Showing posts with label SCIENTIST. Show all posts
Showing posts with label SCIENTIST. Show all posts

Friday, 8 May 2020

ANTOINE - LAURENT DE LAVOISIER , FRENCH SCIENTIST BORN 1743 AUGUST 26 - 1794 MAY 8



ANTOINE - LAURENT DE LAVOISIER ,
FRENCH SCIENTIST  BORN 1743 AUGUST 26
 - 1794 MAY 8


இந்த நாட்டிற்கு மேதைகள், விஞ்ஞானிகள் தேவையில்லை என்று கூறி மரண தண்டனையை உறுதி செய்தார்.[15]
ஆக்சிசன், நைதரசன் ஆகிய இரண்டு வளிமங்கள் கலந்ததுதான் காற்று என்பதையும், அதேபோல் ஆக்சிசனும்,  ஐதரசனும் கலந்ததுதான் தண்ணீர் என்பதையும் ஆதாரங்களுடன் நிறுவியவர்.அந்துவான் இலவாசியே

அந்துவான் இலவாசியே (Antoine-Laurent de Lavoisier: 26 ஆகஸ்ட், 1743 – 8 மே, 1794;) ஒரு பிரான்சிய வேதியலாளர். தற்கால வேதியலின் தந்தை’ என்று போற்றப்படுபவர். ஆக்சிசனைக் கண்டறிந்தவர்;[1] ; தவறான கொள்கைகள் காரணமாக பின்தங்கிய நிலையிலிருந்த வேதியல், உயிரியல் துறைகளில் புதிய வரலாற்றை உருவாக்கியவர்களுள் அந்துவான் இலவாசியே முக்கியமான ஒருவராவார்.[2] வேதியலுக்கான கலைச்சொல் தொகுதியை உருவாக்கியவர்; மெட்ரிக் முறை எனப்படும் அளவீட்டு முறையை உருவாக்க உதவியவர்; கந்தகம் உள்ளிட்ட ஒருசில பொருட்கள் கூட்டுப்பொருளல்ல தனிமமே என மெய்ப்பித்தவர்[3]; ஆக்சிசன், நைதரசன் ஆகிய இரண்டு வளிமங்கள் கலந்ததுதான் காற்று என்பதையும், அதேபோல் ஆக்சிசனும், ஐதரசனும் கலந்ததுதான் தண்ணீர் என்பதையும் ஆதாரங்களுடன் நிறுவியவர். மனிதனும் விலங்குகளும் தாங்கள் மூச்சுவிடும் உயிர் வளியைக் கொண்டு, உடலுக்குள் கரிமப் பொருளை எரிப்பதன் மூலம் சக்தியைப் பெறுகின்றன என்று இலவாசியே கண்டறிந்து கூறினார்.[4] பொருள்களின் நிறை குறையாப் பண்பினைக் (Conservation of Matter) கண்டறிந்தவர் 1794 ஆம் ஆண்டு நடந்த பிரான்சியப் புரட்சியின் போது புரட்சியாளர் என்று குற்றஞ்சாட்டிக் கிளெட்டின் இயந்திரத்தால் கொல்லப்பட்டார் இந்த மிகச்சிறந்த அறிவியல் மேதை.

இளமைக்காலம்


அந்துவான் இலவாசியேயும் அவரது மனைவியினதும் ஓவியம் யாக்கசு-லூயீசு டேவிட்டினால் 1788 இல் வரையப்பட்டது.
இலவாசியே 1743 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 26 ஆம்தேதி பாரிசில் ஒரு செல்வக் குடும்பத்தில் பிறந்தார் .ஐந்து வயதிலேயே தனது தாயாரை இழந்தார்.[5] மாசாரின் கல்லூரியில் 1754 முதல் 1761 வரை வேதியல், தாவரவியலும், வானவியலும், கணிதமும் பயின்றார். கல்வியில் சிறந்து விளங்கிய அவர் தனது தந்தையின் வழியில் சட்டத்துறையில் பட்டம் பெற்றார். எனினும் அவர் சட்டம் பழகவில்லை லவாய்சியருக்கு ஆராய்ட்சிகள் செய்வதிலேயே அதிக ஆர்வம் இருந்தது. அதிலும் குறிப்பாக வேதியியலில் அதிக ஆர்வம் காட்டினார். தனது 25 ஆம் வயதில் பிரான்சிய அறிவியல் கழகத்தின் உறுப்பினரானார். 1769 இல், அவர் பிரான்சின் முதல் புவியியல் வரைபடத்தை உருவாக்குவதில் பங்காற்றினார்..[6]


1771 ல், தனது 28 ஆவது வயதில், 13-வயதான மேரி-அன்னே என்பவரை மனந்துகொண்டார். காலப்போக்கில் அவர் தனது கணவருக்கு பல வகையிலும் உறுதுணையாக இருந்தார். இரிச்சர்டு கிர்வன் மற்றும் சோசப்பு பிரீசிட்லி ஆகியோருடைய ஆங்கில கட்டுரைகள், ஆராய்ச்சிகளை பிரான்சிய மொழியில் மொழிபெயர்த்தார். தனது கணவர் மற்றும் அவரது கூட்டாளிகளுக்காக மேரி பல ஆய்வக துணைக்கருவிகளை வடிவமைத்துள்ளார். இலவாசியே எழுதிவைத்த நிணைவுக்குறிப்புகளை இவர் திருத்தி வெளியிட்டுள்ளார். இதில் கூறப்பட்ட வேதியல் தொடர்பான கருத்துகள் இன்றும் பல்வேறு அறிவியல் அறிஞர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது.[7]

1766 ஆம் ஆண்டு பாரிசின் தெருக்களில் விளக்குகளைப் பொருத்த வேண்டும் என்று இலவாசியே கருத்துரைத்தார். அதற்காக அவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. வெடிகுண்டு தூள் அதிகாரியாக அவர் பணியாற்றியபோது வெடித்தல் பற்றியும் எரியும் தன்மை பற்றியும் நிறைய ஆராய்ச்சிகள் செய்தார். ஓர் உலோகத்தை எரித்தால் அதிலிருந்து கிடைக்கும் சாம்பலின் எடை அந்த உலோகத்தின் ஆரம்ப எடையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்பதை லவாய்சியர் சோதனைகள் மூலம் மெய்ப்பித்துக் காட்டினார். இதேபோன்ற இன்னும் பல முக்கிய கண்டுபிடிப்புகளை அவர் செய்தார். அந்தக் காலகட்டத்தில் இயற்பியல், கணிதம், வானவியல் போன்ற அறிவியல் துறைகள் கண்டிருந்த வளர்ச்சியை வேதியியல் கண்டிருக்கவில்லை, அது பெருமளவு பின்தங்கியிருந்தது.

வேதியல் கண்டுபிடிப்புகள்

அந்துவான் இலவாசியேவின் புகழ்பெற்ற புளோச்சிசிட்டான் (phlogiston) ஆய்வு. 1780-களில் மாரி-ஆன் பவுலிசே (இலவாசியேவின் மனைவி) உருவாக்கிய படம் (அடிப்படை வேதியியல் நூல் (Traité élémentaire de chimie) என்பதில் இருந்து பெற்றது)

இலாவாசியேவின் எழுத்தை 1840-களில் சப்பான் மொழியில் மொழி பெயர்த்தல்
அந்தக் காலகட்டத்தில் வேதியியலார் பல்வேறு தனிப்பட்ட உண்மைகளைக் கண்டு கூறியிருந்தனர். அவையெல்லாம் சிதறி ஒருங்கிணைக்கப்படாத உண்மைகளாக இருந்தன. மேலும் பல தவறான கருத்துகளும் நிலவின. காட்டாக காற்றும் தண்ணீரும் கூட்டுப்பொருள்கள் (compounds) என்பது பற்றிய கருத்து. லவாய்சியரின் வருகைக்கு முன் காற்றும் தண்ணீரும் தனிமங்கள் என்று தவறாகக் கருதப்பட்டது. மேலும் நெருப்பின் தன்மைப் பற்றியும் மிகத் தவறான கருத்து நிலவியது. எல்லா எரியக்கூடியப் பொருள்களும் 'புளோஜிஸ்டான்' எனப்படும் பொருளை வெளியேற்றுவதாக அக்கால வேதியலாளர் நம்பினர். இந்த தவறான கருத்துக்களையெல்லாம் மாற்றி அமைத்தார் இலவாசியே. 'புளோஜிஸ்டான்' என்று எந்தப்பொருளும் கிடையாது என்பதை முதலில் சோதனைகள் மூலம் நிறுவினார். வேதியல் கலப்பினால்தான் நெருப்பு எரிகிறது என்பதை இலவாசியே கண்டு சொன்னார்.[8]

சோசப்பு பிரீசிட்லி கண்டறிந்து தனிமைப்படுத்திய வளிமத்துக்கு ஆக்சிசன் என்ற பெயரிட்டார் இலவாசியே. நெருப்பு எரிவதற்கு காற்றில் உள்ள ஆக்சிசன் தான் காரணம் எனஇலவாசியே கண்டறிந்தார். ஆக்சிசன், நைதரசன் ஆகிய இரண்டு வாயுக்கள் கலந்ததுதான் காற்று என்பதையும், அதேபோல் ஆக்சிசனும், ஐதரசனும் கலந்ததுதான் தண்ணீர் என்பதையும் ஆதாரங்களுடன் நிறுவினார். ஆனால் இலவாசியே கண்டு சொல்லும்வரை அவை அறியப்படாமல் இருந்தன. புதிதாக கண்டுபிடிக்கப்படும் எதனையும் அறிவியல் உலகம் அவ்வளவு விரைவாக ஏற்றுக்கொண்டதில்லை. இலவாசியேவின் கண்டுடிப்புகளும் அதற்கு விதிவிலக்காக இல்லை. இலவாசியே தனது கண்டுபிடிப்புகளை தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டியும் அப்போது புகழ்பெற்றிருந்த வேதியியலாளர்கள் அவரது கருத்துக்களை ஏற்க மறுத்தனர். ஆனால் தான் உண்மை என்று நம்பியவற்றை எடுத்துக்கூற லவாய்சியர் தயங்கியதில்லை.[9]

நிறை மாறாமை

இலவாசியேவின் சிலை. இடம் பாரிசில் உள்ள ஒட்டேல் டி வீல் (Hôtel de Ville, Paris)
1781 வாக்கில் இலவாசியேவின் மனைவியான மாரி-ஆன் இராபர்ட் பாய்லேயின் ஒரு கட்டுரையை பிரான்சிய மொழிக்குப் பெயர்த்தார். அக்கட்டுரையில் ஒரு சோதனை பற்றிய முடிவுகளை பாய்லே குறித்து வைத்திருந்தார். அதாவது இரும்புத் தகடைச் சூடாக்கும் போது அதன் எடையில் மாற்றம் ஏற்படுவதைக் குறித்திருந்தார். மற்ற அறிவியலாளர்களைப் போலவே பாய்லேயும் அந்த வேதியியல் ஆராய்ச்சியின் போது அதிகப்படியான எடை உருவானதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இலவாசியேவுக்கு அதை அப்படியே நம்புவதில் விருப்பமில்லை. சரியான முறையில் அனைத்தையும் அளக்கவில்லை, அதிலும் குறிப்பாக பொருளின் எடையை மட்டுமல்லாது சுற்றுப்புறத்தைப் பற்றியும் துல்லியமாக அளக்க வேண்டும். அவ்வாறு பாய்லே செய்திருக்க மாட்டார் என்று சந்தேகப்பட்டார். அதனைச் சரிபார்க்க, பாய்லேயின் அந்தச் சோதனையைத் தானும் செய்து விட முடிவுசெய்தார்.

