Showing posts with label JUNE 28. Show all posts
Showing posts with label JUNE 28. Show all posts

Tuesday, 29 June 2021

POLLY MORAN AMERICAN ACTRESS BORN 1883 JUNE 28 -1952 JANUARY 25

 POLLY MORAN AMERICAN ACTRESS 

BORN 1883 JUNE 28 -1952 JANUARY 25



Pauline Theresa Moran (June 28, 1883 – January 25, 1952) billed as Polly Moran, was an American actress of vaudeville, stage and screen and comedian.


Career[edit]

Born in Chicago, Illinois, Moran started in vaudeville, and widely toured North America, as well as various other locations that included Europe and South Africa. An attractive beauty of Irish descent, she left vaudeville in 1914 after signing for Mack Sennett at Keystone Studios as one of his Sennett Bathing Beauties.[1] There she honed the style of the brash, loud-mouthed, knock-about comedian by which she later became known. She proved effective at slapstick[1] and remained with Sennett for several years until she was signed by MGM.

She partnered with the famous Broadway star Marie Dressler in The Callahans and the Murphys (1927); and the two appeared in eight additional films together, such as Chasing Rainbows (1930), Caught Short (1930), and Prosperity (1932).[1][2] After Dressler's death in 1934, Moran's career declined, and she only starred in low-budget comedies or B-movies. In 1940, Moran retired to her home in Laguna Beach, California, but maintained an active Hollywood social life and was known for practical jokes. She once ran a failed campaign for a Laguna Beach City Council seat on a "Pro Dogs" platform.[3]

She made a brief comeback appearance in the Tracy-Hepburn classic comedy Adam's Rib in 1949. After playing the role, she said "I worked in the picture two days before I got a look at myself. I never went back."[4]




Honors[edit]

Moran has a star on the Hollywood Walk of Fame at 6300 Hollywood Boulevard.[5]

Personal life and death[edit]

After a marriage that ended in divorce in 1917, Moran married attorney and former prizefighter Martin T. Malone in 1933. Malone was abusive; he beat her and threatened to kill her, but she would not leave him.[6] She had one child, a son, who was adopted between her two marriages. She lived at 530 Mountain Road in Laguna Beach, California.[7] Moran died of cardiovascular disease in 1952. Although a number of biographies give Moran's date of death as being January 25, 1952, her grave marker reads January 24, 1952.

Partial filmography[edit]


Bornin Chicago, Illinois, USA
Diedin Los Angeles, California, USA  (heart ailment)
Birth NamePauline Theresa Moran
Height5' 4" (1.63 m)

Mini Bio (1)



She was one rowdy, no-holds-barred entertainer. Comedienne Polly Moran was considered second only to perhaps Louise Fazenda as Mack Sennett's funniest lady during her silent-era heyday. Born in 1883, Polly was made for vaudeville, touring all over the world, notably Europe. Sennett snapped her up in 1915 and she clowned around for him for several years in scores of his classic one- and two-reelers. At age 40 she, just by happenstance, paired up with, of all people, equally homely and down-to-earth Marie Dressler. The two scene-stealing man-chasers created comedy magic together as a cinematic MGM team, riotous in their eight films together including The Callahans and the Murphys (1927), their first, Chasing Rainbows (1930), Caught Short (1930), and Politics (1931). Sound was not quite the kick in the pants Polly had experienced in silents but she survived, trooper that she was, in both servile and dowager roles. By the 40s, however, she had been reduced to a smattering of bit parts. A small but showy role in Adam's Rib (1949) might have sparked a possible resurgence, but Polly died of heart problems into her 69th year before she was able to seize the moment.

- IMDb Mini Biography By: Gary Brumburgh / gr-home@pacbell.net

Spouse (2)

Martin T. Malone(1933 - 25 January 1952) (her death)
Bob Sandberg(11 March 1911 - 1917) (divorced)

Trivia (3)

She adopted a son in between marriages.
In his autobiography, John Meredyth Lucas remembered attending Pacific Military Academy with Polly's son Jack: "Jack was small, dark with black curly hair. Officially, he was Polly's adopted son, although gossip suggested he was her son by a black or Hispanic lover".
VoluptuVous figure.


Sunday, 28 June 2020

MUHAMMED AZAM 1653 JUNE 28 - 1707 JUNE 8



      MUHAMMED AZAM  1653 JUNE 28 - 1707 JUNE 8


Abu'l Faaiz Qutb-ud-Din Muhammad Azam
Abu'l Faaiz Qutb-ud-Din
 Muhammad Azam


அபுல் பைசு குத்புதீன் முகமது ஆசம் ஷா (Abu'l Faaiz Qutb-ud-Din Muhammad Azam) (28 சூன் 1653 – 8 சூன் 1707), பொதுவாக ஆசம் ஷா என அறியப்படும் அவுரங்கசீப்ப்பின் மூத்த மகன் ஆவார். ஆசம் ஷா 14 மார்ச் 1707 முதல் 8 சூன் 1707 முடிய முகலாயப் பேரரசை குறுகிய காலம் ஆண்டவர்.

முகமது ஆசம் ஷாவிற்கு, 12 ஆகஸ்டு 1681 அன்று, அவுரங்கசீப்பால் பட்டத்து இளவரசு பட்டம் சூட்டப்பட்டது.[2] இவர் பட்டத்து இளவரசராக இருந்த போது, தன் தாய் தில்ரஸ் பானு பேகத்தின் கல்லறையை, அவுரங்காபாத் நகரத்தில் பீபி கா மக்பாரா எனும் பெயரில் கட்டினார்.

ஆசம் ஷா, மால்வா, குஜராத், வங்காளம் மற்றும் தக்காணம் போன்ற முகலாயப் பேரரசின் மாகாணங்களின் ஆளுநராக இருந்தவர். 14 மார்ச் 1707 அன்று அவுரங்கசீப்பின் மறைவிற்குப் பின்னர் ஆசம் ஷா, அகமத்நகரில் முகலாயப் பேரரசராக முடிசூட்டிக்கொண்டார்.
BAHADUR SHAH I

ஆசம் ஷாவின் ஒன்றுவிட்ட சகோதரன் முதலாம் பகதூர் சா, ஆசம் ஷாவையும் அவரது மூன்று மகன்களையும் போரில் கொன்று 8 சூன் 1707 அன்று, தில்லியில் முகலாய அரசனாக முடிசூட்டிக் கொண்டார்..

Sunday, 10 May 2020

A.K.LOHIDASS ,MALAYALA DIRECTOR BORN 1954 MAY 10 - 2009 JUNE 28



A.K.LOHIDASS ,MALAYALA DIRECTOR
 BORN 1954 MAY 10 - 2009 JUNE 28


அ. க. லோகிததாசு (அம்பலத்தில் கருணாகரன் லோகிததாஸ்) அல்லது ஏ. கே. லோகிததாஸ் மலையாளத் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 1985ஆம் ஆண்டு 'சிந்து சாந்தம் ஆகி ஒழுகுனு' என்ற நாடகத்தின் மூலம் மாநில அரசு விருதோடு தன் கலை உலக வாழ்க்கையைத் துவங்கியவர்[1]. "தனியாவர்த்தனம்" படம் மூலம் திரைக்கதையாசி‌ரியர் ஆனார். இப்படத்தில் ஒரு சாதாரண மனிதன் சமூகத்தால் எப்படி மனநிலை தவறியவனாக ஆக்கப்படுகிறான் என்பதை தனது துல்லியமான திரைக்கதையால் காட்சிப்படுத்தியிருந்தார். இந்தத் திரைப்படம் மம்முட்டியின் திரை வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இவருடைய படைப்பில் வந்த சில படங்கள், எழுதாபுரங்கள், கிரீடம், முத்ரா, ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா, பரதம், கமலாதலம், தனம், தசரதம், செங்கோல், பூதக்கண்ணாடி, கண்மதம், காருண்யம், கஸ்தூரி மான், அரையன்னங்களுடவீடு, நைவேத்தியம் போன்றவையாகும்[2].

