Showing posts with label COMMITTED. Show all posts
Showing posts with label COMMITTED. Show all posts

Tuesday, 26 May 2020

VIJI , OF KOZHI KOOVUTHU , COMMITTED SUICIDE BORN 1966 MAY 26 -NOVEMBER 27,2000


VIJI , OF KOZHI KOOVUTHU ,
COMMITTED SUICIDE BORN
 1966 MAY 26 -NOVEMBER 27,2000


.விஜி (Viji) தமிழ் படங்களில் நடித்துள்ள ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். கோழி கூவுது என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அவர் தனது முதல் படத்தில் அறிமுகமாகி 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[3]


1997- 2002 வரையான காலகட்டங்களில் நான் நியூமராலஜி பயின்று கொண்டிருந்தேன் அப்போது நிறையபேருக்கு பலன்களை தபாலில் அனுப்பியிருந்தேன் அதில் ஒருவர் கோழிகூவுது விஜி
இவருடைய பெயர் கூட்டுத்தொகை ஒன்பது. பிறந்த தேதி 26 .05.1966
எனவே வாழ்க்கையில் மிகப்பெரிய ஆபத்து காத்திருப்பதாக எழுதினேன் 1999.
அதே நாளில் நடிகை நக்.மா விற்கும் கூட எழுதி அனுப்பியிருந்தேன் பிற்காலத்தில் மக்கள் சமூக பணியில் இருப்பீர்கள் என்று எழுதி அனுப்பி யிருந்தேன்
நக்.மா போட்டோவுடன் அவர் ஜாதகத்தையும் அனுப்பியிருந்தார்
@@@@@@@@@@@@@@@@@@@@@@ 

சுயசரிதை
கங்கை அமரனின் கோழி கூவுது என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்திற்கு பிறகு அவர் "கோழி கூவுது" விஜி என அழைக்கப்பட்டார்.[4][5][6]

பூவே உனக்காக படப்பிடிப்பின் போது இவருக்கு இடுப்பு மற்றும் முதுகு வலி ஏற்பட்டது[7] 1996இல் இவருக்கு முள்ளந்தண்டு வட அறுவை சிகிச்சை அப்போலோ மருத்துவமனையில் நடந்தது. அறுவை சிகிச்சை தோல்வியடைந்தது மற்றும் அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டதை மருத்துவர்கள்


கண்டுபிடித்தனர்.[8] மேலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு,[7] விஜி தற்காலிக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.[6][9] அப்போலோ மருத்துவமனைகளுக்கு எதிராக ஒரு வழக்கை அவர் தாக்கல் செய்தார் , மருத்துவமனை நிர்வாகம் இவருக்கு ரூ .30,000த்தை திரும்ப வழங்கியது.[8] விஜி ஒரு சரியான அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் தனது பழைய நிலைக்குத் திரும்பினார்[10] 2000 இல் மீண்டும் சிம்மாசனம் என்றத் திரைப்படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்தார்.[11] விஜியை பல படங்களில் நடிக்க வைத்த நடிகர் விஜயகாந்த் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த்தார், மேலும் தனது அடுத்த படமான வாஞ்சிநாதன் படத்தில் அவருக்கு ஒரு பாத்திரத்தை வழங்குவதாக


உறுதியளித்திருந்தார்,[12] ஆனால் "சிம்மாசனம்" இறுதியில் அவரது கடைசி படமானது.


கங்கை அமரனின் கோழி கூவுது என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை விஜி. கதாநாயகியாக சுமார் 30 படங்களில் இவர் நடித்துள்ளார். திடீரென இவருக்கு கதாநாயகி வாய்ப்பு மங்கியது.இதனால் சிறிது காலம் படவுலகை விட்டு ஒதுங்கியிருந்த இவர், மீண்டும் சரத்குமாரின் சூரியன் படத்தில் பிரபு தேவாவுடன் ஒத்தப் பாட்டுக்கு ஆடினார். இதன் பிறகு ரஜினியின் உழைப்பாளி, விஜய்யின் பூவே உனக்காக ஆகிய படங்களிலும் ஒரேயொரு பாடலுக்கு மட்டும் ஆடிவிட்டுப் போனார்.பின்னர் திடீரென இவர் நோய்வாய்ப்பட்டார். அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறு மூலம் விஜியின் ஒரு கால் செயல் இழந்தது.தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமானார்.இதன் பிறகு டிவி தொடர்களில் நடித்து வந்த விஜி, டைரக்டர் ரமேஷ் என்பவரை காதலித்தார். ரமேஷுக்கு சுமதி என்ற மனைவியும், குழந்தைகளும் உண்டு. ஆனாலும் விஜி, ரமேஷை


தீவிரமாக காதலித்தார்.ஆனால் விஜியின் காதல் கைகூடவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த விஜி, கடந்த 27.11.2000 அன்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.2000 நவம்பர் 27 அன்று சென்னையில் தனது வீட்டிலேயே விஜி தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணமென ஏற்கனவே திருமணம் செய்து கொண்டஇயக்குநர் ஏ.ஆர். ரமேஷ் என்பவரை குற்றம் சாட்டினர்.[3][13] ரமேஷ் அவரைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்தார், ஆனால் பின்னர் மறுத்துவிட்டார் மற்றும் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ரமேஷ் விஜியை ஒரு விழாவில் சந்தித்தார் என தி இந்து நாளிதழ் எழுதியது.[2] ரமேஷ், அவரது மனைவி ஏ. ஆர். சுமதி மற்றும் அவரது நண்பர் சின்னசாமி ஆகியோர் விஜியின் தற்கொலையை தூண்டியதாக காரணம் காட்டி மகிலா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.[2]










