Showing posts with label 2020. Show all posts
Showing posts with label 2020. Show all posts

Monday, 17 May 2021

ALMA ,ANDREA, MEZA ,CARMONA ,MEXICAN, MODEL, WON CROWNED MAY 16,2021 MISS UNIVERSE 2020 BORN 1994 AUGUST 13

 


ALMA ANDREA MEZA CARMONA ,MEXICAN MODEL WON CROWNED MAY 16,2021  MISS UNIVERSE 2020 BORN 1994 AUGUST 13



Alma Andrea Meza Carmona (born 13 August 1994) is a Mexican model and beauty pageant titleholder who was crowned Miss Universe 2020. Since winning the title, she became the third Mexican woman to be crowned Miss Universe. She had previously been crowned Mexicana Universal 2020 and Miss Mexico 2017, and placed as the first runner-up at Miss World 2017.


Early life and education

Meza was born on 13 August 1994 in Chihuahua City to parents Alma Carmona and Santiago Meza. She grew up in Chihuahua City as the eldest of three daughters and has Chinese ancestry. After completing secondary school, Meza enrolled in the Autonomous University of Chihuahua, where she studied software engineering.[1] She graduated with her degree in 2017, and subsequently began working in Mexico as a software engineer in addition to her career as a model.[2][3]


Pageantry

Miss Mexico 2017

Meza began her pageantry career in 2016, after she was selected to represent Chihuahua at Miss World Mexico 2016. This was the first edition of the pageant after the Nuestra Belleza México competition lost its license for Miss World. In the pageant, Meza advanced to the top sixteen, then the top ten, and ultimately the top five. After reaching the top five, Meza was one of the two contestants awarded a crown, being crowned as Miss Mexico 2017.[4] Ana Girault, representing Mexico City, was crowned Miss Mexico 2016 and given the opportunity to represent Mexico at Miss World 2016, while Meza was given the opportunity to represent Mexico at Miss World 2017. Also, Meza won the sports challenge at the competition.[4]



Miss World 2017

Miss World 2017 was later held on 18 November 2017 at Sanya City Arena in Sanya, China. In the pre-pageant activities, Meza won group sixteen of the Head-to-Head Challenge, which gave her direct entry into the top forty. Additionally, she placed as the fourth runner-up in the talent competition. During the finals of the competition, Meza advanced from the top forty into the top fifteen, top ten, and top five. After reaching the top five, Meza placed as the first runner-up behind winner Manushi Chhillar of India. In addition to her first runner-up finish, Meza was additionally crowned Miss World Americas, placing her within the 2017 Miss World Continental Queens of Beauty.[5][6]


Mexicana Universal 2020

In 2020, Meza was crowned Mexicana Universal Chihuahua 2020, allowing her to represent Chihuahua at Mexicana Universal 2020. During pre-pageant activities, Meza won six challenges, including the sports challenge. The final was held on 29 November 2020 in Querétaro City. Meza advanced to the top fifteen and top ten, ultimately being crowned Mexicana Universal 2020.[7][2][8][9]



Miss Universe 2020

As Mexicana Universal, Meza represented Mexico at Miss Universe 2020. The final of the competition was held on 16 May 2021 at the Seminole Hard Rock Hotel & Casino Hollywood in Hollywood, Florida, after being postponed from the fall of 2020 to May 2021 due to the COVID-19 pandemic.[10] Meza advanced from the initial pool of 74 contestants to the top 21, then the top ten, and finally the top five, where she was crowned the winner by outgoing titleholder Zozibini Tunzi. Following her win, she became the third Mexican woman to win the crown, following Lupita Jones and Ximena Navarrete.[11][12]







Washington: 

Miss Mexico was crowned Miss Universe on Sunday in Florida, after fellow contestant Miss Myanmar used her stage time to draw attention to the bloody military coup in her country.

Sunday night marked the Miss Universe competition's return to television, after the pageant was cancelled in 2020 for the first time due to the coronavirus pandemic.

Andrea Meza, 26, finished first ahead of the Brazilian and Peruvian finalists in a flashy televised event, hosted by American actor Mario Lopez and television personality Olivia Culpo.

Former Miss Universe contestants Cheslie Kryst, Paulina Vega and Demi-Leigh Tebow (who won the title in 2017) served as competition analysts and commentators, and a panel of eight women determined the winner.

Dressed in a sparkling red evening gown, Meza tearfully walked the catwalk as Miss Universe for the first time, before rushing back for a group hug with the other competitors.

Meza beat more than 70 contestants from around the globe in the 69th installment of Miss Universe, which was held at the Hard Rock Hotel & Casino in Hollywood, Florida.


In the days leading up to the final competition, Miss Myanmar Thuzar Wint Lwin, who made the top 21, made waves when she used her time in the spotlight to bring attention to the coup in her country.

"Our people are dying and being shot by the military every day," she said during her biographical video, which showed photos of her taking part in the anti-coup protests. "Therefore I would like to urge everyone to speak out about Myanmar."

She also won the award for best national costume: during that competition segment on Thursday, she wore an outfit beaded in traditional Burmese patterns and held up a sign that said, "Pray for Myanmar."

Myanmar has been in uproar since February 1, when the army ousted civilian leader Aung San Suu Kyi.

