Sunday 26 April 2020








.மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் 07 /08 : T .சௌந்தர்.
06/19/2018 இனியொரு... 1 COMMENT
அறிந்த  குரல்களும் புதிய நியதிகளும்.

புதுவகையான வாத்திய அமைப்பை தமது பாடல்களில் அமைத்தார்கள் என்று சொல்லும் போது அதற்கு ஏற்பப் பாடும் குரல்களையும் கண்டெடுக்க வேண்டிய அவசியமும் உண்டாகிறது.   ஏற்கனவே அறிமுகமான .கேட்டுப்பழகிய குரல்களை பயன்படுத்துவதுடன்  புதியவர்களையும் அறிமுகம் செய்வது அல்லது ஏற்கனவே பாடிக்கொண்டிருப்பவர்களில் சிலரை முதன்மைப்படுத்துவதும் இயல்பான ஒரு அம்சமாக இருக்கிறது.

ஆனால் மெல்லிசைமன்னர்களைப் பொறுத்தவரையில் தமது படைப்பாற்றலை மேம்படுத்த ஏற்கனவே அறிமுகமான குரல்களை பயன்படுத்தி தமது இசையை புனர்நிர்மாசெய்தார்கள் என்பது காலத்தின் காட்டாயமாகவும் இருந்தது எனலாம்.வாத்திய இசை  நிகழ்த்திய புதுமையுடன் புதுமையாகப் பாடும் பாங்கையும் அவர்களே  உருவாக்க வேண்டியதாகவும் இருந்தது.அன்றைய காலம் விளைவித்திருந்த  பாடும்முறை மீதான மதிப்பீடுகளுக்கு  முற்றுமுழுதான மாறுபாட்டைக் கொண்டுவந்தார்கள்.பழகிய பாணி இசைப்பாங்கின் அலையில் ஒரு தசாப்தம் [ 1951- 1961 ] மெல்லிசைமன்னர்களும் ஓடவேண்டிய நிர்பந்தம் ஏற்பட நேர்ந்தது.அந்த பத்து வருட அலையோட்டத்தில்  நீந்தி தமக்கானஉயிர்த்துடிப்பு மிக்க புது அலையை உருவாக்கினார்கள்.

அவர்களுக்கு முன்னரும் அவர்களது சமகாலத்திலுமிருந்த பெருந்தொகையான பாடகர்,பாடகிகளின் பட்டியலையும் ஒரு கணம் இங்கே நினைவூட்டிச் செல்வது தவிர்க்க முடியாததாகும்.

1950 களில் வெளிவந்த படங்களில் ஒலித்த பாடல்களில் எத்தனையோ  விதம்,விதமான குரல்கள்  ஒலித்தன! குறிப்பாகப் பெண்குரல்களை எண்ணிப் பார்க்கும் போது வியப்பும் ஆச்சரியமும் மேலிடுகிறது.தமது குரல்களை நசுக்காமல் ,நெறிக்காமல் , வாய் திறந்து , ஒளிவுமறைவின்றி சுருதிசுத்தத்துடன் பாடும் திறன்படைத்த குரல்களைக் கேட்கிறோம்.


என்.எஸ்.கிருஷ்ணன்
என்.எஸ்.கிருஷ்ணன் , ஜே.பி சந்திரபாபு , டி.ஆர்.மகாலிங்கம் , கே.ஆர்.ராமசாமி போன்ற பாடும் ஆற்றல் பெற்ற நடிகர்களுடன்,பாடகர்களாக  திருச்சி லோகநாதன், வி,என் சுந்தரம் ,எஸ்.சி கிருஷ்ணன்.சி.எஸ்.ஜெயராமன் , ஏ.எல்.ராகவன் , கண்டசாலா , ஏ.எம்.ராஜா , பி.பி.ஸ்ரீனிவாஸ் ,குசைந்தீன், டி.ஏ.மோதி ,டி.எம்.சௌந்தரராஜன் ,சீர்காழி கோவிந்தராஜன் போன்றோரும் ,  பெண் பாடகிகளில் பாடும் நட்சத்திரங்களாக விளங்கிய பி.பானுமதி ,எஸ்.வரலட்சுமி ,டி.ஆர்.ராஜகுமாரி ,கே.பி.சுந்தராம்பாள்  போன்றோருடன் யு.ஆர் .ஜீவரத்தினம் ,ஏ.பி. கோமளா,பி.ஏ.பெரியநாயகி, ஏ.ரத்னமாலா ,ஜமுனாராணி ,டி.வி.ரத்தினம் ,கே.ராணி, சரோஜினி எம்.எல்.வசந்தகுமாரி ,ராதா ஜெயலட்சுமி, சூலமங்கலம் சகோதரிகள், டி.வி.ரத்தினம்,என்.எல் .கானஸரஸ்வதி ,எம்.எஸ்.ராஜேஸ்வரி , ஜிக்கி, பி.லீலா  போன்ற பாடகிகள் என பலவிதமான பாவனைகள் காட்டும் , வார்ணஜாலங்கள் காட்டும் ,வளமிக்க  இசையரங்காக [ Rich Musical ]  அக்கால திரை இசையுலகு இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.

குரலில் மென்மையும் , வசீகரமும் ,  தாய்மையும்  நிறைந்த குரல்கள் , ஓங்காரம் எழுப்பும் குரல்கள் ,தென்றலாய் மிதந்து குளிரவைக்கும் குரல்கள் , மென்மையின் தடத்தில் மெதுவாய் நழுவிச் செல்லும் குரல்கள் , கீழ் சுருதியில் பாடி இதயத்தை நெகிழ வைக்கும் குரல்கள் , உயர்ந்த சுருதியில்  நின்று நர்த்தனமாடும் குரல்கள்  என இந்தக் குரல்களை நாம் வகைப்படுத்த முடியும்.

உத்வேகத்துடன் தமது இசைவாழ்வை ஆரம்பித்த மெல்லிசைமன்னர்கள் தாம் இசையமைத்த ஆரம்பகாலத் திரைப்படங்களில் மேல்  குறிப்பிட்ட பெரும்பாலான குரல்களை பயன்படுத்திருக்கின்றார்கள்.

A  குரலில் மென்மையும் , வசீகரமும் ,  தாய்மையும்  நிறைந்த  குரல்களாக
ஆர்.பாலசரஸ்வதி தேவி , எம்.எல்.வசந்தகுமாரி ,ராதா ஜெயலட்சுமி, சூலமங்கலம் சகோதரிகள்,டி.எஸ்.பகவதி, ஏ.பி. கோமளாபோன்ற பாடகிகளின்  பாடல்களுக்கு உதாரணமாக அமைந்த பாடல்கள் சிலவற்றை இங்கே தருகிறேன்.

01    நீலவண்ண கண்ணா வாடா – மங்கையர் திலகம் [ 1954] – ஆர்.பாலசரஸ்வதிதேவி – இசை : எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி
02    ஆளப்பிறந்த கண்மணியே  – உத்தமபுத்திரன் [ 1958] – ஆர்.பாலசரஸ்வதிதேவி + ஏ.பி.கோமளா – இசை : ஜி.ராமநாதன்
03   எல்லோரும் உன்னை நல்லவன் என்றே  – பாக்கியவதி  [ 1957] – ஆர்.பாலசரஸ்வதிதேவி – இசை : எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி
04    சிங்கார புன்னகை   – மகாதேவி  [ 1957] – ஆர்.பாலசரஸ்வதிதேவி எம்.எஸ்.ராஜேஸ்வரி – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
05    தென்றல் வந்து வீசாதோ  – சிவகங்கை சீமை  [ 1959] – எஸ்.வரலட்சுமி  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
06    என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே  – இருபத்திரை  [ 1957] – ராதா ஜெயலட்சுமி  – இசை : எஸ்.வி.வெங்கடராமன்
07    நீயே கதி ஈஸ்வரி  – அன்னையின் ஆணை  [ 1958] – பி.லீலா  – இசை : எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு
08    பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் கண்ணா –  பெண் [ 1954] – டி.கே பகவதி – இசை : ஆர்.சுதர்சனம்
09    அன்பே பாவமா அதில் ஏதும் பேதமா – தேவதாஸ்  [ 1951] – ஆர்.பாலசரஸ்வதிதேவி – இசை : சி.ஆர்.சுப்பராமன்
10    கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம்  – தாயுள்ளம் [ 1953] – எம்.எல்.வசந்தகுமாரி  – இசை : ஏ.ராமராவ்
11    வண்ண மேடையில் எண்ணம் போலவே –  ஒரேவழி  [ 1959  ] – டி.கே பகவதி – இசை : ஆர்.சுதர்சனம்

B  ஓங்கிக்குரல் எடுத்து பாடுவதில் கே.பி.சுந்தராம்பாள்,பி.ஏ.பெரியநாயகி , யு.ஆர் .ஜீவரத்தினம் போன்றோரும் ,டி.ஆர்.மகாலிங்கம் , கே.ஆர்.ராமசாமி,சி.எஸ்.ஜெயராமன் ,திருச்சி லோகநாதன் ,சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன் ,எஸ்.சி கிருஷ்ணன்  போன்ற பாடகர்களின்   பாடல்களுக்கு உதாரணமாக அமைந்த பாடல்கள்   சிலவற்றை இங்கே தருகிறேன்.

01    எங்கள் திராவிட போன் நாடே  – மாலையிட்ட மங்கை  [ 1958] – டி.ஆர்.மகாலிங்கம்  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
02    ஓங்காரமாய் விளங்கும் நாதம்   – வணங்காமுடி  [ 1957] – டி.எம்.சௌந்தரராஜன்   – இசை : ஜி.ராமநாதன்
03   கண்ணீர் விட்டோ  வளர்த்தோம்   – கப்பலோட்டிய தமிழன்  [ 1959] – திருச்சி லோகநாதன் – இசை : ஜி.ராமநாதன்
04    ஜெயமே புகழவே   – குலேபகாவலி   [ 1957] – எஸ்.சி.கிருஷ்ணன் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
05    உழைப்பதிலா உழைப்பை பெருவத்திலா   – நாடோடி மன்னன்  [ 1959] – சீர்காழி கோவிந்தராஜன்  – இசை : சுப்பைய்யா நாயுடு
06    தென்றலே வாராயோ   – வாழ்விலே ஒரு நாள்   [ 1957] – யு.ஆர் .ஜீவரத்தினம் + டி.எம்.சௌந்தரராஜன்  – இசை : டி.ஜி.லிங்கப்பா
07    பெரியது கேட்டபின் விரிவடிவேலோன்   – அவ்வையார்   [ 1950] – கே.பி.சுந்தராம்பாள்   – இசை : எஸ்.ராஜேஸ்வரராவ்
08    வேலனே செந்தமிழ் வித்தகர்    – அவ்வையார்   [ 1950] – கே.பி.சுந்தராம்பாள்   – இசை : எஸ்.ராஜேஸ்வரராவ்
09    எங்கே சொர்க்கம் எங்கே சொர்க்கம்  – சொர்க்கவாசல்   [ 1955] – கே.ஆர்.ராமசாமி  – இசை : சி.ஆர்.சுப்பராமன் + விஸ்வநாதன் ராமமூர்த்தி
10    தென்னாடுடைய சிவனே போற்றி   – சம்பூரண ராமாயணம்    [ 1957  ] – சி .எஸ் .ஜெயராமன்   – இசை : கே.வி.மகாதேவன்
11    வாராய் நீ வாராய்  – மந்திரிகுமாரி  [ 1950] – திருச்சி லோகநாதன் + ஜிக்கி – இசை : ஜி.ராமநாதன்
12    வா கலாப மயிலே ஓடி நீ  –  காத்தவராயன்  [ 1959 ] – டி.எம்.சௌந்தரராஜன் – இசை : ஜிராமநாதன்

C  நாட்டுப்புற இசைப்பாங்கில் பாட ஏ.ரத்னமாலா ,ஜமுனாராணி ,டி.வி.ரத்தினம் ,கே.ராணி, எம்.எஸ்.ராஜேஸ்வரி ,சரோஜினி, திருச்சி லோகநாதன்,டி.எம்.சௌந்தரராஜன் ,சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.சி கிருஷ்ணன்.ஏ.எல்.ராகவன், பி.பொன்னுசாமி  போன்றோரும் ,

01   ஜின்ஜினக்கு ஜின்ஜினக்கு கணக்கு     – ரம்பையின்காதல்    [ 1956] – எஸ்.சி.கிருஷ்ணன் + ஜிக்கி   – இசை :டி.ஆர்.பாப்பா
02   சும்மா இருந்தா சோத்துக்கு நட்டம்      – மதுரைவீரன்   [ 1951] – ஜிக்கி   – இசை : ஜி.ராமநாதன்
03   ஐந்து ரூபா  ..கொஞ்ச நேரம்    அந்தமான் கைதி    T.V.ரத்தினம் இசை : ஜி.ராமநாதன்
04   சாலையிலே விளையாடும் சப்பாணி    – ரம்பையின்காதல்    [ 1956] – எஸ்.வி.பொன்னுசாமி  + ஜிக்கி   – இசை :டி.ஆர்.பாப்பா
05   மாரி மகமாயி மாரி மகமாயி   – நாம்    [ 1953] – செல்லமுத்து + ஏ.பி.கோமளா     – இசை : சி.எஸ்.ஜெயராமன்
06   வேட்டி கட்டின பொம்பளே நீ – கல்யாணம் செய்துகொ  [ 1957] – சீர்காழி +சூலமங்கலம் ராஜலட்சுமி   – இசை : டி.லிங்கப்பா
07   ஏறாத மலைதனிலே   – தூக்குத் தூக்கி   [ 1954] – டி.எம்.சௌந்தரராஜன்    – இசை : ஜி.ராமநாதன்
08   அத்தானும் நான் தானே – சக்கரவர்த்தித் திருமகள்  [ 1957] – எஸ்.சி.கிருஷ்ணன் + டி.வி.ரத்தினம்    – இசை : ஜி.ராமநாதன்
09   உன் திருமுகத்தை ஒரு முகமா    – மகாதேவி    [ 1958] – ஜே .பி.சந்திரபாபு + ஏ.ரத்னமாலா    – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

D  நாட்டியப்பாடல்களை பாடுவதற்கு பி.லீலா ,என்.எல் .கானஸரஸ்வதி போன்றவர்களுடன் மேலே குறிப்பிட்ட  எம்.எல்.வசந்தகுமாரி ,ராதா ஜெயலட்சுமி, சூலமங்கலம் சகோதரிகள், டி.வி.ரத்தினம்,எஸ்.வரலட்சுமி ,பி.பானுமதி போன்ற பாடகிகளும், டி.எம்.சௌந்தரராஜன் ,சீர்காழி கோவிந்தராஜன்,வி,என் சுந்தரம், கண்டசாலா போன்றோரும்  வல்லவர்களாக இருந்தனர்.

01    நீலி மகன் நீ அல்லவோ மறை சதா     – மலைக்கள்ளன்  [ 1951] – பி.ஏ.பெரியநாயகி   – இசை : எஸ்.எம்.சுப்பையா நாயுடு
02    ஆடல் காணீரோ திருவிளையாடல்    – மதுரைவீரன்   [ 1957] – எம்.எல்.வசந்தகுமாரி  – இசை : ஜி.ராமநாதன்
03    ஆட வாரீர் இன்றே ஆடவாரீர்   – ரம்பையின் காதல்  [ 1958] – பி.பானுமதி   – இசை : டி.ஆர்.பாப்பா
04    காத்திருப்பான் கமலக்கண்ணன்   – உத்தமபுத்திரன்   [ 1958] – பி.லீலா   – இசை : ஜி.ராமநாதன்
05    ஆடும் அழகே அழகு  – ராஜ  ராஜன்  [ 1958] – சூலமங்கலம் ராஜலட்சுமி   – இசை : கே.வி.மகாதேவன்
06    வருகிறாள் உனைத்தேடி  – தங்கப்பதுமாய்   [ 1958] – எம்.எல்.வசந்தகுமாரி + சொல்லமங்கலம்   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
07    கலையாலே எழிலானதே – ராஜா ராணி   [ 1958] – எம்.எல்.வசந்தகுமாரி   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
08    கதவைச் சாத்தடி   – ரத்தக்கண்ணீர்   [ 1958] – எம்.எல்.வசந்தகுமாரி   – இசை : சி.எஸ்.ஜெயராமன்
09    வா வா வளர்மதியே வா   – வணங்காமுடி  [ 1958] – எம்.எல்.வசந்தகுமாரி  – இசை : ஜி.ராமநாதன்
10    கோடி கோடி இன்பம் பெறவே   – ஆட வந்த தெய்வம்   [ 1958] – பி.லீலா + பி.சுசீலா  – இசை : கே.வி.மகாதேவன்
11    சிறந்த உலகினில்  யாவும்   – மாப்பிள்ளை [ 1955 ] –  லீலா + சூலமங்கலம்  – இசை :
12    வேலவரே உன்னைத் தேடி ஒரு  –  மணமகன் தேவை [1955 ]  – P.பானுமதி – இசை : ஜி.ராமநாதன்

இவர்களுடன் நடிப்பதிலும் பாடுவதிலும் வல்லுனர்களாக விளங்கிய  டி.ஆர்.ராஜகுமாரி ,எஸ்.வரலட்சுமி ,பி.பானுமதி போன்றோரும் பாடகர்களுக்கு இணையாகப் பாடி அசத்தினார்கள்.

இந்தப்பாடக பாடகிகளுடன் அன்றிருந்த இசையமைப்பாளர்களையும் , கவிஞர்களையும் நினைவூட்டுதலும் பொருத்தமானதாகும் .


ஜி.ராமநாதன்
இசையமைப்பாளர்கள் பட்டியலில்…..
டி.ஏ.கல்யாணம் ,ஜி.ராமநாதன்,.எஸ்.வீ.வெங்கட்ராமன் ,சி.ஆர் .சுப்பராமன்,எஸ்.எம் சுப்பைய்யாநாயுடு . சி.என்.பாண்டுரங்கன்.எஸ்.ராஜேஸ்வரராவ் .பெண்டலாயா,ஆதி நாராயணராவ் ,எஸ்.ஹனுமந்த ராவ் ,அஸ்வத்தாமா ஆர்.சுதர்சனம்,கண்டசால,எம்.எஸ். ஞானமணி,கே .வீ. மகாதேவன் ,ஏ .எம் .ராஜா , எச் ஆர் ,பத்மநாபசாச்திரி , டி.ஆர். பாப்பா,  ஜி.கே .வெங்கடேஷ் ,டி.சலபதி ராவ் திறமைமிக்கவர்கள் இருந்தனர்.

பாடலாசிரியர்களில்,உடுமலைநாராயணகவி ,கம்பதாசன் ,சுந்தரவாத்தியார்,முத்துக்கூத்தன் ,கே.பி.காமாட்சி ,புரடசிதாசன் ,கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கு.சா கிருஷ்ணமூர்த்தி ,சுரதா, மாயவனாதன் , எஸ்.டி.சுந்தரம் ,மருதகாசி , கா.மு.செரீப் ,கே.டி.சந்தானம் ,தஞ்சைராமைய்யாதாஸ்,கண்ணதாசன் ,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்  போன்ற பேராற்றல் வாய்ந்தவர்களையும்    காண்கிறோம்.

வகைவகையான பாடல்முறைகளும் [ Versatility ] , அதிலெழும் இசையலைகளும் [Intonations ],  அழகும் , உத்வேகமும் மிக்க  பலவிதமான குரல்களால் வளம்பெற்ற,  பல்வேறு சுருதிகளில் பாடக்கூடிய பாடகர்கள், பாடகிகள் குவிந்திருந்தார்கள்.

1940  களின்  ஹிந்தி சினிமாவின் இருந்த ஒரு நிலைமையே  தமிழ் திரையில் 1950 களில் இருந்திருக்கிறது.ஹிந்தி   திரையில்   சைகல், சுரபாய் அம்பலவாலி,சம்சாட் பேகம் , கானான் தேவி , கவிபிரதீப் , உமாதேவி , கீதா தத்  ,முக்கேஷ் , நூர்ஜகான்  பல பாடகர்கள் நிறைந்திருந்தனர்.எனினும் 1950 களில் புதிய அலையெழுச்சியால் முகமட் ராபி , முகேஷ் , லதா மங்கேஸ்கர் , கிசோர்குமார், மன்னா டே ,ஆஷா போஸ்லே , கீதா தத் போன்ற  பாடகர்கள் முன்னணிக்கு வந்தார்கள்.

தமிழிலும் இவ்விதமே தியாகராஜ பாகவதர் , பி.யு.சின்னப்பா காலத்தைத் தொடர்ந்து சில பாடகி ,பாடகர்கள் முன்னணிக்கு வந்தார்கள். குறிப்பாக சொல்லவேண்டுமெனின் பி.லீலா , ஜிக்கி , கண்டசாலா , ஏ.எம் ,ராஜா , பாலசரஸ்வதி தேவி , ஜமுனா ராணி , கே.ராணி , ஏ.பி. கோமளா ,எம்.எஸ்.ராஜேஸ்வரி ,திருச்சி லோகநாதன் , சௌந்தரராஜன் போன்றவர்கள் தமிழ்திரையின் புதிய சந்ததி பாடகர்களாக  உருவாக்கினார்கள்.

முகம்மது ரபி, முகேஷ் ,லதா மங்கேஷ்கர் போன்ற பாடகர்கள் முன்னணிக்கு வந்த 1950 களில்  பாடகியாக  அனாயாசமாகப் பாடும் திறன்வாய்ந்த   ஜிக்கி அறிமுகமாகிறார்.ஞானசௌந்தரி படத்தில்  “அருள் தாரும்    தேவ மாதாவே ஆதியே எங்கள் ஜோதி ” என்ற பாடல் மூலமாக சிறுமி ஞானசௌந்தரியின் குரலாக ஒலித்து ஆச்சரியப்படுத்திய ஜிக்கி , அக்காலத்தில் புகழின் உச்சியிலிருந்து இசையமைப்பாளரான ஜி.ராமநாதனால் முன்னணிக்கு கொண்டுவரப்பட்டார்.

மந்திரிகுமாரி படத்தில் திருச்சி லோகநாதனுடன் இணைந்து ” வாராய் நீ வாராய் ” மற்றும்  “உலவும் தென்றல் காற்றினிலே ” போன்ற மிகப் புகழபெற்ற இரு பாடல்களை ஜிக்கியை பாட வைத்தார் ஜி.ராமநாதன்.தமிழ்த்திரையின்  இசைப் போக்கை  மெல்லிசையின் பக்கம் மரபு சார்ந்து இழுத்து வந்த பாடல்களில் இதற்குத் தனியிடம் உள்ளது.இந்த இரண்டு பாடல்களும் மெல்லிசையின் உன்னத்தங்களை இனம் காண வைக்கும் தனிச்சுவை மிக்க பாடல்கள் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

அதே படத்தில் “அன்னம்  இட்ட  வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே ” என்ற நாட்டுப்புறப்பாங்கில் அமைந்த பாடலை பாடியவர் ,பின்னாளில் பெரும் புகழபெற்ற  டி.எம்.சௌந்தரராஜன்.ஆரம்ப நிலையில் இருந்த சௌந்தர்ராஜனின் குரல் நாட்டுப்புற பாங்கில் பாடுவதற்கே பொருத்தம் என்ற நிலையில் அவ்விதம் பாட வைக்கப்பட்டார்.ஜி.ராமநாதனால் விரும்பப்பட்ட சௌந்தரராஜன் அவரால் இசையமைக்கப்பட்ட தூக்குத் தூக்கி [1952] படத்தில் மீண்டும் நாட்டுப்புற பாங்கில் அமைந்த பாடலான ” ஏறாத மலைதனிலே ஜோரான கௌதாரி இரண்டு ” என்ற பாடல் மூலம் சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றார்.