1976ம் ஆண்டு, பஞ்சு அருணாசலம் தயாரித்த ‘அன்னக்கிளி’ மூலமாக இளையராஜா திரையுலகிற்கு வந்தார். அவருடன் கங்கை அமரனும் வந்தார். இசைக்குழுவில் இருந்துகொண்டு பணியாற்றினார்.77ம் ஆண்டு, பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படம் வெளியானது. இந்தப் படத்தில் இளையராஜா முதன்முதலாகப் பாடினார். அதேபோல், கங்கை அமரன், ‘16 வயதினிலே’ படத்தில் ‘செந்தூரப்பூவே’ பாடலை எழுதி, பாடலாசிரியராக அறிமுகமானார்.
இதன்பின்னர், மலேசியா வாசுதேவனின் படத்துக்கு கங்கை அமரன் இசையமைத்தார். ஆனால் படம் நின்றுபோனது. பிறகு, ‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’ படத்துக்கு இசையமைத்தார் கங்கை அமரன். பின்னர் 79-ம் ஆண்டு, பாக்யராஜ் தன் முதல் படமான ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தை இயக்கினார். இந்தப் படத்துக்கு கங்கை அமரன் தான் இசையமைத்தார். ‘காதல் வைபோகமே’ பாடல் இன்றைக்கும் மறக்கமுடியாத பாடலாக அமைந்திருக்கிறது.



இந்தநிலையில், கங்கை அமரன் ஒருபக்கம் பாடல்களை எழுதிக்கொண்டிருந்தார். இசையமைத்துக் கொண்டிருந்தார். பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார். அந்தசமயத்தில், அடுத்த அவதாரத்தை எடுத்தார். அதுதான் ‘கோழி கூவுது’.பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், அதாவது சகோதரர் ஆர்.டி.பாஸ்கர் தயாரிப்பில், இளையராஜா இசையில், கங்கை அமரன் இயக்கத்தில் உருவானது ‘கோழி கூவுது’ திரைப்படம்.சின்னஞ்சிறிய கிராமம். அந்தக் கிராமத்தில், விட்டேத்தியாக இருந்துகொண்டு, கைக்கு ஆட்களையும் சேர்த்துக்கொண்டு, அலப்பறையைக் கொடுத்துக் கொண்டிருப்பார். அவர்தான் பிரபு. அவரின் அக்கா மகள் விஜி. இந்தப் படத்துக்குப் பிறகு அவர் ‘கோழி கூவுது’ விஜி எனப் பேரெடுத்தார்.அந்த ஊரில், சின்னச்சின்னப் பொருட்களை விற்று வரும் சில்க் ஸ்மிதா, பிரபுவைக் காதலிக்கிறார். ஆனால் பிரபுவோ, அக்கா பொண்ணு விஜி மீது ஆசைப்படுகிறார். அந்த சமயத்தில், அந்த ஊருக்கு சுரேஷ், போஸ்ட்மேனாக வருகிறார். அனாதையான அவர் மீது அன்பு காட்டுகிறார்.அவரைப் பற்றி அறிந்துகொண்ட பிறகு, விஜி சுரேஷ் மீது காதல்கொள்கிறார். ஊருக்குள் சின்ன சண்டை. இதனால் அந்த ஊரைவிட்டுச் செல்கிறார் பிரபு. அவர் ஊருக்குச் செல்ல காசு தருகிறார் சுரேஷ். இந்தக் காலகட்டத்தில் விஜி - சுரேஷ் காதல் மலர்கிறது.

