Showing posts with label KOVIL. Show all posts
Showing posts with label KOVIL. Show all posts

Monday, 7 June 2021

EH GOWRIAMMAN KOVIL , AT VALLAM -TANJORE DISTRICT

 

EH  GOWRIAMMAN KOVIL ,

AT VALLAM -TANJORE DISTRICT




ஏகௌரியம்மன் கோயில் என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு காளி கோயிலாகும். இக்கோயிலானது தஞ்சையிலிருந்து தஞ்சை-திருச்சி சாலையில் 12கிமீ தொலைவில் உள்ள வல்லம் என்னும் சிற்றூரிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் ஆலக்குடிச் சாலையில் ஒரு கிமீ தொலைவில் உள்ளது.

பெயர்க்காரணம்

முன்னொரு காலத்தில் தஞ்சாசுரன் என்னும் அசுரன் தஞ்சையில் வாழ்ந்தான். சிறந்த சிவபக்தனான அவன் தனது தவபலத்தால் மனிதர், தேவர், மும்மூர்த்திகள் இவர்களிடமிருந்து உயிர் பிரியாத வரத்தைச் சிவபெருமானிடம் பெற்றான். பல கொடுமைகள் செய்து வந்த அவனைப்பற்றி மக்கள், தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, சிவன் தன் துணைவியான சிவசக்தியை ‘ஏ கௌரி‘, என்றழைத்து, தஞ்சாசுரனை அழிக்க ஆணையிடுகிறார். எருமைக்கிடா உருவம் தாங்கிய அசுரனின் கழுத்தை வெட்டி தலையை ஒரு கையில் ஏந்துகிறாள். உடல் கீழே சாய்ந்ததும் அசுரன் எருமை உருவம் நீங்கி இறந்துவிடுகிறான். போர் புரிந்த இடத்தில் அம்மன் கோபமாக இருந்ததால் அப்பகுதியில் பஞ்சம், வறட்சி ஏற்பட்டது. சிவபெருமான் ஏகௌரியம்மனிடம் தஞ்சாசுரனை அழித்ததால் கோபமாக உள்ளதைக் கூறி, கோபத்தைத் தணித்துக்கொண்டு அப்பகுதி மக்களுக்குத் தெய்வமாக இருந்து காப்பாற்றும்படி கூறுகிறார். வறட்சி, பஞ்சம் நீங்குகிறது. மக்கள் ஏகௌரியம்மனை பூசை செய்து வணங்கினர். தஞ்சாசுரனை அழித்த நாளே ஆடி மாதக் கடைசி வெள்ளி அல்லது ஆடிக்கழிவு நாளாகும். [2] பராந்தகசோழன் காலத்தில் வல்லத்துப்பட்டாரகி என்றும் இராஜராஜசோழன் காலத்தில் காளாபிடாரி கைத்தலைபூசல் நங்கை என்றும் இந்த அம்மன் அழைக்கப்பட்டுள்ளார். [3]


கோயில் அமைப்பு

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் கட்டுவதற்கு முன்பாகவே கட்டிய கோயிலாக இக்கோயில் இருந்துள்ளது. கோயிலின் நுழைவாயில் முதல் பெரிய சுற்றுப்பாதை ஒரு கோட்டையைப் போல பாதுகாப்பாக உள்ளது. கருவறையில் சுமார் 6 அடி உயரத்தில் சுடருடன் எட்டுத் திருக்கரங்களில் படைக்க்லன் ஏந்தி, சுதை வடிவத்தில் ஏகௌரியம்மன் காட்சியளிக்கிறாள்.


கல்வெட்டு

கி.பி.9ஆம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் எனப் பராந்தகசோழனின் 40ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பெற்ற கல்வெட்டு தெரிவிகிறது. இப்போது உள்ள கோயிலாக 1535இல் தஞ்சையை ஆண்ட அரசன் செவ்வப்ப நாயக்கரும், அவரது மகன் அச்சுதப்ப நாயக்கரும் சேர்ந்து கருவறை, அர்த்த மண்டபம் ஆகியவற்றை இணைத்துப் புதிய மகா மண்டபம் கட்டிய செய்தியை அர்த்தமண்டபத்தில் காணப்படும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. [4]


திருவிழா

ஆடிப்பதினெட்டு அன்று வல்லம் கடைவீதியிலுள்ள மாரியம்மன் கோயில் விழாவோடு ஏகெளரியம்மன் கோயில் திருவிழா நடத்தப்பெறுகிறது. ஏகௌரியம்மன், மாரியம்மன், அய்யனார் ஆகிய உற்சவமூர்த்திகளைத் தனித்தனியே அலங்கரித்து வீதி உலா நடத்துகின்றனர். ஆடி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை ஆடிக்கழிவு திருவிழா நடைபெறுகிறது. தீமிதி, அம்மனுக்கு பகலில் சைவ பூசை, தொடர்ந்து இரவில் எருமைக்கிடா பூசை போன்றவை நடத்தப்பெறும். கோயில் காவல் தெய்வங்களுக்கு ஆடு,கோழி வெட்டி பூசை செய்கின்றனர். இத்திருவிழாவைக் காண வல்லம் அருகில் வாழும் மக்களும் ஈரோடு, இராமநாதபுரம், கோவை, பெங்களூர் ஊர்களிலிருந்து வரும் மக்களும் கலந்துகொள்கின்றனர். [2]


இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அவ்விழாவில் தேவிக்கு நடத்தப்படும் சண்டி ஹோமம், திருவிளக்கு பூஜை, சித்ரா பௌர்ணமி விழா அடங்கும். சண்டி ஹோமம் செய்வதால் பராசக்தியின் வடிவங்களாகிய துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகள் மிகவும் மகிழ்ந்து வாழ்வில் உள்ள சூனியங்களை அழித்து சகல சுகங்களையும் பக்தர்களுக்கு அருள்வதாக நம்புகின்றனர். [5



சோழ மன்னர்களின் வழிபாட்டு தெய்வமாகவும், குலதெய்வமாகவும், அவர்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கும் காளியாகவும் விளங்கியவள் ஏகவுரி அம்மன். வல்லப சோழன், கரிகாற்சோழன், ராஜராஜ சோழன் ஆகியோரால் வழிபடப்பட்டு வந்தவள். இவர்கள் போர்க்களம் செல்லும் போது வெற்றிவாகை சூட இத்தேவியிடம் அருள் வாக்கு கேட்டு உத்தரவு பெற்ற பின்னரே செல்வது வழக்கம்.

தஞ்சையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வல்லம் என்ற ஊர். இங்குள்ள ஏகவுரி அம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. எட்டு திருக்கரங்களுடன் தேவி, பத்மபீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். இந்த தேவி ஒன்றன்மீது ஒன்றாக அமைந்த இரண்டு திருமுகங்களுடன் காட்சிதருகிறாள்.

தீயவர்களை அழிக்க உக்கிரமுடன் ஒரு முகம், வழிபடும் அடியவர்களின் துயர் நீக்க சாந்தமுடன் மற்றொரு முகத்துடனும் காட்சிஅளிக்கிறாள். அம்மன் பாதத்தில் சக்திவாய்ந்த ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் சக்தியானது வழிபடும் பக்தர் களின் வேண்டுதல்களை நிறைவேற்ற உதவுகிறது.

தல வரலாறு :

முன்னொரு காலத்தில் தஞ்சன் என்ற அரக்கன் சிவனை நினைத்து கடும் தவம் புரிந்தான். அவனது தவத்திற்கு மகிழ்ந்த இறைவன் அவன் முன்பு தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். மகிழ்ந்து போன தஞ்சன், பெண்களைத்தவிர வேறு எவரும் என்னை வெல்ல முடியாத வரம் வேண்டும் என்றான். இறைவனும், ஒரு பெண்ணை தவிர யாராலும் உன்னை வெல்ல முடியாது என்ற வரத்தை வழங்கினார்.

இறைவனிடம் வரம் பெற்ற ஆணவத்தால் தஞ்சன் முனிவர்களையும், தேவர்களையும் மிகவும் கொடுமைப் படுத்தினான். தேவர்கள் சிவபெருமானை சரண் அடைந்து அரக்கனின் கொடுமைகள் குறித்து முறையிட்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய சிவபெருமான், அரக்கன் அழியும் நேரம் நெருங்கிவிட்டது என்று கூறி, பார்வதி தேவியை அழைத்து அரக்கனை அழிக்க ஆணையிட்டார். ஈசனின் ஆணையை ஏற்ற கவுரி சிம்ம வாகன மேறி எட்டுக்கரங்களிலும் ஆயுதம் ஏந்தி புறப்பட்டாள். அளவுகடந்த கோபத்தோடு வந்த தேவியைப் பார்த்த அரக்கன் போருக்கு தயாரானான். தேவிக்கும், அரக்கனுக்கும் கடும்போர் ஏற்பட்டது. தஞ்சன் வெறியுடன் தன்வில்லை வளைத்து பாணங்களைத் தொடுத்து தேவியின் மீது சரமாரியாக எய்தினான்.

