Showing posts with label JANUARY 5. Show all posts
Showing posts with label JANUARY 5. Show all posts

Friday, 16 July 2021

SAARUHAASAN CINEMA ACTOR ,LAWYER BORN 1931 JANUARY 5

 


SAARUHAASAN  CINEMA ACTOR ,LAWYER BORN 1931 JANUARY 5



அந்த நடிகர் ஒரு திருமணத்துக்கு போய் விட்டு காரில் ஏறுகிறார்.
"டேய்....இந்த ஆளு தான்டா தலைவருக்கு பெண் தரமாட்டேன்னு சொன்னவரு. மம்முட்டி கேட்டும் இல்லைன்னு சொன்ன ஆளு...யோவ்..என்னா தில்லு இருந்தா எங்க தலைவருக்கே பொண்ணு இல்லைன்னு சொல்லுவே...போடுடா..."
ஆம்..அப்படி ரஜினி ரசிகர்களால் கூவப்பட்ட நடிகர் தளபதி படத்தில் ஷோபனாவுக்கு அப்பாவாக நடித்து பெண் தர மறுக்கும் சாரு ஹாசன்.
சாருஹாசனின் தந்தை சீனிவாசன் சுதந்திர போராட்டத்துக்கு சிறை சென்ற போது அங்கு மற்ற கைதிகளிடமிருந்து சீனிவாசனை காப்பாற்றிய சக கைதியின்பெயர் யாக்கூப் ஹாசன். அப்போதே தன் குழந்தைகளுக்கு ஹாசன் என பெயரிட முடிவெடுத்த சீனிவாசன் தன் முதல் குழந்தைக்கு வைத்த பெயர் 'சாருஹாசன்'. 1931 காலகட்டத்தில் இப்படி ஒரு இந்து-முஸ்லீம் பெயர் வைக்க எத்தனை துணிச்சல் வேண்டும்.
சீனிவாசன் அந்த மதுரை, ராமநாதபுரம் பகுதிகளில் பெயர் பெற்ற வழக்கறிஞர். சுதந்திர போராட்ட வீரர். இந்திய தேசிய காங்கிரஸில் ஈடுபாடுடையவர். அந்த மாவட்டத்தின் கல்வியை கண்காணிக்கும் பொறுப்பில் சீனிவாசன் இருந்தாரென்றால் அவர் மதிப்பு புரியும். சாருஹாசன் ஐந்து வயதாகும் போது சிறிய விபத்து ஏற்பட்டதால் நடக்க முடியாமல் போனது. அதனால் சீனிவாசன் வீட்டிலேயே கல்வி கற்க டியூஷன் ஆசிரியரை ஏற்பாடு செய்தார். ஒன்பது வயதானதும் சாரு பள்ளிக்கு சென்றார். சீனிவாசன் சிபாரிசு செய்தாலும் சிறிய தேர்வுக்கு பின்னர் நேரடியாக ஐந்தாம் வகுப்பில் சேர்ந்தார் சாரு. படிப்பில் கெட்டி.
தந்தையைப் போலவே பெல்காமில் சட்டம் படித்து வழக்கறிஞரானார் சாரு. சில வழக்குகளில் அப்பாவையே எதிர்த்து வாதிடுவார். இம்மானுவேல் சேகரன் கொலை வழக்கில் முத்துராமலிங்கத்தேவருக்கு ஆதரவாக வாதிட்டார் சாருஹாசன். ஆச்சர்யம் என்னன்னா இம்மானுவேல் உயிரோடு இருந்த போது அவர் வழக்குகளுக்கும் சாரு தான் ஆஜராகி இருந்தார். இவ்வழக்கில் முத்துராமலிங்கத்தேவருக்கு பெயில் எடுத்தவர் சாரு தான். மிகப்பெரிய பேசப்படும் வழக்குகளில் ஆஜரானவர்.
சீனிவாசன்-ராஜலக்ஷ்மி தம்பதிக்கு 31ல் சாருஹாசன், 36ல் சந்திராஹாசன், 46ல் நளினி பிறந்தனர். 1953 வாக்கில் அம்மா ராஜலக்ஷ்மி நான்காவது முறை கர்ப்பமான போது சாருவுக்கு 23 வயது. கர்ப்பமான தாயை பிரசவத்துக்கும் பிறகு பார்த்துக்கொள்ள ஆள் தேவைப்பட சாரு திருமணம் செய்து கொள்ள ஏற்பாடாயிற்று. சாருஹாசன் கோமளம் என்கிற மன்னியை திருமணம் செய்து கொள்ள 54ல் கமல் பிறந்தார். கமலுக்கு இரண்டு தாயார். அம்மாவும், மன்னியும். மன்னி கோமளத்துக்கு மாமியார், கணவர், குழந்தை கமல் என மனம் நோகாமல் கவனித்துக்கொள்ள எந்த தயக்கமும் இருந்ததில்லை.
கமல் வளர்ந்ததும் அவரை கலையுலகில் பெரியாளாக்கி பார்க்க வேண்டும் என ராஜலக்ஷ்மி நினைத்தார். சீனிவாசனோ இந்த ஊர் கலெக்டரை விட என் மகன் பேசப்பட வேண்டும் என நினைத்தார். அதனால் சாருவை கமலோடு சென்னைக்கு அனுப்பினார் சீனிவாசன். அப்படித்தான் சாருஹாசன் சென்னைக்கு தம்பியோடு வந்தார்.
களத்தூர் கண்ணம்மா முதல் தன் தம்பி கமலை தோளில் சுமந்த சாருஹாசன் அவரது முழு முதல் காவலனாக இருந்தார். சாரு-கோமளம் தம்பதிக்கு நந்தினி, சுஹாசினி, சுபாஷிணி என மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர்.
