Showing posts with label APRIL 29. Show all posts
Showing posts with label APRIL 29. Show all posts

Wednesday, 29 April 2020

RAJASHREE RAO ,ACTRESS BORN 1977 APRIL 29




RAJASHREE RAO ,ACTRESS BORN 1977 APRIL 29


பாரதிராஜா இயக்கித் தயாரித்த `கருத்தம்மா' திரைப்படம் ரிலீஸாகி 25 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நாயகி ராஜஶ்ரீ படம் குறித்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். #25yearsOfKaruthamma

ஏ.வி.எம் ஸ்டூடியோ பக்கத்துல நானும், அம்மாவும் ஒரு வேலை விஷயமா வந்திருந்தோம். அப்போ அங்கே வந்த மேக்கப் மேன் கோபி அண்ணா, `படத்துக்காக ஆடிஷன் டெஸ்ட் நடக்குது கலந்துக்குறீங்களா'னு கேட்டார். நாங்களும் என்ன நடக்குதுனு பார்ப்போம்னு போனோம். அங்கே மேக்கப் போட்டு நிறைய பேரை போட்டோ டெஸ்ட் எடுத்துக்கிட்டிருந்தாங்க. நிறைய அழகான பொண்ணுங்களெல்லாம் இருந்தாங்க. நடிகை மகேஸ்வரியும் இருந்தாங்க. `இவ்வளவு அழகான பொண்ணுங்க இருக்குறப்போ நாம செலக்ட் ஆக மாட்டோம்'னு நினைச்சிட்டிருந்தேன். ஏன்னா, என்னோட கலர்.

ராஜஸ்ரீ
ராஜஸ்ரீ

பாரதிராஜா சார் கன்னுக்குட்டியைக் கையிலே கொடுத்துட்டு டயலாக் பேசச் சொன்னார். அந்த சமயத்துல எனக்கு தமிழ் சரியா பேச வராது. இருந்தும் ஏதோ பேசுனேன். எங்களுக்கான டெஸ்ட் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு எங்க ஹவுஸ் ஓனர் வீட்டுக்கு போன் வந்தது. நமக்கு யார் போன் பண்றாங்கனு ஆர்வமா ஓடிப் போனேன். `பாரதிராஜா ஆபீஸ்ல இருந்து போன் பண்றோம். டிக்கெட் போட்டுட்டிருக்கோம். ஷூட்டிங் போகணும்'னு சொன்னாங்க. நமக்கு படத்துல கேரக்டர் கொடுத்துட்டாங்கனு சந்தோஷப்பட்டேன். நான், மகேஸ்வரி, கேமரா மேன் கண்ணன், பாரதிராஜா சார் எல்லாரும் ஒண்ணாதான் ஷூட்டிங் கிளம்புனோம். எனக்கும், அம்மாவுக்கும் ஒரே சந்தேகம், `எந்த ரோலில் நடிக்கக் கூப்பிட்டுப் போறாங்க'னு. இதைப் பத்தி யார்கிட்ட கேட்கணும்னு எங்களுக்குத் தெரியல. தேனி போய் இறங்குனோம். படத்தோட முதல் ஷெட்யூல் முடியுற வரைக்கும் பாரதிராஜா சார் பத்தி எதுவும் தெரியாது. அவரோட படங்கள் பற்றிய அறிமுகம்கூட இல்லை.

எனக்கு எப்படி நடிக்கணும்னு சொல்லிக் கொடுப்பார். நான் நடிப்பேன் அவ்வளவுதான். நாங்க நடிச்சது எல்லாத்தையும் சார் ஸ்க்ரீனில் போட்டுப் பார்த்தார். யாருமே சரியா நடிக்கலைனு அவருக்குத் தோனியிருக்கு. எந்தவொரு திருப்தியும் நாங்க நடிச்ச காட்சிகள் மூலமா சாருக்குக் கிடைக்கல. எங்க எல்லாரையும் கூப்பிட்டு ராதிகா மேடம், விஜயகுமார் சார் நடிச்ச `கிழக்குச் சீமையிலே' படத்தைப் போட்டுக் காட்டினார். அப்போதான் பாரதிராஜா சார் எவ்வளவு பெரிய இயக்குநர்னு எனக்குத் தெரிஞ்சது. திரும்பவும் எங்களுக்கு மேக்கப் போட்டு டயலாக்ஸ் சொல்லிக் கொடுத்து நாங்க நடிச்ச எல்லாக் காட்சியும் ஷூட் பண்ணுனார். அந்தச் சமயத்துல நாங்க படத்தோட முதல் ஷெட்யூல் முடிச்சிருந்தோம். ஒரு ஷாட் சரியில்லைனாகூட திரும்பத் திரும்ப எடுப்பார். அவர் மனசுக்கு சரியா வரவரைக்கும் விடமாட்டார். படத்தோட ஷூட்டிங் போயிட்டிருந்த நேரத்துலதான் படத்தோட ஹீரோயின் நான்தான்னு தெரியும். சவாலா எடுத்துக்கிட்டு என்னை படத்துல நடிக்க வெச்சார் பாரதிராஜா சார்.

