Showing posts with label THOUGHTS. Show all posts
Showing posts with label THOUGHTS. Show all posts

Saturday, 15 January 2022

CHO - SOME THOUGHTS

 



CHO - SOME THOUGHTS



சோ –சில நினைவுகள்                             

-மணா

அபாரமான டைமிங்சென்ஸ் !

“” நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். சென்னை இவ்வளவு மோசமாக இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள் இல்லையா? அப்போதே உங்களுக்குத் தெரிய வேண்டாமா,சென்னைக்கு எவ்வளவு தூரம் நெருக்கமாக இருக்கிறேன் என்று?’’

-இப்படித் தன்னையே கிண்டல் பண்ணிக் கொண்டவர் துக்ளக் ஆசிரியரான சோ.

தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் கேலி தொனியுடன் பார்த்தவர் தன்னை மட்டும் அதிலிருந்து விலக்கிக் கொள்ளவில்லை.

தனிப்பட்ட பேச்சு, சினிமா, நாடகம், அரசியல் விமர்சனம் எல்லாவற்றிலுமே இந்தக் கேலியான பார்வை தான் மையமாக இருக்கும்.

டைமிங் சென்ஸ் அதிலும் மிகவும் முக்கியம். சோ- வசனம் எழுதிய ‘தேன்மழை’  படத்தில்

 சோ-வும், நாகேஷூம் சேர்ந்து ஒரு அலுவலகத்திற்கு வந்த நீண்ட கொண்டை போட்ட பெண்ணை இன்டர்வ்யூ பண்ணுவார்கள்.

‘’ நீங்க ரொம்பவும் சண்டை போடுவீங்களா?’’

‘’ ஏன்.. அப்படிக் கேக்கிறீங்க?’’

‘’ இல்லை.. நாரதர் கொண்டை போட்டிருக்கீங்களே’’

‘’ சரி.. உங்களுக்கு என்ன வயசு?’’

‘’ இருபத்தி ஒண்ணு’’

குறுக்கே புகுந்து சோ கேட்பார்.

‘’ எத்தனை வருஷமா?’’

இதேவிதமான கிண்டல் நேரடியாகவும் அவரிடம் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் சபாநாயகராக அப்போது இருந்த பி.ஹெச்.பாண்டியனுக்கும் சோ-வுக்கும் மோதல் கடுமையாக இருந்த நேரம்.

 தஞ்சையில் துக்ளக் ஆண்டு விழா. விழா துவங்குவதற்கு முன் லேசான மழை.

மேடைக்கு வந்த சோ பேச முயற்சித்தபோது ‘’ மைக்’’ சரியாக இயங்கவில்லை.

 தட்டிப்பார்த்தார்.

திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து ‘’ கேட்குதா?’’ என்று கேட்டதும்

 ‘’ இல்லை’’ என்று கத்தினார்கள்.

‘’ எப்போதும் நமக்கும் ‘ஸ்பீக்கருக்கும்’ ஒரே பிரச்சினை தான்!’’ என்று டைமிங்காக சட்டமன்ற ஸ்பீக்கரை அர்த்தப்படுத்தும் விதத்தில் சோ சொன்னதும் ஏகக் கைதட்டல்.

சென்னையில் இன்னொரு துக்ளக் ஆண்டுவிழா. துவக்கத்தில் வழக்கமாக அலுலவகத்தினரைக் கூட்டத்தினருக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார் சோ. 

அறிமுகம் மிகவும் துறுதுறுவென்று அவசரமாக நடக்கும்.

‘’ ஸ்ரீனிவாசன்’’ என்று ரங்காச்சாரிக்கு முன்பு துக்ளக்கில் பப்ளிஷராக இருந்தவரைக் கூப்பிட்டார். 

மறுபடியும் அழைத்துப் பார்த்தார். ஸ்ரீனிவாசன் உடனே மேடைக்கு வரவில்லை. 

சற்று டென்ஷனாகி விட்டார் சோ.

‘’ இவரைச் சொந்த பெயரில் கூப்பிட்டேன். இதுவரைக்கும் வரலை. எங்க ஆபிஸிலே சில பேருக்குப் பட்டப்பெயர் வைச்சிருப்பேன். இன்னைக்கு அந்தப் பெயரில் கூப்பிட்டாத் தான் அவர். வருவார் போலிருக்கு. நாலடியார்.. வாங்க’’

-என்றதும் சற்று குள்ளமாக இருந்த ஸ்ரீனிவாசன் மூச்சிரைக்க மேடைக்கு ஓடிவந்து வணக்கம் போட்டதும் கூட்டத்தில் ஒரே சிரிப்பு. 