79ல் மகேந்திரன் உதிரிப்பூக்கள் எடுத்த போது நண்பர் சாரு தான் அஸ்வினிக்கு தந்தையாக நடிக்க வேண்டும் என ஒற்றைக்காலில் நின்றார் மகேந்திரன். தயக்கத்தோடு சம்மதித்தார் சாரு. மகேந்திரன் நொந்து போகும் அளவுக்கு ரீடேக்குகள் வாங்கினார் சாருஹாசன். அவரது அமைதியான பேச்சும், மெதுவான உடல்மொழியும் அவரை நல்ல நடிகராக பின்னாளில் பார்க்க வைத்தன. அப்படி முதல் சினிமா வாய்ப்பு வந்த போது அவர் வயது 49.
தொடர்ந்து நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு, அழகிய கண்ணே, நிழல்கள் என நடித்துக்கொண்டே இருந்தார். 1987ல் கிரிஷ் காஸரவல்லி என்கிற கன்னட இயக்குனர் எடுத்த 'தபரண கதே' என்கிற படத்தில் நாயகனாக நடித்ததோடு தேசியவிருதும் பெற்றார் சாருஹாசன். தபரா என்கிற வாட்ச்மேன் கிரேடிலுள்ள அரசு ஊழியர் வெகு சின்சியர். ஆனால் அவர் ரிட்டயரானதும் அவரது பென்ஷன் பணத்தை வாங்க அவர் படும் பாடு தான் கதை. நோய்வாய்ப்பட்ட மனைவியின் சிகிச்சைக்கு பணத்துக்காக அவரது பென்ஷன் வராததால் சிகிச்சை செய்ய முடியாமல் தவிப்பதும், பின் க்ளைமாக்ஸில் பணம் வரும் போது அவரது மனைவி சிகிச்சை கிடைக்காமல் இறந்தே போயிருப்பார். இப்படத்தை பார்த்த அன்றைய முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே அப்போதே பென்டிங் இருந்த எல்லா பென்ஷன் கோப்புகளையும் கிளியர் செய்தாரென்றால் சாருவின் நடிப்பின் ஆழம் எப்படிப்பட்டது..
தளபதியிலும்,வேதம் புதிது படத்திலும் அவர் ஏற்றிருந்த நாயகியின் அப்பா பாத்திரங்கள் பேசப்பட்டவை. வேதம்புதிதுவின்நீலகண்ட சாஸ்திரி தான் அன்றைய பிராமணர்களின் மன ஓட்டத்துக்கு எடுத்துக்காட்டு. அதுவும் தளபதியில் அவர் ரஜினிக்கு பெண் தரமாட்டேன் என்றதும் அவர் மேல் கோபம் வரும் பாருங்க...தூக்கி போட்டு மிதிக்கிற அளவுக்கு வரும்... படத்தின் மெயின் வில்லனிடம் கூட அவ்வளவு கோபம் வராது ரசிகர்களுக்கு.
இவ்வளவு சிறந்த நடிகர் நண்பராக இருந்தும், தன் ஆதர்ச சிஷ்யன் கமலின் அண்ணனாக இருந்தும், பாலச்சந்தர் தன் ஒரு படத்தில் கூட சாருஹாசனை நடிக்க வைக்கவில்லை. தலைமகன் என்கிற பிரபு படத்தில் சாருஹாசனும், சந்திரஹாசனும் இணைந்து நடித்தனர். மலையாளத்தில் அதிகம் நடித்த சாருஹாசன் 'அதர்வம்' என்கிற படத்தில் மம்முட்டி, சில்க்கோடு நடித்தது பேசப்பட்டது.
1982லேயே சாருஹாசன் பிரபு-சுஹாசினியை வைத்து 'புதிய சங்கமம்' என்கிற படத்தை இயக்கி இருக்கிறார். ஆச்சர்யமான விஷயம் இப்படத்தின் தயாரிப்பாளர் பழம்பெறும் நடிகர் எம்.கே.ராதா. 2013ல் IPC215 என்கிற படத்தையும்இயக்கினார்.
சமீபத்தில் 'தாதா89' என்கிற படத்தில் பேட்டை தாதாவாக நடித்திருந்தார் சாருஹாசன். கமல் நடித்த சத்யா படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லப்பட்டது. சத்யா கமல் ரோல் தான் வயதாகி சாரு நடித்து எடுக்கப்பட்டது. சாரு ஜோடியாக(அமலா) நடித்தது மேனகாவின் அம்மாவும், கீர்த்தி சுரேஷின் பாட்டியுமான சரோஜா. திரையுலகம் ஏனோ அவரை சரியாக பயன்படுத்தவில்லையென்றே தோன்றுகிறது.
மிகச்சிறந்த நடிகரான சாரு கடவுள் நம்பிக்கை அற்றவர். பெரியார் இவரை சிஷ்யா என அழைக்கப்பெற்றவர் சாரு.
சாருவின் வாழ்க்கையை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கும். எல்லாமே லேட்டாகவே கிடைத்தது அவருக்கு. ஆனாலும் லேட்டஸ்ட் தான் இந்த 90 வயதிலும். தன் தந்தை, அம்மா, தம்பிகள், மனைவி, குழந்தைகள் எல்லோருக்கும் நல்லவனாக வாழ்வது நமக்கெல்லாம் ஆகும் காரியமா?
தமிழ் சினிமா கண்ட நடிகர், இயக்குனர்....
May be an image of 1 person
பாண்டியன் and 19 others

