Showing posts with label CELEBRATE. Show all posts
Showing posts with label CELEBRATE. Show all posts

Friday, 31 July 2020

PONAM FESTIVAL CELEBRATED IN HYDERABAD /SECUNDERABAD ON ACCOUNT OF AADI 18




PONAM FESTIVAL CELEBRATED IN HYDERABAD /SECUNDERABAD ON ACCOUNT OF AADI 18



.‘போனம்’ என்னும் சொல், போஜனம் என்பதிலிருந்து தெலுங்குக்குச் சென்றதாகும். இது சாப்பாட்டைக் குறிக்கும். ‘பொனலு’ என்றும் ‘போனாலு’ என்றும் அழைக்கப்படும் இந்தத் திருவிழா, ஆந்திராவில் தெலுங்கானா பகுதியில், குறிப்பாக ஹைதராபாத், செகந்திராபாத் பகுதியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கொண்டாடப்படும் திருவிழாவாகும்.
இத்திருவிழா சமீப காலமாகத்தான் நடைமுறையில் உள்ளது. இருந்தாலும் எல்லாத் தரப்பு மக்களும் கொண்டாடும் திருவிழாவாகவே இது உள்ளது. கி.பி. 1813-ல் ஹைதராபாத், செகந்திராபாத் நகரங்களில் உள்ள மிலிட்டரி காலனியில் காலராவும், அம்மை நோயும் தோன்றி லட்சக்கணக்கில் மக்கள் மாண்டனர். அப்போது அங்கு முகாமிட்டிருந்த ஒரு படைப்பிரிவு, உஜ்ஜயினிக்குப் பாதுகாப்புக்காகச் சென்றது.
அவர்கள் உஜ்ஜயினி மகாகாளியிடம், ‘எங்கள் மக்களை இக்கொடிய நோயிலிருந்து காப்பாற்றினால் உனக்குக் கோயில் கட்டி
வழிபடுகிறோம்’ என்று வேண்டினர். மகாகாளியின் அருளால் நோய்கள் நீங்கி மக்கள் காப்பாற்றப்பட்டனர். அதற்கு நன்றி கூறும் வகையில் உஜ்ஜயினியிலிருந்து ஒரு காளி சிலையைக் கொண்டுவந்து இங்குப் பிரதிஷ்டை செய்து, கோயில் கட்டி வழிபட ஆரம்பித்தார்கள். காளிக்கு, புதுப்பானையில் புது அரிசியிட்டு, பால், வெல்லம் கலந்து பொங்கல் நைவேத்யம் படைத்தார்கள். இப்படி ஏற்பட்டதுதான் இந்த ‘போனாலு’ திருவிழா.

இத்திருவிழா ஆடி மாதம் முதல் ஞாயிறு அன்று ஆரம்பமாகிறது. கோல்கொண்டா மகாகாளி கோயிலில் ஆரம்பித்து, இரண்டாம் ஞாயிறு பால் கம்பட் எல்லம்மாள் கோயிலிலும், லால்தர் வாஜாவில் உள்ள மாதேஸ்வரி கோயிலில் மூன்றாம் ஞாயிறும், நிறைவாக அப்பண்ணா மாதண்ணா கோயிலில் நான்காம் ஞாயிறு அன்றும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் பல லட்சம் மக்கள் கலந்து கொள்கிறார்கள்.
அன்று பெண்கள் புத்தாடை புனைந்து, நகைகள் அணிந்து, அலங்காரமாகப் பொங்கல் பானையைத் தலையில் சுமந்து வரிசையாகக் கோயிலுக்குச் செல்வர். அப்போது மகாகாளியின் சகோதரர் எனக் கருதப்படும் போத்திராஜ் அங்கு வருவார். இவர் காவி உடை உடுத்தி, கால்களில் சலங்கை பூட்டி, நெற்றியில் செந்தூரமும் உடலில் மஞ்சளும் பூசியபடி பறை வாத்தியங்களுக்கு ஏற்றபடி நடனமாடுவார். இவர்தான் இத்திருவிழாவைத் தொடங்கி வைப்பார். பின்பு, வரிசையில் நிற்கும் பெண்களை காளியின் சன்னிதிக்கு அழைத்துச் செல்வார். இதற்கு அடுத்த நாளாக ‘ரங்கம்’ என்னும் குறி சொல்லுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

ஒரு பெண்மணி மயங்கிய நிலையில் மண் குடத்தின் மீது ஏறி நிற்கிறார். காளி அவள் உடலில் புகுந்து குறி சொல்வதாக மக்கள் நம்புகின்றனர். பொதுவாக, வரும் வருட விளைச்சல், திருமணம், மகப்பேறு போன்ற பக்தர்களின் கேள்விகளுக்கு உரிய பதில் கிடைக்கும். இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் பூசாரி, ஒரு அலங்கரித்த பித்தளைக் குடத்தில் வேப்பிலை தோரணம் கட்டி, மந்திரம் ஜபித்த நீர் நிரப்பி அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று அந்த நீரை நதியில் கலப்பார்.
இத்துடன் இத்திருவிழா நிறைவு பெறும். நம் ஊர்களில் 18-ம் பெருக்கில் வண்ண காகிதங்களால் அலங்கரித்த சிறிய தேர்கள் இழுக்கப்படுவதுபோல அங்கும் சிறிய அலங்கரித்த தேர்கள் இழுக்கப்படுவது இன்னொரு சிறப்பு.





பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள உஜ்ஜயினி. இங்கு மிகப்பிரபலமான உஜ்ஜயினி ஸ்ரீமஹாகாளி ஆலயம் அமைந்துள்ளது. ஸ்ரீமஹாகாளேஸ்வரரின் தேவி, ஸ்ரீமஹாகாளேஸ்வரேஸ்வரி என்று வழிபடப்படுகிறாள். உஜ்ஜயினி மஹாகாளியின் ஆலயங்கள் பின்னாளில் இந்தியாவின் பிற மாநிலங்களில் கட்டப்பட்டதோடு, தசமஹாவித்யா தேவிகளில் முதல் தேவியான காளி வழிபாடும் பிரபலமடைந்தது.

தமிழ்நாட்டிலும் உச்சினி (உஜ்ஜயினி) மாகாளி என்ற பெயரில் பல ஆலயங்களில் தேவி எழுந்தருளி அருட்பாலிக்கிறாள். ஆந்திர மாநிலத்தில் நிஜாம் மன்னர் ஆட்சியின்போது, 1813ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட ராணுவப் படையில் பணியாற்றிய சுருதி அப்பய்யா என்பவர் உஜ்ஜயினி காளிதேவியின் பரம பக்தரானார்.

அக்கால கட்டத்தில் ஐதராபாத், செகந்திராபாத் பகுதிகளில் காலரா மாதிரியான ஒரு கொள்ளை நோய் ஏற்பட்டு மக்கள் மடியவே, அப்பய்யா காளிதேவியிடம் மக்களைக் காப்பாற்றுமாறு மனதாற வேண்டிக் கொண்டார். தேவியின் அருளால் நோய் அகன்று மக்கள் சுபிட்சமடைந்தனர். அப்பய்யா ஐதராபாத் திரும்பியவுடன் செகந்திராபாத்தில் ஸ்ரீஉஜ்ஜயினி மஹாகாளிக்கு சிறிய ஆலயம் ஒன்று எழுப்பினார்.

இதன் பின்னர் இப்பகுதிகளில் பல காளிதேவி ஆலயங்கள் எழுந்தன. அவற்றுள் ஒன்றுதான் லால் தர்வாஜா ஸ்ரீசிம்மவாஹினி மஹாகாளி ஆலயம். லால் தர்வாஜா என்றால் செந்நிறக் கதவு என்பது பொருள். நிஜாம் ஆட்சியின்போது பழைய ஐதராபாத் நகரின் ஒரு பகுதி இது. இந்தப் பகுதியின் நுழைவாயிலாக பெரிய செந்நிற மரக்கதவுகள் இருந்தனவாம்.

அந்தக் கதவுகளின் நினைவாகவே இப்பகுதிக்கு லால் தர்வாஜா என்ற பெயர் ஏற்பட்டது. ஐதராபாத் நகரின் பிரதான அடையாளமாகத் திகழும் சார்மினாரிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் லால் தர்வாஜா அமைந்துள்ளது. ஒருமுறை கனமழையால் ஐதராபாத் நகரமே தண்ணீரில் மூழ்கி மக்கள் தத்தளித்தபோது நிஜாம் ஆட்சியில் பிரதம மந்திரியாக இருந்த கிஷான் பிரசாத், தேவியிடம் மக்களைக் காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டார்.

தேவியின் அருளால் வெள்ளநீர் வடிந்து நகரம் பேராபத்திலிருந்து தப்பியது. தேவிக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் கிஷான் பிரசாத் 1907ம் ஆண்டு இந்த லால் தர்வாஜா தேவி ஆலயத்தில் போனாலு எனப்படும் பொங்கல் பண்டிகையைத் துவக்கி வைத்ததாகக் கூறப்படுகிறது. ஐதராபாத் நிஜாம் மீர் மெஹ்பூப் கான் இந்த ஆலயத்திற்கும், சுற்றிலுமுள்ள பல ஆலயங்களுக்கும் தாராளமான நிதி உதவிகள் செய்துள்ளார்.

வடக்கு திசையை நோக்கி அமைந்துள்ள இந்த லால் தர்வாஜா மஹாகாளி ஆலயத்தின் நுழைவாயிலின் மேல், நின்ற கோலத்தில், பத்து கரங்களில் பல ஆயுதங்களை ஏந்தி மகிஷனை வதம் செய்யும் ஸ்ரீதுர்க்கையின் சுதைச்சிற்பம் அழகுற வடிக்கப்பட்டுள்ளது. தேவியின் இரண்டு புறங்களிலும் மாலைகளை ஏந்திய பெண்கள் உள்ளனர்.

மூன்றுநிலை விமானத்துடன் கூடிய கருவறையில் மஹாகாளி சிம்மத்தின் மீது அமர்ந்த கோலத்தில், நான்கு கரத்தினளாக, பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரம், முன் வலக்கையில் திரிசூலம், முன் இடக்கையில் குங்கும பரணி என ஏந்தி, சாந்த துர்க்கையாக, கம்பீரமாக அருட்பாலிக்கிறாள். மிக நுணுக்கமாக வடிக்கப்பட்ட இந்த கருங்கல் விக்கிரகத்தில் தேவியை தரிசனம் செய்வது மெய்மறக்கச் செய்யும் அனுபவமாக பக்தர்கள் கருதுகின்றனர்.

