Showing posts with label MAY 26. Show all posts
Showing posts with label MAY 26. Show all posts

Thursday, 13 August 2020

SHENBAGARAMAN PILLAI ,FREEDOM FIGHTER BORN 1891 SEPTEMBER 15 - 1934 MAY 26


SHENBAGARAMAN PILLAI ,FREEDOM FIGHTER 
BORN 1891 SEPTEMBER 15 - 1934 MAY 26


சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர், செண்பகராமன் பிள்ளை. நாஞ்சில் நாட்டை சேர்ந்த இவர் மீது, 17 வயதிலேயே ராஜ துரோக குற்றம் தேடி வந்தது.
ஆங்கிலேயரிடம் சிக்கி, கொடுமைப்படுவதை விட, தலைமறைவாகி விடுவதே நல்லது என, மும்பைக்கு பயணமானார். அங்கிருந்து, ஒரு ஆங்கிலேயர் உதவியுடன், இத்தாலி சென்றார். இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்தில் மேற்கல்வி படித்து, ஜெர்மனிக்கு சென்று, டாக்டர் பட்டமும் பெற்றார்.
இதனிடையே, சுவிட்சர்லாந்தின், ஜூரிச் நகரில் இருந்தபோது, 'அனைத்துலக இந்திய ஆதரவு குழு' ஒன்றை துவக்கினார். அது சார்பாக, 'இந்தியா ஆதரவு' என்ற பத்திரிகையையும் துவக்கி நடத்தினார்.
ஜெர்மன் மன்னருடன் நல்ல நட்பில் இருந்தார், செண்பகராமன்.
ஜெர்மனியில், ஆங்கிலேய எதிர்ப்பு பிரசாரம் செய்து, ஆதரவு பெற்றார். இந்தியாவில் ஆங்கிலேயரை விரட்ட முயன்றவர்களுக்கு, ஆயுதம் வினியோகம் செய்து, அவர்களை விரட்ட வேண்டும் என்பது, அவரது திட்டம்.
அப்போது, திலகரை தொடர்பு கொண்டார். திலகர் ஆதரவாளராக இருந்த, வ.உ.சிதம்பரனாருக்கும் இந்த விஷயம் தெரிய வந்தது.
ஜெர்மன் ஆதரவு இருந்ததால், ராணுவ பயிற்சியும் பெற்றார், செண்பகராமன். 'எம்டன்' நீர்மூழ்கி கப்பலில், அதிகாரியாக, இந்தியாவிற்கு வந்தார்.
கப்பலில் இருந்த மற்ற ஜெர்மானிய அதிகாரிகளுக்கு, தென் மாநில கடற்கரைகளை பற்றி தெளிவாக கூறினார். சென்னை உட்பட பல இடங்களில், பொதுமக்களை தாக்காமல், அதே சமயம், ராணுவ இலக்குகளை மட்டும் தாக்க ஏற்பாடு செய்தார்.
இந்திய கடல் பகுதியிலும், கடற்கரையிலும் குண்டுகளை வீசினார். சென்னை நகர கடற்கரையிலும் குண்டு விழுந்தது. 'எம்டன்' கப்பல், பசிபிக் கடல் வரை சென்றது. இருந்தும், அந்த கப்பலை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை. அதிலிருந்து, 'எம்டன்' கப்பல் மிக பிரபலமாயிற்று.

கேரள மாநிலத்தின் கொச்சியில் இறங்கி, பல தகவல்களை சேகரித்து, மீண்டும் தலைமறைவானார், செண்பகராமன்.
அந்த காலத்திலேயே, செண்பகராமனை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு என, ஆங்கிலேய அரசு அறிவித்தது. இருந்தும், கடைசி வரை, அவர் பிடிபடவே இல்லை. 25 ஆண்டுகள், ஜெர்மனியில் இருந்தார்.
கடந்த, 1931ல், ஜெர்மனியில், ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது.
'நாஜி' கொடுமைகளை எதிர்த்து பேச ஆரம்பித்ததால், ஹிட்லருக்கு எதிரான ஆளாக கருதப்பட்டார். மே, 1934ல், நாஜி ஏஜன்டுகளால், விஷம் வைத்து கொல்லப்பட்டார், செண்பகராமன். அப்போது, அவருக்கு வயது, 43. அவரின் உடல், இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அஸ்தி மற்றும் அவர் சார்ந்த பதிவேடுகளுடன், மும்பையில் குடியேறினார், அவர் மனைவி லட்சுமிபாய். 1947ல், இந்தியா சுதந்திரம் பெற்ற போதிலும், 1966ல் தான், அன்றைய காங்கிரஸ் அரசு, செண்பகராமனை கவுரவிக்க முன்வந்தது.
செண்பகராமன், கேரள மாநிலத்தை சேர்ந்தவரா, தமிழகத்தை சேர்ந்தவரா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. இருந்தாலும், அவருடைய முயற்சி, உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே உண்மை!

ஆக., 15, 1947 நள்ளிரவு, சுதந்திரம் கொடுக்க, முடிவு செய்தது, ஆங்கிலேய அரசு. அப்போதைய கவர்னர் ஜெனரலான மவுண்ட்பேட்டன், நேருவை அழைத்து, 'உங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம். அதை எப்படி கொடுப்பது?' என்று கேட்டார்.
'எதை அடையாளமாக வைத்து பெறுவது...' என, நேருவுக்கும் குழப்பமாக இருந்தது.
உடனே, ராஜாஜியை அணுகி, 'நான், நாத்திகன். எனக்கு இந்த நடைமுறைகள் தெரியாது. அதனால், தாங்கள் தான் தீர்வு கூற வேண்டும்...' என்றார்.
'கவலை வேண்டாம். எங்கள் தமிழகத்தில், மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, ராஜகுருவாக இருப்பவர், செங்கோலை, புதிய மன்னருக்கு கொடுப்பது வழக்கம். நாமும் அந்நியனின் கையால் சுதந்திரம் பெறுவதை விட, குருமகானின் கையால் செங்கோலை பெற்று, ஆட்சி மாற்றம் அடையலாம்...' என்றார், ராஜாஜி.
'நேரம் குறைவாக உள்ளது. உடனே ஏற்பாட்டை செய்யுங்கள்...' என்று உத்தரவிட்டார், நேரு.
திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னார், ராஜாஜி.
முறையாக செங்கோல் தயாரித்து, தங்க முலாம் பூசி, இளைய ஆதீனம், தம்பிரான் பண்டார சுவாமிகளிடம் பொறுப்பை ஒப்படைத்தார், தலைமை ஆதீனம். கூடவே, ஓதுவார் மூர்த்திகளையும், உடன் அனுப்பி வைத்தார். ராஜாஜி அனுப்பிய தனி விமானத்தில், டில்லி போய் சேர்ந்தனர்.

அப்போது, 1,000 ஆண்டு அடிமைதனத்தில் இருந்து, இந்தியா விடுதலை பெறும் விழாவிற்காக, அனைவரும் காத்திருந்தனர். அந்த சுதந்திர வைபவ தினத்தில், மவுண்ட்பேட்டனிடம் இருந்து, குருமகா சன்னிதானம் திருவாவடுதுறை ஆதீனம், தம்பிரான் பண்டார சுவாமிகள், செங்கோலை பெற்று, அதற்கு புனித நீர் தெளித்தார்.
ஓதுவார் மூர்த்திகள், 'வேயுறு தோளிபங்கன்...' என்று துவங்கும், கோளறு திருப்பதிகத்தை பாட, 11வது பாடலின் கடைசி வரியான, 'அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே...' என, முடிக்கும் போது தான், செங்கோலை, நேருவிடம் கொடுத்தார், சுவாமிகள்.
அந்த நிகழ்வை தான், நாம் சுதந்திர தினமாக கொண்டாடுகிறோம். இந்த நிகழ்வு, தமிழுக்கும், தமிழகத்திற்கும் எவ்வளவு பெருமை.
திருவாவடுதுறை ஆதீன மடத்தில் செங்கோல் வைபவம், கருப்பு - வெள்ளை புகைப்படமாக உள்ளது.





Chempakaraman Pillai, alias Venkat, was an Indian-born political activist and revolutionary from Trivandrum, Kerala.[1] Pillai lived in Germany for most of his active years, and died in Berlin in 1934.Early life
Pillai was born into a Tamil family in Trivandrum, capital of the former kingdom of Travancore in the modern state of Kerala. He was the son of Chinnaswami Pillai and Nagammal. He had a sister named Paappaathi Ammal. She married a sculptor named Chatrapathi Pillai, whose sculpture, Kuravan Kurathi, is in the Trivandrum Museum. Paappaathi Ammal had four daughters, one of whom still resides in Trivandrum.[citation needed]

In Europe
Pillai attended a technical institute, pursuing a diploma in Engineering. After the outbreak of the First World War, he founded the International Pro-India Committee and based its headquarters in Zürich, appointing himself president in September 1914. During the same period an Indian Independence Committee was formed in Berlin by a group of Indian expatriates in Germany. This latter group was composed of Virendranath Chattopadhyaya, Mahatma Gandhi, Bhupendranath Dutta, A. Raman Pillai, Taraknath Das, Maulavi Barkatullah, Chandrakant Chakravarty, M. Prabhakar, Birendra Sarkar, and Heramba Lal Gupta.

In October 1914, Pillai moved to Berlin and joined the Berlin Committee, merging it with his International Pro-India Committee as the guiding and controlling institution for all pro-Indian revolutionary activities in Europe. Lala Har Dayal was also persuaded to join the movement. Both of them cooperated with the German Intelligence Bureau for the East and helped creating German propaganda directed at Indian PoWs in German camps, particularly the Halbmondlager.[2] Soon branches sprang up in Amsterdam, Stockholm, and Washington, as well as in many other parts of Europe and the Americas.

War activities
Main articles: Berlin Committee and Hindu-German Conspiracy
The Indian Independence Committee ultimately became involved in the so-called Hindu-German Conspiracy along with the Ghadar Party in the United States. The German foreign office under Kaiser Wilhelm II funded the Committee's anti-British activities. Chempakaraman and A. Raman Pillai, both from Travancore and both students at German universities, worked together on the Committee. Pillai later allied with Indian National Congress chief Subhash Chandra Bose.

