Showing posts with label BAHADUR. Show all posts
Showing posts with label BAHADUR. Show all posts

Wednesday, 2 October 2019

TRUTH REGARDING LAL BAHADUR SHASTRI ,SHOCKING FACTS


TRUTH REGARDING 
LAL BAHADUR SHASTRI ,SHOCKING FACTS



இந்தியாவை வடிவமைத்த லால் பகதூர் சாஸ்திரி பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்...!





அக்டோபர் 2 ஆம் தேதியை நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியை நினைவுகூறும் பொருட்டு காந்தி ஜெயந்தியாக நாம் கொண்டாடுகிறோம். ஆனால் இந்த நாளானது நமது இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களித்த ஒரு மாமனிதருக்கும் பிறந்த நாள் ஆகும். அவர்தான் இந்தியாவின் இரண்டாவது பிரதம அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி ஆவார். 

இந்தியாவின் வளர்ச்சிக்கு லால் பகதூர் சாஸ்திரி அளித்த பங்களிப்பு ஈடு இணையற்றதாகும். 1962 இல் சீனாவுக்கு எதிரான தோல்வியின் பின்னர் நாட்டின் உடைந்த தன்னம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பித்தவர் மற்றும் 1965 ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் சென்றவர் மேதகு லால் பகதூர் சாஸ்திரி ஆவார். போர் வெற்றி மட்டுமின்றி இந்தியாவில் பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி போன்றவற்றிற்கு வழிவகுத்ததும் இவர்தான். 

 தகவல் 1 

லால் பகதூர் என்பதுதான் இவரின் பெயராகும். இவரின் புலமையின் காரணமாக 1926 இல் காஷி வித்யாபீத் பல்கலைக்கழகம் இவருக்கு சாஸ்திரி என்ற பட்டத்தை அளித்தது. உண்மையில் சாஸ்திரி என்பது பட்டமாகும். 

தகவல் 2 

சாஸ்திரியின் தாய் அவருக்கு 3 மாதமாக இருக்கும் போது கங்கையில் குளிக்கும்போது அவரை தொலைத்துவிட்டார். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததைத் தொடர்ந்து, குழந்தையில்லாத ஒருவர் அவரை மீண்டும் அவருடைய தாயிடம் ஒப்படைத்தார். 


தகவல் 3 

பள்ளி நாட்களில் சாஸ்திரி அவர்கள் தினமும் தலையின் மேல் புத்தகத்தை வைத்துக்கொண்டு கங்கையை நீந்தி கடந்தே பள்ளிக்கு செல்வார். காரணம் அவரின் குடும்ப வறுமை ஆகும். 

தகவல் 4 

உத்திர பிரதேசத்தில் காவல்துறை மந்திரியாக இவர் இருந்த போது கூட்டத்தை கலைக்க மக்களை லத்தியை கொண்டு அடித்து விரட்டுவதற்குப் பதிலாக தண்ணீரை கொண்டு மக்களை விரட்டிய முதல் அரசியல்வாதி இவர்தான். மக்களின் மேல் இவருக்கு இருந்த அக்கறைக்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். 

தகவல் 5 

திருமணத்தின் போது, சாஸ்திரி வரதட்சணையின் ஒரு பகுதியாக ஒரு காதி துணியையும் ஒரு ராட்டை சக்கரத்தையும் எடுத்துக் கொண்டார். 

 தகவல் 6 

ஜவஹர்லால் நேரு ஒருமுறை இவரை பாதி நாகரிகம் அற்றவர் என்று கூறினார். ஏனெனில் லால் பகதூர் சாஸ்திரி எப்போதும் வேஷ்டியும், குர்தாவும் தான் அணிவார். 

தகவல் 7 


சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக லால் பகதூர் சாஸ்திரி சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சாஸ்திரியின் மனைவி மாதம் 50 ரூபாய் ஓய்வூதியமாக பெற்றுவந்தார். ஒருமுறை அவர் மனைவி அதிலிருந்து மாதம் 10 ருபாய் சேகரித்து வைத்ததாகக் கூறினார். இதனால் கோபமுற்ற சாஸ்திரி தனது ஓய்வூதியத்தை குறைத்து, சில ஏழைகளுக்கு ரூ .10 கொடுக்குமாறு மக்கள் சங்கத்தின் ஊழியர்களிடம் கூறினார். 

தகவல் 8 

சாஸ்திரி 11 ஜனவரி 1966 அன்று அப்போதைய யு.எஸ்.எஸ்.ஆரின் தாஷ்கண்டில் இதய செயலிழப்பு காரணமாக இறந்தார், ஆனால் அவரது மரணம் இப்போதும் மர்மமானதாகவே கருதப்படுகிறது. 

Tuesday, 14 August 2018

BAHADUR SHAH BORN 1775 OCTOBER 24-1862 NOVEMBER 7






BAHADUR SHAH 
BORN 1775 OCTOBER 24-1862 NOVEMBER 7



அபுல் முஸப்பர் சிராஜூதின் முஹம்மது பஹதூர்ஷா என்பது இவரது இயற்பெயர். 1775 ஆம் ஆண்டு அக்டோபர் 24 செவ்வாய்க்கிழமை அக்பர்ஷாவுக்கும்-லால்பாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். 1837 ஆம்ஆண்டு பகதூர் ஷா டில்லி அரியணையில் ஏறினார்.

"இருளுக்கு மத்தியில் மருள் உற்ற நெஞ்சுடன்
எங்கும் குவிந்திடும் இங்கிலீஷ் சேனையை 
வெருள் உற்று முற்றிலும் வீறுற்றுத் தாக்கிட
வெருள் உற்று முற்றிலும் வீறுற்றத் தாக்கிட
வேங்கை போல் கொடியினைத்தாங்கிட்ட
தோளோடு திரண்ட நீர் வருக இன்றே"

என்ற உறங்கிக் கிடந்த தேச விடுதலைப்போரில் பங்குகொள்ள அழைத்தவர் பஹதூர் ஷா.