பாரதிராஜா 
பாரதிராஜா

தமிழ்கூட சரியா பேச வராது. ராதிகா மேடம்தான் எனக்கு டப்பிங் கொடுத்தாங்க. படத்துக்கு தேசிய விருது கிடைச்சப்போ ரொம்ப சந்தோஷமா இருந்தது. சிறந்த நடிகைக்கான மாநில விருது படத்துல நடிச்சதுக்காக எனக்கு கிடைச்சது. நிறைய பேர் வந்து போட்டோ எடுத்துட்டுப் போனாங்க. எனக்கு கிடைச்ச அங்கீகாரத்துக்கு பாரதிராஜா சார்தான் காரணம். இந்தப் படத்தோட ஷூட்டிங் அப்ப எனக்கும், மகேஸ்வரிக்கும் ஒரு ஆசை இருந்தது. அதையும் பாரதிராஜா சார்தான் நிறைவேத்துனார்.

ராஜஸ்ரீ
ராஜஸ்ரீ
ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் தீவிர ரசிகர்கள் நாங்க. அவரைப் பாக்கணும்னு பாரதிராஜா சார்கிட்ட கேட்டிருந்தோம். ஒருநாள் அவரோட ஸ்டூடியோவுக்குக் கூட்டிட்டுப் போனார். அப்போ `போறாளே பொன்னுத்தாயி' பாட்டோட டிராக் அங்கே இருந்தது. ராவான டிராக்தான். அதைக் கேட்டுட்டு அப்படியே அழுதுட்டேன். அந்தளவுக்கு ஸ்வர்ணலதா வாய்ஸ் இருந்தது. என்னோட முதல் படத்துலேயே இவ்வளவு பெரிய விஷயங்கள் நடந்தது பெரிய விஷயம். மாதவிங்கிற என்னோட பேரை மாத்தி ராஜஶ்ரீனு வெச்சார். என் வாழ்க்கையோட
திருப்பு முனையா அமைஞ்ச `கருத்தம்மா' ரிலீஸாகி 25 வருஷம் ஆனது எனக்கு சந்தோஷமா இருக்கு' என நெகிழ்கிறார் ராஜஶ்ரீ.



 Rajashree is a famous actress from Tamil movies and television serials. She acted in number of powerful roles which gave her a huge fan following. Her portrayal of different feelings, has got her numerous awards and accolades. She is one of the most successful actresses in her time.
Rajashri is a talented actress who�acted in several films, including Sethu, Run, Manasellam and Vettaiyadu Vilayadu. But she is best remembered for her role in Karuthamma, her debut movie.

Rajashree was introduced to Tamil movies by the legendary director Bharathi Raja in his famous movie “Karuthamma”. She got the title role in this movie which she played perfectly. This emotional story gave her the right start and she capitalized on that to act in many other popular movies such as Run, Nandha and Vettaiyaadu Vilaiyaadu. Each one of these movies gave great chance for her to express her acting skills in the best possible way.
Rajashri, who rose to prominence after getting introduced by Bharathi Raja in Karuthamma, got married to her boyfriend Ansari Raja, owner of Body Shape Gym in Chennai. Friends and relatives close to the bride and groom attended the marriage on February 19th. Soon, a grand reception will be arranged by the newly-married couple.but this marriage ended soon in divorse.
then she married Bujankar Rao (m. 2010)

Rajashree next entered the television serials, where she did a very good performance in the serial “Aalayam”. Her acting as a simple woman who raises to the occasion when the need comes, impressed many viewers, especially girls. She was given many more similar roles in other serials such as Agal Vilakku, Mandhira Vaasal and Sivamayam. Each one of these serials gave Rajashree a good chance for her to showcase her talent and people loved it. Rajashree went on to act in many serials and remains a very popular artist in this media. Even though, she has acted in number of famous movies, it is the television media that gave her the limelight she deserved and Rajashree gave back wonderful performances to this media in return

ANJALI RAO , ACTRESS BORN 1990 APRIL 29



ANJALI RAO , ACTRESS BORN 1990 APRIL 29



.அஞ்சலி ராவ் என்பவர் இந்திய திரை நடிகையும், தொலைக் காட்சி நடிகையும் ஆவார். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு மலையாளம் படங்களில் நடித்துள்ளார். வன்மம் (திரைப்படம்) (2014) மற்றும் பேபி (2015) மூலம் அறியப்படுகிறார்.
இவர் நடித்த படங்கள்:  சூது கவ்வும், பீட்சா II: வில்லா, மாலினி 22 பாளையங்கோட்டை, வன்மம், பேபி, அச்சம் என்பது மடமையடா, பீச்சாங்கை, அண்ணனுக்கு ஜே, செய்
அஞ்சலி ராவ் என்பவர் இந்திய திரை நடிகையும், தொலைக் காட்சி நடிகையும் ஆவார். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு மலையாளம் படங்களில் நடித்துள்ளார்.

