Showing posts with label AUGUST 16. Show all posts
Showing posts with label AUGUST 16. Show all posts

Tuesday, 17 August 2021

JIKKI ,SINGER BORN 1935 NOVEMBER 3 - 2004 AUGUST 16

 

JIKKI ,SINGER BORN 

1935 NOVEMBER 3 - 2004 AUGUST 16



ஜிக்கி (Jikki, நவம்பர் 3, 1935 - ஆகத்து 16, 2004) என்று பரவலாக அறியப்பட்ட பிள்ளைவாள் கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி. இவர் பாடிய பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களிலும் பாடியுள்ளார். 1943 இல் பந்துலம்மா திரைப்படத்தில் நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் அறிமுகமாகி 2002 வரை, கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் திரையுலகில் பாடியிருக்கிறார். எழுபது வயது நெருங்கும் சமயத்திலும் இவருக்குப் பாடல் வாய்ப்பு கிடைத்திருந்தது. இவர் பின்னணிப் பாடகர் ஏ. எம். ராஜாவின் மனைவி.


கலையுலக வாழ்வு[தொகு]

ஜிக்கி தனது 6 ஆவது வயதிலேயே இசையார்வம் கொண்டிருந்தார். இவர் தனது 11 ஆவது வயதிலேயே இவரது தாய்மாமன் சிட்டிபாபுவின் முயற்சியினால் இசையமைப்பாளர் எஸ். வி. வெங்கட்ராமனின் இசையில், ஞானசௌந்தரி 1948 திரைப்படத்தில் பாலஞானசௌந்தரி பாடுவதான பல்லவி அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே என்ற பாடலைப் பாடினார். தொடர்ந்து பந்துலம்மாதியாகையாகொல்லபாமாமனதேசம் ஆகிய தெலுங்குப் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது. இப்படங்களின் பாடல்களைக் கேட்ட இசையமைப்பாளர் ஜி. ராமநாதன், ஜிக்கியின் 13வது வயதில், 1950 இல் மொடேர்ன் தியேட்டர்சின் மந்திரி குமாரி திரைப்படத்தில் வாராய் நீ வாராய்உலவும் தென்றல் காற்றினிலே முதலிய டூயட் பாடல்களைத் திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து பாடவைத்தார். இப்படமும் பாடல்களும் பெற்ற வெற்றியானது 1950 - 1960 காலப்பகுதியில் ஜிக்கியின் பொற்காலத்தை உறுதி செய்தது. 1952 இல் கே. வி. மகாதேவன் இசையமைத்த குமாரி படத்தில் தனது வருங்காலக் கணவரான ஏ. எம். ராஜாவுடன் ஜிக்கி முதன்முதலில் பாடினார். ராஜாவுடன் இணைந்து ஜிக்கி நூற்றுக்கணக்கான காதல் பாடல்களும், சோகப்பாடல்களும் பாடியுள்ளார். வட இந்திய நடிகரான ராஜ்கபூரின் சொந்தத் தயாரிப்பான ஆஹ இந்திப்படத்தின் தமிழ்ப்பதிப்பு அவன் என்பதில் ஜிக்கி ராஜாவுடன் சேர்ந்து பல இனிய பாடல்களைப் பாடினார். மேலும் பல்வேறு பின்னணிப் பாடகர், பாடகிகளுடனும் ஜிக்கி பாடினார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

ஜிக்கி ஆந்திராவின் சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்ட கஜபதி நாயுடுவுக்கும், சென்னையைச் சேர்ந்த ராஜகாந்தம்மாவுக்கும் பிறந்த ஒன்பது பிள்ளைகளில் மூத்தவர். 1955 இல் மகேஸ்வரி படத்தின் அழகு நிலாவின் பவனியிலே பாடலின் ஒத்திகை இடைவேளையின் போது, ஏ. எம். ராஜா தனது காதலை ஜிக்கியிடம் வெளியிட்டார்.[சான்று தேவை] 1958 இல் பெற்றோர் ஆசியுடன் ஜிக்கி ஏ. எம். ராஜாவைத் திருமணம் செய்து கொண்டார்.

ஜிக்கியின் திரையிசைப் பாடல்களில் சில[தொகு]

  • அருள்தாரும் தேவமாதாவே
  • ஆசைநிலா சென்றதே
  • காதல் வாழ்வில் நானே
  • கண் கான்பதற்குள் மனம் கனிந்து விடும்
  • மானைத் தேடி மச்சான் வரப் போறான் (நாடோடி மன்னன்)
  • என் இன்பம் எங்கே (நாடோடி மன்னன்)
  • மயக்கும் மாலைப்பொழுதே (குலேபகாவலி)
  • ஜீவிதமே சபலமோ
  • கிராமத்தின் இதயம் பேரன்பின் நிலையம்
  • கள்ளங்கபடம் தெரியாதவனே
  • காதல் வியாதி பொல்லாதது
  • ஊரெங்கும் தேடினேன்
  • துள்ளாத மனமும் துள்ளும்
  • நான் வாழ்ந்ததும் உன்னாலே
  • பச்சைக்கிளி பாடுது
  • அழகோடையில் நீந்தும் அன்னம்
  • நாடகமெல்லாம் கண்டேன்
  • பூவாமரமும் பூத்ததே
  • உள்ளம் ரெண்டும் ஒன்று*
  • இன்று நமதுள்ளமே*
  • கொக்கரக் கொக்கரக்கோச் சேவலே
  • சின்னப்பெண்ணான போதில
  • கண்களால் காதல்காவியம்
  • யாரடி நீ மோகினி
  • பேசும்யாழே பெண்மானே
  • அன்பே என்றன் முன்னாலே
  • மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
  • காதலெனும் கோயில் (வட்டத்துக்குள் சதுரம் 1978)
  • ராத்திரி பூத்தது காட்டுரோஜா (தாயம் ஒண்ணு 1988)
  • நினைத்தது யாரோ (பாட்டுக்கொரு தலைவன்)
  • வண்ண வண்ண சொல்லெடுத்து (செந்தமிழ்ப் பாட்டு 1994)

Saturday, 14 August 2021

Remembering yesteryear Hindi film actress Manorama on her birth anniversary.1926 AUGUST 16

 



Remembering yesteryear Hindi film actress 

Manorama on her birth anniversary.

