Showing posts with label CEYLON. Show all posts
Showing posts with label CEYLON. Show all posts

Sunday, 31 October 2021

HISTORY OF CEYLON TEA

 

HISTORY  OF CEYLON TEA

சிலோன் டீ’ வரலாறும் சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கையின் 55 வருடங்களும்!
இன்றும் கூட தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களாக மலையகத் தமிழர்கள் இல்லை!
History of Ceylon tea, Indian Tamils, Sirima – Shastri pact : 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தென்னிந்தியா முழுவதும் நில உடமை தொடர்பான சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. ராயத்துவரி அமலாக்கப்பட்டது. இங்கிலாந்தின் வளர்ச்சிக்காகவும், ஐரோப்பிய சந்தைகளுக்காகவும் நம்முடைய நிலங்கள் அவர்களுக்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்தது. ஐரோப்பிய சந்தைகளில் பெரிதும் ஆதிக்கம் செலுத்த துவங்கிய பிரிட்டிஷ் தங்களின் காலனி நாடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் தோட்டங்களில் வேலைக்காக ஆட்களை சேர்க்கும் முடிவுக்கு வந்தது.
சந்தைகள் விரிவடையும் போது உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு நிறைய நிலங்களும், அதற்கேற்ற உழைப்பும் ஆங்கிலேயர்களுக்கு தேவைப்பட்டது. உணவுக்கு வழியில்லாத சூழலாலும், சொந்த நிலமற்ற கையறு நிலையிலும் லட்சக்கணக்கான மக்கள் திண்டாடிக் கொண்டிருந்தனர். மக்களின் சூழ்நிலையை ஆங்கிலேயர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். “வெளிநாடுகளில் வேலை, மூன்று நேரமும் உணவுக்கு உத்திரவாதம், திரும்பி வரும் போது பெரும் பணக்காரனாக வரலாம்” என்று மூளைச்சலவை செய்வதற்காகவே ஆங்கிலேயர்கள் இடைத்தரகர்களை தேர்வு செய்து அனுப்பினர்.
இலங்கையின் தேயிலைக்காடுகள், பர்மா, மலேசியாவின் ரப்பர்த்தோட்டங்கள், கயானாவின் காஃபித் தோட்டங்கள் என தமிழர்கள் அடிமைகளாக வெளிநாடுகளுக்கு சென்றனர். 24 மணி நேரமும் அவர்களின் வாழ்க்கை மேற்பார்வையிடப்பட்டது. தப்பித்து செல்லும் சூழல் வெளிநாடுகளில் கற்பனைக்கு எட்டாத வகையில் இருந்தது. தென்னிந்திய பஞ்சத்திற்கு முன்பும் இலங்கையில் தமிழர்கள் ஏற்றுமதி, இறக்குமதி, காட்டுவேலைகள், மேம்பாட்டு பணிகளுக்கு சென்றதால், அங்கு குடும்பங்களாக மீண்டும் செல்வதில் அவர்களுக்கு பிரச்சனை ஏதும் இருக்கவில்லை.
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் பண்ணை அடிமைகளில் இருந்து பதவி உயர்வு பெற்று தோட்ட அடிமைகளாக பணி செய்யத் துவங்கினர். இன்றும் கூட அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களாக அம்மக்கள் இல்லை என்று கூறுகிறார் கண்டியை சேர்ந்த புவனேஷ். இணையதளம் ஒன்றின் ஆசிரியராக செயல்பட்டு வருகிறார்.
ஈழத்தமிழர்கள் இந்திய தமிழர்கள்
ஈழத்தமிழர்கள் இலங்கையின் யாழ்பாணத்தை சேர்ந்த அந்நாட்டின் பூர்வ குடிகள். அவர்களுக்கும் மலையில் வாழும் மலையகத் தமிழர்களுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. மலையகத் தமிழர்கள் இன்றளவும் இந்திய வம்சாவளி தமிழர்கள் என்றே அடையாளம் காணப்படுகிறார்கள். “தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலருக்கும் இந்த வித்தியாசங்கள் புரிவதில்லை. ஈழப்பிரச்சனைகள் கூட பெரும்பாலும் அரசியல் நோக்கத்துக்காகவும், வெறுப்பரசியலை ஊக்குவிக்கவும் தான் பயன்பட்டது. மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட மலையக மக்களின் பிரச்சனைகளைக் காட்டிலும் ஈழத்து பிரச்சனை வீரியமாக இருக்கும் என்று அவர்கள் யோசித்திருக்க கூடும்” என மட்டக்களப்பை சேர்ந்த ரக்‌ஷனா நம்மிடம் அறிவித்தார்.
இதற்கான தேடலை நீங்கள் தான் தொடர வேண்டும் என திரிகோணமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முரளிதரன் அறிவிக்கிறார்.
இலங்கையும் காஃபி விவசாயமும்
ஆரம்பத்தில் இலங்கையின் கண்டி, அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 1820 – 1880 காலங்களில் காஃபி பயிரட்டப்பட்டது. காஃபிக்கு முழுக்காடுகளையும் அழிக்க வேண்டியதில்லை. அடியில் இருக்கும் புதர்களை மட்டும் அழித்து 1849 வரையான 29 ஆண்டுகளில் 65 ஆயிரம் ஏக்கரில் காஃபி பயிரடப்பட்டது. காஃபியின் தேவை அதிகரிக்க அதற்காக அழிக்கப்படும் எண்ணிக்கையும், அந்த பணியில் அமர்த்தப்படுவதற்காக தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகம் தேவைப்பட்டது. 1868 ஆண்டின் முடிவில் இலங்கையில் சுமார் 2,75,000 ஏக்கர் அளவில் காஃபி பயிரிடப்பட்டது.
இலங்கையில் குடியேறிய தமிழர்கள்
தென்னிந்தியாவில் இருந்து இலங்கை சென்ற மக்களில் பலர் மன்னார் துறைமுகத்தில் இறங்கி கண்டி மலைக்காடுகள் வரை நடந்தே சென்றுள்ளனர். கண்டி, வத்தேகம, மடுல்கல, இரங்கல, கலகா, ஹேவாஎட்ட, கம்பொல, மாத்தளை, பேராதெனிய, பள்ளேகல ஆகிய இடங்களில் மக்கள் குடியேறினர். காஃபி பயிர்களின் உற்பத்தி அதிகரிக்க மக்கள் நாவலப்பிட்டி, கினிகஸ்த்தென்ன, கொத்மல, தலவாகெல, நுவரெலியா, அட்டன், ஊவா மாகாணங்களில் பின்னர் குடியேறினர். இந்த குடியேற்றங்கள் 1830 முதல் 1840 வரை நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து வந்த மக்கள் காடுகளை காஃபி தோட்டங்களாக மாற்றினார்கள். அதற்கு அவர்கள் கொடுத்த உழைப்பு மிகவும் அளப்பரியது. ஆனாலும் காஃபி பயிர்களில் நோய் தொற்றுகள் உருவாக காஃபி பயிரிடுதல் முடிவுக்கு வந்தது.
இலங்கைக்கு முன்பே இந்தியாவின் அசாம் பகுதியில் தேயிலைகள் பயிரிடப்பட்டு, வெற்றிகரமாக வளர்க்கப்பட்டது. காஃபியின் சாம்ராஜ்ஜியம் முடிவடைய தேயிலை அந்த இடத்தை பிடித்துக் கொண்டது. அடிக்காட்டினை அழிப்பது மட்டும் தற்போது வேலையில்லை. மொத்த காட்டினையும் அழித்து, தேயிலை பயிருக்கான நிலம் உருவாக்கப்பட்டது. தேயிலைத் தோட்டங்களில் மக்கள் வாழ லேன்களை அமைப்பது, பறிக்கப்பட்ட தேயிலையை தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்ல சாலைகளை அமைப்பது, தேயிலையை தூளாக மாற்ற கருவிகளை இயக்குவது, உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைத்தூளை சந்தைப்படுத்துவது, துறைமுகங்களுக்கு அனுப்பவது என அனைத்தையும் மக்கள் செய்தனர்.
History of Ceylon tea, Indian Tamils, Sirima - Shastri pact
கோத்தகிரி குயின் சோலா தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை… Express Photo by Nithya Pandian
1860-ம் ஆண்டு கண்டியின் நூல் கந்துலாவின் லிப்டன் தேயிலைக்காட்டில் ஜேம்ஸ் டெய்லர் என்பவரால் இலங்கையின் புகழ்பெற்ற ‘சிலோன் டீ’ முதன்முறையாக உற்பத்தி செய்யப்பட்டது. இலங்கையில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு இருந்தது. சிலோன் டீ என்ற பெயர் நிலைத்துவிட்டது. இலங்கை பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை சிலோன் டீ உருவாக்கியது என்றால் அது மிகையாகாது. 1914ம் ஆண்டில் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் மதிப்பு ரூ. 90 மில்லியன் ஆகும். அடுத்த ஆண்டில் ரூ. 122 மில்லியன் என்ற அபரீதமான இலக்கை அவர்களின் பொருளாதாரம் எட்டியது. இலங்கையின் மக்கள் தொகையில் இவர்கள் வெறும் 5%-த்தினர் மட்டுமே. ஆனால் இவர்களால் இலங்கை பொருளாதாரத்தில் 100 கோடி டாலர்கள் வருமானத்தை பெற்றுத்தரும் முக்கிய அங்கமாக செயல்படுகிறார்கள்.
“மக்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வெளியேற்றப்படுவார்கள் என்ற நிலை இன்று இல்லை. அவர்கள் அனைவரும் குடியுரிமை பெற்றவர்கள். ஆனாலும் அவர்களுக்கு சொந்தமாக நிலமோ வீடுகளோ கிடையாது. தோட்ட நிர்வாகத்தின் கீழ் தான் அனைத்தும் வருகிறது. தோட்டம் கைமாற்றப்படும்போதோ அல்லது விற்கப்படும்போதோ அம்மக்களது நிலங்கள் பறிமுதல் செய்யப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே நாவலப்பிட்டியில் தோட்டமொன்றில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது” என்று முரளிதரன் கூறினார். “அவர்களுக்கான சம்பளம் போதுமானதாக இல்லை” இல்லை என்கிறார் புவனேஷ்.
இலங்கை குடியுரிமைச் சட்டமும் அதன் பின்னணியும்
1948 நவம்பர் 15ம் தேதி இலங்கைக் குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கே திருப்பி அனுப்ப வேண்டுமென்பது முக்கிய அம்சமாகும். 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதிக்கு முன் இலங்கையில் பிறந்திருப்பதுடன் அவருக்கு முந்தைய இரண்டு தலைமுறையினரும் இலங்கையில் பிறந்திருந்தால் மட்டுமே அவரால் இலங்கை குடியுரிமை பெற இயலும்.
அதற்கான காரணங்களாக பார்க்கப்பட்டது தமிழர்களின் எண்ணிக்கை. அவர்கள் தேர்வு செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள். அவர்களின் வாக்கு வங்கிகள், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை மாற்றி அமைக்கும் சக்தியாக இருந்தது. வேறொரு நாட்டைச் சேர்ந்தவர்கள் இது போன்ற அதிகாரத்தை மாற்றும் காரணியாக இருப்பதை சிங்கள அரசு விரும்பவில்லை. இந்திய வம்சாவளித் தமிழர்களை மீண்டும் தாயகம் அனுப்ப இந்தியாவுடன் 1951, 1953, 1954 ஆண்டுகளில் பேச்சுவார்த்தை நடத்தியது ஆனாலும் முடிவு எட்டப்படவில்லை. புதிதாக லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவிலும், சிறிமாவோ பண்டாரநாயக்கே இலங்கையிலும் ஆட்சி அமைத்த போது அக்டோபர் 30, 1964ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அந்த ஒப்பந்தத்தின் படி மலையகத்தில் வசித்த 10 லட்சம் தமிழர்களை நாடற்றவர்கள் என்று அறிவித்தது இலங்கை அரசு. அந்நாட்டில் அவர்கள் குடியுரிமை அற்றவர்களாகவும் வாக்குரிமை அற்றவர்களாகும் நடத்தப்பட்டனர். அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.
ஒப்பந்தத்தின் படி 5 லட்சத்தி 25 ஆயிரம் இந்திய வம்சாவளித் தமிழர்களை இந்தியாவும், 3 லட்சம் தமிழர்களை இலங்கை அரசும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மீதம் இருக்கும் 1.5 லட்சம் நபர்கள் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. நான்கு தமிழர்கள் தாயகம் திரும்பினால் ஒரு தமிழருக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான 20 ஆண்டுகளில் 4,45,519 நபர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். மீதம் இருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் மிகவும் காலம் தாழ்த்தியது இலங்கை அரசு. 1984ம் ஆண்டு உள்நாட்டுப் போர் மிகவும் தீவிரமடைய ராமேஸ்வரம் – தலைமன்னார் பகுதியில் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஒப்பந்தத்தின் படி வெளியேற வேண்டிய தமிழர்கள் பலரும் நாடற்றவர்களாக இலங்கையில் வாழ்ந்து வந்தனர். பின்னர் குடியுரிமை சட்டத்தில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. தனித்தமிழ் ஈழம் அமைப்பதற்கான போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது மலையக தமிழர்களும் அந்த போராட்டத்தில் இணைந்து விடுவதை தடுக்க அவர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து அனைவருக்கும் குடியுரிமை வழங்க முடிவு செய்தது இலங்கை அரசு. 1988ம் ஆண்டு நாடற்றோர் என்ற பதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
ஆனால் சில காலக்கட்டத்தில் மலையக தமிழர்களுக்கு ஈழத்தமிழர்களால் பிரச்சனை ஏற்பட்டது என்பதை நினைவுபடுத்துகிறார் புவனேஷ்.
தமிழகத்திற்கு திரும்பி வந்தவர்கள்
1966ம் ஆண்டு முதல் 1984 ஆண்டுகள் வரை 4,45,519 நபர்கள் தாயகம் திரும்பினார்கள். தேயிலைத் தோட்டங்களில் 2445 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டன. ரப்பர் தோட்டங்களில் 225 குடும்பங்களும், சிங்கோனா வளர்ப்பிற்காக 125 குடும்பங்களும் தங்க வைக்கப்பட்டதாக அரசு அறிவிக்கிறது.
பெரம்பலூரின் துரைமங்கலம், வெங்கலம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து தங்க வைக்கப்பட்டனர். திருச்சியின் துவாக்குடி தென்மலை, திருச்சி நகரம், கரூரின் வெள்ளாளப்பட்டி, பெரியார் நகர், மணப்பாறையின் வேம்பனூர் காலனி, துறையூரின் சிறு நத்தம், முசிறி, ஜெயங்குண்டம், நாமக்கல் போன்ற பகுதியில் குடியேறினர். ஏற்காட்டின் கிளிப்டன் தோட்டம், ஆதியார் தோட்டம், சோமசுந்தரம் தோட்டம், கிரே தோட்டம் , நீலகிரி கூடலூரில் நெல்லியாளம் டீ எஸ்டேட், சேரங்கோடு தேயிலைத் தோட்டம், சின்கோனா சேரங்கோடு, பந்தலூர், தேவாலா, நந்தட்டி, உதகையின் பார்சன் வேலி, சுனோ டவுன், தலையட்டு மந்து மற்றும் கோத்தகிரியின் பல்வேறு டீ எஸ்டேட்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
இன்றைய மலையக தமிழர்கள் நிலை
அரசியலில் மலையகத் தமிழர்களின் பங்கீடு குறித்து முரளிதரனிடம் கேள்வி எழுப்பிய போது “நாட்டின் ஏனைய பகுதிகளின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைவிட மேலதிகமாக பல பிரச்சினைகளை இம்மக்கள் எதிர்கொள்கிறார்கள். முழுநாட்டுக்குமாக உருவாக்கப்படும் திட்டங்கள், நிர்வாகக்கட்டமைப்புக்கள், கொள்கைகளுள் இவர்கள் உள்வாங்கப்படாத காரணத்தால் இவர்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர். தேசிய தொழிலாளர் கொள்கைக்குள்/ சட்டங்களுக்குள் மலையகத் தோட்டத்தொழிலாளர் உள்வாங்கப்படுவதில்லை. இதேபோன்று கல்விக்கொள்கை, காணிக்கொள்கை, சுகாதார/மருத்துவத்துறையிலும் நிகழ்கிறது. இவை அனைத்தும் தோட்ட நிர்வாகத்தின் கீழ் வருகிறது. மருத்தவர் நியமனம் கூட இவ்வாறு தான். இதனால் மாகாணசபை, உள்ளூராட்சி சபை போன்ற நிர்வாகக் கட்டமைப்புக்களால் தோட்டப்புறத்தில் வாழும் மக்களுக்கு எதுவும் நேரடியாக செய்ய முடிவதில்லை. ஒரே நாட்டுக்குள் தோட்ட நிவாகத்தின் கீழான தனியான மக்களாக இவர்கள் வாழவைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று அம்மக்களின் நிலை குறித்து விவரித்தார்.
வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் இந்தியா திருப்பி அனுப்பப்பட்ட போது அவர்கள் சந்தித்த பிரச்சனைகளை விவரிக்க இயலாது. நம்பி வந்த நாடு திரும்பப் போக கட்டளையிடும் போது நிலைமை மோசமாவதோடு எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப்படுகிறது. தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாத 19 லட்சம் மக்களின் நிலை என்ன ஆகும் என்பதை எதிர்காலம் தான் நமக்கு காட்டும்.
Chandra Bhagawan, Ayyakutty and 2 others
1 Share
Share