தேவி அவற்றை எல்லாம் தடுத்துத் தள்ளி பெரும் போர் புரிந்தாள். கதாயுதத்தால் தஞ்சன் மார்பு மீது தாக்கினாள். இறுதியாக அரக்கன் எருமைக் கடாவாக மாறி தேவியைத் தாக்கினான். சிம்ம வாகனத்தில் சீற்றமுடன் வந்த தேவி எருமைக்கடாவாக வந்த அரக்கனை வாளால் தலைவேறு, உடல் வேறு என இரண்டு துண்டாக்கினாள்.

உயிர் பிரியும் நேரத்தில் அரக்கனுக்கு அறிவு வந்து தேவியைப் பணிந்து, இந்த பகுதி எனது பெயரால் தஞ்சாபுரி என்று அழைக்கப்படவேண்டும் என்று வேண்டினான். அவன் கேட்ட வரத்தை வழங்கினாள் தேவி. அரக்கனை வதைத்த பின்னும், அம்மனின் ஆக்ரோஷம் அடங்கவில்லை. அதே உக்கிரத்துடன் வல்லத்தில் அலைந்து திரிந்தாள். இதனால் நாடெங்கும் வறட்சி உண்டாயிற்று. நீர் நிலைகள் அனைத்தும் வற்றிப் போயின.

நாடெங்கும் பஞ்சம், பசி, பட்டினி என மக்கள் தவித்தனர். நிலைமையை உணர்ந்த சிவபெருமான் பார்வதியை நோக்கி விரைந்தார். “ஏ கவுரி” சாந்தம் கொள் என்று கேட்டுக்கொண்டார். அம்மையின் கோபம் சற்று தணிந்தது. நெல்லிப்பள்ளம் என்ற குளத்தில் மூழ்கினாள். அப்போது பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து அங்கேயே எழுந்தருளவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு ஏகவுரி அம்மனாக வடக்கு நோக்கி அமர்ந்து அருள்புரிந்து வருகிறாள்.

அம்மன் அரக்கனை வதம் செய்தது ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகும். எனவே அன்றைய தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து, தீ மிதித்து அம்மனை சாந்தப் படுத்துகின்றனர்.



அம்மன் எழுந்தருளிய இடத்தில் சுதை வடிவத்தில் அம்மன் சிலை எழுப்பப்பட்டது. அந்த சுதை வடிவம் இன்றளவும் மாற்றப் படாமல் வழிபடப்பட்டு வருகிறது.

கோவில் கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் விநாயகர், முருகன், காத்தவராயன், சண்டிகேசுவரர், வராகி, பிரத்தியங்கரா தேவி, நாகர் ஆகியோரை தரிசனம் செய்யலாம். வெளிப்பிர காரத்தில் மதுரை வீரன் தன் துணை வியர்களான வெள்ளையம்மாள், பொம்மியுடன் காட்சி தருகிறார். கருப்பசாமி, லாட சன்னியாசி, காத்தான் ஆகிய கிராம தேவதைகளையும் அங்கே பார்க்கலாம். ஏகவுரி அம்மன் ஆலயத்தில் பகல் முழுவதும் கோவில் நடை திறந் திருக்கும்.

தடைப்பட்ட திரு மணம் நடைபெற மற்றும் குழந்தை பாக்கியம் முதலியவைக்கு மிகச்சிறந்த பரிகார தலமாக உள்ளது. திருமண தடை உள்ள பெண்கள் இங்கே வந்து அம்மனுக்கு புடவை சாத்தி, அம்மனின் திருப்பாதத்தில் மஞ்சள் வைத்து வணங்குகின்றனர். அதில் இருந்து ஒரேயொரு மஞ்சளை எடுத்து வந்து தினமும் குளிக்கும்போது பூசிக்கொள்ள விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

மாதந்தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் அம்மனுக்கு சிறப்பு ஹோமங்களும், அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு அம்மனை வழிபட துன்பங்கள் நீங்கி சந்தோஷம் நிலைக்கும் என்கின்றனர். ஏவல், பில்லி, சூனியம், கிரகக்கோளாறுகளால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து அம்மனை வழிபட்டு பலன் பெறுகின்றனர்.

ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமி அன்று தேவிக்கு மகா சண்டி ஹோமம், திருவிளக்கு பூஜை, சித்ராபவுர்ணமி பூஜை சிறப்பாக நடைபெறும். சண்டிஹோமம் செய்வதால் பராசக்தியின் வடிவங்களாகிய துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகள் மகிழ்ந்து துயர்களை நீக்கி வாழ்வில் அனைத்து நலன்களையும் பக்தர்களுக்கு அருள்வதாக நம்புகின்றனர்.

ராகு, கேது தோஷம் நீங்கும் :


கோவில் கருவறையில் ஏகவுரி அம்மனைச் சுற்றியபடி இரண்டு நாகங்கள் இருப்பதை காணலாம். ராகுவும், கேதுவும் அம்மனின் கட்டுப்பாட்டில் இருக்கும் தலம் இது. ராகு, கேது தோஷம் நீங்கும் தலம். இந்த தலத்திற்கு வந்து அம்மனை தரிசித்தால் நாகதோஷம், கால சர்ப்பதோஷம், களத்திரதோஷம், முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

எருமைக்கன்று காணிக்கை :

ஏகவுரி அம்மன் கோவில் ஒரு பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. மிகவும் உடல் நலமில்லாமல் இருப்பவர்கள் தாங்கள் உடல் நலம் பெற்றால் அம்மனுக்கு எருமைக்கன்றை காணிக்கையாக செலுத்துவதாக வேண்டிக்கொள்கிறார் கள். அவ்வாறு பிரார்த்தனை செய்து கொண்டவர்கள் தாங்கள் உடல் நலம் பெற்றவுடன் அந்த வருடம் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை திருவிழா அன்று எருமைக்கன்றை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி வழிபட்டுச்செல்கின்றனர்.

பிராது கட்டும் வழக்கம் :

ஏகவுரி அம்மன் கோவிலில் பிராது கட்டும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. சொத்தை பறிகொடுப்பது, திருட்டு போன்ற சம்பவங்களுக்கு அம்மனிடம் பிராது கொடுப்பதால் நியாயம் கிடைக்கிறது என்பது நம்பிக்கை. இதுபோன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நடந்த சம்பவங்களை கோவில் பூசாரியிடம் ஒரு வரிவிடாமல் கூறுவார்கள். அதற்கு பூசாரி அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்து முறையிடுவார். இதைக்கேட்டு ஏகவுரி அம்மன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கச்செய்கிறாள் என்பது ஐதீகம்.


Saturday, 11 April 2020

C S I CHEATED KOVIL LAND IN ERODE




C S I  CHEATED KOVIL LAND IN ERODE


ஈரோடு: கோவில் நிலத்தை அபகரித்த சி.எஸ்.ஐ – மோசடி!
August 2, 2012
By சு. சண்முகவேல்

ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான, சி.எஸ்.ஐ. நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள 40 ஏக்கர் நிலத்தை மீட்கக் கோரி ‘ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் நிலமீட்பு இயக்கம்’ மற்றும் பொதுமக்கள் சார்பாக கடந்த 6 ஆண்டுகளாக, கண்டன ஆர்ப்பாட்டம், மனுக் கொடுத்தல், அடையாள உண்ணாவிரதம், ஒருநாள் கடையடைப்பு, ஒரு லட்சம் கையெழுத்து இயக்கம், பேரணி, பால்குட ஊர்வலம், திருவிளக்கு பூஜை, சாகும்வரை உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.


கோவில் நிலத்தை மீட்க பக்தர்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு பகுதி

காண்க:

ஈரோடு: மாரியம்மன் கோயிலுக்காகப் போராடும் மாபெரும் மக்கள் சக்தி!

ஈரோட்டில் ஒன்றுபட்ட இந்து மக்கள் சக்தி: ஒரு விரிவான அலசல்

இந்நிலையில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து உரிமை கொண்டாடி வரும் ஈரோடு சி.எஸ்.ஐ. நிர்வாகத்தின் முகத்திரையைக் கிழித்திருக்கிறது, அண்மையில் வெளியான நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியரின் விசாரணை அறிக்கை. இதன்மூலமாக, இதற்காக பல ஆண்டுகளாகப் போராடி வரும் ஈரோடு ஹிந்து இயக்கங்களின் லட்சியம் பெரும்பகுதி நிறைவேறி உள்ளது. சி.எஸ்.ஐ, பிரப் தேவாலய கட்டுப்பாட்டில் உள்ள மேற்படி நிலத்தை மீட்டு கோவிலுக்கு பயன்படுமாறு செய்வதே, ஈரோடு ஹிந்து இயக்கங்களின் அடுத்தகட்டப் பணியாக இருக்கும்.