உடனே ஒரு கமெண்ட் அடித்தார் சோ.

‘’ சிலருக்குச் சொந்த பேரைவிட இந்த மாதிரிக் கூப்பிட்டாத் தான் திருப்தியா இருக்கும் போலிருக்கு’’

உடனே தமிழக அரசியலைக் கணக்கில் எடுத்துக் கொண்டு கூட்டத்தில் ஒரே கரகோஷம்.

சென்னையில் பல சமயங்களில் சோ-வே டிரைவ் பண்ணிக் கொண்டு போவார். போக்குவரத்து நெரிசலான ஒரு சிக்னலில் இவர் காரை நிறுத்தியிருந்த போது கார் கண்ணாடியை யாரோ ஒருவர் தட்டியிருக்கிறார்.

எதற்காகத் தட்டுகிறார்? – சோ கண்ணாடியைக் கீழறக்கியதும் நடந்தது தான் ஆச்சர்யம்.

‘’ நான் கண்ணாடியைக் கீழே இறக்கினேன். தட்டின ஆள் அக்கம்பக்கம் பார்த்தான். எதுக்காக அவன் தட்டினான்னு நான் யோசிக்கறதுக்குள்ளே சட்டுன்னு என் தலையிலே ஒரு கொட்டு கொட்டிட்டு விர்ர்ன்னு போயிட்டான். டிராஃபிக் சிக்னலிலே அவனை விரட்ட முடியுமா? காரைக் கிளப்பிட்டேன். 

அவனுக்கு எப்படியொரு சிந்தனை வந்திருக்கு பாருங்க என் தலை மேலே’’ – வாய்விட்டுச் சிரித்தபடி அலுலகத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது சொன்னார் சோ..

என்னுடைய ‘’ ஆளுமைகள் சந்திப்புகள் உரையாடல்கள்’’ என்கிற நேர்காணல்களின் தொகுப்பு நுலை  ஆசிரியர் சோ-வுக்குச் சமர்ப்பணம் பண்ணியிருந்தேன். 

அதன் பிரதியைக் கொடுக்க துக்ளக் அலுவலகத்திற்கு காலை நேரத்தில் போயிருந்தேன்.

போனதும் சோ-விடம் நுலைக் கொடுத்தேன். 

வாங்கிக் கொண்டார்.

‘’ இந்த நூலை உங்களுக்குத் தான் ‘டெடிகேட்’’ பண்ணியிருக்கேன் சார்.’’

அந்தப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தவர் சொன்னார்.

‘’ இந்த ஒரு பக்கத்தை மட்டும் தான் ‘டெடிகேட்’ பண்ணியிருக்கீங்களா? அப்படின்னா ஒவ்வொரு பக்கத்திலும்லே நீங்க என் பெயரைப் போட்டிருக்கணும். இப்போ என்ன இந்தப் பக்கத்தை மட்டும் நான் கிழிச்சு எடுத்துக்கணுமா? சொல்லுங்க.’’ 

– என்று செம கேலியின் அமளி அடங்க நேரமானது.

சிவாஜி கணேசன் தனிக்கட்சி ஆரம்பித்த சமயம். 

மூன்று நாட்கள் தமிழகம் முழுக்கப் பிரச்சாரம் போனபோது சோ-விடம் அந்தப் பயணத்தைப் பற்றி துக்ளக்கில் எழுதச் சொல்லியிருக்கிறார் சிவாஜி. 

என்னை சிவாஜியுடன் போகச் சொன்னார் சோ.

தூத்துக்குடி துவங்கி சென்னை வரை மூன்றுநாட்கள் அவருடன் காரில் பயணம். அப்போது சிவாஜி ஆரம்பித்ததே பயங்கர மரியாதையோடு தான்.

‘’ வாப்பா.. உன்னைத் தான் அந்தக் குரங்குப்பய அனுப்பிச்சிருக்கானா?’’

எனக்குச் சற்று அதிர்ச்சியாகி விட்டது. 

என் முகக் கலவரத்தைக் கவனித்தார் சிவாஜி.

‘’ இந்தா பாருப்பா.. உனக்குத் தான் அவன் எடிட்டர். எனக்கு குரங்குப்பய தான். சும்மா ஷாக் ஆகாம உட்காரு..’’ என்றார் சிம்மக்குரலில். 

ஒரு கூட்டத்தில் சிவாஜி காரில் ஏறியதும் கூட்ட நெரிசலில் சிக்கி நான் காரை நெருங்கத் தாமதமாகிக் கொண்டிருந்தது.