வன்மம் (திரைப்படம்) (2014) மற்றும் பேபி (2015) மூலம் அறியப்படுகிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'தலையணைப் பூக்கள்' சீரியலில், 'வேதாஜி' கதாபாத்திரத்தில் நிஷாவுக்குப் பதிலாக களம் இறங்கியிருப்பவர், அஞ்சலி ராவ். 'சூது கவ்வும்' படத்தின்மூலம் வெள்ளித்திரைக்குள் நுழைந்தவர். தற்போது, சின்னத்திரையின் முக்கிய நாயகிகளுள் ஒருவராக இடம்பிடித்திருக்கிறார். அவரது வெள்ளித்திரை டூ சின்னத்திரை பயணம் குறித்து கலகலவென பேசத் தொடங்கினார். 

''நீங்க எந்த ஊர்? உங்க ஃபேமிலி பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்...'' 

''என் அப்பா ஆர்மியில் வேலை பார்க்கிறவர். அதனால், அடிக்கடி டிரான்ஸ்பர்; வேற வேற ஊர்களுக்கு இடம் மாறிட்டே இருப்போம். நானும் தம்பியும் பஞ்சாப்ல பொறந்தோம். ஆனால், நான் படிச்சது எல்லாம் சென்னையில்தான். எம்.பி.ஏ முடிச்சிருக்கேன்.'' 


''வெள்ளித்திரை நாயகியாக ஜொலித்த சில வருஷங்களிலேயே சின்னத்திரைக்கு வந்துட்டீங்களே ஏன்?'' 

''நான் நிறைய தமிழ்ப் படங்களில் நடிச்சிருக்கேன். இன்னும் நிறையப் படங்களில் நடிக்க ரெடிதான். ஆனால், எனக்கு கிளாமர் ரோல் பிடிக்காது. அதனாலேயே தேடிவந்த பல வாய்ப்புகளை தவிர்த்துட்டிருந்தேன். அப்போதான் சன் டி.வியில் ஒளிபரப்பாகும் 'மகாலட்சுமி' சீரியல் வாய்ப்பு கிடைச்சது. மக்கள் பாராட்டற மாதிரி நல்ல கேரக்டர் பண்றதுதான் விருப்பம். அது வெள்ளித்திரையோ, சின்னத்திரையோ, நடிப்புத் திறமையை வெளிப்படுத்தணும்னு நினைச்சேன். அந்த சீரியலில் நடிக்க ஆரம்பிச்சேன்.'' 


''இப்போ பலரும் நடிப்பு மட்டுமில்லாமல் ஒரெ நேரத்தில் பல துறையில் கலக்கறாங்க. அஞ்சலி எப்படி?'' 

''எனக்கு டைரக்‌ஷன் ரொம்ப பிடிக்கும். குறிப்பாக, விளம்பரப் படங்களை டைரக்ட் பண்றது பிடிச்ச விஷயம். அதைப் பண்ணிட்டிருக்கேன். விளம்பரப் படங்களில் நடிக்கவும் செய்யறேன். மாடலிங் வாய்ப்பும் வருது. ஆனால், அதில் எனக்கு விருப்பம் இல்லை. அப்புறம், நான் வாலிபால் பிளேயர். இப்போகூட விட்டீங்கன்னா, கிரவுண்டுல இறங்கி விளையாட ஆரம்பிச்சுடுவேன். வாலிபால் என்னுடைய ஃபேவரைட் கேம்.'' 

'' 'தலையணைப் பூக்கள்' சீரியலின் புது வேதாஜி பற்றி மக்கள் என்ன சொல்றாங்க?'' 

''வேதாஜி கேரக்டர் மக்களிடம் ரொம்பவே ஃபேமஸா இருந்துச்சு. அதில், ஆரம்பத்தில் மக்கள் என்னை ஏத்துக்கலை. ஆனாலும் நம்பிக்கையோடு தொடர்ந்து நடிச்சேன். இப்போ எல்லாரும் என்னை வேதாஜினு கூப்பிடறதைக் கேட்கறப்போ ரொம்ப ஹேப்பி.'' 


''உங்க பிளஸ்...'' 

''ஃபேமிலிதான் என்னுடைய பிளஸ். அவங்களோடு அதிக நேரம் செலவழிப்பேன். வீட்டையும் ஷூட்டிங் ஸ்பாட்டையும் தவிர்த்து எங்கேயும் போனதில்லே. முக்கியமான பண்டிகையின்போதுகூட முந்தைய நாளில் ஷாப்பிங் போயிட்டு சீக்கிரமே வந்துடுவேன். ஜீன்ஸும் டாப்ஸும் விரும்பி வாங்குவேன். அது எனக்கு நல்லா செட்டாகுது. இப்போ, சீரியலுக்காகப் புடவைகள் வாங்கறேன்.'' 


''மறுபடியும் வெள்ளித்திரையில் தொடர்ந்து நடிப்பீங்களா?'' 

''நடிக்ககூடாதுனு இல்லே. ஒரு கேரக்டர் பண்ணாலும் அது மக்கள் மனசுல ஆழமாகப் பதியணும். அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் நடிக்க காத்திருக்கேன்.'' 


''வீட்டில் அடிக்கடி திட்டு வாங்குற விஷயம்...'' 

