Showing posts with label SEPTEMBER 26. Show all posts
Showing posts with label SEPTEMBER 26. Show all posts

Saturday, 25 September 2021

S.W.R.D. PANDARA NAYAKKA BORN 1899 JANUARY 8 - 1956 SEPTEMBER 26

 


S.W.R.D. PANDARA NAYAKKA BORN 1899 JANUARY 8 - 1956 SEPTEMBER 26 


செப்டம்பர் 26: அமரர் பண்டாரநாயக்க நினைவு தினம்



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் பிரதமருமான எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் 61 வது நினைவு தினம் செப்டம்பர் இருபத்தாறாகும். இலங்கை வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் தனித்துவமிக்க அரசியல் தலைவராக விளங்கியவர் அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆவார். இவர் நாட்டின் சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல் துறைகளின் மறுமலர்ச்சிக்கு அளித்துள்ள பங்களிப்புக்கள் அழியாத் தடம் பதித்திருக்கின்றன.


அவர் மறைந்து ஆறு தசாப்தமாகியுள்ள போதும், இன்றும் நினைவு கூரப்படுகிறார்.


அமரர் பண்டாரநாயக்க 1899 ஜனவரி 8 ஆம் திகதி ஹொரகொல்லவில் பிறந்தார். செல்வச் செழிப்புமிக்க மகாமுதலி சேர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவுக்கும், டெஸி எஸிலின் ஒபேசேகரவுக்கும் மகனாக அவர் பிறந்தார்.


கல்கிசை சென். தோமஸ் கல்லூரியில் இரு மொழி கல்வி பெற்றார். இக்கல்வியை பூர்த்தி செய்த பண்டாரநாயக்க, 1919 இல் இங்கிலாந்து சென்று ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்து சட்டத் துறையில் உயர் கல்வியைத் தொடர்ந்தார். பல்கலைக்கழக காலத்தில் அவர் ஏனைய துறைகளிலும் தமது திறமைகளை வெளிப்படுத்தினார்.


ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கற்ற பண்டாரநாயக்க பரிஸ்டர் பட்டத்தை பெற்று 1925 பெப்ரவரி 27 ஆம் திகதி தாயகம் திரும்பினார். தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் போது உரையாற்றிய பண்டாரநாயக்க, தமது நாடு காலனியாதிக்கத்துக்கு உட்பட்டிருப்பதால் மக்களும் நாடும் அனுபவிக்கும் வேதனையை சுட்டிக்காட்டியதோடு அவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்கான முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்.


‘நாட்டுக்காக அரசியலைத் தெரிவு செய்ய மக்கள் விரும்புவார்களாயின் தாம் மக்களை ஆளும் ஆட்சியாளனாகவன்றி மக்கள் சேவகனாக கடமையாற்ற தயாராக உள்ளேன்’ என்றார்.இந்நாட்டை பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுவிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் அவர் சிந்திக்கத் தொடங்கினார். இதற்கென மக்கள் மத்தியில் தேசிய சிந்தனையை கட்டியெழுப்புவதன் அவசியத்தையும் உணர்ந்து அன்றைய காலகட்டத்தில் செயற்பாட்டிலிருந்த இலங்கை தேசிய சங்கத்திலும் அவர் இணைந்து தீவிரமாக செயற்படலானார்.


1926 டிசம்பர் 14ஆம் திகதி கொழும்பு மாநகரசபைக்கு நடைபெற்ற தேர்தலில் மருதானை வட்டாரத்தில் இவர் போட்டியிட, இவருக்கு எதிராக தொழிற்சங்கத் தலைவர் ஈ. ஏ. குணசிங்க தேர்தலில் களமிறங்கினார். 615 மேலதிக வாக்குகளால் குணசிங்கவை தோற்கடித்து இவர் மாநகர சபை உறுப்பினரானார். அதனூடாக நேரடி அரசியலில் பிரவேசித்த இவர், மக்கள் சேவகனாக மாறினார். மாநகர சபை உறுப்பினராக பதவி வகித்த காலத்தில் மக்கள் சேவைக்கு அளித்த முன்னுரிமை காரணமாக மக்களின் விருப்பத்திற்குரிய தலைவராக மாறினார் பண்டாரநாயக்கா.


இவ்வாறான சூழலில் 1931 மே 04 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் வெயாங்கொட தொகுதியில் போட்டியிட்டு அரச பிரதிநிதிகள் சபைக்கு இவர் தெரிவானார். அதனைத் தொடர்ந்து அரசியலின் ஊடாக நாட்டினும் மக்களினும் சுபீட்சத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து உழைக்கலானார்.


இவர் 1940 ஒக்டோபர் 03 ஆம் திகதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை திருமணம் செய்து குடும்ப வாழ்வில் பிரவேசித்தார். அதனூடாக இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் கிடைக்கப் பெற்றனர். இவர்களில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பிற்காலத்தில் இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டார். அநுர பண்டாரநாயக்க பிற்காலத்தில் இந்நாட்டின் சபாநாயகரானார். சுனேத்ரா பண்டாரநாயக்க இந்நாட்டின் முன்னணி சமூக செயற்பாட்டாளராக விளங்குகிறார்.


பண்டாரநாயக்க ‘எனக்கு முதல் நாடு’ என்ற எண்ணக்கருவை இந்நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் 1945 ஜனவரி 19ஆம் திகதியன்று ‘சுதந்திர இலங்கைச் சட்டத்தை அவர் அரச பேரவைக்கு கொண்டுவந்தார். அது தனித்துவமிக்க சுயாதீனமான இலங்கைக்கான முதலாவது ஆவணமாகும். இந்த ஆவணம் இந்நாட்டு சுதந்திரத்தின் தேவையையும் தனித்துவத்தையும் எடுத்துக்காட்டக் கூடியதாக விளங்கியது. பிரித்தானியர் அச்சட்டத்திற்காக இலங்கைக்கு உடனடியாக சுதந்திரத்தை வழங்க முன்வரவில்லை. ஆனாலும் நாலாண்டுகள் கடந்த நிலையில் 1948 பெப்ரவரி 04 ஆம் திகதி இந்நாட்டுக்கு சுதந்திரம் வழங்கினர். அது டொமினியன் அந்தஸ்து கொண்ட சுதந்திரமாகவே இருந்தது.


சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமராக டி. எஸ் சேனநாயக்க பதவியேற்றார். அவர் தலைமையிலான அரசாங்கத்தில் இவர் சுகாதாரம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பதவியேற்றார். இந்நாட்டுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை பண்டாரநாயக்க விமர்சனக் கண்கொண்டுதான் நோக்கினார். இது தொடர்பில் அவர் ‘பெளதீக ரீதியில் நாடு பெற்றுக் கொண்ட பேரளவிலான சுதந்திரம்’ என்று அடிக்கடி கூறலானார்.


Founders S.W.R.D.Bandaranaike and D.A.Rajapaksa

S.W.R.D.Bandaranaike and D.A.Rajapaksa

நாட்டின் சுதந்திரம், தனித்துவம் தொடர்பில் கொண்டிருந்த பார்வையின் அடிப்படையில் டி.எஸ். சேனநாயக்கவின் அரசிலிருந்து 1951 ஜுலை 12 ஆம் திகதி பண்டாரநாயக்க வெளியேறி எதிரணிக்கு சென்றார். அவருடன் அமரர் டி.ஏ. ராஜபக்‌ஷவும் இணைந்து சென்றார். அதன் பின்னர் மேலும் சிலர் எதிரணிக்கு சென்றனர்.


இவர்கள் ஒன்றிணைந்து 1951 செப்டம்பர் முதலாம் திகதி கண்டியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். அவர்களுடன் கலாநிதி பதியுதீன் மஹ்மூத், எஸ். தங்கராசா, ரி.பி இலங்கரத்ன உள்ளிட்ட மேலும் பல முக்கியஸ்தர்கள் அன்று இணைந்து கொண்டனர். அங்கு கட்சிக்கான ஆட்சேர்ப்பும் இடம்பெற்றது.


மறுநாளான 1951 செப்டம்பர் 02 ஆம் திகதி கொழும்பு புதிய நகர மண்டபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இக்கட்சியை நாடெங்கிலும் மக்கள் மத்தியில் பரவலாக்குவதற்காக பண்டாரநாயக்கவும் அவரது தோழர்களும் இரவு பகல் பாராது அயராது உழைத்தனர். இதன் பயனாக கட்சி அமைக்கப்பட்ட ஒரு வருட காலப்பகுதிக்குள் நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு முதன் முறையாக 08 ஆசனங்களை வென்றெடுத்தது ஸ்ரீ.லசு.க. அவர்களில் பண்டாரநாயக்கவும், டி.ஏ ராஜபக்‌ஷவும் அடங்கியிருந்தனர். அந்த 8 ஆசனங்களையும் கொண்டு எதிர்க்கட்சி அரசியலினூடாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஸ்ரீ.ல.சுதந்திர கட்சி ஆற்றிய சேவைகளின் பயனாக சொற்ப காலத்தில் ஆட்சிபீடமேறும் கட்சியென்ற அந்தஸ்தை அக்கட்சி பெற்றுக் கொண்டது.


1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீல.சு.கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிபீடமேறியதோடு இந்நாட்டின் மூன்றாவது பிரதமராக எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க பதவியேற்றார். அந்த அரசாங்கத்தில் டி.ஏ. ராஜபக்‌ஷ நிலங்கள் மற்றும் நில மேம்பாட்டு அமைச்சின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார். பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்ததும் கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் திருகோணமலை சீனக்குடாவில் விமானப்படை முகாம்களை அகற்றியதோடு அங்கு பறந்து கொண்டிருந்த பிரித்தானியகொடிகளை இறக்கி, இந்நாட்டின் சிங்கக் கொடியைப் பறக்க விட்டார்.


மேலும் இவர் சிங்கள மட்டும் சட்டத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார். தமிழ் பேசும் மக்களின் தேவைகளையும் அபிலாஷைகளையும் யதார்த்தபூர்வமாக உணர்ந்து தமிழரசுக் கட்சி தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன் 1957 ஜுலை 26 ஆம் திகதியன்று உடன்படிக்கை செய்து கொண்டார்.


சிங்களம் மட்டும் சட்டத்தினால் ஏற்படும் விளைவுகளை தவிர்ப்பதற்காக தமிழ்மொழி விஷேட ஏற்பாடுகள் சட்டத்தையும் நிறைவேற்றினார். துறைமுகங்களையும் விமான நிலையங்களையும் பஸ் போக்குவரத்தையும் அரசு​ைடமையாக்கினார். தொழிலாளர்களின் நலன் கருதி ஊழியர் சேமலாப நிதியத்தை ஆரம்பித்தார். மே தினத்தை பொதுவிடுமுறை தினமாக்கினார். நாட்டின் நலன்களை முன்னிறுத்தி அணிசேராக் கொள்கையை முன்னெடுத்தார். அத்தோடு ரஷ்யாவுடனும் சீனாவுடனும் இராஜதந்திர உறவுகளையும் ஆரம்பித்தார். அமரர் செல்வநாயகத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து தென்பகுதியில் ஏற்பட்ட எதிர்ப்புகளுக்கும் ஆட்சேபனைகளுக்கும் இவர் துணிகரமாக முகங்கொடுத்து வந்தார். ஆனபோதிலும் அந்த உடன்படிக்கையிலிருந்து பின்வாங்க வேண்டிய நிலை அவருக்கு இறுதியில் ஏற்பட்டது. என்றாலும் அவர் மக்கள் சேவைக்கு முன்னுரிமை தொடர்ந்தும் செயற்பட்டு வந்தார்.


இவ்வாறான சூழலில் 25.09.1959 அன்று பிரதமரின் கொழும்பு -7 லுள்ள ரொஷ்மிட் பி​ளேஸ் இல்லத்திற்கு வந்த தல்துவே சோமராம தேரர் எவரும் எதிர்பாராத நிலையில் பிரதமர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தார். அதனால் படுகாயமடைந்த பண்டாரநாயக்காவுக்கு கொழும்பு வைத்தியசாலையில் ஆறு மணித்தியாலய சத்திரசிகிச்சை அளிக்கப்பட்டது. அச்சிகிச்சை பலனளிக்காத நிலையில் 1959 செப்டம்பர் 26ஆம் திகதி பண்டாரநாயக்கா உயிரிழந்தார். தல்துவே சோமராம தேரரின் ரவைகள் பண்டாரநாயக்கவை மௌனிக்கச் செய்த போதிலும் அவர் நாட்டுக்கும் மக்களுக்கும் ஆற்றிய சேவைகள் என்றும் அழியா தடம்பதித்தவையாக இடம்பிடித்து விட்டன. முன்மாதிரி மிக்க அரசியல் தலைவராக அவரை அடையாளப்படுத்தியுள்ளது.

எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா 


சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா (ஆங்கில மொழி: Solomon West Ridgeway Dias Bandaranaikeசிங்களம்සොලමන් වෙස්ට් රිජ්වේ ඩයස් බණ්ඩාරනායක, சுருக்கமாக, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா (S. W. R. D. Bandaranaike, சனவரி 8, 1899 - செப்டெம்பர் 26, 1959) இலங்கையின் நான்காவது பிரதமர் ஆவர். இவர் பிரதமராக பதவி வகித்த போது பௌத்த பிக்கு ஒருவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.


குடும்பம்[தொகு]

பிறப்பால் பண்டாரநாயக்கா ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராவார். இவரது வம்சாவளிகள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்றும், கண்டி இராச்சியத்தில் ஆலயம் ஒன்றின் பூசகராகப் பணியாற்றிய நீலப்பெருமாள் பாண்டாரம் என அழைக்கப்படுபவரிடம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.[2] பின்னர் தங்கள் பெயரை பண்டாரநாயக்க என சிங்கள வடிவில் மாற்றியது, பின்னர் போர்த்துக்கேயக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து டயஸ் என்ற பெயரை ஏற்றுக்கொண்டது. அவர்கள் போர்த்துகீசியம், டச்சு மற்றும் பிரித்தானிய மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியாற்றினர்.[3]. சர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க இவரது தந்தையாவார். சிறுவயதில் ஏற்பட்ட நோய்கள் காரணமாக பாடசாலை செல்லாத இவர் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்றார். 15 வயதில் பாடசாலை செல்லத் தொடங்னார். பின்னர் இங்கிலாந்தின் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் சட்டத்தரணியாகக் கல்வி கற்று முடித்த பின்னர் இலங்கை அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். பண்டாரநாயக்க இலங்கையில் அரசியல் செல்வாக்கு மிகுந்து காணப்பட்ட இரத்வத்தை பரம்பரையைச் சேர்ந்த சிறிமாவோ திருமணம் செய்து கொண்டார். தனது கணவரின் மரணத்துக்குப் பின்னர் சிறிமாவோ கணவரின் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்றதன் மூலம் உலகின் முதல் பெண் பிரதமரானார்.[4] இவர் இலங்கையின் பிரதமரும் அதிபருமான சந்திரிகா குமாரத்துங்க, அனுரா பண்டாரநாயக்கா மற்றும் சுனேத்திரா பண்டாரநாயக்காவின் தகப்பனாரும் ஆவர்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

பண்டாரநாயக்கா ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராகப் பிறந்தபோதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் பௌத்தராகவே அடையாளம் காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியில் 1931 முதல் 1951 வரை இணைந்த இவர் பல்வேறு பதவிகளை வகித்தார். இவர் 1951 இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக இலங்கை சுதந்திரக் கட்சியினைத் தோற்றுவித்தார்.

1956 இல் பிரதமராகிய பண்டாரநாயக்கா இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்த ஆங்கிலத்தை இல்லாதொழித்து சிங்களத்தை மாத்திரமே அதிகாரப்பூர்வ மொழியாக்கினார்.

கொலை[தொகு]

தனது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஞானசார பௌத்த பிக்குவால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மரணச் சடங்குகள் கிறிஸ்தவ முறையிலேயே இடம்பெற்றன.

விட்டுச் சென்றவை[தொகு]

1950 இன் நடுப்பகுதியில் தமிழைப் புறக்கணித்து தனிச் சிங்கள கோட்பாடுகளைக் கையாண்டனர். இதுவே இலங்கை இனப்பிரச்சினைக்கு முதல்வித்தாக அமைந்தது எனபது இப்போது பலரும் ஏற்றுக் கொள்ளும் கருத்தாகும். தனிச் சிங்கள சட்டத்தால் தமிழ்ப் பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மையை நீக்கும் நோக்குடன் செய்யப்பட்ட பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தத்தையும் எதிர்க்கும் விதமாக பௌத்த பிக்கு ஒருவரால் பண்டாரநாயக்கா சுட்டு படுகொலை செய்யபட்டதை அடுத்து மேலும் அப்போது எதிர்கட்சியில் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவினதும் போராட்டங்கள் காரணமாக கிழித்தெறிந்தார்.[5] இதன் மூலம் நாட்டின் தலைமை சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு தலை குனியும் நிலைமையை உருவாக்கியவர் இவராகவே கருதப்படுகிறார்.[6]

Tuesday, 27 July 2021

KAVIMANI DESIYA VINAYAGAM PILLAI , POET BORN 1876 JULY 27 -1954 SEPTEMBER 26

 

KAVIMANI DESIYA VINAYAGAM PILLAI , POET

 BORN 1876 JULY 27 -1954 SEPTEMBER 26


கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.



வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சிவதாணுப்பிள்ளை -ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாக தேசிக விநாயகம் பிறந்தார். இரண்டு பெண்களுக்கு பின் பிறந்த ஆண் மகவுக்கு தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை வைத்தார் சிவதாணுப்பிள்ளை. ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எம். ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். உமையம்மை எனும் பெண்ணை 1901 இல் மணம் முடித்தார். நாஞ்சில் நாட்டார் தன் மனைவியை குட்டி, பிள்ளாய் என்று அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன் மனைவியை தாயி என்று மரியாதையுடன் அழைப்பார். குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன் சிவதாணுவை தனது மகன் போல வளர்த்தார்.[1][2]

ஆசிரியர் பணி[தொகு]

நாகர்கோவிலிலுள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி போன்றவற்றில் ஆசிரியராக 36 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

குழந்தை இலக்கியப் பணி[தொகு]

தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் தொடர்ச்சியாகப் பாடல்களை எழுதினார். 1938 ஆண்டு வெளியான அவருடைய மலரும் மாலையும் தொகுதியில் 25 க்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்கள், 7 கதைப் பாட்டுகள் இடம்பெற்றிருந்தது. தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு என்ற பாடல் இன்றளவும் பிரபலமாக உள்ள அவரது குழந்தைப் பாடல்களில் ஒன்று.[3]

மொழிபெயர்ப்பாளர்[தொகு]

எட்வின் ஆர்னால்டின் 'ஆசிய ஜோதி' யைத் தமிழில் தழுவி எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார்.

ஆராய்ச்சியாளர்[தொகு]

ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை எழுதினார்.[4].