1926 AUGUST 16 - 2008 FEBRUARY 1

Remembering yesteryear Hindi film actress Manorama on her birth anniversary.

Born Erin Issac Daniel to an Irish mother and an Indian Christian father in Lahore, the actress was given the name Manorama after she played a character by that name in the 1941 film, Khazanchi. She often played a tyrannical aunt or mother with a frown for a face and an angry rant up her sleeve.

The woman with exaggerated eyelashes and expressions was popularly known for roles like the comical tyrant aunt in ‘Seeta Aur Geeta’, ‘Ek Phool Do Maali’, ‘Do Kaliyan’ and ‘Caravan’. Some of her other memorable films include Half Ticket, Dus Lakh, Jhanak Jhanak Payal Baaje, Sharda, Johar Mehmood in Hong Kong, Mujhe Jeene Do, Mehboob ki Menhdi, Bombay to Goa and Lawaaris. In the 90s she did a cameo in Mahesh Bhat’s Junoon (1992). Her last movie was Deepa Mehta’s Water (2005). The actress also acted in a few television serials later. Through her career, she acted in over 150 films.

She was married to Rajan Haksar, also an actor, and after the partition of India in 1947 the couple shifted to Mumbai, where Raja became a producer, while Manorama reestablished her acting career.

Saturday, 20 February 2021

AMANDA BLAKE ,AMERICAN ACTRESS BORN 1929 FEBRUARY 20 - 1989 AUGUST 16

 

AMANDA BLAKE ,AMERICAN ACTRESS BORN

1929 FEBRUARY 20 - 1989 AUGUST 16




Amanda Blake (born Beverly Louise Neill, February 20, 1929 – August 16, 1989) was an American actress best known for the role of the red-haired saloon proprietress "Miss Kitty Russell" on the western television series Gunsmoke. Along with her third husband, Frank Gilbert, she ran one of the first successful programs for breeding cheetahs in captivity.


Early

Amanda Blake was born Beverly Louise Neill in Buffalo, New York,[1] the only child of Jesse and Louise (née Puckett) Neill. Her father was a banker; Blake herself was a telephone operator and briefly attended Pomona College before she took up acting.[2][3] Catherine Moore ″Kate" Barry (1752–1823), one of her ancestors, was a heroine of the American Revolutionary War. She warned local patriots of Banastre Tarleton's approach, giving them time to group and prepare for the Battle of Cowpens (January 17, 1781), a major American victory that helped pave the way for the British defeat at Yorktown. Blake donated a cameo-sized portrait of Barry owned by her family to the local history museum in Spartanburg, South Carolina,[citation needed] and contributed a Moore family heirloom musket to Walnut Grove Plantation.[citation needed]



Career


In Stars in My Crown (1950)

In the late 1940s, Blake was signed to Metro-Goldwyn-Mayer as the studio saw her as its next Greer Garson.[2] In 1954, she was in A Star Is Born.[4] Nicknamed "the Young Greer Garson",[5] Blake became best known for her 19-year stint as the saloon-keeper Miss Kitty on the television series Gunsmoke from 1955 to 1974. On February 27, 1974, Blake brought a lion named Kemo on to the Gunsmoke set.[6]


Prior to that, Blake had appeared in a few Hollywood films, such as the 1952 western Cattle Town and in the starring role of Miss Robin Crusoe, a 1954 adaptation of the Robinson Crusoe adventure. In 1968, Blake was inducted into the Hall of Great Western Performers at the National Cowboy and Western Heritage Museum in Oklahoma City.[7] She was the third performer inducted, after Tom Mix and Gary Cooper, selected in 1958 and 1966, respectively.



Because of her continuing role on television, Blake rarely had time for films. She did appear on a number of television shows, including a recurring comedy routine on The Red Skelton Show, as a panelist on the long-running Hollywood Squares, Tattletales, and the 1970s revival of Match Game, as well as comedy appearances on the Dean Martin Celebrity Roast. In 1957, she guest-starred as Betty Lavon-Coate in the episode titled "Coate of Many Colors" on Rod Cameron's crime drama, State Trooper. After the Gunsmoke reunion film, she made two feature-film appearances: in The Boost, a drug-addiction drama starring James Woods and Sean Young, and B.O.R.N, both in 1988.[8]


Personal life


Blake married Don Whitman in 1954 and divorced him in 1956.[1] After the divorce from Whitman, she would go to the 'saloon set' of Gunsmoke. Blake felt like it was home to her on the days when she was not needed.[9] She married Jason Seymour Day Jr. in 1964 and divorced him in 1967.[citation needed] Blake married Frank Gilbert in 1967 and divorced him in 1982.[citation needed] She married Mark Edward Spaeth in 1984. Spaeth died in 1985.[10]


Animal welfare

After Gunsmoke, Blake went into semi-retirement at her home in Phoenix, Arizona, and took on few film or television projects. She instead devoted more time to her animals.[11] She had been known for bringing her pet lion, Kemo, onto the Gunsmoke set.[6] Kemo lived in an animal compound at her home, at which she and husband Frank Gilbert ran an experimental breeding program for cheetahs. They were some of the first to breed cheetahs successfully in captivity; they raised seven generations of cheetahs.[12]



Blake joined with others in 1971 to form the Arizona Animal Welfare League, today the oldest and largest "no-kill" animal shelter in the state. In 1985, she helped finance the start-up of the Performing Animal Welfare Society and devoted a great deal of time and money[clarification needed] in support of its efforts, including travels to Africa. Blake reportedly was a one-time board member of the Humane Society of the United States. In 1997, the Amanda Blake Memorial Wildlife Refuge opened at Rancho Seco Park in Herald, California. The refuge provides sanctuary for free-ranging African hoofed wildlife, most of which were originally destined for exotic animal auctions or hunting ranches.[13]



Declining health and death

Blake was a heavy cigarette smoker and had surgery for oral cancer in 1977. She became a supporter of the American Cancer Society and made fundraising appearances throughout the country. In 1984, she was the recipient of the society's annual Courage Award, which was presented to her by then U.S. President Ronald Reagan. The popular media later widely reported that Blake's doctor claimed that she had actually died of AIDS. Her close friends have insisted that she was not a drug user or sexually promiscuous, and that she may have acquired the disease from a former husband.[14] On August 16, 1989, Blake died of liver failure brought on by viral hepatitis at Mercy General Hospital in Sacramento, California.[15]




Amanda Blake played Miss Kitty Russell, proprietor of Dodge City's Long Branch Saloon, for 19 years on Gunsmoke.