''நான் ரொம்ப குழந்தைத்தனமா இருப்பேன். யார்கிட்ட எப்படிப் பேசணும்னு தெரியாமல் விளையாடிட்டா ஏதாவது சொல்லிடுவேன். அதுக்காக அடிக்கடி அம்மா திட்டுவாங்க. அப்புறம், நானும் தம்பியும் இந்தியாவும் பாகிஸ்தானுமா மோதிப்போம். அதுக்கும் எனக்குத்தான் செமையா திட்டு கிடைக்கும்.'' 

''கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டீங்களா?'' 



''இப்போதைக்கு இல்லே. ஆனால், லவ் அண்டு அரேன்ஜ் மேரேஜா இருக்கும்னு சொல்லிக்கிறேன்.''

OVIYA ,MALAYALAM ACTRESS BORN 1991 APRIL 29




OVIYA ,MALAYALAM ACTRESS 
BORN 1991 APRIL 29



.ஓவியா (பிறப்பு: ஏப்ரல் 29, 1991, ஹெலன் நெல்சன்) இந்திய வடிவழகியும், நடிகையுமாவார். இவர் 2010ல் ஓவியா என்ற பெயர் மாற்றத்துடன் களவாணி ..திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகி்ல் அறிமுகமானார்.[2] இவர் 2017ல் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் 1 எனும் மெய்நிலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
வாழ்க்கைக் குறிப்பு
1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்தார், தற்போது சென்னையில் வசித்துவருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளர்க்கப்பட்ட ஓவியா, அரசு பள்ளியில் தனது பள்ளி பருவத்தை முடித்த இவர் பின்பு, திரிசூர் விமலா கல்லூரியில் தனது பட்டபடிப்பினை முடித்தார்.

திரை வாழ்க்கை
இந்திய வடிவழகியும் நடிகையுமான இவர் தமிழில் களவானி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் கங்காரு (2007) என்ற மலையாள படம் தான் ஓவியாவின் முதல் படம். வெற்றி படமான களவானியில் நடித்த ஓவியா பின்பு நல்ல கதைகளை தேர்வு செய்து, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமே போன்ற படங்களில் நடித்தார்.

சென்னை: ஆரவ் மீதான காதலில் ஏற்பட்ட மன அழுத்தம் ஒவியாவை பிக்பாஸ் வீட்டை விட்டே வெளியேற வைத்தது. ஆனால் ஓவியாவிற்கு தான் கொடுத்த மருத்துவ முத்தம் பற்றி விளக்கம் அளித்தார் ஆரவ். தான் ஓவியாவிற்கு கொடுத்த முத்தம் பற்றி கூறிய உடன் பிக்பாஸ் வீட்டில் இருந்த சிலருக்கு அதிர்ச்சிதான். கணேஷ் வெங்கட்ராம் இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா - ஆரவ் ஜோடிதான் ரொமான்ஸ் ஜோடி. டாஸ்க்களில் இந்த ஜோடிதான் டூயட் பாடும். இது காதலாக மாறி விட்டதோ என்றுதான் ரசிகர்கள் கருதினர். மனநோயாளிகளாக நடித்த போது காதல் தோல்வி போல நடிக்க கூட ஓவியாவினால் முடியவில்லை. ஆரவ்வைப் பார்த்து முத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தார்.

ஓவியாவின் மன அழுத்தம் ஒரு கட்டத்தில் ஆரவ் காதலிக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டு ஓவியா மன அழுத்தம் காரணமாக நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

ஆரவ் மீதான காதல் பிக்பாஸ் குடும்பத்தினரை தனித்தனியாக பேசினார் கமல். ஓவியா காதலித்த ஆரவ்வை அழைத்து பேசினார். அதில், தான் ரகசியம் அம்பலமானது.
ஓவியாவின் முத்தம் அப்போது கமல், ஓவியா உங்களிடம் போகும் போது என்ன கேட்டார் என்றார். அதற்கு ஆரவ் கூறுகையில், நான் கொடுத்ததை திருப்பி கொடுத்துவிடு என்றார். எனக்கு ஓவியா முத்தம் கொடுத்தார். அதனை தான் ஓவியா திருப்பி கேட்டார் என்றார்.

முத்தத்தில் பலவிதம் முதலில் நான் முத்தம் கொடுக்கவில்லை. உண்மையிலேயே கொடுக்கவில்லையா என்று கமல் கேட்க, இல்லை சார் நான் திருப்பி கொடுத்துவிட்டேன் என்றார். சினேகன் சொன்னதினால் மருத்துவ முத்தம் கொடுத்ததாக கூறினார்.
முத்தம் பற்றி பேசிவிடுங்கள் இதை கேட்ட கமல், வீட்டில் உள்ளவர்களிடம் இந்த முத்தம் பற்றி கூறி விடுங்கள் என்றார். விளம்பரத்தில் சொன்னது போல நான் உங்களை கண்காணித்து கொண்டுதான் இருக்கிறேன் என்றார் கமல்.
அதிர்ச்சியடைந்த கணேஷ் ஆரவ் முகத்தில் ஈயாடவில்லை. வெளியே வந்த ஆரவ், நடந்த விசயத்தை கூறவே, கணேஷ் வெங்கட்ராமிற்கு அதிர்ச்சி ஏற்பட்டதுதான் உண்மை. அப்படி எதுவுமே நடக்கலைன்னு நீங்க சொன்னீங்களே என்று ஆரவ்வை பார்த்து கேட்டார் கணேஷ்.