ஆங்கிலேயர்களை விரட்டுவதற்கு சுதேசி மன்னர்கள் யாவரும் முன்வருவாயிர்களாயின் என் ராஜ்ஜியத்தின் அதிகாரம் முழுவதையும் அந்த மன்னர்கள் அடங்கிய சபையிடம் தரத்தயாராக உள்ளேன் என வீர வேண்டுகோள் விடுத்தார். ஆனால் சுதேசி மன்னர்கள் பெரும்பாலும் ஆங்கிலேயருக்கு விசுவாசிகளாகவே இருந்தனர். அப்போது வெகுண்ட பஹதூர்ஷா தேசமக்களின் மனதில் நம்பிக்கை துளியளவாவது இருக்கும்வரை இந்தியாவின் வாள் லண்டனின் இருதயத்தைப் பிளந்து ஊடுருவிச்செல்லும் " என்று ச+ளுரைத்தார். ஆனாலும் மனம் தளராமல் இந்துக்களையும், முஸ்லீம்களையும் ஒருங்கிணைத்தார். இந்நிலையில் இந்து, முஸ்லீம் ஒற்றுமையை குலைக்கவேண்டும் என்று எண்ணி ஆங்கிலேயர்கள் ச+ழ்ச்சி செய்தனர். அச்ச+ழ்ச்சியில் அதிகாரி கெய்த் என்பவன் 1847 தன்னுடைய மனைவிக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறான். நாளை ஈத்பெருநாள், முஸ்லிம்கள் மாடுகளை குர்பான் கொடுப்பர். இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரிய மாடுகளை முஸ்லிம்கள் குர்பான் கொடுப்பதா? என்று இந்துக்கள் கொதித்து எழுந்து கலவரம் நடக்கும். அதுவே நல்ல செய்தியாக இருக்கும் என்று எழுதியுள்ளான்.
இதனைத்தெரிந்து கொண்ட மன்னர் பகதூர்ஷா உடனடியாக தன்னுடைய படைவீரர்களுக்கு நாளை பெருநாள் பண்டிகையின்போது ஆடுமட்டுமே வெட்ட வேண்டும். மாட்டை பலியிடக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பினார். அதன் பின்னர் மாடு அறுப்பது தவிர்க்கப்பட்டது. இதனால் இந்து-முஸ்லிம் கலவரம் நடக்கவில்லை.

அதன் பின்னர் ராஜாக்கம், நவாப்க்கள், குறுநில மன்னர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஆங்கிலேயனுக்கு எதிராக போர்தொடுப்பது என முடிவு எடுக்கப்பட்டு நாளும் குறிக்கப்பட்டது. 1857 ஆம் ஆண்டு மே மாதம் 31ந்தேதி நாள் குறிக்கப்பட்டது. இம்முயற்சியில் பேகம் ஹஜ்ரத் மஹல், ஜான்சிராணி லட்சுமிபாய், மௌலவி அஹமதுல்லா, பேகம் ஹஜ்ரத் மஹல் ஆகியோர் ஈடுபட்டனர். ஆனால் துரதிருஷ்டவசமாக மே 10ந்தேதி ஆங்கிலேயர்களின் ச+ழ்ச்சியால் சிப்பாய் புரட்சி வெடித்தது. அதன் பின்னர் மன்னர் பகதூர்ஷாவை ஆங்கிலேய அரசு கைது செய்து ஜீனத் மாளிகையில் சிறைவைத்தார்கள். அப்போது பசிஏற்பட்ட போது ஆங்கிலேய அரசு இரண்டு மூடப்பட்ட பாத்திரங்களில் உணவை கொண்டு வந்தது. அதை திறந்து பார்த்தால் மன்னரின் இரண்டு பிள்ளைகளான மிர்ஜாமொஹல் மற்றொருவர் எகிலுருசுல்தான் தலைகள்.


இத்தகைய போராளியை 49 பிரிட்டிஷ் பிரஜைகளைக் கொல்ல உடந்தையாக இருந்தார் என்று குற்றம் சாட்டி 1858 மார்ச் மாதம் நாடு கடத்தி பர்மா தலைநகர் ரங்கூன் சிறையில் பிரிட்டிஷார் காவலில் வைத்தனர். அப்போது மன்னர்களாக இருந்தவர்களுக்கு 600 உபகாரச்சம்பளம் வழங்கப்படும். என்னுடைய நாட்டிலிருந்துகொண்டு எனக்கே பிச்சை அளிக்கிறாயா எனக்கேட்டு அதனை வாங்க மறுத்துவிட்டார். சிறைச்சாலையில் எழுத பேனாவும், காகிதமும் கொடுக்க மறுக்கப்பட்டது. கவிஞரான பகதூர்ஷா மனம் நொந்தவாறு அங்கே கிடந்த கரிக்கொட்டையில் சிறையின் அறையில் கவிதை ஒன்று வடித்தார். அந்தக் கவிதை

கண்ணொளியாய் யாருமெனை எண்ணவில்லை
காதலனாய் ஓரிதயம் கருதவில்லை
மண்ணிலோரு பிடியாக மாறிப்போனேன்.
மாநிலத்தில் பயனில்லாப் பாவியானேன்

என்றும், பழைய தலைநகரம் கேட்பாரற்றுக்கிடந்தது. அதனைப்பற்றி பகதூர்ஷா பாடிய கவிதை

நாடு கடத்தப்பட்ட சமயத்தில்
அன்றொரு காலத்திலே-போகம்
அத்தனையும் ஊறிப்பொங்கிடும் சொர்க்கமாய்
நின்று தழைத்தது தில்லி
இன்று குலைத்துவிட்டார்-அந்த
இன்பக்குமாரியை சாந்தியின் தேவியை
இன்று குலைத்து விட்டார்
ஒன்றுமே இல்லையடா-அழிந்
தொழிந்தன் சின்னங்கள் குமுறல்கள் அன்றியங்
கொன்றுமே இல்லையடா

என இந்தியாவை நினைத்து கதறியழுதவறாக நாடு கடத்தப்பட்டார். இனிமேல் இந்தியாவில் மண்ணறையில் நமக்கு இடம் கிடைக்காது என்று எண்ணிய பகதூர்ஷா ஒரு பிடி மண்ணை தன்னுடைய கபன் துணியில் வைப்பதற்கு எடுத்துச்சென்று இறுதியில் 1862 நவம்பர் 7ந்தேதி ரங்கூனில் 92வது வயதில் காலமானார். இதனை கேள்விப்பட்ட நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் 1943 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ந்தேதி ரங்கூன் சென்று பகதூர்ஷா சமாதியில் இருந்த ஒரு பிடி மண்ணை எடுத்து, தமக்கு மக்கள் அளித்த தங்கவாளின் பிடியில் அடைத்து ஓங்கிப்பிடித்தவராக,

நம் வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும் இம்மகானிடம் இருந்தது போல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் மிகக் கூர்மையாக இருப்பதுடன். ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும் என பகதூர்ஷாவின் பொன்மொழியை வழிமொழிந்தார். மொகலாய சாம்ராஜ்யம் இவரோடு சமாதியுடன் சமாதியானது. இந்தியாவின் கடைசி மன்னர் சமாதி பர்மாவிலும், பர்மாவின் கடைசி மன்னர் சமாதி இந்தியாவிலும் அமைந்தது வியப்பின் சரித்திக்குறியீடுதான்.

லெப்டினென்ட் ராபர்ட்-பிற்காலத்தில் பீல்டு மார்ஷல் ராபர்ட் பிரபு என்பவன் தாயாருக்கு எழுதிய கடிதத்தில் எவ்வளவு சுதேசிகளைப் பீரங்கி வாயில் வைத்து சுட்டுக்கொன்றான் என்பதை எழுதியிருக்கிறான். ஒருமனிதன், ஜனங்களை பல வழிகளில் கொன்றதற்காகப் பெருமையடித்துக்கொண்டான். சிலருடைய தாடிகளையும், சிலருடைய குடுமிகளையும் மாமரங்களில் அவர்கள் சாகும் வரை கட்டித் தொங்கவிட்டிருக்கிறான் என பெருமையோடு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளான்.