Sunday, 4 April 2021

Z.A.BHUTTO BORN 1928 JANUARY 5 - 1979 APRIL 4

 

Z.A.BHUTTO BORN 1928 JANUARY 5 - 1979 APRIL 4



சுல்பிகர் அலி பூட்டோ ஜனவரி 5, 1928 இல் பிறந்தார். சர் ஷா நவாஸ் பூட்டோவின் ஒரே மகன். சுல்பிகர் அலி பூட்டோ தனது ஆரம்பக் கல்வியை பம்பாயின் கதீட்ரல் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார்.

1947 ஆம் ஆண்டில், அவர் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும், பின்னர் ஜூன் 1949 இல் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் சேர்ந்தார். ஜூன் 1950 இல் பெர்க்லியில் அரசியல் அறிவியலில் க ors ரவங்களுடன் பட்டம் முடித்த பின்னர், அவர் ஆக்ஸ்போர்டில் அனுமதிக்கப்பட்டார்.
செப்டம்பர் 8, 1951 இல் சுல்பிகர் அலி பூட்டோ நுஸ்ரத் இஸ்பஹானியை மணந்தார். அவர் 1953 இல் லிங்கனின் விடுதியில் பார் அழைக்கப்பட்டார், அதே ஆண்டில் அவரது முதல் குழந்தை பெனாசீர் பூட்டோ ஜூன் 21 அன்று பிறந்தார். பாகிஸ்தானுக்கு திரும்பியதும் பூட்டோ சட்டம் பயிற்சி செய்யத் தொடங்கினார் டிங்கோமலில்.
1958 ஆம் ஆண்டில், ஜனாதிபதி இஸ்கந்தர் மிர்சாவின் அமைச்சரவையில் வர்த்தக அமைச்சராக சேர்ந்தார். அயூப் கான்ஸ் அமைச்சரவையில் இளைய அமைச்சராக இருந்தார். 1963 ஆம் ஆண்டில், அவர் முகமது அலி போக்ராவிலிருந்து வெளியுறவு மந்திரி பதவியை ஏற்றுக்கொண்டார்.

