து மெதுமெதுவாக ஒரு பக்கமாக சாயத் தொடங்கினார். ஒரு முறை சபாநாயகர் என்பவர் ஆளும் கட்சி தரப்பில் இருக்கும் நியாயங்களை எடுத்துச் சொல்பவர் என்று வரையறுத்திருந்தார். அதைப் போல இவரும் பா.ஜ.க. தரப்பில் இருக்கும் நியாயங்களை எடுத்துச் சொல்பவராக மாறத் தொடங்கினார். ஜெயலலிதாவின் ஊழல், குஜராத் கலவரங்கள் போன்றவை மோடியின் தனிப்பட்ட நேர்மை, வளர்ச்சித் திட்டங்கள், கருணாநிதியின் புலிகள் ஆதரவு போன்றவற்றை விட அவருக்கு மிகச் சிறிதாகத் தெரியத் தொடங்கின. கலைஞர் ஆட்சிக்கு வந்தால் புலிகளுக்கு ஆதரவு மறைமுகமாக தரப்படும், அது இந்தியாவுக்கு ஆபத்து என்று அவர் உறுதியாக நம்பினார். கலைஞருக்கு புலிகளை விட, தமிழர்களை விட பதவி முக்கியம் என்பது அவருக்கு புரியவில்லை. அதனால் ஜெ போன்ற ஒரு மோசமான சர்வாதிகாரி மேல் அவருக்கு ஒரு soft corner இருந்தது. எழுபது-எண்பதுகளின் சோவுக்கு அப்படித் தெரிய வாய்ப்பே இல்லை.

நான் முதன்முதலாக வந்த பிரதியிலிருந்து கடைசிப் பிரதி வரை படிக்க வேண்டும் என்று விரும்பும் பத்திரிகைகள் இரண்டுதான். ஒன்று துக்ளக், இன்னொன்று சுபமங்களா.

அவரது இரண்டாவது முக்கிய முகமாக நான் கருதுவது அவரது எழுத்தாளர்/நாடக ஆசிரியர் முகம்தான். அவரது நாடகங்களின் ஃபார்முலா ரொம்ப சிம்பிள். ஏதாவது ஒரு பிரச்சினை – ஜாதி, விபசாரம், உண்மை vs. பணபலம், லஞ்சம் என்று ஏதாவது ஒரு விஷயம் – அதை சுற்றி நிறைய அன்றைய அரசியல் பற்றிய அடிவெட்டுகள், கெக்கே பிக்கே ஜோக்குகள் இவற்றை வைத்து ஒரு நாடகம் பின்னி விடுவார்.

அவர் ஷேக்ஸ்பியரோ, இப்சனோ இல்லை. எழுத ரொம்ப அலட்டிக் கொள்வதில்லை. சமூகப் பிரச்சினைகளை கருவாக வைத்து எழுதினாலும் சிரிக்க வைப்பதுதான் அவரது எழுத்துக்களின் முக்கிய நோக்கம் என்று தோன்றுகிறது. அதனால் நாடகங்களில் தனக்கென்று ஒரு கோமாளி பாத்திரத்தை படைத்துக் கொள்வார். சாத்திரம் சொன்னதில்லை போன்ற நல்ல நாடகங்களில் கூட இந்தக் கோமாளி பாத்திரம் செயற்கையாக புகுத்தப்பட்டிருப்பது உறுத்தும். அந்தக் கோமாளி பாத்திரங்களைத் தவிர்த்திருந்தால் பல நாடகங்கள் இன்னும் மிளிர்ந்திருக்கும். ஆனால் அவரது நாடகங்கள் நடத்தப்பட்ட அவரது பெருவெற்றிக்குக் காரணமே அந்த கோமாளி பாத்திரங்கள்தான்.

அவரது நாடகங்கள் சென்னை சபா வட்டங்களில் எனது பதின்ம வயதில் வெகு பிரபலமாக இருந்தன. ஆனால் அவரது நாடகங்களை நான் பார்த்ததை விட படித்ததுதான் அதிகம். வந்தேமாதரம் பார்த்த நினைவிருக்கிறது. நேர்மை உறங்கும் நேரம் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த நினைவிருக்கிறது. தொலைக்காட்சியில் மெட்ராஸ் பை நைட் என்று ஒரு நாடகம் பார்த்து ரசித்தது நினைவிருக்கிறது.

சில சமயம் Pygmalion (மனம் ஒரு குரங்கு), Tale of Two Cities (வந்தேமாதரம்) போன்ற புகழ் பெற்ற இலக்கியங்களை தழுவியும் நாடகங்களை எழுதி இருக்கிறார். சில சமயம் கதையே இல்லாமல் சும்மா அரசியல் அடிவெட்டுகளை வைத்து வாஷிங்டனில் நல்லதம்பி, கூவம் நதிக் கரையினிலே, சர்க்கார் புகுந்த வீடு, என்று தணியும் இந்த சுதந்திர தாகம் போன்ற நாவல்கள்/நாடகங்களை எழுதி இருக்கிறார்.

சில சமயங்களில் நாடகம் அருமையாக வந்து விழுவதும் உண்டு. அவரது நாடகங்களில் நல்ல கதை அமைவது கஷ்டம்தான், ஆனாலும் தமிழின் சிறந்த நாடக ஆசிரியர்களில் அவரும் ஒருவர். என் கண்ணில் சாத்திரம் சொன்னதில்லை, முஹம்மது பின் துக்ளக், உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை ஆகிய நாடகங்களும் சர்க்கார் புகுந்த வீடு, கூவம் நதிக் கரையினிலே ஆகிய நாவல்களும் இலக்கியமே. அவசியம் படிக்க வேண்டியவை. இந்த நாடகங்களில்தான் கோர்வையான கதை இருக்கும்.

அவரை கிரேக்க நாடக ஆசிரியரான அரிஸ்டோஃபனசுடன் ஒப்பிடலாம். சமகாலத்து அரசியல், சமூகம் பற்றிய கமெண்ட்கள்தான் அவருடைய ஸ்பெஷாலிடி. ஏறக்குறைய எம்.ஆர். ராதா பாணியில் நக்கல் அடிப்பார். அரிஸ்டோஃபனஸ், சோ இருவரிடமும் ஒரே பிரச்சினைதான். அந்த கால கட்டத்தில் வாசிக்காதவர்களுக்கு அவர் எதை கிண்டல் செய்கிறார் என்று புரிவது கஷ்டம். அரிஸ்டோஃபனஸ் அன்றைய கிரேக்க அரசியல்வாதியான க்ளியானை கிண்டல் செய்வதை நாம் இன்று எப்படி முழுதாக புரிந்து கொள்ள முடியும்? சோவுக்கு உதாரணமாக ஒன்று – சர்க்கார் புகுந்த வீடு என்ற நாவலில் வரும் முக்கிய பாத்திரங்களான ரகுநாத ஐயர், கந்தசாமி இருவருக்கும் மளிகைக் கடையிலும் பால்காரரிடமும் கடன் தொந்தரவு. அவர்கள் அன்றைய விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவிடம் ஆலோசனை கேட்கப் போவார்கள். அவர் “பொதுவா வாங்கின கடனை திருப்பி கொடுக்கக் கூடாது என்பதுதான் நம்ம கொள்கை” என்பார். இதற்கு நீங்கள் சிரித்தீர்கள் என்றால் எண்பதுகளில் நாயுடு நடத்திய போராட்டங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறது என்று அர்த்தம்.



சோவின் முக்கியமான மூன்றாவது முகம் அவரது அரசியல் முகம். அவரோடு தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டாத தலைவரே இல்லை என்று சொல்லலாம். அதனால் தலைவர்களுக்கு நடுவே பாலமாக அவ்வப்போது இருந்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கு திட்டம் வகுத்துக் கொடுத்தவர் என்பது ஊருக்கே தெரிந்ததுதான். போன தேர்தலில் ஜெ-விஜயகாந்த் கூட்டணிக்கு அச்சாரம் போட்டவர் இவர்தான். கருணாநிதி-மூப்பனார்-ரஜினிகாந்த ஓரணியாகத் திரள அஸ்திவாரம் போட்டதும் தெரிந்த விஷயமே. மொரார்ஜி காலத்தில் சரண்சிங் ஜனதாவை விட்டு விலகியபோது எம்ஜிஆர் மொரார்ஜிக்கு ஆதரவாக இருந்தார், அதற்கும் இவர்தான் மூலகாரணம். (மொரார்ஜி பதவி விலகியதும் எம்ஜிஆரும் சரண்சிங்குக்கு ஆதரவாக கட்சி மாறிவிட்டார்) அதற்கும் முன்னால் காங்கிரஸ் அனுதாபி. காமராஜ் காலத்தில் காங்கிரஸின் பிரச்சார நட்சத்திரங்களில் ஒருவர். (சிவாஜி, ஜெயகாந்தன், நா.பா. பிற நட்சத்திரங்கள்)

சினிமா உலகத்திலும் ஓரளவு வெற்றி பெற்றார். தனது நாடகங்களை திரைப்படமாக எடுத்தார், நாடகம் மாதிரியேதான் இருக்கும். புகழ் பெற்ற துக்ளக், மற்றும் யாருக்கும் வெட்கமில்லை, உண்மையே உன் விலை என்ன ஆகியவை ஓரளவு வெற்றியும் பெற்றன. மனம் ஒரு குரங்கும் திரைப்படமாக வந்தது. நான் பார்க்க விரும்புவது மிஸ்டர் சம்பத். ஆனால் பிரிண்டே இல்லையாம்.
தரமான முதல் தர காமெடியை அவரால் மட்டுமே தர முடியும்
அவருடைய காமெடிகள் இன்றளவும் பொருந்தி வரும் .என்றாலும்
அரசியல் சுழற்சியால் ,சூழ்ச்சியால் அவ்வளவாக சினிமாவில் விருதுக்கு
பரிந்துரைக்கப் பட்டதில்லை

 ஆனால் கொஞ்ச நாள் அவர்தான் டாப் காமெடியன் ஆக இருந்தார். பொம்மலாட்டம் தவிர நீலகிரி எக்ஸ்ப்ரஸ், ஆயிரம் பொய், நிறைகுடம், நினைவில் நின்றவள் ஆகிய படங்களுக்கு திரைக்கதையும் எழுதினார். நிறைகுடத்தில் நல்ல ஓ.ஹென்றி ட்விஸ்ட் வைத்திருப்பார். வந்தாளே மகராசி படத்தில் அவருக்கு ஜோடி ஜெயலலிதா!

