Showing posts with label SEPTEMBER 30. Show all posts
Showing posts with label SEPTEMBER 30. Show all posts

Sunday, 4 October 2020

INJUSTICE WAS SOLVED BY INJUSTICE JUDGEMENT 2020 SEPTEMBER 30 -BABUR MASJID CASE

 


 INJUSTICE WAS SOLVED BY INJUSTICE JUDGEMENT 2020 SEPTEMBER 30

vகடப்பாரையை விழுங்கி கஷாயம் குடிப்பதா?

.


இயற்றப்பட்ட சட்டங்களின் ஆட்சியைவிட, மக்கள் மனதில் விதைக்கப்படும் நம்பிக்கைகளே ஆட்சியாளர்களின் பலமாகவும் பலவீனமாகவும் செயல்படும்.


பிரீமியம் ஸ்டோரி

டெல்லி நகரத்துக்குச் செல்பவர்களெல்லாம் ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். இந்து, இஸ்லாமிய மன்னர்கள், தேச பக்தர்கள், உலக மனித விடுதலைக்குக் குரல் கொடுத்தவர்களின் பெயர்களே பல தெருக்களுக்குச் சூட்டப்பட்டிருக்கும். ஆனால், திடீரென்று `ஔரங்கசீப் மார்க்’ (தெரு) பெயர் மாற்றப்பட்டு, `அப்துல் கலாம் மார்க்’ என்று போடப்பட்டிருக்கிறது. இன்னும் பல முகலாய மன்னர்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் பலகைகளை மாற்றுவதற்கு, சில அடிப்படைவாதிகள் குரல் கொடுத்துவருகின்றனர்.

ஔரங்கசீப் பெயர் எடுத்துவிடப்படுவதும், அதே சாலைக்கு அப்துல் கலாம் பெயர் வைக்கப்படுவதும் எதை வெளிப்படுத்துகிறது? வரலாற்றைக் கட்டமைப்பது பலம் பொருந்திய அரசுகளே. அவற்றில் பெரும்பாலும் பெரும்பான்மையினரின் விருப்பங்களே உள்ளடங்கியிருக்கும். இயற்றப்பட்ட சட்டங்களின் ஆட்சியைவிட, மக்கள் மனதில் விதைக்கப்படும் நம்பிக்கைகளே ஆட்சியாளர்களின் பலமாகவும் பலவீனமாகவும் செயல்படும்.



 கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

லக்னோ சி.பி.ஐ நீதிமன்ற விசாரணை நீதிபதி எஸ்.கே.யாதவ், தனது 2,300 பக்க தீர்ப்பில், பாபர் மசூதியை இடித்ததற்கான சாட்சிகள் போதாமையையும், இடிப்பதற்கான ரகசிய சதியை சி.பி.ஐ நிரூபிக்கத் தவறிவிட்டது என்பதையும் கூறியதோடு, தீர்ப்பு கூறிய அன்றே பதவியிலிருந்து ஓய்வும் பெற்றுவிட்டார். அவர் கொடுத்த தீர்ப்பு இறுதியானது அல்ல; எனினும், அதன்மீது அலகாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு, பிறகு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு இப்படிக் காட்சிகள் மாறலாம். ஆனால், தீர்ப்புகள் என்னவோ நமது பேரக்குழந்தைகள் காலத்தில்தான் வரக்கூடும்.


தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ‘சத்யமேவ ஜெயதே’ (வாய்மையே வெல்லும்) என்று கருத்து தெரிவித்தார். அரசு மற்றும் நீதிமன்றங்களின் லச்சினைகளிலும் இந்த கோஷமே பொறிக்கப்பட்டிருக்கும். `நீதி வென்றதா?’ என்ற கேள்விக்கு தீர்ப்பு வெளியான மறுநாள், டெலிகிராப் நாளிதழில் முதல் பக்கத்தில் கழுதையின் படம் ஒன்றைப் போட்டிருக்கிறார்கள்.



கடப்பாரையை விழுங்கி கஷாயம் குடிப்பதா?

இந்தியாவின் சிறப்பு புலனாய்வுக்குழுவான சி.பி.ஐ எடுத்த ஒரு வழக்கு 29 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிற தென்றால், அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் சந்தேகத்துக்கு உள்ளாகின்றன. விசாரணைக் குற்றவாளிகளாக கூண்டில் நிறுத்தப்பட்டவர்களின் பெயர்களைப் பார்த்தாலே நமக்கு ஒரு விஷயம் புரியும். எல்.கே.அத்வானி முன்னாள் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர். அவரது துறையின் கீழ்தான் சி.பி.ஐ செயல்பட்டுக் கொண்டிருந்தது. முரளி மனோகர் ஜோஷி கல்வி அமைச்சராகவும், உமாபாரதி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர்கள். உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்த கல்யாண் சிங்கும் ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபர்.



1992, டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டபோது உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்த கல்யாண் சிங் மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. ஏனென்றால், ‘மசூதிக்கு எவ்வித அச்சுறுத்தலும் இருக்கக் கூடாது’ என்ற உத்தரவை நிறைவேற்றும் பொறுப்பு அந்த அரசுக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி மசூதி இடிக்கப்பட்டதால், நீதிமன்ற கண்டனத்துக்குள்ளானதோடு, மாநில முதல்வருக்கு ஒரு நாள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. காலையில் தனது பரிவாரங்களுடன் நீதிமன்றம் வந்த முதல்வர், மாலையில் வீடு திரும்பியது அந்த தண்டனையையே கேலிக்குள்ளாக்கியது. அந்தச் சம்பவத்தைப் பற்றிப் பெருமையுடன், ‘நான் பாபர் மசூதியை இடிக்கும்போது துப்பாக்கிச்சூடு நடத்தக் கூடாது என்று காவல்துறைக்கு எழுத்து மூலமாக உத்தரவிட்டேன். அதனால் ஒரு கரசேவகர்கூட உயரிழக்கவில்லை’ என்று குறிப்பிட்டார் கல்யாண் சிங்.


கடப்பாரையை விழுங்கி கஷாயம் குடிப்பதா?

மசூதி இடிப்பு இந்தியா முழுவதும் பரவலான கோபக்கணைகளை எழுப்பியதோடு, நூற்றுக்கணக்கான உயிர்ச் சேதங்களையும் விளைவித்தது. ‘கல்யாண் சிங் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையும் வலுத்தது. `ஆட்சி பறிபோய்விடுமோ...’ என்று பரிதவித்த அவர், அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவிடம் தனது அரசைக் கலைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனாலும், அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.


மசூதியை இடித்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டாடியவர்கள், உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஏழாண்டு ஆட்சியை இழந்தாலும், கட்சியை பலப்படுத்திக்கொண்டார்கள். 2014-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் 80 தொகுதிகளில் 73 தொகுதிகளில் வெற்றிபெற்றதுடன், மத்தியிலும் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். பிறகு, 2017-ல் உத்தரப்பிரதேசத்திலும் ஆட்சியைக் கைப்பற்றினார்கள்.


`உலகமே பார்த்துக்கொண்டிருந்த தொலைக்காட்சிகளின் கேமராக்களில் பதிவான 500 வருடங்கள் பழைமையான பாபர் மசூதியை இடித்ததற்கு, ஒரு கிரிமினல் வழக்குகூட கிடையாதா?’ என்ற கேள்வி எழுந்துவிடும் என்பதால், கடமைக்கு ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதேசமயத்தில், கல்யாண் சிங் முதல் குற்றவாளியாக ஆக்கப்பட்டுவிடுவாரோ என்ற அச்சத்தில் அவரை 2014-ல் ராஜஸ்தானின் ஆளுநராக நியமித்தார்கள். அரசமைப்புச் சட்டத்தின் 361-வது பிரிவில், குடியரசுத் தலைவருக்கும், மாநில ஆளுநர்களுக்கும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளிலிருந்து சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவரும் 2019-ல் தனது பதவிக்காலத்தை முடித்துவிட்டுத் திரும்பிவிட்டார். ஆனால், வழக்கோ முடிவதாக இல்லை.


ராமர் கோயில் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், `பாபர் மசூதி இடிப்பு மிகக் கொடூரமான செயல் மட்டுமன்றி, சட்டத்தின் ஆட்சியையே கேள்விக்குள்ளாக்கியது’ என்று கோபமாகக் குறிப்பிட்டதுடன், வழக்கை 2020, ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிப்பதற்கு உத்தரவிட்டது. பின்னர், தொற்றுநோய் காரணமாக ஒரு மாத நீட்டிப்பு கொடுக்கப்பட்டது.