அன்றைய நாளில் பெருமதிப்புடன் விளங்கிய இசையமைப்பாளரான ஜி.ராமநாதனுக்கு மிகவும்  பிடித்தவர்களாக  ஜிக்கி ,டி.எம்.சௌந்தரராஜன் விளங்கினர். இதே காலத்தில் கிரமமாகப் பாடிவந்த பி.லீலா பிரசித்தமாக பாடிக்கொண்டிருந்தார்.இந்தச் சூழ்நிலையில் 1953 ல்  பி.சுசீலா அறிமுகமானார்.

ஆனாலும் இத்தகைய பின்னணியில்  1950 களில் ஜி.ராமநாதன் தான் இசையமைத்த படங்களில்   தனக்கு பிடித்த ஆற்றல்மிக்க  இருகுரல்களை [ஜிக்கி ,டி.எம்.சௌந்தரராஜன் ] மிக அருமையாகப் பயன்படுத்தினார். தனிப்பாடலாகவும் , ஜோடிக்குரல்களாகவும் ,கம்பீரமாகப் பாட வைத்து இருவரையும் சந்தேகத்திற்கிடமின்றி இரு இசை நட்ஷத்திரங்களை உருவாக்கினார் எனலாம். ஜி.ராமநாதனின் இசையில் டி.எம்.சௌந்தரராஜன் , ஜிக்கி  இணை பல இனிய பாடல்களைப் பாடியது மட்டுமல்ல , இருவரையும் வேறு பாடகி ,பாடகர்களுடனும் சேர்ந்து பல இனிய பாடல்களையும் தந்தார்.சில முக்கியமான பாடலைகளைத் தருகிறேன்.

01    நாடகமெல்லாம் கண்டேன்  – மதுரைவீரன்   [ 1957] – ஜிக்கி + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : ஜி.ராமநாதன்
02    பூவாமரமும் பூத்ததே   – நான் பெற்ற செல்வம்   [ 1957] – ஜிக்கி + டி.எம்.சௌந்தரராஜன்  – இசை : ஜி.ராமநாதன்
03    இன்பம் வந்து சேருமா    -நான் பெற்ற செல்வம்  [ 1957] – ஜிக்கி + டி.எம்.சௌந்தரராஜன்  – இசை : ஜி.ராமநாதன்
04    இதய   வானிலே உதயமானது    – கற்புக்கரசி   [ 1957] – ஜிக்கி + டி.எம்.சௌந்தரராஜன்  – இசை : ஜி.ராமநாதன்
05    கன்னியா கன்னியா    – கற்புக்கரசி  [ 1957] – ஜிக்கி + டி.எம்.சௌந்தரராஜன்  – இசை : ஜி.ராமநாதன்
06    கண்களால் காதல் காவியம்   – சாரங்கதாரா  [ 1957] – ஜிக்கி + டி.எம்.சௌந்தரராஜன்  – இசை : ஜி.ராமநாதன்

ஜி.ராமநாதன் இசையில் சீர்காழி கோவிந்தராஜனுடன் ஜிக்கி பாடிய முக்கியமான பாடல்கள்.

01    அழகோடையில் நீந்தும் இள அன்னம் – கோகிலவாணி [ 1957] – ஜிக்கி + சீர்காழி கோவிந்தராஜன் – இசை : ஜி.ராமநாதன்
02    திருவே என் தேவியே வாராய்  – கோகிலவாணி [ 1957] – ஜிக்கி + சீர்காழி கோவிந்தராஜன்  – இசை : ஜி.ராமநாதன்
03    மின்னுவதெல்லாம் பொன்னென்று  – கோமதியின் காதலன்[ 1958] – ஜிக்கி + சீர்காழி கோவிந்தராஜன்  – இசை : ஜி.ராமநாதன்
04    அன்பே ஆரமுதே வாராய்  – கோமதியின் காதலன் [ 1958] – ஜிக்கி + சீர்காழி கோவிந்தராஜன்  – இசை : ஜி.ராமநாதன்
05    வனமேவும்   ராஜகுமாரி   – ராஜா தேசிங்கு  [ 1959] – ஜிக்கி + சீர்காழி கோவிந்தராஜன்  – இசை : ஜி.ராமநாதன்.

டி.எம். சௌந்தரராஜன் , சீர்காழி கோவிந்தராஜன் மட்டுமல்ல , திருச்சி லோகநாதன் ,சி.எஸ்.ஜெயராமன் ,கண்டசாலா ,ஏ.எம்.ராஜா ,எஸ்.சி.கிருஷ்ணன்  போன்றவர்களுடனும் , பெண் பாடகிகளான பி.லீலா, பி.சுசீலா ,கே.ஜமுனாராணி போன்றோருடனும் இணைத்து கம்பீரமும் , இனிமையும் , விறுவிறுப்பும் மிக்க ஜிக்கியின் குரலை என்னென்ன வகையில் எல்லாம் பயன்படுத்த முடியுமோ அந்தந்த வகையிலெல்லாம் பயன்படுத்தியவர் ஜி .ராமநாதன்.

பிற பாடகர்களுடன் இணைந்து ஜிக்கி பாடிய புகழ் பெற்ற பாடல்கள் சில:

01    இந்த வாழ்வு சொந்தமானால் – நல்லதங்காள்  [ 1956] – ஜிக்கி + திருச்சி லோகநாதன்- இசை : ஜி.ராமநாதன்
02    கல்யாணம் ஆகுமுன்னே   – டாகடர் சாவித்திரி  [ 1957] – ஜிக்கி + கண்டசாலா   – இசை : ஜி.ராமநாதன்
03    காவியக்காதல்  வாழ்வின் ஓவியம் நாமே – கோமதியின் காதலன்[ 1958] – ஜிக்கி + ஏ எம்.ராஜா   – இசை : ஜி.ராமநாதன்
04    வாழ்வினிலே இந்நாள் இனி வருமா  – வணங்காமுடி  [ 1958] – ஜிக்கி + ஏ எம்.ராஜா   – இசை : ஜி.ராமநாதன்
05    உள்ளம் இரண்டும் ஒன்று    – புதுமைப்பித்தன்   [ 1959] – ஜிக்கி + சி.எஸ்.ஜெயராமன்   – இசை : ஜி.ராமநாதன்.
06     அன்பே எந்தன் முன்னாலே  – ஆரவல்லி   [ 1958] – ஜிக்கி + ஏ எம்.ராஜா   – இசை : ஜி.ராமநாதன்.

ஜி.ராமநாதனின் இசை மாளிகையின்  முடிசூடாத இளவரசியாக விளங்கியவர் ஜிக்கி என்றால் மிகையில்லை.

ஜி.ராமநாதனின் இசையில் பாடகி ஜிக்கி எவ்விதம் பயயன்படுத்தப்பட்டாரோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் பயன்படுத்தப்பட்டவர் பின்னணிப்பாடகி பி.லீலா.

இறுகட்டப்படட வீணையின் கம்பியில் எழும்  கம்பீரமான இனிய அதிர்வும் ,எழுச்சியும் மிக்க குரலுக்குச் சொந்தக்காரர்  பி.லீலா. மனதைக் கவ்வும் வீறும் , உணர்வுகளைக் கிளர்ந்தெழ வைக்கும் பிசிறற்ற குரலும்  மெல்லிய இனிய இழைகளையும் காற்றில் மிதக்க வைக்கும் ஆற்றல்மிக்க குரல் கொண்டவர் லீலா!

செவ்வியலிசை பலமுடைய பி.லீலாவின் குரலின் அமைப்பு,அதன் இனிமை  எல்லாவிதமான சுவைகளையும் வெளிப்படுத்தி ,வியாபித்து நிற்பதை  உயிரை வருடும் பல இனிய பாடல்களில் கேட்கிறோம்.அவரை  ஒத்த பின்னணிப்பாடகிகள் யாரும்  தியாகராஜ பாகவதருடன் பாடும் வாய்ப்பு பெறவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். அதுமட்டுமல்லதிரையில் மிக அருந்தலாகப் பாடிய ,  திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவனுடன் இணைந்து காதல் பாடல் பாடிய பெருமையும் பி.லீலாவையே சேரும்.ஜோடிப்பாடல்களைப் பொறுத்தவரையில் பி.லீலாவை , அவரது ஆரம்ப நாளிலேயே தியாகராஜ பாகவதருடன் பாட வைத்த பெருமை ஜி.ராமநாதனை சேரும்.

பி.லீலா பாடிய ஜோடிப்பாடல்கள்:

01  யானைத் தந்தம் போல பிறை நிலா   – அமரகவி   [1952 ] – பி.லீலா + தியாகராஜ பாகவதர்   – இசை : ஜி.ராமநாதன்
02  கொஞ்சப்பேசும்   கிளியே    – அமரகவி   [1952 ] – பி.லீலா + தியாகராஜ பாகவதர்   – இசை : ஜி.ராமநாதன்
03  கண்ணோடு கண்ணாய் ரகசியம் பேசி   – மதன மோகினி  [1959 ] – பி.லீலா + கே.வி.மகாதேவன்   – இசை : கே.வி.மகாதேவன்
04  வாங்க மச்சான் வாங்க  – மதுரை வீரன் [1959 ] – பி.லீலா + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : ஜி.ராமநாதன்
05  எல்லையில்லாத இன்பத்தில்   – சக்கரவர்த்தித்த திருமகள்   [1959 ] – பி.லீலா + சீர்காழி கோவிந்தராஜன்   – இசை : ஜி.ராமநாதன்
06  நெஞ்சில் குடியிருக்கும்   – இரும்புத்திரை   [1958 ] – பி.லீலா + டி.எம்.சௌந்தரராஜன்   – இசை : எஸ்.வி.வெங்கடராமன்
07  இந்த வாழ்வு  சொந்தமானால்  – நல்ல தங்காள்  [1959 ] – பி.லீலா + திருச்சி லோகநாதன்  – இசை : ஜி.ராமநாதன்
08  சுந்தராங்கியை பார்த்தத்தினாலே   – கடன் வாங்கி கல்யாணம்   [1959 ] – பி.லீலா + ஏ.எம்.ராஜா + சீர்காழி  – இசை : எஸ்.ராஜேவாரராவ்
09   பூவின்றி மனமேது பூமியின் மீது   – உத்தமி பெற்ற ரத்தினம்   [1959 ] – பி.லீலா + டி.எம்.சௌந்தரராஜன்  – இசை : டி.சலபதிராவ்
10  தென்றல் உறங்கிடக் கூடுமடி  – சங்கிலித் தேவன்   [1959 ] – பி.லீலா + டி.எம்.சௌந்தரராஜன்  – இசை : டி.ஜி.லிங்கப்பா
11  தாழையாம் பூ முடித்து   – பாகப்பிரிவினை  [1959 ] – பி.லீலா + டி.எம்.சௌந்தரராஜன்  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
12  இளவேனில் சந்திரிகையாள்   – தந்தை   [1959 ] – பி.லீலா + ஏ.எம்.ராஜா   – இசை :
13  புது ரோஜா போலெ   – ஆத்மசாந்தி   [1959 ] – பி.லீலா + டி.ஏ.மோதி   – இசை :
14  கல்யாணம் நம் கல்யாணம் – தங்கமலை ரகசியம்  [1959 ] – பி.லீலா + டி.எம்.சௌந்தரராஜன்  – இசை : டி.ஜி.லிங்கப்பா
15  நான் செய்த பூஜாபலம்    – குணசுந்தரி   [1959 ] – பி.லீலா + ஏ.எம்.ராஜா  – இசை : கண்டசாலா
16  காதலே தெய்வீகக் காதலே   – பாதாள பைரவி  [1959 ] – பி.லீலா + கண்டசாலா   – இசை : கண்டசாலா
17  ஆடும் ஊஞ்சலைப் போலெ – என் தங்கை   [1952 ] – பி.லீலா + டி.ஏ.மோதி  – இசை : சி.என்.பாண்டுரங்கன்
18  வாங்க மச்சான் வாங்க  – மதுரை வீரன் [1959 ] – பி.லீலா + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : ஜி.ராமநாதன்
19  வீசும் தென்றலில்  – ப்ரேமாபாஸம்  [1959 ] – பி.லீலா + ஏ.எம்.ராஜா  – இசை : எஸ்.ராஜேஸ்வரராவ்
20  நீதானா என்னை அழைத்தது  – மாயா பெயர்  [1957] – பி.லீலா + கண்டசாலா   – இசை : கண்டசாலா

எல்லாவிதமாகவும் பாடும் ஆற்றல் பெற்றவர் எனபதை நிரூபிக்கும் வகையில் பி.லீலா பாடிய பல்வகைப்பாடல்களுக்கு உதாரணமாக அமைந்த சில  பாடல்கள் இங்கே ….

01  கண்ணும் கண்ணும் கலந்து – வஞ்சிக்கோட்டை வாலிபன் [1959 ] – பி.லீலா + ஜிக்கி – இசை : சி.ராமசந்திரா
02  படிப்புக்கொரு கும்பிடு  – இரும்புத்திரை  [1959 ] – பி.லீலா + ஜிக்கி – இசை : எஸ்.வி.வெங்கடராமன்.
03  வெண்ணிலவே தண்ணிலவே வா வா  – வஞ்சிக்கோட்டை வாலிபன் [1959 ] – பி.லீலா  – இசை : சி.ராமசந்திரா
04  கன்னம் கருத்தகிளி  – சிவகங்கை சீமை  [1959 ] – பி.லீலா  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
05  எங்குமே ஆனந்தம்  – பாழே ராமன்  [1959 ] – பி.லீலா – இசை : கண்டசாலா
06  பார்க்காத புதுமைகள் எல்லாம்  – நான் சொல்லும் ரகசியம்  [1959 ] – பி.லீலா  இசை : ஜி.ராமநாதன்
07  தேன் சுவை மேவும்  – டாகடர் சாவித்திரி  [1955 ] – பி.லீலா  – இசை : ஜி.ராமநாதன்
08  எண்ணமெல்லாம் இன்பக்கத்தை பேசுதே   – சக்கரவர்த்தி திருமகள்  [1957] – பி.லீலா  – இசை : ஜி.ராமநாதன்
09  ராஜா மக்கள் ரோஜா மலர்  – வஞ்சிக்கோட்டை வாலிபன் [1959 ] – பி.லீலா + ஜிக்கி – இசை : சி.ராமசந்திரா.

பி.லீலா பாடிய செவ்வியல் இசை சார்ந்த பாடல்கள்.

பொதுவாக அந்தக்காலத்தில் செவ்வியல் இசையில் பெரும்பாலானவர்களுக்கு பரீட்சயம் இருந்தது என்பதும்  அக்கால திரைப்படங்களில் அது சார்ந்த இசை இருந்ததாலும் அதிகமான பாடல்கள் அந்தவகையில் அமைந்திருந்தன. அதில் தனித்துவமிக்க  அசைவு,குழைவுகளை,சுருதி சுத்தத்துடன் ,அனாயாசமாகவும்  பாடும் வல்லமைமிக்கவராக  லீலா திகழ்ந்தார்.

குறிப்பாகதமிழ் திரைப்படங்களில் நாட்டிய காட்சிகளுக்கு அமைக்கப்பட்ட பாடல்களை இலங்கை வானொலி ” நாட்டியப்பாடல்கள் ” என்று தலைப்பிட்டு ஒலிபரப்பி மக்கள் மத்தில் புகழபெற வைத்தார்கள்.என் போன்ற இசைரசிகர்கள் எங்கள் தலைமுறைகளுக்கு முன்னர் வெளிவந்த பல அபூர்வமான பாடல்களை இதன் மூலம் அறிந்து கொள்ள வாய்ப்பும் ஏற்பட்டது. கர்னாடக இசையுலகில்  அதிக புகழ் பெற்றிருந்த எம்.எல்.வசந்தகுமாரிக்கு இணையாக பாடும் வல்லமை பெற்றவர் பி.லீலா என்பது எனது கருத்தாகும்.பி.லீலா பாடிய “நாட்டியப்பாடல்கள்” என நாம் அறிந்த அழகான பாடல்கள் சிலவற்றை இங்கே தருகிறேன்.

01  எல்லாம்இன்பமயம்   – டாகடர் சாவித்திரி  [1955 ] – பி.லீலா + எம்.எல்.வசந்தகுமாரி   – இசை : சி.ஆர்.சுப்பராமன்
02  ஆஹா இவர் யாரடி    – மோகினி   [1953 ] – பி.லீலா + கே.வி .ஜானகி   – இசை : சி.ஆர்.சுப்பராமன்
03  காத்திருப்பான் கமலக்  கண்ணன்  – உத்தமபுத்திரன்  [1959 ] – பி.லீலா – இசை : ஜி.ராமநாதன்
04  சிறந்த உலகினில் யாவும்  – மாப்பிள்ளை  [1955 ] – பி.லீலா + சூலமங்கலம்  – இசை :
05  அழகான மாறன் யாரடி   – நல்லதீர்ப்பு   [1955 ] – பி.லீலா – இசை :
06  சிறந்த உலகினில் யாவும்  – மாப்பிள்ளை  [1955 ] – பி.லீலா + சூலமங்கலம்  – இசை :
07  நீயே கத்தி ஈஸ்வரி – அன்னையின் ஆணை  [1955 ] – பி.லீலா  – இசை : எஸ்.எம்.சுப்பைய்யாநாயுடு
08  கொஞ்சும் சலங்கை ஒளி கேட்டு    – கொஞ்சும் சலங்கை [1960 ] – பி.லீலா   – இசை : எஸ்.எம்.சுப்பைய்யாநாயுடு
09  வெட்கமாய் ருக்குதடி    – பார் மகளே பார்  [1963 ] – பி.லீலா   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

இதே காலத்தில் கே.ஜமுனாராணி, கே.ராணிஏ.பி.கோமளா ,  போன்ற பிற பாடகிகளும் முன்னணியில் பாடிக்கொண்டிருந்தனர்  அன்று மெல்ல தலை காட்டிய  லத்தீன் அமெரிக்க இசை வார்ப்புகளிலமைந்த பாடல்களையும் ,காதல் பாடல்களையும் , உற்சாகம் தரும் பாடல்களையும் இவர்கள் பாடினார்கள்.

கே.ஜமுனாராணி முக்கியமானபல  காதல்பாடல்களையும்  பாடினார்.

01   குலுங்கிடும் பூவிலெல்லாம்   – வளையாபதி  [1951] – கே.ஜமுனாராணி + டி.எம்.சௌந்தரராஜன்  -இசை:எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி
02   குளிர் தாமரை மலர் பொய்கை – வளையாபதி [1951] – கே.ஜமுனாராணி + டி.எம்.சௌந்தரராஜன்  -இசை:எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி
03   சங்கீதமே தான் சந்தோசமாக  – சந்தானம்  [1951] – கே.ஜமுனாராணி + ஏ.எம்.ராஜா   – இசை:
04   துரையே இளமை பாராய்    – கதாநாயகி [1955] – கே.ஜமுனாராணி + ஏ.எம்.ராஜா  – இசை:ஜி.ராமநாதன்
05   குயிலிசையும் குழலிசையும்   – சங்கிலித்தேவன் [1960] – கே.ஜமுனாராணி + ஏ.எம்.ராஜா  – இசை:டி.ஜி.லிங்கப்பா
06   அதிமதுரா அனுராதா    – மனோகரா   [1951] – கே.ஜமுனாராணி + ஏ.எம்.ராஜா   – இசை:
07   அற்புதக்காட்சியில் ஆயிரம்     – பெண் குலத்தின் பெருமை    [1951] – கே.ஜமுனாராணி + பி.பி.ஸ்ரீனிவாஸ்    – இசை:ஜி.ராமநாதன்

கே.ஜமுனாராணி தனியே பாடி புகழ் பெற்ற  பாடல்களில் சில:

01  ஆசையும் என் நேசமும்     – குலேபகாவலி   [1955] – கே.ஜமுனாராணி   – இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி
02  உண்மை  அன்பு என்னும்     – மங்கையர் திலகம்    [1955] – கே.ஜமுனாராணி – இசை:எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி
03   அன்னத் தீவின் அழகுராணி நான்     – ரத்தினபுரி இளவரசி   [1960] – கே.ஜமுனாராணி + கே.ராணி + குழு  – இசை:
04   மானம் நெஞ்சிலே    – கைதி கண்ணாயிரம்   [1960] – கே.ஜமுனாராணி  – இசை:கே.வி.மகாதேவன்

கே.ஜமுனாராணி சக பின்னணிப்பாடகிகளுடன் இணைந்து பாடிய பாடல்கள் :

01   கனி தின்ன செம்மாவை    – அமரதீபம்   [1951] – கே.ஜமுனாராணி + கே.ராணி + குழு  – இசை: டி.சலபதிராவ்
02   செல்லக்கிளியே அல்லிக் கொடியே     – கற்புக்கரசி    [1951] – கே.ஜமுனாராணி + நிர்மலா  + குழு  – இசை:
03   தாரகைச் சோலையிலே     – குணசுந்தரி   [1951] – கே.ஜமுனாராணி + கே.ராணி  – இசை:கண்டசாலா
04   இல்லாத அதிசயமாய் இருக்குதடி     – கற்புக்கரசி  [1957] – கே.ஜமுனாராணி + ஏ.பி.கோமளா + குழு  – இசை:ஜி.ராமநாதன்
05   நாம ஆடுவதும் பாடுவதும்     – அலிபாபாவும் 40  திருடர்களும்   [1951] – கே.ஜமுனாராணி + ஜிக்கி -இசை:எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி
06   ஊருக்கெல்லாம் ஒரே நீதி – ஆளுக்கொரு ஆசை    [1951] – கே.ஜமுனாராணி + எல்.ஆர்.ஈஸ்வரி – இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி

இங்கே குறிப்பிடப்பிடப்பட்டிருக்கும் அத்தனை பாடகர்கள் , பாடகியர்களையும் மெல்லிசைமன்னர்களும் சிறப்பாகவே அக்கால ஓட்டத்திக்கேற்றவாறு பயன்படுத்தியவர்கள் என்பதை தரப்பட்டுள்ள பட்டியலில் சுட்டிக் காட்டியுள்ளேன்.

பின்னோக்கிப் பார்க்கும் போது பலவிதமான குரல்கள் வெவ்வேறு சுவைகளையும் வெளிப்படுத்துவதும் , இவற்றை விரித்து எழுத்துமளவுக்கும்  சிறப்பான பாடல்கள் வெளிவந்ததென்பதையும் நாம் மறந்துவிட முடியாது .இதன் காரணமாகவே தமிழ் திரை இசையின் பொற்காலம் என 1950 களில்  வெளிவந்த பாடல்களைக் கொண்டாடும் வெகுசிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவை சிறப்பான பாடல்கள் ஆயினும் அதன் போதாமையை நாம் அக்கால  ஹிந்தி திரையிசையுடன் ஒப்பு நோக்கும் போது உணர்கின்றோம். ஒலிப்பதிவு துல்லியத்திலும் , வாத்திய சேர்க்கைகளின் அணிவகுப்பிலும் பின் தங்கியிருந்ததை நாம் எளிதில் காணலாம்.

1950 களின் இறுதிவரை இசை  நட்சத்திரங்களாக இருந்த பி.லீலா, ஜிக்கி   போன்றோரின் திறமைகளை கணிசமான அளவில் பயன்படுத்தி வந்த மெல்லிசைமன்னர்கள் 1960 களின் ஆரம்பத்தில் தமக்கென புது சங்கீதப் பொழிவுகளை , புதுநாத வினோதங்களை ,புது ராக சாயல்களை வழங்கி மெல்லிசை முன்னோட்டங்கள் நிகழ்த்த ஏற்கனவே இருந்த சில பலவீனங்களை , வரைவிலக்கணங்களை மீற செவ்வியல் வளமும் ,வலிவும் மிக்க ஏலவே பாடிக் கொண்டிருந்த  சில பாடகர் ,பாடகிகளை  முன்னிலைப் படுத்த முனைந்தனர். அவர்களில் முதன்மையானவர்களாக டி.எம்.சௌந்தரராஜன் , பி.சுசீலா ,பி.பி.ஸ்ரீனிவாஸ் ,எல்.ஆர் .ஈஸ்வரி, கே.ஜமுனாராணி    போன்றோரை நாம் காண்கிறோம்.