At least 796 people have been killed by security forces since then, according to a local monitoring group, while nearly 4,000 people are behind bars.

Miss Singapore Bernadette Belle Ong -- who did not make the top 21 -- also used the national costume portion to make a political statement.



Dressed in a glittering red bodysuit and matching thigh-high boots, she turned around to reveal her cape -- in the colors of the Singaporean flag -- was painted with the words "Stop Asian Hate."

"What is this platform for if I can't use it to send a strong message of resistance against prejudice and violence?" she wrote on Instagram alongside pictures of her outfit.

The United States in particular has seen a surge in anti-Asian violence in the past year, which activists have blamed on former president Donald Trump's rhetoric, especially his repeated description of Covid-19 as the "China virus."

The pageant has also drawn criticism in the past for objectifying the contestants.

In recent years, the competition has shifted image, focusing more on female empowerment and activism.

And there’s a new Miss Universe!

After a year or more delay due to the coronavirus pandemic, the Miss Universe Competition was held on May 16th at the Seminole Hard Rock Hotel & Casino in Hollywood, Florida. Mario Lopez And ex-miss universe Olivia CulpoWon the crown in 2012, Luis Fonsi..

It was Miss Mexico who brought back the ultimate crown of the year Andrea Mesa Surprised the selection community with her beauty and brains.

During the final statement round, Miss Mexico was asked to work on the topic of changing beauty standards. “We live in an increasingly evolving society, and as we progress as a society, we have progressed with stereotypes,” she shared through an interpreter. “Today, beauty isn’t just about our appearance. To me, beauty is radiated not only to our spirit, but also to our hearts and the way we act.

And just a few minutes ago, Miss Mexico also faced a final question round where she was asked to share how she dealt with the COVID-19 pandemic.

Miss Mexico Andrea Meza Crowns Miss Universe 2021-E!online


Recent titleholders

EditionCountryTitleholderNational TitleVenue of CompetitionNumber of Entrants
2020 MexicoAndrea MezaMexicana UniversalHollywood, FloridaUnited States74
2019 South AfricaZozibini TunziMiss South AfricaAtlantaGeorgiaUnited States90
2018 PhilippinesCatriona GrayBinibining PilipinasBangkokThailand94
2017 South AfricaDemi-Leigh Nel-PetersMiss South AfricaLas VegasNevadaUnited States92
2016 FranceIris MittenaereMiss FranceManilaPhilippines86


Friday, 23 October 2020

RAJARAJA CHOLAN BORN ON AIPPASI SATHAYAM FALLS 2020 OCTOBER 26

 

RAJARAJA CHOLAN BORN ON AIPPASI SATHAYAM 

FALLS 2020 OCTOBER 26



ராஜராஜசோழன் 947 ஆம் ஆண்டு ஐப்பசி திங்கள் சதய நாளில் பிறந்தார் அக்டோபர் 26,2020சதய நாள் .



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


தமிழ்நாட்டின் வரலாற்றில் பொற்காலத்தைப் படைத்தவர்கள் ராஜராஜசோழனும் அவன் மகன் ராஜேந்திரசோழனும் ஆவார்கள். இவர்கள் ஏறத்தாழ இலங்கையை முற்றிலுமாக வென்று, சோழ ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக ஆக்கினார்கள். கி.பி. 982-ம் ஆண்டில், ஐந்தாம் மகிந்தன் என்ற சிங்கள அரசன் இலங்கையை ஆண்டு வந்தான். அவன், சோழர்களுக்கு எதிரிகளான பாண்டியனுக்கும், சேரனுக்கும் உதவி செய்து வந்தான்.


படையெடுப்பு


எனவே, இலங்கை மீது படையெடுக்க சோழமன் னன் ராஜராஜசோழன் முடிவு செய்தார். தன் மகன் ராஜேந்திர சோழன் தலைமையில் ஒருபெரிய கப்பல் படையை அனுப்பி வைத்தார்.





தமிழ்ப் போர் வீரர்களுடன் கப்பல்கள் இலங்கையை சென்றடைந்தன. போர்க் கப்பல்களைப் பார்த்து சிங்களர்கள் மிரண்டனர். சோழர் படையை எதிர்க்க துணிவின்றி, மன்னன் மகிந்தன் இலங்கையின் இன்னொரு பகுதியான ரோகண நாட்டிற்கு தப்பி ஓடி விட்டான். சோழர் படை, இலங்கையின் வடபகுதியை கைப்பற்றிக் கொண்டது. அந்தப் பகுதிக்கு `மும்முடிச் சோழ மண்டலம்' என்ற பெயர் சூட்டப்பட்டது. தலைநகரமான அனுராதபுரம் அழிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக பொலனறுவா நகரம் புதிய தலைநகரம் ஆக்கப்பட்டது. அதற்கு `சனநாதமங்கலம்' என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது.


சிங்கள மன்னனின் கருவூலத்தில் இருந்த நகைகள், வைர மாலைகள், அரசஅணிகலன்கள் முதலியவை கைப்பற்றப்பட்டன. உடைக்க முடியாத வாள் ஒன்று சோழர் வசமாகியது. இரண்டாவது படையெடுப்பு ரோகண நாட்டிற்கு தப்பி ஓடிய மகிந்தன், சும்மா இருக்கவில்லை. சோழருக்கு எதிராக பெரும்படை ஒன்றை திரட்டினான். இலங்கையில் சோழர்கள் கைப்பற்றிய பகுதியை மீட்க போர் தொடுத்தான்.