இடையே, ‘பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்குக் கொடுக்க வேண்டும்’ என்று பா.ஜ.க தனது முக்கிய அரசியல் கோரிக்கையாக வைத்ததோடு, அதன் தலைவர் அத்வானி குஜராத் சோமநாதர் கோயிலிலிருந்து ரதயாத்திரையாகப் புறப்பட்டது நாடு முழுவதும் கலவரத்தைத் தூண்டியது. `ஏற்கெனவே விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த வழக்குகளைத் துரிதமாக விசாரித்து முடிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையும் எழுந்தது.



கடப்பாரையை விழுங்கி கஷாயம் குடிப்பதா?

அந்தச் சமயத்தில்தான், ‘நாட்டிலுள்ள பிரச்னைகளையெல்லாம் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட நீதிமன்றங்களில் தீர்த்துவிட முடியாது; பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை ஆட்சியாளர்கள் புறக்கணித்துவிட முடியாது’ என்றெல்லாம் புதிது புதிதாக முத்துகளை உதிர்க்க ஆரம்பித்தனர் பா.ஜ.க தலைவர்கள். பாபர் மசூதி நிலம் சம்பந்தமான சொத்து வழக்கு நீதிமன்றங்களில் நடக்கிறதே என்று அவர்கள் அமைதியாகச் செல்ல விரும்பவில்லை. மாறாக, தாங்கள் அதிகாரத்திலிருந்த காலகட்டங்களில் சூட்சுமமான வேலைகளைச் செய்ய ஆரம்பித்தனர். கோயில் கட்டுவதற்கான செங்கற்களை நாடு முழுவதும் தயார் செய்து அயோத்தியில் கொண்டு சேர்த்தனர். ராஜஸ்தானிலிருந்து நூற்றுக்கணக்கான சிற்பிகள் வரவழைக்கப்பட்டு, இரவு பகலாக கோயிலின் கல்தூண்கள் வடிவமைக்கப்பட்டன.


மசூதியைச் சுற்றியிருந்த நிலங்களை மத்திய பா.ஜ.க அரசு, நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் கையகப்படுத்தியது. அந்த நடவடிக்கையை ‘சட்டப்படி செல்லும்’ என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. பாபர் மசூதியில் தொழுகை நடக்கவில்லையென்றாலும், அதன் ஒரு பகுதியில் ராமர் சிலைக்கான வழிபாடுகள் தொடர்ந்து நடத்துவதற்கு நீதிமன்றங்கள் அனுமதித்தன. `வழிபாட்டுத்தலம் யாருக்குச் சொந்தம்...’ என்ற வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்னரே இத்தனை ஏற்பாடுகள்... அப்படியென்றால், அவர்களுக்கு நீதிமன்றங்கள்மீது எத்தகைய ‘நம்பிக்கை’ இருந்திருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.


தலைமை நீதிபதி கோகாய் தலைமையில் அமைந்த அரசியல் சாசன அமர்வு, ராமர் கோயில் விவகாரத்தில் விசித்திரமான தீர்ப்பொன்றை அளித்தது. ‘பாபர் மசூதி அமைந்திருக்கும் நிலத்தில், ஏற்கெனவே இந்து கோயில் இருந்ததற்கான தடயங்கள் நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும், 500 வருடங்கள் தொடர்ச்சியாக இந்துக்கள் அங்குதான் ராமர் தோன்றினார் என்ற நம்பிக்கையுடன் வழிபட்டுவருகின்றனர். அதனால், இடிக்கப்பட்ட மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலங்களை மத்திய அரசு ஏற்படுத்தக்கூடிய ஓர் அறக்கட்டளை வசம் ஒப்படைத்து, ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம்’ என்ற அதிர்ச்சியான தீர்ப்பை நீதிபதிகள் தங்களது சிறப்பு அதிகாரத்தின் மூலம் வழங்கினர். ஆக பா.ஜ.க, ‘சட்டங்களால் தீர்க்க முடியாது; மக்களின் நம்பிக்கையைக் கருத்தில்கொள்ள வேண்டும்’ என்று கூறிவந்தது நீதிமன்றத் தீர்ப்பிலும் எதிரொலித்தது.


இப்போது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கிறது. இந்த வழக்கில், ‘பத்திரிகைக் குறிப்புகளைக் கொடுத்த சி.பி.ஐ., அந்தச் செய்திகள் வெளியான முழுச் செய்தித்தாள்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. காணொளிக் காட்சிகள் பதிவான குறுந்தகடுகளை, சீலிட்ட உறையில் நீதிமன்றத்துக்குத் தரவில்லை’ என்று நீதிபதி கருத்து தெரிவித்திருக்கிறார். ‘மசூதியை இடிப்பதற்கு ஒன்றுகூடி ரகசியச் சதி தீட்டியதற்கான சாட்சியம் இல்லை’ என்று கூறிய நீதிபதி, இந்திய தண்டனைச் சட்டத்தின் 149-வது பிரிவைப் பார்க்க மறந்துவிட்டார். அதன்படி, சட்டவிரோத கும்பலில் இருக்கும் ஒவ்வொரு நபரும், அந்த கும்பல் செய்யும் குற்றங்களுக்கான சதியிலும் ஈடுபட்டிருப்பார்கள் என நம்பலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.



ரத யாத்திரையில் தொடங்கி இன்று ராமர் கோயிலுக்கான பூமி பூஜையும் முடிந்துவிட்ட சூழ்நிலையில் ஒரு மாவட்ட நீதிபதி மசூதி இடிப்பில் வேறு என்ன தீர்ப்பு கொடுத்திருக்க முடியும்? அரசு மற்றும் கட்சி இயந்திரங்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தியதுடன், மக்களிடமும் செய்த பிரசாரங்களின் விளைவு, ‘குற்றவாளிகள்’ என்று நிறுத்தப்பட்டவர்கள் இன்று ராம பக்தர்களாகக் காட்சியளிக்கிறார்கள். தீர்ப்பு கிடைத்தவுடன் காணொளியில் ஆஜரான அத்வானி சொன்ன வார்த்தை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்பதே.


கடப்பாரையை விழுங்கி கஷாயம் குடிப்பது என்பதற்கு இதைவிட நல்ல விளக்கம் இருக்க முடியாது!


Wednesday, 30 September 2020

MADANPURI HINDI VILLAIN BORN SEPTEMBER 30,1915 - 1985 JANUARY 13

 

MADANPURI HINDI VILLAIN BORN 

SEPTEMBER 30,1915 - 1985 JANUARY 13



.Madan Puri (1915 – 13 January 1985) was an Indian actor of Hindi and Punjabi films. His brother was Amrish Puri. As a character actor mainly in negative roles (villain), he acted in about 430 films in a career spanning fifty years


Early life

Madan Lal Puri was born in Rahon, Nawanshahr, British India to Nihal Chand Puri and Ved Kaur. He studied in Rahon. He was the second of five children, with elder brother Chaman Lal Puri, younger brothers Amrish Puri and Harish Lal Puri and younger sister Chandrakanta Mehra.[3]


Career

Puri was one of the doyens of the Indian film industry in the late 1960s and early 1970s. He was the first cousin of the singer K. L. Saigal,[1] with whose help he started to make a mark in Bollywood. Once Puri was an established star he did the same for his brother, Amrish Puri, by helping him in establishing himself in the movie world.




Puri had an acting career which spanned over 40 years from the 1940s through to the mid-1980s. He appeared in more than 430 films. His film debut was titled Ahinsa in 1946. Madan made an average of eight films per year, playing villains and negative characters and the hero's or heroine's uncle, father or elder brother, grandfather, police officer and politician. He starred in a number of Punjabi films throughout his career such as Jatti, Jatt Punjabi and so on.[citation needed]


He died in 1985 of a heart attack at the age of 69.[4] He was a resident of R P Masani Road in Matunga, Mumbai, also known as Punjabi Galli, with other actors of that era including the Kapoors. Several films were released after his death until 1989 with his final being Santosh.[citation needed]


Personal life




Puri's wife, Sheela Devi Puri (Wadhera), died a few years after him. He is survived by three sons.[citation needed] Pravesh Puri, Lt. Col. (Dr.) Kamlesh K. Puri and Ramesh Puri. His son Kamlesh has published a book about the life and times of Madan Puri titled My Father, the Villain.