Many of Pillai's letters to A. Raman Pillai, then a student in the University of Göttingen, were kept by Raman Pillai's son Rosscote Krishna Pillai. The letters reveal some aspects of Pillai's life in Germany between 1914 and 1920, as does one of July 1914, calling upon Indian soldiers in the British Indian Army to rise in revolt and fight against the British.

After the end of World War I and Germany's defeat, Pillai stayed in Germany, working as a technician in a factory in Berlin; when Netaji Subhas Chandra Bose visited Vienna, Pillai met him and explained his plan of action.

Foreign Minister of Provisional Government of India

Chempakaraman statue in Chennai
Main article: Provisional Government of India
See also: Niedermayer-Hentig Mission
Pillai was the foreign minister of the Provisional Government of India set up in Kabul, Afghanistan on 1 December 1915, with Raja Mahendra Pratap as President and Maulana Barkatullah as Prime Minister. However, the defeat of the Germans in the war shattered the hopes of the revolutionaries, and the British forced them out of Afghanistan in 1919.

During this time, the Germans were helping the Indian revolutionaries from their own motives. Though the Indians made it clear to the Germans that they were equal partners in their fight against the common enemy, the Germans wanted to use the revolutionaries' propaganda work and military intelligence for their own purposes.[2]

In 1907, Pillai coined the term "Jai Hind",[3][4] which was adopted as a slogan of the Indian National Army in the 1940s at the suggestion of Abid Hasan.[5] After India's independence, it emerged as a national slogan.[6]

Marriage and death
In 1931, Pillai married Lakshmi Bai of Manipur, whom he had met in Berlin. Unfortunately they had a short life together, as Pillai soon fell ill. There were symptoms of slow poisoning and he went to Italy for treatment. He died in Berlin on May 28, 1934. Lakshmibai brought Pillai's ashes to India in 1935 where they were later ceremonially immersed in Kanyakumari with full state honours.[7

Tuesday, 26 May 2020

VIJI , OF KOZHI KOOVUTHU , COMMITTED SUICIDE BORN 1966 MAY 26 -NOVEMBER 27,2000


VIJI , OF KOZHI KOOVUTHU ,
COMMITTED SUICIDE BORN
 1966 MAY 26 -NOVEMBER 27,2000


.விஜி (Viji) தமிழ் படங்களில் நடித்துள்ள ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். கோழி கூவுது என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அவர் தனது முதல் படத்தில் அறிமுகமாகி 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[3]


1997- 2002 வரையான காலகட்டங்களில் நான் நியூமராலஜி பயின்று கொண்டிருந்தேன் அப்போது நிறையபேருக்கு பலன்களை தபாலில் அனுப்பியிருந்தேன் அதில் ஒருவர் கோழிகூவுது விஜி
இவருடைய பெயர் கூட்டுத்தொகை ஒன்பது. பிறந்த தேதி 26 .05.1966
எனவே வாழ்க்கையில் மிகப்பெரிய ஆபத்து காத்திருப்பதாக எழுதினேன் 1999.
அதே நாளில் நடிகை நக்.மா விற்கும் கூட எழுதி அனுப்பியிருந்தேன் பிற்காலத்தில் மக்கள் சமூக பணியில் இருப்பீர்கள் என்று எழுதி அனுப்பி யிருந்தேன்
நக்.மா போட்டோவுடன் அவர் ஜாதகத்தையும் அனுப்பியிருந்தார்
@@@@@@@@@@@@@@@@@@@@@@ 

சுயசரிதை
கங்கை அமரனின் கோழி கூவுது என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்திற்கு பிறகு அவர் "கோழி கூவுது" விஜி என அழைக்கப்பட்டார்.[4][5][6]

பூவே உனக்காக படப்பிடிப்பின் போது இவருக்கு இடுப்பு மற்றும் முதுகு வலி ஏற்பட்டது[7] 1996இல் இவருக்கு முள்ளந்தண்டு வட அறுவை சிகிச்சை அப்போலோ மருத்துவமனையில் நடந்தது. அறுவை சிகிச்சை தோல்வியடைந்தது மற்றும் அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டதை மருத்துவர்கள்


கண்டுபிடித்தனர்.[8] மேலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு,[7] விஜி தற்காலிக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.[6][9] அப்போலோ மருத்துவமனைகளுக்கு எதிராக ஒரு வழக்கை அவர் தாக்கல் செய்தார் , மருத்துவமனை நிர்வாகம் இவருக்கு ரூ .30,000த்தை திரும்ப வழங்கியது.[8] விஜி ஒரு சரியான அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் தனது பழைய நிலைக்குத் திரும்பினார்[10] 2000 இல் மீண்டும் சிம்மாசனம் என்றத் திரைப்படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்தார்.[11] விஜியை பல படங்களில் நடிக்க வைத்த நடிகர் விஜயகாந்த் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த்தார், மேலும் தனது அடுத்த படமான வாஞ்சிநாதன் படத்தில் அவருக்கு ஒரு பாத்திரத்தை வழங்குவதாக


உறுதியளித்திருந்தார்,[12] ஆனால் "சிம்மாசனம்" இறுதியில் அவரது கடைசி படமானது.


கங்கை அமரனின் கோழி கூவுது என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை விஜி. கதாநாயகியாக சுமார் 30 படங்களில் இவர் நடித்துள்ளார். திடீரென இவருக்கு கதாநாயகி வாய்ப்பு மங்கியது.இதனால் சிறிது காலம் படவுலகை விட்டு ஒதுங்கியிருந்த இவர், மீண்டும் சரத்குமாரின் சூரியன் படத்தில் பிரபு தேவாவுடன் ஒத்தப் பாட்டுக்கு ஆடினார். இதன் பிறகு ரஜினியின் உழைப்பாளி, விஜய்யின் பூவே உனக்காக ஆகிய படங்களிலும் ஒரேயொரு பாடலுக்கு மட்டும் ஆடிவிட்டுப் போனார்.பின்னர் திடீரென இவர் நோய்வாய்ப்பட்டார். அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறு மூலம் விஜியின் ஒரு கால் செயல் இழந்தது.தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமானார்.இதன் பிறகு டிவி தொடர்களில் நடித்து வந்த விஜி, டைரக்டர் ரமேஷ் என்பவரை காதலித்தார். ரமேஷுக்கு சுமதி என்ற மனைவியும், குழந்தைகளும் உண்டு. ஆனாலும் விஜி, ரமேஷை


தீவிரமாக காதலித்தார்.ஆனால் விஜியின் காதல் கைகூடவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த விஜி, கடந்த 27.11.2000 அன்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.2000 நவம்பர் 27 அன்று சென்னையில் தனது வீட்டிலேயே விஜி தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணமென ஏற்கனவே திருமணம் செய்து கொண்டஇயக்குநர் ஏ.ஆர். ரமேஷ் என்பவரை குற்றம் சாட்டினர்.[3][13] ரமேஷ் அவரைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்தார், ஆனால் பின்னர் மறுத்துவிட்டார் மற்றும் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ரமேஷ் விஜியை ஒரு விழாவில் சந்தித்தார் என தி இந்து நாளிதழ் எழுதியது.[2] ரமேஷ், அவரது மனைவி ஏ. ஆர். சுமதி மற்றும் அவரது நண்பர் சின்னசாமி ஆகியோர் விஜியின் தற்கொலையை தூண்டியதாக காரணம் காட்டி மகிலா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.[2]










1976ம் ஆண்டு, பஞ்சு அருணாசலம் தயாரித்த ‘அன்னக்கிளி’ மூலமாக இளையராஜா திரையுலகிற்கு வந்தார். அவருடன் கங்கை அமரனும் வந்தார். இசைக்குழுவில் இருந்துகொண்டு பணியாற்றினார்.77ம் ஆண்டு, பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படம் வெளியானது. இந்தப் படத்தில் இளையராஜா முதன்முதலாகப் பாடினார். அதேபோல், கங்கை அமரன், ‘16 வயதினிலே’ படத்தில் ‘செந்தூரப்பூவே’ பாடலை எழுதி, பாடலாசிரியராக அறிமுகமானார்.
இதன்பின்னர், மலேசியா வாசுதேவனின் படத்துக்கு கங்கை அமரன் இசையமைத்தார். ஆனால் படம் நின்றுபோனது. பிறகு, ‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’ படத்துக்கு இசையமைத்தார் கங்கை அமரன். பின்னர் 79-ம் ஆண்டு, பாக்யராஜ் தன் முதல் படமான ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தை இயக்கினார். இந்தப் படத்துக்கு கங்கை அமரன் தான் இசையமைத்தார். ‘காதல் வைபோகமே’ பாடல் இன்றைக்கும் மறக்கமுடியாத பாடலாக அமைந்திருக்கிறது.



இந்தநிலையில், கங்கை அமரன் ஒருபக்கம் பாடல்களை எழுதிக்கொண்டிருந்தார். இசையமைத்துக் கொண்டிருந்தார். பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார். அந்தசமயத்தில், அடுத்த அவதாரத்தை எடுத்தார். அதுதான் ‘கோழி கூவுது’.பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், அதாவது சகோதரர் ஆர்.டி.பாஸ்கர் தயாரிப்பில், இளையராஜா இசையில், கங்கை அமரன் இயக்கத்தில் உருவானது ‘கோழி கூவுது’ திரைப்படம்.சின்னஞ்சிறிய கிராமம். அந்தக் கிராமத்தில், விட்டேத்தியாக இருந்துகொண்டு, கைக்கு ஆட்களையும் சேர்த்துக்கொண்டு, அலப்பறையைக் கொடுத்துக் கொண்டிருப்பார். அவர்தான் பிரபு. அவரின் அக்கா மகள் விஜி. இந்தப் படத்துக்குப் பிறகு அவர் ‘கோழி கூவுது’ விஜி எனப் பேரெடுத்தார்.அந்த ஊரில், சின்னச்சின்னப் பொருட்களை விற்று வரும் சில்க் ஸ்மிதா, பிரபுவைக் காதலிக்கிறார். ஆனால் பிரபுவோ, அக்கா பொண்ணு விஜி மீது ஆசைப்படுகிறார். அந்த சமயத்தில், அந்த ஊருக்கு சுரேஷ், போஸ்ட்மேனாக வருகிறார். அனாதையான அவர் மீது அன்பு காட்டுகிறார்.அவரைப் பற்றி அறிந்துகொண்ட பிறகு, விஜி சுரேஷ் மீது காதல்கொள்கிறார். ஊருக்குள் சின்ன சண்டை. இதனால் அந்த ஊரைவிட்டுச் செல்கிறார் பிரபு. அவர் ஊருக்குச் செல்ல காசு தருகிறார் சுரேஷ். இந்தக் காலகட்டத்தில் விஜி - சுரேஷ் காதல் மலர்கிறது.

