Showing posts with label WARRIOR. Show all posts
Showing posts with label WARRIOR. Show all posts

Sunday, 19 January 2020

JALLIKATTU ,A TRUE WARRIOR IN MADURAI DISTRICT


JALLIKATTU ,A TRUE WARRIOR 
IN MADURAI DISTRICT




மதுரை மாவட்டத்தில் எங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் சாமி மாடு என்று முதலாவாக ஒன்றை அவிழ்த்து ஓடவிடுவார்கள். அதை யாரும் பிடிக்கக்கூடாது என்பது ஆண்டாண்டு கால மரபு. விபரம் அறிந்தவர்களுக்குத் தெரியும் அந்த மாடு மாவீரன் அழகாத்தேவன் நினைவாகவே அவிழ்த்துவிடப்படுகிறது என்பது.

யார் இந்த அழகாத்தேவன்?

மதுரை மாவட்டத்தில் சொரிநாயக்கன்பட்டியைச் (இன்றைக்கு அது சொரிக்காம்பட்டி) சேர்ந்தவர் கருத்தமாயன். நிலபுலன்களோடு வாழ்ந்த செல்வந்தர். அவரது கடைக்குட்டி அழகாத்தேவன் புஜபல பராக்கிரமுடைய இளைஞன். ஆனால் பொறுப்பில்லாமல் தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு ஊர் சுற்றுகின்ற நாடோடி. 

அழகாத்தேவனுக்கு கால்கட்டு (கல்யாணம்) போட்டுவிட்டால் பையன் ஒழுங்காக இருப்பான் என்று பெரியவர்கள் கூறியதைக் கேட்ட கருத்தமாயன் பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கினார்.
நாகமலைக்கு அருகேயுள்ள கீழக்குயில்குடியில் வாழ்ந்து வரும் கருத்தமலையின் மகள் ஒய்யம்மாள் குறித்து அறிந்து, தன் செல்வாக்குக்கு சமமாக இல்லையெனினும் கருத்தமாயன், கருத்தமலையின் வீட்டிற்கு பெண் பார்க்கச் செல்கிறார். 

கருத்தமலைக்கோ ஏக மகிழ்ச்சி. தனது மகளைப் பெண் பார்க்க கருத்தமாயன் வருவதையறிந்து ஊருக்குள் தடபுடல் செய்கிறார். வழக்கமான சம்பிரதாயங்கள் முடிந்த பின்னர் கருத்தமாயன், தனது மகன் அழகாத்தேவனுக்கு ஒய்யம்மாளைக் கேட்கிறார். கருத்தமலையோ தனது மகளிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்று கூறி ஒய்யம்மாளிடம் கேட்கிறார். 

அவளுக்குப் அழகாத்தேவனைப் பிடித்துப்போனாலும், நிபந்தனை ஒன்றை விதிக்கிறாள். தான் வளர்த்து வரும் ஏழு காளைகளை அழகாத்தேவன் அடக்கினால், திருமணத்திற்கு ஒத்துக் கொள்வதாகவும், ஒருவேளை தோற்றால் தனது வீட்டில் பண்ணை அடிமையாக வேலை பார்க்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறாள். 

இந்த சவாலை அழகாத்தேவனும் ஏற்றுக் கொள்கிறான். காளையை அடக்குவதற்கு நாள் குறிக்கிறார்கள். தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு இணைந்து கடும் பயிற்சி மேற்கொள்கிறான் அழகாத்தேவன். அந்த நாளும் வருகிறது. இரண்டு ஊர்ப் பொது மக்கள் மட்டுமன்றி, பக்கத்து ஊர் ஜனங்களும் கூடி நிற்க அழகாத்தேவன், வாடிவாசல் அருகே ஒய்யம்மாள் வளர்த்த ஏழு காளைகளை ஒவ்வொன்றாக எதிர்கொள்கிறான். 

அனைத்துக் காளைகளையும் மிகத் திறமையாகக் கையாண்டு வீழ்த்திய அழகாத்தேவன், ஏழாவது காளையோடு மல்லுக்கட்டுகிறான். கடுமையான போராட்டத்திற்கிடையே அந்தக் காளை அழகாத்தேவனின் வயிற்றைப் பதம் பார்க்கிறது. 

குடல் வெளியே சரிந்த நிலையிலும் போராடி அந்தக் காளையை அடக்கிவிடுகிறான். உயிருக்கு ஆபத்தான நிலையில், அழகாத்தேவனை அழைத்துச் செல்கின்றனர். ஆனாலும் வாக்குக் கொடுத்த காரணத்திற்காக கருத்தமலை பெண் கொடுக்க சம்மதம் தெரிவிக்கிறார். 

சுத்துப்பட்டு கிராம ஜல்லிக்கட்டுகளில் பெயர் பெற்ற தங்களது காளைகளை அடக்கிவிட்டானே என்ற பொறாமையின் காரணமாக ஒய்யம்மாளின் சகோதரர்களுக்கு அழகாத்தேவனைப் பிடிக்கவில்லை. ஆகையால் அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்து, அழகாத்தேவனுக்கு மருத்துவம் பார்த்த பெண்ணை சரிக்கட்டி, அவனது உடம்பில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் ஏற்றிக் கொலை செய்துவிடுகிறார்கள்!!

இந்த செய்தி ஒய்யம்மாளுக்குத் தெரியவரும்போது, தாங்கொணாத துயரத்தில் அழகாத்தேவனோடு உடன்கட்டை ஏறி தனது உயிரை மாய்த்துக்கொள்கிறாள்!!

அழகாத்தேவன் நினைவாக அவனது பரம்பரையில் வந்தோர், மதுரை மாவட்டம் செக்கணூரணிக்கு அருகிலுள்ள சொரிக்காம்பட்டியில் கோயில் கட்டி வணங்கி வருகின்றனர். 

கருவறையில் காளையோடு அழகாத்தேவன் நிற்க... அக்கோயிலுக்கு வெளியே அமைக்கப்பட்ட நினைவு வளைவில் நண்பன் தோட்டி மாயாண்டிக்கும் சிலை எழுப்பியுள்ளனர். 
கீழக்குயில்குடிக்காரர்களிடம் சொரிக்காம்பட்டிக்காரர்கள் எந்தவித மண உறவோ, கொடுக்கல் வாங்கலோ இப்போதும் வைத்துக்கொள்வதில்லை. இந்த மரபு காலங்காலமாகத் தொடர்கிறது. 

நானூறு ஆண்டுகால காதல் வரலாற்றை மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்றும் தழும்பாய் சுமந்து கொண்டிருக்கின்றன... சொரிக்காம்பட்டி கிராம எல்லையில்... தோட்டி மாயாண்டி காவல் நிற்க... அழகாத்தேவன் கருவறையில் காளையோடு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறான்... ஒய்யம்மாள் அக்கருவறை காற்றோடு காற்றாய்... 🌼🌼🌼

காதலும் துரோகமும் நாணயமும் ரோசமும் நிறைந்த இந்த வீர வரலாறு 





திருமங்கலம் அருகே ஜல்லிக்கட்டு வீரருக்கு கோவில் கட்டி வழிபடும் மக்கள்

திருமங்கலம், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சொரிக்காம்பட்டி கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் அடங்காத காளைகளை அடக்கிப்பிடித்து சாதனை செய்து உயிர்நீத்த மாடுபிடி வீரரின் நினைவாக கோவில் கட்டியுள்ள அப்பகுதி மக்கள் அவரை தெய்வமாக வணங்கி வழிபட்டு வருகின்றனர்.

