TEACHERS DAY SEPTEMBER 5
டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் தேதி 'ஆசிரியர் தினமாக' இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் புகழ் மிக்கவர்களாகத் திகழ்ந்த மூன்று பேரில் ஒருவர் சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன். தேசப்பிதா மகாத்மா காந்தி, நோபல் பரிசு வென்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் மற்ற இரு இந்தியர்கள்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்து, எளிமையாக வாழ்ந்து, புகழின் ஏணிப்படிகளில் ஏறியவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். உலகம் சுற்றியவர். ஆனால் உல்லாசத்தை அவர் அனுபவிக்காதவர். ஆசிரியர்க்கெல்லாம் ஆசிரியராகவும், அரசியல்வாதிகளுக்கெல்லாம் ஆசானாகவும் விளங்கியவர். காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, ராஜாஜி போன்ற தலைவர்களின் அன்புக்கும் பாசத்துக்கும் பாத்திரமானவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்.
ஆசிரியர் பணியில் சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்கியவர், இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவி வரை உயர்ந்து, இந்தியாவின் உயரிய விருதான 'பாரத் ரத்னா' விருதை முதல்முறையாகப் பெற்று புகழ் சேர்த்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். திருத்தணியில் ஆரம்பக் கல்வியையும், திருப்பதியில் பட்டப்படிப்பும் பயின்ற இவர், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.
இளம் வயதிலேயே புத்தகங்களை ஆழ்ந்து படிக்கும் திறமை கொண்டவர். படித்ததைப் பற்றி சிந்திப்பதும் அவருக்குக் கல்வியில் பலமான அடித்தளம் அமைக்க உதவின. பாட நூல்களைத் தவிர வேதாந்தம், அரசியல் விடுதலை சம்பந்தப்பட்ட நூல்களையும் கற்றுத் தேர்ந்தார்,. ஆதி சங்கரரின் அத்வைத கொள்கையைப் படித்துப் பரவசமானார். பைபிள், ஐரோப்பிய சிந்தனைகள், ஆங்கில இலக்கியங்களில் ஊறித் திளைத்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். வேதாந்தக் கருத்துகளை தனி அணுகுமுறையுடன் ராதாகிருஷ்ணன் விளக்கிக் கூறுவார்.
இவரைப்பற்றி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் இப்பர்ட் ஜோன்ஸ் கூறுகையில், "டாக்டர் ராதாகிருஷ்ணனின் பார்வையில் மாயாஜாலம் உள்ளது. அவரின் சொற்பொழிவில் இன்னிசை தேனாக இனிக்கிறது. முகத்தில் ஒளி வீசுகிறது" என்று புகழ்ந்துரைத்தார்.
"தெளிவான தீர்க்க தரிசன எண்ண ஓட்டம், தானாக வரும் தரமான சொற்கள், அழகான மொழிநடை கொண்டவர்" என்று அவரிடம் பயின்ற மாணவர்கள் அவருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கிரேக்க தத்துவ ஞானி பிளேட்டோ, "தத்துவ ஞானிகள் அரசர்களாக இருக்க வேண்டும். அல்லது அரசர்கள், சிற்றரசர்கள் தத்துவக் கருத்துகளைப் பயின்றிருக்க வேண்டும். இல்லைபென்றால், மக்கள் தங்களைப் பீடித்துள்ள கெடுதல்களில் இருந்து மீளமுடியாது. அரசியலில் உயர்ந்த எண்ணங்களும், தத்துவ ஞானமும் ஒருசேர இணைந்த மனிதனால் மட்டுமே நாட்டிற்கு நல்ல ஒளி காட்ட முடியும்" என்று குறிப்பிட்டார்.
பிளேட்டோவின் இந்தப் பிரகடனம், இந்தியாவில் 1962-ம் ஆண்டில் நிரூபிக்கப்பட்டது. அதாவது டாக்டர் ராதாகிருஷ்ணன் என்ற அரசியல் வித்தகர், தத்துவமேதை குடியரசு துணைத் தலைவராக இந்த ஆண்டில்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். பத்தாண்டுகள் கழித்து, அவரே குடியரசுத் தலைவரானார்.