ஊரைவிட்டுப் போன பிரபு, ராணுவத்தில் சேருகிறார். காசு சேர்க்கிறார். அக்காப்பொண்ணை கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்கிற கனவையும் சேர்த்துக்கொண்டே வருகிறார். பிறகு ஊருக்கு வருகிறார். அக்காவுக்கு சந்தோஷம். தன் பெண்ணைக் கொடுக்க முடிவு செய்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.இந்தசமயத்தில், தன் காதலை விட்டுக்கொடுக்க தயாராகிறார் சுரேஷ். இதற்காக ஊரை விட்டுச் செல்ல முடிவெடுக்கும் வேளையில், சில்க் ஸ்மிதா தடுத்து நிறுத்தி, இருவரையும் சேர்த்து வைக்க முடிவெடுக்கிறார். இவையெல்லாம் பிரபுவுக்குத் தெரியவர ஆவேசமாகிறார். இறுதியில், சில்க்ஸ்மிதா, அவர்களின் காதலைப் புரியவைக்கிறார். பிறகு, ஊரையே எதிர்த்து, தன் அக்கா மகளையும் சுரேஷையும் சேர்த்துவைக்கிறார். பிறகு, பிரபுவும் சில்க்கும் இணைகிறார்கள்.
கிராமத்துச் சூழலில், சின்னதான கதையையும் காமெடியையும் காதலையும் வைத்துக்கொண்டு அப்படியொரு திரைக்கதை அமைத்து இயக்கியிருந்தார் கங்கை அமரன். ’சங்கிலி’ படத்தில் அறிமுகமான பிரபுவுக்கு, முதல் வெற்றிப் படம் ‘கோழி கூவுது’தான். ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்துக்குப் பிறகு அடுத்தடுத்த படங்கள் வந்தாலும் சுரேஷுக்கு ‘கோழிகூவுது’ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.அதேபோல், சில்க் ஸ்மிதாவுக்கு இப்படியொரு கேரக்டர் அமையவே இல்லை. ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அப்படியொரு கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடித்திருந்தாலும், ‘கோழி கூவுது’ படத்தில், சிட்டு கேரக்டரை ரசிகர்கள் மறக்கவே முடியாது.இதில், நடித்து, பாடி ஆடி நடித்த பிந்துகோஷ்க்கும் கிடைத்தது அருமையான ஆரம்பம்.தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல், அண்ணன் உடையான் படத்துக்கு அஞ்சான் என்றுதான் சொல்லவேண்டும். எவரிடமும் உதவி இயக்குநராக இல்லாமலே, இயக்குநராக பொளந்துகட்டினார் கங்கை அமரன். இசையமைக்கிற படங்களுக்கெல்லாம் பக்கபலமாக இருக்கிற இளையராஜா, இந்தப் படத்திலும் அப்படியொரு உழைப்பைக் கொடுத்திருந்தார்.டைட்டில் பாடல் தொடங்கி எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார் இளையராஜா. ‘அண்ணே அண்ணே’ பாடலும் ‘ஏதோ மோகம்’ பாடலும் படத்தை பட்டிதொட்டிசிட்டி என கொண்டுசென்றன.
டைட்டில் போட்டுக்கொண்டிருக்கும் போது, ‘எங்க அண்ணன்கிட்டயா வம்புக்கு வர்றீங்க? எங்க அண்ணனை யாருன்னு நினைச்சீங்க?’ என்று கங்கை அமரனே சொல்லுவார். ‘இசை இளையராஜா’ என்று டைட்டில் வரும். அதேபோல், ‘இனிமே ஜெயம் உங்க பக்கம்தான்’ என்று சொல்லும்போது, ‘கதை திரைக்கதை வசனம் பாடல்கள் டைரக்‌ஷன் கங்கை அமரன்’ என்று டைட்டில் போடுவார் கங்கை அமரன்.1982ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 25ம் தேதி, ‘கோழி கூவுது’ வெளியானது. படம் வெளியான பிறகு பொங்கல் வந்தது. ஆனால் பொங்கலுக்கு படத்தை தியேட்டரில் இருந்து எடுக்கவில்லை. தொடர்ந்து ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருந்தது. நூறுநாள், இருநூறுநாள், முந்நூறு நாள் என ஓடி, மிகப்பெரிய சகாப்தம் படைத்தது ‘கோழிகூவுது’.
’கோழி கூவுது’ வெளியாகி, 37 வருடங்கள் முடிந்து, 38 வது வருடம் தொடங்கிவிட்டது. இன்றைக்கும் ‘அண்ணே அண்ணே’ பாட்டையும் ‘ஏதோவொரு மோகம்’ பாடலின் சலசலக்கும் தண்ணீர்ச் சத்தத்தையும், அண்ணனும் தம்பியுமாகச் சேர்ந்து ராஜபாட்டை நடத்தியதையும் மறக்கவே முடியாது.
கங்கை அமரனின் ’கோழி கூவுது’க்கு ஓர் கொக்கரக்கோ வாழ்த்து!
கங்கை அமரனுக்கும் அவரின் மொத்த டீமிற்கும் ‘கோழிகூவுது’க்காக ஸ்பெஷல் பூங்கொத்துகள்!
.

Biography
Viji made her debut in Gangai Amaren's Kozhi Koovuthu. It went on to become a super hit and she was often referred to as 'Kozhi Koovuthu' Viji after the film.[4][5][6]

During shooting for a song sequence in the Vijay-starrer Poove Unakkaga, Viji experienced hip and back pain[7] and she underwent an operation on her spinal cord in 1996 at the Chennai Apollo Hospitals. The operation failed and doctors found an acute infection in the wound caused by the surgery.[8] After more surgeries,[7] Viji suffered temporary paralysis.[6][9] She filed a lawsuit on Apollo Hospitals which returned Rs 30,000.[8] Viji recovered after a corrective surgery[10] and made a comeback to films in 2000 with Simmasanam.[11] Vijayakanth, who had acted with Viji in many films, gave her an opportunity to star in the film and had promised to give her a role in his next film Vaanchinathan also,[12] but Simmasanam ultimately remained her last film.

On 27 November 2000, Viji committed suicide in her home in Chennai. Her suicide note blamed a failed love affair with director A R Ramesh, who was already married.[3][13] The Hindu reported that the prosecution case was that Ramesh promised to marry her but declined later and that three days prior to her death, Ramesh met Viji at a function and abused her.[2] Ramesh, his wife, A R Sumathi, and his friend Chinnasamy were charged with "abetting the suicide" of Viji and acquitted by the Mahila Court.[2]

KAMUKARA PURUSHOTAMAN ,MALAYALAM FIRST PLAYBACK SINGER BORN 1930 DECEMBER 4 - 1995 MAY 26



KAMUKARA PURUSHOTAMAN ,MALAYALAM 
FIRST PLAYBACK SINGER BORN 
1930 DECEMBER 4 - 1995 MAY 26



.Kamukara Purushothaman (4 December 1930 – 26 May 1995) was an Indian singer. He was a noted playback singer in Malayalam cinema during its early years. He has recorded over 170 songs in 68 movies in various South Indian languages.
Early life
Kamukara Purushothaman, popularly known as Kamukara (the name of his ancestral house), was born on 4 December 1930 in Thiruvattar in Kanyakumari district of present day Tamil Nadu. He was the son of Parameswara Kurup and Lekshmikkutty Amma. He started learning music from an early age under Karnatic music guru Thiruvattar Arumugham Pillai Bhagavathar, along with his sister, Leela Omchery, a known singer and musicologist.[1] His career debut was at the local temple, Aadi Keshava Temple, Thiruvattar. He started music concerts by the age of 15 and became an artist at Trivandrum Broadcasting Corporation by the age of 20 and became active in All India Radio music programmes.

Career

His first recording for a film was in 1953 for the Malayalam film, Ponkathir, a Merryland Studio production to start a film career which spanned over 20 years and 68 Malayalam (total 125) films. He was the leading male singer in Malayalam films during the 50s and 60s till K.J. Yesudas appeared on the scene. Two of his soulfully rendered songs, "Aathmavidyalayame" for the film Harishchandra and "Ekanthathayude" for Bhargavi Nilayam are widely considered to be among the all time great songs of Malayalam film music. He was a regular singer in Merryland films until the 1970s. Most of his songs were written by Thirunayinarkurichi Madhavan Nair and composed by Brother Lakshmanan.


Later in his career, Kamukara Purushothaman, along with K. P. Udayabhanu and other senior singers formed a music troupe by name Old is Gold and performed stage programs all over India and abroad.

Death
Kamukara, who was a school teacher by profession, and retired as the Principal of Thiruvattar Govt. School, died suddenly on 26 May 1995 after suffering from a massive heart attack while on a journey to Thiruvananthapuram. He was aged 64 at the time of his death. He is survived by his wife, children, children-in-law and grandchildren.