At her four-acre home site at 5105 E. Exeter Street in the Arcadia District of Phoenix, she operated a cat-house of different kind. There she kept a lion and 10 rare cheetahs.

A former caretaker tells of feeling a raspy, wet lick on his hand as he walked away from the cheetah enclosure one day.  He looked down to see the oldest cheetah wandering freely around the yard.  Relieved when the huge cat followed him back into the enclosure, he set aside his worries about newspaper headlines and panicked neighbors.




Filmography[edit]

Film
YearTitleRoleNotes
1950Stars In My CrownFaith Radmore Samuels
1950Duchess of IdahoLinda Kinston
1950Counterspy Meets Scotland YardKaren Michelle
1951Smuggler's GoldSusan Hodges
1951China CorsairJane RichardsUncredited
1951Never Trust a GamblerThe Redhead at Police StationUncredited
1951Criminal LawyerReceptionistUncredited
1951Sunny Side of the StreetSusie Manning
1951The Family SecretTelephone GirlUncredited
1952Scarlet AngelSusan Bradley
1952Cattle TownMarian Hastings
1953LiliPeach Lips (red-haired dame)
1953Sabre JetHelen Daniel
1954About Mrs. LeslieGilly
1954A Star Is BornSusan Ettinger
1954The Adventures of Hajji BabaBanah
1954Miss Robin CrusoeRobin Crusoe
1955The Glass SlipperBirdena
1955High SocietyClarissa Jones
1988The BoostBarbara
1988B.O.R.N.Rosie
Television
YearTitleRoleNotes
1952Schlitz Playhouse of Stars2 episodes
1953Cavalcade of AmericaNancy HartEpisode: "Breakfast at Nancy's"
1954Four Star PlayhouseSusan PierceEpisode: "Vote of Confidence"
1955–
1974
GunsmokeKitty Russell425 episodes
1956Alfred Hitchcock PresentsCarol ArlingtonEpisode: "Whodunit"
1957State TrooperBetty Lavon-CoateEpisode: "Coate of Many Colors"
1957–
1963
The Red Skelton ShowRuby7 episodes
1958Studio OneJoan RobertsEpisode: "Tide of Corruption"
1959Steve CanyonMolly McIntyreEpisode: "Room 313"
1966Clown AlleyPickpocket ClownCBS television film
1974BetrayalHelen MercerABC Movie of the Week
1974Match GameHerselfGame show: one week/5 episodes
1974TattletalesHerselfGame show: one week/5 episodes with husband Frank
1976The QuestMiss SallyEpisode: "Day of Outrage"
1979The Love BoatNora KnoxEpisode: "The Oldies But Goodies..."
1982The Best Little Special in TexasHerselfTV Movie Documentary
1983Hart to HartBig SamEpisode: "The Wayward Hart"
1984The Edge of NightDr. Juliana StanhowerJune 19–29, 1984[16]
1986BrothersCarlottaEpisode: "A Penny a Dance"
1987Gunsmoke: Return to DodgeKitty RussellTV movie
Including flashbacks to Gunsmoke episodes
1989The New DragnetMrs. Sylvia WilsonEpisode: "Nouveau Gypsies", (final appearance)

Sunday, 16 August 2020

ORU VIRAL KRISHNA RAO DIED 2002 AUGUST 16




ORU VIRAL KRISHNA RAO  DIED 2002 AUGUST 16



.”ஒரு விரல்” கிருஷ்ணாராவ்–  வயது-73. ஒரு விரல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். கிருஷ்ணாராவ் என்ற தனது இயற்பெயருடன் தனது முதல் படத்தின் பெயரான ”ஒரு விரல்” என்பதைச் சேர்த்துக் கொண்டு படங்களில் நடித்து வந்தார். கருந்தேழ் கண்ணாயிரம், காவியத்தலைவி, நான்கு கில்லாடிகள், பிராயச்சித்தம், சிம்லா ஸ்பெஷல், அம்மன் அருள், வனஜா கிரிஜா, எல்லோரும் நல்லவரே, புகுந்த வீடு, சின்னத்தம்பி, ஆணிவேர் வெள்ளை ரோஜா, வறுமையின் நிறம் சிவப்பு, வணக்கத்திற்குரிய காதலியே, சிவப்புச் சூரியன், பொய்க்கால் குதிரை, தங்கக்கோபுரம், எங்க மாமா, மஞ்சள் குங்குமம்,உட்பட 600-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஹம்சா என்ற மனைவியும் 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். வீட்டுக்குள் நடந்துகொண்டிருந்தபோது கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மூளையில் இரத்தம் உறைந்ததால் வடபழனியிலுள்ள விஜயா மருத்துவமனையிலும், பெஸ்ட் மருத்துவமனையிலும் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பலனின்றி 16.8.2002 அன்று தனது 73-ஆவது வயதில் மரணமடைந்தார்.

இவர் நடித்த மேலும் சில படங்கள் :

நான்கு சுவர்கள் [1971], மக்கள் என் பக்கம் [1987], மனிதரில் இத்தனை நிறங்களா [1978], கண் மலர் [1970], இவள் ஒரு சீதை [1978], துணிவே தோழன் [1980], இமைகள் [1983],  நவக்கிரஹ நாயகி [1985], மீண்டும் சாவித்திரி [1996], தனிக்காட்டு ராஜா [1983], வாழ்ந்து காட்டுகிறேன் [1975], ஆனந்த கண்ணீர் [1986], அதிர்ஷ்டக்காரன் [1978]