இதுபற்றி சோழ மன்னன் ராஜேந்திரனுக்குத் தெரிந்தது. அவன் கி.பி. 1017-ம் ஆண்டில் மீண்டும் இலங்கை மீது படையெடுத்தான். இரு தரப்புக்கும் இடையே பெரும் போர் நடந்தது. சோழ படைகளின் தாக்குதலை, மகிந்தன் படைகளால் சமாளிக்க முடியவில்லை. போரில் சோழர் படை வென்றது. சிங்களர் படை தோற்றது. மகிந்தனின் மணிமுடியும், அரசியின் மகுடமும் ராஜேந்திர னின் வசம் ஆகியது. அதுமட்டுமின்றி, 100 ஆண்டுகளுக்கு முன்னதாக, சிங்கள அரசனிடம் பாண்டிய மன்னன் பாதுகாப்பாக கொடுத்து வைத்திருந்த மணிமகுடத்தையும் ராஜேந்திர சோழன் கைப்பற்றினான்.


சிறையில் மகிந்தன்


போரில் தோற்றுப்போன மகிந்தன், சோழ வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு ராஜேந்திர சோழன் முன்பாக நிறுத்தப்பட்டான். ராஜேந்திரசோழன் தமிழ்நாட்டுக்கு திரும்பும்போது, மகிந்தனும் கொண்டு செல்லப்பட்டான். அங்கு சோழநாட்டு சிறையில் அடைக்கப்பட்டான். 12 ஆண்டு காலம் சிறையில் இருந்த மகிந்தன், சிறையிலேயே இறந்து போனான். மேற்கண்ட தகவல்கள், திருவாலங்காட்டு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.


ராஜேந்திர சோழன் வெற்றியை குறிக்கும் கல்வெட்டு ஒன்று, கொழும்பு நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் இன்னும் உள்ளது. மகிந்தனை ராஜேந்திரசோழன் முறியடித்தது பற்றி, சிங்களர்களின் வரலாற்று நூலான "சூளவம்ச''த்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மகிந்தனின் மகன்


ராஜேந்திர சோழனால் சிறை பிடிக்கப்பட்ட மகிந்தனுக்கு, காசிபன் என்ற மகன் இருந்தான். போர் நடந்தபோது அவனுக்கு வயது 12. அவனை சிங்களர்கள் ரகசியமாக வளர்த்து வந்தனர். சோழ நாட்டு சிறையில் மகிந்தன் இறந்த பிறகு, காசிபனை தங்கள் மன்னனாக சிங்களர்கள் அறிவித்தனர். சோழர்களை எதிர்க்க அவன் பெரும் படை திரட்டினான்.


இதை அறிந்த ராஜேந்திர சோழன், தன் மகன் இராசாதிராஜன் தலைமையில் ஒரு படையை அனுப்பினான். கி.பி.1041-ல் நடைபெற்ற இந்தப் போரில் காசிபன் மாண்டான். சிங்களப்படை தோற்றுப்போய், சிதறி ஓடிற்று. அதன்பின், கீர்த்தி என்ற சிங்கள மன்னன் சோழர்களுடன் போர் புரிந்து தோற்றுப் போனான். அதனால் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல் அவன் தற்கொலை செய்து கொண்டான்.


பராக்கிரமபாண்டியன்


பிற்காலத்தில், சோழர்கள் புகழ் மங்கி பாண்டியர்களின் கை ஓங்கியது. அந்தக் காலக்கட்டத்தில், பாண்டியர்களும் இலங்கை மீது படையெடுத்தனர்.


கி.பி. 1255-ம் ஆண்டு பட்டத்திற்கு வந்த ஜடாவர்மன் வீரபாண்டியன், இலங்கை மீது படையெடுத்து வெற்றி கண்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.


தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய அரிகேசரி பராக்கிரமபாண்டியன் (கி.பி.1422-61) இலங்கை மீது படையெடுத்து சிங்களரை பல முறை வென்றதாக கல் வெட்டு ஆதாரங்கள் உள்ளன.

Sunday, 4 October 2020

INJUSTICE WAS SOLVED BY INJUSTICE JUDGEMENT 2020 SEPTEMBER 30 -BABUR MASJID CASE

 


 INJUSTICE WAS SOLVED BY INJUSTICE JUDGEMENT 2020 SEPTEMBER 30

vகடப்பாரையை விழுங்கி கஷாயம் குடிப்பதா?

.


இயற்றப்பட்ட சட்டங்களின் ஆட்சியைவிட, மக்கள் மனதில் விதைக்கப்படும் நம்பிக்கைகளே ஆட்சியாளர்களின் பலமாகவும் பலவீனமாகவும் செயல்படும்.