சுமார் 300ஆண்டுகளுக்கு முன்பாக மாமதுரை நகரின் மேற்கு தொலைவில் விவசாய செழிப்பு மிகுந்த இடத்திற்கு கருத்தமாயன் என்பவரின் குடும்பத்தினர் வந்து தங்கியுள்ளனர். இதை தொடர்ந்து கருத்தமாயனின் உறவினர்களும் அந்த செழிப்பு நிறைந்த பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர். இதையடுத்து சில ஆண்டுகளில் அந்த நிலப்பகுதி மக்கள் அதிகமாக வசித்திடும் சொரிக்காம்பட்டி என்ற கிராமமாக மாறியிருக்கிறது. இந்த ஊரின் முத்தகுடியான கருத்தமாயனும் மக்களும் ஒன்றிணைந்து விவசாய பணிகளில் தீவிரம் காட்டியதுடன் கால்நடைகள் வளர்ப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளனர். வயலில் உழைத்த களைப்பு நீங்கிடவும் விவசாய பெருமக்களுக்கு உற்சாகம் செய்திடவுமான விளையாட்டாக ஜல்லிக்கட்டு மாறியிருந்தது. அதன்படி இங்கு நடந்திட்ட ஜல்லிக்கட்டு விளையாட்டுகளில் கருத்தமாயனின் நான்கு மகன்களில் கடைசி மகனான அழகத்தேவன் என்பவருக்கு காளைகளை அடக்குவதில் எல்லையில்லா ஆர்வம் இருந்துள்ளது. இவருடைய மாடுபிடி ஆர்வத்தை ஊக்குவித்து போட்டிகளில் பெற்றிடும் வெற்றிகள் அனைத்திற்கும் அழகத்தேவனின் உயிர்நண்பனான சமயன் என்பவர் திகழ்ந்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்றிடும் பல்வேறு வகையான காளைகளின் குணாதிசயங்களை ஆய்வு செய்து அதனை மடக்கிப் பிடிக்கும் கலையினை வளர்த்துக் கொண்ட அழகத்தேவனும், அவரது நண்பர் சமயனும் சிறந்த மாடுபிடி வீரர்களாக அக்காலத்தில் உருவாகியிருந்தனர். இது எவரிடமும் பிடிபடாத மாடு என்று உரிமையாளர்களால் சவால் விடப்படும் மாடுகளை தன்னுடைய தனித்திறமையால் மடக்கிப் பிடிப்பது அழகத்தேவனின் தனிச்சிறப்பாகும்.

ரசிகர் பட்டாளம்

இன்றைய அலங்காநல்லூரை போன்று அன்றைய காலகட்டத்தில் ஜல்லிக்கட்டிற்கு பெயர் போன ஊராக விக்கிரமங்கலம் திகழ்ந்துள்ளது. இந்நிலையில் விக்கிரமங்கலம் ஜல்லிக்கட்டில் நின்று விளையாண்ட பல்வேறு காளைகளை மின்னல் வேகத்தில் அழகத்தேவன் மடக்கிப் பிடித்து தொடர் வெற்றிகளை குவித்து வந்துள்ளார். இதனால் அழகத்தேவனின் வீரமும் காளைகளை அடக்கிடும் திறமையும் மாமதுரையைச் சுற்றிலும் பரவியுள்ளது. அழகத்தேவன் பங்கேற்றிடும் ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டியையும் காண்பதற்காக அக்காலத்திலே ஒரு ரசிகர் பட்டாளமே அவருக்கு இருந்துள்ளது. இதனை கண்டு பொறாமை கொண்ட அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த மூத்த மாடுபிடி வீரர்கள் ஒன்று சேர்ந்து அழகத்தேவனை நீண்காலமாக கண்காணித்து அவரது யுக்திகளை கணித்துள்ளனர்.

பெண் பரிசு


இதையடுத்து அழகாத்தேவனை வீழ்த்துவதற்காக அடங்காத காளையொன்றை அந்த கிராமத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள் தயார் செய்தனர். அந்த காளைக்கு அழகத்தேவனின் தனித்துவத்திற்கு எதிரான பாய்ச்சலை சொல்லிக் கொடுத்து பக்குவப்படுத் தியிருந்தனர். மேலும் தங்களது மாட்டை அடக்குபவருக்கு தங்களது கிராமத்தின் மூத்தகுடியின் பெண்ணை திருமணம் செய்து தருவதாக அறிவிப்பு செய்துள்ளனர்.

குடல் சரிந்தது

இந்த சூழ்ச்சியை அறியாத மாடுபிடி வீரரான அழகத்தேவனும் அவரது உயிர்நண்பனுமான சமயனும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டனர். அப்போது மூத்த மாடுபிடி வீரர்களால் தயார் செய்யப்பட்ட முரட்டுக்காளை மட்டும் அழகத்தேவனிடம் சிக்கிடாமல் போக்குகாட்டி விளையாடியுள்ளது. ஒருகட்டத்தில் விடாமுயற்சியுடன் வீறுகொண்டு எழுந்த அழகத்தேவனை அந்த காளை வயிற்றில் குத்தி குடலை சரியச் செய்துள்ளது. இருப்பினும் குடல் சரிந்து ரத்தம் வெள்ளமாக சிதறிய நிலையிலும் தனது இறுதிகட்ட சூட்சுமத்தை பயன்படுத்திய அழகத்தேவன் அடங்காத காளையை அடக்கி மண்ணில் சாய்த்து விட்டு தானும் மண்ணில் சாய்ந்துள்ளார். இதனை கண்ட அவரது நண்பர் சமயன் தான் உடுத்தியிருந்த துணியை கிழித்து  அழகத்தேவனின் வயிற்றில் கட்டி அவரை தனது தோழில் தூக்கிப் போட்டுக் கொண்டு சொரிக்காம்பட்டி கிராமத்திலுள்ள நந்தவனம் எனும் தோட்டத்திற்கு ஓட்டமாக ஓடிவந்து சேர்த்துள்ளார்.

கொல்ல முடிவு

தனது மகன் அழகத்தேவன் ஜல்லிக்கட்டில் காயமடைந்த தகவலறிந்த அவரது தந்தை கருத்தமாயன் மற்றும் ஊர்மக்கள் அனைவரும் நந்தவனம் தோட்டத்திற்கு திரண்டு வந்து ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் தொடர் சிகிச்சை மேற்கொண்டதன் பலனாக அழகத்தேவன் உடல்நலம் பெற்றிட ஆரம்பித்துள்ளார். இதனையறிந்த பக்கத்து கிராமத்து மூத்த மாடுபிடி வீரர்கள் அழகத்தேவன் மீண்டு வந்தால் தங்களது மூத்தகுடியின் பெண்ணை திருமணம் முடிக்க கேட்டுவிடுவான் என்று பயந்து அழகத்தேவனை சதியின் மூலம் கொன்று விடமுடிவு செய்தனர்.

உயிர் நீத்த வீரர்

இதற்காக அழகத்தேவன் வைத்தியம் செய்து வந்த இடத்திற்கு தங்களது ஆட்களை ஆள்மாற்றி அனுப்பினார்கள். ஆள்மாறாட்டம் செய்து நந்தவனம் சென்றவர்கள் அழகத்தேவனுக்கு குடல் சரிந்த இடத்தில் கள்ளிக் கொழுந்தினை வைத்து மருந்து கட்டியுள்ளனர். இதனால் கள்ளியின் விஷம் சிறிது சிறிதாக அழகத்தேவனின் உடலில் கலந்து உயிரிழப்பு ஏற்படும் நிலை உருவாகிறது. அப்போது அடங்காத காளை களையெல்லாம் தனது மதிநுட்பத்தால் மடக்கிப் பிடித்த மாவீரன் அழகத்தேவன் தனது கடைசி ஆசையாக தனக்கு சொரிக்காம்பட்டி நந்தவனத்தில் கோவில் கட்ட வேண்டும், அதன் மூலமாக ஜல்லிக்கட்டு பற்றிய விழிப்புணர்வு வரும் சந்ததியினருக்கு தெரிய வந்திடும் என்று தனது கிராமத்தினரிடம் கூறிவிட்டு உயிர் துறந்துள்ளார்.

தோழனுக்கும் சிலை

இதையடுத்து மாடுபிடி மாவீரன் அழகத்தேவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிடும் வகையில் அவரது வாரிசுகளும்,கிராமத்தினரும் ஒன்றிணைந்து சொரிக்காம்பட்டி கிராமத்தில் அழகிய கோவிலை எழுப்பி இன்றும் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் காளையை அழகத்தேவன் அடக்குவது போன்ற சிலை வைக்கப்பட்டு அதனை அப்பகுதி மக்கள் வணங்கி செல்கின்றனர்.மேலும் நட்பின் இலக்கணமாக அழகத்தேவனுடன் இருந்த சமயனுக்கும் அங்கே சிலை வைக்கப்பட்டள்ளது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஜல்லிக்கட்டில் அவர்களது வீரத்தையும் விவேகத்தையும் போற்றிடும் வகையில் இருவரும் இன்றுவரை அப்பகுதி மக்களின் நெஞ்சங்களில் நீங்காமல் உள்ளனர்.அதே போல் குடல்சரிந்த அழகத்தேவனை தனது தோளில் சமயன் தூக்கிச் சென்ற போது அவர்கள் தாகசாந்தி செய்திட இளைப்பாறிய இடங்களில் கற்கள் போடப்பட்டு மக்கள் வழிபாடு நடத்திச் செல்கின்றனர்.வீரம் விளைந்த மாமதுரை மண்ணில் அடங்காத முரட்டுக்காளைகளை அடக்கி சாதனை படைத்து சதியினால் உயிர்நீத்த மாடுபிடி வீரர்களின் முதல்வனான அழகத்தேவனின் கோவிலில் வழிபட்டு சென்றால் ஜல்லிக்கட்டில் போட்டிகளில் வெற்றி உறுதி என்பதால் சொரிக்காம்பட்டி கிராமத்திற்கு வந்து அழகத்தேவன் கோவிலில் வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

வீரர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, அழகத்தேவன் போன்ற மாவீரர்களின் தியாகத்தினால் இன்றுவரை அழியாமல் உள்ளது என்பதே நிஜம்.