வக்கீலாக நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றவர் ,எடுத்து நடத்திய 18  வழக்குகளிலும் வெற்றி

மொத்தத்தில் அவர் ஒரு நல்ல நாடக ஆசிரியர். தமிழில் நல்ல நாடக ஆசிரியர்கள் அபூர்வம். அதனால் அவரது நாடக பங்களிப்பு மிக பெரியதாக தெரிகிறது. அவரது நகைச்சுவை அற்புதமானது. கிட்டத்தட்ட முப்பது வருஷங்கள் அவர் அரசியல், சமூகம் பற்றி பட்டையை கிளப்பும் நடுநிலையான கமெண்ட்களை போட்டு தாக்கி இருக்கிறார். ்  நகைச்சுவைக்காகவும், ஒரு நாடக ஆசிரியராகவும், தைரியமான, ஆனால் கடைசி நாட்களில் ஒரு பக்கம் சாய்ந்து விட்ட இதழியலாளர்/அரசியல் விமர்சகராகவும், நினைவு கூரப்பட வேண்டியவர்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

தொடர்புடைய சுட்டிகள்:
துக்ளக் உதவி ஆசிரியர்கள்
தமிழ் நாடகங்கள்
நானும் நாடகங்களும்
சாத்திரம் சொன்னதில்லை
சர்க்கார் புகுந்த வீடு

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/cho-how-stick-with-ramasamy/articlecontent-pf216095-269189.html

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/cho-how-stick-with-ramasamy/articlecontent-pf216095-269189.html

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/cho-how-stick-with-ramasamy/articlecontent-pf216094-269189.html

விருதுகள்
இவர் தனது பத்திரிக்கைத்துறைச் பணிக்காக 1985 இல் 'மஹாரான மேவார்' வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986 இல் வீரகேசரி விருதும், 1994 ஆம் ஆண்டு கொயங்கா விருதும், 1998 இல் நச்சிக்கேதஸ் விருதும் பெற்றார்.

படைப்புகள்
இவர் 22 நாடகங்களையும், 8 புதினங்களையும், அரசியல், கலை எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இவரது முகமது பின் துக்ளக் என்னும் 'அரசியல் நையாண்டி' நாடகம் மிகவும் புகழ் பெற்றது. இது பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது.

அரசியல்
இவர் மாநிலங்களவை உறுப்பினராக வாஜ்பாயால் நியமனம் செய்யப்பட்டு 1999 முதல் 2005 வரை பணியாற்றினார்.

இலங்கைத் தமிழர் தொடர்பான போக்கு
சோ ராமசாமி இலங்கைத் தமிழர்களுக்கு, குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான[2] போக்கினைக் கொண்டிருந்தார். இலங்கைத் தமிழர் பற்றிய போதியளவு புரிதல் அற்றும் இருந்தார்.[3] இவர் 1980 இல் இலங்கை வந்து, அதிபர் ஜே.ஆர் ஜெயவர்த்தனா விடமிருந்து பரிசு வாங்கியது முதல் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டார் என்ற கருத்துள்ளது. இவரின் தமிழின எதிர்ப்பின் காரணமான 1986 இல் மதுரையில் வைத்து அமில முட்டை வீசப்பட்டது. அதனால் அவருக்கு பல வருடங்களாக காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது.[4] இவர் ஆரம்பித்த துக்ளத் சஞ்சிகைகள் 2007 இல் இலண்டனில் இலங்கைத் தமிழர்களினால் தீக்கிரைக்குள்ளாயின. அவர்கள் விடுதலைப் புலிகள் என்றும், அல்லது அவர்களுடைய ஆதரவாளர்கள் என்றும் சில செய்திகள் தெரிவித்தன.[5]

மறைவு
சோ ராமசாமி, 7 டிசம்பர் 2016 அன்று காலை 4 மணியளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.[6]

Sunday, 2 August 2020

JOHN SULLIVAN ,FOUNDER OF OOTY



        JOHN SULLIVAN ,FOUNDER OF OOTY 

உதகமண்டலம் எப்படி உருவானது 

.அந்த மலைக்கு மேல் போன மக்கள் யாரும் உயிருடன் திரும்ப முடியாது. அங்கு பூதங்களும் பிசாசுகளும் வசிக்கின்றன’ - இப்படி ஒரு பயம், அன்றைய சமவெளிப் பிரதேச மக்களுக்கு இருந்தது. அந்த மலைக்கு மேல் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தாலும், அந்த மலையைப் பற்றி உலா வந்த கதைகளின் காரணமாக, அதை நெருங்க பயந்தனர். அந்த மலை, இன்று சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் நீலகிரி.
மலைவாழ் பழங்குடியின மக்கள் மட்டுமே வாழ்ந்த, பெரும் காடாக விளங்கிய, மற்ற மக்கள் நெருங்க பயந்த நீலகிரியை, நவீன உலகத்துக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்கு உரியவர், ஜான் சல்லிவன். கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக் காலத்தில் கோவை மாவட்ட கலெக்டராக இருந்தவர். வாருங்கள்... ஜான் சல்லிவனின் கதையோடு, நவீன நீலகிரியின் வரலாற்றையும் அறிவோம்.


தோடமலாவில் என்ன இருக்கிறது?

1800-களில் நீலகிரி, 'தோடமலா’ என்றே அழைக்கப்பட்டது. அந்த மலையில் வசிக்கும் பழங்குடியின மக்களில் சிலர், அவ்வப்போது கீழே இறங்கிவருவதும், அவர்களுக்குத் தேவையான பொருட்களைப் பண்டமாற்று முறையில் பெற்றுச் செல்வதும் நடந்துவந்தன. அந்த மலைவாழ் மக்களுடன் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலரே வணிகம் செய்துவந்தனர். மற்றவர்கள் அவர்களை
விநோதமானவர்களாகவே பார்த்துவந்தனர். திடீர் திடீரென சமவெளிப் பகுதியில் பிரசன்னமாகி, தங்கள் தேவை முடிந்தவுடன் மாயமாக மலை மீது ஏறிச் சென்றுவிடும் அவர்களைக் கண்டு பயமும் மக்களுக்கு இருந்தது. அதேசமயம், 'தோடமலாவில் அப்படி என்னதான் இருக்கிறது’ என அறிந்துகொள்ளும் ஆர்வமும் சமவெளிப் பிரதேச மக்களுக்கு அதிகமாக இருந்தது. மலை மேல் என்ன இருக்கிறது என்பது குறித்து பல்வேறு கட்டுக்கதைகள் மக்கள் மத்தியில் உலவின. 'அங்கே பூதங்களும் பிசாசுகளும் வசிக்கின்றன. அங்கே சென்ற சமவெளிப் பிரதேச மக்கள் யாரும் உயிருடன் திரும்ப முடியாது’ என்றே பேசி வந்தனர். இந்தக் கதைகளின் காரணமாக, மலையை நெருங்க மக்கள் பயந்திருந்த நிலையில், மலையின் மீது ஏறி முதல் கட்டடத்தைக் கட்டினார் ஜான் சல்லிவன்.

ஊட்டி பிறந்த கதை!
1602-ம் ஆண்டில் இருந்தே நீலகிரி மலை மீது ஏறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மலபார் பகுதியில் இருந்த ரோமன் கத்தோலிக்க திருச்சபை, ஜேகோம் பினிஷியோ என்ற பாதிரியாரை அனுப்பிவைத்தது. 'மலை மீது மக்கள் சிலர் வசிக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவர்களின் வழித்தோன்றலாக இருக்கலாம்’ என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அந்தப் பாதிரியார் அனுப்பி வைக்கப்பட்டார். இன்றைய கேரளத்தின் 'மன்னார்க்காடு’, 'கெத்தை’ வழியாக மலையேறிய அவர், மலைவாழ் மக்களைக் கண்டார். அவர்கள் கிறிஸ்துவ வம்சாவளியை சேர்ந்தவர்கள் இல்லை என்று தெரியவந்ததும், தன் பயணத்தை அத்துடன் நிறுத்திக் கொண்டார்.

அதன் பிறகு வெவ்வேறு காலகட்டங்களில், மலை மீது ஏறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தோல்வியிலேயே முடிந்தன. இந்த நிலையில், நீலகிரியை உள்ளடக்கிய கோவை மாவட்டத்துக்கு கலெக்டராக வந்து சேர்ந்தார் ஜான் சல்லிவன். அவருக்கு தோடமலையைப் பற்றி உலா வரும் கதைகள் வியப்பைத் தந்தன. அதை எல்லாம் நம்ப அவர் தயாராக இல்லை. 'மலை மீது குறிப்பிட்ட சில இன மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் தனித்தே வாழ்கிறார்கள்’ என்பது மட்டும் அவருக்குப் புரிந்தது. அதுமட்டும் அல்லாமல், 'தோடமலையை முழுக்க சர்வே செய்ய வேண்டும்... அங்கு வாழும் மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும்’ எனத் தணியாத ஆர்வமும் ஏற்பட்டது. எனவே, தோடமலையைப் பற்றி அறிந்து வர ஆட்களைப் பணித்தார்.  

1818-ம் ஆண்டு ஜான் சல்லிவனால் அனுப்பட்ட ஜே.சி.விஷ் மற்றும் என்.டபிள்யூ.கிண்டர்ஸ்லே என்கிற அவருடைய உதவியாளர்கள், குறிப்பிட்ட தூரம் வரை மலை மீது ஏறி, 'அங்கு உள்ள பள்ளத்தாக்குகளிலும் மலைச்சரிவுகளிலும் மக்கள் வாழ்கிறார்கள். அதை தூரத்தில் இருந்து பார்த்தோம்’ என்று பாசிட்டிவ்வான பதிலைச் சொன்னார்கள். அதன் பிறகே, 'நானே புறப்பட்டுச் செல்கிறேன்’ என சல்லிவன் களத்தில் இறங்கினார்.

ஜான் சல்லிவனின் முன்கதை!

ஜான் சல்லிவனுக்கும் இந்தியாவுக்கும் அவருடைய தந்தை காலத்தில் இருந்தே தொடர்பு உண்டு. காரணம், சல்லிவனின் தந்தையும் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றியவர். அந்த வகையில் மகனையும் கிழக்கிந்திய கம்பெனி பணிக்காகத் தயார்ப்படுத்தினார். லண்டனில் பிறந்து வளர்ந்த ஜான் சல்லிவன், தனது 15-வது வயதில் கிழக்கிந்திய கம்பெனியில், மதறாஸ் பிராந்தியத்தில் ரைட்டராகப் பணியில் சேர்ந்தார். வருவாய் துறை, நீதித் துறை என வெவ்வேறு துறைகளில் பணியாற்றியவர், படிப்படியாகப் பணி உயர்வு பெற்று, 1815-ம் ஆண்டு கோவையில் சிறப்பு வருவாய் கமிஷனராகப் பதவிஏற்றார். அதே ஆண்டிலேயே கோவை மாவட்டத்தின் நிரந்தர கலெக்டராக நியமிக்கப்பட்டார். அப்போதுதான் தன் ஆளுகைக்கு உட்பட்ட 'தோடமலா’ என்று அழைக்கப்படும் நீலகிரி மலையின் ரகசியம் அறியும் முயற்சியில் இறங்கினார்.