பிரீமியம் ஸ்டோரி

டெல்லி நகரத்துக்குச் செல்பவர்களெல்லாம் ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். இந்து, இஸ்லாமிய மன்னர்கள், தேச பக்தர்கள், உலக மனித விடுதலைக்குக் குரல் கொடுத்தவர்களின் பெயர்களே பல தெருக்களுக்குச் சூட்டப்பட்டிருக்கும். ஆனால், திடீரென்று `ஔரங்கசீப் மார்க்’ (தெரு) பெயர் மாற்றப்பட்டு, `அப்துல் கலாம் மார்க்’ என்று போடப்பட்டிருக்கிறது. இன்னும் பல முகலாய மன்னர்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் பலகைகளை மாற்றுவதற்கு, சில அடிப்படைவாதிகள் குரல் கொடுத்துவருகின்றனர்.

ஔரங்கசீப் பெயர் எடுத்துவிடப்படுவதும், அதே சாலைக்கு அப்துல் கலாம் பெயர் வைக்கப்படுவதும் எதை வெளிப்படுத்துகிறது? வரலாற்றைக் கட்டமைப்பது பலம் பொருந்திய அரசுகளே. அவற்றில் பெரும்பாலும் பெரும்பான்மையினரின் விருப்பங்களே உள்ளடங்கியிருக்கும். இயற்றப்பட்ட சட்டங்களின் ஆட்சியைவிட, மக்கள் மனதில் விதைக்கப்படும் நம்பிக்கைகளே ஆட்சியாளர்களின் பலமாகவும் பலவீனமாகவும் செயல்படும்.



 கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

லக்னோ சி.பி.ஐ நீதிமன்ற விசாரணை நீதிபதி எஸ்.கே.யாதவ், தனது 2,300 பக்க தீர்ப்பில், பாபர் மசூதியை இடித்ததற்கான சாட்சிகள் போதாமையையும், இடிப்பதற்கான ரகசிய சதியை சி.பி.ஐ நிரூபிக்கத் தவறிவிட்டது என்பதையும் கூறியதோடு, தீர்ப்பு கூறிய அன்றே பதவியிலிருந்து ஓய்வும் பெற்றுவிட்டார். அவர் கொடுத்த தீர்ப்பு இறுதியானது அல்ல; எனினும், அதன்மீது அலகாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு, பிறகு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு இப்படிக் காட்சிகள் மாறலாம். ஆனால், தீர்ப்புகள் என்னவோ நமது பேரக்குழந்தைகள் காலத்தில்தான் வரக்கூடும்.


தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ‘சத்யமேவ ஜெயதே’ (வாய்மையே வெல்லும்) என்று கருத்து தெரிவித்தார். அரசு மற்றும் நீதிமன்றங்களின் லச்சினைகளிலும் இந்த கோஷமே பொறிக்கப்பட்டிருக்கும். `நீதி வென்றதா?’ என்ற கேள்விக்கு தீர்ப்பு வெளியான மறுநாள், டெலிகிராப் நாளிதழில் முதல் பக்கத்தில் கழுதையின் படம் ஒன்றைப் போட்டிருக்கிறார்கள்.



கடப்பாரையை விழுங்கி கஷாயம் குடிப்பதா?

இந்தியாவின் சிறப்பு புலனாய்வுக்குழுவான சி.பி.ஐ எடுத்த ஒரு வழக்கு 29 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிற தென்றால், அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் சந்தேகத்துக்கு உள்ளாகின்றன. விசாரணைக் குற்றவாளிகளாக கூண்டில் நிறுத்தப்பட்டவர்களின் பெயர்களைப் பார்த்தாலே நமக்கு ஒரு விஷயம் புரியும். எல்.கே.அத்வானி முன்னாள் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர். அவரது துறையின் கீழ்தான் சி.பி.ஐ செயல்பட்டுக் கொண்டிருந்தது. முரளி மனோகர் ஜோஷி கல்வி அமைச்சராகவும், உமாபாரதி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர்கள். உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்த கல்யாண் சிங்கும் ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபர்.



1992, டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டபோது உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்த கல்யாண் சிங் மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. ஏனென்றால், ‘மசூதிக்கு எவ்வித அச்சுறுத்தலும் இருக்கக் கூடாது’ என்ற உத்தரவை நிறைவேற்றும் பொறுப்பு அந்த அரசுக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி மசூதி இடிக்கப்பட்டதால், நீதிமன்ற கண்டனத்துக்குள்ளானதோடு, மாநில முதல்வருக்கு ஒரு நாள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. காலையில் தனது பரிவாரங்களுடன் நீதிமன்றம் வந்த முதல்வர், மாலையில் வீடு திரும்பியது அந்த தண்டனையையே கேலிக்குள்ளாக்கியது. அந்தச் சம்பவத்தைப் பற்றிப் பெருமையுடன், ‘நான் பாபர் மசூதியை இடிக்கும்போது துப்பாக்கிச்சூடு நடத்தக் கூடாது என்று காவல்துறைக்கு எழுத்து மூலமாக உத்தரவிட்டேன். அதனால் ஒரு கரசேவகர்கூட உயரிழக்கவில்லை’ என்று குறிப்பிட்டார் கல்யாண் சிங்.


கடப்பாரையை விழுங்கி கஷாயம் குடிப்பதா?