நன்றி:- தினத்தந்தி 17.8.2002

.நடிகர் ஒரு விரல் கிருஷ்ணாராவின் மகன் மர்மச்சாவு... பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் மீட்பு By Jayachitra | Published: Friday, September 11, 2015, 8:44 [IST] சென்னை: நடிகர் ஒருவிரல் கிருஷ்ணாராவின் மகன், அழுகிய நிலையில் பூட்டிய வீட்டில் இருந்து சடலமாக மீட்கப் பட்டுள்ளார். 1965ம் ஆண்டு வெளிவந்த ஒரு விரல் என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கிருஷ்ணாராவ். அப்படத்தைத் தொடர்ந்து அனைவரும் அவரை, ‘ஒரு விரல்' என்ற அடைமொழியுடனேயே அழைக்கத் தொடங்கினர். இவரது மகன் சிவாஜிராவ் (45). சென்னை பழவந்தாங்கல் அவ்வையார் தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்த சிவாஜி ராவுக்கு திருமணம் ஆகவில்லை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தொடர்ந்து வாய்ப்புகள் தேடி வந்தார். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக சிவாஜிராவின் வீடு பூட்டிக் கிடந்துள்ளது. வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கவே, அக்கம் பக்கத்தார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பழவந்தாங்கல் போலீசார் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றனர். அங்கே அழுகிய நிலையில் சிவாஜிராவின் உடல் மீட்கப்பட்டது. சிவாஜி ராவ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பழவந்தாங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வாழ்க்கை விரித்துக்காட்டும் விந்தைகள் பற்றி பேசி முடியாது.
1965ம் வருடம் தமிழ்த்திரை வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டு. ஜெயலலிதா கதாநாயகியாக இந்த ஆண்டில் தான் 'வெண்ணிற ஆடை'யில் அறிமுகமானார். அதே படத்தில் தான் ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோரும்.ஜெய்சங்கர் 'இரவும் பகலும்', சிவகுமார் சின்ன ரோலில் 'காக்கும் கரங்கள்'.
வீணாய்ப் போய் விட்ட ஆதித்தனுக்கு 'விளக்கேற்றியவள்'.
இந்த 1965ல் வந்த ஒரு சஸ்பென்ஸ் படம் 'ஒரு விரல்'.
'ஒரு விரல்' கிருஷ்ணாராவ் என்ற நகைச்சுவை நடிகர் இந்தப்படத்தின் பெயரால் தான் சாகும் வரை அழைக்கப்பட்டார். இந்தப் படத்தில் கிட்டத்தட்ட கதாநாயகனாக அறிமுகமானவர் பிரேம் ஆனந்த்.
இந்த பிரேம் ஆனந்த் ஒரு முஸ்லீம்.ஜேசுதாஸ் பாடல் " அலங்காரம் கலையாமல் அணைப்பது தான் என்ன சுகமோ".
பி.ஆர் பந்துலு இயக்கத்தில் அவரே நடித்து 1966ல் வந்த 'நம்ம வீட்டு லக்ஷ்மி'யில்  இந்தப்பாடல் அதில் ஒரு ரோல் செய்த பிரேம் ஆனந்துக்குத்தான்! 
1970களின் ஆரம்பத்தில் பிரேம் ஆனந்த் ஒரு நாடகக்கம்பெனியில் கதா நாயகன் ரோலில் நடித்துக்கொண்டிருந்தார். அதே கம்பெனியில் மற்றொரு நடிகர் கொத்தவால் சாவடி காய்கறி வியாபாரி ஜெய் கணேஷ்! கதாநாயகன் ரோலில் நடித்துக்கொண்டிருந்த பிரேம் ஆனந்த் அப்போது ஏற்கனவே திருமணமானவர். அந்த நாடகத்தில் கதா நாயகியாய் நடித்த நடிகையுடன் காதல் வந்து இரண்டாவது  திருமணத்தில் முடிந்தது. இதன் காரணமாக அந்த நாடகக் கம்பெனியிலிருந்தே விலகும் நிர்ப்பந்தம் நாடகக் கதாநாயகன், கதாநாயகி இருவருக்கும் ஏற்பட்டுப் போனது.

அப்போது நடந்து கொண்டிருந்த நாடகத்தில் கதாநாயகன் ப்ரொமோசன் உடனே ஜெய் கணேஷுக்கு!
அந்த நாடகம் பார்க்க பாலச்சந்தர் வருகிறார். நாடகம் முடிந்ததும் க்ரீன் ரூமுக்குள் நுழைகிறார். பாலச்சந்தர் சொன்னது என்னவென்றால் ' க்ரீன் ரூமுக்குள் நுழைந்த பாலச்சந்தரை அந்த நாடகக்கம்பெனி நடிகர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டனர். ஜெய் கணேஷ் மேக்கப்பைக் கலைத்து விட்டு புன்னகையுடன் வெளியேறியிருக்கிறார். ( 'எனக்கு உங்க படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்க' என்று மற்ற நடிகர்கள் போல ஜெய் கணேஷ் கெஞ்சவில்லை!) இந்த விஷயம் பாலச்சந்தரை கவர்ந்திருக்கிறது.


 'அவள் ஒரு தொடர்கதை' சுஜாதாவுக்கு அண்ணன் ரோல் யாருக்கு என்ற கேள்விக்கு ஜெய்கணேஷ் தான் இயக்குனர் நினைவுக்கு வந்திருக்கிறார். " தெய்வம் தந்த வீடு வீதியிருக்க" கண்ணதாசன் பாடல் ஜேசுதாஸ் பாடி ஜெய் கணேஷ் நடிப்பில்!
ஜெய் கணேஷ் தமிழில் பிசியான கதா நாயகனாகி பொருளும் பிரபலமும் அடைந்த கதை எல்லோருக்கும் தெரிந்தது தான்.


இந்த விஷயம் பிரேம் ஆனந்த் மனதை மிகவும் பாதித்து விட்டது.
பாலச்சந்தர் அந்த நாடகத்தை பார்க்க வந்த நேரத்தில், தான் அதில் கதாநாயகனாய் நடித்திருந்தால் இன்று பாலச்சந்தர் படத்தில் நடித்து நல்ல வசதி வாய்ப்புடன் இருந்திருக்க முடியும். ஜெய் கணேஷ் அனுபவிக்கும் செல்வாக்கும் செல்வமும் தனக்கு வந்திருக்க வேண்டிய பாக்யங்கள். விதி தன் வாழ்வில் இப்படி விளையாடி விட்டதே என்ற தன்னிரக்கம் நிரந்தரமாகி விட்டது.