Popular songs
Song Film
Aathmavidyalayame Harishchandra
Eeswara chintha ithonne manujanu Bhakta Kuchela
Nale Nale ennayittum Bhagavane Bhakta Kuchela
Ganga Yamuna Hotel Highrange
Sangeethame Jeevitham Jail Pulli
Osana, Osana Snapaka Yohannan
Mattoru Seethaye Tharavattamma
Ekanthathyude Apara theeram Bhargavi Nilayam
Pancha Varna Thatha Pole Karutha kai
Asoka Vanathile Seethamma Kallichellamma
Marakkan Kazhiyumo Kannur Deluxe
Padachavan Padachappol Kayamkulam Kochunni
Panineer Malarinorithal kozhinjalum Njana Sundari
Thumpappoo peyyana poonilaave Randidangazhi
Poovinu manamilla kinavinu kulirilla Chilamboli
Chandrande prabhayil chandana mazhayil
Poothaliyundo kinave poopanthalundo nilave Indulekha
Mindathathenthanu thathe Njanasundari
Kanninayum kanninayum bandham nischayichu Lady doctor

JEYALAKSHMI ( RADHA ) LEGEND SINGER BORN/ DIED MAY 26, 2014




JEYALAKSHMI ( RADHA ) LEGEND SINGER 
BORN/ DIED MAY 26, 2014



ஜெயலக்ஷ்மி [ராதா-ஜெயலக்ஷ்மி] பின்னணிப் பாடகி
மேடைக்கச்சேரிகளிலும், திரையிசைப் பாடல்களிலும் பிரபலமாக விளங்கியவர்கள் ராதா-ஜெயலக்ஷ்மி இருவரும். ஆண்கள் மட்டுமே மேடைகளில் கச்சேரிகள் செய்துவந்த 1930-களில் கர்நாடக சங்கீத கச்சேரிகளில் ஒரு புரட்சி நடக்கத் தொடங்கியது. மேடைகளில் பெண் பாடகிகள் தோன்றி இசை ரசிகர்களை ஈர்க்கத் தொடங்கினார்கள். அந்த வரிசையில் ராதா ஜெயலட்சுமி சகோதரிகள் பிரபலமான பாடும் இணையாக பவனி வந்தார்கள்.

மிக இளவயதிலேயே தங்கள் இனிய குரல் வளத்தாலும், விறுவிறுப்பான இசையினாலும் இசை ரசிகர்களைக் கவர்ந்தார்கள். ராதா-ஜெயலக்ஷ்மி சகோதரிகளில் ஜெயலக்ஷ்மிக்கு சினிமாவுக்குப் பொருத்தமான குரல் அமைந்திருப்பதை அறிந்து 1950-இல் கே.ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த ”ஏழை படும்பாடு” திரைப்படத்தில் விதியின் விளைவால் அனாதையானேன் என்ற சோகப் பாடலை பாடியபடியே திரையிசையில் காலடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் 1951-இல் வீணை எஸ்.பாலசந்தர் ‘கைதி’ என்ற ஒரு படத்தை எடுத்தார். இதில் பாலசந்தரே கதாநாயகன் விஜயனாக நடித்தார். இந்தப் படத்தில் ஜெயலக்ஷ்மிக்கு ஒரு பாடல் அமைந்தது. கதாநாயகன் விஜயனை
சந்தோஷப்படுத்துவதற்காக பாடும் ஒரு பாடல் We happy we cheerful we jolly. ஆங்கிலம் கலந்த பாடல். மேற்கத்திய இசையிலான பாடல். கீர்த்தனை, ஸ்வரம், என்று பழக்கப்பட்ட ஜெயலக்ஷ்மிக்குப் புதிய அனுபவம் இது. ஆனாலும் மிக நன்றாகவே பாடினார். இந்தப் பாடலில் இடையிடையே வரும் வசனங்களையும் அவரே பேசி பாடலை வெகு சிறப்பாகவே பாடியிருந்தார்.


1952-இல் ”தாய் உள்ளம்” படத்தில் ஜெயலக்ஷ்மியின் மற்றொரு வெற்றிப் பாடல் அமைந்தது. ‘போக்கிரிப்பயலே உன்னைத் தூக்கவே மாட்டேன்’ குறும்பு செய்யும் குழந்தையை நோக்கித் தாய் பாடும் பாடல். தாயின் பாசத்தோடு இயற்கையாக அமைந்த ஒரு பாடல். 1953-இல் வெளிவந்த ‘கூண்டுக்கிளி’ படத்தில் கே.வி.மகாதேவனின் இசையில் ’பாரு மகளே பாரு’ என்ற பாடலைப் பாடினார். ‘மனோகரா’ படத்தில் கலைஞர் கருணாநிதியின் பாடல் ‘சிங்காரப் பைங்கிளியே பேசு’ இதை
ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து பாடினார். கே.வி.மகாதேவனின் இனிய இசையில் ‘மாங்கல்யம்’ என்ற படத்தில் ’ஒட்டும் இரு உள்ளங்களை வெட்டுவது ஞாயமல்ல’ என்ற பாடலும் ஜெயலக்ஷ்மியைத் திரையிசையுலகில் வெற்றி பெறச் செய்த பாடல்களுள் ஒன்றாகும். 1954-இல் ‘எதிர்பாராதது’ என்ற படத்தில் ‘ஜெகமே நீயே அம்மா’ என்ற பாடல் சிறப்பாக அமைந்தது.
1955-இல் டவுன் பஸ், மேனகா, முல்லை வனம், காஞ்சனா போன்ற படங்களிலும் பாடியிருக்கிறார். 1950-களில் எஸ்.எம்.சுப்பையா, கே.வி.மகாதேவன், ஜி.ராமனாதன் போன்ற இசையமைப்பாளர்கள் ஜெயலக்ஷ்மிக்குத் தொடர்ந்து பாடுவதற்கு சந்தர்ப்பங்கள் கொடுத்து வந்தார்கள்.

பி.ஆர்.பந்துலு தயாரித்த படம் ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’. இந்தப் படத்தில் பாரதிதாசன் இயற்றிய பாடலான ’வெண்ணிலாவும் வானும் போலே’ என்ற பாடலை ஜெயலக்ஷ்மி மெருகூட்டிப் பாடினார். சி.என்.பாண்டுரங்கம் 1958-இல் பூலோக ரம்பை’ என்ற படத்தில் 4 பாடல்கள் பாடுவதற்கு சந்தர்ப்பம் அளித்தார். இதில் ஆசை நெஞ்சமே என்ற பாடலை ஏ.எம்.ராஜாவோடு இணைந்து பாடினார். வேதாவுக்கு இசைத்திறமையை வெளிப்படுத்த வாய்ப்புத் தந்த படம் ‘அன்பு எங்கே’. இது 1958-இல் வெளிவந்தது. இதில் இந்துஸ்தானி இசையில் அமைந்த ஒரு நடனப்பாடல் தான் “காயா பழமா சொல்லு ராஜா”.
மிகப் பெரிய பட நிறுவனமான ஜெமினியில் இரும்புத்திரை படத்தில் பக்தி மணம் கமழும் விதத்தில் ஒரு இனிமையான பாடலைப் பாடியிருக்கிறார். என்ன செய்தாலும் துணை நீயே என்ற கரஹரப்ரியாவில் அமைந்த பாடல் எஸ்.வி.வெங்கட்ராமனின் இசையில் பாபநாசம் சிவனின் பாடல். 1959-இல் மரகதம் என்ற படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையில் ’மாலை மயங்குகின்ற நேரம் பச்சை அருவிகள்’ என்ற பாடல் ரசிகர்களை மயக்கியது. இந்தியிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட ‘அக்பர்’ திரைப்படத்தில் எஸ்.வி.வெங்கட்ராமனின் இசையமைப்பில் ஒரு இனிமையான பாடலைப் பாடியிருக்கிறார்.

அம்மன் அருள், தெய்வம், நத்தையில் முத்து போன்ற படங்களில் ஜெயலக்ஷ்மி பாடிய பாடல்கள் நெஞ்சம் நிறைந்த பாடல்களாக அமைந்துவிட்டன. ஜெயலக்ஷ்மி பாடல்களைப் பாடினாலும் இசைத்தட்டுக்களில் ராதா-ஜெயலக்ஷ்மி என்றே வெளியிடப்பட்டு வந்தது. ஆதி பராசக்தி என்ற படத்தில் கே.வி.மகாதேவனின் இசையில் கவியரசு கண்ணதாசன் இயற்றிய ஒரு பாடல் ஜெயலக்ஷிமியின் திறமையை வெளிப்படுத்திய ஒரு பாடலாக அமைந்தது. ‘கொக்கு பறக்கும் அந்த குளக்கரையில்’ என்பதே அந்தப் பாடல்.
ராதா-ஜெயலட்சுமி இரட்டையர்களில் ஜெயலட்சுமி அவர்கள் 2014 மே 26 -அன்று தனது 82-ஆவது வயதில் சென்னையில் காலமானார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், வர்த்தக சேவையில் ஒலிபரப்பாகும் “இன்னிசைச் சுவடிகள்” என்ற நிகழ்ச்சியில் சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி. விசாலாக்ஷி ஹமீது அவர்கள் தொகுத்தளித்த நிகழ்ச்சியிலிருந்து; மேற்படி விவரங்கள் திரட்டப்பட்டன.