நடந்தது என்ன?

இதுநாள் வரை சி.எஸ்.ஐ. தரப்பில் சொல்லப்பட்ட செய்தி என்னவென்றால், ”ஈரோடு நகர பழைய புல எண்: 586, 587-ல் உள்ள கட்டிடம் மற்றும் இடம், லண்டன் மிஷனரி சொசைட்டி சார்பில் 12-08-1905-ல் நடைபெற்ற ஏலத்தில் முறையாக எடுக்கப்பட்டது; அதன் பின்னர் 19-01-1906-ல் கோவை மாவட்ட ஆட்சியரால் எச்.எ.பாப்ளி என்பவருக்கு புல எண்: 586, 587-ல் உள்ள 12.66 ஏக்கருக்கு உரிமைப் பட்டயம் (Sale Title) அளிக்கப்பட்டது; 12-12-1907-ல் எச்.எ.பாப்ளி என்பவர் லண்டன் மிஷ¬னரி சொசைட்டி உரிமைகளை லண்டன் மிஷ¬னரி சொசைட்டி கார்ப்பரே¬னுக்கு மாற்றம் செய்துள்ளார்; 14-04-1965-ல் லண்டன் மிஷ¬னரி சொசைட்டி கார்ப்பரே¬ன் பதிவு செய்யப்பட பத்திரம் மூலமாக, மேற்படி சொத்துக்களை தென்னிந்திய திருச்சபைக்கு மாற்றம் செய்துள்ளனர்; அது முதல் மேற்படி சொத்துக்கள் தென்னிந்திய திருச்சபையின் கட்டுப்பாட்டில் உள்ளன” என்பது தான்.

இந்த வாதத்தின் அடிப்படையிலேயே, ஈரோட்டின் மையப் பகுதியில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, ‘சிறுபான்மையினர்’ என்ற போர்வையில் அழிச்சாட்டியம் செய்து வந்தது சி.எஸ்.ஐ.

ஈரோடு வட்டாட்சியரிடம் பட்டா பெற இயலவில்லை

இந்நிலையில், சி.எஸ்.ஐ. நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் உள்ள 12.66 ஏக்கர் நிலத்திற்கு அவர்களிடம் உள்ள ஆவணங்களைக் கொண்டு ஈரோடு வட்டாட்சியரிடமிருந்து (தாசில்தார் ), பட்டா பெற இயலவில்லை. எனவே, தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரி, சென்னையில் உள்ள உதவி நிலவரித் திட்ட அலுவலரை 2010ம் ஆண்டில் அணுகினர்.

முறையற்ற ஆணை

வழக்கிடைப் புலங்கள் இன்றைய பராமரிப்பில் உள்ள நகரளவை ஆவணங்களின்படி அரசு புறம்போக்கு என பதிவாகி உள்ள நிலையில், ‘Custodian of Land’ என்ற முறையில், ஈரோடு வருவாய் வட்டாட்சியரை விசாரணைக்கு உட்படுத்தாமலேயே, சென்னை-5 நிலவரித்திட்ட அலுவலரால் 30-6-2010-ம் நாளன்று முறையற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.

மேற்கண்ட 30-6-2010-ம் நாளிட்ட உத்தரவுக்கு எதிராக, ஈரோடு மக்கள் நலம் நாடுவோர் சங்கம், ஈரோடு அருள்மிகு மாரியம்மன் பக்தர்கள் சங்கம், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் ஆகியோர் சென்னை நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட ஆணையருக்கு மேல் முறையீடு செய்தனர்.

நிலவரித் திட்ட ஆணையர் மறு விசாரணைக்கு உத்தரவு

மேல் முறையீட்டு மனுக்களை ஏற்றுக் கொண்ட நிலவரித்திட்ட ஆணையர் (Commission of Land Revenue & Settlement), “ஈரோடு வட்டாட்சியரை விசாரணைக்கு உட்படுத்தாமல், நிலவரித் திட்ட உதவி அலுவலர் பிறப்பித்த ஆணை சரியானதல்ல” என்று கூறி, அவ்வாணையை ரத்து செய்து மறு விசாரணைக்கு (Denovo Enquiry) உத்தரவிட்டார். (கடிதம் தேதி : 30-03-2011).

அக்கடிதத்தில் கூறியுள்ளதாவது: “வழக்கிடைப் புலங்கள் தொடர்பாக ஈரோடு வட்டாட்சியரை விசாரணை செய்து, ஆவணங்களை விரிவாக பரிசீலனை செய்து, தகுதி மற்றும் சட்ட விதிகளுக்குட்பட்டு முடிவு செய்ய ஏதுவாக மறு விசாரணைக்கு (Denovo Enquiry) ஈரோடு நகர வருவாய் பின் தொடர்பணி நிலவரித் திட்ட வட்டாட்சியருக்கு மீட்டனுப்பி உத்தரவிடுகிறேன்”.

நிலவரித் திட்ட வட்டாட்சியர் மறு விசாரணை:

இதனடிப்படையில் சென்னை நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, vநிலவரித் திட்ட வட்டாட்சியரால் (Settlement Tahsildhar) தாவா குறித்து (Denovo Enquiry) மறு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தாக்கல் செய்த எழுத்து மூலமான வாக்குமூலம், ஆஜர்படுத்திய ஆவணங்களின் நகல்கள் யாவும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

நிலவரித் திட்ட தனி வட்டாட்சியருக்கு எழுத்து மூலமாக, சி.எஸ்.ஐ. நிறுவனத்தினர் அளித்த வாக்குமூலத்தில் “விற்பனைச் சான்றும் மற்ற உரிமைப் பத்திரங்களும் (Title Deeds) எங்களால் உண்மைக்குப் புறம்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இந்த குற்றச்சாட்டு கவுரவத்தை குறைப்பதற்கு மேல் ஒன்றுமில்லை. சி.எஸ்.ஐ. அடித்தள மக்கள், ஏழைகள், உதவி வேண்டுபவர்களுக்கு போராடி வரும் நிறுவனமாகும், ஒருபோதும் கற்பனையான உண்மைக்குப் புறம்பான ஆவணங்களைத் தயார் செய்திட வளைந்து கொடுத்ததில்லை. சி.எஸ்.ஐ. சாதி, மத, மொழி, கொள்கை வேறுபாடின்றி எல்லா வகையான மக்களுக்கும் சேவை செய்து கொண்டுள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டியதில்லை. மத சிறுபான்மையோராகிய எங்களின் உரிமைகளையும் நலன்களையும் காப்பாற்ற வேண்டிய முதற்கடமை அதிகாரிகளுக்கு உள்ளது என்பதைச் சமர்ப்பித்துக் கொள்கிறோம்” என்று கூறினர்.

நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் அளித்த விசாரணை அறிக்கை:

விசாரணையின் இறுதியில் நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் திரு. சு.சம்பத் அவர்கள் அளித்த விசாரணை அறிக்கையின் சுருக்கம் (ந.க.எண்: 0041/2012 ; நாள் : 10-07-2012 ) கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

வழக்கிற்காக தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்கள்: விசாரணையில் கண்டுபிடிப்பு

ஈரோடு நகரில் சி.எஸ்.ஐ. வசம் உள்ள 12.66 ஏக்கர் நிலத்திற்கு இந்திய முத்திரைச் சட்டம் 1902-ன்படி பதிவு செய்ததற்கான பத்திரத்தை எச்.ஏ.பாப்ளியோ அல்லது அவருக்குப் பின்னிட்டவரான அந்தோணி வாட்சன் பிரப் துரையோ அல்லது தற்பொழுது சொத்தில் உரிமை கொண்டாடும் சி.எஸ்.ஐ. நிறுவனமோ ஆஜர்படுத்தவில்லை. எனவே, ஏலமிட்டதாகக் கூறப்படும், ஏல ஆவணங்கள் யாவும் விதிமுறைகளுக்குப் புறம்பானதாகவும், சட்டத்திற்குப் புறம்பானதாகவும், வேண்டுமென்றே இந்த வழக்கிற்காக போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் என தெளிவாகிறது.

எந்த ஆவணங்களிலும் எச்.ஏ.பாப்ளியின் கையெழுத்து இல்லை.