ஒவ்வோர் ஆண்டும் ஆஷாட (ஆனி) மாதம் (ஜூன் - ஜூலை) ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் ஐதராபாத், செகந்திராபாத் பகுதிகளில் உள்ள ஸ்ரீமஹங்காளியம்மன் ஆலயம், ஸ்ரீஎல்லம்மாதேவி ஆலயம், கோல்கொண்டா காளி ஆலயம், லால் தர்வாஜா சிம்மவாகினி ஆலயம் ஆகியவற்றில், போனாலு எனப்படும் பொங்கல் சமர்ப்பிக்கும் விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

போனம் (போஜனம் என்பதே போனம் என்றும் போனாலு என்றும் மருவியிருக்கிறது) எனப்படும் சர்க்கரைப் பொங்கலை பெண்கள் தயாரிக்கிறார்கள். இதை மஞ்சள், குங்குமம் மற்றும் மலர்மாலைகளால் அலங்கரித்து மஞ்சள் இலைகளால் மூடப்பட்ட பானையில் இட்டு, தங்கள் தலைகளில் ஏந்தி பக்தியுடன் ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்துவந்து, தேவிக்கு சமர்ப்பிக்கின்றனர்.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த லால் தர்வாஜா போனாலு ஜாத்ராவில், தெலுங்கானா பிரமுகர்கள் பலர் ஏராளமாகக் கலந்து கொள்கின்றனர். லால் தர்வாஜா ஸ்ரீமஹாகாளியின் பேரருளால்தான் தெலுங்கானா தனி மாநிலம் உருவானது என்றும் அவர்கள் நம்புகின்றனர். மாநில அரசின் சார்பில் முதலமைச்சர் ‘பங்காரு போனாலு’ (இரண்டு தங்கக் குடங்களில் இடப்பட்ட பொங்கல்) மற்றும் தேவிக்கு புது பட்டு வஸ்திரங்கள், மங்கலப் பொருட்கள் ஆகியவற்றை எடுத்து வந்து சமர்ப்பிக்கிறார்.

ஒரு லட்சம் பக்தர்கள்வரை பங்கேற்கும் போனாலு ஜாத்ராவில், சமூக முக்கியஸ்தர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என்று பலரும் கலந்து கொள்கின்றனர். தெலுங்கானா கலாசாரத்தின் ஒரு முக்கியமான அடையாளமாக இந்த போனாலு பண்டிகையை அனைவரும் கருதுகின்றனர். இஸ்லாமிய மக்கள் நிறைந்திருக்கும் பகுதிகள் வழியாகச் செல்லும் போனாலு ஊர்வலத்திற்கு அம்மக்கள் முழுமையான ஒத்துழைப்புக் கொடுப்பதோடு இப்பண்டிகையின்போது எந்த ஒரு சிறு சலசலப்பும் ஏற்படுவது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

லால் தர்வாஜா போனாலு விழாவின் முதற்கட்டமாக தேவியின் அம்சமாக நன்கு அலங்கரிக்கப்பட்ட ஒரு கடம் (பானை) தெருக்களில் யானைமீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு இறுதியாக மோசி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. சிம்மவாஹினி ஸ்ரீமஹாகாளி போனாலு விழாவினையொட்டி, சுற்றிலும் உள்ள அக்கண்ணா மாதண்ணா மஹங்காளி, உப்புகுடா, அலியாபாத், கௌலிபுரா, புராண பூல்போன்ற பல இடங்களிலும் போனாலு கொண்டாடப்படுகிறது.

போனாலு நாளன்று தேவிக்கு மஹாபிஷேகம் முடிந்த பின்னர், தேவியின் சகோதரராகக் கருதப்படும் போத்தராஜு உருவத்தில் வேடமிடும் ஒருவரின் தலைமையில் சாரி சாரியாக ஆயிரக்கணக்கான பெண்கள் போனாலு பானைகளைத் தலையில் சுமந்தபடி ஆலயத்தை நோக்கி வருகின்றனர். காலையில் துவங்கும் போனாலு ஊர்வலம் அந்திவேளைவரை தொடர்ந்து நடைபெறுகிறது.

ரங்கம் எனப்படும் நிகழ்ச்சி, போனாலுவின் ஒரு முக்கியச் சடங்காகும். கன்னிப்பெண் ஒருவர் தேவி சந்நதிக்கு முன்பாக நின்றுகொண்டு தேவியின் ஆவேசம் பெற்று, வரும் ஆண்டில் நடைபெறவிருக்கும் முக்கியமான நிகழ்வுகள் பற்றி குறி சொல்வதோடு, போனாலு விழாவில் தனக்கு ஏற்பட்ட மனநிறைவு குறித்தும் தெரியப்படுத்துகிறார்.

அவர் சொல்வதைக் கேட்க எண்ணற்ற மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு அமைதியாகக் கவனிக்கின்றனர். காலை 6.30 முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 6 முதல் 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

- விஜயலட்சுமி சுப்பிரமணியம்

Image may contain: one or more people

Sunday, 8 December 2019

OUR LADY OF IMMACULATE CONCEPTION CELEBRATED DECEMBER 8


OUR LADY OF IMMACULATE CONCEPTION  CELEBRATED DECEMBER 8


அமலோற்பவ அன்னை (Our Lady of the Immaculate Conception) என்பது இயேசுவின் தாயாகிய மரியாவுக்கு அளிக்கப்படுகின்ற சிறப்புப் பெயரும், மரியா பிறப்புநிலைப் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார் என்னும் மறையுண்மையை (dogma) வெளிப்படுத்தும் போதனையும் ஆகும். இந்த மறையுண்மையைக் கத்தோலிக்க திருச்சபை அறிக்கையிடுகிறது.[1]

பிறப்புநிலைப் பாவம் (original sin) என்பது பழைய கத்தோலிக்க தமிழ் வழக்கில் "சென்மப் பாவம்" என்று அறியப்பட்டது


மரியாவின் அமல உற்பவ விழா ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

மறையுண்மை
இயேசுவின் தாய் மரியா பிறப்புநிலைப் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார் என்னும் மறையுண்மை கிறித்தவ நம்பிக்கையாகத் தொடக்ககாலத் திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான். ஆயினும் அந்த மறையுண்மையை அனைத்துலகுக்கும் அதிகாரப்பூர்வமாக எடுத்துரைத்தவர் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் ஆவார்.

திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் 1854ஆம் ஆண்டு, திசம்பர் 8ஆம் நாள் இயேசுவின் அன்னையாகிய மரியா பற்றிக் கீழ்வரும் மறையுண்மையை வழுவாவரத்தோடு, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்[2]:

புனித கன்னி மரியா, தாம் கருவில் உருவான முதல் நொடியிலிருந்தே, வல்லமைமிக்க கடவுளின் தனிப்பட்ட அருளாலும் சலுகையாலும், மனுக்குலத்தின் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பேறுபலன்களை முன்னிட்டு, பிறப்புநிலைப் பாவக் கறை அனைத்தினின்றும் பாதுகாக்கப்பட்டார்.
இந்த மறையுண்மை மரியாவின் கன்னிமை (virginity of Mary) மற்றும் இயேசுவின் கன்னிப்பிறப்பு (virgin birth of Jesus) ஆகிவற்றிலிருந்து வேறுபட்டதாகும்.

பிறப்புநிலைப் பாவமும் செயல்வழிப் பாவமும்
கத்தோலிக்க திருச்சபை மரியாவை அமலோற்பவ அன்னை என்று அழைக்கும்போது, மரியா முதல் பெற்றோராகிய ஆதாம் ஏவா ஆகியோரின் கீழ்ப்படியாமையால் இவ்வுலகில் நுழைந்த பாவமாகிய பிறப்புநிலைப் பாவத்திற்கு உட்படாமல் கடவுளின் தனிப்பட்ட அருளால் பாதுகாக்கப்பட்டார் என்று போதிக்கிறது. எல்லா மனிதரைப் போலவே மரியாவும் ஒரு மனிதப் பிறவிதான். ஆனால், கடவுள் மரியாவைத் தனிப்பட்ட விதத்தில் பிறப்புநிலைப் பாவத்திலிருந்து பாதுகாத்தார் என்பது கத்தோலிக்க திருச்சபையின் போதனை.[3]

பிறப்புநிலைப் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட மரியா பிற மனிதரைப்போல செயல்வழிப் பாவத்தில் விழவில்லை. கடவுளுக்கு எதிராக அவர் ஒருபோதும் செயல்படவில்லை. கடவுள் அவருக்கு அளித்த சுதந்திரத்தை அவர் தவறாகப் பயன்படுத்தவில்லை. இதற்குக் கடவுளின் தனிப்பட்ட அருள் மரியாவுக்கு வழங்கப்பட்டது.[4]

அமலோற்பவமும் இயேசுவின் கன்னிப்பிறப்பும்
இயேசுவின் தாயாகிய மரியா பாவக் கறை படியாமல் கடவுளின் தனி அருளால் பாதுகாக்கப்பட்டார் என்னும் மறையுண்மை ஒன்று; மரியா இயேசுவை ஆண்துணையின்றி தூய ஆவியின் வல்லமையால் கருத்தரித்து உலகுக்கு ஈந்தார் என்னும் மறையுண்மை மற்றொன்று. சிலர் இந்த இரண்டு மறையுண்மைகளையும் பிரித்தறியாமல் குழப்புவதும் உண்டு.

மரியாவின் பெற்றோர் சுவக்கீன், அன்னா என்பது மரபு. அவர்கள் மரியாவை ஈன்றெடுத்தபோது பிற மனிதர்களைப் போல தாம்பத்திய உறவின் வழியாகவே பெற்றார்கள். ஆனால் அன்னாவின் உதரத்தில் கருவான மரியாவைக் கடவுள் பிறப்புநிலைப் பாவத்தினால் பாதிக்கப்படாமல் பாதுகாத்தார். இவ்வாறு மரியா கடவுளின் மகனாகிய இயேசுவைப் பெற்றெடுக்க கடவுளுக்கு உகந்த கருவியாக மாறினார்.

மரியாவைக் கடவுள் பிறப்புநிலைப் பாவத்திலிருந்து பாதுகாத்ததற்கு இயேசுவின் சிலுவைச் சாவு மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக நிகழ்ந்த மீட்புதான் வழியாக அமைந்தது. வரலாற்றில் இயேசு வந்து தோன்றுவதற்கு முன்னரே கடவுள் அந்த மீட்பின் பலனை மரியாவின் வாழ்வில் எதார்த்தமாக்கினார்.

மரியா அமல உற்பவியாக உள்ளார் என்பதைக் கத்தோலிக்க திருச்சபையும் மரபுவழித் திருச்சபைகளும் ஏற்கின்றன. அமலோற்பவியான மரியாவின் திருவிழா திசம்பர் மாதம் 8ஆம் நாள் கொண்டாடடப்படுகிறது. அதிலிருந்து ஒன்பது மாதங்கள் கணக்கிடப்பட்டு மரியாவின் பிறந்தநாள் திருவிழா செப்டபர் மாதம் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

மரியாவின் அமலோற்பவத்துக்கு விவிலிய அடிப்படைகள்
மரியா பிறப்புநிலைப் பாவத்திலிருந்து கடவுளின் தனிப்பட்ட அருளால் பாதுகாக்கப்பட்டார் என்னும் மறையுண்மை அப்படியே எழுத்துக்கு எழுத்து என்னும் முறையில் விவிலியத்தில் இல்லை. ஆனால் அந்த மறையுண்மையின் அடிப்படைகள் விவிலியத்தில் உள்ளன. கத்தோலிக்க திருச்சபை அந்த விவிலிய அடிப்படைகளையும் வரலாற்றுப்போக்கில் கிறித்தவ நம்பிக்கையாகத் திருச்சபை நடைமுறையில் விசுவாச உண்மையாக ஏற்றவற்றையும் கருத்தில் கொண்டு மரியாவின் அமலோற்பவத்தை ஏற்றுக் கற்பிக்கிறது.