இவருக்கு சிவாஜி கணேசன் படங்களில் நடிக்க கணிசமான வாய்ப்புகள் கிடைத்தன. இவர் சிவாஜியின் கைத்தடி நடிகர்களில் ஒருவராகவே ஆகிவிட்டார். சிவாஜி படங்களில் பிரதான பாத்திரங்கள் ஜெய் கணேஷுக்கு வாய்த்தது. 1980களில் முன் பகுதியில் சிவாஜிக்கு பிரேம் ஆனந்த் என்ற நடிகரைப் பிடிக்காமல் போய் விட்டது. அந்த நேரத்தில் பிரேம் ஆனந்த் ஒரு பத்திரிக்கையில் சிவாஜிக்கு எதிராக பேட்டி கொடுத்தார். " ஸ்தாபன காங்கிரஸ் மேடைகளில் 1970களில் ஜெயகாந்தன் சிவாஜியை கடுமையாக விமர்சித்த போது சிவாஜி கணேசன் தன் கைத்தடிகளிடம்
' டேய்! என்னடா பாத்துக்கிட்டிருக்கீங்க? என்னை கேவலமா காங்கிரஸ் மேடையிலேயே ஜெயகாந்தன் பேசுறான். அவனை அடிங்கடா." என்று சொன்னார்!"
தமிழின் முக்கிய எழுத்தாளரை தமிழின் முக்கிய நடிகர் அடிக்கச்சொன்னார் என்ற விஷயம் அப்போது கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரேம் ஆனந்த் அப்புறம் திரையுலகில் இல்லாமல் ஆகி விட்டார். மதுரை A.A.ரோட்டில் சிவாஜி ரசிகர் மன்ற மேடையிலேயே அவரை கடுமையாக ஜெயகாந்தன் சாடியதைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் அது. மேடையில் மகாத்மா காந்தி, காமராஜர் படங்களுக்கு நடுவே சிவாஜி கணேசனின் படத்தை வைத்திருந்தார்கள்.‘இது யாரு? தேசப் பிதா. அது யாரு ? கர்ம வீரர் காலா காந்தி நடுவிலே யாருடா இது? திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு சைத்தானை வளர்த்தார்கள். அது சில குட்டிச் சாத்தான்களை சேர்த்துக் கொண்டு வெளியே வந்து அண்ணா தி.மு.க. என்று ஒரு கட்சியை ஆரம்பித்துவிட்டது. ஸ்தாபன காங்கிரஸிலும் நீங்கள் ஒரு சைத்தானை வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று துணிச்சலுடன் பகிரஙகமாக ஜெயகாந்தன் கர்ஜித்தார்!
..................................
.

SAIF ALI KHAN ,HINDI ACTOR BORN 1970 AUGUST 16


SAIF ALI KHAN ,HINDI ACTOR 
BORN 1970 AUGUST 16




சைஃப் அலி கான் (இந்தி: सैफ़ अली ख़ान, வங்காள: সাইফ আলি খান, உருது: سیف علی خان ஒலிப்பு [sɛf əli xɑn] இந்தியாவில் புது டெல்லியில் 16 ஆகஸ்ட் 1970 அன்று பிறந்தார்) பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் இந்திய நடிகர் ஆவார். இவர் பட்டாடி நவாப்பான மன்சூர் அலிகான் பட்டாடி மற்றும் நடிகை சர்மிளா தாகூரின் மகனாவார். இவருக்கு நடிகை சாபா அலிகான் மற்றும் சோஹா அலிகான் ஆகிய இரண்டு சகோதரிகள் உள்ளனர். போபால் மற்றும் பட்டாடியின் இரு அரச குடியிருப்புகளின் தலைவர்களுக்கு இவர் வெளிப்படையான வாரிசாவார்.

1992 ஆம் ஆண்டில் பரம்பரா வில் கான் தனது அறிமுகத்தைத் தந்தார். 1994 ஆம் ஆண்டுத் திரைப்படங்கள் மெய்ன் கிலாடி தூ அனாரி மற்றும் யேஹ் தில்லகி யுடன் அவர் தனது முதல் பெரிய வெற்றிகளைக் கண்டார். 1990களில் பல ஆண்டுகள் சரிவுற்றிருந்த பிறகு தில் சாத்தா ஹை (2001) திரைப்படத்தில் அவரது நடிப்பானது தனிச்சிறப்புடன் முன்னேற்றம் அடைந்தது. இது அவரது தொழில் வாழ்க்கைக்கு திருப்புமுனையாகவும் அமைந்தது.[1] நிக்கில் அத்வானியின் கல் ஹோ நா ஹோ (2003) திரைப்படத்தில் அவரது நடிப்பிற்காக ஃபிலிம்பேரின் சிறந்த துணைநடிகர் விருதை வென்றார். மேலும் ஹம் தும் (2004) திரைப்படத்தில் அவரது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான தேசியத் திரைப்பட விருதை வென்றார். பிறகு அவர் சலாம் நமஸ்தே (2005), ரேஸ் (2008) மற்றும் லவ் ஆஜ் கல் (2009) போன்ற திரைப்படங்களில் வணிகரீதியான வெற்றியைப் பெற்றார். பரீநீட்டா (2005) மற்றும் ஓம்காரா (2006) போன்ற அவர் நடித்த திரைப்படங்கள் விமர்சனரீதியாகப் பாராட்டப்பட்டன.[2] இந்த வெற்றிகள் மூலம் அவர் இத்துறையில் பெருமளவில் வெற்றிபெற்ற நடிகர்களில் பலருள் ஒருவராக மாறினார்.[3] 2009 ஆம் ஆண்டில் இருந்து திரைப்படத் தயாரிப்புப் பணியிலும் கான் கவனத்தைச் செலுத்தினார். மேலும் அவரது தயாரிப்பு நிறுவனமான இல்லுமினாட்டி பிலிம்ஸின் நிறுவனர்-உரிமையாளராக உள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை

சைஃப் அலிகான், பட்டாடி நவாப் மற்றும் பெங்காலின் பெங்காலி தாகூர் குடும்பமுமான இஸ்லாம் பதன் கலப்பு குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தைவழித் தாத்தாவான இஃப்டிகர் அலிகான் பட்டாடி ஒரு பட்டாடி நவாப் ஆவார். அதே போல் இவர் இங்கிலாந்திற்காகவும் பிறகு இந்தியாவிற்காவும் அணித் தலைவராக விளையாடிய திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரரும் ஆவார். அவரது தந்தைவழிப் பாட்டி சாஜுதா சுல்தான் போபாலின் இஸ்லாமிய அரசியாவார் மற்றும் அவரது மாமா பாகிஸ்தானிய ஜெனரல் நவாப்ஜடா ஷேர் அலிக்கான் பட்டாடி ஆவார். அவரது தந்தையான மன்சூர் அலிகான் பட்டாடி எட்டாவது பட்டாடி நவாப் ஆவார். மேலும் இந்தியக் கிரிகெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் ஆவார். கானுக்கு, சாபா அலிகான் மற்றும் சோஹா அலிகான் என்று இரு சகோதரிகள் உள்ளனர். கானின் தாயாரான சர்மிளாத் தாகூர் ஒரு பெங்காலி இந்தியத் திரைப்பட நடிகையும், பெங்காலின் தாகூர் குடும்ப உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியத் திரைப்பட தணிக்கைக்குழு[4] தலைவரும் ஆவார். மேலும் நோபல் அரசவைக்கவி ரபீந்தரநாத் தாகூரின் உறவினரும் ஆவார்.[5] கானின் தந்தையை சர்மிளாத் தாகூர் திருமணம் செய்த பிறகு இந்து சமயத்தில் இருந்து இஸ்லாமிற்கு மதம் மாறி தனது பெயரை பேகம் ஆயிஷா சுல்தானா என மாற்றிக்கொண்டார். கான் அவரது சமயக்கல்வியின் மையமாக இருக்கும் அவரது பாட்டியுடன் குரான் ஓதிக்கொண்டு தனது சிறுவயதை இஸ்லாமிய சூழ்நிலையில் கழித்தார். கான் கூறுகையில் "என்னுடைய வளர்ப்பு முறையில் ஒரு பெரிய பங்கை சமயம் எடுத்துக்கொண்டது" என்றார்.[6]




துவக்கத்தில் கான், லாரன்ஸ் ஸ்கூல் சனாவாரில்[7] கல்வி பயின்றார். ஆனால் பிறகு லாக்கர்ஸ் பார்க் பிரெப் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர் அவரது தந்தையின் வழியைப் பின் தொடர்ந்து வின்செஸ்டர் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். இது ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள ஆண்களுக்கான சார்பற்ற பள்ளி ஆகும். கான் அவரது பிறப்பு மொழிகளான இந்தி மற்றும் பெங்காலி ஆகியவற்றை சரளமாகப் பேசுவார். அதே போல் ஆங்கிலத்தையும் பேசுவார்.[8]

தொழில் வாழ்க்கை
ஒரு நடிகராக
1993 ஆம் ஆண்டில் ஆஷிக் அவாரா திரைப்படத்திற்காக ஃபிலிம்பேர் சிறந்த அறிமுக ஆண் விருதை வென்றார். அவரது திருப்புமுனைப் பாத்திரம் 1994 ஆம் ஆண்டில் யேஹ் தில்லகி யின் மூலம் கிடைத்தது. அதில் கஜோல் மற்றும் அக்சய் குமாருடன் இணைந்து நடித்திருந்தார். அது அவருக்கு முதல் பெரிய வெற்றியாகும்.[9] பல திரைப்படங்களில் கான் நடித்திருந்தாலும் அனைத்தும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியைத் தழுவின. மெய்ன் கிலாடி தூ அனாரி (1994), இம்திஹான் (1995),[10] கச்சி தாகி (1999) மற்றும் ஹம் சாத்-சாத் ஹைன் : வீ ஸ்டாண்ட் யுனைடெட் (1999) போன்ற பல நாயகர்கள் இருக்கும் திரைப்படங்களில் மட்டுமே இவருக்கு வெற்றி கிடைத்தது.[11] சில பாக்ஸ் ஆபிஸ் தோல்விகளுக்குப் பிறகு கியா கெஹ்னா (2000) திரைப்படத்தில் அவருக்கு வெற்றி கிடைத்தது.[12]



அவரது நடிப்புத் தொழில் தோராயமாக 2001 ஆம் ஆண்டு வரை தோல்விப்பாதையிலேயே இருந்தது. பர்ஹான் அக்தரின் சமகாலத்திய நாடகவகைத் திரைப்படம் தில் சாத்தா ஹை யில் நடிக்கும் வரை அவருக்கு இந்நிலை தொடர்ந்தது.[13] இது அவரது தொழில் வாழ்க்கையின் சிறந்த நடிப்பு என தரன் ஆதர்ஷால் விமர்சனம் செய்யப்பட்டதுடன் அத்திரைப்படத்தில் சமீர் என்ற அவரது பாத்திரத்திற்காக பெருமளவு பாராட்டுக்களை கான் பெற்றார்.[14] அத்திரைப்படத்தின் வெற்றியானது இத்துறையின் முக்கிய நடிகர்களில் ஒருவராக சைஃப் உறுதியாக நிலைநாட்டப்பெற்றார்.[3]