ஏமாத்தியது உண்மையா ஆரவ் ஓவியா அடிக்கடி ஆரவ்வை பார்த்து சொல்வார், யு ஆர் சீட்டிங் மீ என்று சொல்வார். நிஜமாகவே ஏமாற்றிதான் விட்டார் ஆரவ் என்றே தோன்றுகிறது. எது எப்படியோ பொதுவெளியில் ஆரவ் ஓவியா இடையேயான ரொமான்ஸ் வெளிச்சத்துக்கு வந்து விட்டதுதான் உண்மை.ஓவியா - ஆரவ் காதல் ஆரவ் உடனான காதலே அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் ஓவியா ஆர்மியினர் சோகமடைந்தனர். ஓவியா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார் என்று நம்பிக்கொண்டுள்ளனர். ஓவியா வீடியோ பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த ஓவியா, ரசிகர்களை சந்திக்கும் போதும், அவரே பேசி வெளியிட்ட செல்ஃபி வீடியோவிலும் தான் ஆரவ்வை காதலிப்பதாக சொல்லியிருந்தார். அது தனது விருப்பம் தயவுசெய்து அதைப் பற்றி யாரும் கேட்கவேண்டாம் என்றும் சொல்லியிருந்தார்.

சற்குணம் இயக்கிய களவாணி திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதையடுத்து அதே குழு இணைந்து தற்போது 'களவாணி 2' படத்தை உருவாக்கியிருக்கிறது. கோடை விடுமுறையில் வெளியிட மிக வேகமாக பணிகள் நடந்து வருகின்றன. இந்த இரண்டாம் பாகம் முற்றிலும் புதிய கதைக்களத்தையும், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் அத்துடன் அழுத்தமான கதையையும் கொண்டிருக்கிறது.

விமல் மற்றும் ஓவியா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு என முதல் பாகத்தில் நடித்த அத்தனை பேரும் இந்த படத்திலும் நடிக்கிறார்கள். கூடுதலாக, மயில்சாமி போன்று  இன்னும் சில முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். துரை சுதாகர் இந்த படத்தில் வில்லன்
கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். களவாணி 2வில் ஓவியாவின் கதாபாத்திரம் முந்தைய படங்களில் குறிப்பாக '90 எம்.எல்' படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என தயாரிப்பாளர்கள் உறுதி அளிக்கிறார்கள். சமீபத்தில் வெளியான 'ஓட்டு கேக்க வந்தாய்ங்களா' பாடல் மிகவும் பிரபலமாகி இருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல அரசியல் கட்சிகள் கூட அந்த பாடலை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. வர்மன்ஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சற்குணம் தயாரித்து இயக்கியிருக்கிறார். மே 2019ல் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறது ஸ்க்ரீன் சன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.
1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கேரளாவில் உள்ள திரிசூரில் பிறந்தவர், தற்போது சென்னையில்
வசித்துவருகிறார்.ஓவியா வீட்டுக்கு ஒரே பிள்ளை அம்மா, அப்பா, ஓவியா. ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து செல்லமா வளர்க்கப்பட்ட ஓவியா அரசு பள்ளியில் தனது பள்ளி பருவத்தை முடித்த இவர் பின்பு,  திரிசூர் விமலா கல்லூரியில் தனது பட்டபடிப்பினை (BA in Functional English in Vimala College) முடித்தார். இந்திய வடிவழகியும் நடிகையுமான இவர் தமிழில் களவானி (Kalavani 2010) படத்தின்மூலம் அறிமுகம் ஆனாலும் கங்காரு (Kangarro 2007) என்ற மலையாள படம் தான் ஓவியாவின் முதல் படம். வெற்றி படமான களவானியில்  நடித்த ஓவியா பின்பு நல்ல கதைகளை தேர்வு செய்து, மெரினா, மூடர் கூடம், யாமிருக்கப் பயமேன் போன்ற படங்களில் நடித்தார். பின்பு கேன்சர் நோய் தாக்கிய தனது தாயின் மருத்துவ செலவுக்காக எந்த படமானாலும் எந்த கேரக்டர் ஆனாலும் நடித்து வந்த்தார். இருப்பினும் ஓவியாவின் தாய் கேன்சர் நோய் பாதிப்பால் இயற்கை எய்தினார். 
Helen Nelson ஹலென் நெல்சன்