எச்.ஏ.பாப்ளி 12-08-1905-ல் ஈரோடு டிவிசன் டிப்டி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொது ஏலத்தில் செட்யூலில் கண்டுள்ள சொத்துக்களை முழுத் தொகை அதாவது ரூ.12910/- கொடுத்து விலைக்குப் பெற்றதாக Sale Certificate ரூ.100/-க்கான முத்திரைத் தாளில் வழங்கப்பட்டுள்ளது. கையில் எழுதப்பட்டுள்ள இந்த சான்றில் செட்யூல் என்ற இடத்திற்கு நேராக கையயாப்பம் இடப்பட்டுள்ளது. அதன் கீழ் Collector என்று எழுதப்பட்டுள்ளது.
கையொப்பம் இடப்பட்ட தேதி, கலெக்டரின் முத்திரை, செட்யூலில் ஏலமிடப்பட்ட நில விவரம் ஆகியன எதுவுமில்லை. ஏல ஆவணங்கள் எனில் ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் விவரம், ஏலம் கூறிய விவரம், அவர்களின் கையயாப்பம், அதிக ஏலத் தொகை, ஏலத் தொகை எண்ணால் எழுத்தால் குறிக்கப்படும், ஏலச் சொத்து விபரம் குறிக்கப்பட்டும் இருக்க வேண்டும்.
ஏலம் நடைபெற்றதற்கான ஆவணங்களோ, ஏல ஆவணத்தில் எச்.ஏ.பாப்ளி கையயாப்பமிட்ட ஆவணங்களோ எதுவுமில்லை. வழங்கப்பட்ட ஏலச் சான்றுக்கு கோப்பு எண், தேதி விவரங்கள், வழங்குவோரின் பதவி முத்திரை எதுவுமில்லை.

உயிரற்ற உரிமைப் பத்திரம்

எச்.ஏ.பாப்ளி பெயரில் உள்ள உரிமைப் பட்டயம் (Title Deed) அதாவது நிலப்பட்டா மெய்த்தன்மைக்கு அப்பாற்பட்டது. உரிமைப் பட்டயம் (Title Deed) இந்த வழக்கின் (Life) உயிர் போன்றது. மற்ற ஆவணங்கள் உடல். மற்ற ஆவணங்களுக்கு உயிரூட்டும் வல்லமை உரிமைப் பட்டயத்திற்குத்தான் உண்டு. ஆனால், இந்த வழக்கில் உரிமைப் பட்டயம் உயிரற்றதாக உள்ளது. எனவே, ஏல ஆவணங்கள் அனைத்தும் செயல்நிலை அற்றதாகவும், மெய்த்தன்மைக்கு அப்பாற்பட்டதாகவும் உள்ளன.

ஏலம் எடுத்த சொத்துக்களின் உரிமையை லண்டன் மிஷன் மற்றும் சி.எஸ்.ஐ.க்கு மாற்ற, பாப்ளிக்கு அதிகாரம் இல்லை.

சி.எஸ்.ஐ. வசம் உள்ள 12.66 ஏக்கர் நிலத்தின் உரிமை, ஏலத்தில் எடுத்தகாகக் கூறப்படும் எச்.ஏ.பாப்ளிக்கு இல்லாதபோது, அவர் லண்டன் மிசனுக்கு (தற்போதைய சி.எஸ்.ஐ.) சொத்துக்களின் உரிமையை 1907-ஆம் ஆண்டில் மாற்றிக் கொடுக்க அதிகாரமற்றவர், அருகதையற்றவர். ஏலமிட்டதாகக் கூறப்படும் சொத்துக்களின் நிலவரி மற்றும் ஏலத் தொகையையும் செலுத்தியதற்கான செல்லுச் சீட்டினையும், பாப்ளி பெற்றிருக்கவில்லை.அத்தகைய ரசீதுகள். ஆவணங்கள் சி.எஸ்.ஐ. சொத்து மேலாளர் விசாரணையில் கொடுக்கவில்லை.

பத்திரப் பதிவில் மோசடி : ஒரு கிரிமினல் குற்றம்

ஏலமிட்டதாகக் கூறப்படும் சொத்துக்களின் மதிப்பு 1905-ஆம் ஆண்டில் ரூ.12,910.00 செலுத்தியதற்கு ரசீது யாதொருவரும் ஆஜர்படுத்தவில்லை. எச்.ஏ.பாப்ளியும் இது குறித்து 1907-ஆம் வருடத்திய பதிவுப் பத்திரத்தில் சர்வே எண்கள். 586 & 587 தனக்கு இன்ன வகையான, இன்ன ரூபாய்க்கு பெறப்பட்டது என்று குறிப்பிடவில்லை. உரிமை பட்டயத்தில் (Title Deed) சர்வே எண்கள். 586 & 587 குறிப்பிடாத போதும் அத்துடன் இணைக்கப்பட்ட அட்டவணையில் (Schedule) தவறான நில வாடகை குறிப்பிட்ட நிலையிலும், 1907-ஆம் வருடத்திய பத்திரப் பதிவு மோசடியானது. இரு ஒரு கிரிமினல் குற்றத்திற்கு ஒப்பானது. இவ்வாறு ஈரோடு நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

நகர நிலவரித் திட்ட வட்டாட்சியர் பிறப்பித்துள்ள ஆணை

இவ்வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் விசாரணை செய்தபின், நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியர் திரு. சு.சம்பத் கீழ்க்கண்ட ஆணையை பிறப்பித்துள்ளார்:

சி.எஸ்.ஐ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஏலம் நடந்ததாகக் கூறப்படும் ஆவணங்களில் Title Deed-ல் நிலப்பட்டாவில் சர்வே எண், எந்த சர்வே எண்ணுக்கு, எவ்வளவு விஸ்தீரணம், ஒவ்வொன்றுக்கும் கிரவுண்ட் ரெண்ட் எவ்வளவு எனக் குறிப்பிடாததாலும், ‘அ’ பதிவேட்டில் உள்ள பதிவுகளுக்கும், ஏலம் நடந்ததாகக் கூறப்படும் ஆவணங்களில் உள்ள பதிவுகளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லாததாலும், 1902-ஆம் வருடத்திய இந்திய முத்திரைச் சட்டத்தின்படி பத்திரப் பதிவு இல்லாததாலும், ஏலம் நடந்ததாகக் கூறப்படும் ஏலத்தொகை செல்லானதற்கு செல்லுச் சீட்டு இல்லாததாலும், சி.எஸ்.ஐ. தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்களில் உள்ள கலெக்டரின் கையயாப்பம் ஒன்றுக்கொன்று முரண்பாடாக ஒத்துப் போகாமல் வேறுபாடாக உள்ளதாலும், இவ் ஆவணங்கள் யாவும் மெய்த்தன்மைக்கு அப்பாற்பட்டிருப்பதாலும், சுருக்கமாக சர்வே எண். இல்லாமல் Title Deed (A Physique without soul) உள்ளதாலும், அதில் உள்ள நிலவரி GR ‘அ’ பதிவேட்டிற்கு மாறுபடுவதாலும், (Schedule)-லில் உள்ள GR ‘அ’ பதிவேட்டில் உள்ள பதிவுகளுக்குப் புறம்பாக உள்ளதாலும், சி.எஸ்.ஐ. ஆஜர்படுத்திய ஆவணங்கள் மெய்த்தன்மைக்கு புறம்பாக இருப்பதாலும், சி.எஸ்.ஐ.யின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
மேற்படி எச்.ஏ.பாப்ளி பதிவு செய்த ஆவணம் எண்: 3067.1907/ நாள் 12-12-1907-ல் கண்டுள்ள ஏலமிட்டதாகக் கூறப்படும் சொத்துக்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டவுடன் இந்திய முத்திரைச் சட்டம் 1902-ன்படி பதிவு செய்யப்படாமல், உள்நோக்குடன் தயார் செய்யப்பட்ட மோசடிக் கிரையம் என்பதாலும், Title Deed -ல் நிலப்பட்டாவில் குறிப்பிடாத சர்வே எண்களைக் குறிப்பிட்ட மோசடிக் கிரையப் பத்திரத்தினை ஏற்படுத்தி அரசை ஏமாற்றி தனக்கில்லாத உரிமையினை லண்டன் மிஷனுக்காக மாற்றிக் கொடுத்துள்ளார் எச்.ஏ.பாப்ளி.
இந்த நில மோசடியானது கிரிமினல் குற்றம் என்பதாலும், பாப்ளியின் கிரையப் பத்திரத்தினைத் தொடர்ந்து 1965-இல் சி.எஸ்.ஐ. மிஷனுக்கு சொத்துக்கள் மோசடியாக மாற்றப்பட்டிருப்பதும் கிரிமினல் குற்றமாகும் என்பதாலும், சி.எஸ்.ஐ. உதவி சொத்து மேலாளரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
ஈரோடு டவுன் பழைய சர்வே எண்: 586, 587 பரப்பளவு 12.66 ஏக்கரின் இன்றைய சந்தை மதிப்பு ரூ. 900 கோடிக்கும் மேற்படுவதால், அரசு சொத்துக்களின் பாதுகாவலர் (Custodian of Govt. Properties) என்ற முறையில் மேற்படி சொத்துக்களை பராமரிக்கவும், நிர்வகிக்கவும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுரை பெற்று செயல்பட ஈரோடு வருவாய் வட்டாட்சியர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
பத்திர எண்: 3067 & 1907-ல் ஈரோடு நகர பழைய சர்வே எண்: 586, 587 தவிர பிற சொத்துக்கள் உள்ளதால், நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையர் அவர்களின் உத்திரவு பெற்று பிற சொத்துக்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஈரோடு நகரம் பழைய சர்வே எண்: 586, 587-க்கு டவுன் சைட் அரசு புறம்போக்கு என ஏற்கனவே உள்ளவாறே ஆவணங்களில் பதிவு செய்திட உத்திரவு பிறப்பிக்கப்படுகிறது.
இந்நிலங்கள் யாவும் அரசு புறம்போக்காக ஏற்கனவே உள்ளதால், வருவாய்த்துறை புதிதாக சுவாதீனம் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் எழவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


சி.எஸ்.ஐ. நிர்வாகம் ஆக்கிரமித்து வைத்துள்ள கோவில் இடம்

சி.எஸ்.ஐ. நிர்வாகமே! சேவை என்பது பெயரில் மட்டும்தானா?