‘’ என்னடா இவன்! அந்தக் குரங்குப்பய அனுப்பிச்சவன் அவனை விடக் குரங்குபயலா இருக்கானே! அவனைப் பிடிச்சுக் கூட்டி வாங்கடா..’’ 

என்று சிவாஜி சத்தம் போட்டுக் கொண்டிருக்கும்போது நான் காரில் நுழைந்தபோது என் முகத்தில் ஈயாடவில்லை.

நேரே சென்னைக்குப் போனதும் சோ-வைப் பார்த்தபோது கேட்டேன்  .

    ‘’ என்ன சார்.. சிவாஜி உங்களை ஒரு மாதிரி திட்டுறாரே?’’ 

‘’ என்ன.. அதைச் சொல்றதிலே உங்களுக்கு என்ன தயக்கம்! என்னைக் குரங்குப்பயன்னு சொன்னாரா?’இப்போ மட்டுமில்லை. எப்பவும் என்னை அப்படித்தான் அன்பாக் கூப்பிடுவார்’’

‘’ உங்களை மட்டுமில்லை. என்னையும் சிவாஜி சார் குரங்குப்பட்டியலில் சேர்த்துட்டார்’’

என்று நான் சொல்லி முடித்ததும் சோ முகத்தில் அப்படியொரு அமரக்களமான சிரிப்பு.

‘’ அப்படியா உங்களையும் சேர்த்துட்டாரா? ஹைய்யா..ஜாலி.. என்னோட உங்களுக்கும் நல்ல பிரமோஷன் தான் போங்க. எப்படியோ குரங்கு இனத்தோட நல்லபடியா இணைஞ்சிட்டீங்க. இனி சந்தோஷம் தான் ’’

 –  கிண்டலின் உச்சிக்குப் போனார் சோ.

தொலைந்தார் டார்வின் !!!

#

#  ‘குமுதம் ‘ இதழில் வெளியான கட்டுரை.


Monday, 23 August 2021

NAGESH - THOUGHTS /ACHIVEMENTS

 

NAGESH - THOUGHTS /ACHIVEMENTS



நாகேஷ் நினைவலைகள்: மூன்று முறை உயிர்த்தெழுந்த உன்னத கலைஞன்

மு. நியாஸ் அகமது


சர்வர் சுந்தரம்பட மூலாதாரம்,AVM

தில்லுமுல்லு படம் நினைவிருக்கிறதுதானே?


அந்தப் படத்தில் நேர்முகத் தேர்வுக்காக நேரு உடை கேட்டு ரஜினி கடைகடையாக ஏறி இறங்குவார். எங்கும் கிடைக்காது. அப்போது தன் நண்பரான நாகேஷை சந்திக்கச் செல்வார். அவரிடம் இதற்கொரு தீர்வு கேட்பார். நாகேஷ் தான் நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் தான் பயன்படுத்திய நேரு உடையை ரஜினிக்குக் கொடுத்துவிட்டு, "இந்த படத் தயாரிப்பாளர் சம்பளம் தரவில்லை. இப்படிதான் சம்பளத்தைக் கழிக்க வேண்டும்" என்பார் நகைச்சுவையாக.


தில்லு முல்லு

பட மூலாதாரம்,தில்லு முல்லு

இந்த வசனத்தை அவர் வாழ்க்கையிலிருந்துதான் எடுத்துப் பேசி இருக்கிறார் போல.





ஆம். அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை அவரே விவரித்திருக்கிறார். 'தாமரைக் குளம்' என்ற படத்தில் நடிப்பதற்காக, அவருக்கு 500 ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. ஆனால், படம் முடிந்த பின்பும் அவருக்கு சம்பளம் தரப்படவில்லை. தயாரிப்பு நிர்வாகத்திடம் சென்று பேசுகிறார். அப்போதும் அவர்கள் அவருக்கு உரிய சம்பளத்தைத் தர மறுக்கிறார்கள். கோபமடைந்த நாகேஷ் படத் தயாரிப்பு நிறுவன அலுவலகத்திலிருந்த விக்கையும், காலிங் பெல்லையும் எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறார்.


இது ஏதோ கட்டுரையின் சுவாரஸ்யத்திற்காக மிகையாக எழுதப்பட்டது அல்ல. அவரே இது குறித்து எழுதி இருக்கிறார்.


வயிற்று வலி முதல் கோச்சடையான் வரை - நாகேஷ் திரைப்பயணம்

நாகேஷ் முதலில் நடித்தது ஒரு நாடகத்தில், வயிற்று வலி நோயாளியாக.