Thursday, 15 March 2018

S.M.SUBBAIYA NAIDU ,MUSIC DIRECTOR BORN 1914 MARCH 15




S.M.SUBBAIYA NAIDU ,MUSIC DIRECTOR 
BORN 1914 MARCH 15





‘‘வாய்யா ஹீரோ,’’ என்று  டி. எம். செளந்தரராஜனை இசை அமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு வாய் மணக்க அழைப்பார். 
கம்பீரமான குரலும் கதாநாயக நடிகர்களுக்கு சிறப்பாகப் பாடும் வாய்ப்பும் செளந்தரராஜன் பெற்றிருந்ததால், அவரை ‘ஹீரோ’  என்று அழைப்பார் நாயுடு. ஆனால் அப்படி டி.எம்.எஸ்ஸை உருவாக்கியதில் நாயுடுவுக்கு கணிசமான பங்கு இருந்தது! 
டி.எம்.எஸ். புன்னகைத்தவாறே சுப்பையா நாயுடு அருகில் வந்து அமர்வார். நாயுடுவுக்கு செளந்தரராஜன் என்றாலே ஒரு அன்பு, நட்புறவு. 
கிருஷ்ண விஜயம் என்ற படத்தில் செளந்தரராஜனை முதன்முதல் பாடவைத்தவர் நாயுடுதான்.  அப்படி டி.எம்.எஸ். பாடிய முதல் பாடல், ‘ராதே நீ என்னை விட்டு ஓடாதேடி’. சிந்தாமணியில் பாகவதரின் 
வெற்றிப் பாடலான ‘ராதே உனக்கு கோபம் ஆகாதடி’ மெட்டில் அமைந்த பாடல்.
பின்னர் செளந்தரராஜன் தனக்கென்று ஒரு பாணி அமைத்துக்கொண்டு முன்னேறிய காலகட்டத்தில், அவரைப் பல நல்ல பாடல்கள் பாடவைத்தார் சுப்பையா நாயுடு. எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரான சுப்பையா நாயுடு, பட்சிராஜா ஸ்டூடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு எடுத்த மலைக்கள்ளனுக்கு இசை அமைத்தார். டி.எம்.எஸ்ஸை எம்.ஜி.ஆருக்கு முதன்முதல், ‘எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்று பாட வைத்தார். படமும் பாடலும் மிகப்பெரிய வெற்றி அடைந்தன.
எம்.ஜி.ஆர் தானே தயாரித்து, இயக்கி இரு வேடங்களில் நடித்த படம், நாடோடி மன்னன். அதில்,  ‘தூங்காதே தம்பி தூங்காதே’ என்று சுப்பையா நாயுடுவின் இசையில்  வெற்றிகரமாகப் பாடினார் டி.எம்.எஸ்.
தாய்ப்பாசத்தின் உயர்வை மிகச் சிறப்பாக கூறும் சினிமா பாடல்களில் ஒன்று, ‘அன்னையைப் போல் 
ஒரு தெய்வமில்லை’. கா. மு. ஷெரீப் 
எழுதிய இந்தப் பாடலை சிவாஜி கணேசனுக்காக நாயுடுவின் இசை அமைப்பில் டி. எம்.எஸ். மிக உருக்கமாகப் பாடினார்.
எல்லோருடனும் அன்பாகப் பழகுவது, பணத்தாசை இல்லாமல் இருப்பது, காலத்திற்கு ஏற்ப 

இசையின் வண்ணங்களை 
கொஞ்சம் மாற்றியமைத்துக் 
கொள்வது என்கிற குணாம்சங்களால்,  தொடர்ந்து இசை அமைக்கும் வாய்ப்புகளைப் பெற்றிருந்தார் சுப்பையா நாயுடு. 
அறுபத்தி எட்டில் ஜெய் சங்கர், ஜெயலலிதா ஜோடியாக நடித்த படம், முத்துச்சிப்பி. அதில் பளிச்சென்று ஒலிக்கும் ஒரு டூயட் பாடலை டி.எம்.எஸ், பி.சுசீலாவிற்காக அமைத்தார் சுப்பையா நாயுடு. பாடல், ‘ஒரு நாள் பழகிய பழக்கம் அல்ல’.
அடுத்த ஆண்டு வந்த மன்னிப்பு படத்தில், நாயுடுவின் இசையில் டி.எம்.எஸ். பாடிய ‘நீ எங்கே என் நினைவுகள் அங்கே’ பாடலும் ‘வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்’ பாடலும் நாயுடுவின் வனப்பான இசைக்கு வாகான எடுத்துக்காட்டுகளாக அமைந்தன. 
ஒரு காலத்தில் நாயுடுவின் சக இசை அமைப்பாளரான சி.ஆர்.சுப்பராமன் அவரைக் கேட்டிருந்தார் - ‘‘என்ன, நாயுடு...இந்த செளந்தரராஜ பாகவதரை எப்படிப் பாட வைக்கிறீங்க. எதுவும் வர மாட்டேங்குதே அவருக்கு’’ என்று. 
‘‘அப்படியா? அப்போ அவருக்கு என்ன வருதோ அதை வச்சுப் பாட வைங்க,’’ என்று நாயுடு பதில் கொடுத்திருந்தார். எப்படி அவருடைய வழி? அந்தப் பாதையில் சென்று செளந்தரராஜனை எத்தனை வெற்றிப் பாடல்கள் பாட வைத்தார் சுப்பையா நாயுடு ! 
கோவையில் சுப்பையா நாயுடுவின் இசையில் தன்னுடைய அறிமுகப் பாடல்களைப் பாடிவிட்டு, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் பாட வந்தார் 
டி.எம்.எஸ். 
அங்கே பெருமைக்குரிய ஒரு ஆஸ்தான இசை அமைப்பாளராக கொடிகட்டிப் பறந்தார் சங்கீத சக்ரவர்த்தி ஜி. ராமநாதன். மந்திரி குமாரி படத்தில் அநியாயக்காரர்களை எதிர்த்து ஒரு குடியானவன் பாடுவதாக அமைந்த, ‘அன்னம் இட்ட வீட்டிலே’ பாடலை செளந்தரராஜன் பாட வேண்டும்.
எஸ்.எம். எஸ். என்பது இன்றைய சமுதாயத்துடன் ஒன்றி விட்டது. 1940 களில் எஸ்.எம்.எஸ்.என்றால் பிரபல இசை அமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவைக் குறிக்கும் வார்த்தையாக அமைந்தது.
கவியரசு கண்ணதாசனின் முதல் பாடலுக்கு இசை அமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் திறமையை இனம் கண்டவர் ரி.எம். சௌந்தரராஜனின் முதலாவது பாடலுக்கு இசை அமைத்தவர். எம்.ஜி.ஆரின் முதலாவது கொள்கை விளக்கப் பாடலை உருவாக்கியவர் போன்ற பெருமைகளை உடையவர் எஸ்.எம்.சுப்பையாநாயுடு.