ஊட்டி பிறந்த கதை!
தன்னால் அனுப்பிவைக்கப்பட்ட உதவியாளர்கள் பாசிட்டிவ்வான பதிலைச் சொன்னதை அடுத்து, 1819-ம் ஆண்டு, ஜனவரி மாதம் நீலகிரி மலை மீது முதன்முதலாக ஏறினார். மலை மீது ஏறும் முயற்சியில் கோவைச் சிறையில் இருக்கும் தண்டனைக் கைதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ''தோடமலையை நோக்கிப் பயணம்; மலையேறி, வெற்றிகரமாகத் திரும்பி வந்தால், உங்களுக்கு விடுதலை. பயணத்திலேயே உயிர் போகும் ஆபத்தும் உண்டு'' என்று சொல்லியே அழைப்பு விடுக்கப்பட்டது. கைதிகள் மற்றும் சிப்பாய்களுடன் குதிரைப் படை, யானைப் படையையும் அழைத்துக்கொண்டு போருக்குப் புறப்படுவதுபோலக் கிளம்பினார்கள்.

சிறுமுகைப் பகுதியில் இருந்து பயணத்தை ஆரம்பித்தார்கள். பவானி ஆற்றை ஒட்டிய தனநாயக்கன் கோட்டைப் பகுதியில் இருந்து மலையேறினார்கள் (தனநாயக்கன் கோட்டை என்பது திப்புசுல்தான் ஆட்சிக் காலத்தில் வரி வசூல் மையமாகத் திகழ்ந்தது. அதன் காரணமாக, அதற்கு 'தண்டல் நாயக்கன் கோட்டை’ என்ற பெயரும் உண்டு. அந்த தனநாயக்கன் கோட்டை இப்போது இல்லை. பவானி சாகர் அணை கட்டப்பட்டபோது, அதில் மூழ்கிவிட்டது).

அடிவாரப் பகுதியைத் தெம்பாகக் கடந்தார்கள். மலையேற்றத்தில்தான் சிக்கல் தொடங்கியது. குறிப்பிட்ட தூரத்துக்குப் பிறகு யானைகள் மற்றும் குதிரைகளால் மலையில் ஏற முடியாமல் போகவே, அவை திருப்பி அனுப்பப்பட்டன. மற்றவர்கள் மட்டும் மலை ஏறும் முயற்சியைத் தொடர்ந்தார்கள். வழியில் காட்டருவி ஒன்று தென்பட... அதனைக் கடக்க முடியாமல் தவித்தார்கள். இருப்பினும், முயற்சியில் இருந்து பின்வாங்காமல் அந்த அருவியைக் கடக்கத் திட்டமிட்டார்கள். அந்த அருவியில் பத்துக்கும் மேற்பட்டோர் பலியாக... மீதம் உள்ளோர் மட்டும் பயணத்தைத் தொடர்ந்தார்கள். நீண்ட பயணத்துக்குப் பிறகு, 'திம்மட்டி’ (திம்மஹட்டி) என்ற இடத்தை அடைந்து, அங்கே டென்ட் அடித்துத் தங்கினார்கள். திம்மட்டி என்ற ஊர்தான் தற்போது 'கன்னேரிமுக்கு’ என்று அழைக்கப்படுகிறது. இது கோத்தகிரியின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது.

தோடமலாவில் சல்லிவன் கண்டது என்ன?

'தோடமலா’ தோடர்கள் வாழும் மலைப்பகுதி என்பது சல்லிவன் உள்ளிட்டவர்கள் அறிந்துவைத்திருந்ததுதான். ஆனால், மலையில் அமைந்திருக்கும் பெரும் பள்ளத்தாக்குகளும் சமவெளிப் பிரதேசங்களும் அவர்களை ஆச்சர்யப்படுத்தின. மலைச் சரிவுகளிலும் மக்கள் வாழ்ந்ததைக் கண்டு வியந்தனர்.

ஊட்டி பிறந்த கதை!
மலை உச்சியில் தோடர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் எருமையை நம்பி வாழ்கிறார்கள். அவர்கள்தான் மற்ற மலைவாழ் மக்களுக்கு பால் சப்ளை செய்கிறார்கள். தோடர்களுக்கு அடுத்த நிலையில் கோத்தர்கள் வசிக்கிறார்கள். கைவினைப் பொருட்கள் தயாரிப்பதில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். இசைக் கருவிகளை வாசிப்பதிலும் வல்லவர்களாக இருக்கிறார்கள். விவசாயமும் இவர்களுக்கு கைவந்த கலை. இவர்கள்தான் அதிக அளவில் சமவெளிப் பகுதிகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.

குரும்பர்களும் இருளர்களும் மலைச் சரிவுகளில் வாழ்கிறார்கள். இவர்கள் காட்டை நம்பி வாழ்கிறார்கள். வேட்டையாடியும், மலைப் பொருட்களைச் சேகரித்தும் வாழ்க்கை நடத்துகிறார்கள். நீலகிரியில் பெரும்பான்மையான பகுதிகளில் படுகர்கள் வசிக்கிறார்கள். நீலகிரி முழுவதும் கிட்டத்தட்ட 150 ஊர்களில் அவர்கள் வசித்தனர். இன்றும் நீலகிரியில் பெரும் அளவில் வசிப்பவர்கள் இவர்கள்தான்.

தான் பார்த்த விஷயங்கள் பற்றி தங்கள் தலைமைக்கு கடிதம் எழுதினார் சல்லிவன். 'மலையில் இங்கிலாந்தைப் போல குளிரான காலநிலை நிலவுகிறது. இரவு நேரத்தில் பாத்திரத்தில் ஊற்றி வைத்திருந்த தண்ணீர் உறைந்து போய்விட்டது என்றால், அங்கு உள்ள குளிரின் தன்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்று எழுதினார். இருப்பினும், மேலிடம் அதை நம்புவதாக இல்லை.

சல்லிவனின் அடுத்த பயணம்!

மீண்டும் அதே வருடம், மே மாதம் தனது நண்பரான தாவரவியலாளர் லெச்சினால்ட் உடன் சென்றார் சல்லிவன். பயணத்தின் பாதி வழியிலேயே சல்லிவனின் நண்பர் நோய்வாய்ப்பட்டார். உயிர் பிழைப்பாரா என்பதே சந்தேகமாக இருந்தது. 'சரி வந்தது வந்துவிட்டோம்... மேலே போய்ச் சேருவோம்’ என பயணத்தைத் தொடர்ந்தார்கள். திம்மட்டி வந்து சேர்ந்ததும், லெச்சினால்ட்டின் உடல்நிலை சீரானது. அங்கும் இங்குமாக ஓடி, ஆடினார். திம்மட்டியிலேயே பண்டமாற்று முறையில் ஆறு ஏக்கர் நிலத்தை வாங்கி, சிறிய கல் வீடு ஒன்றைக் கட்டினார்கள். அங்கேயே சில காலம் சுற்றித் திரிந்தார்கள். தாங்கள் வாங்கிய நிலத்தில் பரிசோதனை முயற்சியாகப் பல வெளிநாட்டு தாவரங்களைப் பயிர் செய்துபார்த்தார்கள்.

ஊட்டி பிறந்த கதை!
அப்போதைய காலகட்டத்தில் நம் நாட்டின் சீதோஷ்ணம் தாங்க முடியாமலோ, காயம்பட்டோ, இதர காரணங்களாலோ நோய்வாய்ப்பட்ட சிப்பாய்களை சிகிச்சைக்காக, மொரீசியஸ் தீவுக்கு அல்லது தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனுக்கு அனுப்பிவைப்பது வழக்கம். அவர்கள் கப்பல் பயணத்தின்போது பாதி வழியிலேயே மரணிப்பதும் சகஜமான ஒன்று. எனவே, கோவைக்குத் திரும்பியதும், உடல்நிலை சரியில்லாத லெச்சினால்ட்டின் உடல்நிலை, மலை மீது ஏறியதும் அதிசயத்தக்க வகையில் குணமானதைக் குறிப்பிட்டு மீண்டும் மேலிடத்துக்கு கடிதம் எழுதினார் சல்லிவன். 'நோய்வாய்ப்பட்ட சிப்பாய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சானட்டோரியம் (நீண்டகால நோய்களுக்கான சிகிச்சை மையம்) அமைக்க சிறந்த இடம் இது’ என்றும் குறிப்பிட்டார். அதற்கும் பாசிட்டிவ்வான பதில் இல்லை.

இந்த நிலையில் அடுத்த ஒன்றரை ஆண்டு காலம் நிர்வாகப் பணி நிமித்தம் சல்லிவன் மதராஸில் இருக்க வேண்டிய சூழல். அப்போது ஹென்ட்ரியேட்டா சிசிலியா என்பவருடன் அவருக்குத் திருமணம் நடந்தது. அதன் பின்னர் மீண்டும் கோவை வந்தார். மீண்டும் சல்லிவனின் நீலகிரி பயணம் ஆரம்பமானது. 1821-ம் ஆண்டு உதகமண்டலம் பகுதியை அடைந்தார் சல்லிவன். மிகப் பெரிய சமவெளிப் பகுதியைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தார். உதகமண்டலம் பகுதியில் ஒரு கல் வீட்டைக் கட்டினார். அடுத்து சாலை வசதிகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டார். கோத்தகிரி சாலை அமைக்கப்பட்டது. அதனை அடுத்து ஆங்கிலேய மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக உதகமண்டலத்தில்

குடியேறினார்கள். ஜான் சல்லிவனும் பெரும்பாலான நாட்கள் தன் குடும்பத்துடன் உதகமண்டலத்திலேயே வசிக்க ஆரம்பித்தார்.

ஊட்டி ஏரியைக் கட்டியவரும் சல்லிவன்தான்!

சல்லிவன் உதகமண்டலத்துக்கு வந்த பிறகு, விவசாயத்திலும் பல பரிசோதனை முயற்சிகளைச் செய்தார். டீ, உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் மூன்றையும் பயிர்செய்யும்படி மக்களை ஊக்கப்படுத்தினார். அது அங்கு குடியேறியுள்ள ஆங்கிலேய மக்களின் தேவைக்கும், உள்ளூர் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும் உதவும் என்று நம்பினார்.

