Showing posts with label BIRTH. Show all posts
Showing posts with label BIRTH. Show all posts

Wednesday, 11 May 2022

WORLD FIRST BIRTH CONTROL BILLS RELEASED 1960 MAY 11 IN USA

 


WORLD FIRST BIRTH CONTROL BILLS  RELEASED 1960 MAY 11 IN USA



பெண்களின் சாதனைக்கு பக்கபலமாக மாறிய கருத்தடை மாத்திரைகள்!

18 ஏப்ரல் 2017

கருத்தடை மாத்திரைகள் உருவானது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கருத்தடை மாத்திரைகளால் பெரிய அளவிலான சமூக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த மாற்றங்களை ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் உணர்வதோடு, அது மறுக்க முடியாத உண்மையாகவும் உள்ளது.அமெரிக்காவில், குழந்தை பிறப்பை கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் கருத்தடை மாத்திரைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலரும், பாலியல் கல்வியாளருமான மார்கரெட் சாங்கர் கேட்டுக்கொண்டார். ஆண்களுக்கு சரிநிகரான அதிகாரத்தை பெண்களும் பெற, பெண்களுக்கு சமூக சுதந்திரமும், பாலியல் சுதந்திரமும் தேவை என்பது சாங்கரின் திண்ணமான எண்ணமாக இருந்தது.கருத்தடை மாத்திரைகள் சமூகப் புரட்சியை ஏற்படுத்தியதோடு, இருபதாம் நூற்றாண்டில் மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தையும் ஏற்படுத்தியது. கவனமற்ற உடலுறவால் கருவுறுவது பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. இந்த பிரச்சனையை சமாளிக்க, காதலர்கள் காலங்காலமாக பல்வேறு வித்தியாசமான உபாயங்களை கடைபிடித்து வந்தனர்.


முதலையின் மலம்

பண்டையகால எகிப்தில், கருத்தரிப்பதை தவிர்க்க விரும்பிய பெண்கள், கருத்தடையாக முதலையின் மலத்தை பயன்படுத்தினார்கள். பிறப்புறுப்பில் நோய்தொற்று ஏற்படுவது மற்றும் கருவுறுவதை தடுப்பதற்காக முதலையின் மலம் பயன்படுத்தப்பட்டதாக கி.மு.1850 ஆம் ஆண்டின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. முதலையின் மலத்தில் விந்தணுக்களை அழிக்கக்கூடிய அமிலத்தன்மை இருப்பது இதற்கான காரணமாக இருந்திருக்கலாம்.


எலுமிச்சம் பழச்சாறு

அரை எலுமிச்சம் பழத்தை பிழிந்து, அதிலிருந்து கிடைக்கும் சாறை விந்தணுக்கொல்லியாக பயன்படுத்துவது பல கலாசாரங்களில் பின்பற்றப்படும் வழக்கம்தான். கருத்தடைக்காக எலுமிச்சை சாறு பயன்படுத்துவதைப் பற்றி காஸனோவா தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆட்டின் மூத்திரத்தில் இருந்து உருவாக்கப்படும் ஆணுறையில், அரை எலுமிச்சம் பழத்தை பிழிந்து பயன்படுத்துவதால், கர்ப்பப்பை வாயில் தற்காலிக தடை ஏற்படும்.


கருத்தடை மாத்திரைகள் உருவானது எப்படி?


எலுமிச்சம்பழத்தில் இருக்கும் சிட்ரிக் அமிலம் விந்தணுக்கொல்லியாக வேலை செய்திருக்கலாம். ஆனால், காதலில் கட்டுப்பாட்டோடு இல்லாதவர்களுக்கு, இந்த உத்தியும் கட்டுப்பாடான பலனையே அளித்திருக்கும். எலுமிச்சம்பழத்தை கருத்தடையாக பயன்படுத்தும் பழக்கம் தற்போதும் சில இடங்களில் புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.இன்றைய காலகட்டத்தில், இதுபோன்ற சிக்கலான முறைகளை கைவிட்டு, கர்ப்பம் ஏற்படாமல் தடுக்க ஆணுறை (காண்டம்) பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆணுறையை சரியாக பயன்படுத்தாதது, அது நழுவி விடுவது மற்றும் சில சமயங்களில் ஆணுறை கிழிந்து போய்விடுவதாலும் அது பயனற்றதாகிவிடுகிறது.

ஓர் ஆய்வின்படி, உடலுறவின்போது கருத்தடைக்காக ஆணுறை பயன்படுத்தும் 18 சதவிகிதத்தினருக்கு அது பலனளிக்கவில்லை, அதாவது உடலுறவின் போது நூறு பேர் ஆணுறை பயன்படுத்தினால் அதில் 82 சதவீதமே பலனளித்தது, மீதமுள்ள 18 பெண்கள் கர்ப்பம் தரித்தனர்.


கருத்தரிக்க பொருத்தமான காலத்தை அறிய உதவும் மென்பொருள்


ஆனால், ஆணுறையை விட கருத்தடை மாத்திரைகள் சிறப்பாக செயல்படுகின்றன. கருத்தடை மாத்திரை பயன்படுத்துபவர்களில் வெறும் ஆறு சதவிகித பெண்களுக்கு தான் அது பலனளிக்காமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஆணுறையை விட கருத்தடை மாத்திரைகள் மூன்று மடங்கு அதிக பாதுகாப்பானவை என்று சொல்லலாம்.


பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பு!


கருத்தடை மாத்திரைகள், பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. கருத்தடை மாத்திரை வாங்குவது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். கருத்தடை மாத்திரை பயன்படுத்தியதை, பயன்படுத்துவதை, பெண்கள் தங்கள் பாலியல் துணையிடம் சொல்வது கூட அவசியமில்லை என்பதும், கரு தரிப்பது குறித்து சுயமாக முடிவெடுக்க உதவுவதும் இதன் சிறப்பு. 1960 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில்தான் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதற்கான அனுமதி உலகிலேயே முதன்முறையாக வழங்கப்பட்டது. அதன்பின், ஐந்து ஆண்டுகளில், திருமணமான பெண்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் கருத்தடைக்காக மாத்திரைகளை பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.திருமணமாகாத பெண்களும் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தியது தான் உண்மையான புரட்சி என்று சொல்லலாம். ஆனால் இதற்காக அவர்கள் வெகுகாலம் காத்திருக்க வேண்டியிருந்தது.


1970 களின் மத்தியில் அமெரிக்காவில் 18 முதல் 19 வயது பெண்கள், கர்ப்பத்தை தவிர்க்க, கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவது பரவலானது. அதன்பிறகு, கருத்தடை புரட்சி, பொருளாதார புரட்சியாக புதிய பரிமாணத்தில் பயணித்தது.


ஆர்வம் பிறந்தது!


1970 ஆம் ஆண்டு வரை, சட்டம், மருத்துவம், பல் மருத்துவம், வணிக மேலாண்மை போன்ற கல்விகளை கற்பதில் ஆண்களின் ஆதிக்கம் தான் இருந்துவந்தது.


ஆனால் அதன்பிறகு நிலைமையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டது. கருத்தடை மாத்திரைகள் பரவலான பிறகு, பெண்களும் இந்தத் துறைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள்.


கருத்தடை மாத்திரைகள் உருவானது எப்படி?

பட மூலாதாரம்,MANAGED (PROJECT-LICENSE)

இந்தத் துறைகளில் பெண்களின் பங்களிப்பு 20 சதவிகிதமாக இருந்த நிலையில், கருத்தடை மாத்திரைகள் புழக்க்த்திற்கு வந்தபிறகோ 25 சதவிகிதமாக அதிகரித்து, 1980 களில், மூன்றில் ஒரு பங்காக உயர்ந்தது.


