Showing posts with label MARCH 15. Show all posts
Showing posts with label MARCH 15. Show all posts

Tuesday, 15 March 2022

BRENDA SCOTT AMERICAN ACTRESS BORN 1943 MARCH 15 , DIVORSED AND MARRIED THREE TIMES THE SAME PERSON

 


BRENDA SCOTT AMERICAN ACTRESS 

BORN 1943 MARCH 15 , DIVORSED AND 

MARRIED THREE TIMES THE SAME PERSON





Brenda Scott (born March 15, 1943) is an American film and television actress. Her stage name comes from an F. Scott Fitzgerald character.[1]


Early life[edit]

On March 15, 1943, Scott was born in Cincinnati, Ohio.[1][2]

Career[edit]

Scott appeared in films such as The Hanged Man (1964); Johnny Tiger (1966); Journey to Shiloh (1968)[1] and Simon, King of the Witches (1971).[3] Her television credits include RawhideGunsmokeAlias Smith and JonesHawaii Five OMannixIronsideMr. NovakBonanzaLeave It to BeaverWindow on Main StreetRun for Your LifeWagon Train77 Sunset StripDragnet 1967The FugitiveSimon & SimonThe VirginianLancerCade's CountyTemple Houston and Here Come the Brides.[4] Scott said, "I started out playing neurotic types because they decided I had a waif-like face."[5]

Scott shared that she had always wanted to act since she was a child and that during her teen years, she believed in palmistry and astrology.[6]


Personal life[edit]

Scott was married to fellow actor Andrew Prine, who played her brother in The Savage Land.[1] Scott and Prine started living separately after only being married for four months.[7] Prine and Scott were divorced in 1969.[8] They would marry and divorce three times over the course of their lives.[1]




Overview (2)

Bornin Cincinnati, Ohio, USA
Birth NameBrenda Jean Smith

Mini Bio (1)



Brenda Scott was born on March 15, 1943 in Cincinnati, Ohio, USA. She is an actress and assistant director, known for Oscar Phitkin: A Vendor's Tale (1998), Simon & Simon (1981) and Mannix (1967). She has been married to Dean Hargrove since April 21, 1979. She was previously married to Andrew Prine.

Family (2)

SpouseDean Hargrove (21 April 1979 - present)
Andrew Prine (19 August 1973 - 19 October 1978)  (divorced)
Andrew Prine (6 April 1968 - 24 March 1969)  (divorced)
Andrew Prine (28 December 1965 - February 1966)  (divorced)
RelativesMae Busch (aunt or uncle)

Trivia (6)

Niece of Mae Busch
Ex-cousin-in-law of John Prine.
The August 19, 1970, issue of Variety, in the Hollywood Production Pulse section, announced the movie We're Running Out Of Heroes started filming Aug. 3 with director Richard Bailey, actors Diana Hyland, Andrew Prine, and Brenda Scott. Group Four Enterprises. No evidence the film was completed or released.
Chose her stage name from a book by F. Scott Fitzgerald.
Married and divorced three times from actor Andrew Prine.

Born on exactly the same date as David Cronenberg (director of "Scanners", "The Dead Zone", "Naked Lunch", and "The Fly").

CHRISTIANE LANZKE ,GERMAN DIVER /ACTRESS BORN 1947 MARCH 15 -2005

 

CHRISTIANE LANZKE ,GERMAN DIVER /ACTRESS

 BORN 1947 MARCH 15 -2005




Christiane Lanzke (15 March 1947 – 2005) was a German diver and actress. She competed in the 10 m platform and 3 m springboard at the 1964 Summer Olympics and finished in fifth and tenth place, respectively.[1] She won a silver medal in the springboard event at the 1962 European Aquatics Championships.[2]

She retired from competitions in 1966 due to a shoulder injury. The same year she began her career as actress playing the lead role of a diver in the film Das Mädchen auf dem Brett (The girl on the board). Despite injury she performed all dives in the film.[3] Later she studied acting at the




German Film School in Potsdam and worked on stage in Halle and Greifswald. She also took small roles in the films Unterwegs zu Lenin (1970), Tscheljuskin (1970), Du und ich und Klein-Paris (1970), Mein lieber Robinson (1971) and Der Mann, der nach der Oma kam (1971).[4][5]

Lanzke drowned herself in the Baltic Sea near Rostock in 2005.[1

Sunday, 25 April 2021

RAGHUPATHY VENGAIYA NAIDU BORN 1887 OCTOBER 15 - 1941 MARCH 15

 


RAGHUPATHY VENGAIYA NAIDU BORN 

1887 OCTOBER 15 - 1941 MARCH 15





ரகுபதி வெங்கய்யா நாயுடு (Raghupathi Venkaiah Naidu, 15 அக்டோபர் 1887 – 15 மார்ச் 1941) என்பவர் சென்னையில் மவுனபடக் காலத்தில் தொழில் நுட்பத்தால் மவுன படத்தை பேசும் படமாக காட்டியவர் மற்றும் திரையரங்க உரிமையாளர் ஆவார்.[1] இவரின் மகனான ஆர். பிரகாஷ் அக்காலத்தில் பல மவுனப் படங்களையும், பேசும் படங்களையும் இயக்கிய பிரபல திரைப்பட இயக்குநராவார்.


வாழ்க்கை

வெங்கைய்யா இன்றைய ஆந்திர மாநிலத்தின், இன்றைய கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிப்பட்டினத்தில் பிறந்தவர். இவரது தந்தையான ரகுபதி பிரித்தானிய படையில் சுபேதாராக இருந்தார். வெங்கய்யாவுக்கு 18 வயது ஆனபோது அவரது பெற்றோர் மச்சிலிப்பட்டினத்திலிருந்து மதராசுக்கு குடிபெயர்ந்தனர் அவர்களுடன் வெங்கைய்யாவும் சென்னைக்கு வந்து சேர்ந்தார். சென்னையில் வெங்கய்யா தனது இருபதாவது வயதில் அப்பா அளித்த நிதியுதவியுடன் சிறு கலைப்போருள் கடையை ஆரம்பித்தார். அதில் ஒளிப்பட கருவிக்கு வேண்டிய ஒற்றை பிலிம்களை விற்று வந்தார். இந்த தொழிலால் பல ஒளிப்படக் கலைஞர்களின் அறிமுகம் ஏற்பட்டு, அதனால் ஒளிப்பட கலை மீது ஆர்வம் கொண்டு அக்கலையைக் கற்று, தனது கலைப் பொருள் கடையை ஒளிப்படம் எடுக்கும் கடையாக மாற்றி திறமையான ஒளிப்படக்காரராக மாறினார்.





மவுனப் படங்களை பேசும் படமாக திரையிடுதல்

அந்தக் காலகட்டத்தில் மவுனப் படங்கள் பெரும் வரவேற்பு பெற்று இருந்தது. அந்நிலையில் அப்போது புதியதாக வந்த க்ரோனோமெகாபோன் என்ற ஒலியை வெளிப்படுத்தும் கருவியைப் பயன்படுத்தி மவுனப் படங்களைப் பேசும்படங்கள்போல் காட்டலாம் என்ற செய்தியை பத்திரிகைகளில் அறிந்தார். அக்கருவியை வாங்க அவர் மனைவி அளித்த ஊக்கத்தால் ஒளிப்பட கடையை அடகு வைத்த பணத்தைக் கொண்டு 30 ஆயிரம் செலவில் ஜான் டிக்கென்ஸன் நிறுவனத்தின் மூலம் அந்த ஒலிக் கருவியைத் தருவித்தார். பின்னர் க்ரோனோமெகாபோன் ஒலிப்பதிவுத் தட்டுடன் இங்கிலாந்தில் அன்று புகழ்பெற்று விளங்கிய 12 துண்டுப் படங்களை வாங்கினார். அந்தப் படங்களை மக்கள் மத்தியில் திரையிட்டார். திரைக்குப் பின்னால் ஒளித்து வைக்கப்பட்டிருந்த க்ரோனோ மெகாபோனிலிருந்து திரையில் படம் தொடங்கும் அதே நேரத்துக்குத் துல்லியமான ஒத்திசைவுடன் ஒலிக்க விட்டார்.


இந்த புதிய அனுபவம் பார்வையாளர்களை ஈர்த்தது. பேசும்படம் பார்ப்பது போன்ற அனுபவத்தை, பேசும்படங்கள் அறிமுகமாவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே பார்வையாளர்களுக்குக் கொடுத்தார். இந்த தொழில் நுட்பத்தைக் கொண்டு ஊர் ஊராக சுற்றியும், இலங்கை, பர்மா ஆகிய நாடுகளில் திரையிட்டும் பணம் ஈட்டினார்.


