Showing posts with label APRIL 18. Show all posts
Showing posts with label APRIL 18. Show all posts

Wednesday, 2 June 2021

POONAM DHILLON HINDI ACTRESS BORN 1962 APRIL 18

 

POONAM DHILLON HINDI ACTRESS

 BORN 1962 APRIL 18



பூனம் தில்லான் (Poonam Dhillon) ஏப்ரல் 18, 1962இல் பிறந்த இந்திய நடிகை ஆவார். இவர் இந்தி திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தில்லான் 1977இல் "ஃபெமினா மிஸ் இந்தியா" பட்டம் பெற்றவர். இவர் 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] இவர் 1979இல் வெளிவந்த நூரிராஜேஷ் கன்னாவுடன் நடித்த ரெட் ரோஸ்(1980), டார்ட் (1981), நிஷான் (1983), ஜமனா (1985), ஆவம் (1987) திரைப்படங்களின் மூலமாக நன்கு அறியப்படுகிறார். மேலும் இவர் ஜெய் சிவ் சங்கர் (1990), ரொமான்ஸ் (1983), சோஹ்னி மகிவால் (1984), தேரி மெகர்பானியன் (1985), சமுந்தர் (1986), சவேராய் வாலி காடி (1986), கர்மா (1986) நாம் (1986), மாலம்மால் (1988) போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

பூனம் தில்லான், 2009இல் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். மற்றும் 2013இல், சோனி தொலைக்காட்சியின் ஈக் நயி பெஹ்ச்சான் தொடரில் ஷ்ரதா மோடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொழில்[தொகு]

மிஸ் யங் இந்தியாவாக 1978 ஆம் ஆண்டில் தனது 16 வயதில் முடிசூட்டப்பட்டபோது முதன்முறையாக தில்லான் புகழ் பெற்றார்.[2] இயக்குனர் யஷ் சோப்ரா இவரை கவனித்து திரிசூல் என்ற படத்தில் ஒரு வாய்ப்பு வழங்கினார். இப்படத்தில் இடம் பெற்ற கபூச்சி கபூச்சி கம் கம் என்ற பாடலுக்கு நடிகர் சச்சினுடன் நடனமாடினார்.[3][4] சோப்ரா தயாரிப்பில் பின்னர் நூரி (1979) திரைப்படத்தில் நடித்தார். இதற்காக, தில்லானுக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பரிந்துரைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் ஹிந்தி மொழியில் 90 திரைப்படங்களை செய்தார். நடிகர் ராஜேஷ் கன்னாவுக்கு இணையாக பல படங்களில் நடித்துள்ளார்.[5] தில்லான் நடமாடும் ஒப்பனை வாகன தொழிலை ஆரம்பித்தர், இது இந்தியத் திரையுலகில் எவரும் செய்யாத ஒன்றாகும். தனது ஒப்பனை நிறுவனத்திற்கு வானிட்டி எனப் பெயரிட்டார்.


தில்லான் ஒரு கல்வியாளர் குடும்பத்தில் இருந்து வந்தார். அவரது தந்தை ஒரு வானூர்தி பொறியியலாளராக இருந்தார், அவரின் தாய் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார், மேலும் அவரது இரண்டு உடன்பிறப்புகளும் மருத்துவர்கள் ஆவார்கள்.[6] பூனம் தனது 16 வது வயதில் திரைப்ப்டங்களில் தோன்ற ஆரம்பித்த பிறகு பட்டம் பெற்றார். தற்போது அவர் சர்வதேச வர்த்தகத்தில் முதுநிலை வணிக நிர்வாகம் செய்து வருகிறார்.[7] மருந்து விழிப்புணர்வு, எய்ட்ஸ் விழிப்புணர்வு, குடும்ப திட்டமிடல் மற்றும் உறுப்பு தானம் போன்ற சமூக காரணிகளால் அவர் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். காத்மாண்டு மற்றும் தில்லி சார்க் வணிக உச்சி மாநாட்டில் முக்கிய பேச்சாளராகவும் இருந்துள்ளார், மேலும் அவர் கலாச்சார தூதுவராக நியமிக்கப்பட்டார்.[8] அவர் மைன்ட்மைன் நிகழ்ச்சியில் ஒரு பேச்சாளராக இருந்தார்.[9]

சமீபத்தில் அவர் பொயடிக் ஜஸ்டிஸ் பிலிம்ஸ் பிரைவேட் லிமிட்டெட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியுள்ளார்

Poonam Dhillon's Ex-Husband Cheated On Her, To Teach Him A Lesson She Had An Extra-Marital Affair



Poonam Dhillon's life changed in 1978 when she won the Miss Young India crown. She shot to fame overnight. From her debut hit, Trishul, directed by Yash Chopra to her recent flick, Double The Trouble, Poonam Dhillon has acted in more than 80 movies.


What started as a dream became her destiny but Poonam's journey in the entertainment industry has been more than just the work. Today, we will throw some light on her Bollywood love life which saw many ups and downs.





After the success of Trishul, many directors wanted to work with Poonam, but it was Ramesh Talwar who got the opportunity to do so. He had always envisioned Poonam as the protagonist of his film, Noorie. He proposed the idea to Yash Chopra and the movie started building up. During the course of the movie, Ramesh and Poonam became good friends. Soon, Ramesh lost his heart to Poonam and bought a bungalow for her when she decided to stay in Mumbai.




Poonam Dhillon Love Life

It is said that it was Ramesh who was head over heels in love with Poonam while she always considered him as her good friend. She was even linked with Yash Chopra. Poonam rubbished off the gossip of her link-up with Yash Chopra and said that it was disgraceful to link her with him. She realised that Ramesh had feelings for her. She thought that it would be better to keep her distance from the filmmaker and cut-off ties with him

Poonam Dhillon Love Life




It was in the 1980s when Poonam Dhillon saw the peak of her success. It was also the time when she became friends with Raj Sippy. Raj and Poonam met while shooting for a movie. Poonam fell for the director who was already married to someone else. Her relationship with Raj became the talk of the town. Poonam wanted to marry Raj but he wasn't sure about leaving his family for her. Poonam didn't want to play 'the other woman' in Raj's life and parted ways with him.



The year 1988 brought many changes in Poonam's life. She broke up with Raj and a few months later, she lost her father. In the same year, she met her future husband and got married. She was at a friend's farmhouse for Holi celebration but was sitting in a corner as she was mourning the loss of her father. It was then that Ashok Thakeria noticed her. The producer was mesmerised by her beauty. He wanted to cheer up Poonam and poured a bucket of water on her. Poonam was taken aback but liked his gesture.




Ashok started sending flowers to her. Soon they got close and it was in the same year that they got hitched. Poonam's well-wishers were apprehensive about her decision as they thought that it was Poonam's rebound period. According to them, she took the decision of getting married in haste






The rocky road

Poonam Dhillon Love Life


Poonam Dhillon Love Life







Poonam took a break from work after getting married to Ashok Thakeria. The couple was blessed with a son and then with a daughter. Two years after getting hitched, Ashok got busy with her work and Poonam found herself missing the entertainment world. She started working on the silver screen but that wasn't enough for her.



In 1994, Ashok had an extramarital affair and that's when the marriage actually started to crumble. Poonam didn't try to hide her husband's doing and had an extramarital affair herself to give her husband a dose of his own medicine. In 1997, Poonam filed for a divorce and got the custody of her kids.


After facing a rough patch in her life, Poonam picked herself again because the show must go on. She started her own business and took care of her children. She participated in Bigg Boss and did films as well. By 2010, she was back in form and hasn't looked back since then.



Poonam Dhillon might have seen the ugly side of life but with her courage and determination, she was able to stand the test of the time. She is an epitome of strength and we hope that she sees nothing but the sunshine in her life.

Wednesday, 20 May 2020

PRITILATA WADDEDAR AND KALPANA DATTA IN CHITTAKONG ARMOUR RIOTS 1930 APRIL 18



PRITILATA WADDEDAR AND KALPANA DATTA  IN 
CHITTAKONG ARMOUR RIOTS 1930 APRIL 18


This article is a part of the #IndianWomenInHistory campaign for Women’s History Month to remember the untold legacies of women who shaped India, especially India’s various feminist movements. One Indian woman is profiled each day for the whole of March 2019.

In the 1930s, Gandhi was advocating for women to be the face of his nationalist movement because of their propensity for non-violence and passiveness. Revolutionary women who took up arms against the British proved this generalising, reductive statement wrong. In fact, the story of two Bengali women, Pritilata Waddedar 



















and Kalpana Datta, 


who took part in the dangerous Chittagong armoury raid showed India that gallantry and boldness were not exclusively male attributes.

Whether violence was the best way to achieve nationalist goals is still being debated by scholars today. The important thing to note is that these women decided for themselves in spite of the societal pressure to conform to a more traditional femininity. Their lives are a constant reminder to never underestimate the strength of womanhood.