முதலில் ஒரு சிறு தகட்டை எடுத்த ஆண்டனி அதை மிகத் துல்லியமாகத் தன் தராசில் வைத்து எடையைக் கண்டுபிடித்துக் குறித்துக் கொண்டார். அதன் பின்னர் அத்தகட்டை வெப்பத்தைத் தாங்கும்படி வடிவமைக்கப்பட்ட ஒரு கண்ணாடி குடுவைக்குள் வைத்து அதன் வாயை இறுக அடைத்தார். இப்போது அந்தத் தகட்டோடு சேர்த்துக் குடுவையின் எடையையும் குறித்துக் கொண்டார். இப்போது அந்தக் குடுவையைச் சூடாக்க ஆரம்பித்தார். சூடு அதிகமாகும் போது அவர் உள்ளே வைத்த இரும்புத் தகட்டின் மேல் சாம்பல் நிறத்தில் ஒரு அடுக்கு படியக் கண்டார். அதன் பின்னர் சூடாக்குவதை நிறுத்தி விட்டுக் குடுவையைக் குளிர வைத்தார். மீண்டும் குடுவையை எடை போட்டார். குடுவையின் எடையில் எந்த மாற்றமும் இல்லை இப்போது குடுவையை மெல்லத் திறந்ததும் காற்று வெற்றிடத்தை நிரப்புவதைப் போல் வேகமாக உள்ளே நுழைந்தது. இப்போது தகட்டை மீண்டும் எடுத்து எடையைப் போட்டார் ஆண்டனி. தகட்டின் எடை 2 கிராம் அதிகரித்திருப்பதைக் கண்டறிந்தார். பாய்லே சொன்னது போலவே தகட்டின் எடை அதிகரித்திருந்தது.

குடுவையின் மொத்த எடை ஆய்வுக்கு முன்னும் பின்னும் மாறாததால் தகட்டுக்கு அதிகப்படியான எடை குடுவைக்கு உள்ளே இருந்த காற்றினால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ஐயப்பட்டார். அதனால் தான் காற்று வெற்றிடத்தை நிரப்புவதற்கு வேகமாக நுழைந்திருக்க வேண்டும் என்று அறிந்தார். தகடு சூடேறும் போது காற்றுடன் வினைபுரிந்து சாம்பல் நிற அடுக்கு உருவாகி இருக்கின்றது என்று கண்டறிந்தார். இப்போது சற்றுப் பெரிய தகட்டை எடுத்துச் சூடாக்கி அதனை எடை போட்டார். அதே இரண்டு கிராம் தான் அதிகரித்திருந்தது! எத்தனை பெரிய தகடைச் சூடாக்கினாலும் இரண்டு கிராம் மட்டுமே அதிகரித்தது. அதுவே பெரிய குடுவையில் வைத்தால் இன்னும் கொஞ்சம் அதிக எடை அதிகரித்தது. ஆக, குடுவைக்குள் இருக்கும் காற்றின் அளவைப் பொறுத்தே தகடின் எடையில் மாற்றம்
உருவாவதைக் கண்டறிந்தார். அதிலும், குடுவைக்குள் இருக்கும் காற்று அதிகரிக்க அதிகரிக்க, அதிகமான எடை அளவில் 20 சதவீதம் மட்டுமே தகட்டுடன் வினைபுரிந்து அதன் எடை அதிகரிக்க வகை செய்தது. சுற்றுப்புறக் காற்றில் 20 சதவீதக் காற்று மட்டுமே தகட்டை வினைபுரியச் செய்ய வைக்க வல்லது என்று கண்டறிந்தார். இந்த 20 சதவீதக் காற்று தான் 1774 இல் பிரீசிட்லி கண்டறிந்த சுத்தக் காற்று என்று உணர்ந்து கொண்ட லவாய்சியர். அதற்கு ஆக்சிசன் என்று பெயரிட்டு அழைத்தார். அத்தோடு அதை ஆண்டனி விடவில்லை. மேலும் பல ஆராய்ச்சிகளைச் செய்தார். பல்வேறு வேதி வினைகளின் போது நிகழ்வதை அளந்து பார்த்து மிக முக்கியமான ஒன்றைக் கண்டறிந்தார்.

மொத்தமாகப் பொருளின் நிறை எப்போதும் அழிவதில்லை! அதை யாரும் அழிக்க முடியாது வேதி வினைகளின் போது பொருளின் நிறையானது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லலாம், அல்லது ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளுக்குச் செல்லலாம். ஆனால் மொத்த நிறை எப்போதும் மாறுவதில்லை என்று உலகுக்கு வெளிக்காட்டினார். எந்த ஓர் ஆராய்ச்சியின் போதும் நிறை எங்கே சென்றது என்பதையும் குறித்து வைத்திருத்தல் அவசியம் என்றும் வலியுறுத்தினார். தான் கண்டறிந்த இம்முடிவுகளை 1789 இல் அவர் வேதியியல் புத்தகத்தில் வெளியிடும் வரை கமுக்கமாகவே (இரகசியமாகவே) வைத்திருந்தார்.

வேதியல் கலைச்சொற்களின் பட்டியல்
1789 ஆம் ஆண்டில் இலவாசியே Elements of Chemistry என்ற மிகச்சிறந்த பாட நூலை எழுதி வெளியிட்டார். தற்கால வேதியியலுக்கு அடிப்படையாக விளங்கும் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அந்த பாட நூலில் ஆதாரங்களுடன் விளக்கினார்.[2][10]


இலவாசியே 1770 -களில் மூச்சுவிடுதல் பற்றிய ஆய்வுகள் நடத்திக்கொண்டிருக்கும் காட்சிப்படம்
அதனை படித்த இளைய வேதியியலாளர் இலவாசியேவின் கருத்துக்களை ஏற்க தொடங்கினர். தனிமங்கள் என்று தான் கருதிய பொருட்களின் பட்டியலையும் அந்த பாட நூலில் இணைத்திருந்தார். ஒருசில தவறுகள் நீங்கலாக இலவாசியேகண்டு சொன்ன பெரும்பாலான வேதிப்பொருட்கள் இன்றைய தற்கால வேதியியலின் பொருட்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. லவாய்சியர் அடுத்து வேதியியலுக்கான கலைச்சொல் தொகுதியை நன்கு திட்டமிட்டு உருவாக்கினார். அவர் உருவாக்கி தந்த அந்த கலைச்சொல் தொகுதிதான் வேதியலுக்கு ஓர் ஒருங்கிணைந்த அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

உலகம் முழுவதிலும் உள்ள வேதியியலாளர்கள் ஒரே மாதிரியான கலைச்சொற்களை பயன்படுத்த தொடங்கினார்கள். அதனால் அவர்களால் தங்களது கண்டுபிடிப்புகளை ஒருவொருக்கொருவர் பரிமாறிக்கொள்ள முடிந்தது. வேதியியல் துறையும் விரைவாக வளர்ச்சியடையத் தொடங்கியது. மற்ற துறைகளிலும் தனது பங்களிப்பை செய்திருக்கிறார் இலவாசியே.

உடலியல்
உடலியலில் அவர் ஒரு நுட்பமான உண்மையை கண்டுபிடித்துச் சொன்னார். நாம் மூச்சு விடும் செயல் மெதுவாக எரியும் செயலுக்கு சமமானது என்பதுதான் அந்த உண்மை. மனிதனும் விலங்குகளும் தாங்கள் சுவாசிக்கும் பிராண வாயுவைக் கொண்டு உடலுக்குள் கரிமப் பொருளை எரிப்பதன் மூலம் சக்தியைப் பெறுகின்றன என்று இலவாசியேகண்டறிந்து கூறினார். முக்கியத்துவம் வாய்ந்த அந்த கண்டுபிடிப்பு உடலில் இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்த வில்லியம் ஹார்வியின் கண்டுபிடிப்புக்கு சமமானது என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.[11]

பணிகள்
பிரான்ஸ் முழுவதும் எடை மற்றும் அளவுகளை கணக்கிடும் முறையை ஒருங்கிணைக்கும் பணிக்குழு அமைக்கப்பட்டபோது அதில் இலவாசியே முக்கிய உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார். அந்த பணிக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில்தான் பிரான்ஸில் மெட்ரிக் அளவுமுறை நடப்பில் வந்தது. சுமார் இருபது ஆண்டுகள் அரசாங்கத்துறையில் விஞ்ஞானியாக பணியாற்றினார் லவாய்ஸியர். பொதுச்சேவையிலும் ஈடுபட்டார். பிரெஞ்சு ராயல் அறிவியல் கழகத்தில் முக்கிய உறுப்பினராக இருந்தார். பர்ம் ஜெனரல் என்ற அமைப்பின் முக்கிய பொறுப்பாளாராகப் பணியாற்றியதுபோது அந்த அமைப்பின் வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டார். 1766 ஆம் ஆண்டு பாரிஸின் தெருக்களில் விளக்குகளைப் பொருத்த வேண்டும் என்று இலவாசியே கருத்துரைத்தார். அதற்காக அவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. வெடிகுண்டு தூள் அதிகாரியாக அவர் பணியாற்றியபோது வெடித்தல் பற்றியும் எரியும் தன்மை பற்றியும் நிறைய ஆராய்ச்சிகள் செய்தார். ஓர் உலோகத்தை எரித்தால் அதிலிருந்து கிடைக்கும் சாம்பலின் எடை அந்த உலோகத்தின் ஆரம்ப எடையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்பதை லவாய்ஸியர் சோதனைகள் மூலம் மெய்ப்பித்துக் காட்டினார். இதேபோன்ற இன்னும் பல முக்கிய கண்டுபிடிப்புகளை அவர் செய்தார். அந்தக் காலகட்டத்தில் இயற்பியல், கணிதம், வானவியல் போன்ற அறிவியல் துறைகள் கண்டிருந்த வளர்ச்சியை இரசாயனவியல் கண்டிருக்கவில்லை, அது பெருமளவு பின்தங்கியிருந்தது.