ஓவியாவை பற்றி இயக்குநர் சற்குணம் கூறுகையில்… ”களவானி படத்துக்குப் புதுமுகங்களை தேடிக்கொண்டிருந்த நேரம். அப்போது எங்களிடம் ஓவியாவின் புகைப்படம் ஒன்று கிடைத்தது. பார்த்தவுடன் துறுதுறுவென இருந்த அந்தப் பெண்ணை எங்களுக்குப் பிடித்துவிட்டது. தயாரிப்பாளரும், ‘ இந்தப் படத்துக்கு இந்தப் பெண் பொருத்தமாக இருப்பார்’ என்றார். உடனே, அவரை சென்னைக்கு வரவழைத்து, மேக்கப் டெஸ்ட் எடுத்தோம். களவாணி படத்துக்கு அவர் செட் ஆனார்.
படப்பிடிப்பில் ஒருமுறை ஓவியாவைத் திட்டிவிட்டேன். உடனே, ஓர் இடத்தில் போய் சோகமாக அமர்ந்துகொண்டார். நான் அவர் பக்கத்தில் சென்று, ‘ திட்டியதை மறந்துவிட்டு, சிரித்துக்கொண்டே நடிக்க வேண்டும்’ என்றேன். உடனே, ஓகே சார் எனச் சிரித்துக் கொண்டே நடமாடினார். அந்தளவுக்கு எதையும் இயல்பாக எடுத்துக் கொள்ளக்கூடியவர். 


அவருடைய உண்மையான பெயர் ஹெலன். நான்தான் அவருக்கு ஓவியா எனப் பெயர் வைத்தேன். இந்தப் பெயர் ஓவியாவுக்குப் பிடிக்கவில்லை. எங்களிடம், ‘என் பெயரை தானியான்னு மாத்தப்போறேன்’ எனச் சொன்னார். நான்தான், ‘இந்தப் பெயர் நல்லா ரீச் ஆகும்’ எனச் சொன்னேன். இப்போது எல்லோரும் ஓவியா… ஓவியா எனப் பேசும்போது மிகுந்த சந்தோஷமாக உள்ளது. 

Bigg Boss Oviya
பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் நான்கு முறை பார்த்தேன். என்னுடைய நண்பர்கள் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, ‘ஓவியா கேரக்டரே இப்படித்தானா? இல்லை நிகழ்ச்சிக்காக இப்படி எல்லாம் நடிக்கிறாரா?’ எனக் கேட்டனர். ‘ஓவியா கேரக்டர் அப்படித்தான்’ எனப் பதில் கொடுத்தேன். அவர் எப்போதும் ஜாலியாக இருப்பார். அவருக்கு ஏற்ற கதை இருந்தால், என் படத்தில் அவரை மீண்டும் நடிக்க வைப்பேன்” என நெகிழ்ந்தார் இயக்குநர் சற்குணம்.

Sunday, 29 April 2018

OVIYA ,THE BIG BOSS,PROGRESSIVE ACTRESS BORN 1991 APRIL 29




OVIYA , THE BIG BOSS  PROGRESSIVE 
ACTRESS BORN 1991 APRIL 29





ஓவியா (பிறப்பு: ஏப்ரல் 29, 1991, ஹெலன் நெல்சன்) இந்திய வடிவழகியும், நடிகையுமாவார். இவர் 2010ல் ஓவியா என்ற பெயர் மாற்றத்துடன் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகி்ல் அறிமுகமானார்.[2] இவர் 2017ல் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் 1 எனும் மெய்நிலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

வாழ்க்கைக் குறிப்பு
1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்தார், தற்போது சென்னையில் வசித்துவருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளர்க்கப்பட்ட ஓவியா, அரசு பள்ளியில் தனது பள்ளி பருவத்தை முடித்த இவர் பின்பு,  திரிசூர் விமலா கல்லூரியில் தனது பட்டபடிப்பினை முடித்தார். 

திரை வாழ்க்கை

இந்திய வடிவழகியும் நடிகையுமான இவர் தமிழில் களவானி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் கங்காரு (2007) என்ற மலையாள படம் தான் ஓவியாவின் முதல் படம். வெற்றி படமான களவானியில் நடித்த ஓவியா பின்பு நல்ல கதைகளை தேர்வு செய்து, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமே போன்ற படங்களில் நடித்தார்.



ஷட்டப் பண்ணுங்க, ஸ்ப்ரே அடிச்சிடுவேன், எல்லாம் சிரிப்பா இருக்கு சார்: மறக்க முடியாத ஓவியா

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஓவியா பேசிய சில வார்த்தைகள் மிகவும் பிரபலமாகின. கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ள ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு அவரின் மார்க்கெட் எகிறிவிட்டது. இருப்பினும் தன்னை தேடி வரும் அனைத்து பட வாய்ப்புகளையும் அவர் ஏற்பது இல்லை. பிடித்தவற்றில் மட்டுமே நடிக்கிறார்.
ஓவியா ஓவியா இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிக் பாஸால் அவருக்கு கிடைத்த அங்கீகாரத்தை பார்த்து பல முன்னணி நடிகைகளே மிரண்டு போனார்கள்.