Chittagong Armoury Raid
The Chittagong armoury raid took place on 18 April 1930 and was an attempt at raiding the armoury of police and auxiliary forces, led by freedom fighter Surya Sen.
The volunteers he gathered were part of a revolutionary group of nationalists who believed in using force to fight the British. The original plan was to capture two armouries in Chittagong, subsequently destroying the telegraph and telephone office. The group would then take hostages from the European Club, as most of its members were involved in the colonial government in some form. Amongst these volunteers were two incredible women: Pritilata Waddedar and Kalpana Datta.


The European Club. Image Source: The Daily Star
Pritilata Waddedar
Pritilata Waddedar boldly approached Surya Sen to request to join the Chittagong armoury raid, knowing that it was unusual for women to be involved in dangerous revolutionary activity. A surge in anti-colonial sentiments first occurred in her when her degree in philosophy was held back by the British authorities in Calcutta University, and since then, she had become increasingly involved in anti-colonial groups.

Surya Sen decided that it would be useful to have Pritilata onboard, but even he could not have predicted how much she would contribute to the Chittagong raiders. Pritilata became one of the main masterminds of the raid and created elaborate strategies in preparation for the raid, impressing her comrades with her knowledge and incredible resolve to overthrow the British.


Image Source: Directorate of State Archives

Unfortunately, the raid did not go exactly as they had planned. While they managed to cut some of the telegraph and telephone wires, but they could not locate the ammunition. Furthermore, they had surrounded the European Club, but they were not many members in the building because it had been Good Friday. The Europeans alerted the British troops, who caught the revolutionaries hiding in the hills four days later. 12 died in the fight, but Pritilata and Sen managed to regroup and reorganise the remaining people.


Pritilata’s bust. Image Source: Sam Speak
Pritilata was then given the most important task of her life – to lead 40 men in marching to the Pahartali European club to torch it. This action was taken partly to avenge the massacre in the hills, but also because this particular club had a racist sign that said “Dogs and Indians are not allowed” on it. Pritilata eagerly took up this assignment, and she led the men to the European Club with immense determination and skill.

PRITILATA WAS THEN GIVEN THE MOST IMPORTANT TASK OF HER LIFE – TO LEAD 40 MEN IN MARCHING TO THE PAHARTALI EUROPEAN CLUB TO TORCH IT.

While she and her team managed to torch the club, British troops arrived soon after they had done the deed, and an intense gunfight broke out. Eventually, Pritilata and her team were ambushed by the British soldiers. She and her team fell victim to the troops’ guns, and she was fatally wounded. But Pritilata was not about to surrender to the British. She chose to commit suicide instead of giving herself over to the British, ingesting cyanide at the last moment.

Also read: Begum Hazrat Mahal – Courtesan, Queen And Military Leader | #IndianWomenInHistory

Pritilata exercised agency over her own life up to her very last breath. She was the first Bengali woman to take up arms against the British, and true to her fighting spirit, she wanted to die on her own terms. Pritilata is still known today as the iron lady of Bengal who gave up her life for her country.

Kalpana Datta
Kalpana’s story is one of resilience, strength and survival. She was heavily involved in a semi-revolutionary student organisation called the Chhatri Sangha. It was through this group that she met Pritilata, who later introduced her to Sen. Kalpana was strong-willed and extremely passionate about her country, and signed up to be part of the Chittagong raid. These two women had a strong bond which helped them get through the struggles they faced as part of Sen’s army of teenage revolutionaries.


Image Source: Keyword House
Kalpana was given the responsibility of transporting explosives and other supplies, but she particularly excelled in preparing gun cotton, a certain type of explosive agent. In a way, she was able to use her scientific knowledge to help the cause. Kalpana also assisted Pritilata in planning the raid itself. However, she was captured by the British a week before the raid was carried out. When she was released on bail, she went underground to aid in Pritilata’s plans for torching the European Club. Unfortunately, she was caught together with the rest of the rebels.


KALPANA’S STORY IS ONE OF RESILIENCE, STRENGTH AND SURVIVAL. SHE WAS GIVEN THE RESPONSIBILITY OF TRANSPORTING EXPLOSIVES AND OTHER SUPPLIES AND SHE PARTICULARLY EXCELLED IN PREPARING GUN COTTON.

Even after being arrested twice, Kalpana had not lost her sense of resilience. She successfully escaped from prison and was on the run from the British until they caught her months later. She was sentenced to prison for life, but was released six years later when the British were losing control over India.

Although she lived a relatively quiet life afterwards, Kalpana’s buring spirit manifested in what she passed on to her daughter, Manini Chatterjee. She recounted the entire story of the Chittagong armoury raid to Manini, who was so inspired by her mother that she wrote a non-fiction book called Do and Die: The Chittagong Uprising (1930-34). It is thanks to Manini Chatterjee, another incredible woman, that we know about Kalpana and Pritilata’s legacies today.

Also read: 6 Indian Queens Who Fought Colonialism

In modern society, a man joining the army is seen as chivalrous, almost as if violence in men is expected. These two women were not afraid to put themselves in very real danger, and their choice to do so proves that women are never what society make us out to be.

References
.

Saturday, 18 April 2020

ALBERT EINSTEIN ,SCIENTIST BORN 1879 MARCH 14 - 1955 APRIL 18




ALBERT EINSTEIN ,SCIENTIST 
BORN 1879 MARCH 14 - 1955 APRIL 18


ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein, மார்ச் 14, 1879 – ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999 ல், புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்), "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.

வாழ்க்கைக் குறிப்பு
இளமை, கல்லூரி
ஐன்ஸ்டைன் ஜெர்மனியில், வுர்ட்டெம்பர்க் இலுள்ள உல்ம் என்னுமிடத்தில், 1879 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார், ஹேர்மன் ஐன்ஸ்டீன், பிற்காலத்தில் ஒரு மின்வேதியியல்
(electrochemical) சார்ந்த தொழில் நிலையமொன்றை நடத்திவந்தார். தாயார் போலின் கோச். இவர் ஒரு கத்தோலிக்க ஆரம்பப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். அத்துடன் தாயாரின் வற்புறுத்தல் காரணமாக இளமையில் வயலினும் கற்றுவந்தார். இவர் ஐந்து வயதாக இருந்தபோது, இவரது தந்தையார் இவருக்கு ஒரு சட்டைப்பையில் வைக்கக்கூடிய திசையறி கருவியொன்றைக் காட்டினார். அந்த வயதிலேயே அவர் ஒன்றுமற்ற வெளியில் ஏதோ ஒன்று காந்த ஊசியில் தாக்கம் ஏற்படுத்துவதைப் புரிந்துகொண்டார். அவர் மாதிரியுருக்களையும், இயந்திரக் கருவிகளையும், பொழுதுபோக்காகச் செய்துவந்தார். எனினும், சிறுவனாக இருந்தபோது இவருக்கு மிக மெதுவாகவே கற்கமுடிந்தது எனச் சிலர் கூறுகிறார்கள். இவர் தனது 12 ஆவது அகவையிலேயே கணிதம் படிக்க ஆரம்பித்தார். இவருடைய உறவினரிருவர் அறிவியல், கணிதம் தொடர்பான நூல்களையும், ஆலோசனைகளையும் கொடுத்து, அவரை ஊக்குவித்தார்களாம்.

இவரது தந்தையாருடைய தொழிலில் நட்டம் ஏற்பட்டதனால், 1894 ல், அவரது குடும்பம் மியூனிக்கிலிருந்து, இத்தாலியிலுள்ள மிலான் நகரையடுத்துள்ள பேவியா என்னுமிடத்துக்கு, இடம் பெயர்ந்தது. ஆனால் அல்பர்ட், மியூனிக்கிலேயே பாடசாலைப் படிப்பை முடிப்பதற்காகத் தங்கியிருந்தார். பாடசாலையில் ஒரு தவணையை முடித்துக்கொண்டு குடும்பத்துடன் இணைந்துகொள்ளப் பேவியா சென்றார். பாடசாலைப் படிப்பை முடிப்பதற்காக ஐன்ஸ்டீன் சுவிட்சர்லாந்துக்கு அனுப்பப்பட்டார். 1896ல் பாடசாலைப் படிப்பை முடித்துக்கொண்டு, சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரிலுள்ள சுவிஸ் கூட்டமைப்புப் பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இந்தச் சமயத்தில் அவர் தனது ஜெர்மனி நாட்டு குடியுரிமையை விட்டு, நாடற்றவரானார். 1898ல் மிலேவா மாரிக் என்னும் உடன்கற்றுவந்த செர்பிய பெண்ணொருவரைக் கண்டு காதல் கொண்டார். 1900 இல், சுவிஸ் கூட்டமைப்புப் பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் டிப்ளோமாவைப் பெற்றுக்கொண்டார். 1901 இல், இவர் சுவிற்சர்லாந்தின் குடியுரிமையைப் பெற்றார். இவருக்கு, மிலேவாமூலம், ஒரு மகள் 1902ல் பிறந்தார்.