ஒருமுறை பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அளித்த விருந்தில் கலந்துகொண்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் தனது கையால் உணவைச் சாப்பிட்டார். இதைக்கண்ட சர்ச்சில், "கைகளால் சாப்பிடுவதைவிட ஸ்பூனால் சாப்பிடுவதே ஆரோக்கியமானது" என்று கூறினார். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணன், "ஸ்பூன் வைத்து சாப்பிடுவது சுத்தம் என்றால், கைகளால சாப்பிடுவது அதைவிட சுத்தமானது. காரணம், நம் ஸ்பூனை வைத்து மற்றவர் சாப்பிட்டு எச்சில் படுத்தலாம். ஆனால், நம் கையை வைத்து மற்றவர் சாப்பிட முடியாது" என்று வாதிட்டார். ராதாகிருஷ்ணனின் வாதத் திறமையைக் கண்டு சர்ச்சிலும், மற்றவர்களும் வியந்து பாராட்டினர்.

மைசூர் பல்கலைக்கழகத்தில் கூடுதல் பேராசிரியராகச் சேர்ந்து பணியாற்றினார். தத்துவக் கருத்துகளை எழுதியவர், 'லீலாவின் குற்றம்' என்ற நாவலையும் எழுதிப் புகழ் பெற்றார். அதில் ஒரு பாத்திரத்தில் தன் சுயசரிதையை ராதாகிருஷ்ணன் கோடிட்டுக் காட்டியிருப்பார். மைசூர் பல்கலைக்கழகத்தில் இருந்து, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஐந்தாம் ஜார்ஜ் தத்துவப் பேராசிரியர் பதவியில் நியமிக்கப்பட்டார். மைசூர் பல்கலைக்கழகத்தில் இருந்து அவர் கொல்கத்தா புறப்பட்ட போது, அவருக்கு அளிக்கப்பட்ட பிரிவு விழாவின் போது, ரயில் நிலையம் வரை குதிரை வண்டியில் செல்வதாக ஏற்பாடு.
ஆனால், மாணவர்கள் குதிரைகளை அவிழ்த்து விட்டு, தங்களுக்கு மிகவும் பிடித்த பேராசிரியர் ராதா கிருஷ்ணனை தாங்களே வண்டியை இழுத்துக் கொண்டு ரயில் நிலையம் வரை சென்று அனுப்பி வைத்தனர். இதைக்கண்ட பொதுமக்கள் வியந்தனர். மாணவர்கள் அளித்த பிரிவுபசார விழாவைக் கண்டு ராதாகிருஷ்ணன் மனம் நெகிழ்ந்தார். 'கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்பதை உணர்த்துவதாக அந்த நிகழ்வு அமைந்தது.
"இந்து மதம் என்று குறிப்பிடுவதை விட இந்தியத் தத்துவம் என்றே கூற வேண்டும்" என்னும் அளவுக்கு இந்து மதத்தின் கருத்துகளை ஆழமாக உணர்ந்து வைத்திருந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். பிரிட்டன் பல்கலைக்கழகங்களின் மாநாட்டிற்கு கல்கத்தா பல்கலைக்கழகம் சார்பாக ராதாகிருஷ்ணன் சென்றார். கேம்பிரிட்ஜ், லண்டனில் உரை நிகழ்த்தினார். ஹார்வர்டு பகுதியில் அனைத்துலக தத்துவ மாநாட்டில் எவ்விதக் குறிப்பும் இல்லாமல் மடைதிறந்த வெள்ளம்போல் அவர் ஆற்றிய உரையை அங்குக் கூடியிருந்தவர்கள் ஆச்சர்யத்துடன் கேட்டு ரசித்தனர்.
'சாதி உணர்வு கூடாது; தீண்டாமை இந்து சமயத்துக்குத் தேவையில்லாதது' என்பதில் உறுதியாக இருந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். மாணவர்கள் எந்நேரமானாலும் தன் வீட்டுக்கே வந்து சந்தேகம் கேட்பதை விரும்புவார். மாணவர்களின் தோளில் கைபோட்டு, நட்புணர்வுடன் பழகும் குணம் அவரிடம் இருந்தது. மேலும் தன் கையாலேயே மாணவர்களுக்கு தேநீர் போட்டுக் கொடுப்பார். டாக்டர் ராதாகிருஷ்ணனின் மாணவர்களில் ஒருவராக விளங்கியவர் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் நிஜலிங்கப்பா.
ஆசிரியராகப் பணியாற்றி, குடியரசுத் தலைவர் பதவிவரை உயர்ந்து, தான் வகித்த பதவிக்குப் பெருமை சேர்த்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் தேதி 'ஆசிரியர் தினமாக' இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
தத்துவ மேதையாகவும், ஞானியாகவும் திகழ்ந்து, இந்திய அரசியலில் குறிப்பிடத்தக்க மேதையாக விளங்கியவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். தனது கருத்தை தெளிவுடனும், ஆணித்தரமாகவும் தெரிவிக்கும் வல்லமை படைத்த டாக்டர் ராதாகிருஷ்ணன், 1975-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி காலமானார். இந்நாளில் அவரின் நினைவைப் போற்றி வணங்குவோம்.