மார்ச் 2, 1963 அன்று சீன-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தத்தை முடிப்பதே அவரது முதல் பெரிய சாதனை. 1964 நடுப்பகுதியில், துருக்கி மற்றும் ஈரானுடன் நெருக்கமான பொருளாதார மற்றும் இராஜதந்திர தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான புத்திசாலித்தனத்தை அயூபிற்கு உணர்த்த பூட்டோ உதவினார். இந்த மூவரும் பின்னர் ஆர். சி. டி. ஐ உருவாக்கினர், ஜூன் 1966 இல், பூட்டோ தாஷ்கண்ட் ஒப்பந்தம் தொடர்பான வேறுபாடுகள் தொடர்பாக அயூபின் அமைச்சரவையை விட்டு வெளியேறினார்.
அயுபின் அமைச்சரவையை விட்டு வெளியேறிய பின்னர் சுல்பிகர் அலி பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியைத் தொடங்கினார். 1970 டிசம்பரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், பி. பி. மேற்கு

பாகிஸ்தானில் பெரும்பான்மையை வென்றது, ஆனால் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து பெரும்பான்மை வென்ற ஷேக் முஜிப்-உர்-ரஹ்மானுடன் உடன்பாட்டை எட்ட முடியவில்லை. 1971 யுத்தம் மற்றும் கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்ததைத் தொடர்ந்து, யஹ்யா கான் பதவி விலகினார், பூட்டோ 1971 டிசம்பர் 20 அன்று ஜனாதிபதி மற்றும் தலைமை தற்காப்பு சட்ட நிர்வாகியாக பதவியேற்றார்.
1972 இன் ஆரம்பத்தில், பூட்டோ பத்து வகை முக்கிய தொழில்களை தேசியமயமாக்கியதுடன், பிரிட்டனும் பிற மேற்கத்திய நாடுகளும் புதிய பங்களாதேஷை அங்கீகரித்தபோது, ​​காமன்வெல்த் நாடுகள் மற்றும் எஸ். ஈ. ஏ. டி. ஓ. மார்ச் 1 ம் தேதி, அவர் நில சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார், ஜூலை 2, 1972 இல், இந்தியாவுடன் சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், இது ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை திருப்பித் தரவும், 1971 போரில் கிழக்கு பாகிஸ்தானில் கைப்பற்றப்பட்ட பாகிஸ்தான் கைதிகளை விடுவிக்கவும் வழி வகுத்தது.
தேசிய சட்டமன்றம் 1973 அரசியலமைப்பை நிறைவேற்றிய பின்னர், பூட்டோ நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.
டிசம்பர் 30, 1973 இல், பூட்டோ கராச்சிக்கு அருகிலுள்ள பிப்ரியில் பாகிஸ்தானின் முதல் எஃகு ஆலைக்கு அடித்தளம் அமைத்தார். ஜனவரி 1, 1974 அன்று, பூட்டோ அனைத்து வங்கிகளையும் தேசியமயமாக்கியது. பிப்ரவரி 22, 1974 அன்று, இரண்டாவது இஸ்லாமிய உச்சி மாநாடு லாகூரில் திறக்கப்பட்டது. 38 இஸ்லாமிய நாடுகளில் பெரும்பாலான நாடுகளின் தலைவர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டனர்.
நாட்டில் ஒரு அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, பூட்டோ ஜெனரல் ஜியா-உல்-ஹக் என்பவரால் சிறையில் அடைக்கப்பட்டார், அவர் ஜூலை 5, 1977 அன்று இராணுவச் சட்டத்தை விதித்தார்.
மார்ச் 18, 1978 அன்று காலை 08.20 மணிக்கு லாகூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முஷ்டாக் உசேன் நவாப் முகமது அகமது கான் கசூரி வழக்கில் தீர்ப்பைப் படித்தார். முன்னாள் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவுக்கு 3 பேருடன் மரண தண்டனை வழங்கப்பட்டது.