ஊரைவிட்டுப் போன பிரபு, ராணுவத்தில் சேருகிறார். காசு சேர்க்கிறார். அக்காப்பொண்ணை கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்கிற கனவையும் சேர்த்துக்கொண்டே வருகிறார். பிறகு ஊருக்கு வருகிறார். அக்காவுக்கு சந்தோஷம். தன் பெண்ணைக் கொடுக்க முடிவு செய்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.இந்தசமயத்தில், தன் காதலை விட்டுக்கொடுக்க தயாராகிறார் சுரேஷ். இதற்காக ஊரை விட்டுச் செல்ல முடிவெடுக்கும் வேளையில், சில்க் ஸ்மிதா தடுத்து நிறுத்தி, இருவரையும் சேர்த்து வைக்க முடிவெடுக்கிறார். இவையெல்லாம் பிரபுவுக்குத் தெரியவர ஆவேசமாகிறார். இறுதியில், சில்க்ஸ்மிதா, அவர்களின் காதலைப் புரியவைக்கிறார். பிறகு, ஊரையே எதிர்த்து, தன் அக்கா மகளையும் சுரேஷையும் சேர்த்துவைக்கிறார். பிறகு, பிரபுவும் சில்க்கும் இணைகிறார்கள்.
கிராமத்துச் சூழலில், சின்னதான கதையையும் காமெடியையும் காதலையும் வைத்துக்கொண்டு அப்படியொரு திரைக்கதை அமைத்து இயக்கியிருந்தார் கங்கை அமரன். ’சங்கிலி’ படத்தில் அறிமுகமான பிரபுவுக்கு, முதல் வெற்றிப் படம் ‘கோழி கூவுது’தான். ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்துக்குப் பிறகு அடுத்தடுத்த படங்கள் வந்தாலும் சுரேஷுக்கு ‘கோழிகூவுது’ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.அதேபோல், சில்க் ஸ்மிதாவுக்கு இப்படியொரு கேரக்டர் அமையவே இல்லை. ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அப்படியொரு கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடித்திருந்தாலும், ‘கோழி கூவுது’ படத்தில், சிட்டு கேரக்டரை ரசிகர்கள் மறக்கவே முடியாது.இதில், நடித்து, பாடி ஆடி நடித்த பிந்துகோஷ்க்கும் கிடைத்தது அருமையான ஆரம்பம்.தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல், அண்ணன் உடையான் படத்துக்கு அஞ்சான் என்றுதான் சொல்லவேண்டும். எவரிடமும் உதவி இயக்குநராக இல்லாமலே, இயக்குநராக பொளந்துகட்டினார் கங்கை அமரன். இசையமைக்கிற படங்களுக்கெல்லாம் பக்கபலமாக இருக்கிற இளையராஜா, இந்தப் படத்திலும் அப்படியொரு உழைப்பைக் கொடுத்திருந்தார்.டைட்டில் பாடல் தொடங்கி எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார் இளையராஜா. ‘அண்ணே அண்ணே’ பாடலும் ‘ஏதோ மோகம்’ பாடலும் படத்தை பட்டிதொட்டிசிட்டி என கொண்டுசென்றன.
டைட்டில் போட்டுக்கொண்டிருக்கும் போது, ‘எங்க அண்ணன்கிட்டயா வம்புக்கு வர்றீங்க? எங்க அண்ணனை யாருன்னு நினைச்சீங்க?’ என்று கங்கை அமரனே சொல்லுவார். ‘இசை இளையராஜா’ என்று டைட்டில் வரும். அதேபோல், ‘இனிமே ஜெயம் உங்க பக்கம்தான்’ என்று சொல்லும்போது, ‘கதை திரைக்கதை வசனம் பாடல்கள் டைரக்‌ஷன் கங்கை அமரன்’ என்று டைட்டில் போடுவார் கங்கை அமரன்.1982ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 25ம் தேதி, ‘கோழி கூவுது’ வெளியானது. படம் வெளியான பிறகு பொங்கல் வந்தது. ஆனால் பொங்கலுக்கு படத்தை தியேட்டரில் இருந்து எடுக்கவில்லை. தொடர்ந்து ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருந்தது. நூறுநாள், இருநூறுநாள், முந்நூறு நாள் என ஓடி, மிகப்பெரிய சகாப்தம் படைத்தது ‘கோழிகூவுது’.
’கோழி கூவுது’ வெளியாகி, 37 வருடங்கள் முடிந்து, 38 வது வருடம் தொடங்கிவிட்டது. இன்றைக்கும் ‘அண்ணே அண்ணே’ பாட்டையும் ‘ஏதோவொரு மோகம்’ பாடலின் சலசலக்கும் தண்ணீர்ச் சத்தத்தையும், அண்ணனும் தம்பியுமாகச் சேர்ந்து ராஜபாட்டை நடத்தியதையும் மறக்கவே முடியாது.
கங்கை அமரனின் ’கோழி கூவுது’க்கு ஓர் கொக்கரக்கோ வாழ்த்து!
கங்கை அமரனுக்கும் அவரின் மொத்த டீமிற்கும் ‘கோழிகூவுது’க்காக ஸ்பெஷல் பூங்கொத்துகள்!
.

Biography
Viji made her debut in Gangai Amaren's Kozhi Koovuthu. It went on to become a super hit and she was often referred to as 'Kozhi Koovuthu' Viji after the film.[4][5][6]

During shooting for a song sequence in the Vijay-starrer Poove Unakkaga, Viji experienced hip and back pain[7] and she underwent an operation on her spinal cord in 1996 at the Chennai Apollo Hospitals. The operation failed and doctors found an acute infection in the wound caused by the surgery.[8] After more surgeries,[7] Viji suffered temporary paralysis.[6][9] She filed a lawsuit on Apollo Hospitals which returned Rs 30,000.[8] Viji recovered after a corrective surgery[10] and made a comeback to films in 2000 with Simmasanam.[11] Vijayakanth, who had acted with Viji in many films, gave her an opportunity to star in the film and had promised to give her a role in his next film Vaanchinathan also,[12] but Simmasanam ultimately remained her last film.

On 27 November 2000, Viji committed suicide in her home in Chennai. Her suicide note blamed a failed love affair with director A R Ramesh, who was already married.[3][13] The Hindu reported that the prosecution case was that Ramesh promised to marry her but declined later and that three days prior to her death, Ramesh met Viji at a function and abused her.[2] Ramesh, his wife, A R Sumathi, and his friend Chinnasamy were charged with "abetting the suicide" of Viji and acquitted by the Mahila Court.[2]

Monday, 30 April 2018

HITLER COMMITTED SUICIDE 1945 APRIL 30



HITLER  COMMITTED SUICIDE 1945 APRIL 30





ஒஸ்ரியாவில் 20-04-1889 ல் பிறந்து,  ஜெர்மனியில் அரசியல் ஆட்சிபுரிந்து, உலகை தன் ஆட்சியின் கீழ் கொண்டுவர நினைத்த ஜெர்மனிய அதிபர் ‘அடோல்ப் ஹிட்லர்’ பற்றி அரியாதவர்கள் இருக்கமாட்டார்கள்.