Sunday, 4 April 2021

KI LAKSHMANA IYER CEYLON WRITER BORN ,DIED 1990 APRIL 4

 

KI LAKSHMANA IYER CEYLON WRITER

 BORN ,DIED 1990 APRIL 4



" படைப்பாளிகளையும் பத்திரிகையாளர்களையும் கல்வித்துறை சார்ந்த  ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும்                  பதிப்புத்துறையில்  இருப்பவர்களையும் மிரட்டிக்கொண்டிருக்கும் ஒரு  பிசாசு இருக்கிறது. கண்களுக்குத் தெரியும் பிசாசுதான்! ஆனால், எப்படியோ   கண்களுக்குத்தப்பிவிடும்! எங்கே எப்படி காலை வாரிவிடும்  என்பதைச் சொல்லமுடியாது.

  மானநட்ட  வழக்கிற்கும் தள்ளிவிடும் கொடிய இயல்பு இந்தப்பிசாசுக்கு  இருக்கிறது. அதுதான் அச்சுப்பிசாசு. மொழிக்கு ஆபத்துவருவதும்  இந்தப்பிசாசினால்தான். 1990 ஆம் ஆண்டு மறைந்த எங்கள் கல்விமான்  இலக்ஷ்மணன் அய்யாவை நினைக்கும் தருணங்களில் அவர் ஓட ஓட விரட்டிய  இந்த அச்சுப்பிசாசுதான் எள்ளல்  சிரிப்போடு கண்முன்னே  தோன்றுகிறது."

இவ்வாறு சில வருடங்களுக்கு முன்னர் எனக்குத் தெரிந்த இலக்கிய ஆளுமைகள் பற்றிய தொடரில் பெரியார் இலக்‌ஷ்மணன் அவர்களைப்பற்றிய பதிவின் தொடக்கத்தில் எழுதியிருந்தேன்.