சில நிமிடங்கள் மட்டுமே நடிக்க வாய்ப்புள்ள அந்தக் காட்சியில், தனது உச்சபட்ச திறமையை வெளிப்படுத்தினார் நாகேஷ். இதற்காக நாடக மேடையில் எம்.ஜி.ஆர் கையால் விருதும் பெற்றார்.


இவரது கலைப்பயணம் இப்படி ஒரு சிறு காட்சியில் தொடங்கியது என்றால், அவரது திரைப்பயணம் அவர் இல்லாமலே முடிவடைந்தது.





அவரது இறுதிப் படத்தில் அவர் நடிக்கவில்லை.


கோச்சடையான்

பட மூலாதாரம்,EROS

படக்குறிப்பு,

கோச்சடையான்


என்ன குழப்பமாக இருக்கிறதா? இறுதியாக அவர் தோன்றிய படம் கோச்சடையான். அவர் இறந்து ஐந்து ஆண்டுகள் கழித்து வெளியான இந்த அனிமேஷன் படத்தில், தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் திரையில் தோன்றினார் அவர்.


'பெர்ஃபாமன்ஸ் கேப்சரிங்' தொழில்நுட்பத்தில் திரையில் தோன்றிய அவருக்கு உடல் அசைவுகளைக் கொடுத்தது ரமேஷ் கண்ணா.


இங்கே அவரது திரைப் பயணத்தை ஆறு பத்திகளில் விவரித்திருந்தாலும், முதல் பத்திக்கும் கடைசி பத்திக்கும் இடையே உள்ள தூரம் குறைந்தது 600 திரைப்படங்கள்.


திருவிளையாடல்

பட மூலாதாரம்,AP INTERNATIONAL

ஆம். ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் கணக்கின்படி, நாகேஷ் 600 திரைப்படங்களுக்கும் அதிகமாக நடித்துள்ளார்.


சர்வர் சுந்தரம், நீர் குமிழி, தில்லானா மோகானாம்பாள், திருவிளையாடல், மகளிர் மட்டும், தசாவதாரம் என அவர் நடித்த படங்களை பட்டியலிட்டாலே இந்தக் கட்டுரை ஆறு பக்கங்களுக்கு நீளும்.


மூன்று முறை உயிர்த்தெழுந்தவர்

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு நாகேஷின் வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. கர்நாடகாவைப் பூர்வீகமாகக் கொண்ட வைதீக குடும்பத்தில் பிறந்த நாகேஷின் பால்யகாலம் மிகவும் செளகர்யமானதாக, மகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்குத் தொடரவில்லை.


நாகேஷ்


பட மூலாதாரம்,PANCHATHANTHIRAM

கல்லூரி காலத்தில் மூன்று முறை அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் நாகேஷ். முகமெல்லாம் அம்மை தழும்புகளைச் சுமந்து கொண்டு, மிகவும் மனச்சோர்வில் , தன் அக்காவுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறாகக் குறிப்பிடுகிறார், "நான் சிரிக்கும் போது, கன்னத்தில் குழி விழக் கண்ட நீ, இனி நான் சிரிக்காமலேயே காண்பாய்".


இதை நாகேஷே பின்னாளில் கல்கி இதழில் எழுதிய தொடரில் குறிப்பிடுகிறார்.


பாலசந்தரின் திரைப்படங்களில் நடித்து உச்சத்தை தொட்டார்.


ஊறுகாய் விற்ற நாகேஷ்

அம்மை நோயின் காரணமாகக் கல்லூரி படிப்பைப் பாதியில் நிறுத்திய அவர் ஏதேதோ வேலைகளைச் செய்திருக்கிறார்.


மனு எழுதி தருபவராக, ஹைதராபாத்தில் ரேடியோ சேல்ஸ்மேனாக, ஊறுகாய் விற்பவராக, ஆலை கூலியாக என பல வேலைகளைப் பார்த்திருக்கிறார் நாகேஷ். ஆனால், அவரால் அப்போது எந்த வேலையிலும் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேல் பணியாற்ற முடியவில்லை. அந்த வேலைகள் அவருக்கு அலுப்பு தட்டியதுதான் அதற்கு முக்கிய காரணம்.


நாகேஷ்

பட மூலாதாரம்,C. V. SRIDHAR

அந்த சமயங்களில் உணவுக்கே மிகவும் கஷ்டப்பட்டதாகக் கூறியிருக்கிறார் நாகேஷ்.


