Showing posts with label DISTRICT. Show all posts
Showing posts with label DISTRICT. Show all posts

Monday, 7 June 2021

EH GOWRIAMMAN KOVIL , AT VALLAM -TANJORE DISTRICT

 

EH  GOWRIAMMAN KOVIL ,

AT VALLAM -TANJORE DISTRICT




ஏகௌரியம்மன் கோயில் என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு காளி கோயிலாகும். இக்கோயிலானது தஞ்சையிலிருந்து தஞ்சை-திருச்சி சாலையில் 12கிமீ தொலைவில் உள்ள வல்லம் என்னும் சிற்றூரிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் ஆலக்குடிச் சாலையில் ஒரு கிமீ தொலைவில் உள்ளது.

பெயர்க்காரணம்

முன்னொரு காலத்தில் தஞ்சாசுரன் என்னும் அசுரன் தஞ்சையில் வாழ்ந்தான். சிறந்த சிவபக்தனான அவன் தனது தவபலத்தால் மனிதர், தேவர், மும்மூர்த்திகள் இவர்களிடமிருந்து உயிர் பிரியாத வரத்தைச் சிவபெருமானிடம் பெற்றான். பல கொடுமைகள் செய்து வந்த அவனைப்பற்றி மக்கள், தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, சிவன் தன் துணைவியான சிவசக்தியை ‘ஏ கௌரி‘, என்றழைத்து, தஞ்சாசுரனை அழிக்க ஆணையிடுகிறார். எருமைக்கிடா உருவம் தாங்கிய அசுரனின் கழுத்தை வெட்டி தலையை ஒரு கையில் ஏந்துகிறாள். உடல் கீழே சாய்ந்ததும் அசுரன் எருமை உருவம் நீங்கி இறந்துவிடுகிறான். போர் புரிந்த இடத்தில் அம்மன் கோபமாக இருந்ததால் அப்பகுதியில் பஞ்சம், வறட்சி ஏற்பட்டது. சிவபெருமான் ஏகௌரியம்மனிடம் தஞ்சாசுரனை அழித்ததால் கோபமாக உள்ளதைக் கூறி, கோபத்தைத் தணித்துக்கொண்டு அப்பகுதி மக்களுக்குத் தெய்வமாக இருந்து காப்பாற்றும்படி கூறுகிறார். வறட்சி, பஞ்சம் நீங்குகிறது. மக்கள் ஏகௌரியம்மனை பூசை செய்து வணங்கினர். தஞ்சாசுரனை அழித்த நாளே ஆடி மாதக் கடைசி வெள்ளி அல்லது ஆடிக்கழிவு நாளாகும். [2] பராந்தகசோழன் காலத்தில் வல்லத்துப்பட்டாரகி என்றும் இராஜராஜசோழன் காலத்தில் காளாபிடாரி கைத்தலைபூசல் நங்கை என்றும் இந்த அம்மன் அழைக்கப்பட்டுள்ளார். [3]


கோயில் அமைப்பு

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் கட்டுவதற்கு முன்பாகவே கட்டிய கோயிலாக இக்கோயில் இருந்துள்ளது. கோயிலின் நுழைவாயில் முதல் பெரிய சுற்றுப்பாதை ஒரு கோட்டையைப் போல பாதுகாப்பாக உள்ளது. கருவறையில் சுமார் 6 அடி உயரத்தில் சுடருடன் எட்டுத் திருக்கரங்களில் படைக்க்லன் ஏந்தி, சுதை வடிவத்தில் ஏகௌரியம்மன் காட்சியளிக்கிறாள்.


கல்வெட்டு

கி.பி.9ஆம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் எனப் பராந்தகசோழனின் 40ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பெற்ற கல்வெட்டு தெரிவிகிறது. இப்போது உள்ள கோயிலாக 1535இல் தஞ்சையை ஆண்ட அரசன் செவ்வப்ப நாயக்கரும், அவரது மகன் அச்சுதப்ப நாயக்கரும் சேர்ந்து கருவறை, அர்த்த மண்டபம் ஆகியவற்றை இணைத்துப் புதிய மகா மண்டபம் கட்டிய செய்தியை அர்த்தமண்டபத்தில் காணப்படும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. [4]


திருவிழா

ஆடிப்பதினெட்டு அன்று வல்லம் கடைவீதியிலுள்ள மாரியம்மன் கோயில் விழாவோடு ஏகெளரியம்மன் கோயில் திருவிழா நடத்தப்பெறுகிறது. ஏகௌரியம்மன், மாரியம்மன், அய்யனார் ஆகிய உற்சவமூர்த்திகளைத் தனித்தனியே அலங்கரித்து வீதி உலா நடத்துகின்றனர். ஆடி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை ஆடிக்கழிவு திருவிழா நடைபெறுகிறது. தீமிதி, அம்மனுக்கு பகலில் சைவ பூசை, தொடர்ந்து இரவில் எருமைக்கிடா பூசை போன்றவை நடத்தப்பெறும். கோயில் காவல் தெய்வங்களுக்கு ஆடு,கோழி வெட்டி பூசை செய்கின்றனர். இத்திருவிழாவைக் காண வல்லம் அருகில் வாழும் மக்களும் ஈரோடு, இராமநாதபுரம், கோவை, பெங்களூர் ஊர்களிலிருந்து வரும் மக்களும் கலந்துகொள்கின்றனர். [2]


இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அவ்விழாவில் தேவிக்கு நடத்தப்படும் சண்டி ஹோமம், திருவிளக்கு பூஜை, சித்ரா பௌர்ணமி விழா அடங்கும். சண்டி ஹோமம் செய்வதால் பராசக்தியின் வடிவங்களாகிய துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகள் மிகவும் மகிழ்ந்து வாழ்வில் உள்ள சூனியங்களை அழித்து சகல சுகங்களையும் பக்தர்களுக்கு அருள்வதாக நம்புகின்றனர். [5



சோழ மன்னர்களின் வழிபாட்டு தெய்வமாகவும், குலதெய்வமாகவும், அவர்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கும் காளியாகவும் விளங்கியவள் ஏகவுரி அம்மன். வல்லப சோழன், கரிகாற்சோழன், ராஜராஜ சோழன் ஆகியோரால் வழிபடப்பட்டு வந்தவள். இவர்கள் போர்க்களம் செல்லும் போது வெற்றிவாகை சூட இத்தேவியிடம் அருள் வாக்கு கேட்டு உத்தரவு பெற்ற பின்னரே செல்வது வழக்கம்.

தஞ்சையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வல்லம் என்ற ஊர். இங்குள்ள ஏகவுரி அம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. எட்டு திருக்கரங்களுடன் தேவி, பத்மபீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். இந்த தேவி ஒன்றன்மீது ஒன்றாக அமைந்த இரண்டு திருமுகங்களுடன் காட்சிதருகிறாள்.