பிரெஞ்சுப் புரட்சியும் இறுதிக் காலமும்
1794 ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சி நடப்பிலிருந்த காலகட்டம். அப்போது பிரான்சின் ஆட்சிப் பொறுப்பிலிருந்த புரட்சி அரசாங்கம் பர்ம் ஜெனரல் அமைப்பைச் சேர்ந்தவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தொடங்கியது.மொத்தம் 28 பேரை கைது செய்தது. முந்தைய அரசாங்கத்தோடு அரசியல் தொடர்புடையவர்கள் என்பதும், புரட்சிக்கு எதிரானவர்கள் என்பதும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. ஒரே நாளில் அதாவது 1794 ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி அந்த 28 பேரும் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் என தீர்ப்பளித்து அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.[12] அதே தினம் அந்த 28 பேரின் தலையும் கிளெட்டின் எனப்படும் வெட்டுக் கருவியால் துண்டிக்கப்பட்டது. உலகில் புரட்சி நிகழ்ந்தபோதெல்லாம் இதுபோன்ற அநியாயமான மரணங்களை வரலாறு சந்தித்திருக்கிறது. ஆனால் அன்றைய தினம் நிகழ்ந்த அந்தச் சம்பவம் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக அமைந்துவிட்டது. காரணம் கொல்லப்பட்ட அந்த 28 பேரில் உலகம் இதுவரை கண்டிருக்கும் மிகப்பெரிய அறிவியல் மேதைகளில் ஒருவரான இலவாசியேவும் இருந்தார்.[13][14] இலவாசியே நாட்டிற்கும், அறிவியலுக்கும் ஆற்றியிருக்கும் அரும்பங்கை எடுத்துக்கூறி அவரை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டபோது நீதிபதி; இந்த நாட்டிற்கு மேதைகள், விஞ்ஞானிகள் தேவையில்லை என்று கூறி மரண தண்டனையை உறுதி செய்தார்.[15]

Saturday, 18 April 2020

ALBERT EINSTEIN ,SCIENTIST BORN 1879 MARCH 14 - 1955 APRIL 18




ALBERT EINSTEIN ,SCIENTIST 
BORN 1879 MARCH 14 - 1955 APRIL 18


ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein, மார்ச் 14, 1879 – ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999 ல், புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்), "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.

வாழ்க்கைக் குறிப்பு
இளமை, கல்லூரி
ஐன்ஸ்டைன் ஜெர்மனியில், வுர்ட்டெம்பர்க் இலுள்ள உல்ம் என்னுமிடத்தில், 1879 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார், ஹேர்மன் ஐன்ஸ்டீன், பிற்காலத்தில் ஒரு மின்வேதியியல்
(electrochemical) சார்ந்த தொழில் நிலையமொன்றை நடத்திவந்தார். தாயார் போலின் கோச். இவர் ஒரு கத்தோலிக்க ஆரம்பப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். அத்துடன் தாயாரின் வற்புறுத்தல் காரணமாக இளமையில் வயலினும் கற்றுவந்தார். இவர் ஐந்து வயதாக இருந்தபோது, இவரது தந்தையார் இவருக்கு ஒரு சட்டைப்பையில் வைக்கக்கூடிய திசையறி கருவியொன்றைக் காட்டினார். அந்த வயதிலேயே அவர் ஒன்றுமற்ற வெளியில் ஏதோ ஒன்று காந்த ஊசியில் தாக்கம் ஏற்படுத்துவதைப் புரிந்துகொண்டார். அவர் மாதிரியுருக்களையும், இயந்திரக் கருவிகளையும், பொழுதுபோக்காகச் செய்துவந்தார். எனினும், சிறுவனாக இருந்தபோது இவருக்கு மிக மெதுவாகவே கற்கமுடிந்தது எனச் சிலர் கூறுகிறார்கள். இவர் தனது 12 ஆவது அகவையிலேயே கணிதம் படிக்க ஆரம்பித்தார். இவருடைய உறவினரிருவர் அறிவியல், கணிதம் தொடர்பான நூல்களையும், ஆலோசனைகளையும் கொடுத்து, அவரை ஊக்குவித்தார்களாம்.

இவரது தந்தையாருடைய தொழிலில் நட்டம் ஏற்பட்டதனால், 1894 ல், அவரது குடும்பம் மியூனிக்கிலிருந்து, இத்தாலியிலுள்ள மிலான் நகரையடுத்துள்ள பேவியா என்னுமிடத்துக்கு, இடம் பெயர்ந்தது. ஆனால் அல்பர்ட், மியூனிக்கிலேயே பாடசாலைப் படிப்பை முடிப்பதற்காகத் தங்கியிருந்தார். பாடசாலையில் ஒரு தவணையை முடித்துக்கொண்டு குடும்பத்துடன் இணைந்துகொள்ளப் பேவியா சென்றார். பாடசாலைப் படிப்பை முடிப்பதற்காக ஐன்ஸ்டீன் சுவிட்சர்லாந்துக்கு அனுப்பப்பட்டார். 1896ல் பாடசாலைப் படிப்பை முடித்துக்கொண்டு, சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரிலுள்ள சுவிஸ் கூட்டமைப்புப் பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இந்தச் சமயத்தில் அவர் தனது ஜெர்மனி நாட்டு குடியுரிமையை விட்டு, நாடற்றவரானார். 1898ல் மிலேவா மாரிக் என்னும் உடன்கற்றுவந்த செர்பிய பெண்ணொருவரைக் கண்டு காதல் கொண்டார். 1900 இல், சுவிஸ் கூட்டமைப்புப் பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் டிப்ளோமாவைப் பெற்றுக்கொண்டார். 1901 இல், இவர் சுவிற்சர்லாந்தின் குடியுரிமையைப் பெற்றார். இவருக்கு, மிலேவாமூலம், ஒரு மகள் 1902ல் பிறந்தார்.

வேலையும், முனைவர் பட்டமும்

1905ல் ஐன்ஸ்டைன்

(காப்புரிமை அலுவலகத்தில் பணிபுரிந்த பொழுது)
படிப்பு முடிந்ததும் இவருக்குக் கற்பித்தல் வேலையெதுவும் கிடைக்கவில்லை. இவருடன் படித்த ஒருவரின் தந்தையார் 1902 ல், சுவிஸ் காப்புரிமை அலுவலகத்தில், தொழில்நுட்ப உதவிப் பரிசோதகராக வேலை கிடைத்தது. அங்கே கருவிகளைப் பற்றி விளங்கிக் கொள்வதற்கு இயற்பியல் அறிவு பணியாளர் ஒருவர் தேவைப்பட்டது, அங்கே கருவிகளுக்கான காப்புரிம விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதே அவரது வேலை.

பிரௌனியன் இயக்கம்
முதன்மைக் கட்டுரை: பிரௌனியன் இயக்கம்
1905 இல் வெளிவந்த அவரது முதலாவது கட்டுரையான "நிலையான திரவத்தில் தொங்கும் சிறிய துணிக்கைகளின் வெப்ப மூலக்கூற்றுக் கொள்கையினால் வேண்டப்படும் இயக்கத்தில்" அவரது பிரௌனியன் இயக்கம் தொடர்பான ஆராய்ச்சியை விவரித்தது. அப்போது சர்ச்சைக்குள்ளாகியிருந்த திரவ இயக்கவியலைப் பாவித்து, முதன் முதலில் அவதானிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போதும் கூட திருப்தியான விளக்கம் கொடுக்கப்படாத இந்த பிரௌனியன் இயக்கமானது அணுக்கள் இருப்பதற்கான அனுமான ரீதியான ஆதாரமாகக் கொள்ளப்படலாம் என இக்கட்டுரை நிறுவியது.அத்துடன் அப்போது சர்ச்சையில் இருந்த இன்னொரு விடயமான புள்ளிவிவர எந்திரவியலையும் (statistical mechanics) இது தெளிவுபடுத்தியது.

இக்கட்டுரை வெளிவரும் முன் அணுக்கள் என்பது ஒரு பயன்பாட்டு கோட்பாடாக அங்கீகரிக்கபட்டிருந்தாலும் கூட, அணுக்களின் இருக்கை தொடர்பாக இயற்பியலாளர்களுக்கும் வேதியியலாளர்களுக்கும் இடையில் சூடான விவாதங்கள் நடைபெற்று வந்தன. அணுக்கொள்கை தொடர்பான ஐன்ஸ்டீனின் புள்ளிவிபரம் ரீதியான விளக்கம், சாதாரண நுணுக்குக்காட்டியினூடாக நோக்குவதன் மூலம் அணுக்களை எண்ணும் வழியினைப் பரிசோதனையாளர்களுக்கு வழங்கியது. அணுவுக்கெதிரான கொள்கையை வில்கெல்ம் ஒஸ்ட்வால்ட் என்பவர் கொண்டிருந்தார், இவர் ஐன்ஸ்டீனின் பிரெளணியனின் இயக்கம் தொடர்பான முழுமையான விளக்கம் காரணமாகத்தான், தான் அணு தொடர்பாக நம்புதலைப் பெற்றிருந்தார் எனப் பின்னாளில் அர்னால்ட் சொமர்பெல்ட் என்பவரிடம் கூறியிருந்தார்.

ஒளிமின் விளைவு
முதன்மைக் கட்டுரை: ஒளிமின் விளைவு
ஒளியின் உற்பத்தி மற்றும் மாற்றீடு தொடர்பான ஓர் ஆய்வு ரீதியான நோக்கம்" ("Über einen die Erzeugung und Verwandlung des Lichtes betreffenden heuristischen Gesichtspunkt") என்கின்ற அவரது இரண்டாவது ஆய்வுக்கட்டுரையானது ஒளிச்சக்திச் சொட்டு (Light quanta) (இப்போது போட்டோன் (Photon) என அழைக்கப்படுகிறது) என்ற கருதுகோளினை முன்வைத்ததுடன் இது எவ்வாறு ஒளிமின் விளைவு போன்ற விடயங்களை விளக்க பயன்படுத்தப்படலாம் எனவும் விவரித்தது. இச்சக்தி சொட்டுக் கருதுகோளானது, ஒளிச் சக்தியானது ஒரு குறித்த அளவுடைய (தொடர்ச்சியற்ற) சக்திச் சொட்டுக்களாகவே (quanta) உறிஞ்சப்படவோ காலப்படவோ முடியும் எனக் கருதும் போது, மாக்ஸ் பிளாங்க்கினால் முன்வைக்கப்பட்ட கரும்பொருட் கதிர்வீச்சு விதியினை (law of black-body radiation) வலுப்படுத்தியது. ஓளியானது உண்மையில் தனித்தனி சக்திப் பொட்டலங்களாலேயே (Packets) உருவாக்கப்பட்டது எனக் கருதுவதன் மூலம், ஐன்ஸ்டீனினால் மர்மமாகவிருந்த ஒளிமின் விளைவை விளக்க முடிந்தது. ஒளியின் இச் சக்திச் சொட்டுக் கருதுகோளானது, ஜேம்ஸ் மாக்ஸ்வெல்லின் மின் காந்த நடத்தைக்கான சமன்பாடுகளினால் வழிநடத்தப்படும் ஒளியின் அலைக்கொள்கையோடு முரண்பட்டதுடன், பெளதிகத் தொகுதிகளிலுள்ள சக்தியானது மேலும் மேலும் முடிவற்ற பகுதிகளாகப் பிரிக்கப்பட முடியும் (infinite divisibility of energy) என்ற கருத்துடனும் பொதுப்படையாக முரண்பட்டது. ஒளிமின் விளைவுக்கான ஐன்ஸ்டீனின் சமன்பாடுகள் மிகச் சரியானவை என பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்ட பின்னரும் கூட, அவரது விளக்கமானது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனினும், 1921 இல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டபோது ஒளி மின்னியலில் அவருடைய உழைப்பு வியந்துரைக்கப்பட்ட பின்னரே பெரும்பாலான பெளதீகவியலாளர்கள் அவருடைய சமன்பாடு hf = Φ + Ek சரியெனவும் ஒளிச் சொட்டு சாத்தியமெனவும் ஏற்றுக்கொண்டனர் (எண்ணத்தலைப்பட்டனர்).