வேலையும், முனைவர் பட்டமும்

1905ல் ஐன்ஸ்டைன்

(காப்புரிமை அலுவலகத்தில் பணிபுரிந்த பொழுது)
படிப்பு முடிந்ததும் இவருக்குக் கற்பித்தல் வேலையெதுவும் கிடைக்கவில்லை. இவருடன் படித்த ஒருவரின் தந்தையார் 1902 ல், சுவிஸ் காப்புரிமை அலுவலகத்தில், தொழில்நுட்ப உதவிப் பரிசோதகராக வேலை கிடைத்தது. அங்கே கருவிகளைப் பற்றி விளங்கிக் கொள்வதற்கு இயற்பியல் அறிவு பணியாளர் ஒருவர் தேவைப்பட்டது, அங்கே கருவிகளுக்கான காப்புரிம விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதே அவரது வேலை.

பிரௌனியன் இயக்கம்
முதன்மைக் கட்டுரை: பிரௌனியன் இயக்கம்
1905 இல் வெளிவந்த அவரது முதலாவது கட்டுரையான "நிலையான திரவத்தில் தொங்கும் சிறிய துணிக்கைகளின் வெப்ப மூலக்கூற்றுக் கொள்கையினால் வேண்டப்படும் இயக்கத்தில்" அவரது பிரௌனியன் இயக்கம் தொடர்பான ஆராய்ச்சியை விவரித்தது. அப்போது சர்ச்சைக்குள்ளாகியிருந்த திரவ இயக்கவியலைப் பாவித்து, முதன் முதலில் அவதானிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போதும் கூட திருப்தியான விளக்கம் கொடுக்கப்படாத இந்த பிரௌனியன் இயக்கமானது அணுக்கள் இருப்பதற்கான அனுமான ரீதியான ஆதாரமாகக் கொள்ளப்படலாம் என இக்கட்டுரை நிறுவியது.அத்துடன் அப்போது சர்ச்சையில் இருந்த இன்னொரு விடயமான புள்ளிவிவர எந்திரவியலையும் (statistical mechanics) இது தெளிவுபடுத்தியது.

இக்கட்டுரை வெளிவரும் முன் அணுக்கள் என்பது ஒரு பயன்பாட்டு கோட்பாடாக அங்கீகரிக்கபட்டிருந்தாலும் கூட, அணுக்களின் இருக்கை தொடர்பாக இயற்பியலாளர்களுக்கும் வேதியியலாளர்களுக்கும் இடையில் சூடான விவாதங்கள் நடைபெற்று வந்தன. அணுக்கொள்கை தொடர்பான ஐன்ஸ்டீனின் புள்ளிவிபரம் ரீதியான விளக்கம், சாதாரண நுணுக்குக்காட்டியினூடாக நோக்குவதன் மூலம் அணுக்களை எண்ணும் வழியினைப் பரிசோதனையாளர்களுக்கு வழங்கியது. அணுவுக்கெதிரான கொள்கையை வில்கெல்ம் ஒஸ்ட்வால்ட் என்பவர் கொண்டிருந்தார், இவர் ஐன்ஸ்டீனின் பிரெளணியனின் இயக்கம் தொடர்பான முழுமையான விளக்கம் காரணமாகத்தான், தான் அணு தொடர்பாக நம்புதலைப் பெற்றிருந்தார் எனப் பின்னாளில் அர்னால்ட் சொமர்பெல்ட் என்பவரிடம் கூறியிருந்தார்.

ஒளிமின் விளைவு
முதன்மைக் கட்டுரை: ஒளிமின் விளைவு
ஒளியின் உற்பத்தி மற்றும் மாற்றீடு தொடர்பான ஓர் ஆய்வு ரீதியான நோக்கம்" ("Über einen die Erzeugung und Verwandlung des Lichtes betreffenden heuristischen Gesichtspunkt") என்கின்ற அவரது இரண்டாவது ஆய்வுக்கட்டுரையானது ஒளிச்சக்திச் சொட்டு (Light quanta) (இப்போது போட்டோன் (Photon) என அழைக்கப்படுகிறது) என்ற கருதுகோளினை முன்வைத்ததுடன் இது எவ்வாறு ஒளிமின் விளைவு போன்ற விடயங்களை விளக்க பயன்படுத்தப்படலாம் எனவும் விவரித்தது. இச்சக்தி சொட்டுக் கருதுகோளானது, ஒளிச் சக்தியானது ஒரு குறித்த அளவுடைய (தொடர்ச்சியற்ற) சக்திச் சொட்டுக்களாகவே (quanta) உறிஞ்சப்படவோ காலப்படவோ முடியும் எனக் கருதும் போது, மாக்ஸ் பிளாங்க்கினால் முன்வைக்கப்பட்ட கரும்பொருட் கதிர்வீச்சு விதியினை (law of black-body radiation) வலுப்படுத்தியது. ஓளியானது உண்மையில் தனித்தனி சக்திப் பொட்டலங்களாலேயே (Packets) உருவாக்கப்பட்டது எனக் கருதுவதன் மூலம், ஐன்ஸ்டீனினால் மர்மமாகவிருந்த ஒளிமின் விளைவை விளக்க முடிந்தது. ஒளியின் இச் சக்திச் சொட்டுக் கருதுகோளானது, ஜேம்ஸ் மாக்ஸ்வெல்லின் மின் காந்த நடத்தைக்கான சமன்பாடுகளினால் வழிநடத்தப்படும் ஒளியின் அலைக்கொள்கையோடு முரண்பட்டதுடன், பெளதிகத் தொகுதிகளிலுள்ள சக்தியானது மேலும் மேலும் முடிவற்ற பகுதிகளாகப் பிரிக்கப்பட முடியும் (infinite divisibility of energy) என்ற கருத்துடனும் பொதுப்படையாக முரண்பட்டது. ஒளிமின் விளைவுக்கான ஐன்ஸ்டீனின் சமன்பாடுகள் மிகச் சரியானவை என பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்ட பின்னரும் கூட, அவரது விளக்கமானது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனினும், 1921 இல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டபோது ஒளி மின்னியலில் அவருடைய உழைப்பு வியந்துரைக்கப்பட்ட பின்னரே பெரும்பாலான பெளதீகவியலாளர்கள் அவருடைய சமன்பாடு hf = Φ + Ek சரியெனவும் ஒளிச் சொட்டு சாத்தியமெனவும் ஏற்றுக்கொண்டனர் (எண்ணத்தலைப்பட்டனர்).

சக்திச் சொட்டுப் பொறிமுறையினைத் தோற்றுவித்தவர்களால் அடிப்படைத் தத்துவமாகப் பயன்படுத்தப்பட்ட கருதுகோளான ஒளியின் அலைத்-துகள் இரட்டைத்தன்மை (wave-particle duality), அதாவது பெளதிகத் தொகுதிகள் அலைத்தன்மை, துகள் தன்மை ஆகிய இரு வேறுபட்ட இயல்புகளையும் காட்டவல்லவை என்ற கருத்தினைச் சக்திச் சொட்டுக் கொள்கை வலியுறுத்தியது. சக்திச் சொட்டுப் பொறிமுறை விருத்தியடைந்த பின்னரே ஒளி மின் விளைவு தொடர்பான முழுமையான தெளிவு பெறப்பட்டது.

சிறப்புத் தொடர்பியல்
முதன்மைக் கட்டுரை: சிறப்புச் சார்புக் கோட்பாடு
ஐன்ஸ்டைனின் மூன்றாவது ஆய்வுக்கட்டுரையான, "இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல்" ("Zur Elektrodynamik bewegter Körper") என்பது 1905 ஜூன் 30 இல் வெளிவந்தது. இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருந்த காலத்தில் ஐன்ஸ்டீன் மிலேவாவுக்கு "சார்பு இயக்கத்தில் எமது உழைப்பு" என்பது பற்றி கடிதம் எழுதியுள்ளமையானது, மிலேவாவும் இவ் ஆய்வில் பங்கு பெற்றிருந்தாரா எனச் சிலரை வினவ இடமளிக்கிறது. இக்கட்டுரையானது நேரம், தூரம், திணிவு மற்றும் சக்தி தொடர்பான விசேட தொடர்புக் கொள்கையினை அறிமுகப்படுத்தியதுடன் மேக்ஸ்வெலின்மின்காந்தவியலுடன் பொருந்துவதாயும் புவியீர்ப்பு விசையைத் தவிர்ப்பதாயும் இருந்தது.

ஏனைய சில தெரிந்த அலைகளைப்போன்றல்லாது, ஒளி அலை பயணம் செய்வதற்கு நீர், காற்று போன்ற ஓர் ஊடகம் அவசியமில்லை என்பதைக் காட்டிய மைக்கல்சன்-மோர்லி பரிசோதனையினால் (Michelson-Morley experiment) உருவான குழப்பத்தை சிறப்பு சார்பியல் தீர்த்து வைத்தது. இதன் மூலம் ஒளியின் வேகமானது மாறாதது, அவதானியின் இயக்கத்தில் தங்கியது அல்ல என்பது நிரூபணமாயிற்று. நியூட்டனின் புராதனப் பொறிமுறையின் (Newtonian classical mechanics) கீழ் இது சாத்தியமற்றதாகவிருந்தது.