டாக்டர் சங்கர் தயாள் சர்மா ஜனாதிபதியாக இருந்த சமயம்..
அரசு முறை பயணமாக 'மஸ்கட்'டுக்கு செல்கிறார்..
அந்த நாட்டின் மரபை மீறி அரசரே விமான நிலையம் வந்து அவரை வரவேற்க காத்திருகிறார்..விமானம் நின்று படிகள் இணைக்கப் பட சர்மா அவர்கள் வெளிப்படுகிறார்..
அவரைக் கண்டதும் அரசர் படியில் ஓடிச் சென்று அவர் கைகளைப் பற்றிக் கொண்டு அளவளாவிக் கொண்டு இறங்கி வருகிறார்..இது அந்நாட்டு அதிகாரிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் கொஞ்சம் அதிகப்படியாகவே தோன்றுகிறது..
எதுவும் காட்டிக் கொள்ளவில்லை, அரசர் ஆயிற்றே..
ஆயிற்று..
அரசு சார்ந்த காரியங்கள் அனைத்தும் முடிந்து இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக பத்திரிக்கை யாளர்களைச் சந்திப்பு நடைபெறுகிறது...
சம்பிரதாய கேள்விகள் முடிந்து அந்த நாட்டு பத்திரிகை நிருபர் அந்த கேள்வியை அரசரின் வைக்கிறார்.."இதுநாள் வரை எத்தனையோ நாட்டின் உயர் தலைவர்கள் வந்த போதும் நேரில் வராத அரசர் ஒரு ஜனாதிபதியை வரவேற்க ஏன் மரபை மீறி வரவேண்டும், அப்படி என்ன அவர் சிறப்பு".???
அங்கே ஒரு சிறு சலசலப்பு..
அரசர் பதிலளிக்கிறார்,
" நான் இப்போது அரசனாக இருக்கலாம்,
அவர் ஜனாதிபதியாக இருக்கலாம்,
ஆனால் நான் இந்தியாவில் பூனா பல்கலைக் கழகத்தில் படிக்கும் போது எனக்கு கல்வி போதித்த ஆசான் அவர்..வெறுமனே கல்வி போதித்தலையும் தாண்டி அந்நாட்டின் கலாச்சார பண்பாடுகளைப் பற்றிய தெளிவான பார்வையை எனக்கு கொடுத்தவர்..இன்றளவும் நான் ஓரளவு பண்பானவனாக இருப்பதாக நினைப்பதற்கு அவரின் தோழமையான வழிகாட்டுதலும் ஒரு காரணம்"..
"இந்திய மண்ணில் கல்வி போதிக்கும் ஆசிரியரை கடவுளுக்கு நிகராக போற்றுகிற பண்பாடு கொண்டவர்கள் அவர்கள்..கொஞ்சம் காலம் நானும் அந்த மண்ணில் இருந்தவனில்லையா..?
அந்த பண்பாடு எனக்கும் வருவதில் ஆச்சரியம் என்ன இருக்கப் போகிறது"..என பெருமையாக குறிப்பிடுகிறார்..சர்மா அவர்களுக்கு பூரிப்பாக இருக்கிறது, ஒரு அன்னிய தேச மாணவனுக்கு சிறப்பான பண்பை போதித்த ஆசிரியராக நெகிழ்வில் அவர் குழைந்து போகிறார்..
உள்ளுக்குள் இந்த ஸ்லோகம் ஒலிக்கிறது அவருக்கு...
"குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹா
குரு சாட்சாத் பரப்பிரம்மம்
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ"..
ஆசிரியர் தின வாழ்த்துகள்.
செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினம்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்
உலகில் தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர்கள், பிறரால் என்றென்றும் ஞாபகம் கொள்ள படுகிறார்கள்.
தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாய் கொண்டாடினால் அகமகிழ்வு கொள்வேன் என கேட்டு கொண்டார். அது முதல் செப்டம்பர் ஐந்து, ஆசிரியர் தினமாய் கொண்டாட படுகிறது.
செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினம்.
மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மை படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது. 'எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு" என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான்.
தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம்.
இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர்; மகிழ்ச்சி தோன்றும். இதனை சொல்வதை விட உணர்வுப் பூர்வமாக உணர முடியும்.
தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர்.
அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர். 42 டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் ராதகிருஷ்ணண் அவர்களின் பிறந்த நாளைத் தான் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. தெளிவான, சிறப்பான மாணவ சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது என்பதை இங்கு யாரும் மறுக்கமுடியாது. அதிலும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பினை தான் நாம் அதிகம் பாராட்ட வேண்டும்.
சிறு குழந்தைகளுக்குச் பாடங்களை அடித்தோ, அல்லது மிரட்டியோ கற்றுக் கொடுக்க முடியாது. அப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் அவர்களுக்கு ஏறாது. குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அசிரியர்கள் குழந்தைகளாகவே மாறிவிட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் தங்களின் முழுக்கவனத்தையும் ஆசிரியர்கள் மீது விழும். அப்படி குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அவர்களின் மழலை பேச்சும், மழலைச் சரிப்பையும் காணும் பொழுது புதிய உலகிற்குச் சென்ற ஓர்; உன்னத உணர்வு மனதில் ஏற்படும்.
அதே போல் கிராமத்தில் இருக்கும் பள்ளிகளில் பணியாற்றுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி சற்று வித்தியாசமானது. அங்கு ஆரம்பப் கல்வி படிக்கும் மாணவன் பின் வாழ்வின் எத்தகைய உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் அப்பள்ளியையும் ஆசிரியர்களையும் மறப்பது இல்லை. ஆசிரியர் பணியில் சேர்ந்த பொழுது ஆரம்ப கல்வியை மாணவ, மாணவிகள் முடித்துச் செல்லும் பொழுது உண்மையிலேயே பெரிய இழப்பாக இருந்தது. அது தற்பொழுது பழகிவிட்டது.
ஒவ்வொருவரும் ஒரு குணம், மாறுபட்ட குணாதிசயங்கள், மாறுபட்ட சிந்தனைகள் என்று ஓர்; இனிய கலவைகளை ஒரே இடத்தில் பார்க்க நினைத்தால் பள்ளிகளுக்குச் செல்லலாம். அர்ச்சுணனுக்கு ஒரு துரோணாச்சாரியார் போல், கொள்ளை, கொலை தொழிலைச் செய்து வந்த திருடனை ராமாயணம் என்ற வராலாற்று காவியத்தை படைக்கும் அளவிற்கு வால்மீகி உருவாகக் காரணமான நாரதரைப் போல், விவேகானந்தருக்கு ஒரு ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் ஓர்; ஆசிரியர்கள் இன்றும் வாழ்வியல் ஆசானாக இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உருவாக்கப்படுகிறது என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிறந்த ஆசிரியர்கள் என்பவர்கள் செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ஆசிரியர் பணி சிறப்பாக போற்றப்படும். அதே போல் மாணவர்களை சிறந்த பண்போடு உருவாக்க நினைக்கும் ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டியது அவசியம்.
பள்ளியில் இருக்கும் ஆசிரியர் மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி என்று வருகின்ற செய்திகளால் ஒட்டுமொத்த ஆசிரியர்கள் சமூகத்திற்கே தலை குனிவானது. அதே போல் முன்பு போல் ஆசிரியர்கள் பணியாற்றுவதில்லை. பள்ளியின் வகுப்பறைகளில் சரியாக சொல்லிக் கொடுக்காமல் தன்னிடம் டியூஷன் வந்து படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பாக சொல்லிக் கொடுக்கும் போக்கு தற்பொழுது ஆசிரியர்களிடம் காணப்படுகிறது.
மாதா பிதா குரு தெய்வம் என்று தான் சொல்கிறோம். மாதா பிதா டாக்டர், இன்ஜினியர் என்று நாம் சொல்வது இல்லை. தமிழ்சிறப்பாயிரம் பாடலில் சொன்னது போல் அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஒரு ஆசிரியன் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறான்.
இந்த உண்மைகள் நிலைத்து நிற்க வேண்டும். ஆசிரியர் சமூகம் மேன்மேலும் வளர வேண்டும் என்று அனைவருமே நினைக்கின்றனர். ஆனால் ஆசிரியர்களிடமும் காலப்போக்கில் பலவித குற்றங்கள் இருக்கத்தான் செய்கிறது. தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியாற்றுவது போன்று ஏழைக் குழந்தைகள் பயிலும் அரசாங்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியாற்றுவதில்லை. அதனை விடக் கொடுமை தந்தையாக இருக்க வேண்டிய சில ஆசிரியர்களே மாணவிகளிடம் தவறாக நடந்து பாலியல் குற்றச்சாட்டில் கைது ஆகின்ற கொடுமையும் சமீப காலமாக அதிகரித்துள்ளது.