அதற்கு முன்பும் பெண்கள் கல்லூரிக்கு சென்றுக் கொண்டுதான் இருந்தார்கள், ஆனால் அதிக கவனமும்,உழைப்பும் தேவைப்படும் இதுபோன்ற துறைகளை பெண்கள் தேர்ந்தெடுக்க தொடங்கியது கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி, குழந்தை பிறப்பை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்ட பிறகு தான். அனைத்துத் துறைகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வந்தாலும், மருத்துவத் துறையை மிக அதிக அளவிலான பெண்கள் தேர்ந்தெடுத்தது அனைவருக்கும் அதிசயமளிப்பதாக இருந்தது.


திருமணம் முறிந்தால் மறுதுணை தேடுவது என் உரிமை: பெண்களின் மனநிலை மாற்றம்


மஹாராஷ்டிராவில் ஆணா, பெண்ணா சோதனையை கட்டாயமாக்க திட்டம்?


கருவை சுமப்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை பெண்களுக்கு கொடுத்தது கருத்தடை மாத்திரைகள் தான். அதனால் தான் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டத்தில் பெண்கள் தாங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுக்க முடிந்தது. கர்ப்பம் தரிப்பதை இயற்கையின் கையில் இருந்து, பெண்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது தான் மிகப் பெரிய புரட்சி.


குறைந்தது முப்பது வயது வரை பெண்கள் கர்ப்பம் தரிக்க விரும்புவதில்லை. அதற்கு முன்பு குழந்தை பெற்றுக் கொண்டால், தொழிலுக்கு போதுமான நேரம் ஒதுக்கமுடியாமல், பெண்களால் ஒரு சிறப்பான இடத்தை பிடிக்க முடிவதில்லை.


மருத்துவம், பொறியியல், வழக்குரைஞர், தொழில்நுட்ப வல்லுநர்கள் என பெண்கள் தாங்கள் விரும்பும் கல்வியை கற்க, குழந்தை பிறப்பை காரணமாக காட்டும் போக்கு குறைந்துவிட்டது.


கருத்தடை மாத்திரைகள் உருவானது எப்படி?

பட மூலாதாரம்,MANAGED (PROJECT-LICENSE)

கருத்தடை மாத்திரைகள் அறிமுகமாவதற்கு முன்பு பெண்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்யும் நடைமுறை பரவலாக இருந்தது. ஒரு பெண் 30 வயது வரை திருமணம் செய்துக் கொள்ளாமல் இருந்தால், அவருக்கு மாப்பிள்ளை கிடைப்பது அரிதாக இருந்தது. ஏனெனில், வழக்கமாக அந்தப் பெண்ணின் வயதுக்கு ஏற்ற ஆண் துணை கிடைப்பது அரிதாகும்.


கருத்தடை மாத்திரைக்கு முன், பின் என பெண்களின் வாழ்க்கையில், சமூக நிலையில் தான் மாற்றம் இருந்ததே தவிர, ஆண்களின் வாழ்க்கையில் இல்லை என்பதை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது.


ஆனால், கருத்தடை மாத்திரை என்பது, "கர்ப்ப பயம்" என்ற பரிணாமத்தையே தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டது. திருமணமாகாத ஒரு பெண், எந்த பயமும் இல்லாமல் உடலுறவில் ஈடுபடலாம் என்ற நிலை உருவாகிவிட்டது ஒருபுறமிருக்க, திருமண அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. சிறு வயது திருமணம் என்பது சிறுகச் சிறுக குறுகி அருகுகிறது.


பெண்ணின் அங்க அளவுகளை வர்ணிக்கும் பாடப்புத்தகம்


அமெரிக்காவில் 1970 ஆம் ஆண்டில் பெண்களின் நிலையில் மாற்றம் ஏற்பட்டதற்கு கருத்தடை மாத்திரைகள் மட்டுமே காரணமா? இல்லை வேறு சில முக்கியமான காரணங்களும் உள்ளது. கருக்கலைப்புக்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டதும், பாலினரீதியாக பாகுபாடு பார்ப்பது சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டதும் பெண்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பவை.


பெண்ணியச் சிந்தனைகளும், பெண்களுக்கான இயக்கங்களும் தொடங்கியதும் அதே காலகட்டத்தில் தான். வியட்னாம் போருக்காக இளைஞர்களை அமெரிக்கா அனுப்பியது. அந்த சமயத்தில் தான் பெண்களுக்கு வெளியுலகில் வேலைவாய்ப்புகளுக்கான கதவு விரிவாக திறக்கப்பட்டது. பல்வேறு நிறுவனங்களும், அனைத்துத் துறைகளிலும், பெண்களுக்கு வேலை வாய்ப்பளிக்கத் தொடங்கின.


எனவே, பெண்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்தி, தன்னம்பிக்கையுடன் வாழ வழி வகுத்ததில் கருத்தடை மாத்திரை முக்கிய பங்கு வகிக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. மறுபுறத்தில், கருத்தரிப்பை தவிர்க்க, காதலர்கள் தங்கள் மனதின் ஆசைகளை பூரணமாக நிறைவேற்ற முடியாமல் இருந்த நிலை மாறியதும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது. தங்கள் வாழ்க்கையை முடிவு செய்வது உடலுறவின் விளைவாக ஏற்படும் கர்ப்பம் அல்ல, தாங்களே தான் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் நிம்மதியை ஏற்படுத்தியிருப்பது மறுக்க முடியாதது.

Saturday, 14 August 2021

Remembering yesteryear Hindi film actress Manorama on her birth anniversary.1926 AUGUST 16

 



Remembering yesteryear Hindi film actress 

Manorama on her birth anniversary.

1926 AUGUST 16 - 2008 FEBRUARY 1

Remembering yesteryear Hindi film actress Manorama on her birth anniversary.

Born Erin Issac Daniel to an Irish mother and an Indian Christian father in Lahore, the actress was given the name Manorama after she played a character by that name in the 1941 film, Khazanchi. She often played a tyrannical aunt or mother with a frown for a face and an angry rant up her sleeve.

The woman with exaggerated eyelashes and expressions was popularly known for roles like the comical tyrant aunt in ‘Seeta Aur Geeta’, ‘Ek Phool Do Maali’, ‘Do Kaliyan’ and ‘Caravan’. Some of her other memorable films include Half Ticket, Dus Lakh, Jhanak Jhanak Payal Baaje, Sharda, Johar Mehmood in Hong Kong, Mujhe Jeene Do, Mehboob ki Menhdi, Bombay to Goa and Lawaaris. In the 90s she did a cameo in Mahesh Bhat’s Junoon (1992). Her last movie was Deepa Mehta’s Water (2005). The actress also acted in a few television serials later. Through her career, she acted in over 150 films.

She was married to Rajan Haksar, also an actor, and after the partition of India in 1947 the couple shifted to Mumbai, where Raja became a producer, while Manorama reestablished her acting career.