மசூதி இடிப்பு இந்தியா முழுவதும் பரவலான கோபக்கணைகளை எழுப்பியதோடு, நூற்றுக்கணக்கான உயிர்ச் சேதங்களையும் விளைவித்தது. ‘கல்யாண் சிங் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையும் வலுத்தது. `ஆட்சி பறிபோய்விடுமோ...’ என்று பரிதவித்த அவர், அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவிடம் தனது அரசைக் கலைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனாலும், அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.


மசூதியை இடித்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டாடியவர்கள், உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஏழாண்டு ஆட்சியை இழந்தாலும், கட்சியை பலப்படுத்திக்கொண்டார்கள். 2014-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் 80 தொகுதிகளில் 73 தொகுதிகளில் வெற்றிபெற்றதுடன், மத்தியிலும் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். பிறகு, 2017-ல் உத்தரப்பிரதேசத்திலும் ஆட்சியைக் கைப்பற்றினார்கள்.


`உலகமே பார்த்துக்கொண்டிருந்த தொலைக்காட்சிகளின் கேமராக்களில் பதிவான 500 வருடங்கள் பழைமையான பாபர் மசூதியை இடித்ததற்கு, ஒரு கிரிமினல் வழக்குகூட கிடையாதா?’ என்ற கேள்வி எழுந்துவிடும் என்பதால், கடமைக்கு ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதேசமயத்தில், கல்யாண் சிங் முதல் குற்றவாளியாக ஆக்கப்பட்டுவிடுவாரோ என்ற அச்சத்தில் அவரை 2014-ல் ராஜஸ்தானின் ஆளுநராக நியமித்தார்கள். அரசமைப்புச் சட்டத்தின் 361-வது பிரிவில், குடியரசுத் தலைவருக்கும், மாநில ஆளுநர்களுக்கும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளிலிருந்து சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவரும் 2019-ல் தனது பதவிக்காலத்தை முடித்துவிட்டுத் திரும்பிவிட்டார். ஆனால், வழக்கோ முடிவதாக இல்லை.


ராமர் கோயில் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், `பாபர் மசூதி இடிப்பு மிகக் கொடூரமான செயல் மட்டுமன்றி, சட்டத்தின் ஆட்சியையே கேள்விக்குள்ளாக்கியது’ என்று கோபமாகக் குறிப்பிட்டதுடன், வழக்கை 2020, ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிப்பதற்கு உத்தரவிட்டது. பின்னர், தொற்றுநோய் காரணமாக ஒரு மாத நீட்டிப்பு கொடுக்கப்பட்டது.


இடையே, ‘பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்குக் கொடுக்க வேண்டும்’ என்று பா.ஜ.க தனது முக்கிய அரசியல் கோரிக்கையாக வைத்ததோடு, அதன் தலைவர் அத்வானி குஜராத் சோமநாதர் கோயிலிலிருந்து ரதயாத்திரையாகப் புறப்பட்டது நாடு முழுவதும் கலவரத்தைத் தூண்டியது. `ஏற்கெனவே விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த வழக்குகளைத் துரிதமாக விசாரித்து முடிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையும் எழுந்தது.



கடப்பாரையை விழுங்கி கஷாயம் குடிப்பதா?

அந்தச் சமயத்தில்தான், ‘நாட்டிலுள்ள பிரச்னைகளையெல்லாம் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட நீதிமன்றங்களில் தீர்த்துவிட முடியாது; பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை ஆட்சியாளர்கள் புறக்கணித்துவிட முடியாது’ என்றெல்லாம் புதிது புதிதாக முத்துகளை உதிர்க்க ஆரம்பித்தனர் பா.ஜ.க தலைவர்கள். பாபர் மசூதி நிலம் சம்பந்தமான சொத்து வழக்கு நீதிமன்றங்களில் நடக்கிறதே என்று அவர்கள் அமைதியாகச் செல்ல விரும்பவில்லை. மாறாக, தாங்கள் அதிகாரத்திலிருந்த காலகட்டங்களில் சூட்சுமமான வேலைகளைச் செய்ய ஆரம்பித்தனர். கோயில் கட்டுவதற்கான செங்கற்களை நாடு முழுவதும் தயார் செய்து அயோத்தியில் கொண்டு சேர்த்தனர். ராஜஸ்தானிலிருந்து நூற்றுக்கணக்கான சிற்பிகள் வரவழைக்கப்பட்டு, இரவு பகலாக கோயிலின் கல்தூண்கள் வடிவமைக்கப்பட்டன.


மசூதியைச் சுற்றியிருந்த நிலங்களை மத்திய பா.ஜ.க அரசு, நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் கையகப்படுத்தியது. அந்த நடவடிக்கையை ‘சட்டப்படி செல்லும்’ என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. பாபர் மசூதியில் தொழுகை நடக்கவில்லையென்றாலும், அதன் ஒரு பகுதியில் ராமர் சிலைக்கான வழிபாடுகள் தொடர்ந்து நடத்துவதற்கு நீதிமன்றங்கள் அனுமதித்தன. `வழிபாட்டுத்தலம் யாருக்குச் சொந்தம்...’ என்ற வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்னரே இத்தனை ஏற்பாடுகள்... அப்படியென்றால், அவர்களுக்கு நீதிமன்றங்கள்மீது எத்தகைய ‘நம்பிக்கை’ இருந்திருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.