மதுரை மண்ணில் களம் கண்ட காளைகளை சினம் கொண்டு அடக்கிய வேங்கை அழகுதேவனுக்கு அமைந்த திருக்கோவில்!
18 January 2020, 1:03 pm

Quick Share
தமிழர் திருநாளான தை 1 பிறந்ததில் இருந்தே, மண்ணின் மாண்பை போற்றும்வகையில் ஏருழுவும் காளைகளுக்கு நடத்தும் வழிபாடும், பார் போற்றும் வீரம் கொண்ட ஜல்லிக்கட்டும் தமிழரின் பண்பாட்டை உலகத்திற்கு எடுத்துரைத்து கொண்டே தான் இருக்கிறது. சாதியால், மதத்தால் தமிழன் பிளவுற்று இருந்தாலும் எமது பண்பாட்டான ஜல்லிக்கட்டை மீட்க தமிழன் கரம் கோர்த்து தனது பாரம்பரியத்தை மீட்டும் தம் இனத்தின் போர் குணத்தை உலகிற்கு அறிவித்தான்.

Jalli- updatenews360
இன்று பாரே போற்றும் இந்த வீர விளையாட்டை ஒரு காலத்தில் தனது பொழுதுபோக்காக கொண்டு, இவர் அடக்காத காளைகள் இல்லை என பேர் வாங்கியவர் தான் மதுரை மண்ணின் மைந்தர் ” அழகுதேவன் ”. 300 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயத்திற்காக வண்டல்மண் வளம் நிறைந்த பகுதி நோக்கி கருத்தமாயன் என்பவரும் அவரது உறவினர்களும் இடம் பெயர்ந்தனர். அந்த பகுதியின் பெயர் தான் சொரிக்காம்பட்டி. அந்த ஊரின் மூத்த தலைகாட்டாக நின்று அந்த ஊரை நிர்வகித்த கருத்தமாயனுக்குக்கு 4 மகன்கள். அதில் ஒருவர் தான் அழகுதேவன். ஏறுழுது களைப்படைந்த விவசாய பெருங்குடி மக்களுக்கு உற்சாகத்தை அளிக்க ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது வழக்கம். அப்படி அந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் அழகுதேவன் கைதேர்ந்தவர். சீறிவரும் காளையின் வேகத்தையும், அதன் அசைவுகளையும் கணித்து அதனை அடக்குவதில் அழகுதேவன் கைதேர்ந்த வந்தார். அவருக்கு அவரது நண்பரான சமயன் என்பவர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிக ஆதரவு அளித்து வந்தார். பிற்காலத்தில் சமயனும் அழகுதேவனுடன் இணைந்து மாடுகளை பிடிக்க ஆரம்பித்தார். பின்னர் இருவரும் கைதேர்ந்த மாடுபிடி வீரர்களாக வந்தனர். அந்த ஊரில் அழகுதேவன் அடக்காத காளைகளே இல்லை என்ற அளவுக்கு நிலை மாறியது. பிற்காலத்தில் மதுரை மண்ணில் நடந்த அணைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் கலந்து கொண்ட அழகுதேவன், யாருக்கும் அடங்காத இந்த காளையை அடக்கி பாருங்கப்பா என சவால் விடுக்கப்படும் காளைகளை தனது வீரத்தாலும், ஜல்லிக்கட்டில் அவர் கற்றுத்தேர்ந்த நுண்ணறிவாலும் எப்பேர்ப்பட்ட காளையாக இருந்தாலும் அடக்கிவிடுவார்.

இப்படிப்பட்ட மாவீரரனுக்கு மதுரை மண்ணில் சொரிக்காம்பட்டியில் கோவில் அமைந்துள்ளது. முன்னோரை வழிபடுதை வழிபாடாக கொண்ட தமிழினம், அழகுதேவனும் இன்று காளைகளை அடக்கும் காளையர்களுக்கு குலதெய்வமாக திகழ்ந்து வருகிறார். இவர் வாழ்ந்த சொரிக்காம்பட்டி மண்ணில் தான் இவரது திருக்கோவில் அமைந்துள்ளது. இன்று வரை ஒவ்வொரு மாடுபிடி வீரனும் இவரது கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.

காலம் பல கடந்தாலும், சுழலும் பூமி பந்து ராட்சத வேகத்தில் சுழன்றாலும், பொழியும் மாரி கடலென பெய்தாலும், தமிழனின் வீரத்தையோ, அவன் வரலாற்றையோ எந்த சக்தியாலும் அழிக்கமுடியாது என்பதற்கு தமிழன் அவனின் முன்னோரை இறைவனாகவும், முன்னோர் அளித்த வரலாற்றை இறையாகவும் வழிபடுவதே காரணம். 300 அல்ல 3000 ஆண்டுகள் ஆயினும், அழகுதேவன் வீரத்தின் குறியீடாக மதுரை மண்ணில் நிலைத்து நிற்பார்.

Sunday, 8 December 2019

NIRUBAMA VAIDYANATHAN , TENNIS WARRIOR BORN 1976 DECEMBER 8




NIRUBAMA VAIDYANATHAN ,
TENNIS WARRIOR BORN 1976 DECEMBER 8


நிருபமா வைத்தியநாதன் (நிருபமா சஞ்சீவ், பிறப்பு. டிசம்பர் 8, 1976, கோயம்புத்தூர், இந்தியா) கோவையைச் சேர்ந்த ஒரு டென்னிஸ் வீராங்கனை ஆவார். 1995 தென்னாசிய விளையாட்டுப் போட்டிகளில் டென்னிஸ் போட்டிகளில் குழுப்போட்டி, ஒற்றையர் போட்டி, இரட்டையர் போட்டி, கலப்பு இரட்டையர் போட்டி ஆகிய நான்கிலும் தங்கப் பதக்கம் பெற்றார்.

Nirupama Sanjeev (née: Vaidyanathan; born 8 December 1976) is a retired Indian professional tennis player, and the former Indian No. 1. In the 1998 Australian Open, she became the first Indian woman in the modern era to feature and win a round at a main draw Grand Slam, beating Italy's Gloria Pizzichini. She has also won the Bronze Medal at the 1998 Bangkok Asian Games in Mixed Doubles, partnering Mahesh Bhupathi. Sanjeev was the first Indian female to enter the top 200 world singles rankings
Early life and tennis career

Nirupama was born in the Southern Indian town of Coimbatore. She started playing tennis at the age of 5 and was influenced very much by her brother. Her father K.S. Vaidyanathan was a cricketer who had played for Tamil Nadu in Ranji Cricket tournament coached her at the start of her career. Her first tennis tournament foray was the National Under 12 tournament, where she reached the semi-final and went on to win her 1st National title in Under 14 age group at the age of 13. One year later in 1991, she won the National Women's title at age 14. She won the National Women's title in 1992–1996.

In 1996, she moved to Luxembourg and she turned professional at the age of 18. Nirupama shifted her base to Sarasota, Florida in 1997 where she trained with David O Meara who was the former coach of Leander Paes for two years. In 1998 Australian Open, she became the first Indian woman in the modern era to feature and win a round at a main draw Grand Slam, beating Italy's Gloria Pizzichini. She has also won the Bronze Medal at the 1998 Bangkok Asian Games in Mixed Doubles, partnering Mahesh Bhupathi.

She retired during the later 2000s. She made a comeback in 2010 when she represented India to play in the Commonwealth Games 2010 and in Asian games in Guangzhou as a 33-year-old.

Post Retirement
For the past five years, Nirupama has been on the expert commentary team along with Indian tennis legend Vijay Amritraj for ESPN-STAR sports. Nirupama also runs a tennis coaching camp in the Bay Area, California. She is launched her autobiography "The Moonballer" in October 2013.[1][2][3][4][5][6]

Personal life
On 23 May 2002, she married Sanjeev Balakrishnan, a software engineer from Bay Area, California; the brother of the Indian sprinter Rajeev Balakrishnan.