Selected filmography

Khazanchi (1941)

Ahinsa (1946)

Sona (1948)

Vidya (1948) as Harilal (Harry)

Dil Ki Duniya (1949)

Jeet (1949) as Ratan

Namoona (1949) as Madanpuri

Singaar (1949)

Anmol Ratan (1950)

Adaa (1951)

Deewana (1952)

Goonj (1952)

Raag Rang (1952)

Munna (1954)

Shri Chaitanya Mahaprabhu (1954)

Bhagwat Mahima (1955)

Jhanak Jhanak Payal Baaje (1955)

Aabroo (1956)

Heer (1956)

Baarish (1957)

Ek Saal (1957)

Mirza Sahiba (1957) as Shamir

Nau Do Gyarah (1957) as Radhey

Dilli Ka Thug (1958)

Howrah Bridge (1958) as John Chang

Kabhi Andhera Kabhi Ujala (1958)

Taqdeer (1958)

Trolley Driver (1958)

Insan Jaag Utha (1959) as Mohan Singh

Kanhaiya (1959) as Mano

Nai Raahen (1959)

Chaudhary Karnail Singh (1960) as Boota Singh

Jaali Note (1960)

Kala Bazar (1960) as Ganesh

Kiklee (1960)

Singapore (1960) as Chang

Pyaar Ka Saagar (1961)

Tel Malish Boot Polish (1961)

Bees Saal Baad (1962) as Dr. Pandey

China Town (1962)

Rakhi (1962) as Mr. Choudhury Bhagwandas

Gehra Daag (1963)

Godaan (1963)

Shikari (1963)

Sunheri Nagin (1963)

Ek Raaz (1963) as Chunilal

Ayee Milan Ki Bela (1964) as Ratanlal

Cha Cha Cha (1964)

Kashmir Ki Kali (1964) as Shyamlal

Kohraa (1964)

Mr. X in Bombay (1964)

Ziddi (1964) as Moti

Gumnaam (1965) as Dr. Acharya

Mohabbat Isko Kahete Hain (1965)

Neela Aakash (1965)

Shaheed (1965) as Jailor

Waqt (1965) as Balbir

Love in Tokyo (1966) as Asha's uncle

Main Wohi Hoon (1966) as Jagdish

Phool Aur Patthar (1966) as Boss (as Madanpuri)

Sawan Ki Ghata (1966)

Thakur Jarnail Singh (1966)

Yeh Zindagi Kitni Haseen Hai (1966)

Aag (1967) as Kallu Singh

Aamne Samne (1967)

Baharon Ke Sapne (1967) as Ranjeet

Gunehgar (1967)

Hamraaz (1967) as Captain (Rajesh's friend)

Johar in Bombay (1967) as Gopal

Shagird (1967)

Upkar (1967) Charan Das as Madanpuri

Aankhen (1968) as Captain

Duniya (1968)

Hai Mera Dil (1968)

Humsaya (1968)

Juaari (1968)

Ittefaq (1969) as Public Prosecutor Khanna

Aradhana (1969) as Prison Warden

Aadmi Aur Insaan (1969) as Sabharwal

Pyar Hi Pyar (1969) as Dindayal

Oos Raat Ke Baad (1969)

Pyar Ka Mausam (1969) as Shankar Kumar

Shatranj (1969) as Comrade Chang

Talash (1969) as Peter

The Train (1970) as No.1

Aag Aur Daag (1970)

Bhai Bhai (1970)

Choron Ka Chor (1970)

Devi (1970) (as Madanpuri) as Joginder

Kati Patang (1970) as Vshnu Prasad

My Love (1970)

Prem Pujari (1970) as Chang

Purab Aur Paschim (1970) as Preeti's dad

Yaadgaar (1970) as Madan Singh

Amar Prem (1971)

Caravan (1971) as Mithalal Tota

Ek Paheli (1971) as Shankarlal

Elaan (1971) as Mr. Verma

Guddi (1971) as Lambhardara

Haathi Mere Saathi (1971) as Ratanlal

Hulchul (1971) as Mahesh Jetley

Lakhon Mein Ek (1971) as Jaggu

Nadaan (1971) as Manghu

Paras (1971) as Thakur Prithvi Singh

Rakhwala (1971)

Ramu Ustad (1971)

Woh Din Yaad Karo (1971)

Apna Desh (1972) as Satyanarayan

Apradh (1972) as German Doctor

Dastaan (1972)

Double Cross (1972) as Maganbhai

Gora Aur Kala (1972) as Raja Zohravar Singh (Anuradha's Father)

Haar Jeet (1972)

Janwar Aur Insaan (1972)

Samadhi (1972)

Sazaa (1972)

Shehzada (1972) as Chanda's maternal uncle

Shor (1972) as Factory owner (Guest Appearance)

Wafaa (1972) as Zamindar

Sanjog (1972) as Shiv Dayal (Asha's Father)

Joshila (1973)

Loafer (1973)

Dhund (1973) as Inspector Joshi

Bada Kabutar (1973) as Ghaffoor

Bandhe Haath (1973) as Shyamu's mentor

Black Mail (1973/I) as Dr. Khurana

Daag: A Poem of Love (1973) as K.C. Khanna

Dharma (1973) as Mangal Singh

Gaddar (1973)

Nafrat (1973)

Naya Nasha (1973)

Anuraag (1973) as Amirchand

Majboor (1974) as Mahipat Rai

Benaam (1974) as Gopal

Ajanabee (1974) as Mr. M.M. Puri

Jab Andhera Hota Hai (1974)

Chor Machaye Shor (1974) as Seth Jamunadas

Bidaai (1974) as Dharam Das

Manoranjan (1974) as Police Inspector

Pran Jaye Par Vachan Na Jaye (1974) as Jagmohan

Roti Kapda Aur Makaan (1974) as Nekiram

Zehreela Insaan (1974)

Dharmatma (1975)

Zameer (1975) as Daku Maan Singh

Dafaa 302 (1975) Indian Penal Code Section 302 (Section of Murder) as Inspector General of Police

Deewaar (1975) as Samant (as Madanpuri)

Geet Gaata Chal (1975) as Sohan Singh

Ponga Pandit (1975) as Shambhu Nath

Rafoo Chakkar (1975) as Prakash

Raftaar (1975) as Rita's dad

Saazish (1975)

Warrant (1975) as Prof. Ashok Verma

Fakira (1976) as Chiman Lal

Mehbooba (1976) as Sardar

Bhanwar (1976) as John D'Souza / Johny

Aaj Ka Ye Ghar (1976) as Sajjan's Father-in-law

Aap Beati (1976)

Bairaag (1976)

Daaj (1976)

Kalicharan (1976) as Jaagir Singh

Khalifa (1976)

Aaina (1977) as M.B. Patil

Chakkar Pe Chakkar (1977)

Darinda (1977)

Dulhan Wahi Jo Piya Man Bhaye (1977)

Kasum Khoon Ki (1977)

Paapi (1977) as Harnamdas (Aasha's father)

Ram Bharose (1977)

Shirdi Ke Sai Baba (1977) as Ranbir Singh

Vishwasghaat (1977) as Uday's dad

Ghar (1978) as Vikas' Father

Aahuti (1978) as Heeralal

Ankhiyon Ke Jharokhon Se (1978) as Mr. Mathur (Arun's dad)

Chor Ho To Aisa (1978) as Chinaramu "Ramu"

Heeralaal Pannalaal (1978)

Naya Daur (1978)

Swarg Narak (1978) as Lala Lalchand

Vishwanath (1978) as Pukhraj

Raadha Aur Seeta (1979)

The Great Gambler (1979) as Ratan Das

Gautam Govinda (1979) as Bagha

Aur Kaun? (1979)

Jaan-e-Bahaar (1979) as Ajit's maternal uncle

Jaani Dushman (1979) as Blind Vaidji (Reshma's dad)

Jatt Punjabi (1979)

Muqabla (1979)

Noorie (1979) as Lala Karamchand

Aap To Aise Na The (1980)

Humkadam (1980) as Hari Harprasad

Alibaba Aur 40 Chor (1980) as Fatima's dad

Abdullah (1980) as Military Commander

Bandish (1980/I)

The Burning Train (1980) as Ashok's dad

Ek Baar Kaho (1980) as Dr. Puri (Rajni's father)

Ek Gunah Aur Sahi (1980)

Judaai (1980) as Dubey/Mamaji

Patita (1980)

Swayamvara (1980) as Makhanlal

Yeh Kaisa Insaaf (1980)

Khuda Kasam (1981) as Kishanlal (Guest Appearance)

Prem Geet (1981) as Mr. Bhardwaj

Dulha Bikta Hai(1981)

Dahshat (1981) as Sameer's Father

Itni Si Baat (1981) as Darbarilal (as Madanpuri)

Mangalsutra (1981)

Kranti (1981) as Sher Singh

Nakhuda (1981) as Jagannath Gupta

Poonam (1981)

Pyaasa Sawan (1981) as Prabhudas

Sharada (1981) as Mr. Kohli (Anita's dad & Inder's boss)

Haathkadi (1982) as Harimohan's boss

Apradhi Kaun? (1982) as Rai Bahadur Din Dayal

Badle Ki Aag (1982) as Mohanlal Verma (uncredited)

Dulha Bikta Hai (1982) as Seema's dad

Ghazab (1982) as Jatha Shankar

Pyaas (1982)

Sawaal (1982) as Govindram

Vidhaata (1982) as Khushiram Khusal Singh (K.K.)