லோகிததாஸ் மற்றும் இயக்குநர் சிபிமலையில் இருவரும் இணைந்து பல மலையாளத் திரைப்படங்கள் படைத்துள்ளனர். சிபிமலையிலுடன் இவர் சேர்ந்து பணியாற்றிய 'கிரீடம்', 'பரதம்' என அனைத்துப் படங்களும் மிகவும் வெற்றி பெற்றவையாகும். இவர் இதுவரை தனது திரைக்கதைக்காக 14 முறையும், இயக்கத்திற்காக 4 முறையும் ஃபிலிம் கிரிட்டிக் விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் இவர் திலீப், மீரா ஜாஸ்மின், மஞ்சுவாரியர் என்று பல்வேறு திறமையாக கலைஞர்களை திரைப்படத் துறைக்கு அறிமுகப்படுத்தினார். இவர் கடைசியாக இயக்கிய ‘நைவேத்தியம்' திரைப்படம்கூட சிறந்த திரைப்படம், சிறந்த கதை ஆகிய பிரிவுகளில் விருதுகளைப் பெற்றது. தமிழில் இவர் கஸ்தூ‌ரிமான் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

லோகிததாஸ் மலையாளத்தின் முக்கியமான திரைக்கதையாசிரியர்களில் ஒருவர். எம்.டி.வாசுதேவன்நாயர் .பி.பத்மராஜன் ஆகியோருக்குப்பின் லோகிததாஸ் மலையாளத்தின் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர் எனப்படுகிறார். முழுபெயர் அம்பழத்தில் கருணாகரன் லோகிததாஸ் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள முரிங்ஙூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் லோகிததாஸ். எரணாகுளம் மகாராஜாஸ் காலேஜில் பட்டப்படிப்பு முடித்தபின் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் ஆய்வக உதவியாளர் படிப்பை முடித்தார். சிறிதுகாலம்டரசு மருத்துவமனை ஊழியராகப் பணியாற்றினார்.

ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதிவந்தார். மலையாள நாடக ஆசிரியரும் இடதுசாரி தலைவருமான தோப்பில் பாசி நடத்திவந்த கெ.பி.ஏ.சி (கேரளா பீப்பிள்ஸ் ஆர்ட் கிளப்) க்காக ஒரு நாடகத்தை 1986ல் லோகிததாஸ் எழுதினார். சிந்து அமைதியாக ஓடுகிறது (சிந்து சாய்தமாய் ஒழுகுந்நு) என்ற அந்நாடகம் பரவலாக கவனிப்பு பெற்றது. அதற்கு மாநில அரசின் சிறந்த நாடகத்துக்கான விருது கிடைத்தது. பிற்பாடு ‘ கடைசியில் வந்த விருந்தாளி (அவசானம் வந்த அதிதி) கனவு விதைத்தவர்கள் (ஸ்வப்னம் விதச்சவர்) போன்ற நாடகங்களையும் எழுதினார்.

நாடக நடிகராக இருந்து சினிமாவில் புகழ்பெற்றிருந்த திலகன் லோகித தாஸை சினிமாவுக்குக் கூட்டிவந்தார். சிபி மலையில் இயக்கிய தனியாவர்த்தனம் லோகிததாஸின் முதல் படம். ஒரு பாரம்பரிய நாயர் குடும்பத்தில் இருந்துவரும் மூடநம்பிக்கைக்குப் பலியாகும் பள்ளி ஆசிரியரைப்பற்றிய அந்தப்படம் மிகப்பரவலான கவனத்தைப்பெற்று லோகிததாஸை பிரபலப்படுத்தியது. 1997ல் பூதக்கண்ணாடி என்ற படத்தை லோகிததாஸ் இயக்கினார். இதுதான் இயக்குநராக அவரது முதல் முயற்சி. லோகிததாஸின் மனைவி பெயர் சிந்து, ஹரிகிருஷ்ணன் விஜயசங்கர் என்று இரு மகன்கள் இருக்கிறார்கள்.

படைப்புகள்

திரைக்கதை எழுதிய படங்கள்
1987 தனியாவர்த்தனம் 1987 எழுதாப்புறங்ஙள் 1988 குடும்பபுராணம் 1988 விசாரண 1988 முக்தி 1989 கிரீடம் 1989 ஜாதகம் 1989 தசரதம் 1989 முத்ர 1989 மஹாயானம் 1990 சஸ்னேகம் 1990 மாலயோகம் 1990 ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா 1990 குட்டேட்டன் 1991 தனம் 1991 பரதம் 1991 அமரம் 1991 கனல்காற்று 1992 வளையம் 1992 கமலதளம் 1992 ஆதாரம் 1992 கௌரவர் 1993 வெங்கலம் 1993 செங்கோல் 1993 வாத்ஸல்யம் 1994 சகோரம் 1994 சாகரம் சாட்சி 1995 ஸாதரம் 1996 சல்லாபம் 1996 தூவல்கொட்டாரம் 1997 பூதக்கண்ணாடி 1997 காருண்யம் 1998 ஓர்மசெப்பு 1998 கன்மதம் 1999 வீண்டும் சில வீட்டுகாரியங்ங்கள் 1999 அரயன்னங்ஙளுடே வீடு 2000 ஜோக்கர் 2001 சூத்ரதாரன் 2003 கஸ்தூரிமான் 2003 சக்ரம் 2006 சக்கரமுத்து 2007 நிவேத்யம்

இயக்கிய படங்கள்

1997 பூதக்கண்ணாடி 1997 காருண்யம் 1998 ஓர்மச்செப்பு 1998 கன்மதம் 2000 அரயன்னங்களுடே வீடு 2000 ஜோக்கர் 2001 சூத்ரதாரன் 2003 கஸ்தூரிமான் 2003 சக்ரம் 2005 கஸ்தூரிமான் [தமிழ்] 2006சக்கரமுத்து 2007 நைவேத்யம்

நடித்த படங்கள்
1992 ஆதாரம் 1999 வீண்டும் சில வீட்டுகாரியங்ங்கள் 2002 ஸ்டோப் வயலன்ஸ் 2005 தி காம்பஸ் 2005 உதயனாணு தாரம்

தயாரித்தபடம்
2005 கஸ்தூரிமான் [தமிழ்]

பாடல் எழுதிய படங்கள்
2000 ஜோக்கர். பாடல் ‘அழகே நீ பாடும்’ 2000 ஜோக்கர் ‘செம்மானம் பூத்தே’ 2003 கஸ்தூரிமான் ‘ராக்குயில்பாடி 2007 நிவேத்யம் ‘கோலக்குழல் விளி கேட்டுவோ

விருதுகள்

திரைக்கதைக்கான கேரள அரசு விருது தனியாவர்த்தனம் 1987 நல்ல திரைபப்டத்துக்கான கேரள அரசு விருது 1997 மிகச்சிறந்த அறிமுக இயக்குநர் படத்துக்கான தேசிய விருது பூதக்கண்ணாடி 1997

பிலிம் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் விருதுகள் - மிகச்சிறந்த திரைக்கதை
தனியாவர்த்தனம் [1987] தசரதம் [1989] கிரீடம் [1990] பரதம் [1991] செங்கோல் [1993] சகோரம் [1994] சல்லாபம் [1994] தூவல்கொட்டாரம் [1996] பூதக்கண்ணாடி [1997] ஓர்மச்செப்பு [1998] ஜோக்கர்[ 1999] வீண்டும் சில வீட்டுகாரியங்ஙகள் [2000] கஸ்தூரிமான் [2003] நிவேத்யம் [2007]

பிலிம் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் விருதுகள் - மிகச்சிறந்த திரைப்படம்
பூதக்கண்ணாடி [1997] ஜோக்கர்[ 1999] கஸ்தூரிமான் [2003] நிவேத்யம் [2007]

மறைவு
இவர் தன்னுடைய 55ஆம் வயதில் கொச்சியில் 2009 சூன் 28ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்[3]. இவருடைய மறைவிற்குப் பிறகு பல்வேறு திரைக்கலைஞர்கள் இவரைப் பற்றிக் கூறியவை:

சேரன்
"ஆட்டோகிராஃப் பார்த்துவிட்டு என்னிடம் நட்பாக நெருங்கினார் லோகி. வாழ்வின் அடித்தட்டு மக்களின் மேல் அவர் மிகவும் பரிவுகொண்டு இருந்தார். அவரது வெற்றி பெற்ற திரைக்கதைகளில் அந்தப் பரிவு பளிச்சென்று தெரியும். அவரோடு இணைந்து ஒரு படமாவது செய்ய வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. லோகிததாஸின் மரணம் மொழிகளைக் கடந்து படைப்பாளிகள் அத்தனை பேருக்குமான இழப்பு[1].