Sunday, 18 July 2021

Remembering the royally graceful actress Veena – Birth anniversary special

 



Remembering the royally graceful actress Veena – Birth anniversary special



Born July 4, 1926 in Quetta, India

Died November 14, 2004 in India  (undisclosed)

Birth Name Tajour Sultana

Height 5' 7½" (1.71 m)

Mini Bio (1)

She started out playing heroine roles in Pre-Partition films. She made her debut with Garib and Gawandhi (1942) at around sixteen years of age. Garib was made in Urdu and Gawandhi was made in Punjabi and directed by Mehboob Khan. In Garib, she played the role of Lata and in Gawandhi she played heroine opposite Shyam who played the hero. She became known for her roles in Pre-Partition Hindi and Urdu films. Her early years in films came with films like Najma (1943), Phool (1945), and Humayun (1945). Her last film before the Partition of India was Rajputani (1946) in which she played a supporting role. She decided to remain in India after the partition and she acted through the mid-to-late-1940s, 1950s, 1960s, 1970s and early-1980s. She played roles in big films like Halaku (1956), Chalti Ka Naam Gaadi (1958), Kaagaz Ke Phool (1959), Taj Mahal (1963) (for which she received the Filmfare's Award for Best Supporting Actress), Do Raaste (1969), and Pakeezah (1972). She retired in 1983 after the release of Razia Sultan (1983) in which she played Empress Shah Turkhan. She died in Bombay in 2004 after 21 years of retirement when she was 78 years old after suffering from a protracted illness. She had appeared in over 70 feature films in a career spanning 41 years (1942 till 1983).

- IMDb Mini Biography By: Wikipedia





Trivia (3)

Always mistaken as the Sister of character actor Iftekhar. This was because she had a brother named Shazada Iftekhar. He produced 2 films.

Daughter name is Al Huma.

Married to actor Al Nasir.




SONAL PANDYA


The actress Veena, birth name Tajour Sultana, was born in Quetta, Baluchistan (now in Pakistan), on the same date as another beautiful actress, Naseem Banu, who had a decade over her contemporary. The two actresses were similar in looks and worked around the same period of the 1940s and 1950s. However, Naseem Banu retired from films and later concentrated on guiding her daughter Saira Banu after she made her debut with Junglee (1961).


Veena (also known as Veena Kumari) made her debut at 16 in a Mehboob Khan production, Garib (1942), and continued working until the 1980s when she was a part of Kamal Amrohi’s Razia Sultan (1983) as the empress Shah Turkhan. Her regal bearing and manner meant that she was often cast as royalty or as the daughter in a rich household.








Veena was meant to play Bahar, a court attendant to empress Jodhabai, in K Asif’s Mughal-e-Azam when it was first launched in November 1945. Bahar vies with Anarkali for prince Salim’s affection. When she realizes that the two are already in love, she reports their affair to Salim’s father, the emperor Akbar.


The actress had earlier appeared in K Asif’s Phool (1944) and the director cast her again in his magnum opus. However, the project, which began with Veena, Chandramohan and Nargis, got delayed over the years and was eventually completed and released with Prithviraj Kapoor, Dilip Kumar and Madhubala in 1960. Nigar Sultana stepped in to play Bahar.






VEENA WITH REHMAN IN TAJ MAHAL (1963)

In Taj Mahal (1963), Veena played Malka-e-Alam Noor Jehan, wife of the emperor Jahangir (Rehman), alongside the main pair of Shah Jahan (Pradeep Kumar) and Mumtaz (Bina Rai). Naseem Banu had played the same part of Noor Jehan in Sohrab Modi’s hit Pukar (1939).


Veena appeared quite often opposite Ashok Kumar in a number of films like Najma (1943), BR Chopra’s directorial debut Afsana (1951), and Satyen Bose’s Chalti Ka Naam Gaadi (1958). In the comedy caper starring the three real-life brothers Ashok Kumar, Kishore Kumar and Anoop Kumar, Veena played Kamini, who puts Ashok Kumar's character Brijmohan off love and women altogether by her 'betrayal'.


Another standout role for Veena came in AR Kardar’s Dastan (1950), a remake of Samuel Goldwyn’s Enchantment (1948), with co-stars Raj Kapoor, Al-Nasir and Suraiya. She played Rani, the elder sister of Raj Kapoor and Al-Nasir’s characters. In real life, she had married Al-Nasir in 1947. The two artistes, who worked together in a number of films like Amarsingh Rathaur (1956), had two children and Veena continued acting even after marriage.



VEENA OPPOSITE HER HUSBAND AL-NASIR

Her role in Dastan, as a haughty, vindictive head of the family, got her positive reviews. The Motion Picture magazine wrote in December 1950, “Veena puts over the role of this proud, defiant woman with an ability which really astounded me. She brings into life the spirit of grim, sordid obstinacy verging to hate, which cleaves and slashes its way with relentless persistence, the unbending hauteur, the scorn and the flash of anger and contempt. In Dastan Veena’s was the best work of the picture and the greatest role of her career.”


Other notable roles were in Kaagaz Ke Phool (1959) in which she played Guru Dutt’s character Suresh Sinha's wife Bina, who separates from her filmmaker husband when he grows close to his newest find on the movie set. Another delayed film in which Veena got to essay a role was Kamal Amrohi’s Pakeezah (1972) in which she played Nawabjaan, sister of Meena Kumari’s Sahibjaan, who raises her lookalike daughter in the brothel.



PAKEEZAH (1972)

Veena retired in early 1983 after another Kamal Amrohi production, Razia Sultan, in which she again took on a royal role as the wife of emperor Iltutmish (Pradeep Kumar), empress Shah Turkhan.


The actress, who stayed on in India after Partition, died in Mumbai on 14 November 2004 after being away from the limelight for over two decades.



People in this story


VEENA


Actor, Singer



AL-NASIR


Actor


Movies in this story


DASTAN



AFSANA



CHALTI KA NAAM GAADI


VIEW ALL



நடிகை வீணா, பிறந்த பெயர் தாஜூர் சுல்தானா, பலுசிஸ்தானின் (இப்போது பாகிஸ்தானில்) குவெட்டாவில் பிறந்தார், அதே தேதியில் மற்றொரு அழகான நடிகை நசீம் பானுவும் தனது சமகாலத்தவரை விட ஒரு தசாப்தமாக இருந்தார். இரண்டு நடிகைகளும் தோற்றத்தில் ஒத்தவர்கள் மற்றும் 1940 கள் மற்றும் 1950 களின் ஒரே காலகட்டத்தில் வேலை செய்தனர். இருப்பினும், நசீம் பானு படங்களில் இருந்து ஓய்வு பெற்றார், பின்னர் ஜங்லீ (1961) மூலம் அறிமுகமான பிறகு தனது மகள் சைரா பானுவை வழிநடத்துவதில் கவனம் செலுத்தினார்.

வீனா (வீணா குமாரி என்றும் அழைக்கப்படுகிறார்) கரிப் (1942) என்ற மெஹபூக் கான் தயாரிப்பில் 16 வயதில் அறிமுகமானார், மேலும் 1980 களில் கமல் அம்ரோஹியின் ரசியா சுல்தானின் (1983) பேரரசர் ஷா துர்கானின் ஒரு பகுதியாக இருந்தபோது தொடர்ந்து பணியாற்றினார். அவளுடைய ஆட்சி தாங்கும் விதமும், அவர் பெரும்பாலும் ராயல்டி அல்லது பணக்கார வீட்டில் மகளாக நடித்தார்.

நவம்பர் 1945 இல் முதன்முதலில் தொடங்கப்பட்டபோது கே ஆசிபின் முகலாய-ஏசாமில் ஜோதாபாயை பேரரசர் செய்ய நீதிமன்ற உதவியாளரான பஹார் PLAYED . இளவரசர் சலீமின் பாசத்திற்காக பஹார் அனார்கலியுடன் போட்டியிடுகிறார். இருவரும் ஏற்கனவே காதலிக்கிறார்கள் என்பதை அறிந்ததும், அவர்கள் தங்கள் விவகாரத்தை சலீமின் தந்தை பேரரசர் அக்பரிடம் தெரிவிக்கிறார்கள்.


