Posts

Showing posts with the label KANNAN

KUSELAR - KANNAN RELATIONSHIP STORY

Image
  KUSELAR - KANNAN RELATIONSHIP  STORY  இந்து தொன்மவியலில் சுதாமா எனப் பெயர் கொண்ட குசேலர் கிருஷ்ணரின் இளமைக் கால நண்பர். தொன்மக் கதை உஜ்ஜையினில் உள்ள சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் இருவரும் குருகுலக் கல்வி பயின்றவர்கள். குசேலர் இன்பங்களில் பற்று அற்றவர். புலனடக்கம் மிகுந்தவர். குருகுலக் கல்வி முடிந்தவுடன் இருவரும் பிரிந்து தத்தமது இருப்பிடங்களுக்கு சென்றனர். குசேலர் பரம ஏழை. குசேலர், தனது மனைவி மக்களுடன் பல நாட்கள் அன்னமின்றி பட்டினியாக வாழ்க்கை நடத்தினர். வீட்டின் பரிதாபமான நிலையை கணவருக்கு எடுத்துச் சொல்லி, துவாரகை நகரில் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணரை பார்த்து வாருங்கள் என்று வேண்டிக் கொண்டாள். பொருட்செல்வத்திற்காக தன் நண்பரான கிருஷணரிடம் செல்ல முடியாது என்று குசேலர் மறுத்து விட்டார். ஆனால் குசேலரின் மனைவியோ, எனக்காக இல்லாவிட்டாலும், பசியால் வாடித் துடிக்கும் நமது குழந்தைகளின் பசிப்பிணியை நீக்குவதற்காகவது நீங்கள் அவசியம் கிருஷ்ணரை ஒரு முறையாவது பார்த்து விட்டு வாருங்கள் என்றாள். தயங்கிய குசேலர், இதைக் காரணமாகக் கொண்டு, கிருஷ்ணரின் பெறுதற்கரிய தரிசனம் கிடைக்குமே என்று துவாரக...

VIDURAR`S JUSTICE

Image
  VIDURAR`S JUSTICE விதுரரின் அறநெறி.... பற்பல வழிகளில் திருதராஷ்டிரன் மற்றும் துரியோதனாதிகளால் இடித்துரைக்கப் பட்டாலும் விதுரர் தமது கடமையில் கண்ணாக இருந்தார்!! கடைசி வரையில் ஹஸ்தினாபுரத்துக்கும் துரியோதனனுக்கும் நல்லதையே அவர் உரைத்தார்!! ஆயினும் துரியோதனின் கெட்ட மனநிலையால் அவை அவன் காதுகளில் ஏறவில்லை!! கடைசியாக குருஷேத்ரப் போர் வரும் நிலையிலும் கூட விதுரர் போரைத் தடுக்க பெருமுயற்சி மேற்கொண்டார்!! ஆனாலும் போர் வருவதை அவரால் தடுக்க முடியவில்லை!!! பாண்டவர் தூது வந்த கண்ணனின் செயல் விதுரனின் சிறப்பை நமக்கு உணர்த்துகிறது!! தூது வரும் கண்ணனை மடக்கி தன் பக்கம் திருப்ப வேண்டி துரியோதனன் கண்ணனை வரவேற்க அரண்மனையில் மிகச்சிறந்த ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தான்!! ஆனால் கண்ணனின் தேரோ நேராக விதுரரின் குடிலுக்கு சென்றது!! தம்மை வரவேற்ற விதுரனின் கண்ணில் நீர் திரண்டு நிற்பதைக் கண்ட கண்ணன் ''விதுரரே பாண்டவருக்காக கவுரவரிடம் தூது வந்த நான் அவர்களின் அரண்மனையிலேயே தங்குவது ஏற்புடையதாகாது!! அதுவன்றி வேறு எங்கு தங்கலாம் என்று எண்ணும் போது தர்மாத்மாவான உங்களின் வீடில்லாமல் வேறெங்கு தங்க இயலும் ? ...

ACTOR KANNAN DIED 2005,OCTOBER 17

Image
actor  K.Kannan ”கவர்ச்சி வில்லன்” கண்ணன் –  நாலும் தெரிந்தவன், உழைக்கும் கரங்கள், உயிரா மானமா, நீ, சக்தி லீலை, கடல் மீன்கள், மீனவ நண்பன்,  தேடி வந்த லெட்சுமி, கியாஸ் லைட் மங்கம்மா, ராஜநாகம், இதயக்கனி, அருணோதயம், என்ன தான் முடிவு, பிராயச்சித்தம், பாக்தாத் திருடன்,  நல்ல பெண்மணி உட்பட ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர். இறுதிக்காலங்களில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். இவர் அதிமுக-வில் உறுப்பினராகவும் மேடைப்பேச்சாளராகவும் இருந்தார். அருப்புக்கோட்டையில் மேடையில் உரையாற்றிகொண்டிருந்த போது மயங்கிவிழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிட்சைப் பலனின்றி 17.10.2005 அன்று இவர் தனது 70-ஆவது வயதில் காலமானார். இவர் நடித்த மேலும் சில படங்கள்:  மங்கையர் திலகம் [1955], செங்கமலத்தீவு [1962], பணமா பாசமா [1968], மாங்குடி மைனர் [1978], மக்கள் என் பக்கம் [1987], கண் கண்ட தெய்வம் [1967], சமயபுரத்தாளே சாட்சி [1983], நான் மகான் அல்ல [1984], பானை பிடித்தவள் பாக்கியசாலி [1958],சங்கே முழங்கு [1972], ஞானக்குழந்தை [1979], துணிவே தோழன்...