Wednesday, 20 November 2019

TIPPU SULTAN, A WARRIOR OR RELIGIOUS FANATIC BORN NOVEMBER 20,1750- MAY 4,1799




TIPPU SULTAN, A WARRIOR OR  RELIGIOUS FANATIC  BORN NOVEMBER 20,1750- MAY 4,1799


கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, திப்பு சுல்தானின் பிறந்தநாளை கொண்டாடி இந்துக்களின் காயங்களில் உப்பைத் தூவுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று மத்திய அமைச்சர் அனந்த் குமார் சொன்னதை ஒப்புக்கொள்கிறேன்.

திப்பு சுல்தான் மதச்சார்பற்ற அரசர் அல்ல, லட்சக்கணக்கான இந்துக்களைக் கொன்றவர். அதற்கான உதாரணங்களை பட்டியலிட்டால் அது நீண்டுகொண்டே போகும்.

இந்துக்களைப் போன்றே பெயர் வைத்துக் கொண்ட திப்புவின் அமைச்சர்கள் இந்துக்களின் துரோகிகளாக செயல்பட்டிருக்கிறார்கள்!

திப்புவின் அரசில் அங்கம் வகித்தவர்களில் பலர் இந்துக்களின் பெயர்களை வைத்திருந்தார்கள். உள்துறை அமைச்சராக இருந்தவர் இந்து பெயர் கொண்ட ஷாமையா ஐயங்கார். டெல்லியின் முகலாய அரசவையில் மைசூர் மற்றும் திப்புவின் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் மூல்சந்த் மற்றும் திவான் ராய். திப்புவின் பிரதமமந்திரியாக பதவிவகித்த திவான் பூர்ணையா.

திவான் பூர்ணையா மீது கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டிருந்த திப்பு, ராக்கெட் படையணியின் தலைவராகவும் அவரை நியமித்தார். பிரிட்டனுடன் நடைபெற்ற போரில் காயமடைந்தபோதும், பூர்ணையாவின் கைகளில் தனது மகனை ஒப்படைத்த திப்பு, 'என் மகனை உங்கள் கையில் ஒப்படைக்கிறேன்' என்று கூறினார்.

கார்ன்வாலிஸ் இந்தியாவை காப்பாற்றினாரா?

கோரட்பூரின் இந்துக்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான மலபார் நாயர்களை திப்பு கொன்றதை ஒத்துக்கொள்கிறேன்.

ஆனால், மங்களூரின் கிறித்துவர்கள், மகாதேவியின் முஸ்லிம்கள் மற்றும் மொபலா முஸ்லிம்களை ஏன் கொன்று குவித்தார்கள்? ஒருவேளை அவர்கள் அனைவரும் பிரிட்டிஷ்காரர்களின் உளவாளிகள் என்று சந்தேகிக்கப்பட்டார்களோ?

குறைந்தபட்சம் கர்நாடக பாரதிய ஜனதா கட்சியினர் லார்டு கார்ன்வாலிஸின் பிறந்தநாளை அடுத்த ஆண்டு விழாவாக கொண்டாடட்டும், ஏனெனில் அவர் திப்பு போன்ற காட்டுமிராண்டியிடம் இருந்து இந்தியாவை காப்பாற்றினார் அல்லவா?

புதிய வரலாற்றின்படி, மைசூரில் எட்டாயிரம் ஆலயங்களை இடித்துத் தள்ளினார் திப்பு. ஆனால், தனது அரண்மனைக்கு அருகில் இருந்த ரங்கநாத சுவாமி கோவிலை மட்டும் இடிக்க மறந்துவிட்டது ஏன் என்று தெரியவில்லை.

இந்துக்களின் மீது மிகப்பெரிய வெறுப்பு இருந்தபோதிலும் தனது கோட்டையில் அவர் 10 நாட்கள் தசரா கொண்டாடினார் என்ற செய்தி விசித்திரமானதாக இல்லையா? ஆனாலும், திப்புவுக்குப் பிறகும் அவருடைய குடும்பத்தினர் இந்த பாரம்பரியத்தை தொடர்ந்தது ஏன் என்று தெரியாமல் வியப்பு ஏற்படுகிறது!

ஆவணங்களின்படி, ஆண்டுதோறும் இந்துக்களின் 158 பெரிய கோயில்களுக்கு நிதியுதவி அளித்துவந்த திப்புவின் அரசு, நிலங்களையும் நன்கொடையாக கொடுத்திருக்கிறது.மராத்தாக்கள் சூறையாடிய சிருங்கேரி மடத்தை புனரமைத்த திப்பு

1791 ஆம் ஆண்டில் திப்புவுடன் நடைபெற்ற யுத்தத்தின்போது, பேஷ்வா மாதவ்ராவின் மராத்திய ராணுவம் சிருங்கேரி மடத்தையும் ஆலயத்தையும் சிதைத்தது. ஆலயத்தையும், மடத்தையும் சீரமைக்கக் கோரி சிருங்கேரியின் மடாதிபதி சங்கராச்சாரியர் திப்பு சுல்தானுக்கு 30 கடிதங்களை எழுதினார். அதையடுத்து புனரமைப்பு பணிகளுக்காக பணத்தை கொடுத்த திப்பு, பணியாளர்களையும் ஏற்பாடு செய்தார்.

1916 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இந்த கடிதங்கள் அனைத்தையும், மைசூர் தொல்பொருள் இயக்குநரகம் பாதுகாத்து வைத்துள்ளது.

"18ஆம் நூற்றாண்டில் மராத்தியர்களின் படையெடுப்பின்போது, ஆலயத்தின் அனைத்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது" என கொல்லூரில் பார்வதி தேவியின் அம்சமான மூகாம்பிகை ஆலயத்தின் இணையதளம் கூறுகிறது.அதுமட்டுமல்ல, இன்றும்கூட காலை 7.30 மணியளவில் திப்புவின் பெயரில் கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் பூஜைகள் நடத்தப்படுகின்றன"

குறைந்தபட்சம் இந்த பூஜையாவது நிறுத்துங்கள். அதுமட்டுமல்ல சுமார் இருநூறு ஆண்டுகளாக, திப்புவைப் பற்றிய பாடல்களை பாடி அவரை போற்றும் கர்நாடகத்தை சேர்ந்த வயதான மூதாட்டிகள் மற்றும் பாட்டிகளின் தவறுகளை சுட்டிக்காட்டி, அவர்கள் இவ்வளவு ஆண்டுகளாக செய்துவருவது பாவம் என்பதை புரியவைத்து, அதற்கு பிராயசித்தம் செய்யச்சொல்ல வேண்டியது கன்னட பேரன்களின் கடமையல்லவா?

1970களில் கர்நாடக மாநிலத்தின் ஆர்.எஸ்.எஸ் கிளை, இந்திய மகாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக கன்னட மொழியில் வெளியிட்ட 'பாரத பாரதி' புத்தகத்தில் திப்பு சுல்தானும் இடம்பெற்றிருந்ததை நமக்கு வசதியாக மறந்துவிடலாம்.திப்பு மிகப்பெரிய கதாநாயகனா!

கர்நாடக மாநிலத்தில் 2008 ஆம் ஆண்டில் முதல்முறையாக ஆட்சியமைத்த பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா, 2012ஆம் ஆண்டில் 'கர்நாடக ஜனதா பக்‌ஷ' என்ற கட்சியை தொடங்கினார்.

அப்போது, முஸ்லிம்களின் ஒரு கூட்டத்தில், அவருக்கு திப்பு சுல்தானைப் போல் தலைப்பாகை கட்டி, கையில் வீரவாளைக் கொடுத்து மரியாதை செய்தார்கள். அப்போது பாரதிய ஜனதா கட்சியில் இல்லை என்பதால் அதை எடியூரப்பா ஏற்றுக்கொண்டார்.


லட்சக்கணக்கான இந்துக்களின் உயிரைக் குடித்த திப்பு சுல்தானைப் போன்றே தலைப்பாகையும், வீரவாளையும் பெறுவது தவறில்லை என்று அவர் நினைத்திருக்கலாம்.

பிறகு 2014இல் எடியூரப்பா மீண்டும் பாரதிய ஜனதா கட்சிக்கே திரும்பியபிறகு, அவர் திப்புசுல்தானின் பெயரை கேட்பதற்குகூட தயாராக இல்லை.



‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்‘,
திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.

1782 டிசம்பரில், ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால், அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.

1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம்தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.

மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1790 – 92) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர், ஐதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்.

எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. “30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது” என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.

பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது.

மைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அது வரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் கார்ன்வாலிஸ். பணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு. 1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்.

“ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்” என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.

திப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், ‘பிளாசிப் போரில்’ பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, “இப்போது நாம் ‘தைரியமாக’ திப்புவின் மீது படையெடுக்கலாம்” என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.

இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.

அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.

திப்புவின் புலி
திப்புவின் புலி - ஆங்கிலேய சிப்பாயின் குரல்வளையை கவ்விப் பிடிப்பது போல வடிவமைக்கப்பட்ட இசைக்கருவி
திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல; தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, அவர்கள் கண்டதில்லை.

ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு.

துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். “திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்” என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.

பிரான்சுடனான உறவில் ஒரு இளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை. படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “அந்தப் படை தன் தலைமையில்தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது” என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்றபின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, ‘குடிமகன் திப்பு’ என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.

பிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு ‘மைசூர் அரசின் சார்பாக’ உடனே நிதியனுப்பிய திப்பு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு “உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்” என்று செய்தியும் அனுப்புகிறார்.

ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், ‘பென்சன் ராஜாக்கள்’ என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கணணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.

தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது.

காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால், அரசுக்கான வருவாயை விவசாயம்தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.

“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல் படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

“ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும்முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு. 1911இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும், இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.

“அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன; உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன; முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்’‘ என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் தோழர்.சாகேத் ராமன். நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.

திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக்கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.

பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.

இவையெதுவும் ஒரு புத்தார்வவாதியின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத்தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.

அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.

திப்புவின் புலிக்கொடி
திப்புவின் புலிக்கொடி
அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, “மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்று கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பினியோ, கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை’ உருவாக்கியது.

அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.

“எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி” என்று எழுதிய திப்பு, தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். “எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது” என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.

கும்பினிக்காரர்களோ திப்புவிடமிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின், தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர்.

திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது. “விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால், தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.

திப்பு சுல்தான்
போர் வீரர்களின் பிணக்குவியல்களுக்கு மத்தியில் திப்பு
“ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்புதான்” என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்:

“சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை.. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப்படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.”

1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன:

“இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள்…”, “தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.”

– இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்

மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.

தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன.

“நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.”

வெறும் சொற்களல்ல. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் மக்களைக் கவசமாக மட்டுமின்றி, வாளாகவும் பயன்படுத்தக் கனவு கண்டார் திப்பு. “விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். அன்றாடம் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்” என்று தன் வரி வசூல் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறார் திப்பு. இந்த ஆணை செயல் வடிவம் பெற்றிருக்குமா என்ற கேள்வி இருக்கட்டும். தன் குடிமக்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தால் ஒரு மன்னனே அவர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு உத்தரவிட்டிருக்க முடியும்?

திப்புவின் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்ட நிதி அமைச்சன் மீர் சதக்கின் தலையை அந்தப் போர்க்களத்திலேயே சீவி எறிந்தான் திப்புவின் ஒரு சிப்பாய். செய்தியறிந்த மக்களோ அங்கேயே அவன் உடலின் மீது காறி உமிழ்ந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகும் அவன் உடலைத் தோண்டியெடுத்து அதன் மீது ஒரு வார காலம் சேற்றையும் மலத்தையும் வீசினார்கள். ‘சதக்’ என்ற பாரசீகச் சொல் துரோகத்தைக் குறிக்கும் சொல்லாக கன்னட மொழியில் ஏறியது.

காலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு. அவர் மறைவுக்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தி, தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக்.

ஒருவேளை திப்பு பிழைத்திருந்தால்? “உயிர் பிழைத்தல்’ என்ற சொற்றொடரே திப்புவின் அகராதியில் இல்லை. 1792 போரில் வெள்ளையரிடம் தோற்றவுடன் “ஆங்கிலேயரை ஒழிக்கும் வரை இனி நான் பஞ்சணையில் படுக்கமாட்டேன்” என்று அரசவையிலேயே சூளுரைத்தார் திப்பு.

இதோ, குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு.””மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

திப்பு போர்க்களத்திற்குச் சென்று விட்டார் என்பதை நம்ப மறுத்து அரண்மனையெங்கும் தேடிய ஆங்கிலேய இராணுவம், நள்ளிரவில் சிப்பாய்களின் பிணக்குவியலுக்குள்ளே திப்புவின் உடலைக் கண்டெடுக்கிறது. அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறான் ஒரு ஆங்கிலேய அதிகாரி:

“நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.”

“மானமிழந்தினி வாழ்வோமோ அல்லா எமக்குச் சாவு வராதா துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே அல்லா எமக்குச் சாவு வராதா”

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் திப்புவின் உடலைத் தழுவிச் சென்ற அந்த ஓலம், இதோ நம் இதயத்தை அறுக்கிறது. திப்பு எனும் அந்தக் காப்பியத் துயரம் நம் கண்ணில் நனைகிறது.

Sunday, 27 October 2019

DILIP ,MALAYALAM ACTOR , ACQUIRED NOTORITY BORN 1968 OCTOBER 27




DILIP ,MALAYALAM ACTOR , ACQUIRED NOTORITY BORN 1968 OCTOBER 27




திலீப், ஒரு மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் கோபாலகிருஷ்ணன் என்பதாகும். 1968 அக்டோபர் 27ல் பத்மநாபன் பிள்ளை, சரோஜா ஆகியோர்க்கு மகனாகப் பிறந்தார். பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதினையும் பெற்றுள்ளார்.
திரைத்துறை
மிமிக்ரி செய்து பழகியவர். பின்னர், திரைத்துறைக்குள் நுழைந்தார். ஏழரக்கூட்டம், மானத்தெ கொட்டாரம், சல்லாபம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். குஞ்ஞிக்கூனன், சா‌ந்துபொட்டு உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் புகழ் அடைந்தார். மொத்தமாக 125-க்கும் அதிகமாக திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கேரளாவில் நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிலை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் நடிகர் திலீப் உள்பட மேலும் 12 பேர் கைதானார்கள். இந்த வழக்கில் 300 சாட்சிகளை விசாரித்து செல்போன் உரையாடல் உள்பட 400 ஆவணங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில்  நடிகர் திலீப் டிசம்பர் 15–ந்தேதி முதல் ஜனவரி 30–ந்தேதி வரை ஜெர்மனியில் தனக்கு சினிமா படப்பிடிப்பு உள்ளதென்றும் எனவே ஜெர்மனி செல்ல தனது பாஸ்போர்ட்டை வழங்க வேண்டும் என்றும் கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இதற்கு அரசு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:–

‘‘குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் விசாரணையை தாமதப்படுத்தும் செயலில் திலீப் தரப்பு இறங்கி உள்ளது. ஏற்கனவே பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து விசாரணையை தாமதம் செய்தனர். இதுபோல் தொடர்ச்சியாக தாமதம் செய்வது பாதிக்கப்பட்ட நடிகைக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.  திலீப் வெளிநாடு செல்ல அனுமதி கேட்பது கூட விசாரணையை தாமதப்படுத்தும் செயல்தான். வெளிநாடு சென்றபிறகு சாட்சியங்களை கலைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது’’

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  ஆனால் பாஸ் போர்ட்டை திலீப்பிடம் வழங்க கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் திலீப். புகழின் உச்சியில் இருந்த போது சக நடிகை மஞ்சு வாரியரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஒரு மகள் உள்ளார்.

பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விவாகரத்து பெற்றனர். இவர்களின் மகள் திலீப்புடன் உள்ளார்.

திலீப் - மஞ்சு வாரியர் பிரிவுக்கு நடிகை காவ்யா மாதவனே காரணம் என கூறப்பட்டது. ஆனால் இதனை இருவரும் மறுத்தனர்.

காவ்யா மாதவன் கடந்த 2010-ல் தொழில் அதிபர் நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்தார். திருமணம் முடிந்து வெளிநாடு சென்ற காவ்யா மாதவன் சில நாட்களிலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து கேரளா வந்தார்.