நஜ்மா (1943), பி.ஆர். சோப்ராவின் இயக்குனராக அறிமுகமான அஃப்ஸானா (1951), மற்றும் சத்யன் போஸின் சால்டி கா நாம் காடி (1958) போன்ற பல படங்களில் அசோக் குமாருக்கு ஜோடியாக வீணா தோன்றினார். அசோக் குமார், கிஷோர் குமார் மற்றும் அனூப் குமார் ஆகிய மூன்று நிஜ வாழ்க்கை சகோதரர்கள் நடித்த காமெடி கேப்பரில், வீணா காமினியாக நடித்தார், அவர் அசோக் குமாரின் கதாபாத்திரமான பிரிஜ்மோகனை காதலையும் பெண்களையும் தனது 'துரோகத்தால்' ஒதுக்கி வைக்கிறார்.

வீணனுக்கான மற்றொரு தனித்துவமான பாத்திரம் ஏ.ஆர். கர்தரின் தஸ்தான் (1950), சாமுவேல் கோல்ட்வின் என்சான்ட்மென்ட் (1948) இன் ரீமேக், உடன் நடிகர்களான ராஜ் கபூர், அல்-நசீர் மற்றும் சுராயா ஆகியோருடன். ராஜ் கபூரின் மூத்த சகோதரி மற்றும் அல்-நசீரின் கதாபாத்திரங்களில் ராணி நடித்தார். நிஜ வாழ்க்கையில், அவர் 1947 இல் அல்-நசீரை மணந்தார். அமர்சிங் ரத ur ர் (1956) போன்ற பல படங்களில் ஒன்றாக பணியாற்றிய இரண்டு கலைஞர்களுக்கும் இரண்டு குழந்தைகள் இருந்தன, திருமணத்திற்குப் பிறகும் வீணா தொடர்ந்து நடித்தார்.

வீனா விருப்பம் அவரது கணவர் அல்-நசீர்

தஸ்தானில் அவரது பாத்திரம், குடும்பத்தின் ஒரு பெருமைமிக்க, பழிவாங்கும் தலைவராக, அவருக்கு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மோஷன் பிக்சர் பத்திரிகை 1950 டிசம்பரில் எழுதியது, “வீனா இந்த பெருமைமிக்க, எதிர்மறையான பெண்ணின் பாத்திரத்தை ஒரு திறனுடன் முன்வைக்கிறார், இது என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. வெறுக்கத்தக்க, மோசமான பிடிவாதத்தின் வாழ்க்கையை அவள் வாழ்க்கையில் கொண்டு வருகிறாள், இது இடைவிடாத விடாமுயற்சி, இடைவிடாத துணிச்சல், அவதூறு மற்றும் கோபம் மற்றும் அவமதிப்பு ஆகியவற்றின் ஃப்ளாஷ் ஆகியவற்றைக் குறைக்கிறது. தஸ்தான் வீணாவில் படத்தின் சிறந்த படைப்பு மற்றும் அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய பாத்திரம். ”

மற்ற குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்கள் காகாஸ் கே பூல் (1959) இல் நடித்தன, அதில் அவர் குரு தத்தின் கதாபாத்திரம் சுரேஷ் சின்ஹாவின் மனைவி பினாவாக நடித்தார், அவர் திரைப்படத் தொகுப்பில் தனது புதிய கண்டுபிடிப்பிற்கு நெருக்கமாக வளரும்போது தனது திரைப்படத் தயாரிப்பாளர் கணவரிடமிருந்து பிரிக்கிறார். வீணா ஒரு பாத்திரத்தை எழுதுவதற்கு தாமதமான மற்றொரு படம் கமல் அம்ரோஹியின் பக்கீசா (1972), இதில் அவர் மீனா குமாரியின் சாஹிப்ஜானின் சகோதரி நவாப்ஜானாக நடித்தார், அவர் தனது தோற்ற மகளை விபச்சார விடுதியில் வளர்க்கிறார்.

பக்கீசா (1972)

1983 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வீனா ஓய்வு பெற்றார், மற்றொரு கமல் அம்ரோஹி தயாரிப்பான ரசியா சுல்தான், அதில் அவர் மீண்டும் பேரரசர் இலுட்மிஷ் (பிரதீப் குமார்), பேரரசி ஷா துர்கானின் மனைவியாக அரச பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார்.

பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் தங்கியிருந்த நடிகை, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக வெளிச்சத்தில் இருந்து விலகி 2004 நவம்பர் 14 அன்று மும்பையில் இறந்தார்.



Saturday, 22 August 2020

BIRTH OF CAPITAL OF TAMILNADU



BIRTH OF CAPITAL OF TAMILNADU 

..மெட்ராஸும் பூடூச்சு...
மெட்ராஸ் பாஷையும் பூடூச்சுப்பா!

அறுபதுகளிலோ.. எழுபதுகளிலோ மெட்ராஸுக்கு முதன்முதலாக வந்த இளைஞரைக் கவரும் விஷயம் மெட்ராஸ் பாஷை. திருவல்லிக்கேணி 'மேன்சனில்' ஒரு வாரம் தங்கிவிட்டு ஊருக்குப் போனால், கூடவே மெட்ராஸ் பாஷையும் ஒட்டிக்கொள்ளும்.

ஊருக்குப் போனதும், "இன்னாப்பா, ஒத்துப்பா, கஸ்மாலம், பேமானி, கய்தே" என்று சென்னையில் தான் கற்றுக்கொண்ட மெட்ராஸ் பாஷையை நண்பர்களிடம் பேசும்போது பயன்படுத்துவது வழக்கம். காலம்காலமாக தான் பழகிய உள்ளூர் பாஷைக்கு அவன் திரும்ப சில வாரங்கள் பிடிக்கும். அப்படி ஒரு மயக்கம் மெட்ராஸ் பாஷையின் மீது ஏற்படுவதுண்டு.

செங்கல்பட்டுக்கு அந்தப் பக்கம் இருப்பவர்களுக்கு, மெட்ராஸ் என்றாலே ஒரு மயக்கம் இருந்தது. மெட்ராஸுக்குப் போய் வந்தவர்களுக்கு ஒரு தனி மரியாதையே இருக்கும்.

எல்.ஐ.சி. கட்டிடம், சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன், மியூசியம், மிருகக்காட்சிசாலை, மெரீனா கடற்கரை என்று மெட்ராஸில் அநேக சுவாரஸ்யங்கள்... அதையெல்லாம் பார்த்து விட்டுப் போய், தன் பயண அனுபவங்களை நண்பர்களிடம் சொல்வதில் ஒரு தனி சுகம். அதைக் கேட்பதில் நண்பர்களுக்கும் ஒரு சுகம்.

அதெல்லாம் அந்தக் காலம். இன்றைக்கு சென்னை என்றால், அதில் பெரிய சுவாரஸ்யம் இல்லை. அரசியல் கட்சிகள் நடத்தும் பேரணிகளை வாய்ப்பாகக் கொண்டே அநேகர் சென்னைக்கு வந்து போய் விட்டனர். வீட்டுக்கொரு இன்ஜினீயர் என தலைநகரை நோக்கி பலரும் படையெடுத்து வர, ஹை-டெக் நகரமாக ஷாப்பிங் மால்களும், கார்ப்பரேட் நிறுவனங்களுமாக சென்னை பிரமிக்க வைக்கின்ற போதிலும், சென்னையின் மூலை முடுக்குகளை சினிமா, டி.வி. மூலம் இருந்த இடத்தில் இருந்தே பார்த்து விட்டதும் காரணங்களாக இருக்கின்றன.