நிக்கில் அத்வானியின் நாடகவகைத் திரைப்படம் கல் ஹோ நா ஹோ வில் (2003), ஷாருக்கான் மற்றும் பிரீத்தி ஜிந்தாவுடன் இணைந்து துணைப்பாத்திரத்தில் நடித்ததுடன் பல பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகளை அவர் பெற்றார். அத்திரைப்படம் நியூயார்க்கில் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருந்தது. ஜிந்தாவின் நெருங்கிய நண்பரான ரோகித் என்ற பாத்திரத்தில் சைஃப் நடித்தார். அதில் பின்னர் ஜிந்தாவின் மேலுள்ள காதலை வெளிப்படுத்துவதாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது.[15] அந்தத் திரைப்படம் அந்த ஆண்டின் இரண்டாவது அதிக வருவாயைப் பெற்றத் திரைப்படமாக பெயர் வாங்கியது. மேலும் அதில் கானின் நடிப்பு விமர்சகர்கள் மூலம் பாராட்டப்பட்டது. அவர் ஃபிலிம்பேரின் சிறந்த துணைநடிகர் விருதை வென்றார். அதே போல் பிற விருது விழாக்களில் இதே பிரிவில் பிற விருதுகளையும் பெற்றார். அதைத் தொடர்ந்து குணால் கோஹ்லியின் ரொமாண்டிக் நகைச்சுவைத் திரைப்படம் ஹம் தும் மில் (2004) முக்கியப் பாத்திரத்தில் கான் நடித்தார். இது யாஷ் ராஜ் பிலிம்ஸுடன் அவரது முதல் இணைவாகும். இரண்டு முக்கிய பாத்திரங்களின் எதிர்பாராத சண்டைகளை இத்திரைப்படம் கொண்டிருந்தது. பல்வேறு ஆண்டுகள் மற்றும் பல்வேறு சந்திப்புகளுக்குப் பிறகு இருவரும் நண்பர்களாகி காதலில் விழும் வரை இந்த சண்டை தொடர்கிறது. இதில் கரண் கபூர் என்ற பாத்திரத்தில் கான் நடித்தார். இது ரேஹா பிரகாஷ் என்ற பாத்திரத்தில் நடித்த ரானி முகர்ஜியுடன் நட்பு வைத்திருக்கும் ஒரு இளவயது கேலிச் சித்திர ஓவியர் மற்றும் பெண்களை மயக்கும் பாத்திரம் ஆகும். பின்னர் அவர் பெண் மற்றும் வாழ்க்கையை உணர்ந்து அவரது பண்புகளை மாற்றிக்கொள்வது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது.[16] அதில் கானின் நடிப்பானது விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடம்
கைதட்டுகளுடன் பாராட்டுக்களைப் பெற்றது. அதற்காக ஃபிலிம்பேரில் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை கான் வென்றார். மேலும் 2005 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[17] கானின் அடுத்தத் திரைப்படம் யாஷ் ராஜ் பிலிம்ஸ் புரொடக்சனின் சலாம் நமஷ்தே (2005) ஆகும். இது வெளிநாட்டுச் சந்தையில் இந்தியாவின் சிறந்த வருவாய் பெறும் திரைப்படமாகப் பெயர் பெற்றது. இத்திரைப்படம் ஆஸ்திரேலியாவில் முழுமையாக படம்பிடிக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படமாகும். தற்கால திருமணம் ஆகாமல் கூடிவாழும் ஜோடியாக கான் மற்றும் பிரீத்தி ஜிந்தா இதில் நடித்திருந்தனர்.[18][19] ராம் கோபால் வர்மாவின் ஏக் ஹசினா தி (2004) திரைப்படத்திலும், பிரதீப் சர்காரின் பரீநீட்டா வில் (2005) ஷேகர் ராய் என்ற பாத்திரத்திலும் எதிர்மறையான பாத்திரத்திற்காக கான் குறிப்பிடப்பட்டார். சரத் சந்திரா சட்டோபதியாய் எழுதிய பரிநீட்டா என்ற 1914 பெங்காலி சிறு கற்பனைக்கதையைத் தழுவி இத்திரைப்படம் உருவானது.[20]

2006 ஆம் ஆண்டில் பீயிங் சைரஸ் என்ற ஆங்கில-மொழி கலைத் திரைப்படத்தில் முதன்மை மாந்தராக கான் நடித்தார். சைரஸ்ஸாக அவரது பாத்திரம் நேர்மறையான திறனாய்வுகளைப் பெற்றது. அதே ஆண்டில் சேக்ஸ்பியரின் ஓதெல்லோவின் இந்தியத் தழுவல் திரைப்படமான ஓம்காரா வில் லகோ என்ற அவரது பாத்திரத்திற்காக பெருமளவில் பாராட்டுகளைக் கான் பெற்றார். Rediff.com கூறுகையில், "ஓம்காராவில் சைஃப்பின் வெளிப்பாடானது, அவரது நடிப்புகளில் மிகவும் முன்னணி வகிக்கிறது. மேலும் நாம் அதை மகிழ்ச்சியோடு பாராட்ட வேண்டும்" எனக் கூறியிருந்தது.[21] பல்வகைத் திரைப்பட விமர்சகர் டெரிக் எல்லி, இத்திரைப்படத்தில் கானின் நடிப்பை "பவர்ஹவுஸ்" என அழைத்தார். மேற்கொண்டு அவர் எழுதுகையில், "இது முழுமையாக கானின் திரைப்படமாகும். ஒரு விரும்பத்தக்க நெருங்கிய நண்பராக அவரது முந்தைய வெறுப்பான திரை நடிப்புகளை மாற்றத்தக்க வகையில் இதில் அவரது கடினமான நடிப்பு உள்ளது. அதே போல் 'பீயிங் சைரஸ்'ஸில் கையாளப்பட்ட வெளிநபர் போல அவரது உள்ளடக்கம் இருந்தது. இது அருமையாக உணரப்பட்ட சிறந்த நடிப்பாகும்" என எழுதினார்.[22] அவரது நடிப்பிற்காக ஸ்டார் ஸ்கிரீன், ஃபிலிம்பேர், ஜீ சினி மற்றும் IIFA விருதுகளில் எதிர்மறையான பாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான விருதுகளைக் கான் பெற்றார்.[23][24][25]

கான் அடுத்து எக்லாவ்யா: த ராயல் கார்ட் (2007) இல் நடித்தார். அதில் ஆஷிக் அவாரா விற்குப் (1993) பிறகு இரண்டாவது முறையாக அவரது தாயருடன் இணைந்து நடித்தார். இத்திரைப்படம் ஆஸ்கார்களுக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவைத் தந்தது. மேலும் இதில் அர்ஷவர்தனாக கானின் நடிப்பானது விமர்சகர்களால் ஊக்குவிக்கப்பட்டது. தரன் ஆதர்ஷ் கருத்து கூறுகையில், "வியப்பான துல்லியமான அவரது உணர்ச்சிபூர்வமான நடிப்பைப் பார்க்கையில், ஒரு நடிகராக கான் மிகப்பெரிய அடிகளை எடுத்துவைத்திருப்பதை உங்களால் உணர முடியும்" எனத் தெரிவித்தார்.[26] கான் அடுத்து ராணி முகர்ஜியுடன் இணைந்து குடும்ப நாடகவகைத் திரைப்படமான டா ரா ரம் பம் மில் (2007) நடித்தார். சித்தார்த் ஆனந்த் இயக்கிய இத்திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றியைப் பெற்றது.[27][28]

2008 ஆம் ஆண்டில் முதலில் அப்பாஸ்-முஸ்டன் திரில்லர் ரேஸில் கான் நடித்தார் பாக்ஸ் ஆபிஸில் இத்திரைப்படம் சிறப்பாக வெற்றி பெற்றது.[29] யாஷ் ராஜ் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கப்பட்ட தஷான் மற்றும் தோடா பியார் தோடா மேஜிக் என்ற இரு திரைப்படங்களைத் தொடர்ந்து இது வெளிவந்தது. அந்த இரண்டுமே வெற்றியடையவில்லை.[29]

2009 ஆம் ஆண்டில் கான் லவ் ஆஜ் கல் என்ற திரைப்படத்தைத் தயாரித்து நடித்தார். இம்தியாஸ் அலியால் இயக்கப்பட்ட இத்திரைப்படம் விமர்சன மற்றும் வணிகரீதியான வெற்றியைப் பெற்றது.[30] மேலும் இவர் திரில்லரான குர்பானில் நடித்தார். இதில் அவரது உண்மையான கேர்ல் பிரண்ட் கரீனா கபூருடன் இணைந்து ஒரு தீவிரவாதியாக நடித்தார்.