இது போன்ற சமயத்தில்தான் அவருக்கு இந்திய ரெயில்வேயில் வேலை கிடைத்துள்ளது. ஆனால், அந்த வேலையும் அவருக்கு அயர்ச்சி தந்திருக்கிறது. ரயில்வே வேலையில் செலுத்திய கவனத்தைவிட அதிக கவனத்தை அவர் நாடகங்களில் செலுத்தி இருக்கிறார். இது அலுவலகத்திற்குள்ளேயே மனக்கசப்பைத் தந்திருக்கிறது.



சீட்டாட்ட அனுபவம்

நாகேஷ்

பட மூலாதாரம்,FACEBOOK

நாகேஷுக்கு சீட்டாட்டத்தில் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. இதன் காரணமாக மிகவும் தர்மசங்கடமான சூழலில் சிக்கி இருக்கிறார். ஒரு முறை நாகேஷின் தந்தை தமக்கு மருந்து வாங்கி அனுப்பும்படி பணம் அனுப்பி இருக்கிறார். ஆனால், அந்த பணத்தைக் கொண்டு சூதாடி மொத்த தொகையையும் இழந்து, தந்தைக்கு மருந்து அனுப்ப முடியாமல் தவித்து இருக்கிறார் நாகேஷ். பின் தம் நண்பரின் மருந்துக்கடையில் கெஞ்சி மருந்து வாங்கி அனுப்பி இருக்கிறார்.


இதைப் பின்னாளில் அவரே வேதனையுடன் குறிப்பிடுகிறார். "ஒரு வேளை மருந்து கைக்குக் கிடைக்கும் முன்பு அப்பாவுக்கு உடம்பு சீரியஸாகி, ஒன்று கிடக்க ஒன்று ஆகி இருந்தால், அந்த பாவம் நெருஞ்சி முள்ளாக வாழ்நாள் முழுக்க என் நெஞ்சைக் குத்திக் கொண்டு இருந்திருக்கும்" என பின்னாளில் எழுதினார்.


நாகேஷாக விரும்பிய கமல்

மகளிர் மட்டும் படம் நினைவிருக்கிறதா? - பெண்கள் பணியிடங்களில் எதிர்கொள்ளும் சிக்கலை அப்போதே பேசிய படம் இது. இதில் பிணமாக நடித்திருப்பார் நாகேஷ். சில நிமிடங்களே திரையில் வரும் அந்தக் காட்சிகளில் அமர்க்களப்படுத்தி இருப்பார் நாகேஷ் என விமர்சகர்கள் இப்போதும் கொண்டாடுகிறார்கள்.


kamal

பட மூலாதாரம்,LADIES ONLY

இந்தியில் அந்தப் படம் 'லேடீஸ் ஒன்லி' என்ற பெயரில் எடுக்கப்பட்டது. அந்தப் படத்தில் நாகேஷ் வேடத்தில் நடித்தவர் கமல்.


ஆனால் அந்தப் படம் சில காரணங்களால் வெளிவரவில்லை.


2016ம் ஆண்டு கமல் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கமல் இவ்வாறாகச் சொன்னார், "நடிப்பிற்கான டி.என்.ஏ ஒன்றை அறிவியல் கண்டுபிடிக்குமானால், சிவாஜி உடலிலும், நாகேஷ் உடலிலும் இருந்த அதே நடிப்பு டி.என்.ஏ.தான் என் உடலில் இருக்கும்".





Monday, 2 October 2017

MAHATMA GANDHI - SOME THOUGHTS



MAHATMA GANDHI - SOME THOUGHTS




கடந்த வாரம் நான் எழுதிய வார பத்தி ஒன்று, நாடு முழுவதும் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. அனைத்து தரப்பு மக்களிடையேயும் அது தொடர்பான விவாதம் நிலவி வந்தது. ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை உண்டு. சிலர் நான் வலுவான முறையில் அக்கருத்தினை கூறியவன் என்றும் வேறு சிலர் முட்டாள்தனமாக நான் கருத்தைக் கூறி முடிவுக்கு வந்துவிடுவதாகவும் கூறினர். சிலர் இத்துடன் எனது அரசியல் வாழ்க்கையும் முடிவுக்கு வந்துவிடும் என்றும் கணித்தனர்.
எனக்கு வெறுப்புகலந்த எண்ணற்ற மெயில்கள் வந்தன. எனது வாட்ஸ்அப் பாராட்டியும், மோசமாக திட்டியும் பலவித எதிர்வினைகளுடன் கூடிய செய்திகளால் நிரம்பியிருந்தது. தொலைக்காட்சி சானல்கள் முடிவேயில்லாமல் விவாதித்துக் கொண்டிருந்தன. செய்தித்தாள்கள் தலையங்கத்தை எழுதிக் கொண்டிருந்தன. மூத்தபத்திரிக்கையாளர்கள் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தனர். ஆனால் நான் அமைதியாக இருந்தேன்.