ஊட்டி பிறந்த கதை!
அப்போது, மழைக்காலங்களில் மலையில் இருந்து கீழே பாயும் நீர் வீணாவதைக் கண்டார். அதனை சேகரிக்கும்விதமாக ஏரி ஒன்றை அமைத்தால் உள்ளூர் மக்களுக்குப் பயன் தருமே என நினைத்தார். அதோடு சீகூர், ஈரோடு போன்ற சமவெளிப் பகுதிகளின் விவசாயத்துக்கும் பயன்படுத்தலாம் என அப்போதைய கவர்னருக்கு ஒரு திட்ட அறிக்கையைத் தயாரித்தும் அனுப்பினார். 'நீலகிரியில் ஏரி அமைத்து, அங்கு இருந்து சமவெளிக்கு நீர் கொண்டு செல்ல, நிறையப் பணச் செலவு ஏற்படும்’ எனச் சொல்லி, அந்தத் திட்டம் நிராகரிக்கப்பட்டது. பின்னர் அழகுடன்கூடிய பயன்பாடு என்ற நோக்கத்தில் ஏரி மட்டும் அமைத்துக்கொள்ள அனுமதி தரப்பட்டது. ஜான் சல்லிவனின் நேரடி மேற்பார்வையில் 1825-ம் ஆண்டு ஏரியின் கட்டுமானப் பணிகள் தொடங்கின.

கிட்டத்தட்ட 65 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த ஏரி, கால ஓட்டத்தின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கியது. ஏரியின் மேற்பகுதியில் ஊட்டி பஸ் ஸ்டாண்ட், ரேஸ் கோர்ஸ் ஆகியவை உருவாகின. மிச்சமிருக்கும் ஏரிப் பகுதி, 'போட் ஹவுஸ்’ என்ற பெயரில் சுற்றுலாவாசிகளின் பொழுதுபோக்கும் இடமாக விளங்குகிறது.

வந்தது சானட்டோரியம்...

இப்படி நீலகிரியில் படிப்படியான முன்னேற்றங்கள் நடந்துகொண்டிருந்தாலும், 'உதகமண்டலத்தில் சானட்டோரியம் அமைக்க வேண்டும்’ என்ற சல்லிவனின் எண்ணம் மட்டும் அவ்வளவு சுலபத்தில் ஈடேறவில்லை. அதற்கு பலகட்டப் போராட்டங்களும், பல ஆண்டு காத்திருப்பும் தேவைப்பட்டது. தொடர்ந்து மேலிடத்துக்கு கடிதங்கள் எழுதியதன் விளைவாக, 1825-ம் ஆண்டு அப்போதைய கவர்னரான தாமஸ் மன்றோ வந்து சல்லிவன் கட்டிய கல் வீட்டில் தங்கினார். உதகமண்டலம் பகுதியைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் சென்றார். இரண்டு ஆண்டுகள் கழித்து, கிட்டத்தட்ட தனது மரணத் தருவாயில்தான் சானட்டோரியம் அமைக்க தாமஸ் மன்றோ கையெழுத்து போட்டார். அதன் பின்னரே நீலகிரியில் சாலை வசதிகள் பெருக, ஆங்கிலேய மக்களும் அதிக அளவில் குடியேற, சர்ச்சுகள், பள்ளிகள் கட்டப்பட, முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, காலிஃபிளவர் போன்ற காய்கறிகள் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த... நீலகிரி விறுவிறு வளர்ச்சியைப் பெற்றது.

மனைவியின் மரணமும் மகனின் வருகையும்!

ஜான் சல்லிவனின் மனைவி ஹென்ட்ரியேட்டாவும் மூத்த மகள் ஹேரியேட்டும் மரணம் அடைந்தது ஊட்டியில்தான்.

ஊட்டி பிறந்த கதை!
1820-ல் ஹென்ட்ரியேட்டாவை சல்லிவன் திருமணம் செய்துகொண்ட பிறகு, கோவையில் திருமண வாழ்க்கையைத் தொடங்கினார்கள். அடுத்த வருடமே அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்து, சில மாதங்களிலேயே இறந்துபோனது. அதன் பின்னரே சல்லிவன் உதகமண்டலத்தைக் கண்டறிந்து, அங்கு ஒரு கல் வீடு கட்டினார். பெரும்பாலான நாட்கள் தன் மனைவியுடன் அங்கேயே தங்கினார். அதன் பிறகு அவருக்கு எட்டுக் குழந்தைகள் பிறந்தன.

1838-ம் ஆண்டு... நீலகிரியில் காசநோயும் மலைக் காய்ச்சலும் பெருமளவில் பரவின. அதற்கு சல்லிவனின் மனைவி ஹென்ட்ரியேட்டாவும், மகள் ஹேரியேட்டும் தப்பவில்லை. இருவருக்கும் கடுமையான காசநோய் ஏற்பட... அப்போது அதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத காரணத்தால், அவர்களைக் குணப்படுத்த முடியவில்லை.

சல்லிவனின் மூத்த மகள் ஹேரியேட் 1838-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி இறக்க... அந்தச் சோகம் தீர்வதற்குள் மனைவி ஹென்ட்ரியேட்டா செப்டம்பர் 3-ம் தேதி இறந்தார். அவர்களுக்கு ஊட்டி செயின்ட் ஸ்டீஃபன் சர்ச் பின்புறத்தில் கல்லறைகள் அமைந்திருக்கின்றன. அந்த சர்ச் அவர்களின் இறப்புக்குப் பின்னரே கட்டப்பட்டது. அந்த சர்ச்சில் இவர்கள் நினைவாக கல்வெட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

மனைவியும் மகளும் இறந்துபோன மூன்று ஆண்டுகளில், அதாவது, 1841-ம் ஆண்டு ஜான் சல்லிவன் பணி ஓய்வு பெற்று ஏழு குழந்தைகளுடன் லண்டனுக்குத் திரும்பிச் சென்றார். அங்கே சென்று விட்டாலும், அவரின் எண்ணம் முழுவதும் நீலகிரியைச் சுற்றியே இருந்தது. தனது இறுதிக் காலத்தை நீலகிரியில் கழிக்கவே விருப்பம் தெரிவித்தார். அந்த ஆசை நிறைவேறவில்லை. தனது 66-வது வயதில் லண்டனிலே காலமானார்.

சல்லிவனின் மரணத்துக்கு முன்னரே, அவருடைய மகன் ஹென்றி எட்வர்டு சல்லிவன், கிழக்கிந்திய கம்பெனியில் மதராஸ் பிராந்தியத்தில் பணியில் சேர்ந்தார். 1869-ம் ஆண்டு, தன் தந்தை பணியாற்றிய கோவை மாவட்டத்துக்கே கலெக்டராக பணியமர்த்தப்பட்டார். இப்படி, சல்லிவன் இறந்த பின்பும் அவரின் வாரிசுகள் மூலம் இந்தியாவுடனான பந்தம் தொடர்ந்தது.  

ஊட்டி பிறந்த கதை!
நீலகிரியில் கல் வீட்டைக் கட்டி குடியேறிய சல்லிவன், தன்னுடன் தோட்டக்காரர் ஒருவரையும் அழைத்துச் சென்றார். ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த அவர் பெயர், ஜான்ஸ்டன். அவர்தான் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தாவரங்கள், நீலகிரி மண்ணில் வளர்கிறதா என்ற பரிசோதனையில் ஈடுபட்டவர். உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீட்ரூட், ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள் ஆகியவற்றை இங்கு உள்ள மண்ணில் விளைவித்துப்பார்த்தார். ரோஜா வகைகளையும் வளர்த்துப் பார்த்தார். அந்தத் தோட்டக்காரர் ஏற்படுத்திய நம்பிக்கையின் அடிப்படையிலேயே, அவற்றை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்துவைத்தார் சல்லிவன். ஜான் சல்லிவனால் நீலகிரியில் கட்டப்பட்ட கல்வீடு, தற்போது ஊட்டி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் இருக்கிறது. அதனை ஒட்டி சல்லிவனால் வளர்க்கப்பட்ட மரம் ஒன்றும் பட்டுப்போன நிலையில் நிற்கிறது.

 ஜான் சல்லிவன் முதன்முதலில் கட்டடம் கட்டிய கன்னேரிமுக்கு பகுதியில், அதே இடத்தில் தற்போது ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த நினைவிடம் அமைக்க முயற்சி எடுத்தவர்களில் முக்கியமானவர், தர்மலிங்கம் வேணுகோபால். இவரின் தந்தை தர்மலிங்கம், நீலகிரியில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் பணியாற்றியவர். படுகர் இனத்தைச் சேர்ந்த முதல் பத்திரிகையாளர். தந்தை வழியில் பிரபல ஆங்கிலப் பத்திரிகைகளில் பொருளாதாரக் கட்டுரைகள் எழுதிவரும் வேணுகோபால், பொதுத்துறை வங்கி ஒன்றில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். நீலகிரி ஆராய்ச்சி மற்றும் ஆவணக் காப்பக மையத்தின் இயக்குநராக இருக்கிறார். ஜான் சல்லிவனின் வரலாற்றை ஆவணப்படுத்துவதற்காக தீவிர முயற்சி எடுத்த இவர், அதற்காக லண்டன் வரை பயணம் மேற்கொண்டார்.

.


ஊட்டி பிறந்த கதை!
சல்லிவனின் வரலாறு முழுமையாக ஆவணப்படுத்தப்படவில்லையே!’ என்ற கவலை பேச்சில் வெளிப்பட்டது. அப்போது அவர், சல்லிவனின் மனைவி மற்றும் மூத்த மகளின் கல்லறைகள் ஊட்டியில்தான் இருக்கிறது என்ற தகவலைச் சொன்னார். ஆங்கிலேய அரசின் பிரதிநிதியாக இருந்தாலும், நமக்காகப் பல திட்டங்களைத் தீட்டி மனைவி, மகளையும் இங்கேயே பறிகொடுத்த சல்லிவனின் வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அதற்காக, பல இடங்களுக்கும் பயணம் செய்தேன். 

