Wednesday 29 April 2020

OVIYA ,MALAYALAM ACTRESS BORN 1991 APRIL 29




OVIYA ,MALAYALAM ACTRESS 
BORN 1991 APRIL 29



.ஓவியா (பிறப்பு: ஏப்ரல் 29, 1991, ஹெலன் நெல்சன்) இந்திய வடிவழகியும், நடிகையுமாவார். இவர் 2010ல் ஓவியா என்ற பெயர் மாற்றத்துடன் களவாணி ..திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகி்ல் அறிமுகமானார்.[2] இவர் 2017ல் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் 1 எனும் மெய்நிலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
வாழ்க்கைக் குறிப்பு
1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்தார், தற்போது சென்னையில் வசித்துவருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளர்க்கப்பட்ட ஓவியா, அரசு பள்ளியில் தனது பள்ளி பருவத்தை முடித்த இவர் பின்பு, திரிசூர் விமலா கல்லூரியில் தனது பட்டபடிப்பினை முடித்தார்.

திரை வாழ்க்கை
இந்திய வடிவழகியும் நடிகையுமான இவர் தமிழில் களவானி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் கங்காரு (2007) என்ற மலையாள படம் தான் ஓவியாவின் முதல் படம். வெற்றி படமான களவானியில் நடித்த ஓவியா பின்பு நல்ல கதைகளை தேர்வு செய்து, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமே போன்ற படங்களில் நடித்தார்.

சென்னை: ஆரவ் மீதான காதலில் ஏற்பட்ட மன அழுத்தம் ஒவியாவை பிக்பாஸ் வீட்டை விட்டே வெளியேற வைத்தது. ஆனால் ஓவியாவிற்கு தான் கொடுத்த மருத்துவ முத்தம் பற்றி விளக்கம் அளித்தார் ஆரவ். தான் ஓவியாவிற்கு கொடுத்த முத்தம் பற்றி கூறிய உடன் பிக்பாஸ் வீட்டில் இருந்த சிலருக்கு அதிர்ச்சிதான். கணேஷ் வெங்கட்ராம் இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா - ஆரவ் ஜோடிதான் ரொமான்ஸ் ஜோடி. டாஸ்க்களில் இந்த ஜோடிதான் டூயட் பாடும். இது காதலாக மாறி விட்டதோ என்றுதான் ரசிகர்கள் கருதினர். மனநோயாளிகளாக நடித்த போது காதல் தோல்வி போல நடிக்க கூட ஓவியாவினால் முடியவில்லை. ஆரவ்வைப் பார்த்து முத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தார்.

ஓவியாவின் மன அழுத்தம் ஒரு கட்டத்தில் ஆரவ் காதலிக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டு ஓவியா மன அழுத்தம் காரணமாக நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

ஆரவ் மீதான காதல் பிக்பாஸ் குடும்பத்தினரை தனித்தனியாக பேசினார் கமல். ஓவியா காதலித்த ஆரவ்வை அழைத்து பேசினார். அதில், தான் ரகசியம் அம்பலமானது.
ஓவியாவின் முத்தம் அப்போது கமல், ஓவியா உங்களிடம் போகும் போது என்ன கேட்டார் என்றார். அதற்கு ஆரவ் கூறுகையில், நான் கொடுத்ததை திருப்பி கொடுத்துவிடு என்றார். எனக்கு ஓவியா முத்தம் கொடுத்தார். அதனை தான் ஓவியா திருப்பி கேட்டார் என்றார்.