தீர்ப்பில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர் சதிகாரர் என்றும், அவர் தனது அரசியல் எதிரிகளுக்கு எதிரான ஒரு கருவியாக எஃப்.எஸ்.எஃப். தீர்ப்பு வழங்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, ஒரு பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஜெனரல் ஜியாவிடம் பூட்டோ உண்மையில் தூக்கிலிடப்படுவாரா என்று கேட்டார். இந்த விவகாரம் இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது, ஆனால் யாரும் சட்டத்திற்கு மேல் இல்லை என்று பதிலளித்தார்.
ஏப்ரல் 3 மாலையில், சிறை கண்காணிப்பாளர் ஒரு சாட்சியுடன் பூட்டோவை தனது செல்லில் சென்று பூட்டோவின் பெயரை அழைத்தார். பின்னர் அவர் மரணதண்டனை உத்தரவைப் படித்தார்.
'மார்ச் 18, 1978 இல் எல்.எச்.சியின் உத்தரவின்படி, திரு சுல்பிகர் அலி பூட்டோ, நவாப் முகமது அகமது கானின் கொலைக்காக தூக்கிலிடப்பட வேண்டும்.'
கண்காணிப்பாளரின் அருகில் நின்று கொண்டிருந்த கர்னல் ரபியுதீன், பூட்டோவின் முகத்தில் பீதியின் எந்த அடையாளத்தையும் காணவில்லை என்று கூறினார். மாறாக, அவர் முகத்தில் ஒரு புன்னகை இருந்தது. அதிகாலை 2:04 மணிக்கு, மரணதண்டனை பூட்டோவின் காதில் ஏதோ கிசுகிசுத்தது, பின்னர் நெம்புகோலை அழுத்தியது.

ZA பூட்டோவின் இறுதி சடங்கு
முன்னாள் பிரதமர் இல்லை. பூட்டோவின் மரணதண்டனை சர்வாதிகாரி உத்தரவிட்டு நீதிமன்றங்களால் வசதி செய்யப்பட்டது பின்னர் ஒரு நீதித்துறை கொலை என்று அழைக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கு வழங்கப்பட்ட இந்த சிகிச்சை பாக்கிஸ்தானில் இராணுவ சர்வாதிகாரி செய்த அதிகப்படியான செயல்களை நினைவூட்டுகிறது.
லாகூர் உயர்நீதிமன்றம் நிறைவேற்றிய மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பின்னர், 1979 ஏப்ரல் 4 அன்று முன்னாள் பிரதமர் தூக்கிலிடப்பட்டார். அதிருப்தி அடைந்த பி. பி. அரசியல்வாதியின் தந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் உயர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது.
சுல்பிகர் அலி பூட்டோ தனது மூதாதையர் கிராமமான கார்ஹி குடா பக்ஸில் அவரது தந்தையின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார்.
Like
Comment
Share

Saturday, 5 January 2019

PARAMAHAMSA YOGANANDHA , HINDU DEVOTEE BORN 1893 JANUARY 5 - 1952 MARCH 7


PARAMAHAMSA YOGANANDHA , 
HINDU DEVOTEE BORN 
1893 JANUARY 5 - 1952 MARCH 7




பரமஹம்ச யோகானந்தா (Paramahansa Yogananda, வங்காள: পরমহংস যোগানন্দ) (5 சனவரி 1893 – 7 மார்ச்சு 1952), பிறப்பு முகுந்தலால் கோஷ் (வங்காள: মুকুন্দলাল ঘোষ), இந்திய யோகியும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கும் மேற்கத்தியவர்களுக்கும் தியானம் மற்றும் கிரியா யோகத்தை படிப்பித்த குருவும் ஆவார். யோகோடா சத்சங்க சமூகம், இந்தியா என்ற நிறுவனத்தையும் தன்னுணர்தல் தோழமை என்ற நிறுவனத்தையும் இதற்காக நிறுவினார். அவரது தன்வாழ்க்கை நூலான, யோகியின் சுயசரிதை சிறந்த ஆன்மீக வழிகாட்டுதல் நூலாக விளங்குகின்றது. 21ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த ஆன்மீக நூல்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[2