கமலகாசன்
இவர் முதல் படத்துக்குத் திரைக்கதை எழுதியதில் இருந்தே 'எனக்கொரு ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணிக் கொடுங்கள்' என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். போன மாதம்கூட 'சந்திப்போமா?' என்று கேட்டு போன் செய்தேன். 'வருகிறேன்' என்றார். சந்திக்காமலேயே விடைபெற்றுவிட்டார். லோகி என்னுடைய நண்பர் எனச் சொல்வது சரியில்லை. அவர் என் நெருங்கிய உறவினர்[1]



லோகித்தாஸ்: திரைப்படம் என் ஊடகமாக ஆனது மிகவும் பிந்தித்தான். முதன் முதலாய் நான் கண்டுகொண்ட ஊடகம் இலக்கியம். மிகச் சிறிய வயதிலேயே எழுத்துடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. சொல்லப்போனால் வாசிப்பை விடவும் முன்னதாகவே எழுத்து என்னிடம் வந்துவிட்டது.
ஒவ்வொரு குழந்தையும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முனைகிறது. தன் இருப்பை நிறுவிக்கொள்ள முனைகிறது. அதன் இயல்புக்கும் திறமைக்கும் அது வாழும் சூழலுக்கும் ஏற்ப ஒரு வழிமுறையைக் கண்டடைகிறது. இசை, விளையாட்டு, படிப்பு இப்படி நான் கண்டடைந்தது எழுத்தை. மிகச் சிறிய வயதிலேயே என் துக்கங்களையும் கண்ணீரையும் எழுதும் போது எனக்கு ஒரு அபூர்வமான வலிமை உருவாவதைக் கண்டுகொண்டேன். எழுதும் போது அந்த துக்கங்களை நான் வெல்வதுபோல. . . அவை என்னைத் தொடமுடியாது விலகுவது போல. . .


ஜெயமோகன்: உங்கள் இளமைப்பருவம் துயரம் மிக்கது என்று தெரியும்.
லோகித்தாஸ்: ஆமாம். . . சிறு வயதிலேயே தந்தை எங்களை விட்டுப் போனார். பசித்து அனாதையாக வளர்ந்தேன். உறவினர் வீடுகள் தோறும் மாறிமாறி தங்கி வாழ்ந்தேன். அப்போது எனக்கு எழுத்து பெரும் துணையாக இருந்தது. அடிப்படையில் நான் இலக்கியவாதி. இலக்கியம்தான் என் ஊடகம். என் இலக்கியத்திற்கு ஊடகமாக சினிமா உள்ளது.
அதே சமயம் எனக்கு வெறும் எழுத்தும் போதுமானதாக இருக்கவில்லை. எனக்கு நடிப்பில் ஆர்வம் இருந்தது. நான் எழுதுபவற்றையெல்லாம் இயல்பாகவே மனதுக்குள் நடித்துக்கொண்டிருந்தேன். மெல்ல நான் நடிப்பதற்குரியவகையில் எழுத ஆரம்பித்தேன். அவை நாடக வடிவுக்குப் பொருத்தமாக ஆயின. என் பதினெட்டு வயதில் முதல் நாடகத்தை எழுதினேன். இருபத்திரெண்டு வயதுக்குள் கேரளம் முழுக்க கவனிக்கப்பட்ட நாடக ஆசிரியரானேன். முதல் நாடகம் ‘சிந்து சாந்தமாய் ஒழுகுந்நு’ . அதன் பின்னர் திரைக்கதை எழுத வாய்ப்பு வந்தது.

1985இல் என் முதல் படம் ‘தனியாவர்த்தனம்’ வெளிவந்தது. சிபிமலையில் இயக்குநர். அது நாடகமாக என் மனதுக்குள் உருக்கொண்ட கரு. நான் நாடகத்தை ஒரு அடிப்படைக் கலையாகக் கருதுகிறேன். இலக்கியத்தை விடவும் ஏன் மொழியைவிடவும் புராதனமான கலை நடிப்பு. . . எல்லா உயிர்களும் நடிக்கின்றன. நடிப்பு மிக மிக அடிப்படையான ஒரு விஷயம். . .
ஜெயமோகன்: ஆமாம். ‘காட்ஸ் மஸ்ட் பி கிரேஸி’ படத்தில் புஷ்மேன் வகை மனிதர்கள் கூட  தங்கள் வேட்டை அனுபவங்களை நடித்துக் காண்பிக்கும் காட்சி இருந்தது. அவர்கள் மொழி இன்றும் மொழியாக ஆகாத வெறும் ஒலிதான். . .

லோகித்தாஸ்: எல்லாரும் நடிகர்கள்தான். வாயால் பேசுவதுபோல் நாம் ஒவ்வொரு கணமும் உடலாலும் பேசிக்கொண்டே இருக்கிறோம். நம் மனத்தில் ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறோம். வளர வளர உடல் பற்றிய பிரக்ஞை அதிகமாகிறது. அந்த சுய உணர்வு நடிப்புக்குத் தடையாக ஆகிறது. ஒன்று கவனித்திருக்கிறேன். புத்திசாலிகளைவிட சற்று மந்தமானவர்களை நடிக்க வைப்பது எளிது. இளம் வயதில் நடிப்பார்வம் அனைவரிடமும் இயல்பாக இருக்கிறது. குறிப்பாக பதின்பருவத்தினர் மிக தீவிரமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள்

ஜெயமோகன்: நாடகத்துக்கும் இலக்கியத்திற்குமான உறவு என்ன?
லோகித்தாஸ்:  நடிக்கப்படும் இலக்கியமே நாடகம். ஏதோ ஒரு காலத்தில் நடிப்பும் இலக்கியமும் ஒன்றாகவே இருந்திருக்க வேண்டும்....
ஜெயமோகன்: மீரா கதிரவன் மொழி பெயர்த்த ‘பெருவழியம்பலம்’ (பி.பத்மராஜன்) திரைக்கதைக்கான முன்னுரையில் பாலுமகேந்திரா ஒரு விஷயம் கூறுகிறார்: திரைக்கதை என்பது ஓர் இலக்கிய வடிவம் அல்ல, அது வாசிப்புக்கு உரியதல்ல.  இயக்குநருக்கான குறிப்புகள் மட்டும்தான் என்று. . .

லோகித்தாஸ்: அது ஒரு கோணம். நான் வாதாட விரும்பவில்லை. நான் கூறுவது என் கோணத்தை, என் வாசிப்பு மூலமும் படைப்பனுபவம் மூலமும் கிடைத்த அறிதலை. திரைக்கதை கண்டிப்பாக ஓர் இலக்கிய வடிவமே. வளர்ந்து வரும் இலக்கிய வடிவம் அது. திரைக்கதை இலக்கியமல்ல என்றால் நாடகமும் இலக்கியமில்லை அல்லவா? ஷேக்ஸ்பியர் படிப்பதற்காக எழுதவில்லை, நடிப்பதற்காகத்தானே எழுதினார். இசைப்பாடல்கள் (கீர்த்தனை) பாடப்படுவதற்காக எழுதப்படுகின்றன. அவையும் இலக்கியங்கள்தானே? இலக்கியம்தான் அடிப்படை.



ஜெயமோகன்: எனக்கு மிகப் பிடித்தமான இயக்குநர் இங்மர் பர்க்மான். அவரது ‘Sevanth Seal’   (ஏழாவது முத்திரை) திரைக்கதை மொழி சார்ந்தது அல்ல; காட்சிப் படிமங்களால் ஆனது. ஆனால் அதைப் படிக்கும்போது இலக்கியமாகவே அனுபவமாகிறது. நம் கற்பனையில் உண்மையில் அந்தப் படிமத்தையும்விட மகத்தான சினிமா ஒன்று விரிகிறது.



லோகித்தாஸ்: மனதால் நடித்து அகக்கண்ணால் கண்டு விரிவடையச் செய்ய முடிகிறது என்பதாலேயே நாடகம் மிகச்சிறந்த கலையாக ஆகிறது. நம் கண்முன் மனிதர்கள் வருகிறார்கள். வாழ்க்கையை நாம் நேரடியாகப் பாக்கிறோம். திரைக்கதையும் அப்படித்தான்.



ஜெயமோகன்: ஆனால் திரைக்கதை சினிமா ஊடகத்தின் தேவைக்கு உட்பட்டே இயங்க முடியும். அந்த எல்லைகள் அதற்குத் தடைதானே?



லோகித்தாஸ்: சரி, நாடகத்திற்கு அதன் வெளி (Space) பெரிய எல்லைதானே? அது ஒரு சதுரத்திற்குள் நடந்தாக வேண்டுமே? ஆனால் மிகப் பெரிய நாடகாசிரியர்கள் அந்த இயல்பையே அந்த வடிவத்தின் பலமாக மாற்றிக்கொண்டார்கள். ஒரு இடத்தில், ஒரு புள்ளியில் வாழ்வின் அனைத்து முரண்பாடுகளும் வந்துமோதித் துடிக்கும்படிச் செய்தார்கள். ‘நாடகாந்தம் கவித்துவம்’ என்ற சொல்லாட்சி உருவானதே.