'அனுபவி ராஜா அனுபவி' திரைப்படத்தில், தூத்துக்குடியில் பிறந்த நாகேஷ் சென்னைக்கு வந்து, 'மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்' என்று பாடிக் கொண்டு வருவார். அண்ணா சாலையில், கடற்கரையில், குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு அருகில் என்று ஜனக்கூட்டம் குறைவாய் உள்ள மெட்ராஸில் ஓடி ஓடிப் பாடுவார். அந்த மெட்ராஸ் இப்போது அடையாளமே தெரியாமல் மாறிவிட்டது.

மெட்ராஸ் என்பது சென்னை ஆகிவிட்டது. 'யூனிவர் சிட்டி ஆஃப் மெட்ராஸ்' மணிரத்னத்தின் 'மெட்ராஸ் டாக்கீஸ்', 'மெட்ராஸ் ஹைகோர்ட்' போன்ற சில பெயர்களில்தான் 'மெட்ராஸ்' இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

'சென்னை வந்த ஒருவரின் பர்ஸ் எந்த இடத்தில் காணாமல் போகிறதோ, அந்த இடத்தை உத்தரவாதமாக மூர் மார்க்கெட் என்று சொல்லிவிடலாம்' என்று நகைச்சுவையாகச் சொல்வார்கள். அந்த மூர் மார்க்கெட் இப்போது இல்லை. கொத்தவால்சாவடி மார்க்கெட்டும், திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்டும், கோயேம்பேடுக்கு குடிபோய் விட, அந்தப் பகுதியில் 'ஐகோர்ட்' மட்டும் தனியாக நின்று கொண்டிருக்கிறது.

மக்கள் நெரிசலும், வாகனங்களின் பெருக்கமும் சென்னையின் முகத்தை நிறையவே மாற்றிவிட்டன. அண்ணாசாலையில் இருந்த பல தியேட்டர்கள் வர்த்தக வளாகங்களாக மாறி போய் விட்டன.

1980 களில் ரெண்டு ரூபாய் தொண்ணூறு காசு டிக்கெட்டில் தேவி பாரடைசில் படம் பார்த்தவர்கள், இன்று தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்பு முடங்கிவிட்டார்கள்.


சென்னையை விட்டு சொல்லிக் கொள்ளாமல் போய்விட்ட அநேக விஷயங்களைப் போலவே, மெட்ராஸ் பாஷையும் சொல்லாமல் கொள்ளாமல் போய்க்கொண்டிருக்கிறது. நடிகர் சந்திரபாபு தொடங்கி நாகேஷ், லூஸ்மோகன், கமல்ஹாசன் உள்பட பலரும் சினிமா கதாபாத்திரங்களின் வாயிலாக பேசிய மெட்ராஸ் பாஷை, இப்போது வட சென்னையில் மட்டுமே அவ்வப்போது காதில் விழுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படமும், 'மெட்ராஸ்' படமும் நடப்பு சாட்சிகளாக இருக்கின்றன.

முப்பது லட்சம் பேராக இருந்த சென்னையின் மக்கள் தொகை, ஒரு கோடியை விரைவில் தொடப் போகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து குடியேறிய மக்கள் எண்ணிக்கை, சென்னையின் 'பூர்வ குடிகளின்' எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகரித்துவிட்டது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், வந்த மக்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்து போனதால், பேச்சுத்தமிழில் தனது அடையாளத்தை இழந்து போனது மெட்ராஸ் பாஷை.

சென்னைவாசிகள் பயன்படுத்திய சரித்திரப் புகழ்பெற்ற வார்த்தைகள் எல்லாம் கிழக்கே விரிந்து கிடக்கும் வங்கக் கடலில் இன்னும் சில காலத்தில் மூழ்கிப் போகும்.
No photo description available.



ஆகஸ்டு 22, 2017 அன்று சென்னைக்கு378-379 வயதாகிறது. பல்வேறு வசதிகளும், ஆச்சரியங்களும் உயிர்த் துடிப்பும் நிறைந்த சென்னை பிறந்து வளர்ந்த கதையை நாம் பார்க்கலாம்.

375 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் மாலையில் பிரான்ஸிஸ் டே என்னும் ஆங்கிலேயன் கப்பலில் வந்து மைலாப்பூர்க் கரையில் இறங்கினான். அவன் கண்களுக்குத் தெரிந்த கடற்கரை மணல் பரப்பு அவனை மிகவும் கவர்ந்தது. தான் வந்த வேலை முடிந்து விட்டது என்று டே முடிவு கட்டினான்.

370 ஆண்டுகளுக்கு முன்பு கோரமண்டல் கடற்கரை என்ற பெயர் பெற்ற வங்கக் கடலின் கரையோரம் மதராஸப்பட்டினம் என்ற பெயரில் சின்னஞ்சிறு கிராமமாக இருந்தது. சென்னை, மைலாப்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், திருவொற்றியூர் என்று பல்வேறு சிறுசிறு கிராமங்களாகவும், சிறு சிறு குறு நகர்களாகவும் காணப்பட்டது. அந்தக் கால் சென்னைப் பட்டினம், புதர்கள், காடுகள் மரங்கள் சூழ்ந்த இந்த ஊர்களுக்கு இடையே கூவம், அடையாறு போன்ற ஆறுகள் ஓடின.

Higginbotham’s Bookstore
higginbothams
Aerial View of Marina Beach
Marina-Beach
Mount Road
Mount-Road
Esplanade during busy hour
Old-Esplanade
Madras Central Station
Central-Station
Egmore Station Exterior
Chennai-Egmore-Railway-Station
Egmore Station Interior
Egmore-Station-Interior
Egmore Station Waiting Room
Egmore-Station-Waiting-Room1
Old Mosque of Madras
Chennai-Old-Mosque
Old High Court of Madras
Chennai-Old-High-Court
Spencer’s Departmental Store
Spencers
The Old Esplanade
Esplanade
The Madras Ford Showroom
Chennai-Ford-Show-Room-1917
Bank of Madras
Bank-of-Madras1
The Map of Madras 1909
Chennai-City-Map-1909
இந்தச் சென்னைப்பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாசனை திரவியம் மற்றும் ஜவுளி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தது. போர்ச்சுகீசியர்களின் வருகைக்குப் பிறகே அது வளர்ச்சி அடையத் தொடங்கியது. கி.பி.1552ஆம் ஆண்டில் போர்ச்சுக்கீசியர்கள் சாந்தோமில் குடியேறி வியாபாரம் செய்தனர்.

சென்னைப் பட்டினத்தில் விலை உயர்ந்த ஜவுளி மூலப்பொருட்கள் கிடைத்தன. இதைக் குறிவைத்து இங்கு கால் பதிக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். இதற்காக கிழக்கிந்திய கம்பெனி, பிரான்சிஸ் டே, ஆன்ட்ரு கோகன் ஆகிய இரண்டு அதிகாரிகளைச் சென்னைப் பட்டினத்திற்கு அனுப்பி வைத்தது. வணிக மையம் கட்டுவதற்காகச் சென்னைப் பட்டினத்தில் இடம் பார்க்க வேண்டிய பொறுப்பு டேக்கு அளிக்கப்ப்டடது.
கம்பெனியின் வியாபாரத்திற்காக ஒரு நல்ல இடத்தைத் தேடி டே பயணித்தபோது மைலாப்பூர் பற்றிக் கேள்விப்பட்டான். மைலாப்பூர் போர்ச்சுக்கீசியர்களின் வியாபார மையமாக இருந்தது. அதன் அருகிலேயே தங்கள் வியாபார மையம் அமைய வேண்டும் என டே முடிவு செய்தான்.