இயங்கும் பொருட்கள் அவற்றின் இயக்கத்திசையில் நெருக்கப்பட்டிருக்குமாயின் மைக்கல்சன்-மோர்லி முடிவு பயன்படுத்தப்பட முடியும் என்பதை 1894 இல் ஏற்கனவே ஜோர்ஜ் பிற்சரால்ட் (George Fitzgerald) என்பவர் ஊகித்திருந்தார். உண்மையில் ஐன்ஸ்டீனின் இவ் ஆய்வுக்கட்டுரையின் சில முக்கியமான சமன்பாடுகளான லோறன்ஸ் மாற்றீடுகள் (Lorentz transforms), 1903 இல் போர்த்துக்கீசிய இயற்பியலாளரான ஹென்ட்றிக் லோரன்ட்ஸ் (Hendrik Lorentz) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டவை என்பதுடன் அவை பிற்சரால்டினுடய ஊகத்தினைக் கணித வடிவில் கூறின. ஆனாலும் இக் கேத்திரகணித விசித்திரத்திற்குரிய காரணங்களை ஐன்ஸ்டீன் தெரியப்படுத்தினார்.

நிறை-ஆற்றல் சமன்மை விதி
முதன்மைக் கட்டுரை: ஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு
ஐன்ஸ்டைனின் மிக புகழ்பெற்ற சமன்பாடான E=mc2 சிறப்பு சார்பு கொள்கையின் மூலம் தருவிக்கப்பட்டதே ஆகும். இது நிறை-ஆற்றல் சமன்மையை பற்றி விளக்குகிறது. இது அணுக்கரு வினைகளின் செயல்பாடுகளை பற்றியும்,விண்வெளியில் உள்ள ஆற்றல் எவ்வாறு நிறையாக மாறுகிறது, நிறை எங்கே போகிறது என்பதையும் விளக்குகிறது. மேலும், இச்சார்பியல் கொள்கையின் மூலம் கால-வெளி வரைபடத்தை வரைய ஏதுவாகிறது. இது காலப் பயணம் போன்ற சுவாரசியமான கருத்துகளுக்கு அடிகோலுகிறது.






நவீன இயற்பியலின் தலை சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை பற்றியும் அவருடைய உலகப்புகழ் பெற்ற சமன்பாடான E=mc2 பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கலாம்.

இந்த சமன்பாட்டின் படி ஒரு ரூபாய் நாணயத்தின் மொத்த நிறையையும், திட, திரவ, வாயு மிச்சம் ஏதுமின்றி ஆற்றலாக உருமாற்றம் செய்தால், அதைக் கொண்டு மொத்த தமிழ் நாட்டின் இரண்டு நாட்களுக்கான மின் தேவையை பூர்த்தி செய்துவிட முடியும். இது சாத்தியமா? உண்மையில் இச்சமன்பாட்டின் பொருள் என்ன? அது எப்படி உருவானது? அது மனித வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை நம்மில் வெகுசிலரே அறிந்திருக்கிறோம்.

நோவாவின் “ஐன்ஸ்டீனின் பெரும் சிந்தனை” என்ற ஆவணப்படம் பார்ப்பதற்கு எளியதாக தோன்றும் இந்த சமன்பாட்டின் வரலாற்றையும், அது உருவான கதையையும் நம் சிந்தனையை தூண்டும் விதத்தில் விளக்குகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள், கருதுகோள்கள் ஒரு வெற்றிடத்திலோ அல்லது ஒரு விஞ்ஞானியின் மூளைக்குள்ளிருந்து மட்டும்  உருவாக்கப்படுவதில்லை. மனிதகுலம் பல நூற்றாண்டு காலமாக திரட்டிய அறிவுச் செல்வத்தின் மீது நின்று கொண்டு அறிவியலாளர்களின் கடும் உழைப்பின் மூலம் அவை கட்டியெழுப்பபடுகிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது.

இளம் ஐன்ஸ்டீன்
இளம் ஐன்ஸ்டீன்
E=mc2 என்ற சமன்பாட்டை நினைக்கும் போது ஐன்ஸ்டீனை வெள்ளை முடியும் சுருக்கம் விழுந்த வயதான மனிதராக பலர் உருவகப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் இச்சமன்பாட்டை உருவாக்கிய போது ஐன்ஸ்டீன் வயோதிகர் இல்லை; துடிதுடிப்பும் துள்ளலும் நிறைந்த இளைஞர். காதல், குடும்பம், கல்லூரி வகுப்புகள், வேலை தேடல், அலுவலக நெருக்கடிகள் என்ற சராசரி போராட்டங்களுக்கு மத்தியில்தான் இந்த மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்தினார்.

அவருக்கு முன் இச்சமன்பாட்டின் ஒவ்வொரு பகுதியையும் உருவாக்கப் போராடிய, பலருடைய வேலையை கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைத்து அவற்றைக் கொண்டு ஒரு கோட்பாட்டு பாய்ச்சலை செய்ததுதான் ஐன்ஸ்டீனின் மேதைமை. இச்சமன்பாட்டின் ஒவ்வொரு பகுதிக்கு பின்னாலும் சாதனை, தோல்வி, சண்டை, பகை, காதல், போட்டி, அரசியல் மற்றும் பழிவாங்கும் கதைகள் உள்ளன.

E = mc2 சமன்பாட்டின் கதை ஐன்ஸ்டீனுக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் ஆற்றல் மாறும் கோட்பாடு கண்டு பிடிக்கப்பட்டதிலிருந்து துவங்குகிறது.

E – ஆற்றல்

19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் விஞ்ஞானிகள் ஆற்றலை அடிப்படையாக கொண்டு உலகை புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கவில்லை. அவர்கள் காற்றின் சக்தி, கதவு மூடப்படும் விசை, மின்னலின் சக்தி இப்படி ஒவ்வொன்றையும் விசைகளாகவும், சக்திகளாகவும் தனித்தனித் தீவாக ஆய்ந்து வந்தனர். அவர்களைப் பொறுத்தவரை  ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனிமுதலானவை, தனித்தனியாக ஆராயப்பட வேண்டியவை.


படிக்க:

SAMYKANNU VINCENT , PIONEER OF TAMIL CINEMA BORN 1883 APRIL 18-1942 APRIL 22



SAMYKANNU VINCENT ,
PIONEER OF TAMIL CINEMA 
BORN 1883 APRIL 18-1942 APRIL 22



சாமிக்கண்ணு வின்சென்ட் (18 ஏப்ரல் 1883 - 22 ஏப்ரல் 1942) தமிழ்த் திரைப்படத் துறையின் முன்னோடிகளில் ஒருவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியாவில் சலனப் படங்களைத் திரையிடத் தொடங்கிய இவர், பின்னாளில் கோயமுத்தூரில் மூன்று திரையரங்குகளை நடத்தினார்; பல தமிழ்ப் படங்களையும் தயாரித்தார். கோவையில் முதன் முதலில் மின்சாரத்தால் இயங்கும் அச்சகத்தையும், அரிசி ஆலையையும், நிறுவியவர் இவரே. கோவையின் முதல் மின்சார உற்பத்தி ஆலையும் இவரால் நிறுவப்பட்டதே.[1]

வாழ்க்கைக் குறிப்பு
சாமிக்கண்ணு வின்சென்ட் 1883 ஏப்ரல் 18-ஆம் தேதி கோவை கோட்டைமேடு பகுதியில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் தம்புசாமி. இவர் கோவை நகராட்சியில் பணிபுரிந்தார்.[3] தனது 22-ஆவது அகவையில் தென்னக இரயில்வே திருச்சி பொன்மலை
புகைவண்டி நிலையத்தில் பொறிமுறைவரைதலறிஞனாக மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் 19௦5-ம் ஆண்டு டியூபாண்ட் என்கிற பிரெஞ்ச் திரைப்படவியலாளரை சந்திக்க நேர்ந்தது. பின்னொரு நாளில் டியூபாண்ட்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது திரைப்பட புரொஜக்டர், படச்சுருள் மற்றும் பிற சாதனங்களை விற்றுவிட்டு தனது தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்தார். இதனை அறிந்த சாமிக்கண்ணு வின்சென்ட் கையிலிருந்த பணத்துடன், தான் மனைவியின் நகைகளை விற்று திரட்டிய ரூபாய்.2,250/- அவரிடம் கொடுத்து உபகரணங்களை விலைக்கு வாங்கினார். தன்னிடம் உள்ள புரொஜக்டர் உதவியால் 'ஏசுவின் வாழ்க்கை' என்ற படத்தை தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் சென்று காண்பித்தார். மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. அவரது அரிய முயற்சி புது முயற்சியாக “கூடார (டென்ட்) கொட்டகை”யை உருவாக்கினார். ஒவ்வொரு ஊராய் சென்று கூடாரம் அமைத்து புரொஜக்டர், திரைச்சீலை உதவியால் படங்களை காண்பித்தார் தென் இந்திய சினிமாவின் தந்தை சாமிக்கண்ணு வின்சென்ட்.