அண்மையில் எனக்கு கிடைத்துள்ள  அய்யா எழுதியிருக்கும் "சிப்பிக்குள் முத்து" நூலை படிக்கின்றபோது அவர் நேரில் தோன்றி உரையாற்றுவதுபோன்ற உணர்வுதான் வருகிறது.

இந்த அரிய நூலை அய்யாவின் செல்வப்புதல்வி மங்களம் வாசன் தொகுத்துள்ளார். கடந்த சில வருடங்களாக மங்களம் மேற்கொண்ட அயராத முயற்சி திருவினையாகியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

கி. இலக்‌ஷ்மணன்  அய்யாவின் நூற்றாண்டு காலம் தொடங்கியிருக்கும் இக்காலப்பகுதியில் " சிப்பிக்குள் முத்து" வெளியாகியிருப்பது பெரும் சிறப்பு.

இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளுக்குப் பொருத்தமான  ஓவியங்களை பிரபல ஓவியர் பத்மவாசன் வரைந்துள்ளார். கி.லக்‌ஷ்மணன் அவர்கள் இலங்கை - தமிழக  தமிழ், ஆங்கில இதழ்களிலும் சிறப்பு மலர்களிலும் முன்னர் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பாக  சிப்பிக்குள் முத்து ஒளிர்கின்றது.


இலங்கை தேசிய சுவடிகள் திணைக்களம் மற்றும்  பொது நூலகங்களிலிருந்து தேடி எடுத்த கட்டுரைகளின்  தொகுப்பான இந்நூலில் தமிழ், கல்வி, இலங்கை வாசனை, சமயம், தத்துவம் ஆகிய தலைப்புகளில் 64 கட்டுரைகளும் ஆங்கிலத்தில் 9 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.


வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம  ஆசிரியர் ( அமரர் ) க. சிவப்பிரகாசம், வடமாகாண முன்னாள் முதல்வர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள்( முன்னாள்) அமைச்சர் திரு. டி. எம்.சுவாமிநாதன் (அமரர்கள்) பேராசிரியர் க.கைலாசபதி,   சிரேஷ்ட  சட்டத்தரணி  நீலன் திருச்செல்வம்  ஆகியோர் உட்பட பலர் கொழும்பு றோயல் கல்லூரியில் கற்ற காலத்தில்,  இவர்களின் தமிழ் ஆசிரியராக பணியாற்றியிருக்கும் கி. லக்‌ஷ்மணன் அய்யா அவர்கள்,  தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழியை சரியாகவும் பிழையின்றியும் எழுத வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருப்பவர்.


அவர்  1960 இல் எழுதிய இந்திய தத்துவ ஞானம் நூல் பல பதிப்புகளை கண்டுள்ளதுடன்,  இலங்கை தேசிய சாகித்திய விருதும் தமிழ்நாடு அரசின் விருதும் பெற்றது.


அய்யாவை சதா அவதானி என்றும் அழைக்கமுடியும். அவர் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், ஆவணங்களை மாத்திரம் படிப்பவர் அல்ல. ரயில், பஸ் நிலையங்களிலும் விமான நிலையங்களிலும் வீதியோரங்களிலும் இருக்கும் பெயர்ப்பலகைகள், விளம்பரங்களிலும் எழுத்துப்பிழை - கருத்துப்பிழை கண்டு பிடித்து,  உரிய இடத்தில் முறையிட்டு உடனடியாக திருத்தியும்விடுவார்.


சிப்பிக்குள் முத்து நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் அவர் தனது வாழ்நாளில் மேற்கொண்ட தமிழ்சார்ந்த பணிகளில் சந்தித்த அனுபவங்களை மிகவும் எளிய முறையில் வெகு சுவாரஸ்யமாக சொல்லியிருப்பதனால் வாசகர்களினால் இலகுவாக இந்த நூலுடன் நெருங்க முடிகிறது.


அவர் மேடைகளில் பேசினாலும்  பத்திரிகைகளில் எழுதினாலும் அன்பர்களுடன் கலந்துரையாடினாலும் எடுத்துக்கொண்ட விடயத்தை சிக்கலின்றி தெளிவுபடுத்தும் இயல்புள்ளவர். 1970 - 1980 காலப்பகுதியில் அவரை கொழும்பிலும் எங்கள் ஊர் நீர்கொழும்பிலும் பல மேடைகளில் கண்டிருக்கின்றேன். அவர் அன்றைய காலப்பகுதியில் கொழும்பு மலே வீதியில் அமைந்திருந்த  கல்வி அமைச்சில் வித்தியாதிபதியாக  இருந்த காலப்பகுதியில்,  நான் பணியாற்றிய வீரகேசரியில் வரும் செய்திகளையும் அவற்றுக்கான தலைப்புகளையும் சீர்திருத்தியவர்.


அவரது ஆலோசனைகளினால் இலங்கை இதழியல், ஊடகத்துறையில் நிறைய மாற்றங்கள் நேர்ந்துள்ளன.  நாம்  அன்றாடம்  எழுதும் செய்திகளில்,   படைப்பு  இலக்கிய  ஆக்கங்களில்,  பேசும்  உரைகளில்        தவிர்க்கவேண்டிய  சொற்கள்  நீக்கவேண்டிய எழுத்துக்கள்  பற்றிக்குறிப்பிடுவார்.


"பத்திரிகைகளில்,  " தலைமையின்  கீழ்  பேசினார்"   என்று  எழுதுகிறார்கள். அப்படியாயின்  தலைமை  தாங்கும்  மேசையின் கீழ்  என்பதா  அர்த்தம்.  ஏன்  கீழ் என்ற  இரண்டு  எழுத்துக்கள்  அநாவசியமாக  வருகின்றன? "தலைமையில்  நடந்தது. " என்று எழுதினால் போதுமே.

நடாத்தினார்கள்  என்று  எழுதுகிறார்கள். எதற்காக மேலதிகமாக அந்த "ா"என்ற எழுத்துவருகிறது!? " நடத்தினார்கள்" என்று எழுதலாமே!

ஒரு வாகன விபத்து நடந்தால்,  அதில் எவரும் இறந்தால், ‘ஸ்தலத்தில்’               பலியானார்  என  எழுதுகிறார்கள்.  அது என்ன  புனிதஸ்தலமா?  அவ்விடத்தில் பலியானார் என்று எழுதலாமே!

இவ்வாறு ஊடகங்களுக்கு தொடர்ந்து சுட்டிக்காணபித்துக்கொண்டே இருந்தார்.

"அச்சுப்பிழை கருத்துப்பிழையாகிவிடும் அபாயம் இருக்கிறது." என்று தொடர்ச்சியாகச் சொல்லிவந்தவர்.  

இலக்‌ஷ்மணன் அய்யா அவர்கள்,   இலங்கையின்   வடபுலத்தே  பலாலியில் 1918  ஆம்  ஆண்டு  பிறந்தார். கொழும்பு  பல்கலைக்கழகம்  தமிழ்நாடு  அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,  காசி  பல்கலைக்கழகங்களில்   பட்டங்கள்  பெற்றார்.  கொழும்பு  ரோயல்  கல்லூரியில் தமிழ்  ஆசிரியராக  சுமார்  பத்தாண்டுகளுக்கு  மேல்  பணியாற்றிவிட்டு,   கல்வி  அமைச்சில்  வித்தியாதிபதியாக  சேவையாற்றினார்.  இலங்கையில் அரசகரும  மொழித்திணைக்களத்தில்  மேலாளராகவும்  பணியாற்றியவர். இலங்கையில்  வீரகேசரி,  தினகரன்,  தினபதி,  சிந்தாமணி பத்திரிகைகள் உட்பட  பல இலக்கிய  இதழ்களிலும்  பல கட்டுரைகளை                                  எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டில் கி. வா. ஜகந்நாதன் நடத்திய கலைமகள் இதழிலும் அவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

இலங்கை  வானொலியில்  “தமிழைப்பிழையின்றி எழுதலும்  பேசலும்”   என்ற  தலைப்பில்  பல  தமிழ்  அறிஞர்களின்  தொடர்  உரைகள்  ஒலிபரப்பாவதற்கும்,   அதேபோன்றதொரு   தொடர்   சென்னை  தூர்தர்ஷனில்  ஒளிபரப்பாவதற்கும்  இலக்ஷ்மணன் அய்யா,  பின்னணியிலிருந்தார்  என்ற  தகவலையும் அறிந்திருக்கின்றேன்.

சிப்பிக்குள் முத்து நூலில், திருமண அழைப்பு  அச்சிடுவது  குறித்தும்  அவர்  அரியதொரு  கருத்தை  சொல்லியிருக்கிறார்.

ஆங்கிலத்தில்  Wedding invitation  என்றுதான்  குறிப்பிடுவார்கள்.  ஆனால்,   தமிழில்  திருமண அழைப்பு  என்று அச்சிடாமல் திருமண அழைப்பிதழ்  என்றே அச்சிடுகிறார்கள். ஆங்கிலத்தில்  Wedding invitation  card   என்றா அச்சிடுகிறார்கள்?  என்பதே  அவரது நியாயமான கேள்வி!

இந்த நூலில் இடம்பெறும் " சிங்களத் தீவினுக்கு ஒரு பாலம்" என்ற கட்டுரை மகாகவி பாரதியை மேற்கோள் காண்பித்து தொடங்குகிறது. அந்தப்பாலம் எவ்வாறு அமைந்திருக்கவேண்டும் என்று அய்யா விளக்குகிறார். தமிழ் சார்ந்து இலங்கையில் நேர்ந்துள்ள மாற்றங்கள்,  முன்னேற்றங்கள் பற்றி தமிழகம் அறியாதிருக்கும் குறையையும் சுட்டிக்காண்பிக்கின்றார்.