லண்டனில் சல்லிவனின் கொள்ளுப்பேரன் டேவிட் சல்லிவன் இருக்கும் தகவலை அறிந்து, அவரைச் சந்தித்தேன். சல்லிவன் பற்றிய பல தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார். லண்டன் அப்டவுன் பகுதியில், செயின்ட் லாரன்ஸ் சர்ச்சில் இருந்த சல்லிவனின் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்தினேன். சல்லிவனின் வம்சாவளியைச் சேர்ந்த பலரையும் சந்தித்தேன். அரசாங்கப் பதிவேடுகளில் இருந்தும் பல தகவல்களைப் பெற்றேன். இன்றும் ஜான் சல்லிவனின் வரலாற்றை முழுமையாக ஆவணப்படுத்தும் என் பயணத்தைத் தொடர்ந்துகொண்டு இருக்கிறேன்'' என்கிறார்  வேணுகோபால்.






சான் சல்லிவன் (ஜான் சல்லிவன்; John Sullivan) 1815 முதல் 1830 வரை அன்றைய பிரித்தானிய அரசின் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். நீலகிரியின் தந்தை என அழைக்கப்படும் இவராலேயே, 1819ம் ஆண்டுவாக்கில் நீலகிரி மாவட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. 1804ம் ஆண்டு சென்னை கிழக்கிந்திய நிறுவனத்தில்யில் சாதாரண எழுத்தராக சேர்ந்த சல்லிவன், தனது கடின உழைப்பால் படிப்படியாக உயர்ந்து 1839ம் ஆண்டு ஆளுனர் அவை உறுப்பினராக உயர்ந்தார். இயற்கை, சுற்றுச்சூழலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவரின் முயற்சியாலேயே ஊட்டி ஏரி வெட்டப்பட்டது[1]. 1841ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பிய பின், 1855ம் ஆண்டு மரணமடைந்தார்.

இளமைக்காலம்
சல்லிவன் 1788ம் ஆண்டு சூன் 15ம் நாள் இங்கிலாந்தின் தலைநகர் இலண்டனில் பிறந்தார். இவரது தந்தை சிட்டீபன் சல்லினன், தஞ்சை நகரில் கிழக்கிந்திய நிறுவனத்தின் சார்பாக பணியாற்றியவர்.[2]. இவரின் முயற்சியால் தஞ்சையை சுற்றி பல ஆங்கில வழி கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன. தாயார் பெயர் ஆன் சல்லினன் ஆகும். சான் சல்லினன் அரித்மெடிக் அண்ட் மெர்ச்சன்ட் அக்கௌன்டிங்க் ( Arithmetic and Merchant Accounting ) பிரிவில் தனது கல்லூரிப் படிப்பை முடித்தார்.

கிழக்கிந்திய நிறுவனப்பணி
சல்லிவன், தனது 15ஆவது வயதில் (ஆகத்து 1803) சென்னை கிழக்கிந்திய நிறுவனத்தில் எழுத்தராக சேர்ந்தார். இதன் பிறகு சிறிது சிறிதாக உயர்ந்த இவர், 1806ம் ஆண்டு தென்னார்க்காடு மாவட்ட நீதிமன்ற பதிவராகவும், 1807ம் ஆண்டு ரகசிய காப்பு, அரசியல் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக தலைமை செயலரின் உதவியாளராகவும், 1809ம் ஆண்டு மைசூரில் அமைந்திருந்த இங்கிலாந்து அமைச்சக உதவியாளராகவும், 1814ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராகவும், 1815ல் கோவை மாவட்ட சிறப்பு வருவாய்த்துறை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார். இதன் பிறகு அதே ஆண்டு கோவை மாவட்ட நிரந்தர ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டார்.

நீலகிரி உருவாக்கம்

கோத்தகிரியில் உள்ள நினைவகம்
இதன் பிறகு 1819ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ம் நாள், பிரான்சு நாட்டை சேர்ந்த பிரபல இயற்கை ஆர்வலரான சேன் பாபிசுட் லூயிசுடனும் (Jean Baptiste Louis), படகா பழங்குடியின வழிகாட்டியுடனும் உதகமண்டலப் பகுதியை அடைந்தார். சுமார் மூன்று வார காலம் அந்த பகுதியை சுற்றிப்பார்த்த இவர், அங்கேயே ஒரு கல் வீட்டையும் கட்டினார்[1]. நீலகிரியின் முதல் கட்டிடமான இது இன்றளவும் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் உள்ளது. இதன் பிறகு இந்தப் பகுதியை கோடை இருப்பிடமாக மாற்ற எண்ணி, இந்த பகுதியில் நிறைய குடியேற்றங்களை உருவாக்கினார். மேலும், மக்கள் எளிதில் இந்தப் பகுதியை அணுகவேண்டி, 1820ஆம் ஆண்டு சிறுமுகையில் இருந்து ஒரு புதிய தரைவழிப் பாதையை ஏற்படுத்தினார். இதன் பிறகு ஐரோப்பிய, தென்னாப்பிரிக்க நாடுகளில் இருந்து பல வகையான மலர்கள், காய்கள், பழம் தரும் மரவகைகளை இறக்குமதி செய்து நீலகிரி மாவட்டத்தில் நட்டார். படகா பழங்குடி இன மக்களின் உயர்வுக்காக மேம்படுத்தப்பட்ட பார்லி விதைகளையும் இறக்குமதி செய்தார். மேலும் ஊட்டி நகரின் நடுவில் ஒரு மிகப்பெரிய ஏரியையும் வெட்டினார். மேலும் மலையின் பல பகுதிகளில் ஓடிய சிறிய ஓடைகளை அந்த ஏரியுடன் இணைத்து அதன் நீர்வளத்தை உறுதி செய்தார்.

குடும்பம்
சல்லிவன் கென்ரித்தா என்பவரை 1820ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 1822ம் ஆண்டு காரியட் ஆன் என்ற முதல் பெண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து மொத்தம் ஒன்பது குழந்தைகள் இவர்களுக்குப் பிறந்தன. இதில் இரண்டு குழந்தைகள் ஊட்டியிலேயே இறந்து விட்டன. மேலும் 1838ம் ஆண்டு கென்ரித்தாவும் ஊட்டியிலேயே இறந்துவிட்டார். இவர்கள் மூவரின் உடல்களும் அங்கேயே புனித சிட்டீபன் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவரின் முதல் மகன் கென்றி எட்வர்ட் இவரைப் போலவே கோவை மாவட்ட ஆட்சியராக பின்னாட்களில் (1869ம் ஆண்டு) நியமிக்கப்பட்டார்[2].
இறப்பு

பல கம்பெனி பொறுப்புகளை வகித்த சல்லிவன், 1841ம் ஆண்டு மே மாதம் பணி ஓய்வு பெற்றுக்கொண்டு இங்கிலாந்துக்குத் திரும்பினார். அங்கு தனது குழந்தைகளுடன் தனது இறுதி நாட்ளைக் கழித்தார். 1855ம் ஆண்டு சனவரி 16ம் நாள் தனது 66ம் வயதில் அங்கேயே இறந்தார். விடுதலை பெற்ற இந்தியாவில், சல்லிவனைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரின் கல்லறையை கண்டுபிடிக்கும் பணி 1999 தொடங்கி 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இறுதியில் சூலை 14, 2009 அன்று, இங்கிலாந்தின் ஈத்ரு விமான நிலையம் அருகில் உள்ள புனித லாரன்சு பேராலயத்தில் இவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது[3].
.

Sunday, 24 May 2020

DAILY THANTHI FOUNDER ATHITHANAR BORN 1905 SEPTEMBER 27 - 1981 MAY 24







.'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார்
சீமான்

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி கிராமத்தில் 1905 ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 27 ஆம் தேதி பிறந்தார். தந்தையார் சிவந்தி ஆதித்தன். தாயார் கனகம் அம்மையார். ‘ஆதித்தனார்’ என்பது அவரது குடும்பப் பெயர். ஆதித்தனாரின் இயற்பெயர் ‘ சிவந்தி பாலசுப்ரமணியன் ஆதித்தன் '.

    Si Pa Adithanarதந்தையார் வழக்கறிஞர். சி.பா. ஆதித்தனார் தமது பள்ளிப் படிப்பை திருவைகுண்டத்தில் பயின்றார். திருச்சிராப்பள்ளியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்ட மேல் படிப்பை முடித்தார்.

    கல்லூரியில் படிக்கும்போதே ‘ தொழில் வெளியீட்டகம்’ என்னும் பதிப்பகத்தை தொடங்கி, மெழுகுவர்த்தி செய்வது எப்படி ? தீப்பெட்டி தயார் செய்வது எப்படி? ஊதுபத்தி தயார் செய்வது எப்படி ? சோப்பு தயார் செய்வது எப்படி? பேனா மை தயாரிப்பது எப்படி ? என்பன போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டார். இதற்காக ஒரு அச்சகத்தை விலைக்கு வாங்கினார். இதன் மூலம் சுய தொழில் மீது அவருக்கு இருந்த ஆர்வம் வெளிப்படுவதுடன், தமிழக இளைஞர்கள் சுயமாக தொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற நல்ல சிந்தனையையும் அறிய முடிகிறது.

    சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். இங்கிலாந்து தலைநகர் லண்டன் மாநகரத்திற்குச் சென்று படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றார். லண்டனில் படிக்கும் போதே நிருபராக பணியாற்றி படிப்புச் செலவிற்கு பணம் சம்பாதித்தார். சுதேசமித்திரன் இதழ், டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் லண்டனிலிருந்து வெளி வந்த ஸ்பெக்டேட்டர் வார இதழ் முதலிய இதழ்களுக்கு செய்திக் கட்டுரைகள் எழுதி அனுப்பினார். இந்திய இதழ்களுக்கு லண்டனில் செய்தியாளராக இருந்த முதல் தமிழர் இவரே. லண்டனில் படிக்கும்போதே இதழ்கள் நடத்திட வேண்டுமென்ற உயர்ந்த இலட்சியத்தை உள்ளத்தில் ஏற்றார்.
    லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்று தமிழகம் திரும்பியவுடன், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் பணியை மேற்கொண்டார். சிங்கப்பூர் நாட்டில் பெரும் தொழில் அதிபராக விளங்கிய ஓ. ராமசாமி நாடார் என்பவரின் மகள் ஆச்சியம்மாள் என்ற கோவிந்தம்மாளை வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.