ஆரம்பகாலத்தில் ஒர் தொண்டனாக செயற்பட்டு அதன் பின்னர் ஜேர்மனியின் இரானுவத்தில் இணைந்து கொண்ட ஹிட்லரின் கனவு 90 வீதம் நனவாகி இருந்தன. ஹிட்லரின் உச்சகட்ட காலமாக 1933-1945 காலப்பகுதிகளைக் குறிப்பிட முடியும். இக்காலகட்டத்தில்தான் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

1919ல் நிறைவடைந்த முதலாம் உலக யுத்தத்தில் ஜெர்மன் படுதோல்வி அடைந்திருந்தது.  இதன்காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி வீழ்ச்சி கண்டு கொண்டிருந்தது. நாட்டின் இக்கட்டான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தனது பேச்சாற்றலால் அரசியலில் குதித்து, ஜேர்மனிய மக்களை தன்வசப்படுத்தி தன் கனவுக்கு வித்திட்டார். ஒரு தபால் முத்திரையை கொள்வனவு செய்வதற்கு மக்கள் கொடுக்கும் பணத்தை விட, பல மடங்கு  அவற்றை அச்சிடுவதற்கான உற்பத்தி செலவுகள் அதிகரித்திருந்த காலம். விவசாயம், கால்நடை எல்லாமே அழிந்து இரத்தக்கறை படிந்த ஜெர்மன் பூமியை மீட்டெடுத்து பசுமை புரட்சியால் வளப்படுத்தி மக்களுக்கு நிறைவான வாழ்க்கையை ஆரம்ப காலத்தில் தன் ஆட்சியால் செய்து வந்தார். 

என்றுமே அமெரிக்காவுக்குக் தலைசாய்த்துச் செல்லும் ஏனைய உலக நாடுகளுக்கு மாறாக தனது தலையை உயர்த்தி, ஜேர்மனியின் செல்வாக்கை உலகின் பக்கம் திரும்பச் செய்தார். தனது ‘நாசி’ படையணியை உருவாக்கி உள்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் யூதர்களை இந்நாட்டில் இருந்து பூரணமாக அழித்துவிடும்படி கட்டளையிட்டார். யூதர்களால்தான் முதலாம் உலக யுத்தத்தில் ஜெர்மன் படு தோல்வியடைந்தது என்றும் யூதர்களின் பரம்பறையும் செல்வாக்கும் இந்நாட்டில் இராணுவ ஆட்சிக்கு தடைகளாக இருப்பதாலும் இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

மிகவும் படித்து அறிவுகூர்மையான மக்களாகவும்,  யூதப் பெண்கள் அழகிய தோற்றமுடையவர்களாக இருந்ததனாலும் யூதர்கள் பலிவாங்கப்பட்டனர். 1933 தொடக்கம் 1945 காலப்பகுதிவரைக்கும் சுமார் அறுபது இலட்சம் யூதர்கள் படு கொலை செய்யப்பட்டிருந்தனர். யூதர்களைக் கொள்வதற்காகவே பல வகையான தண்டனை முறைகளையும், சிறைச்சாலைகiளும் நாசி படையணினர் அறிமுகப்படுத்தி இருந்தனர்.

பெண்களுக்கான நிர்வான குளியல் முறை:


குளித்துக் கொண்டிருக்கும் போதே தண்ணீருக்குப் பதிலாக விசவாயுக்களை தண்ணீர்க் குழாய்கள் ஊடாக அனுப்பி, அவர்கள் கொல்லப்படும் காட்சியை பார்த்து மகிழுதல்.



சிறுவர்கள்:

தன் பெற்றோர்கள் முன்னிலையில் அதே போல் தன் சகோதரன் முன்னிலையில் ‘பிஸ்டோல்’ எனப்படும் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படல்.

பெற்றோர்கள்:

மனைவி பிள்ளைகளுக்கு முன்னால் நிறுத்தி இரு கைகளையும் பின்னால் கட்டி தலையில் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படல்.

சிறைச்சாலை:

படித்தவர்களையும் முரண்பட்டவர்களையும் நாசி சிறைக்கூடத்தில் அடைத்து தினமும் பலவகையாக சித்திரவதைகளைக் கொடுத்து மெல்ல மெல்லக் கொல்லல்.

பெண்களுக்கான சிறைக்கூடம்:

அழகிய இளம் பெண்கள் இராணுவத் தளபதிகளுக்கு தினமும் விருந்து படைத்து திருப்திப்படுத்தப்பட்டு வந்தனர். பின்னர் மதுபானங்கள் மேனிகளில் ஊற்றப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டும், தலையில் வெடி வைத்தும், ஓட வைத்தும் சுடப்பட்டனர். ஒரு பெண் பலநூறு நாசிப் படையினருக்கு தன்னை அர்ப்பணித்து வருபவளாக இருப்பாள். ஆசை தீர்ந்த பின்னர் இவ்வாறான பெண்களை நச்சுவாயு கொண்டு அழித்துவிட்டு புதிய பெண் கைதிகளை இச்ச்றைகளில் அடைத்து மீண்டும் இவ்வாறே சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு வந்தனர்.