தனித்தனியாக வாழ்ந்து வந்த திலீப் - காவ்யா மாதவன் இருவரும் நெருங்கி பழகினர். தற்போது அவர்கள் 2 பேரும் புதிய படம் ஒன்றில் சேர்ந்து நடித்து வருகிறார்கள். இதில் அவர்களுக்கு இடையே நெருக்கம் அதிகரித்தது. இதனால் விரைவில் அவர்கள் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இதுபற்றி திலீப் கூறும்போது எனது மகளின் முடிவை பொறுத்தே நான் மறுமணம் செய்வேன் என்றார்.

இந்தநிலையில் இன்று திடீரென திலீப் - காவ்யா மாதவன் இருவரும் கொச்சியில் திருமணம் செய்து கொண்டனர். இன்று காலை நடந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர்கள் மம்முட்டி, ஜெயராம், நடிகைகள் மீரா ஜாஸ்மின், மேனகா, சிப்பி, ஜோமோள் உள்பட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நடிகர் மோகன்லாலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற வந்து கொண்டிருப்பதாக கூறப்பட்டது.

இந்த திடீர் திருமணம் மூலம் திலீப் - காவ்யா மாதவன் பற்றி இதுவரை வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாக மலையாள திரையுலகினர் தெரிவித்தனர். திலீப் - காவ்யா மாதவன் திடீர் திருமணம்
பதிவு: நவம்பர் 25, 2016 14:56 IST

செவ்வாய்க்கிழமை ‘இந்துக்களுக்கு’ நல்ல நாள் இல்லை. ஆனாலும் ஜூலை 11 செவ்வாய் அன்றுதான் மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான திலீப் கைது செய்யப்பட்டு கொச்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். “மத்திய சிறைக்கு வரவேற்கிறோம் – வெல்கம் டு சென்ட்ரல் ஜெயில்” என்ற பதாகைகளுடன் மக்கள் அவரை வரவேற்றனர். உண்மையில் 2016-ம் ஆண்டில் திலீப் நடித்த படத்தின் தலைப்பும் அதுதான்.

படப்பிடிப்பு முடிந்த பிறகு நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் – படம் பிடித்து பிரச்சினை வெளியே வந்த பிப் – 2017-க்கு பிறகு நிறைய செய்திகள் – கதைகள்! அவற்றில் அரை உண்மைகளோடு அரை பொய்களும் இருந்ததால் கதையின் விறுவிறுவிப்பைக் கூட்டின.

இந்திய சினிமாக்களில் நாற்பது வயது இயக்குநர்கள் எடுத்தே ஆகவேண்டிய இரு மனைவி – காதல் – முக்கோணக் கதையும், அதிக வருமானத்தை சொத்தாக்கும் கூட்டணி பிரச்சினையும், குற்றத்தை மறைக்கும் பிரபலங்களின் அதிகாரமும், அந்த அதிகாரம் தோற்றுவிக்கும் ஆணாதிக்கமும் இதில் இருக்கின்றன.

திலீப்பின் இயற்பெயர் கோபாலகிருஷ்ணன். ஏனைய மலையாள நடிகர்கள் பலரைப் போல இவரும் அடிப்படையில் ஒரு மிமிக்கிரி – பலகுரல் கலைஞர். மேடைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பலகுரல் கலையால் நிகழ்ச்சி நடத்திய திலீப்புக்கு உறுதுணையாக இருந்தவர் நண்பர் நாதிர்ஷா. இவரும் பாவனா மீதான தாக்குதலின் சூத்திரதாரிகளில் ஒருவராக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.

கொச்சி மகாராஜா கல்லூரியில் பட்டம் முடித்த கோபாலகிருஷ்ணன், கொச்சிக்கு அருகே இருக்கும் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர். முதலில் உதவி இயக்குநராக மலையாள திரையுலகில் கால் பதிக்கிறார். ஒன்பது வருடங்களுக்கு பிறகு 1992-ல் “என்னோடு இஷ்டம் கொள்ளாமோ” படத்தில் கேமராவிற்கு முன்னால் ஒரு சிறிய பாத்திரத்தில் தோன்றுகிறார்.

1995-ம் ஆண்டில் அவர் நடித்த மனதே(தி?) கொட்டாரம் படத்தில்தான் அவரது பாத்திரத்தின் பெயரான திலீப் அவரது இன்றைய பெயரானது. மஞ்சுவாரியருடன் 1996-ம் ஆண்டில் அவர் நடித்து வெளியாகி வெற்றிபெற்ற “சல்லாபம்” திலீப்பை நட்சத்திர கிளப்பில் சேர்த்தது. பிறகு 1996-ல் மஞ்சுவாரியரை மணக்கிறார். அப்போது நடிப்பு வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தாலும் ‘குடும்பப் பெண்ணின் இலட்சணப்படி’ நடிப்பிலிருந்து விலகுகிறார் மஞ்சு. திலிப்போ சம்பாதிக்க வேண்டிய ‘புருஷ இலட்சணப்படி’ 130-க்கும் மேற்பட்ட படங்களை முடித்து விட்டார். அவற்றில் பல பெருவெற்றி பெற்ற படங்கள்.

பிறகென்ன? பிரபலம், வருமானம், தயாரிப்பாளர் முதலான அந்தஸ்துகள். 2015-ம் ஆண்டில் மஞ்சு வாரியரை விட்டு பிரிகிறார். 2016-ல் நடிகை காவ்யா மாதவனை மணக்கிறார். காவ்யாவும் பல வெற்றிப்படங்களில் திலீப்போடு ஜோடியாக நடித்தவர்.

இந்த பிரிவு – புதிய மணத்தை வைத்து ஏகப்பட்ட நேரம் அச்சிலும், காட்சியிலும் மலையாள மக்கள் பல வதந்தி, கதைகளை பேசி, கேட்டு, கழித்தனர்.

திலீப்பின் சில படங்களை இயக்கிய இயக்குநர் வினயன், “ திலீப் எனும் நடிகர் தனது முடிவுகளை மறுக்கும் எவரையும் திரைப்படத்துறையில் நீடிக்க முடியாத படி செய்து விடுவார். இத்துறையில் அவரது செல்வாக்கு காரணமாக திரைத்தொழில் சங்கங்கள் பல திலீப் மீதான பல புகார்களை கவனிக்கத் தவறிவிட்டன” என்கிறார்.

வினயன் சொல்வது போல திலீப் எவரையும் ஒதுக்கிவிடும் வல்லமை உடையவரா? மோகன்லால், மம்முட்டி, பிரித்திவிராஜ், அகில இந்திய பிரபலம் அசின், தென்னிந்திய பிரபலம் நயன்தாரா, இன்ன பிற பிரபல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நிறுவனங்கள்.. இவர்களையெல்லாம் திலீப் ஓரங்கட்ட முடியுமா என்ன? நிச்சயம் முடியாது. இவர்களெல்லாம் திலிப்பை விட அதிகமோ இல்லை சற்று குறைவாகவோ செல்வாக்கு கொண்டவர்கள்தான்.

ஆயினும் மலையாளத் திரையுலகைப் பொறுத்த வரை திலீப் ஒரு தாதா போன்ற அதிகாரத்தை கொண்டிருந்தார் என்றால் அது மிகையல்ல. “மலையாள சினிமாவின் சில தவறான முன்மாதிரிகள் திலீப்போடு ஆரம்பித்தன. அவரது படத்தில் யார் நாயகி, படக்குழுவினர் எவர் என்பதையெல்லாம் திலீப்தான் முடிவு செய்வார். இதை மலையாள திரையுலகில் ஆரம்பித்து வைத்தது அவர்தான்” என்கிறார் இயக்குநர் ராஜசேனன்.

தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி திரையுலகில்தான் இதெல்லாம் எம்ஜிஆர், ராஜ்கபூர், ராமாராவ், ராஜ்குமார் காலத்திலேயே வந்துவிட்டன. எனினும் மலையாள சினிமாவின் வர்த்தகம் சற்றே சுருங்கியது என்பதால் இந்த மாதிராயான சூப்பர் ஸ்டார் துதிகள் இல்லாமல் இருந்திருக்கலாம். உலகமயமாக்கம் வந்த பிறகு வளைகுடா, இணைய சந்தைகள் உருவான பிறகு மலையாளமும் ஜோதியில் கலந்து விட்டது. எனினும் இதை துவக்கி வைத்தவர் என்ற முறையில் திலீப் இங்கே குறிப்பிடப்படுவதாக நாம் புரிந்து கொள்ளலாம்.