    சிங்கப்பூரில் வழக்கறிஞராகப் பணிபுரிந்த பொழுது, நல்ல வருமானம் கிடைத்தது. ஆனால், சி. பா. ஆதித்தனாரின் சிந்தனையெல்லாம் இதழ் நடத்த வேண்டும் என்பதையே சுற்றிச் சுற்றி வந்தது. அவரது மாமனாரோ அதிக வருமானம் வரும் வழக்கறிஞர் தொழிலை விட்டு விட்டு இதழ் நடத்தினால் பணம் சம்பாதிக்க முடியாது என்றார்.  “ அரிசி விற்றால் சாக்காவது மிச்சப்படும், பருப்பு உடைத்தால் உமி, குருணையாவது மிச்சப்படும், இதழ் நடத்தினால் என்ன மிஞ்சும் ? இருப்பதும் போய்விடும் ” எனக் கூறி இதழ் நடத்துவதை தடுத்தார். ஆனாலும், இதழ் நடத்தியே தீருவது என்பதில் ஆதித்தனார் உறுதியாக இருந்தார். வேறு வழியில்லாமல் அவரது மாமனாரும் ஒத்துக் கொண்டார்.    முதன் முதலில் 'மதுரை முரசு' என்னும் வாரம் இருமுறை வெளிவரும் இதழைத் தொடங்கினார். பின்பு, 'தமிழன்' என்னும் வார இதழைத் தொடங்கினார். தமிழன் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தது தமிழின் மீது அவர் கொண்ட காதல் தான்.

    மதுரையில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் , கலவரம் ஏற்பட்டு காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டார்கள் ஆனால், ஒருவர் மட்டுமே கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட வேண்டும் என்று காவல்துறையினர் கட்டளையிட்டார்கள். ஆதித்தனார் "மதுரையில் போலீஸ் துப்பாக்கிச் சூடு! மூன்று பேர் சாவு!" என முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் செய்தி வெளியிட்டார்.

    அதைப் பார்த்த ஆங்கிலேய அதிகாரிகள் போர்க்கால அதிகாரத்தைப் பயன்படுத்தி 'மதுரை முரசு' இதழைத் தடை செய்தனர். அதிகாரிகள் ஆணை பிறப்பித்தாலும் உண்மைச் செய்தியை வெளியிட ஆதித்தனார் தயங்கியது இல்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.    1942 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி 'தினத்தந்தி' நாளிதழை வெளியிட்டார். தலையங்கத்தில் நாட்டின் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளை மக்களுக்குப் புரியும் விதத்தில் எளிய தமிழ் நடையில் விளக்கினார். "ஒரு படம் ஆயிரம் சொல்லுக்குச் சமம்" என்னும் சீன பழமொழிக்கேற்ப, தமது தினத்தந்தி நாளிதழில் படங்களுடன் செய்தி வெளியிட்டார்.     பாமர மக்களும், எழுதப் படிக்கத் தெரிந்தவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய சொற்கள், சிறிய வாக்கியங்கள், கவர்ச்சி மிகுந்த தலைப்புகள், கருத்துப் படங்கள் இவற்றைக் கையாண்டார். அரசியல் , பொருளாதாரம், வர்த்தகம், திரைப்படம், விளையாட்டுச் செய்திகள் ஆகியவற்றை வெளியிட்டு தமிழக மக்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும், நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளவும் உதவினார்.     தமிழகத்தில் இன்று 'தினத்தந்தி' நாளிதழ் 12 நகரங்களிலிருந்தும், புதுச்சேரி, மும்பை , பெங்களுர் முதலிய பெருநகரங்களிலிருந்தும் வெளி வருகிறது. பட்டித்தொட்டியெங்கும், ஊர்தோறும் தினத்தந்தி நாளிதழ் பரவி பல லட்சக்கணக்கான வாசகர்கள் படிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளது. மேலும், தினத்தந்தி குழுமத்திலிருந்து தினத்தந்தி, மாலை முரசு, ராணி, ராணி முத்து, ராணி காமிக்ஸ் போன்ற வார, மாத இதழ்களும் வெளியிடப்படுகிறது.

    சி.பா. ஆதித்தனார் 1942 முதல் 1953 வரை தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகச் செயல்பட்டார். 'தமிழ்ப்பேரரசு' என்னும் நூல் மூலம் தமிழின முன்னேற்றத்திற்கு செய்ய வேண்டியவைகளை வலியுறுத்தினார். 942 ஆம் ஆண்டு 'தமிழரசுக் கட்சி'யைத் தொடங்கி நடத்தினார். பின்பு. 1958 ஆம் ஆண்டு 'நாம் தமிழர்' இயக்கத்தையும் தொடங்கி செயல்படுத்தினார்.     1960 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொண்டு சிறை சென்றார். அதே போன்று 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் கலந்து கொண்டதால் சிறையில் அடைக்கப்பட்டார்.

    பேரறிஞர் அண்ணா அழைத்ததால் தி. மு. க.வில் இணைந்தார். 1957 முதல் 1962 வரை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். அவர் சபாநாயகராகப் பொறுப்பேற்றது முதல் சட்ட மன்றத்தில் சபை ஆரம்பிக்கும் முன்பு தினம் ஒரு திருக்குறள் கூறி அவையைத் தொடங்கினார். தமிழக அமைச்சரவையில் கூட்டுறவு, விவசாய அமைச்சராக பணியாற்றினார்.    திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரி ஏற்படுத்தப்பட்டு அக்கல்லூரியில் இதழியல் ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. சி.பா. ஆதித்தனார் 'இதழாளர் கையேடு' என்னும் நூலை வெளியிட்டார். அந்த நூல் இதழாளர்களுக்கு மிகவும் பயனுடையதாக இன்றும் விளங்குகிறது.


    'உடல் மண்ணுக்கு , உயிர் தமிழுக்கு' என்னும் முழக்கத்தின் மூலம் தமிழர்களை தட்டியெழுப்பினார். தமிழர்கள் தங்கள் கையொப்பத்தின் தலைப்பெழுத்தையும், கையெழுத்தையும் தமிழில் எழுத வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.    தாய் நாட்டுப் பற்றும், தமிழ் மக்கள் மீது அன்பும் கொண்டிருந்தார். பாமரனையும் படிக்க வைக்க வேண்டும், தமிழ் மொழி, தமிழினம் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக தமது உயிர் மூச்சு உள்ளவரை வாழ்ந்தார் சி.பா. ஆதித்தனார்! 1981 ஆம் ஆண்டு மே திங்கள் 24 ஆம் நாள் காலமானர். அவரது புகழ் இதழியல் உள்ளவரை நிலைத்து நிற்கும்.

சி. பா. ஆதித்தனார் (1905 - 1981) தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடியான இவர், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழைத் தொடங்கியவர். அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். சட்டத்துறையில் கல்விகற்ற இவர், தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார். தனது கொள்கைகளைச் செயற்படுத்தும் ஆர்வத்தில் நாம் தமிழர் என்னும் கட்சி ஒன்றையும் தொடங்கினார். எனினும், காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது தனது கட்சியின் செயற்பாட்டை இடைநிறுத்தினார்.[சான்று தேவை]

இளமைக் காலம்
இவர்  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் காயாமொழியில் சிவந்தி ஆதித்தர். கனகம் அம்மையார் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தையார் ஒரு வழக்கறிஞர். தனது மகனையும் வழக்கறிஞராக ஆக்க விரும்பிய சிவந்தி ஆதித்தர், அவரை இங்கிலாந்துக்கு அனுப்பினார். அங்கு படிக்கும்போதே இதழியல் தொடர்பான பகுதி நேர வேலைகளைச் செய்துள்ளார். இலண்டனில் இருந்தபடியே சுதேசமித்திரன் போன்ற தமிழ் நாட்டுப் பத்திரிகைகளுக்கும், வட இந்தியா, தென்னாபிரிக்கா போன்ற இடங்களில் வெளிவந்த சில பத்திரிகைகளுக்கும் செய்திகளையும், செய்திக் கட்டுரைகளையும் அனுப்பியுள்ளார்.

1933 ஆம் ஆண்டில் இவரது திருமணம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இவரது மனைவி பெயர் கோவிந்தம்மாள். பின்னர் சென்னை திரும்பிய அவர், பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளால் கவரப்பட்டார். அக்காலத்தில் பெரியாரின் குடியரசுப் பத்திரிகையில் அரசியல் கட்டுரைகளும் எழுதியுள்ளார். எனினும் தனது பிற்கால நடவடிக்கைகளுக்குப் பணம் திரட்டும் நோக்கில் சிங்கப்பூர் சென்ற அவர் அங்கே வழக்கறிஞராகப் பணிபுரிந்து நல்ல வருமானம் பெற்றார். 1942 ஆம் ஆண்டில் மீண்டும் தமிழ் நாடு திரும்பினார்.

பத்திரிகைப் பணி
இவர் தொடங்கிய முதல் பத்திரிகை தமிழன் என்னும் வார இதழ் ஆகும். 1942 ஆம் ஆண்டில் இதை அவர் தொடங்கினார். அதே ஆண்டிலேயே நவம்பர் மாதத்தில், தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழையும் அவர் தொடங்கினார். இது மதுரையில் இருந்து வெளிவந்தது. தனது இதழியல் முயற்சிகளைத் தொடர்ந்து விரிவாக்கி வந்த அவர், மாலை மலர் என்னும் மாலைப் பத்திரிகையையும், ராணி என்னும் வார இதழையும் தொடங்கினார். 1947 ஆம் ஆண்டில் தினத்தாள் என்னும் பத்திரிகையை ஆரம்பித்து அதனைச் சேலத்தில் இருந்து வெளியிட்டார். அடுத்த ஆண்டில், திருச்சி, சென்னை ஆகிய இடங்களிலிருந்து முறையே தினத்தூது, தினத்தந்தி ஆகிய பத்திரிகைகள் வெளியிடப்பட்டன.

தமிழ் வளர்ச்சி, தமிழ் உணர்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தித் தனது பத்திரிகைகளில் செய்திகளையும், பல்வேறு அம்சங்களையும் வெளியிட்டு வந்த ஆதித்தனார், அக்காலத்தில் நிலவிய உயர்தட்டு மக்கள் வாசிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த மொழி நடையைத் தவிர்த்து, சாதாரண மக்களை முன்னிலைப்படுத்தி எளிய தமிழ் நடையைக் கையாண்டார். இதனால் பரந்த அளவில் தமிழ் நாட்டில் வாசிப்புப் பழக்கம் பரவ வழிவகுத்தார். அடிப்படையான எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் மத்தியில் கூட, செய்திகளை வாசிக்கும் போக்கு வளர இவரது இதழியல் முயற்சிகள் வழி வகுத்தன.

மாதம் ஒரு நாவல் என்னும் திட்டத்தின் கீழ் ராணி முத்து என்னும் வெளியீட்டை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டுத் தமிழ்ப் பத்திரிகை உலகில் புதிய போக்கு ஒன்றிற்கு ஆதித்தனார் வித்திட்டார்.