உயிருடன் சுட்டெரிக்கும் உலை:

யூதர்களை பிடித்து கைகளையும் கால்களையும் கட்டி ஒரு இரும்புத் தட்டில் உயிரோடு வைத்து அதிவெப்பமூட்டப்பட்ட குகைக்குள் தள்ளிவிட்டுக் கொல்லல். இது பாண் சுடும் முறைபோல் உள்ள கொலை முறையாகும். உயிரோடு சென்ற உடல் 10 செக்கன்களில் எழும்புக்கூடுகலாக மாத்திரம் தட்டத்தில் வந்து சேரும்.

இவ்வாறு யூதர்களைக் கொள்ளவதற்கு மட்டுமே உருவான தனது நாசிப்படையைப் பற்றி பெருமிதம் கொள்ளாத நாளே ஹிட்லருக்கு கிடையாது.



இருந்தும் ஜேர்மனியப் பெண்களுடன் அன்பாகவும் சகோதரத்துவமாக பழகும் தன்மையுடையவராகவும்   ஜேர்மனிய குழந்தைகளுடன் அன்பாக அரவணைத்து நடக்கும் குணமுடையவராகவும் பிராணிகளடன் செல்லமாக பழகும் இயல்புடையவராகவும் முதுமைக்கு மதிப்பளிப்பவராகவும் இருந்த வந்த ஹிட்லர் , யூதர்களை மாத்திரமே இலக்கு வைத்து வந்தார்.

ஹிட்லரின் காலத்திலேயே மோட்டார் உற்பத்தி ஜேர்மனியில் செல்வாக்குச் செலுத்தி இருந்தன. பி. எம். டபிள்யுBMW, பெண்ஸ் BENZ எனப்படும் மோட்டார் வாகனங்கள் பிரபல்யமாகி, படைத் தளபதிகளுக்கு சவாரி செய்வதற்கும் வழங்கப்பட்டு வந்தன. இவ்வாறான மோட்டார் உற்பத்திகளால் ஜெர்மனின் பொருளாதாரம் சரிந்து கிடந்த பொருளாதார வீழ்ச்சியை உயர்த்திச் சென்றது. இராணுவத் தளபாடங்களும், விமானங்களும் மற்றும் விவசாயம் என்பவற்றின் உற்பத்திகள் பலமடங்காகின. இதன்காரணமாக ஹிட்லரின் புகழ் ஜெர்மனில் ஓங்கியது. மக்கள் கடவுளுக்கு அடுத்தாக ஹிட்லரை மதித்தனர். ஹிட்லரின் சொல்லை மந்திரமாக மதித்தனர். ஒவ்வொரு வீடுகளிலும் அலுவலகங்களிலும் ஹிட்லரின் புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டன. 

1939ம் வருடம் ஜெர்மனியப் படைகளால் அயல்நாடான போலண்ட் தாக்கப்படுகிறது. ஒரு வாரத்துக்குள் போலண்ட் ஜெர்மனியிடம் சரணடைந்தது. இதனால் தனது இராணுவ பலத்தையும் ஜேர்மனியைப் பற்றியும் பெருமைப்பட்ட ஹிட்லர் ஏனைய அயல்நாடுகளையும் தாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்பினார். அவரது விருப்பம் நிறைவேறியது. இருந்தும் வல்லரசாக இருந்த சோவியத்யூனியன் எனும் பிரமாண்டமான இராணுவத்திடம் ஜெர்மனிய சர்வாதிகாரம் எடுபடவில்லை.

தொடர் யுத்தம், இரானுவ தளபாடங்களும் உணவுகளும் உரிய முறையில் வழங்கப்படாமை, கடுமையான குளிர், என்பற்றின் காரணமாக சோவியத் யூனியனைத் தாக்கி, அங்கும் ஜெர்மனிய கொடியேற்ற நினைத்த ஜெர்மன் படுதோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து சோவியத் யூனியனின் இராணுவத்தினால் ஜெர்மன் தாக்கப்படுகிறது. பெர்லின் நகரில் சோவியத் கொடி பறக்கவிடப்படுகிறது. பெர்லினை சோவியத் படையினர் சுற்றிவளைத்து தாக்குதல் நடாத்தப்படுவதை அறிந்த ஹிட்லரும், அவர் நெடுங்காலமாக நேசித்து பின்னர் திருமணம் முடித்த தனது அன்பு மனைவி ‘ஈவா பிரவ்ண்’ உம் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

 ‘ஹிட்லர் பங்கர்’ எனப்படும் ஜெர்மனிய உயர் தலைவர்களும் படைத்தளபதிகளும் மறைவாக இருந்து வந்த பதுங்குக் குழியின் தனது அறையில் இந்த தற்கொலை இடம் பெற்றது. 1945 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 30ம் திகதி ஹிட்லரின் மறைவுடன் ஜேர்மன் வீழ்ந்தது.  எரிந்த நிலையில் காணப்பட்ட இருவரது உடல்களையும் சோவியத் யூனியனின் ‘ரெட் ஆமி’  (Red Army) எனப்படும் படையினர் கண்டு பிடித்து உறுதிப்படுத்தினர். 1945  ஏப்ரலில் சோவியத் யூனியன் ஜேர்மனைக் கைப்பற்றும் வரை 21 மில்லியன் ஜேர்மன் படையினர் இரண்டாம் உலக மகா யுத்தத்தில் கொல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