இந்தக்கட்டுரையில் வரும் பின்வரும் வரிகள் மிகுந்த கவனத்திற்குரியது:

" தமிழ் மொழியின் வரலாற்றிலே அதனைப் பல்கலைக்கழக இறுதி வகுப்புவரை முதன் முதலில் போதனா மொழியாக்கிய பெருமையும் சிறப்பும் இலங்கைக்கே உரியது. பல்கலைக்கழகத்திலே தமிழ் கட்டாய போதனா மொழியாக்கப்பட்டு 1963 முதல் கலையியல் இறுதிப் பட்டப்பரீட்சை முழுவதும் தமிழிலேயே நடைபெற்று வருகின்றது. தமிழை முதன் முதலில் பி. ஏ. பட்டப்பரீட்சை வரை வளர்த்த இந்தப்பெருமை தமிழகத்துக்குக் கூட கிடைக்காத ஒன்று என்பதை எண்ணும்போது அதன் மதிப்பு மேலும் பன்மடங்கு உயருகின்றது."

இக்கட்டுரை தமிழ்நாடு கலைமகள் இதழின் தீபாவளி மலரில் வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

மொழிபெயர்ப்புக்கலை குறித்தும் அவர் எழுதுகிறார். " தவறான தமிழாக்கம் விளைவிக்கும் விபரீதம் - இரவெல்லாம் பகலாகும் விந்தை " என்ற கட்டுரை மொழிபெயர்ப்பாளர்களுக்கு மிகுந்த பயனளிக்கும்.

இக்கட்டுரையை, தமிழ் நலம் பேணும் குழுக்கள் என்ற உபதலைப்புடன் இவ்வாறு முடித்திருக்கிறார்:

"தமிழிலே அவ்வப்போது ஏற்படும் ஐயங்களைத் தீர்ப்பதற்கும் தமிழை மேலும் மேலும் செம்மைப் படுத்திப்பேணுவதற்கும்  பொதுவிடங்களிலே காணப்படும் பிழைகளை நீடித்து நிலைக்கவிடாது உடனுக்குடன் திருத்துவதற்கும் ஆங்காங்கு சிறு சிறு தமிழ்நலம் பேணும் குழுக்கள் உருவாகித் திறமையுடனும் இணக்கத்துடனும் செயற்பட முடியுமாயின் தமிழின் எதிர்காலம் பலவிதத்திலும் சிறக்குமென்பது நிச்சயம். "

இந்த வரிகளில் அவர் மிகவும் துல்லியமாக இரண்டு சொற்களை புகுத்தியிருக்கிறார்.

"திறமையுடனும் - இணக்கத்துடனும்" எமது தமிழ் சமூகம் பற்றி நன்றாக அறிந்தவர் அல்லவா இலக்‌ஷ்மணன் அய்யா!?

மொழி, கலை, இலக்கியம், அறிவியல், மொழிபெயர்ப்பு - செம்மைப்படுத்தல், சமயம், சமூகம் , ஆன்மீகம், விஞ்ஞானம், மெஞ்ஞானம், பண்டிகைகள் முதலானவற்றை மாத்திரம் பேசும் புத்தகம் அல்ல சிப்பிக்குள் முத்து, இவற்றுக்கு அப்பாலும் சென்று, உளவியல் ரீதியாகவும் தெளிவான விளக்கங்களை தருகின்றார். சில கட்டுரைகள்,  எம்மை நாமே சுயவிமர்சனம் செய்துகொள்ளவும் தூண்டுகின்றன.  

இதனை தொகுத்திருக்கும் அய்யாவின் புதல்வி மங்களம் வாசன், மறக்காமல் அய்யாவின் சில ஆங்கிலக்கட்டுரைகளையும் தேடி எடுத்து பதிவுசெய்துள்ளார். அதனால் ஆங்கிலத்தில் படிக்கும் வாசகர்களுக்கும் சிப்பிக்குள் முத்து நன்கு பயன்படும் என நிச்சயமாக நம்பலாம்.

அய்யாவின் கட்டுரைகளை படிக்கும்போது,  அவர் எமக்கு தமிழ்ப்பெரும் கடலாகத்தான் தோற்றம் தருகின்றார்.  அந்தக்கடலில் நாம் கண்டெடுக்கும் சிப்பிக்குள்ளிருக்கும் முத்துக்கள் ஒளிவீசுகின்றன.

இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரைக்கும் மிகவும் பொருத்தமான ஓவியங்களை வரைந்துள்ள ஓவியர் பத்மவாசன்,  தமிழகத்திலும் தமிழர் வாழும் தேசங்களிலும் நன்கு அறியப்பட்ட பிரபல ஓவியர் சில்பி அவர்களின் மாணவர்.  இவரது குருநாதர் சில்பி பணியாற்றிய ஆனந்தவிகடன் இதழ் இவருக்கு தூரிகைச்சித்தர் என்ற பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

பத்மவாசனின் ஓவியங்களும் இந்த நூலுக்கு சிறப்பைத்தருகின்றன.

477 பக்கங்கள் கொண்டிருக்கும் சிப்பிக்குள் முத்து, கடலின் ஆழத்தில் தோன்றும் சிப்பிக்குள் உருவாகும்  முத்து எவ்வாறு படிப்படியாக உருமாற்றம் அடைந்து ஒளிவீசுகிறதோ, அதேபோன்று இந்த தொகுப்பிலிருக்கும் ஒவ்வொரு ஆக்கமும் வாசகரின் சிந்தனைக்கு வெளிச்சம் பாய்ச்சுகின்றது.

தமிழ் ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள் மற்றும்  தமிழ் ஆசிரியர்கள், புகலிட நாடுகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களும் தமிழ் கற்கும் மாணவர்களும் அவசியம் படிக்கவேண்டிய நூல் சிப்பிக்குள் முத்து.

புகலிட நாடுகளில் நடத்தப்படும் தமிழ் ஊக்குவிப்பு போட்டிகளில் வெற்றியீட்டும் மாணவர்களுக்கு பரிசாகவும் இந்த நூலை வழங்குவதற்கு பரிந்துரைக்கமுடியும்.

வட இலங்கையில் பலாலியில் மின்சார வசதிகளே இல்லாத ஒரு  குக்கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சாதாரண குடும்பத்தில்  பிறந்தவர் இலக்‌ஷ்மணன் அய்யா.

அவர் பிறந்த சமூகம் அவரை கோயில்  பூசகராக்கியிருக்கலாம்!                அல்லது புரோகிதராக வலம் வந்து ஆயிரக்கணக்கான கோயில் அய்யர்கள்                  போன்று  ஆலயங்களில்  கும்பாபிஷேகம்  செய்து  பெயர் தெரியாமல்  மறைந்திருக்கலாம்.  ஆனால், இந்து நாகரீக கல்வித்துறைக்கும்  கல்விப்பணிக்கும்  எழுத்துச் சீர்திருத்தத்திற்கும் தொடர்ந்தும் அயராது உழைத்து, தனது எழுத்துக்களை எமக்கு வழங்கிவிட்டு  மறைந்தார்.

இலங்கையில்  பதவியிலிருந்து  ஓய்வு பெற்றபின்பும்,  முன்னைய அரசுகளின்  செல்வாக்கு  மிக்க அமைச்சர்களினால் புதிய  பதவிகள் அவரைத்தேடி  வந்தபோதும்  அவற்றை  சாமர்த்தியமாக  ஒதுக்கிவிட்டு  நாட்டைவிட்டு  புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்து அமரரானார்.

அவரின் நூற்றாண்டு காலத்தில் "சிப்பிக்கு முத்து"  நூலை அன்னாரின் நினைவாக தமிழ் சமூகத்திற்கு பயன்படும் வகையில், தாயார் பாலம் லக்‌ஷ்மணன் மற்றும் சகோதரர்கள் சிவராமன், சசிதரன் சார்பில் செல்வப்புதல்வி மங்களம் வாசன் வெளியிட்டுள்ளார். இச்சந்தர்ப்பத்தில், இவர்களையும் நாம் பாராட்டத்தான் வேண்டும்.

                        ---0---


Tuesday, 23 March 2021

RAJESWARI, SHUNMUGAM , CEYLON RADIO ANNOUNCER BORN 1940 MARCH 16 - 2012 MARCH 23

 


RAJESWARI SHUNMUGAM ,

CEYLON RADIO ANNOUNCER BORN

 1940 MARCH 16 - 2012 MARCH 23





இராஜேஸ்வரி சண்முகம் (மார்ச்சு 16, 1940 - மார்ச் 23, 2012) இலங்கை வானொலி புகழ் வானொலி அறிவிப்பாளரும், நாடகக் கலைஞரும் ஆவார். 1950 களில் இலங்கை வானொலியில் சானா சண்முகநாதன் நாடகத் தயாரிப்பாளராக இருந்தபொழுது வானொலி நாடகங்களில் நடிப்பதற்காக இவர் வானொலித்துறைக்கு வந்து தொடர்ந்து நீண்ட காலமாக நடித்தவர். ஆரம்பத்தில் தற்காலிக அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் தமிழ் வர்த்தக சேவையில் நிரந்தர அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.


வாழ்க்கைச் சுருக்கம்

அம்மா அண்ணாமலையம்மாள், அப்பா பிச்சாண்டிபிள்ளை ஆகியோரின் மூத்த மகள். இரண்டு சகோதரர்கள் இரண்டு சகோதரிகள். கொழும்பில் விவேகானந்த மேட்டில் பிறந்தவர். ஸ்ரீகதிரேசன் வீதி, புனித மரியாள் பாடசாலையிலும், பின்னர் கொட்டாஞ்சேனை நெல் வீதி அரசினர் மத்திய மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார்.