Agar Tum Na Hote (1983) as Shakur Ahmed

Sweekar Kiya Maine (1983)

Bade Dil Wala (1983) as Makhanlal

Nastik (1983) as Police Inspector Ganga Ram

Andha Kanoon (1983) as Jailor Gupta

Avtaar (1983) as Seth Jugal Kishore (Guest Appearance)

Dharti Aakash (1983) (TV) as Jagdish

Hero (1983/II) as Bharat

Humse Na Jeeta Koi (1983) as Girdhari

Main Awara Hoon (1983)

Mazdoor (1983) as Daulatram (Hiralal's Manager)

Naukar Biwi Ka (1983) as Movie Director

Painter Babu (1983) at Mali Kaka

Woh Jo Hasina (1983)

Lorie (1984) as Mr. Kapoor (Father of 12 kids)

Baazi (1984)

Asha Jyoti (1984) as Seth Badri Prasad

Mashaal (1984) as Tolaram

Aaj Ka M.L.A. Ram Avtar (1984) as Makhanlal Kesri

Awaaz (1984) as Mirchandani

Khazana (1984)

Raaj Tilak (1984) as Ranjeet

Waqt Ki Pukar (1984) as Subedhar

Yaadon Ki Zanjeer (1984)

Cheekh (1985) as Thakur

Babu (1985) as Shambhu Nath

Jhoothi (1985) as Professor Puri

Bepanaah (1985)

Yodh (1985) as Dayal

Jawaab (1985) as Lakhani

Lavaa (1985)

Maujaan Dubai Diyaan (1985)

Ulta Seedha (1985) as Colonel Khurana

Yaadon Ki Kasam (1985) as Bishambarnath Kapoor

Khel Mohabbat Ka (1986) as Rehman Khan

Madadgaar (1987)

Vishaal (1987) as Laawaris

Santosh (1989) as Kaka

References

BABUR MASJID CASE JUDGEMENT DAY SEPTEMBER 30,2020

 

BABUR MASJID CASE  JUDGEMENT DAY  

SEPTEMBER 30,2020





குற்றச்சாட்டுகளை போதிய ஆதரங்களுடன் சி.பி.ஐ நிரூபிக்கவில்லை. எனவே, பாபர் மசூதி வழக்கில் சம்பந்தப்பட்ட அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் இந்த நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கிறது.

லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில், 351 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி, 600 பக்க அறிக்கையைச் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சி.பி.ஐ. அவை அனைத்தையும் சரிபார்த்து வாதி, பிரதிவாதிகளிடம் விசாரணை நடத்தி தீப்பளித்திருக்கிறது லக்னோ சிறப்பு நீதிமன்றம்.


1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்களான அத்வானி, கல்யாண் சிங், முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆரம்பத்தில் இரண்டு வழக்குகளாக இருந்தது, பின்னர் 49 வழக்குகளாக விரிவடைந்தது. முதற்கட்டத்தில் முக்கியத் தலைவர்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. விசாரணைகளும் வழக்குகளும் அதிகரிக்கவே மொத்தம் 48 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் தற்போது 32 பேர் மட்டுமே உயிருடன் இருக்கிறார்கள்.


சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான பாபர் மசூதி வழக்கில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று லக்னோ சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகிய மூன்று முக்கியப் புள்ளிகளைத் தவிர இந்த வழக்கில், தற்போதைய பா.ஜ.க எம்.பி-க்களான சாக்‌ஷி மகாராஜ் (Sakshi Maharaj), லல்லு சிங் (Lallu Sing), பிரிஜ் பூஷண் சரண் சிங் (Brij Bhushan Sharan Singh) ஆகியோரும் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். இதனால், தீர்ப்பு வழங்கப்படும் லக்னோ சிறப்பு நீதிமன்றத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.





351 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி, 600 பக்க அறிக்கையைச் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சி.பி.ஐ. அவை அனைத்தையும் சரிபார்த்து வாதி, பிரதிவாதிகளிடம் விசாரணை நடத்தியது லக்னோ சிறப்பு நீதிமன்றம். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த வழக்கு கடந்துவந்த பாதையைச் சற்றுத் திரும்பிப் பார்க்கலாம்.


1528

* பாபரின் தளபதி மிர் பாகி என்பவர் அயோத்தியில் பாபர் மசூதியைக் கட்டினார்.


1853

* பாபர் மசூதி கட்டப்பட்டபோது, அங்கிருந்த இந்துக் கோயில் இடிக்கப்பட்டதாகச் சிலர் பிரச்னையைக் கிளப்பினர்.


1859

* பதற்றம் அதிகரிக்கவே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மசூதியைச் சுற்றி வேலி அமைத்தனர்.





* மசூதிக்கு உள்ளே இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தவும், வெளியில் இந்துக்கள் வழிபாடு நடத்தவும் அனுமதிக்கப்பட்டனர்.

1860 - 1960

* விஷ்வ இந்து பரிஷத், நிர்மோகி அகாரா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டப்போவதாக அறிவித்தன. இது தொடர்பாக சில வழக்குகளும் இந்து அமைப்புகள் சார்பில் தொடங்கப்பட்டன.


1961

* சன்னி சென்ட்ரல் போர்டு அமைப்பைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் `மசூதிக்குள் இருக்கும் சிலைகளை அப்புறப்படுத்த வேண்டும். மசூதி மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகள் எங்களுக்கே சொந்தம்’ என்று மனுத்தாக்கல் செய்தனர்.


1984

* பிரச்னைக்குரிய இடத்தில் மசூதியை இடித்துவிட்டு, ராமர் கோயில் கட்டப்போவதாக இந்துக் குழுக்கள் அறிவித்தன. கோயில் கட்டுவதற்காக மிகப்பெரிய இயக்கம் உருவெடுத்தது. இதில் பா.ஜ.க தலைவர் அத்வானி முக்கியப் பங்குவகித்தார்.



1986

* `பாபர் மசூதி கதவுகள் திறக்கப்பட வேண்டும். இந்துக்கள் அங்கு வழிபட அனுமதிக்கப்பட வேண்டும்’ என்ற ஹரிசங்கர் துபேவின் மனுவை ஏற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு, இஸ்லாமியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.


* பாபர் மசூதி ஆக்‌ஷன் கமிட்டி உருவாக்கப்பட்டது.


1989

* பாபர் மசூதி அருகே ராமர் கோயில் கட்ட விஷ்வ இந்து பரிஷத் அடிக்கல் நாட்டியது.


* இதுவரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கு, உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது.





அத்வானி ரத யாத்திரை

அத்வானி ரத யாத்திரை

1990

* வி.ஹெச்.பி (விஷ்வ இந்து பரிஷத்) அமைப்பினர் மசூதியின் சில பகுதியைச் சேதப்படுத்தினர்.


* அதே ஆண்டில், செப்டம்பர் மாதம் குஜராத் மாநிலம், சோம்நாத்திலிருந்து அத்வானி ரத யாத்திரையைத் தொடங்கினார்.



1991

* நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியானது பா.ஜ.க.


* ரத யாத்திரையின் பலனாக உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியையும் கைப்பற்றியது.


* இதைத் தொடர்ந்து, கோயில்கட்ட கரசேவை இயக்கம் தொடங்கப்பட்டது.


1992

* டிசம்பர் 6, கரசேவகர்களால் பாபர் மசூதி முற்றிலுமாக இடிக்கப்பட்டது.


* இதனால் நாடெங்கும் கலவரம் வெடித்தது. 2,000 பேர் உயிரிழந்தனர். அதில், அநேகர் இஸ்லாமியர்கள் என்றும் சொல்லப்பட்டது.


* இதன் பின்னணியை விசாரிக்க அப்போது பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ், லிபரான் ஆணையத்தை அமைத்தார்.


பாபர் மசூதி

பாபர் மசூதி

Junior Vikatan

1993

* பாபர் மசூதி இருந்த பகுதியில் 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தியது.


* பா.ஜ.க-வைச் சேர்ந்த அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, சிவசேனா தலைவர் பால் தாக்ரே உள்ளிட்ட சில தலைவர்கள்மீது சதித் திட்டம் தீட்டியதாக சி.பி.ஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


2001

* பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி சி.பி.ஐ நீதிமன்றம் 21 பேரை விடுதலை செய்தது.