விருதுகள்[தொகு]

Kavimani Desigavinayagam Pillai 2005 stamp of India.jpg

24 டிசம்பர் 1940 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை கவிமணி என்ற பட்டம் வழங்கினார்.[5]. 1943 இல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார். 1954 இல் கவிமணிக்குத் தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது. அக்டோபர் 2005இல் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.[2]

கவிமணியின் நூல்கள்[தொகு]


கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு ரூ.1 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்த கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி தான் தமிழகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக உள்ள எஸ். விஜயதாரணி என்பது குறிப்பிடத்தக்கது. 
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பதிலளிக்கிறார். இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி 110-விதியின் கீழ் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக அவர் கூறினார்


* கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு ரூ.1 கோடி செலவில் சிலை, மற்றும் நூலகத்துடன் கூடிய மணிமண்டபம், அவரது சொந்த ஊரான, நாகர்கோயில் அருகில் உள்ள தேரூரில் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

* இரட்டைமலை சீனிவாசனுக்கு மதுராந்தகத்தில் நூலகத்துடன் ஒரு கோடி ரூபாயில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

* பேராசிரியர் முத்தரையருக்கு திருச்சியில் ஒரு கோடி மதிப்பில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும். 

* பெனிக்குவிக், வீரன் அழகுமுத்துக்கோன், மா.பொ.சி, சி.பா.ஆதித்தனார் ஆகியோர் பிறந்த நாள்கள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும். காளிங்கராயன் நினைவை போற்றும் வகையில் அரசு விழா நடத்தப்படும் என்றும் அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்.

Wednesday, 3 March 2021

MYRNA DERBY, Ziegfeld Girl BEAUTY ,DANCER 1908 APRIL 10 - 1929 SEPTEMBER 26

 


MYRNA DERBY,  Ziegfeld Girl  BEAUTY ,DANCER  1908 APRIL 10 - 1929 SEPTEMBER 26

This Ziegfeld Girl was not as big of a star as Ann Pennington, but she is one of my favorites due to her beautiful and haunting photographs. Also, because she died so young at age 21.












There isn't a whole lot of information about Myrna out there. I don't even know her birth date or where she was born, although my first guess would be around Pennsylvania. Or even if Myrna Darby was her birth name.






Her father worked for a railroad company. She had an older sister named Helen, and a younger sister Donna. She also had a younger brother named Lloyd.


She was discovered by Florenz Ziegfeld while performing in Pittsburgh at age 17.


She appeared in the Ziegfeld productions of Follies of 1927, Rio Rita, No Foolin', Rosalie, and Whoopee.





Myrna shared a dressing room with fellow Ziegfeld beauties, Hazel Forbes and Catherine Moylan. Evelyn Groves, another Ziegfeld girl was a close friend of Myrna's and was at her bedside when she passed away.


I have also heard different accounts as to how she died: the flu, sunburn, exhaustion, a heart condition, heartbreak, etc.


According to a New York newspaper, Myrna was worn out from a day of swimming and was also heartbroken after her engagement to a millionaire's son was called off. Her heart had been giving her troubles for the preceding months too according to Ziegfeld. Eventually it got to the point where there wasn't much they could do to help her.












Apparently many of the rich and well to do (mostly men) who were fans of hers gave money to help get her the best medical care available. Larry Fay, a well known rum runner, shelled out quite a lot of money and even paid for her funeral. He only met Myrna once, but was so taken with her that he wanted to help anyway he could.


Almost a year after she died, her name was dragged through the mud in the divorce papers of a Miles O. Rabinowitz. She was named as one of his "companions." Other Ziegfeld girls named were: Catherine Moylan, Evelyn Groves, and Peggy Blake.


Supposedly she is buried in Woodlawn Cemetery in the Bronx, New York, but I can't confirm that at this time.






Here are some sweet things some of Myrna's friends had to say about her:


"She was one of the nicest girls who ever came in a stags door, she was. She was good to me.. She was good to everybody. She always divided up her flowers and candy. When she came back from Europe last summer, she brought every one of us a present. She minded her own business and cut no capers." ~ Harry Mitchell, stagehand at Ziegfeld theatre.


"Sure, I paid her bills. I paid them because I liked her. I only met her once. I talked to her a couple minutes in a nightclub. She looked swell that night. She was the sweetest and prettiest girl I ever met—and I’ve met plenty. I never met her again until I heard she was sick and broke." ~ Larry Fay


“She was a swell girl, and damned lucky with the men. She was the most unsophisticated girl I ever saw. And she was just as nice to the street cleaner as she was to the richest guy around the place.” ~ Hazel Forbes




A beautiful picture of (L to R) Jean Ackerman, Jeanne Audree, Myrna, and Evelyn Groves

POSTED BY JESSICA WAHL AT 8:14 PM 

3 COMMENTS:


NAN752December 31, 2011 at 7:18 AM

This is a wonderful site! I love it! My husband and I had the good fortune to watch 'The Great Ziegfeld' 1936 with William Powell the other night. I hadn't seen it in a long time and it got me thinking about that whole era in show business so I started checking out different people from that time and landed here. A happy historical landing! I hope you keep this site going! :-)


Reply


Jessica WahlJanuary 1, 2012 at 3:05 PM

Oh thank you Nan! Being able to discuss silent film/Follies with other people who love them is so wonderful, I love everyone of you that comes and reads this. I love that movie! And William Powell is just wonderful! You should see "Ziegfeld Girl" it is a cute one with Hedy Lamarr, Lana Turner, and Judy Garland.


Reply


Susi ReynoldsAugust 3, 2015 at 10:45 AM

Myrna Darby was born on April 10, 1908 in Connellsville, Pennsylvania. She died on September 26, 1929 in Manhattan, New York. She is buried at the Woodlawn Cemetery in the Bronx, New York.