இந்த உத்தரவு குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள சி.எஸ்.ஐ. நிர்வாகிகளான ஐ.ஆல்ட்ரின் ராஜேஸ்குமார் (பிரப் மெமோரியல் சர்ச் அஸிஸ்டண்ட் பிராபர்ட்டி மேனேஜர்) மற்றும் பாதிரியார் சாந்தக்குமார் ஆகியோர், “இந்த அறிக்கையானது ஒருதலைப்பட்சமானது மட்டுமின்றி, ஒட்டுமொத்த சிறுபான்மையினருக்கு எதிரானதாகும். இது உண்மையிலேயே அரசு புறம்போக்காக இருந்தால், இத்தனை நாட்களாக எவ்வாறு நாங்கள் பயன்படுத்தியிருக்க முடியும்? ஆகவே, இது குறித்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம்” என்று கூறியுள்ளனர்.
அடித்தள மக்கள், ஏழைகள், உதவி வேண்டுபவர்களுக்கு போராடி வரும் நிறுவனமாகும் என்று கூறும் நிர்வாகம், மோசடியான கிரையப் பத்திரம் என விசாரணை அறிக்கை வெளிவந்த பின்னரும், அபகரித்துள்ள ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை விட்டுக் கொடுக்க முன் வராதது ஏன்? சேவை என்பது பெயரளவில் மட்டும்தானா? என ஈரோட்டு மக்கள் கேட்கின்றனர்.

சி.எஸ்.ஐ., பதிவு செய்யப்பட்ட ஒரு கம்பெனி – சென்னை உயர்நீதிமன்றம்

தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ், கோவை பதிப்பில் 27-மார்ச்-2012ம் தேதி வெளியான ஒரு செய்தியில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு எஸ்.ராஜேஸ்வரன் அளித்துள்ள ஒரு தீர்ப்பில், ‘’சி.எஸ்.ஐ. (Church of South India) என்பது தொண்டு நிறுவனம் அல்ல; இந்திய கம்பெனிகள் பதிவு சட்டத்தின்படி 1947-48-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு கம்பெனி ஆகும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் வெளிவந்துள்ள அறிக்கை மேற்கண்ட தீர்ப்புக்கு மேலும் வலுசேர்க்கும் வண்ணம் உள்ளது.

ஈரோடு மக்களின் எதிர்பார்ப்பு

ஈரோடு மக்களும், மாரியம்மன் பக்தர்களும் இதுநாள் வரை கூறிவந்த குற்றச்சாட்டு தற்போது நிரூபணமாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக, சி.எஸ்.ஐ. ஆக்கிரமிப்புள்ள நிலத்தை மீட்டு, அங்கு ஸ்ரீ பெரிய மாரியம்மனுக்கு ராஜகோபுரத்துடன் கூடிய மிகப் பிரமாண்டமான ஆலயம் அமைக்க விரும்புகின்றனர். இதுவே ஈரோடு மக்களின் பெருவிருப்பம் ஆகும். இதை நிறைவேற்றுவது கோவிலை நிர்வகிக்கும் அறநிலையத் துறையின் கடமை.
அதேபோல ஈரோட்டின் போக்குவரத்து நெரிசலை தீர்க்க திட்டமிடப்பட்டுள்ள உள்ள 80 அடி சாலை திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இது மாவட்ட நிர்வாகத்தின் கடமை.

அரசுக்குச் சொந்தமான நிலத்தை 100 ஆண்டுகளுக்கு மேலாக மோசடியாக அனுபவித்து வந்ததற்காக சி.எஸ்.ஐ. நிர்வாகத்திடம் அதிகபட்ச குத்தகை கட்டணமும், போலி பத்திரங்களை தயார் செய்ததற்காக சட்ட ரீதியான கடும் தண்டனையும் வழங்க வேண்டுமென விரும்புகின்றனர்.

மேலும் சி.எஸ்.ஐ. நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிற சொத்துக்கள் குறித்தும் ஆழமான விசாரணை நடத்த வேண்டுமென்றும் விரும்புகின்றனர்.

இந்த விஷயத்தில், இனி அரசு எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பொதுமக்களும், அம்மன் பக்தர்களும் அமைதியுடன் கூர்ந்து கவனித்து வருகின்றனர். மக்கள் சக்தி ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சம் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

Saturday, 19 October 2019

ADITYA CHOLAN 871-907 TOMB NEAR KALAHASTHI







ADITYA CHOLAN  871-907 
TOMB NEAR KALAHASTHI

ஆதித்த சோழன் பள்ளிப்படை க்கான பட முடிவு


ஒவ்வொரு கல்லிலும் வரிசை எண்ணைக் குறிப்பிட்டு உபானம் (அதிஷ்டானம்) முதல் பிரஸ்தாரம் (entablature) வரை அடித்தளத்தை வலிவாக்கி  விமானச் சுவர்களின் கருங்கற்களை பிரித்து அடுக்கிக் கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. குமுதப்படையில் நான்கு புறமும் காணப்பட்ட அரிய கல்வெட்டுகளின்மேல் சிமென்ட் காரை அப்பியிருந்தது. அருகில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்பாள் சன்னதி, பிற்காலத்தில் இக்கோவிலுடன் இணைக்கப்பட்டிருக்கலாம். அம்பாள் சன்னதியில் தினசரி பூசைகள் இடற்பாடின்றி நடந்து வந்தன.

பொக்கிசம்பாளம்

ஸ்ரீ காளஹஸ்தி நகருக்கு அருகே 15.6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பொக்கிசம்பாளம். இவ்வூரிலிருந்து ஸ்ரீ காளஹஸ்தி நகருக்குப் பேரூந்து மற்றும் ஷேர் ஆட்டோக்கள் சென்று வருகின்றன. இவ்வூர் இராயசீமா பகுதியில் அமைந்துள்ளது. இவ்வூரின் அமைவிடம் 13° 42′ 16.9956” N அட்சரேகை 79° 39′ 23.4932” E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 68 மீ. ஆகும். இவ்வூரின் மக்கள் தொகை 837 (ஆண்கள் 613 பெண்கள் 224) ஆகும்.

ஸ்ரீ காமாட்சி சமேத கோதண்டராமேஸ்வர சுவாமி கோவில்

கிழக்குப் பார்த்தவாறு அமைந்த ஸ்ரீ காமாட்சி சமேத கோதண்டராமேஸ்வர சுவாமி கோவில் வளாகம் பொக்கசம்பாளம் ஊரின் நடுவே அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றிக் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இக்கோவிலில் எந்தவிதமான சிக்கலான வடிவமைப்புகள் எதுவும் இல்லை. இக்கோவில் சோழ வழித்தோன்றல்களால் விரிவாக்கப்படவுமில்லை. கட்டடக்கலைக் கூறுகள் சோழர்களின் கலைப்பாணியைப் பிரதிபலிக்கின்றன. விசாலமான இக்கோவில் வளாகம் செவ்வக வடிவச் சுற்று மதிற்சுவர் சூழ அகன்ற பிரகாரங்களுடன் காணப்படுகிறது. மூன்று நிலைகளுடன் கூடிய இராஜகோபுரம், பலிபீடம், நந்தி மண்டபம், கொடிமரம் எல்லாம் ஒரே நேர் கோட்டில் கச்சிதமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.  எளிய கவர்ச்சிமிக்க சுதை உருவங்கள் கோபுரத்தை அலங்கரிக்கின்றன. இங்கு சோழர்பாணி துவாரபாலர்களைக் காண இயலவில்லை. நுணுக்கமாக செதுக்கப்பட்ட நந்தி சிவலிங்கத்தை நோக்கியவாறு அமர்த்தி வைக்கப்பட்டுள்ளது.