ட்விட்டர் ட்விட்டரில் ஓவியா ஆர்மி என்ற பெயரில் ஒன்றை துவங்கினார்கள் அவரின் ரசிகர்கள். ஒரு நடிகைக்கு ட்விட்டரில் ஆர்மி துவங்கி அது இன்று வரை வெற்றிகரமாக உள்ளது என்றால் அது ஓவியாவுக்கு மட்டும் தான். பிக் பாஸ் பிக் பாஸ் வீட்டில் ஓவியா கூறிய ஷட்டப் பண்ணுங்க என்ற வாசகம் மிகவும் பிரபலமானது. டிசர்ட்டில் எல்லாம் ஷட்டப் பண்ணுங்க என்ற வாசகம் இடம்பெற்றது

வாழைப்பழம் ஸ்ப்ரே அடிச்சிடுவேன், எல்லாம் ஒரே சிரிப்பா இருக்கு சார், பசிக்குது ஒரேயொரு வாழைப்பழம் கொடுங்க என்று ஓவியா பிக் பாஸ் வீட்டில் பேசிய வசனங்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். அந்த வசனங்கள் எல்லாம் இன்று வரை மீம்ஸ்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.



சென்னை: ஆரவ் மீதான காதலில் ஏற்பட்ட மன அழுத்தம் ஒவியாவை பிக்பாஸ் வீட்டை விட்டே வெளியேற வைத்தது. ஆனால் ஓவியாவிற்கு தான் கொடுத்த மருத்துவ முத்தம் பற்றி விளக்கம் அளித்தார் ஆரவ். தான் ஓவியாவிற்கு கொடுத்த முத்தம் பற்றி கூறிய உடன் பிக்பாஸ் வீட்டில் இருந்த சிலருக்கு அதிர்ச்சிதான். கணேஷ் வெங்கட்ராம் இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா - ஆரவ் ஜோடிதான் ரொமான்ஸ் ஜோடி. டாஸ்க்களில் இந்த ஜோடிதான் டூயட் பாடும். இது காதலாக மாறி விட்டதோ என்றுதான் ரசிகர்கள் கருதினர். மனநோயாளிகளாக நடித்த போது காதல் தோல்வி போல நடிக்க கூட ஓவியாவினால் முடியவில்லை. ஆரவ்வைப் பார்த்து முத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தார்.

ஓவியாவின் மன அழுத்தம் ஒரு கட்டத்தில் ஆரவ் காதலிக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டு ஓவியா மன அழுத்தம் காரணமாக நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

ஆரவ் மீதான காதல் பிக்பாஸ் குடும்பத்தினரை தனித்தனியாக பேசினார் கமல். ஓவியா காதலித்த ஆரவ்வை அழைத்து பேசினார். அதில், தான் ரகசியம் அம்பலமானது. 

ஓவியாவின் முத்தம் அப்போது கமல், ஓவியா உங்களிடம் போகும் போது என்ன கேட்டார் என்றார். அதற்கு ஆரவ் கூறுகையில், நான் கொடுத்ததை திருப்பி கொடுத்துவிடு என்றார். எனக்கு ஓவியா முத்தம் கொடுத்தார். அதனை தான் ஓவியா திருப்பி கேட்டார் என்றார்.
முத்தத்தில் பலவிதம் முதலில் நான் முத்தம் கொடுக்கவில்லை. உண்மையிலேயே கொடுக்கவில்லையா என்று கமல் கேட்க, இல்லை சார் நான் திருப்பி கொடுத்துவிட்டேன் என்றார். சினேகன் சொன்னதினால் மருத்துவ முத்தம் கொடுத்ததாக கூறினார்.
முத்தம் பற்றி பேசிவிடுங்கள் இதை கேட்ட கமல், வீட்டில் உள்ளவர்களிடம் இந்த முத்தம் பற்றி கூறி விடுங்கள் என்றார். விளம்பரத்தில் சொன்னது போல நான் உங்களை கண்காணித்து கொண்டுதான் இருக்கிறேன் என்றார் கமல்.

அதிர்ச்சியடைந்த கணேஷ் ஆரவ் முகத்தில் ஈயாடவில்லை. வெளியே வந்த ஆரவ், நடந்த விசயத்தை கூறவே, கணேஷ் வெங்கட்ராமிற்கு அதிர்ச்சி ஏற்பட்டதுதான் உண்மை. அப்படி எதுவுமே நடக்கலைன்னு நீங்க சொன்னீங்களே என்று ஆரவ்வை பார்த்து கேட்டார் கணேஷ்.

ஏமாத்தியது உண்மையா ஆரவ் ஓவியா அடிக்கடி ஆரவ்வை பார்த்து சொல்வார், யு ஆர் சீட்டிங் மீ என்று சொல்வார். நிஜமாகவே ஏமாற்றிதான் விட்டார் ஆரவ் என்றே தோன்றுகிறது. எது எப்படியோ பொதுவெளியில் ஆரவ் ஓவியா இடையேயான ரொமான்ஸ் வெளிச்சத்துக்கு வந்து விட்டதுதான் உண்மை.

Sunday, 1 April 2018

BHARATHIDASAN ,POET,LYRICS , BORN APRIL 29,1891-APRIL 21,1964



BHARATHIDASAN ,POET,LYRICS ,
BORN APRIL 29,1891-APRIL 21,1964



பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு

புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.

இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.

இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.

நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருந்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.

தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.

பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1969 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன.

மறைவு
பாரதிதாசன் 21.4.1964 அன்று காலமானார்.

பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்
"எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே"

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

பாரதிதாசனின் ஆக்கங்கள்
பாரதிதாசன் தனது எண்ணங்களை கவிதை, இசைப்பாடல், நாடகம், சிறுகதை, புதினம், கட்டுரை ஆகிய வடிவங்களில் வெளியிட்டார். அவற்றுள் சில:


அம்மைச்சி (நாடகம்) [1]
உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு (1948)
உரிமைக் கொண்டாட்டமா?, குயில் (1948)
எது பழிப்பு, குயில் (1948)
கடவுளைக் கண்டீர்!, குயில் (1948)
கழைக்கூத்தியின் காதல் (நாடகம்) [1]
கலை மன்றம் (1955)
கற்புக் காப்பியம், குயில் (1960)
சத்திமுத்தப் புலவர் (நாடகம்) [1]
நீலவண்ணன் புறப்பாடு
பிசிராந்தையார், (நாடகம்) பாரி நிலையம் (1967) [1]
பெண்கள் விடுதலை
விடுதலை வேட்கை
வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும், குயில் புதுவை (1959)
ரஸ்புடீன் (நாடகம்) [1]
இவை தவிர திருக்குறளின் பெருமையை விளக்கிப் பாரதிதாசன் 5 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார்

Tuesday, 24 October 2017

NIAGARA FALLS - BARREL JUMPING ON 1901,OCTOBER 24 BORN 1838 OCTOBER 24-1921 APRIL 29



NIAGARA FALLS - BARREL 
JUMPING ON 1901,OCTOBER 24 BORN 
1838 OCTOBER 24-1921 APRIL 29

Annie Edson Taylor (October 24, 1838 – April 29, 1921) was an American teacher who, on her birthday, October 24, 1901, became the first person to survive a trip over Niagara Falls in a barrel.[1] Her motives were financial but she never made much money from her adventure

Early life[edit source]



Annie Edson Taylor was born on October 24, 1838 in Auburn, New York.[2] She was one of eight children; her father, Merrick Edson, owned a flour mill. He died when she was 12 years old but the money he left behind continued to provide a comfortable living for the family. She became a schoolteacher (she received an honors degree in a four-year training course). During her studies she met David Taylor. They were married and had a son who died in infancy. Her husband died soon after. After she was widowed, she spent her working years in between jobs and locales.
Eventually, she ended up in Bay City, Michigan where she hoped to be a dance instructor. Since there were no dance schools in Bay City at that time, Taylor opened her own. Later she moved to Sault Ste. Marie in 1900 to teach music. From Sault Ste. Marie she traveled to San Antonio, Texas where she and a friend got together and went to Mexico City to find work. Unsuccessful, she returned to Bay City.[3]

Niagara Falls[edit source]



"The Queen of the Mist" posing with her barrel and cat.
Desiring to secure her later years financially, and avoid the poorhouse, she decided she would be the first person to ride over Niagara Falls in a barrel. Taylor used a custom-made barrel for her trip, constructed of oak and iron and padded with a mattress.[4] Several delays occurred in the launching of the barrel, particularly because no one wanted to be part of a potential suicide. Two days before Taylor's own attempt, a domestic cat was sent over the Horseshoe Falls in her barrel to test its strength to see if the barrel would break or not. Contrary to rumors at the time, the cat survived the plunge and 17 minutes later, after she was found with a bleeding head, posed with Taylor in photographs.[5]
On October 24, 1901, her 63rd birthday, the barrel was put over the side of a rowboat, and Taylor climbed in, along with her lucky heart-shaped pillow. After screwing down the lid, friends used a bicycle tire pump to compress the air in the barrel. The hole used for this was plugged with a cork, and Taylor was set adrift near the American shore, south of Goat Island.
The Niagara River currents carried the barrel over the Canadian Horseshoe Falls, which has since been the site for all daredevil stunting at Niagara Falls. Rescuers reached her barrel shortly after the plunge. Taylor was discovered to be alive and relatively uninjured, except for a small gash on her head. The trip itself took less than twenty minutes,[6] but it was some time before the barrel was actually opened. After the journey, Annie Taylor told the press:
If it was with my dying breath, I would caution anyone against attempting the feat…. I would sooner walk up to the mouth of a cannon, knowing it was going to blow me to pieces than make another trip over the Fall.

Taylor's Barrel at the IMax


Later years[edit source]

She briefly earned money speaking about her experience, but was never able to build much wealth. Her manager, Frank M. Russell, ran away with her barrel, and most of her savings were used towards private detectives hired to find it. It was eventually located in Chicago, only to permanently disappear some time later.[citation needed]
She spent her final years posing for photographs with tourists at her souvenir stand, attempting to earn money from the New York Stock Exchange, briefly talking about taking a second plunge over the cataracts in 1906, attempting to write a novel, re-constructing her 1901 plunge on film (which was never seen), working as a clairvoyant, and providing magnetic therapeutic treatments to local residents.[citation needed]

Death[edit source]


Annie's resting Place
Annie Taylor died on April 29, 1921, aged 83, at the Niagara County Infirmary in Lockport, New York. She is interred in the "Stunters Section" of Oakwood Cemetery in Niagara Falls, New York.