மூன்று தலைமுறை நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்த இவரின் குடும்பத்துக்கும் இசைக்கும் எதுவித தொடர்பும் இல்லை.
முத்து சாமி நாயுடு என்ற பொலிஸ்காரனுக்கு 1914 ஆம் ஆண்டு பிறந்தவர் சுப்பையா நாயுடு. திருநெல்வேலி மாவட்ட கடையநல்லூரில் பிறந்த சுப்பையா நாயுடு சிறுவயதில் அடங்காத பிள்ளையாக இருந்தார். சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தால் மகன் திருந்துவான் என்ற நம்பிக்கையில் சுப்பையா நாயுடுவை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அழைத்துச் சென்றார் தகப்பன்.
சிறுவர் சீர்திருத்தப்பள்ளியின் பொறுப்பதிகாரி சுப்பையா நாயுடுவின் மேல் இரக்கப்பட்டு சிறுவனை சீர்திருத்தப்பள்ளியில் அனுமதிக்காது தனது பொறுப்பில் வளர்த்தார். 
துடுக்குத்தனம் மிகுந்த அடங்காத சிறுவன் சுப்பையா நாயுடு அங்கும் தன் கை வரிசையைக் காட்டினார். சுப்பையா நாயுடுவின் நடவடிக்கை 
பிடிக்காததனால் அவரை மீண்டும் தகப்பனிடம் அனுப்பி வைத்தார் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியின் பொறுப்பதிகாரி.
அடங்காத பிள்ளையைஅடித்து வளர்த்தார் தகப்பனார். வீட்டிலே இருந்தால் பிரச்சினைஅதிகமாகும் என்பதனால் 100 ரூபா காசுடன் வீட்டை விட்டு வெளியேறினார். சுப்பையா நாயுடு. சிங்கப்பூருக்குச் சென்றால் கை நிறைய சாம்பாதிக்கலாம் என்று அறிந்ததும் சிங்கப்பூர் செல்வதற்காக தஞ்சாவூருக்குச் சென்றார்.
தஞ்சாவூரில் முகாமிட்டிருந்த ஜகந்நாத ஐயரின் நாடகக் கம்பனியில் இருந்த இரண்டு சிறுவர்கள் ஓடி விட்டனர் என்ற செய்தி பரபரப்பாக இருந்த வேளையில் தான் சுப்பையா நாயுடு தஞ்சைக்குச் சென்றார். சிறுவனான சுப்பையா நாயுடுவைப் பார்த்த ஒருவர் நாடகக் கம்பனியில் இருந்து ஓடி வந்த சிறுவன் என்று நினைத்து அவரைப் பிடித்துக் கொடுக்க முயற்சி செய்தார். நிலைமையை உணர்ந்து சுப்பையா நாடக கம்பனி எங்கே இருக்கிறது என்று கேட்டு சென்று அங்கு தஞ்சமடைந்தார்.
விதி சுப்பையா நாயுடுவை நாடகக் கம்பனியில் இணைத்தது. அதன் காரணமாக மிகச் சிறந்த இசை அமைப்பாளர் ஒருவர் தமிழகத்திரை உலகுக்கு கிடைத்தார். சுப்பையா நாயுடுவின் குரல்வளம் நன்றாக இருந்ததால் அவருக்கு நாடகக் கம்பனியில் இடம் கிடைத்தது. ஜாகந்நாதையரிடமிருந்து நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை பிறந்தபோது சுப்பையா நாயுடு அவருடன் சென்றார். சுவாமி ராஜமாணிக்கப்பிள்ளையின் ஆசியுடன் தனது சங்கீத அறிவை வளர்த்தார் சுப்பையா நாயுடு
.
நவõப்ராஜ மாணிக்கம் பிள்ளையின் நாடகக் கம்பனியில் நடிகராக இருந்த சி.எஸ். ஜெயராமன் தந்தையிடம் இசைப்பயிற்சி செய்யும் போது அதனை கவனமாகக் கேட்டு சங்கீத அறிவை வளர்த்தார் சுப்பையா நாயுடு. இசைக்கலைஞர் டி.என். சுப்பிரமணிய பாகவதரிடம் கீர்த்தனையும், ராஜகோபால் அய்யரிடம் ஆர்மோனியமும் கற்று தனது சங்கீத அறிவை வளர்த்தார். சுப்பையா நாயுடு கம்பனியின் முழு நேர ஆர்மோனியக் கலைஞரானார். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் பக்த ராமதாஸ் என்ற நாடகம் 1935 ஆம் ஆண்டு திரைப்பட மானது. அப்போது எம்.எஸ். சுப்பையா நாயுடுவின் ஆர்மோனிய இசை திரையில் ஒலித்தது. அதன் பின்னர் கோவை சென்றல் ஸ்டூடியோவில் மாதச் சம்பளத்துக்கு ஆர்மோனியக் கலைஞராக கடமையாற்றும் சந்தர்ப்பம் எம்.எஸ். சுப்பையா நாயுடுவுக்குக் கிடைத்தது. ரம்பையின் காதல், பிரகலாதா, ஆர்யமாலா, ஜதகல பிரதாபன், சாலிவாகனன் என்மகன் ஆகிய படங்களில் சுப்பையா நாயுடுவின் ஆர்மோனிய இசை ஒலித்தது.எம்.ஜி.ஆர். முதன் முதலாக நடித்த ராஜகுமாரி என்ற படத்தில் சங்கீத டைரக்ஷன் மெட்டுக்கள் எம்.எஸ். சுப்பையா நாயுடு என்ற பெயர் ஜொலித்தது
ஜுபிடரின் அபிமன்யு படத்தின் காதல் காட்சிக்காக எழுதப்பட்ட பாடலுக்கு எஸ்.எம். சுப்பையா நாயுடு பலவிதமான மெட்டுக்களை அமைத்தார் எனினும், சரியாகப் பொருந்தவில்லை. ஸ்ரூடியோவில் உதவியாளராக இருந்த பையன் போட்ட மெட்டை தற்செயலாக கேட்ட சுப்பையாநாயுடு அந்த மெட்டை பயன்படுத்தினார். திருச்சி லோகநாதனும் ஜீவரத்தினமும் இணைந்து பாடிய புது வசந்தமாமே வாழ்விலே என்ற பாடல் மிகவும் பிரபல்யமானது. அப்பாடலுக்கு இசையமைத்தவர் மெல்லிசை மன்னர் என்று போற்றப்படும் எம்.எஸ். விஸ்வநாதன். இப்பாடலுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் தான் இசையமைத்தார் என்ற உண்மையை பின்னர் சுப்பையா நாயுடு வெளியிட்டார்.
எம்.ஜி.ஆர். முதன் முதலாக கதாநாயகனாக நடித்த "ராஜகுமாரி' படத்துக்கு சங்கீத் டைரக்ஷன், மெட்டுக்கள் எஸ்.எம்.சுப்பையா நாயுடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பழைய படங்களுக்கு ஒருவர் இசையமைக்க இன்னொருவர் மெட்டமைப்பார். கன்னியின் காதலி படத்தின் 10பாடல்களுக்கு சுப்பையா நாயுடுவும் ஐந்து பாடல்களுக்கு சுப்ப ராமனும் இசையமைத்தனர். மோகினி படத்துக்கு சுப்பராமனும் சுப்பையா நாயுடுவும்இசை அமைத்தனர். திகம்பர சாமியார் படத்துக்கு ஜி.ராமநாதனும், சுப்பையா நாயுடுவும் இசை அமைத்தனர்.
கிருஷ்ண விஜயம் படத்துக்கு சுப்பையா நாயுடுவும். சி.எஸ். ஜெயராமனும் இசையமைத்தனர். பாப நாசம் சிவன் எழுதிய ஐந்து பாடல்களுக்கு அவரே மெட்டமைத்தார். சுப்பையா நாயுடுதான் வாத்திய இசையை சேர்த்தார்.
எம்.ஜி.ஆரின் கொள்கைப் பாடல்களையும், பிரசாரப்பாடல்களையும் பாடியவர் ரி.எம். சௌந்தரராஜன் எம்.ஜி. ஆருக்காக ரி.எம். சௌந்தரராஜன் பாடிய முதலாவது பாடல் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார். மலைக்கள்ளன் படத்தில் இடம் பெற்ற இப்பாடல் இந்தக் காலத்துக்கும் பொருத்தமாக உள்ளது. இப்பாடலுக்கு இசை அமைத்தவர் சுப்பையா நாயுடு.
பட்டுக்கோட்டையார் பாப்பாக்களுக்குக் கூறிய அறிவுரை திருடாதே பாப்பா திருடாதே எம்.ஜி. ஆரின் கொள்கை விளக்கப்பாடல்களில் ஒன்றான இப்பாடலை தமிழ்த் திரையுலகுக்குத் தந்தவர் சுப்பையா நாயுடு.
19ஆம் நூற்றாண்டில் தமிழை வாழவைத்த தெய்வீகக்கவிஞர் வள்ளலார். இவருøடய பெருமையுடன் "நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்' என்ற விருத்தத்தை மிகவும் நேர்த்தியாக சூல மங்களம் ராஜ லக்ஷ்மியின் குரலில் தவளவிட்டவர்.
கொஞ்சும் சலங்கை படத்தில் சிங்கார வேலனே தேவா என்ற பாடல் காலத்தால் அழியாது சாகாவரம் பெற்ற பாடல்களில் ஒன்று. காரைக் குறிச்சி அருணாச்சலத்தின் நாதஸ்வர இசைக்கு போட்டியாக ஜானகியின் குரல் ஒலித்தது.
சிங்கார வேலனே தேவா என்ற பாடலுக்கான நாதஸ்வர இசையை ஒலிப்பதிவு செய்து விட்டு நாதஸ்வர ஸ்ருதிக்கேற்ப பெண் குரலைத் தேடினார்கள். பி.லீலா, லதா மங்கேஸ்கர் எனப்பலரும் நாயனத்தின் சுருதிக்கு இசைவாக பாட தங்களால் முடியாது எனக் கூறிவிட்டனர். நாதஸ்வர இசைக்கு லீலாவின் குரல் இசைவாக இருக்கும் என்று மீண்டும் ஒருமுறை அவரிடம் சென்று கேட்டார்கள். ஜானகியின் குரல் நாதஸ்வர இசைக்கு பொருத்தமானதாக இருக்கும் என்று லீலா கூறினார். 
லீலாவின் கூற்று பொய்க்கவில்லை. நாதஸ்வர இசைஎது ஜானகியின் குரல் எது என்ற வேறுபாடு காண முடியாத வகையில் இரண்டும் இணைந்துள்ளன.1962ஆம் ஆண்டு தனித்தனியாக ஒலிப்பதிவு செய்யப்பட்ட நாதஸ்வர இசையையும், ஜானகியின் பாடலையும் ஒன்றாக ஒலிப்பதிவு செய்த ஒலிப்பதிவாளர் ஜீவா பாராட்டுக்குரியவர்.
ஆமேரி ராகத்தில் அமைந்த சிங்கார வேலனே தேவா என்ற பாடல்தான் கண்ணோடு காண்பதெல்லாம் என்ற பாடலின் வெற்றிக்கு மூல காரணமாக அமைந்தது.
தியாகராஜா பாகவதர் பாடிய "ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற வர்ண மெட்டில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதடி' என்ற பாடலை ரி.எம். சௌந்தரராஜனின் குரலில் வெளியிட்டார். இன்றைய ரீ மிக்ஸ்பாடல்களுக்கு இப்பாடல் முன்னோடியாக உள்ளது.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார். திருடாதே பாப்பா திருடாதே. சிங்கார வேலனே தேவா மட்டுமல்ல 1969 ஆம் ஆண்டு மன்னிப்பு படத்தில் சுப்பையா நாயுடுவின் இசையில் உருவான "நீ எங்கே என் நினைவுகள் அங்கே', "வெண்ணிலா வானில் வரும் வேளை' போன்ற பாடல்களும் அவரின் திறமைக்கும் சான்றாக உள்ளன.
ரமணி 
மித்திரன் 04/ 11.01.2009