திரையரங்கு அமைத்தல்

நான்கு ஆண்டுகள் ஊர் ஊராக திரைப்படங்களை திரையிட பயணம் மேற்கொண்ட வெங்கய்யா சென்னை திரும்பியபின் மேலைநாடுகளைப் போல் திரையரங்கம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து, 1912 இல் சிந்தாரிப்பேட்டையில் அன்று ‘கறுப்பர்கள் தெரு’ என்று அழைக்கப்பட்ட பிளாக்கர்ஸ் சாலையில் கெயிட்டி சினிமா ஹால் என்ற பெயரில் திரையரங்கை கட்டினார். கெயிட்டி திரையரங்கைத் தொடர்ந்து கிரவுன், குளோப் ஆகிய திரையரங்குகளையும் சென்னையில் நிறுவி புகழ்பெற்ற திரையரங்க அதிபராக விளங்கினார்.[2]


Raghupathi Venkaiah Naidu (15 October 1869 – 15 March 1941) was an Indian artist and filmmaker who widely regarded as a pioneer of Telugu cinema.,[1][2][3][4][5] He produced silent Indian films and talkies. Starting in 1909, Naidu was involved in many aspects of Indian cinema's history, like travelling to different regions in Asia to promote film work. In 1912, he had built a permanent cinema named Gaiety Theatre which was the first in Madras to screen films on a full-time basis. The Raghupati Venkaiah Award is an annual award incorporated into the Nandi Awards. It is considered Telugu cinema's highest award to recognize people for their lifetime achievements and contributions to the Telugu film industry.[6][7]


Biography

Early life

Venkaiah Naidu was born as the second son of an Indian Army official Subedar Appayya Naidu in Machilipatnam, Andhra Pradesh, India. His brother Raghupathi Venkataratnam Naidu was a famous educationalist and social reformer. His forefathers worked as Commanders in the Army of East India Company and Madras Army in Telaga Regiments. At the age of 18, he moved to Madras and started drawing pictures and carving sculptures at Mount Road and selling them. He then learned photography and started a photo studio.[8]


Photographer

In 1909, he ordered a Chrono Mega phone, equipment that relates sounds with pictures, from John Dickinson and Company. To pay for the Chrono Mega phone he bought for Rs 30,000, he rented out his photo studio. He shot 12 short films and exhibited them in Victoria Public Hall. He also travelled to Bangalore, Vijayawada, Sri Lanka, Rangoon and Pegu to exhibit his films.[9]


Theatre owner

In 1910, he established Esplanade Ten House to exhibit his films. In 1912, he constructed Gaiety Talkies on Mount Road, the first Indian-owned cinema theatre in Chennai. He later constructed Crown Theatre on Mint Street and Globe Theatre (later renamed as Roxcy) in Purasawalkam, Chennai. He also exhibited American and British films. Some of the first movies shown in his theatres were Million Dollar Mystery, Mysteries of Meera, Clutching Hand, Broken Coin, Raja's Casket, Peral fish, and Great Bard.


Film producer

In 1919, he started a production company called Star of East Films and a film studio called Glass Studio. He sent his son, Raghupati Surya Prakash Naidu, to study cinematography in London. Father and son made their first movie "Meenakshi Kalyanam" around actual locations of the Madurai Meenakshi temple. Later, they produced films like Gajendra Moksham, Mathsyavatharam, Nandanaar, and Bhishma Pratigna, the first Telugu mookie (i.e., movie with no playback voices).


Later career

In 1929, he was forced to sell his properties to pay off his debts. The Andhra Pradesh state government established the Raghupati Venkaiah Naidu Award, later changed to Raghupathi Venkaiah Award for lifetime contributors to the Telugu movie industry.[10]


In popular culture

Naresh plays the role of the director in the 2019 Indian biographical film, Raghupathi Venkaiah Naidu. The film was directed by Babji and produced by Yellow Line Pictures.


Filmography

As Producer

Meenakshi Kalyanam

Gajendra Moksham

Mathsyavatharam

Nandanaar

Bhishma Pratigya

Monday, 15 March 2021

MEHMET TALAAT PASHA ,RESPONSIBLE FOR ARMENIAN GENOCIDES MURDERED IN BERLIN 1874 SEPTEMBER 1- 1921 MARCH 15

 


MEHMET TALAAT PASHA ,RESPONSIBLE FOR ARMENIAN GENOCIDES MURDERED IN BERLIN 1874 SEPTEMBER 1- 1921 MARCH 15



Mehmet Talaat Pasha (1874-1921) (also known as Talaat Bey) was the principal architect of the Armenian Genocide. Born in Edirne (Adrianople), Talaat became a telegrapher at a young age. He was active in the Young Turk movement seeking to overthrow Sultan Abdul Hamid (Abdulhamit) II. He joined the Committee of Union and Progress (CUP) and quickly emerged a leader in the secret organization. His profession gave him access to the principal means of communication in his era and his assignment as Chief Secretary of Posts and Telegraphs in Salonika (now Thessaloniki, Greece) placed him at the hub of Turkish revolutionary plotting. After the 1908 Young Turk Revolution, Talaat became one of the most influential politicians of the Ottoman Empire. In 1909 he was appointed Minister of the Interior and then Minister of Posts. By 1912 he was Secretary General of the CUP, which the following year seized complete power in the Ottoman Empire. The 1913 coup saw the rise of the so-called Young Turk triumvirate consisting of Talaat as Minister of the Interior, Enver as Minister of War, and Jemal as Minister of the Marine.





Talaat was one of the main advocates of the Turkification of the Ottoman Empire. As Minister of the Interior, he assumed primary responsibility for planning and implementing the Armenian Genocide. He employed the system of provincial administration subordinate to his direct authority as the main instrument for carrying out the deportations. The 1915 orders for the eviction of the Armenians from their homes carried his signature, much as subsequent orders clarifying the originally disguised intentions of the deportations as annihilation also bear his name. Talaat personally supervised the process and his ability to operate a telegraph machine enhanced his capacity to carry out the policies of his government through direct and secret communications to other CUP cohorts specifically assigned provincial administrative posts to receive and carry out the orders. This method of operation circumvented the machinery of the central government and permitted a handful of CUP fanatics to subvert the state in order to carry out their criminal conspiracy. The organized and scheduled depopulation of Armenians from one town after another carried out with complete surprise and minimal cost, their systematic liquidation once moved to remote locations, and the methodical plunder of their properties demonstrated Talaat's capacity for calculated cruelty and only increased his power and prestige in the CUP. Talaat went so far as to expressly order the destruction of young Armenian orphans. In February 1917 Talaat became Grand Vizier, earning him the title Pasha. He resigned his post in October 1918 as the empire neared total defeat.


Aware of the consequences he faced because of the declared intentions of the Allied Powers to hold him and his associates responsible for the extermination of the Armenians, Talaat fled to Germany where he lived under an assumed name. During the tribunal convened in Constantinople by the post-war Ottoman government, Talaat was tried in absentia, found guilty of capital crimes, including massacre, and was condemned to death. Whereas Germany refused to extradite him, Talaat was identified and gunned down in Berlin in 1921 by Soghomon Tehlirian, an Armenian whose extended family had disappeared from its native town of Erzinjan. Talaat's assassination caused a furor, and Tehlirian's trial became a major media event exposing the knowledge of the German government about the Armenian massacres, which had been kept from the German public during the war. The jury, hearing the eyewitness testimony of German officers, acquitted Tehlirian. As for Talaat's remains, they were returned to Istanbul in 1943 by Nazi Germany and given burial with full honors.


Assassination, 1921


The headline of a 16 March 1921 New York Times article, announcing Talaat Pasha's assassination by Soghomon Tehlirian.

See also: Operation Nemesis




Before the assassination, the British intelligence services identified Talaat in Stockholm, where he had gone for a few days. The British intelligence first planned to apprehend him in Berlin, where he was planning to return, but then changed its mind because it feared the complications this would create in Germany. Another view in British intelligence was that Talaat should be apprehended by the Royal Navy at sea while returning from Scandinavia by ship. In the end, it was decided to let him return to Berlin, find out what he was trying to accomplish with his activities abroad, and to establish direct contact with him before giving the final verdict.[47] This was achieved with the help of Aubrey Herbert.