அதே போன்றதே  திரைக்கதை. திரைக்கதை அனைத்தையும் காட்டியாக வேண்டும். அது யோசிக்க முடியாது. அது தியானிக்க முடியாது. அது ‘காட்ட’ வேண்டும். அதுவே அதன் பலம். வாழ்க்கையின் முரண்களை, புதிர்களை, துக்கங்களை, சந்தோஷங்களை மிகச் சிறந்த திரைக்கதையாசிரியர்கள் காட்டியிருக்கிறார்கள். திரைக்கதை எப்படி இலக்கியமாக ஆகிறது தெரியுமா? நாம் வாசிக்கும்போது நமது கற்பனையில்தான் அனைத்தும் நிகழ்கின்றன என்பதனால்தான்.



ஜெயமோகன்: இங்கே வரும் இந்த முரண்பாட்டுக்குக் காரணம் இதுதான். மலையாளத்தில் ஆரம்ப காலம் முதல் எழுத்தாளர்கள்தான் திரைக்கதை எழுதினார்கள். . . ஆரம்பகாலப் படமான ‘நீலக்குயில்’-க்கு உறூப் எழுதினார். தகழி சிவசங்கரப் பிள்ளை, வைக்கம் முகமது பஷீர், எஸ்.கே.பொற்றெகாட், பாறப்புறத்து மத்தாயி, செ.சுரேந்திரன் என்று மலையாள சினிமாவின் இயல்பை முதல்தரப் படைப்பாளிகள்தான் தீர்மானித்ததார்கள்.



லோகித்தாஸ்: கவனியுங்கள், இவர்கள் சினிமாவை மொழியை நோக்கிக் கொண்டு செல்லவில்லை. அதை ஒரு காட்சிக்கலையாக வளர்த்தெடுத்தார்கள். தோப்பில் பாசி, எஸ்.எல்.புரம் சதானந்தன், எம்டி.வாசுதேவன் நாயர், பி.பத்மராஜன் என்று இன்று வரை அந்த வரிசை நீள்கிறது. பத்மராஜனும் எம்.டி.யும் இலக்கியவாதிகளாக புகழ்பெற்ற பிறகு திரைக்கதை எழுத வந்தார்கள். மிக மிக காட்சித்தன்மை கொண்ட திரைக்கதைகள் அவர்கள் எழுதியவை. இலக்கியப் படைப்புகளாகவும் இன்றுஅவை அங்கீகாரம் பெற்றுள்ளன. இதேபோல இந்நூற்றாண்டு இலக்கியத்தை சினிமா போன்ற காட்சிக் கலைகளும் பெரிதும் பாதித்துள்ளன.



ஜெயமோகன்: ஒரு கதைக்கான தொடக்கம் எப்படி வருகிறது?



லோகித்தாஸ்: எப்படிஒரு சிறுகதைக்கு, ஒரு நாவலுக்கு, ஒரு ஓவியத்திற்கு தொடக்கம் வருகிறதோ அப்படி. ஒருபோதும் ஒரு கலைப் படைப்பு யோசித்து திட்டமிட்டு உருவாக்கப்படுவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். மனதில் ஒரு மின்னல் போல ஒரு தூண்டல் ஏற்படுகிறது. அவ்வளவுதான் சொல்லமுடியும்.



என்னுடைய அனுபவம் இப்படி. அது மழை கறுத்து இருண்டு மூடி நிற்பதைப்போல. இதோ பெய்யும் என்று தோன்றும். சில சமயம் பெய்யாமலேயே போகும். எப்போது, ஏன் பெய்கிறது என்று கூறவே முடியாது. ஒரு கணத்தில் சட்டென்று ஆரம்பித்து விடுகிறது. முதலில் துளிகள். பிறகு பெருமழை.



ஜெயமோகன்: திரைக்கதையின் தொடக்கம் எப்போதும் ஒரு கதாபாத்திரம்தான் என்று கூறப்படுவது உண்டு.



லோகித்தாஸ்: கண்டிப்பாக, அது முக்கியம்தான். ஒரு நாடகம் அல்லது திரைக்கதை என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. யாருடைய வாழ்க்கை என்ற கேள்வி உடனே முளைத்துவிடுகிறது. ஆகவே கதாபாத்திரம் என்பது திரைக்கதையின் முக்கியமான தொடக்கப்புள்ளி. அதே சமயம் ஒரு முரண்பாட்டு முனை, ஒரு அடிப்படையான கேள்விகூட திரைக்கதையின் தொடக்கமாக இருக்க முடியும்.  ‘தனியாவர்த்தனம்’, ‘கிரீடம்’ போன்ற திரைக்கதைகளில் மையக் கதாபாத்திரம்தான் தொடக்கம்.  ‘பாதேயம்’, ‘எழுதாப்புரங்கள்’  போன்றவற்றுக்கு மைய முரண்தான் தொடக்கம்.



ஜெயமோகன்: எப்போதாவதுஒரு கருத்து அல்லது ஒரு அவதானிப்பு அப்படி தொடக்கமாக அமைந்ததுண்டா?





லோகித்தாஸ்: அபூர்வமாக அப்படி அமையலாம். என்னுடைய திரைக்கதைகளில் ‘ஜாதகம்’ அப்படிப்பட்டது. சோதிட நம்பிக்கை பற்றிய ஒரு விமரிசனம் அது. இன்னொரு விஷயம் உண்டு. ஒரு திரைக்கதை ஏதேனும் வடிவில் தொடங்குவதற்கு வெகுகாலம் முன்பே அதன் விதை நம் மனதுக்குள் விழுந்துவிடுகிறது. அங்கே அது முளைத்து தன் இருப்பைத் தெரிவிக்கிறது. படைப்புக்கான தவிப்பு அல்லது நிம்மதியின்மைஅங்கேயே தொடங்கிவிடுகிறது. உண்மையான தொடக்கம் அதுதான்.




உதாரணமாக, நான் இயக்கிய முதல் படமான ‘பூதக்கண்ணாடி’, சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதைப் பற்றிய செய்தி ஒன்று என் மனதுக்குள் எப்போதோ புகுந்தது. நாட்கணக்கில் அது என்னைத் தொந்தரவு செய்தது. குறிப்பாக ஒரு ·போட்டோ. பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான ஒரு சிறுமியின் புத்தகப் பையின் படம் அது. புத்தகங்கள் சிதறி, சோற்று டப்பா திறந்து சிந்தி. . . அந்த அவஸ்தை என்னில் எச்சம் கொண்டபோது நான் கண்டுகொண்டேன், அச்சம்பவத்தை நான் ஒரு தந்தையின் கண்ணால்தான் பார்க்கிறேன் என்று!



அந்தக் கோணத்தை வெளிப்படுத்தும் ஒரு கதாபாத்திரமாக வித்யாதரன் உருவாகி வந்தான். அவனுக்கு சமகால வாழ்க்கையைப் பற்றி பதற்றமும் பயமும் அதிகம். ஆனால் அவன் ஒன்றும் சொல்வதில்லை. மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த கோழை அவன். ஆகவே அவன் மனம் சிதைகிறது. பிறக்கிறது. அவனுடைய பார்வைகள் வழியாக அந்தப் பிரச்சினையை நான் ஆராய்ந்தேன்.



ஜெயமோகன்: நான் ஒரு நாவல் எழுதினால் முழு வேகத்துடன் அதை எழுதிவிடுவேன். பிறகுதான் அதை என் எடிட்டர்களுடன் விவாதிப்பேன். ஆனால் இங்கே திரைக்கதைகள் கரு நிலையிலேயே விவாதிக்கப்படுகின்றன. படிப்படியாக உருவாக்கப்படுகின்றன.



லோகித்தாஸ்: என்னுடைய திரைக்கதைகள் நீங்கள் நாவல் எழுதுவதுபோலவே உருவாக்கப்படுகின்றன. நான் எப்போதும் விவாதிப்பதைத் தவிர்ப்பவன். எழுதிய பிறகு இயக்குநரிடம், நடிகர்களிடம் விவாதிப்பேன். கதைக்கருவை விவாதித்து உருவாக்கவோ வளர்க்கவோ முடியாது. அது செயற்கையான கஆதையைத்தான் உருவாக்கும்.



ஜெயமோகன்: எப்போதாவது விவாதித்திருக்கிறீர்களா?