தமக்கெனத் தனியிடம் ஒன்றை அமைத்துக்கொண்ட , அல்லது தாம் மனப்பூர்வமாக விரும்பிய ஒரு இசைப்பாணியையையும் ,அதற்கொப்ப தமக்கு பிடித்தமான பாடகி , பாடகர்களை முன்னிலைப்படுத்தினர். 10  வருடங்கள் முன்னோக்கியிருந்த ஹிந்தி திரையிசைபோக்கின் செல்வாக்கை மறந்தோ ,மறைத்தோ  செயற்படாமல் மெட்டமைப்பிலும் , வாத்திய அமைப்பிலும் , ஒலித்துல்லியத்திலும் அவற்றை எட்ட முனைந்தனர்.

ஹிந்தி சினிமாவில் வெளிவந்த பாடல்களின் ஆதிக்கம் என்பது  பாடும் முறையிலும் பல அதிர்வுகளை வெளிப்படுத்தியிருப்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஓங்கிக்குரல் எடுத்து பாடும் ஒரு முறை செல்வாக்கிழந்து குறைந்த சுருதியில் பாடினாலும் இனிமை காட்ட முடியும் என்பதை ஹிந்திப்பாடகர்களான முகம்மது ராபி , முகேஷ் போன்ற பாடகர்கள் தங்கள் பாடும் ஆற்றல்களால் பெரு அதிர்வுகளை ஏற்படுத்தினர். அவர்களை ஆதர்சமாகவே கொண்டு பிற்காலத்தில் புகழபெற்ற பாடகர்கள் உருவாகினார்கள்.

1950   களிலும் ஹிந்திப் பாணியில் பாடும் முறையைக்  கொண்டிருந்தவர்களாக   ஏ.எம்.ராஜா, டி.ஏ.மோதி , கண்டசாலா போன்ற  பாடகர்களைக் காண்கிறோம்.மெல்லிசைப்பாங்கான காதல்  மெட்டுக்களை பாடுவதென்றால் , அதற்குரியவர்கள் இவர்களே [ ஏ.எம்.ராஜா, டி.ஏ.மோதி , கண்டசாலா ] என்று சொல்லுமளவுக்குப் பாடல்கள் வெளிவந்தன எனபதற்கு உதாரணமாக அமைந்த சில  பாடல்களை இங்கே உதாரணமாக கூறலாம்.

01  ஆடும் ஊஞ்சலைப் போலெ   – என் தங்கை   [1952 ] -டி.ஏ.மோதி  + பி.லீலா    – இசை : சி.என்.பாண்டுரங்கன்
02  மைவிழி மேல் பாய்ந்தே நீ – நல்ல பிள்ளை   [1953 ] – ஏ.எம்.ராஜா பி.லீலா   – இசை : வேதா
03  மணி அடித்ததினால்  -நல்ல பிள்ளை   [1953 ] – ஏ.எம்.ராஜா + பி.லீலா   – இசை : வேதா
04  சிங்கார பைங்கிளியே பேசு   – மனோகரா   [1954 ] – ஏ.எம்.ராஜா + பி.லீலா  – இசை :எஸ்.வி.வெங்கடராமன்
05  நிலாவில் உல்லாசமாய் பாடலாம்    – மனோகரா   [1954 ] -டி.ஏ.மோதி  + டி.வி.ரத்தினம்  – இசை : இசை :எஸ்.வி.வெங்கடராமன்
06  ஓ..ஓ..தேவதாஸ்    – தேவதாஸ்    [1952 ] – கண்டசாலா + கே.ராணி   – இசை :சி.ஆர்.சுப்பராமன்
07  வான வீதியிலே பறந்திடுவோம்    – நால்வர்   [1953 ] – திருச்சி லோகநாதன்  + பி.லீலாஎம்.எல்.வசந்தகுமாரி   – இசை :எஸ்.வி.வெங்கடராம ன்.

குறிப்பாக முகமத் ராபி  [ Mohammad Rafi ]  பாடும் பாணி  இன்றுவரையும் அதிக செல்வாக்கு செலுத்துகிறது என்பதை நாம் காண்கிறோம். 1950 ஆண்டு புகழின் உச்சியிலிருந்து திலீப்குமார்,அசோக்குமார் போன்றோருக்கு அதிகமாகப் பாடும் வாய்ப்பை நௌசாத், சி.ராமச்சந்திரா போன்ற இசையமைப்பாளர்கள் முகமத் ராபிக்கு வழங்கினார்கள்.

முகம்மது ரபி யின் பாடும் பாணியை பின்பற்றி உருவான பாடகர்களான ஜேசுதாஸ் , ஜெயசந்திரன், பாலசுப்பிரமணியம் போன்றவர்கள் நம் கவனத்திற்குரிய அடுத்த சந்ததிப் பாடகர்கள் என்பது அவரது பாடும் பாணியின் பாதிப்பாகும்.பாலசுப்ரமணியம் ராபியை பின்றினார் என்று கூறினாலும் அவர் கண்டசாலாவைப் பிரதி பண்ணியவர் என்பதே உண்மை.

1940 களின் நடுப்பகுதியில் ஹிந்தியில்  முன்னணியிலிருந்த  சம்சாட் பேகம் ,நூர்ஜகான், சுரையா போன்ற பல பாடகிகள்  பின்தள்ளப்பட்டு அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த இசையமைப்பாளர்களான அணில் பிஸ்வாஸ், ஹெம்சந்த் பிரகாஷ் ,ஷகீல் , மாஸ்டர்  கைடெர் போன்றவர்களால் வாய்ப்பு வழங்கப்பட்டு முன்னணிக்கு கொண்டுவரப்பட்டவர் லதா மங்கேஷ்கர்.

மெல்லிசைமன்னர்கள் தமக்கான ஒரு நிலையான இடத்தை பிடித்துக் கொண்டதும் தங்களுக்குத் தோதான ,அல்லது தாம் விரும்பிய ஒரு சில பாடகர்களை முன்னிலைப்படுத்தினர்.அவர்களில் முதன்மையானவர்களாக டி.எம்.சௌந்தரராஜன் , பி.சுசீலா , பி.பி.ஸ்ரீனிவாஸ் , எல்.ஆர்.ஈஸ்வரி , கே.ஜமுனாராணி போன்றோரை நாம் குறிப்பிடலாம்.

பொதுவாக குறித்த சில தயாரிப்பாளர்கள் , நடிகர்கள் தங்களுக்கான தொழில் நுட்பக்கலைஞர்களை ஒரு குழுவாக வைத்திருப்பதன் மூலம் ஒவ்வொரு கலைஞர்களும் ஒருவரின் இயல்புகளை இலகுவாகப் புரிந்து கொள்ளவும் வழி  அமைத்துக் கொடுப்பதென்பதால் குழுக் குழுவாக இயங்குவதை நாம் இன்றும் காண்கிறோம்.அதன் மூலம் குழுமனப்பான்மை அன்றும் நிலவியதை காண்கிறோம்.

அந்தவகையில் மெல்லிசைமன்னர்கள் தங்களுக்கு பிடித்தமான  சிலகலைஞர்களை பயன்படுத்தினார்கள். சிலரை பயன்படுத்தாமலே விட்டு சென்றனர்.அவர்களால் முன்னுக்கு கொண்டுவரப்பட்ட கே.ஜமுனாராணியையும் ,ஏற்கனவே புகழ் பெற்றிருந்த ஏ.எம்.ராஜாவையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

அக்காலத்தில் ” முதலாளிகள் ” என்ற அந்தஸ்த்திலிருந்த திரைப்படத்  தயாரிப்பாளர்கள் நடிகர்களையே மிரட்டி வைக்கக்கூடியவர்களாக இருந்தனர்.அவர்கள் முன் கைகட்டி வாய் பொத்தி நின்ற கலைஞர்கள் ஏராளம்.பின்னர் நடிகர்கள் முன்னணிக்கு வந்தாலும் “முதலாளி” களை கனம் பண்ணியே வந்தனர்.இந்த நிலையிலே மெல்லிசைமன்னர்கள் , தாம் நினைத்ததை சாதிக்கும் ஒரு நிலைக்கு  வந்ததும் தமக்குப் பிடித்த பாடகர்களை கவிஞர்களை  முன்னணிக்கு கொண்டுவந்ததையும் , பிடிக்காதவர்களை புறம் தள்ளுவதையும் காண்கிறோம்.

“அமுதும் தேனும் எதற்கு ” என்ற புகழ் பெற்ற பாடலை இயற்றிய புகழபெற்ற கவிஞர் சுரதாவிடம் ” நீங்கள் ஏன் அதிகமான பாடல்கள் எழுதவில்லை ” என   புலபெயர் தொலைக்காட்சி பேட்டி நிகழ்சசி ஒன்றின் கேள்விக்கு ” நான் அதற்கு பின் ஒரு சில பாடல்கள் தான் எழுதியுள்ளேன். ” விண்ணுக்கு மேலாடை “நான் எழுதிய பாடல் தான். இசையமைப்பாளர்கள் யாராவது கூப்பிட்டால் தானே எழுத முடியும் !?  இளம்வயதில்  ஆர்மோனியம் வாசித்த விஸ்வநாதனை நான் தான் எம்.எஸ்.ஞானமணியிடம் சேர்த்து விட்டேன் ; அவர் கூப்பிட்டாரா ..? என்று வருத்தப்பட்டார்.எத்தனையோ ஆற்றல்மிக்க பாடலாசிரியர்கள் மறக்கடிக்கப்பட்டு விரல்விட்டு எண்ணக்   பாடலாசிரியர்களே குழுவாக இயங்கினர்.


சிவாஜி
1950 களில் புகழ்பெற்ற நடிகர்களாக விளங்கிய எம்.ஜி.ஆர்,சிவாஜி போன்ற நடிகர்களுக்கு இன்னார் பாடினால் நன்றக இருக்கும் என்ற ஒருவிதமான போலிக் தோரணை உருவாக்கப்பட்டது. சிவாஜி நடித்த முதல்படமான பராசக்தி அமோகமான வெற்றி பெற்றது.அந்தப்படத்தில் அவருக்கான  பின்னணிப்பாடல்களைப் பாடியவர் அக்காலத்தில் பெரும் புகழபெற்றிருந்த  இசைத்சித்தர் என்று போற்றப்பட்ட சி.எஸ்.ஜெயராமன் ஆவர்.படத்தின் வெற்றிக்கு வசனமும் பாடல்களும் பெரும் பங்காற்றின.சிவாஜிக்கு சிதம்பரம் ஜெயராமனின் குரல் தான் பொருத்தம் என்ற எண்ணம் சிவாஜிக்கும் இருந்ததாகவே தெரிகிறது.

இருப்பினும் பராசக்தியைத் தொடர்ந்து சிவாஜி நடித்த அன்பு [ 1953 ] , கண்கள்  [ 1953 ] ,மனிதனும் மிருகமும்   [ 1953 ] , இல்லற ஜோதி  [ 1954 ]  ,கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி  [ 1954 ]  , எதிர் பாராதது  [ 1954 ]  , காவேரி  [ 1954 ] ,மங்கையர் திலகம்  [ 1954]  படங்களில் சிவாஜிக்கு பெரும்பாலான காதல் பாடல்களை பாடியவர் ஏ.எம்.ராஜா மற்றும் டி.ஏ.மோதி மற்றும் எம்.சத்யன் போன்றோர் பாடினார்கள்.

சிவாஜிக்கு ஏ.எம்.ராஜா பாடிய சில பாடல்கள் :

01  எண்ண எண்ண இன்பமே    – அன்பு   [1953 ] – ஏ.எம்.ராஜா   + ஜிக்கி     – இசை : டி.ஆர்.பாப்பா
02  ஆடவர் நாட்டினிலே – அன்பு   [1953 ] – ஏ.எம்.ராஜா   + எம்.எல்.வசந்தகுமாரி     – இசை : டி.ஆர்.பாப்பா
03  ஒன்றும் புரியவில்லை தம்பி   – அன்பு   [1953 ] – ஏ.எம்.ராஜா   – இசை : டி.ஆர்.பாப்பா
04  கன்னியரின் வெள்ளை மனம் போல்    – திருப்பிப்பார்  [1953 ] – ஏ.எம்.ராஜா + சுவர்ணா  – இசை : ஜி.ராமநாதன்
05  சிற்பி செதுக்காத பொற்சிலையே  – எதிர்பாராதது   [1953 ] – ஏ.எம்.ராஜா   + ஜிக்கி  – இசை :சி.என்.பாண்டுரங்கன்
06  தேன்  உண்ணும் வண்டு  – அமரதீபம்  [1955 ] – ஏ.எம்.ராஜா + சுசீலா  – இசை : டி.சலபதிராவ்
07  நீ வரவில்லையெனில் ஆதரவேது   – மங்கையர் திலகம்   [1955 ] – எம்.சத்தியன்   – இசை : எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி

இதே காலத்தில் எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்த அந்தமான் கைதி [1952] குமாரி [1953] நாம் [1953] , ஜெனோவா [1953] குலேபகாவலி [1953] போன்ற படங்களின் முக்கியமான பாடல்களை பாடியவர் ஏ.எம்.ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

1954  இல் எம்.ஜி.ஆர்,சிவாஜி இணைந்து நடித்த படமான கூண்டுக்கிளி [1954] படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் ” கொஞ்சும் கிளியான பெண்ணை ” என்ற பாடலை டி.எம் சௌந்தரராஜன் முதன் முறையாக சிவாஜிக்காகவும் , மலைக்கள்ளன் [1953] படத்தில் ” எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடலை எம்.ஜி.ஆருக்குக்காகவும் பாடினார்.ஆயினும் அக்கால்க் காதல் பாடல்களை பாடியவர் ஏ.எம்.ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

01  மயக்கும் மாலை பொழுதே நீ போ    – குலேபகாவலி   [1953 ] – ஏ.எம்.ராஜா   + ஜிக்கி     – இசை : கே.வி.மகாதேவன்
02  இருளிலே நிலவொளி போல் – குமாரி   [1953 ] – ஏ.எம்.ராஜா   + ஜிக்கி     – இசை : கே.வி.மகாதேவன்
03  கண்ணுக்குள் மின்னல் காட்டும் தெய்வ     – ஜெனோவா  [1953 ] – ஏ.எம்.ராஜா + பி.லீலா    – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
04  கண் மூடும் வேளையிலும்     – மகாதேவி   [1957 ] – ஏ.எம்.ராஜா + சுசீலா  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பின்னர் டி.எம்.சௌந்தரராஜன் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்காத இக்காலத்தில்  இன்னாருக்கு இன்னார் தான் பாட வேண்டும் என்ற ஒரு நிலை இல்லாமல் எல்லாப் பாடகர்களும் எல்லா நடிகர்களுக்கும் பாடினார்கள்.தூக்குத் தூக்கி படத்தில் பாடும் வாய்ப்பு பெற்ற திருச்சி லோகநாதன் பாடல்கள் குறித்த ஊதிய பிரச்சனையால் விலகிய நிலையில் ,குறைந்த விலையில் பாட டி.எம்.சௌந்தர்ராஜனை சிபாரிசு செய்தததும் ,ஏற்கனவே ஜி.ராமநாதனின் ஆதரவு பெற்ற டி.எம்.எஸ் அந்த வாய்ப்பை பெற்றார்.


CSJ
எனினும் ஏலவே சிவாஜிக்கு டி.எம்.எஸ்.பின்னணி பாடியிருந்தும் சிவாஜி, தனக்கு பின்னணி பாட சி.எஸ் ஜெயராமன் தான் வேண்டும் என்ற நிலையில் ,படத்தின்  இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் சிவாஜியிடம், ” புதுப்பையன் [டி.எம் சௌந்தரராஜன்] பாடுவதைக் கேளுங்கள் ,பிடிக்கவில்லை என்றால் மாற்றி விடுவோம்” என்ற  பரிந்துரையில் சில பாடல்கள் ஒலிப்பதிவு   செய்து சிவாஜிக்கு காண்பிக்கப்பட்டது.சில பாடல்களை  ஈடுபாடில்லாமல் கேட்ட சிவாஜி ” ஏறாத மலைதனிலே ஜோரான கௌதாரி இரண்டு ” என்று டி.எம்..சௌந்தரராஜன் ஓங்கிக்குரல் எடுத்துப் பாடிய நாட்டுப்பாங்கான பாடலைக் கேட்டு வியந்து பாராட்ட நேர்ந்தது.பிசிறின்றி ஓங்கி ஒலித்த அந்தக் குரல் பின்னாளில் சிவாஜியின் நிரந்தரக்குரலாக மாறியதற்கு ஆரம்பப்புள்ளியாய்  அமைந்தது தூக்குத்தூக்கி திரைப்படம்.

டி.எம்.சௌந்தர்ராஜனின் குரல் சிவாஜிக்கு பொருத்தம் என்று பெயர் பெற்றாலும்  அதைத் தொடர்ந்த திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் ,சிவாஜி போன்றவர்களுக்கு ஆங்காங்கே  பாடிவந்தாலும் சீர்காழி கோவிந்தராஜன் ,சிதம்பரம் ஜெயராமன்,ஏ.எம்.ராஜா  போன்றோரும் முக்கியமான பாடல்களை   பாடினர்.

பின்னணி என்பதே ” நடிகர்கள் பாடுவதில்லை” என்று பரவலாக தெரிந்த பின்னரும் இன்னாருக்கு இன்னார் தான் பாட வேண்டும் என்ற எழுதப்படாத விதி உருவாகி நிலைநிறுத்தப்பட்டது மெல்லிசைமன்னர்கள் காலத்திலேயே !

மெல்லிசைமன்னர்கள் இசையில் எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி என்ற திரைப்படத்தில்  ” அநியாயம் இந்த ஆடசியிலே அநியாயம் ” என்ற பாடலே டி.எம்.எஸ் பாடிய முதல் பாடலாக அமைந்தது. கொடுமைக்கார அரசியின் வரிமுறையின்  அநீதிகளை  பட்டியல் போட்டு எதிர்த்துத் தட்டிக் கேட்கும் இந்தப்பாடல் எம்.ஜி.ஆறும் அவரைச் சார்ந்த தி.மு.க கடசியின் பிரச்சார முறைக்கும் தோதாக அமைந்தது.இந்தப்படத்தின் மூலம் டி.எம்.எஸ் வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னிலை பெற்றதும் மெல்லிசைமன்னர்களின் கூட்டின் பங்காளியானதும் நாம் அறிந்ததே.தொடர்ந்து மெல்லிசைமன்னர்கள் இசையில் மட்டுமல்ல கே.வி.மகாதேவன் போன்ற பலரது இசையிலும்  டி.எம்.எஸ் பல பாடல்களை பாடினார்.

டி.எம்.சௌந்தர்ராஜனின்   குரல் வளம் , பாடும் திறன் , குரலின் தனித் தன்மை ,   தனிச் சிறப்பொலி, தொனி போன்றவற்றை உணர்ந்து புது வகையில் பாட வைத்த பெருமை மெல்லிசைமன்னர்களை சாரும்.ஜி.ராமநாதனின் இசையில் வார்த்தெடுக்கப்பட்டு ,பட்டை தீட்டப்படட   ஓங்கி குரலெடுத்து பாடும் குரலை பாடல்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் உயிர்ப்பண்பிற்கு ஏற்ப வடிவமைத்தவர்கள்  மெல்லிசைமன்னர்கள்.

புதிதான மெல்லிசைப்பாணியில் பாடல்களை அமைத்தாலும் , மரபு சார்ந்து ஓங்கிக்குரல் எடுத்துப்பாடும் அவரின் குரலின் சுருதிக்கு அனுசரணையாகவும் வேகம்மிக்க விறுவிறுப்பான பாடல்களை அமைத்து புதுமை செய்தார்கள்.

பின்னணி பாடுவது என்பது தொழில் நுடபத்தின் வளர்ச்சியில் கிடைத்த ஒன்று.காலமாற்றத்தின் வளர்ச்சியில்  பாடும் மரபிலிருந்து வந்த கலைஞர்களின்  பற்றாக்குறையும் , பாட முடியாத புதிய கலைஞர்களின் வருகையும் பின்னணி பாடுவதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தது.அழகான தோற்றம் கொண்ட நடிகர் ,நடிககைகளால் பாட முடியாத தன்மையையும்,அவர்களின் கவர்ச்சியை தவிர்க்க முடியாத காரணங்ககளாலும் காலப்போக்கில் பின்னணி பாடுவது என்பது தவிர்க்க முடியாத முக்கிய அம்சமாகவும் மாறியது.
1945 இல் வெளிவந்த  ஸ்ரீவள்ளி படத்தில் நடிகை லட்சுமியின் தாயாரான ருக்மணி , டி.ஆர்.மகாலிங்கத்திற்கு இணையாக பாட முடியாத காரணத்தால் பி.ஏ.பெரியநாயகி  பின்னணி பாட நேர்ந்தது.அப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை ” கிட்டப்பாவின் பாட்டுக்களை பயன்படுத்தி கொண்டு மகாலிங்கத்தை நடிக்க செய்துள்ளனர் ” என்று அன்றைய பத்திரிகைகள் எழுதின.[தகவல் : திரை இசை அலைகள் – வாமனன் ]

பின்னணி பாடுவதால் பல புதிய பாடகர் ,பாடகிகள் முன்னணிக்கு வந்தார்கள். 1950 களில் பல்வகைக்குரல்கள் ஒலித்தன.1950  களின்  இறுதிவரை இன்னாருக்கு இன்னார் பாட வேண்டும் என்ற நிலையில் இல்லாமல் எல்லா பாடகர்களும் எல்லா நடிகர்களுக்கும் பாடினார்கள்.பின்னாளில் இன்னாருக்கு இன்னார் தான் பாட வேண்டும் என்ற நிலையில்லாமல் பாடலின் தன்மை , உணர்வுகளுக்கு ஏற்ப  பாடகர்கள் பயன்படுத்தப்பட்டனர்.உதாரணமாக சிவாஜி , எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்களுக்கு பலவிதமான பாடகர்களும் குரல் கொடுத்தார்கள். உதாரணமாக எம்.ஜி .ஆர் பாடல்கள் சில.