1858 ஆம் ஆண்டு பிரிட்டீஷ் பார்லிமெண்டில் கொண்டு வரப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் மொகலாய ஆட்சி முடிவுக்குவர, இந்தியா பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் போனது. பாபர் சக்ரவர்த்தியின் முகலாய அரசு பகதூர் ஷாவுடன் முற்றுப்பெறுகிறது.

ஆதார நூல்கள்:

1.இந்திய சுதந்திரப்போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு, சேக்தாவூத், தஞ்சாவூர்

2.விடுதலைப்போரில் முஸ்லிம்கள், வி.என்.சாமி, மதுரை

3.மக்கள் தாரகை, மறைக்கப்பட்ட வரலாறுகளும், மறைக்கப்படும் உண்மைகளும், ஆகஸ்ட் மாத இதழ், சென்னை

4.இந்திய வரலாறும், மறைக்கப்பட்ட உண்மைகளும், பிலாலியா பதிப்பகம், சென்னை.








மதிப்பு மிகுந்த இந்திய மண்ணில்
விதைக்க பட்ட முதல் சுதந்திர விதை
பகதூர் ஷா

இந்திய விடுதலை போரில் வெள்ளையரை விரட்ட 1857 மே 31 இல் சிப்பாய் கலகம் வெடித்தது - இதற்கு காரணமான மொகலாயரின் கடைசி வாரிசு பஹதூர் ஷா என்று குற்றம் சாட்டிய ஆங்கிலேயர்கள் ,பகதூர் ஷா வின் இரு மகன்களையும் கொன்று தலையை மட்டும் வெட்டி உணவுத்தட்டில் வைத்து துணியால் மூடி அனுப்பி வைத்தான்

பகதூர் ஷா கலங்க வில்லை -அழுது ஆர்பாட்டம் செய்யவில்லை .விடுதலை வேள்வியின் பலியாக ஏற்றுகொண்டார்
பகதூர் ஷா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார் -

அப்போது வலது கையை சால்வைக்குள் ஒரு பிடி
இந்திய மண் இருந்தது -


1862 November 7, இல் 92 ஆ ம் வயதில் மறைந்த மன்னன் பகதூர் ஷா சமாதியில் அந்த பிடி மண் தூவப்பட்டது

ஜெய் ஹிந்த்

அபு ஜாபர் சிராசுதீன் முகம்மத் பகதூர் ஷா ஜாபர் (உருது: ابو ظفر سِراجُ الْدین محمد بُہادر شاہ ظفر) என்னும் முழுப் பெயர் கொண்டவரும் பகதூர் ஷா, இரண்டாம் பகதூர் ஷா என்னும் பெயர்களாலும் அழைக்கப்பட்டவருமான பகதூர் ஷா ஜாபர் (Bahadur Shah Zafar) (அக்டோபர் 1775 – 7 நவம்பர் 1862) இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசரும், தைமூரிய வம்சத்தின் கடைசி ஆட்சியாளரும் ஆவார். இவர் முகலாயப் பேரரசர் இரண்டாம் அக்பர் ஷா சானி என்பவருக்கு, அவரது இந்து ராசபுத்திர மனைவியான லால்பாய் மூலம் பிறந்தவர்.

இரண்டாம் அக்பர் ஷா 1838 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி காலமான பின்னர் பகதூர் ஷா ஜாபர் முகலாயப் பேரரசர் ஆனார். ஜாபர் என்பது ஒரு உருதுப் புலவராக அவர் தனக்கு வைத்துக்கொண்ட புனைபெயர் ஆகும். இவரது தந்தையார் "இரண்டாம் அக்பர் ஷா சானி" 1806 க்கும், 1837 க்கும் இடைப்பட்ட காலத்தில் விரைவாகச் சுருங்கி வந்த முகலாயப் பேரரசை ஆண்டு வந்தார். இக் காலத்திலேயே பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி முகலாயப் பேரரசரின் சார்பில் ஆட்சி நடத்தி வந்தது.

இரண்டாம் அக்பர் ஷா சானி, அவரது வாரிசாக பகதூர் ஷா ஜாபரை தெரிவு செய்யவில்லை. அவரது ஒரு மனைவியான மும்தாசு பேகம் தனது மகன் மிர்சா ஜஹாங்கீரை வாரிசாகத் தெரிவு செய்யும்படி வற்புறுத்தி வந்தார். அக்பர் ஷா இதற்கு இணங்கும் நிலையில் இருந்தாலும், மிர்சா ஜஹாகாங்கீர் பிரித்தானியருடன் நல்லுறவு கொண்டிராததால் இது சாத்தியமாகவில்லை.

பேரரசராக
பகதூர் சா ஆட்சி செய்த முகலாயப் பேரரசு, செங்கோட்டையை விடச் சற்றுப் பெரியதாகவே இருந்தது. பிரித்தானியரே அக்காலத்து இந்தியாவில் பலம் வாய்ந்த அரசியல், இராணுவ சக்தியாக விளங்கினர். பிரித்தானிய இந்தியாவுக்கு வெளியே சிறிதும் பெரிதுமான பல அரசுகள் இருந்தன. பிரித்தானியர் முகலாயப் பேரரசருக்கு ஓரளவு மதிப்புக் கொடுத்ததுடன், அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டதுடன், சில வரிகளை அறவிடுவதற்கான உரிமையும், தில்லியில் சிறிய படையொன்றை வைத்திருப்பதற்கான அனுமதியும் கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் இந்தியாவில் இருந்த எந்த சக்திக்கும் பயமுறுத்தலாக இருக்கவில்லை. பகதூர் சா, அரசு நடத்துவதில் எவ்வித அக்கறையும் இல்லாதிருந்ததுடன், பேரரசு எண்ணங்கள் எதுவும் இல்லாதவராகவும் இருந்தார்.

புலவராக
பகதூர் சா சஃபார் ஒரு குறிப்பிடத்தக்க உருதுப் புலவர். இவர் பெருமளவான உருது கசல்களை இயற்றியுள்ளார். 1857 இந்தியக் கிளர்ச்சியின் போது இவரது எழுத்துக்களில் ஒரு பகுதி அழிந்து போயினும், அவர் எழுதியவற்றுட் பல தப்பி விட்டதுடன், பின்னர் குல்லியத்-இ சஃபார் என்னும் பெயரில் தொகுக்கப்பட்டன. இவரது பலம் இறங்குமுக நிலையில் இருந்தது. இவர் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியிடம் ஓய்வூதியம் பெறுபவராக இருந்தார். எனினும் இவரது தகுதிக்கு அதிகமானதாகவே, இவரது சபையில் பல புகழ் பெற்ற உருதுப் புலவர்கள் இருந்தனர். இவர்களில், காலிப், டாக், முமின், சாவுக் (தாவுக்) என்பவர்கள் அடங்குவர்.