* அப்போது அத்வானி உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.


2002

* அலகாபாத் உயர் நீதிமன்றம், பாபர் மசூதி இருந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்து, அங்கு இந்துக் கோயில் இருந்ததா என்று ஆய்வறிக்கை தாக்கல் செய்யும்படி `ஆர்க்கியாலஜி சர்வே ஆஃப் இந்தியா’வுக்கு உத்தரவிட்டது.


2010

* அலகாபாத் உயர் நீதிமன்றம், மத்திய அரசு கையகப்படுத்திய இடத்தில் மூன்றில் இரண்டு பகுதி நிலத்தை ராமர் கோயில் கட்டவும், மீதமுள்ள ஒரு பகுதி நிலத்தை இஸ்லாமியர்களுக்கு வழங்கவும் உத்தரவிட்டது.


* அத்வானி உள்ளிட்டோரை விடுதலை செய்ய கோரி உத்தரவிட்ட ரேபரேலி உயர் நீதிமன்றத் தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.



2017

மார்ச் 6

* பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, சி.பி.ஐ தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவில் ``ஒரு வழக்கை முழுமையாக விசாரிக்காமல் `கால தாமதம்’ என்பது போன்ற `டெக்னிக்கல்’ காரணங்களின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது’’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.


உச்ச நீதிமன்றம் 

உச்ச நீதிமன்றம்

மார்ச் 17

* `பாபர் மசூதி இடிப்பு சதியில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களுக்குத் தொடர்பு இருக்கிறது’ என்று சி.பி.ஐ திட்டவட்டமாகக் கூறியது.


* `இது தொடர்பாக மிக விரிவாக விசாரணை நடத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


ஏப்ரல் 6

* `அத்வானி உள்ளிட்டோரின் விடுதலையை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறிய உச்ச நீதிமன்றம், ரேபரேலியில் நடந்துவந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கை அரசியல் அமைப்புச் சட்டம் 142 விதியின் கீழ், லக்னோவுக்கு மாற்ற உத்தரவிட்டது.


ஏப்ரல் 19

* அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க சி.பி.ஐ-க்கு உத்தரவிடப்பட்டது. தினந்தோறும் விசாரணை நடத்தி, இரண்டாண்டுகளுக்குள் வழக்கை முடிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


மே 30

* அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியது லக்னோ சிறப்பு நீதிமன்றம். பிறகு, ஜாமீன் ரத்து செய்யப்பட்டு அவர்கள் மீது சதிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.


2018-2019

* குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் இரண்டு ஆண்டுகளாகத் தீவிர விசாரணை மேற்கொண்டது சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றம்.


2020

ஜூலை 23

* முரளி மனோகர் ஜோஷியிடம் சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றம் காணொலி வாயிலாக விசாரணை நடத்தியது. தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துப் பேசினார் ஜோஷி.


முரளி மனோகர் ஜோஷி - அத்வானி

முரளி மனோகர் ஜோஷி - அத்வானி

உ.பி: வெட்டுப்பட்ட நாக்கு; செயலிழந்த கால்கள்; பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண் - நடந்தது என்ன?

Also Read

உ.பி: வெட்டுப்பட்ட நாக்கு; செயலிழந்த கால்கள்; பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண் - நடந்தது என்ன?

ஜூலை 24

* அத்வானியிடமும் காணொலி வாயிலாக விசாரணை நடத்தப்பட்டது. அத்வானியும் தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துவிட்டார்.



செப்டம்பர் 1

* வாதி, பிரதிவாதி என அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்தன. செப்டம்பர் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. தீர்ப்பு வழங்கப்படும் நாளில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி எஸ்.கே.யாதவ் உத்தரவிட்டார்.


செப்டம்பர் 26

* உமா பாரதி பா.ஜ.க-வின் தேசியப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட அன்று ஜே.பி.நட்டா-வுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில்,

அயோத்தி வழக்கில் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. இந்த வழக்கில், நான் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டாலும், நிச்சயம் ஜாமீன் பெறப் போவதில்லை. அப்படிப் பெற்றால் அது நம் கெளரவத்தைக் களங்கப்படுத்திவிடும். அயோத்தி இயக்கத்தில் பங்குபெற்றதற்கு நான் பெருமை கொள்கிறேன்

.

ANI

செப்டம்பர் 29

* அயோத்தி வழக்கில் முக்கியப் புள்ளிகளாக இருக்கும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் தீர்ப்பு வழங்கப்படவிருக்கும் நாளில், லக்னோ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வாய்ப்பில்லை என்று செய்திகள் வெளியாகின.


* உமா பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாலும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வயது முதிர்வு காரணமாகவும் பங்குகொள்ளவில்லை என்ற தகவல்களும் வெளியாகின. மூவரும் காணொலி வாயிலாக கலந்துகொள்வார்கள் என்றும் சொல்லப்பட்டது.


செப்டம்பர் 30

காலை 11:30 மணியளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு வெளியானது.


குற்றச்சாட்டுகளை போதிய ஆதரங்களுடன் சி.பி.ஐ நிரூபிக்கவில்லை. எனவே, பாபர் மசூதி வழக்கில் சம்பந்தப்பட்ட அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் இந்த நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கிறது.

லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு

``பாபர் மசூதி இடிப்பு என்பது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட சம்பவம் அல்ல. இந்த வழக்கில் போதுமான சாட்சியங்களும் ஆதாரங்களும் சி.பி.ஐ-யால் சமர்ப்பிக்கப்படவில்லை'' என்று லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தாலும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ தரப்பு மேல்முறையீடு செய்யலாம்.


.

TAMIL WIKIPEDIA BEGAN SERVICE FROM 2003 SEPTEMBER 30

 

TAMIL WIKIPEDIA BEGAN SERVICE FROM 2003 SEPTEMBER 30

தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.SEP 30,2003




விக்கிப்பீடியா (Wikipedia; /ˌwɪkɪˈpiːdiə/ (About this soundகேட்க) wik-ih-PEE-dee-ə அல்லது /ˌwɪkiˈpiːdiə/ (About this soundகேட்க) wik-ee-PEE-dee-ə) என்பது, வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தின் உதவியுடன் நடத்தப்படும், கூட்டாகத் தொகுக்கப்படும், பன்மொழி, கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியமாகும். தமிழ் விக்கிப்பீடியாவின் 1,00,000க்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன் சேர்த்து இதன் மொத்தக் கட்டுரைகளான 24 மில்லியன் கட்டுரைகளும் உலகெங்கிலுமுள்ள தன்னார்வலர்களால் கூட்டாக எழுதப்படுகின்றன. பெரும்பாலும் இதன் எல்லாக் கட்டுரைகளும், இதனைப் பயன்படுத்தும் எவராலும், தொகுக்கப்படக் கூடுவன.[6] மேலும் இது கிட்டத்தட்ட 100,000 முனைப்பான பங்களிப்பாளர்களையும் கொண்டுள்ளது.[7][8] செப்டம்பர் 2020 வரையில், விக்கிப்பீடியா 285 மொழிகளில் செயற்படுகிறது. இது இணையத்தளத்தில் இயங்கும் உசாத்துணைப் பகுதிகளிலேயே மிகவும் பெரியதும், அதிகப் புகழ்பெற்றதுமாகும்.[9][10][11][12] மேலும், இது அலெக்சா இணையத்தளத்தில் காணப்படும் இணையத்தளங்களின் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளதோடு, உலகளவில் அண்ணளவாக 365 மில்லியன் வாசகர்களையும் கொண்டுள்ளது.[9][13]


விக்கிப்பீடியா, ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் சனவரி 15, 2001-இல் தொடங்கப்பட்டது.[14] சாங்கர் அவர்கள், விக்கிப்பீடியா என்ற சொல்லை,[15] விக்கி (ஒருவகை கூட்டாக்க இணையத்தளம். இது ஹவாய் மொழியில் "விரைவு" எனப் பொருள்படும் விக்கி என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது.)[16] மற்றும் பீடியா (கலைக்களஞ்சியத்தின் ஆங்கிலச் சொல்லான என்சைக்ளோபீடியாவிலிருந்து), ஆகிய சொற்களின் இணைப்பாக உருவாக்கினார். 2006-இல், டைம் சஞ்சிகை, உலகளவில் இணைய மக்கள் கூட்டுப் பங்களிப்பின் விரைவான வளர்ச்சிக்கு, யூடியூப், மைஸ்பேஸ் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றுக்கு மேலதிகமாக, விக்கிப்பீடியாவினது பங்களிப்பையும் குறிப்பிட்டுள்ளது.[17] விக்கிப்பீடியா, ஒரு செய்தி ஊடகமாகவும் குறிப்பிடப்படுகிறது. இதற்குக் காரணம், தலைப்புச் செய்திகள் தொடர்பான கட்டுரைகள் அடிக்கடி இற்றைப்படுத்தப்படுவதேயாகும்.[18][19][20]