பழைய ஏற்பாடு
விவிலியத்தின் முதல் நூலாகிய தொடக்க நூலில் மனிதகுல மீட்புப் பற்றிய முன்னறிவிப்பு உள்ளது. கடவுளால் படைக்கப்பட்ட முதல் பெண்ணாகிய ஏவா மரியாவுக்கு முன்னடையாளமாக உள்ளார்:

கடவுள் பாம்பிடம், 'உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்' என்றார் (தொடக்க நூல் 3:15).
முதல் பெண் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்தார். ஆனால் மரியா கடவுளுக்குக் கீழ்ப்படிந்து தம்மை முழுவதும் அவர் கைகளில் ஒப்படைத்தார். இயேசு கிறிஸ்து பாவத்தின்மீது வெற்றிகொண்டதுபோல மரியாவும் அவருக்குக் கீழ்ப்பட்ட நிலையில், அவரோடு இணைந்து, கடவுளின் தனிப்பட்ட அருளால் பாவத்தை முறியடித்தார்.

பழைய ஏற்பாட்டு நூல்களாகிய நீதிமொழிகள் மற்றும் இனிமைமிகு பாடல் ஆகிய நூல்களிலும் மரியாவின் அமலோற்பவம் பற்றிய குறியீடுகள் உள்ளதாகத் திருச்சபை விளக்கம் தருகிறது. எடுத்துக்காட்டாகச் சில பாடங்கள்:

தொடக்கத்தில், பூவுலகு உண்டாகுமுன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன். கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்; பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை. மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே, குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன் (நீதிமொழிகள் 8:23-25).
என் அன்பே, நீ முழுவதும் அழகே! மறுவோ உன்னில் சிறிதும் இலதே! (இனிமைமிகு பாடல் 4:7).
புதிய ஏற்பாடு
புதிய ஏற்பாட்டில் குறிப்பாக லூக்கா நற்செய்தி மரியா கடவுளின் அருளால் நிரம்பியிருந்ததைக் குறிப்பிடுகிறது:

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார் (லூக்கா 1:26-28).
இரண்டாம் வத்திக்கான் சங்கப் போதனை
முதன்மைக் கட்டுரை: இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்
1962-1965இல் நடந்தேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்[5] மரியா அமலோற்பவியாகப் போற்றப்படுவதைக் கீழ்வருமாறு விளக்குகிறது:

ஒரு பெண்ணால் சாவு வந்ததுபோல் மற்றொரு பெண்ணால் வாழ்வும் வரவேண்டும் என்பதற்காக, கிறிஸ்து மனிதர் ஆவதற்கு முன்பே, அவருடைய தாயாக முன்னியமிக்கப்பட்டவரின் இசைவு பெறவேண்டும் என்று இரக்கம் நிறை தந்தை ஆவல் கொண்டார். அனைத்திற்கும் புத்துயிர் அளிக்கும் வாழ்வானவரையே உலகிற்கு ஈந்தவரும், இத்தகைய மாபெரும் நிலைக்குரிய கொடைகளால் கடவுளால் அணி செய்யப்பெற்றவருமான இயேசுவின் அன்னையிடத்தில் இந்த ஆவல் சிறந்த முறையில் நிறைவேறுகின்றது. எனவே, இறை அன்னை முற்றிலும் தூயவர், பாவக்கறை ஏதுமில்லாதவர், தூய ஆவியினால் புதிய படைப்பாக உருவாக்கப்பெற்றவர் என்று அவரை அழைக்கும் வழக்கம் திருத்தந்தையரிடத்தில் நிலவியிருந்ததில் வியப்பொன்றுமில்லை. கருவான முதல் நொடியிலிருந்தே தனிச் சிறப்பான தூய்மையின் மாட்சியால் அணிசெய்யப்பட்டிருந்த நாசரேத்துக் கன்னியை, கடவுளின் ஆணையால் தூது சொல்ல வந்த வானதூதர் 'அருள்மிகப் பெற்றவரே' (காண்க: லூக்கா 1:28) என்று வாழ்த்துகிறார். இக்கன்னியும், 'நான் ஆண்டவரின் அடிமை; உமது சொல்படியே எனக்கு நிகழட்டும்' (லூக்கா 1:38) என மறுமொழி கூறுகின்றார். இவ்வாறு ஆதாமின் மகளான மரியா கடவுள் வாக்குக்கு இசைவு அளித்ததால் இயேசுவின் தாயானார். பாவத் தடையின்றித் தம் முழு இதயத்தோடு கடவுளின் மீட்புத் திருவுளத்தை ஏற்றுத் தம் மகனுக்கும் அவரின் அலுவலுக்கும் தம்மையே ஆண்டவரின் அடிமையாக அவர் முற்றிலும் கையளித்தார்; இவ்வாறு அவருக்குக் கீழும் அவருடனும் எல்லாம் வல்ல கடவுளின் அருளால் மீட்புத் திட்டத்தில் மரியா பணிபுரிந்தார் (திருச்சபை, எண் 56).
அமலோற்பவ அன்னையாக மரியா அளித்த காட்சிகள்
கத்தோலிக்க திருச்சபை அன்னை மரியாவை அமலோற்பவத் தாயாக வணங்குவதை உறுதிப்படுத்தும் விதத்தில் இரு தருணங்களில் மரியா காட்சியளித்ததையும் குறிப்பிடலாம்.