Reply



Tuesday, 8 January 2019

S.W.R.D.BANDARANAIKE , I ST PRIME MINISTER OF CEYLON 1899 JANUARY 8-1959 SEPTEMBER 26




S.W.R.D.BANDARANAIKE ,
I ST PRIME MINISTER OF CEYLON
1899 JANUARY 8-1959 SEPTEMBER 26



சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா (ஆங்கிலம்:Solomon West Ridgeway Dias Bandaranaike, சிங்களம்: සොලමන් වෙස්ට් රිජ්වේ ඩයස් බණ්ඩාරනායක, சுருக்கமாக, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, S. W. R. D. Bandaranaike, ஜனவரி 8, 1899 - செப்டெம்பர் 26, 1959) இலங்கையின் நான்காவது பிரதமர் ஆவர். இவர் பிரதமராக பதவி வகித்த போது பௌத்த பிக்கு ஒருவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

குடும்பம்

பிறப்பால் பண்டாரநாயக்கா ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராவார். இவரது மூதாதையர் கண்டியை ஆண்ட தெலுங்கு கண்டி நாயக்கர் வம்சத்தை சார்ந்தவர்.சர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க இவரது தந்தையாவார். சிறுவயதில் ஏற்பட்ட நோய்கள் காரணமாக பாடசாலை செல்லாத இவர் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்றார். 15 வயதில் பாடசாலை செல்லத் தொடங்னார். பின்னர் இங்கிலாந்தின் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் சட்டத்தரணியாகக் கல்வி கற்று முடித்த பின்னர் இலங்கை அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். பண்டாரநாயக்க இலங்கையில் அரசியல் செல்வாக்கு மிகுந்து காணப்பட்ட இரத்வத்தை பரம்பரையைச் சேர்ந்த சிறிமாவோ திருமணம் செய்துக் கொண்டார். தனது கணவரின் மரணத்துக்குப் பின்னர் சிறிமாவோ கணவரின் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்றதன் மூலம் உலகின் முதல் பெண் பிரதமரானார்.[1] இவர் இலங்கையின் பிரதமரும் அதிபருமான சந்திரிகா குமாரத்துங்க, அனுரா பண்டாரநாயக்கா மற்றும் சுனேத்திரா பண்டாரநாயக்காவின் தகப்பனாரும் ஆவர்.

அரசியல் வாழ்க்கை

பண்டாரநாயக்கா ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராகப் பிறந்தபோதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் பௌத்தராகவே அடையாளம் காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியில் 1931 முதல் 1951 வரை இணைந்த இவர் பல்வேறு பதவிகளை வகித்தார். இவர் 1951 இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக இலங்கை சுதந்திரக் கட்சியினைத் தோற்றுவித்தார்.

1956 இல் பிரதமராகிய பண்டாரநாயக்கா இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்த ஆங்கிலத்தை இல்லாதொழித்து சிங்களத்தை மாத்திரமே அதிகாரப்பூர்வ மொழியாக்கினார்.

கொலை
தனது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஞானசார பௌத்த பிக்குவால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மரணச் சடங்குகள் கிறிஸ்தவ முறையிலேயே இடம்பெற்றன.

விட்டுச் சென்றவை

1950 இன் நடுப்பகுதியில் தமிழைப் புறக்கணித்து தனிச் சிங்கள கோட்பாடுகளைக் கையாண்டனர். இதுவே இலங்கை இனப்பிரச்சினைக்கு முதல்வித்தாக அமைந்தது எனபது இப்போது பலரும் ஏற்றுக் கொள்ளும் கருத்தாகும். தனிச் சிங்கள சட்டத்தால் தமிழ்ப் பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மையை நீக்கும் நோக்குடன் செய்யப்பட்ட பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தத்தையும் பௌத்த பிக்குகளினதும் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவினதும் போராட்டங்கள் காரணமாக கிழித்தெறிந்தார்.[2] இதன் மூலம் நாட்டின் தலைமை சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு தலை குனியும் நிலைமையை உருவாக்கியவர் இவராகவே கருதப்படுகிறார்.[

இலங்கையின் முதலாவது அரசியல் கொலை

1983ம் ஆண்டில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி அடக்கு முறை அரசாங்கம் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உதாசீனம் செய்து அவர்களை இராணுவப் பலத்தையும் தங்கள் கட்சி குண்டர்களை முடுக்கி விட்டும் அடக்கி அடிமைகளாக வைத்திருப்பதற்கு எடுத்த சட்ட விரோத முயற்சிகளின் பக்க விளைவாகவே இலங்கையில் பயங்கரவாத யுத்தம் தோன்றியது.

1983ம் ஆண்டில் கறுப்பு ஜுலை இனக்கலவரம் இலங்கை சிறுபான்மையோரை அழிக்கும் ஒரு நாடு என்ற தப்பான உணர்வை உலக நாடுகளில் ஏற்படுத்துவதற்கு ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான அதிகார துஷ்பிரயோகமே பிரதான காரணமாகும். இந்த பயங்கரவாத வன்முறைகளினால் நூற்றுணக்கான தமிழ் சிங்கள முஸ்லிம் அரசியல்வாதிகள் பயங்கரவாதிகளின் கண்மூடித் தனமான துப்பாக்கிப் பிரயோகத்தினால் உயிர் இழந்தனர்.

இந்தப் பின்னணியில் இற்றைக்கு 55 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற முதலாவது அரசியல் படுகொலை பற்றிய விபரங்களை உங்களுக்கு எடுத்துரைப்பது பொருத்தமாக இருக்கும். 1959ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25ம் திகதியன்று சரியாக 55 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் உண்மையான மக்கள் ஆட்சியை மலரச் செய்த பெருமைக்குரிய பிரதம மந்திரியாக விளங்கிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா காவி உடை அணிந்த ஒரு மனிதனால் அன்னாரது தனிப்பட்ட இல்லமான பான்ஸ் பிளேஸ் இல்லத்தில் வைத்து ரிவோல்வர் என்ற சுழல் கைத்துப்பாக்கியினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிரதம மந்திரி பண்டாரநாயக்கவை சோமாராம தேரர் என்ற பெளத்த பிக்குவே சுழல் துப்பாகியினால் சுட்டார். உடனடியாக பிரதம மந்திரி அருகில் உள்ள கொழும்பு பெரியாஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அன்று இலங்கை பெரியாஸ்பத்திரியில் பிரதம சத்திர சிகிச்சை நிபுணராக இருந்த டாக்டர் பி.ஆர்.அன்தனீஸ் உடனடியாக இருதய சத்திரசிகிச்சை செய்து அவரது உயிர் பிரிவதை தற்காலிகமாக தடுத்து நிறுத்தினார்.

ஒரு சந்தர்ப்பத்தில் பிரதம மந்திரி பண்டா ரநாயக்காவின் இதயத்துடிப்பு நின்றுவிட்டது. இதனால் டாக்டர் அந்தனீஸ் பதற்றப்படாமல் தனது கையினால் பிரதம மந்திரியின் இதயத்தை மசாஜ் செய்து அதனை மீண்டும் இயங்க வைத்தார். முதல் நாள் முற்பகல் 10 மணியளவில் பிரதம மந்திரி மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்ட போதிலும் அவர் மறுநாள் காலை வரை உயி ரோடு இருந்து மறுநாள் காலை 8 மணியளவிலேயே அவரது உயிர் பிரிந்தது. இலங்கையின் முதலாவது முதலாளித்துவக் கொள்கையுடன் பதவிக்கு வந்த திரு. டி.எஸ். சேனநாயக்காவை பிரதம மந்திரியாகக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் திரு. பண்டாரநாயக்க ஒரு சிரேஷ்ட அமைச்சராக இருந்தார்.