மின்னலென விரல்கள் ஆர்மோனியக் கட்டைகளை வருட, ராமநாதன் பாடிக்காட்டிய மெட்டை செளந்தரராஜன் மனதில் நிறுத்திக்கொண்டார். பின்னாளில் நூற்றுக்கணக்கான வெற்றிப் பாடல்களை மாடர்ன் தியேட்டர்ஸில் பாடப்போகிறவர் பாடத்தொடங்கியது தான் தாமதம்...
ஒலிப்பதிவை நிறுத்திவிட்டார் ஒலிப்பதிவாளர் பத்மநாபன்.    ராமநாதனிடம் அவர் கூறினார் - ‘‘சார்...இது ரிக்கார்ட் பண்ண லாயக்கில்லாத குரல். பிசிர் அடிக்கிறது.’’
மெல்லச்சிரித்தார் ராமநாதன் -- ‘‘ஆமாம்பா... எப்போதாவது ஒலிக்கும் அந்தப் பிசிர் அழகான பிசிருதான். நான் உத்தரவாதம் தர்றேன். கவலைப் படாம ரிக்கார்ட் பண்ணுங்க,’’ என்றார்.
இந்த வகையில், ஒரு இசை மேதையின் ஆசிகளுடன் அவருடைய இசை அமைப்பில் தனது முதல் பாடலைப் பாடினார் டி.எம்.எஸ். பாடலும் ஓரளவிற்கு வெற்றியும் அடைந்தது.
சென்னைக்கு வாய்ப்பு தேடிச் சென்றவுடன், ராயப்பேட்டை செல்லும் சாலையிலிருந்த ராமநாதனின் வீட்டு வாசலில் ஒவ்வொரு நாளும் நின்று, அவருடைய கவனத்தைக் கவரும் முயற்சியில் இருந்தார் டி.எம்.எஸ்.
இரவு வெகு நேரம் விழித்து நாவல்கள் படிக்கும் பழக்கமுள்ளவர் ராமநாதன்.  எழுந்திருக்க நேரமாகும். எழுந்தவுடன் சட்டுபுட்டென்று நீராடிவிட்டு காரில் ஏறி பறந்துவிடுவார். அதனால் பல நாட்கள் அவர் டி.எம்.எஸ் காத்திருப்பதை கண்டும்காணாமல் இருந்துவிட்டார். கடைசியில் ஒரு நாள், ‘‘என்னடா செளந்தரராஜா...உனக்கு என்ன வேணும்னு இங்கெ வந்து 
தெனம் நிக்குற,’’ என்று கேட்டார். ‘பாடறதுக்கு வாய்ப்பு தருவே ளோன்னுதான் நிக்கறேன்,’’ என்றார் செளந்தரராஜன்.
‘‘இதோ பாரு... படம் எடுக்கறவா உன்னைப் போடணும்னு சொன்னா உன்னைப் பாட வைப்பேன். நானாப்போய் செளந்தரராஜனைத்தான் பாடவைக்கணும்னு சொல்ல 
மாட்டேன்,’’ என்றார் ராமநாதன். இந்தப் பதில் செளந்தரராஜன் மனதில் ஏமாற்றத்தையும் கசப்புணர்வையும்தான் ஏற்படுத்தியது.
ஆனால் அப்புறம் தூக்குத் தூக்கி வந்தது. ராமநாதன் இசை அமைப்பில் செளந்தரராஜன் பாடிய பாடல்கள் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு வழி வகுத்தன. (இதைக் குறித்த விரிவான தகவல்களை, எனது ‘டி.எம்.எஸ் - ஒரு பண்பாட்டுச் சரித்திரம்’ என்று நூலில் காணலாம்)
செளந்தரராஜன் என்ற பின்னணிப் பாடகரை   ‘நான் பெற்ற செல்வம்’, ‘அம்பிகாபதி’, ‘வணங்காமுடி’,  ‘சாரங்கதரா’, ‘உத்தமபுத்திரன்’, என்று படத்திற்குப் படம் பாடலுக்குப் பாடல் அரிய இசை வண்ணங்களில் செதுக்கியெடுத்தார் ராமநாதன்.
‘‘நான் வளர்வதற்கு...என் குரலைப் பக்குவப் படுத்துவதற்கு, நான் தைரியமா பாடறதுக்குக் காரணம் ஜி. ராமநாத அய்யரோட மியூசிக்தான்.  அவர் கொடுத்த வழியிலதான் நான் சிங்கம் மாதிரி பாடினேன். சாரீரத்தில ஆண்மை வேண்டும் என்பார். தானும் அப்படித்தான் பாடிக்காட்டுவார்,’’ என்று என்னிடம் கூறுவார் டி.எம்.எஸ்.  ‘‘என் இதயத்தைப் பிளந்து காட்டினா அதுல ராமநாத அய்யர்தான் இருப்பார்,’’ என்பதும் செளந்தரராஜனின் வாக்குமூலம். 
தான் பாடிய அன்னம் இட்ட வீட்டிலே பாடலை ஹெச்.எம்.வியில் இசைத்தட்டாகப் பதிவு செய்ய சென்றபோது, கே. வி. மகாதேவனை சந்தித்தார் செளந்தரராஜன்.  ஹெச்.எம்.வியில் இசை அமைப்பாளராக இருந்தார் மகாதேவன். பார்த்த மாத்திரத்திலேயே இருவருக்கும் நட்பு மலர்ந்து விட்டது. அடிக்கடி ஹெச்.எம்.வி அலுவலகம் சென்று மகாதேவனை சந்திக்கலானார் டி.எம்.எஸ். 
செலவுக்குப் பணமில்லாமல் சொந்த ஊரான மதுரை திரும்ப வேண்டிய நிலை வந்தபோது, செளந்தரராஜன் குரலில் இசைத்தட்டுகள் பதிவுசெய்து 
செலவுக்கு வழி செய்தார் மகாதேவன். ‘‘மகாதேவன் எனக்கு நண்பராகவும் வழிகாட்டியாகவும் இருந்தார்’’ என்பார் டி.எம்.எஸ்.
மகாதேவனின் இரண்டவாது திரை இசை அத்தியாயம், குமாரி, மதனமோகினி முதலிய படங்களில் தொடங்கியபோது, அவற்றில் 
டி.எம்.எஸ். பாடவில்லை. ஆனால் 
ஏ.பி. நாகராஜன், எம்.ஏ.வேணு ஆகியோருடன் கே.வி.எம். இணைந்த ஒரு வெற்றிகரமான யூனிட் நால்வர் படத்துடன் உருவானது. தொடக்கத்திலிருந்தே அந்தக் குழுவில் இணைந்தார் டி.எம்.எஸ். ஏறுமுகமானது அவருடைய இசைப்பயணம். 
செளந்தரராஜனின் மகாதேவ ராகம், ‘ஏரிக்கரையின் மேலே’ என்ற ரீங்காரம் பெற்று,   ‘மணப்பாறை மாடு கட்டி’ என்று ஏற்றம் உற்று, ‘பாட்டும்  நானே பாவமும் நானே’ என்று திருவிளையாடலில் உச்சத்தைத்தொட்டது, 
முதல் பாடல் வாய்ப்புக்காக கோவை சென்டிரல் ஸ்டூடியோவில் முயற்சி செய்தபோதே, எம்.எஸ். விஸ்வநாதனைப் பார்த்திருந்தார் 
டி.எம்.எஸ். 
ஸ்டூடியோவிற்கு வரும் இசை அமைப்பாளர்களுக்கு உதவியாக இருந்து, இசை அறையையும் ஆர்மோனியப் பெட்டிகளையும் சுத்தமாக வைக்கும் பணிதான் விஸ்வநாதனுக்கு. ஆனால் அப்போதே தன்னுடைய ஞானத்தை அபிவிருத்தி செய்துகொள்ளும் கடுமையான முயற்சியில் இருந்தார் அவர்.  ‘‘நம்மோடு பேசவே மாட்டார் சார். தான் பாட்டுக்கு மறைவா ஆர்மோனியத்தை வாசிச்சப்படி, பாடல்களோட அமைப்பை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருப்பாரு,’’ என்பார் செளந்தரராஜன் (டி.எம்.எஸ் - ஒரு பண்பாட்டு சரித்திரம்).
எம்.எஸ்.வியுடன் அடுத்த சந்திப்பு, மயிலை தெற்கு மாடவீதியின் மேற்கு மூலையில் நடந்தது. ‘‘அண்ணே...நாங்க இப்போ படங்களுக்கு மியூசிக் போடறோம். உங்களுக்கு சொல்லி அனுப்பறோம்,‘’ என்று கம்பெனி வாகனத்தில் அமர்ந்தபடி, தெருவோரம் நின்ற டி.எம்.எஸ்.ஸைப் பார்த்து சொன்னார் எம்.எஸ்.வி.
அப்படி விஸ்வநாதன், ராமமூர்த்தி இணைக்கு முதன்முதல் டி.எம்.எஸ். படம், குலேபகாவலி. 
அதைத் தொடர்ந்து இசை வெள்ளமாக ஆயிரக்கணக்கில் பாடல்கள் வந்தன. பா-வரிசை படங்களின் பாடல்கள் 
ஒரு தேனிசை வரிசையாக வளர்ந்தன. டி.எம்.எஸ்.ஸும் எம்.எஸ்.வி.யும் பாட்டுத்தேரை வடம்பிடித்து இழுத்தபோது, அவர்கள் பரஸ்பரம் கைகளை இழுத்துக்கொண்டு அவதிப்பட்டதும் உண்டு. 
நிலவைப் பார்த்து வானம் சொன்னது பாடல் பதிவின் போது ‘டேக்’குகள் ஒரு பக்கம் கூடிக்கொண்டே போக, சர்க்கரை நோய் இருந்த செளந்தரராஜன் பசி பொறுக்க முடியாமல், ‘எனக்கு உங்கப் பாட்டே வேண்டாம்’னு வெளிநடப்புசெய்த சங்கதியெல்லாம் உண்டு. 
ஆனால் பாட்டு வண்டி தடம் புரளாமல் இருந்தது என்றால், உள்ளூற இருந்த இனிமையால்தான்.  உரசல்களை மீறி, ‘ஒரே சூரியன், ஒரே நிலா, ஒரே ஒரு எம்.எஸ்.வி’ என்று டி.எம்.எஸ். பதிவு செய்தார் (மெல்லிசை மன்னர்கள் பாட்டுப் பயணம்). 
சங்கர் கணேஷும் வி. குமாரும் செளந்தரராஜனைப் பாட வைத்த இசை அமைப்பாளர் வரிசையில் முக்கிய இடம் பெறுபவர்கள். மெலடி யுகத்தில் அவர்களுடைய பங்களிப்பிற்கும் குறைவில்லை என்பதற்கு செளந்தரராஜனின் வெற்றிப் பாடல் வரிசையே சான்று 
இளையராஜா அலை முதலில் கரையைத் தொட்ட போது செளந்தரராஜனின் குரலும் பாங்காக ரசிகர்களின் செவிகளை அடைந்தது (அன்னக்கிளி உன்னெத் தேடுதே, நல்லவர்க்கெல்லாம்..இத்யாதி). 
ஆனால் ராஜா, ராஜாதி ராஜா 
ஆனபோது செளந்தர-ராஜாவிற்கு 
அங்கு இடம் இல்லை! அதனால் என்ன. மற்ற இசை அமைப்பாளர்கள் 
அமைத்துக் கொடுத்த ராச்சியங்கள் அவருக்குப் போதுமானதாக இருந்தன. உலகம் சுற்றும் வாலிபனுக்குப் பாடியவர், தானே உலகம் சுற்றும் வாலிபர் ஆகிவிட்டார். 