திலிப் அதோடு மட்டும் நின்றுவிடவில்லை. மலையாள திரையுலகில் அவர் நடிகர், தயாரிப்பாளர், வினியோகஸ்தர் என்று அனைத்து பாத்திரங்களிலும் அடித்து விளையாடியதால் அவரது பிரபலத்தை வைத்து முழு திரையுலகையும் கட்டுப்படுத்தவோ, செல்வாக்கை கூட்டிக் கொள்ளவோ முயன்றார்.

அது வெறுமனே தலைமையை பிடிக்கும் தேர்தல் அல்ல. தொழிலில் யார் ஆதிக்கம் செய்வது என்ற ஏகபோக போட்டி. திரையரங்க வசூலில் தங்களது பங்கை அதிகரிக்க வேண்டுமென்று இவ்வாண்டு ஜனவரியில் வினியோகஸ்தர்கள் வேலை நிறுத்தம் செய்த போது, அதை முறியடிக்க திலீப் வினியோகஸ்தர்களுக்கான தனிச் சங்கத்தையே துவக்கி விட்டார். இது அவர் கைது செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு  முன்பு நடந்தது.

மலையாள திரை நடிகர்களின் சங்கமான “அம்மா”வின் பொருளாளராக இருக்கும் திலீப், அச்சங்கத்தின் முதுகெலும்பு என்று அழைக்கப்படுவாராம். ஆரம்பத்தில் பாவனாவுக்கு நேர்ந்த குற்றம் குறித்து பேச்சு வருகையில் இந்த “அம்மா’ சங்கம் திலீப்புக்கு ஆதரவாக பத்திரிகையாளர் கூட்டம் நடத்தியது.

ஆக வெறும் நடிகர் என்று இல்லாமல் அனைத்தும் தழுவிய திரையுலக அதிகாரத்தை வளைக்கும் ‘சாமர்த்தியம்’ திலீப்புக்கு இருந்தது. அதன் பிறகு அவர் தனிப்பட்ட காரணங்களால் பாவனா மீது பகை கொண்டிருக்கிறார். அதில் வணிக, சொத்து காரணங்கள் கூட இருக்கலாம். எனினும் திலீப்போடு ஒப்பிடுகையில் பாவனா வெறும் நடிகர் மட்டுமே. அதுவும் பல நடிகைகளில் ஒருவர். காவ்யா மாதவன் கூட திலிப் சேர்ந்து கொண்டு மஞ்சு வாரியருக்கு துரோகமிழைக்கிறார் என்று பாவனாதான் மஞ்சுவிடம் தெரிவித்தார். அதனால் திலீப் பாவனா மீது ஜன்மப் பகை கொண்டார் என்று அனைவரும் எழுதுகின்றனர்.


பல்சர் சுனி
இவையெல்லாம் சில பொறிகள் மட்டுமே. ஏனெனினல் பாவனாவை பழிவாங்க திலீப் போட்ட திட்டம் போல மற்றவர் போட்டிருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. “பல்சர் சுனி” எனும் கூலிப்படை ஆளை பல இலட்சங்களில் விலை பேசி, பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்து, நிர்வாணமாக்கி படம் பிடித்து, பாவனாவின் திருமணத்தை நிறுத்துவது என்று மலையாள த்ரில்லர் படக்கதை போல போகிறது விசாரணை உண்மைகள்.

இந்த குற்றம் குறித்து போலீசின் சிறப்பு விசாரணைக் குழுவினர் அமைதியாக திலீப்பை வளைத்திருக்கின்றனர். பல்சர் சுனியோடு திலீப்பும், அவருக்கு நெருக்கமானவர்களும் பேசியது எல்லாம் ஆதாரங்களாக போலீசிடம் இருக்கின்றன. எனினும், ஒரு சதிவலையில் தன்னை சிக்கவைத்து விட்டனர் என்று திலீப் கைதுக்கு பிறகு கூறியிருக்கிறார்.

சற்றே புன்னகையுடன் அவர் காணப்படுவதால் விசாரணையோ இல்லை தீர்ப்போ முற்றிலும் திலீப்புக்கு எதிராகத்தான் வரும் என்று சொல்வதற்கில்லை. மேலதிகமாக குற்றம் நிகழ்த்தப்பட்ட பாவனா கூட நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு என்று அமெரிக்கா போல தீர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளும் உண்டு.

திலீப்பின் குற்றத்தை ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் இழைத்த குற்றமாக கருதும் பலர், இதை பெண்ணிய நோக்கில் பெண் விடுதலை, பெண் அடிமைத்தனம் என்று வழமையான கருத்துக்களில் பார்க்கின்றனர். இவையெல்லம் இல்லாமல் இல்லை. ஆனால் இவையே பிரதானமாகவோ இல்லை அடிப்படையாகவோ இல்லை. பல்சர் சுனி எடுத்த வீடியோ பதிவு காய்வா மாதவன் நடத்தும் துணிக்கடையில் கொடுக்கப்பட்டது, காவ்யா மாதவன் மற்றும் அவரது தாயாருக்கும் குற்றத்தில் பங்கு இருக்கிறது, அவர்களும் கைது செய்ய்யப்படுவார்கள் என்பதை வைத்துப் பார்க்கும் போது இங்கே பெண்ணுக்கு குற்றமிழைத்த கூட்டத்தில் பெண்களும் இருக்கிறார்கள்.

அதிகாரத்தின் உயர்மட்டத்தில் இருப்போர் செய்யும் குற்றங்களை அந்த அதிகார மட்டத்தை வைத்தே பரிசீலிக்க வேண்டும். மோனிகா லிவின்ஸ்கியோடு தவறாக நடந்து கொண்ட கிளிண்டன், அந்த பெண்ணுக்கு பெரிய வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டினார். வெள்ளை மாளிகை எனப்படும் இந்த உலகிலேயே அதிக அதிகாரம் கொண்ட ஒரு கட்டிடத்தின்  தலைவனுக்கு ஒரு பணிப்பண்ணை ஏமாற்றுவது எவ்வளவு எளிது!

நீதிபதி கங்குலி, தெகல்கா தருண் தேஜ்பால், என்று பல வகைகளில் பார்த்தாலும் குறிப்பிட்ட துறைகளில் செல்வாக்கும் அதிகாரமும் இருப்போர் இத்தகைய குற்றங்களை திட்டம் போட்டு செய்கிறார்கள். அல்லது குற்றம் வெளியே வந்த பிறகு அதை சகஜமாக எதிர்கொண்டு தங்களது பெயரை காப்பாற்ற முனைகிறார்கள். இவர்களெல்லாம் வெறும் ஆண்கள் மட்டும் தானா?

இல்லை. திலீப்பின் கதையையே எடுத்துக் கொள்வோம். தொழிலாளர் உரிமைகளுக்கு பெயர் போன ஒரு மாநிலத்தில் திரைப்படம் தொடர்பான அனைத்து சங்கங்களையும் அவர் தீர்மானிக்கிறார். திரைப்படம் தொடர்பான வர்த்த்கம், வினியோகம், தயாரிப்பு போன்றவற்றில் அவர் இருக்கிறார். இவையெல்லாம் சேர்ந்து அவர் அத்துறையில் சக்கரவர்த்தி போல அதிகாரத்தை எடுத்துக் கொள்கிறார். அவரது வர்த்தகத்தோடு தொடர்புடைய அந்த சங்கங்கள் அவரது தவறுகளை துறை ரீதியாக விசாரிக்க கூட இல்லை.

ஆகவே அவரை எதிர்ப்போர் மட்டுமல்ல, எதிர்க்கும்  சங்கங்களும் கூட வலுவலிழக்கின்றனர். எதிர்ப்போரை வீழ்த்துவது மட்டுமல்ல, எதிர்க்கும் சங்கங்களுக்கு போட்டியாக புதுச் சங்கங்களையே உருவாக்குகிறார். இப்பேற்றப்பட்ட நபர் பாவனாவை என்னவெல்லாம் செய்ய தீர்மானிகத்திருப்பார்?

சுருங்கச் சொன்னால் வர்த்தகம் தொரடர்பான முதலாளித்துவத் துறைகளில் இருப்போரை வழிநடத்துவது அல்லது பொறுப்பாக்குவது ஜனநாயகம் அல்ல. பணம் அல்லது வர்த்தகம். அவர் வெற்றிகரமான நடிகர், தயாரிப்பாளர், வினியோகஸ்தர் என்பாதலேயே அவரது ஜனநாயகமற்ற நடவடிக்கைகள் ஏற்கப்படுகின்றன.