1857 ஆம் ஆண்டு நிகழ்வுகள்

20 செப்டம்பர் 1857 ஆம் ஆண்டு மகதூர் ஷா ஜாபரும், மகன்களும் ஹுமாயூன் சமாதிக் கட்டிடத்தில் வில்லியம் ஹட்சனால் பிடிக்கப்பட்ட காட்சி.

1858 ல், தில்லியில் இடம்பெற்ற கண்துடைப்பு விசாரணைக்குப் பின்பும், நாடுகடத்தப்பட முன்பும் எடுக்கப்பட்ட படம். இம் முகலாயப் பேரரசர் எடுத்துக்கொண்ட ஒரே நிழற்படம் இதுவாக இருக்கலாம்.
சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 விரிவடைந்தபோது சிப்பாய்ப் படையினர் தில்லியைக் கைப்பற்றினர்.

இந்துக்கள், முஸ்லீம்கள் என்ற வேறுபாடின்றி இந்தியரை ஒன்றிணைப்பதற்கான தேவை ஏற்பட்டதனால், ஜாபரே தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என கிளர்ச்சியை ஆதரித்த அரசர்களும், கிளர்ச்சிப் படைகளும் கேட்டுக்கொண்டன. பிரித்தானியரை இந்தியாவிலிருந்து அகற்றும்வரை எல்லா அரசர்களும் இந்தியாவின் பேரரசராக ஜாபரை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.[1] ஜாபர் எவருக்கும் பயமுறுத்தலாக இல்லாதிருந்ததுடன், முகலாயப் பேரரசின் வழியினர் ஆகவும் இருந்தது அவர் மற்றெவரிலும் தகுதியானவராகக் கருதப்படக் காரணமாயிற்று.

இக் கிளர்ச்சி தோல்வியுற்று, பிரித்தானியரின் வெற்றி உறுதியான போது ஜாபர் அவரது மக்கள் இருவருடனும் ஒரு பேரப்பிள்ளையுடனும் தில்லிக்குக் புறம்பாக அமைந்திருந்த ஹுமாயூனின் சமாதிக் கட்டிடத்தில் தஞ்சம் அடைந்து மறைந்திருந்தார். 1857 செப்டம்பர் 20 ஆம் தேதி தளபதி வில்லியம் ஹட்சன் தலைமையிலான பிரித்தானியப் படைகள் சமாதிக் கட்டிடத்தைச் சூழ்ந்துகொண்டு ஜாபரை சரணடையுமாறு கட்டாயப் படுத்தியது. அடுத்த நாள் ஹட்சன், ஜாபரின் மகன்ளான மிர்சா முகல், மிசா கிசிர் சுல்தான் பேரன் மிர்சா அபூபக்கர் ஆகியோரை தில்லி நுழைவாயிலுக்கு அருகின் உள்ள கூனி தர்வாசா என்னும் இடத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றான்.

பேகம் சீனத் மகல், பகதூர் சா சஃபாரின் மனைவி
ஜாபரின் குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமான ஆண் உறுப்பினர்கள் பிரித்தானியரால் கொல்லப்பட்டனர். தப்பியிருந்த முகலாய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது நாடுகடத்தப்பட்டனர். 1858 ஆம் ஆண்டில், ஜாபரும், அவரது மனைவி ஜீனத் மகாலுடனும், குடும்பத்தின் எஞ்சியவர்களுடனும் பர்மாவில் (இப்போது மியன்மார்) உள்ள ரங்கூனுக்கு (இப்போது யங்கூன்) நாடுகடத்தப்பட்டார். இது, இந்தியாவை முந்நூறு ஆண்டுகள் ஆண்ட முகலாய வம்சத்தின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

பகதூர் ஷா நாடு கடத்தப்பட்ட நிலையில் 1862 நவம்பர் 7 ஆம் நாள், தனது 87வது வயதில் ரங்கூனில் காலமானார்.[2] இவரது உடல் ரங்கூனில் உள்ள சுவேதாகன் பகோடாவுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இது இப்போது பகதூர் சா தர்கா என அழைக்கப்படுகின்றது.[3] இவரது மனைவி ஜீனத் மகல் 1886 ஆம் ஆண்டு காலமானார்.[4]

நாடுகடத்தப்பட்டு இருந்தபோது பகதூர் ஷா ஜாபர் அவரது புகழ் பெற்ற "இரண்டு யார்டு நிலம்" (ஆறடி நிலம்) எனத் தலைப்பிட்ட இருவரிப் பாடலை எழுதினார். உருது மொழியில் எழுதப்பட்ட இப் பாடலில் தனது சொந்த நாட்டில் தன்னைப் புதைப்பதற்கு ஆறடி நிலம் கூட இல்லாத நிலையையிட்டு மனம் வருந்தியுள்ளார்.

Kitna hai badnaseeb Zafar 
Dafn ke liye 
Do gaz zameen bhi 
Mil na saki kuye yaar mein


தமிழ் மொழிபெயர்ப்பு:

எத்தனை அதிட்டசாலி சஃபார் 
புதைப்பதற்கு 
ஆறு அடி நிலம் கூட 
கிடைக்கவில்லை என் அன்புக்குரிய நாட்டில்


குடும்பம்

இளவரசர் பக்ருதீன் மிர்சா, பகதூர் சா சஃபாரின் மூத்த மகன், பெப்ரவரி 1856. (d. 10th July 1856)[5]

பகதூர் சா சஃபாரின் மகன்கள். இடதுபக்கம்: சவான் பக்த், வலப்பக்கம்: மிர்சா சா அப்பாசு.
பகதூர் சா சஃபாருக்கு நான்கு மனைவிகளும், எண்ணிக்கை தெரியாத ஆசை நாயகிகளும் இருந்தனர்[6] இவர்கள் மூலம் இவருக்குப் பல ஆண்மக்களும் பெண்மக்களும் பிறந்தனர். 22 ஆண்மக்களும், குறைந்தது 32 பெண்மக்களும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

மணம் முடித்த வரிசையில் அவரது மனைவிகள்:

பேகம் அசுராஃப் மகல்
பேகம் அக்தார் மகல்
பேகம் சீனத் மகல்
பேகம் தாஜ் மகல்
ஆண்மக்களில் சிலர்:

மிர்சா பாத்-உல்-முல்க் பகதூர்
மிர்சா முகல்
மிர்சா காசர் சுல்தான்
சவான் பக்த்
மிர்சா குவைசு
மிர்சா சா அப்பாஸ்
பெண்மக்களில் சிலர்

ரபேயா பேகம்
பேகம் பாத்திமா சுல்தான்
குல்சும் சமானி பேகம்
ரௌனாக் சமானி பேகம் (இவர் பேத்தியாகவும் இருக்கலாம்)

பகதூர் சா சஃபாரின் பெரும்பாலான ஆண்மக்களும், பேரர்களும் 1857 ஆம் ஆண்டுக் கலகத்தில் அல்லது அதற்குப் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகளில் கொல்லப்பட்டுவிட்டனர். தப்பியவர்களில் பின்வரும் நான்கு தலைமுறை வழிகள் தெரிய வந்துள்ளன:

தில்லி வழி - மகன் மிர்சா பாத் உல்-முல்க் பகதூர் வழி வந்தவர்கள்.
ஔரா வழி - மகன் சவான் பக்த் வழி வந்தவர்கள்
வாரணாசி வழி - மகன் மிர்சா சகாந்தர் சா (மிர்சா கான் பக்த்) வழி வந்தவர்கள்
ஐதராபாத் வழி - மகன் மிர்சா குவைசு வழிவந்தவர்கள்

பகதூர் சா சஃபாரின் வழியாகவன்றி பிற முகலாய வம்சத்தினர் வழி வந்தவர்களும் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுள் வங்காளத்தில் மகாராசா திகபாட்டியா மற்றும் துலுக்காரி குடும்பத்தினரிடம் பணிபுரிந்த சலாலுத்தீன் மிர்சா வழி வந்தோரும் அடங்குவர்










அபுல் முஸப்பர் சிராஜூதின் முஹம்மது பஹதூர்ஷா என்பது இவரது இயற்பெயர். 1775 ஆம் ஆண்டு அக்டோபர் 24 செவ்வாய்க்கிழமை அக்பர்ஷாவுக்கும்-லால்பாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். 1837 ஆம்ஆண்டு பகதூர் ஷா டில்லி அரியணையில் ஏறினார்.
"இருளுக்கு மத்தியில் மருள் உற்ற நெஞ்சுடன்
எங்கும் குவிந்திடும் இங்கிலீஷ் சேனையை
வெருள் உற்று முற்றிலும் வீறுற்றுத் தாக்கிட
வெருள் உற்று முற்றிலும் வீறுற்றத் தாக்கிட
வேங்கை போல் கொடியினைத்தாங்கிட்ட
தோளோடு திரண்ட நீர் வருக இன்றே"
என்ற உறங்கிக் கிடந்த தேச விடுதலைப்போரில் பங்குகொள்ள அழைத்தவர் பஹதூர் ஷா.
ஆங்கிலேயர்களை விரட்டுவதற்கு சுதேசி மன்னர்கள் யாவரும் முன்வருவாயிர்களாயின் என் ராஜ்ஜியத்தின் அதிகாரம் முழுவதையும் அந்த மன்னர்கள் அடங்கிய சபையிடம் தரத்தயாராக உள்ளேன் என வீர வேண்டுகோள் விடுத்தார். ஆனால் சுதேசி மன்னர்கள் பெரும்பாலும் ஆங்கிலேயருக்கு விசுவாசிகளாகவே இருந்தனர். அப்போது வெகுண்ட பஹதூர்ஷா தேசமக்களின் மனதில் நம்பிக்கை துளியளவாவது இருக்கும்வரை இந்தியாவின் வாள் லண்டனின் இருதயத்தைப் பிளந்து ஊடுருவிச்செல்லும் " என்று ச+ளுரைத்தார். ஆனாலும் மனம் தளராமல் இந்துக்களையும், முஸ்லீம்களையும் ஒருங்கிணைத்தார். இந்நிலையில் இந்து, முஸ்லீம் ஒற்றுமையை குலைக்கவேண்டும் என்று எண்ணி ஆங்கிலேயர்கள் ச+ழ்ச்சி செய்தனர். அச்ச+ழ்ச்சியில் அதிகாரி கெய்த் என்பவன் 1847 தன்னுடைய மனைவிக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறான். நாளை ஈத்பெருநாள், முஸ்லிம்கள் மாடுகளை குர்பான் கொடுப்பர். இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரிய மாடுகளை முஸ்லிம்கள் குர்பான் கொடுப்பதா? என்று இந்துக்கள் கொதித்து எழுந்து கலவரம் நடக்கும். அதுவே நல்ல செய்தியாக இருக்கும் என்று எழுதியுள்ளான். இதனைத்தெரிந்து கொண்ட மன்னர் பகதூர்ஷா உடனடியாக தன்னுடைய படைவீரர்களுக்கு நாளை பெருநாள் பண்டிகையின்போது ஆடுமட்டுமே வெட்ட வேண்டும். மாட்டை பலியிடக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பினார். அதன் பின்னர் மாடு அறுப்பது தவிர்க்கப்பட்டது. இதனால் இந்து-முஸ்லிம் கலவரம் நடக்கவில்லை.
அதன் பின்னர் ராஜாக்கம், நவாப்க்கள், குறுநில மன்னர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஆங்கிலேயனுக்கு எதிராக போர்தொடுப்பது என முடிவு எடுக்கப்பட்டு நாளும் குறிக்கப்பட்டது. 1857 ஆம் ஆண்டு மே மாதம் 31ந்தேதி நாள் குறிக்கப்பட்டது. இம்முயற்சியில் பேகம் ஹஜ்ரத் மஹல், ஜான்சிராணி லட்சுமிபாய், மௌலவி அஹமதுல்லா, பேகம் ஹஜ்ரத் மஹல் ஆகியோர் ஈடுபட்டனர். ஆனால் துரதிருஷ்டவசமாக மே 10ந்தேதி ஆங்கிலேயர்களின் ச+ழ்ச்சியால் சிப்பாய் புரட்சி வெடித்தது. அதன் பின்னர் மன்னர் பகதூர்ஷாவை ஆங்கிலேய அரசு கைது செய்து ஜீனத் மாளிகையில் சிறைவைத்தார்கள். அப்போது பசிஏற்பட்ட போது ஆங்கிலேய அரசு இரண்டு மூடப்பட்ட பாத்திரங்களில் உணவை கொண்டு வந்தது. அதை திறந்து பார்த்தால் மன்னரின் இரண்டு பிள்ளைகளான மிர்ஜாமொஹல் மற்றொருவர் எகிலுருசுல்தான் தலைகள்.
இத்தகைய போராளியை 49 பிரிட்டிஷ் பிரஜைகளைக் கொல்ல உடந்தையாக இருந்தார் என்று குற்றம் சாட்டி 1858 மார்ச் மாதம் நாடு கடத்தி பர்மா தலைநகர் ரங்கூன் சிறையில் பிரிட்டிஷார் காவலில் வைத்தனர். அப்போது மன்னர்களாக இருந்தவர்களுக்கு 600 உபகாரச்சம்பளம் வழங்கப்படும். என்னுடைய நாட்டிலிருந்துகொண்டு எனக்கே பிச்சை அளிக்கிறாயா எனக்கேட்டு அதனை வாங்க மறுத்துவிட்டார். சிறைச்சாலையில் எழுத பேனாவும், காகிதமும் கொடுக்க மறுக்கப்பட்டது. கவிஞரான பகதூர்ஷா மனம் நொந்தவாறு அங்கே கிடந்த கரிக்கொட்டையில் சிறையின் அறையில் கவிதை ஒன்று வடித்தார். அந்தக் கவிதை
கண்ணொளியாய் யாருமெனை எண்ணவில்லை
காதலனாய் ஓரிதயம் கருதவில்லை
மண்ணிலோரு பிடியாக மாறிப்போனேன்.
மாநிலத்தில் பயனில்லாப் பாவியானேன்
என்றும், பழைய தலைநகரம் கேட்பாரற்றுக்கிடந்தது. அதனைப்பற்றி பகதூர்ஷா பாடிய கவிதை
நாடு கடத்தப்பட்ட சமயத்தில்
அன்றொரு காலத்திலே-போகம்
அத்தனையும் ஊறிப்பொங்கிடும் சொர்க்கமாய்
நின்று தழைத்தது தில்லி
இன்று குலைத்துவிட்டார்-அந்த
இன்பக்குமாரியை சாந்தியின் தேவியை
இன்று குலைத்து விட்டார்
ஒன்றுமே இல்லையடா-அழிந்
தொழிந்தன் சின்னங்கள் குமுறல்கள் அன்றியங்
கொன்றுமே இல்லையடா
என இந்தியாவை நினைத்து கதறியழுதவறாக நாடு கடத்தப்பட்டார். இனிமேல் இந்தியாவில் மண்ணறையில் நமக்கு இடம் கிடைக்காது என்று எண்ணிய பகதூர்ஷா ஒரு பிடி மண்ணை தன்னுடைய கபன் துணியில் வைப்பதற்கு எடுத்துச்சென்று இறுதியில் 1862 நவம்பர் 7ந்தேதி ரங்கூனில் 92வது வயதில் காலமானார். இதனை கேள்விப்பட்ட நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் 1943 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ந்தேதி ரங்கூன் சென்று பகதூர்ஷா சமாதியில் இருந்த ஒரு பிடி மண்ணை எடுத்து, தமக்கு மக்கள் அளித்த தங்கவாளின் பிடியில் அடைத்து ஓங்கிப்பிடித்தவராக,
நம் வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும் இம்மகானிடம் இருந்தது போல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் மிகக் கூர்மையாக இருப்பதுடன். ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும் என பகதூர்ஷாவின் பொன்மொழியை வழிமொழிந்தார். மொகலாய சாம்ராஜ்யம் இவரோடு சமாதியுடன் சமாதியானது. இந்தியாவின் கடைசி மன்னர் சமாதி பர்மாவிலும், பர்மாவின் கடைசி மன்னர் சமாதி இந்தியாவிலும் அமைந்தது வியப்பின் சரித்திக்குறியீடுதான்.
லெப்டினென்ட் ராபர்ட்-பிற்காலத்தில் பீல்டு மார்ஷல் ராபர்ட் பிரபு என்பவன் தாயாருக்கு எழுதிய கடிதத்தில் எவ்வளவு சுதேசிகளைப் பீரங்கி வாயில் வைத்து சுட்டுக்கொன்றான் என்பதை எழுதியிருக்கிறான். ஒருமனிதன், ஜனங்களை பல வழிகளில் கொன்றதற்காகப் பெருமையடித்துக்கொண்டான். சிலருடைய தாடிகளையும், சிலருடைய குடுமிகளையும் மாமரங்களில் அவர்கள் சாகும் வரை கட்டித் தொங்கவிட்டிருக்கிறான் என பெருமையோடு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளான்.
1858 ஆம் ஆண்டு பிரிட்டீஷ் பார்லிமெண்டில் கொண்டு வரப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் மொகலாய ஆட்சி முடிவுக்குவர, இந்தியா பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் போனது. பாபர் சக்ரவர்த்தியின் முகலாய அரசு பகதூர் ஷாவுடன் முற்றுப்பெறுகிறது.
ஆதார நூல்கள்:
1.இந்திய சுதந்திரப்போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு, சேக்தாவூத், தஞ்சாவூர்
2.விடுதலைப்போரில் முஸ்லிம்கள், வி.என்.சாமி, மதுரை
3.மக்கள் தாரகை, மறைக்கப்பட்ட வரலாறுகளும், மறைக்கப்படும் உண்மைகளும், ஆகஸ்ட் மாத இதழ், சென்னை
4.இந்திய வரலாறும், மறைக்கப்பட்ட உண்மைகளும், பிலாலியா பதிப்பகம், சென்னை.