சக்திச் சொட்டுப் பொறிமுறையினைத் தோற்றுவித்தவர்களால் அடிப்படைத் தத்துவமாகப் பயன்படுத்தப்பட்ட கருதுகோளான ஒளியின் அலைத்-துகள் இரட்டைத்தன்மை (wave-particle duality), அதாவது பெளதிகத் தொகுதிகள் அலைத்தன்மை, துகள் தன்மை ஆகிய இரு வேறுபட்ட இயல்புகளையும் காட்டவல்லவை என்ற கருத்தினைச் சக்திச் சொட்டுக் கொள்கை வலியுறுத்தியது. சக்திச் சொட்டுப் பொறிமுறை விருத்தியடைந்த பின்னரே ஒளி மின் விளைவு தொடர்பான முழுமையான தெளிவு பெறப்பட்டது.

சிறப்புத் தொடர்பியல்
முதன்மைக் கட்டுரை: சிறப்புச் சார்புக் கோட்பாடு
ஐன்ஸ்டைனின் மூன்றாவது ஆய்வுக்கட்டுரையான, "இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல்" ("Zur Elektrodynamik bewegter Körper") என்பது 1905 ஜூன் 30 இல் வெளிவந்தது. இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருந்த காலத்தில் ஐன்ஸ்டீன் மிலேவாவுக்கு "சார்பு இயக்கத்தில் எமது உழைப்பு" என்பது பற்றி கடிதம் எழுதியுள்ளமையானது, மிலேவாவும் இவ் ஆய்வில் பங்கு பெற்றிருந்தாரா எனச் சிலரை வினவ இடமளிக்கிறது. இக்கட்டுரையானது நேரம், தூரம், திணிவு மற்றும் சக்தி தொடர்பான விசேட தொடர்புக் கொள்கையினை அறிமுகப்படுத்தியதுடன் மேக்ஸ்வெலின்மின்காந்தவியலுடன் பொருந்துவதாயும் புவியீர்ப்பு விசையைத் தவிர்ப்பதாயும் இருந்தது.

ஏனைய சில தெரிந்த அலைகளைப்போன்றல்லாது, ஒளி அலை பயணம் செய்வதற்கு நீர், காற்று போன்ற ஓர் ஊடகம் அவசியமில்லை என்பதைக் காட்டிய மைக்கல்சன்-மோர்லி பரிசோதனையினால் (Michelson-Morley experiment) உருவான குழப்பத்தை சிறப்பு சார்பியல் தீர்த்து வைத்தது. இதன் மூலம் ஒளியின் வேகமானது மாறாதது, அவதானியின் இயக்கத்தில் தங்கியது அல்ல என்பது நிரூபணமாயிற்று. நியூட்டனின் புராதனப் பொறிமுறையின் (Newtonian classical mechanics) கீழ் இது சாத்தியமற்றதாகவிருந்தது.

இயங்கும் பொருட்கள் அவற்றின் இயக்கத்திசையில் நெருக்கப்பட்டிருக்குமாயின் மைக்கல்சன்-மோர்லி முடிவு பயன்படுத்தப்பட முடியும் என்பதை 1894 இல் ஏற்கனவே ஜோர்ஜ் பிற்சரால்ட் (George Fitzgerald) என்பவர் ஊகித்திருந்தார். உண்மையில் ஐன்ஸ்டீனின் இவ் ஆய்வுக்கட்டுரையின் சில முக்கியமான சமன்பாடுகளான லோறன்ஸ் மாற்றீடுகள் (Lorentz transforms), 1903 இல் போர்த்துக்கீசிய இயற்பியலாளரான ஹென்ட்றிக் லோரன்ட்ஸ் (Hendrik Lorentz) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டவை என்பதுடன் அவை பிற்சரால்டினுடய ஊகத்தினைக் கணித வடிவில் கூறின. ஆனாலும் இக் கேத்திரகணித விசித்திரத்திற்குரிய காரணங்களை ஐன்ஸ்டீன் தெரியப்படுத்தினார்.

நிறை-ஆற்றல் சமன்மை விதி
முதன்மைக் கட்டுரை: ஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு
ஐன்ஸ்டைனின் மிக புகழ்பெற்ற சமன்பாடான E=mc2 சிறப்பு சார்பு கொள்கையின் மூலம் தருவிக்கப்பட்டதே ஆகும். இது நிறை-ஆற்றல் சமன்மையை பற்றி விளக்குகிறது. இது அணுக்கரு வினைகளின் செயல்பாடுகளை பற்றியும்,விண்வெளியில் உள்ள ஆற்றல் எவ்வாறு நிறையாக மாறுகிறது, நிறை எங்கே போகிறது என்பதையும் விளக்குகிறது. மேலும், இச்சார்பியல் கொள்கையின் மூலம் கால-வெளி வரைபடத்தை வரைய ஏதுவாகிறது. இது காலப் பயணம் போன்ற சுவாரசியமான கருத்துகளுக்கு அடிகோலுகிறது.






நவீன இயற்பியலின் தலை சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை பற்றியும் அவருடைய உலகப்புகழ் பெற்ற சமன்பாடான E=mc2 பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கலாம்.

இந்த சமன்பாட்டின் படி ஒரு ரூபாய் நாணயத்தின் மொத்த நிறையையும், திட, திரவ, வாயு மிச்சம் ஏதுமின்றி ஆற்றலாக உருமாற்றம் செய்தால், அதைக் கொண்டு மொத்த தமிழ் நாட்டின் இரண்டு நாட்களுக்கான மின் தேவையை பூர்த்தி செய்துவிட முடியும். இது சாத்தியமா? உண்மையில் இச்சமன்பாட்டின் பொருள் என்ன? அது எப்படி உருவானது? அது மனித வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை நம்மில் வெகுசிலரே அறிந்திருக்கிறோம்.

நோவாவின் “ஐன்ஸ்டீனின் பெரும் சிந்தனை” என்ற ஆவணப்படம் பார்ப்பதற்கு எளியதாக தோன்றும் இந்த சமன்பாட்டின் வரலாற்றையும், அது உருவான கதையையும் நம் சிந்தனையை தூண்டும் விதத்தில் விளக்குகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள், கருதுகோள்கள் ஒரு வெற்றிடத்திலோ அல்லது ஒரு விஞ்ஞானியின் மூளைக்குள்ளிருந்து மட்டும்  உருவாக்கப்படுவதில்லை. மனிதகுலம் பல நூற்றாண்டு காலமாக திரட்டிய அறிவுச் செல்வத்தின் மீது நின்று கொண்டு அறிவியலாளர்களின் கடும் உழைப்பின் மூலம் அவை கட்டியெழுப்பபடுகிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது.

இளம் ஐன்ஸ்டீன்
இளம் ஐன்ஸ்டீன்
E=mc2 என்ற சமன்பாட்டை நினைக்கும் போது ஐன்ஸ்டீனை வெள்ளை முடியும் சுருக்கம் விழுந்த வயதான மனிதராக பலர் உருவகப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் இச்சமன்பாட்டை உருவாக்கிய போது ஐன்ஸ்டீன் வயோதிகர் இல்லை; துடிதுடிப்பும் துள்ளலும் நிறைந்த இளைஞர். காதல், குடும்பம், கல்லூரி வகுப்புகள், வேலை தேடல், அலுவலக நெருக்கடிகள் என்ற சராசரி போராட்டங்களுக்கு மத்தியில்தான் இந்த மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்தினார்.

அவருக்கு முன் இச்சமன்பாட்டின் ஒவ்வொரு பகுதியையும் உருவாக்கப் போராடிய, பலருடைய வேலையை கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைத்து அவற்றைக் கொண்டு ஒரு கோட்பாட்டு பாய்ச்சலை செய்ததுதான் ஐன்ஸ்டீனின் மேதைமை. இச்சமன்பாட்டின் ஒவ்வொரு பகுதிக்கு பின்னாலும் சாதனை, தோல்வி, சண்டை, பகை, காதல், போட்டி, அரசியல் மற்றும் பழிவாங்கும் கதைகள் உள்ளன.

E = mc2 சமன்பாட்டின் கதை ஐன்ஸ்டீனுக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் ஆற்றல் மாறும் கோட்பாடு கண்டு பிடிக்கப்பட்டதிலிருந்து துவங்குகிறது.

E – ஆற்றல்

19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் விஞ்ஞானிகள் ஆற்றலை அடிப்படையாக கொண்டு உலகை புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கவில்லை. அவர்கள் காற்றின் சக்தி, கதவு மூடப்படும் விசை, மின்னலின் சக்தி இப்படி ஒவ்வொன்றையும் விசைகளாகவும், சக்திகளாகவும் தனித்தனித் தீவாக ஆய்ந்து வந்தனர். அவர்களைப் பொறுத்தவரை  ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனிமுதலானவை, தனித்தனியாக ஆராயப்பட வேண்டியவை.


படிக்க:

Saturday, 11 April 2020

SIR PRAFULLA CHANDRA RAY ,SCIENTIST BORN 1861 AUGUST 2-1944 JUNE 16








SIR PRAFULLA CHANDRA RAY ,SCIENTIST BORN 1861 AUGUST 2-1944 JUNE 16


Acharya Sir Prafulla Chandra Ray (also spelled Prafulla Chandra Rây and Prafulla Chandra Roy) CIE, FNI, FRASB, FIAS, FCS (Bengali: প্রফুল্ল চন্দ্র রায় Praphulla Chandra Rāy; 2 August 1861 – 16 June 1944)[2] was an eminent Bengali chemist, educationist, historian, industrialist and philanthropist.[2] He established the first modern Indian research school in chemistry (post classical age) and is regarded as the father of chemical science in India.[3]

The Royal Society of Chemistry honoured his life and work with the first ever Chemical Landmark Plaque outside Europe. He was the founder of Bengal Chemicals & Pharmaceuticals, India's first pharmaceutical company. He is the author of A History of Hindu Chemistry from the Earliest Times to the Middle of Sixteenth Century (1902).
Biography
Family background
Prafulla Chandra Ray was born in the village of Raruli-Katipara, then in the Jessore District (subsequently in the Khulna District), which was then situated in the eastern portion of the Bengal Presidency of British India (now in present-day Bangladesh). He was the third child and son of Harish Chandra Raychowdhury (d. 1893), a Kayastha zamindar (landed proprietor) and his wife Bhubanmohini Devi (d. 1904), the daughter of a local taluqdar.[4][5] Ray was one of seven siblings, having four brothers – Jnanendra Chandra, Nalini Kanta, Purna Chandra and Buddha Dev – and two sisters, Indumati and Belamati, both born after their brothers; of Ray's siblings, all except Buddha Dev and Belamati survived to adulthood.[5]

Ray's great-grandfather Maniklal had been a dewan under the British East India Company's district collector of Krishnanagar and Jessore, and had amassed considerable wealth in the service of the Company. After succeeding to his father's post, Ray's grandfather Anandlal, a progressive man, sent his son Harish Chandra to receive a modern education at Krishnagar Government College.[5] At the college, Harish Chandra received a thorough grounding in English, Sanskrit and Persian, though he was ultimately forced to end his studies to help support his family. Liberal and cultured, Harish Chandra pioneered English-medium education and women's education in his village, establishing both a middle school for boys and one for girls, and admitting his wife and sister to the latter.[5] Harish Chandra was strongly associated with the Brahmo Samaj,[6] and Ray would maintain his connections with the Samaj throughout his life.