தலைமை நீதிபதி கோகாய் தலைமையில் அமைந்த அரசியல் சாசன அமர்வு, ராமர் கோயில் விவகாரத்தில் விசித்திரமான தீர்ப்பொன்றை அளித்தது. ‘பாபர் மசூதி அமைந்திருக்கும் நிலத்தில், ஏற்கெனவே இந்து கோயில் இருந்ததற்கான தடயங்கள் நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும், 500 வருடங்கள் தொடர்ச்சியாக இந்துக்கள் அங்குதான் ராமர் தோன்றினார் என்ற நம்பிக்கையுடன் வழிபட்டுவருகின்றனர். அதனால், இடிக்கப்பட்ட மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலங்களை மத்திய அரசு ஏற்படுத்தக்கூடிய ஓர் அறக்கட்டளை வசம் ஒப்படைத்து, ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம்’ என்ற அதிர்ச்சியான தீர்ப்பை நீதிபதிகள் தங்களது சிறப்பு அதிகாரத்தின் மூலம் வழங்கினர். ஆக பா.ஜ.க, ‘சட்டங்களால் தீர்க்க முடியாது; மக்களின் நம்பிக்கையைக் கருத்தில்கொள்ள வேண்டும்’ என்று கூறிவந்தது நீதிமன்றத் தீர்ப்பிலும் எதிரொலித்தது.


இப்போது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கிறது. இந்த வழக்கில், ‘பத்திரிகைக் குறிப்புகளைக் கொடுத்த சி.பி.ஐ., அந்தச் செய்திகள் வெளியான முழுச் செய்தித்தாள்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. காணொளிக் காட்சிகள் பதிவான குறுந்தகடுகளை, சீலிட்ட உறையில் நீதிமன்றத்துக்குத் தரவில்லை’ என்று நீதிபதி கருத்து தெரிவித்திருக்கிறார். ‘மசூதியை இடிப்பதற்கு ஒன்றுகூடி ரகசியச் சதி தீட்டியதற்கான சாட்சியம் இல்லை’ என்று கூறிய நீதிபதி, இந்திய தண்டனைச் சட்டத்தின் 149-வது பிரிவைப் பார்க்க மறந்துவிட்டார். அதன்படி, சட்டவிரோத கும்பலில் இருக்கும் ஒவ்வொரு நபரும், அந்த கும்பல் செய்யும் குற்றங்களுக்கான சதியிலும் ஈடுபட்டிருப்பார்கள் என நம்பலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.



ரத யாத்திரையில் தொடங்கி இன்று ராமர் கோயிலுக்கான பூமி பூஜையும் முடிந்துவிட்ட சூழ்நிலையில் ஒரு மாவட்ட நீதிபதி மசூதி இடிப்பில் வேறு என்ன தீர்ப்பு கொடுத்திருக்க முடியும்? அரசு மற்றும் கட்சி இயந்திரங்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தியதுடன், மக்களிடமும் செய்த பிரசாரங்களின் விளைவு, ‘குற்றவாளிகள்’ என்று நிறுத்தப்பட்டவர்கள் இன்று ராம பக்தர்களாகக் காட்சியளிக்கிறார்கள். தீர்ப்பு கிடைத்தவுடன் காணொளியில் ஆஜரான அத்வானி சொன்ன வார்த்தை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்பதே.


கடப்பாரையை விழுங்கி கஷாயம் குடிப்பது என்பதற்கு இதைவிட நல்ல விளக்கம் இருக்க முடியாது!


Wednesday, 30 September 2020

BABUR MASJID CASE JUDGEMENT DAY SEPTEMBER 30,2020

 

BABUR MASJID CASE  JUDGEMENT DAY  

SEPTEMBER 30,2020





குற்றச்சாட்டுகளை போதிய ஆதரங்களுடன் சி.பி.ஐ நிரூபிக்கவில்லை. எனவே, பாபர் மசூதி வழக்கில் சம்பந்தப்பட்ட அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் இந்த நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கிறது.

லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில், 351 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி, 600 பக்க அறிக்கையைச் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சி.பி.ஐ. அவை அனைத்தையும் சரிபார்த்து வாதி, பிரதிவாதிகளிடம் விசாரணை நடத்தி தீப்பளித்திருக்கிறது லக்னோ சிறப்பு நீதிமன்றம்.


1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்களான அத்வானி, கல்யாண் சிங், முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆரம்பத்தில் இரண்டு வழக்குகளாக இருந்தது, பின்னர் 49 வழக்குகளாக விரிவடைந்தது. முதற்கட்டத்தில் முக்கியத் தலைவர்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. விசாரணைகளும் வழக்குகளும் அதிகரிக்கவே மொத்தம் 48 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் தற்போது 32 பேர் மட்டுமே உயிருடன் இருக்கிறார்கள்.


சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான பாபர் மசூதி வழக்கில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று லக்னோ சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகிய மூன்று முக்கியப் புள்ளிகளைத் தவிர இந்த வழக்கில், தற்போதைய பா.ஜ.க எம்.பி-க்களான சாக்‌ஷி மகாராஜ் (Sakshi Maharaj), லல்லு சிங் (Lallu Sing), பிரிஜ் பூஷண் சரண் சிங் (Brij Bhushan Sharan Singh) ஆகியோரும் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். இதனால், தீர்ப்பு வழங்கப்படும் லக்னோ சிறப்பு நீதிமன்றத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.