Sunday, 1 April 2018

GURU TEGH BAHADUR ,9 TH NANAK BORN 1621 APRIL 1







GURU TEGH BAHADUR ,9 TH NANAK
BORN 1621 APRIL 1




குரு தேக் பகதூர் (Guru Tegh Bahadur) (பஞ்சாபி: ਗੁਰੂ ਤੇਗ਼ ਬਹਾਦਰ). (ஏப்ரல் 1, 1621 - நவம்பர் 24, 1675) என்றறியும் இவர், பத்து சீக்கிய குருக்களில் (தீர்க்கதரிசிகள்) சீக்கிய மத நம்பிக்கையின் ஒன்பதாம் நானக் குருவாவார். சீக்கிய குருக்களில் முதல் குருவான குரு நானக் என்பவரின் ஆவி, இவர்மீது தொடர்ந்ததாகவும் நம்பப்படுகிறது. மேலும், ஆதி கிரந்த் எனப்படும் குரு கிரந்த் சாகிப் எனும் சீக்கியர்களின் புனித நூலில், இவரது 115 கவிதை நடையிலான பாசுரங்களின் (இறைப் பாடல்கள்) உரை இடம்பெற்றுள்ளது.[


இந்து சமயம் மற்றும் சீக்கிய சமயம் (Hinduism and Sikhism) பஞ்சாப் பகுதியில் தோன்றிவைகள். இந்து சமயம் மூவாரயிரத்திற்கும் முற்பட்ட ஆண்டுகளுக்கு முன் தோன்றி, படிப்படியாக வளர்ச்சியடையந்த பண்டைய சமயமாகும். ஆனால் சீக்கிய சமயம், இந்து குடும்பத்தில் பிறந்தவரான குரு நானக் என்பவரால், பதினைந்தாம் நூற்றாண்டில், முகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது. [1]

கர்மா, தருமம், மோட்சம், மாயா, சம்சாரா போன்ற தத்துவக் கருத்துகளை இந்து மற்றும் சீக்கிய சமயங்கள் பகிர்ந்து கொள்கிறது.[2][3] முகலாயர்களின் அடக்குமுறைகளிலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்காகவும், முகலாயர்களை எதிர்கொள்வதற்கும், பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த பெரும்பான்மையான இந்துக்கள் தங்களை சீக்கிய சமயத்தில் இணைத்துக் கொண்டனர்.[4] முதல் முகலாய ஆட்சியாளரான பாபரை எதிர்த்து, சீக்கிய சமயம் தோற்றுவிக்கப்பட்டது.[4
ஒற்றுமை வேற்றுமைகள்