மூலவரின் விமானம் அளவில் சிறியதாகவும் சதுரவடிவிலும் அமைந்து கருவறையையும், அர்த்தமண்டபத்தையும் பெற்றுள்ளது. உபானம் முதல் பிரஸ்தாரம் வரையிலான உறுப்புகள் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளன. சிகரம் உள்ளிட்ட மேற்கட்டுமானம்  செங்கல் மற்றும் சுண்ணாம்புக் காரையில் கட்டப்பட்டு மீண்டும் கருங்கல் சிகரமாக மாற்றப்பட்டுள்ளது. அன்று நான் கண்ட விமானத்தில் சிகரம் இல்லை. சீரமைப்பு பணி நடைபெற்றதால் சிகரம் புதிதாக எழுப்பப்படவிருந்தது. இரண்டு மீட்டர் அளவுள்ள சதுரக் கருவறையில் சிவலிங்கம் சுமார் 4 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையை ஒட்டி அர்த்தமண்டபம் அமைந்துள்ளது.

விமானத்தின் அடித்தளம் எளிய பாதபந்த அதிஷ்டானம் பெற்றுள்ளது. உபபீடம், உபானம், ஜகதி, திரிபட்டைக் குமுதம், கோட்டங்களின் கீழே சிலம்புக் குமுதம் ஆகிய கூறுகளைப் பெற்றுள்ளது.  சிலம்புக் குமுதத்திற்கு மேல் உள்ள வரியில் புடைப்புடன் சிங்கமுக உருவ வரிசை காணப்படுகிறது.

வெளிச்சுவர் மூன்று பத்திகளாகப் பிரிக்கப்பட்டு அரைத்தூண்களால் வரம்பு கட்டப்பட்டுள்ளது. மூலைகளில் கர்ண பத்தி என்னும் கர்ண பத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடுவில் சாலபத்தி என்னும் சாலபத்திரங்களில் ஒன்று அல்லது அதற்கு  மேற்பட்ட சாலகோட்டங்கள் சிறிது பிதுக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. என்றாலும் இந்தச் சாலகோட்டங்கள் தெய்வ உருவங்கள் நிறுவும் அளவிற்குப் போதிய ஆழம் இல்லை. தற்போதைய சாலகோட்ட தெய்வங்கள் பிற்காலத்தில் நிறுவப்பட்டிருக்கலாம். அன்று சாலகோட்டங்களில் தெய்வங்களைக் காண முடியவில்லை.

ஸ்ரீ காமாட்சி அம்மன் மூலவர் சன்னதிக்கு இடப்புறம் தனிக்கருவரையில் கிழக்கு நோக்கியவாறு காட்சி தருகிறார்கள். நவக்கிரக மேடை ஒரு புறம் அமைந்துள்ளது. இந்த அம்மன் மற்றும் நவக்கிரக சன்னதிகள்  பிற்காலத்தில் இணைக்கப்பட்டிருக்கலாம்.

முதலாம் ஆதித்த சோழன் (கி.பி. 871-907)

விஜயாலயனின் மகனான முதலாம் ஆதித்த சோழன் (கி.பி. 871-907) தன் தகப்பன் காலத்திலேயே இளவரசனாகப் பொறுப்பேற்றுக் கொண்டு, திருப்புறம்பியப் போரில் வெற்றிகளைக் குவித்தவர்.   அபராஜிதவர்ம பல்லவனைத் தோற்கடித்துத் தொண்டைமண்டலத்தைக் கைப்பற்றினார். அதனால் அவர் “தொண்டை நாடு பாவிய சோழன்” என்று பட்டம் பூண்டார். கொங்குமண்டலத்தையும் இவர் கைப்பற்றினார். அங்கிருந்து ஏராளமான பொன் கொண்டு வந்து தில்லை நடராஜப் பெருமான் கோயிலுக்குப் பொன் வேய்ந்தார். இவருடைய ஆட்சியில் சோழர்களின் ஆட்சி பரப்பு விரிந்தது. இவருக்கு இளங்கோப்பிச்சி, திருபுவனமாதேவி என இரு மனைவியர்களும், முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907 – 955), கன்னர தேவன் (இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் (கிபி 939 – 967) என இரண்டு புதல்வர்களும் இருந்தனர்.

இவர் சைவசமயத்தை சார்ந்திருந்தார். இவருடைய காலத்தில் பல சிவன் கோவில்கள் கட்டப்பட்டன. காவிரியாறு தொடங்கும் சஹ்ய மலையிலிருந்து பூம்புகார் வரையிலும் காவிரியின் இருகரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிவன் கோவில்களைக் கட்டியதாக சுந்தரச் சோழனின் அன்பில் செப்பேடு குறிப்பிடுகிறது. இவரது காலத்தில் தான் பல செங்கற் கோவில்கள் கற்றளியாக மாற்றியமைக்கப்பட்டன. .ஸ்ரீரங்கபட்டிணம் அரங்கநாதர் கோவிலைக் கட்டுவதற்கு இவர் ஆற்றிய பங்களிப்பைப் பற்றிக் கல்வெட்டுகள் பேசுகின்றன. திருவாரூர் கோவிலுக்கு அதிக மானியங்களை வழங்கியுள்ளார். திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோவில் இவர் காலத்தில் கட்டப்பட்டது. இவர் சைவ சமயத்தவர் என்றாலும் மிகுந்த மதச் சகிப்புத் தன்மை கொண்டிருந்தார். மக்கள் அச்சமின்றி தாங்கள் விரும்பிய கடவுளை வழிபட்டார்கள்.

இலகுலீச பாசுபதம்

கி.பி. 5-6 -ஆம் நூற்றாண்டுகளில் இலகுலீச பாசுபதம் செல்வாக்குப்பெற்றது. காயாவரோஹன அல்லது காயாரோகணம் என்ற பெயரில் நாகபட்டினம், கும்பகோணம், காஞ்சிபுரம் போன்ற தலங்களில் பாசபத நெறியில் தோன்றிய கோவில்கள் காரோணம் என்று பெயர் பெற்றன. தமிழகத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட, பாசுபத சமயப்பிரிவைச் சேர்ந்த, மடங்களான காளாமுக மடம், கபாலிக மடம், வீரசைவ மடம், கோளகி மடம் ஆகிய மடங்கள் இருந்துள்ளமை பற்றித் தமிழகத்தில் லகுலீச பாசுபதம் என்னும் நூல் விவரிக்கிறது. பாசுபத மடத்தலைவர்களின் இயற்பெயர்களுடன் பட்டர், பட்டாரகர் போன்ற ஈற்றொட்டுகளை இணைத்தும் ஈசான ஆச்சார்யா, சைவ மாமுனி போன்ற பொதுப்பெயர்களாலும்  அழைக்கப்பட்டுள்ளனர். சைவர்கள் குரு ஒருவரிடம் தீட்சை பெறவேண்டும் என்ற சைவக் கோட்பாடுகளுக்கேற்ப சோழ மன்னர்கள் அரசவையில் வட நாட்டு சைவ அந்தணர்களான ஈசான பண்டிதர், சர்வசிவ பண்டிதர், பவன பிடாரன் போன்றோர் அரச குருக்களாக விளங்கினார்கள். இந்த ராஜகுருக்கள் ராடதேசம், கெளடதேசம் போன்ற பகுதிகளிலிருந்து வந்தவர்கள். ஈசான பண்டிதரது மகன் ஈச்வர சிவர் என்ற சோமேஸ்வரர் மூன்றாம் குலோத்துங்கனுக்கு ராஜகுருவாக விளங்கினார்.

திருவொற்றியூர், இலகுலீச பாசுபதத்தின் மையமாகத் திகழ்ந்துள்ளது. சர்வசிவ பண்டிதரின் முன்னிலையில் திருவொற்றியூர் கோயில் கற்றளியாகக் கட்டப் பட்டது. வாகிஸ்வர பண்டிதர் மற்றும் சதுராண பண்டிதர் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இக்கோவில் மடம் திகழ்ந்துள்ளது. கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திருச்சி திருவானைக்காவில் பாசுபத கிரஹஸ்த மடம், இயங்கியுள்ளது.

பள்ளிப்படைக் கோவில்கள்

பாசுபத மகாவிரதிகள் மற்றும் பண்டிதர்களின் கட்டுப்பாட்டில் சோழர்களின் கோவில்கள், குறிப்பாக பள்ளிப்படைக் கோவில்கள், இருந்துள்ளன. மாகேஸ்வர பெருந்தரிசனத்தார் என்பவர் பாசுபத சைவ மார்க்கத்தை சார்ந்த மாவிரதிகளாவர். இறந்துபோன சோழ அரசர்களின் நினைவாக எழுப்பப்பட்ட பள்ளிப்படைக் கோவில்களில் பூசைக்கும் நிருவாகத்துக்கும் மகாவிரதிகளான பாசுபத மதகுருக்கள் அமர்த்தப்பட்டனர். இவர்களே இந்தப் பள்ளிப்படைகளையும், நிர்வாகித்தனர். பள்ளிப்படைக் கோவில்கள் பற்றிப் பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி கூறியுள்ள கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது.