எனது கட்டுரை தேசத்தந்தையான மகாத்மா காந்தியைப் பற்றியதல்ல. ஆனால், சுதந்திர காற்றை சுவாசிக்க இந்தியர்களுக்கு அதிகாரத்தை வாங்கித் தந்த அந்த மகாத்மாவைப் பற்றி ஒரு குறிப்பு அதில் உள்ளது. அவர் மகாத்மா காந்தி என அழைக்கப்படுகிறார். நான் காந்தியை பற்றி எழுதும் விமர்சன கருத்துக்கள் தேவையற்றது என்றும் அந்த மாமனிதரை இழிவுப்படுத்தும் வகையில் எழுதுவதாக சில விமர்சகர்கள் கூறினர். நீண்ட காலங்களுக்கு முன் இந்தியாவில் உள்ள எவரும் அவரைப் பற்றி பேசிவிட முடியும். அவரைப்பற்றி தெரிந்து கொள்ள முடியும். இந்தியாவின் பெருமகன்களில் ஒருவர் அவரைப் பற்றிக் கூறுகையில், “தனிப்பட்ட முறையில் காந்தியைப் பற்றி தெரிந்து கொண்ட பாகியசாலி நான். அவர் ஒரு பரிசுத்தமான மனிதர் என்றும், உயர்ந்த மனிதர் என்றும், துணிச்சல்மிக்கவர் என்றும் இந்த பூமியில் இதுவரை இல்லாத மேன்மைமிகு மகாத்மாவாகவும் இருந்தார் என உங்களுக்கு என்னால் கூற முடியும். அவர் மனிதர்களுக்குள் சிறந்த மனிதர், வீரர்களுக்குள் ஒரு சிறந்த வீரர். தேசபக்தர்களில் ஒரு சிறந்த தேசபக்தர். அவர் மூலம் இந்திய மனிதம் உன்னதமான நிலையை அடைந்துள்ளது எனக் கூட நாம் கூறிவிட முடியும்.” இந்த வார்த்தைகளை கூறியவர் மற்றொரு சிறந்த மனிதரான கோபால கிருஷ்ண கோகலே ஆவார்,

எனது கட்டுரை இழிவுபடுத்தும் வகையில் இருந்ததாக சிலர் கருதுகின்றனர். அது உண்மையா? மற்றொரு நாள் அதைப் பற்றி நான் விவாதிப்பேன். ஆனால், நான் எப்போதும் மதித்துப் போற்றும் ஒரு தனி நபர் உண்டென்றால் அவர் காந்தி மட்டும் தான். நான் சமய மரபுகளை பின்பற்றுபவன் அல்ல. அதுபோலவே, நான் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பவனும் அல்ல. ஆனால், பிரிட்டிஷ் அரசை எதிர்த்து இந்தியர்களை எழுச்சி கொள்ள செய்வதில் வெற்றி பெறச் செய்த பெருமைக்கு தகுதியுடையவர் ஒருவர் உண்டென்றால் அவர் காந்தியடிகள் மட்டும் தான் என்பதாகவே நான் கருதுகிறேன். அது போன்றே இந்தியாவின் கூட்டு மனசாட்சியை தட்டியெழுப்பியவர் என்றால் அதுவும் மகாத்மா காந்தி மட்டுமே. அதனை அவர் வழக்கத்துக்கு மாறான முறையில் செய்தார். வரலாறு மற்றும் கலாச்சாரங்கள் முழுவதும் வன்முறைகளால் நிரம்பி வழியும் போது காந்தியடிகள் அதனை மற்றொரு வழியில் நடைமுறைப்படுத்தினார். வன்முறையில்லா முறைகளை தனது வாழ்வில் நடைமுறைப்படுத்தியதோடு, அவற்றை பிரச்சாரமும் செய்தார்.