The British intelligence service established contact with its counterpart in the Soviet Union to evaluate the situation. Talaat Pasha's plans made the Russian officials as anxious as the British. The two intelligence services collaborated and signed between them the 'death warrant' of Talaat. Information concerning his physical description and his whereabouts was forwarded to their men in Germany.[47][page needed]


It was decided that Armenian revolutionaries should carry out the verdict.[47] Talaat was assassinated with a single bullet on 15 March 1921 as he came out of his house in Hardenbergstrasse, Charlottenburg. His assassin was an Armenian Revolutionary Federation member from Erzurum named Soghomon Tehlirian.[48] Soghomon Tehlirian admitted committing the shooting, but after a cursory two-day trial, he was found innocent by a German court on grounds of temporary insanity because of the traumatic experience he had gone through during the genocide.[49]


Legacy

Post mortem

Shortly after the assassination of Talaat in March 1921, the "Posthumous Memoirs of Talaat" were published in the October volume of The New York Times Current History.[50] In his memoir,


Talaat admitted to purposefully deporting the Armenians to the Ottoman Empire's eastern provinces in a prepared scheme. He however blamed Armenian civilians themselves for the deportations, implying the civilian population could have caused a revolution.[51][52]



Tomb of Talaat Pasha in the cemetery of Monument of Liberty, Istanbul

He was buried in the Turkish Cemetery in Berlin. In 1943, his remains were taken to Istanbul and reburied in Monument of Liberty in Şişli, Istanbul.[53] His return to Turkey was very welcomed by the Turkish society[54] and to the funeral ceremony attended representatives of the Turkish political sphere as well as the German diplomatic corps in Turkey.[55]


Hans-Lukas Kieser states that many Jews engaged in "open propaganda for him and CUP causes" despite Talaat's involvement in genocide, and that this continued even after Talaat's death into the late twentieth century.[56]


Modern views

Talaat Pasha is widely considered one of the main authors of the Armenian Genocide by historians.[57]


Within modern Turkey, criticism also focuses on Talaat and the rest of the Three Pashas for causing the Ottoman Empire's entry into World War I and its subsequent partitioning by the Allies. Turkey's founder Mustafa Kemal Atatürk widely criticized Talaat Pasha and his colleagues for their policies during and immediately prior to the First World War.[58]


Talaat Pasha is viewed as a "great statesman, skillful revolutionary, and farsighted founding father" in Turkey, where many schools, streets, and mosques are named after him.[59]


FIRST TEST CRICKET MATCH HELD ON 1877 MARCH 15 IN AUSTRALIA

 

FIRST TEST CRICKET MATCH HELD ON 

1877 MARCH 15 IN AUSTRALIA



தேர்வுத் துடுப்பாட்டம் (Test cricket) என்பது துடுப்பாட்டப் போட்டி வகைகளில் உயர்தரம் கொண்டதும் நீண்ட நேரம் ஆடப்படுவதும் ஆகும். இது ஒரு அணியின் முழு வலிமையைப் பரிசோதிக்கும் தேர்வாகக் கருதப்படுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. பொதுவாக இது 5 நாட்கள் நடைபெறும்.


தேர்வுத் துடுப்பாட்டம் ஐசிசியால் தகுதி வழங்கப்பட்ட 12 நாடுகளைச் சேர்ந்த அணிகளுக்கு இடையே மட்டும் நடைபெறுகிறது. ஆத்திரேலியா, அயர்லாந்து, ஆப்கானித்தான், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சிம்பாவே, வங்காளதேசம் ஆகியன தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஈடுபடும் தகுதி பெற்ற அணிகளாகும்.



அங்கீகரிக்கப்பட்ட முதல் தேர்வுத் துடுப்பாட்டம் மார்ச் 15, 1877 முதல் மார்ச் 19, 1877வரை நடைபெற்றது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. பிறகு தேர்வுத் துடுப்பாட்டத்தின் 100 ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக 1977ஆம் ஆண்டு இந்த இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் போட்டி போலவே 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.


நடைபெறும் முறை

நேரம்

ஒரு தேர்வுப் போட்டி என்பது 5 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். எனினும் சில நேரங்களில் 3 அல்லது 4 நாட்களிலேயே முடிந்துவிடும். ஒரு நாள் என்பது 1 ஆட்ட வேளைக்கு (session) 2 மணிநேரங்கள் என்ற அளவில் 3 வேளைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். உணவு இடைவேளைக்கு 40 நிமிடங்களும் தேநீர் இடைவேளைக்கு 20 நிமிடங்களும் வழங்கப்படும். எனினும் சில நேரங்களில் மோசமான வானிலை அல்லது ஆட்டப்பகுதி முடியும் சூழ்நிலை போன்ற காரணங்களால் இந்த நேர அளவுகள் மாற்றியமைக்கப்படலாம். ஒருவேளை மோசமான வானிலையால் விளையாட இயலாமல் போன நேரத்தை ஈடுகட்டும் வகையில் கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். ஒருவேளை ஆட்டத்தின் முடிவு எட்டப்படும் முன்பே ஆட்ட வேளை அல்லது ஆட்ட நேரம் முடியும் போது, கூடுதல் நேரம் வழங்குவதால் ஆட்டத்தின் வெற்றி/தோல்வியை தீர்மானிக்க இயலும் என்று நடுவர்கள் கருதினால் ஆட்டம் 30 நிமிடங்கள் வரை நீட்டிக்கப்படும்.





ஆட்டம்

பொதுவாக ஒரு போட்டியில் 4 ஆட்டப்பகுதிகள் (Innings) நடைபெறும். மட்டையாடும் அணி ஆட்டமிழக்கும் வரை அதன் எதிரணி ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 90 நிறைவுகள் (Overs) வரை பந்துவீச வேண்டும். நாணயச்சுழற்சியில் வெல்லும் அணி முதலில் மட்டையாட்டத்தையோ பந்துவீச்சையோ தேர்வு செய்யும். 4 ஆட்டப்பகுதிகளில் ஒவ்வொரு அணியும் தலா இரண்டு முறை மட்டைபிடிக்கவும் பந்துவீசவும் இயலும்.


ஒருவேளை அ என்ற அணி மட்டையாடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவர்களது முதல் ஆட்டப்பகுதி முடிந்த பிறகு ஆ அணி தனது முதல் ஆட்டப்பகுதியை விளையாடும். பிறகு அ அணி தன் இரண்டாவது ஆட்டப்பகுதியை விளையாடும். இறுதியாக ஆ அணி இரண்டாவது ஆட்டப்பகுதியை ஆடும். முடிவில் இரண்டு ஆட்டப்பகுதிகளையும் சேர்த்து அதிக ஓட்டங்கள் எடுத்த அணி வெற்றி பெறும்.


ஒரு அணியின் ஆட்டப் பகுதி முடிவுக்கு (End) வரும் சூழ்நிலைகள்:


அனைவரும் வெளியேறுதல் (All-Out) - மட்டைபிடிக்கும் அணியின் பத்து வீரர்களும் ஆட்டமிழந்து வெளியேறும்போது அந்த அணியின் ஆட்டப்பகுதி முடிவுக்கு வரும்

அறிவித்தல் (Declare)- மட்டைபிடிக்கும் அணியின் தலைவர் தங்கள் அணியின் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தால் அதன் ஆட்டப் பகுதி முடிவுக்கு வரும்- பொதுவாக அவர் தங்கள் அணி இந்த ஆட்டப் பகுதியில் எடுத்துள்ள ஓட்டங்கள் போதுமானது என்று எண்ணினால் இவ்வாறு அறிவிப்பார்.

இலக்கை எட்டுதல் (Chased the Target)- நான்காவது ஆட்டப்பகுதியில் மட்டைபிடிக்கும் அணி தன் இலக்கை எட்டும் போது வெற்றி பெறும்.

ஆட்ட நேரம் முடிதல் (Time-Up)- ஆட்டப்பகுதி முடிவடையும் முன்பே ஆட்ட நேரம் முடிந்துவிட்டால் ஆட்டம் வெற்றி/தோல்வி இன்றி நிறைவடையும்

ஒருவேளை ஆ அணியின் முதல் ஆட்டப்பகுதியின் முடிவில் அதன் மொத்த ஓட்டங்கள் அ அணியின் ஓட்டங்களை விட 200 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்ட எண்ணிக்கையால் குறைவாக இருந்தால் அதன் இரண்டாவது ஆட்டப் பகுதியையும் தொடருமாறு அ அணியின் தலைவர் கட்டளையிடலாம். பின்தொடர்தல் (follow-on) என்று அழைக்கப்படுகிறது. 4 நாள் தேர்வுப்போட்டிகளில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்ட எண்ணிக்கையால் குறைவாக இருந்தாலே பின்தொடருமாறு பணிக்கப்படலாம்.


ஒரு தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஏற்படும் ஏழு விதமான முடிவுகள் (Results):


இலக்கை எட்டாமல் வீழ்தல்- நான்காவதாக ஆடும் அணி இலக்கை எட்டும் முன்பே தனது 10 வீரர்களையும் இழந்து விட்டால் அதன் எதிரணி ஓட்டங்களால் வெற்றி பெறும்.

இலக்கை எட்டி வெல்தல்- நான்காவதாக ஆடும் அணி எதிரணியின் இலக்கை எட்டி இழப்புகளால் வெற்றி பெறும்.