இந்து சமயத்தின் உபநிடதங்கள் மற்றும் பிரம்ம சூத்திரம் ஆகிய வேதாந்தங்களில் கூறியுள்ள நிர்குண பிரம்ம தத்துவத்தை ஆதாரமாகக் கொண்டு உருவமற்ற இறைவனை சீக்கிய சமயம் ஏற்றுக் கொள்கிறது. [5] இந்து சமூகத்தில் பிறந்த குரு நானக் பக்தி இயக்கத்தை வளர்த்து, சீக்கிய சமயத்தின் அடிப்படை கருத்துருக்களை நிறுவியவர்.[1]சீக்கிய சமய மரபின் அடிவேர்கள், சாதுக்கள் பரப்பிய பக்தி இயக்கமாகும்.[6]

சமயச் சின்னம்

சீக்கிய சமயத்தின் சின்னம் இக் ஓங்கார்
இந்து சமயச் சின்னமாக ஓங்காரம் எனும் ஓம் இருப்பது போன்று, சீக்கிய சமயத்தினர் தங்களது சமயச் சின்னமாக இக் ஓங்காரம் (Ik Onkar) எனும் ஒலியை ஏற்றுள்ளனர். [7][8] ஓம் என்பது இறைவனின் திருப் பெயராகும்.[9]

குரு தேக் பகதூர்

முகலாயர் ஆட்சிக் காலத்தில் அடக்குமுறைகளுக்கு ஆளாகப்பட்ட பஞ்சாப் பகுதி இந்துக்கள், தங்களை சீக்கிய சமயத்தினரும், அவர்களது குருமார்களும் காப்பார்கள் என நம்பிக்கையுடன் வாழ்ந்தனர்.[10] பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் வாழ்ந்த இந்து மற்றும் சீக்கிய மக்களிடையே, முகலாய ஆட்சியினர்களுக்கு எதிராக வீர உணர்வை ஊட்டினார் குரு தேக் பகதூர்.[11][12][13]அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில், இந்து சமயம் மற்றும் சீக்கிய சமயத்தினரின் வழிபாட்டு இடங்களை சிதைத்தும், தீர்த்த யாத்திரை போன்ற சமயக் கடமைகளை நிறைவேற்ற மொகலாய அரசினர் வரி வசூலித்தை குரு தேக் பகதூர் மிகக் கடுமையாக எதிர்த்தார்.[12][14][15]

தேக் பகதூரின் மகனும், சீக்கிய சமயத்தின் இறுதி குருவுமான குரு கோவிந்த சிங்கால் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் படி, குரு தேக் பகதூர், காஷ்மீர் இந்துக்களை பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.[11][13]அவுரங்கசீப், குரு தேக் பகதூரை தில்லிக்கு வரவழைத்து, அவரை இசுலாமிய சமயத்திற்கு கட்டாய மதம் மாற வேண்டும் அல்லது இறக்க நேரிடும் என எச்சரித்தார்.[11][13] அவுரங்கசீப்பின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத காரணத்தினால், குரு தேக் பகதூர் சிறையில் பல வாரங்கள் அடைக்கப்பட்டார்.[16][17][13] இறுதியாக பொது மக்கள் முன்னிலையில் தேக் பகதூர் தன் கழுத்தை தானே அறுத்துக் கொண்டு உயிர்த் தியாகம் செய்தார்.[18][19][12]

வேற்றுமைகள்
ஒரு கடவுள் மற்றும் பல கடவுள் கோட்பாடு
சீக்கிய சமயம் உருவமற்ற ஒரு கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். இந்து சமயம் உருவமுள்ள, பல கடவுள் வழிபாட்டில் நம்பிக்கைக் கொண்டது. [20]

சமய நம்பிக்கைகள்
சீக்கிய சமயத்தினர் சடங்குகளில் நம்பிக்கை அற்றவர்கள். சமயக் குருக்களின் பெயர்களை மட்டும் தியானம் செய்பவர்கள். இந்து சமயத்தில் சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் என முக்கியப் பிரிவுகள் இருப்பதால், சமயச் சடங்குகளிலும் வேறுபாடுகள் உள்ளது. [21][22] [23]

சிலை வழிபாடு
சீக்கிய சமயம் சிலை வழிபாட்டை மறுக்கிறது.[24] இந்து சமயத்தினர் தெய்வங்களின் சிலை வழிபாட்டில் நம்பிக்கை உடையவர்கள்.[25] இந்து சமயம் சிலை வழிபாட்டுடன் பஞ்சபூதங்களையும் வழிபடும் முறை கொண்டுள்ளது. லிங்கத்தை நிறுவி அதனை சிவனாக வழிபடும் முறையும் இந்து சமயத்தின் சைவப் பிரிவில் உள்ளது. [26][27]

வீடு பேறு
சீக்கிய சமயத்தின் ஆன்மீக விடுதலை என்ற கருத்துரு, இந்து சமயத்தினரின் முக்தி என்ற கருத்துரு போன்றதே. [28] முக்தி பேறு பிறவிச்சுழற்சி தடுத்து, பிறவா நிலை அடைவதாகும். [28]இறை அருளால் மட்டுமே முக்தி கிடைக்கும் என்பது சீக்கிய சமயத்தின் நம்பிக்கையாகும்.[29] சீக்கிய சமய சாத்திரங்களில் முக்தி பேறை விட இறை பக்தி அதிகம் வலியுறுத்தப்படுகிறது. [29]

இந்துக்கள் போன்று சீக்கியர்களும், வீடுபேற்றிக்காக இறைவன் அல்லது குருவின் பெயரை தொடர்ந்து மனதில் உச்சரித்து, (நாம ஜெபம்) தியானிக்கும் பழக்கம் உடையவர்கள். .[28][29]

ஒற்றுமைகள்
இந்து - சீக்கிய சமயத்திற்கிடையே உள்ள ஒற்றுமைகள்:

இறந்தவர்களை எரிக்கும் பழக்கம் உடையவர்கள்.
அன்னதானம், கர்ம, பக்தி, மோட்சம், மறுபிறவி போன்ற கருத்துருக்களில் நம்பிக்கையுடையவர்கள்.
வேத, வேதாந்தக் கருத்துகளை இந்துக்களைப் போன்று சீக்கியர்களும் தங்கள் குருமார்களிடமிருந்து கற்றுக் கொள்வார்கள்.
ஆத்ம தத்துவத்தில் சீக்கியர்கள், இந்துக்கள் போன்றே நம்பிக்கை உடையவர்கள்.