சமூகவியல் நோக்கிலும், இவரது பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 1947 ஆம் ஆண்டில் நாடு விடுதலை பெற்றபோது மத்தியதர மற்றும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைத்த உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான சமகால அரசியல் அறிவை வளர்த்துக்கொள்வதில் இவரது இதழியல் முயற்சிகள் பெரும் பங்காற்றின.

அரசியலில் ஆதித்தனார்
இவர் சிங்கப்பூரில் இருந்து வந்ததுமே ”நாம் தமிழர்” இயக்கத்தைத் தொடங்கினார். ஆதித்தனார் பல போராட்டங்களிலும் பங்குபெற்றுள்ளார். சில சமயங்களில் இதற்காகச் சிறை சென்றும் உள்ளார். 1947 முதல் 1953 ஆம் ஆண்டுவரை தமிழக மேலவை உறுப்பினராகவும், பின்னர் 1957 முதல் 1962 வரை தமிழ் நாடு சட்டப்பேரவையில் உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார். 1964 இல் அவர் மீண்டும் மேலவை உறுப்பினர் ஆனார். 1967 ஆம் ஆண்டு இவர் சட்டப் பேரவையின் அவைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 1969ஆம் ஆண்டு இவர் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். இவருடைய அரசியல் சார்பு காலத்துக்குக் காலம் மாறியபடியே இருந்து வந்தது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தை ஆதரித்ததில் இருந்து, இந்திய தேசிய காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம், தனித் தமிழ்நாடு கோரிக்கை எனப் பல அரசியல் நிலைகளையும் அவர் எடுத்துள்ளார்.

மறைவு
இவர் தனது 76 ஆம் வயதில் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி காலமானார்.




தமிழ் இதழியல் முன்னோடிகளில் ஒருவரும் தினத்தந்தி நாளிதழைத் தொடங்கியவருமான சி.பா.ஆதித்தனார் (Si.Ba.Adithanar) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:*தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி என்ற கிராமத்தில் பிறந்தார் (1905). தந்தை, வழக்கறிஞர். சிவந்தி பாலசுப்ரமணியன் ஆதித்தன் என்பது இவரது முழுப்பெயர். ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பக்கல்வியும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதுகலைப் பட்ட படிப்பும் பயின்றார்.

*கல்லூரியில் படிக்கும்போது ‘தொழில் வெளியீட்டகம்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கி, மெழுகுவர்த்தி செய்வது எப்படி?, தீப்பெட்டித் தயாரிப்பது எப்படி? ஊதுபத்தி தயார் செய்வது எப்படி? உள்ளிட்ட பல நூல்களை எழுதி வெளியிட்டார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.*‘சுதேசமித்ரன்’, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ மற்றும் லண்டனிலிருந்து வெளிவந்த ‘ஸ்பெக்டேட்டர்’ வார இதழ் ஆகியவற்றில் கட்டுரைகள் எழுதினார். இந்தியா திரும்பியவுடன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் சிங்கப்பூர் சென்று பணியாற்றினார்.

*1942-ல் தமிழகம் திரும்பினார். முதன்முதலில் ‘மதுரை முரசு’ என்ற வாரம் இருமுறை இதழையும், பின்னர் ‘தமிழன்’ என்ற வார இதழையும் தொடங்கினார். யாருக்கும் அஞ்சாமல் உண்மை செய்திகளை வெளியிட வேண்டும் என்ற கொள்கையுடையவர். இதனால் இவரது பத்திரிகையை ஆங்கில அரசு தடை செய்தும்கூட தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாதவர்.*1942, நவம்பர் மாதம், மதுரையில் ‘தினத்தந்தி’ நாளிதழை வெளியிட்டார். தொடர்ந்து, ‘மாலை மலர்’ என்ற மாலைப் பத்திரிகையையும் ‘ராணி’ என்ற வார இதழையும் தொடங்கினார். 1947-ல் ‘தினத்தாள்’, ‘தினத்தூது’ ஆகிய பத்திரிகைகளையும் தொடங்கினார்.