01   ஆணழகா எனது கைகள் செய்த புண்யமே  – சர்வாதிகாரி [1951 ]  – திருச்சி லோகநாதன் + பி.லீலா   – இசை: வி.தட்க்ஷிணாமூர்த்தி
02   தடவி பார்த்து தெரிந்து கொள்  – சர்வாதிகாரி [1951 ]  – வி.தட்க்ஷிணாமூர்த்தி + பி.ஏ.பெரியநாயகி  – இசை: வி.தட்க்ஷிணாமூர்த்தி
04   காணி நிலம் வேண்டும் பராசக்தி – என் தங்கை [1952 ]  – சி.எஸ்.ஜெயராமன் + எம்.எல்.வசந்தகுமாரி – இசை: சி.என் பாண்டுரங்கன்
05   எல்லையில்லாத இன்பத்திலே  – சக்கரவர்த்தி திருமகள்  [1957 ]  – சீர்காழி  + பி.லீலா  – இசை: ஜி.ராமநாதன்
06   காணி நிலம் வேண்டும் பராசக்தி – என் தங்கை [1952 ] – சி.எஸ்.ஜெயராமன் + எம்.எல்.வசந்தகுமாரி – இசை: சி.என் பாண்டுரங்கன்

சிவாஜிகாக்கவும் பலரும் பாடினார்கள்.  சில உதாரணங்கள்:

01   நான் ஏன் வரவேண்டும்  – பூங்கோதை  [1953 ]  – டி.பி.ராமசந்திரன்  + ஜிக்கி – இசை: ஆதிநாராயணராவ்
02   பூனை கண்ணை மூடிக் கொண்டால்    – ராஜாராணி   [1955 ]  – எஸ்.சி.கிருஷ்ணன்  – இசை: டி.ஆர்.பாப்பா
03   விந்தியம்   வடக்காக   – தென்னாலிராமன்   [1953 ]  – வி.என்.சுந்தரம்  – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
04   ஆடரி படர்ந்த    -தென்னாலிராமன்   [1953 ]  – வி.என்.சுந்தரம்  – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
05   சிங்கார பைங்கிளியே பேசு    -தென்னாலிராமன்   [1953 ]  – ஏ.எம்.ராஜா + ராதா ஜெயலட்சுமி   – இசை: எஸ்.வி.வெங்கடராமன்
06   காணா இன்பம் கனிந்ததேனோ    -சபாஷ் மீனா   [1953 ]  – டி.ஏ. மோதி + பி.சுசீலா   – இசை: டி.ஜி.லிங்கப்பா.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஒருவிதமான ” சாய்ந்தால் சாய்ந்த பக்கம் சாயும் செம்மறி ஆடுகள் ” போல சாயும் ஒரு போக்கு அன்றிலிருந்து இன்றுவரை நிலவி வருவதை நாம் காண்கிறோம்.வர்த்தக சூத்திரத்தின் மந்திரமான “வெற்றிக்கனிகள் ” பறிக்கும் ஒருவிதமான கற்பனாவாதம் கட்டமைக்கப்பட்டு அதனடிப்படையில் இயங்குவது.அதன் சாராம்சம் “வெற்றி பெற்றவர்களே புத்திசாலிகள் “என்ற தவறான கண்ணூட்டம் ஆகும்.அன்றிலிருந்து இன்றுவரை ” மார்க்கட்  நிர்ணயம் ” என்ற அடிப்படையில் மாறாமல் இருந்து வருகிறது.

பாடுவதிலும் சில பாடகர்கள் சில நடிகர்களின் குரலுக்கு நெருக்கமாக  இருப்பதால் அவர்களே பாட வேண்டும் என்று ஒரு போலி நியாயம் கற்பிக்கப்பட்டு தங்களுக்கு பிடித்த சிலரை முன்னணிக்கு கொண்டு வந்தார்கள் எனபதே உண்மை. பொதுவாக சிவாஜி,எம்.ஜி.ஆர், ஜெமினிகணேசன் குரல்கள் வெவ்வேறு விதமானவை.

இவர்களே முன்னணி நடிகர்களாக அன்று இருந்ததால் , குறிப்பாக எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்களுக்கு டி.எம்.சௌந்தரராஜன் பாடுவது தான் பொருத்தம் எனக் கருதப்பட்டது. டி.எம்.சௌந்தர்ராஜனின் குரல் நேர்த்தியும்,  எல்லாவிதமான சுருதிகளிலும் பாடும் ஆற்றலும் அவரின் குரலை பலரும் விரும்புவதற்கான காரணங்களாய்  அமைந்தன.ஏற்கனவே தியாகராஜ பாகவதரின் ரசிகர்களாக இருந்த பலரும் அவர் குரலின் தன்மையை சௌந்தர்ராஜனின் குரலிலும் அனுபவித்திருக்கக் கூடும்.

அன்றிருந்த தியாகராஜ பாகவதரின் பரமரசிகரான டி.எம்.எஸ்  அவரின் பாடல் பாணியை பின்பற்றி பாடி அவரின் நகலாக தன்னை வளர்த்துக் கொண்டவராயினும் , பின்னர் தனது குரலில் மெருகேற்றிக்கொண்டவரராவார். தியாகராஜ பாகவதர் மெல்லிய குரல்  போலல்லாமல் டி.எம்.எஸின் குரலின் பின்னாளில் கனமிருந்தது.  ஓங்கி குரல் எடுத்து பாடும் ஆற்றலும், ஆண்மைமிக்க குரல் ரீங்காரமும்   அவரது குரலில்  இருந்தது. இந்த தன்மைதான்  அன்றைய இசையமைப்பாளர்கள் இவரை நாட்டுப்புறப்பாடல்களை பாட வைக்க காரணமாய் அமைந்தது எனலாம்.மந்திரி குமாரி [1951]  படத்தில்  ” அன்னமிட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே ” என்ற பாடலும் , ,சர்வாதிகாரி [1951 ] படத்தில் ” பஞ்சமும் நோயுமில்லா நாடே இந்த உலகிலே நல்ல நாடுன்னு ” என்ற பாடலும் கிராமிய பாணியில் அமைந்திருந்தமையை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

காதல் பாடல்கள் பாடுவதென்றால் கண்டசாலா ,ஏ.எம்.ராஜா, டி.ஏ.மோதி போன்ற பாடகர்கள் என இருந்த அக்காலத்தில் டி.எம்.சௌந்தரராஜன் மற்றவர்களை போல பாடி தன்னைத் தக்கவைத்துக் கொண்டாரோ என்று எண்ண வைக்குமளவனுக்கு சில பாடல்களை பாடியுள்ளார். வளையாபதி படத்தில் ” குலுக்கிடும் பூவில்லெல்லாம் ” என்ற பாடலை கண்டசாலா சாயலிலும், செல்லப்பிள்ளை படத்தில் ” நாடு நடக்கிற நடையிலே  ” என்ற பாடல் நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.ராமசாமி சாயலிலும் இருப்பதை நாம் கேட்கலாம்.சுருக்கமாக சொன்னாலே தனது குரலை அடக்கி வாசித்தார் என்றே எண்ணத் தோன்றுகிறது.எப்படியாவது தான் பாட வேண்டும் என்றல் ஆவல் அவரிடம் மேலோங்கியிருந்ததன் அடையாளங்கள் இவை. அதுமட்டுமல்ல தூக்குத்தூக்கி படத்திற்கான பாடல்களை இலவசமாகவே பாடித்தருவதாக கூறியதாவதும் செய்திகள் உண்டு.

1950 களின் நடுப்பகுதியில் பின்னர் எம்.ஜி.ஆருக்கும் ,சிவாஜிக்கும் , இவர் தான் பொருத்தம் என்ற போக்கு நிலவியது.ஆனாலும் புறநடையாக வேறு நடிகர்களுக்கும் அவர் பாடிய பாடல்களும் வெளிவந்தன. இவருக்கும் அவர் தான் பொருத்தமான குரல் என்று பேசப்பட்ட காலத்திலேயே ஜெமினி கணேசனுக்கு அவர் பாடிய பாடல்கள்  பலரின் கருத்துக்களுக்கு எதிரானவையாகவே உள்ளன.இந்த பொருத்தம் என்ற சங்கதியை  சுக்குநீராக உடைக்கும் சில பாடல்களை இங்கே தருகிறேன்.

01   இதயவானிலே உதயமனதே     -கற்புக்கரசி   [1956 ]  – டி.எம்.சௌந்தரர்ராஜன்   – இசை: ஜி.ராமநாதன்
02  காதல் கீதம் கேட்குமா     – கொஞ்சும் சலங்கை    [1960 ]  – டி.எம்.சௌந்தரர்ராஜன்   – இசை: எஸ்.எம்.சுப்பையாநாயுடு
03  சத்தியமே லட்சியமாய் கொள்ளடா – நீலமலைத் திருடன்  [1958]  – டி.எம்.சௌந்தரர்ராஜன்   – இசை: கே.வி.மகாதேவன்

இன்று இந்தப்பாடல்களைக் கேட்பவர்கள் இவை எம்.ஜி.யாருக்கோ அல்லது சிவாஜிக்கோ பாடல்கள் என்றே நினைப்பார்கள்!

உண்மை என்னவென்றால் பாடலின் தன்மை , உணர்வுகளுக்கு ஏற்ப பாடல்கள் அமைக்கப்படடன என்ற ரீதியிலும் ,தயாரிப்பாளர்கள் ,நடிகர்கள்  இசையமைப்பாளர்களின் விருப்பம் போன்றவற்றிற்கமையவே பாடகர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.இந்த நிலையால் பல பாடகர்கள் பாதிக்கப்பட்டனர் என்பது முக்கியமான விடயமாகும்.

நடிகர்களை   பொறுத்தவரையில் யார் பாடினாலும் கவலையில்லை என்பதே உண்மை.சிவாஜியைப் ௦பொருத்தவரையில் யார் பாடினாலும் அவர்களின் குரலுக்கு   ஏற்ப தனது நடிப்பாற்றலாலேயே அவற்றை வெற்றி பெற வைக்க முடியும் நம்பிக்கை  இருந்தது. எம்.ஜி.ஆர் தி.மு.க சார்பானவர் என்பதும் , அதன் கொள்கைகளை பிரகடனப்படுத்துவதில் ஆர்வம் காட்டினார். அதன் போக்கில் டி.எம்.ஸும் வேறு சிலரும் அந்த வகையான பாடலகளை பாடினர்.இந்நிலையில் இன்னாருக்கு இன்னார் பாட  வேண்டும் என்ற நிலை 1960 களிலேயே  உச்சம் பெற்றது.

ஒலியுடன் கூடிய காட்சி  ஊடகம் எவ்வளவு வலிமையானது என்பதை இதன் மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம். ஒரே விதமான குரல்  தொடர்ந்து   குறிப்பிடட நடிகருக்கு குரல் கொடுக்கும் போது மிக எளிதாக ரசிகர்கள் மனதில் அது தரும் படிமம் இலகுவில் படிந்து விடுகிறது.1980களில் நடிகர் மோகனுக்கு  பின்னணிக்குரல் கொடுத்த பாடகர் சுரேந்தர் குரலை நினைத்துப்பார்க்கலாம்.

சிவாஜிக்கும்,எம்.ஜி.ஆருக்கும் தொடர்ந்து எஸ்.கிருஷ்ணன் பாடியிருந்தாலும் நாம் அவர் தான் இருவருக்கும் பொருத்தம் நினைத்திருப்போம்.எஸ்.சி.கிருஷ்ணன் என்ற பாடகர் பெரும்பாலும் நகைச்சுவை நடிகரான தங்கவேலுவுக்கு பின்னணி பாடுபவராக இருந்தார். இது திரையில் பார்த்து பழகுவதால் எழும் மனப்பிரமை அன்றி வேறென்ன ?

குழுமனப்பான்மை இசையிலும் வலுப்பெற்றது.தொடர்ந்து பல வருடங்களாக ஒரு சில இசையமைப்பாளர்களும் ஒரு சில பாடகர்களும் இயங்கியது தமிழ் சினிமா விதியாயிற்று.

இந்த சூழ்நிலைகளைக் கூர்ந்து அவதானிக்காதவர்கள் கூட பாடகர்களில் டி.எம்.சௌந்தரராஜன் , பி.சுசீலா ,பி.பி.ஸ்ரீனிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி போன்றோர்  மிகவும் முன்னிலைப்படுத்தப்பட்டனர் என்பதை  இலகுவாகக் கண்டுகொள்ளலாம். இதற்கு பல உதாரணங்களை நாம் கூறலாம்.

பாவமன்னிப்பு படத்தில் ஜெமினி கணேசன் பாடுவதாக  அமைந்த “காலங்களில் அவள் வசந்தம் ” பாடலை ஏ.எம்.ராஜா தான் பாட வேண்டும் என்பது படத்தின் தயாரிப்பாளரின் விருப்பமாக இருந்தது.ஏனெனில் ஜெமினி கணேசனுக்கு ஏ.எம்.ராஜா பாடுவது தான் அன்றைய வழமையாக இருந்தது.ஆயினும் எம்.எஸ்.விஸ்வநாதன் அவரின் வேண்டுகோளையும் மீறி  பி.பி.ஸ்ரீனிவாசை தனது விருப்பப்படியே  பாட வைத்தார்.இந்தப் பாடல் ஒன்றின் மூலமே பி.பி.ஸ்ரீனிவாஸ் புகழின் உச்சிக்குச் சென்றார்.அந்தக்காலத்தில் ஜெமினிக்கு ஏ.எம்.ராஜா தான் பாட வேண்டும் என்ற நிலையிருந்தது.

ஏ.எம்.ராஜா ஒரு சிறந்த   பாடகர் மட்டுமல்ல தலைசிறந்த இசையமைப்பாளராகவும் , இசையமைப்பில் மெல்லிசைமன்னர்களுக்கு சளைத்தவரில்லை எனபதும்  ஒரு வகையில் மிகப்பெரிய போட்டியாளராக இருந்ததென்பதும் நமது கவனத்திற்குரியதாகும்.

இனிமையாகப் பாடுவதில் மட்டுமல்ல , கல்யாணப்பரிசு , தேன் நிலவு , விடிவெள்ளி , ஆடிப்பெருக்கு ,அன்புக்கோர் அண்ணி  போன்ற பல படங்களுக்கு இசையமைத்து தமிழ் திரையிசையை மெல்லிசைப்பக்கம் திருப்பிய முன்னோடியாக இருந்தவர் ஏ.எம்.ராஜா.

ஏ.எம்.ராஜா இசையமைத்த ஆடிப்பெருக்கு படத்தில் அவருக்கு பதிலாக ஜெமினி கணேசனுக்கு  பின்னணி பாடிய , அவருக்குப்  “போட்டி” என்று கருதப்பட்ட பி.பி.ஸ்ரீநிவாஸுக்கே ” புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது ” என்ற பாடலைப் பாடும் வாய்ப்பை வழங்கியவர்.மீண்டும் 1975 இல் அவர் இசையமைத்த வீட்டு மாப்பிள்ளை என்ற படத்தில் டி.எம்.சௌந்தர்ராஜனையும் “உலகம் உறங்கும் வேளை “என்ற  பாட வைத்தவர்   ஏ.எம்.ராஜா !

அவர் திரையுலகை விட்டு நீண்ட காலம் ஒதுங்கியிருந்ததால் பெருநட்டம் அடைந்தவர்கள் இசை ரசிகர்களே என்பதை அவர் இசையமைத்த பாடல்களின் இனிமை உணர்த்தி நிற்கிறது. “தனிமையிலே இனிமை காண முடியுமா , காலையும் நீயே மாலையும் நீயே , நிலவவும் மலரும் பாடுது , போன்ற தனித்துவம் மிக்க  இசையற்புதங்களை யாரால் மறக்க முடியும்?!    அவர் தொடர்ந்து திரைக்களத்தில் இருந்திருந்தால்  இது போன்ற எத்தனையோ  இசைக்கனிகளை நாம் சுவைத்திருக்கலாம் என்பதையும் , தமிழ் சினிமா அவர் மூலம் எத்தனையோ இனிய மெட்டுக்களால் வளம் பெற்றிருக்கும்என்பதையும்,   இப்படியான ஒரு மாபெரும் கலைஞன் ஒதுங்கி விட்டானே என்ற ஏக்கமும் அவரது இசையின் பரம ரசிகனான எனக்கு பலமுறை ஏற்படுவதுண்டு.

” திரை இசை அலைகள் ” என்ற நூலில் ஏ.எம்.ராஜா குறித்து அதன் ஆசிரியர் வாமனன் மிக அழகாக விவரிக்கின்றார்.

” படித்துப் பட்டம் பெற்றவர் ராஜா, கண்டிப்பும் கட்டுப்பாடும் கொண்டவர்.தன பணியைக் குறித்து படு சீரியஸான கண்ணோட்டம் உடையவர்.தன்னுடன் பணியாற்றுபவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைப்பார்.சினிமா உலகின் நெளிவு -சுளிவுகளும், சினிமா நபர்களுடன் பழகும் போது காட்ட வேண்டிய நீக்கு போக்குகளும் , ராஜாவுக்கு கைவராத விஷயங்கள்.தமிழ் சினிமாவில் அவர் கொடிகட்டிப் பறந்த போதுஇதெல்லாம் குறைகளாகத் தெரியவில்லை.காலம் மாறாத தொடங்கிய போது ராஜா அன்னை மாற்றிக் கொள்ளத் தயாரில்லை. ………தான் எதிர்பார்க்கிற சூழ்நிலை ஒரு இடத்தில் இல்லை என்றால் , ஒலிப்பதிவு கூடத்தை விட்டு பேசாமல் வீட்டுக்குச் சென்றுவிடக்  கூடியவர் ராஜா . ” இப்படி பலமுறை நடந்திருக்கிறது ” என்கிறார் ஜிக்கி…..தமிழ் திரையுலகில் தன்னை சிலர் ஒதுக்க நினைக்கிறார்கள் என்று சந்தேகப்பட்ட ராஜா தானே ஒதுங்கி விட்டார்.   [தகவல் : திரை இசை அலைகள் – வாமனன் ]

1980 களில் வெளிவந்த அவரது பேட்டியில் ஒன்றில்  “நல்ல இசை வரவேண்டும் என்றால் இன்னாருக்கு இன்னார் பாடுவது என்ற முறை இல்லாமல் போக வேண்டும் ” என்ற கருத்தை அவர் வலியுறுத்தியதும் இங்கே நினைவுக்கூரத்தக்கதாகும்.

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தில் முத்துலிங்கம் எழுதிய வீர உணர்வுமிக்க ஒரு  பாடல் பதிவின் போது, அந்தப்பாட்டை ஜேசுதாஸ் பாட வேண்டும் என்பது எம்.ஜி.ஆர் விருப்பம்.ஆனால் முத்துலிங்கம்  “இந்தப்பாட்டை டி.எம்.சௌந்தரராஜன் பாடினால் நல்லாயிருக்கும் ”  என்று எம்.ஜி.ஆரிடம் கூறிய போது  “இப்படி சொல்லும்படி எம்.எஸ்.வி சொன்னாரா ”  என்று எம்.ஜி.ஆர் கேட்டார் என முத்துலிங்கம்  ஒரு காணொளியில்  கூறுகிறார். எம்.ஜி.ஆரின் விருப்பம்   கோவை சௌந்தரராஜன் என்பதையும்  பதிவு செய்கிறார் முத்துலிங்கம்.

இது போலவே பதிபக்தி  படத்தில்  ” வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே ” என்ற பாடலை மூன்று பாடகர்கள் பாடி இறுதியாக டி.எம்.எஸ்.பாடியதே தெரிவு செய்யப்பட்டது என்று எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு பேட்டியில் கூறினார். அதற்கான காரணம் வெவ்வேறு கருத்து நிலவியது என்பதும் விஸ்வநாதன் கருத்தை நியாயப்படுத்த கூறிய கருத்து இது என்பதும் வெள்ளிடைமலை.

தங்களுக்குப் பிடித்த பாடகர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியவர்கள் , “இன்னாருக்கு இன்னார் தான் பொருத்தம் ” என்று கூறி வந்தவர்கள் பின்னாளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்ற  யாருக்கும் பொருத்தமில்லாத குரல்களையும் அறிமுகம் செய்தார்கள் எனபது மட்டுமல்ல எடுத்த எடுப்பிலேயே எம்.ஜி.ஆருக்கும் ,சிவாஜிக்கும் பாடவும்  வைத்தார்கள் என்பதில்  எந்த விதமான தர்க்க நியாயமுமில்லை.

1950 களில் வெளிவந்த எம்.ஜி.ஆர் , சிவாஜி படங்களை பார்த்தால் அவர்கள் பெரும் பாலும் சமூகக்கதைகளில் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தமையும் , பாடல்களின் இயல்பும் யார் பாடுகிறார்கள் என்ற அக்கறையும் இருக்கவில்லை என்பதையும் அவதானிக்க முடியும். நாயக அந்தஸ்து அங்கே குறுக்கிடாமல் கதையின் அம்சம் முக்கியமாக கருதப்பட்டது.

பெற்றதாய் [1953] படத்தில் ” நிலாவிலே ஒய்யாரம் உலாவுதே அநுராகம் ” , ” ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு ” என்ற இரு காதல் பாடல்கள். இரண்டு பாடல்களையும்  இரு வேறு பின்னணிப்பாடகிகளுடன் பாடியவர் ஏ.எம்.ராஜா. .முதலாவது பாடல்  துடுக்குத்தனமும், இனிமையும்   மிக்க குரலிலும் , இரண்டாவது பாடல் [ ஏதுக்கு அழைத்தாய் ]  மென்மையும்,அப்பாவித்தனமும் , இனிமையும் நிறைந்திருக்கும் குரலிலும் அமைந்திருந்தது.

முதல் பாடலைப் பாடியவர் அக்காலத்தில் புகழபெற்ற இசையமைப்பாளரான  சி.ஆர் சுப்பராமனின் இசையில் தேவதாஸ் படத்தில் இடம் பெற்ற “எல்லாம் மாயை தானா “,  ” உறவுமில்லை பகையுமில்லை”  போன்ற பாடல்களை பாடிய கே.ராணி
“ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு ” என்கிற மென்மையும் இனிமையுமிக்க அந்தப்பாடல் தான் பி.சுசீலா பாடிய முதல் பாடல்.பின்னாளில்  இதமாக தழுவிய  குளிர் தென்றலின் தளிர்நடை அந்தக்குரல்! அமைதியாய் ஓடும் சிற்றோடையின் லயமும்   இளம் பெண்ணின் அப்பாவித்தனமுமான  இளங்குரலின் தன்மையும் அப்பாடலில் இருந்தது.

ஏ.பி.கோமளா,கே.ராணி  பி.லீலா , ஜிக்கி ,  போன்ற 1950 களின் இனிமையான குரல்களுக்கு மத்தியில் எடுத்த எடுப்பிலேயே அக்காலத்தில் புகழபெற்றிருந்த ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து பாடும் வாய்ப்பைப் பெற்றவர் சுசீலா.ஒரு முக்கியமான அறிமுகப் பாடலாயினும் தொடர்ந்து அதிகமான பாடும் வாய்ப்புகள் சுசீலாவுக்கு கிடைக்கவில்லை.ஆனாலும் வாசத்தை தொடராக அள்ளி வீசாத பூந்தென்றல் அவ்வப்போது வீசவும் செய்தது.

எத்தனையோ விதம் விதமான பெண் குரல்கள் ஒலித்த அந்தக்காலத்தில் 1955 இல் வெளியான கணவனே கண் கண்ட  தெய்வம் படத்தில் ஏ.ராமராவ் இசையமைப்பில் அவர் பாடிய சில பாடல்கள் புகழ் பெற்றன.அதைத்தொடர்ந்து பல பாடல்கள் …..!

01  தன்னாலே வரும் காசு  – செல்லப்பிள்ளை  [1955] – பி.சுசீலா -இசை :ஆர்.சுதர்சனம்
02  அந்த நாள் தான் இதடா   – அனார்கலி  [1957] – பி.சுசீலா -இசை :ஆதிநாராயணராவ்
03  எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுது ஏனோ  – கணவனே கண் கண்டா தெய்வம்  [1955] – பி.சுசீலா -இசை :ஏ.ராமராவ்
04  அன்பில் மலர்ந்த நாள் ரோஜா – கணவனே கண் கண்டா தெய்வம்  [1955] – பி.சுசீலா -இசை :ஏ.ராமராவ்
05   உன்னைக் கண் தேடுதே  – கணவனே கண் கண்டா தெய்வம்  [1955] – பி.சுசீலா -இசை :ஏ.ராமராவ்
06   தங்கச்சி சிலையே வாடா   – இரு சகோதரிகள்  [1957] – பி.சுசீலா -இசை :எஸ்.ராஜேஸ்வரராவ்
07   அமுதைப் பொழியும் நிலவே  – தங்கமலை ரகசியம்   [1957] – பி.சுசீலா -இசை :டி.ஜி.லிங்கப்பா
08   ஜோரான ரூபமே  – இரு சகோதரிகள்  [1957] – பி.சுசீலா -இசை :எஸ்.ராஜேஸ்வரராவ்
இவை போன்ற  பல பாவங்களை காட்டும் பாடல்கள் அவரின் பெயரை அழுத்தமாக பதிவு செய்தன. அதே ஆண்டும் அதைத் தொடர்ந்தும் வந்த ஆண்டுகளில்  வெளிவந்த அவர் பாடிய பல பாடல்கள் அவரின் பெயர் சொல்லும் புழபெற்ற பாடல்களாக விளங்கின.