விக்கிப்பீடியாவின் திறந்த பாங்கு, பல்வேறு சிக்கல்களையும் உருவாக்கியுள்ளது. இவற்றுள் கட்டுரைகளின் தரம்,[21] தேவையற்ற தொகுப்புக்கள்[22][23] மற்றும் தகவல்களின் துல்லியத்தன்மை போன்றவற்றைக் குறிப்பிடலாம். சில கட்டுரைகள், உறுதிப்படுத்தப்படாத அல்லது முரண்பாடான தகவல்களைக் கொண்டிருந்தாலும்,[24] நேச்சர் இதழ் மூலம் 2005-இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம், இதிலுள்ள அறிவியல் கட்டுரைகள், பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் கட்டுரைகளைப் போல் துல்லியத்தன்மை கொண்டன எனக் கண்டறியப்பட்டது. மேலும், இரண்டிலும் தலைமையான தவறுகள் ஒரேயளவினதாய் இருந்தன.[25] இதற்குப் பதிலளிக்குமுகமாக, பிரிட்டானிக்கா, இந்த ஆய்வின் வழிமுறைகள் மற்றும் முடிவுகளில் தவறுகள் உள்ளதாகத் தெரிவித்தது.[26] எனினும் இதனை மறுத்துரைத்த நேச்சர், தனது தரப்பில் இதற்கான முறையான அறிக்கையையும், பிரிட்டானிக்காவின் தலைமையான மறுப்புக்களுக்கான எதிர் வாதங்களையும் வெளியிட்டது.[27][28]


யாரும் இலகுவில் வேகமாக இணையத்தொடர்பையும் உலாவியையும் மட்டும் பயன்படுத்தித் தொகுக்கக்கூடியவாறு இத்திட்டம் அமைந்துள்ளது. "அனைத்து மனித அறிவும், கட்டற்ற முறையில் மொழிகளைக் கடந்து, எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்” என்பதே விக்கிப்பீடியாவின் உயரிய நோக்கமாகும். இத்திட்டம் இலாப நோக்கமற்றது; பக்கச் சார்பற்றது; நடுநிலைமையை வலியுறுத்துவது; இதன் நுட்பக் கட்டமைப்பும், கட்டற்ற திறந்த வழியில் ஆக்கப்பட்டு உபயோகிக்கப்படுகின்றது


வரலாறு

நுபீடியா


Logo reading "Nupedia.com the free encyclopedia" in blue with large initial "N"

விக்கிப்பீடியாவானது, ஆரம்பத்தில் நுபீடியா என்ற ஒரு கலைக்களஞ்சியத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டது



ஜிம்மி வேல்ஸ், லாரி சாங்கர்

விக்கிப்பீடியாவிற்கு முன்னதான வேறு சில இணையத்தில், கூட்டு கலைக்களஞ்சிய உருவாக்கத்திற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், அவை வெற்றியடையவில்லை.[29] முதலில் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 'போமிஸ்' (en:Bomis) வலைப்பக்க நிறுவனத்தால், நுபீடியா ஆரம்பிக்கப்பட்டது. அதன் நோக்கம், நுபீடியாவை, ஓர் இலவச இணையத்தள ஆங்கில மொழிக் கலைக்களஞ்சியத் திட்டமாகவும் அமைப்பதாக இருந்தது. நிபுணர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளை, வழக்கப்படியான செய்முறைப்படி பரிசீலித்து வெளியிடுவதாகவே இத்திட்டம் அமைந்திருந்தது.[30] போமிஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான நுபீடியாவின் முக்கிய நபர்களாக, முதன்மைச் செயலதிகாரியான ஜிம்மி வேல்ஸ் உம் லாரி சாங்கர் உம் இருந்தார்கள்.[31][32] லாரி சாங்கர், முதலில் நுபீடியாவிற்கும், பின்னர் விக்கிப்பீடியாவிற்கும் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர் ஆவார்.


நுபீடியாவிற்கு, இணைய விளம்பர நிறுவனமான 'போமிஸ்', நிதி வழங்கியது. ஆரம்ப காலத்தில், நுபீடியாவிற்கு, அதன் சொந்த நுபீடியா மூலம் திறந்த உள்ளடக்க உரிமம் வழங்கப்பட்டது. பின்னர், ரிச்சர்ட் ஸ்டால்மன் அவர்களின் தூண்டுதலால், நுபீடியாவானது, விக்கிப்பீடியாவாக மாற்றமடையும் முன்னரே குனூ தளையறு ஆவண உரிமத்திற்கு மாற்றப்பட்டது.[33] லாரி சாங்கர் மற்றும் ஜிம்மி வேல்ஸ் இருவருமே விக்கிப்பீடியாவின் நிறுவனர்கள் ஆவர்.[31][32] 'பொதுவில் பதிப்பிடக்கூடிய கலைக்களஞ்சியம்' என்ற குறிக்கோளை வரையறை செய்த பெருமை[34][35] வேல்ஸையே சாரும். திறமூல விக்கியை வைத்து அந்தக் குறிக்கோளை அடையச் செய்த, திட்டவடிவம் கொடுத்த பெருமை, சாங்கரையேச் சாரும்.[36] ஜனவரி 10, 2001 அன்று விக்கித் தொழில்நுட்பத்தை, நுபீடியாவிற்கு ஆதாரம் கொடுக்கும் திட்டமாக ஆக்க, லாரி சாங்கர், நுபீடியாவின் மின்னஞ்சல் பட்டியலூடாக ஒரு பரிந்துரை கொடுத்தார்.[37]


விக்கிப்பீடியா வெளியீடும், ஆரம்ப வளர்ச்சியும்



ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எண்ணிக்கைக் குறித்த வரைபடம், ஜனவரி 10, 2001 முதல் செப்டம்பர் 9, 2007 வரையில் (இரண்டு மில்லியன் எண்ணிக்கையை எட்டியபோது)

ஜனவரி 12, 2001,[38] ஜனவரி 13, 2001[39] இல் முறையே விக்கிப்பீடியா.கொம், விக்கிப்பீடியா.ஓர்க் ஆகிய ஆள்களப் பெயர்கள் பதிவு செய்யப்பட்டன. ஜனவரி 15, 2001 அன்று சம்பிரதாயத்துக்காக விக்கிப்பீடியா அறிமுகப்படுத்தப்பட்டது.[30] அது ஒரு தனிப்பட்ட ஆங்கில மொழிப் பதிப்பாக விக்கிப்பீடியா.காம் .[40] என்ற பெயரில் வெளியிடப்பட்டு, நுபீடியா மின்னஞ்சல் பட்டியலில் லாரி சாங்கரால் அறிவிக்கப்பட்டது.[34] விக்கிப்பீடியா ஆரம்பித்து சில மாதங்களில், 'நடுநிலைமை', ஒரு கொள்கையாக முன்னிறுத்தப்பட்டது.[41] இது நுபீடியாவின் முந்தைய "மனச்சார்பு இல்லாத" கொள்கைக்கு இணையானது. தவிர, ஆரம்பத்தில் வேறு சில விதிமுறைகள் மட்டுமே விக்கிப்பீடியாவில் இருந்ததுடன், விக்கிப்பீடியாவானது, நுபீடியாவிலிருந்து தனித்து, சுயாதீனமாக இயங்கத் தொடங்கியது.[34] ஆரம்பத்தில், போமிஸ், இதனை ஒரு வணிக ரீதியில் ஆதாயம் கிடைக்கும்படியான திட்டமாகச் செய்யவே நினைத்திருந்தது.[42]