தீயவர்களை அழிக்க உக்கிரமுடன் ஒரு முகம், வழிபடும் அடியவர்களின் துயர் நீக்க சாந்தமுடன் மற்றொரு முகத்துடனும் காட்சிஅளிக்கிறாள். அம்மன் பாதத்தில் சக்திவாய்ந்த ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் சக்தியானது வழிபடும் பக்தர் களின் வேண்டுதல்களை நிறைவேற்ற உதவுகிறது.

தல வரலாறு :

முன்னொரு காலத்தில் தஞ்சன் என்ற அரக்கன் சிவனை நினைத்து கடும் தவம் புரிந்தான். அவனது தவத்திற்கு மகிழ்ந்த இறைவன் அவன் முன்பு தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். மகிழ்ந்து போன தஞ்சன், பெண்களைத்தவிர வேறு எவரும் என்னை வெல்ல முடியாத வரம் வேண்டும் என்றான். இறைவனும், ஒரு பெண்ணை தவிர யாராலும் உன்னை வெல்ல முடியாது என்ற வரத்தை வழங்கினார்.

இறைவனிடம் வரம் பெற்ற ஆணவத்தால் தஞ்சன் முனிவர்களையும், தேவர்களையும் மிகவும் கொடுமைப் படுத்தினான். தேவர்கள் சிவபெருமானை சரண் அடைந்து அரக்கனின் கொடுமைகள் குறித்து முறையிட்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய சிவபெருமான், அரக்கன் அழியும் நேரம் நெருங்கிவிட்டது என்று கூறி, பார்வதி தேவியை அழைத்து அரக்கனை அழிக்க ஆணையிட்டார். ஈசனின் ஆணையை ஏற்ற கவுரி சிம்ம வாகன மேறி எட்டுக்கரங்களிலும் ஆயுதம் ஏந்தி புறப்பட்டாள். அளவுகடந்த கோபத்தோடு வந்த தேவியைப் பார்த்த அரக்கன் போருக்கு தயாரானான். தேவிக்கும், அரக்கனுக்கும் கடும்போர் ஏற்பட்டது. தஞ்சன் வெறியுடன் தன்வில்லை வளைத்து பாணங்களைத் தொடுத்து தேவியின் மீது சரமாரியாக எய்தினான்.

தேவி அவற்றை எல்லாம் தடுத்துத் தள்ளி பெரும் போர் புரிந்தாள். கதாயுதத்தால் தஞ்சன் மார்பு மீது தாக்கினாள். இறுதியாக அரக்கன் எருமைக் கடாவாக மாறி தேவியைத் தாக்கினான். சிம்ம வாகனத்தில் சீற்றமுடன் வந்த தேவி எருமைக்கடாவாக வந்த அரக்கனை வாளால் தலைவேறு, உடல் வேறு என இரண்டு துண்டாக்கினாள்.

உயிர் பிரியும் நேரத்தில் அரக்கனுக்கு அறிவு வந்து தேவியைப் பணிந்து, இந்த பகுதி எனது பெயரால் தஞ்சாபுரி என்று அழைக்கப்படவேண்டும் என்று வேண்டினான். அவன் கேட்ட வரத்தை வழங்கினாள் தேவி. அரக்கனை வதைத்த பின்னும், அம்மனின் ஆக்ரோஷம் அடங்கவில்லை. அதே உக்கிரத்துடன் வல்லத்தில் அலைந்து திரிந்தாள். இதனால் நாடெங்கும் வறட்சி உண்டாயிற்று. நீர் நிலைகள் அனைத்தும் வற்றிப் போயின.

நாடெங்கும் பஞ்சம், பசி, பட்டினி என மக்கள் தவித்தனர். நிலைமையை உணர்ந்த சிவபெருமான் பார்வதியை நோக்கி விரைந்தார். “ஏ கவுரி” சாந்தம் கொள் என்று கேட்டுக்கொண்டார். அம்மையின் கோபம் சற்று தணிந்தது. நெல்லிப்பள்ளம் என்ற குளத்தில் மூழ்கினாள். அப்போது பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து அங்கேயே எழுந்தருளவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு ஏகவுரி அம்மனாக வடக்கு நோக்கி அமர்ந்து அருள்புரிந்து வருகிறாள்.

அம்மன் அரக்கனை வதம் செய்தது ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகும். எனவே அன்றைய தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து, தீ மிதித்து அம்மனை சாந்தப் படுத்துகின்றனர்.



அம்மன் எழுந்தருளிய இடத்தில் சுதை வடிவத்தில் அம்மன் சிலை எழுப்பப்பட்டது. அந்த சுதை வடிவம் இன்றளவும் மாற்றப் படாமல் வழிபடப்பட்டு வருகிறது.

கோவில் கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் விநாயகர், முருகன், காத்தவராயன், சண்டிகேசுவரர், வராகி, பிரத்தியங்கரா தேவி, நாகர் ஆகியோரை தரிசனம் செய்யலாம். வெளிப்பிர காரத்தில் மதுரை வீரன் தன் துணை வியர்களான வெள்ளையம்மாள், பொம்மியுடன் காட்சி தருகிறார். கருப்பசாமி, லாட சன்னியாசி, காத்தான் ஆகிய கிராம தேவதைகளையும் அங்கே பார்க்கலாம். ஏகவுரி அம்மன் ஆலயத்தில் பகல் முழுவதும் கோவில் நடை திறந் திருக்கும்.

தடைப்பட்ட திரு மணம் நடைபெற மற்றும் குழந்தை பாக்கியம் முதலியவைக்கு மிகச்சிறந்த பரிகார தலமாக உள்ளது. திருமண தடை உள்ள பெண்கள் இங்கே வந்து அம்மனுக்கு புடவை சாத்தி, அம்மனின் திருப்பாதத்தில் மஞ்சள் வைத்து வணங்குகின்றனர். அதில் இருந்து ஒரேயொரு மஞ்சளை எடுத்து வந்து தினமும் குளிக்கும்போது பூசிக்கொள்ள விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

மாதந்தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் அம்மனுக்கு சிறப்பு ஹோமங்களும், அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு அம்மனை வழிபட துன்பங்கள் நீங்கி சந்தோஷம் நிலைக்கும் என்கின்றனர். ஏவல், பில்லி, சூனியம், கிரகக்கோளாறுகளால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து அம்மனை வழிபட்டு பலன் பெறுகின்றனர்.

ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமி அன்று தேவிக்கு மகா சண்டி ஹோமம், திருவிளக்கு பூஜை, சித்ராபவுர்ணமி பூஜை சிறப்பாக நடைபெறும். சண்டிஹோமம் செய்வதால் பராசக்தியின் வடிவங்களாகிய துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகள் மகிழ்ந்து துயர்களை நீக்கி வாழ்வில் அனைத்து நலன்களையும் பக்தர்களுக்கு அருள்வதாக நம்புகின்றனர்.