பெர்லினை சோவியத் படைகள் சுற்றிவளைத்திருந்த சூழ்நிலையில் திருமணம் செய்து கொண்டு உயில் எழுதிய ஹிட்லர் 1945 ஏப்ரல் 30ல் இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட தன் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். இருவருடைய உடலையும் வெளியில் யாருக்கும் தெரியாதவகையில் ஹிட்லரின் கொ.ப.செ. கோயபல்ஸ் எரித்துவிட்டார். பருத்தி வீரன் ஸ்டைலில் காணாப் பிணமாக்கி விட்டார்.
          பெர்லினில் 1945 மே1ல் வெற்றியின் அடையாளமாக சோவியத் கொடியேற்றப்பட்டது. ஜெர்மன் வானொலி ஹிட்லர் இறந்ததாக அறிவித்தது. இதே நாளில் உலகம் முழுவதிற்கும் இன்றுவரையில் தன் பொய்களால் போற்றப்படும் கோயபல்ஸ் தன் மனைவி மற்றும் 6 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.
          ஏறக்குறைய முசோலினி மற்றும் ஹிட்லரின் மரனத்துடன் இரண்டாம் உலகப்போர் ஒரு முடிவிற்கு வந்து விட்டது. முத்து துறைமுகத் தாக்குதலுக்கான பழிதீர்த்தல் என்றபெயரில் நடத்தப்பெற்ற அமெரிக்காவின் ஜப்பான் மீதான அணுகுண்டு தாக்குதல் என்பது அத்துமீறல்தான்.

1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. ஹிட்லர் பெர்லின் நகர சுரங்கத்தில் தங்கியிருந்தார். அவருடன் அவருடைய நீண்டநாள் காதலி ஈவாபிரவுனும் தங்கியிருந்தார்.

ஏப்ரல் 27-ந்தேதி ஹிட்லரின் பிறந்த நாளையொட்டி பாதாள அறையில் விருந்து நடந்தது. ஹிட்லரின் உயிர் நண்பனான கோயபல்ஸ் மற்றும் ராணுவ தளபதிகள் வந்திருந்தனர். ஹிட்லருக்கு பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை ஈவாபிரவுன் பாடினாள். மறுநாள் ஏப்ரல் 28 இரவு அதாவது 29ஆம் தேதி ஹிட்லர் ஈவாபிரவுன் திருமணம் நடந்தது. திருமணத்தை முன்னிட்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் 29 விடிகாலைவரை நடந்தன. 29ஆம் தேதி திருமணம் பதிவு செய்யப்பட்டது. ஹிட்லர் உயிலும் எழுதினார்.


உலக சர்வாதிகாரியனான ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வதற்கு பதுங்கு குழியில் இருந்து எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் சுமார் 41,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன.ஹிட்லர் கடந்த 1945 ஆம் ஆண்டு ஜேர்மனியின் பெர்லின் நகரத்தில் உள்ள பதுங்கு குழியில் தனது கடைசி காலத்தை கழித்து வந்தார். ஹிட்லர், தனது காதலி ஈவா பிரவுனுடன் 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதி வாரம் வரை அங்கு வாழ்ந்தார்.

நீண்ட கால காதலியான ஈவா பிரவுனை ஹிட்லர் அங்கு தான் திருமணம் செய்து கொண்டார். நீண்ட கால காதலியான ஈவா பிரவுன் ஹிட்லரின் மனைவியாக சுமார் 40 மணி நேரத்துக்கும் குறைவாகவே வாழ்ந்தார் என்று கூறப்படுகிறது.அந்த காலக்கட்டத்தில் ஜேர்மனியின் பெர்லின் நகரை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஹிட்லர் இவர்களிடம் சிக்கி இறப்பதற்கு தற்கொலை செய்து கொள்வதே மேல் என்று முடிவு செய்துள்ளார்.

அதைத் தன் மனைவியிடமும் தெரிவித்துள்ளார். ஈவாவும், ஹிட்லருடன் தற்கொலை செய்து கொள்வதற்கு முடிவு செய்துள்ளார். அதன் பின் இருவரும் அந்த பதுங்கு குழியில் தற்கொலை செய்து கொண்டனர்.
அந்த பதுங்கு குழியில் இருந்து எடுக்கப்பட்ட்ட அவரது புகைப்படங்கள் தற்போது ஏலம் விடப்பட்டுள்ளன. அதில், ஹிட்லரின் புகைப்படங்கள் சுமார் 41,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளன.







Monday, 29 January 2018

HAUNTING IMAGES! The ORIGINAL PICTURES Of The KUND Where Rani Padmavati Committed JAUHAR












HAUNTING IMAGES! The ORIGINAL PICTURES Of The KUND Where Rani Padmavati Committed JAUHAR

Padmaavat: Padmavati's Untold stories, Watch Video । FilmiBeat Thanks to Sanjay Leela Bhansali's Padmaavat, people are really interested in knowing more about the life and times of the Chittor queen. Padmini, also known as Padmavati, was a legendary 13th-14th century Indian queen (Rani). The first mention of Padmani took place in an epic fictionalized poem written by Malik Muhammad Jayasi in 1540 CE. History remembers her for the jauhar act that she committed to save her dignity. Check out the original pictures where (it is believed) Rani Padmini committed Jauhar and also read the story behind it.