பண்பாடு மற்றும் திருமணங்கள்
சீக்கிய சமயத்தினர் தங்களது சமயத் தத்துவங்களும்; சமூக கட்டமைப்பும், தங்களது முன்னோர்களின் இந்து சமயத்தைப் போன்றதே எனக் கருதுகிறார்கள். [30] சீக்கியர்-இந்துக்களிடையே, குறிப்பாக கத்ரி சமூகத்திரிடையே, சமயக் கலப்புத் திருமணங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.[30] பஞ்சாப், அரியானா போன்ற பகுதிகளில் உள்ள பல இந்துக் குடும்பத்தினர் தங்களின் முதல் ஆண் குழந்தையை, சீக்கிய மரபுப் படி வளர்க்கின்றனர்.[30]

அதே போன்று ஜம்மு பகுதியில் வாழும் டோக்ரி மொழி பேசும் டோக்ரா சமூகத்தைச் சேர்ந்த இந்து - சீக்கியரிடையே கலப்புத் திருமணங்கள் தொடர்கிறது. [31] [32]


இந்து சமய சாதிய கட்டமைப்புகள், சீக்கிய சமயத்திலும் இருப்பதால், ஒரே சாதியைச் சேர்ந்த இந்து - சீக்கியகளிடையே சமயக் கலப்புத் திருமணங்களை பெற்றோர்களே முன்னின்று நடத்துகின்றனர்.[33]





Execution by Aurangzeb

Gurudwara Sisganj Sahib in Delhi. The long window under the marble platform is the location where Guru Tegh Bahadur was executed.
In 1675 Guru Tegh Bahadur was executed in Delhi on 11 November under the orders of the Mughal Emperor Aurangzeb.[3][1] No contemporary detailed accounts of the circumstances of his arrest and execution have survived either in Persian or Sikh sources. The only accounts available are those written about a hundred years later, and these accounts are conflicting.[31]

According to the official account of the Mughal Empire, written 107 years later by Ghulam Husain of Lucknow in 1782,[31][32]

Tegh Bahadur, the eighth successor of (Guru) Nanak became a man of authority with a large number of followers. (In fact) several thousand persons used to accompany him as he moved from place to place. His contemporary Hafiz Adam, a faqir belonging to the group of Shaikh Ahmad Sirhindi's followers, had also come to have a large number of murids and followers. Both these men (Guru Tegh Bahadur and Hafiz Adam) used to move about in the Punjab, adopting a habit of coercion and extortion. Tegh Bahadur used to collect money from Hindus and Hafiz Adam from Muslims. The royal waqia navis (news reporter and intelligence agent) wrote to the Emperor Alamgir [Aurangzeb] of their manner of activity, added that if their authority increased they could become even refractory.

— Ghulam Husain, Mughal Empire records, [31]
Satish Chandra cautions that this was the "official justification", which historically can be expected to be full of evasion and distortion to justify official action.[31] According to Surjit Gandhi, the account by Ghulam Husain suffers from serious inaccuracies and is historically wrong, as Hafiz Adam had left India and died at Medina in 1643.[33]

Another Muslim scholar, Ghulam Muhiuddin Bute Shah, wrote his Tarikh-i-Punjab in 1842,[34] over a century and half after the death of Guru Tegh Bahadur, saying that there was ongoing hostility from Ram Rai, the elder brother of Guru Har Kishan, against Tegh Bahadur. Ghulam Muhiuddin Bute Shah said that "Ram Rai represented to the Emperor that Guru Tegh Bahadur was very proud of his spiritual greatness and that he would not realise his fault unless he was punished. Ram Rai also suggested that Guru Tegh Bahadur be asked to appear before the Emperor to work a miracle; if he failed, he could be put to death." Satish Chandra and others say that this account is also doubtful as to the circumstances or cause of Guru Tegh Bahadur's execution.[31][35]

Sikh historians record that Guru Tegh Bahadur had become a socio-political challenge to the Muslim rule and Aurangzeb.[3] The Sikh movement was rapidly growing in the rural Malwa region of Punjab, and the Guru was openly encouraging Sikhs to, "be fearless in their pursuit of just society: he who holds none in fear, nor is afraid of anyone, is acknowledged as a man of true wisdom", a statement recorded in the Guru Granth Sahib p. 1427.[3] While Guru Tegh Bahadur influence was rising, Aurangzeb had imposed Islamic laws, demolished infidel schools and temples, and enforced new taxes on non-Muslims.[10][1][28]

The main substantive record however comes from Guru Tegh Bahadur's son, Guru Gobind Singh, in his composition Bachittar Natak. This composition is recited in every Sikh place of worship on the occasion of the Guru's martyrdom. According to records written by his son Guru Gobind Singh, the Guru had resisted persecution, and had adopted and promised to protect Kashmiri Hindus.[3][4] The Guru was summoned to Delhi by Aurangzeb on a pretext, but when he arrived, he was offered, "to abandon his faith, and convert to Islam".[3][4] Guru Tegh Bahadur refused, and he and his associates were arrested. He was executed on 11 November 1675 in public in Chandni Chowk, Delhi.[1][4]

William Irvine states that Guru Tegh Bahadur was tortured for many weeks while being asked to abandon his faith and convert to Islam; he stood by his convictions and refused; he was then executed.[36][37]

Sikh tradition teaches that the associates of the Guru were also tortured for refusing to convert: Bhai Mati Das was sawn into pieces and Bhai Dayal Das was thrown into a cauldron of boiling water, while Guru Tegh Bahadur was held inside a cage to watch his colleagues suffer.[38] The Guru himself was beheaded in public

Impact of execution
Legacy and memorials

Gurdwara Rakab Ganj Sahib, Delhi
Guru Har Gobind was Guru Tegh Bahadur's father. He was originally named Tyag Mal (Punjabi: ਤਿਆਗ ਮਲ) but was later renamed Tegh Bahadur after his gallantry and bravery in the wars against the Mughal forces. He built the city of Anandpur Sahib, and was responsible for saving the Kashmiri Pandits, who were being persecuted by the Mughals.[1]

After the execution of Tegh Bahadar by Mughal Emperor Aurangzeb, a number of Sikh temples were built in his and his associates' memory. The Gurdwara Sis Ganj Sahib in Chandni Chowk, Delhi, was built over where he was beheaded.[41] Gurdwara Rakab Ganj Sahib, also in Delhi, is built on the site of the residence of a disciple of Teg Bahadur, who burned his house to cremate his master's body.[12]

Gurdwara Sisganj Sahib in Punjab marks the site where in November 1675, the head of the martyred Guru Teg Bahadar which was brought by Bhai Jaita (renamed Bhai Jivan Singh according to Sikh rites) in defiance of the Mughal authority of Aurangzeb was cremated here.[42]

Tegh Bahadur has been remembered for giving up his life for freedom of religion, reminding Sikhs and non-Muslims in India to follow and practice their beliefs without fear of persecution and forced conversions by Muslims.[3][1] Guru Tegh Bahadur was martyred, along with fellow devotees Bhai Mati Dass, Bhai Sati Das and Bhai Dayala.[10] 24 November, the date of his martyrdom, is observed in certain parts of India as a public holiday.[43][44][45]

Effect on Sikhs

The execution hardened the resolve of Sikhs against Muslim rule and the persecution. Pashaura Singh states that, "if the martyrdom of Guru Arjan had helped bring the Sikh Panth together, Guru Tegh Bahadur's martyrdom helped to make the protection of human rights central to its Sikh identity".[3] Wilfred Smith[46] stated "the attempt to forcibly convert the ninth Guru to an externalized, impersonal Islam clearly made an indelible impression on the martyr's nine year old son, Gobind, who reacted slowly but deliberately by eventually organizing the Sikh group into a distinct, formal, symbol-patterned community". It inaugurated the Khalsa identity.[46