ராகு, கேது தோஷம் நீங்கும் :


கோவில் கருவறையில் ஏகவுரி அம்மனைச் சுற்றியபடி இரண்டு நாகங்கள் இருப்பதை காணலாம். ராகுவும், கேதுவும் அம்மனின் கட்டுப்பாட்டில் இருக்கும் தலம் இது. ராகு, கேது தோஷம் நீங்கும் தலம். இந்த தலத்திற்கு வந்து அம்மனை தரிசித்தால் நாகதோஷம், கால சர்ப்பதோஷம், களத்திரதோஷம், முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

எருமைக்கன்று காணிக்கை :

ஏகவுரி அம்மன் கோவில் ஒரு பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. மிகவும் உடல் நலமில்லாமல் இருப்பவர்கள் தாங்கள் உடல் நலம் பெற்றால் அம்மனுக்கு எருமைக்கன்றை காணிக்கையாக செலுத்துவதாக வேண்டிக்கொள்கிறார் கள். அவ்வாறு பிரார்த்தனை செய்து கொண்டவர்கள் தாங்கள் உடல் நலம் பெற்றவுடன் அந்த வருடம் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை திருவிழா அன்று எருமைக்கன்றை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி வழிபட்டுச்செல்கின்றனர்.

பிராது கட்டும் வழக்கம் :

ஏகவுரி அம்மன் கோவிலில் பிராது கட்டும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. சொத்தை பறிகொடுப்பது, திருட்டு போன்ற சம்பவங்களுக்கு அம்மனிடம் பிராது கொடுப்பதால் நியாயம் கிடைக்கிறது என்பது நம்பிக்கை. இதுபோன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நடந்த சம்பவங்களை கோவில் பூசாரியிடம் ஒரு வரிவிடாமல் கூறுவார்கள். அதற்கு பூசாரி அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்து முறையிடுவார். இதைக்கேட்டு ஏகவுரி அம்மன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கச்செய்கிறாள் என்பது ஐதீகம்.


Wednesday, 28 October 2020

KADAVOOR JAMEEN -DINDIGUL DISTRICT MOUNTAIN PLACE

 

KADAVOOR JAMEEN -DINDIGUL DISTRICT MOUNTAIN PLACE




"கடவூர் ஜமீனின் ஆளுகையில் இருந்த மலையைப் பற்றி யாருக்குத் தெரியும்?" - ஒரு மலையேறும் கரூர்க்காரரின் கதை!

இருபது வருடங்களுக்கு முன்பு, எங்கள் பதினெட்டு ஊர்களிலும் டி.வி-யோ, தியேட்டரோ இல்லை. அதனால், 'ஒளியும் ஒலியும்' பார்ப்பதற்காக 500 அடி மலையேறி அந்தப் பக்கம் இருக்கும் திண்டுக்கல் மாவட்டத்துக்குப் படையெடுப்போம்.

மலையும் மலை சார்ந்த இடங்களையும் சுற்றிப் பார்க்காதவர்கள் யார்தான் இருக்க முடியும்? அவற்றை எத்தனை முறை பார்த்தாலும் எவருக்கும் சலிப்பு ஏற்படாது என்பது உண்மைதான். அதனால்தான் பலரும் சுற்றுலாத்தலம் சம்பந்தப்பட்ட மலைக்குன்றுகளில் மலையேற்றம் காண்கின்றனர். அப்படியான கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மலைப் பகுதிக்குத்தான் அனுபவம் வாய்ந்த தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவரோடும் பாலா என்ற இளைஞரோடும் பயணித்தோம்...

"இந்த மலை, கரூர் மாவட்டம், கடவூர் அருகே மாவட்ட எல்லையாக உள்ள தெற்கு அய்யம்பாளையம் உள்ளிட்ட 18 ஊர்களைச் சுற்றி காம்பஸை வைத்து வரைந்ததுபோல் வட்டவடிவில் உள்ளது. இதை தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு மலைகள் எனப் பெயர்வைத்து அழைக்கின்றனர். அதோடு, இன்னும் சில மலைகளைத் தொப்பிசாமி மலை, புள்ள முழுங்கி மலை என்று சுவாரஸ்யமான பெயர்களையும் வைத்து அழைக்கிறார்கள்" என்ற முத்துசாமி, "இந்த மலைப்பாதை கரடுமுரடாக இருக்கும். மேலும், இங்குப் பெயர் தெரியாத விஷ ஜந்துக்களும் நிறைய இருக்கும். எதற்கும் எச்சரிக்கையுடன் இருங்கள்" என்று அறிவுறுத்தியபடியே தொடர்ந்தார்.

"இந்த மலையின் அடிவாரத்தில்தான் என்னுடைய ஊர் இருக்கிறது. ஆனால், இப்படி மலையேறி இருபது வருடங்களுக்கு மேலாகுது. உசிலை, விராலி, செமுனா, இண்டுமுள், தெரளி, சுளுந்தை, வெடத்தலையான் என இங்குப் பெருகியிருக்கும் பல மரங்களுடைய விறகுகளைப் பொறுக்குவதற்காக இளஞ்சிறார்களோடு அடிக்கடி வருவேன். அப்புறம், இந்த மலையில் இயற்கையாக விளைந்துகிடக்கும் காரக்காய், பொவுஞ்சி, வீரப்பழம், சூரப்பழம், களிப்பூலாம் பழம், கொள்ளுக்குறிச்சான், நரி நத்தைப் பழம், செமுனாப் பழம், பொடாத்திப் பழம், ஆனைப்பழம் எனப் பல பழங்களைப் பறித்துத் தின்போம். தலையில் தேய்ப்பதற்கு மரிக்கலாம்பட்டையையும், வீட்டில் குழம்பு வைப்பதற்கு காட்டுச் சுண்டைக்காயையும் பறித்துச் செல்வோம். விடுமுறை நாள்களில் இங்குதான் ஆடு, மாடுகளை மேய்க்க வருவோம். ஆனால் வீட்டில் உள்ளவர்கள், 'மலைமேல மோகினி, பிசாசு எல்லாம் இருக்கு. அங்கே போகாதீங்க'னு சொல்வாங்க. ஆனால், நாங்கள் அவர்களின் பேச்சையெல்லாம் கேட்காமல்தான் மலைக்குச் செல்வோம். அவையெல்லாம் இனி, திரும்பவே வராத காலம்" என்று ஏக்கப் பெருமூச்சுவிட்ட அவர், திடீர் என யாரும் எதிர்பாராத வகையில், எதிரில் இருந்த ஒரு மரத்துமீது ஏறினார்.