ஒரு காலத்தில் அவர் வன்முறைக்கு ஆதரவாளராக இருந்தார் என்பது தற்போதைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரே இதனை ஒப்புக் கொள்ளுகிறார். “நான் இங்கிலாந்திற்கு சென்ற போது, வன்முறையின் ஆதரவாளனாக இருந்தேன். அதன் மீது எனக்கு நம்பிக்கையும், வன்முறையில்லாமையின் மீது எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் இருந்தேன்”. ஆனால் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள் அவரை மாற்றியது. காந்தி கபடற்றவராக இருந்தார். “1906 இல் எனக்கொரு முக்கிய பணி வந்தது. வன்முறையில் நம்பிக்கை கொண்டு வாழும் மனிதர்களிடையே, வன்முறையற்ற, அமைதியான வாழ்க்கைமுறையை பற்றி எடுத்துறைக்கும் பணி அது.” என 1942 இல் எழுதினார்.
வன்முறை கவர்ச்சிகரமானது. உணர்ச்சிமிக்கதும் கூட. அது மனோவசியப்படுத்துவது. வரலாறு முழுவதும் வன்முறை நிகழ்ச்சிகள் நிறைந்துள்ளன. பல்வேறு காலக்கட்டங்களில் வன்முறை எப்படி மாறியுள்ளது என்றும் வரலாறு போதிக்கிறது. 


1917 இல் நடந்த ரஷ்ய புரட்சி சமீபத்திய வளர்ச்சி. இந்த காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் மார்க்ஸிஸமும் கம்யூனிசமும் உலகம் முழுவதும் பூத்து குலுங்கியது. அது பல புத்திசாலியான தலைவர்களை உற்பத்தி செய்தது. மார்க்ஸிசம் பாட்டாளி வர்க்கத்தின் பெயரால், உழைக்கும் மக்களுக்காக, வர்க்கமற்ற சமூகத்தை உருவாக்க,வர்க்க எதிரிகளுக்கு எதிர்வினையாற்ற, முதலாளித்துவத்தின் அடிமைத் தனத்திலிருந்து மக்களை விடுவிக்க வன்முறை அவசியம் என நியாயப்படுத்துகிறது. ஜார் மன்னனை லெனின் அப்புறப்படுத்தியது சமீபத்திய வன்முறை முறையை மெய்ப்பித்துக் காட்டுகிறது. ஆனால், இது போன்ற உதாரணங்களால் கவரப்பட காந்தி ஒரு சாதாரண மனிதரல்ல.
அவர் வன்முறையற்ற போராட்ட முறைகளில் நம்பிக்கை கொண்டிருந்தார். சத்யாகிரக போராட்டம் ஆங்கிலேயரை எதிர்த்து போராடுவதற்கான தீப்பந்தமாக இருந்தது. மதன் லால் திங்க்ராவால் சர் கர்சன் வில்லி படுகொலை செய்யப்பட்ட போது ஒட்டுமொத்த இந்தியாவும் அதனை நியாயப்படுத்தி கொண்டிருந்த போது காந்தியடிகள் அதனை கண்டிக்க தயங்கவில்லை.
“கொலையாளிகள் கறுப்பர்களாகவோ வெள்ளையர்களாகவோ என யாராக இருந்தாலும் இந்தியா இத்தகைய கொலையாளிகளின் ஆதிக்கத்தால் எந்த பயனையும் பெறப் போவதில்லை. இது போன்றவர்களின் ஆதிக்கம் ஏற்படுமானால் இந்தியா பாழாகி வீணாகிப் போய்விடும்,” என்று காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி தான் எழுதிய ’மோகன் தாஸ்’ என்ற நூலில் எழுதினார்.

 சவார்க்கர் காந்தியை கொலை செய்ய முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்டு பின்னர் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் விடுதலை செய்யப்பட்டார். காந்தியின் சிறப்பு, பிரச்சாரங்களில் மட்டும் இருந்துவிடவில்லை. தான் பிரச்சாரம் செய்வதை தானே பின்பற்றுவதிலும், தான் பிரச்சாரம் செய்யும் கொள்கைகளில் உண்மை தன்மையுடன் இருத்தலிலுமே இருந்தது. தான் தனது சொந்த வாழ்வில் பின்பற்றாத எதையுமே அவர் பிரச்சாரம் செய்ததில்லை. இதன் காரணமாகவே அவரது குடும்பம் சில விவகாரங்களை சகிக்க வேண்டியதாக இருந்தது. அவரது மனைவி அதிக நெருக்கடிகளைத் தாங்க வேண்டிய நபராக இருந்தார். 