Childhood and early education (1866-1882)
In 1866, Ray began his education in the village school run by his father, and studied there until he was nine.[2] After Ray's elder brother Jnanendra Chandra completed his middle school studies, his father elected to move the family to Calcutta, where centres of higher learning were more easily accessible.[5] Thus in 1870 or 1871, when Ray was about 10, his family migrated to the city, where Harish Chandra rented a house at 132 Amherst Street.[5] Ray was admitted to the Hare School the following year.[4] In 1874, while Ray was in the fourth standard, he suffered a severe attack of dysentery and was consequently forced to postpone his studies and return to his ancestral home. He later considered this disruption in his studies as a blessing in disguise as it allowed him to read much more widely than what would have been possible within the constraints of school curricula. While convalescing, he read biographies, articles on science, Lethbridge's 'Selections from Modern English Literature' and Goldsmith's Vicar of Wakefield, among others. He also studied history, geography, Bengali literature, Greek, Latin, French and Sanskrit.[2] Although he made a full recovery, he suffered residual bouts of indigestion and insomnia for the rest of his life.[7]


Young Prafulla Chandra Ray

After recovering from his illness, Ray returned to Calcutta in 1876 and was admitted to the Albert School, established by the Brahmo reformer Keshub Chandra Sen; owing to his concentrated self-study over the preceding two years, his teachers found him to have advanced much further than the rest of the students in his assigned class. During this period, he attended Sen's Sunday evening sermons and was deeply influenced by his Sulabha Samachar.[6] In 1878, he passed the school's Entrance Examination (matriculation exams) with a First Division, and was admitted as an FA (First Arts) student to the Metropolitan Institution (later Vidyasagar College) which was established by Pandit Ishwar Chandra Vidyasagar. The English literature teacher at the Institution was Surendranath Banerjee, the prominent Indian nationalist and future president of the Indian National Congress, whose passionately held ideals including an emphasis on the value of service and the need to continually strive for India's rejuvenation left a definite and lasting impression on Ray, who took those values to heart.[7] While deeply influenced by Sen, Ray preferred a more democratic environment than the mainstream Brahmo Samaj under Sen's guidance could provide; consequently, in 1879 he joined the Sadharan Brahmo Samaj, a more flexible offshoot of the original Samaj.[8]

Though Ray had primarily focused on history and literature until this stage, chemistry was then a compulsory subject in the FA degree. As the Metropolitan Institution offered no facilities for science courses at the time, Ray attended physics and chemistry lectures as an external student at the Presidency College.[7] He was especially drawn to the chemistry courses taught by Alexander Pedler, an inspiring lecturer and experimentalist who was among the earliest research chemists in India. Soon captivated by experimental science, Ray decided to make chemistry his career, as he recognised that his country's future would greatly depend on her progress in science.[2] His passion for experimentation led him to set up a miniature chemistry laboratory at a classmate's lodgings and reproducing some of Pedler's demonstrations; on one occasion, he narrowly escaped injury when a faulty apparatus exploded violently.[2] He passed the FA exam in 1881 with a second division, and was admitted to the BA (B-course) degree of the University of Calcutta as a chemistry student, with a view towards pursuing higher studies in the field.[4] Having learnt Latin and French in addition to achieving a "fair mastery" of Sanskrit, a compulsory subject at the FA level, Ray applied for a Gilchrist Prize Scholarship while studying for his BA examination; the scholarship required a knowledge of at least four languages. After an all-India competitive examination, Ray won one of the two scholarships, and enrolled as a BSc. student at the University of Edinburgh without completing his original degree.[7] He sailed for the United Kingdom in August 1882, aged 21.[4]

Student in Britain (1882-1888)
At Edinburgh, Ray began his chemistry studies under Alexander Crum Brown and his demonstrator John Gibson, a former student of Brown's who had also studied under Robert Bunsen at the University of Heidelberg. He received his BSc. in 1885.[9] During his student years at Edinburgh, Ray continued to nurture his strong interests in history and political science, reading works by prominent authors including Rousselet's L'Inde des Rajas, Lanoye's L'Inde contemporaine, Revue dex deux mondes. He also read Fawcett's book on political economy and Essays on Indian Finance.[10] In 1885, he entered an essay competition held by the university for the best essay on "India before and after the Mutiny." His submission, which was strongly critical of the British Raj and warned the British government of the
consequences of its reactionary attitudes, was nonetheless assessed as one of the best entries and was highly praised by William Muir, the recently appointed Principal of the University and a former lieutenant-governor of the North-Western Provinces in India.[7] Ray's essay was widely publicised in Britain, with The Scotsman observing "It contains information in reference to India which will not be found elsewhere, and is deserving of the utmost notice."[5] A copy of the paper was read by the distinguished orator and Liberal Member of Parliament for Birmingham John Bright; Bright's sympathetic reply to Ray was published in leading newspapers across Britain under the title "John Bright's Letter to an Indian Student."[7] The following year, Ray published his paper as a booklet entitled "Essay on India," which likewise earned its author wide attention in British political circles.[7]

After obtaining his BSc degree, Ray embarked on his doctoral studies. Although his thesis advisor Crum Brown was an organic chemist, Ray was drawn towards inorganic chemistry at a time when research in the field appeared to be making limited progress compared to organic chemistry. Following an extensive review of available inorganic chemistry literature, Ray decided to explore the specific natures of structural affinities in double salts as the subject of his thesis. Within this area, Ray chose to research metal double sulfates.[9]

For some years, science had recognised numerous double sulfates (then also known as "vitriols") occurred in nature as mineral salts. The natural combination of sulfates of bivalent metals with monovalent metal sulfates in a 1:1 ratio results in the formation of double sulfates chemically distinct from their original constituent species.[9] By the 1850s, a number of double sulfates had been artificially synthesized, including ammonium iron(II) sulfate or "Mohr's salt" by Karl Friedrich Mohr. Some chemists, including one Vohl, subsequently claimed to have isolated numerous double-double and multiple-double sulfates including supposed "triple-double," and "quadruple-double" structures. These were purportedly the result of two double sulfates of Type I (differing in the bivalent metal Mb) combining in definite integral proportions to yield new molecular double salts.[9] Others who had attempted to reproduce those experiments reported their inability to do so. Prior to Ray's taking up the problem, in 1886, Percival Spencer Umfreville Pickering and Emily Aston had concluded in their paper that double-double and higher-order sulfate salts did not exist as definite structures, deeming Vohl's experimental findings inexplicable.[9] While Ray noted such findings placed Vohl's research in doubt, he reasoned "the position was unclear and further research was called for."[9]

Ray was awarded the Hope Prize which allowed him to work on his research for a further period of one year after completion of his doctorate. His thesis title was "Conjugated Sulphates of the Copper-magnesium Group: A Study of Isomorphous Mixtures and Molecular Combinations". While a student he was elected Vice-President of the University of Edinburgh Chemical Society in 1888.[11]

Prafulla Chandra returned to India in the first week of August 1888 and subsequently joined Presidency College, Calcutta as temporary Assistant Professor of Chemistry in 1889. Ray who had a doctorate in science from the University of Edinburgh felt deeply aggrieved when even with his excellent educational credentials he was not able to secure a position within the Imperial service (his academic position was within the 'provincial service') and attributed this to the discriminatory attitude of the ruling government towards native intelligentsia. He complained to the top officials of the government but with no effect.[citation needed]

Career

Bust of Prafulla Chandra Ray which is placed in the garden of Birla Industrial & Technological Museum, Kolkata
Scientific Research
Mercurous nitrite
Around 1895 Prafulla Chandra started his work in the field of discovering nitrite chemistry which turned out to be extremely effective. In 1896, he published a paper on preparation of a new stable chemical compound: mercurous nitrite.[11] This work made way for a large number of investigative papers on nitrites and hyponitrites of different metals, and on nitrites of ammonia and organic amines.[12] He and his students had crumbled this field for several years, leading to a long discipline of research laboratories. Prafulla Chandra said that it was a new chapter in life that started with the unanticipated discovery of mercurous nitrite.[13] Prafulla Chandra, in 1896, noticed the formation of a yellow crystalline solid with the reaction of mercury and dilute nitric acid.[14][15]

6 Hg + 8 HNO3 → 3 Hg2(NO3)2 + 2 NO + 4 H2O
This result was first published in the Journal of Asiatic Society of Bengal. That was forthwith noticed by Nature magazine on May 28, 1896.[14]

Ammonium and alkylammonium nitrites
Ammonium nitrite synthesis in pure form through double displacement ammonium between chloride and silver nitrite is one of the notable contributions of P C Ray. He proved that the pure ammonium nitrite is indeed stable by bring to pass a lot of experiments and explained thet it can be sublimed even at 60 °C without decomposition.[14]

NH4Cl + AgNO2 → NH4NO2 + AgCl
On a conference of the Chemical Society in London, he submitted the result. Nobel laureate William Ramsay congratulated him for his achievement. On August 15, 1912, Nature magazine published the news of 'ammonium nitrite in tangible form' and the determination of the vapour density of 'this very fugitive salt'. The Journal of Chemical Society, London published the experimental details in the same year.[14]

He prepared a lot of such compounds by double displacement. After that he worked on mercury alkyl- and mercury alkyl aryl-ammonium nitrites.[13]

RNH3Cl + AgNO2 → RNH3NO2 + AgCl
He started a new Indian School of Chemistry in 1924. Ray was president of the 1920 session of the Indian Science Congress.[16]

Prafulla Chandra retired from the Presidency College in 1916, and joined the Calcutta University College of Science (also known as Rajabazar Science College) as its first "Palit Professor of Chemistry", a chair named after Taraknath Palit. Here also he got a dedicated team and he started working on compounds of gold, platinum, iridium etc. with mercaptyl radicals and organic sulphides. A number of papers were published on this work in the Journal of the Indian Chemical Society.

In 1936, at the age of 75, he retired from active service and became Professor Emeritus. Long before that, on the completion of his 60th year in 1921, he made a free gift of his entire salary to the Calcutta University from that date onward, to be spent for the furtherance of chemical research, and the development of the Department of Chemistry in the University College of Science.

He had written 107 papers in all branches of Chemistry by 1920.[11]

Literary works and interests
He contributed articles in Bengali to many monthly magazines, particularly on scientific topics. He published the first volume of his autobiography Life and Experience of a Bengali Chemist in 1932, and dedicated it to the youth of India. The second volume of this work was issued in 1935.

In 1902, he published the first volume of A History of Hindu Chemistry from the Earliest Times to the Middle of Sixteenth Century.[17] The second volume was published in 1909.[18] The work was result of many years' search through ancient Sanskrit manuscripts and through works of orientalists.

Social service
In 1923, Northern Bengal suffered a flood which made millions of people homeless and hungry. Prafulla Chandra organised Bengal Relief Committee, which collected nearly 2.5 million rupees in cash and kind and distributed it in the affected area in an organised manner.