லோகித்தாஸ்: ஒரு முறை முயன்று பார்த்தேன்.  ‘விசாரணை’ என்ற என் திரைக்கதை ஓர் இடத்தில் முட்டி முனனகராமல் நின்றுவிட்டது. ஒரு விஷயம் தெரிந்தது. கதை விவாதத்தில் அதுதான் முக்கியமான சிக்கல். நாம் ஒரு கருவைச் சொலும்போது அது கேட்பவர்களில் ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு வகையான உணர்வுகளையும் எண்ணங்களையும் உருவாக்குகின்றது. அதன் பிறகு விவாதம் என்பது கண்ணைக் கட்டிக் கொண்டு சண்டை போடுவது போலத்தான். அந்தக் கருவை நான் முழுமையாக உணர்வுரீதியாகவும் கதையளவிலும் விரிவுபடுத்தி முன்வைத்தால்தான் என் தரப்பு அவர்களிடம் போய்ச்சேரமுடியும். திரைக்கதையின் சில தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றி மட்டுமே நாம் பிறரிடம் விவாதிக்க முடியும்.



ஜெயமோகன்: ஆனால் இங்கே தமிழில் இன்னும் விவாதம் மூலமே உருவாகிறது.



லோகித்தாஸ்: இங்கே சினிமா பல்வேறு கேளிக்கைகளை ஒரு விஷயத்திற்குள் இணைக்க முயல்வதாகவே உள்ளது. திரைக்கதை அவையனைத்தையும் இணைக்கும் ஓர் அமைப்பு. அதைப் படிப்படியாக விவாதித்து உருவாக்கலாம். அதற்கு சில வழிமுறைகள் உருவாகியும் உள்ளன. கதையின் ஆன்மாவை அப்படி விவாதித்து உருவாக்கிவிட முடியாது. இதில் எனக்கு சந்தேகமே இல்லை. விவாதிக்கிறார்கள் என்று வைப்போம். ஆனால் அவை ஒரே உணர்ச்சியால், ஒரு பார்வையால் இணைக்கப்பட்டிருக்காது. திரைக்கதையில் ஒருமை இருக்காது.



ஜெயமோகன்: பூதக்கண்ணாடி பற்றி சொன்னீர்கள். அந்தப் படத்தில் அந்தப் படிமம் மிகவும் புகழ்பெற்றது. வாட்ச் ரிப்பேர் பார்க்கும் வித்யாதரன் ஒரு கண்ணில் பூதக்கண்ணாடி அணிந்திருக்கிறான். மறு கண் சாதாரணம். இரு பார்வையும் அவனிடம் உள்ளது. படிமங்களை நீங்கள் எப்படித் தேர்வு செய்கிறீர்கள். . .



லோகித்தாஸ்: நான் பொதுவான படிமங்களைத் தனித்து நிற்கும்படி பயன்படுத்துபவனல்ல. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. திரைக்கதையில், காட்சியமைப்பில் வெளியே இருந்து ‘செலுத்தப்படும்’ படிமங்கள் படைப்பை பலவீனமாக்குகின்றன. பூதக்கண்ணாடி எடுக்க கதை எழுதிக் கொண்டிருந்த நாட்களில் நான் ஒரு முறை ஒரு வாட்ச் ரிப்பேர் கடைக்குள் மழைக்கு ஒதுங்கினேன். அங்கே வாட்ச் ரிப்பேர் செய்பவர் வேலை செய்தபடியே என்னிடம் பேசினார். சட்டென்று அவர் நிமிர்ந்து என்னைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது. சகஜ வாழ்வைப் பார்க்கும் ஒரு கண். அதிநுண்ணிய உலகைப் பார்க்கும் இன்னொரு கண். அதுதான் வித்யாதரனின் இயல்பு என்று பட்டது.



அதேசமயம் அந்தப் படிமத்தை நான் திணிக்கவில்லை. வாட்ச் ரிப்பேர் செய்வது வித்யாதரனின் தொழில், அவ்வளவுதான். நீங்கள் மேலதிகக் குறியீட்டு அர்த்தங்களை அளிக்காவிட்டால் அது ஒரு தகவல் மட்டுமே. பூதக்கண்ணாடி படத்தில் வித்யாதரன் சாலையில் போகும்போது வழிமறிக்கும் அந்தப் பாம்பு குறியீடாக பெரிதும் விவாதிக்கப்பட்டது. அது வேண்டுமென்றால் காமத்தின் குறியீடு என கொள்ளலாம். வித்யாதரனின் ஒடுக்கப்பட்ட காமத்தை அது குறிக்கிறது எனலாம்.  ஆனால்அப்படி பொருள் தராதவர்களைப் பொறுத்தமட்டில் அது சாதாரணமான பாம்பு. அவனுடைய பயங்கொள்ளித் தனத்தைக் காட்டுவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு கதாபாத்திரம். ஒரு சினிமாவில் எல்லாமே குறியீடுதான். ஆகவே குறியீடாக தனியாக ஏதும் இருக்கக்கூடாது.


ஜெயமோகன்: ஏன்?



லோகித்தாஸ்: ஏனெனில் காட்சிக் கலை என்பது நேரடியாக மனதைப் பாதிக்கும்  ஊடகம். சிந்தனையை பாதித்து அதன் வழியாக மனதை பாதிப்பதல்ல அது. மனதைக் கவர்ந்து அதன் வழியாகச் சிந்தனையைப் பாதிப்பது. எந்த காட்சிக்கலையானாலும் அது நம் கண்ணையும் கருத்தையும் கவர்கிறது. நம்மை அதில் ஆழ்ந்து போக வைக்கிறது. ஆகவேதான் காட்சிக்கலை என்பது எல்லா காலத்திலும் எளிய மக்களின் ஊடகமாக இருந்து வந்துள்ளது. அது தேர்வு செய்யப்பட்ட சிறுபான்மையினருக்கு உரியதல்ல. அறிஞர்களுக்கும் பயிற்சி உடையவர்களுக்கும் உரியதல்ல. காட்சிக்கலையில்  அம்மாதிரி செயற்கையான படிமங்களைப் புகுத்தினால் அனுபவத்தில் ஒருமை

சிதறும். அதில் ரசிகன் ஈடுபட முடியாமலாகும்.



நான் யாருக்காக்க் கதை சொல்கிறேன்? சாயங்காலம் வேலை முடிந்து கைகால்களை சேறு போகக் கழுவி மண்வெட்டியைச் சாத்திவிட்டு வந்து அமரும் விவசாயிக்காக. அவனுடைய அறிவுத்திறன் குறைவு என்றோ அவனுடைய ரசனை பழுதுபட்டது என்றோ நான் நம்பவில்லை. அவனுடைய அற உணர்வு நம் அனைவருடைய அற உணர்வை விடவும் எவ்வளவோ மடங்கு மேலானது. அவனை நம்பி நான் கதை சொல்கிறேன். நான் இன்று வரை தரக்குறைவான எதையும் எழுதியதில்லை. என் படங்கள் அடைந்து வரும் தொடர்வெற்றி அவன் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையைத்தான் உறுதிப்படுத்துகிறது.


ஜெயமோகன்: கோடிக்கணக்கான மக்கள் பார்த்து ரசிக்கும் வணிகப் படங்கள்தான் நல்ல படங்களா?



லோகித்தாஸ்: இல்லை. நான் என் மதிப்பீடுகளில் ஒன்றைத்தான் சொல்லியிருக்கிறேன். ‘வினோதம் + வித்யாப்பியாசம்’  (கேளிக்கை, கற்பித்தல்) நம்மை ஈர்த்து தன்னில் ஈடுபட வைக்கவேண்டிய வலிமை கலைக்கு இருந்தாக வேண்டும். இது முதல் தேவை அடுத்தபடியாக அதற்கு கற்பிக்கும் பண்பு இருக்க வேண்டும். மூளைக்குக் கற்பித்தலைச் சொல்லவில்லை, ஆத்மாவுக்குக் கற்பித்தலைப் பற்றி சொல்கிறேன்.



நல்ல கலையின் நோக்கமே மனதைப் பண்படுத்துவதுதான். நம்மை ஈர்த்து ஆழமான அனுபவத்தை அளித்து நம்மை மேம்படுத்துவது எதுவோ அதுவே சிறந்த கலை. கலையனுபவம் உருவாவதில்லை. அறிவு சார்ந்த அனுபவம் மட்டுமே உருவாகிறது. அம்மாதிரி பரிசோதனை முயற்சிகளை நான் குறைகூற மாட்டேன். அதெல்லாம் தேவைதான். பரிசோதனைகள்தான் பல புதிய சாத்தியங்களைத் திறக்கின்றன. ஆனால் கலை ரசிக்கப்படும் விதம் எப்போதும் ஒன்றுதான்.


ஜெயமோகன்: அது என்ன?