1830ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாள் அன்னை மரியா புனித கத்தரீன் லபோரே என்பவருக்குக் காட்சி அளித்தார். அப்போது அன்னை மரியாவைச் சுற்றி முட்டை வடிவில் தோன்றிய ஒளி வட்டத்தில், "ஓ பாவமின்றி உற்பவித்த மரியாவே, உம்மை அண்டி வரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்" என்ற வார்த்தைகள் காணப்பட்டன.
முதன்மைக் கட்டுரை: கத்தரீன் லபோரே
1858ஆம் ஆண்டு, மரியா அமலோற்பவ அன்னையாக இருக்கின்றார் என்னும் உண்மை மறையுண்மையாக அறிவிக்கப்பட்ட நான்காம் ஆண்டில், புனித பெர்னதெத் சுபீரு என்பவருக்கு மரியா லூர்து அன்னையாக காட்சியளித்தார். அப்போது மரியா "நானே அமலோற்பவம்" (Que soi era immaculada concepcion - தென் பிரான்சிய நாட்டுமொழி) என்று கூறினார்.
முதன்மைக் கட்டுரை: பெர்னதெத் சுபீரு

Sunday, 29 July 2018

SANJAY DUTT, A NOTORIOUS ACTOR CELEBRATE PAKISTAN BORN 1959 JULY 29





SANJAY DUTT, A NOTORIOUS ACTOR 
CELEBRATE PAKISTAN BORN 1959 JULY 29





பாக்கிஸ்தான் சுதந்திர தினத்தை இந்தியாவில் கொண்டாடும் சஞ்சய் தத் பிறப்பு 29 ஜூலை 1959, இந்திய பாலிவுட் திரைப்பட நடிகரும் அரசியல்வாதியும் ஆவார். தத், பாலிவுட் நட்சத்திரங்களான சுனில் மற்றும் நகரிஸ் தத் ஆகியோரின் மகனாவார். 1980ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அவர் அறிமுகமானதில் இருந்து, தன்னை ஒரு முக்கிய நட்சத்திரமாக நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார். சஞ்சய், லாரன்ஸ் ஸ்கூல் சனவார் என்ற இந்தியாவின் முன்னணி போர்டிங் பள்ளியில் படித்தார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

சஞ்சய், ரிச்சா ஷர்மா என்பவரை 12 அக்டோபர் 1987 அன்று திருமணம் செய்தார். 1996ம் ஆண்டு ஷர்மா புற்று நோயால் இறந்தார்.[3] அவர்களின் மகள் திரிஷ்லா அமெரிக்காவில் வாழ்கிறார்.[4] அவரது இரண்டாவது மனைவி ரேகா பிள்ளை ஆவார். தத் தற்போது மூன்றாவதாக தில்னவாஷ் ஷேக் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்,[5] அவர் மான்யதா என்றும் அறியப்படுகின்றார்.

சட்டவிரோத ஆயுதக் கடத்தல்[தொகு]

நீதிபதி கோப் கூற்றின் படி, தத் அவர்கள் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அன்சியா அவர்களால் டிசம்பர் 1992ம் ஆண்டு துபாயில் ரியாசி படப்பிடிப்பின் போது ஏற்பாடு செய்யப்பட்ட இரவு விருந்தில் கலந்து கொண்டார், இதில் நஃப்லா மற்றும் சுஃபியான் ஆகியோர் கலந்துகொண்டனர்.[6] 19 ஏப்ரல் 1993ம் ஆண்டு, தீவிரவாத மற்றும் தேசவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் (TADA) கீழ் கைது செய்யப்பட்டார்.[6] அவர் இந்திய உச்ச நீதிமன்றம் மூலமாக அக்டோபர் 1995ம் ஆண்டு ஜாமீன் வழங்கப்படும் வரையில் 16 மாதங்கள் விசாரணைக் கைதியாக சிறைவாசம் அனுபவித்தார்.

நவம்பர் 1993 ம் ஆண்டு, 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் உள்ளிட்ட 189 குற்றவாளிகளுக்கு எதிராக 90,000 பக்க நீண்ட முதன்மைக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.[7]

மார்ச் 2006ம் ஆண்டு, 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் அபு சலீம் மற்றும் அவரது சக குற்றவாளி ரியாஸ் சித்திக் ஆகியோர் வெளிநாடு தப்பியதற்கு எதிராக முதார் குற்றம் சாட்டப்பட்ட போது, அரசு தரப்பானது சலீம் நடிகர் சஞ்சய் தத்திடம் 9 AK-56 துப்பாக்கிகள் மற்றும் கைக் குண்டுகளை அவரது பந்த்ரா வீட்டில் 1993 ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வழங்கியதாகக் கூறியது.[8]

13 பிப்ரவரி 2007ம் ஆண்டு, மும்பை காவல்துறையின் சிறப்புப் பிரிவானது, தாவூத் இப்ராகிமின் வலது கரமாக விளங்கியவரும் 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புகளில் முக்கியப் பங்கு வகித்ததற்காக மும்பை காவல்துறையின் சிறப்புப் பணிப்பிரிவால் தேடப்பட்டு வந்த அப்துல் கய்யாம் அப்துல் கரீம் ஷேக்கை மும்பையில் கைது செய்தது.[9] சஞ்சய் தத் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் கய்யாம் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். சஞ்சய் அவர்கள் கய்யாமை செப்டம்பர் 1992ம் ஆண்டு துபாயில் சந்தித்ததாகவும் அவனிடமிருந்து கைத்துப்பாக்கியை வாங்கியதாகவும் கூறினார். சி.பி.ஐ, அந்தக் கைத்துப்பாக்கி சஞ்சய்யிடம் தாவூத்தின் சகோதரன் அனீஸ் இப்ராகிமின் கைமாறாக விற்கப்பட்டதாக கருதியது.[10]