He donated money regularly towards welfare of Sadharan Brahmo Samaj, Brahmo Girls' School and Indian Chemical Society.[6] In 1922, he donated money to establish Nagarjuna Prize to be awarded for the best work in chemistry.[6] In 1937, another award, named after Ashutosh Mukherjee, to be awarded for the best work in zoology or botany, was established from his donation.[6]

Recognition and honours

Signature of Acharya Prafulla Chandra Ray

Ray on a 1961 stamp of India

An exhibition on Prafulla Chandra Ray was held at the Science City, Kolkata on his 150th birth anniversary (2 August 2011).
Medals and decorations
Faraday Gold Medal of the University of Edinburgh (1887)[4]
Companion of the Order of the Indian Empire (CIE; 1912 Birthday Honours list)[19]
Knight Bachelor (1919 New Year Honours list)[20]
Academic fellowships and memberships
Fellow of the Royal Asiatic Society of Bengal (FRASB)[21]
Fellow of the Chemical Society (FCS; 1902)[1]
Honorary Member of the Deutsche Akademie, Munich (1919)[4]
Foundation Fellow of the National Institute of Sciences of India (FNI; 1935)[21][note 1]
Fellow of the Indian Association for the Cultivation of Science (FIAS; 1943)[22]
Honorary doctorates
Honorary Doctor of Philosophy degree from the University of Calcutta (1908).[23]
Honorary D.Sc. degree from Durham University (1912)
Honorary D.Sc. degree from Banaras Hindu University (1920)[4]
Honorary D.Sc. degree from the University of Dhaka (1920 and 28 July 1936)[4][24][25]
Honorary D. Sc. degree from the University of Allahabad (1937)[26]
Other
Felicitated by the Corporation of Calcutta on his 70th birthday (1932)[4]
[27]Autobiography,” Life and Experiences of Bengali Chemist,” was published in 1932.
Felicitated by the Corporation of Karachi (1933)[4]
Title of Jnanabaridi from Korotia College, Mymensingh (now the Government Saadat College) (1936)[4]
Felicitated by the Corporation of Calcutta on his 80th birthday (1941)[4]
Chemical Landmark Plaque of the Royal Society of Chemistry (RSC), the first to be situated outside Europe (2011).[28]
Named after P. C. Ray
Acharya Prafulla Chandra Roy Shiksha Prangan,Acharya Prafulla Chandra College, Prafulla Chandra College, Acharya Prafulla Chandra High School For Boys, and Acharya Prafulla Chandra Ray Polytechnic in Kolkata commemorate his name, as does the Government P. C. College in Bagerhat, Khulna division, Bangladesh, and the Ray–Dutt twist.
Personal life
He remained a bachelor throughout his life who took active participation in politics. He was closely associated with Sadharan Brahmo Samaj and occupied various administrative posts during his lifetime and finally elected as the President and Trustee of Sadharan Brahmo Samaj. He was elected solely on the basis of his potential, and not because of his father's influence in the Bramho Samaj.

Friday, 27 December 2019

LOUIS PADTEUR ,SCIENTIST FOUND MEDICINE FOR RABBIES


LOUIS PADTEUR ,SCIENTIST  
FOUND MEDICINE FOR RABBIES


லூயி பாஸ்ச்சர் (Louis Pasteur, டிசம்பர் 27, 1822 – செப்டம்பர் 28, 1895) நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் வேதியியலாளர். வேதி நிகழ்வுகளில் ஒன்றான நொதித்தல் நிகழ்வை உற்றுநோக்கும் போது நுண்ணுயிரிகளைப் பற்றி இவர் அறிந்துகொண்டார். நுண்ணுயிரியல் துறையில் இவரது பங்களிப்பு அளப்பரியது. இவர் நடத்திய ஆய்வுகளின் பயனாய் பல நோய்கள் நுண்ணியிரிகளால் ஏற்படுகின்றன என்று கண்டறிந்தார்.[2][3][4]

தடுப்பு மருந்து, நுண்ணுயிர் நொதித்தல் மற்றும் பாஸ்ச்சர் முறை ஆகிய கொள்கைகளைப் பல கண்டுபிடிப்புகள் மூலம் ஏற்படுத்திப் புகழ் பெற்றவர். நோய்க்கான காரணங்கள் மற்றும் அவற்றின் தடுப்புமுறைகள் குறித்த அவரது ஆராய்ச்சி ஒரு முக்கியத் திருப்புமுனையாக இருந்தது. அவரது கண்டுபிடிப்பு அன்றிலிருந்து பல உயிர்களைக் காத்து வருகிறது. பிரசவத்திற்குப் பிந்தைய தொற்றுகளினால் ஏற்படும் இறப்பு வீதத்தைக் குறைத்ததுடன், வெறிநாய்க்கடி நோய் மற்றும் ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்களுக்கு முதலில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்தார். அவரது மருத்துவக் கண்டுபிடிப்புகள் நோய்க் கிருமிக் கோட்பாட்டை (germ theory) நேரடியாக ஆதரிப்பதுடன், இந்தக் கோட்பாட்டின் மருத்துவத் துறைப் பயன்பாட்டுக்கும் உதவின. பால் மற்றும் வைன் ஆகியவற்றில் பாக்டீரியா கலப்படத்தைத் தவிர்ப்பதற்கான இவரது கண்டுபிடிப்பு பாஸ்ச்சர் முறை (pasteurization) என்று தற்போது அழைக்கப்படுகிறது. இவர் பொதுமக்களுக்கு நன்கு அறிமுகமானவர்.

கல்வி மற்றும் ஆரம்ப வாழ்க்கை

லூயிசு பாஸ்ச்சர் கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த, ஒரு ஏழை தோல்பதனிடும் தொழில் செய்யும் ஒருவருக்கு, பிரான்சில், டோல், ஜூரா என்னுமிடத்தில் டிசம்பர் 27, 1822 இல் பிறந்தார்[2]. ஜீன்-சோசப் பாசுச்சரும் மற்றும் ஜீன்-எடியன்னிடி ரெளகியினதும் மூன்றாவது குழந்தையாக இருந்தார். இவரது குடும்பம் 1826 ஆம் ஆண்டில் மார்ன்சு க்கும் 1827 ஆம் ஆண்டில் அர்பாய்சு க்கும் இடம்பெயர்ந்தது[5][6]. பாஸ்டியர் 1831 இல் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்தார்[7].

ஆரம்ப பள்ளி காலங்களில் பாசுச்சரின் ஆர்வம் மீன் பிடித்தல், வரைதல் போன்றவற்றில் இருந்ததுடன், அவர் ஒரு சராசரி மாணவராக இருந்தார்[2]. அவர் பல வண்ணங்களில் தனது பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் அருகில் உள்ளவர்களின் உருவப்படங்களை வரைந்திருந்தார்[8]. டி அர்பாய்சு கல்லூரியில் தனது மேனிலைப் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தார்[9]. 1838 ஆம் ஆண்டு அக்டோபரில், பென்சியன் போர்பட்டுவில் இணைவதற்காக பாரிசை விட்டு சென்றார். ஆனால் வீட்டை பிரிந்த துயரத்தினால் மீண்டும் நவம்பரில் திரும்பினார்[10].

1839 ஆம் ஆண்டில், அவர் மெய்யியல் படிப்பதற்காக ராயல் டி பெசன்கான் கல்லூரிக்குச் சென்றார். அத்துடன் தனது இளநிலை பட்டத்தினையும் (Bachelor of Letters degree) 1840 ல் பெற்றார்[11]. சிறப்புப் பாடமாகக் கணிதவியலைக் கொண்ட அறிவியல் பட்டத்திற்கான கல்வியைத் தொடர்ந்த வேளையில் அவர் பெசன்கான் கல்லூரியில் ஒரு ஆசிரியராகவும் கடமையாற்றினார்[12]. 1841 இல் தனது முதல் தேர்வில் தோல்வியடைந்த அவர், பின்னர் 1842 ல் டிசோனில் baccalauréat scientifique (பொது அறிவியல்) பட்டத்தில் தேர்ச்சி பெற்றார். ஆனால் வேதியியலில் சாதாரண தகுதியையே பெற்றார்[13].

பின்னர் 1842 இல், பாஸ்டியர் Ecole Normale Supérieure நுழைவுத் தேர்வு எடுத்தார்[14]. அவர் முதலாவது சோதனைகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அவரது தரவரிசை குறைவாக இருந்ததனால், பாஸ்டியர் தொடர்ந்து அடுத்த ஆண்டு மீண்டும் முயற்சி செய்வதில்லை என முடிவெடுத்தார்[15]. அவர் சோதனைக்காகத் தயார் செய்வதற்காக மீண்டும் பென்சியன் பார்பெட் சென்றார். அவர் லைசி செயிண்ட்-லூயிஸ் இல் வகுப்புகளுக்கு சென்றதுடன், சோபோர்னில் உள்ள ஜீன்-பாப்டிஸ்ட் டுமாஸ் இல் விரிவுரைகளுக்கும் சென்றார்[15]. 1843 ஆம் ஆண்டு அவர் உயர் தரவரிசையில் தேர்ச்சியடைந்து Ecole Normale Supérieure இடம்பெற்றனர்[16]. 1845 ஆம் ஆண்டில் அவர் licencié ES அறிவியல் பட்டம் (அறிவியலில் முதுகலைப் பட்டம்) பெற்றார்[17]. 1846 இல் அவர் Ardèche யிலுள்ள, கல்லூரி டி டோர்னனில் (தற்போது அக்கல்லூரி Lycée Gabriel-Faure (fr) என்றழைக்கப்படுகிறது) இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ஆனால் வேதியியலாளர் அண்டோனே ஜெரோம் பாலார்ட், பாய்ச்சர் மீண்டும் Ecole Normale Supérieure க்கு ஒரு பட்டதாரி ஆய்வக உதவியாளராக வரவேண்டும் என்று விரும்பினார்[18]. அவர் Balard உடன் இணைந்துகொண்ட அதே வேளையில், படிகவியல் தொடர்பான தனது ஆய்வுகளையும் தொடங்கி, பின்னர் 1847 இல், வேதியியல், இயற்பியல் தொடர்பான இரு ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தார்[17][19]


டிஜோன் உயர்நிலைப் பள்ளியில் இயற்பியல் பேராசிரியராக சேவை முடிந்த பின், 1848 ல், ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகக் கடமையாற்றினார்[20]. அங்கு பல்கலைக்கழகத்தின் இயக்குநரின் மகளான மேரி லாரண்ட் ஐச் சந்தித்து திருமண ஒப்பன்ந்தம் செய்து கொண்டார். அவர்களிருவரும் 1849 மே 29 அன்று திருமணம் செய்துகொண்டனர்[21]. அவர்களுக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில், மூவர் குடற்காய்ச்சலினால் இறந்துவிட, இருவர் மட்டுமே வளர்ந்து பெரியவர்களானார்கள்[22].