டி.எஸ்.சேனநாயக்காவுக்கு அடுத்தபடியாக பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்வதற்கு சகல தகுதிகளையும் திரு. எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்காவே பெற்றிருந்தார். இந்தக் கால கட்டத்தில் சமதர்ம வாதத்தை பின்பற்றும் நம்நாட்டு தேசிய வாதியான திரு. எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியில் தான் தொடர்ந்தும் இருந்தால் இந்நாட்டு பாட்டாளி மக்களுக்கு விமோசனம் கிடைக்காது என்ற நோக்கத்துடன் தமது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்து எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டார். எதிர்க்கட்சியில் உள்ள முற்போக்குக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் பிலிப் குணவர்தன, டாக்டர் டபிள்யூ.தஹாநாயக்க ஆகியோரை இணைத்துக் கொண்டு அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஏற்படுத்தி மக்கள் ஐக்கிய முன்னணி என்ற அமைப்பின் கீழ் 1956ம் ஆண்டின் பொதுத் தேர்தலில் போட்டியிட்டார்.

பஞ்ச மகா சக்தியான மகா சங்கத்தினர், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், சுதேச வைத்தியர்கள் ஆகியோரை ஒன்றிணைத்துக் கொண்டு போட்டியிட்ட திரு. பண்டாரநாயக்கா மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கம் பெரும்பான்மை வாக்குகளுடன் 1956ம் ஆண்டு தேர்தலில் வெற்றியீட்டியது. அதையடுத்து பண்டாரநாயக்க ஒரு பெரும் தவறை இழைத்தார். 24 மணித்தியாலங்களுக்குள் சிங்களம் மாத்திரம் சட்டத்தை அமுலாக்குவேன் என்று அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதனால் தமிழ், முஸ்லிம் மக்கள் அவரது அரசாங்கத்தின் மீது வைத்திருந்த அசையாத நம்பிக்கை தளர்ச்சி அடைந்தது.

தமிழ் மக்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்பதற்காக அவர் அடுத்தபடியாக தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தை அழைத்து அதிகார பரவலாக்கல் ஒப்பந்தம் ஒன்றை அவருடன் செய்து கொண்டார். அந்த அதிகார பரவலாக்கல் ஒப்பந்தம் இப்போது இருப்பது போன்று மாகாண சபைகளாகவோ, மாவட்ட சபைகளாகவோ இருக்கவில்லை. கிராம சபைகளை விட சற்று கூடுதலான அதிகாரத்தை உடைய பிரதேச சபைகளை விட சற்று கூடுதலான அதிகாரத்தை உடைய பிரதேச சபைகளே இவ் ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்படவிருந்தது. அன்று அரசியல் அதிகாரத்தில் கொடிகட்டிப் பறந்த பெளத்த பிக்குமார் பண்டா - செல்வநாயகம் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை கிழித்தெறிவதற்கு இடமளிக்காமல் இருந்திருந்தால் இலங்கையில் பயங்கர வாதமோ வன் முறையோ பிரிவினை வாதமோ நிச்சயம் ஏற்பட்டி ருக்காது.

பெளத்த பிக்கு மார்களின் எதிர்ப்பை பார்த்து அஞ்சிய பிரதம மந்திரி எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கா தான் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை தன்னிச் சையாக கிழித்து எறிந்தார். இந்த சம்பவம் இலங்கையின் வரலாற்றில் இரத்தக் கறை படிந்ததாக அமைந்தது. இந்த சம்பவத்துடன் பிரதம மந்திரி பண்டாரநாயக்காவுக்கு பெளத்த மகா சங்கத்தினரின் அழுத்தங்கள் அதிகரித்தது. இதனால் களனி மகா விகாரையின் விகாராதிபதியாக இருந்த சங்கைக்குரிய புத்த ரகித தேரரின் தூண்டுதலின் பேரில் சோமாராம தேரர் திரு.பண்டாரநாயக்காவை அவரது இல்லத்துக்கு வந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் என்று நீதிமன்றத்தில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் துப்பாக்கியால் சுட்ட வணக்கத்துக்குரிய தல்துவ சோமாராம தேரருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அவர் ஒரு கத்தோலிக்கராக மாறி பீட்டர் என்ற பெயரில் தைரியமாக தூக்கு மேடையில் ஏறி மரணித்தார். இந்த கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்ட புத்த ரகித தேரர் சிறையில் வைக்கப்பட்டு 1963ம் ஆண்டில் சிறைக்கைதியாக இருந்த போது அங்கு மரணமானார்.

திரு. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் கொலை பற்றிய விரிவான விபரங்களை இப்போது தருகிறோம். தல்துவ சோமாராம தேரர் பொரளையில் உள்ள அரசாங்க ஆயுர்வேத வைத்தியசாலையில் ஒரு விரிவுரையாளராக இருந்தார். இவர் அமர விகாரையில் தங்கியிருந்தார்.

(தொடரும்...)

இவருக்கு பொரளையில் ஆயுர்வேத கண் சிகிச்சை நிலையம் ஒன்றும் இருந்தது. இவர் பிரதம மந்திரியை சந்தித்து ஆயுர்வேத கல்லூரி எதிர்நோக்கியிருக்கும் கஷ்டங்களை நிவர்த்தி செய்வதற்கு அவரது உதவியை நாட விரும்பினார். 1915ம் ஆண்டில் தல்துவ ரத்துகம ராலகே வேரிஸ் சிஞ்சோ என்ற பெயரில் சோமாராம தேரர் 1915ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி பிறந்தார்.

இவரது தந்தையின் பெயர் ரத்துமக ராலகே டேலிஸ் அப்புவாமி தாயாரின் பெயர் இசோ ஆமி. சோமாராம தேரர் தல்துவ இயல பாடசாலையிலும் தெஹியோவிட்ட பாடசாலையிலும் ஆரம்ப கல்வியை பெற்றார். 1929ம் ஆண்டு ஜனவரி 20ம் திகதி சாதாரண மனிதராக இருந்த இவர் தனது 14வது வயதில் கண்டியில் துறவறம் பூண்டார்.