இருமுறை ஆடியும் பின்தங்கிய நிலையில் அனைத்தையும் இழத்தல்- தனது 2-வது ஆட்டப்பகுதியில் ஒரு அணி எடுத்த ஓட்டங்களானது அதன் எதிரணியால் முதல் ஆட்டப்பகுதியில் எடுக்கப்பட்ட ஓட்டங்களை விட பின்தங்கி இருக்கும் நிலையில் அனைத்து வீரர்களையும் இழந்துவிட்டால் எதிரணி தனது 2-வது ஆட்டப்பகுதியை விளையாடாமலேயே வெற்றி பெறும். இது ஆட்டப்பகுதி மற்றும் ஓட்டங்களால் வெற்றி என்று அழைக்கப்படுகிறது (எ-டு: "ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 54 ஓட்டங்களால் ஆ அணி வெற்றி")

முடிவு எட்டப்படும் முன்பே ஆட்ட நேரம் முடிதல்- பொதுவாக மழை குறுக்கிடும்போதும் சில நேரங்களில் மிகக் கடினமான வெற்றி இலக்கை எட்ட முடியாத நிலையில் உள்ள அணி தோல்வியைத் தவிர்க்க இழப்பைக் காக்கும் முனைப்பில் விளையாடும்போதும் இவ்வாறு நிகழ்கிறது. இதனால் ஆட்டம் வெற்றி/தோல்வி இன்றி (Draw) நிறைவடையும்.

சமனில் முடிதல்- இரு அணிகளின் ஓட்டங்களும் சமமாக இருக்கும்போது போட்டி சமனில் (Tie) நிறைவடையும்

ஆட்டம் கைவிடப்படுதல்- ஆட்ட மைதானம் விளையாட தகுதியற்றது என நடுவர் அறிவித்தால் போட்டி கைவிடப்படும்- இதனால் ஆட்டம் வெற்றி/தோல்வி இன்றி நிறைவடையும்

விட்டுக்கொடுத்தல் (Forefeiture)- ஒருவேளை நான்காவது ஆட்டப்பகுதியில் பந்துவீச வேண்டிய அணி போட்டியில் இருந்து விலகிக் கொண்டால் அதன் எதிரணி வெற்றி பெற்றதாக நடுவர் அறிவிப்பார்

உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை

இதுவரை தேர்வுத் துடுப்பாட்டத்தில் வாகைப் போட்டி (Championship) எதுவும் நடந்ததில்லை. தற்போது 2019 முதல் 2021 வரை முதலாவது ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. இதில் மொத்தம் 9 அணிகள் பங்குபெறுகின்றன. ஒவ்வொரு போட்டியிலும் முடிவுகளைப் பொறுத்து புள்ளிகள் வழங்கப்படும். இறுதியாக புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் லண்டன் நகரின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் மோதும்.

2012ஆம் ஆண்டு தேர்வு துடுப்பாட்டத்தில் பகல்-இரவு போட்டிகள் நடத்த ஐசிசி வழிவகுத்தது.


சான்றுகள்


Thursday, 15 March 2018

S.M.SUBBAIYA NAIDU ,MUSIC DIRECTOR BORN 1914 MARCH 15




S.M.SUBBAIYA NAIDU ,MUSIC DIRECTOR 
BORN 1914 MARCH 15





‘‘வாய்யா ஹீரோ,’’ என்று  டி. எம். செளந்தரராஜனை இசை அமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு வாய் மணக்க அழைப்பார். 
கம்பீரமான குரலும் கதாநாயக நடிகர்களுக்கு சிறப்பாகப் பாடும் வாய்ப்பும் செளந்தரராஜன் பெற்றிருந்ததால், அவரை ‘ஹீரோ’  என்று அழைப்பார் நாயுடு. ஆனால் அப்படி டி.எம்.எஸ்ஸை உருவாக்கியதில் நாயுடுவுக்கு கணிசமான பங்கு இருந்தது! 
டி.எம்.எஸ். புன்னகைத்தவாறே சுப்பையா நாயுடு அருகில் வந்து அமர்வார். நாயுடுவுக்கு செளந்தரராஜன் என்றாலே ஒரு அன்பு, நட்புறவு. 
கிருஷ்ண விஜயம் என்ற படத்தில் செளந்தரராஜனை முதன்முதல் பாடவைத்தவர் நாயுடுதான்.  அப்படி டி.எம்.எஸ். பாடிய முதல் பாடல், ‘ராதே நீ என்னை விட்டு ஓடாதேடி’. சிந்தாமணியில் பாகவதரின் 
வெற்றிப் பாடலான ‘ராதே உனக்கு கோபம் ஆகாதடி’ மெட்டில் அமைந்த பாடல்.
பின்னர் செளந்தரராஜன் தனக்கென்று ஒரு பாணி அமைத்துக்கொண்டு முன்னேறிய காலகட்டத்தில், அவரைப் பல நல்ல பாடல்கள் பாடவைத்தார் சுப்பையா நாயுடு. எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரான சுப்பையா நாயுடு, பட்சிராஜா ஸ்டூடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு எடுத்த மலைக்கள்ளனுக்கு இசை அமைத்தார். டி.எம்.எஸ்ஸை எம்.ஜி.ஆருக்கு முதன்முதல், ‘எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்று பாட வைத்தார். படமும் பாடலும் மிகப்பெரிய வெற்றி அடைந்தன.
எம்.ஜி.ஆர் தானே தயாரித்து, இயக்கி இரு வேடங்களில் நடித்த படம், நாடோடி மன்னன். அதில்,  ‘தூங்காதே தம்பி தூங்காதே’ என்று சுப்பையா நாயுடுவின் இசையில்  வெற்றிகரமாகப் பாடினார் டி.எம்.எஸ்.
தாய்ப்பாசத்தின் உயர்வை மிகச் சிறப்பாக கூறும் சினிமா பாடல்களில் ஒன்று, ‘அன்னையைப் போல் 
ஒரு தெய்வமில்லை’. கா. மு. ஷெரீப் 
எழுதிய இந்தப் பாடலை சிவாஜி கணேசனுக்காக நாயுடுவின் இசை அமைப்பில் டி. எம்.எஸ். மிக உருக்கமாகப் பாடினார்.
எல்லோருடனும் அன்பாகப் பழகுவது, பணத்தாசை இல்லாமல் இருப்பது, காலத்திற்கு ஏற்ப 

இசையின் வண்ணங்களை 
கொஞ்சம் மாற்றியமைத்துக் 
கொள்வது என்கிற குணாம்சங்களால்,  தொடர்ந்து இசை அமைக்கும் வாய்ப்புகளைப் பெற்றிருந்தார் சுப்பையா நாயுடு. 
அறுபத்தி எட்டில் ஜெய் சங்கர், ஜெயலலிதா ஜோடியாக நடித்த படம், முத்துச்சிப்பி. அதில் பளிச்சென்று ஒலிக்கும் ஒரு டூயட் பாடலை டி.எம்.எஸ், பி.சுசீலாவிற்காக அமைத்தார் சுப்பையா நாயுடு. பாடல், ‘ஒரு நாள் பழகிய பழக்கம் அல்ல’.
அடுத்த ஆண்டு வந்த மன்னிப்பு படத்தில், நாயுடுவின் இசையில் டி.எம்.எஸ். பாடிய ‘நீ எங்கே என் நினைவுகள் அங்கே’ பாடலும் ‘வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்’ பாடலும் நாயுடுவின் வனப்பான இசைக்கு வாகான எடுத்துக்காட்டுகளாக அமைந்தன. 
ஒரு காலத்தில் நாயுடுவின் சக இசை அமைப்பாளரான சி.ஆர்.சுப்பராமன் அவரைக் கேட்டிருந்தார் - ‘‘என்ன, நாயுடு...இந்த செளந்தரராஜ பாகவதரை எப்படிப் பாட வைக்கிறீங்க. எதுவும் வர மாட்டேங்குதே அவருக்கு’’ என்று. 
‘‘அப்படியா? அப்போ அவருக்கு என்ன வருதோ அதை வச்சுப் பாட வைங்க,’’ என்று நாயுடு பதில் கொடுத்திருந்தார். எப்படி அவருடைய வழி? அந்தப் பாதையில் சென்று செளந்தரராஜனை எத்தனை வெற்றிப் பாடல்கள் பாட வைத்தார் சுப்பையா நாயுடு ! 
கோவையில் சுப்பையா நாயுடுவின் இசையில் தன்னுடைய அறிமுகப் பாடல்களைப் பாடிவிட்டு, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் பாட வந்தார் 
டி.எம்.எஸ். 
அங்கே பெருமைக்குரிய ஒரு ஆஸ்தான இசை அமைப்பாளராக கொடிகட்டிப் பறந்தார் சங்கீத சக்ரவர்த்தி ஜி. ராமநாதன். மந்திரி குமாரி படத்தில் அநியாயக்காரர்களை எதிர்த்து ஒரு குடியானவன் பாடுவதாக அமைந்த, ‘அன்னம் இட்ட வீட்டிலே’ பாடலை செளந்தரராஜன் பாட வேண்டும்.
எஸ்.எம். எஸ். என்பது இன்றைய சமுதாயத்துடன் ஒன்றி விட்டது. 1940 களில் எஸ்.எம்.எஸ்.என்றால் பிரபல இசை அமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவைக் குறிக்கும் வார்த்தையாக அமைந்தது.
கவியரசு கண்ணதாசனின் முதல் பாடலுக்கு இசை அமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் திறமையை இனம் கண்டவர் ரி.எம். சௌந்தரராஜனின் முதலாவது பாடலுக்கு இசை அமைத்தவர். எம்.ஜி.ஆரின் முதலாவது கொள்கை விளக்கப் பாடலை உருவாக்கியவர் போன்ற பெருமைகளை உடையவர் எஸ்.எம்.சுப்பையாநாயுடு.