10. "இந்த உலகில் இரண்டே இரண்டு சக்திகள்தான் மிகுந்த பலம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அவை கத்தியும், புத்தியும் தான். ஆனால் போகப்போக கத்தியின் சக்தி எப்போதும் அறிவின் பலத்திற்கு முன்னால் தோற்றுப்போய் விடுகிறது.”
- மாவீரன் நெப்போலியன் போனபார்ட் 

வருடம் 1961. மார்ச் மாதம் 23ஆம் தேதி - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "திருடாதே" படம் வெளிவந்தது. கவிஞர் கண்ணதாசனின் சகோதரர் திரு. ஏ.எல். சீனிவாசன் அவர்கள் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இணை சரோஜாதேவி. இந்தப் படத்துக்கு கதை வசனம் கண்ணதாசன் எழுதினர். இசை அமைத்தார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

"திருடாதே" படத்தின் மாபெரும் வெற்றி எனது திரை உலக வாழ்வுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது" என்று தனது சுயசரிதையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு மக்கள் நாயகனாக, ஏழைகளின் பாதுகாவலனாக, கஷ்டப்படுபவர்களின் காவல் தெய்வமாக அவர் மக்கள் மத்தியில் உருவாவதற்கான வலுவான பார்முலா இந்தப் படத்தில் தான் உருவானது எனலாம். இதற்கு முன்பே என் தங்கை, மலைக்கள்ளன், தாய்க்கு பின் தாரம் ஆகிய படங்கள் வெளிவந்து இருந்தாலும் அவருக்கென்று ஒரு தனி பார்முலாவில் படங்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்த படம் "திருடாதே" படம்தான்.

இந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதி டி.எம்.எஸ். பாடிய பாடல் "திருடாதே பாப்பா திருடாதே" பாடல். சின்னஞ்சிறுவர்கள் மனதில் அழுத்தமாக பதிவாகும் அற்புத வரிகளை பாடலாசிரியர் அமைக்க அதற்கு படம் வெளிவந்து ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னாலும் நிலைத்திருக்கும் வண்ணம் அதி அற்புதமாக இசை அமைத்திருக்கிறார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

பய உணர்ச்சி மழலை பருவத்தில் தானே ஆரம்பிக்கிறது. அப்போதே தன் திறமையின் மீது நம்பிக்கையை ஊட்டிவிட்டால்..? அவர்கள் வளரும்போது அந்த தன்னம்பிக்கையும் கூடவே வளர்ந்து விடுமே .. இதைத்தான் பாடலின் பல்லவியிலேயே கல்யாணசுந்தரம் ஊட்டிவிடுகிறார்

"திருடாதே பாப்பா திருடாதே - வறுமை நிலைக்கு பயந்துவிடாதே. திறமை இருக்கு மறந்துவிடாதே" -

சுப்பையா நாயுடுவின் இசையில் டி.எம்.எஸ். அவர்களின் குரலும் குழந்தைகளிடம் பரிவையும் கனிவையும் காட்டுகிறது. அற்புதமான ஆடம்பரமில்லாத ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான இசையும், பாவம் ததும்ப டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கும் விதமும் பாடலை நிலை நிறுத்தி இருக்கிறது.

பாடல் மேலும் வளர்கிறது :

"சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து. சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ 
தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ.
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ - திருடாதே பாப்பா திருடாதே."

எத்தனை எளிமையான அதே சமயம் குழந்தைகளுக்கு சொல்லவேண்டுமே என்ற கவனத்தோடு புனையப்பட்ட வார்த்தைகள்.

தவறுகளை திருத்திக்கொள்வதற்கும் அது திரும்பவும் வராமல் கவனமாக இருக்கவும் பாடலை அமைக்கும் போது பாடகரின் குரலும் பாடல் வரிகளை உணர்த்து பாடுகிறது. அந்த கருத்தை கவனமாகப் பதியவைக்கும் வகையில் இசை அமைப்பும் அமைந்து இருப்பது பாடலின் சிறப்பு.

"திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது.
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது. - என்கிற கவிஞர் திருட்டை ஒழிப்பதென்பது
" திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" - என்ற நிதர்சனமான உண்மையையும் பாடலில் உரைக்கிறார். எக்காலத்துக்கும் பொருந்தும் வரிகள்.

மனம் கண்டதையும் நினைக்காமல் இருக்க என்ன வழி?. பாடலின் கடைசி சரணத்தின் வரிகளில் டி.எம்.எஸ். அவர்களின் குரலை மெல்ல மெல்ல உச்சத்தில் ஏற்றி அழுத்தமாகப் பதிவு செய்கிறது பாடல்.
"உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்குற நோக்கம் வளராது - மனம் கீழும் மேலும் புரளாது." 
அளவான இசைக்கருவிகளைப் பயன்படுத்தி ஒரு அற்புதமான பாடலைக் கொடுத்திருக்கிறார் எஸ்.எம். சுப்பையா நாயுடு. பாடலைக் கேட்டும் காட்சியைக் கண்டும் இன்புற இணைப்பு: (http://www.youtube.com/watch?v=UzN8Fs2AYc4)

தங்களது முந்தைய படத்துக்காக விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசையில் பதிவான ஒரு பாடலை படத்தின் நீளம் கருதி அந்தப் படத்தில் பயன்படுத்திக்கொள்ள தயாரிப்பாளர் ஏ.எல். சீனிவாசன் அவர்களால் முடியாமல் போனது. அதனை தங்களது "திருடாதே" படத்தில் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார் அவர்.

பொதுவாக இசை அமைப்பாளர்கள் தங்கள் படத்தில் இன்னொரு இசை அமைப்பாளரின் பாடலைப் பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள். அதுவும் வளர்ந்து வரும் இசை அமைப்பாளரின் பாடல் என்றால் கண்டிப்பாக சம்மதிக்கவே மாட்டார்கள்.

எனவே தயாரிப்பாளர் தரப்பில் ஒருவித தயக்கத்துடனே எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

"பாட்டு யார் போட்டது?" சுப்பையா நாயுடுவின் கேள்வி இது.

"விஸ்வநாதன்-ராம..." என்று முடிக்கக்கூடவில்லை.

"அட. நம்ம பையன் விஸ்வநாதன் போட்ட பாட்டா? அதுக்கென்ன? தாராளமா வச்சுகிட்டாப் போச்சு" என்று உற்சாகமாக சம்மத்திதார் சுப்பையா நாயுடு. 

அந்தப் பாடல் தான் கண்ணதாசன் எழுதி பி. பி. ஸ்ரீனிவாஸ் - பி. சுசீலா பாடிய "என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்" - என்ற டூயட் பாட்டு.

படத்தின் டைட்டிலில் இரட்டையர்களின் பெயர் இடம் பெறவில்லை என்றாலும் இன்றுவரை திருடாதே படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் "விஸ்வநாதன்-ராமமூர்த்தியின்" பாடலாகத்தான் வலம் வந்துகொண்டிருக்கிறது.

மெல்லிசை வளர்ந்து வந்த காலத்திலும் தயாரிப்பாளர்களால் விரும்பப்படும் இசை அமைப்பாளராக அவர் இருந்தமைக்கு அவரது இந்தப் பரந்த மனப்பான்மையும் ஒரு காரணம். அதனால் தான் வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களாவது அவரது இசையில் வெளிவந்து பாடல்களும் நிலைத்து நின்று திரை இசை உலகில் அவருக்கென்று ஒரு தனி இடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது

"திருடாதே" படம் வெளிவந்த அதே வருடம் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்களின் இசையில் இன்னொரு படமும் வெளிவந்தது.

தமிழில் முதல் "டெக்னிக்" வண்ண திரைப்படம் என்ற பெருமைக்குரிய படம் அது.

நடனக் கலைக்கும் இசைக் கலைக்கும் முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்ட 
இந்தப் படத்துக்காக ஒரு பாடல் பதிவாக்கம் செய்யப்பட்டது.

அந்தப் பாடல் பதிவானதே ஒரு சுவாரஸ்யமான கதை. கதைப்படி நாயகன் நாதஸ்வரம் வாசிக்க நாயகி பாடவேண்டும். ஆபேரி ராகத்தில் முதலில் பிரபல நாதஸ்வர வித்வான் காருகுறிச்சி அருணாசலம் அவர்களில் நாதஸ்வர இசை பதிவு செய்யப்பட்டது. 
அந்தப் பத்து நிமிட நாதஸ்வர இசைக்கும் அதன் ஸ்ருதிக்கும் இணைந்து பாடவேண்டிய பாடகியாக யாரைத் தேர்வு செய்வது?
.
அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்த பாடகி பி. லீலா அவர்கள்தான். ஆனால் லீலாவோ நாதஸ்வரத்தின் ஸ்ருதியோடு இணைந்து பாட தன்னால் முடியாது என்று மறுத்துவிட்டார். அதன் பிறகு வேறு யாரை எல்லாமோ கேட்டுப்பார்த்துவிட்டார்கள்.

எல்லாருமே மறுத்து விட்டனர். கடைசியாக ஒருமுறை பி. லீலாவையே மீண்டும் அணுகி கேட்டுப் பார்ப்பது அவர் மறுத்துவிட்டால் காட்சியையே கைவிட்டுவிடுவது என்று தீமானித்து மறுபடி லீலாவிடம் கேட்டனர்.

லீலாவோ "என்னால் பாடமுடிந்தால் நான் மறுப்பேனா?. என்றாலும் எனக்கு தெரிந்து நாதஸ்வரத்தின் இசையோடு இணைந்து பாடக்கூடிய பாடகி ஒருவர் இருக்கிறார். குழலிசையும் அவர் குரலிசையும் வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாமல் ஒன்றிப் போய்விடும். இந்தப் பாடலைப் பாடக்கூடிய திறமைசாலி அவர் ஒருவர் தான். அவர் ஒருவரால் தான் இந்தப் பாட்டை பாட முடியும் " என்று அப்போதுதான் வளர்ந்து வந்துகொண்டிருந்த புதிய பாடகி ஒருவரை அடையாளம் காட்டி தன்னைத் தேடிவந்த அந்த வாய்ப்பை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்து இன்றளவும் அவரது பெயர் பாடலுடன் நிலைத்திருக்க வைத்தார்.

பி. லீலாவால் பலமாக பரிந்துரைக்கப் பட்ட அந்தப் பாடகி - திருமதி எஸ். ஜானகி.

பாடல் : "சிங்கார வேலனே தேவா."

எஸ்.எம். சுப்பையா நாயுடுவின் அற்புதமான இசையில் பாடல் இடம் பெற்ற 
படம் : "கொஞ்சும் சலங்கை."