டிலைட் திரையரங்கம் (வெரைட்டி ஹால்) தற்போதைய தோற்றம்
தென்னிந்தியாவில் முதல் நிரந்தர திரையரங்கான வெரைட்டி ஹால் என்ற திரையரங்கு உருவாக்கி படங்களை திரையிடத் தொடங்கினார். (இந்த காலகட்டத்தில் சென்னை கெய்ட்டி, கிரவுன் தியேட்டர் எல்லாம் தற்காலிக கூடார கொட்டகைகளாகத்தான் இருந்தது) அதன் பின் அதே சாலையில் எடிசன் எனும் சாமி திரையரங்கு, பேலஸ் எனும் நாஸ் திரையரங்கு (தற்போதும் செயல்பட்டுக்கொண்டியிருக்கிறது), ரெயின்போ திரையரங்கு (தற்போது ரெயின்போ அடுக்குமாடி குடியிருப்பு) என அவரது திரையரங்கு சாம்ராஜ்யம் விரிவடைந்தது. இதே காலகட்டத்தில் இவர் சினிமா ப்ரொஜெக்டர் தயாரிக்கும் அமெரிக்கா நிறுவனம் ஒன்றின் முகவராகவும் செயல்பட்டு வந்தார். இந்த முகாமையே தென்னிந்தியாவின் முக்கிய இடங்களுக்கு சலனப்படக்காட்சியை எடுத்துச்சென்றது. திரைப்பட தொழில் போக, ஒரு அச்சகமும், மாவு ஆலையும் வைத்திருந்தார். மின்சாரம் மூலம் இயங்கிய அந்த அச்சகத்தின் பெயரே 'எலக்ட்ரிக் பிரின்டிங் ஒர்க்ஸ்' என்பதாகும். இவருக்கு உறுதுணையாக இவரின் சகோதரர் ஜேம்ஸ் வின்சென்ட் இருந்தார். அவரை தொடர்ந்து அவரது மகன் பால் வின்சென்ட் கோவை ரத்தின சபாபதி புரத்தில் லைட் ஹவுஸ் எனும் கென்னடி திரையரங்கை நிறுவினார். ஒரே நேரத்தில் அவர்களிடம்
கிட்டத்தட்ட அறுபது கூடார (டென்ட்) கொட்டைகள் கைவசம் இருந்தன [4] . கோயம்புத்தூர்-திருச்சிராப்பள்ளி சாலை, அரசு மருத்துவமனைக்கு அடுத்து உள்ள ரெயின்போ திரையரங்குக்கு (இப்பொழுது அடுக்குமாடி குடியிருப்பு) நேர் எதிரே அவர் துவங்கிய கம்பெனிதான் வின்சென்ட் சோடா மற்றும் குளிர்பான நிறுவனம். அதேபோல கோயம்புத்தூர்-திருச்சிராப்பள்ளி சாலையில் 1937-ம் ஆண்டு உருவான சென்ட்ரல் ஸ்டூடியோ-வின் இயக்குனர்களில் இவரும் ஒருவர். கோவை, கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள 'வின்சென்ட்' சாலை இவர் பெயரிலேயே அமைந்துள்ளது. இவர் கோயம்புத்தூர் அடுத்து உதகமண்டலம், மதுக்கூர், ஈரோடு, அரக்கோணம், கொல்லம் உட்பட சில கேரள நகரங்களிலும் திரையரங்குகளை உருவாக்கினார்.

தொழில் வளர்ச்சி

படம் காட்டும் முறையில் சில புதுமைகளை அறிமுகப்படுத்தினார் சாமிக்கண்ணு, அவற்றுள் ஒன்று தான் டென்ட் (கூடார) சினிமா. ஒரு புதிய ஊருக்குச் சென்றால் அங்கு இருக்கும் காலி மைதானங்களில் கூடாரம் அமைத்து படங்களைத் திரையிட்டார். சென்னையில் எஸ்பளனேடு பகுதியில் எடிசன் சினிமா மெகாஃபோன் என்ற பெயரில் முதல் டென்ட் சினிமா கொட்டகையைக் கட்டினார். மின்சார விளக்குகள் ஒளிர்ந்த அவரது கொட்டகைகளுக்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். அதி நவீன எந்திரங்களை பயன்படுத்திக் காட்டப்பட்ட அவரது படங்களைக் காண மக்கள் கூட்டமாக வந்தனர். இதனைத் தொடர்ந்து, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் சென்று படங்களைத் திரையிட்டார். துணிக் கூடாரத்தைவிட நிரந்தரமான ஒரு கட்டிடம் வேண்டுமென்பதை உணர்ந்த சாமிக்கண்ணு 1914 இல் கோவையில் வெரைட்டி ஹால் திரையரங்கைக் கட்டினார். (இப்போது அது டிலைட் தியேட்டர் என்ற பெயரில் இயங்கி கொண்டிருக்கிறது).

அயல் நாடுகளிலிருந்து படச்சுருள்களையும், எந்திரங்களையும் இறக்குமதி செய்து பயன்படுத்தினார். தனது படங்களுக்கு விளம்பரம் செய்வதற்கு, துண்டு பிரசுரங்களை அச்சடிக்க 1916 இல் மின்சாரத்தால் இயங்கும் முதல் அச்சகத்தையும் கோவையில் நிறுவினார். பின்னர் மின்சாரத்தால் இயங்கும் அரிசி ஆலை ஒன்றையும் நிறுவினார். தனது ஆலையில் உற்பத்தியான உபரி மின்சாரத்தை கோவை ஸ்டேன்ஸ் பள்ளிக்கு விற்க அரசிடம் அனுமதி பெற்றார். சென்னை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் மின்சாரத் துறை பொறுப்பிலிருந்த சி. பி. ராமசாமி ஐயரின் ஆதரவால் தனியாக ஒரு மின்சார உற்பத்தி ஆலை அமைக்க சாமிக்கண்ணுக்கு உரிமம் வழங்கப்பட்டது. அவர் உற்பத்தி செய்த மின்சாரத்தால் கோவையின் வீதிகளில் மின்சார விளக்குகள் ஒளிர்ந்தன.

தயாரிப்பாளராக
ஆரம்பத்தில் படங்களை இறக்குமதி மட்டும் செய்து வந்த சாமிக்கண்ணு பின்னர், மக்களின் ரசனைக்கேற்ப புதிய படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். 1927 இல் எடிசன் திரையரங்கை விலைக்கு வாங்கி அதில் தமிழ்ப் படங்களைத் திரையிட்டார். பேசும் படங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது, அப்புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கினார். 1933 இல் கல்கத்தாவின் பயனியர் ஃபிலிம் கம்பெனியுடன் இணைந்து வள்ளி திருமணம் என்ற பேசும் படத்தைத் தயாரித்தார். புகழ்பெற்ற நடிகை “சினிமா ராணி” டி. பி. ராஜலட்சுமி, வள்ளியாக நடித்த அந்தப் படம், பெருவெற்றி பெற்றது. சென்னை எல்பின்ஸ்டோன் திரையரங்கில் தினம் மூன்று காட்சிகள் திரையிடப்பட்டது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 1935 இல் ஹரிச்சந்திரா என்ற படத்தை சாமிக்கண்ணு தயாரித்தார். பிரஃபுல்லா கோஷ் இயக்கத்தில் வி. ஏ. செல்லப்பா, டி. பி. ராஜலட்சுமி ஆகியோர் நடிப்பில் அது கல்கத்தாவில் தயாரிக்கப்பட்டது. அடுத்து சாமிக்கண்ணுவின் வெரைட்டி ஹால் டாக்கீஸ் தயாரித்த படம் சுபத்ரா பரிணயம் (1935).

1936 இல் பேலஸ் திரையரங்கை விலைக்கு வாங்கிய சாமிக்கண்ணு அதில் இந்தி மொழித் திரைப்படங்களைத் திரையிட்டார். 1937 இல் கோவையில் சென்ட்ரல் ஸ்டுடியோஸ் தொடங்கப்பட்ட போது, அதில் இயக்குனராக வேலைக்கு சேர்ந்தார். 1939 இல் ஓய்வு பெற்றார்.

மறைவு
சாமிக்கண்ணு 1942 இல் மரணமடைந்தார். அவருக்கு பின் அவரது மகன் பால் வின்சென்ட் அவரது நிறுவனங்களுக்கு பொறுப்பேற்றார்.