“ஆதித்தீஸ்வரா தொண்டமாநாட்டில், முதலாம் பரந்தகனால் அவரது தந்தைக்குப் பள்ளிப்படையாக எழுப்பப்பட்டது; அரிஞ்சிகை ஈஸ்வரா மேல்பாடியில் முதலாம் இராஜராஜனால், ஆற்றூரில் மரணமடைந்த அரிஞ்சய சோழனை நினைவூட்டுவதற்காகக் கட்டப்பட்டது; இராமநாதன் கோயிலில் உள்ள பஞ்சவன்மாதேவீஸ்வரா முதலாம் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இவையெல்லாம் கவனத்தைக் கவர்கிற எடுத்துக்காட்டுகளாகும்.” ஆதாரம்: பேராசிரியர். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி எழுதிய சோழர்கள்

பள்ளிப்படை (sepulchral shrine) என்றால் சோழ அரசனின் அஸ்தியின் மேல் எழுப்பப்படும் சிவாலயம் என்று பார்த்தோம்.  வழக்கமாகத் துறவிகள், ஞானிகள், மற்றும் முனிவர்களுக்கு,  அந்திமக் கிரியைகளுக்குப்பின் இவர்களுடைய அஸ்தியின் மேல் ஈமக் (funerary) கோவில்களை அமைப்பதுண்டு. ஏறத்தாழ 16 பள்ளிப்படைக் கோவில்கள் சுட்டிக் காட்டப்பட்டாலும், மூன்றே பள்ளிப்படைக் கோவிகளில் மட்டுமே, இக்கோவில்களின்  சுவர் அல்லது அடித்தளத்தில் காணப்படும் கல்வெட்டுகளின் அடிப்படையில், பள்ளிப்படைக் கோவில்கள்தான் என்று அறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளார்கள்.

ஆதித்தீஸ்வரா கோவில் இராஜகேசரி முதலாம் ஆதித்த சோழனின் அஸ்தியின் மீது முதலாம் பாரந்தக சோழன் தொண்டமாநாட்டில் எடுப்பித்த பள்ளிப்படைக் கோவிலாகும். இது போல மேல்பாடி அரிஞ்சிகை ஈஸ்வரம் என்னும் பள்ளிப்படைக் கோவில் ஆற்றூர் என்னுமிடத்தில் இறந்த முதலாம் பாரந்தக சோழனின் மகனான அரிஞ்சய சோழனுக்கு (கி.பி. 956-957) முதலாம் இராஜராஜ சோழனால் எழுப்பப்பட்டது. பஞ்சவன்மாதேவி பள்ளிப்படைக் கோவில் இராமநாதன் கோவிலில் (பட்டீஸ்வரத்தில்) மாமன்னர் முதலாம் இராஜராஜனின் ஐந்தாவது மனைவியான பஞ்சவன்மதேவிக்கு முதலாம் இராஜேந்திர சோழனால் எழுப்பப்பட்டது. லகுலிச பாசுபத மதப்பிரிவினர் சோழர்கள் காலத்தில் (10 மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளில்) மயானத்தில் பள்ளிப்படைக் கோவிலை அமைத்துள்ளார்கள்.

கம்பவர்மன் காலத்துப் பள்ளிப்படை ஒன்று உண்டு. அஃது இராசாதித்தன் என்ற தலைவன் தன் தந்தையான பிருதிவி கங்கராயன் என்பவன் இறந்த இடத்தில் எழுப்பிய சமாதி கொண்ட கோவிலாகும். பத்தாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டின் பகுதியை ஆட்சி செய்த வீரபாண்டியன் தனது சகோதரன் சுந்தரபாண்டியன் நினைவாக எழுப்பிய பள்ளிபடைக் கோவில் சுந்தரபாண்டிய ஈஸ்வரம் என்ற பெயரில் பள்ளிமடம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

திருப்புறம்பியப் போரில் மரணமடைந்த கங்க மன்னன் பிரதிவீபதியின நினைவைப் போற்றும் விதமாக சோழப் பேரரசன் முதலாம் பராந்தகன் காலத்தில் திருப்புறம்பியத்தில் பள்ளிப்படை கோவிலொன்று எழுப்பப்பட்டது. கோனேரிராஜபுரத்தில் கண்டராதித்த சோழரின் பிராட்டி செம்பியன் மகாதேவியார் தனது கணவரின் பெயரில் திருக்கற்றளி ஒன்றை எடுப்பிய செய்தியை இவ்வூரிலுள்ள சாசனம் ஒன்று பதிவு செய்துள்ளது.

மீதியுள்ள 13 பள்ளிபடைக் கோவில்களை (1) அடையாளம் காணமுடியவில்லை; அல்லது (2) அறிஞர்கள் மத்தியில் பள்ளிப்படையை அடையாளம் காண்பது குறித்த ஆதாரங்கள் பற்றி ஒத்த கருத்துக்கள் நிலவவில்லை. சோழர்களின் பள்ளிப்படையில் உள்ள இக்கல்வெட்டுகள் சோழ அரசன் அல்லது அரசியைத் துதித்து இவர்களின் மரணத்தை நினைவுகூருகின்றன. இறந்த அரசன் அல்லது அரசிக்கு பள்ளிப்படைக் கோவில் எடுப்பிக்கும் சடங்கு மற்றும் இக்கோவில்களை பெருமைப்படுத்துதல் அல்லது வழிபடுதல் போன்ற சடங்குகள் சோழர்களின் காலத்திற்குப்பின் புழக்கத்தில் இல்லை. பள்ளிப்படை பற்றி இந்து கோவில் ஆகமங்கள் எந்தவிதமான விதிகளையும்  நிர்ணயிக்கவில்லை.

பள்ளிப்படைக்கோயில்கள் மக்களால் போற்றப்படவில்லை. சில அழிந்தே போயிருக்கவேண்டும். பள்ளிப்படைக்கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளின் எண்ணிக்கையும் குறைவே.

கல்வெட்டு

பிற்காலச் சோழர்கள் காலத்தில் ஸ்ரீ காளஹஸ்தி, தொண்டைமண்டலம் (ஜெயம்கொண்ட சோழமண்டலம்), திருவேங்கட கோட்டம், பெரும்பாணப்பாடி நாடு ஆற்றூர் வருவாய் பிரிவில் அடங்கிய  ஊராக இருந்து வந்துள்ளது. இவ்வூர் வடபகுதி ஜெயம்கொண்ட சோழமண்டலத்தின் கஜானாவாகவும் திகழ்ந்துள்ளது. இதன் காரணமாகவே இவ்வூருக்கு பொக்கிஷம்பாளையம் என்ற பெயர் வந்ததாகத் தெரிகிறது.  வசூலிக்கப்பட்ட வரியை வாங்கிச் செல்வதற்கு இங்கு வந்த முதலாம் ஆதித்த சோழன் காய்ச்சல் கண்டு கி.பி. 907 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று இறந்துவிட்டான். ஆதித்த சோழனின்  நினைவாக அவனது அஸ்தியின் மீது முதலாம் பராந்தக சோழனால் எழுப்பப்பட்டதுதான் இந்த கோதண்டராமேஸ்வரம் என்னும் ஆதித்தேஸ்வரம் என்ற பள்ளிப்படைக் கோவிலாகும்.

கோண்டராமேஸ்வர சுவாமி கோவில் மூலவர் விமானத்தின் திரிபட்ட குமுதப்படையில் முதலாம் பராந்தக சோழனின் விரிவான 34 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.  (South Indian Inscriptions Vol. VIII, No. 529 (A.R. No. 230 of 1903).

ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொணட கோப்பரகேசரி பன்மற்கு யாண்டு முப்பத்துனாலாவது திருவெங்கடகொட்டத்து ஆற்றூர்னாட்டு தொண்டைமான் பெராற்றூர் ஸபையோமு[ம்] நகரத்தொமும் பள்ளிப்படை வாமிஸ்வரத்து  மடாரர் ஸ்ரீ கோதண்டராமிஸ்வரமாகிய ஆதிதெஸ்வரக்ரஹத்து ஆள்வாருக்கு (மூலவர்) புரட்டாசித்திங்கள் திருக்கெட்டை (கேட்டை) முதல் எதி ரெழு நாளுந் திருநக்ஷத்திரமாகிய திருச்சதையத்த்தன் றுந் திரு உத்ஸவஞ்  செய்வதற்கும் போஜனத்துக்கும் பள்ளிபடை வாமிஸ்வரத்து மடாரர்  தொண்டைமான்  பெராற்றூர் ஸபையோமு[ம்] நகரத்தொமும் வழி           இய____ஞ் செய்வதாக எங்கள் வழி வைத்த பொன் கட்டு வெட்டிச் சூடு[க்]க[டு]த்து திப்பொக்கி ஊர்க்கற்செ[ம்]மை முதல் நூற்றைங்  கழஞ்சும் வாமிஸ்வரவணிக னென்னும் பூண்டும் __னால் நிறைத்தளவு தூநெல் நாலாயிரக் காடியும் இன்நெல் நாலாயிரக்காடிக்கும் ஆ[ண்]டுவரை ஐங்காற் பலிசையால் வந்த நெல் ஆயிரக்காடி யிந்நெல் ஆயிரக்காடிக்குந் திருவிழாவெடுக்கும் ஏழுநாளும் நிசதிப்படி ஸ்ரீமஹாவ்ரதிகளுள்ளிட்ட ஆறுசமயத்துத்தவஸ்விகளும்  ஆக இருநூற்றுவரும் ஸ்மரணர் முன்நூற்றுவருமாக  அஞ்னூற்றுவரும் பக்தராயின பலசமை[ய] அஞ்னூற்று வருமாக ஆயிரவர்க்கும் பத்தெ[ட்டுக்கு]த்தல் மெய்யாலரிசி நாடுரியாக நிசத மரிசி  முப்பத்தெழு காடி ஐந்தூம்பாக  ஏழுநாளும் ஊட்டி[ச்] செலவுபெறுமரிசி  இருநூற் றறுபத்திருகாடி ஐந்தூம்[பி]னால் ஐந்திரண்டு வண்ண நெல்லாக்கி அறுநூற் றைம்பத்தாறு காடி இருதூம் பிருநாழியும் திருவிழாப்