லோகித்தாஸ்: இந்த நிமிடம் தமிழகம் முழுக்க எத்தனை திரையரங்குகளில் எத்தனை லட்சம் மக்கள் தங்களை மறந்து ஒருவருக்கொருவர் ஒன்றாகி, ஒரே மனதாக அமர்ந்திருக்கிறார்கள். எத்தனை மகத்தான விஷயம் அது. ஒரு நல்ல சினிமா அவனை மன உச்சங்களுக்கு கொண்டு செல்கிறது. அங்கே அவன் நீதியை, அழகை மட்டுமே நாடுகிறான்.



திரையரங்கில் ரசிகனின் மனம் கருணையால் நிரம்பியிருக்கிறது. பெருந்தன்மையால் விரிந்திருக்கிறது. உயர்ந்த விஷயங்களுடன் அவன் சட்டென்று இணைந்து கொள்கிறான்.  நல்லவர்களுடன் தன்னை அடையாளம் காண்கிறான். சிறிய அநீதியைக்கூட அவன் அங்கே ஏற்பதில்லை. ஒரு குற்றவாளி தண்டிக்கப்படாமல் விடப்பட்டால் அந்தப் படம் ஓடாது.



கவனியுங்கள், அங்கே வந்து அமர்ந்திருப்பவர்கள் எல்லாரும் யோக்கியமானவர்கள் அல்ல. அவர்களுள் மோசடிக்காரர்கள், குற்றவாளிகள், கோழைகள் இருக்கலாம். அங்கே அந்த இருளில் அவர்களின் மனங்கள் உருகி, ஒன்றாகி, உச்சம் நோக்கி நகர்கின்றன. அது பெரிய தியானம். சினிமாவை இகழும் அறிவுஜீவிகள் நம் சமூக மனத்திற்கு சினிமா அளிக்கும் இந்தப் பெரும் பங்களிப்பைப் பற்றி அறிவதில்லை.



ஜெயமோகன்: அப்படியானால் சினிமா மீண்டும் மீண்டும் நீதியை, கருணையை, அன்பைப் பற்றித்தானே பேச முடியும்?



லோகித்தாஸ்: அதைப்பற்றித் மட்டும்தான் பேசவேண்டும். பல நூற்றாண்டுகளாக அதைப் பற்றித்தான் பேசி வந்திருக்கிறது. இனியும் அதைப் பற்றித்தான் பேசும். ஏனென்றால் நீதியும் கருணையும் அறமும் மனிதனின் அடிப்படை இயல்புகள் அல்ல. மனிதனுக்குள் இருப்பது காமமும் குரோதமும் போகமும் மட்டும்தான். இடைவிடாமல் ஒவ்வொரு கணமும் வலியுறுத்திக் கொண்டிருந்தால் மட்டும்தான் மனிதனின் பண்பாட்டின் அடிப்படைகளான நல்லுணர்வுகள் நிற்க முடியும்.



ஒரு போர் அல்லது பஞ்சம் வந்தால் எத்தனை சீக்கிரம் இந்த உணர்வுகள் அழிந்து, மிருகம் வெளிவருகிறது என்று பாருங்கள். எத்தனை சீக்கிரமாக மனிதனைக் கட்டவிழ்த்துவிட்டுவிட முடிகிறது! ஆகவே கலைஞன் மீண்டும் மீண்டும் அறம், கருணை, அன்பு என்று கூறிக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது.



இலக்கியமும் நாடகக் கலையும் உருவாக்கும் உலகம் என்பது என்ன? கருணையும் அறமும் மேலோங்கிய ஒரு கற்பனை உலகம். அதை நிஜம் போல அவை நிகழ்த்திக் காட்டுகின்றன. இந்த மூர்க்கமான உலகிலிருந்து மக்களை சில மணி நேரம் அங்கே போய் வாழ வைக்கின்றன. அதன் மூலம் அவனை மகிழ்விக்கின்றன. அவனை இளைப்பாற்றுகின்றன. நம்பிக்கையூட்டுகன்றன



இப்படிப் பார்க்கும்போது நல்ல சினிமாவுக்கும் மோசமான சினிமாவுக்கும் இடையேயான வேறுபாடு தெளிவாகிறது. நல்ல சினிமா மனிதனுக்குள் அவன் இயல்பில் இல்லாத நல்லுணர்வுகளை உருவாக்க முயல்கிறது. அதற்கு தன் கலையைப் பயன்படுத்துகிறது. அது உருவாக்குவதே தியான நிலை. மாறாக மோசமான சினிமா மனித மனதில் உறையும் இயல்பான மிருக உணர்வுகளைத் தூண்டுகிறது. அது உருவாக்கும் ஈர்ப்பு நேர் எதிரானது. அது தியான நிலையை உருவாக்குவதில்லை. அது உருவாக்குவது கொந்தளிப்பைத்தான்.
ஜெயமோகன்: இப்படி யோசித்துப் பார்ப்போம். . . உங்கள் கோணத்தில் பார்த்தால் உயரிய உணர்வுகளை உருவாக்கும் நோக்கம் கலைக்கு இருக்கவேண்டும். ஏன் இன்னொருவர் இப்படி யோசிக்கக்கூடாது? அவருக்கு அப்படிப்பட்ட நோக்கம் ஏதும் இல்லை. உண்மையை, யதார்த்தத்தை முன்வைப்பது மட்டுமே அவரது படைப்பியக்கத்தின் நோக்கம். . .



லோகித்தாஸ்: உண்மையும் யதார்த்தமும் பலவிதமானவை. முடிவே இல்லாதவை. அவற்றில் சிலவற்றை மட்டும் தேர்வு செய்து ஒருவர் முன்வைக்கிறார் என்றால் அதன் நோக்கம்தான் அங்கே முக்கியம். உயர்ந்த கலையை உருவாக்க முடியாதவர்களின் சமாதானம் அல்லது சப்பைகட்டுதான் இது.


ஜெயமோகன்: நீங்கள் கூறுவதுபோல ஒரு நோக்கம் இருக்கும்போது கலைக்கு ஒருமை உருவாகிறது. ஆனால் ஒருமையை மறுக்கக்கூடிய சிதைவை, முன்வைக்கக்கூடிய கலைப் படைப்புகள் உள்ளன.



லோகித்தாஸ்: அத்தகைய படைப்புகளை நான் ஏற்கவில்லை. இலக்கியத்தில் நேர்ந்த சிறு வட்டத்தில் அவை அதிர்வுகளை உருவாக்கலாம். சினிமா போன்ற பெரிய கலைவடிவில் அவை வெறும் சலசலப்பாக மட்டுமே முடியும். கலைஞனின் நோக்கமும் கலைப் படைப்பின் விளைவும் மிக மிக முக்கியமானவை.



ஜெயமோகன்: ஆனாலும் கலைஞர்களில் இருவகை உண்டு. சமன் குலைலக்கும் கலைஞர்கள் சால்வதார் டாலி போல, விளாடிமிர் நபக்கோவ் போல, சமன் உருவாக்கும் கலைஞர்கள் டால்ஸ்டாய் போல….



லோகித்தாஸ்: சமன் குலைப்பதை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை நோக்கியே செய்ய முடியும். டால்ஸ்டாய் இன்றும் உயிர்வாழ்கிறார். மேலான கலை உருவாக்குவது சமன்தான். ஒரு நல்ல கச்சேரி கேட்டு வெளியே வந்தால் மனம் சட்டென்று கோபப்பட முடியாது. மனம் சாந்தியடைகிறது. இது முன்பே கூறப்பட்ட விஷயம்தான். ரசங்கள் ஒன்பது. பிற அத்தனை ரசங்களும் சரியாக இணைந்தால் உருவாகும் ரசம் கடைசி ரசமான ‘சாந்தம்’தான். எல்லா ரசங்களும் அலையடிக்கும் மகாபாரதம் சாந்த ரசத்தை உருவாக்கும் இதிகாசம்.



ஜெயமோகன்: உங்கள் எழுத்தில் மகாபாரதம் உருவாக்கிய பாதிப்பு என்ன?



லோகித்தாஸ்: இரு இதிகாசங்களும்தான் என் கற்பனைக்கான அடிப்படை. மகா பாரதத்தில் ஒரு துளி போதும் எனக்கு ஒரு கதையை உருவாக்கமுடியும். மகாபாரதம் கடல். ஆகவே எனக்கு கதைகளுக்குப் பஞ்சமே இல்லை. முன்பு என் கதைகளுக்கு என்ன மூலம் என்ற சர்ச்சை வந்தது. ஒரு கதாபிரசங்கக்காரர் அவரது கதையை நான் திருடி விட்டதாகச் சொல்லி நீதி மன்றம் போனார். நான் நீதிமன்ற மேடையில் நின்று அக்கதையின் மகாபாரத மூலவடிவைச் சொன்னேன்.