31 ஜூலை 2007ம் ஆண்டு, சட்டவிரோதமான ஆயுதங்கள்
வைத்திருந்ததற்காக தத்திற்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.[11] அதே நேரத்தில், 1993 குண்டுவெடிப்புகள் தொடர்புடைய "குண்டு வெடிப்புகளில் தீவிரவாதச் சதி தெளிவாகியது".[11] த கார்டியன் பத்திரிக்கையின் படி, "நடிகர் அந்த கொடூர "கருப்பு வெள்ளி" குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு தனது வாழ்க்கையைப் பற்றி பயம்கொண்டிருப்பதாகக் கூறினார், அந்த குண்டுவெடிப்புகள் சில மாதங்கள் முன்னதான மோசமான இந்து-முஸ்லீம் கலவரத்திற்குப் பழிவாங்கும் விதமாக மும்பையின் முஸ்லீம் ஆதிக்க மாபியாவினால் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் நீதிபதி பிரமோத் கோத், இந்த தற்காப்பை நிராகரித்து மேலும் ஜாமீனை மறுத்தார்."[11] தத் உடனடியாக சிறைக்காவலில் கொண்டுவரப்பட்டு மும்பையின் ஆர்தர் ரோடு ஜெயிலிற்கு அனுப்பப்பட்டார். தண்டனை குறிப்பிடப்பட்டதால், தத் "அதிர்ச்சியடைந்து நடுங்கிவிட்டார், கைகளால் கண்களை மூடி கண்ணீர் விட்டார்".[6]

2 ஆகஸ்ட் 2007ம் ஆண்டு, சஞ்சய் தத் மும்பையிலுள்ள ஆர்தர் ரோடு சிறையிலிருந்து புனேவிலுள்ள எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார்.[12] 7 ஆகஸ்ட் 2007ம் ஆண்டு, தத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.[13] பின்னர் 20 ஆகஸ்ட் 2007ம் ஆண்டு, இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தத்திற்கு இடைக்கால ஜாமீன் அளித்தது. எரவாடா சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தின் ஜாமீன் ஆணையின் நகல் பெறப்பட்ட பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். அந்த ஜாமீனானது 31 ஜூலை அன்று தத்திற்கு தண்டனையளித்த சிறப்பு தடா நீதிமன்றத்தின் தண்டனைக்காலம் வரை செல்லுபடியானது, அது அவருக்கு அதன் தீர்ப்பின் நகலை வழங்கியது.[14] 23 ஆகஸ்டில் தத் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.[15] 22 அக்டோபர் 2007ம் ஆண்டு தத் திரும்பவும் சிறை சென்றார், ஆனால் மீண்டும் ஜாமீனுக்கு மனுசெய்தார். 27 நவம்பர் 2007ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தால் தத் ஜாமீன் பெற்றார்.[16] தற்போது அவர் குற்றத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான நிலுவையிலுள்ள முறையீட்டைக் கொண்டுள்ளார்.[17] ஜனவரி 2009ம் ஆண்டு, தத் சமாஜ்வாடி கட்சி சீட்டில் 2009 மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.[18] இருப்பினும், உச்ச நீதிமன்றம் அவரது தீர்ப்பை நிறுத்தி வைக்க மறுத்தைத் தொடர்ந்து, மார்ச் 2009ம் ஆண்டு அவர் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுக்கொண்டார்.[19]

சர்வதேச மனிதநேய நடவடிக்கைகள்[தொகு]
16 டிசம்பர் 2008 ம் ஆண்டு, சஞ்சய் தத் அவர்கள் [[ஊட்டச்சத்துக்குறைக்கு எதிரான மைக்ரோ ஆல்கே சுருள்பாசி பயன்படுத்தலுக்கான அரசாங்க நிறுவனத்திற்கான]] (IIMSAM) நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டார். ஊட்டச்சத்துக்குறை மற்றும் பட்டினி ஆகியவற்றுக்கு எதிராக அமைப்ப்பின் போராட்டத்திற்கு உதவும் சுருள்பாசி பயன்படுத்துதலை அவர் ஊக்குவிக்கின்றார். அவரது பங்கானது சுருள்பாசி பயன்படுத்தலை முக்கியமாகக் கொண்ட அமெரிக்க மில்லேனியம் மேம்பாட்டு இலக்குகளையும் ஆதரிக்கும்.[20]

Wednesday, 2 November 2016

ALL SOULS DAY - THE DAY OF DEAD CELEBRATED IN MEXICO IN GRAND MANNER NOVEMBER 2


ALL SOULS DAY - THE DAY OF DEAD CELEBRATED IN MEXICO IN 
GRAND MANNER NOVEMBER 2



Day of the Dead (Spanish: Día de Muertos) is a Mexican holiday celebrated throughout Mexico, in particular the Central and South regions, and by people of Mexican ancestry living in other places, especially the United States. It is acknowledged internationally in many other cultures. The multi-day holiday focuses on gatherings of family and friends to pray for and remember friends and family members who have died, and help support their spiritual journey. In 2008 the tradition was inscribed in the Representative List of the Intangible Cultural Heritage of Humanity by UNESCO.[1]

Woman lighting copal incense at the cemetery during the "Alumbrada" vigil in San Andrés Mixquic
The holiday is sometimes called Día de los Muertos[2][3] in Anglophone countries, a back-translation of its original name, Día de Muertos. It is particularly celebrated in Mexico where the day is a public holiday. Prior to Spanish colonization in the 16th century, the celebration took place at the beginning of summer. Gradually it was associated with October 31, November 1 and November 2 to coincide with the Western Christian triduum of Allhallowtide: All Saints' Eve, All Saints' Day, and All Souls' Day.[4][5] Traditions connected with the holiday include building private altars called ofrendas, honoring the deceased using sugar skulls, marigolds, and the favorite foods and beverages of the departed, and visiting graves with these as gifts.[6] Visitors also leave possessions of the deceased at the graves.