"இந்த மரத்தில்தான் சிறுவர்களுடன் ஏறி 'குரங்கு தாவுதல்' விளையாடுவோம்" என்றவர், பின்னர் அதிலிருந்து கீழ் இறங்கி நடைபாதையின் ஓரத்திலிருந்த கள்ளிச்செடிகளைப் பார்வையிட்டார். பின், ஒரு குச்சியை எடுத்து அந்தச் செடியில், 'எம்.வி' என்று எழுதி ரசித்துப் பார்க்கிறார். பின் அதனருகில் இருந்த ஆனைப்பழங்களைப் பார்த்து, "அய்யோ, இதைத் தின்று எவ்வளவு வருடமாகிவிட்டது" என்று ஆசையோடு பறித்துத் தின்றவர், எங்களுக்கும் கொடுத்தார். பின்னர் குறிப்பிட்ட ஓர் இடம் வந்ததும், "நாம் வரவேண்டிய இடத்துக்கு வந்துவிட்டோம்" என்றார். அந்த இடத்தில், முத்துசாமி முன்பே சொன்னதுபோலவே பெரிய அளவில் கருங்கற்களால் ஆன நிலை போன்ற அமைப்பு இருக்கிறது. அதில், இரண்டு பிரமாண்ட கதவுகள் இருந்ததற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அதைப் பார்வையிட்ட நம்மிடம், "இதுதான் அந்தக் கதவு கணவாய். 100 வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல்லைச் சேர்ந்தவர்கள் எங்கள் ஊர் பக்கமாக வந்துசெல்வதற்கு இதுதான் வாசலாக இருந்தது. அந்நியர்கள் எவரும் எங்கள் பகுதிக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் கடவூர் ஜமீனால் இந்த நிலைக் கதவு அமைக்கப்பட்டது. இங்கு 10-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டதுடன், அந்நியர்கள் வந்தால் அவர்களைத் தடுத்து நிறுத்தவும் இதை அமைத்திருந்திருக்கிறார்கள். அப்போது மலைகளுக்குக் கீழே இருக்கும் 18 பட்டிகள் மட்டுமின்றி, இந்த மலைகளும் ஜமீன் ஆளுமையின்கீழ்தான் இருந்திருக்கிறது.

இருபது வருடங்களுக்கு முன்புதான் இந்த மலைகள் வனத்துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்திருக்கிறது. இந்த மலைக்குள் இருக்கும் எங்கள் கிராமங்களுக்கு வெளியில் இருந்துவர இரண்டு வழிகள்தான் இருந்திருக்கின்றன. ஒன்று, நடந்துபோகும் இந்தக் கதவு கணவாய் வழி. மற்றொன்று, பாலவிடுதி வழியாக வாகனங்களில் போய்வரும் வழி. ஆனால், மறைந்த கருணாநிதி முதல்வராக இருந்தபோது, கிழக்கு மலையைக் குடைந்து பொன்னணியாறு அணையை அமைத்தார். அதன் ஓரமாக ஒரு சாலையும் அமைக்கப்பட்டது. இதனால் மூன்று வழியானது. அதன்பிறகு, திண்டுக்கல் செல்வதற்கு கதவு கணவாய் வழியாக மலையேறி இறங்க வேண்டும் என்பதால், சேவாப்பூர் வழியாக மலையைக் குடைந்து சாலையமைத்தனர். இதையும் சேர்த்து மொத்தம் நான்கு வழியாகிவிட்டது. இதனால், தற்போது இந்தக் கதவு கணவாய் வழியை யாரும் பயன்படுத்துவதில்லை.

இருபது வருடங்களுக்கு முன்பு, எங்கள் பதினெட்டு ஊர்களிலும் டி.வி-யோ, தியேட்டரோ இல்லை. அதனால், ஒளியும் ஒலியும் பார்ப்பதற்காக 500 அடி மலையேறி அந்தப் பக்கம் இருக்கும் திண்டுக்கல் மாவட்டத்துக்குப் படையெடுப்போம். அதேபோல, அய்யலூரில் இருந்த லாலாகிருஷ்ணன் என்கிற டூரிங் டாக்கீஸுக்குப் படம் பார்க்கச் செல்வோம். படம் பார்த்து முடித்துவிட்டு வரும்போது, நரி, காட்டுப் பன்றி, மான் என விலங்குகளின் நடமாட்டம் இருக்கும். இதனால் டார்ச் லைட்டின் உதவியுடன் இந்த மலை வழியாகவே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வருவோம். அப்படி வரும் எங்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் அடிப்பார்கள். அதேபோல், வாராவாரம் நடக்கும் அய்யலூர் சந்தையில் ஆடு, மாடு, கோழி, காய்கறிகள் விற்கவோ வாங்கவோ இந்த வழியாகத்தான் மக்கள் போய் வருவார்கள். ஆனால், தற்போது எல்லாரும் வாகனங்களில் சாலை வழியாகப் போகிறார்கள். ஆனால், இந்த மலையும், கதவு கணவாயும் எப்போதும்போல எங்களுக்கு அரணாகத்தான் இருக்கிறது" என்றார், புன்னகையுடன்.

"முத்துசாமி அண்ணன், இந்த மலையிலே பலமுறை ஏறியிருக்கிறார். ஆனால், நான் இரண்டு தடவை மட்டுமே ஏறியிருக்கிறேன். இவர் சொன்ன மரங்கள் மற்றும் பழங்களின் பெயர்களை எல்லாம் நான் இதுவரை கேட்டதில்லை. இந்தக் கதவு கணவாய் வழியாக ஊருக்குள் அந்நியர்களோ அல்லது தீய சக்திகளோ வந்துவிடக்கூடாது என்பதற்காக ஊர் மக்கள் ஒன்றுகூடி பூஜை செய்வார்கள். மற்றபடி, அவ்வளவாக இந்தப் பக்கம் யாரும் வருவதில்லை. சிலருக்கு, இப்படி ஓர் இடம் இருப்பதுகூடத் தெரியாது. நம் உடம்பையும், மனதையும் இந்த மலை புத்துணர்ச்சியாக்கும் என்று எங்கள் ஊரில் இருக்கும் முதியவர்கள் சொல்வார்கள். அதை, இப்போது உணர முடிகிறது" என்றார் பாலா, புத்துணர்ச்சியுடன்.

Sunday, 19 January 2020

JALLIKATTU ,A TRUE WARRIOR IN MADURAI DISTRICT


JALLIKATTU ,A TRUE WARRIOR 
IN MADURAI DISTRICT




மதுரை மாவட்டத்தில் எங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் சாமி மாடு என்று முதலாவாக ஒன்றை அவிழ்த்து ஓடவிடுவார்கள். அதை யாரும் பிடிக்கக்கூடாது என்பது ஆண்டாண்டு கால மரபு. விபரம் அறிந்தவர்களுக்குத் தெரியும் அந்த மாடு மாவீரன் அழகாத்தேவன் நினைவாகவே அவிழ்த்துவிடப்படுகிறது என்பது.

யார் இந்த அழகாத்தேவன்?

மதுரை மாவட்டத்தில் சொரிநாயக்கன்பட்டியைச் (இன்றைக்கு அது சொரிக்காம்பட்டி) சேர்ந்தவர் கருத்தமாயன். நிலபுலன்களோடு வாழ்ந்த செல்வந்தர். அவரது கடைக்குட்டி அழகாத்தேவன் புஜபல பராக்கிரமுடைய இளைஞன். ஆனால் பொறுப்பில்லாமல் தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு ஊர் சுற்றுகின்ற நாடோடி. 