351 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி, 600 பக்க அறிக்கையைச் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சி.பி.ஐ. அவை அனைத்தையும் சரிபார்த்து வாதி, பிரதிவாதிகளிடம் விசாரணை நடத்தியது லக்னோ சிறப்பு நீதிமன்றம். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த வழக்கு கடந்துவந்த பாதையைச் சற்றுத் திரும்பிப் பார்க்கலாம்.


1528

* பாபரின் தளபதி மிர் பாகி என்பவர் அயோத்தியில் பாபர் மசூதியைக் கட்டினார்.


1853

* பாபர் மசூதி கட்டப்பட்டபோது, அங்கிருந்த இந்துக் கோயில் இடிக்கப்பட்டதாகச் சிலர் பிரச்னையைக் கிளப்பினர்.


1859

* பதற்றம் அதிகரிக்கவே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மசூதியைச் சுற்றி வேலி அமைத்தனர்.





* மசூதிக்கு உள்ளே இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தவும், வெளியில் இந்துக்கள் வழிபாடு நடத்தவும் அனுமதிக்கப்பட்டனர்.

1860 - 1960

* விஷ்வ இந்து பரிஷத், நிர்மோகி அகாரா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டப்போவதாக அறிவித்தன. இது தொடர்பாக சில வழக்குகளும் இந்து அமைப்புகள் சார்பில் தொடங்கப்பட்டன.


1961

* சன்னி சென்ட்ரல் போர்டு அமைப்பைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் `மசூதிக்குள் இருக்கும் சிலைகளை அப்புறப்படுத்த வேண்டும். மசூதி மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகள் எங்களுக்கே சொந்தம்’ என்று மனுத்தாக்கல் செய்தனர்.


1984

* பிரச்னைக்குரிய இடத்தில் மசூதியை இடித்துவிட்டு, ராமர் கோயில் கட்டப்போவதாக இந்துக் குழுக்கள் அறிவித்தன. கோயில் கட்டுவதற்காக மிகப்பெரிய இயக்கம் உருவெடுத்தது. இதில் பா.ஜ.க தலைவர் அத்வானி முக்கியப் பங்குவகித்தார்.



1986

* `பாபர் மசூதி கதவுகள் திறக்கப்பட வேண்டும். இந்துக்கள் அங்கு வழிபட அனுமதிக்கப்பட வேண்டும்’ என்ற ஹரிசங்கர் துபேவின் மனுவை ஏற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு, இஸ்லாமியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.


* பாபர் மசூதி ஆக்‌ஷன் கமிட்டி உருவாக்கப்பட்டது.


1989

* பாபர் மசூதி அருகே ராமர் கோயில் கட்ட விஷ்வ இந்து பரிஷத் அடிக்கல் நாட்டியது.


* இதுவரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கு, உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது.





அத்வானி ரத யாத்திரை

அத்வானி ரத யாத்திரை

1990

* வி.ஹெச்.பி (விஷ்வ இந்து பரிஷத்) அமைப்பினர் மசூதியின் சில பகுதியைச் சேதப்படுத்தினர்.


* அதே ஆண்டில், செப்டம்பர் மாதம் குஜராத் மாநிலம், சோம்நாத்திலிருந்து அத்வானி ரத யாத்திரையைத் தொடங்கினார்.



1991

* நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியானது பா.ஜ.க.


* ரத யாத்திரையின் பலனாக உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியையும் கைப்பற்றியது.


* இதைத் தொடர்ந்து, கோயில்கட்ட கரசேவை இயக்கம் தொடங்கப்பட்டது.


1992

* டிசம்பர் 6, கரசேவகர்களால் பாபர் மசூதி முற்றிலுமாக இடிக்கப்பட்டது.


* இதனால் நாடெங்கும் கலவரம் வெடித்தது. 2,000 பேர் உயிரிழந்தனர். அதில், அநேகர் இஸ்லாமியர்கள் என்றும் சொல்லப்பட்டது.


* இதன் பின்னணியை விசாரிக்க அப்போது பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ், லிபரான் ஆணையத்தை அமைத்தார்.


பாபர் மசூதி

பாபர் மசூதி

Junior Vikatan

1993

* பாபர் மசூதி இருந்த பகுதியில் 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தியது.


* பா.ஜ.க-வைச் சேர்ந்த அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, சிவசேனா தலைவர் பால் தாக்ரே உள்ளிட்ட சில தலைவர்கள்மீது சதித் திட்டம் தீட்டியதாக சி.பி.ஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


2001

* பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி சி.பி.ஐ நீதிமன்றம் 21 பேரை விடுதலை செய்தது.


* அப்போது அத்வானி உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.


2002

* அலகாபாத் உயர் நீதிமன்றம், பாபர் மசூதி இருந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்து, அங்கு இந்துக் கோயில் இருந்ததா என்று ஆய்வறிக்கை தாக்கல் செய்யும்படி `ஆர்க்கியாலஜி சர்வே ஆஃப் இந்தியா’வுக்கு உத்தரவிட்டது.