சாமிக்கண்ணுவின் பேத்தி ஷீலாவை மணந்து கொண்டவர் 
நடிகர் சந்திரபாபு 



நீங்கள் தீவிர சினிமா காதலரா ? குறிப்பாக திரையரங்கில் போய் சினிமா பார்ப்பவரா அப்படியானால் கண்டிப்பாக நீங்கள் இவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சாமிக்கண்ணு வின்செண்ட், தென்னிந்தியாவில் சலனப்படத்தை திரையிட்ட முதல் தமிழர். இந்திய சினிமாவின் தந்தை தாதா சாகேப் பால்கே என்றால், நாம் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம் தென்னிந்திய திரையரங்குகளின் தந்தை சாமிகண்ணு என்று.

நீங்கள் சினிமாவை நேசிப்பவரா...?  இவரைத்  தெரியுமா உங்களுக்கு?

சாமிகண்ணு தம் வாழ்வை, ரயில்வே வரையாளராக துவங்கியவர். 1905 ஆம் ஆண்டு அப்போது திருச்சியில் ரயில்வேயில் பணியாற்றி கொண்டிருந்தார். ஃபிரான்சை சேர்ந்த டுபாண்ட் என்பவர் அப்போது ஊர் ஊராக சலனப்படங்களை திரையிட்டு கொண்டிருந்தார். இலங்கையிலிருந்து திருச்சி வந்த அவருக்கு, எதிர்பாராத விதமாக உடல்நிலை மோசமானது. அவரிடமிருந்து பிரொஜக்டரை ரூபாய் 2250 க்கு வாங்கிறார் (அப்போது அது மிகப்பெரிய தொகை). எடிசன் சினிமாடோகிராப் என்ற பெயரில் தென்னகத்தின் முதல் டூரிங் சினிமாவை திருச்சி சைண்ட் ஜோஃசப் கல்லூரி அருகே ஆரம்பித்து ‘Life of Jesus' என்ற படத்தை திரையிடுகிறார். அதற்கு கிடைத்த வரவேற்பு, அவரை மதுரை, திருநெல்வேலி, சென்னை, திருவனந்தபுரம், பம்பாய், லக்னோ, லாகூர், பெஷாவர் என பயணிக்க வைக்கிறது.

தேசங்கள் கடந்து பயணித்துவிட்டு மீண்டும், 1909 ஆம் ஆண்டு சென்னை வருகிறார். சென்னை பாரீஸ் கார்னர் அருகே டெண்ட் கொட்டாய் அமைத்து தொடர்ந்து சலனப்படங்களை திரையிடத் தொடங்குகிறார். அதுமட்டுமல்லாமல், பதே ப்ரொஜெக்டர் என்ற கம்பெனியின் விநியோகிப்பாளர் ஆகிறார். இந்த பதே ப்ரொஜக்டரின் வருகை தான் தென்னிந்திய சினிமா எட்டுக்கால் புலி பாய்ச்சலில் பாய காரணமானது.பின், கோவையில் வெரைட்டி என்னும் திரையரங்கத்தை நிறுவினார். அது மட்டுமல்லாமல் பேலஸ், எடிசன் திரையரங்கத்தையும் ஏற்படுத்தி, ஹிந்தி, தமிழ், ஆங்கில படங்களை அப்போதே திரையிட்டார்.

வின்செண்ட் என்னும் மாயவித்தைக் காரன்:.
இதை தாண்டி வின்செண்ட் ஒரு மாயாஜாலவித்தைகாரர். சலனப்படங்கள் இடைவெளியில் இவரே மாயாஜாலவித்தைகளை நிகழ்த்தி இருக்கிறார். இதை அப்போது கிறிஸ்துவ தேவாலயங்கள் கண்டித்து இருக்கிறது. வின்செண்ட் சாத்தானிடம் வரம் வாங்கி தான் இது போல் அற்புதங்களை நிகழ்த்துகிறார். இதை அவர் உடனே நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கைவிடுத்தது. வின்செண்ட் நேரடியாக தேவாலயசபையிடமே சென்று, இதில் மந்திரம் ஏதும் இல்லை, அனைத்தும் தந்திரம் என்ற்ய் நிரூபித்து தொடர்ந்து மாயாஜாலவித்தைகளை தொடர்ந்து நிகழ்த்தினார்.

கோவைக்கு மின்சாரம் அளித்தவர்:

நீங்கள் சினிமாவை நேசிப்பவரா...?  இவரைத்  தெரியுமா உங்களுக்கு?
இதன் மூலம் சம்பாதித்து, பெரும் பணம் ஈட்டினாலும் மக்களுக்காக தன் பணத்தை செலவு செய்யத் தயங்காதவர். இப்போது வின்செண்ட் சாலை, என்றழைக்கப்படும் சாலையில் இருந்த அவரது அரண்மனைக்கு ஒப்பான வீட்டைப் பார்த்தாலே அவர் எப்படி வாழ்ந்தவர் என்று தெரியும், கோவைக்கு முதன்முதலில் மின்சாரம் அளித்தவர் சாமிக்கண்ணு வின்செண்ட். முதன்முதலில் தன் திரையரங்கத்திற்காக மின்சாரத்தை தயாரித்தவர், பின் அனைவருக்கும் மின்சாரத்தை வழங்கினார். அப்போது நம்மை ஆண்டு கொண்டிருட்ந்த ஆங்கில மக்களுக்கும் மின்சாரத்தை வழங்கினார் என்கிறார் வின்செண்டின் பேரம் வில்ஃபிரய் பால். 1933 ஆம் ஆண்டு, கல்கத்தா பயனீர் கம்பெனிவுடம் இணைந்து வள்ளி திருமணம் படத்தை தயாரித்தார் வின்செண்ட்.

கொண்டாட மறந்த தமிழ்ச் சமூகம்:
ஜே. சி. டேனியல் தமிழராக இருந்தாலும் அவரை மலையாளச் சினிமாவின் தந்தை என்று மலையாள கலை உலகம் கொண்டாடுகிறது; அவர் பெயரில் விருது தருகிறது. அவரை பற்றி சினிமாவும் எடுத்துவிட்டது. ஆனால், தென்னிந்தியாவிற்கே சினிமாவை அறிமுகப்படுத்திய தமிழனை, தமிழ் சமூகம் மறந்துவிட்டது. சாலைக்குப் பெயர் வைத்ததோடு சந்தோஷப்பட்டுக்கொண்டது.  கோவையில் வின்செண்ட் துவங்கிய வெரைட்டி ஹால், டிலைட் என்னும் பெயரில் இன்னும் இருக்கிறது. குறைந்தபட்சம் அதில் வின்செண்ட் பெயரில் சினிமா குறித்த அருங்காட்சியகத்தையாவது ஏற்படுத்த வேண்டும்.

இது தான் நாம் அந்த சினிமா பிதாமகனுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

இன்று சாமிக்கண்ணு வின்செண்ட் பிறந்த நாள்.

[

LALITA PAWAR HINDI ACTRESS BORN 1916 APRIL 18 - 1998 FEBRUARY 24



LALITA PAWAR HINDI ACTRESS BORN 
1916 APRIL 18 - 1998 FEBRUARY 24



..லலிதா பவார் (Lalita Pawar) (18 ஏப்ரல் 1916 – 24 பிப்ரவரி 1998)[1] இந்தி, மராத்தி மற்றும் குசராத்து திரைப்படங்களில் 700 படங்களுக்கும் மேலாக குணசித்திர வேடங்களில் நடித்த நடிகையாவார். இவருடைய படங்களில் பாலாஜி பந்தேர்க்கரின் "நேதாஜி பால்க்கர்" (1938), நியூ ஹனா பிக்சர்ஸின், "சான்ட் தாமாஜி", நவயுக சித்ரபதியின் "அம்ரிட்" மற்றும் சய்யா பிலிம்ஸ்ன் "கோரா கும்பார்" போன்ற படங்கள் குறிபிடத்தக்கவை. அவரது மறக்கமுடியாத திரைக் கதாப்பாத்திரங்கள் "அனாரி" '(1959)," "420" மற்றும் "திரு & திருமதி 55" ஆகியவற்றிலும் , ராமானந்த் சாகரின் தொலைக்காட்சி காவிய தொடரான ராமாயனில் "மந்தரை" வேடத்திலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

சுயசரிதை

அம்பா லக்‌ஷ்மண் ராவ் சாகுன் என்ற பெயர் கொண்ட பவார் 1916 ஏப்ரல் 18 அன்று நாசிக்கின் யியோலாவில் பாரம்பரியமான ஒரு குடும்பத்தில் பிறந்தார்.[2] இவரது தந்தை லக்‌ஷ்மண் ராவ் சாகுன் ஒரு பணக்கார பட்டு மற்றும் பருத்தி துணிகள் விற்கும் ஒரு வணிகராவார்.[3] "ராஜா ஹரிசந்திரா " (1928) என்ற திரைப்படத்தில் தனது ஒன்பது வயதில் தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார், பின்னர் பேசாத திரைப்படங்கள் வந்த 1940 இன் காலகட்டங்களில் திரைப்படங்களில் முன்னணி பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து அவரது இறப்பு வரை எழுபது ஆண்டுகள் குணசித்திர வேடங்களில் நடித்து வந்துள்ளார். 1942 ல் கைலாஷ் என்ற படத்தில் இணை தயாரிப்பாளராகவும் நடித்தும் இருந்தார். மேலும், 1938 ல் "துனியா கியா ஹே" என்ற திரைப்படத்தை தயாரித்தார்.