அழகாத்தேவனுக்கு கால்கட்டு (கல்யாணம்) போட்டுவிட்டால் பையன் ஒழுங்காக இருப்பான் என்று பெரியவர்கள் கூறியதைக் கேட்ட கருத்தமாயன் பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கினார்.
நாகமலைக்கு அருகேயுள்ள கீழக்குயில்குடியில் வாழ்ந்து வரும் கருத்தமலையின் மகள் ஒய்யம்மாள் குறித்து அறிந்து, தன் செல்வாக்குக்கு சமமாக இல்லையெனினும் கருத்தமாயன், கருத்தமலையின் வீட்டிற்கு பெண் பார்க்கச் செல்கிறார். 

கருத்தமலைக்கோ ஏக மகிழ்ச்சி. தனது மகளைப் பெண் பார்க்க கருத்தமாயன் வருவதையறிந்து ஊருக்குள் தடபுடல் செய்கிறார். வழக்கமான சம்பிரதாயங்கள் முடிந்த பின்னர் கருத்தமாயன், தனது மகன் அழகாத்தேவனுக்கு ஒய்யம்மாளைக் கேட்கிறார். கருத்தமலையோ தனது மகளிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்று கூறி ஒய்யம்மாளிடம் கேட்கிறார். 

அவளுக்குப் அழகாத்தேவனைப் பிடித்துப்போனாலும், நிபந்தனை ஒன்றை விதிக்கிறாள். தான் வளர்த்து வரும் ஏழு காளைகளை அழகாத்தேவன் அடக்கினால், திருமணத்திற்கு ஒத்துக் கொள்வதாகவும், ஒருவேளை தோற்றால் தனது வீட்டில் பண்ணை அடிமையாக வேலை பார்க்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறாள். 

இந்த சவாலை அழகாத்தேவனும் ஏற்றுக் கொள்கிறான். காளையை அடக்குவதற்கு நாள் குறிக்கிறார்கள். தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு இணைந்து கடும் பயிற்சி மேற்கொள்கிறான் அழகாத்தேவன். அந்த நாளும் வருகிறது. இரண்டு ஊர்ப் பொது மக்கள் மட்டுமன்றி, பக்கத்து ஊர் ஜனங்களும் கூடி நிற்க அழகாத்தேவன், வாடிவாசல் அருகே ஒய்யம்மாள் வளர்த்த ஏழு காளைகளை ஒவ்வொன்றாக எதிர்கொள்கிறான். 

அனைத்துக் காளைகளையும் மிகத் திறமையாகக் கையாண்டு வீழ்த்திய அழகாத்தேவன், ஏழாவது காளையோடு மல்லுக்கட்டுகிறான். கடுமையான போராட்டத்திற்கிடையே அந்தக் காளை அழகாத்தேவனின் வயிற்றைப் பதம் பார்க்கிறது. 

குடல் வெளியே சரிந்த நிலையிலும் போராடி அந்தக் காளையை அடக்கிவிடுகிறான். உயிருக்கு ஆபத்தான நிலையில், அழகாத்தேவனை அழைத்துச் செல்கின்றனர். ஆனாலும் வாக்குக் கொடுத்த காரணத்திற்காக கருத்தமலை பெண் கொடுக்க சம்மதம் தெரிவிக்கிறார். 

சுத்துப்பட்டு கிராம ஜல்லிக்கட்டுகளில் பெயர் பெற்ற தங்களது காளைகளை அடக்கிவிட்டானே என்ற பொறாமையின் காரணமாக ஒய்யம்மாளின் சகோதரர்களுக்கு அழகாத்தேவனைப் பிடிக்கவில்லை. ஆகையால் அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்து, அழகாத்தேவனுக்கு மருத்துவம் பார்த்த பெண்ணை சரிக்கட்டி, அவனது உடம்பில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் ஏற்றிக் கொலை செய்துவிடுகிறார்கள்!!

இந்த செய்தி ஒய்யம்மாளுக்குத் தெரியவரும்போது, தாங்கொணாத துயரத்தில் அழகாத்தேவனோடு உடன்கட்டை ஏறி தனது உயிரை மாய்த்துக்கொள்கிறாள்!!

அழகாத்தேவன் நினைவாக அவனது பரம்பரையில் வந்தோர், மதுரை மாவட்டம் செக்கணூரணிக்கு அருகிலுள்ள சொரிக்காம்பட்டியில் கோயில் கட்டி வணங்கி வருகின்றனர். 

கருவறையில் காளையோடு அழகாத்தேவன் நிற்க... அக்கோயிலுக்கு வெளியே அமைக்கப்பட்ட நினைவு வளைவில் நண்பன் தோட்டி மாயாண்டிக்கும் சிலை எழுப்பியுள்ளனர். 
கீழக்குயில்குடிக்காரர்களிடம் சொரிக்காம்பட்டிக்காரர்கள் எந்தவித மண உறவோ, கொடுக்கல் வாங்கலோ இப்போதும் வைத்துக்கொள்வதில்லை. இந்த மரபு காலங்காலமாகத் தொடர்கிறது. 

நானூறு ஆண்டுகால காதல் வரலாற்றை மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்றும் தழும்பாய் சுமந்து கொண்டிருக்கின்றன... சொரிக்காம்பட்டி கிராம எல்லையில்... தோட்டி மாயாண்டி காவல் நிற்க... அழகாத்தேவன் கருவறையில் காளையோடு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறான்... ஒய்யம்மாள் அக்கருவறை காற்றோடு காற்றாய்... 🌼🌼🌼

காதலும் துரோகமும் நாணயமும் ரோசமும் நிறைந்த இந்த வீர வரலாறு 





திருமங்கலம் அருகே ஜல்லிக்கட்டு வீரருக்கு கோவில் கட்டி வழிபடும் மக்கள்

திருமங்கலம், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சொரிக்காம்பட்டி கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் அடங்காத காளைகளை அடக்கிப்பிடித்து சாதனை செய்து உயிர்நீத்த மாடுபிடி வீரரின் நினைவாக கோவில் கட்டியுள்ள அப்பகுதி மக்கள் அவரை தெய்வமாக வணங்கி வழிபட்டு வருகின்றனர்.