விக்கிப்பீடியாவின் ஆரம்ப காலத்தில், நுபீடியா, ஸ்லாஷ்டாட் (en:Slashdot) பதிவுகள், வலை தேடு பொறி குறியீட்டு ஆக்கங்கள் போன்றவற்றிலிருந்து பங்களிப்புகளைப் பெற்றுக் கொண்டது. பின்னர் வெவ்வேறு மொழிகளில் விக்கிப்பீடியா உருவாக்கப்பட்டு, 2001 ஆம் ஆண்டின் முடிவில் கிட்டத்தட்ட 20,000 கட்டுரைகளுடன் 18 மொழிகளில் வளர்ந்தது. 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 26 மொழிகளிலும், 2003 ஆம் ஆண்டு முடிவில் 46 மொழிகளிலும் வளர்ந்த விக்கிப்பீடியா, 2004 ஆம் ஆண்டின் முடிவில் 161 மொழிகளில் இயங்கும் கலைக்களஞ்சியமாக உயர்ந்தது.[43] நுபீடியாவிலிருந்த அனைத்து உள்ளடக்கங்களும், விக்கிப்பீடியாவினுள் சேர்க்கப்பட்டதும், 2003 ஆம் ஆண்டில், நுபீடியாவிற்கான வழங்கி இல்லாது செய்யப்பட்ட காலம்வரை, நுபீடியாவும், விக்கிப்பீடியாவும் ஒன்றுசேர்ந்து இயங்கி வந்தன. செப்டம்பர் 9, 2007 அன்று ஆங்கில விக்கிப்பீடியா 2 மில்லியன் கட்டுரைகளைக் கடந்து, இது வரை சாதிக்காத வகையில் மிகப்பெரும் கலைக்களஞ்சியமாக, 600 ஆண்டுகள் வரை சாதனையாக விளங்கிய யோங்களே கலைக்களஞ்சியத்தை (:en:Yongle Encyclopedia), விஞ்சி முன்னேறியது. [44]


விக்கிபீடியாவின் கட்டுப்பாடில்லாத தன்மையாலும், வர்த்தக விளம்பரங்களின் அச்சத்தினாலும், எசுப்பானிய விக்கிப்பீடியாவின் பயனாளிகள் 2002 ஆம் ஆண்டு பிப்ரவரியில் விக்கிப்பீடியாவிலிருந்து பிரிந்து என்சிச்லோபெடியா லிப்ரேவை (en:Enciclopedia Libre Universal en Español) உருவாக்கினர்.[45] அதனால், அந்த ஆண்டின் இறுதியில், விக்கிப்பீடியா விளம்பரங்களைக் காட்டாது என்றும், அதன் இணையதளம், wikipedia.org என்ற வலைதளத்துக்கு மாற்றம் செய்துவிட்டதாகவும் ஜிம்மி வேல்ஸ் அறிவித்தார்.[46]


மைல் கற்கள்

ஜனவரி 2007 இல், முதன் முதலாக, அமெரிக்காவில், மிகவும் பிரபலமான இணையத்தளங்களில் (en:List of most popular websites), முதல் பத்து இணையத்தளங்களில் ஒன்றாக விக்கிப்பீடியா வந்தது. 42.9 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருந்து, 10 ஆம் இடத்திலிருந்த, த நியூயார்க் டைம்ஸ், 11 ஆம் இடத்திலிருந்த, ஆப்பிள் ஆகிய இரண்டையும் முந்தி 9 ஆவது இடத்திற்கு வந்ததைக் en:Comscore காட்டியது. 2006 ஆம் ஆண்டு ஜனவரியில், 18.3 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று, 33 ஆவது இடத்திலிருந்த விக்கிப்பீடியாவிற்கு, இது ஒரு முக்கியமான மைல் கல்லாகும்.[47]

2014 ஆம் ஆண்டில், ஒவ்வொரு மாதமும் 8 பில்லியன் பக்கப் பார்வைகளை விக்கிப்பீடியா கொண்டிருந்தது.[48] பெப்ரவரி 9, 2014 இல், த நியூயார்க் டைம்ஸ், விக்கிப்பீடியா, மாதமொன்றுக்கு 18 பில்லியன் பக்கப் பார்வைகளையும், 500 பார்வையாளர்களையும் கொண்டிருப்பதாக Comscore ஐ ஆதாரம் காட்டிக் குறிப்பிட்டிருந்தது.[49]

2015 மார்ச்சில், அலெக்சா இணையத்தின் அறிக்கைப்படி, அதிக பிரபலமான இணையத்தளங்களின் பட்டியலில், விக்கிப்பீடியா 5 ஆம் இடத்தைப் பெற்றது.[50][51]

2016 டிசம்பரில், அனைத்துலக மட்டத்தில், மிகப்பிரபலமான இணையத்தளங்களின் பட்டியலில் 5 ஆவது இடத்தை விக்கிப்பீடியா கொண்டிருப்பதாக அறியப்பட்டது.[52]

17 பெப்ரவரி 2019 கணக்கின்படி, தற்போது 301 மொழிகளில் (முதற்பக்கம் மட்டும் கொண்டுள்ள இரு மொழி விக்கிப்பீடியாக்கள் தவிர்த்து) விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல மொழிகளிலுமாகச் சேர்த்து, 49,000,000 -க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் ஆங்கில மொழியில் மாத்திரம் 5.8 மில்லியனிற்கும் அதிகமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. 87 மொழி விக்கிப்பீடியாக்களில் 50,000 க்கு மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. தமிழ் விக்கிப்பீடியா 120,000 க்கு மேற்பட்ட கட்டுரை எண்ணிக்கையைக் கொண்டு, 60 ஆவது இடத்தில் (கட்டுரை எண்ணிக்கையின் அடிப்படையில்) இருக்கின்றது.[53]

பரந்த பயன்பாட்டுக்கு உட்பட்டுவரும் விக்கிப்பீடியா, பல சகோதரத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி மேலும் வளர்ந்து வருகின்றது.


இயல்புகள்

பிரபலமான நகைச்சுவைக் கூற்று ஒன்று: "விக்கிப்பீடியாவிலுள்ள பிரச்சினை என்னவென்றால், அது பயன்பாட்டு ரீதியில் சிறந்தது. ஆனால், கொள்கை ரீதியில் பயனற்றது."

—மீக்கா ரியோக்காசு[54]


தொகுத்தல்

ஏனைய பாரம்பரியக் கலைக்களஞ்சியங்களைப் போலல்லாது, விக்கிப்பீடியா வெளித்தொகுப்புக்களை ஏற்கிறது. எனினும், முக்கியமான அல்லது குழப்பம் விளைவிக்கும் ஆபத்துடைய சில கட்டுரைகள், தொகுக்க முடியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன.[55] மேலும், கட்டுரையை வாசிக்கும் எந்தவொரு வாசகரும் கணக்கொன்று இல்லாமலேயே கட்டுரைகளைத் தொகுக்க முடியும். எனினும், வெவ்வேறு மொழிப்பதிப்புகளில் இக் கொள்கை வித்தியாசமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. உதாரணமாக, ஆங்கிலப் பதிப்பில், பதிவுசெய்த பயனர் மட்டுமே புதிய கட்டுரையொன்றை உருவாக்க முடியும்.[56] எந்தவொரு கட்டுரையையும் அதனை உருவாக்கியவரோ, வேறு பயனரோ உரிமை கொண்டாட முடியாது என்பதோடு, எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரத் தரப்பும், அதனை ஆராய முடியாது. அதற்குப் பதிலாகத் தொகுப்பாளர்கள், தம்மிடையேயான கருத்தொருமிப்பின் அடிப்படையில் கட்டுரைகளின் உள்ளடக்கங்களையும், அமைப்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.[57]


வழமையாக, கட்டுரையொன்றில் மேற்கொள்ளப்படும் தொகுப்பானது, உடனடியாக இற்றைப்படுத்தப்படும். எனவே, இக்கட்டுரைகளில் துல்லியமின்மை, கருத்துக் கோடல்கள் அல்லது காப்புரிமைத் தகவல்கள் இடம்பெறலாம். ஒவ்வொரு மொழிப்பதிப்பும் வெவ்வேறு நிர்வாகக் கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதுடன், இக்கொள்கைகளிலும் திருத்தங்களைக் கொண்டுவரலாம். உதாரணமாகச், செருமானிய விக்கிப்பீடியாவில் கட்டுரைத் தொகுப்புக்கள், சில மேற்பார்வையிடல்களுக்குப் பின் உறுதிப்படுத்தப்படுகின்றன.[58] பல்வேறு சோதனை ஓட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்குப் பின், டிசம்பர் 2012 அன்று, "மாற்றங்களுக்கான காத்திருப்பு" முறைமை, ஆங்கில விக்கிப்பீடியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.[59] இம்முறைமையின் கீழ், சர்ச்சைக்குரிய அல்லது குழப்பம் விளைவிக்கக்கூடிய ஆபத்துடைய கட்டுரைகளின் மீதான புதிய பயனர்களின் தொகுப்புக்கள், அங்கீகரிக்கப்பட்ட ஒரு விக்கிப்பீடியா பயனரின் மேற்பார்வையின் பின்னரே வெளியிடப்படும்.