01   பிருந்தாவனமும் நந்த குமாரனும் – மிஸ்ஸியம்மா [1955] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா – இசை :எஸ்.ராஜேஸ்வரராவ்
02   தேன் உண்ணும் வண்டு   – அமரதீபம்  [1955] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா – இசை :டி.சலபதிராவ்
03   விண்ணோடும் முகிலொடும்  – புதையல்  [1957] – பி.சுசீலா + சி.எஸ்.ஜெயராமன் – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி
04   கண் மூடும் வேளையிலும்   – மகாதேவி  [1957] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி
05   தென்றல் உறங்கிய போதும்   – பெற்ற மகனை விற்ற அன்னை   [1957] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி
06   துள்ளி துள்ளி அலைகள் எல்லாம்   – தலை கொடுத்தான் தம்பி  [1958] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா  – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி
07   வருவேன் நானுனது மாளிகைக்கே  – மல்லிகா  [1955] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா – இசை :டி.ஆர்.பாப்பா
08   ஆண்கள் மனமே இப்படித்தான்  – நான் வளர்த்த தங்கை [1957] – பி.சுசீலா + டி.எம்.சௌந்தரராஜன்  – இசை :பெண்டயலாயா   நாகேஸ்வரராவ்
09   ஆசையினால் மனம்      – கல்யாணப்பரிசு   [1959] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா   – இசை :ஏ.எம்.ராஜா
10   ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா  – மஞ்சள் மகிமை  [1955] – பி.சுசீலா + கண்டசாலா  – இசை :எஸ்.ராஜேஸ்வரராவ்
11   கோடை மறைந்தால்   – மஞ்சள் மகிமை  [1955] – பி.சுசீலா + கண்டசாலா  – இசை :மாஸ்டர்  வேணு
12   மாறாத சோகம் தானோ    – மஞ்சள் மகிமை  [1955] – பி.சுசீலா + கண்டசாலா  – இசை :மாஸ்டர்  வேணு
13   முல்லைமலர் மேலே   – உத்தமபுத்திரன்   [1957] – பி.சுசீலா + டி.எம்.சௌந்தரராஜன் – இசை: ஜி.ராமநாதன்
14   அன்பே அமுதே    – உத்தமபுத்திரன்   [1957] – பி.சுசீலா + டி.எம்.சௌந்தரராஜன் – இசை: ஜி.ராமநாதன்
15   சிட்டு சிரித்தது போலெ   – உத்தமபுத்திரன்   [1957] – பி.சுசீலா + டி.எம்.சௌந்தரராஜன் – இசை: ஜி.ராமநாதன்
16   விழி வாசல் அழகான மணி மண்டபம் – பெண் குலத்தின் பொன் விளக்கு [1959]- பி.சுசீலா + சீர்காழி -இசை :மாஸ்டர்  வேணு
17   வண்டு ஆடாத  சோலையில்    – எங்கள் குல தேவி    [1959] – பி.சுசீலா + சீர்காழி   – இசை :கே.வி.மகாதேவன்
18   உலாவும் தென்றல் நிலாவை பிரிவது    – கோடீஸ்வரன்    [1959] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா   – இசை :எஸ்.வி.வெங்கடராமன்
19   யாழும் குழலும் உன் மொழி தானோ     – கோடீஸ்வரன்    [1959] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா   – இசை :எஸ்.வி.வெங்கடராமன்
20   நினைக்கும் போதே ஆகா    – இல்லறமே நல்லறம்  [1958] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா   – இசை :கே.ஜி.மூர்த்தி
21   வாடிக்கை மறந்ததும் ஏனோ     – கல்யாணப்பரிசு   [1959] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா   – இசை :ஏ.எம்.ராஜா

1950 களில் வெளிவந்த எம்.ஜி.ஆர் , சிவாஜி படங்களை பார்த்தால் அவர்கள் பெரும் பாலும் சமூகக்கதைகளில் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தமையும் , பாடல்களின் இயல்பும் யார் பாடுகிறார்கள் என்ற அக்கறையும் இருக்கவில்லை என்பதையும் அவதானிக்க முடியும். நாயக அந்தஸ்து அங்கே குறுக்கிடாமல் கதையின் அம்சம் முக்கியமாக கருதப்பட்டது.

கதாபாத்திரங்களின் உணர்வுகளை அதிகமாக அல்லது மிகையாக உணர்வுகளை வெளிப்படுத்தத் தொடங்கிய 1960 களிலேயே உணர்வுச் சிதறல்களை கதையுணர்ப்பிலேயே வைக்கும் புதிய அலை பிறந்தது.உணர்வுகளின் நுண்மைகள் மிகைப்படுத்தப்பட்டன. அழ வைப்பது அல்லது சோகத்தைப் பிழிய வைப்பது  பெரிய கலையாகக் கருதப்பட்டது எனலாம்.

 காலம் மாறும் பொது அதற்கேற்ற நெறிகள் தோன்றுகின்றன.தனிமனித மிகையுணர்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில் அது சார்ந்த இசையை ,அந்தப்பொந்தில் நின்று உழாமல் ,புதுமை நோக்கில் எளிமையுடனும் இனிமையுடனும் பாய வைத்தவர்கள் மெல்லிசைமன்னர்கள்!

ஹிந்தியில் பாடகர் , பாடகிகளை  , நௌசாத் , எஸ்.டி.பரமன் , சி.ராமச்சந்திரா , ஹேமந்த்குமார், ஷங்கர் ஜெய்கிஷன் , சலீல் சௌத்ரி, மதன் மோகன் போன்ற இசையமைப்பாளர்கள்குறிப்பாக லதா மங்கேஷ்கரை ,   எவ்விதம் சிறப்பாகப் பயன்படுத்தி  பாடல்கள் தந்தார்களோ , அது போல மெல்லிசைமன்னர்களும் தென்னிந்திய பாடகர், பாடகிகளை  பயன்படுத்தி பல இனிய பாடல்களைத் தந்தார்கள்.

அதிலும் குறிப்பாக சுசீலாவின் குரலை வியக்கத்தக்க அளவில் பயன்படுத்தினார்கள்.

[ தொடரும் ]





மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் 07 : T .சௌந்தர்.
04/23/2018 இனியொரு... 1 COMMENT
இனிய வாத்தியக்கலவைகளும் , பல்வகை ஒலிநயங்களும்.

எஸ்.எம்.சுப்பைய்யாநாயுடு
எஸ்.எம்.சுப்பைய்யாநாயுடு
மரபிசையோடு இயைந்த மெட்டுக்களை சிறப்பாக அமைக்கக்கூடிய முன்னோடிகளான ஜி.ராமநாதன், எஸ்.எம்.சுப்பைய்யாநாயுடு ,வி. வெங்கட் ராமன் , கே.வி.மகாதேவன் போன்றவர்களின் பாடல்களிலிருந்து மெல்லிசைமன்னர்களின் வித்தியாசமானதாக , புதுமையாக இருப்பதை நாம் காண்கிறோம்.முன்னோடிகளின் மெட்டுக்கள் இனிமையாக இருப்பினும் வாத்திய அமைப்பில் போதாமையையும் காண்கிறோம்.

மெல்லிசைமன்னர்களின் இசை வசீகரத்தின் ஆதாரமே புதிய, புதிய இசைக்கருவிகளை மிக நுட்பமாக பயன்படுத்தியது தான் என அடித்துக் கூறலாம்.எளிமையும் ,கவர்ச்சியும் வனப்பும் ,கனிவும் மிக்க மாயக்கலவையாக அவர்களது இசை இருந்தது.

“தேடு கல்வி இல்லாதொரு ஊரைத் தீக்கிரையாக மடுத்தல் ” எனும் பாரதியின் வாக்குக்கு அமைய
தாம் கேட்டு அனுபவித்த இசைவகைகளை எளிமையாக மாற்றி தர முனைவதும், அதில் இருந்து புதிதாய் ஒன்றைக் கண்டடைய முயன்றதையும் அவர்களது இசையமைப்பில் காண்கிறோம்.

அதுமட்டுமல்ல சிக்கலான இசை நுட்பங்களை ,ஒன்றோடொன்று தொடர்பற்ற இசை போல தெரியும் இசைவகைகளிலிருந்து எளிமையான மெட்டுக்களை உருவாக்கி அவற்றை தமிழ் சூழலுக்குகேற்றவகையில் தகவமைக்கும் ஆற்றலையும் எண்ணி வியக்கின்றோம்.வெவ்வேறு இசைவகைகளிலிருக்கும் எல்லைக் கோடுகள் ,இடைவெளிகளை அழித்து பெரிய மாற்றத்தை தோற்றுவித்து ,இசையால் ரசிகர்களை உயிர்ப்பூட்டும் புதிய முயற்சிக்கு தயார்படுத்தினார்கள்.

தேனீக்கள் போல சேகரித்தவைகளை செம்மையாகவும் ,துல்லியமாகவும் வெளிப்படுத்தும் பாங்கில் இசைவும் தெளிவும் இருந்தது.இதனூடே பாடல்களிலும் உள்நுழையும் வாத்தியங்களை கூர்ந்து கேட்கையில் அவர்களது இசையின் தாகத்தையும் வேட்கையையும் உணர முடிகிறது.

வாத்திய இசைகளின் அடர்த்தியில் இயைந்து செல்லும் பாடல்களைக் கேட்கும் போது ஆனந்த நிலைகளில் அசைந்து செல்லும் குதூகலங்களும், பழமையின் இனிய நினைவுதுளிர்ப்பும் , உயிர்ப்பின் சிலிர்ப்பும் நம்மை ஒன்றாகத் தாக்குகின்றன.

வாத்தியங்களின் இசைக்கலவைகளையும் ,அவற்றின் துல்லியத்தையும் ஒன்று கலந்து தேவையான உணர்வுகளுக்கு அதன் கட்டமைவுகளுக்கு அடிப்படையான இசையை ,பாடல்களை வழங்கினார்.அக்கால சூழ்நிலையின் பின்னணியில் வைத்துப் பார்க்கும் பொது அவை புத்திசையின் பள்ளியெழுச்சி என்று கூறலாம்.ஆச்சர்யமிக்க படைப்பூக்கத்துடன் பாடல்களைத் தந்த மெல்லிசைமன்னர்கள் இசையின் மீது காதல் , மயக்கம் கொண்ட நாடோடிகளாகவும் தெரிகின்றனர்.

எளிமையான மெட்டுக்களில் நுட்பமான இசையொலி இழைகளை வைத்து அவற்றை வீணே பலியாக்காமல் ,அதனுடன் விரிநுணுக்கக் கூறுகளையும் இணைத்து உள்ளமுவக்கும் பாடல்களைத் தந்து சென்றிருக்கிறார்கள்.மேம்போக்காக நாம் கேட்டு கேட்டு ரசித்த பல பாடல்களில் அவர்கள் இணைத்துத் தந்திருக்கும் வாத்திய இசைக்கோர்வைகளை மீண்டும் நுணுகிக் கேட்கும் போது,நாம் முன்பு சுவைத்ததற்கும் மாறான வேறுபாட்டையும், புதிய அனுபவத்தையும் பெறுகிறோம்.

அவர்களுடன் நெருங்கிப்பழகிய இசைக்கலைஞர்கள் ,தயாரிப்பாளர்கள் ,நடிகர்கள் போன்றோர் தாம் பங்குகொண்ட பாடல்களின் ஒலிப்பதிவு மற்றும் நுட்பங்கள் குறித்துத் தரும் தகவல்கள் மெல்லிசைமன்னர்களின் திறனுக்கு சான்று பகர்வதுடன் இசைரசிகளையும் பாடல்களை துருவித் துருவி ஆராயும் மனப்போக்கை வளர்க்க உதவுவவும் செய்கின்றன.

மெல்லிசைமன்னர்களின் மெட்டுக்களின் இனிமையிலும் , அவை தரும் உணர்வில் மயங்கும் அல்லது மனம் பறிகொடுக்கும் ரசிகர்கள் பாடலின் ஒரு பகுதியைத் தான் ரசிக்க முடியும் என்ற நிலையைத்தாண்டி அதில் இணைந்திருக்கும் வாத்திய இசையை நுணுகிக் கேட்பதும், அவற்றின் நுணுக்கங்களை கேட்டு அனுபவிப்பது என்பது புதிய அனுபவம் என்பதும் மகிழ்ச்சி தருவதும் எழுதுபவர்களுக்கும் பயன்படக்கூடியவையுமாகும்.

அவர்களது இசையில் வாத்திய இசையின் பங்களிப்பை அறிய முனைபவர்கள் என்னென்ன வாத்தியங்களை அவர்கள் தங்கள் பாடல்களில் இணைத்து சிறப்பு சேர்த்திருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டுமாயின் அவர்களது பாடல்களின் வழியே உள்நுழைந்து வருவதைத் தவிர வேறு வழியில்லை.

அந்த வகையில் பியானோ ,ட்ரம்பட் , ட்ரம்ஸ் ,எக்கோடியன் , கிட்டார் ,ஹார்மோனிக்கா போன்ற மேலைத்தேய வாத்தியங்களை மட்டுமல்ல வட இந்திய இசைக்கருவிகளான சாரங்கி ,சந்தூர் ,சித்தார் போன்ற இசைக்கருவிகளை சுவீகரித்து திறமையுடன் வழி வழியாக வந்த இசையோடு, தங்களுக்குரிய ஆர்வத்தோடு,ஒருங்கிசைவுடன் தந்த அழகை, அமுதாகக் கலந்து தந்த பாடல்கள் சிலவற்றை இங்கே நோக்கலாம்.

01 பியானோ: [Piano]
——————————–

17 ம் நூற்றாண்டில் இத்தாலியில் கிறிஸ்டிபோறி [ Cristifori ] என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இசைக்கருவி பியானோ. பிளூஸ், ஜாஸ், ரோக் மற்றும் மேலைத்தேய செவ்வியல் இசையிலும் அதிக பயன்பாட்டில் உள்ள இசைக்கருவி. மிக நுண்ணிய, இசைவான சுரங்களையும் வாசிக்க ஏதுவான இசைக்கருவி.

தற்போது மேலைத்தேய நாடுகளில் பல்வகை இசைகளிலும் விஸ்தாரமாகப் பயன்படும் இக்கருவியை செவ்வியல் இசையில் வியக்கத்தக்க அளவில் ஜோகன் செபஸ்டியா பாக் [Johann Sebastian Bach ] , மொஸாட் போன்றோர் பயன்படுத்தி வெற்றிகண்டனர். ஜாஸ் இசையிலும் உச்சங்களைத் தொட்ட Duke Ellington, Nat King Cole,Errol Garner போன்ற எண்ணற்ற கலைஞர்களையும் நாம் இங்கே நினைவூட்டலாம்.

பியானோ இசை மேலைத்தேய செவ்வியல் இசையிலும் அதிகம் பயன்பட்டாலும் மெல்லிசைமன்னர்களைப் பொறுத்தவரையில் வணிக மற்றும் பொழுதுபோக்கு [ Entertaining ] இசையின் உச்சமாகத் திகழ்ந்த ஜாஸ் மற்றும் லத்தீன் அமெரிக்க இசையைத்தான் தங்கள் ஆதர்சமாகக் கொண்டார்கள்.குறிப்பாகப் பியானோ இசையை அந்த பாங்கிலேயே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஜாஸ் இசை என்று பொதுவாக நாம் இங்கே குறிப்பிட்டாலும் அதிலுள்ள Stride Piano ,Boogie – Woogie போன்ற நுணுக்கங்களையும் பயன்படுத்தினர்.

காலத்தால் முந்திய Ragtime Piano என்பது ஜாஸ் இசைக்கு வெளியே பயன்படுத்தப்பட்ட பியானோ இசையாகும்.Ragtime Piano என்பது Scot Joplin [1868-1917 ] என்ற கறுப்பினக் கலைஞரால் சிகாகோவில் உருவாக்கப்பட்டது.இசைக்குறிப்புகள் கொண்ட ,மனோதர்ம வாசிப்பு இல்லாத , கனதியற்ற வாசிப்பு முறை கொண்ட இசையாகும். இந்த இசையில் தேர்ச்சிபெற்ற இசைக்கலைஞரான Jelly Roll Morton [ 1890 – 1941 ] என்பவரே ஜாஸ் இசையின் பிதாமகன் எனக்கருதப்படுகிறார்.

Stride Piano என்பது மனோதர்ம [ Improvisation ] முறையில் வாசிப்பதை அடிப்படையாகக் கொண்டது.இது நீண்ட அடியிட்டுத் தாவிச்செல்லும் வேகமான வாசிப்பு முறையைக் கொண்டதாகும்.James P Johnson [ 1891 – 1955 ]என்ற கலைஞர் father of the Stride Piano எனக் கருதப்படுகிறார்.இவரை அடியொற்றி பியானோ இசையில் அதிக தாக்கம் விளைவித்து பாரிய பங்காற்றிய கலைஞர்களாக Thomas “Fats” Waller , Art Tatum போன்றோர் ஜாஸ் இசையில் அதிக தாக்கம் விளைவித்தவர்களாவர்.

Boogie – Woogie என்ற ஜாஸ் இசைப்பாணி 1930 களில் உருவான முறையாகும்.மெலோடியின் உருவத்தை தாளத்தின் நளினத்தோடு வெளிப்படுத்துவதோடு ,தாள் அமைவுகளின் கலை நுணுக்கப்பற்றார்வத்தையும் வெளிப்படுத்தும் ஓர் முறையாகும்.இருவர் ஒரு பியானோவை வாசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதும் , இசை குறிப்புக்களை வாசிக்க முடியாதவர்களும் ,தாளநடைக்கு ஏற்ப வாசிக்க தெரிந்தவர்களும் வாசிக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.Boogie – Woogie இசையிலிருந்து ஜாஸ் இசையின் பல பிரிவுகள் பிறந்ததென்பர்.

மெல்லிசைமன்னர்கள் இசையில் Boogie – Woogie என்ற இசைவகையில் அமைந்த சில பாடல்கள்:

01 மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும் – வெண்ணிற ஆடை [1964 ] – பாடியவர்: எல் ஆர்.ஈஸ்வரி – விஸ்வநாதன் ராமமூர்த்தி.
02 அல்லிப்பந்தல் கால்கள் எடுத்து – வெண்ணிற ஆடை [1964 ] – பாடியவர்: எல் ஆர்.ஈஸ்வரி- விஸ்வநாதன் ராமமூர்த்தி.
03 என்ன என்ன வார்த்தைகளோ – வெண்ணிற ஆடை [1964 ] – பாடியவர்: பி.சுசீலா – விஸ்வநாதன் ராமமூர்த்தி
04 ஆடவரெல்லாம் ஆட வரலாம் – கறுப்புப்பணம் [1964 ] – பாடியவர்: எல் ஆர்.ஈஸ்வரி- விஸ்வநாதன் ராமமூர்த்தி
05 யாரோ ஆடாத தெரிந்தவர் யாரோ – குமரிப்பெண் [1965 ] – பாடியவர்: எல் ஆர்.ஈஸ்வரி – விஸ்வநாதன்

ஜாஸ் இசை என்று இங்கே குறிப்பிடும் போது அதனுடன் இணைந்து பிரஷ் ட்ரம்ஸ் [Brush drums ],”வுட் பாஸ்” [Wood Bass ], Snare Drum , Bangos ,Accordian ,Mouth Organ , குழல், வயலின்,ட்ரம்பட் போன்ற பிற வாத்தியக்கருவிகளையும் இணைத்து சாகசம் புரிந்தவர்கள் மெல்லிசைமன்னர்கள்!

பொதுவாக துள்ளல் இசையில் வைக்கப்படும் பியானோ இசைக்கருவியின் அத்தனை இசைச் சாத்தியங்களையும் தங்களின் பாடல்களில் வைத்து பாடலின் உணர்வுகளைத் ததும்ப வைத்தார்கள்.அவை கிராமிய பாடல் ,காதல் பாடல் ,சோகப்பாடல் ,வீர உணர்வை வெளிப்படுத்தும் பாடல், நகைச்சுவைப்பாடல் எதுவாக இருப்பினும் அதன் ஒத்திசைவுக்கு ஏற்ப பாடல்களை அமைத்து படைப்பாற்றலின் அதீதங்களைக் காட்டினார்கள்.

பியானோ கருவியுடன் இணைத்து ட்ரம்பெட் ,ட்ரம்ஸ் ,கிட்டார் , சாக்ஸபோன்,எக்கோடியன் , பொங்கஸ் எனப் பலவகை இசைக்கருவிகளையும் இணைத்து அவர்கள் தந்த எண்ணற்ற பாடல்கள் உள்ளன. மெல்லிசைமன்னர் இணைந்தும் பின் தனியே பிரிந்து சென்று இசையமைத்த பாடல்களில் சில:

06 பாட்டொன்று கேட்டேன் – பாசமலர் [1961 ] – பாடியவர்: கே.ஜமுனாராணி – விஸ்வநாதன் ராமமூர்த்தி.
07 வரவேண்டும் ஒரு பொழுது – கலைக்கோயில் [1964 ] – பாடியவர்: எல் ஆர்.ஈஸ்வரி -விஸ்வநாதன் ராமமூர்த்தி.
08 உன்னை ஒன்று கேட்பேன் – புதிய பறவை [1963 ] – பாடியவர்: பி.சுசீலா – விஸ்வநாதன் ராமமூர்த்தி.[ ட்ரம்பெட் ,ட்ரம்ஸ் ]
09 விஸ்வநாதன் வேலை வேணும் – காதலிக்க நேரமில்லை [1964 ] – பாடியவர்: PBS + குழுவினர்.- விஸ்வநாதன் ராமமூர்த்தி.
10 கண்ணிரண்டும் மின்ன மின்ன – ஆண்டவன் கட்டளை [1961 ] – பாடியவர்: BPS + எல் ஆர்.ஈஸ்வரி – விஸ்வநாதன் ராமமூர்த்தி.
11 காற்று வந்தால் தலை சாயும் – காத்திருந்த கண்கள் [1962 ] – பாடியவர்: BPS + சுசீலா – விஸ்வநாதன் ராமமூர்த்தி.
12 வண்ணக்கிளி சொன்ன மொழி – தெய்வத்தாய் [1962 ] – பாடியவர்: TMS + சுசீலா – விஸ்வநாதன் ராமமூர்த்தி.
13 மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – சுமைதாங்கி [1962 ] – பாடியவர்: PBS – விஸ்வநாதன் ராமமூர்த்தி.
14 மாணிக்கத் தொட்டில் அங்கிருக்க – பணம் படைத்தவன் [1962 ] – பாடியவர்: TMS + சுசீலா – விஸ்வநாதன் ராமமூர்த்தி.
15 கண்ணென்ன கண்ணென்ன -பெரிய இடத்துப் பெண் – [1963 ] – பாடியவர்: TMS – விஸ்வநாதன் ராமமூர்த்தி.
16 கண் போன போக்கிலே கால் போகலாமா -பணம் படைத்தவன் [1965 ] – பாடியவர்: TMS + குழு – விஸ்வநாதன் ராமமூர்த்தி.
17 நான் நன்றி சொல்வேன் -குழந்தையும் தெய்வமும் – [1965 ] – பாடியவர்: சுசீலா + MSV – விஸ்வநாதன்
18 ஓ லிட்டில் பிளவர் – நீலவானம் 1966 – பாடியவர்: TMS – விஸ்வநாதன் [பியானோ ,எக்கோடியன் , ட்ரம்ஸ்,கிட்டார் ,குழல் ]
19 தேடினேன் வந்தது- ஊட்டிவரை உறவு 1967 – பாடியவர்: சுசீலா- விஸ்வநாதன் [பிரஸ் ட்ரம்ஸ் ,பியானோ ,ட்ரம்பெட் ,குழல்,வயலின் ]
20 என்ன வேகம் சொல்லு பாமா -குழந்தையும் தெய்வமும் 1965 – பாடியவர்: TMS + குழு – விஸ்வநாதன்
21 அவளுக்கென்ன அழகிய முகம் – சர்வர் சுந்தரம் – [1967 ] – பாடியவர்: TMS + + எல் ஆர்.ஈஸ்வரி – விஸ்வநாதன்
22 தொட்டுக்க காட்ட வா – அன்பே வா [1967 ] – பாடியவர்: TMS + ராகவன் + குழு – விஸ்வநாதன்
23 நாடோடி நாடோடி – – அன்பே வா [1967 ] – பாடியவர்: TMS + ராகவன் + குழு – விஸ்வநாதன்
24 பால் தமிழ்ப்பால் — ரகசிய போலீஸ் 115 [1968] – பாடியவர்: TMS + ஈஸ்வரி – விஸ்வநாதன்
25 செல்லக்கிளிகளாம் பள்ளியிலே – எங்க மாமா [1968] – பாடியவர்: TMS – விஸ்வநாதன்
26 அத்தானின் முத்தங்கள்- உயர்ந்த மனிதன் [1968] – பாடியவர்: P சுசீலா – விஸ்வநாதன்
27 தைரியமாகச் சொல் நீ – ஒளிவிளக்கு – [1968] – பாடியவர்: TMS – விஸ்வநாதன்
28 மெழுகுவர்த்தி எரிகின்றது -கவுரவம்1974 – பாடியவர்: TMS – விஸ்வநாதன்

பியானோ இசையை பிரதானப்படுத்தி இசையமைக்கப்பட்ட இப்பாடல்களில் முக்கியமான, புதுமையான கலப்பாக செய்யப்பட்ட பாடலாக கீழ் வரும் இரண்டு பாடல்களை இங்கே குறிப்பிடலாம்.