சுமார் 300ஆண்டுகளுக்கு முன்பாக மாமதுரை நகரின் மேற்கு தொலைவில் விவசாய செழிப்பு மிகுந்த இடத்திற்கு கருத்தமாயன் என்பவரின் குடும்பத்தினர் வந்து தங்கியுள்ளனர். இதை தொடர்ந்து கருத்தமாயனின் உறவினர்களும் அந்த செழிப்பு நிறைந்த பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர். இதையடுத்து சில ஆண்டுகளில் அந்த நிலப்பகுதி மக்கள் அதிகமாக வசித்திடும் சொரிக்காம்பட்டி என்ற கிராமமாக மாறியிருக்கிறது. இந்த ஊரின் முத்தகுடியான கருத்தமாயனும் மக்களும் ஒன்றிணைந்து விவசாய பணிகளில் தீவிரம் காட்டியதுடன் கால்நடைகள் வளர்ப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளனர். வயலில் உழைத்த களைப்பு நீங்கிடவும் விவசாய பெருமக்களுக்கு உற்சாகம் செய்திடவுமான விளையாட்டாக ஜல்லிக்கட்டு மாறியிருந்தது. அதன்படி இங்கு நடந்திட்ட ஜல்லிக்கட்டு விளையாட்டுகளில் கருத்தமாயனின் நான்கு மகன்களில் கடைசி மகனான அழகத்தேவன் என்பவருக்கு காளைகளை அடக்குவதில் எல்லையில்லா ஆர்வம் இருந்துள்ளது. இவருடைய மாடுபிடி ஆர்வத்தை ஊக்குவித்து போட்டிகளில் பெற்றிடும் வெற்றிகள் அனைத்திற்கும் அழகத்தேவனின் உயிர்நண்பனான சமயன் என்பவர் திகழ்ந்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்றிடும் பல்வேறு வகையான காளைகளின் குணாதிசயங்களை ஆய்வு செய்து அதனை மடக்கிப் பிடிக்கும் கலையினை வளர்த்துக் கொண்ட அழகத்தேவனும், அவரது நண்பர் சமயனும் சிறந்த மாடுபிடி வீரர்களாக அக்காலத்தில் உருவாகியிருந்தனர். இது எவரிடமும் பிடிபடாத மாடு என்று உரிமையாளர்களால் சவால் விடப்படும் மாடுகளை தன்னுடைய தனித்திறமையால் மடக்கிப் பிடிப்பது அழகத்தேவனின் தனிச்சிறப்பாகும்.

ரசிகர் பட்டாளம்

இன்றைய அலங்காநல்லூரை போன்று அன்றைய காலகட்டத்தில் ஜல்லிக்கட்டிற்கு பெயர் போன ஊராக விக்கிரமங்கலம் திகழ்ந்துள்ளது. இந்நிலையில் விக்கிரமங்கலம் ஜல்லிக்கட்டில் நின்று விளையாண்ட பல்வேறு காளைகளை மின்னல் வேகத்தில் அழகத்தேவன் மடக்கிப் பிடித்து தொடர் வெற்றிகளை குவித்து வந்துள்ளார். இதனால் அழகத்தேவனின் வீரமும் காளைகளை அடக்கிடும் திறமையும் மாமதுரையைச் சுற்றிலும் பரவியுள்ளது. அழகத்தேவன் பங்கேற்றிடும் ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டியையும் காண்பதற்காக அக்காலத்திலே ஒரு ரசிகர் பட்டாளமே அவருக்கு இருந்துள்ளது. இதனை கண்டு பொறாமை கொண்ட அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த மூத்த மாடுபிடி வீரர்கள் ஒன்று சேர்ந்து அழகத்தேவனை நீண்காலமாக கண்காணித்து அவரது யுக்திகளை கணித்துள்ளனர்.

பெண் பரிசு


இதையடுத்து அழகாத்தேவனை வீழ்த்துவதற்காக அடங்காத காளையொன்றை அந்த கிராமத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள் தயார் செய்தனர். அந்த காளைக்கு அழகத்தேவனின் தனித்துவத்திற்கு எதிரான பாய்ச்சலை சொல்லிக் கொடுத்து பக்குவப்படுத் தியிருந்தனர். மேலும் தங்களது மாட்டை அடக்குபவருக்கு தங்களது கிராமத்தின் மூத்தகுடியின் பெண்ணை திருமணம் செய்து தருவதாக அறிவிப்பு செய்துள்ளனர்.

குடல் சரிந்தது

இந்த சூழ்ச்சியை அறியாத மாடுபிடி வீரரான அழகத்தேவனும் அவரது உயிர்நண்பனுமான சமயனும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டனர். அப்போது மூத்த மாடுபிடி வீரர்களால் தயார் செய்யப்பட்ட முரட்டுக்காளை மட்டும் அழகத்தேவனிடம் சிக்கிடாமல் போக்குகாட்டி விளையாடியுள்ளது. ஒருகட்டத்தில் விடாமுயற்சியுடன் வீறுகொண்டு எழுந்த அழகத்தேவனை அந்த காளை வயிற்றில் குத்தி குடலை சரியச் செய்துள்ளது. இருப்பினும் குடல் சரிந்து ரத்தம் வெள்ளமாக சிதறிய நிலையிலும் தனது இறுதிகட்ட சூட்சுமத்தை பயன்படுத்திய அழகத்தேவன் அடங்காத காளையை அடக்கி மண்ணில் சாய்த்து விட்டு தானும் மண்ணில் சாய்ந்துள்ளார். இதனை கண்ட அவரது நண்பர் சமயன் தான் உடுத்தியிருந்த துணியை கிழித்து  அழகத்தேவனின் வயிற்றில் கட்டி அவரை தனது தோழில் தூக்கிப் போட்டுக் கொண்டு சொரிக்காம்பட்டி கிராமத்திலுள்ள நந்தவனம் எனும் தோட்டத்திற்கு ஓட்டமாக ஓடிவந்து சேர்த்துள்ளார்.

கொல்ல முடிவு

தனது மகன் அழகத்தேவன் ஜல்லிக்கட்டில் காயமடைந்த தகவலறிந்த அவரது தந்தை கருத்தமாயன் மற்றும் ஊர்மக்கள் அனைவரும் நந்தவனம் தோட்டத்திற்கு திரண்டு வந்து ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் தொடர் சிகிச்சை மேற்கொண்டதன் பலனாக அழகத்தேவன் உடல்நலம் பெற்றிட ஆரம்பித்துள்ளார். இதனையறிந்த பக்கத்து கிராமத்து மூத்த மாடுபிடி வீரர்கள் அழகத்தேவன் மீண்டு வந்தால் தங்களது மூத்தகுடியின் பெண்ணை திருமணம் முடிக்க கேட்டுவிடுவான் என்று பயந்து அழகத்தேவனை சதியின் மூலம் கொன்று விடமுடிவு செய்தனர்.

உயிர் நீத்த வீரர்

இதற்காக அழகத்தேவன் வைத்தியம் செய்து வந்த இடத்திற்கு தங்களது ஆட்களை ஆள்மாற்றி அனுப்பினார்கள். ஆள்மாறாட்டம் செய்து நந்தவனம் சென்றவர்கள் அழகத்தேவனுக்கு குடல் சரிந்த இடத்தில் கள்ளிக் கொழுந்தினை வைத்து மருந்து கட்டியுள்ளனர். இதனால் கள்ளியின் விஷம் சிறிது சிறிதாக அழகத்தேவனின் உடலில் கலந்து உயிரிழப்பு ஏற்படும் நிலை உருவாகிறது. அப்போது அடங்காத காளை களையெல்லாம் தனது மதிநுட்பத்தால் மடக்கிப் பிடித்த மாவீரன் அழகத்தேவன் தனது கடைசி ஆசையாக தனக்கு சொரிக்காம்பட்டி நந்தவனத்தில் கோவில் கட்ட வேண்டும், அதன் மூலமாக ஜல்லிக்கட்டு பற்றிய விழிப்புணர்வு வரும் சந்ததியினருக்கு தெரிய வந்திடும் என்று தனது கிராமத்தினரிடம் கூறிவிட்டு உயிர் துறந்துள்ளார்.