அப்படி அவன் வரும்போதுதான் மைலாப்பூரின் அழகில் மயங்கி நின்றான். மைலாப்பூர் மட்டுமல்ல மதராஸ் முழுவதுமே அவன் கண்களுக்குக்கு கவர்ச்சி மிகுந்த ஒரு பெண்ணைப் போலக் காட்சியளித்தது என்று, ‘சென்னையின் கதை’ எனும் நூலை 1921ல் எழுதிய கிளின் பார்லோ குறிப்பிடுகிறார். இதுதான் கம்பெனிக்கு ஏற்ற இடம் என்று அவன் முடிவு செய்தான்.
நினைத்தாலே மூக்கைப் பிடித்துக்கொள்ளும் அளவுக்கு நாற்றம் பிடுங்கும் கூவம் நதி, 370 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது தெரியுமா? பிரான்ஸிஸ் டேக்கு மதராஸ் பிடித்துப்போனதற்குக் காரணமே கூவம் நதிதான் என்கிறார் பார்லோ. அந்தக் காலத்தில் இந்த நதிக்குத் திருவல்லிக்கேணி ஆறு என்ற பெயரும் உண்டு. அந்த ஆற்றை அவன் கண்ட சமயம் குளிர்காலம். ஆற்று நீர் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது.

அந்தக் காலத்தில் கூவம் நதி சுத்தமான தண்ணீர் ஓடும் நதியாக இருந்தது. சென்னை மக்கள் அதில் குளித்து விட்டுத்தான் தங்கள் தினசரி வேலையைத் தொடங்குவார்கள். வள்ளல் பச்சையப்பா முதலியார் தினமும் கூவம் நதியில் ஆசை தீரக் குளித்ததை எழுதி வைத்துள்ளார். அவர் வாழ்ந்த காலம் 1754 முதல் 1794.
வங்கக் கடலை ஒட்டி மைலாப்பூருக்கு அருகே உள்ள பகுதியை வாங்க வேண்டும் என்று டே தீர்மானித்தான். அப்பகுதியை ஆண்டுவந்த நாயக்க மன்னர்களிடம் பேச்சு வார்த்தையைத் தொடங்கினான். ஆனால் நாயக்க மன்னரால் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. விஜயநகரப் பேரரசின் பிரதிநிதியான சந்திரகிரி மன்னனுக்கு நாயக்க மன்னர்கள் கப்பம் கட்டி வந்தார்கள். எனவே இந்த நில பேரத்துக்கு சந்திரகிரி மன்னரின் ஒப்புதல் தேவைப்பட்டது.

பிரான்ஸில் டே சந்திரகிரி மன்னரைப் பார்த்து பேசினான். தான் விரும்பிய இடத்தை விலை கொடுத்து வாங்கினான். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது 1639ம் ஆண்டு ஆகஸ்டு 22 ம் நாள். சென்னையில் இடம் வாங்குவதற்காகப் போடப்பட்ட இந்த வணிக ஒப்பந்தம் பின்னாளில் இந்திய மண்ணில் ஆங்கிலேய ஆட்சி உதயமாகக் காரணமாக அமைந்தது என்று பார்லோ குறிப்பிடுகிறார். ஆங்கிலேயர் ஆட்சி சந்திரகிரியில் கருவாகி, மதராஸப்ப்ட்டினத்தில் உருவாகிப் பிறகு இந்திய மண்ணில் பிறந்தது என்கிறார் இவர்.

ஆங்கிலேயர்கள் சென்னைப் பட்டினத்தை நவீன வசதிகள் கொண்ட நகரமாக உருவாக்கும் முயற்சியைத் தொடங்கினார்கள். லண்டனில் தாங்கள் அனுபவித்தும் வரும் சகல வசதிகளும் இங்கே கிடைக்க வேண்டும் என்பதற்கான காரியங்களைத் தொடங்கினார்கள். டேயும் அவனது மேலதிகாரியான ஆண்ட்ரு கோகனும் சேர்ந்து மதராஸில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கினார்கள். இதன் காரணமாக சென்னை நகரம் மிகக்குறுகிய காலத்தில் வளர்ச்சி அடைந்தது. கிழக்கிந்திய கம்பெனியின் வணிக மையத்தையும், செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையும் கட்டினார்கள். இப்படித்தான் இன்று நாம் பார்க்கும் சென்னை நகரம் உருவாகியது இதனால்தான் சென்னையில் ஆங்கிலேயர்கள் இடம் வாங்கிய ஆகஸ்ட் 22ஐ சென்னையின் பிறந்த நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது. வணிக வளாகம் கட்டப்பட்டதால் ஐரோப்பியர்கள் நிறையப்பேர் வந்தனர். அவர்கள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் வீடு கட்டிக் குடியேறினர். அந்தப் பகுதி வெள்ளைப் பட்டினம் என்று அழைக்கப்ப்டடது. அதற்கு வெளிப்புறப் பகுதியில் ஆந்திராவில் இருந்து வந்த ஏராளமான நெசவாளர்கள் குடியேறினர். இது கறுப்புப் பட்டினம் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பகுதிதான் பின்னர் ஜார்ஜ் டவுன் ஆனது.

இந்த இடத்தை மையமாகக் கொண்டு தொடங்கிய ஆங்கிலேயர்களின் வர்த்தகம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே உள்ள பகுதி சென்னைப் பட்டினம் என்றும், தெற்குப் பகுதி மதராஸப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த இரண்டு பட்டினங்களையும் ஒன்று சேர்த்து ஆங்கிலேயர்கள் மதராஸப்பட்டினம் என்றும், தமிழர்கள் சென்னைப் பட்டினம் என்றும் அழைத்தனர். விரைவிலேயே சென்னைப் பட்டினம் முழுவதும் கிழக்கிந்தியக் கம்பெனியின் வசமாயிற்று. தங்கள் படை பலத்தாலும், பண பலத்தாலும் தந்திரமான முயற்சிகளாலும் ஆங்கிலேயர்கள் இதைச் சாதித்தார்கள்.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் காலூன்றுவதற்கு முக்கியமான களமாகச் சென்னை அமைந்திருந்தது.
1653ல் சென்னைப்பட்டினம் சென்னை மாகாணமாக மாறியது. அதன் பின்னர் 1702ல் முகலாயர்களாலும், 1741ல் மராட்டியர்களாலும் அது தாக்குதலுக்கு உள்ளானது. 1746ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் கைவசமானது.

பின்னர் ஆங்கிலேயர்களின் கைக்குப் போனது. 1758ல் மீண்டும் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினர். ஆனால், இரண்டு மாதங்களிலேயே ஆங்கிலேயர்கள் சென்னையைத் திரும்பவும் மீட்டனர். அன்று முதல் 1947ம் ஆண்டு வரை சென்னை மாகாணம் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. சுதந்திரத்திற்குப் பின், சென்னை மாகானம் 1968ம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மெட்ராஸ் என்று இருந்த பெயர் 1997ம் ஆண்டு சென்னை என்று மாற்றப்பட்டது.

30 ஆயிரம் மக்கள் தொகையுடன் உருவான சென்னை நகரின் மக்கள் தொகை தற்போது ஒரு கோடியைத் தாண்டி விட்டது. சென்னை நகரின் பரப்பும் விரிவடைந்துகொண்டே போகிறது. சென்னைக்கு பிறந்த நாள் விழா எடுக்க வேண்டும் என்பதற்கு வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா 2004ம் ஆண்டு முன்முயற்சி எடுத்தார். அதற்குப் பலரும் உறுதுணையாக நின்றார்கள்.