முத்தத்தில் பலவிதம் முதலில் நான் முத்தம் கொடுக்கவில்லை. உண்மையிலேயே கொடுக்கவில்லையா என்று கமல் கேட்க, இல்லை சார் நான் திருப்பி கொடுத்துவிட்டேன் என்றார். சினேகன் சொன்னதினால் மருத்துவ முத்தம் கொடுத்ததாக கூறினார்.
முத்தம் பற்றி பேசிவிடுங்கள் இதை கேட்ட கமல், வீட்டில் உள்ளவர்களிடம் இந்த முத்தம் பற்றி கூறி விடுங்கள் என்றார். விளம்பரத்தில் சொன்னது போல நான் உங்களை கண்காணித்து கொண்டுதான் இருக்கிறேன் என்றார் கமல்.
அதிர்ச்சியடைந்த கணேஷ் ஆரவ் முகத்தில் ஈயாடவில்லை. வெளியே வந்த ஆரவ், நடந்த விசயத்தை கூறவே, கணேஷ் வெங்கட்ராமிற்கு அதிர்ச்சி ஏற்பட்டதுதான் உண்மை. அப்படி எதுவுமே நடக்கலைன்னு நீங்க சொன்னீங்களே என்று ஆரவ்வை பார்த்து கேட்டார் கணேஷ்.

ஏமாத்தியது உண்மையா ஆரவ் ஓவியா அடிக்கடி ஆரவ்வை பார்த்து சொல்வார், யு ஆர் சீட்டிங் மீ என்று சொல்வார். நிஜமாகவே ஏமாற்றிதான் விட்டார் ஆரவ் என்றே தோன்றுகிறது. எது எப்படியோ பொதுவெளியில் ஆரவ் ஓவியா இடையேயான ரொமான்ஸ் வெளிச்சத்துக்கு வந்து விட்டதுதான் உண்மை.ஓவியா - ஆரவ் காதல் ஆரவ் உடனான காதலே அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் ஓவியா ஆர்மியினர் சோகமடைந்தனர். ஓவியா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார் என்று நம்பிக்கொண்டுள்ளனர். ஓவியா வீடியோ பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த ஓவியா, ரசிகர்களை சந்திக்கும் போதும், அவரே பேசி வெளியிட்ட செல்ஃபி வீடியோவிலும் தான் ஆரவ்வை காதலிப்பதாக சொல்லியிருந்தார். அது தனது விருப்பம் தயவுசெய்து அதைப் பற்றி யாரும் கேட்கவேண்டாம் என்றும் சொல்லியிருந்தார்.

சற்குணம் இயக்கிய களவாணி திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதையடுத்து அதே குழு இணைந்து தற்போது 'களவாணி 2' படத்தை உருவாக்கியிருக்கிறது. கோடை விடுமுறையில் வெளியிட மிக வேகமாக பணிகள் நடந்து வருகின்றன. இந்த இரண்டாம் பாகம் முற்றிலும் புதிய கதைக்களத்தையும், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் அத்துடன் அழுத்தமான கதையையும் கொண்டிருக்கிறது.

விமல் மற்றும் ஓவியா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு என முதல் பாகத்தில் நடித்த அத்தனை பேரும் இந்த படத்திலும் நடிக்கிறார்கள். கூடுதலாக, மயில்சாமி போன்று  இன்னும் சில முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். துரை சுதாகர் இந்த படத்தில் வில்லன்
கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். களவாணி 2வில் ஓவியாவின் கதாபாத்திரம் முந்தைய படங்களில் குறிப்பாக '90 எம்.எல்' படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என தயாரிப்பாளர்கள் உறுதி அளிக்கிறார்கள். சமீபத்தில் வெளியான 'ஓட்டு கேக்க வந்தாய்ங்களா' பாடல் மிகவும் பிரபலமாகி இருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல அரசியல் கட்சிகள் கூட அந்த பாடலை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. வர்மன்ஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சற்குணம் தயாரித்து இயக்கியிருக்கிறார். மே 2019ல் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறது ஸ்க்ரீன் சன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.
1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கேரளாவில் உள்ள திரிசூரில் பிறந்தவர், தற்போது சென்னையில்
வசித்துவருகிறார்.ஓவியா வீட்டுக்கு ஒரே பிள்ளை அம்மா, அப்பா, ஓவியா. ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து செல்லமா வளர்க்கப்பட்ட ஓவியா அரசு பள்ளியில் தனது பள்ளி பருவத்தை முடித்த இவர் பின்பு,  திரிசூர் விமலா கல்லூரியில் தனது பட்டபடிப்பினை (BA in Functional English in Vimala College) முடித்தார். இந்திய வடிவழகியும் நடிகையுமான இவர் தமிழில் களவானி (Kalavani 2010) படத்தின்மூலம் அறிமுகம் ஆனாலும் கங்காரு (Kangarro 2007) என்ற மலையாள படம் தான் ஓவியாவின் முதல் படம். வெற்றி படமான களவானியில்  நடித்த ஓவியா பின்பு நல்ல கதைகளை தேர்வு செய்து, மெரினா, மூடர் கூடம், யாமிருக்கப் பயமேன் போன்ற படங்களில் நடித்தார். பின்பு கேன்சர் நோய் தாக்கிய தனது தாயின் மருத்துவ செலவுக்காக எந்த படமானாலும் எந்த கேரக்டர் ஆனாலும் நடித்து வந்த்தார். இருப்பினும் ஓவியாவின் தாய் கேன்சர் நோய் பாதிப்பால் இயற்கை எய்தினார். 
Helen Nelson ஹலென் நெல்சன்