தோழனுக்கும் சிலை

இதையடுத்து மாடுபிடி மாவீரன் அழகத்தேவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிடும் வகையில் அவரது வாரிசுகளும்,கிராமத்தினரும் ஒன்றிணைந்து சொரிக்காம்பட்டி கிராமத்தில் அழகிய கோவிலை எழுப்பி இன்றும் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் காளையை அழகத்தேவன் அடக்குவது போன்ற சிலை வைக்கப்பட்டு அதனை அப்பகுதி மக்கள் வணங்கி செல்கின்றனர்.மேலும் நட்பின் இலக்கணமாக அழகத்தேவனுடன் இருந்த சமயனுக்கும் அங்கே சிலை வைக்கப்பட்டள்ளது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஜல்லிக்கட்டில் அவர்களது வீரத்தையும் விவேகத்தையும் போற்றிடும் வகையில் இருவரும் இன்றுவரை அப்பகுதி மக்களின் நெஞ்சங்களில் நீங்காமல் உள்ளனர்.அதே போல் குடல்சரிந்த அழகத்தேவனை தனது தோளில் சமயன் தூக்கிச் சென்ற போது அவர்கள் தாகசாந்தி செய்திட இளைப்பாறிய இடங்களில் கற்கள் போடப்பட்டு மக்கள் வழிபாடு நடத்திச் செல்கின்றனர்.வீரம் விளைந்த மாமதுரை மண்ணில் அடங்காத முரட்டுக்காளைகளை அடக்கி சாதனை படைத்து சதியினால் உயிர்நீத்த மாடுபிடி வீரர்களின் முதல்வனான அழகத்தேவனின் கோவிலில் வழிபட்டு சென்றால் ஜல்லிக்கட்டில் போட்டிகளில் வெற்றி உறுதி என்பதால் சொரிக்காம்பட்டி கிராமத்திற்கு வந்து அழகத்தேவன் கோவிலில் வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

வீரர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, அழகத்தேவன் போன்ற மாவீரர்களின் தியாகத்தினால் இன்றுவரை அழியாமல் உள்ளது என்பதே நிஜம்.




மதுரை மண்ணில் களம் கண்ட காளைகளை சினம் கொண்டு அடக்கிய வேங்கை அழகுதேவனுக்கு அமைந்த திருக்கோவில்!
18 January 2020, 1:03 pm

Quick Share
தமிழர் திருநாளான தை 1 பிறந்ததில் இருந்தே, மண்ணின் மாண்பை போற்றும்வகையில் ஏருழுவும் காளைகளுக்கு நடத்தும் வழிபாடும், பார் போற்றும் வீரம் கொண்ட ஜல்லிக்கட்டும் தமிழரின் பண்பாட்டை உலகத்திற்கு எடுத்துரைத்து கொண்டே தான் இருக்கிறது. சாதியால், மதத்தால் தமிழன் பிளவுற்று இருந்தாலும் எமது பண்பாட்டான ஜல்லிக்கட்டை மீட்க தமிழன் கரம் கோர்த்து தனது பாரம்பரியத்தை மீட்டும் தம் இனத்தின் போர் குணத்தை உலகிற்கு அறிவித்தான்.

Jalli- updatenews360
இன்று பாரே போற்றும் இந்த வீர விளையாட்டை ஒரு காலத்தில் தனது பொழுதுபோக்காக கொண்டு, இவர் அடக்காத காளைகள் இல்லை என பேர் வாங்கியவர் தான் மதுரை மண்ணின் மைந்தர் ” அழகுதேவன் ”. 300 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயத்திற்காக வண்டல்மண் வளம் நிறைந்த பகுதி நோக்கி கருத்தமாயன் என்பவரும் அவரது உறவினர்களும் இடம் பெயர்ந்தனர். அந்த பகுதியின் பெயர் தான் சொரிக்காம்பட்டி. அந்த ஊரின் மூத்த தலைகாட்டாக நின்று அந்த ஊரை நிர்வகித்த கருத்தமாயனுக்குக்கு 4 மகன்கள். அதில் ஒருவர் தான் அழகுதேவன். ஏறுழுது களைப்படைந்த விவசாய பெருங்குடி மக்களுக்கு உற்சாகத்தை அளிக்க ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது வழக்கம். அப்படி அந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் அழகுதேவன் கைதேர்ந்தவர். சீறிவரும் காளையின் வேகத்தையும், அதன் அசைவுகளையும் கணித்து அதனை அடக்குவதில் அழகுதேவன் கைதேர்ந்த வந்தார். அவருக்கு அவரது நண்பரான சமயன் என்பவர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிக ஆதரவு அளித்து வந்தார். பிற்காலத்தில் சமயனும் அழகுதேவனுடன் இணைந்து மாடுகளை பிடிக்க ஆரம்பித்தார். பின்னர் இருவரும் கைதேர்ந்த மாடுபிடி வீரர்களாக வந்தனர். அந்த ஊரில் அழகுதேவன் அடக்காத காளைகளே இல்லை என்ற அளவுக்கு நிலை மாறியது. பிற்காலத்தில் மதுரை மண்ணில் நடந்த அணைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் கலந்து கொண்ட அழகுதேவன், யாருக்கும் அடங்காத இந்த காளையை அடக்கி பாருங்கப்பா என சவால் விடுக்கப்படும் காளைகளை தனது வீரத்தாலும், ஜல்லிக்கட்டில் அவர் கற்றுத்தேர்ந்த நுண்ணறிவாலும் எப்பேர்ப்பட்ட காளையாக இருந்தாலும் அடக்கிவிடுவார்.

இப்படிப்பட்ட மாவீரரனுக்கு மதுரை மண்ணில் சொரிக்காம்பட்டியில் கோவில் அமைந்துள்ளது. முன்னோரை வழிபடுதை வழிபாடாக கொண்ட தமிழினம், அழகுதேவனும் இன்று காளைகளை அடக்கும் காளையர்களுக்கு குலதெய்வமாக திகழ்ந்து வருகிறார். இவர் வாழ்ந்த சொரிக்காம்பட்டி மண்ணில் தான் இவரது திருக்கோவில் அமைந்துள்ளது. இன்று வரை ஒவ்வொரு மாடுபிடி வீரனும் இவரது கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.

காலம் பல கடந்தாலும், சுழலும் பூமி பந்து ராட்சத வேகத்தில் சுழன்றாலும், பொழியும் மாரி கடலென பெய்தாலும், தமிழனின் வீரத்தையோ, அவன் வரலாற்றையோ எந்த சக்தியாலும் அழிக்கமுடியாது என்பதற்கு தமிழன் அவனின் முன்னோரை இறைவனாகவும், முன்னோர் அளித்த வரலாற்றை இறையாகவும் வழிபடுவதே காரணம். 300 அல்ல 3000 ஆண்டுகள் ஆயினும், அழகுதேவன் வீரத்தின் குறியீடாக மதுரை மண்ணில் நிலைத்து நிற்பார்.

