Showing posts with label PROGRESS. Show all posts
Showing posts with label PROGRESS. Show all posts

Wednesday, 27 June 2018

PROGRESS OF LOVE IN TAMILNADU







PROGRESS OF LOVE IN TAMILNADU





தமிழகத்தின் காதல் பரிமாணங்கள் ..பிரயாணங்கள்

காதல்களும் கொலைகளும் 1950- 59
களில் காதல் என்பது ஒரு கனவு . கனவே தான்.மீறி காதலித்தால் அடி உதை சூடு ...மரணம் இல்ல தற்கொலை -இவை தான் தமிழ்நாட்டு தலை எழுத்து .இதை விடுத்து பெண்கள் ஓடிப்போவதும் உண்டு -அப்படி ஓடிப்போய் விட்டால் நிரந்தரமாய் பெற்றோரை மறந்து விட வேண்டியது தான் .எனவே காதல்கள் ஜன்னல் வரை வந்து ஜன்னலோடுமே முடிவடைந்து விடும்

1960-69

சினிமாக்களின் தாக்கம் அதிகமா இருந்த ஆண்டு இது -காதல் முளைப்பதற்கு அதை வெட்டி எறிவதற்கு என்று போட்டா போட்டி நடந்த காலம் இது -காங்கிரஸ்கா ரர்கள் கருப்பு சட்டைக்காரர்கள் என்ற பேதம் உருவாகி அதுவே சிவாஜி எம்ஜியார் போட்டியாய் உருவெடுத்த காலம்

1965 களிலே தண்ணீர் பிடிக்க வந்த பெண்ணிடம் அந்த பெண்ணை பார்க்கும் போதெல்லாம் ஒரு சினிமா பாட்டை பாடுவார்கள் - அந்த பெண் வீட்டிலே தண்ணீர் பிடிக்க போக மாட்டேன் என்று அழும் - பின்னர் ஒருநாள் அந்த பையனுக்கு நாலு பேர் வந்து தரும அடி தருவார்கள் - அப்புறம் அந்த பெண் வந்தால் இதர வாலிபர்கள் ஓட்டம் கிண்ணி விடுவார்கள்

அப்போது எனக்கு வயது 10. பனியனோ, இல்ல சட்டையோ அணிந்திடாத நாட்கள் அவை -வறுமையை பறை சாற்றி கொண்டிருக்கும் வரிவரியாக எலும்புகள் .
ஒரு பாடலை பாடினால் அடி விழுமா ? புரியாத அந்த வயதில் எனக்கு ஆச்சரியம் தந்த அந்த பாடல்
" குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும் "

மறு வருஷத்தில் இன்னொரு பாட்டுக்கு இளைஞர்கள் அதிக அளவில் தெருவுக்கு தெரு அடி வாங்கி புயலைக்கிளப்பினார்கள் - அந்த பாடல் " சந்திப்போமா இன்று சந்திப்போமா தனிமையில் நம்மை பற்றி சிந்திப்போமா "

1968- 1980

1967 இல் திமுக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றின - காதல்கள் பெற்றோர்கள் எதிர்பார்ப்பை மீறி ஓடிப்போய் திருமணங்கள் நடை பெற ஆரம்பித்தன . பணக்கார பெண்களை திருமணம் செய்வது சமூக கௌரவமாக பார்க்கப்பட்டது .ஆண்மையின் அடையாளமும் ஆயின
1960 களில் அடிதடி களில் ஈடுபட்ட பெண்ணை பெற்றோரோர்கள் திமுக ஆட்சியில் மிரட்டபட்டனர் - MLA கட்ட பஞ்சாயத்து ஆகி போலீஸ் ஸ்டேஷன் டம்மி ஆக்கப் பட்டது பெண்ணை பெற்றவர்கள் பொறுத்துக்கொள்ளும் காலம் மலிந்தது

1975 களிலிருந்து காதல் திருமணம் தப்பு இல்ல என்ற எண்ணம் மலர ஆரம்பித்தது - முதலில் பணக்காரர்கள் வீட்டு பையன்கள் காதல் நிறைவேற ஆரம்பித்தது -அப்படியே நடுத்தர வர்க்கம் என்று விரிந்தது . பெற்றோர் சொன்னால் போதும் என்ற நிலை மாறியது - ஆண்களும் பெண்களும் பார்த்து சம்மதம் சொன்னால் தான் திருமணம் என்ற முடிவு அனுசரிக்கப்பட்டது -ஏனென்றால் பெற்றோருக்கு பயந்து கழுத்தை நீட்டிய பெண்கள் மாமியார் ,கணவன் ,கொடுமைகளால் அவதிக்கு உள்ளானார்கள்

இந்த கால கட்டம் இளைஞர்களை நம்பி பெண் கொடுத்த காலகட்டம் ஆகும் . திருமணம் ஆண்களால் முடிவு செய்யப்பட்டது - பெண்கள் தலை அசைத்தா ர்கள். ஒரு பையனை விசாரிப்பதென்றால் முழு விவரமும் பல ஆட்களிடம் விசாரிப்பார்கள் . மருமகளை கொலை செய்தவர்கள் ,முறை கேடாய் சொத்து சேர்த்தவர்கள் ஸ்த்ரீ லோலன் ,மது ,சிகரெட் வரை விசாரணை உண்டு -இவர்கள் பெண் கேட்டால் நடுத்தர வர்க்கத்தினர் பெண் கொடுக்கவே மாட்டார்கள்

1980-89
பொம்பளைனா நாலு பேரு பாக்கத்தான் செய்வான் -அதுக்காக அடிச்சிருவியோ ! எங்க இவனை விட்டு உன் பொண்ணை தூக்க சொல்றேன் ..என்ன செய்ய முடியுமோ செய் -

இது 1982 களின் ஆரம்பத்தில் விருதுநகர் MLA சுந்தரராஜ் நடு ரோட்டில் செய்த பஞ்சாயத்து -

நான் நேரில் கண்டது...பார்த்தது ..மிரண்டது