ஓவியாவை பற்றி இயக்குநர் சற்குணம் கூறுகையில்… ”களவானி படத்துக்குப் புதுமுகங்களை தேடிக்கொண்டிருந்த நேரம். அப்போது எங்களிடம் ஓவியாவின் புகைப்படம் ஒன்று கிடைத்தது. பார்த்தவுடன் துறுதுறுவென இருந்த அந்தப் பெண்ணை எங்களுக்குப் பிடித்துவிட்டது. தயாரிப்பாளரும், ‘ இந்தப் படத்துக்கு இந்தப் பெண் பொருத்தமாக இருப்பார்’ என்றார். உடனே, அவரை சென்னைக்கு வரவழைத்து, மேக்கப் டெஸ்ட் எடுத்தோம். களவாணி படத்துக்கு அவர் செட் ஆனார்.
படப்பிடிப்பில் ஒருமுறை ஓவியாவைத் திட்டிவிட்டேன். உடனே, ஓர் இடத்தில் போய் சோகமாக அமர்ந்துகொண்டார். நான் அவர் பக்கத்தில் சென்று, ‘ திட்டியதை மறந்துவிட்டு, சிரித்துக்கொண்டே நடிக்க வேண்டும்’ என்றேன். உடனே, ஓகே சார் எனச் சிரித்துக் கொண்டே நடமாடினார். அந்தளவுக்கு எதையும் இயல்பாக எடுத்துக் கொள்ளக்கூடியவர். 


அவருடைய உண்மையான பெயர் ஹெலன். நான்தான் அவருக்கு ஓவியா எனப் பெயர் வைத்தேன். இந்தப் பெயர் ஓவியாவுக்குப் பிடிக்கவில்லை. எங்களிடம், ‘என் பெயரை தானியான்னு மாத்தப்போறேன்’ எனச் சொன்னார். நான்தான், ‘இந்தப் பெயர் நல்லா ரீச் ஆகும்’ எனச் சொன்னேன். இப்போது எல்லோரும் ஓவியா… ஓவியா எனப் பேசும்போது மிகுந்த சந்தோஷமாக உள்ளது. 

Bigg Boss Oviya
பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் நான்கு முறை பார்த்தேன். என்னுடைய நண்பர்கள் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, ‘ஓவியா கேரக்டரே இப்படித்தானா? இல்லை நிகழ்ச்சிக்காக இப்படி எல்லாம் நடிக்கிறாரா?’ எனக் கேட்டனர். ‘ஓவியா கேரக்டர் அப்படித்தான்’ எனப் பதில் கொடுத்தேன். அவர் எப்போதும் ஜாலியாக இருப்பார். அவருக்கு ஏற்ற கதை இருந்தால், என் படத்தில் அவரை மீண்டும் நடிக்க வைப்பேன்” என நெகிழ்ந்தார் இயக்குநர் சற்குணம்.

No comments:

Post a Comment