வாழ்க்கை வரலாறு

ஆறு அகவையில் யோகானந்தர்
இளமைக்காலம்
யோகானந்தர் ஆத்திகக் குடும்பமொன்றில் தற்கால உத்தரப் பிரதேசத்திலுள்ள கோரக்பூரில் பிறந்தார்.[4] முகுந்தலால் கோஷ் என இளவயதில் அழைக்கப்பட்ட யோகானந்தர் தனது இளமைக்காலத்திலேயே ஆன்மீக விழிப்புணர்வு பெற்றவராக இருந்ததாக யோகானந்தரின் தம்பி, சனாந்தன் நினைவு கூறுகிறார்.[4] இளமையிலேயே இந்தியாவின் பல இந்து சாதுக்களையும் துறவிகளையும் அணுகி தனக்கான ஆன்மீகத் தேடலுக்கான குருவைத் தேடி வந்தார்.[5]

1910இல் அவரது பதினேழாம் அகவையில் யோகானந்தரின் தேடல் முடிவுற்றது; குரு, சுவாமி யுக்தேசுவர் கிரியிடம் தனது ஆன்மீக வினாக்களுக்கான விடைகளைப் பெற்றார். பல நூற்றாண்டுகளாக அவருடன் தொடர்பு இருந்ததாக யோகானந்தர் உணர்ந்தார்.[5]

குரு யுக்தேசுவர் யோகானந்தரை ஓர் சிறப்பான நோக்கத்திற்காக தம்மிடம் மகாவதார பாபா அனுப்பியதாக பின்னர் கூறினார்.[5]

கலையில் இடைநிலைத் தேர்வை கொல்கத்தாவின் இசுக்காட்டிசு சர்ச்சு கல்லூரியில் முடித்த பிறகு சூன் 1915இல் தற்கால இளங்கலைப் பட்டப்படிப்பை ஒத்த பட்டப்படிப்பை (அக்காலத்தில் அது ஏ.பி எனப்பட்டது) செராம்பூர் கல்லூரியில் முடித்தார். செராம்பூரில் படித்ததால் இக்காலத்தில் அவர் அங்கிருந்த யுக்தேசுவரின் ஆசிரமம் சென்றுவர முடிந்தது. 1915இல் துறவித்துவம் பெற்றுக் கொண்டு சுவாமி யோகானந்த கிரி என்ற பெயரைச் சூடினார்.[5] 1917இல் நவீன கல்வி முறைகளுடன் யோகக் கலையையும் ஆன்மீக கொள்கைகளையும் இணைத்த கல்வித்திட்டத்துடன் மேற்கு வங்காளத்தின் திஹிகாவில் சிறுவர்களுக்கானப் பள்ளியைத் தொடங்கினார்.ஓராண்டிற்குப் பிறகு இந்தப் பள்ளி ராஞ்சிக்கு இடம் பெயர்ந்தது.[5] இந்தப் பள்ளி பின்னாளில் யோகோடா சத்சங்க சமூகம், இந்தியாவாக பெயர் மாற்றம் பெற்றது; இது அமெரிக்க நிறுவனமான தன்னுணர்தல் தோழமையின் கிளையாக விளங்கியது.