தயாரிப்பாளராக
2009 ஆம் ஆண்டில் கான் அவரது தயாரிப்பு நிறுவனமான இல்லுமினட்டி பிலிம்ஸை நிறுவி ஒரு தயாரிப்பாளராகவும் மாறினார். தயாரிப்பாளராக கானின் முதல் திரைப்படம் லவ் ஆஜ் கல் ஆகும். இதில் ஒரு முன்னணிப் பெண்ணாக தீபிகா படுக்கோன் அவருக்கு ஜோடியாக நடித்தார். இம்தியாஸ் அலி இயக்கிய இத்திரைப்படம் வணிகரீதியாகவும் விமர்சனரீதியாகவும் வெற்றிபெற்றது. சைஃப்பின் இரண்டாவது திரைப்படம், ஏஜெண்ட் வினோத் எனத் தலைப்பிடப்பட்டுள்ளது, இத்திரைப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்குவார். சைஃப்பின் தயாரிப்பு நிறுவனம் மூலமாக இந்த இரண்டு திரைப்படங்களும் தயாரிக்கப்படும். மேலும் லண்டனைச் சார்ந்த ஈரோஸ் இண்டெர்நேசனல் மூலம் இதன் ஐக்கிய இராஜ்ஜிய வெளியீடு கையாளப்படும்.[31]

சொந்த வாழ்க்கை

53வது ஆண்டு ஃபிலிம்பேர் விருதுகளில் (2008) கரினா கபூருடன் கான்.
1991 ஆம் ஆண்டு அக்டோபரில் நடிகை அம்ரிதா சிங்கைக் கான் திருமணம் செய்தார்.[32] திருமணம் ஆகி பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் போது 2004 ஆம் ஆண்டு இந்தத் தம்பதியினர் விவாகரத்து செய்து கொண்டனர். அவரது குழந்தைகள் அவர்களது தாயாருடன் வாழ்கின்றனர்.[33] தற்போது நடிகை கரீனா கபூருடன் கான் டேட்டிங் வைத்திருக்கிறார்.[34]

1998 ஆம் ஆண்டில் சல்மான் கான், தபூ, சோனாலி பிந்த்ரே மற்றும் நீலம் போன்ற இணை-நட்சத்திரங்களுடன் கான் நடித்த ஹம் சாத் சாத் ஹெய்ன் படப்பிடிப்பின் போது கன்கனியில் இரண்டு பிளாக்பக் வகை மான்களை வேட்டையாடியதற்காக கான் குற்றஞ்சாட்டப்பட்டார்.[35] கான் குற்றமற்றவர் என முடிவான பிறகு விரைவிலேயே அந்த குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டார்.[36]

18 பிப்ரவரி 2007 அன்று அன்றைய இரவில் நடக்கவிருக்கும் ஸ்டார்டஸ்ட் விருதுகளில் பங்கேற்பதற்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கையில் கானுக்கு நெஞ்சில் வலி ஏற்பட்டதன் காரணமாக லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.[37] மருத்துவமனையில் இருந்து மீண்டு வந்த பிறகு புகைப்பதை நிறுத்த வேண்டுமென அவர் கூறினார்.[38]

2009ஆம் ஆண்டு அக்டோபரின் பிற்பகுதியில் கரினாவுடன் அவருக்கு இருக்கும் நட்பைப் பற்றியும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் இருப்பதையும் சைஃப் பேசினார். அதைப் பற்றிக் கூறும் போது ஒருவருடைய தொழில் வாழ்க்கையை அவரது திருமணம் பாதிக்காது. உண்மையில் அப்படி நடந்தாலும் இன்றைக்கு திருமணத்தில் வரையறை மாறியுள்ளது என அவரது அபிப்ராயத்தைத் தெரிவித்தார். அவரும் கரீனாவும் நல்ல நட்புடன் இருப்பதாகக் கான் கூறினார். அதனால் சமுதாயத்திற்கான ஒரு அங்கீகார முத்திரைக்காக மட்டுமே திருமணம் முடிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.[34]

பொறுப்புகள்
2005 ஆம் ஆண்டில் கான் பிற பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து HELP! டெலிதோன் நிகழ்ச்சியில் 2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரட்டி உதவியளிப்பதற்காகப் பங்கேற்றார்.[39]

இரண்டு பெரிய உலகச் சுற்றுலாக்களிலும் கான் பங்கேற்றார். டெம்ப்டேசன் 2004 உலகச் சுற்றுலாவிற்கு சென்ற, ஷாருக்கான், ராணி முகர்ஜி, பிரீத்தி ஜிந்தா, அர்ஜூன் ராம்பால் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோரை உள்ளடக்கிய நடிகர் குழுவில் கானும் பங்கேற்றார்.

2006 ஆம் ஆண்டில் அக்சய் குமார், பிரீத்தி ஜிந்தா, சுஷ்மிதா சென் மற்றும் செலினா ஜெட்லி ஆகியோருடன் இணைந்து உலகளவில் நடந்த ஹீட் 2006 இசை நிகழ்ச்சி சுற்றுலாவில் கான் மீண்டும் பங்கேற்றார்.[40]

2006 ஆம் ஆண்டில் மெல்போனில் நடந்த 2006 காமன்வெல்த் விளையாட்டுகள் முடிவு விழாவில் பல்வேறு பிற பாலிவுட் நடிகர்களுடன் கானும் தோன்றினார். டெல்லியில் நடக்கவிருக்கும் 2010 காமன்வெல்த் விளையாட்டுகளின் பொருட்டு இந்தியக் கலாச்சாரத்தை காட்சியளிக்கும் வகையில் ராணி முகர்ஜி மற்றும் ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து கானும் பங்கேற்றார்.[41]