இவரது கணவரான சி. சண்முகமும் இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்ததோடு வர்த்தக சேவையில் ஒலிபரப்பான ஏராளமான தனி நாடகங்கள், தொடர் நாடகங்கள் என்பனவற்றையும், மேடை நாடகங்களையும் எழுதியவர். இவர்களது மகன் சந்திரமோகன் ஒரு மெல்லிசைப் பாடகர். இளம் வயதிலேயே இறந்து விட்டார். சந்திரகாந்தன் இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக உள்ளார். மகள் வசந்தி சண்முகம் வானொலி, மேடை நாடகங்களில் நடித்தவர். தற்போது திருச்சியில் வாழ்ந்து வருகிறார்.


நாடகத் துறையில்



நாடகத் துறை மூலம் கலைத்துறைக்கு அறிமுகமானவர் இராஜேசுவரி. 1952 ஆம் ஆண்டில் கொழும்பு பம்பலப்பிட்டி புனித பீட்டர்சு கல்லூரியிலும், கொட்டாஞ்சேனை விவேகானந்தா மகா வித்தியாலயத்திலும் நடைபெற்ற அகில இலங்கை மாவட்டப் பாடசாலைகள் நாடகப்போட்டியில் கண்ணகி பாத்திரத்தில் நடித்துப் பாராட்டுப் பெற்றார். "கண்ணகி" நாடகத்தைப் பார்த்த வானொலி நாடகத் தயாரிப்பாளர் சானா (சண்முகநாதன்) இவரை வானொலி நாடகங்களில் நடிக்க அழைத்தார்[1].


வானொலிக் கலைஞராக

சானா சண்முகநாதன் காலத்திலிருந்து பி. விக்னேஸ்வரன் காலம் வரை வானொலி நாடகங்களில் நடித்தவர். 1952, டிசம்பர் 26 இல் வானொலிக் கலைஞராக அறிமுகமானார். இவர் நடித்த முதல் வானொலி நாடகம் என். எஸ். எம். இராமையாவின் "விடிவெள்ளி" என்பதாகும். சில்லையூர் செல்வராசனின் "சிலம்பின் ஒலி" தொடர் நாடகத்தில் பாண்டிமாதேவியாக நடித்தார். 1952 முதல் 1969 வரை வானொலியில் நாடகம், மாதர் நிகழ்ச்சி, மற்றும் உரைச்சித்திரங்களில் நடித்து வந்தார். அசட்டு லட்சுமியாக இவர் நடித்த சி. சண்முகம் எழுதிய "நெஞ்சில் நிறைந்தவள்" நகைச்சுவை நாடகம் பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரியில் 52 வாரங்கள் ஒலிபரப்பாயின.


வானொலி அறிவிப்பாளராக

1969 இல் இலங்கை வானொலி வர்த்தக சேவையில் ஆரம்பத்தில் பகுதிநேர அறிவிப்பாளராக அறிமுகமானார். 1971இல் மாதர், மற்றும் சிறுவர் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். 1994இல் மீ.உயர் அறிவிப்பாளராக உயர்ந்தார். இறக்கும் வரை இவர் அறிவிப்பாளராகப் பணியாற்றினார். வானொலியில் இசைச்சித்திரம், முத்துவிதானம், பூவும்பொட்டும், மங்கையர் மஞ்சரி, சிறுவர் நிகழ்ச்சிகள், பொதிகைத் தென்றல், வீட்டுக்கு வீடு, இசையும் கதையும், வானொலி மலர், ஒலிமஞ்சரி, கவிதைசெண்டு என பல சுவையான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். இலங்கை வானொலியில் பொங்கும் பூம்புனல், கொழும்பு சர்வதேச ஒலிபரப்பின் பொதிகைத் தென்றல் நிகழ்ச்சிகளில் ஈரடிக் கவிதை கொண்டு திரைப்படப் பாடல்களைத் தொகுத்து வழங்கி வந்தது இராஜேவரி சண்முகத்தின் தனிப்பாணியாகும்[1].



இராஜேசுவரி சண்முகத்தின் நேர்காணல்கள் இலங்கைப் பத்திரிகைகளில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் தினமலர், தினகரன், ராணி, மங்கை, தேவி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.


செய்தி வாசிப்பாளர்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மூத்த செய்தி வாசிப்பாளராக ராஜேஸ்வரி பணியாற்றியுள்ளார். தமிழ் மொழி உச்சரிப்பில் தனக்கென தனிச் சிறப்பை கொண்டிருந்த ராஜேஸ்வரி ஏனைய களிப்பூட்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலும் வல்லவர். தனது இறுதி காலம் வரை செய்தி வாசிப்பாளராக இவர் சேவையாற்றினார்.


திரைப்படத் துறையில்

இலங்கை இயக்குனர் லெனின் மொராயஸ் இயக்கிய "நெஞ்சுக்குத் தெரியும்" தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகனின் தாயாக நடித்தார் இராஜேசுவரி சண்முகம்[1]. இலங்கையில் தயாரிக்கப்பட்ட நான் உங்கள் தோழன் திரைப்படத்தில் ருக்மணி தேவிக்கும், குத்துவிளக்கு திரைப்படத்தில் சாந்திலேகாவுக்கும் பின்னணிக் குரல் வழ்ங்கினார்.


மேடை நாடகங்கள்

சானாவின் நெறியாள்கையில் "அசட்டு வேலைக்காரன்"

முருகையனின் ":விடியலை நோக்கி"

சுஹேர் ஹமீட்டின் நெறியாள்கையில் "தேரோட்டி மகன்"

சி. சண்முகத்தின் "ஸ்புட்னிக் சுருட்டு"

விருதுகளும் பட்டங்களும்

1994 இல் சிறந்த அறிவிப்பாளருக்கான அரசுத்தலைவர் விருது.

1995 இல் டாக்டர் புரட்சித்தலைவி விருது.

காலாசார அமைச்சின் மூலம் முன்னாள் அமைச்சர் செ. இராசதுரை மொழிவளர்ச்செல்வி பட்டமளித்துக் கௌரவித்தார்.

சுவாமி விபுலாநந்தரின் நூற்றாண்டுப் பெருவிழாவினை முன்னிட்டு முன்னாள் அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜயவர்தனா வாகீசகலாபமணி பட்டமளித்துக் கௌரவித்தார்.

அமைச்சர் லக்சுமன் கதிர்காமர் 'தொடர்பியல் வித்தகர்' என்ற பட்டமளித்துக் கௌரவித்தார்.

எட்டயபுரம் தென்பொதிகைத் தமிழ்சங்கம், 1995 சனவரி 29 இல் 'வானொலிக்குயில்' பட்டம் வழங்கி கௌரவித்தது.

சாய்நதமருது கலைக்குரல் 'வான்மகள்' விருது வழங்கி கௌரவித்தது.

சிந்தனை வட்டம் 'மதுரக்குரல்' பட்டம் வழங்கி கௌரவித்தது.

மறைவு

இராஜேஸ்வரி சண்முகம் யாழ்ப்பாணம் சென்று கொழும்பு திரும்புவதற்காக புறப்பட்ட வேளையில், மாரடைப்பு ஏற்பட்டு யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 2012, மார்ச்சு 23 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்[2].

Sunday, 21 February 2021

REINCARNATION OF CEYLON BOY OF KALPANA CHAWLA

 

REINCARNATION OF CEYLON BOY 

OF KALPANA CHAWLA


இலங்கையில் மறு பிறவி எடுத்துள்ள சிறுவன் கூறும் ஆச்சரியமான விபரங்கள்!! இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சவ்லாவின் மறுபிறவியாக இருக்கலாம் என நம்ப்படுகின்றது


கம்பஹா – மினுவாங்கொடை பகுதியில் தனது முற்பிறவி குறித்த தகவல்களை வெளியிடும் சிறுவன் தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது பிரபலமாகி வருகிறது. 7 வயதான இந்த சிறுவன் மினுவாங்கொடை – மாராபொல ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.இந்த சிறுவனின் கருத்துக்கள் ஆச்சரியமானவை. அவை கற்பனையாக தெரிந்தாலும் அந்த சிறுவன் விண்வெளி பயணம் மற்றும் விண்வெளி ஓடம் மற்றும் சூரியனை கடந்து செல்லும் விதத்தை விபரிக்கின்றார்.அத்துடன் விண்வெளி ஓடம் தீ பிடித்து பாலைவனத்தில் விழுந்தது குறித்தும் விபரிக்கின்றார்.மேலும் வாகனத்தில் தியாகம் செய்துக்கொண்டிருந்ததாகவும் கூறுகின்றார். இதனைவிட ஆச்சரியம் அந்த சிறுவன் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளை சரளமாக பேசுகிறார். சிங்களத்தில் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்கின்றார்.அழிந்து போன டைனோசர் பற்றி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அந்த விலங்கினத்தின் இனங்கள் பற்றியும் சிறுவன் கூறுகிறார்.





2003 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி கொலம்பியாவின் விண்வெளி ஓடம் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள பாலைவன பிரதேசத்தில் எரிந்து விழுந்தது.இந்த சிறுவனும் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை கல்பனா சவ்லாவின் மறுபிறவியாக இருக்கலாம் என இந்த துறை சம்பந்தமான வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் பிற்காலத்தில் இந்த சிறுவனிடம் தற்போதுள்ள நினைவுகள் மறந்து போகக் கூடும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Monday, 15 February 2021

FIRST RATION CARD IN CEYLON 1920 , FOR RICE DISTRIBUTION FEBRUARY 15

 

FIRST RATION CARD IN CEYLON 1920 ,

FOR RICE DISTRIBUTION FEBRUARY 15



கி.மு 800 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இலங்கையில் அரிசி இருந்ததாக ஆவணச் சான்றுகள் கூறுகின்றது.[1] கி.மு 390 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அமைக்கப்பட்ட நீர்ப்பாசன கட்டமைப்புகள், நீர்த்தேக்கங்கள் , ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கால்வாய்கள் இக் கூற்றைப் பிரதிபலிக்கின்றன. அரிசி சாகுபடியானது பொருளாதார நடவடிக்கைக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் வழி வகுத்தது.[2] இவ்வாறு தலைமுறை தலைமுறையாக கடந்து வந்த அரிசியின் வகைகள், இலங்கையின் பாரம்பரிய, சுதேச அல்லது வழிவழியான அரிசி வகைகள் என அழைக்கப்படுகின்றன.