மூன்று தலைமுறை நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்த இவரின் குடும்பத்துக்கும் இசைக்கும் எதுவித தொடர்பும் இல்லை.
முத்து சாமி நாயுடு என்ற பொலிஸ்காரனுக்கு 1914 ஆம் ஆண்டு பிறந்தவர் சுப்பையா நாயுடு. திருநெல்வேலி மாவட்ட கடையநல்லூரில் பிறந்த சுப்பையா நாயுடு சிறுவயதில் அடங்காத பிள்ளையாக இருந்தார். சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தால் மகன் திருந்துவான் என்ற நம்பிக்கையில் சுப்பையா நாயுடுவை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அழைத்துச் சென்றார் தகப்பன்.
சிறுவர் சீர்திருத்தப்பள்ளியின் பொறுப்பதிகாரி சுப்பையா நாயுடுவின் மேல் இரக்கப்பட்டு சிறுவனை சீர்திருத்தப்பள்ளியில் அனுமதிக்காது தனது பொறுப்பில் வளர்த்தார். 
துடுக்குத்தனம் மிகுந்த அடங்காத சிறுவன் சுப்பையா நாயுடு அங்கும் தன் கை வரிசையைக் காட்டினார். சுப்பையா நாயுடுவின் நடவடிக்கை 
பிடிக்காததனால் அவரை மீண்டும் தகப்பனிடம் அனுப்பி வைத்தார் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியின் பொறுப்பதிகாரி.
அடங்காத பிள்ளையைஅடித்து வளர்த்தார் தகப்பனார். வீட்டிலே இருந்தால் பிரச்சினைஅதிகமாகும் என்பதனால் 100 ரூபா காசுடன் வீட்டை விட்டு வெளியேறினார். சுப்பையா நாயுடு. சிங்கப்பூருக்குச் சென்றால் கை நிறைய சாம்பாதிக்கலாம் என்று அறிந்ததும் சிங்கப்பூர் செல்வதற்காக தஞ்சாவூருக்குச் சென்றார்.
தஞ்சாவூரில் முகாமிட்டிருந்த ஜகந்நாத ஐயரின் நாடகக் கம்பனியில் இருந்த இரண்டு சிறுவர்கள் ஓடி விட்டனர் என்ற செய்தி பரபரப்பாக இருந்த வேளையில் தான் சுப்பையா நாயுடு தஞ்சைக்குச் சென்றார். சிறுவனான சுப்பையா நாயுடுவைப் பார்த்த ஒருவர் நாடகக் கம்பனியில் இருந்து ஓடி வந்த சிறுவன் என்று நினைத்து அவரைப் பிடித்துக் கொடுக்க முயற்சி செய்தார். நிலைமையை உணர்ந்து சுப்பையா நாடக கம்பனி எங்கே இருக்கிறது என்று கேட்டு சென்று அங்கு தஞ்சமடைந்தார்.
விதி சுப்பையா நாயுடுவை நாடகக் கம்பனியில் இணைத்தது. அதன் காரணமாக மிகச் சிறந்த இசை அமைப்பாளர் ஒருவர் தமிழகத்திரை உலகுக்கு கிடைத்தார். சுப்பையா நாயுடுவின் குரல்வளம் நன்றாக இருந்ததால் அவருக்கு நாடகக் கம்பனியில் இடம் கிடைத்தது. ஜாகந்நாதையரிடமிருந்து நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை பிறந்தபோது சுப்பையா நாயுடு அவருடன் சென்றார். சுவாமி ராஜமாணிக்கப்பிள்ளையின் ஆசியுடன் தனது சங்கீத அறிவை வளர்த்தார் சுப்பையா நாயுடு
.
நவõப்ராஜ மாணிக்கம் பிள்ளையின் நாடகக் கம்பனியில் நடிகராக இருந்த சி.எஸ். ஜெயராமன் தந்தையிடம் இசைப்பயிற்சி செய்யும் போது அதனை கவனமாகக் கேட்டு சங்கீத அறிவை வளர்த்தார் சுப்பையா நாயுடு. இசைக்கலைஞர் டி.என். சுப்பிரமணிய பாகவதரிடம் கீர்த்தனையும், ராஜகோபால் அய்யரிடம் ஆர்மோனியமும் கற்று தனது சங்கீத அறிவை வளர்த்தார். சுப்பையா நாயுடு கம்பனியின் முழு நேர ஆர்மோனியக் கலைஞரானார். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் பக்த ராமதாஸ் என்ற நாடகம் 1935 ஆம் ஆண்டு திரைப்பட மானது. அப்போது எம்.எஸ். சுப்பையா நாயுடுவின் ஆர்மோனிய இசை திரையில் ஒலித்தது. அதன் பின்னர் கோவை சென்றல் ஸ்டூடியோவில் மாதச் சம்பளத்துக்கு ஆர்மோனியக் கலைஞராக கடமையாற்றும் சந்தர்ப்பம் எம்.எஸ். சுப்பையா நாயுடுவுக்குக் கிடைத்தது. ரம்பையின் காதல், பிரகலாதா, ஆர்யமாலா, ஜதகல பிரதாபன், சாலிவாகனன் என்மகன் ஆகிய படங்களில் சுப்பையா நாயுடுவின் ஆர்மோனிய இசை ஒலித்தது.எம்.ஜி.ஆர். முதன் முதலாக நடித்த ராஜகுமாரி என்ற படத்தில் சங்கீத டைரக்ஷன் மெட்டுக்கள் எம்.எஸ். சுப்பையா நாயுடு என்ற பெயர் ஜொலித்தது
ஜுபிடரின் அபிமன்யு படத்தின் காதல் காட்சிக்காக எழுதப்பட்ட பாடலுக்கு எஸ்.எம். சுப்பையா நாயுடு பலவிதமான மெட்டுக்களை அமைத்தார் எனினும், சரியாகப் பொருந்தவில்லை. ஸ்ரூடியோவில் உதவியாளராக இருந்த பையன் போட்ட மெட்டை தற்செயலாக கேட்ட சுப்பையாநாயுடு அந்த மெட்டை பயன்படுத்தினார். திருச்சி லோகநாதனும் ஜீவரத்தினமும் இணைந்து பாடிய புது வசந்தமாமே வாழ்விலே என்ற பாடல் மிகவும் பிரபல்யமானது. அப்பாடலுக்கு இசையமைத்தவர் மெல்லிசை மன்னர் என்று போற்றப்படும் எம்.எஸ். விஸ்வநாதன். இப்பாடலுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் தான் இசையமைத்தார் என்ற உண்மையை பின்னர் சுப்பையா நாயுடு வெளியிட்டார்.
எம்.ஜி.ஆர். முதன் முதலாக கதாநாயகனாக நடித்த "ராஜகுமாரி' படத்துக்கு சங்கீத் டைரக்ஷன், மெட்டுக்கள் எஸ்.எம்.சுப்பையா நாயுடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பழைய படங்களுக்கு ஒருவர் இசையமைக்க இன்னொருவர் மெட்டமைப்பார். கன்னியின் காதலி படத்தின் 10பாடல்களுக்கு சுப்பையா நாயுடுவும் ஐந்து பாடல்களுக்கு சுப்ப ராமனும் இசையமைத்தனர். மோகினி படத்துக்கு சுப்பராமனும் சுப்பையா நாயுடுவும்இசை அமைத்தனர். திகம்பர சாமியார் படத்துக்கு ஜி.ராமநாதனும், சுப்பையா நாயுடுவும் இசை அமைத்தனர்.
கிருஷ்ண விஜயம் படத்துக்கு சுப்பையா நாயுடுவும். சி.எஸ். ஜெயராமனும் இசையமைத்தனர். பாப நாசம் சிவன் எழுதிய ஐந்து பாடல்களுக்கு அவரே மெட்டமைத்தார். சுப்பையா நாயுடுதான் வாத்திய இசையை சேர்த்தார்.
எம்.ஜி.ஆரின் கொள்கைப் பாடல்களையும், பிரசாரப்பாடல்களையும் பாடியவர் ரி.எம். சௌந்தரராஜன் எம்.ஜி. ஆருக்காக ரி.எம். சௌந்தரராஜன் பாடிய முதலாவது பாடல் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார். மலைக்கள்ளன் படத்தில் இடம் பெற்ற இப்பாடல் இந்தக் காலத்துக்கும் பொருத்தமாக உள்ளது. இப்பாடலுக்கு இசை அமைத்தவர் சுப்பையா நாயுடு.
பட்டுக்கோட்டையார் பாப்பாக்களுக்குக் கூறிய அறிவுரை திருடாதே பாப்பா திருடாதே எம்.ஜி. ஆரின் கொள்கை விளக்கப்பாடல்களில் ஒன்றான இப்பாடலை தமிழ்த் திரையுலகுக்குத் தந்தவர் சுப்பையா நாயுடு.
19ஆம் நூற்றாண்டில் தமிழை வாழவைத்த தெய்வீகக்கவிஞர் வள்ளலார். இவருøடய பெருமையுடன் "நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்' என்ற விருத்தத்தை மிகவும் நேர்த்தியாக சூல மங்களம் ராஜ லக்ஷ்மியின் குரலில் தவளவிட்டவர்.
கொஞ்சும் சலங்கை படத்தில் சிங்கார வேலனே தேவா என்ற பாடல் காலத்தால் அழியாது சாகாவரம் பெற்ற பாடல்களில் ஒன்று. காரைக் குறிச்சி அருணாச்சலத்தின் நாதஸ்வர இசைக்கு போட்டியாக ஜானகியின் குரல் ஒலித்தது.
சிங்கார வேலனே தேவா என்ற பாடலுக்கான நாதஸ்வர இசையை ஒலிப்பதிவு செய்து விட்டு நாதஸ்வர ஸ்ருதிக்கேற்ப பெண் குரலைத் தேடினார்கள். பி.லீலா, லதா மங்கேஸ்கர் எனப்பலரும் நாயனத்தின் சுருதிக்கு இசைவாக பாட தங்களால் முடியாது எனக் கூறிவிட்டனர். நாதஸ்வர இசைக்கு லீலாவின் குரல் இசைவாக இருக்கும் என்று மீண்டும் ஒருமுறை அவரிடம் சென்று கேட்டார்கள். ஜானகியின் குரல் நாதஸ்வர இசைக்கு பொருத்தமானதாக இருக்கும் என்று லீலா கூறினார். 
லீலாவின் கூற்று பொய்க்கவில்லை. நாதஸ்வர இசைஎது ஜானகியின் குரல் எது என்ற வேறுபாடு காண முடியாத வகையில் இரண்டும் இணைந்துள்ளன.1962ஆம் ஆண்டு தனித்தனியாக ஒலிப்பதிவு செய்யப்பட்ட நாதஸ்வர இசையையும், ஜானகியின் பாடலையும் ஒன்றாக ஒலிப்பதிவு செய்த ஒலிப்பதிவாளர் ஜீவா பாராட்டுக்குரியவர்.
ஆமேரி ராகத்தில் அமைந்த சிங்கார வேலனே தேவா என்ற பாடல்தான் கண்ணோடு காண்பதெல்லாம் என்ற பாடலின் வெற்றிக்கு மூல காரணமாக அமைந்தது.
தியாகராஜா பாகவதர் பாடிய "ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற வர்ண மெட்டில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதடி' என்ற பாடலை ரி.எம். சௌந்தரராஜனின் குரலில் வெளியிட்டார். இன்றைய ரீ மிக்ஸ்பாடல்களுக்கு இப்பாடல் முன்னோடியாக உள்ளது.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார். திருடாதே பாப்பா திருடாதே. சிங்கார வேலனே தேவா மட்டுமல்ல 1969 ஆம் ஆண்டு மன்னிப்பு படத்தில் சுப்பையா நாயுடுவின் இசையில் உருவான "நீ எங்கே என் நினைவுகள் அங்கே', "வெண்ணிலா வானில் வரும் வேளை' போன்ற பாடல்களும் அவரின் திறமைக்கும் சான்றாக உள்ளன.
ரமணி 
மித்திரன் 04/ 11.01.2009