**** கண்ணென்ன கண்ணென்ன -பெரிய இடத்துப் பெண் – [1963 ] – பாடியவர்: TMS – விஸ்வநாதன் ராமமூர்த்தி.

நாட்டுப்புறத்தான் பாடும் ஒரு பாடலாக அமைந்த இந்தப்பாடலில் விறுவிறுப்பையும் , ஏளனத்தையும் காண்பிக்க பியானோவை பயன்டுத்தி,பாடலின் பின்பகுதியில் நாட்டுப்புற தாளத்திற்கு இசைவாக்கிய தன்மையையும் குறிப்பாகக் சொல்லலாம்.

**** மாணிக்கத் தொட்டில் அங்கிருக்க – பணம் படைத்தவன் [1962 ] – பாடியவர்: TMS + சுசீலா – விஸ்வநாதன் ராமமூர்த்தி.

உருக்கமும் ,மிக எழுச்சியும் மிக்க ஹம்மிங்குடன் ஆரம்பிக்கும் இந்த பாடலில் பியானயோவை தாளகதியாக வைத்துக் கொண்டு மூன்று குரல்களை [ TMS +சுசீலா + ஈஸ்வரி ] இணைத்து மிக அருமையான தாலாட்டாக அமைத்திருக்கின்றார்கள்.இந்தப்பாடலில் தான் எத்தனை உணர்வு ,எத்தனை பாவம்! கேட்கக்கேட்கத் திகட்டாத பாடல்.
பலவிதமான உணர்வுகளை கிளரும் இந்தப்பாடலில் மேலைத்தேய இசையில் துள்ள இசைக்குப் பயன்படும் பியானோ இசையுடன் செனாய் வாத்தியத்தையும் அதில் கிராமியத் தன்மையையும் இணைத்து முற்றிலும்மாறுபாடான வாத்தியங்களை வைத்து உணர்வின் ஆழங்களைக் காண்பித்து புது விதியை உருவாக்கினார்கள்.

02 ட்ரம்பெட்: [ Trumpet ]
———————————-

உற்சாகமும் எழுச்சியும் தரும் குழல் வாத்தியங்களில் முக்கியமான இடம் ட்ரம்பட் [ Trupet ] என்ற வாத்தியத்திற்கு உண்டு.ஆதிகாலத்தில் போர்களிலும் ,வேட்டை ஆடும் நேரங்களிலும் பயன்டுத்தப்பட்டு வந்த கொம்பு எனும் கருவியின் நவீன வடிவமே ட்ரம்பட் வாத்தியம்.

நவீன உருவாக்கத்தில் செப்பு உலோகத்தால் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ள இந்தக்கருவி ஐரோப்பிய செவ்வியலிசையில் நுழைந்தது 15 ம் நூற்றாண்டிலேயே! பின்னர் ஜாஸ் இசையிலும் தனித்துவமான இடம் பிடித்த இந்த வாத்தியம் ஜாஸ் இசையின் அடிப்படையான வாத்தியமாகவும் கருதப்படுகிறது.

மொஸாட் , ஹைடன் , பாக்ஹ் மற்றும் பல ஐரோப்பிய செவ்வியலிசையாளர்கள் கணிசமான பயன்படுத்தி செழுமைப்படுத்தினர் எனலாம். குறிப்பாக பராக் [ Barok ] கால இசையில் இந்த வாத்திய இசையை அதிகம் கேட்கலாம்.

அமெரிக்க உள்நாட்டுப் போரில் ராணுவவீரர்களாகப் பங்கு பற்றிய கறுப்பினமக்கள் இந்த வாத்தியத்தை தங்களுக்கேயுரிய தனித்திறத்துடன் பயன்படுத்தி வந்தததால் ஜாஸ் இசைக்கான வாசிப்பு முறை உருவானது.கறுப்பின மக்களின் அடிப்படை இசையான மனோதர்ம இசையின் வீச்சுக்களில் 20 ம் நூற்றாண்டின் தலை சிறந்த கறுப்பின இசைக்கலைஞர்கள் புதிய ஒலியலைகளை மிதக்கவிட்டு சாதனை புரிந்தார்கள்.ஜாஸ் இசையில் மிக உயர்ந்த இடத்தை தொட்டவர்களில் முதன்மையானவராகக் கருதப்படுபவர் ஆம்ஸ்ட்ரோங் 1901 – 1971 [ Louis Daniel Armstrong ]. இவரைப் போல பலர் பின்னே உருவானார்கள்.

1950 களிலேயே ஹிந்தி திரையிசையில் ட்ரம்பட் கணிசமான அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது.அக்காலத்தில் புகழபெற்றிருந்த எல்லா இசையமைப்பாளர்களும் துணிந்து பயன்படுத்தினார்கள் என்று சொல்லத்தக்கவகையில் பாடல்கள் உள்ளன. குறிப்பாக ஷங்கர் ஜெய்கிஷன் .எஸ்.டி. பர்மன் , ஓ.பி.நய்யார் போன்றோர் பாடல்களில் மட்டுமல்ல , பின்னணி இசையாகவும் மிக வெற்றிகரமாக பயன்படுத்தினார்கள்.

1950 மற்றும் 1960 களிலேயே ஹிந்தி திரையிசைமைப்பாளர்கள் தந்த பாடல்கள் சில:

01 Tirchi Nazar Hai Patli Kamar Hai – Baarsat 1948 – Lata + Mukesh – Music : Shankar Jaikihan
02 Haal Kaisa Hai Janaab Ka – Chalti Ka Naam Gaadi 1958 – Kishore Kumar + Asha Bosley – Music :S D Burman
03 Teri Dhoom Har Kahin – Kaala Bazar 1960 – Rafi – Music :S D Burman
04 Matwali Ankhowakle – chotte Nawab 1961 – Rafi – Music: R.D.Burman
05 Baar Baar dekho – china Town 1962 – Rafi – music: Shankar Jaikishan

ஹிந்தித் திரையிசையை ஆழ்ந்து அவதானிதத்தவர்கள் என்ற வகையில்,அவற்றால் உந்துதல் பெற்று உள்ளக்கிளர்ச்சியுடனும், ஈர்ப்புடனும் ,படைப்பாற்றலின் நுட்பத்துடணும் பயன்படுத்தி வெற்றிகண்டவர்கள் மெல்லிசைமன்னர்கள் .தங்கள் இசையனுபவத்தின் வழியே மிக நேர்த்தியுடன்,அழகுடன் இந்த வாத்தியத்தின் பல்வேறு ஒலியமைப்புகளை கலைநயத்துடன் பயன்படுத்தினார்கள்.

ட்ரம்பெட் என்ற வாத்தியம் அடிப்படையில் போர்க்கருவியின் சந்ததியாக இருப்பதால் அந்த வாத்தியத்தின் முழக்கத்தின் அதிர்வை , உணர்வுகளைத் தட்டி எழுப்பி உற்சாகம் தரும் பாடல்களாக்கித் தந்திருக்கும் பாடல் சிலவற்றைக் காண்போம்.

01 அதோ அந்தப்பறவை போல – ஆயிரத்தில் ஒருவன் [1965] – பாடியவர்: TMS + குழு – விஸ்வநாதன் ராமமூர்த்தி.
சுதந்திர உணர்வின் குறியீடாக ஒலிக்கும் இப்பாடலில் ட்ரம்பெட் , ,ட்ரம்ஸ் ,கோரஸ் ,வயலின் ,குழல் போன்ற இசைக்கருவிகளை வைத்து ஒரு சித்து விளையாட்டு காட்டியிருக்கிறார்கள் மெல்லிசைமன்னர்கள் என்று தான் சொல்ல முடியும்! பாடலின் மெட்டுக்கு மெருகூட்டும் ட்ரம்பட் இசை சுதந்திரத்தின் அசரீரியாக ஒலித்து உணர்வு பொங்கச் செய்கிறது.பாடியவரின் குரல் கனகச்சிதமாக எழுச்சியூட்டி ஆர்ப்பரிக்கிறது.

02 நான் ஆணையிட்டால் – எங்க வீட்டுப்பிள்ளை 1963 – TMS – விஸ்வநாதன் ராமமூர்த்தி
அறைகூவல் விடும் இப்பாடலில் சவுக்கடியின் ஒலியுடன் எழுச்சிக் குறியீடாக ட்ரம்பட் ஒலிக்கிறது.

03 கேள்வி பிறந்தது அன்று – பச்சை விளக்கு 1964 – TMS – விஸ்வநாதன் ராமமூர்த்தி
பகுத்தறிவை பறைசாற்றும் இந்தப்பாடல் விசில்சத்தத்துடன்ஆரம்பிக்கிறது.ட்ரம்பட் ,ட்ரம்ஸ் ,செனாய் ,
எக்கோடியன் ,பொங்கஸ் ,குழல் என வாத்தியங்களின் ஒத்திசைவையும் ,புத்தெழுச்சியையும் அழகுடன் வெளிப்படுத்தும் அற்புதத்தை காண்கிறோம்.பாடலின் சரணத்திலோ உயிர்வதை செய்யும் செனாய் வாத்தியத்தின் மூலம் உள்ளத்தைக் கனிய வைக்கின்றார்கள்.எழுச்சிமிக்க ட்ரம்பட் இசையுடன் ஆரம்பிக்கும் பாடல் உள்ளத்தைக் கனிய வைக்கும் செனாய் இசையுடன் நிறைவடைகிறது.

04 பார்த்த ஞாபகம் இல்லையோ-புதிய பறவை 1963 – P சுசீலா – விஸ்வநாதன் ராமமூர்த்தி
பொங்கஸ் தாளத்துடன் ஆரம்பிக்கும் இப்பாடலில் ட்ரம்பட்,எக்கோடியன்,பொங்கஸ்,குழல் ,வயலின் , கோரஸ் என எத்தனை பரிவாரங்கள் ! அத்தனை வைத்தாலும் மிக இனிமையுடன் மன எழுச்சியையம் ஒரு பாடலில் கொடுக்க முடியும் என நிரூபிக்கும் பாடல் இது.

05 அவளுக்கென்ன அழகிய முகம்- சர்வர் சுந்தரம் 1964 – TMS + ஈஸ்வரி – – விஸ்வநாதன் ராமமூர்த்தி
ட்ரம்பெட் ,கிட்டார் ,குழல் ,பொங்கஸ் ,வயலின் ,பியானோ,கிட்டார் என வாத்திய பரிவாரங்களை வைத்து முழக்கமிடும் லத்தீன் அமெரிக்க இசைவிருந்து.

06 வீடுவரை உறவு வீதி வரை மனைவி -பாதகாணிக்கை – [1962 ] – பாடியவர்: TMS + ஈஸ்வரி – விஸ்வநாதன் ராமமூர்த்தி.
மன விரக்தியிலும்,சோகத்திலும் தத்துவம் பேசும் இந்தப்பாடலில் பலவிதமான சேர்க்கைகளாக பாடலை அமைத்திருக்கின்றனர்.கிராமிய மணத்தை தாலாட்டாக ஹம்மிங்கிலும் ,ட்ரம்பெட் ஒலியை மேலைத்தேய பாணிக்கும் பயன்படுத்தி வாத்தியங்களின் குறியீட்டுத் தன்மையையும் செவ்வையான கலவையாக தந்து வியக்க வைக்கின்றார்கள்.

07 மன்னவனே அழலாமா – கற்பகம் [1964 ] – பாடியவர்: சுசீலா – விஸ்வநாதன் ராமமூர்த்தி.
காணும் இடங்களிலெல்லாம் இளவயதிலேயே மறைந்து போன தனது மனைவியை “ஆவியாகக்” காணும் கணவன் ,அவளது துயரக்குரலைக் கேட்டு அதிர்ச்சியடைவதும் அமானுஷ்ய உணர்வை பெறுவதுமான ஒரு உணர்வை வெளிப்படுத்துவதாகவும் ஆரம்பிக்கிறது இந்தப்பாடல்.

மனைவியின் இதய ஓலமாக சுசீலாவின் ஹம்மிங்கும் ,நாயகன் அடையும் பேரதிர்ச்சியைக் காண்பிக்க ட்ரம்பட் இசையின் அதிர்வையும் ,மனித மனங்களில் ஆழமாகப் பதிந்து கிடக்கும் தொன்ம [ Myth ] நம்பிக்கைகளை,வியப்பு கலந்த சோகத்தை , அமானுஷ்ய உணர்வுகளை இசையில் காண்பிக்கும் அற்புதத்தை இப்பாடலில் கேட்கின்றோம்.

இடையிசையில் ஹம்மிங்குடன் ட்ரம்பட் இசையையும் இணைத்து வார்த்தையில் வர்ணிக்க முடியாத அமானுஷ்ய உணர்வை காட்டுகிறார்கள்.பலநதிகள் ஒன்றிணைந்து கரைந்து ஒன்றாக ஓடுவது போல வாத்தியங்கள் கரைந்து பாடலின் உணர்வுக்கு வலுசேர்க்கின்றன. பாடலின் மெட்டு தன்னைத்தான் நொந்து கொள்கிற உணர்வைத் தரும் கீரவாணி ராகத்தில் மிகப்பொருத்தமாக அமைக்கப்பட்டுள்ளது.இது மெல்லிசைமன்னர்களின் சாதனைப்பாடல்களில் ஒன்று என்று அடித்துக் கூறலாம்.

08 இது வேறு உலகம் – நிச்சய தாம்பூலம் 1962 – TMS + ஈஸ்வரி + ஜமுனாராணி – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

நைட் கிளப்பில் பாடும் ஒரு பாடலாக அமைந்தப் பாடலில் நாயகனின் உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. கவலையை மறந்திட கண்ணாடி விளிம்பைத் தேடுவார் என்று மது போதையில் மயங்கும் நாயகன் நிலையையும் மனைவியும் மக்களும் பொய்யடா நாம் இருக்கிற உலகம் மெய்யடா எனவும் அழகாக வெளிப்படுத்தும் இந்தப்பாடல் லத்தீனமெரிக்க இசைப்பாணியில் அமைந்திருக்கும்.

09 பார்த்த ஞாபகம் இல்லையோ [புதிய பறவை 1963] – சுசீலா – இசை : விசுவநாதன் ராமமூர்த்தி

இந்தப்பாடல் நைட் கிளப்பில் பாடப்படும் ஒரு பாடல் தான்.இனம்புரியாத உணர்வலைக் கிளர்த்தும் இந்தப்பாடல் லத்தீன் அமெரிக்க இசைப்பாணியில் அமைந்த பாடலாகும்.சுசீலாவின் குரலால் அமரத்துமிக்க பாடலாகி விட்டதொரு பாடல் என்றால் மிகையில்லை.

10 அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டு [ வெண்ணிற ஆடை ] சுசீலா – இசை : விசுவநாதன் ராமமூர்த்தி .

குற்றால அருவில் குளிக்கும் சுகத்தை பாடலில் தரும் அதிசயப்பாடல்.இப்பாடலைக் கேட்கும் போது எழும் ஆனந்தத்தை வார்த்தையால் வர்ணிக்கத்துவிட முடிவதில்லை.” நீரில் நின்று தேனும் தந்தது அள்ளி அள்ளி கொள்ளும் சுகமோ ” என்று கண்ணதாசன் இந்த மெட்டைத்தான் குறிப்பிடுகிறாரோ அல்லது பாடிய சுசீலாவின் குரலைத்தான் குறிப்பிடுகிறாரோ என எண்ண வைக்கின்ற பாடல்.

அம்மம்மா … என்று பாடலில் வரும் சொல்லை சுசீலா கூவியழைப்பதின் சுகமே சுகம்.எக்கோடியன் ,வயலின் ,குழல் வாத்த்தியங்களின் இணைப்பும் அலாதியானவை.

11 சொந்தமுமில்லை பந்தமுமில்லை – ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார் 1962 – GK வெங்கடேஷ் + குழுவினர் – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

12 கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா [ பறக்கும் பாவை ] எக்கோடியன் , ட்ரம்பெட் ,குழல் ,வயலின்.ட்ரம்ஸ்
பாடலின் சரணத்தில் வரும் வரிகளில் [சந்திரனை தேடி சென்று ] உச்சம் தரும் ட்ரம்பெட் இசையை நாம் எப்படி ரசிக்காமல் போவது!?

03 மியூட் ரம்பட்: Mute Trumpet :
——————-

Mute Trumpet என்கிற இசைக்கருவி மனித குரலுக்கு மிக நெருக்கமானதென்பர். MuteTrumpet என்பது நுட்பமிக்க இசையை வாசிப்பதற்கு அதிக திறமையைக் கோரும் ஒரு இசைக்கருவியாகும். ஜாஸ் இசையில் பயன்படும் ட்ரம்பட் கருவியுடன் இணைக்கப்பட்ட Stem என்ற மூடும் கருவியும் ஒன்றாக இணைத்து இயக்கப்படுவதன் மூலம் புதிய ஒலியை தரும் ஒரு முறையாகும்.அதில் Harmon Mute என்பதும் ஒருவகை.

Stem பொருத்தப்பட்டு இசைக்கப்படும் Trumpet இல் பிறக்கும் ஒலிகளின் மூலம் பலவகை உணர்வுகளை பிரதிபலித்து காட்சிகளை சிறப்பாக வெளிப்படுத்த முடியும்.சினிமாக்களில் இக்கருவியை நகைச்சுவைக் காட்சிகளில் பயன்படும் வாக் வாக் [ Wah Wah ] முறையைக் குறிப்பிடலாம்.1940 களில் Walt Disney தனது காட்டூன் பாத்திரங்களுக்குப் பயன்படுத்தி வெற்றிகண்டவராவார்.

மியூட் ரம்பட்டை Harmon என்கிற கருவியுடன் இணைத்து வாசிக்கும் போது வாக் வாக் [ Wah Wah ]என்று ஒலிப்பது போன்ற ஒலி உண்டாகும்.காட்டூனில்இந்த வகையான ஒலி யை மட்டுமல்ல பின்னணியாக உறுமல் , பதைபதைப்பு ,ஒழுங்கற்ற அசைவுகள் , உறுமல் .சிறகடிப்பு , முனகல் மெதுவாக நகர்தல் என பல்வேறு விதமான உணர்வுகளை வெளிக்காட்டி இருக்கிறார்கள்.

காட்டூன் மட்டுமல்ல பின்னாளில் திரையிசையிலும் இந்த நுடபம் பயன்படுத்தப்பட்டது.ஹிந்தி திரையிசையில் 1952 இல் வெளிவந்த AAN படத்தில் நகைச்சுவைக் காட்சியில் இசையமைப்பாளர் நௌசாத்தும் , சாரதா [ ஹிந்தி 1960 ] படத்தில் சி.ராமச்சந்திராவும் பயன்படுத்தியதைக் குறிப்பிடலாம்.

தமிழ் திரையிசையில் நாகேஷ் வரும் நகைச்சுவைக் காட்சிகளில் Wah Wah இசையை கேட்கலாம்.
மிக நுண்ணிய உணர்வுகளைக் காண்பிக்கக் கூடிய Mute Trumpet கருவியை மிக அருமையாகக் காதல் பாடலிலும் வைத்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர்!.

01 அத்தான் என் அத்தான் – பாவமன்னிப்பு 1961 – சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
இந்தப்பாடலில் அனுபல்லவியின் ,”ஏன் அத்தான்” என்ற வரிகளுக்கு முன்னர் எக்கோடியனை அடுத்து வரும் Mute Trumpet வாத்தியத்தை மிக நேர்த்தியாகப் பயன்படுத்திருக்கின்றனர். அதே போலவே சரணத்திலும் காட்டிச் செல்கின்றனர்.
Trumpetஇசைக்கருவியை மிகப் பொருத்தமான இடங்களில் பலவிதமான கோணங்களில் பின்னணி இசையாகவும் பயன்படுத்தியுமிருக்கின்றார்கள்.கலாட்டாக் கல்யாணம் போன்ற படங்களில் Title இசையாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது

04 எக்கோடியன்: [Accordion ]

ஐரோப்பிய வாத்தியமான எக்கோடியன் உலகம் முழுவதும் பரவியிருக்கிற மிகப்பிரபலமான வாத்தியங்களில் ஒன்று.நாட்டுப்புற இசையில் சரளமாகப் பயன்படும் இந்த இசைக்கருவி மக்கள் கூடுமிடங்களிலெல்லாம் நாம் எளிதில் காணக்கூடிய இசைக்கருவியாகவும் , குறிப்பாக தெருவோர இசைக்கலைஞர்கள் கைகளில் காணப்படும் இசைக்கருவியாகவும் விளங்குகிறது.

நாட்டுப்புற இசைக்கு முக்கியத்துவம் வழங்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிகம் பயன்படும் இக்கருவி முன்னாள் யூக்கோஸ்லாவாக்கியா நாட்டின் தேசிய வாத்தியமாகவும் கருதப்படுகிறது.செக்கோஸ்லாவாக்கியா நாட்டின் புகழபெற்ற போல்கா [Polka] நடனத்திற்குரிய இசையில் அதிகம் பாவனையில் இந்த இசைக்கருவி பயன்பட்டு ஏனைய நாடுகளுக்கும் பரவியது.ஜிப்ஸி இசையிலும் முக்கியத்துவம் வாய்ந்த கருவி எக்கோடியன்.நாட்டுப்புற இசையில் அதிகம் பயன்பட்ட இக்கருவி வேறு பல இசைவடிவங்களிலும் பயன்படுகிறது. மேலைத்தேய செவ்வியலிசையிலும் பயன்பாட்டில் உள்ளது.ரஷ்ய நாட்டு செவ்வியல் இசையாளர் சைக்கோவ்ஸ்க்கி யின் [ Pyotr Ilyich Tchaikovsky ] Song of Autum என்ற இசைப்படைப்பு இதற்கு சான்றாக உள்ளது.