Scholars trace the origins of the modern Mexican holiday to indigenous observances dating back hundreds of years and to an Aztec festival dedicated to the goddess Mictecacihuatl. The holiday has spread throughout the world, being absorbed within other deep traditions for honoring the dead. It has become a national symbol and as such is taught (for educational purposes) in the nation's schools. Many families celebrate a traditional "All Saints' Day" associated with the Catholic Church.


Mexican cempasúchil(marigold) is the traditional flower used to honor the dead
Cempasúchil, alfeñiques and papel picado used to decorate an altar
Originally, the Day of the Dead as such was not celebrated in northern Mexico, where it was unknown until the 20th century because its indigenous people had different traditions. The people and the church rejected it as a day related to syncretizing pagan elements with Catholic Christianity. They held the traditional 'All Saints' Day' in the same way as other Christians in the world. There was limited Mesoamerican influence in this region, and relatively few indigenous inhabitants from the regions of Southern Mexico, where the holiday was celebrated. In the early 21st century in northern Mexico, Día de Muertos is observed because the Mexican government made it a national holiday based on educational policies from the 1960s; it has introduced this holiday as a unifying national tradition based on indigenous traditions.[7][8][9]




Day of the Dead
Altardediademuertos.jpg
Día de Muertos altar commemorating a deceased man in Milpa AltaMéxico DF.
Observed byMexico, and regions with large Hispanic populations
TypeCultural
Syncretic Christian
SignificancePrayer and remembrance of friends and family members who have died
CelebrationsCreation of altars to remember the dead, traditional day of the dead's food
BeginsOctober 31
EndsNovember 2
DateOctober 31
Next time31 October 2017
FrequencyAnnual
Related toAll Saint's Day

ALL SOULS DAY - THE DAY OF DEAD CELEBRATED IN MEXICO IN GRAND MANNER NOVEMBER 2


ALL SOULS DAY - THE DAY OF DEAD CELEBRATED IN MEXICO IN 
GRAND MANNER NOVEMBER 2



Day of the Dead (Spanish: Día de Muertos) is a Mexican holiday celebrated throughout Mexico, in particular the Central and South regions, and by people of Mexican ancestry living in other places, especially the United States. It is acknowledged internationally in many other cultures. The multi-day holiday focuses on gatherings of family and friends to pray for and remember friends and family members who have died, and help support their spiritual journey. In 2008 the tradition was inscribed in the Representative List of the Intangible Cultural Heritage of Humanity by UNESCO.[1]

Woman lighting copal incense at the cemetery during the "Alumbrada" vigil in San Andrés Mixquic
The holiday is sometimes called Día de los Muertos[2][3] in Anglophone countries, a back-translation of its original name, Día de Muertos. It is particularly celebrated in Mexico where the day is a public holiday. Prior to Spanish colonization in the 16th century, the celebration took place at the beginning of summer. Gradually it was associated with October 31, November 1 and November 2 to coincide with the Western Christian triduum of Allhallowtide: All Saints' Eve, All Saints' Day, and All Souls' Day.[4][5] Traditions connected with the holiday include building private altars called ofrendas, honoring the deceased using sugar skulls, marigolds, and the favorite foods and beverages of the departed, and visiting graves with these as gifts.[6] Visitors also leave possessions of the deceased at the graves.


Scholars trace the origins of the modern Mexican holiday to indigenous observances dating back hundreds of years and to an Aztec festival dedicated to the goddess Mictecacihuatl. The holiday has spread throughout the world, being absorbed within other deep traditions for honoring the dead. It has become a national symbol and as such is taught (for educational purposes) in the nation's schools. Many families celebrate a traditional "All Saints' Day" associated with the Catholic Church.


Mexican cempasúchil(marigold) is the traditional flower used to honor the dead
Cempasúchil, alfeñiques and papel picado used to decorate an altar
Originally, the Day of the Dead as such was not celebrated in northern Mexico, where it was unknown until the 20th century because its indigenous people had different traditions. The people and the church rejected it as a day related to syncretizing pagan elements with Catholic Christianity. They held the traditional 'All Saints' Day' in the same way as other Christians in the world. There was limited Mesoamerican influence in this region, and relatively few indigenous inhabitants from the regions of Southern Mexico, where the holiday was celebrated. In the early 21st century in northern Mexico, Día de Muertos is observed because the Mexican government made it a national holiday based on educational policies from the 1960s; it has introduced this holiday as a unifying national tradition based on indigenous traditions.[7][8][9]




Day of the Dead
Altardediademuertos.jpg
Día de Muertos altar commemorating a deceased man in Milpa AltaMéxico DF.
Observed byMexico, and regions with large Hispanic populations
TypeCultural
Syncretic Christian
SignificancePrayer and remembrance of friends and family members who have died
CelebrationsCreation of altars to remember the dead, traditional day of the dead's food
BeginsOctober 31
EndsNovember 2
DateOctober 31
Next time31 October 2017
FrequencyAnnual
Related toAll Saint's Day