மின்னலென விரல்கள் ஆர்மோனியக் கட்டைகளை வருட, ராமநாதன் பாடிக்காட்டிய மெட்டை செளந்தரராஜன் மனதில் நிறுத்திக்கொண்டார். பின்னாளில் நூற்றுக்கணக்கான வெற்றிப் பாடல்களை மாடர்ன் தியேட்டர்ஸில் பாடப்போகிறவர் பாடத்தொடங்கியது தான் தாமதம்...
ஒலிப்பதிவை நிறுத்திவிட்டார் ஒலிப்பதிவாளர் பத்மநாபன்.    ராமநாதனிடம் அவர் கூறினார் - ‘‘சார்...இது ரிக்கார்ட் பண்ண லாயக்கில்லாத குரல். பிசிர் அடிக்கிறது.’’
மெல்லச்சிரித்தார் ராமநாதன் -- ‘‘ஆமாம்பா... எப்போதாவது ஒலிக்கும் அந்தப் பிசிர் அழகான பிசிருதான். நான் உத்தரவாதம் தர்றேன். கவலைப் படாம ரிக்கார்ட் பண்ணுங்க,’’ என்றார்.
இந்த வகையில், ஒரு இசை மேதையின் ஆசிகளுடன் அவருடைய இசை அமைப்பில் தனது முதல் பாடலைப் பாடினார் டி.எம்.எஸ். பாடலும் ஓரளவிற்கு வெற்றியும் அடைந்தது.
சென்னைக்கு வாய்ப்பு தேடிச் சென்றவுடன், ராயப்பேட்டை செல்லும் சாலையிலிருந்த ராமநாதனின் வீட்டு வாசலில் ஒவ்வொரு நாளும் நின்று, அவருடைய கவனத்தைக் கவரும் முயற்சியில் இருந்தார் டி.எம்.எஸ்.
இரவு வெகு நேரம் விழித்து நாவல்கள் படிக்கும் பழக்கமுள்ளவர் ராமநாதன்.  எழுந்திருக்க நேரமாகும். எழுந்தவுடன் சட்டுபுட்டென்று நீராடிவிட்டு காரில் ஏறி பறந்துவிடுவார். அதனால் பல நாட்கள் அவர் டி.எம்.எஸ் காத்திருப்பதை கண்டும்காணாமல் இருந்துவிட்டார். கடைசியில் ஒரு நாள், ‘‘என்னடா செளந்தரராஜா...உனக்கு என்ன வேணும்னு இங்கெ வந்து 
தெனம் நிக்குற,’’ என்று கேட்டார். ‘பாடறதுக்கு வாய்ப்பு தருவே ளோன்னுதான் நிக்கறேன்,’’ என்றார் செளந்தரராஜன்.
‘‘இதோ பாரு... படம் எடுக்கறவா உன்னைப் போடணும்னு சொன்னா உன்னைப் பாட வைப்பேன். நானாப்போய் செளந்தரராஜனைத்தான் பாடவைக்கணும்னு சொல்ல 
மாட்டேன்,’’ என்றார் ராமநாதன். இந்தப் பதில் செளந்தரராஜன் மனதில் ஏமாற்றத்தையும் கசப்புணர்வையும்தான் ஏற்படுத்தியது.
ஆனால் அப்புறம் தூக்குத் தூக்கி வந்தது. ராமநாதன் இசை அமைப்பில் செளந்தரராஜன் பாடிய பாடல்கள் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு வழி வகுத்தன. (இதைக் குறித்த விரிவான தகவல்களை, எனது ‘டி.எம்.எஸ் - ஒரு பண்பாட்டுச் சரித்திரம்’ என்று நூலில் காணலாம்)
செளந்தரராஜன் என்ற பின்னணிப் பாடகரை   ‘நான் பெற்ற செல்வம்’, ‘அம்பிகாபதி’, ‘வணங்காமுடி’,  ‘சாரங்கதரா’, ‘உத்தமபுத்திரன்’, என்று படத்திற்குப் படம் பாடலுக்குப் பாடல் அரிய இசை வண்ணங்களில் செதுக்கியெடுத்தார் ராமநாதன்.
‘‘நான் வளர்வதற்கு...என் குரலைப் பக்குவப் படுத்துவதற்கு, நான் தைரியமா பாடறதுக்குக் காரணம் ஜி. ராமநாத அய்யரோட மியூசிக்தான்.  அவர் கொடுத்த வழியிலதான் நான் சிங்கம் மாதிரி பாடினேன். சாரீரத்தில ஆண்மை வேண்டும் என்பார். தானும் அப்படித்தான் பாடிக்காட்டுவார்,’’ என்று என்னிடம் கூறுவார் டி.எம்.எஸ்.  ‘‘என் இதயத்தைப் பிளந்து காட்டினா அதுல ராமநாத அய்யர்தான் இருப்பார்,’’ என்பதும் செளந்தரராஜனின் வாக்குமூலம். 
தான் பாடிய அன்னம் இட்ட வீட்டிலே பாடலை ஹெச்.எம்.வியில் இசைத்தட்டாகப் பதிவு செய்ய சென்றபோது, கே. வி. மகாதேவனை சந்தித்தார் செளந்தரராஜன்.  ஹெச்.எம்.வியில் இசை அமைப்பாளராக இருந்தார் மகாதேவன். பார்த்த மாத்திரத்திலேயே இருவருக்கும் நட்பு மலர்ந்து விட்டது. அடிக்கடி ஹெச்.எம்.வி அலுவலகம் சென்று மகாதேவனை சந்திக்கலானார் டி.எம்.எஸ். 
செலவுக்குப் பணமில்லாமல் சொந்த ஊரான மதுரை திரும்ப வேண்டிய நிலை வந்தபோது, செளந்தரராஜன் குரலில் இசைத்தட்டுகள் பதிவுசெய்து 
செலவுக்கு வழி செய்தார் மகாதேவன். ‘‘மகாதேவன் எனக்கு நண்பராகவும் வழிகாட்டியாகவும் இருந்தார்’’ என்பார் டி.எம்.எஸ்.
மகாதேவனின் இரண்டவாது திரை இசை அத்தியாயம், குமாரி, மதனமோகினி முதலிய படங்களில் தொடங்கியபோது, அவற்றில் 
டி.எம்.எஸ். பாடவில்லை. ஆனால் 
ஏ.பி. நாகராஜன், எம்.ஏ.வேணு ஆகியோருடன் கே.வி.எம். இணைந்த ஒரு வெற்றிகரமான யூனிட் நால்வர் படத்துடன் உருவானது. தொடக்கத்திலிருந்தே அந்தக் குழுவில் இணைந்தார் டி.எம்.எஸ். ஏறுமுகமானது அவருடைய இசைப்பயணம். 
செளந்தரராஜனின் மகாதேவ ராகம், ‘ஏரிக்கரையின் மேலே’ என்ற ரீங்காரம் பெற்று,   ‘மணப்பாறை மாடு கட்டி’ என்று ஏற்றம் உற்று, ‘பாட்டும்  நானே பாவமும் நானே’ என்று திருவிளையாடலில் உச்சத்தைத்தொட்டது, 
முதல் பாடல் வாய்ப்புக்காக கோவை சென்டிரல் ஸ்டூடியோவில் முயற்சி செய்தபோதே, எம்.எஸ். விஸ்வநாதனைப் பார்த்திருந்தார் 
டி.எம்.எஸ். 
ஸ்டூடியோவிற்கு வரும் இசை அமைப்பாளர்களுக்கு உதவியாக இருந்து, இசை அறையையும் ஆர்மோனியப் பெட்டிகளையும் சுத்தமாக வைக்கும் பணிதான் விஸ்வநாதனுக்கு. ஆனால் அப்போதே தன்னுடைய ஞானத்தை அபிவிருத்தி செய்துகொள்ளும் கடுமையான முயற்சியில் இருந்தார் அவர்.  ‘‘நம்மோடு பேசவே மாட்டார் சார். தான் பாட்டுக்கு மறைவா ஆர்மோனியத்தை வாசிச்சப்படி, பாடல்களோட அமைப்பை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருப்பாரு,’’ என்பார் செளந்தரராஜன் (டி.எம்.எஸ் - ஒரு பண்பாட்டு சரித்திரம்).
எம்.எஸ்.வியுடன் அடுத்த சந்திப்பு, மயிலை தெற்கு மாடவீதியின் மேற்கு மூலையில் நடந்தது. ‘‘அண்ணே...நாங்க இப்போ படங்களுக்கு மியூசிக் போடறோம். உங்களுக்கு சொல்லி அனுப்பறோம்,‘’ என்று கம்பெனி வாகனத்தில் அமர்ந்தபடி, தெருவோரம் நின்ற டி.எம்.எஸ்.ஸைப் பார்த்து சொன்னார் எம்.எஸ்.வி.
அப்படி விஸ்வநாதன், ராமமூர்த்தி இணைக்கு முதன்முதல் டி.எம்.எஸ். படம், குலேபகாவலி. 
அதைத் தொடர்ந்து இசை வெள்ளமாக ஆயிரக்கணக்கில் பாடல்கள் வந்தன. பா-வரிசை படங்களின் பாடல்கள் 
ஒரு தேனிசை வரிசையாக வளர்ந்தன. டி.எம்.எஸ்.ஸும் எம்.எஸ்.வி.யும் பாட்டுத்தேரை வடம்பிடித்து இழுத்தபோது, அவர்கள் பரஸ்பரம் கைகளை இழுத்துக்கொண்டு அவதிப்பட்டதும் உண்டு. 
நிலவைப் பார்த்து வானம் சொன்னது பாடல் பதிவின் போது ‘டேக்’குகள் ஒரு பக்கம் கூடிக்கொண்டே போக, சர்க்கரை நோய் இருந்த செளந்தரராஜன் பசி பொறுக்க முடியாமல், ‘எனக்கு உங்கப் பாட்டே வேண்டாம்’னு வெளிநடப்புசெய்த சங்கதியெல்லாம் உண்டு. 
ஆனால் பாட்டு வண்டி தடம் புரளாமல் இருந்தது என்றால், உள்ளூற இருந்த இனிமையால்தான்.  உரசல்களை மீறி, ‘ஒரே சூரியன், ஒரே நிலா, ஒரே ஒரு எம்.எஸ்.வி’ என்று டி.எம்.எஸ். பதிவு செய்தார் (மெல்லிசை மன்னர்கள் பாட்டுப் பயணம்). 
சங்கர் கணேஷும் வி. குமாரும் செளந்தரராஜனைப் பாட வைத்த இசை அமைப்பாளர் வரிசையில் முக்கிய இடம் பெறுபவர்கள். மெலடி யுகத்தில் அவர்களுடைய பங்களிப்பிற்கும் குறைவில்லை என்பதற்கு செளந்தரராஜனின் வெற்றிப் பாடல் வரிசையே சான்று 
இளையராஜா அலை முதலில் கரையைத் தொட்ட போது செளந்தரராஜனின் குரலும் பாங்காக ரசிகர்களின் செவிகளை அடைந்தது (அன்னக்கிளி உன்னெத் தேடுதே, நல்லவர்க்கெல்லாம்..இத்யாதி). 
ஆனால் ராஜா, ராஜாதி ராஜா 
ஆனபோது செளந்தர-ராஜாவிற்கு 
அங்கு இடம் இல்லை! அதனால் என்ன. மற்ற இசை அமைப்பாளர்கள் 
அமைத்துக் கொடுத்த ராச்சியங்கள் அவருக்குப் போதுமானதாக இருந்தன. உலகம் சுற்றும் வாலிபனுக்குப் பாடியவர், தானே உலகம் சுற்றும் வாலிபர் ஆகிவிட்டார். 