. ஒவ்வொரு மாணவனுக்கும், ஞானத்தின் சுடரை ஏற்றுகிற பணி ஆசிரியருடையது.
அவர்களை நன்றியுடன் நினைவுகூரவும், அவர்களின் பணி தொடர வாழ்த்தவும், ஆசிரியர் தினம். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்திய குடியரசு தலைவர் பொறுப்பேற்ற தருணம், அவரை அணுகிய அவரது மாணவர் சிலர், அவரின் பிறந்த தினத்தை, கொண்டாடிட அனுமதி கேட்டனர். அவர்களுக்கு, தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாய் கொண்டாடினால் அகமகிழ்வு கொள்வேன் என கேட்டு கொண்டார். அது முதல் செப்டம்பர் ஐந்து, ஆசிரியர் தினமாய் கொண்டாட படுகிறது.
தனது வாழ்வில் ஆசிரியர் பணியை பெருமையாய் கருதியவர், ராதாகிருஷ்ணன். ஆசிரியர் தொழிலுக்கு மரியாதை கொடுத்தவர். பெருமையை கொணர்ந்தவர். ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயணப்பட முடியும் என்பதற்கு அவரே நேரடி செயல் விளக்கம். பல ஆசிரியர்கட்கு முன்னுதாரணம். ஆசிரியர்கள், மாணவர்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் மாணவர்களுக்கு, வாழ்வின் முன்னுதாரணமாய், என்றென்றுமான உந்து சக்தியாக மாறி போகின்றனர்.
ஆசிரியரிடம் கற்கிற பாடங்கள், மாணவரின் வாழ்வு முழுதும் வழிநடத்தும் சக்தியாக மாறுகின்றன. ஆசிரியர்களே, எல்லா தடைகளையும் உடைத்து, மாணவர்களின் ஆன்மாவுள் நுழையவும், சுய ஒளியை தரவும் தகுதி பெற்றவர்கள். ஒரு சமூகம், அதி உன்னத நிலை அடைந்து இருந்தால், நிச்சயமாக அதன் பின்னால் அற்புதமான ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம்.
ஒரு சமூகம் தாழ்ந்து போனால், ஆசிரியர் சமூகம், தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம். வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம். மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படுவது, என்றென்றுமான ஊக்கமும், தன்னம்பிக்கையும், நன்னெறிகளும் .. இதை சரியாக மலர செய்திட்டால், அங்கே ஆசிரியர் வேலை அதன் முழு நிறைவை எட்டியதாக அர்த்தம்.
ஒரு மாணவன் ஆசிரியரை அடையும் தருணத்தில், வெறும் மண் கலவையாய் மட்டுமே உள்ளான். அவனை தேவையான வடிவில், சிலையாக வார்ப்பது ஆசிரியனின் பணியாக உள்ளது.
முக்கியமான விஷயங்களை தினமும் மாணவ சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள கூடியவராய், தினமும், சரியான நேரத்தில் இருப்பவராக . தனக்கு செலவிடும் நேரத்தை விட அடுத்தவருக்கு அதிகம் செலவழிக்க வல்லவராய்.. என்றென்றும் தவழும் புன்னகையுடன், பிரச்சனையுடன் வலம் வரும் மாணவரையும், பெற்றோரையும் எதிகொள்ள வல்லவராய் .. மற்றவர் தமக்கு துணை நிற்காத தருணத்திலும் தனது பணியை சிறப்புற செய்பவராய், தம் மாணவருக்கு இன்னொறு பெற்றோராய்.. மூன்று இணை கைகளை கொண்டவராய் இருக்க வேண்டும்..
ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றின் கரைக்கு வந்தார்.
மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கறை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார்.
அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறு கரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே, சுழல்கள் இல்லை., நாம் தைரியமாய் ஆற்றை கடக்கலாம் என்றார்.
அந்த நிலையில், அரிஸ்ட்டாட்டில், உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார்.
அதற்கு அந்த மாணவன், இந்த அலக்சாண்டர் போனால், ஆயிரம் அலேக்சாண்டர்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள்.
ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம் என்றான்.
அப்படி ஆசிரியர் மாணவர் உறவு அமைவது நல்ல சமூகத்துக்கு புது சுவாசத்தை கொணரும். என்றென்றும் மாணவர் உலகில் நறுமணம் வீசிட செய்திடும் ஆசிரியர் உலகுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.. தொடரட்டும். நல்வாழ்த்துக்கள்...
உலகில் தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர்கள், பிறரால் என்றென்றும் ஞாபகம் கொள்ள படுகிறார்கள்.