பிரதம மந்திரி பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்ட தினத்தன்று காலையில் அவர் தனது ரோஸ்மிட் பிளேஸ் இல்லத்தின் முன்விராந்தையில் அமர்ந்து தன்னை சந்திக்க வருபவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். விராந்தைக்குள் ஒரு சிலரே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் பேசி முடிந்த பின்னரே மற்றவர்கள் விராந்தைக்குள் அனுமதிக்கப் பட்டனர். சோமாராம தேரரும் அமைதியாக தனது சந்தர்ப்பம் கிடைக்கும் வரை காத்திருந்தார்.

பிரதம மந்திரி பண்டாரநாயக்க நம் நாட்டு மக்கள் அவரது அரசாங்கத்தைப் பார்த்து எங்கள் அரசாங்கம் என்று அழைப்பதைக் கேட்டு மகிழ்ச்சி அடைவார். சோமாராம தேரரின் வலது பக்கத்தில் இன்னுமொரு பெளத்த பிக்கு அமர்ந்திருந்தார். இவர் பொலன்னறுவையைச் சேர்ந்த ஆனந்த தேரர் என்பவராவார். தன்னை சந்திக்க வரும் தேரர்களைப் பார்த்தவுடன் பண்டாரநாயக்க அவர்கள் எழுந்து அவருக்கு வணக்கம் தெரிவித்து அமர்ந்து கொள்வார். உங்களுக்கு என்னால் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று பிரதம மந்திரி கேட்ட போது சோமாராம தேரர் சற்று பதற்றமாக இருந்ததாக அவருக்கு அருகில் இருந்த ஆனந்த தேரர் பொலிஸாருக்கு அறிவித்தார்.

ஆயுர்வேத கல்லூரிக்கு சில உதவிகளைச் செய்ய வேண்டும் என்று சோமாராம தேரர் கூறிய போது அது ஒரு சின்ன விசயம். நான் சுகாதார அமைச்சர் ஏ.பி.ஜயசூரியவுக்குக் கூறி அந்த உதவியை உங்களுக்கு செய்து தருகிறேன் என்று சொன்னார். அப்போது நேரம் காலை 9.45 தனது கையில் இருந்த பைலை திறந்து ஏதோ தேடுவதைப் போன்று அவர் இருந்ததாக ஆனந்த தேரர் கூறுகிறார். அந்த சந்தர்ப்பத்தில் சோமாராம தேரர் தனது காவி உடையில் மறைத்து வைத்திருந்த சுழல் கைத்துப்பாக்கியை வெளியில் எடுத்து பண்டாரநாயக்காவின் நெஞ்சுப் பகுதியில் வயிற்றிலும் மிக அருகில் இருந்தவாறு சுட்டார். பலத்து சத்தத்துடன் பண்டாரநாயக்கா அப்படியே கீழே சாய்ந்தார்.

பின்னர் மிகவும் கஷ்டப்பட்டு எழுந்து தனது அறைக்குள் செல்ல எத்தனித்தார். இந்த சந்தர்ப்பத்தில் சோமாராம தேரர் ஆனந்த தேரோவை நோக்கி கைத்துப்பாக்கியை நீட்டிய போது அவர் அம்மோ என்று பயந்து அலறி ஓடினார். பிரதம மந்திரியை விரட்டிச் சென்ற சோமாராம தேரர் மேலும் நான்கு தடவை சுட்டார். அதில் ஒரு குண்டு பிரதம மந்திரியின் கையை காயப்படுத்தியது. இன்னுமொரு குண்டு பிரதம மந்திரியை பார்க்க வந்திருந்த ஆசிரியர் குணரத்னவையும் காயப்படுத்தியது. மூன்றாவது குண்டு அங்கிருந்த கண்ணாடி ஜன்னலை உடைத்து நொறுக்கியது. நான்காவது குண்டு வராந்தாவில் இருந்த மலர் ஜாடியை சுட்டு தகர்த்தது.

இவ்விதம் தனது சுழல் துப்பாக்கியில் இருந்த 6 குண்டுகளையும் சோமாராம தேரர் சுட்டுத் தீர்த்தார். துப்பாக்கிச் சூடு கேட்டு அந்த வீட்டின் முற்றத்தில் இருந்தவர்கள் ஓட ஆரம்பித்தனர். இந்த நேரத்தை வீணாக்காமல் வெளியில் சென்ற ஆனந்த தேரர் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரிடம் பிரதம மந்திரியை ஒரு பெளத்த பிக்கு சுடுகிறார் என்று கூறினார்.

அதைக்கேட்டு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் சோமாராமரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தார் அந்த குண்டு அவரது தொடையில் பட்டு காயப்படுத்தியது. தன்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டவர்களைப் பார்த்து ஆவேசமடைந்த நிலையில் நான் நாட்டையும், சிங்கள இனத்தையும், பெளத்த மதத்தையும் காப்பாற்றுவதற்காகவே பிரதம மந்திரி மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தேன் என்று கூறினார்.

Friday, 11 May 2018

VAISHALI DHANIKA SERIAL ACTRESS TURNED TO MOVIE ACTRESS BORN 1994 SEPTEMBER 26







VAISHALI DHANIKA SERIAL ACTRESS TURNED TO 
MOVIE ACTRESS BORN 1994 SEPTEMBER 26



சென்னை : விஜய் டி.வி-யின் டாப் சீரியல்களில் ஒன்றான 'ராஜா ராணி'யில் ஹீரோ சஞ்சீவின் தங்கையாக நடித்து வருபவர் வைஷாலி தனிகா. BORN 1994 SEPTEMBER 26

'மாப்பிள்ளை' சீரியலில் ஶ்ரீஜாவின் தங்கையாக நடித்தவர். விஜய் நடித்த 'பைரவா', சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ', பிரபுதேவா நடித்த 'யங் மங் சங்' ஆகிய படங்களில் நடித்தவர் தற்போதும் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் பிஸியாக இருக்கிறார். சினிமா, சீரியல் என அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் பிஸியாக இருப்பவரிடம் ஷூட்டிங் கேப்பில் பேசினோம். ஒன் இந்தியா வாசகர்களுக்காக வைஷாலி தனிகா பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே..