ஒரு காலத்தில் இலங்கை, கிழக்குத் தானியக் களஞ்சியம் என பிரபலமடைந்திருந்ததுடன் மற்ற நாடுகளுக்கு 2000 ற்கு மேற்பட்ட உள்நாட்டு அரிசி இரகங்களை வழங்கியது. இலங்கையின் அரிசிச் சாகுபடியானது தூயதாகவும், நல்லதாகவும் கருதப்பட்டது. அரிசி சாகுபடி செயன்முறையும் அதன் தூய இயல்பும் இலங்கையின் பாரம்பரிய அரிசி சாகுபடியை நிலையானதாக்கியது.[3]



16 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டிலிருந்து 20 ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய நாடுகளின் வலியுறுத்தலினால் பெருந்தோட்டப் பயிர்கள் உற்பத்தி செய்யப்பட்டது. எனினும் மக்கட்தொகை அதிகரிப்பு காரணமாக, 1950ல் எச் தொடர் அரிசி வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டது அத்துடன் அறுவடையை அதிகரிப்பதற்கு இரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக அரிசி மகசூலானது சராசரியாக 0.65 மீட்டர்/ஹெக்டேர் இலிருந்து 1.73 மீட்டர்/ஹெக்டேர் ஆக அதிகரித்தது.


இந்த செயல்பாட்டில், பெருமளவான குளூட்டாமிக் அமிலம், சத்துக்கூடிய உயிர்ச்சத்துகள், அதிகளவிலான நார்ச்சத்து, குறைந்த சர்க்கரை உயர்த்தல் குறியீடு என்பனவற்றை உள்ளடக்கிய பலவகையான பாரம்பரிய அரிசிவகைகளை இலங்கை இழந்துவிட்டது.[4]



1980ல், 90 சதவீதமான பண்ணை நிலங்களில் புதிதாக வளர்ச்சியடையும் அரிசி வகைகள் சாகுபடி செய்யப்பட்டன. பெரியளவு அறுவடையை குறைந்த செலவில் பெறுவதற்கு இரசாயன பதார்த்தங்கள், சேதனப் பசளைகள் மற்றும் பூச்சி கொல்லிகள் மூலம் கலப்பின அரிசிவகைகள் 95 வீதம் இலங்கையில் பயிரிடப்படுகின்றன. ஆனால் தற்போதைய போக்கானது சேதன உணவுகள் உட்கொள்வது நன்மையானது என்றும், இரசாயன பதார்த்தங்கள் மற்றும் பூச்சி கொல்லிகள் தீங்கானது என்றும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. நீண்ட ஆயுள் மற்றும் காலனித்துவ காலத்திற்கு முந்தைய தலைமுறையினரின் உடல் நலத்தைக் கருத்திக்கொண்டு பாரம்பரிய அரிசிச் சாகுபடி மீண்டும் தலையெடுக்கத் துவங்கியுள்ளது.[5][6]


வகைகள்

சுவந்தல்

இதன் மொழிபெயர்க்கப்பட்டப் பெயர் மணம் என்ற பொருள் தரும். இது ஒரு நேர்த்தியான வாசனையையும் சுவையையும் கொண்ட வெள்ளை அரிசி ஆகும்.[7] வெள்ளையும் பிரகாசமுமான தோலை வழங்கும்; கழிவுறுப்புத்தொகுதிச் செயற்பாட்டை மேம்படுத்தும்; குரல் தெளிவை மேம்படுத்தும்; ஆண் பாலியல் ஆற்றலை அதிகரிக்கவும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்று கூறப்படுகின்றது. இது உடலின் சீரான வளர்ச்சியைப் பேணுவதற்கும் உதவும் என்றும் கூறப்படுகின்றது.



இதனுடைய விசேட பாற் சுவையால் விழாக்காலங்கள் மற்றும் சடங்குகளில் ஒரு சிறந்த தேர்வாக இருக்கின்றது. சுவன்டேல் ஊட்டச்சத்துக் கலவையானது 90%மாப்பொருள், 7% கச்சா புரதம், 0.7% கச்சா கொழுப்பு, 0.1% நார் சத்து என்பவற்றைக் கொண்டுள்ளது. சுவன்டேல் மற்ற அரிசி வகைகளை விட அதிகளவு குளுடமிக் அமிலம் மற்றும் அதிக சத்துள்ள உயிர்ச்சத்துக்களையும் கொண்டுள்ளது.[8]


இலங்கையின் தெற்கு தாழ்நிலங்களில் பாரம்பரிய சேதன மானாவாரி முறைகள் மூலம் பரம்பரை பரம்பரையாகப் சுவன்டேல் பயிரிடப்படுகின்றது. இதனால் சாகுபடியானது மற்ற அரிசி வகைகளை விட அதிக காலம் (அறுவடை காலம் வரை சராசரியாக 5–6 மாதம்) எடுக்கின்றது. இலங்கையின் இந்த வழிவழியான நெல் சாகுபடியானது புனிதமாகவும் மற்றும் சிறந்த செயன்முறையாகவும் கருதப்படுகின்றது.


கலுகீனடி

இதன் பெயர் கருமையான நுண்தானியம் என்ற பொருளைத் தருகிறது. இது அதிக சத்துள்ள, சிவப்பு அரிசி. இதில் தினசரி நுகர்வுக்கு உகந்த மருத்துவ குணங்கள் உள்ளதாகக் கருதப்படுகின்றது மற்றும் குறிப்பாக பாலூட்டும் தாய்மார்களுக்கும் பரிந்துரைக்கப்படுகின்றது. இது உடல் வலிமையை அதிகரிக்கின்றது, இதில் உள்ள நார்ச் சத்துக்கள் மலங்கழித்தலை சீராகச் செய்யவும் உதவுகின்றது. இதற்கு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் திறன் அதே போல் பாம்பு கடித்தால் ஏற்படும் நச்சு விளைவுகளைக் கட்டுப்படுத்தும் திறனும் உள்ளது. கலுஹீனடி அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் கஞ்சி ஹெபாடைட்டிஸ் நோயாளிகளுக்காகப் பரிந்துரைக்கப்படுகின்றது.[9]


மா-நெல்

குறைந்தளவு மாப்பொருளையும் கூடியளவு புரதம் மற்றும் நார்ச்சத்தையும் கொண்ட சிவப்புக் கலந்த பழுப்பு நிற அரிசியாகும். பொதுவாக மற்ற அரிசிகளுடன் ஒப்பிடும் போது மா-வீ 25% முதல் 30% வரை குறைந்தளவு கிளைசெமிக் சுட்டைக் (ஜி.ஐ.) கொண்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது 84.5% மாப்பொருள், 9.4% புரதம், 3.6% கொழுப்பு மற்றும் 1.1% நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்து ஒப்பனையைக் கொண்டுள்ளது. மா-வீ உடலை நேர்த்தியாகவும், மெல்லியதாகவும் வைத்திருக்க உதவுகின்றது என்று நம்பிய ராணிகளினால் இது மிகவும் விரும்பப்பட்டது. இது எரிச்சல் உணர்விற்கு நிவாரணம் வழங்குகின்றது மற்றும் உடலைக் குளிர்ச்சியடையச் செய்யவும் உதவுகின்றது என்று கூறப்படுகிறன்து. இந்த அரிசியை இறைச்சியுடன் சேர்த்து உட்கொள்ளப்படும் போது மது போதையைக் குறைக்க முடியும். இது காச நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் மலச்சிக்கலுக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. மேலும் நீரிழிவு, காசநோய், மலச்சிக்கல், மூல நோய் மற்றும் இதய நோய்களுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றது மற்றும் கோர்புலேன்சேயைக் கட்டுப்படுத்துகின்றது என்றும் அறியப்படுகிறது. இந்த அரிசியைக் கொதிக்க வைக்கும் முன் ஊறவைப்பது சிறந்ததாகும். இதை ஒரு பாரம்பரிய உணவாக நறுக்கப்பட்ட வசந்த வெங்காயம் மற்றும் நல்ல வாசனையைச் சேர்த்து மற்றும் சுரக்காயுடன் மசாலா பொருட்கள் மற்றும் தேங்காய் பால் சேர்த்து பரிமாறப்படுகின்றது.


மத நிகழ்ச்சிகளில் ஒரு வரலாற்று முக்கியத்துவமாக மா-வீ போற்றப்பட்டது. கிராமிய கதைகளின் படி, மா-வீயானது புனித நினைவுச்சின்னமான காஸ்கேத்ஸ் மற்றும் டகபாஸ் முகுடமாக வைக்கப்பட்டுள்ளது.[10]


பச்சபெருமாள்

'பச்சபெருமாள்' என்பது 'ஆசிர்வதிக்கப்பட்டவர்களின் நிறம்' அல்லது 'புத்தரின் நிறம்' என்று பொருள். தெய்வீக அரிசியாக பாரம்பரிய சிங்களப் பண்பாட்டில் கருதப்படுகின்றது. இது பெரும்பாலும் தானம் கொடுப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. இந்த சிவப்பு அரிசி வகையைச் சமைக்கும் போது ஓரளவு பர்கண்டி நிறத்தில் சாதம் வரும். இதில் ஊட்டச்சத்து மற்றும் புரதம் இருப்பதால் ஒவ்வொரு நாள் உணவிற்கும் ஒரு சிறந்த தேர்வாக இது உள்ளது.[11] நீரிழிவு மற்றும் இதய நோய்க்கு ஒரு சரியான உணவாக இருக்கும் என்று கருதப்படுகின்றது.