10. "இந்த உலகில் இரண்டே இரண்டு சக்திகள்தான் மிகுந்த பலம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அவை கத்தியும், புத்தியும் தான். ஆனால் போகப்போக கத்தியின் சக்தி எப்போதும் அறிவின் பலத்திற்கு முன்னால் தோற்றுப்போய் விடுகிறது.”
- மாவீரன் நெப்போலியன் போனபார்ட் 

வருடம் 1961. மார்ச் மாதம் 23ஆம் தேதி - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "திருடாதே" படம் வெளிவந்தது. கவிஞர் கண்ணதாசனின் சகோதரர் திரு. ஏ.எல். சீனிவாசன் அவர்கள் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இணை சரோஜாதேவி. இந்தப் படத்துக்கு கதை வசனம் கண்ணதாசன் எழுதினர். இசை அமைத்தார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

"திருடாதே" படத்தின் மாபெரும் வெற்றி எனது திரை உலக வாழ்வுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது" என்று தனது சுயசரிதையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு மக்கள் நாயகனாக, ஏழைகளின் பாதுகாவலனாக, கஷ்டப்படுபவர்களின் காவல் தெய்வமாக அவர் மக்கள் மத்தியில் உருவாவதற்கான வலுவான பார்முலா இந்தப் படத்தில் தான் உருவானது எனலாம். இதற்கு முன்பே என் தங்கை, மலைக்கள்ளன், தாய்க்கு பின் தாரம் ஆகிய படங்கள் வெளிவந்து இருந்தாலும் அவருக்கென்று ஒரு தனி பார்முலாவில் படங்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்த படம் "திருடாதே" படம்தான்.