வெறிநாய்க்கடிக்கான தடுப்பூசி
இவர்தான் முதன்முதலாக வெறிநாய் முதலிய வெறிநோய் ஏறிய விலங்குகளின் கடியில் இருந்து காக்க ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தார்.[23]

பாச்சர்முறை நுண்ணுயிர் நீக்கம்
பாலும், வைனும் குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் பாக்டீரியாக்களின் வளர்ச்சியினால் கெட்டுப்போகின்றன. அப்படிக் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்காக லூயி பாஸ்ச்சர் முன்வைத்த முறை இன்று பாச்சர்முறை என்னும் பெயரில் பெருவழக்காக உள்ளது. இம்முறையில் பாலைச் சூடு செய்து நுண்ணுயிரிகளின் பெரும்பகுதியைக் கொல்வதால் பால் கெடாமல் இருக்கின்றது.[24]

பாலில் அதிக அளவு உள்ள நோய் உண்டாக்கும் பாக்டிரியாக்களை அழித்து, அவற்றின் எண்ணிக்கையை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதனால், பாலில் உள்ள சத்துக்கள் குறையாமல் காக்கப்படுகின்றன. கிருமியழித்தலில் போன்று, இங்கு அனைத்து நோய்க்காரணிகளும் அழிக்கப்படுவதில்லை. பதிலாக, அவற்றின் எண்ணிக்கை ஒரு கட்டுப்பாடான அளவிற்குக் கொண்டு வரப்படுவதனால், குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு பாலைக் கெடாமல் பாதுகாக்கலாம். இம்முறையில் பாலானது 60 and 100 °C வெப்பநிலை வரைக் காய்ச்சி அதே வெப்பநிலையில் அரை மணி நேரம் வைத்த பின்பு வேகமாக குளிரச்செய்யப்படுகிறது[25].

நுண்ணுயிரியல்
நுண்ணுயிரியலை நிறுவிய மூவருள் இவர் ஒருவராகக் கருதப்படுகின்றார். மற்றவர்கள் பெர்டினாண்ட் கோன், ராபர்ட் கோக் ஆவர். தன்னிச்சை உருவாக்கக் கோட்பாடு (spontaneous generation) மறுக்கப்பட்டதற்கு இவர் காரணமாக இருந்தார். கலப்படமில்லாமல் நுண்ணுயிரிகள் உருவாக முடியாது என்பதை இவரது சோதனைகள் உணர்த்தின. "பிரெஞ்சு அறிவியல் அகாடெமி"யின் துணைகொண்டு இவர், நுண்ணுயிரி ஒழிக்கப்பட்ட (sterilized) மற்றும் உறையிடப்பட்ட (sealed) குடுவைகளில் எதுவும் உருவாக இல்லை எனவும், நுண்ணுயிரி ஒழிக்கப்பட்ட ஆனால் திறந்த குடுவைகளில் நுண்ணுயிரி வளர முடியும் என நிரூபித்தார். கிருமிக் கோட்பாட்டை (germ theory) இவர் முன்மொழியா விட்டாலும், அவரது சோதனைகள் அதன் உண்மைத்தன்மையைக் குறிப்பிட்டு, பெரும்பாலான ஐரோப்பாவுக்கு அது உண்மை என உணர்த்தின. இன்று அவரும் "கிருமிக் கோட்பாட்டின்" தந்தை என வழங்கப்படுகிறார்.

வேதியியல்
பாஸ்ச்சர் வேதியியலில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியுள்ளார். அவற்றில் மூலக்கூறு அடிப்படையில் சில படிகங்களின் (crystal) ஒத்தமைவின்மையைக் (assymmetry) குறித்த இவரது ஆய்வு குறிப்பிடத்தக்கது. இவரது ஆரம்பகால வாழ்க்கையில் டார்டாரிக் அமிலத்தில் இவரது ஆய்வு முதன்முதலில் ஒளியியற் சமபகுதியம் (optical isomer) என்ற தீர்மானத்துக்கு வழிவகுத்தது. கரிமச் சேர்மங்களின் (organic compounds) அமைப்பைப் புரிந்து கொள்வதில், தற்போதுள்ள அடிப்படைக் கொள்கைக்கு இவரது ஆய்வு வழிவகுத்தது.

முரண்பாடுகள்
நொதித்தல்
பாஸ்ச்சருக்கு முன்னரே வேறு விஞ்ஞானிகள் நொதித்தல் பற்றி ஆய்ந்து அறிந்திருந்தனர். 1830 ஆம் ஆண்டில், சார்லசு காக்னியர்டு-லாட்டூர் (Charles Cagniard de la Tour), பிரெடெரிக் டிராகாட் குட்சிங் (Friedrich Traugott Kützing), தியோடர் சுவான் (Theodor Schwann) ஆகியோர் நுண்ணோக்கி மூலம் மதுவத்தை (yeast) ஆராய்ந்து, அவை வாழும் உயிரினங்கள் என்று கூறியுள்ளனர். 1839 இல், ஜசுடசு வான் லீபிக் (Justus von Liebig), பிரெடெரிக் வோக்லர் (Friedrich Wöhler) மற்றும் சோன்ஸ் சேக்கப் பெர்சிலியசு (Jöns Jacob Berzelius) ஆகியோர் மதுவம் ஒரு உயிரினம் இல்லை என்றும் அவை தாவர சாறுகள் காற்றுடன் செயல்படும் போது உருவாகின்றன என்றும் அறிக்கைவிட்டனர்.[26]

1855 இல் மோண்ட்பெல்லியர் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ஆண்டனி பிசாம்ப் (Antoine Béchamp), சுக்ரோசு கரைசலில் பரிசோதனைகளை மேற்கொண்டு நீர், நொதித்தலுக்குப் காரணியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்[27]. ஆனால் பின்னர் 1858 இல், அவர் தனது முடிவை மாற்றி, நொதித்தலுக்குக் காரணம் Mould என்னும் ஒரு வகை பூஞ்சையே என்றும், அவற்றின் வளர்ச்சிக்கு காற்று தேவைப்படுகிறது என்றும் கூறினார். நொதித்தலில் நுண்ணுயிர்களின் பங்கினை முதலாவதாக எடுத்து காண்பித்தவர் தானே என்று இவர் கூறினார்[28][29].

பாஸ்ச்சர் 1857 இல் தன்னுடைய பரிசோதனைகளைத் தொடங்கி, 1858 Comptes Rendus Chimie இதழில், ஏப்ரல் பதிப்பில் வெளியிட்டார். ஆனால் பிசாம்ப் இனுடைய ஆய்வறிக்கை ஜனவரியிலேயே வெளியிடப்பட்டுவிட்டது. இருந்தாலும், பாஸ்சரின் 1857 ஆம் ஆண்டு ஆரம்ப ஆய்வுகளைப்பற்றி பிசாம்ப் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. இவர்கள் இருவரினதும் முரண்பாடுகள் அவர்களது வாழ்வுக்காலம் முழுமைக்கும் நீண்டது.[2




தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள்- 10 -லூயி பாஸ்ச்சர் - நித்யா ராமதாஸ்