Rani Padmini Was Well-Trained As per a report In Times Of India, ''Rani Padmini was well-trained in war strategies and battleship. This made her adept at the art of swordsmanship.''











She Kept A Swayamvar ''During her swayamvar, she kept a condition that whoever would defeat the designated fighter in a sword battle would win her.''








he Kings Didn't Know That... ‘'However, the designated sword fighter was Padmini herself.'' In Pic-Rani Padmini's Palace
















Only King Rawal Ratan Singh Won ''Many princes and kings lost to her and it was only king Rawal Ratan Singh who won and she had to marry him.''



















The Story Of Raghav Chetan ''Raghav Chetan was an artist in the royal court of Chittor and was secretly a sorcerer who killed many for his purposes.''

When Raja Ratan Singh Caught Raghav Chetan Red-Handed ‘'Once, Ratan Sen caught him red-handed and he was banished from the kingdom.''












Alauddin Saw Rani Padmini's Reflection In A Mirror ''This led him to Alauddin Khilji, praising Rani Padmini in front of him and Alauddin besieging the kingdom of Chittor. He only saw Padmini in a reflection as she didn't allow him to see her face to face.'' In Pic-The mirror in which Alauddin saw Rani Padmini.

He Deceitfully Captured Ratan Singh ''Alauddin deceitfully captured Ratan Singh. This led to the women of Chittor prepare for Jauhar while the fight was still going on. As many soldiers of Chittor's army died, Ratan Singh also died while fighting beside his men.'






Rani Padmini Was The First To Jump In The Jauhar Kund ''The women walked down a secret passage within the fort that led to the Jauhar Kund. Padmini was the first to jump in the Jauhar Kund while other women followed.''

Their Cries Were So Loud That Alauddin Ordered The Kund To Be Closed Permanently ''Their cries and wailings were so loud that Alauddin ordered the passage to be closed permanently and it was reopened only after many years by the king of Chittor to honour the brave women.''

In Padmaavat In Sanjay Leela Bhansali's Padmaavat, Deepika Padukone has essayed the role of Rani Padmini.

Wednesday, 29 November 2017

PAZHASSI RAJA , FOUGHT AGAINST BRITISH AT LAST COMMITTED SUICIDE ON 1805,NOVEMBER 30



PAZHASSI RAJA , FOUGHT AGAINST BRITISH
 AT LAST COMMITTED SUICIDE ON 1805,NOVEMBER 30







வீர கேரள வர்மா பழசி இராசா (Pazhassi Raja, அல்லது கேரளச் சிங்கம், சனவரி 3, 1753 – நவம்பர் 30, 1805) கேரளாவின் வடக்கில் உள்ள கண்ணூர் மாவட்டத்திலுள்ள தற்கால கூத்துப்பரம்பு பகுதியில் அமைந்துள்ள கோட்டயம்-மலபார் நாட்டின் மன்னராக இருந்தவர். பிரித்தானியக் குடியேற்றவாதத்தை எதிர்த்துப் போராடிய துவக்க கால விடுதலை வீரர்களில் ஒருவர். பிரித்தானியர்களுக்கு எதிராக அவர் நிகழ்த்திய மறைவுத் தாக்குதல்களில் உயிர்விட்டதை அடுத்து அவருக்கு வீர என்ற அடைமொழி வழங்கப்பட்டது.

பழசிராசாவின் இளமைக்காலம் பற்றிய குறிப்புகள் கிடைப்பதில்லை. துவக்கத்தில் பிரித்தானியருக்கு திப்பு சுல்தானுடன் நடந்த சண்டையில் உதவிய பழசிராசா பின்னர் அவர்களுடன் பிணக்கு கொண்டார். விடுதலை போராட்டமாக இல்லாது அவர்களது வரிவிதிப்பிற்கு எதிரான புரட்சியாக 1793–1797 காலகட்டங்களில் வெடித்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன.[1]
ரலாற்று பின்னணி[மூலத்தைத் தொகு]
பழசி குடீரம்-வயநாட்டில் மானந்தவாடியில் பழசிராசா இறந்த இடத்தில் எழுப்பப்பட்டுள்ள நினைவகம்
கேரளாவை ஹைதர் அலி, பின்னர் திப்பு சுல்தான் ஆண்டு வந்தபோது நிலக்கிழார்களை தவிர்த்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக வரிவசூல் செய்து வந்தனர். பழசிராசாவின் துணையுடன் திப்புவிடமிருந்து கேரளாவை வென்ற பிரித்தானியர் இதனை மாற்றி மன்னர்களிடமிருந்து வரி பெறும் முறையை கொண்டு வந்தனர். பிரித்தானியர் வசூலித்த வரிகள் மக்களால் கொடுக்க வியலாத அளவில் இருந்தன. மக்களின் எதிர்ப்புகளை யடுத்து மன்னர்களால் வரிவசூல் செய்ய இயலவில்லை.
தவிர கோட்டயத்தை அடுத்திருந்த பகுதிகளை பழசிராசாவிற்கு கொடுக்காமல் அவரது மாமனுக்கு குத்தகை விட்டனர். இதனால் தன்னை அவமதித்ததாக கருதிய பழசிராசா மக்களிடம் வரி வசூலிப்பதை நிறுத்தினார். இது பிரித்தானியர்களுக்கு உடன்பாடில்லாவிடினும் பழசிராசாவின் மக்கள் ஆதரவை கண்டு ஓர் ஆண்டு வரிவிலக்கு அளித்தனர். ஆனால் பழசிக்கு கோபமூட்டுமுகமாக மாமனின் குத்தகையை ஐந்தாண்டுகளுக்கு நீட்டினர். இதன் எதிர்விளைவாக சூன் 28,1795 நாள் முதல் அனைத்து வரிவசூலையும் நிறுத்தியதோடன்றி பிரித்தானியரால் புரட்சியாளர்களாக காணப்பட்டவர்களுக்கு புகலிடம் கொடுத்தார்.