இப்போ என்னென்ன படங்கள்ல நடிச்சிட்டு இருக்கீங்க?
"சிவகார்த்திகேயனின் 'சீமராஜா', விஜய்யின் 62-வது படம் ஆகிய படங்கள்ல நடிச்சிக்கிட்டு இருக்கேன். ரெண்டுமே பெரிய படம். என்னோட சினிமா கரியர் ரொம்ப நல்லா போகுது. ஏற்கெனவே, 'பைரவா' படத்துல நடிச்சிருந்தாலும் அப்போ விஜய் சார் கூட சீன் இல்லை. இப்போ அவர் கூட எனக்கு சீன் இருக்கு. அவர் கூட நடிச்சது நல்ல எக்ஸ்பீரியன்ஸ். 'சீமராஜா' ஷூட்டிங் பத்தி சொல்லவே வேண்டாம். சிவகார்த்திகேயனும், சமந்தாவும் வேற லெவல். இந்தப் படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடிக்கிறேன். நெக்ஸ்ட் ப்ராஜெக்ட் இப்போதான் பேசிட்டு இருக்கேன். ஜீவா படம் பண்ணுவேன்னு நினைக்கிறேன்."

விஜய் கூட நடிக்கிறது பற்றி? 

"விஜய் சார் ரொம்ப நல்ல மனிதர். 'விஜய் 62' டீமும் சிறப்பான டீம். ஏ.ஆர்.முருகதாஸ் சார், விஜய் ரெண்டு பேருமே ரொம்ப நல்லா கைடு பண்றாங்க. விஜய் சார் என்னை நல்லா பண்றமான்னு அப்ரிஷியேட் பண்ணாரு. பெரிய ஸ்டார் வந்து இதையெல்லாம் என்கிட்ட சொல்லணும்னு அவசியமில்லை. ஆனா, இவர் என்கரேஜ் பண்றது செம்ம. நாம டென்ஷன் ஆகிடப்போறோமோன்னு அந்த சிச்சுவேஷனை கூல் பண்றதுக்காக ஃப்ரீயா பேசுவார். ஹீ இஸ் வெரி நைஸ்."

சீரியல் நடிப்பு எப்படி போய்க்கிட்ருக்கு?

"சீரியல் நடிப்பும் சிறப்பா போய்க்கிட்டு இருக்கு. நல்லா ஃபேமிலி மாதிரி என்ஜாய் பண்ணி பண்ணிட்ருக்கேன். 'மாப்பிள்ளை' சிரியலில் வில்லி கேரக்டர் பண்ணேன். ஜீ தமிழ்ல 'லட்சுமி வந்தாச்சு' சீரியல்ல ஹீரோவுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் அவரை லவ் பண்ற பொண்ணு ரோல். முதலில் தயங்கினாலும், இதுவும் இரு கேரக்டர் தானேன்னு நடிச்சேன். நல்ல ரீச் கிடைச்சது. இப்போதைக்கு 'ராஜா ராணி' மட்டும் தான் பண்றேன். நடிக்கிறோம்னே டென்ஷன் இல்லாம எல்லோருமே ஜாலியா கூலா ஆக்ட் பண்ணுவோம்."


சினிமா - சீரியல்.. ரெண்டுக்குக்கும் இடையே நீங்க உணரும் வித்தியாசம்? 


"சினிமாவும் சீரியலும் மொத்தமா வேற வேற. இது ரெண்டையும் என்னால கம்பேர் பண்ணமுடியலை. சினிமாவில் ஒரு நாளைக்கு ஒண்ணு ரெண்டு சீன் தான் எடுப்பாங்க. நிறைய டைம் இருக்கும். எடுக்கிற விதம் வேற. சீரியல்ல நிறைய சீன்ஸ் எடுப்பாங்க. மத்தபடி பெரிய வித்தியாசம் இல்ல. ஏன்னா விஜய் டி.வி-யும் இப்போ சினிமா லெவலுக்கு வந்துட்டாங்க. இதுவும் பெரிய பிளாட்ஃபார்ம் ஆகிட்ருக்கு. ரெண்டுமே என்னோட கரியர்ங்கிறதால சந்தோஷமா பண்றேன்."


வெப் சீரிஸ் நடிக்கும் வாய்ப்பு எதுவும் வந்ததா? 

"வெப் சீரியல் நடிக்க சான்ஸ் வந்துருக்கு. ஆனா, நான் கமிட் ஆகலை. வெப் சீரிஸ்ல நடிக்கக்கூடாதுனு லாம் இல்லை. எனக்கு தொடர்ச்சியா ஷூட் இருக்கிறதால இப்போதைக்கு கமிட் ஆக முடியலை. இனிமே, நல்ல ஸ்கிரிப்ட்டோட வெப் சீரியல் சான்ஸ் வந்துச்சுனா, ஷூட்டிங் டேட்ஸ் ஒத்து வந்துச்சுனா கண்டிப்பா பண்ணலாம்."

காதல்? 

"சத்யா கூட ஸ்கூல்ல படிக்கும்போதுல இருந்தே பழக்கம். +1 படிக்கும்போதுல இருந்து எட்டு வருஷமா லவ். ரெண்டு பேரும் ஸ்கூல்ல பக்கத்து பக்கத்து கிளாஸ். ஃப்ரெண்ட்ஸ் ஆகி, காலேஜ் போனதுக்கு அப்புறம் லவ் ப்ரொபோஸ் பண்ணி இப்போ என்கேஜ்மென்ட் வரைக்கும் வந்திருக்கோம். அவர் மரைன் என்ஜினியர். வாழ்க்கையில் ரெண்டு பேருக்குமே அவங்கவங்க ஃபீல்டுல சில குறிக்கோள்கள் இருக்கு. ரெண்டு பேருக்கும் இன்னும் ரெண்டு வருஷம் டைம் வேணும்னு கேட்ருக்கோம்."

நடிக்கும் ஆசை வந்தது எப்படி?



"எனக்கு சின்ன வயசுல இருந்து நடிக்கிறதுல ரொம்ப ஆர்வம். குட்டிப் பொண்ணா இருக்கும்போதே டி.வி பார்த்து டான்ஸ் ஆக்டிங்லாம் பண்ணுவேன். சின்ன வயசுல ஆஃபர் வந்துச்சு. ஆனா, அப்போ வீட்டுல என்னை நடிக்க விடலை. ஏன்னா, எங்க சரவுண்டிங்லயே யாரும் சினிமா பக்கம் இல்லை. நடிச்சா படிப்பு பாதிக்கும்னு முடியவே முடியாதுன்னுட்டாங்க. என்ஜினியரிங் படிக்கும்போது படிப்பு பாதிக்காதுன்னு பிராமிஸ் பண்ணி நடிக்க சம்மதம் வாங்கினேன். அதே மாதிரி டிகிரியை முடிச்சதும் என் ஃபேமிலி என் நடிப்பு ஆசைக்கு ஃபுல் சப்போர்ட் கொடுக்குறாங்க." மகிழ்ச்சியாகப் பேசி முடித்தார் வைஷாலி தனிகா.