சி.பா.ஆதித்தனார் நாடார்

தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் தமிழராக இல்லாவிட்டாலும் தினத்தந்தியைப் படிக்காமல் வளர்ந்திருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு பத்திரிகை உருவாகக் காரணமாக இருந்தவர் சி.பா.ஆதித்தனார். தமிழர் தந்தை என பெருமையோடு கொண்டாடப்படும் இவர், நாடார் சமூகத்தின் மிகப் பெரிய பங்களிப்பு.
சிவந்தி பாலசுப்பிரமணிய ஆதித்தனார் - சி.பா.ஆதித்தனாரின் முழுப் பெயர் இதுதான். தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை ஓரம் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர்தான் காயாமொழி. இந்த ஊரில் 1905-ம் ஆண்டில் பிறந்தார் ஆதித்தனார். அப்பா, சிவந்தி ஆதித்தனார், ஸ்ரீவைகுண்டத்தில் வழக்கறிஞராக இருந்தார்.
ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளிப் படிப்பு முடிந்தவுடன், திருச்சி ஜோசப் கல்லூரியில் பி.ஏ.வும், எம்.ஏ.வும் படித்தார். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் லண்டனுக்குச் சென்று பாரிஸ்டர் படிப்பு படிக்க வேண்டும் என்று விரும்பினார். 1927-ல் லண்டனுக்கு கப்பல் ஏறினார். லண்டனில் படித்துக் கொண்டிருந்தபோது, படிப்புச் செலவுக்கு அவர் வீட்டிலிருந்து பணம் எதிர்பார்க்கவில்லை. பத்திரிகை நிருபராக மாறி அவர் படிப்புக்குத் தேவையான பணத்தை அவரே சம்பாதித்துக் கொண்டார்.
பத்திரிகை நிருபராக அவர் செய்தி சேகரித்து அனுப்பிய விதம் தனித்துவமானது. அந்த சமயத்தில் லண்டனில் வட்ட மேஜை மாநாடு நடந்தது. எல்லா நிருபர்களும் அந்த மாநாடு பற்றிய செய்திகளை பத்தி பத்தியாக அனுப்பினார் கள். ஆனால், மாநாடு நடந்த சமயம் திடீரென மகாத்மா காந்தி வெளியே வந்தார். சிறிது நேரம் கழித்தே மீண்டும் உள்ளே போனார். காந்தியின் பல் ஒன்று ஆடிக் கொண்டிருந்தது. அந்த பல்லைப் பிடுங்கிப் போடவே காந்தி வெளியே வந்தார் என்கிற சுவாரஸ்யமான செய்தியை பத்திரிகைகளுக்கு அனுப்பியவர் ஆதித்தனார் மட்டுமே!
1933-ல் பாரிஸ்டர் படிப்பை முடித்துக் கொண்டு சிங்கப்பூருக்குப் போனார் ஆதித்தனார். சிங்கப்பூரில் ஓ.ராமசாமி நாடார் என்கிற மிகப் பெரிய செல்வந்தரின் மூத்த மகள் கோவிந்தம்மாளைத் திருமணம் செய்து கொண்டார். மனைவியுடன் சென்னைக்குத் திரும்பினார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். சென்னையில் ஒரு பத்திரிகையைத் தொடங்க வேண்டும் என்பது ஆதித்தனாரின் ஆசை. பத்திரிகை தொடங்கத் தேவை யான பணம் அவரிடம் இல்லை. அந்த பணத்தைச் சேர்க்க ஒரே வழி, வழக்கறிஞர் தொழிலை முனைப்போடு செய்வதுதான் என்கிற முடிவுக்கு வந்தார்.
அந்த சமயம், சிங்கப்பூர் பாரிஸ்டர்களின் சொர்க்க பூமியாக இருந்தது. சிங்கப்பூரில் ஆதித்தனார் ஆஜராகிய எந்த வழக்கும் தோற்கவில்லை. இரண்டாம் உலகப் போர் தொடங்கும் முன் சோமப்பா வழக்கில் ஆஜராகி, வெற்றி பெற்றதன் விளைவாக அவருக்கு கிடைத்த பணம் 60 ஆயிரம் ரூபாய்.
அந்த சமயத்தில்தான் இரண்டாம் உலகப் போர் மூண்டது. சிங்கப்பூரை எந்த நேரத்திலும் ஜப்பான் ராணுவம் கைப்பற்றிவிடும் என்கிற நிலையில் தாக்குதலுக்கு முதல் நாளன்று கிளம்பிய கடைசி விமானத்தில் ஏறினார் ஆதித்தனார். அந்த விமானம் கொல்கத்தா போவதற்குப் பதில் இந்தோனேஷியாவுக்குப் போனது. அங்கிருந்து ஒரு சிறிய கப்பலில் ஏறி, இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு இரண்டு மாதம் கழித்து வந்து சேர்ந்தார். இந்த இரண்டு மாதக் காலத்தில் அவர் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. ஆனால், இந்த கஷ்டங்கள் ஆதித்தனாரின் மனவலிமைக்கு இன்னும் வலு சேர்ப்பதாகவே அமைந்தது.
எந்த நோக்கத்துக்காக ஆதித்தனார் சிங்கப்பூருக்குச் சென்றாரோ, அந்த நோக்கத்தை தாயகம் திரும்பியவுடன் செயல்படுத்த ஆரம்பித்தார். 1942-ல் சிங்கப்பூரிலிருந்து தமிழகம் திரும்பிய நான்கே மாதங்களுக்குள் மதுரையில் 'தமிழன்’ என்கிற பெயரில் ஒரு வாரப் பத்திரிகையைத் தொடங்கினார்.
ஆதித்தனாருக்கு தமிழுணர்வு அதிகம். அதனால்தான் தன் பத்திரிகைக்கு 'தமிழன்’ என்று பெயர் வைத்தார். தமிழன் பத்திரிகையைத் தொடங்கு வதற்கு முன்பு மதுரை முரசு என்கிற பெயரில் ஒரு செய்திப் பத்திரிகையைத் தொடங்கினார் ஆதித்தனார். அந்த சமயத்தில் வெள்ளையனே வெளியேறு போராட்டம் உச்சத்தில் இருந்தது. மதுரையில் நடந்த இந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது வெள்ளைக்கார அரசாங்கம். இந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் இறந்தார்கள். ஆனால், இறந்தது ஒருவர்தான் என்று செய்தி வெளியிடும்படி உத்தரவு போட்டது ஆங்கிலேய அரசாங்கம். உண்மையை மட்டுமே சொல்வேன் என்பதில் உறுதியாக இருந்த ஆதித்தனார் 'துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் சாவு’ என்று தெள்ளத் தெளிவாக கொட்டை எழுத்தில் செய்தி போட்டுவிட்டு, அந்த பத்திரிகையை நிறுத்தினார்.
என்றாலும், செய்திப் பத்திரிகை தொடங்கி நடத்தும் வெறி அவருக்குள் தீயாக கனன்று எரிந்து கொண்டிருந்தது. சரியாக அறுபது நாட்கள் கழித்து, மதுரையில் 'தந்தி’யைத் தொடங்கினார். லண்டனில் அவர் படித்துக் கொண்டிருந்த போது 'டெய்லி மிரர்’ பத்திரிகையை விரும்பிப் படிப்பார். சாதாரண மனிதனுக்கும் புரியும்படியாக எல்லா செய்திகளையும் சுவாரஸ்யமாகத் தருவது டெய்லி மிரரின் வழக்கம். 'தந்தி’யும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தார்.
இதனிடையே, 'தமிழன்’ பத்திரிகையின் விற்பனை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுதான் இருந்தது. ஆனால், ஒரே நேரத்தில் இரு பத்திரிகை வேண்டாம் என்று நினைத்ததன் விளைவு, தமிழன் பத்திரிகையை நிறுத்தினார்.
எந்தச் செய்தியாக இருந்தா லும் அதை முதலில் சொல்லிவிட வேண்டும் என்பதில் குறியாக இருப்பார். மதுரை திருப்பரங் குன்றத்தில் காங்கிரஸ் மாநாடு நடந்தபோது ராஜாஜி அணி, காமராஜர் அணியை வெளியேற்றிய செய்தியை சிறப்பு பதிப்பாக வெளியிட்டு, சுடச்சுட மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தார் ஆதித்தனார். சில செய்திகளின் தலைப்பில் நட்சத்திரக் குறியிட்டு, 'இந்த செய்தி மற்ற பத்திரிகைகளில் நாளைதான் வரும்’ என்று எழுதினார்.
1943-ல் சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் செயல்பட ஆரம்பித்தது தந்தி. பிற்பாடு மயிலாப்பூருக்கு மாறியது. 1960-ல்தான் தற்போதிருக்கும் எழும்பூர் அலுவலகத்துக்கு நிரந்தரமாக இடம் பெயர்ந்தது. 1948-ம் ஆண்டு வரை தந்தி என்று அழைக்கப்பட்ட பத்திரிகையை தின தந்தியாக மாற்றினார் ஆதித்தனார். தபால் துறை நடத்தும் தந்தி அலுவலகத் துக்கும் ஆதித்தனாரின் தந்தி அலுவலகத்துக்கும் இடையே ஏற்பட்ட குழப்பத்தைத் தவிர்க்கவே தந்தியை தினத்தந்தியாக மாற்றினார்.
தனித்துவம் நிறைந்த செய்தி அளிப்பின் மூலம் சாதாரண மனிதர்களும் தினத்தந்தியின் வாசகர்களானார்கள். சாதாரண மனிதர்களும் எழுத்து கூட்டி படிக்கிற மாதிரி கொஞ்சம் பெரிய அளவில் எழுத்துக்களில் செய்திகளை அச்சிட்டார். ஜனரஞ்சகமான பல விஷயங் களை தினத்தந்தியில் சேர்த்தார். கருத்துப்படம், ராசி பலன், படக் கதை போன்ற பல அம்சங்கள் ஆதித்தனாரின் கண்டுபிடிப்பு என்றே சொல்ல வேண்டும்.
ஜனரஞ்சகமான விஷயத்தை சுவாரஸ்யமாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைத்தவர் ஆதித்தனார். 'கத்தியால் சதக், சதக் என்று குத்தினார்’ என்று படித்தபோது கொலைச் சம்பவத்தை நேரில் பார்த்த பரபரப்பை அடைந்தனர் வாசகர்கள். ஊரிலேயே பெரிய மருத்துவமனையை 'பெரிய ஆஸ்பத்திரி’ என மக்கள் பாஷையிலேயே எழுதச் சொன்னார். கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதை 'கென்னடி சுட்டுக் கொலை’ என்று நேரடியாக எழுதச் சொன்னார்.
ஆரம்பத்தில் மதுரை, சென்னை என இரண்டு நகரங் களிலிலிருந்து அச்சான தின தந்தியை எல்லா ஊர்களுக்கும் அனுப்பினார். ஆனால், போக்குவரத்து வசதி அந்த அளவுக்கு இல்லாத அந்த காலத்தில் எல்லா ஊர்களிலும் தன்னுடைய செய்தித் தாள் கிடைக்க வேண்டுமெனில் அந்தந்த ஊர்களில் பதிப்பை ஆரம்பிப்பதுதான் ஒரே வழி என்று நினைத்தவர் பெரிய நகரங்களிலும் தனியாக அலுவலகம் தொடங்கினார். இந்த அலுவலகங்கள் பெரும்பாலும் பஸ் ஸ்டாண்ட் அல்லது ரயில்வே ஜங்ஷனை ஒட்டி ஆரம்பித்தது ஆதித்தனாரின் பிஸினஸ் மூளைக்கு இன்னொரு சான்று. செய்திகள், ஆட்கள் எளிதில் வந்துபோக உதவியாக இருப்பதோடு, பத்திரிகைகளை உடனுக்குடன் அனுப்பவும் உதவியாக இருந்தது இது.
விளம்பரங்களிலும் புதுமை படைத்தவர் ஆதித்தனார். சிறிய நிறுவனங்கள்கூட சிறிய அளவில் விளம்பரம் தரும்படி மாற்றி அமைத்தார். ஆனால், விளம்பரம் வேண்டும் என்பதற்காக விற்பனை பற்றி தவறான தகவல்களை தருவது அவருக்குப் பிடிக்காது. ஒருமுறை விளம்பரம் வாங்குவதற்காக மதுரையில் இருந்த ஒரு பெரிய நிறுவனத்தின் நிர்வாகியைச் சந்தித்து விளம்பரம் கேட் டார். ''எத்தனை பிரதிகள் விற்பனையாகிறது?'' என்று கேட்டார் அந்த நிர்வாகி. ''ஏழாயிரம் பிரதிகள்'' என்றார் ஆதித்தனார். ''சென்னையில் வெளிவரும் பத்திரிகைகளே பத்தாயிரம்தான் விற்பனையா கிறது. நீங்கள் ஏழாயிரம் என்கிறீர்களே'' என்று கேட்டார் நிர்வாகி. ''உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் நள்ளிரவு எங்கள் அலுவலகத்துக்கு வாருங்கள். எத்தனை பிரதிகள் அச்சாகிறது என்று நீங்களே பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு வந்தார். அன்றிரவே தந்தி அலுவலகத் துக்கு வந்தார் அந்த நிர்வாகி. அச்சாகும் பிரதிகளின் எண்ணிக்கையைப் பார்த்தார். மறுநாளே விளம்பரம் தந்தார்.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் செய்தித் தாள் அச்சிடும் காகிதத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. காகிதத் தட்டுப்பாட்டை சமாளிக்க தானே காகிதம் தயாரித்தார். வைக்கோலை கொண்டுவந்து, ஊறவைத்து, அதை கூழாக்கி, காகிதமாக்கி, பயன்படுத்தினார். 1962-ல் திருநெல்வேலியை அடுத்த அரியநாயகிபுரத்தில் சன் பேப்பர் மில் தொடங்கினார். பிஸினஸ் மொழியில் 'பேக்வர்ட் இன்டக்ரேஷன்’ என்று சொல்லப்படும் இந்த யுக்தியை அரை நூற்றாண்டுக்கு முன்பே செய்தவர் ஆதித்தனார்.
காலை எழுந்தவுடன் தினத் தந்தி என்கிற வழக்கத்தை ஏற்படுத்திய பிறகு, மாலை யிலும் ஒரு செய்தித் தாள் வெளிவந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்ததன் விளைவு, அடுத்தடுத்து மாலை செய்தித் தாள்களும் வந்தன. வாரப் பத்திரிகையைப் படிக்க நினைக்கிற வாசகர்களுக்கும், நாவல் படிக்க நினைக்கிறவர் களுக்கும் புதிய இதழ்கள் என பலவாறாக கிளை பரப்பியது இந்நிறுவனம்.
ஆதித்தனார் வெறும் பத்திரிகையாளர் மட்டுமல்ல, அரசியலிலும் அதிக ஆர்வம் கொண்டவர். சட்டமன்ற உறுப்பினராக இருந்ததோடு, அவைத் தலைவராகவும் அமைச்சரா கவும் பதவி வகித்தார். அரசியலில் முழுநேரமாகச் செயல்பட வேண்டியிருந்ததால் தனது புதல்வர்களை நிர்வாகத்துக்கு தயார்படுத்தினார்.
தனது இரண்டாவது மகன் சிவந்தி ஆதித்தனை எடுத்த எடுப்பி லேயே நிர்வாகத்துக்கு அவர் கொண்டு வந்துவிடவில்லை. ஆரம்பத்தில் அச்சுக் கோர்க்கும் தொழிலாளியாகப் பணிபுரியச் செய்தார். பிறகு அச்சு இயந்திரப் பிரிவில், பிறகு பார்சல், விற்பனைப் பிரிவில் எழுத்தர், நிருபர், துணை ஆசிரியர், இறுதியில் நெல்லை யில் மாலை முரசு தொடங்கி, அதன் உரிமையாளர், நிர்வாகி, ஆசிரியர் என படிப்படியாக வளர்த்து, இறுதியில் தினத் தந்தி-யின் நிர்வாகத்தை அவரிடம் ஒப்படைத்தார்.
சிவந்தி ஆதித்தன் தினத் தந்தியை இன்னும் உயர்த்தி காட்டினார். அவரது மகன் பாலசுப்பிரமணியன் இன்று வானொலி, தொலைக்காட்சி என புதிய துறைகளிலும் கால் பதித்துள்ளார்.
ஆதித்தனாரின் முதல் மகன் ராமச்சந்திர ஆதித்தன் மாலை நாளிதழ், வார இதழ், நாவல் என்று பத்திரிகைகளை வெற்றிகரமாகத் தொடர்ந்து நடத்தி வருகிறார். மேலும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மீட்புப் பணியில் இவரின் பங்கு முக்கியமானது.
1981-ல் சி.பா.ஆதித்தனார் மறைந்தாலும் அவர் விட்டுச் சென்ற தினத்தந்தி தமிழர் வாழ்வோடு ஒன்றிவிட்டது.

எந்த சமுதாயத்தையும் இழிவு படுத்த இல்ல
என் சமுதாயத்தை பெருமை படுத்துவதற்க்காக இந்த "உழைப்பால் உயர்ந்த நாடார்கள்"முகநூல் பக்கம்