ஜெயமோகன்: சரி, ஒரு நேரடியான கேள்வி. நடிகர்களுக்காக நீங்கள் கதை எழுதியதுண்டா?



லோகித்தாஸ்: இல்லை. அதே சமயம் கதா பாத்திரங்களுக்கு நடிகர்கள் மனதில் தெரிவது, ஒருவரை உத்தேசித்து எழுதுவது மிகவும் வசதியானது. ஒன்று படமாக்கும்போது பிரச்சினை இருக்காது. இரண்டாவதாக ஒரு மனித உடல், ஒரு முகம் நம் முன் தெரிகிறது. அது மிகவும் திட்டவட்டமானது.



ஜெயமோகன்: நீங்கள்  திரைக்கதையாசிரியர். வெற்றிகரமானவர். எப்போது, ஏன் இயக்குநராக வேண்டுமென்று தோன்றியது?



லோகித்தாஸ்: இயக்குநர் ஒரு படத்தின் தலைவர். ஒருங்கிணைப்பாளர். திரைக்கதையாளன் உருவாக்கும் சட்டகத்தை நிரப்புபவர். அந்த இடம் அனைவராலும் விரும்பப்படுவதாகவே இருக்கும். என் திரைக்கதைகளை என் விருப்பப்படி படமாக்க விரும்பினேன்.



ஜெயமோகன்: நீங்கள் அடிப்படையில் ஒரு திரைக்கதையாசிரியர்.  உங்களால் தொழில் நுட்ப ரீதியாக இயக்குநராக ஏதேனும் சிரமம் இருந்ததா?



லோகித்தாஸ்: இயக்குநர் வேலை என்பது அந்த அளவுக்கு தொழில்நுட்ப வேலை அல்ல. அது அதிகமும் நிர்வாக ஒருங்கிணைப்பு சார்ந்த வேலை. பலரிடமிருந்து வேலைகளைப் பெற்றுக்கொள்வது. அதற்கும் மேலாக உள்ள மூன்று விஷயங்கள் நடிப்பை வெளிக்கொணர்வது, காட்சிக் கோணங்களை அமைப்பது, காட்சிகளை வெட்டித் தொகுக்கும் பிரக்ஞையுடன் இருப்பது. இது மூன்றும் திரைக்கதை ஆசிரியனிடமும் இருந்தாக வேண்டும். நல்ல திரைக்கதையாசிரியன் உள்ளூர நல்லநடிகனாக, நல்ல காட்சியமைப்பாளனாக இருப்பான். கதையை வெட்டித் தொகுப்பது எந்த எழுத்தாளனிடமும் இயல்பாக இருக்கும் பிரக்ஞைதான்.



ஜெயமோகன்:  திரைக்கதையை வசனத்துடன் சேர்த்து எழுதக் கூடாது என்கிறார்களே. அப்படி எழுதினால் காட்சியமைப்புக்கு இடமில்லாமல் போய்விடும் என்கிறார்களே. . .



லோகித்தாஸ்: அது சரியல்ல. ஒரு சினிமவில் வசனமும் காட்சியும் ஒன்றையொன்று நிரப்புகின்றன. ஆகவே அதை உருவாக்கும்போதே முழுமையாக எழுதிவிடுவதே நல்லது. அப்போதுதான் சரளமான ஓட்டம் இருக்கும். சிலர் ஒரு கதையோட்டத்தை மட்டும் எழுதிவிட்டு அவ்வப்போது வசனத்தை எழுதுகிறார்கள். அப்போது வசனம் இயல்பாக, திரைக்கதையின் ஒரு பகுதியாக இருக்காது. திரைக்கதை ஒரு இலக்கியப் படைப்பு. இலக்கியமாகவே அது எழுதப்படவேண்டும்.



ஜெயமோகன்: இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் பல வகையான கதை சொல்லும் முறைகள் உள்ளன. யதார்த்தவாதம், மிகுபுனைவு, ஆவணப்பதிவு என்றெல்லாம் நான் எல்லாவற்றையும் மாறி மாறிப் பயன்படுத்துகிறேன். ஆனால் சினிமாவில் இன்றும் ஒரே கூறுமுறைதான். யதார்த்தவாத அணுகுமுறை. சமீபத்தில் ஈரானியப் படங்களைப் பார்க்கும்போது யுபை சைக்கிள் தீவ்ஸ்ருன் அதே அழகியல்தான் இன்றும் உள்ளது. வெவ்வேறு கூறுமுறைகள் ஏன் இன்னும் சினிமாவில் பிரபலமாகவில்லை?



லோகித்தாஸ்: சினிமாவிலும் ·பாண்டஸி, ஆவணமுறை போன்றவை உள்ளன. அவை யதார்த்தவாத கூறுமுறையின் ஒரு பகுதியாகவே உள்ளன. ஏன் என்று யோசித்தால் கிடைக்கும் விடைதான், சினிமா வெகுஜனக் கலை. இங்குள்ள ஒரு சிறிய மாறுதல்கூட மொத்த சமூகத்தில் ஏற்படும் ஒரு உளவியல் மாற்றத்தின் விளைவுதான். சினிமா தன் விருப்பப்படி மாற முடியாது. கூடவே மக்களும் மாறவேண்டும். ஒரு தரப்பு இன்னொன்றை பாதித்து இருவரும் சேர்ந்து மாற வேண்டும்.



இன்று மக்கள் யதார்த்த வாழ்வை சினிமாவில் காண விரும்புகிறார்கள். சொல்லப்போனால் யதார்த்த உணர்வு வலிமை பெற்றே வருகிறது. ஆரம்ப காலத்தில் இருந்த ·பாண்டஸி அம்சம்கூட இன்று சினிமாவில் இல்லை. ஏன் வெகுஜன எழுத்திலும் யதார்த்தவாதம்தானே உள்ளது. மக்கள் தங்கள் வாழ்வைப் போன்ற ஒன்றை திரையில் காணும்போதுதான் அதனுடன் ஐக்கியமாகிறார்கள்.



ஜெயமோகன்: உங்கள் இளமைப்பருவம் கேரளத்தில் இடதுசாரி தீவிரவாதம் தோன்றி வீழ்ந்த காலகட்டம். ஏராளமான எழுத்தாளர்களும் கலைஞர்களும் அதன் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். நீங்கள் அதனால் பாதிப்பு அடைவில்லையா?



லோகித்தாஸ்: கட்சி அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லை. உண்மையான அரசியலில் ஆர்வம் உண்டு. அது கருத்துக்களின், அதிகாரத்தின் அரசியல். அப்படிப்பட்ட அரசியலை ஒரு படத்தில் எழுத திட்டம் உள்ளது. பொதுவாக என் கவனம் எப்படியோ சமூகத்திடம் மோதி அன்னியமாகும் தனிமனிதர்களின் அவலத்திலேயே உள்ளது. இது என் இயல்பு சார்ந்ததாக இருக்கலாம்.



ஜெயமோகன்: நீங்கள் ஏன் ஓர் அரசியல் படம்கூட எடுக்கவில்லை? சொல்லப்போனால் உங்கள் படத்தில் அரசியலே இல்லை.



லோகித்தாஸ்: நான் எழுதவிருப்பது அதைப் பற்றித்தான். அந்தக் காலகட்டம் என்னிலும் அழுத்தமான சுவடுகளை விட்டுச் சென்றுள்ளது. அவற்றை என் கோணத்தில் பரிசீலிக்க விரும்புகிறேன்.



ஜெயமோகன்: வணிகப் படங்களைப் பார்ப்பீர்களா?



லோகித்தாஸ்: எல்லா நல்ல படங்களையும் பார்ப்பேன். திரைப்படம் என்னுடைய ஊடகம். அதன் மீது எனக்கு மோகம் உண்டு. கலைப்படம், கமர்ஷியல் படம் என்ற பிரிவினையே இல்லை. அது ஒரு காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. கமர்ஷியல் நோக்குடன் எடுக்கப்படும் படங்களில் பத்துக்கு ஒன்பது படங்கள் தோல்விப்படங்கள்தான். அப்படியானால் எப்படி அவற்றை கமர்ஷியல் படம் என்கிறீர்கள்? கலைப்படங்களுக்கு கமர்ஷியல் நோக்கமே இல்லையா என்ன? இரு வகையிலும் சில மாடல்களையும் ·பார்முலாக்களையும் வைத்திருக்கிறார்கள். அதையே பெரும்பாலானவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். கமர்ஷியல் படமென்றால் பாட்டு, சண்டை, கதாநாயகனின் வீரதீர பிரதாபங்கள், கலைப்படமென்றால் இருட்டு, மந்தத்தன்மை.