புத்தக வெளியீட்டாளர் வின்சென்ட் டிசோஸா, பத்திரிக்கையாளர் சசி நாயர் ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள். 2004ம் ஆண்டு முதல் சென்னை பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.

.My fascination for Madras dates back from my childhood seventy years ago.

In 1935, as a boy of seven living with my grandparents in Ariyalur, then a small village, I had the first glimpse of the great city, when grandfather took me there during X-Mas holidays to my aunt’s house at Purasawakkam

At Egmore railway station I felt I was transported to a fancy land of electric trains, taxis, and coaches. There were no auto or cycle rickshaws at that time only hand pulled rickshaws and jutkas.

A jutka, carrying four of us and luggage took us to Purasawalkam and the fare was only then annas.

Purasawakkam was my first acquaintance of Madras. Nearby Vepery was mainly a colony of Anglo Indians. There were many bakeries and confectioneries (notable among them was “Paldona” Shopping centre). Crowded Thana Street, Tram from Vepery to Central, Roxy Theatre showing only English pictures, were the important landmarks of the area. There were twin theatres Lakshmi & Saraswathi in the Perambur Barracks Road where my cousin and I saw “Nallathangal” movie in Lakshmi Talkies. Gala exhibition usually held during X-Mas season drew large crowds at SIAA grounds near Moore Market.

Tram services in those days were very popular and I felt funny when I found invariably all the drivers and conductors of the trams sported big “namams” on their foreheads. Both eco-friendly and absolutely accident free in the slow moving trams one could easily board or get off anywhere from the moving tram. In fact I remember a joke that appeared in the front cover o Ananda Vikatan making fun of the slow moving trams. Two men were conversing. One of them declined to accompany the other in the tram. He preferred to walk the distance as he wanted to go quickly. A four anna season ticket enabled anyone to travel in any tram, any route for the whole day.

In those days there were very few city bus routes. Purasawakkam was served only by two routes – Mount Road to Kellys and Triplicane to Kellys operated by private companies City Motor Service Ltd., P.T.Ltd.,

In my subsequent visits to Madras till today, the following events are deeply cherished in my memory.

In 1946, Mahatma Gandhi visited Madras to inaugurate the Silver Jubilee celebrations of The Hindi Prachar Sabha in T.Nagar. I had the treat fortune to sit quite near him and hear his speeches. I also attended his evening prayer meeting at Vijayaraghavachariar Road ground.

When Mahatma was camping at The Hindi Prachar Sabha, a cabinet that was led by Clement Atlee of the British Labour Party (who afterwards succeeded Winston Churchill as Prime Minister) and Sir Stafford Cripps met him and discussed the formation of prospective Indian Government. Subsequent events led to the partition, and the birth of Pakistan which caused deep anguish resulting in the boycott of Gandhi at the mid night birth of Free India.

I also attended a huge public meeting addressed by Pandit Jawaharlal Nehru in the Island Grounds presided over by Omandur Ramasamy Reddiar the then Prime Minister (as Chief Minister was called then) of Madras Province. I was thrilled to watch Nehru easily jumping up the stage while Reddiar was struggling up the steps. I remember Nehru saying then “I hear shouts of Hyderabad from you. It will soon be annexed” Hyderabad State was then offering resistance to join the Indian Union.


I also attended Avadi Congress presided over by U.N. Dhaber. Special buses plied between Egmore and Avadi and the fare was eight annas. Thousands of people sat in the hot sun and listened with rapt silence the speeches delivered by our leaders Nehru, Kamaraj etc., from the magnificent stage put up by S.S. Vasan.

Young Queen Elizabeth II drove in an open car in her magnificent attire and I was one of the great crowds of people who lined on both sides of the beach road to witness the grand spectacle. A life size rangoli of the Queen in different colours by a local lady was the talk of the town for many a day.

In 1950, as a student of Teachers Training College, Saidapet, I was assigned to take mathematics lessons to students of Ramakrishna Mission High School, T. Nagar. Anna Subramanya Iyer was the Head Master then. One of the classes I taught was V Form ‘E’, where our Tennis pride R. Krishnan was a student. A humble boy and already the National Champion, told me about his practice under his father in the Park Town Tennis Courts.

T. Nagar was a purely residential area. I used to go and stay with my aunt in her rented portion of a house in South Usman Road. There was a well and a surrounding garden full of flower shrubs and plantain trees. Now the house is gone along with all other houses in South Usman Road. A huge textile showroom has replaced it. Buses 9, 10, 11, 12, 13 started from Siva Vishnu Temple. There was no T. Nagar bus stand at that time.

In Mount Road Roundtana (where Anna Statue stands now) there was a public car park and a basement of toilet rooms for public convenience. The nearby Elphinstone Theatre patronized by college students has also vanished now.

A huge score board was operated on the balcony of the Hindu Office during cricket matches between India and other countries played in various cities of India. Crowd watched the live score board being operated ball by ball. Whenever wickets fell or runs scored there was uproar from the watching crowd.

In 1950 Commonwealth Cricket Team comprising of eminent players from Australia, West Indies, England played a Test match against an Indian XI which was skippered by Vijay Merchant with players as Mushtaq Ali, Phadkar at Chepauk Cricket ground. Indian cricketers were billeted in various houses of rich business men. Mushtaq Ali and Phadekar were staying in Mohammed Ibrahim’s house in Greams Road, then a remote distant place from Egmore. Along with two of my friends I met them. They were cordial and obliged with their autographs. Mushtaq Ali scored a brilliant century in the match.

Recollecting and masticating the incidents of my younger days, I yearn for the never-to-come back old Madras, of trams crisscrossing the city symbolizing and reflecting the unhurried, calm, simple, and contented life of the people, who were quite happy and peaceful without mobile phones or modern gadgets which mainly make men mechanical, devoid of even basic human values such as kindness, sympathy, co-operation and cordiality.
.
When trams on rails dominated Chennai roads

They moved at a maximum speed of just 7 kmph but the trams that ran in the city for 67 years left behind many pleasant memories. Photo: The Hindu Archives

Run by the Madras Electricity System (MES), trams on rails dominated Chennai roads back then and remained a convenient mode of transport for office-goers

They moved like giant snails, at their own pace. But when life itself was leisurely paced, trams in Chennai — the service came to a stop in 1953 — did not seem as if they belonged to the Jurassic age.

They travelled at a maximum speed of 7 kmph but have left behind pleasant memories of a time when every inch of city roads was not occupied by vehicles.

“I would not call the journeys thrilling. But travel in a slow-moving tram, seated by the windows, offered me excellent sightseeing opportunities. At one anna (1/16th of a rupee), they were ideal for a pleasant journey,” said writer and Sahitya Akademi winner Ashokamitran.

Run by the Madras Electricity System (MES), trams on rails dominated Chennai roads back then and remained a convenient mode of transport for office-goers.

“People from Mylapore travelled in trams to reach the High Court and other parts of the city. They boarded and detrained as they pleased, as trams moved very slowly,” said Mr. Ashokamitran.

A strike by workers who demanded wage revision led to a lockout. Subsequently, Chief Minister C. Rajagopalachari favoured the idea of ending the service, bringing the curtains down on 67 years of its run. “But the rails embedded on roads continued to remind Chennaiites of the tram days. For many years, they were not removed as they cost a fortune,” said Mr. Ashokamitran, who arrived in Chennai in 1953 to settle down permanently on an invitation from S.S. Vasan, owner of Gemini Studios.