குருளுதுட

இது புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் மிகுந்த ஒரு மனநிறைவுள்ள மற்றும் சத்துள்ள சிவப்பு அரிசி ஆகும். இது ஒரு இனிமையான சுவையைக் கொண்டது. இது, சிறுநீர்ப்பை செயற்பாட்டை மேம்படுத்தவும், ஆண் பாலியல் ஆற்றலை அதிகரிக்கவும், ஆண்மை குறைவைத் தடுப்பதற்கும் உதவுகின்றது என்று கூறப்படுகின்றது.[12]


ரத்டேல்

இது ஒரு சுவையான சிவப்பு அரிசி மற்றும் ஈரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குகின்றது. ரத்டேலால் செய்யப்பட்ட கூழ் மற்றும் சூப், வைரஸ் காய்ச்சலுக்கு எதிரான செயற்பாட்டை வழங்குகின்றது. இது மன அழுத்தத்தால் ஏற்படும் அரிப்புக்கு பரிந்துரைக்கப்படுகின்றது மற்றும் சிறுநீர் அமைப்பிலுள்ள நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறன்து. இது நச்சு கழிவுகளால் ஏற்படும் பாதிப்புக்களை நீக்குகின்றது மற்றும் உடலைக் குளிர்ச்சியடையச் செய்யவும் உதவுகின்றது. வறுக்கப்பட்ட மற்றும் நெய் மிதப்படுத்திய ரத்டேல் அரிசி மலச் சிக்கலுக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது. இது சிறுநீர்ப்பை மற்றும் பித்தப்பையில் கற்கள் உருவாவதை தடுக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ரத்டேல் அரிசி மூலம் செய்யப்பட்ட கஞ்சி, சரண (போஎர்ஹவிய டிப்புச), சர்க்கரை, திராட்சை மற்றும் பசும்பால் என்பன காச நோய் மற்றும் நுரையீரல் நோய்களுக்கு ஏற்றது.[13]


மடதவலு

இது இன்னொரு சிவப்பு அரிசி வகையாகும், வலிமை மிக்க நோய் எதிர்ப்புக்கான ஆயுள் வேத சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.[14]


ஹெடதா நெல்

சிவப்பு அரிசி வகைகளில் ஒன்றான இந்த அரிசி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றது மற்றும் எரிவுணர்ச்சிகள், குளிர்த்தன்மையான உடல் என்பனவற்றுக்கு நிவாரணம் அளிக்கின்றது. இது சமநிலையற்ற உயிரியியலினால் ஏற்படும் நோய்களுக்கு நிவாரணம் வழங்குகின்றது என்று கருதப்படுகின்றது; உடல் வலிமை அதிகரித்தல் மற்றும், இரத்த வாந்தி சுத்திகரிப்புச் செய்தல் மற்றும் சீரற்ற இரத்த ஓட்டத்திற்கு ஒரு சிறந்த தீர்வை முன்வைக்கின்றது.[14]


செயற்பாட்டுப் பண்புகள்

1. செலீனியம் - செலினியத்திற்காக ஒரு பாத்திரத்தில் 27.3% டிவி வழங்கப்படுகின்றது, முக்கியமான மண் தாதுவானது குறிப்பிட்ட வகை புற்றுநோயை கடுமையாகக் குறைக்கும் என்றும், அதே போல் இதய நோய், அழற்சி விளைவிக்கின்ற நிலைமைகள் மற்றும் முடக்கு வாத நோய் என்பனவற்றிற்கும் நிவாரணம் வழங்குகின்றது. செலினியமானது விலைகூடிய பிரேசில் கொட்டைகள், செலினியம் உள்ள உள்ள பணக்கார மற்ற உணவுகள் பிரேசில் கொட்டைகள், சூரியகாந்தி விதை, சூரை, ஹாலிபட், பாலாடை, ஃப்ளவண்டா, சால்மன், இறைச்சி (மாட்டிறைச்சி, கல்லீரல், ஆடுகள், பன்றி இறைச்சி), கோதுமை, பார்லி, ஓட்ஸ் என்பவற்றில் இருக்கின்றது.[15]


2. மாங்கனீசு - ஒரு கப் வழங்கப்படும். இது உடலின் பயன்பாட்டிற்குத் தேவையான குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் சுரப்புக்களுடன் தொடர்புடைய நொதிகள் உட்பட 300 க்கும் மேற்பட்ட நொதிகளின், ஒரு இணை காரணியாக செயல்படுகின்றது. மாங்கனீசு, வைகுடிய உணவான கோக்கோ பவுடர் மற்றும் டார்க் சாக்லேட், ஆளி விதை, எள் விதைகள், மற்றும் எள் வெண்ணெய், சுரப்பிகள், சிப்பிகள், மற்றும் மட்டி என்பவற்றில் இருக்கின்றது.[16]


3. இயற்கையில் உருவாகும் எண்ணெய்கள் - இந்த இதய-ஆரோக்கியமான எண்ணெய்கள் ல்ட்ல் வடிவங்களிலுள்ள கொழுப்புக்களைக் குறைக்கின்றது. இதே போன்ற ஊட்டச்சத்துக்கள் சோளம், ஆலிவ், வெண்ணெய், தேங்காய், பனை என்பனவற்றில் இருக்கின்றது.[17]


4. பைத்தோகெமிக்கல்ஸ் - ஆறு வாராந்த பரிமாற்றம், பற்காறையை குறைந்தளவு கட்டியெழுப்புகின்றது மற்றும் இதய நோய் மற்றும் உயர் கொழுப்புக்கள் உருவாகுவதைக் குறைக்கின்றது என்றும் ஆய்வுகள் காட்டுகின்றது. ஏனெனில், இது வெறுமனே நோய்க்குப் போராடும் பைத்தோகெமிக்கல்சைக் கொண்டுள்ளது.[18]


5. உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் - அவுரிநெல்லிகள் மற்றும் பச்சை தேயிலை உணவுகள் மட்டுமே உயர் நோயெதிர்ப்புப் பொருட்களல்ல. இலங்கை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் (ITI) (No.10715TG6) நடத்திய ஆய்வில் பாரம்பரிய அரிசி உண்மையில் ஒரு உயர்வான நோயெதிர்ப்புப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று நிரூபிக்கின்றது.[19]


6. இழை - நாருக்கு தினமும் ஒரு கப் 14.0% பெறுமதியை வழங்குகின்றது. ஏனெனில் அதன் நார் செழுமையையும் மற்றும் ஆரோக்கியமான மலவுறுப்புத் திறனையும் பேணுகின்றது, அரிசி "நகரும் பொருட்களை வைத்திருத்தல்" என்ற ஒரு வழியில் எடை இழப்பு மற்றும் வளர்சிதை மாற்ற செயற்பாட்டையும் ஊக்குவிக்கின்றது. அரிசியை ஒரு கிண்ணத்தில் எடுத்த பின்னர், ஒரு சிறிய அளவு உணவு இருந்தாலும் மக்கள் நிறைந்துள்ளது என்ற உணர்கின்றனர். இதே போன்ற உணவுகள் சோளம், ஆளி விதை, கோதுமை, பீன்ஸ், அத்தி, வெண்ணெய், பப்பாளி என்பனவற்றில் இருக்கின்றது.[20]


7. சர்க்கரை உயர்த்தல் குறியீடு - வெள்ளை அரிசி / வெள்ளை ரொட்டி போல் அல்லாமல், இந்த பாரம்பரிய வகைகள் குருதியிலுள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்கின்றது, அதனால் இது சர்க்கரையை மெதுவாக மற்றும் உறுதியான முறையில் வெளிவிடுகின்றது. புதிய ஆராய்ச்சி மூலம் இந்த பழுப்பு அரிசியைக் குறைந்தது இரண்டு வாரந்களுக்குச் சாப்பிடுவதனால் வளரும் நீரிழிவு 2 யை 11 சதவீதம் வரை குறைக்க வாய்ப்புக்கள் உள்ளது என்று காட்டுகின்றது. பச்சைப் பட்டாணி, இனிப்புச் சோளம், கரட், பூக்கோசு, காலிபிளவர், தக்காளி என்பன இதே விளைவைக் கொண்டுள்ளது.[21]


8. பாசுபரசு - சரியான செல் செயல்பாட்டிற்கு, சீரான கல்சியம், வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு ஒரு ஊட்டச்சத்து அத்தியாவசியமாகின்றது, மற்றும் ATP (அடினோசின் டிரைபாஸ்பேட்) யைச் செய்வதற்கு நமது செல்களுக்கு ஒரு மூலக்கூறு சக்தியை வழங்குகின்றது. பாஸ்பரஸ் குறைபாட்டினால் பசியின்மை, இரத்த சோகை, தசை வலி, முறையற்ற எலும்பு உருவாதல் (நோய்), உணர்வின்மை, மற்றும் பலவீனமடைந்த நோய் எதிர்ப்பு அமைப்புக்கள் என்பன ஏற்படலாம். இதேபோல் ஓட்ஸ், சீஸ், எள் விதைகள் போன்ற பாஸ்பரஸ் நிறைந்த உணவுகள் இருக்கின்றது.[22]