அமெரிக்க இசையிலும் புகழபெற்ற இந்த வாத்தியம் ,லூசியானா பகுதியில் வாழ்ந்த ஆபிரிக்க அடிமைகளால் உருவாக்கப்பட்ட புளூஸ் இசை ,மற்றும் புளூஸ் தாளத்துடன் இணைந்த இசையாகவே வடிவம் பெற்றுள்ளது. Zydeco என்றழைக்கப்படும் ஒரு பிரிவு இசையாகக் கருதப்படும் இந்த இசை பிரஞ்சு குடியிருப்பாளார்களின் கரோல் மற்றும் ஸ்பானிய இசையுடன் கலந்ததொரு இசையாகும். குடும்பங்கள் ஒன்றாகச் சந்திக்கும் வேளைகளில் இசைக்கப்படும் இவ்விசையில் Waltz , Blues, Rock and Roll, Country Western போன்ற இசைக்கூறுகள் இணைந்ததாக உள்ளது.

1930 களில் ஜாஸ் இசையில் எக்கோடியன் இசை பயன்படுத்தப்பட்டு புகழ்பெற்றது.அமெரிக்க Country Music மற்றும் ஐரோப்பிய ஜாஸ் இசையிலும் இதன் பயன்பாடு பரவலாக்கப்பட்டு புகழ் பெறத் தொடங்கியது.குறிப்பாக டியாங்கோ ரெயின்காட் [ Dijango Reinhardt ] என்ற புகழ் வாய்ந்த ஜிப்ஸி இனக்கலைஞர் நிகழ்த்திய இசை நிகழ்ச்சிகளில் பிரெஞ்சு எக்கோடியன் கலைஞர் Gus Viseur கலந்து சிறப்பித்தார்.

1930 மற்றும் 1940 களிலேயே புகழபெற்ற எக்கோடியன் கலைஞர்கள் என Andonis ‘Papadzis’ Amiralis [Greek],Tony Muréna [Italy] , Pietro Frosini [Italy], Louis Ferrari [Italy] , William Quinn [Irish ] , Emile Vacher [France] ,Tony Murena [France] , Émile Carrara [france] போன்ற ஐரோப்பிய எக்கோடியன் இசைக்கலைஞர்களை உதாரணம் காட்டலாம்.

அமெரிக்க பொழுதுப்போக்கு இசையாக வளர்ந்து ,அக்கால விறுவிறுப்புமிக்க நவீன இசையாக மலர்ந்த ரோக் அன்ட் ரோல் [ Rock and Roll] ,அதன் கவர்ச்சி ,மற்றும் அவற்றின் வாத்தியஅமைப்பு,அந்த இசையின் வர்த்தக விரிவாக்கத்தோடு எக்கோடியன் இசைக்கருவியும் உலகம் முழுவதும் பரவியது.
இதன் தாக்கம் ஹிந்தித் திரையிசையிலும் தாக்கம் விளைவித்தது.வாத்திய இசையின் சாத்தியங்களை பயன்படுத்தி முன்மாதிரியாக விளங்கிய ஹிந்தி திரையிசையமைப்பாளர்கள் ஆர்மோனியம் என்கிற இசைக்கருவியைப் போலவே எக்கோடியனையும் பயன்படுத்த தொடங்கினர். அக்கால புகழின் உச்சியிலிருந்த இசையமைப்பாளர்களான S.DBurman, Shankar Jaikishan , O.P.Nayyar , Madhan Mohan ,Salil Chowtry போன்ற பெரும்பாலான இசையமைப்பாளர்கள் தங்கள் பாடல்களிலும் பின்னணி இசையில் அதிகம் பயன்படுத்தினார்.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் சங்கர் ஜெய்கிஷன் இரட்டையர்களின் ஆதர்சமான வாத்தியம் எக்கோடியன் என்று கூறுமளவுக்கு அசாத்தியமான திறமையுடன் கையாண்டார்கள் என்பதற்கு சான்றாகச் சில பாடல்களை தருகிறேன்.

01 Awaara Hoon – Awaara [1951] – Music: Shankar Jaikishan
02 Aye Mere Dil Kahin Aur Chal – [Daag 1952] -Music: Shankar Jaikishan
03 Yaad Kiya Dil Ne- Patita [1953 ] – Music: Shankar Jaikishan
04 Duniya mein chaand suraj kitni haseen – Kathputli [1957] Music: Shankar Jaikishan
05 Dekhke Teri Nazar – Howrah Bridge 1958 – Music: O.P.Nayyar
06 Beqarar Karke Humein – Bees Saal Baad – 1960 – Music: Hemant Kumar
07 Chhote Se Ye Duniya – Rangoli 1962 – Music: Shankar Jaikishan
08 Dheere Dheere Chal Chand – Love Marriage 1959 – Music: Shankar Jaikishan
09 Kahe Jhoom Jhoom Raat Yeh Suhani – Love Marriage 1959 – Music: Shankar Jaikishan
10 Har Dil Jo Pyar Karega – Sangam [1964] – Music: Shankar Jaikishan
11 Sab Kuch Seeka Humne – Anari [1959] – Music: Shankar Jaikishan
12 Har Dil Jo Pyar Karega – Sangam 1964 – Mugesh + Lata – Shankar Jaikishan
இந்தப்பாடல் காட்சியில் நாயகன் எக்கோடியன் வாசிப்பது போலவே அமைந்திருக்கும்.
.

மெல்லிசைமன்னர்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்திய இசைக்கருவிகளில் முக்கியமானதொன்று எக்கோடியன்.பாடல்களின் உணர்வுகளுக்கு ஏற்ப உணர்ச்சி பெருக்குடனும் ஆச்சரியப்பட வைக்கும் வகையிலும் இழைத்து, இழைத்து பாடலின் அழகில் கரைத்து தங்கள் படைப்பை அர்த்தப்படுத்தியிருக்கின்றார்கள்.

இங்கே எக்கோடியன் இசை வரும் பாடல்களைக் குறிப்பிடும் போது தனியே எக்கோடியனில் மட்டுமல்ல வேறு பல வாத்தியங்கள் இணைந்த தேன் அமுதக்கலவையாய் வருவதை நாம் அவதானிக்க வேண்டும்..பாரதிதாசன் தனது கவிதை ஒன்றில்

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் ….

என்ற வரிகளை இவர்களின் இசைக்கும் பொருத்திக் கூறலாம்.

எக்கோடியன் இசையுடன் காஸ்ட் நெட் ,குழல் ,சைலபோன் ,சேனை ,பொங்கஸ்,ட்ரம்ஸ் என பலவிதமான இசைக்கருவிகளையும் ,அவற்றின் இயல்புகளை தேனாகக் குழைத்தெடுத்த அற்புதங்களையும் கேட்கிறோம்.எதிர்மறையான வாத்தியங்கள் என்று சொல்லத்தக்க இசைக்கருவிகளை வைத்து தங்கள் இசையலங்காரங்களால் தமிழ் சினிமாப பாடல்களை புதிய தளத்திற்கு உயர்த்திக் சென்றனர்.

எக்கோடியனுடன் மேற்குறிப்பிடட வாத்தியக்கருவிகளைத் தேனாக, மதுரமாகக் குழைத்தெடுத்த சில பாடல்கள்.

01 தென்றல் வரும் சேதி வரும் – பாலும் பழமும் 1961 – சுசீலா – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 போனால் போகட்டும் போடா – பாலும் பழமும் 1961 – TMS – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
03 அத்தான் என் அத்தான் – பாவமன்னிப்பு 1961 – சுசீலா – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
04 பறக்கும் பந்து பறக்கும் – பணக்காரங்க குடும்பம் 1963 – TMS + சுசீலா – இசை விஸ்வநாதன்
05 வெண் பளிங்கு மேடைகட்டி – போஜய்க்கு வந்த மலர் 1965 – சீர்காழி + ஈஸ்வரி – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
06 நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் – நெஞ்சில் ஓர் ஆலயம் 1962 – BPS – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
07 இது வேறு உலகம் – நிச்சய தாம்பூலம் 1962 – TMS + ஈஸ்வரி + ஜமுனாராணி – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
08 தமிழுக்கும் அமுதென்று பேர் – பஞ்சவர்ணக்கிளி 1965 – சுசீலா – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
[குழல் ,சந்தூர் ,எக்கோடியன் ஜாலம்].
09 காதல் என்றால் ஆணும் – பாக்கியலட்சுமி 1961 – AL ராகவன் + சுசீலா – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
10 கண்ணிலே அன்பிருந்தால் – ஆனந்தி 1965 – சுசீலா – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
11 கண் போன போக்கிலே – பணம் படைத்தவன் 1965- TMS – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
12 அழகுக்கும் மலருக்கும் – நெஞ்சம் மறப்பதில்லை 1963 – BPS + ஜானகி – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
13 பாவை யுவ ராணி பெண்ணோவியம் -சிவந்தமன் 1969 – TMS – இசை விஸ்வநாதன்
14 ஒரு ராஜா ராணியிடம் -சிவந்தமன் 1969 – TMS + சுசீலா – இசை விஸ்வநாதன்
15 ஒரு நாளிலே உருவானதே -சிவந்தமன் 1969 – TMS + சுசீலா – இசை விஸ்வநாதன்
16 போகப் போக தெரியும் – சர்வர் சுந்தரம் 1965 – BPS +சுசீலா – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
17 காற்று வாங்க போனேன் – கலங்கரை விளக்கம் 1965 – TMS – இசை விஸ்வநாதன்
18 நினைத்தால் சிரிப்பு வரும் [பாமா விஜயம் ] [எக்கோடியன் காஸ்ட் நெட் ,குழல் ,சைலபோன் ,குழல்,பொங்கஸ்,ட்ரம்ஸ் ]
19 கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா [ பறக்கும் பாவை ] [எக்கோடியன் , ட்ரம்பெட் ,குழல் ,வயலின்.ட்ரம்ஸ்]
பாடலின் சரணத்தில் [சந்திரனை தேடி சென்று ] உச்சம் தரும் ட்ரம்பெட் இசையை நாம் கேட்கிறோம்.
20 நான் ஆணையிட்டால் [ எங்க வீட்டுப் பிள்ளை ] [எக்கோடியன் ,பொங்கஸ் , ட்ரம்பெட் ,கிட்டார் ]
21 குயிலாக நானிருந்தென்ன – செல்வ மகள் 1967 – TMS + சுசீலா – இசை விஸ்வநாதன் [செனாய் ]
22 நேற்று வரை நீ யாரோ – வாழ்க்கைப் படகு 1961 – BPS – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
23 நான் ஒரு குழந்தை – படகோட்டி 1964 – TMS – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலுக்குக்கிடையே இழையோடும் எக்கோடியன் , சந்தூர். ,குழல் ,மேண்டலின்
24 பாட்டு வரும் பாட்டு வரும் – நான் ஆணையிட்டால் 197 – TMS + சுசீலா – இசை விஸ்வநாதன்
பாடலுக்குக்கிடையே இழையோடும் எக்கோடியன் , சந்தூர். ,குழல் ,மேண்டலின், கிட்டார்
25 கொடுத்ததெல்லாம் கொடுத்தான் – படகோட்டி 1964 – TMS – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலுக்குக்கிடையே இழையோடும் எக்கோடியன் , சந்தூர். ,குழல்
26 உலகம் பிறந்தது எனக்காக – பாசம் 1962 – TMS – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
குழல் ,சந்தூர் ,எக்கோடியன் ஜாலம்.
27 எனக்கொரு மகன் பிறப்பான் – பணம் படைத்தவன் 1965 – TMS +சுசீலா – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
குழல் ,சந்தூர் ,எக்கோடியன் ஜாலம்.
28 நாணமோ இன்னும் நாணமோ – ஆயிரத்தில் ஒருவன் 1965 – TMS +சுசீலா – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலின் இடையில் ஆங்காங்கே பாடலுக்கு உயிர் கொடுக்க எக்கோடியன்.
08 கண்ணே கனியே முத்தே – ரகசியாய்ப் போலீஸ் 1965 – TMS +சுசீலா – இசை விஸ்வநாதன்
சந்தூர் ,ட்ரம்ஸ் ,எக்கோடியன் குழல்
29 உன்னைத்தானே ஏய் உன்னைத்தானே – பறக்கும் பாவை 1970 – TMS + சுசீலா – இசை விஸ்வநாதன்
30 என்னைத் தெரியுமா – குடியிருந்த கோயில் 1965 – TMS – இசை விஸ்வநாதன்
எக்கோடியன் , பியானோ ,ட்ரம்ஸ் கோரஸ்
31 ஒரு தரம் ஒரே தரம் – சுமதி என் சுந்தரி 1970 – TMS + சுசீலா – இசை விஸ்வநாதன்
சித்தார் , ட்ரம்ஸ் ,வயலின் , குழல்
32 பாவை பாவை தான் – எங்கமாமா 1970 – சுசீலா – இசை விஸ்வநாதன்
பொங்கஸ் , எக்கோடியன் ,கிட்டார் ,ட்ரம்ஸ் ,சாக்ஸ் ,ட்ரம்பட்
33 மின் மினியைக் கண்மணியாய் – Kannan என் காதலன் 1969 – TMS + ஈஸ்வரி – இசை விஸ்வநாதன்
எக்கோடியன் ,மேண்டலின் ,சந்தூர் , ட்ரம்ஸ் ,வயலின் , குழல்
34 இயற்கை என்னும் இளைய கன்னி – சாந்தி நிலையம் 1969 -SPB + சுசீலா – இசை விஸ்வநாதன்
சந்தூர் , பொங்கஸ் ,வயலின் , குழல் ,ட்ரம்பட் …சரணாத்த்திற்கு முன்னரும் எக்கோடியவ் வரும்.
35 கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம் – மேயர் மீனாடசி 1976 – SPB + சுசீலா – இசை விஸ்வநாதன்
36 மௌனம் தான் பேசியது – எதிர்காலம் 1971 – LR ஈஸ்வரி – இசை விஸ்வநாதன்
37 கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா – பச்சை விளக்கு 1964 – PBS + ஈஸ்வரி – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
38 சத்தியம் இது சத்தியம் – இது சத்தியம் 1963 – TMS – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
39 தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே – ஆலயமணி 1963 – S ஜானகி

மெல்லிசைமன்னர்களின் நாதக்கலவை எனும் விருந்தை நாம் முழுமையாக விவரிப்பதென்றால் செழுமை நிறைந்து விரிந்து பரந்திருக்கும் நதிக்கரையின் தீரத்திலிருந்து கண்ணுக்கெட்டிய தூரத்திற்கப்பால் மறைந்திருக்கும் கரைய பார்ப்பது போன்றதாகும்.

இசையில் நவீனத்தை அடையத் துடித்த மெல்லிசைமன்னர்கள் தங்கள் வேகத்தை , ஆர்வத்துடிப்பை ஆங்காங்கே விசிறியடித்துக் காட்டினாலும் ,இரண்டாயிரம் ஆண்டு செழுமை பெற்ற நமது இசையையும் அதன் அடையாளங்களையும் உதறிச் சென்றவர்களில்லை என்பதையும் நிரூபித்த வண்ணம் பெரு நதியாக நடைபோட்டார்கள்.

அந்தவகையில் வட இந்திய மரபு இசையில் பயன்படுத்தப்பட்ட வாத்தியங்களையம் பயன்படுத்தி இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கும் வண்ணம் இசைவெள்ளத்தில் தமிழ்ப்பாடல்களை ஊறவைத்தார்கள்.அந்தவகையில் சந்தூர் ,சாரங்கி வாத்தியங்களையும் பயன்படுத்தி அசத்தினார்.

05 ட்ராம்போன்

01 ஒரு ராஜ ராணியிடம் – சிவந்தமண் 1969 – TMS + சுசீலா – இசை: விஸ்வநாதன்
02 வெள்ளிக்கிண்ணம் தான் – உயர்ந்த மனிதன் 1969 – TMS + சுசீலா – இசை: விஸ்வநாதன்

06 சந்தூர் [ Santoor ]
———————————
காஸ்மீரின் தேசியவாத்தியம் சந்தூர். வீணை குடும்பத்தைச் சேர்ந்த இக்கருவி நாட்டுப்புற இசையிலும் செவ்வியலிசையிலும் பரிமளிக்கக்கூடிய தந்தி வாத்தியக்கருவி சூபி [Sufi ]இசையிலும் பாவனையில் உள்ள இசைக்கருவியாகும். இவ்விசைக்கருவியின் மூலாதார இசைக்கருவி மத்திய கிழக்கு ,குறிப்பாக ஈரான் நாட்டின் பூர்வீக இசைக்கருவி எனக் கருதப்படுகிறது.

சந்தூர் இசைக்கருவியின் ஒலியை நாளெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். துளித் துளியாக அமுதங்களைப் பொழிந்து இனம் புரியாத உணர்வுகளைக் கிளர்த்தும் இசைக்கருவி. காற்றில் சிதறாத மழைத்தாரைகளின் அணிவகுப்பை காண்பது போல மனதில் பரவசமூட்டி ரீங்காரமிட வைக்கும் இதமான ஒலியலைகளை எழுப்பவும் , காற்றில் அலைந்து நுண்ணீர்துளிகளாய் விழும் தூவானங்களை இசையில் மனக்காட்சி விரிவாய் ராகங்களின் ஆலாபனைகளில் ஏற்றி, வாசிப்பின் வேகத்தின் அளவுகளால் அதி நுண்திரட்சிகளை ஆழ்ந்தும் ,விரித்தும் பரவிப்பாய்ந்தும், பரவி சிதறும் திவலை தூவல்களை ,இசையால் மனக்கண் நிறுத்தும் வல்லமை இந்த இசைக்கருவிக்கு உண்டு.

ஹிந்துஸ்தானிய செவ்வியலிசையில் சந்தூர் இசையின் வசீகத்தை கலைஞர் சிவகுமார் சர்மாவின் வாசிப்பை மணிக்கணக்கில் மெய்மறந்து நாம் கேட்கலாம்.

விழிகளின் நுண் இமையசைப்பின் அபிநயத்தை திரையில் காண்பிக்கும் வல்லமை கொண்ட சினிமா இவ்வாத்தியத்தை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளது.பின்னணிக்காட்சிகளில் மட்டுமல்ல பாடல்களிலும் திகைக்க வைக்குமளவுக்கு பயன்படுத்தி திரை இசையமைப்பாளர்கள் வெற்றி கண்டுள்ளனர்.முன்னோடிகளான ஹிந்தி சினிமா இசையமைப்பாளர்கள் எல்லோரும் தங்கள் பாடல்களில் வியப்பு மேலோங்கும் அளவுக்கு பயன்படுத்தியிருக்கின்றனர் என்று துணிந்து கூறலாம்.

மெல்லிசைமன்னர்கள் ஒன்றாக இணைந்து இசையமைத்த காலங்களிலும் , பின்னர் விஸ்வநாதன் தனியே பிரிந்து இசையமைத்த போதும் ஏனைய வாத்தியகளுடன் ஒத்திசைவாய் நிறையவே பயன்படுத்திய இசைக்கருவி சந்தூர்.உதாரணமாக சில பாடல்கள்

01 ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் – பழனி 1963 – TMS + PBS + சீர்காழி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 கண்களும் காவடி சிந்திக்கட்டும் -எங்கவீட்டு பிள்ளை 1963 – T ஈஸ்வரி – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
03 சித்திர பூவிழி வாசலில் வந்து – இதயத்தில் நீ 1968 – ஈஸ்வரி + சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி [ + குழல் ]
04 நேற்றுவரை நீ யாரோ – வாழ்க்கைப்படகு 1962 – PBS – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி [ + எக்கோடியன் ]
05 இந்த மன்றத்தில் ஓடிவரும் – போலீஸ்காரன் மக்கள் 1963 – PBS + ஜானகி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
06 செந்தூர் முருகன் கோவிலிலே – சாந்தி 1963 – PBS + சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
07 பச்சை மரம் ஒன்று – ராமு 1966 – சுசீலா – இசை: விஸ்வநாதன்
08 முத்து சிப்பி மெல்ல மெல்ல – ராமு 1966 – சுசீலா – இசை: விஸ்வநாதன்
08 விழியே விழியே உனக்கென்ன வேலை – புதிய பூமி 1966 – TMS + சுசீலா – இசை: விஸ்வநாதன் [ட்ரம்பட்]
09 வெற்றி மீது வெற்றி வந்து – தேடி வந்த மாப்பிள்ளை 1968 – TSPB – இசை: விஸ்வநாதன்
10 கண்ணே கனியே முத்தே அருகில் வா – ரகசிய போலீஸ் 115 1966 – TMS + சுசீலா – இசை: விஸ்வநாதன் [ சந்தூர் + எக்கோடியன் ]
11 பொன் எழில் பூத்தது புது வானில் – கலங்கரை விளக்கம் 1965 – TMS + சுசீலா – இசை: விஸ்வநாதன் [+ எக்கோடியன் ]
12 பாட்டு வரும் உன்னை பார்த்து கொண்டிருந்தால் – நான் ஆணையிட்டால் 1966 – TMS + சுசீலா – இசை: விஸ்வநாதன் [ + எக்கோடியன் + கிட்டார் + குழல் ]
13 குங்கும பொட்டின் மங்களம் – குடியிருந்த கோயில் 1968 – TMS + சுசீலா – இசை: விஸ்வநாதன் [ + சாரங்கி + குழல் ]
14 சிரித்தாள் தங்கப்பதுமை – Kannan என் காதலன் 1967 – TMS + சுசீலா – இசை: விஸ்வநாதன் [ + எக்கோடியன் + கிட்டார் + குழல் ]
15 சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ – சந்திரோதயம் 1968 – TMS + சுசீலா – இசை: விஸ்வநாதன் [ + எக்கோடியன் + குழல் ]
16 நீயே தான் எனக்கு மணவாட்டி – குடியிருந்த கோயில் 1968 – TMS + சுசீலா – இசை: விஸ்வநாதன் [ + சாரங்கி + குழல் ]
17 எங்கிருந்தோ ஆசைகள் – சந்திரோதயம் 1968 – TMS + சுசீலா – இசை: விஸ்வநாதன் [ + சந்தூர் + குழல் ]

07 சாரங்கி:

இந்திய சங்கீதத்தின் மிக நுட்பமான சுரங்களை மனிதக் குரல்களை போல வெளிப்படுத்தும் முதன்மையான இசைக்கருவி வீணை ஆகும்.
ஹிந்துஸ்தானி இசையில் புகழபெற்ற தந்தி இசைக்கருவியான சாரங்கியும் மனிதக்குரலுக்கு நெருக்கமான வாத்தியமாகும். இந்த வாத்தியமும் ஈரான் ,ஆபிகானிஸ்தான் போன்ற நாடுகளின் வேர்களைக் கொண்ட வாத்தியமாகும்.

ஹிந்துஸ்தானி போன்ற செவ்வியலிசை அரங்குகள் மட்டுமல்ல ஹிந்தித் திரையிசையிலும் கணிசமானளவில் பய்னபடுத்தப்பட்டிருக்கும் ஒரு அருமையான இசைக்கருவி.