அமெரிக்காவிற்கு குடிபெயர்வு

1920இல், பாஸ்டனில் ஒழுங்குபடுத்தப்பட்ட சமய முற்போக்காளர்களின் பன்னாட்டு பேராயத்திற்கு பேராளராக ஐக்கிய அமெரிக்காவிற்குப் பயணமானார்.[6][7] அதே ஆண்டு தனது தன்னுணர்தல் தோழமை என்ற நிறுவனத்தையும் அங்கு நிறுவினார்; இந்தியாவின் தொன்மையான பழக்கவழக்கங்களையும் யோகக் கலையின் மெய்யியலையும் தியானத்தின் பாரம்பரியத்தையும் உலகெங்கும் பரப்பிட இந்த நிறுவனத்தை நிறுவினார்.[8] அடுத்த பல்லாண்டுகளில் அமெரிக்க கிழக்குக் கடலோரத்தில் பல விரிவுரைகளையும் கற்பித்தலையும் மேற்கொண்டார்.[9] 1924இல் மற்ற கண்டங்களுக்கும் சென்று உரை நிகழ்த்தலானார்.[10] இவற்றைக் கேட்க வந்த பல்லாயிரவரில் மார்க் டுவெய்னின் மகள் கிளாரா கிளெமென்ட்சு உள்ளிட்ட பிரபலங்களும் அடங்குவர். 1925இல் தன்னுணர்தல் தோழமையின் கலிபோர்னியா மையத்தை இலாசு ஏஞ்செலசு நகரில் நிறுவினார். இதுவே பின்னாளில் அவரது வளர்ந்து வந்த பணிகளுக்கு மைய நிர்வாக மையமாக அமைந்தது.[7][11] அமெரிக்காவில் யோகா ஆசிரியராக தனது வாழ்நாளில் பெரும்பகுதியை கழித்த முதல் இந்தியராக யோகானந்தர் விளங்கினார். 1920 முதல் 1952 வரை ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்திருந்தார்; 1935-36இல் இந்தியாவில் இருந்த தமது குருவைக் காணவும் மேற்கத்திய சமயவியலாளர்களான தெரசா நியூமன் போன்றவர்களைக் காணவும் ஓராண்டு காலம் அமெரிக்காவிற்கு வெளியே இருந்தார்.[5][12]

இந்திய வருகை, 1935–1936

1935இல், தமது குரு யுக்தேசுவர் கிரியைக் காணவும் யோகோடா சத்சங் சமூகத்தை நிலைநிறுத்தவும் இந்தியா திரும்பினார். தனது இந்தியப் பயணத்தின்போது மோகன்தாசு கரம்சந்த் காந்தி, புகழ்பெற்ற இயற்பியலாளர் ச. வெ. இராமன், யுக்தேசுவர் கிரியின் சீடர்கள் ஆகியாரைச் சந்தித்தார்.[5] இந்தியாவில் இருக்கும்போது யுக்தேசுவர் இவருக்கு பரமஹம்ச என்ற பட்டத்தை வழங்கினார். 1936இல் யோகானந்தா கொல்கத்தாவில் இருந்தபோது யுக்தேசுவர் புரியில் மகாசமாதி அடைந்தார்.[13]

மரணம்
தனது மரணத்திற்கு முந்தைய சில நாட்களாகவே யோகானந்தா தாம் இந்த உலகை விட்டுச் செல்லும் நேரம் வந்துவிட்டதாக குறிப்பிட்டு வந்தார்.[14]

மார்ச்சு 7, 1952இல் இலாசு எஞ்செலசிற்கு வந்திருந்த இந்தியத் தூதர் பினய் ரஞ்சன் சென்னுக்கு பில்ட்மோர் தங்குவிடுதியில் கொடுக்கப்பட்ட விருந்தில் யோகானந்தர் தமது மனைவியுடன் கலந்து கொண்டார்.[15] விருந்தின் முடிவில் உலக அமைதிக்கும் மாந்த வளர்ச்சிக்கும் இந்தியா, அமெரிக்கா பங்கு குறித்தும் வருங்கால கூட்டுறவு குறித்தும் யோகானந்தர் பேசினார்.[16] [17] உரையை முடிக்கும் தருவாயில் அவரது உடல் தரையில் சாய்ந்தது.[14][18] அவரது சீடர்கள் அவர் மகாசமாதி அடைந்ததாக கூறினாலும்[18] அலுவல்முறையாக மரணத்தின் காரணமாக இதயச் செயலிழப்பு குறிப்பிடப்பட்டது.[19]

யோகானந்தரின் உடல் கிலென்டேல், கலிபோர்னியாவிலுள்ள பாரஸ்ட் லான் மெமோரியல் பார்க்கில் உள்ள மோசோலியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது வருகையாளர்களுக்கு மூடப்பட்டிருந்தாலும் யோகானந்தரின் சமாதி அணுகக் கூடியதாக உள்ளது