லலிதா பவார், ஹிம்மத்-இ-மார்தா என்ற படத்தின் முன்னணி பாத்திரத்தில் (1935).

1942 ஆம் ஆண்டில், 'ஜங்-இ-ஆசாதி' படத்தில் ஒரு காட்சியின் நடிகர் பகவான் தாதாவுடன் நடிக்கும்போது அவர் தற்செயலாக மிகவும் கடினமாகக் அறைந்து விடுகிறார். இதனால் இவருக்கு முகத்தில் ஒரு வெட்டு காயம் ஏற்பட்டும், இடது கண் நரம்பும் பாதிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் சிகிச்சை பெற்று திரும்பிய இவர் முன்னணி கதாப்பாத்திரங்களை கைவிட்டு, குணசித்திர வேடங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார். இது அவரது வாழ்க்கையை மாற்றியமைத்து பெரும் புகழை பெற்றத்தந்தது.[4] இவர் குறிப்பாக மருமகளைத் துன்பப்படுத்தும் மாமியார் வேடங்களில் பெரும்பாலும் நடித்து வந்தார். மேலும் இருசிகேசு முகர்ச்சி இயக்கத்தில் இந்தி நடிகர் ராஜ் கபூருடன் அனாரி படத்தில் நடித்தது அவர் வாழ்நாளின் ஒரு சிறந்த நடிப்பாக அமைந்தது.[5] இப்படத்திற்காக பிலிம்ஃபேர் சிறந்த துணை நடிகைக்கான விருதினைப் பெற்றார். மேலும் "பேராசிரியர் (1962 திரைப்படம்) "(1962) மற்றும் ராமானந்த் சாகர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் "மந்தரை" போன்ற பாத்திரங்கள் குறிப்பிடத்தக்கதாகும். 1961 ஆம் ஆண்டில் இந்திய சினிமாவின் முதல் பெண்மணி என இந்திய அரசால் இவர் கௌரவிக்கப்பட்டார்.[4]

சொந்த வாழ்க்கை

கண்பத்ரோ பவாருடன் இவரது முதல் திருமணம் நடைபெற்றது , இவருடைய இளைய சகோதரியிடம் தனது கணவரின் கவனம் சென்றதால் அவருடன் விவகாரத்து பெற்று, பின்னர் பாம்பே அம்பிகா ஸ்டூடியோவின் திரைப்பட தயாரிப்பாளர் ராஜ்பிரகாஷ் குப்தாவை மணந்தார்.[6] 1988 பிப்ரவரி 24 அன்று புனேவில் காலமானார்.

விருதுகள்

1959: அனார் படத்திற்காக பிலிம்ஃபேர் சிறந்த துணை நடிகை விருது[7]
1961: நடிப்பிற்காக- சங்கீத நாடக அகாதமி விருது [8

JOAN OF ARC,THE SAINT, RECOGNISED ON 1871 APRIL 18



JOAN OF ARC,THE SAINT, 
RECOGNISED ON 1871 APRIL 18


ஜோன் ஆஃப் ஆர்க் (Saint Joan of Arc)[3] கி.பி 1412 ஜனவரி 6 ஆம் தேதி [4] பிரான்சு நாட்டில் உள்ள டாம்ரேமி என்ற இடத்தில் பிறந்தார் என நம்பப்படுகிறது. இவர் பிரான்சு நாட்டு வீராங்கனையும் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவரது தந்தை ஜாக்குஸ் டி ஆர்க் ஆவார். இவரது தாயார் இஸபெல்லா. இவர்களுக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். அதில் புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் மூன்றாவது குழந்தை ஆவார். இவரது தந்தை ஒரு விவசாயி எனவே புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் தனது குழந்தைபருவத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து விவசாயத்திலும் கால்நடை பராமரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். மேலும் புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் தன் தாயாரிடம் இருந்து தனது மதம் மற்றும் அதன் கோட்பாடுகள் பற்றியும், வீட்டை பராமரிப்பதைப் பற்றியும் கற்றுக்கொண்டார். இவரது பெற்றோர்கள் ஆழ்ந்த இறைநம்பிக்கை உடையவர்களாகத் திகழ்ந்தனர். எனவே புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்களும் ஆழ்ந்த
இறைசிந்தனையுடையவராகவே இருந்தார். அந்நியரை ஓர்லியன்சை விட்டு விரட்ட தன்னைக் கடவுள் படைத்திருப்பதாக நம்பினார். பிரெஞ்சு படையை தலைமை ஏற்று வழிநடத்தினார். இவரால் ஊக்கம் பெற்ற பிரெஞ்சு வீரர்கள், இவரின் தலைமையின் கீழ் அந்நியரை வெற்றி கொண்டனர். இவர் பிரெஞ்சு படையினர் நூறாண்டுப் போரின் போது பல முக்கிய வெற்றிகள் அடைய காரணமானார்.[5] இவையே பிரான்சின் ஏழாம் சார்லஸின் முடிசூடலுக்கு வழிவகுத்தது.


ஆயினும் பர்கண்டியர்களால் பிடிக்கப்பட்ட இவர், பிரான்சின் எதிரிகளாயிருந்த ஆங்கிலேயரிடம் விற்கப்பட்டார்.[6] அவர்கள் பேயுவைஸின் ஆயர் பியேர் கெளசின் துணையோடு இவரை சூனியக்காரி எனவும் தப்பறை கொள்கையுடையவர் எனவும் பொய் குற்றம் சாட்டி, இவரின் 19 ஆம் வயதில் இவரை உயிரோடு தீமூட்டிக் கொன்றனர். இவர் இறந்து 25 ஆண்டுகளுக்குப்பின் திருத்தந்தை மூன்றாம் கலிஸ்டஸிலால் இவரின் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு, இவர் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது.[7] 16ம் நூற்றாண்டில், ஜோன் ஆப் ஆர்க் பிரன்சு கத்தோலிக்க மதத்தின் சின்னமாக கருதப்பட்டார். பின்னர் 1803ம் ஆண்டில், நெப்போலியன் போனபர்ட் ஜோனின் வீரத்துக்காகவும், நாட்டுப்பற்றுக்காகவும் அவரை பிரான்சு நாட்டின் சின்னம் என்று கூறினார்.[8]

பின்னர் இவருக்கு புனிதர் பட்டமளிப்புக்கான பணி துவங்கப்பட்டு, ஏப்ரல் 18, 1909 அன்று திருத்தந்தை பத்தாம் பயஸால், நோட்ரே டேம் டி பாரிஸ் கோவிலில் அருளாளர் பட்டமும், உரோமையில் மே 16, 1920, அன்று திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்டால் புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது. இவரின் விழா நாள் மே 30 ஆகும்.

ஆரம்ப வாழ்க்கை
ஜோன் ஆஃப் ஆர்க், ஜனவரி மாதம் 6ம் தேதி அன்று, கிழக்கு பிரான்சில் 'டார்மெரி' என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார். தந்தையின் பெயர், 'ஜாக்கஸ் தி ஆர்க்' மற்றும் இவரது தாயாரின் பெயர், 'இசபெல்'. இவர்கள் ஜோனுக்கு எழுதப் படிக்க கற்று தரவில்லை, மாறாக கத்தோலிக்க திருச்சபையில் சேர்த்தனர். ஆங்கிலேயர்களுக்கும் பிரான்சுக்கும் இடையே உள்ள முரண்பாட்டின் காரணமாக, அவர் வாழ்ந்த பகுதியில் சண்டைகள் நடக்கும்.[9].