2010

* அலகாபாத் உயர் நீதிமன்றம், மத்திய அரசு கையகப்படுத்திய இடத்தில் மூன்றில் இரண்டு பகுதி நிலத்தை ராமர் கோயில் கட்டவும், மீதமுள்ள ஒரு பகுதி நிலத்தை இஸ்லாமியர்களுக்கு வழங்கவும் உத்தரவிட்டது.


* அத்வானி உள்ளிட்டோரை விடுதலை செய்ய கோரி உத்தரவிட்ட ரேபரேலி உயர் நீதிமன்றத் தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.



2017

மார்ச் 6

* பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, சி.பி.ஐ தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவில் ``ஒரு வழக்கை முழுமையாக விசாரிக்காமல் `கால தாமதம்’ என்பது போன்ற `டெக்னிக்கல்’ காரணங்களின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது’’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.


உச்ச நீதிமன்றம் 

உச்ச நீதிமன்றம்

மார்ச் 17

* `பாபர் மசூதி இடிப்பு சதியில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களுக்குத் தொடர்பு இருக்கிறது’ என்று சி.பி.ஐ திட்டவட்டமாகக் கூறியது.


* `இது தொடர்பாக மிக விரிவாக விசாரணை நடத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


ஏப்ரல் 6

* `அத்வானி உள்ளிட்டோரின் விடுதலையை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறிய உச்ச நீதிமன்றம், ரேபரேலியில் நடந்துவந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கை அரசியல் அமைப்புச் சட்டம் 142 விதியின் கீழ், லக்னோவுக்கு மாற்ற உத்தரவிட்டது.


ஏப்ரல் 19

* அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க சி.பி.ஐ-க்கு உத்தரவிடப்பட்டது. தினந்தோறும் விசாரணை நடத்தி, இரண்டாண்டுகளுக்குள் வழக்கை முடிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


மே 30

* அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியது லக்னோ சிறப்பு நீதிமன்றம். பிறகு, ஜாமீன் ரத்து செய்யப்பட்டு அவர்கள் மீது சதிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.


2018-2019

* குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் இரண்டு ஆண்டுகளாகத் தீவிர விசாரணை மேற்கொண்டது சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றம்.


2020

ஜூலை 23

* முரளி மனோகர் ஜோஷியிடம் சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றம் காணொலி வாயிலாக விசாரணை நடத்தியது. தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துப் பேசினார் ஜோஷி.


முரளி மனோகர் ஜோஷி - அத்வானி

முரளி மனோகர் ஜோஷி - அத்வானி

உ.பி: வெட்டுப்பட்ட நாக்கு; செயலிழந்த கால்கள்; பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண் - நடந்தது என்ன?

Also Read

உ.பி: வெட்டுப்பட்ட நாக்கு; செயலிழந்த கால்கள்; பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண் - நடந்தது என்ன?

ஜூலை 24

* அத்வானியிடமும் காணொலி வாயிலாக விசாரணை நடத்தப்பட்டது. அத்வானியும் தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துவிட்டார்.



செப்டம்பர் 1

* வாதி, பிரதிவாதி என அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்தன. செப்டம்பர் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. தீர்ப்பு வழங்கப்படும் நாளில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி எஸ்.கே.யாதவ் உத்தரவிட்டார்.


செப்டம்பர் 26

* உமா பாரதி பா.ஜ.க-வின் தேசியப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட அன்று ஜே.பி.நட்டா-வுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில்,

அயோத்தி வழக்கில் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. இந்த வழக்கில், நான் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டாலும், நிச்சயம் ஜாமீன் பெறப் போவதில்லை. அப்படிப் பெற்றால் அது நம் கெளரவத்தைக் களங்கப்படுத்திவிடும். அயோத்தி இயக்கத்தில் பங்குபெற்றதற்கு நான் பெருமை கொள்கிறேன்

.

ANI

செப்டம்பர் 29

* அயோத்தி வழக்கில் முக்கியப் புள்ளிகளாக இருக்கும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் தீர்ப்பு வழங்கப்படவிருக்கும் நாளில், லக்னோ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வாய்ப்பில்லை என்று செய்திகள் வெளியாகின.


* உமா பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாலும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வயது முதிர்வு காரணமாகவும் பங்குகொள்ளவில்லை என்ற தகவல்களும் வெளியாகின. மூவரும் காணொலி வாயிலாக கலந்துகொள்வார்கள் என்றும் சொல்லப்பட்டது.


செப்டம்பர் 30

காலை 11:30 மணியளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு வெளியானது.


குற்றச்சாட்டுகளை போதிய ஆதரங்களுடன் சி.பி.ஐ நிரூபிக்கவில்லை. எனவே, பாபர் மசூதி வழக்கில் சம்பந்தப்பட்ட அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் இந்த நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கிறது.

லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு

``பாபர் மசூதி இடிப்பு என்பது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட சம்பவம் அல்ல. இந்த வழக்கில் போதுமான சாட்சியங்களும் ஆதாரங்களும் சி.பி.ஐ-யால் சமர்ப்பிக்கப்படவில்லை'' என்று லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தாலும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ தரப்பு மேல்முறையீடு செய்யலாம்.


.