But as the son of a railway employee entitled to a railway pass, Mr. Ashokamitran visited the city as early as in 1938 and enjoyed tram journeys to cinemas.

“I clearly remember travelling by a tram to Odeon theatre. It was here I watched ‘Mangamma Sabatham’ and ‘Nandanar,” he said.

S.A. Govindaraj too vividly recalls the high-pitch noise emanated by the vehicle when the driver changed gears and the ringing of a bell warning careless pedestrians.

“There were two types of trams. The big one was about 50-ft-long and the small, 35 ft. Inside, there were wooden benches on both sides and 60 passengers could sit on them. A total of 200 commuters could conveniently travel in trams,” said the 78-year-old Govindaraj, who once had two tickets in his possession.

One ticket was in English and the other in Tamil. Mr. Govindaraj sold them to a collector three months ago.

The tram ran on electricity and had a rod with a small wheel on it, said Mr. Govindaraj. “The wheel was turned by the overhead electric lines as the tram moved. When the vehicle travelled in the opposite direction, the conductor would pull the line by a rope to place it on the wheel,” he said.

Travelling by trams was very cheap, said Mr. Govindaraj, who travelled from Central to Luz Corner. “Even then, many passengers would not buy tickets and weeklies would carry cartoons lampooning ticketless travellers,” he said

.

Monday, 2 July 2018

KARNAN - BIRTH SECRETS






KARNAN - BIRTH SECRETS

கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம்


கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் உங்களுக்கு தெரியுமா ?
மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு குந்திதேவியின் புத்திரன் என்ற இரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது.

கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ இறப்பதற்கு சில நாட்கள் முன்பு தான் அறிந்திருந்தான்.அதுவும் கிருஷ்ண பகவானின் லீலையால்!
மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட ஒரு வாழ்வு?
இதற்கு விடை கர்ணனுடைய பூர்வ ஜன்ம இரகசியத்தில் உள்ளது.
ஆம்! பூர்வ ஜன்மத்தில் கர்ணன் சஹஸ்ர கவசன் என்ற அசுரனாக இருந்தான்.தேவர்களை நிர்தாட்சண்யமின்றி தாக்கி வந்தான்.

பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின் படி அவனுடைய சரீரம் ஆயிரம் சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்தது.எவரும் அந்த ஆயிரம் சட்டைகளை நீக்காமல் அவனைக் கொல்ல முடியாது.

அவனைத் தாக்க விரும்பும் வீரன் 12 வருடங்கள் தவமிருந்து விட்டு, அதன் பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால் ஆயிரம் கவசங்களுள் ஒன்றை அறுக்க முடியும்.இவ்வாறு 24 வருடங்கள் வீதம் தவமும், போரும், யாகமும் செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன் பின் ஒன்றாக அறுத்தெறிந்தால் சஹஸ்ர கவசன் மடிவான்.எனினும், இதனைச் சாமான்ய மனிதர்களால் சாதிக்க இயலவில்லை.எனவே, சஹஸ்ர கவசன் தேவர்களுக்கு செய்யும் கொடுமைகள் அனைத்தும் தொடர்ந்தன.அமரர்கள் மகாவிஷ்ணுவை நாடி அசுர உபாதையை ஒழிக்க உதவுமாறு வேண்டினர்.

விண்ணவர் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு அசுரர் கொடுமையை ஒழித்து அமரவாசிகளுக்கு ஆறுதல் உண்டு பண்ணத் திருவுளம் கொண்டு நர நாராயணர்களாக (அதாவது நரனும் அவரே, நாராயணனும் அவரே) தனது சக்தியை இரண்டு விதத்தில் வடிவமைத்தார். இப்படியாக அவதரித்தார்.ஸஹஸ்ர கவசனை ஸம்ஹரிப்பதற்கு அவர்கள் கூட்டு முயற்சி செய்தனர்.நரன் 12 வருடங்கள் தவம் புரிய, நாராயணர் அசுரனுடன் போர் புரிந்து கவசமொன்றை அறுத்துத் தள்ளினார். இப்படிப் பல வருடங்கள் விடா முயற்சி செய்து 999 கவசங்களை நர, நாராயணர்கள் அறுத்து எறிந்தனர்.

இதற்குள் பிரம்ம பிரளயமே வந்து விட்டது.

எஞ்சி நின்ற ஒரு கவசத்துடன் சஹஸ்ர கவசன் சூரிய லோகம் போய்ச் சேர்ந்தான். ‘தன்னைத் தேடி வந்து அபயம் கேட்டவன் அரக்கனாக இருந்தாலுமே! அவனுக்கு அடைக்கலம் அளிக்க வேண்டிய கடமை தன்னுடையது’ என்பதை உணர்ந்த சூரிய தேவன். அவனைத் தனது சூரிய லோகத்தில் இருக்குமாறு பணித்தார்.

சஹஸ்ர கவசன் தனக்கு அடைக்கலம் அளித்த சூரிய தேவனையே தனது இஷ்ட தெய்வமாக பாவித்து வணங்கி வந்தான். சூரிய லோகத்திலேயே அவனது அப்பிறவி முடிந்தது.இந்த சஹஸ்ர கவசனே அடுத்த ஜன்மத்தில் சூர்ய புத்திரனாக கர்ணன் என்ற பெயரில் மீதமுள்ள (பூர்வ ஜன்ம கவசம்) ஒரு கவசத்தோடு பிறப்பெடுத்தான்.இந்தக் கவசமும் அறுக்கப்பட வேண்டியதே!இந்தக் காரியத்திற்காகவே பகவான் மகாவிஷ்ணு நர ரூபத்தில் அர்ஜுனனாகவும், நாராயண அம்சத்தில் கிருஷ்ணனாகவும் ஜனித்தனர்.


12 ஆண்டுகள் பாண்டவர்கள் வனவாசம் செய்தது. அந்த நரனுடைய 12 வருடத் தவமேயாகும். ஒரு கவசத்தை இந்திரன் மூலம் நீக்கிய விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே.கவசம் நீங்கியதால் தான் அர்ஜுனனால் கர்ணணை கொல்ல முடிந்தது.இதே போலத் தான், நம்முடைய இந்த ஜன்ம வாழ்க்கை நிகழ்வுக்கும் ஒரு காரணம் உண்டு. நமது வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் காரணம், பூர்வ ஜன்மக் கர்மாக்கள் ஆகும்.

கர்ணனின் வாழ்க்கை அமைந்த விதம் இந்த உண்மையை நிரூபிக்கிறது. நாமும் கூட அப்படித் தான் காரணம் இல்லாமல் இந்த உலகத்தில் பிறக்க வில்லை. அதனால் வந்த வேலை முடியாமல் உலகத்தை விட்டுச் செல்ல முயற்சிக்கக் கூடாது (அதவாது வாழ்க்கை வெறுக்கும் படியாக சில தருணங்கள் அமைந்தாலும் தற்கொலை என்னும் முடிவை எடுக்கவே கூடாது. அது இறைவனுக்கு எதிரானது. இறைவன் அதனை விரும்பமாட்டார். இறைவன் நம்மிடம் ஒப்படைத்த ஒரு பொறுப்புள்ள வேலையை நாம் தட்டிக் கழித்து விடுவதற்கு சமானம் இது)


அதனால் வந்த வேலையை வெற்றிகரமாக முடிப்போம். இறைவன் அழைக்கும் வரை காத்திருந்து பக்குவமான நேரத்தில் அவன் அழைக்கும் சமயம் அவன் திருவடி சென்றடைவோம்.