விக்கிப்பீடியாவுக்கு உதவும் ‘மென்பொருட்கள்’, பங்களிப்பாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும். ஒவ்வொரு கட்டுரையிலும் காணப்படும் "வரலாற்றைக் காட்டவும்" பக்கம், திருத்தங்களைப் (திருத்தங்கள், அவதூறான தகவல்கள், குற்ற அச்சுறுத்தல் அல்லது காப்புரிமை மீறல் போன்றன மீளமைக்கப்படக் கூடியனவாய் இருப்பினும்) பதிவு செய்யும்.[60] இப்பக்கத்தைப் பயன்படுத்துவதன் மூலம், பயனர்கள், விரும்பத்தகாத தொகுப்புக்களை மீளமைக்கவோ, இழக்கப்பட்ட தகவல்களை மீளப்பெறவோ முடியும். ஒவ்வொரு கட்டுரைக்குமான ‘பேச்சுப்பக்கம்’, பல்வேறு பயனர்களும் தம்முள் ஒருங்கிணைந்து செயற்பட உதவுகிறது.[61] முக்கியமாகத் தொகுப்பாளர்கள், பேச்சுப்பக்கத்தைப் பயன்படுத்திக் கருத்தொருமிப்புப் பெற முடியும்.[62] சிலவேளைகளில் இதற்காக வாக்கெடுப்பும் நடத்தப்படும்.


தொகுப்பாளர்கள் இவ்விணையப் பக்கத்தின் அண்மைய மாற்றங்களையும் காணமுடியும். இது, ‘இறங்கு வரிசை’யில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். வழமையான பங்களிப்பாளர்கள், கவனிப்புப் பட்டியல் ஒன்றை உருவாக்கியிருப்பர். இதன்மூலம், தமக்கு விருப்பமான கட்டுரைகளில் அண்மையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களைப் பார்வையிட முடியும். அதிகமான கட்டுரைகளைக் கொண்ட மொழிப் பதிப்புக்களில், தொகுப்பாளர்கள் கவனிப்புப் பட்டியலைப் பேண விரும்புகின்றனர். தொகுப்புக்கள் அதிகரிப்பதன் காரணமாக, ‘அண்மைய மாற்றங்கள்’ பகுதியில், சில தொகுப்புக்கள் இடம்பெற முடியாமல் போவதே இதற்குக் காரணமாகும். புதிய பக்கக் கண்காணிப்பு செயன்முறையின் மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட கட்டுரைகளில் நிகழும் வெளிப்படையான தவறுகள் கண்காணிக்கப்படுகின்றன.[63] அடிக்கடி தாக்குதலுக்குள்ளாகும் கட்டுரைகளுக்கு, அரைப் பாதுகாப்பு வழங்கப்பட்டுக் குறிப்பிட்ட பயனர்கள் மாத்திரமே தொகுக்கும் வகையில் பாதுகாக்கப்படுகின்றன.[64] குறிப்பிடத்தக்க, சர்ச்சைக்குரிய கட்டுரைகள் பூட்டப்பட்டு நிர்வாகிகள் மட்டுமே மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் காக்கப்படுகின்றன.[65]


தானியங்கிகள் எனப்படும் ‘கணினிச் செய்நிரல்கள்’ மூலமாக எளிமையான, மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய பணிகள் செய்யப்படுகின்றன. உதாரணமாக, இவற்றின் மூலம் பொதுவான எழுத்துப்பிழைகளைத் திருத்தல், ஒழுங்கமைவுப் பிரச்சினைகள் அல்லது புவியியல் சார் கட்டுரைகளைத் துவக்கல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.[66][67][68] சில தானியங்கிகள், வேண்டத்தகாத தொகுப்புக்களை மேற்கொள்ளும் பயனர்களை எச்சரிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.[69] இதன்மூலம், வேறு இணையத் தளங்களுக்கான இணைப்புக்கள் தடுக்கப்படுவதோடு, சில குறிப்பிட்ட பயனர் கணக்குகள் அல்லது ஐபி முகவரிகளினால் தொகுப்புக்கள் ஏற்படுத்துவதைத் தடுக்கவும் முடியும். விக்கிப்பீடியாவிலுள்ள தானியங்கிகள், இயக்கத்துக்கு முன் நிர்வாகிகளினால் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.[70]


கட்டுரைப் பக்க அமைப்பு

விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகள், அவற்றின் விருத்தி நிலை அடிப்படையிலும், விடய அடிப்படையிலும் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும்.[71] ஒரு புதியகட்டுரை, பெரும்பாலும் வரைவிலக்கணம் மற்றும் சில இணைப்புக்கள் மாத்திரமே கொண்ட ஒரு குறுங்கட்டுரையாகவே ஆரம்பிக்கப்படும். அதேபோல் பெரும்பாலான விடயங்கள் உள்ளடக்கப்பட்ட பெரிய கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள் என வகைப்படுத்தப்படும். சில விக்கிப்பீடியாக்களில், ஒவ்வொரு நாளும் தொகுப்பாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட "சிறப்புக் கட்டுரை”யொன்று விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் காட்டப்படும்.[72][73] ‘சியாகோமோ பொதேரி’ எனும் ஆய்வாளரின் கண்டுபிடிப்பின்படி, சில தொகுப்பாளர்கள், ஊக்கத்துடன் குறிப்பிட்ட ஒரு கட்டுரையைத் தொகுப்பதன் மூலமே, சிறப்புக்கட்டுரைத் தரம் எட்டப்படுகிறது.[74] 2010-இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று, சிறப்புக்கட்டுரைகளிடையே, அவற்றின் தரங்கள் வேறுபட்டிருப்பதைக் கண்டறிந்ததோடு, கட்டுரைகளின் தரத்தைக் கணிப்பதில் ‘குழுச் செயற்பாடு’, போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனவும் கருத்து வெளியிட்டது.[75] 2007-இல், அச்சுவழிப் பதிப்பொன்றை உருவாக்கும் நடவடிக்கையின் போது, ஆங்கில விக்கிப்பீடியா, கட்டுரைகளின் தரத்தைக் கணிப்பிடும் அளவுத்திட்டத்துக்கு எதிரான புதிய தரக்கணிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியது.[76]


விக்கிப்பீடியா தொகுப்பாளர்களின் குழுவொன்று, விக்கித்திட்டம் ஒன்றை உருவாக்கி, குறிப்பிட்ட ஒரு துறையில், தமது பங்களிப்புக்களை வழங்குகின்றது. இத்திட்டத்தின் ‘பேச்சுப் பக்கம்’ மூலம், பல்வேறு கட்டுரைகளிலும் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை ஒருங்கிணைப்பர்.


மென்பொருளும் வன்பொருளும்



விக்கிப்பீடியா ஒரு விநாடிக்கு 2000-க்கும் மேலான ‘வேண்டுதல்’களைப் பெறுகிறது. 100-க்கும் மேலான ‘வழங்கி’கள், இதனை நிறைவேற்ற அமைக்கப்பட்டிருக்கின்றன.

விக்கிப்பீடியா, கட்டற்ற “விக்கிமீடீயா” மென்பொருளில் இயங்குகிறது. இது “பி.எச்.பி.”, “மைசீக்குவல்” ஆகிய ‘இணைய நிரல் மொழிகள்' மூலம் எழுதப்பட்டது. இவற்றோடு “எச்.டி.எம்.எல்.”, “சி.எசு.எசு.” ஆகியவையும் பக்கங்களை வடிவமைக்கப் பயன்படுத்தப்படுகின்றன.


விக்கிப்பீடியா, ஒரு தனி ‘வழங்கி’யில், 2004 வரை இயங்கி வந்தது. அதன் பின்னர், “பல்நிலை வழங்கிக் கட்டமைப்பு”க்கு விக்கிப்பீடியா மாற்றப்பட்டது. தற்போது 100-க்கும் மேற்பட்ட வழங்கிகள், உலகின் நான்கு பகுதிகளில் விக்கிப்பீடியாவை வழங்குகின்றன.


மொழிப்பதிப்புக்கள்

தமிழ் விக்கிப்பீடியா

முதன்மைக் கட்டுரை: தமிழ் விக்கிப்பீடியா


தமிழ் விக்கிப்பீடியா முயற்சியானது, 2003 ஆம் ஆண்டு ஆரம்பமானது. தற்போது இதில் 1,31,215 கட்டுரைகள் உள்ளன. 1,81,267 பயனர் கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


புத்தக வடிவில்

நியூயார்க்கைச் சேர்ந்த ஆசிரியர் ‘மைக்கேல் மாண்டி’ என்பவர், ஆங்கில விக்கியைப் புத்தகமாகத் தொகுத்துள்ளார்.