இந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதி டி.எம்.எஸ். பாடிய பாடல் "திருடாதே பாப்பா திருடாதே" பாடல். சின்னஞ்சிறுவர்கள் மனதில் அழுத்தமாக பதிவாகும் அற்புத வரிகளை பாடலாசிரியர் அமைக்க அதற்கு படம் வெளிவந்து ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னாலும் நிலைத்திருக்கும் வண்ணம் அதி அற்புதமாக இசை அமைத்திருக்கிறார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

பய உணர்ச்சி மழலை பருவத்தில் தானே ஆரம்பிக்கிறது. அப்போதே தன் திறமையின் மீது நம்பிக்கையை ஊட்டிவிட்டால்..? அவர்கள் வளரும்போது அந்த தன்னம்பிக்கையும் கூடவே வளர்ந்து விடுமே .. இதைத்தான் பாடலின் பல்லவியிலேயே கல்யாணசுந்தரம் ஊட்டிவிடுகிறார்

"திருடாதே பாப்பா திருடாதே - வறுமை நிலைக்கு பயந்துவிடாதே. திறமை இருக்கு மறந்துவிடாதே" -

சுப்பையா நாயுடுவின் இசையில் டி.எம்.எஸ். அவர்களின் குரலும் குழந்தைகளிடம் பரிவையும் கனிவையும் காட்டுகிறது. அற்புதமான ஆடம்பரமில்லாத ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான இசையும், பாவம் ததும்ப டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கும் விதமும் பாடலை நிலை நிறுத்தி இருக்கிறது.

பாடல் மேலும் வளர்கிறது :

"சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து. சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ 
தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ.
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ - திருடாதே பாப்பா திருடாதே."

எத்தனை எளிமையான அதே சமயம் குழந்தைகளுக்கு சொல்லவேண்டுமே என்ற கவனத்தோடு புனையப்பட்ட வார்த்தைகள்.

தவறுகளை திருத்திக்கொள்வதற்கும் அது திரும்பவும் வராமல் கவனமாக இருக்கவும் பாடலை அமைக்கும் போது பாடகரின் குரலும் பாடல் வரிகளை உணர்த்து பாடுகிறது. அந்த கருத்தை கவனமாகப் பதியவைக்கும் வகையில் இசை அமைப்பும் அமைந்து இருப்பது பாடலின் சிறப்பு.

"திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது.
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது. - என்கிற கவிஞர் திருட்டை ஒழிப்பதென்பது
" திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" - என்ற நிதர்சனமான உண்மையையும் பாடலில் உரைக்கிறார். எக்காலத்துக்கும் பொருந்தும் வரிகள்.

மனம் கண்டதையும் நினைக்காமல் இருக்க என்ன வழி?. பாடலின் கடைசி சரணத்தின் வரிகளில் டி.எம்.எஸ். அவர்களின் குரலை மெல்ல மெல்ல உச்சத்தில் ஏற்றி அழுத்தமாகப் பதிவு செய்கிறது பாடல்.
"உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்குற நோக்கம் வளராது - மனம் கீழும் மேலும் புரளாது." 
அளவான இசைக்கருவிகளைப் பயன்படுத்தி ஒரு அற்புதமான பாடலைக் கொடுத்திருக்கிறார் எஸ்.எம். சுப்பையா நாயுடு. பாடலைக் கேட்டும் காட்சியைக் கண்டும் இன்புற இணைப்பு: (http://www.youtube.com/watch?v=UzN8Fs2AYc4)

தங்களது முந்தைய படத்துக்காக விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசையில் பதிவான ஒரு பாடலை படத்தின் நீளம் கருதி அந்தப் படத்தில் பயன்படுத்திக்கொள்ள தயாரிப்பாளர் ஏ.எல். சீனிவாசன் அவர்களால் முடியாமல் போனது. அதனை தங்களது "திருடாதே" படத்தில் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார் அவர்.

பொதுவாக இசை அமைப்பாளர்கள் தங்கள் படத்தில் இன்னொரு இசை அமைப்பாளரின் பாடலைப் பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள். அதுவும் வளர்ந்து வரும் இசை அமைப்பாளரின் பாடல் என்றால் கண்டிப்பாக சம்மதிக்கவே மாட்டார்கள்.

எனவே தயாரிப்பாளர் தரப்பில் ஒருவித தயக்கத்துடனே எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

"பாட்டு யார் போட்டது?" சுப்பையா நாயுடுவின் கேள்வி இது.

"விஸ்வநாதன்-ராம..." என்று முடிக்கக்கூடவில்லை.

"அட. நம்ம பையன் விஸ்வநாதன் போட்ட பாட்டா? அதுக்கென்ன? தாராளமா வச்சுகிட்டாப் போச்சு" என்று உற்சாகமாக சம்மத்திதார் சுப்பையா நாயுடு. 

அந்தப் பாடல் தான் கண்ணதாசன் எழுதி பி. பி. ஸ்ரீனிவாஸ் - பி. சுசீலா பாடிய "என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்" - என்ற டூயட் பாட்டு.

படத்தின் டைட்டிலில் இரட்டையர்களின் பெயர் இடம் பெறவில்லை என்றாலும் இன்றுவரை திருடாதே படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் "விஸ்வநாதன்-ராமமூர்த்தியின்" பாடலாகத்தான் வலம் வந்துகொண்டிருக்கிறது.

மெல்லிசை வளர்ந்து வந்த காலத்திலும் தயாரிப்பாளர்களால் விரும்பப்படும் இசை அமைப்பாளராக அவர் இருந்தமைக்கு அவரது இந்தப் பரந்த மனப்பான்மையும் ஒரு காரணம். அதனால் தான் வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களாவது அவரது இசையில் வெளிவந்து பாடல்களும் நிலைத்து நின்று திரை இசை உலகில் அவருக்கென்று ஒரு தனி இடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது

"திருடாதே" படம் வெளிவந்த அதே வருடம் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்களின் இசையில் இன்னொரு படமும் வெளிவந்தது.

தமிழில் முதல் "டெக்னிக்" வண்ண திரைப்படம் என்ற பெருமைக்குரிய படம் அது.

நடனக் கலைக்கும் இசைக் கலைக்கும் முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்ட 
இந்தப் படத்துக்காக ஒரு பாடல் பதிவாக்கம் செய்யப்பட்டது.

அந்தப் பாடல் பதிவானதே ஒரு சுவாரஸ்யமான கதை. கதைப்படி நாயகன் நாதஸ்வரம் வாசிக்க நாயகி பாடவேண்டும். ஆபேரி ராகத்தில் முதலில் பிரபல நாதஸ்வர வித்வான் காருகுறிச்சி அருணாசலம் அவர்களில் நாதஸ்வர இசை பதிவு செய்யப்பட்டது. 
அந்தப் பத்து நிமிட நாதஸ்வர இசைக்கும் அதன் ஸ்ருதிக்கும் இணைந்து பாடவேண்டிய பாடகியாக யாரைத் தேர்வு செய்வது?
.
அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்த பாடகி பி. லீலா அவர்கள்தான். ஆனால் லீலாவோ நாதஸ்வரத்தின் ஸ்ருதியோடு இணைந்து பாட தன்னால் முடியாது என்று மறுத்துவிட்டார். அதன் பிறகு வேறு யாரை எல்லாமோ கேட்டுப்பார்த்துவிட்டார்கள்.

எல்லாருமே மறுத்து விட்டனர். கடைசியாக ஒருமுறை பி. லீலாவையே மீண்டும் அணுகி கேட்டுப் பார்ப்பது அவர் மறுத்துவிட்டால் காட்சியையே கைவிட்டுவிடுவது என்று தீமானித்து மறுபடி லீலாவிடம் கேட்டனர்.

லீலாவோ "என்னால் பாடமுடிந்தால் நான் மறுப்பேனா?. என்றாலும் எனக்கு தெரிந்து நாதஸ்வரத்தின் இசையோடு இணைந்து பாடக்கூடிய பாடகி ஒருவர் இருக்கிறார். குழலிசையும் அவர் குரலிசையும் வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாமல் ஒன்றிப் போய்விடும். இந்தப் பாடலைப் பாடக்கூடிய திறமைசாலி அவர் ஒருவர் தான். அவர் ஒருவரால் தான் இந்தப் பாட்டை பாட முடியும் " என்று அப்போதுதான் வளர்ந்து வந்துகொண்டிருந்த புதிய பாடகி ஒருவரை அடையாளம் காட்டி தன்னைத் தேடிவந்த அந்த வாய்ப்பை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்து இன்றளவும் அவரது பெயர் பாடலுடன் நிலைத்திருக்க வைத்தார்.

பி. லீலாவால் பலமாக பரிந்துரைக்கப் பட்ட அந்தப் பாடகி - திருமதி எஸ். ஜானகி.

பாடல் : "சிங்கார வேலனே தேவா."

எஸ்.எம். சுப்பையா நாயுடுவின் அற்புதமான இசையில் பாடல் இடம் பெற்ற 
படம் : "கொஞ்சும் சலங்கை."