ஹிந்துஸ்தானிய இசையில் புகழபெற்ற சாரங்கி நேபாளம் ,பாகிஸ்தான் போன்ற நாடுகளின் நாட்டார் இசையிலும் பயன்படுத்தப்படும் ஒரு இசைக்கருவி ஆகும் சந்தூர் இசைக்கருவி போலவே இதன் பூர்வீகம் ஈரான் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

துயரத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, உறவுகளிலிருந்து அந்நியப்பட்டு தனது வேதனையை தானே நொந்து அனுபவிக்கும் ஒருவரின் சோக இருள் கவிந்த மனநிலையை ,அவ்வுணவர்வின் ஆழத்தை ஒரு இசைக்கருவியால் வெளிப்படுத்த முடியும் என்றால் அதற்கு மிகவும் பொருத்தமான வாத்தியம் சாரங்கி என்றால் மிகையாகாது.

ஹிந்தி திரையிசையில் பல்வேறு சூழ்நிலைக்கும் பொருத்தமாக மிக இனிமையான பாடல்களில் பயன்படுத்தி வெற்றிகண்டிருக்கின்றார்கள்.தமிழ் திரையைப் பொருத்தவரையில் 1960களில் இந்த இசைக்கருவியை அதிகமாகப் பயன்படுத்தியவர்கள் மெல்லிசைமன்னர்கள் என்று கூறலாம்.

தெளிவின்மை , மௌனம் சூழ்ந்த வார்த்தையால் வெளியிட முடியாத துயரத்தை ,மெலிதான சோகம் தழுவிய உணர்வுகளை மட்டுமல்ல பல்வேறு மனநிலைகளுக்கும் பொருத்தமாக பாடல்களில் வைத்த பெருமை மெல்லிசைமன்னர்களுக்கு உண்டு.

01 இரை போடும் மனிதருக்கே – பதிபக்தி 1959 – சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 நான் கவிஞனுமில்லை – படித்தால் மட்டும் போதுமா 1963 – TMS + PBS – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
03 ஒரு நாள் இரவில் – பணத்தோட்டம் 1963 – சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி [ + குழல் + ஜலதரங்கம் ]
04 மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – சுமைதாங்கி 1962 – PBS – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
05 ராதைக்கேற்ற கண்ணனோ – சுமைதாங்கி 1963 – ஜானகி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
06 என் அன்னை செய்த பாவம் – சுமைதாங்கி 1963 – ஜானகி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
07 நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே – பார் மக்களே பார் 1963 – TMS + சுசீலா – இசை: விஸ்வநாதன்
08 அத்தை மகனே போய் வரவா – பாத காணிக்கை 1962 – சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
09 என்னுயிர் தோழி கேளொரு சேதி – கர்ணன் 1964 – சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
10 யார் அந்த நிலவு – சாநதி 1968 – TMS – இசை: விஸ்வநாதன்
11 என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு – காவியத் தலைவி 1972 – சுசீலா – இசை: விஸ்வநாதன்

குழல்.

மெல்லிசைமன்னர்களின் இசையில் தனிச் சிறப்புடனும் அழகுடனும் பயன்படுத்தப்பட்ட மிக முக்கியமான காற்று வாத்தியங்களில் ஒன்று புல்லாங்குழல்.குழலுக்கு மயங்காத மனிதன் உண்டோ?எந்த சூழ்நிலைகளுக்கும் பயன்படக் கூடிய , தேனருவியாய் பொழிகின்ற குழலிசையை தமிழ் சினிமாவில் அவர்களது சமகால, முன்னோடி இசையமைப்பாளர்களும் மிக அற்புதமாகப் பயன்படுத்திருக்கின்றனர்.

கீழே தந்திருக்கும் பாடல்களில் குழலை பிரதானமாகப் பயன்படுத்திருப்பதையும் ,இனிமையான குழலுடன் சந்தூர் , எக்கோடியன் ,மேண்டலின் போன்ற பல இசைக்கருவிகளையும் இணைத்து தந்திருப்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.பாடலின் இயங்கு நிலைக்கும் ,உயிர்ப்புக்கும் இனிமைக்கும் பொருத்தமாக இணைத்து பாடலில் கரைத்துவிடும் மேதமை மெல்லிசைமன்னர்களின் சிறப்பம்சமாகும்.

வாத்திய கருவிகளின் பாவனை குறைந்த காலத்தில் இசையமைப்பாளர்களுக்கு உற்ற நண்பனாய் இருந்த வாத்தியம் புல்லாங்குழல் என்றால் மிகையில்லை.குழலின்றி அமையாது உலகு என்று கூறுமளவுக்கு திரையிசையில் பயன்படுத்தப்பட்ட வாத்தியம் குழல்.

01 தாழையாம் பூ முடித்து – பாகப்பிரிவினை 1960 – TMS + பி.லீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடலின் ஆரம்பத்திலேயே ஹம்மிங்குடன் ஆரம்பிக்கும் குழலிசை பாடல் முழுவதும் இழையோடும் அழகை நாம் ரசிக்கலாம்.

02 காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா – இது சத்தியம் 1963 – சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலின் உணர்வுக்கு ஏற்ப கரைந்துருக்கும் குழல் வாசிப்புடன் செனாய் வாசிப்பின் மேன்மையையும் ரசிக்கும் நாம் ஆங்காங்கே விறுவிறுப்பான குழல் விரைந்த வாசிப்பையும் , இவை ஒன்று கலந்து தேனமுதமாக வரும் இசையையும் ரசிக்காமல் இருக்கமுடியாது.

03 வா என்றது உருவம் – காத்திருந்த கண்கள் 1962 – சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
குழலின் குளுமையும் இனிமையும் இந்தப்பாடலில் கேட்கலாம்.

04 ஓடம் நதியினிலே – காத்திருந்த கண்கள் 1962 – சீர்காழி – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
உணர்ச்சிமயமான இந்தப்பாடலில் பெங்காலி மக்களின் படகு பாட்டான “பாட்டியாளி” எனப்படும் இசைப்பண்பை தரிசிக்கின்றோம்.பாடலின் இசையமைப்பும் அசாத்தியமான சங்கதிகளும் அதனைப் பாடிய பாங்கும் தன்னிகற்றற்றவை.நாயகியின் விரகதாபத்தை ஒரு ஆண் குரலில் வெளிப்படுத்தும் அனாயாசமாக பாடல்.நாயகியின் உணர்வலைகளை சீர்காழியார் தனது குரலின் இனிமையால் அசாத்தியமான சங்கதிகளை அநாசாயமாக வெளிப்படுத்தும் பங்கு வார்த்தையால் வர்ணிக்க முடியாதவை.மெல்லிசைமன்னரின் அபிமான இசையமைப்பாளரான நௌசாத் வியந்து பாராட்டிய பாடல் இது.

05 பாலும் பழமும் – பாலும் பழமும் 1961 -TMS – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
வயலின் , குழல் இசையுடன் குழைந்து ஆரம்பிக்கும் இந்தப்பாடலில் குழல் மனதை தேற்றும் மருத்துவன் போல ஆற்றுபடுத்துவதாயும் அமைக்கப்பட்டிருப்பதை கேட்கிறோம்

06 ஆறோடும் மண்ணில் எங்கும் – பழனி 1963 – TMS + சீர்காழி + BPS – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
மூவர் இணைந்து பாடும் இந்த அழகான பாடலில் குழலிசையை கச்சிதமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதை கேட்கலாம்.

07 என்னை எடுத்து தன்னைக் கொடுத்து – படகோட்டி – பாடியவர்: சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.
மனதை இதமாக வருடும் இந்தப்பாடலில் வன்மையாக ஒலிக்கும் குழலிசையையும் , அபாரமான ஹம்மிங்கையும் இணைத்து அழங்கான சங்கதிகளால் மெய்சிலிர்க்க வைக்கும் அதிசயமான இசையமைப்பை கேட்க்கிறோம்.குறிப்பாக இந்தப்பாடலில் வரும் ” வந்தாலும் வருவாண்டி ” என்ற சொற்களில் எத்தனை விதமான சங்கதிகள் வைத்து ஆச்சர்யப்படுத்துகிறார் மெல்லிசைமன்னர்.ஹம்மிங்கை வார்த்தையால் வர்ணிக்க முடியாது.

08 கட்டோடு குழலாட ஆட – பெரிய இடத்து பெண் 1963 – TMS + சுசீலா + குழு – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
குழலின் இனிமையை இந்தப்பாடலில் கேட்கலாம்.

09 செல்லக்கியே மெல்ல பேசு [ சோகம் ] – பெற்றால் தான் பிள்ளையா 1967 – சுசீலா – இசை : விஸ்வநாதன்

சித்தார்:

01 சொன்னது நீதானா – நெஞ்சில் ஓர் ஆலயம் 1963 – சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 நம்பினார் கெடுவதில்லை – பணக்காரங்க குடும்பம் 1963 – சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

நாதஸ்வரம்

01 வாராய் என தோழி வாராயோ – பாசமலர் 1961 – எல்.ஆர்.ஈஸ்வரி + குழுவினர் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 பூ முடிப்பான் இந்த பூங் குழலி – நெஞ்சிருக்கும் வரை 1966 – TMS – இசை: விஸ்வநாதன்
03 எட்டடுக்கு மாளிகையில் – பாதகாணிக்கை 1962 – சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
04 ஒளிமயமான எதிர்காலம் – பச்சை விளக்கு 1963 – TMS – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

வீணை:

01 அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்- – பஞ்சவர்ணக்கிளி 1965 – சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 மனமே முருகனின் மயில் வாகனம் — மோட்டார் சுந்தரம்பிள்ளை 1966 – ராதா ஜெயலட்சமி – இசை : விஸ்வநாதன்
03 மழைப் பொழுதின் மயக்கத்திலே – பாக்கியலடசுமி 1961 – சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

மவுத் ஓர்கன்:

01 முத்து சிப்பி மெல்ல பிறந்து வரும் – – நெஞ்சில் ஓர் ஆலயம் 1963 – சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 பிள்ளைக்குத் தந்தை ஒருவன் – பார்த்தால் பசி தீரும் 1963 – TMS – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
03 கண்ணன் வருவான் கதை சொல்லுவான் -பஞ்சவர்ணக்கிளி 1964 – சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

இவை போன்ற மரபு சார்ந்த வாத்தியங்களை மட்டுமல்ல கைத்தட்டு ஒலி, விசில் , ஜுடீலிங் ,மவுத் ஓர்கன் , ஜலதரங்கம் ,மணி ஒலிகள் என பல்வகை ஒலிகளையும் தங்கள் பாடல்களில் வைத்து படைப்பூக்கத்துடன் கலைப்படைப்பாகத் தந்து இசையில் புதுப்பித்து படிமங்களை தந்து ஆச்சர்யப்படுத்தி சென்றார்.

கைத்தட்டு ஒலி அமைந்த பாடல்கள் சில.

01 குங்குமப்பொட்டு குலுங்குதடி – இது சத்தியம் 1963 – சுசீலா + ஜானகி – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 தங்க மகள் வயிற்றில் பிஞ்சு மகன் – வாழ்க்கை படகு 1963 – சுசீலா + குழு – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
03 குங்குமப்பொட்டு குலுங்குதடி – இது சத்தியம் 1963 – சுசீலா + ஜானகி – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
04 தொட்டால் பூ மலரும் -படகோட்டி 1964 – TMS + சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
05 சிங்கார புன்னகை – மகாதேவி 1957 – பாலசரஸ்வதி தேவி +எம்.எஸ்.ராஜேஸ்வரி – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
06 ஆடவரெல்லாம் ஆடவரலாம் -கலைக்கோயில் 1962- எல்.ஆர்.ஈஸ்வரி + குழுவினர் – இசை : விஸ்வநாதன்ராமமூர்த்தி
07 சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ -ரகசிய போலீஸ் 115 1967- சுசீலா + குழுவினர் – இசை : விஸ்வநாதன்.
08 பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் -சாந்தி நிலையம் 1967- TMS + குழுவினர் – இசை : விஸ்வநாதன்.
09 கெட்டவரெல்லாம் பாடலாம் -தங்கை 1967- TMS + குழுவினர் – இசை : விஸ்வநாதன்
10 கல்யாண வளையோசை கொண்டு -ஊருக்கு உழைப்பவன் 1967- TMS + சுசீலா – இசை : விஸ்வநாதன்.
11 எங்கேயும் எப்போதும் சங்கீதம் – நினைத்தாலே இனிக்கும் 1967- SPB + ஈஸ்வரி – இசை : விஸ்வநாதன்.

விசில் சத்தத்தை பயன்படுத்தி அமைத்த பாடல்கள்.

01 வந்த நாள் முதல் – பாவமன்னிப்பு 1961- TMS – இசை : விஸ்வநாதன்ராமமூர்த்தி
02 நீரோடும் வகையிலே – பார் மக்களே பார் 1963- TMS + சுசீலா – இசை : விஸ்வநாதன்ராமமூர்த்தி
03 கேள்வி பிறந்தது அன்று – பச்சை விளக்கு 1964 – TMS – இசை : விஸ்வநாதன்ராமமூர்த்தி
04 நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா- காதலிக்க நேரமில்லை 1961- ஜேசுதாஸ் + சுசீலா + ஈஸ்வரி – இசை : விஸ்வநாதன்ராமமூர்த்தி
05 எந்தன் பருவத்தின் கேள்விக்கு – சுமைதாங்கி 1962 – BPS + ஜானகி – இசை : விஸ்வநாதன்ராமமூர்த்தி
06 நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் – சாந்தி 1966- சுசீலா – இசை : விஸ்வநாதன்
07 கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே – நான் ஆணையிட்டால் 1966- TMS – இசை : விஸ்வநாதன்

ஜலதரங்கம் மற்றும் மணி ஒலிகள்:

ஜலதரங்கம் மற்றும் , பலவிதமான மணி ஒலிகளையும் வியக்கத்தக்க முறையில் மெல்லிசைமன்னர்கள் தங்கள் காலத்தில் பயன்படுத்தி வெற்றி கண்டார்கள்.குறிப்பாக குழந்தைகள் மற்றும் தாலாட்டுப் பாடல்களில் மிக நுணுக்கமாக மணி ஒலிகளை இணைத்து பல பாடல்களை தந்திருக்கிறார்கள்.இந்த மாதிரியை வைத்துக் கொண்டு பின்னால் வந்த இசையமைப்பாளர்களும் குழந்தைகள் பாடல்களில் வைப்பதற்கான முன்மாதிரியாக அமைந்திருக்கிறது.

01 இதழ் மொட்டு விரிந்திட – பந்தபாசம் 1963 – BPS + சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 அத்தைமடி மெத்தையடி – கற்பகம் 1964- சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
03 மாலையும் இரவும் சந்திக்கும் – பாசம் 1962 – BPS + சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
04 மலர்ந்தும் மலராத – பாசமலர் 1961 – TMS + சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
05 மலர்களை போல் தங்கை – பாசமலர் 1961 – TMS – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
06 வளர்ந்த கலை மறந்து விட்டால் – காத்திருந்த கண்கள் 1962 – BPS + சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
07 கண்ணன் வருவான் கதை சொல்லுவான் – பஞ்சவர்ணக்கிளி 1964 – சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
08 அழகன் முருகனிடம் – பஞ்சவர்ணக்கிளி 1964 – சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
07 அம்மா அம்மா கவலை வேண்டாம் – பாக்கியலக்ஸ்மி 1961 – சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
08 ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை – பணத்தோட்டம் 1963 – சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
07 பிள்ளைக்குத் தந்தை ஒருவன் – பார்த்தால் பசிதீரும் 1962 – TMS – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
08 பூஜைக்கு வந்த மலரே வா – பாதகாணிக்கை 1964 – BPS + சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
09 மயங்குகிறாள் ஒரு மாது – பாசமலர் 1961 – சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
10 தங்கத்தில் ஒரு குறை இருந்தாலும் – பாகப்பிரிவினை 1961 – சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
11 முத்தான முத்தல்லவோ – நெஞ்சில் ஓர் ஆலயம் 1963 – சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
12 காலங்களில் அவள் வசந்தம் – பாவமன்னிப்பு 1961 – PBS – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
12 பச்சைமரம் ஒன்று [சோகம்] -ராமு 1966 – PBS + சுசீலா – இசை : விஸ்வநாதன்
13 முத்துச் சிப்பி மெல்ல மெல்ல -ராமு 1966 – PBS + சுசீலா – இசை : விஸ்வநாதன்
14 ஆடிவெள்ளி தேடி உன்னை -மூன்று முடிச்சு 1975 – ஜெயச்சந்திரன் – வாணி ஜெயராம் – இசை : விஸ்வநாதன்

இயற்கை ஒலிகள் மற்றும் மிமிக்கிரி ஒலிகள்:

01 போனால் போகட்டும் போடா – பாலும் பழமும் 1961 – TMS – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 எங்கிருந்தாலும் வாழ்க – நெஞ்சம் மறப்பதில்லை 1963 – ராகவன் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
03 தத்தை நெஞ்சம் முத்தத்தில் – சர்வர் சுந்தரம் 1964 – சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
04 பறக்கும் பந்து பறக்கும் – பணக்காரகுடும்பம் 1963 – TMS + சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
05 லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் – அன்பே வா 1966 – சுசீலா – இசை : விஸ்வநாதன்
06 நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் – சாந்தி 19678 – சுசீலா – இசை : விஸ்வநாதன்
07 முத்தமோ மோகமோ – பறக்கும் பாவை 1967 – TMS + சுசீலா – இசை : விஸ்வநாதன்

செனாய் , சந்தூர் ,சாரங்கி ,சித்தார் ,வீணை ,நாதஸ்வரம்,குழல்,கைத்தட்டு ,விசில் ,ஜலதரங்கம்,மணி ஒலிகள் ,பியானோ,எக்கோடியன் , ட்ரம்பட் , மியூட் ட்ரம்பட் , கிட்டார் போன்ற இசைக்கருவிகளை குறிப்பிட்டாலும் அவற்றுடன் பிரிக்கவொண்ணாத வண்ணம் அவற்றுடன் இணைத்து பல்வறு வாத்தியங்களை இணைத்து அனாயாசமாகப் பயன்படுத்திய பலவகைப்பாடல்களை பார்த்தோம்.

மேற்சொன்ன வாத்தியங்களைப் பயன்படுத்தி அமைத்த பாடல்கள் என்று மேலே தந்த பாடல்களில் மரபுசார்ந்த வாத்தியங்களை பயன்படுத்துவது மட்டுமல்ல எல்லைகளற்றபடைப்பாற்றலின் அடையாளமாக அவற்றுடன் கையில் கிடைக்கும் கருவிகளை எல்லாம் மிகையில்லாமல் துணிவுடன் பயன்படுத்தி புதுமையை பழமையை அரவணைத்து செல்லும் வண்ணம் படைத்தளித்தனர்.

பல்வகை வாத்தியங்களையும் , விதம்,விதமான ஒலிநயங்களையும் கலந்து உணர்வில் பேரலைகளை வீச வைக்கும் பாடல்களைத் தந்து தங்கள் இசைவல்லமையை 1960 களிலேயே நிரூபித்தார்கள். தமிழ் மண்ணின் சடங்கு முறையை வெளிப்படுத்தும் ஒரு பாடலில் , அந்த கணத்தில் எழும் மனிதநுண்ணுர்வு சிலிர்ப்புகளை நான்கு நிமிடங்களில் வெளிப்படுத்திய மேதமையை பாசமலர் (1961) படத்தில் இடம்பெற்ற “வாராய் என் தோழி வாராயோ ” பாடலில் காண்கிறோம.

வாத்தியங்களை அவ்வச் சூழநிலைக்கு ஏற்றவாறு கையாண்ட பக்குவத்தால் அந்த வாத்தியத்தின் சிறப்பும் அதை வாசித்த கலைஞர்களின் ஆற்றலும் பெருமை பெற்றன.எளிமையான வாத்தியங்களும் மெல்லிசைமன்னர்களின் படைப்பாற்றலால் மேன்மை பெற்றுத் திகழ்ந்தன.தனியேயும் ,ஒன்றுபட்டு ஒலிக்கும் அந்த இனிய நாத ஒன்றிசைவின் இனிமையை ,நமது உள்ளங்களை ஊடுருவிப்பாயும் இனிமையையும் நுணுகி கேட்க கேட்க இன்பமளிப்பவையாகும்.

ஒரு பாடலில் இன்ன வாத்தியம் பயன்பட்டிருக்கிறது என்று சில எடுத்துக்காட்டுகளைக் கூறினாலும் எல்லாவிதமான வாத்தியங்களும் சிறிய பங்களிப்பை இசை முழுமைக்கும் மெல்லிசைமன்னர் பயன்படுத்தியிருப்பதை நுனித்து கேட்பவர்கள் கண்டு அதிசயிக்கலாம்.இது அவரின் படைப்பாற்றலை எண்ணி திகைக்க வைக்கும் ஒரு விஷயமாகும்.

மெல்லிசைமன்னர்களின் படைப்பாற்றலின் திறமைக்கு ஈடுகொடுத்து , உயிர் கொடுத்து அதை வெளிப்படுத்தும் அற்புதமான கலைஞர்கள் கிடைத்தமை மெல்லிசைமன்னர்களின் வெற்றிக்கு மிக முக்கியகாரணமாகும்.என்னதான் இசையமைப்பாளரின் கற்பனையில் ஒரு இசைவடிவம் உருப்பெற்றாலும் சரியான உணர்ச்சி வாசிப்பின்றி அவை உருப்பெறாது.இசையமைப்பாளர்களின் இசைஜாலங்களை பிறர் உள்ளங்களில் ஏற்றி வைப்பவர்கள் திறமை வாய்ந்த வாத்தியக்கலைஞர்களே!

மெல்லிசைமன்னர்களின் இசைக்குழுவின் பங்காற்றிய இசைக்கலைஞர்கள் பலரும் அவ்வவ் வாத்தியக்கருவிகளைக் கையாளுவதில் தங்கள் மேதைமையைக் காண்பித்தார்கள் என்று அவர்களின் ஆற்றலை கண்டவர்கள் கூறுகிறார்கள்.ஏன் அவர்கள் வாசிப்பில் வெளிவந்த பாடல்களை கேட்கும் நாமும் உணர்கிறோம்.

பிலிப் [பியானோ ] , கோபாலகிருஷ்ணன் [ பொங்கஸ்,மிருந்தாங்கம் மற்றும் தாளவாத்தியங்கள் ], நியோல் கிராண்ட் [ ட்ரம்ஸ் ], நஞ்சப்பா [ குழல்], சத்தியம் [ செனாய் ] , ஷ்யாம் [வயலின்] அந்தந்த வாத்தியங்களில் மேதமைக்காட்டும் தரமிக்க இசைவாணர்களும் கிடைத்தார்கள்.இவர்களுடன் மீசை முருகேசு [ பல்வகை ஒலிகளை எழுப்பும் திறமையுள்ள தாள வைத்தியக்கலைஞர் ] ,மேண்டலின் ராஜு [ விசில்,கொன்னக்கோல் வல்லுநர் ] சதன் [ மிமிக்கிரி வல்லுநர் .நகைச்சுவை நடிகர் ] சாயிபாபா போன்றவர்களும் மிகச் சிறந்த கலைஞர்களாகத் திகழ்ந்தார்கள்.

அதுமட்டுமல்ல கர்நாடக இசையில் சுரஞானமிக்க உதவியாளர்களாக, மிகச் சிறந்த இசையமைப்பாளரான ஆர்.கோவர்த்தனம். ஜி.எஸ்.மணி போன்றோரும் பின்னாளில் இசையமைப்பாளாராய் விளங்கிய ஜி .கே.வெங்கடேஷ் , மேலைத்தேய இசையில் ஆற்றல்மிக்க ஹென்றி டானியல் , ஜோசப் கிருஷ்ணா போன்றோரின் ஆற்றலையும் தகுந்த விதத்தில் பயன்படுத்தி வெற்றிகண்டார்கள்.


[தொடரும் ]

No comments:

Post a Comment