9. இரும்பு - இது புரதம் மற்றும் நொதிகளின் ஒரு பகுதியாக எமது உடலில் காணப்படுகின்றது, இது குருதியில் ஒட்சிசனைக் கொண்டு செல்ல உதவும் ஹீமோகுளோபின் மற்றும் மையோகுளோபின் என்பவற்றைக் கொண்டுள்ளது. தசைகளில் இரும்புச் சத்து முக்கிய பங்கை வகிக்கின்றது. பாரம்பரிய அரிசிக்குப் பதிலாக சிவப்பிறைச்சி, முட்டை மஞ்சட் கருக்கள், டார்க், இலைக் கீரைகள் (பசளிக் கீரை, கோள்ளர்ட்ஸ்), உலர்ந்த பழங்கள் (கொடிமுந்திரி, திராட்சை), நத்தை (சிப்பிகள், கடல் இரட்டைவழி சோழி) என்பவற்றைப் பயன்படுத்தலாம்.[23]


10. உயிர்ச்சத்து பி6 - ஒரு ஆரோக்கியமான மைய நரம்பை மற்றும் நோயெதிர்ப்பை ஊக்குவிக்கின்றது. சாதாரண உயிரணு வளர்ச்சிக்கு மற்றும் ஆரோக்கியமான தோல் பொருட்களுக்கு உதவுகின்றது. உணவைச் சக்தியாக மாற்ற உதவுகின்றது. பிற உதாரணங்களாக கோதுமை உணவுகள், உறுப்பிறைச்சிகள், கோழி, முட்டை, மீன், ப்ரூவரின் ஈஸ்ட், கரட், பட்டாணி, பசளிக் கீரை, சூரியகாந்தி விதைகள் மற்றும் அக்ரூட் பருப்புகள் உள்ளது.[24]


11. டிரிப்டோபான் - புரதத் தொகுதிகளை உருவாக்க அமினோ அமிலம் அத்தியாவசியமாக இருக்கின்றது. இதற்குச் சமமான நிறை உணவுகளாக பாலாடைக்கட்டி, இறைச்சி, வேர்கடலை, மற்றும் எள் விதைகள் என்பன இருக்கின்றது.[25]


12. கலோரிகள் - சக்தியின் அடிப்படை அலகு, அனைத்து உணவுகளில் காணப்படுகின்றது மற்றும் உடலின் முக்கிய செயல்பாடுகளைப் பராமரிக்கத் தேவைப்படுகின்றது. பிற உதாரணங்களாக பழைய உணவுகள், வறுத்த உணவுகள், சோயா, வேர்க்கடலை, பாம், ஆலிவ், பன்றிக் கொழுப்பு, மெழுகுவர்த்திக்கு, மீன் எண்ணெய் என்பன இருக்கின்றது.


13. உயிர்ச்சத்து பி1 - இதயம் மற்றும் நரம்பமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றது, வளர்சிதை மாற்றம் மற்றும் மூளைச் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கின்றது. சுழற்சி, இரத்த உருவாக்கம், வளர்ச்சி, தசை, சக்தி மற்றும் கற்கும் ஆற்றல் என்பனவற்றை வழங்குகின்றது. ஓட்ஸ் மற்றும் ஈஸ்ட், அல்சைமர் நோய்க்கு எதிராகப் பாதுகாப்பு அளிக்கின்றது. அதற்குப் பதிலாக காய்கறிகள், பருப்பு வகைகள், விதைகள் மற்றும் கொட்டைகள், கோழி, மீன் மற்றும் ஈரல் என்பனவற்றைப் பயன்படுத்த முடியும்.


14. உயிர்ச்சத்து பி3 - நரம்பமைப்பு, தோல், நாக்கு மற்றும் செரிமான அமைப்பு என்பனவற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றது. நல்ல குருதியோட்டம் மற்றும் சக்தியை வழங்குகின்றது. மோசமான எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்கின்றது மற்றும் நல்ல HDL அதிகரிக்கின்றது.


15. அன்சபோநிபியாப்லஸ் - கீல்வாதம் நோயாளிகளுக்கு பிரபல்யமான ஒரு இயற்கை மருந்தாகவுள்ளது. பிற உதாரணங்களாக ஆனைக்கொய்யா மற்றும் சோயா அவரை உள்ளது.[26]


16. தாவர ஊட்டச்சத்துகள் - எதிர்ப்பு அழற்சி, ஆரோக்கியமான கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கின்றது. அதே ஊட்டச்சத்து உணவுகள், மசாலா, ப்ளாக்பெர்ரி, முட்டைக்கோஸ், கரட், தக்காளி, பப்பாளி, மற்றும் எலுமிச்சையில் இருக்கின்றது.[27]


17. லிஞன்ஸ் - புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதன் மூலம் புற்றுநோய் ஆபத்தை குறைக்கின்றது, இதேபோல் மெதுவாக புற்று நோயின் இயக்கத்தையும் குறைக்கின்றது, இதய நோய் அபாயத்தை குறைக்கின்றது, எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்கின்றது. (மற்ற உதாரணங்களாக ஆளி விதை, எள் மற்றும் பூசணி விதைகள், மற்றும் கம்புகள் இருக்கின்றது).[28]


18. அமைலோஸ் - இது ஒரு குறைந்த கிளைசெமிக் சுட்டுடன் அதிக நார்களை வழங்குகின்றது. குறைந்த கிளைசெமிக் சுட்டின் போது கூடிய அமிலோஸ் வரும். அதிக அமிலோஸ் மூலம் நீரிழிவு நோய் பயனடைகின்றது, ஏனெனில் இன்சுலின் மெதுவாக ஏறுவதால் இது குளுக்கோஸ் அளவு விரைவாக அதிகரிப்பதைத் தடுக்கின்றது.[29] பெருங்குடற் புற்றுநோய் மற்றும் இதய நோயைத் தடுப்பதற்கு அதிக அமிலோஸ் உணவுகளைப் பயன்படுத்துவது நல்லது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றது. உருளைக்கிழங்கு மற்றும் பார்லி போன்ற உணவுகளில் அதிக அமிலோஸ் இருக்கின்றது.


19. பொட்டாசியம் - உடலிலுள்ள நீர்த்தன்மை மற்றும் ஏலேக்ட்ரோலைட் சமநிலையை பேணுவதற்கு ஊட்டச்சத்து அத்தியாவசியமாகின்றது. பொட்டாசியக் குறைபாடானது சோர்வு, எரிச்சல், மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. உலர்ந்த அப்ரிகோட்ஸ், வெள்ளை அவரை வாழைப்பழங்கள், மீன், யோகர்ட் போன்ற உணவுகளில் பொட்டாசியம் உள்ளது.[30]


20. காமா ஒர்ய்சநோல் - உயிரணுக்கள் இரத்த ஓட்டத்திலுள்ள சர்க்கரையை எரிக்கின்றது. இதனால் இது இடுப்பு அல்லது வயிற்று பகுதிகளில் கொழுப்புப் படிவதைத் தடுக்கின்றது. தனிநபர்களின் எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கிறது, ஹைபர்லிபிடெமியா மற்றும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கின்றது, டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கிறது, எண்டோர்பினை (உடலில் நோவைக் குறைக்கச் செய்யப்படும் பொருட்கள்) வெளிவிடத் தூண்டலாகவுள்ளது மற்றும் மெல்லிய தசை வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது, நீரிழிவு நோயிலுள்ள இன்சுலினின் செறிவை அதிகரிக்கின்றது. தவிடுக் கோதுமை மற்றும் மூலிகைகள் போன்ற உணவுகளில் அதிகமாகவுள்ளது.[31]


21. மாப்பொருள் - ஒரு கப்பில் 54 கிராம் பாரம்பரிய அரிசியை எடுத்தால், அதில் கூடியளவு மாப்பொருளைக் கொண்டுள்ளது, இது சக்தியை வழங்குவதுடன் எமது உணவில் முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றது. உருளைக்கிழங்கு, ரொட்டி, தானியங்கள் மற்றும் பாஸ்தா போன்ற உணவு பொருட்களில் காணப்படுகின்றது.[32]


22. புரதம் - இது எலும்புகள், தசைகள், கசியிழையம், தோல் மற்றும் குருதிக்குத் தேவைப்படுகின்றது. இவைகள் நொதிகள், ஓமோன்கள், விட்டமின்கள் போன்றவற்றுக்காக தொகுதிகளாக உருவாகின்றது. சில அரிசிகளில் குறைந்தளவு புரதம் காணப்படுகின்றது, ஒரு கப் பாலைக் கருதும் போது புரதம் மட்டும் 8 கிராம் மட்டுமே புரதமுள்ளதாகப் பரிசீலிக்கப்பட்டுள்ளது, நிச்சயமாக இதற்கு பாரம்பரிய அரிசி ஒரு சிறந்த தேர்வாக இருக்கின்றது. இதே போன்று பால், இறைச்சி, கோழி, மீன், முட்டை, பருப்பு உணவுகளில் புரதம் இருக்கின்றது.[33]


எதிர்காலம்

அரிசிக்கு பௌத்த, இந்து மற்றும் முஸ்லீம் மக்கள் மத்தியில் ஒரு புனிதமான தொடர்பு உள்ளது. தேங்காய் பாற்சாதம் புத்தரின் முதற் பிரசாதம் என்றும் புனிதமான பண்டிகைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் போது இலங்கைக் கலாச்சாரத்தின் முக்கிய உணவு என்றும் கூறப்படுகின்றது. நெய்யில் அல்லது சுத்தமான வெண்ணெயில் சமைத்த சாதமானது முகம்மது நபிகளின் விருப்பமான உணவு என்று கூறப்படுகிறது.


சில தேயிலை வகைகள் சர்வதேச முத்திரை பெற்றுள்ளது போன்று பாரம்பரிய அரிசிக்கும் சர்வதேச முத்திரையை பெறும் முன்னோடி முயற்சியாக பாரம்பரிய அரிசி தொழிற்முத்திரையிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.[34]