பிரித்தானிய படைகள், லெப்.கார்டன் தலைமையில் கோட்டய அரண்மனையை சுற்றி வளைத்தது. ஆனால் அதன் முன்னரே பழசிராசா தப்பி விட்டார். பிரித்தானியப் படை அவருடன் பேசி மீண்டும் திரும்ப உடன்பட்டபோதிலும், ஓர் தவறெண்ணத்தால் வயநாட்டின் மலைப்பகுதிகளுக்கு தப்பினார். 1797ஆம் ஆண்டு பல சிறு தாக்குதல்கள் மூலம் பல பிரித்தானிய வீரர்களை கொன்றார். பழசியை எதிர்க்க முடியாத பிரித்தானியர் அவருடன் உடன்பாடு கொண்டு அவரது மாமனின் குத்தகையை இரத்தாக்கினர். அமைதியாக பிரித்தானியருடன் வாழ பழசி இணங்கினார்.
போராட்டங்கள்[மூலத்தைத் தொகு]

1799 இல், திப்புவின் சீரங்கப்பட்டணம் வீழ்ந்த பிறகு ஆங்கிலேயர் வயநாடு பகுதிகளை தமதாக்கிக் கொண்டனர். இதனை எதிர்த்து மீண்டும் ஆங்கிலேயருடன் சூன் 1800 இல் சண்டையிடத் துவங்கினார். பிரித்தாளும் குணம் கொண்ட ஆங்கிலேயர் பழசிராசாவை அவரது மலபார் ஆதரவாளர்களிடமிருந்து பிரித்தனர். இதனால் பழசிராசா தனது மிக அணுக்க நண்பர்களுடனும் மனைவியுடனும் காடுகளில் வசிக்க வேண்டியதானது.மட்டனூர் அருகிலுள்ள புரலிமலை புரட்சி போராட்டங்களுக்கு மையமாக விளங்கியது.[2]

அவரது துணைவர்கள் சுழலி,பெருவாயல் நம்பியார் மற்றும் கன்னவத்து சங்கரன் நம்பியார் முதலானவர் பிடிபட்டுத் தூக்கிலிடப்பட்டும் தனது மறைமுகத் தாக்குதல்களை நிறுத்தவில்லை. 1802ஆம் ஆண்டு எடச்சேன கங்கன் நாயர் மற்றும் தலக்கால் சந்து பனமரம் கோட்டையை முற்றுகையிட்டு அங்கிருந்த 25 ஆங்கிலேயரை கொன்று வெற்றிக் கொடி நாட்டினர். இந்நிகழ்வு எதிர்ப்பு இயக்கத்திற்கு புத்துயிர் தந்தது.
இந்த நேரத்தில் வரியை உயர்த்தியதால் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். இதனைப் பயன்படுத்திய பழசிராசா படையினர் ஆங்கிலேயருக்கு அதிக சேதம் விளைவித்தனர்.
இறப்பு[மூலத்தைத் தொகு]

1804ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்ற தாமஸ் ஆர்வி பாபர், பழசிராசாவிற்கு துணைபோவது சட்டவிரோதம் எனவும் புரட்சியாளர்களின் நடமாட்டத்தை ஆங்கிலேயருக்கு தெரிவிப்பது கடமை என்றும் அறிக்கை விட்டார். சூன் 16 அன்று பழசிராசா மற்றும் அவரது துணைவர்களை பிடிப்பவர்களுக்கு பரிசும் அறிவிக்கப்பட்டது[1] இதனைத் தொடர்ந்து தலைக்கால் சந்து பிடிபட்டார்.
நவம்பர் 30,1805 அன்று பாபர் நேரடியாக பழசிராசாவினை சுற்றிவளைத்தார்.
ஆனால் பழசிராசா தனது மோதிரத்தை விழுங்கி ஓர் சிற்றாற்றின் கரையில் தற்கொலை செய்துகொண்டார். மன்னரின் உடல் அதற்குரிய மரியாதைகளுடன் எரிக்கப்பட்டது.
திரைப்படம்[மூலத்தைத் தொகு]
பழசிராசாவின் வரலாற்றினை மலையாள இயக்குனர் ஹரிஹரன் திரைப்படமாக தயாரித்து மம்முட்டி, சரத் குமார், சுரேசுகோபி,மனோஜ் கே ஜயன் முதலானவர் நடித்து தமிழ்,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டது.
Image may contain: sky and outdoor