பாவனா பிரச்சினையில் ஆரம்பத்தில் திலீப்பை ஆதரித்த அம்மா நடிகர் சங்கம் இப்போது அவரை நீக்கியிருக்கிறது. திலீப் தன்னை எதிர்ப்போரை காலி செய்தது முன்னாடியே அம்மா சங்கத்திற்கு தெரியாமலா இருக்கும்? அகப்படாதவரை அவர் உத்தமர், அகப்பட்ட பிறகு அவர் குற்றம் சாட்டப்பட்டவர் அவ்வளவுதான். நாளைக்கே திலீப் விடுதலையானால் அம்மா அவரை இரண்டு பங்கு உச்சத்தில் கொண்டு போய் வைக்கும்.

தற்போது பெண் நடிகைகளுக்குஎன்று தனி அமைப்பெல்லாம் கேரளாவில் ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் வர்த்தகம் கொலேச்சும் திரைத்துறையில் ஜனநாயகத்தை கொண்டு வர வழியில்லாத போது யாருக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும்?

ஒரு சினிமா என்பது தயாரிப்பு, நடிகர் சம்பளம், இலாப பகிர்வு போன்றவற்றோடு சூதாட்டத்தையும் விஞ்சும் விதிகளோடு இயங்கும் துறை என்பதால் சூப்பர் ஸ்டார்களையோ இல்லை பெரும் முதலாளிகளையோ அங்கே எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?

ஆரம்ப கால மலையாள சினிமா உலகில் நல்ல படங்கள் வந்தன, நல்ல படைப்பாளிகள் இருந்தனர், என்பதெல்லாம் பழங்கதையாக மாறியதற்கும் திலீப் ஒரு திரைத்துறை தாதாவாக மாறியதற்கும் பெரும் வேறுபாடு இல்லை.

மற்ற துறைகளைப் போலக் கூட சினிமாவைக் கட்டுப்படுத்த முடியாது என்றால் இங்கே திலீப்புகள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள்.




திரைப்படங்கள்
1992

என்னோடிஷ்டம் கூடாமோ (முதல் திரைப்படம்)
1993

சைன்யம்
1994

மானத்தெ கொட்டாரம்
சுதினம்
பிடக்கோழி கூவுன்ன நூற்றாண்டு
1995

திருமனசு
விருத்தன்மாரெ சூட்சிஷிக்குக
த்ரீ மென் ஆர்மி
சிந்தூர ரேகை
ஏழரக்கூட்டம்
1996

கல்யாணசௌகந்திகம்
குடும்பகோடதி
மலையாளமாசம் சிங்ஙம் ஒன்னு
மாந்திரிககுதிரை
படநாயகன்
சாமூஹ்யபாடம்
சுவப்னலோகத்தெ பாலபாஸ்கரன்
தூவல்க்கொட்டாரம்
காக்கக்கும் பூச்சக்கும் கல்யாணம்
கொக்கரக்கோ
ஸல்லாபம்
1997

வர்ண்ணப்பகிட்டு
ஈ புழையும் கடன்னு
களியூஞ்ஞால்
கல்யாணப்பிற்றேன்னு
குடமாற்றம்
மானசம்
மந்திரமோதிரம்
மாயப்பொன்மான்
நீ வருவோளம்
உல்லாசப்பூங்காற்று
1998

அனுராகக்கொட்டாரம்
கைக்குடன்ன நிலாவு
கல்லுகொண்டொரு பெண்ணு
மந்திரிமாளிகையில் மனசம்மதம்
மீனத்தில் தாலிகெட்டு
ஓர்ம்மச்செப்பு
பஞ்சாபி ஹௌஸ்
சுந்தரக்கில்லாடி
விஸ்மயம்
1999

சந்திரனுதிக்குன்ன திக்கில்
தீபஸ்தம்பம் மஹாஸ்சர்யம்
மேகம்
பிரணய நிலாவ்
உதயபுரம் சுல்த்தான்
2000

ஜோக்கர்
தெங்காசிப்பட்டணம்
டார்லிங் டார்லிங்
மிஸ்டர் பட்லர்
வர்ணக்காழ்சகள்
2001

இஷ்டம்
ஈ பறக்கும் தளிகை
சூத்ரதாரன்
தோஸ்த்
ராட்சசராஜாவ்
2002

குஞ்ஞிக்கூனன்
கல்யாணராமன்
மீசைமாதவன்
குபேரன்
மழைத்துள்ளிக்கிலுக்கம்
ராஜ்யம் (தமிழ்)
2003

பட்டணத்தில் சுந்தரன்
வார் ஆன்ட் லவ்
மிழி ரண்டிலும்
சி.ஐ.டி மூசா
கிராமபோன்
சதானந்தன்றெ ஸமயம்
திளக்கம்
2004

ரசிகன்
பெருமழைக்காலம்
கதாவசேஷன்
தெக்கேக்கரம் சூப்பர் பாஸ்ட்
வெட்டம்
ரன்வே
2005

சாந்துபொட்டு
பாண்டிப்படை
கொச்சிராஜாவ்
2006

சக்கரமுத்து
தி டோண்
செஸ்
பச்சைக்குதிரை
லயன்
2007

ரோமியோ
ஜூலை நால்
ஸ்பீட் டிராக்
வினோதயாத்திரை
இன்ஸ்பெக்டர் கருட்
2008

கிரேசி கோபாலன்
டுவென்டி 20
முல்லை
கல்க்கட்டா நியூஸ்
2009

சுவந்தம் லேககன்
கேரள கபே
பாசஞ்சர்
மவுஸ் அன்ட் கேட்
கலர்ஸ்
2010

பாடி கார்ட்
ஆகதன்
பாப்பி அப்பச்சா
கார்யஸ்தன்
மேரிக்குண்டொரு குஞ்ஞாடு
2011

கிரிஸ்தியன் பிரதர்ஸ்
சைனாடவுன்
பிலிம் ஸ்டார்
ஓர்ம்ம மாத்ரம்
வெள்ளரிப்ராவின்றெ சங்ஙாதி
2012

ஸ்பானிஷ் மசாலா
மாயாமோஹினி
அரிகெ
மிஸ்டர் மருமகன்
மை பாஸ்
2013

கம்மத் & கம்மத்
சவுண்ட் தோமா
கடல் கடந்நொரு மாத்துக்குட்டி
ஸிறிங்காரவேலன்
நாடோடிமன்னன்
ஏழு ஸுந்தர ராத்றிகள்
2014
ரிங் மாஸ்டர்
அவதாரம்
வில்லாளிவீரன்
2015

இவன் மரியாதராமன்
சந்த்ரேட்டன் எவிடயா
லவ் 24×7
லைப் ஆஃப் ஜோஸுட்டி
2 கண்ட்றீஸ்
2016

கிங் லயர்
பின்னேயும்
வெல்கம் டூ செண்ட்றல் ஜெயில்
2017

ஜோர்ஜேட்டன்ஸ் பூரம்
ராமலீல
உதவி இயக்குனர்
உள்ளடக்கம்(1991)
சம்பக்குளம் தச்சன்(1992)
என்னோடிஷ்டம் கூடாமோ(1992)
மழையெத்தும் முன்பெ(1995)
மந்திரமோதிரம்(1997)
தயாரிப்பாளர்
சி. ஐ. டி. மூசா (2003)
கதாவசேஷன் (2004)
பாண்டிப்படை(2005)
டுவென்டி 20
மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் (2010)
தி மெட்ரோ(2011)
லவ் 24×7
கட்டப்பனயிலே கிரித்திக் ரோஷன்
கதை எழுத்தாளர்
பச்சைக்குதிரை (2006)
பாடகர்
திளக்கம் (2003
பாடல்: சாரே சாரே
சவுண்ட் தோம (2013)
பாடல்: ...கண்டால் ஞானொரு சுந்தரனா .......
ஸிறிங்காலவேலன்(2013)
பாடல்:அசகுசலே.....
திரைப்படங்கள் மற்று மொழிகளில்

ராஜ்ஜியம்(2002)-தமிழ்
டூஃபான்(2010)-ஹிந்தி
வஜ்ஜறாக்கயா(2015)-தெலுங்கு
விருதுகள்
கேரள அரசின் சிறப்பு விருது - குஞ்ஞிக்கூனன் - 2002
மாத்ருபூமியின் விருது - 2002
கேரள அரசின் சிறப்பு விருது - சா‌ந்து பொட்டு - 2005
கேரள அரசின் சிறப்பு விருது - வெள்ளரிப்ராவின்றெ சங்ஙாதி - 2011[1]