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள்- 10 -லூயி பாஸ்ச்சர் -  நித்யா ராமதாஸ்
சர்வதேச பியர் தினம் ஆகஸ்ட் நான்காம் தேதி உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இரு நண்பர்கள் முதன் முதலில் சந்தித்துக்கொண்டாலும், சண்டைக்கு பின் இருவர் மனம் விட்டு பேசுவது இவையெல்லாம் ஒரு கிளாஸ் பியர் முன்னிலையில் தான் மேற்கு நாடுகளில் நடக்கிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளில் இந்த குறிப்பிட்ட தினத்தை ஒட்டி பல நிகழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும் நடந்தாலும், பியர் என்ற பானத்தை எந்தவொரு கிருமிகள் இன்றி, பதப்படுத்தி உலகிற்கு தந்த பெருமை லூயி பாஸ்ச்சருக்கு தான் சேரும். பால் சுத்திகரிப்பு முறையான பாசச்சுரைசேஷன் (Pasteurisation) மூலம் இவர் பெயர் இன்று உலகளவில் தெரியப்பட்டாலும், முதலில் இவர் இந்த சுத்திகரிப்பு முறையை கையாண்டது பியர் மற்றும் வைன் எனப்படும் பானங்களில் தான் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். பல கண்டுபிடிப்புகளும், எதிர்ப்புகளும் கொண்ட இவரது வாழ்க்கை பக்கத்தை இங்கு நாம் திருப்பி பார்க்கலாம்.
லூயி என்னும் ஓவியன்
டிசம்பர் 27ம் தேதி 1822ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் டோல் என்ற இடத்தில் லூயி பாஸ்ச்சர் பிறந்தார். பள்ளி பருவத்தில் பாஸ்ச்சர் ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வமாக இருந்ததுண்டு. வித்தியாசமான நிறத்தில் தான் வசிக்கும் கிராமம் மற்றும் சுற்றுப்புறங்களை வண்ணமயமாக வரைந்து அவ்வப்போது தனது பெற்றோர்களிடம் காண்பிப்பது லூயியுடைய வழக்கமாக இருந்தது. ஆசிரியர்கள் இவரது திறனை மேலும் வளர்க்க ஊக்கம் அளித்தாலும், பிரான்ஸ் படை வீரரான லூயியின் தந்தை ஓவியத்தை ஒரு வேண்டாத வஸ்துவாகவே பார்த்தார். படிப்பதில் கவனத்தை செலுத்த இடையூறாக ஓவியம் இருக்கும் என்று கருதி, படிப்பில் மட்டுமே முழு சிரத்தையும் இருக்க வேண்டும் என்று அடிக்கடி அறிவுரை கூறி, ஓவியப்பாதையிலிருந்து மெதுவாக லூயியை திசை திருப்பினார் என்று சொல்லலாம். படிப்பில் நாட்டமில்லாத லூயி, தந்தையின் கட்டுப்பாட்டினால் படிப்பதில் அதிக நேரத்தை செலவழிக்க துவங்கினார். ''பிரான்ஸ் நாட்டின் பெருமை, மற்றும் புகழில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்ட எனது தந்தை, என்னை படிக்க செய்த, அந்த பெருமைகளை தெரிந்துக்கொள்ள வழி வகுத்தார்.'' என்று ஒரு சந்தர்ப்பத்தில் லூயி தனது தந்தை பற்றி பகிர்ந்துக்கொண்டதாக சில கட்டுரைகள் மூலம் தெரிகிறது.
இவ்வாறாக, அரை மனதுடனும் அதிக கவனம் செலுத்தாமலும் லூயி தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின், ஃபிளாஸபி துறையில் முதல் இளநிலை பட்டப்படிப்பை பேசான்காண் ராயல் கல்லூரியில் முடித்தார். அதே கல்லூரியில் பயிற்சியாளராக பணியாற்றிய லூயி, அறிவியல் மற்றும் கணித படிப்பை தொடர்ந்தார். ஆரம்பத்தில் சில தேர்வுகளில் தோல்வியை சந்தித்தாலும், இறுதியில் கணிதம் மற்றும் வேதியியல் பிரிவில் நல்ல மதிப்பெண்களை பெற்று அந்த படிப்பையும் வெற்றிகரமாக முடித்தார். லூயி எடுத்துக்கொண்ட இந்த இரண்டாவது படிப்பின் வழியாக, அறிவியல் உலகிற்கு வந்து பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு பின்னாளில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் கண்டுபிடிப்பு
இளநிலை பட்டப்படிப்பை முடித்த பின், ஈகால் நார்மெல் என்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் படிப்பதில் கவனம் செலுத்தியது மட்டுமின்றி, அதற்கான நுழைவுத் தேர்வுகளையும் எழுதினார். முதல் முயற்சியில் தோல்வியுற்றாலும், அடுத்த ஆண்டு எழுதியதில் நல்ல மதிப்பெண்களும், தரவரிசை பட்டியலில் இடத்தை பிடித்தும் ஈகால் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பை படித்தார். பட்டப்படிப்பை முடித்த பின் ஆண்டோய்ன் ஜெரோம் பாலார்ட் என்பவருடன் இணைந்து கிறிஸ்டெலோகிராபி துறையில் ஆய்வுகளை மேற்கொண்டார். முதல் முறையாக இவர் எடுத்துக்கொண்ட இந்த ஆய்வுகள், பல உண்மைகளை உலகிற்கு வெளிக்கொண்டு வந்ததற்கு பாலமாக அமைந்தது என்றே சொல்லலாம். இயற்பியல் மற்றும் வேதியியல் துறையில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதிய லூயி, அடுத்தகட்டமாக ஸ்ட்றாஸ்பார்க் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக பொறுப்பேற்றார்.
1848ம் ஆண்டில் பொறுப்பேற்ற லூயி, உயிரினங்களில் கொண்ட வேதியியல் கட்டுமானத்தை பற்றி முதலில் கண்டறிந்தார். ஒரே மாதிரியாக இருக்கும் மாளிக்யூல்ஸ் (Molecules) எனப்படும் அடிப்படையான பொருள், வலப்புறமாகவும், இடப்புறமாகவும் அமைக்கப்பட்டுள்ளதாக லூயி கண்டறிந்தார். இந்த மாளிக்யூல்களின் கூட்டமைப்பே எந்தவொரு பொருளுக்கும் வடிவத்தையும், சக்தியையும் தருகிறது. உயிருள்ள பொருட்களின் மாளிக்யூல் அமைப்பானது இடதுபுறமாகவே இருக்கின்றது என்ற தகவலை முதலில் உலகிற்கு இவர் உரைத்தார். லூயி தனது 25வது வயதில் கண்டறிந்த இந்த விஷயம், பின்னாளில் பல ஆய்வுகளில் எடுக்கப்பட்டு, DNA என்ற மனித செல்களின் அடிப்படை கூறு பற்றிய விரிவான தகவல்கள் மட்டுமின்றி, பல மருந்துகள் கண்டுபிடிப்பிற்கும் இது அடிப்படையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில், அறிவியல் துறையில் இருந்த பல கேள்விகளுக்கு முதல் குறிப்பாக லூயி அவர்களின் கண்டுபிடிப்பு விளங்கியது.
பியர் மூலம் கண்டறிந்த சுத்திகரிப்பு முறை
ஸ்டராஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் பணிபுரிந்த பின், தான் படித்த ஈகால் பல்கலைக்கழகத்தில் மீண்டும் நுழைந்தார். இம்முறை அறிவியல் துறையின் இயக்குனராக பொறுப்பேற்று பேராசிரியராக பல மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்தார். அப்போது மாணவன் ஒருவர் லூயிடம், அவர் தயாரிக்கும் பியர் பானம் தானாக கெட்டு போகும் மாயத்திற்கு விடை கோரினார். ஒரு வித புளிப்பு சுவையுடன், அந்த பானம் அடிக்கடி கெட்டுப்போவதற்கான காரணத்தை கண்டறிய, லூயி தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டார். அவர் கண்டுபிடித்ததில், அந்த பானமானது, அதனோடு கலந்திருக்கும் பல நுண் கிருமிகளால் புளிப்பாக மாறுவதாக மைக்ரோஸ்கோப் கொண்டு கண்டறிந்தார். ஒரு பொருள் கெட்டுப்போனதால், தேவையில்லாத கிருமிகள் அதில் காணப்படுகிறது என்ற கூற்றை மாற்றி, கிருமிகளின் நுழைவால் தான் கெட்டுப்போகும் செயல் நடைபெறுகிறது என்பதை நிரூபித்து காட்டினார். இன்று இந்த கண்டுபிடிப்பை கொண்டு பல மாற்றங்களை நாம் மருத்துவ உலகில் நிகழ்த்தியிருந்தாலும், 1860ம் ஆண்டில், முதல் முறையாக இந்த நிகழ்வை விளக்கிய போது, பல அறிஞர்களும், மக்களும் இவருடைய கண்டுபிடிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. ''உங்களுடைய இந்த ஆய்வுகள், உங்களுக்கு எதிராகவே மாறும். நீங்கள் சொல்லும் எதுவும் நிகழ் உலகத்தில் சாத்தியமில்லை.'' என்று அப்போது மறுத்தனர். இருப்பினும், லூயி தன்னுடைய கண்டுபிடிப்பில் அதிகப்படியான நம்பிக்கையை வைத்து, தொடர் ஆய்வில் வேறு வகையான பானங்களைக் கொண்டு ஆய்வில் ஈடுபட்டு வந்தார்.
1863ம் ஆண்டில் நெப்போலியன் அரசர், பிரான்ஸின் எல்லா இடங்களிலும் வைன் உற்பத்தியிடங்களில் கெட்டுப்போவதால், ஏற்படும் நஷடம் குறித்து லூயி அவர்களிடம் விளக்கம் கேட்டார். தன்னுடைய தனிப்பட்ட ஆய்வுகளுக்கு இந்த சந்தர்ப்பம் சரியான பதிலை தரும் என்று லூயி எண்ணி, பிரான்ஸின் எல்லா உற்பத்தி இடங்களையும் நேரில் சென்று பார்த்தார். அங்கிருந்து எடுத்து வரப்பட்ட வைனை ஆய்வில் உட்படுத்திய போது, பியர் பானத்தில் கண்ட அதே வகையான நுண்கிருமிகளை இதிலும் கண்டார். மீண்டும் ஒரு முறை நுண்கிருமிகளால் பானங்கள் கெட்டுப்போகின்றன என்பதை ஊர்ஜிதப்படுத்தி, அவற்றை பதப்படுத்தும் முறையை வடிவமைக்கலானார். ஒரு குறிப்பிட்ட சூட்டில் பானங்களை கொதிக்க வைத்து, அதை கெட்டியாக மூடக்கூடிய குடுவைகளில் அடைத்து பதப்படுத்தும் முறையை அப்போது கண்டுபிடித்தார். அந்த முறையை வைன் துறையினர் பின்பற்றி, தரமான பானங்களை உருவாக்கியது மட்டுமின்றி, உற்பத்தி செய்து லாபத்தை பன்மடங்காக மாற்றினார்கள். பாஸ்ச்சுரைசேஷன் என்றழைக்கப்படும் இந்த முறையில்தான் தற்போது, வைன், பியர் மட்டுமின்றி அத்தியாவசிய பொருட்களான பால், தயிர் மற்றும் இதர உண்ணும் பொருட்களை அதிகநாள் வரை பதப்படுத்தி வைப்பதற்காக உபயோகப்படுத்தப்படுகிறது.
லூயி பாஸ்ச்சர்- சில ஷார்ட் தகவல்கள்
•பாஸ்ச்சுரைசேஷன் முறை இவரது பிரபலமான கண்டுபிடிப்பாக இருந்தாலும், லூயி முதலில் உலகிற்கு சொன்னது ஜெம் தியரி (Germ Theory). உயிரினங்கள் தானாக வாழ துவங்கி, இறந்த பின், புழு மற்றும் பூச்சிகள் சதைகளிலிருந்து வெளிவரும் என்று மக்கள் முன்பு நம்பினர். இந்த கருத்து தவறு என்றும், நாம் சுவாசிக்கும் காற்றில் சில கிருமிகள் இருப்பதாகவும், அதன் மூலம் நமக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு நாளடைவில் இறந்துபோவதாகவும் தெரிவித்தார். இந்த கருத்தே, ஜெம் தியரியின் அடிப்படை கருத்தாகும். மக்கள் உண்மையென நம்பிய விஷயத்தை மாற்றி கூறியதால், லூயியை எதிர்த்த அறிஞர்கள் பலர்.
•வைன் துறையில் அதிக லாபத்தை ஈட்டி தந்த பின், பட்டு தொழில் துறையில் ஏற்பட்ட சரிவை லூயி தீர்த்து வைத்தார். பட்டு நூலின் தரம் குறைந்ததற்கு காரணம் கண்டறிய, லூயி தனது மனைவியுடன் சேர்ந்து, வீட்டில் சில பட்டு பூச்சிகளை வளர்த்து கவனித்து வந்தார். இதன் மூலம், பாரசைட் எனப்படும் தொற்று கிருமிகளால் பூச்சிகள் நோயுற்று தரமான பட்டு நூல் உற்பத்தி செய்வதில்லை என்பதை கண்டறிந்தார். நோயுற்ற பூச்சிகளை கவனித்து, தனியாக வைப்பது மட்டுமே தீர்வு என்று அறிந்து பட்டு துறையினருக்கு பரிந்துரைத்தார்.
•அதன் பின், மனிதர்களுக்கு ஏற்படும் கிருமி நோய்கள் மற்றும் அதற்கான குணங்களை பற்றிய ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். சிக்கன் காலரா, ரேபிஸ் போன்ற பல நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்த பெருமை லூயிக்கு உண்டு. இந்த அனைத்து கண்டுபிடிப்புகளுமே அவரது சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பாக பார்க்கலாம். அவருக்கு பிறந்த ஐந்து குழந்தைகளில் மூன்று குழந்தைகள் சிறு வயதிலேயே காலரா, டைபாய்டு போன்ற கொடிய நோய்களுக்கு இரையானது. பிள்ளைகளை பறிகொடுத்த பாதிப்பே, இவரை கிருமிகள் மற்றும் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ற விசாலமான ஆய்வில் அவரை செலுத்தியது. இன்று ஏற்பட்டிருக்கும் பல மருத்துவ வளர்ச்சிக்கு இவருடைய கண்டுபிடிப்புகள் பெரிதும் உறுதுணையாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
•தனது 45வது வயதில் ஏற்பட்ட பக்கவாதத்தினால், உடலின் இடது பக்கம் செயலிழந்து பாதிக்கப்பட்டார். இருப்பினும், அவருக்காக ஒரு நடமாடும் ஆய்வகத்தை அமைத்து அதன் மூலம் அவரது ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் நண்பர்கள் உதவினர். ரேபிஸ் எனப்படும் நாய்கள் மூலம் மனிதர்களுக்கு தொற்றும் வியாதிக்கான தடுப்பு மருந்தை இந்த நடமாடும் ஆய்வகம் கொண்டு கண்டுபிடித்தார் என்பது கூடுதல் தகவல்.
•லூயி ஆரம்பித்த தொற்று நோய்களுக்கான ஆய்வின் அடுத்தகட்ட வளர்ச்சியாக பாரீஸ் நகரில் லூயி இன்ஸ்டிட்யூட் இவரால் நிறுவப்பட்டது. இன்று கிட்டத்தட்ட 133 மையங்கள் உலகெங்கிலும் நிறுவப்பட்டு பல ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றும் வருகின்றன.
உலகமே நம்முடைய முயற்சியை எதிர்த்தாலும், தன்னம்பிக்கை மற்றும் தொடர் உழைப்பை மட்டும் விதைத்து, பல்லாண்டுகள் மறையாத வெற்றியை அடைய முடியும் என்ற வாழ்க்கைப்பாடத்தை சில அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் லூயி பாஸ்ச்சர் நமக்கு தந்துள்ளார்.
கட்டுரையாளர் குறிப்பு:
நித்யா ராமதாஸ், அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். லைஃப் ஸ்டைல், ஃபேஷன், கலை மற்றும் மியூசிக் சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் தேர்ந்தவர். தற்பொழுது கணவருடன் லண்டனில் வசித்து வருகிறார்.