ஜெயமோகன்: பள்ளிக்கூடத்தில் சினிமாவைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறதே?



லோகித்தாஸ்: கற்றுக்கொடுக்கலாம். ஆனால் முதலில் பள்ளிக்கூடத்தில் கற்பனையைக் கற்றுக் கொடுக்க வேண்டும். எல்லா கலைகளுக்கும் அடிப்படை கற்பனை. இங்கே நம் கல்வியின் பிரச்சினை சினிமாக் கல்வி இல்லாமையோ இசைக்கல்வி இல்லாமையோ அல்ல. கற்பனை இலலாமைதான். சில சமயம் சிந்திக்கக் கற்றுக் கொடுக்கிறோம். கற்பனை இல்லாதபோது கலைகள் ரசிப்பதற்கான இயல்பே இல்லாமல் போய்விடுகிறது. சினிமாவுக்கு மட்டுமா ரசனை தேவை? இசைக்கு, ஓவியத்திற்கு? நம் கல்வி அமைப்புகளில் கற்றுத் தேறியவர்களில் எத்தனை பேருக்கு அத்தகைய ரசனை உள்ளது?



இங்கே ரசனை உள்ளவர்கள் சுயமாகவே அதை அடைந்தார்கள். தங்கள் உழைப்பால் அதை வளர்த்துக் கொண்டார்கள். இலக்கிய வாசகர்களும் சினிமா ரசிகர்களும் எல்லாம் அப்படித்தான். நமது கல்விமுறையில் கற்பனை இல்லாமலிருப்பதனால் அது உலர்ந்து, வறண்டு காணப்படுகிறது. அதில் கருணைக்கும் கனிவுக்கும் இடமில்லாமல் இருக்கிறது. இதுதான் இன்றுள்ள முக்கியமான பிரச்சினை என்று நான் நினைக்கிறேன்.



ஜெயமோகன்: மலையாள சினிமாவில் உங்களுக்குப் பிடித்த இயக்குநர் யார்? திரைக்கதையாசிரியர்?



லோகித்தாஸ்: இயக்குனர் பரதன். அவருடைய இலக்கிய ஞானம் முக்கியமாகக் குறிப்பிட்டாக வேண்டும். இசையிலும் ஓவியத்திலும் ஆர்வமும் பயிற்சியும் உடையவர் அவர். இந்த மூன்று கலைகளையும் தன் சினிமாவில் அவர் இணைத்தார். அவரது படச் சட்டகங்கள் மிகவும் அழகானவை. திரைக்கதையை உள்வாங்குவதில் அவர் மிகவும் நுட்பமானவர்.



திரைக்கதையாசிரியர் பத்மராஜன். இலக்கியவாதியாக அங்கீகாரம் பெற்ற பிறகு சினிமாவுக்கு வந்தார் அவர். மிக இயல்பான வசனங்களிலும் நுட்பமான யதார்த்த சித்தரிப்பும், வலிமையான கதாபாத்திரங்களும் அவரால் உருவாக்கப்பட்டன. பத்மராஜனின் வசனம் ஒருபோதும் பத்மராஜனுடையதாக இருக்காது. அது அந்தக் கதாபாத்திரம் கூறுவதாகவே இருக்கும். ஒரு முறை என் படத்தைப பார்த்த பிறகு பத்மராஜன் என்னுடைய கதாபாத்திரங்கள் சொந்த ஆத்மாவால் உரையாடுவதாக கூறினார்.



நானும் ‘பஞ்ச்’ வசனங்கள் எழுதுவதில்லை. வசனங்களை வைத்து விளையாட மாட்டேன். மிக இயல்பாக காதாபாத்திரங்களை உரையாடவிடுவேன். பத்மராஜனின் கதைக்கருக்கள் விசித்திரமானவை. ‘ஓர் இடத்தில் ஒரு பயில்வான்’ போல. ஒரு ஊருக்கு வரும் பயில்வானின் பிரச்சினைகள். அவற்றை மிக நம்பகமாகவும் சுவாரஸியமாகவும் கூறியிருந்தார். மலையாளத்தில் எனக்குப் பிடித்த படம் அது.


ஜெயமோகன்: பிடித்த நடிகர்?



லோகித்தாஸ்: என்னுடைய பல நல்ல கதாபாத்திரங்களை மோகன்லாலும் மம்முட்டியும் செய்திருக்கிறார்கள். மிக மிக வலுவாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் இந்தியத்திரையின் சிறந்த நடிகர்கள். ஆனால் ஒரு ரசிகனாக மலையாளத்தில் எனக்குப் பிடித்த நடிகர்கள் கோபியும் நெடுமுடி வேணுவும்தான்.


ஜெயமோகன்:  திலகன்?



லோகித்தாஸ்: மிக நுட்பமான நடிகர். எனது பல கதாபாத்திரங்களை உயிர்கொடுத்துக் கொண்டு வந்தவர். ‘ஜாதகம்’ படத்தைப் பாருங்கள். அதில் அந்த முதியநாயர்  அடிக்கடி தலையை வருடுவார். தலைக்குள் ஒரு எரிமலை புகைவது படத்தில் கடைசியில்தான் வரும். திலகனின் கண்கள் மாறும்விதம் நடிகர்கள் பார்த்துப் படிக்கவேண்டிய விஷயம்.



ஆனால் திலகனுக்கு பல வரையறைகளும் உண்டு. உடல், குரல் என பல எல்லைகள். நெடுமுடியும் கோபியும் அப்படியல்ல. அவர்கள் எங்கும் போகமுடியும். எப்படியும் மாற முடியும்.  ‘மீ£ண்டும் சில வீட்டு காரியங்கள்’ படத்தில் நெடுமுடி வேணு முதலில் தோன்றும்போது பின்பக்கம்தான் தெரியும் பாருங்கள், அவர் ஓர் அற்பர் அயோக்கியர் என்று அந்த பின்பக்கமே சொல்லிவிடும்.



ஜெயமோகன்: லோகி மிக மிக உணர்ச்சிகரமான மனிதர். அப்படிப்பட்டவர்கள் குரூரமானவர்களாகவும் சில சமயம் வெளிப்படுவார்கள். . .



லோகித்தாஸ்: குரூரமாக நான் நடந்து கொண்டதாக எனக்கு நினைவில்லை. சிறு வயதில் நான் குரூரமாக நடத்தப்பட்டதனால் அப்படி இருக்கலாம். இல்லை என் பயம் காரணமாக இருக்கலாம். அதைவிட முக்கியமாக என் கலை என்னை சுத்திகரிப்பதனால் அது நிகழ்ந்திருக்கலாம்.



ஜெயமோகன்: உங்களுக்கு நடிப்புப் பிரச்சினைகள் உண்டா? கலைஞர்களுக்கு அது இருக்கும். . .குரல்கள் கேட்பது, கண்களில் ஒளி தெரிவது, உடல் நடுநடுங்குவது. . .



லோகித்தாஸ்: ரொம்ப உண்டு. . . ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மனநோயாளியாகவும் இருந்து சிகிச்சை பெற்றிருக்கிறேன். உணர்ச்சிகள் என் கட்டுக்குள் நிற்காது. நூலகத்தில் படித்துக் கொண்டிருப்பேன். உருக்கமான இடங்களைப் படித்தால் கதறிக் கதறி அழுவேன். சிறிய விஷயத்தில்கூட என்னைக் கட்டுப்படுத்த முடியாது. தூக்கத்தில் பயங்கரமாக அழுவேன். என்அழுகையைக் கேட்டு நானே திடுக்கிட்டு விழித்துக் கொள்வேன்.


ஜெயமோகன்: துளை விழுந்த மூங்கில்தான் பாடும் என்று வயலாரின் வரி ஒன்று உள்ளது.



லோகித்தாஸ்: இருக்கலாம். ஆனால் துளை விழுவது என்பது மிகவும் வலி தருவது.



ஜெயமோகன்: மலையாள இலக்கியத்தில் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர் யார்?



லோகித்தாஸ்: பஷீர், மாதவிக்குட்டி, எம்.டி.வாசுதேவன் நாயர்.



ஜெயமோகன்: மூவருமே உங்கள் ஊர்க்காரர்கள், வள்ளுநாடு.



லோகித்தாஸ்: கேரளத்தின் கலாச்சார மையம் அல்லவா அது.



[2003 ஆம் வருடம் லீனா மனிமேகலை ஆசிரியத்துவத்தில் வெளிவந்த சினிமா இதழில் வெளிவந்த பேட்டி]



Save
Share