ஜோனுக்கு தமது 12 வயதிலிருந்தே, செவிவழி அருளும் அவ்வப்போது தெஉவீக தரிசணங்களும் கிட்டியதாக கூறப்படுகிறது. சிறுவயதில் தோன்றிய தரிசணங்களில் இறை பக்தி கொள்ளுமாரு அறிவுருத்தியதாகவும், இந்த தரிசணங்களில், புனித மைக்கேல், புனித கேத்தரீன், மற்றும் புனித மார்கரட் உருவங்கள், ஜோனுக்கு காட்சியளித்தாகவும் கூறப்படுகிறது. இதை அரசாங்க நூல்களும் உறுதி செய்கின்றன.[9] பின்னர் ஒரு நாள், பிரான்சை காப்பாற்ற ஜோனின் உதவி தேவை என்றும், 'அரசர் சாலர்ஸுக்குதான் பிரான்சை ஆட்சி செய்ய உரிமையுள்ளது' என்று தமக்கு அருள் கிட்டியதாக, அவரது சுயசரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.[10]

இதன் பொருட்டு, ஜோனின் உறவினரான 'டியூரான்ட் லாஸ்ஸோஸிடம்', தம்மை சார்லஸின் ஆதரவாளாரான கோமான் ராபர்ட் தி பாட்ரிகோர்டிம் அழைத்துச் செல்லுமாறு வேண்டினாள். ராபர்டிம் தான் அரசர் சார்லஸை சந்திக்க உதவுமாறு கேட்டாள். ஆனால் அவர் அதுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஜோனின் விடா முயற்சியால், இறுதியில் ஒப்புக்கொண்டார். அப்போது, அந்த பகுதியில் போர் நடந்துக் கொண்டிருந்ததால், அந்த கோமான் ஜோனை ஆண் போல வேடமிட்டு, ஆயுதமேந்திய துணைகளுடன் சினானுக்கு அனுப்பி வைத்தார்.

படைத்தளபதி
11 நாட்கள் பயனத்திற்கு பிறகு, ஜோன் ஆப் ஆர்க், 'சினான்' மார்ச் 4ம் தேதி வந்தடைந்தார். அரசவையில் ஜோனின் கட்டுக்கடங்கா உணர்ச்சியைக் கண்ட சார்லஸின் முகம் பிரகாசமடைந்தது.[9] பல வேதாந்த ஆய்வுகளுக்குப் பிறகு,[11]

மார்ச் 1429 அன்று, ஜோனின் வேண்டுகோளுக்கு இணங்க, அரசர் சார்லஸ், ஜோனுக்கு ஒரு படை அளித்து, அதன் படைத்தளபதியாகவும் நியமித்தார். ஜோன் வெள்ளை போர் கவசமும், ஒரு வெள்ளை குதிரையிலும் போருக்குச் சென்றார். ஒரு விவசாயி மகளாக இருந்த போதிலும், 17ம் வயதில் ஒரு அரசாங்கத்தின் படைத் தளபதியானது குறிப்பிடத்தக்கது. படைத்தளைபதியானப் பின், படை வீரர்களிடையே பல சீர் திருத்தங்கள் செய்தார். பிரான்சில் இருந்த ஆங்கிலேயரை ஓர்லியன்சை விட்டு விரட்ட ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் போர் தொடுத்தார். அவர் தளபதியாக பிரெஞ்ச் படையினரை வழிநடத்த, பிரான்சின் சார்லசு மன்னர் ஆதரவுடன் கடுமையாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் கோட்டையை கைப்பற்றினர். போரில் ஜோன் ஆஃப் ஆர்க் படுகாயமுற்றார். இந்த வெற்றியால் ரைம்சு தேவாலயத்தில் ஜோன் ஆஃப் ஆர்க் முன்னிலையில் சார்ல்ஸ் மன்னர் முடி சூடினார். இந்த வெற்றியால் ஜோன் ஆப் ஆர்க் மற்றும் அவரது குடும்பத்தினர்க்கு, அரச குல உயர்குடி நிலை அளிக்கப்பட்டது.

ஆங்கிலேயர்கள் பின்வாங்கி ஓடும் தருணத்தை பயன்படுத்தி, அரசர் சார்லஸை படைகளை முன்னோக்கி பாரிஸ் நகரத்தைக் கைப்பற்ற, ஜோன் வேண்டினார். ஜோன் ஒர்லியன்சைக் கோட்டையை கைப்பற்றிய போதிலும், அரசவையிலுள்ள மற்ற அமைச்சர்களுக்கு ஜோனின் மீது நம்பிக்கை வரவில்லை. ஆகையால் பாரிஸை நோக்கி படை எடுக்க வேண்டாம் என்று அரசருக்கு, அவர்கள் அறிவுறித்தினர்.

ஓர்லியன்ஸ் போரில் தோல்வியுற்றதால் ஆங்கிலக் படைத்தளபதிகளான ஜான் போயர், ஆயர் பீட்டர் கெளஸானும் ஜோன் ஆஃப் ஆர்க்கை பழிவாங்கத் திட்டமிட்டனர்.

சிறைப்பிடிப்பு
அரசர் சார்லஸின் கட்டளையின் படி 'கோம்பைன்' நோக்கி அவரது தம்பி 'பியர்ரே'வுடன், ஆங்கிலேயர்களையும் புர்கண்டியேர்களையும் எதிர்க்கும் மக்களுக்கு உதவி செய்ய சென்றார். ஜோன் தன்னுடன் இருந்த சிறு படையுடனேயே போரிட்டு 'கோம்பைன்' மற்றும் சில தளங்களைப் பிடித்தார். பாரிசைத் தாக்கச் சென்ற ஜோன் ஆஃப் ஆர்க்கின் சிறுபடை சார்லசு மன்னரின் ஆதரவு இல்லாததால் பலம் குறைந்து தோல்வியுற்றுப் பின்வாங்கியது. காம்பைஞ் கோட்டைக்கு திரும்பும் போது ஜோன் ஆப் ஆர்க் தன் குதிரையிலிருந்து கீழே விழுந்தார். இந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்டு புர்கண்டியேர்கள் ஜோனைக் கடத்திச் சென்று சிறையிட்டனர்.

ஜோன் புர்கண்டி கோட்டையிலிருந்து தப்பிக்க பல முறை முயற்சி செய்தார். ஒரு சமயம், 70 அடி கோபுரத்திலிருந்து குதித்து தப்பிக்க முயன்றார்.[12]. இதனை அடுத்து, புர்கண்டியேர்கள் ஜோனை ஆங்கிலேயர்களிடம் 10000 காசுக்களுக்கு பரிமாற்றம் செய்தனர். ஆங்கிலேயர்கள் ஜோனை பாரீஸ் நகரத்துக்கு கொண்டு சென்றனர்.

இறப்பு

ஜோன் ஆஃப் ஆர்க்கின் மரணத்தை சித்தரிக்கும் ஓவியம். மேக்சிமம் இரியல் டென் சாரதி என்ற ஓவியரால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இது வரையப்பட்டது.[13]
உரோவன் சிறையில் ஜோன் ஆஃப் ஆர்க் அடைக்கப்பட்டார். ஜோன் ஆப் ஆர்க்கை, போர் குற்றவாளியாக கருதாமல், கிருத்துவ மதத்திற்கு எதிரானவர் மற்றும் சூனியக்காரி போன்ற குற்றங்களைக் கொண்டு அவரது வழக்கை, இறையியல் நீதிமன்றத்தில் விசாரத்தனர். பிப்ரவரி 21 முதல் மார்ச் 24 வரை, குறைந்தப் பட்சம் 12 முறையாவது, ஜோனை குறுக்கு விசாரணை செய்தனர். முதலில் ஜோனின் வழக்கை பொது மக்கள் முன்னிலையில் விசாரித்தனர். ஆனால் ஜோன் அளித்த சாமார்த்திய பதில்க்ளைக் கண்டப் பின்னர், ரகசிய விசாரணைகள் நடந்தது. ஜோனைப் போல் ஆங்கிலேயர்களை எதிர்ப்பவர்களுக்கு இது பாடமாக இருக்கும் என்று ஆங்கிலேயர்கள் நம்பினர்.

ஆண்கள் உடையை அணிந்தது போன்ற ஏறத்தாழ 70 குற்றங்களைக் கொண்டு, இறையியல் நீதிமன்றம் ஜோனுக்கு மரணதண்டனை விதித்தது. அதன்படி தனது 19ம் வயதில் மே 30, 1431 அன்று ஜோன் ஆஃப் ஆர்க், சுமார் 10000 மக்கள் முன்னிலையில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.[14]

ஜோனின் சாவிற்கு பிறகு, சுமார் 22 ஆண்டுகள், பிரன்சுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே போர் நடந்தது. அதன் பின்னர், சார்லஸ் பிரன்சு நாட்டின் மகுடம் சூடினார். அரசர் சார்லஸ், ஒரு விசாரணை குழு வைத்து, ஜோன் நிரபராதி என தீர்ப்பு வழங்கினார். ஜோனுக்கு புனித பட்டம் மே 16, 1920ல் வழங்கப்பட்டது.

ஊடகங்களில்
தி டிரையல் ஆஃப் ஜோன் ஆஃப் ஆர்க் என்ற திரைப்படம் 1962ஆம் ஆண்டு வெளிவந்தது.
ஜோன் ஆஃப் ஆர்க் பற்றிய வரலாற்றுத் திரைப்படம் தி மெசன்சர் - தி சுடோரி ஆஃப் ஜோன் ஆஃப் ஆர்க் (The Messenger – The Story of Joan of Arc) என்ற பெயரில் 1999 ஆம் ஆண்டு வெளியானது. இதில் மில்லா ஜோவோவிக்கு ஜோன் ஆஃப் ஆர்க் பாத்திரத்தில் நடித்திருந்தார்.[1