Tuesday, 6 March 2018

MADURAI DISTRICT FORMED 1790 MARCH 6






MADURAI DISTRICT FORMED 
1790 MARCH 6




மதுரை மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரம் மதுரை ஆகும். தற்போதைய திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் முன்பு மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன.
வரலாறு

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதராசு மகாணத்தில் இருந்த சில மாவட்டங்களில் மதுரை மாவட்டமும் ஒன்று. இது தற்போது மதுரையை சுற்றியுள்ள திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு நிர்வாக வசதிக்காக இது பல்வேறு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

வருவாய்க் கோட்டம்
மதுரை மாவட்டம் மூன்று வருவாய்க் கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை;

மதுரை
உசிலம்பட்டி
மேலூர்
வட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலக முகப்பு
இம்மாவட்டம் பத்து வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன

மதுரை (வடக்கு) வட்டம்
மதுரை (தெற்கு) வட்டம்

மதுரை (கிழக்கு) வட்டம்
மதுரை (மேற்கு) வட்டம்
திருப்பரங்குன்றம்
திருமங்கலம்
பேரையூர்
உசிலம்பட்டி
வாடிப்பட்டி
மேலூர்
மக்கள்தொகை
இம்மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 30,41,038. இதில் 15,28,308 பேர் ஆண்கள் மற்றும் 15,12,730 பேர் பெண்கள்.

மொத்தம் ஆண்கள் பெண்கள்

மக்கள் தொகை 30,41,038[3] 15,28,308 15,12,730
கல்வியறிவு 82 86.55 76.74
0-6 வயதுடைய குழந்தைகள் 2,87,101 1,48,050 1,39,051
மாவட்டத்தில் மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 823


2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 27,60,502 (90.86%) ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 1,68,881 (5.56%), கிருஸ்துவர்கள் 97,711 (3.22%), மதம் குறிப்பிடாதோர் 8,602 (0.28%), சமணர்கள் 1,532 (0.05%), சீக்கியர்கள் 520, புத்த மதத்தினர் 199, மற்றவர்கள் 305 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றனர்.[4]

உள்ளாட்சி அமைப்புகள்

இம்மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி தவிர, 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள், இந்த ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 431 கிராம ஊராட்சிகள் என உள்ளாட்சி அமைப்பு பிரிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி ஒன்றியம்
மதுரை
திருமங்கலம்
திருப்பரங்குன்றம்
மேலூர்
உசிலம்பட்டி
ஆனையூர்
ஏ. வெள்ளாளப்பட்டி

அலங்காநல்லூர்
சோழவந்தான்
டி. கல்லுப்பட்டி
எழுமலை
வாடிப்பட்டி
பரவை
பேரையூர்
பாலமேடு
அலங்காநல்லூர்
கள்ளிகுடி
உசிலம்பட்டி
கொட்டாம்பட்டி
செல்லம்பட்டி
சேடபட்டி
திருப்பரங்குன்றம்
திருமங்கலம்
தே. கல்லுப்பட்டி
மதுரை கிழக்கு

மதுரை மேற்கு
மேலூர்
வாடிபட்டி
அரசியல்
மதுரை மாவட்டத்தில் ஒரு மக்களவைத் தொகுதியும்; பத்து சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன.

மேலூர்
மதுரை கிழக்கு
சோழவந்தான்
மதுரை வடக்கு
மதுரை தெற்கு

மதுரை மத்தி
மதுரை மேற்கு
திருப்பரங்குன்றம்
திருமங்கலம்
உசிலம்பட்டி
சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்
மதுரை மற்றும் அதனைச் சுற்றி மாவட்டத்தின் பிறபகுதிகளில் உள்ள சுற்றுலா, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஈர்ப்புகள்:

வழிபாட்டுத் தலங்கள்
மீனாட்சியம்மன் கோயில்
ஆதிசொக்கநாதர் கோயில்
தென்திருவாலவாய் கோயில்
இம்மையிலும் நன்மை தருவார் கோயில்
செல்லத்தம்மன், கண்ணகி கோயில்
பேச்சி அம்மன் கோயில்

கூடல் அழகர் கோயில்
மதனகோபால சுவாமி கோயில்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
பரங்கிநாதர் கோயில்
அழகர் கோயில்
பழமுதிர்ச்சோலை
வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில்
முக்தீஸ்வரர் கோயில்
திருவாப்புடையார் கோயில்
பாண்டி கோயில்
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்
திருவாதவூர் திருமறைநாதர் கோயில்
நரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் கோயில்
சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில்

சிக்கந்தர் தர்கா
கோரிப்பாளையம் தர்கா
சுற்றுலாத் தலங்கள்
குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி
திருமலை நாயக்கர் அரண்மனை
ஆயிரங்கால் மண்டபம்
புதுமண்டபம்
மாரியம்மன் தெப்பக்குளம்
பத்து கல்தூண்கள்
அழகர் மலை
யானைமலை

சமணர் மலை
மாங்குளம் கல்வெட்டுகள்
உலகத் தமிழ்ச் சங்க வளாகம்
அருங்காட்சியகங்கள்

காந்தி நினைவு அருங்காட்சியகம்
சங்கத் தமிழ் காட்சிக் கூடம்
அரசு அருங்காட்சியகம் (காந்தி நினைவு அருங்காட்சியகம்) வளாகம்


கல்வி மற்றும் ஆய்வு நிலையங்கள்
முதன்மை கட்டுரை: மதுரையில் உள்ள கல்வி நிலையங்கள்
உலகத் தமிழ்ச் சங்கம்
மதுரைத் தமிழ்ச் சங்கம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை மருத்துவக் கல்லூரி
மதுரை சட்டக் கல்லூரி

தியாகராசர் பொறியியல் கல்லூரி
மதுரைக் கல்லூரி
சௌராஷ்டிரா கல்லூரி
பாத்திமா கல்லூரி
லேடி டோக் கல்லூரி
தியாகராசர் கலைக் கல்லூரி
சௌராஷ்டிர மேல்நிலைப் பள்ளி
போக்குவரத்து
வானூர்தி நிலையம்
மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து துபாய், கொழும்பு வெளிநாட்டு நகரங்களுக்கும், மற்றும் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பய் போன்ற இந்திய நகரங்களுக்கு நேரடி வானூர்திகள் உண்டு.

தொடருந்து

மதுரை சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களை தொடருந்துகள் இருப்புப்பாதை வழியாக மதுரையை இணைக்கிறது.[5]

சாலைகள்
தே நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் நாட்டின் அனைத்து நகரங்கள் சாலைகள் வழியாக மதுரையை இணைக்கிறது