அவரது தென்னாப்பிரிக்க வாழ்நாட்களில் ஒரு சத்தியாகிரக போராட்டத்தில் காந்தி கைது செய்யப்பட்ட போது கஸ்தூரிபாய் நோய்வாய்ப்பட்டார். அவரது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அப்போது பரோலில் சென்று மனைவியை கவனித்துக் கொள்ளுமாறு அவருக்கு அறிவுரை கூறப்பட்டது. ஆனால் காந்தி அதனை மறுத்தார். நவீனகாலத்தில் எந்த கணவனும் எழுதாத ஒரு கடிதத்தை காந்தி எழுதினார். ‘இந்த செய்தியால் தனது இதயம் துண்டிக்கப்பட்டாலும், சத்யாகிரகம் தன்னை அவரிடம் செல்வதில் இருந்து தடுக்கிறது. தனது மனைவி தைரியத்தை காத்து, போதிய சத்தான உணவுகளை உண்டால் அவரால் பழைய நிலைக்கு திரும்பிவிட முடியும். ஆனால் அதிர்ஷ்டம் வேறு மாதிரி இருந்தாலும், அவர் நான் அருகில் இருக்கும்போது இறந்தால் எப்படி இருக்குமோ அதே மனநிலையை நான் இல்லாத போதும் கொண்டிருக்கவேண்டும்,’ என்று எழுதினார்.”

அவரது மகன் ஹரிலால், தனது நடவடிக்கைகளால் கசப்பான உணர்வை ஏற்படுத்தினார். உண்மையில் பிற்காலத்தில், ஹரிலால் தனது தந்தையிடம் மிகுந்த கோபத்துடனும், அவருடனான உறவை துண்டித்துக்கொண்டார். தனது தந்தையார் தனது கல்வியை அலட்சியப்படுத்தினார் என்பதுடன் தன்னை இங்கிலாந்துக்கு சென்று, தான் விரும்பியபடி சட்டம் படிக்க அனுமதிக்கவில்லை என்பதிலும் காந்தியடிக மீது கடும் கோபத்தில் இருந்தார். ஒவ்வொரு தந்தையரும், ஹரிலால் தனது தந்தை காந்திக்கு எழுதிய கடிதத்தில் எழுதப்பட்ட ஒரு வரியை படிக்க வேண்டும். “நீங்கள் எங்களை அறிவில்லாதவர்களாக உருவாக்கியுள்ளீர்கள்.” இதிலிருந்து, ஒரு தந்தையாக காந்தியடிகள் தோற்றுப் போனார் என ஒருவர் கூறிவிட முடியும். ஆனால் உண்மை என்னவெனில், காந்தியடிகள் தனது மகனுடைய விவகாரத்தில் கூட சமரசம் செய்து கொள்ளத் தயாராக இல்லை என்பதே. ஒவ்வொருவருடனும் அவர் கண்டிப்பாக இருந்தாரென்றால், தனது மகனிடம் கூட அவர் அவ்வாறே இருந்தார்.

சமகால இந்தியாவில், ஒவ்வொரு அரசியல்வாதிகளும் தங்கள் பிள்ளைகளை மட்டுமே ஊக்குவித்து வரும் நிலையில் காந்தியடிகள் ஒரு ஒளிரும் உதாரணமாக இருந்து வருகிறார். அனைவரும் சமம் என்றும் சமமாகவே பாவிக்கப்பட வேண்டும் என்றே அவரது கருத்தாக இருந்தது. இங்கிலாந்திற்கு சென்று கல்வி உதவித் தொகை பெற்று சட்டம் படிக்க, ஹரிலாலை விட சஹன் லாலே தகுதியானவர் என்பதே அவரது கருத்தாக இருந்தது. அதனால் தான் சஹன் லால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காந்தியடிகள் எளிமையானவராக இருந்தார். அவர் சிக்கலான நபராக இருக்கவில்லை. அவரது மெய்மை வெள்ளை அல்லது கறுப்பாக இருந்தது. அவரது வாழ்க்கையில் சாம்பல் நிறத்துக்கு இடம் இல்லாமல் இருந்தது. அவரை பொறுத்த வரை சத்தியம் என்பது ஒரு சமூகம் மட்டுமல்லாமல் தனி நபருக்கும் கூட உண்மையான சோதனையாக இருந்தது. 

ஆனால், துரதிருஷ்டவசமாக சத்தியம் என்பது பின்னிருக்கைக்கு தூக்கி வீசப்பட்டு, விமர்சனங்கள் எல்லாம் இழிவுபடுத்தும் சொற்களாக திரித்துக் கூறப்படும் காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். காந்தி எப்போதுமே சிறந்தவராக இருந்தார். அவர் சிறந்தவராகவே தொடருவார். ஒரு கட்டுரை வரலாற்றில் அவருக்குள்ள இடத்தை குறைத்துப் போட்டுவிட முடியாது. மாறாக, அவரது காலத்தையும், வாழ்வையும் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் போது, வரலாறு மேலும் செறிவூட்டப்படும். விவாதம் அதனடிப்படையிலேயே தொடர வேண்டும்.
கட்டுரையாளர்: அசுடோஷ்