2  போதுந் தே[வர்க்கு] திருவமிர்தரிசி நசி[தி] . . . ழியாத எழுநாளைக்கு இருகாடி அறு றூம்பு நாழியுந் தீர்த்தத்து நாளால் திருக்காளத்தி ஆள்வார்க்குப் பெருந் திருவமிர்த்துக்கு கரிக்குந் தயிர்க்கும் [நெ]ய்க்கும் உள்ளிட்டு நாற்காடி ஒரு [தூ]ம்பி[ரு] நாழியும் சாலைக்குக் கறிக்கு நிசதி இருகாடியாக நெற் பதினாறு காடியும் மோர்க்கு நெல் நிசதி பதிநைங்காடியாக எழுபத்தெழு காடியும் உப்புக்கு நிசதி  நெல்லு ஒரு காடியாக ஏழுகாடியும் புளிப்பழவடை எ . க்கு நெல்லு ஏழுகாடியும் இலை இடுவானுக்கு நெல்லு ஏழுகாடியும் நீராட்டுவானுக்கு நெல்லு பதின்காடியும் கலமிடுங் குசவனுக்கு நெல் முப்பதின் காடியும் __________ கறிக்கு கொள்ளு நிசதி இருகாடிக்கு நெல் முக்காடியாக ஏழுநாளைக்கும் நெல்லு இருபத்தொருகாடியும்  பூவிடு மாலைக்காரனுக்கு ஏழு காடியும் இப்படி பந்மாகேஸ்வரக் கண்காணியொடு நின்[றி]வ்வழிவு  கணக்கறுத்து குடு[க்க] கடவ இவ்வூர் மாதேஸ்வரனுக்கு நெல்லு  இருபதின்காடியும் சாலைக்களந்த வரிசியிலெய் இவனுக்கு நிசத மரிசி நானாழியும் திருச்சுண்ணத்துக்கு மஞ்சளுக்கு நெல்லு இருகாடி ஒன்பதின் றூம்பு முன்னாழியும் ஆக நெல் எண்ணூற்றெழுபத்துமுக்காடி நீக்கி நின்ற நெல் நூற் றிருபத்தேழு காடியால்ப் பொன் முக்கழஞ்செ மூன்று மஞ்சாடியுங் குன்றியும் பொன் னூற்றைங் கழஞ்சினாலும் ஆண்டுவரை பலிசையால் வந்த பொன் பதின்முக் கழஞ்செ அரைக்காலும் ஆகப்பொன் பதினாறு கழஞ்செ ஆறுமஞ்சாடியில் நிசதிப்படி உண்ணும் ஆயிரவர்க்கும் ஏழுநாளைக்கும் உண்ண . . . . ண்காடி இருதூம்பு ஆழாக்கு [இ]ந்திரவிழாவினுக்குமாக விளக்[கினுக்கு] [நெ]ய் மேல்படி நாளைக்கு [நாற்காடி] எழுதூம்ப முன்னாழி முழாகை அழாக்குமாக நெய் பதின்முக்காடிக்கு . . . . .றுகழ . . . .டு மாணிகள் பதின்ம  . . . . ழஞ்செ காலும் பலகாயத்துக்கு வெறுங்காய் பதினாயிரத்துக்கு கழஞ்சும் வெறுவி-

3. லைப் பற்று  முன்னூற்றுக்கு கழஞ்சரையுந் கண் . . . . . . [ரு] கழஞ்சும் அரங்கழிவு சொன்றுடனுன்றிசக்குந் தச்சனுக்கு . . . . . . ஸபையார் கூத்தடினார்க்கும் பாடினார்க்குமாக பூஜைனைக்கு முக்கழஞ் . . . . . .ன் பதினாறு கழ . . . . . னகவுமிப்பொன்னு . . . . . . . . வத் செலுத்துவொமாகவு மிவ்வழி விப்பரிக் வழுவாமெய் இவ்வாதித்தீஸ்வரக்ரகத் திருக்கும் மஹாவ்ரதிகளும் காவிரிபாக்கத்து திருபன்றீஸ்வரத்துப் பிரதிவிடங்கக் கணப்பெருமக்களும் பந்மாகேஸ்வரக் கண்காணியும் இம்மூன்று திறத்தாரும் எங்களைத் தாங்கள் வெண்டிக் கொ[ச்செ]யது இயன்றும் செலுத்துவிக்கப்பெறுவீராகவும் மிப்படி இத்தரும __________ வத் வைத்தமையி லிப்படி வழுவின நான்று அன்றான்கொவினுக்குநூற்றுகழஞ்சு பொன் தண்டமும்பட்டு இத்ய __ மி[ப்ப]டி  வழுவாமெ செலுத்துவோமாகவு மித்திருவிழாச்  சுட்டிப் பணிசெய்மக்களுக்குச் சொற்றால் வந்த அழிவெல்லா மிவ்வேழாயிரவரி __மெய் செலவுபெறுவதாகவு மிப்பரிசொட்டிச் செலுத்துவோமாகவுப் பள்ளிப்படையுடைய வாமீஸ்வரபண்டிதமடாரர் க்கு ஒப்புக்குடுத்தொம் தொண்டைமான்பெராற்றூர் ஸபையோமும் நகரத்தொமும் இத்தர்மத்துக்கு சுஹித[ம] நினைத்தார்  __ மையிடை குமரி இடை எழுநூற்றுக் காததிலுஞ் செய்தார் செ[ய்]த  பாவத்துப் படுவார்  இத்தர்மத்தை வழுவாமெ(ச்) செலுத்தி ரக்ஷித்தார் ________ பெறுவார்.

கழஞ்சு = ஒரு கழஞ்சு 5.4 கிராம்; இரண்டு குன்றிமணி என்பது ஒரு மஞ்சாடி. 10 மஞ்சாடி கொண்டது ஒரு கழஞ்சு ஆகும். கழஞ்சு என்பது தற்போதைய எடையில் 5.4 கிராம் ஆக கணக்கிடப்பட்டது.
காடி = தானியத்தின் முகத்தலளவுள் ஒன்று. நெல் முதலியவற்றை அளக்கப் பயன்பட்டது.
பலிசை = வட்டி: கோயில் கருவூலத்தில் குறிப்பிட்ட பணம் செலுத்தி, அதில் வரும் பொலிசை (வட்டி) யிலிருந்து அரிசி, நெய், தயிர், உப்பு, கறி(காய்), இன்னும் பல பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தி கொள்வதாகக் கல்வெட்டில் பதிவு செய்துள்ளனர்.
ஊரோம், சபையோம் நகரத்தோம் என்ற சொற்கள் பொதுவாக ஊர் நிர்வாகத்தைக் குறிப்பிடுகிறது.
மகாசபை, பெருங்குறி மகாசபை ஆகிய சபைகள் பிரமதேயம் எனப்படும் அந்தணக் குடியிருப்புகளை நிர்வாகித்தனர்.
ஊரோம் என்ற சொல் வேளாளர் குடியிருக்கும் ஊர்களை நிர்வாகித்தனர். நகரத்தோம் என்ற சொல் வணிகர்கள் குடியிருக்கும் நகரங்களை நிர்வாகித்தனர்.
நிசதி = தவறாது ஒவ்வொரு நாளும்
ஸ்ரீமஹாவ்ரதி=மகாவிரத சமயத்தைச்சார்ந்த சைவத்துறவியர்
ஸ்மரணர் = துறவியர்
ஆறுசமயத்துத்தவஸ்வி = சைவ சமயத்தில் இருந்த ஆறு உட்பிரிவுகளாகும். பண்டைய நூல்கள் கூறும் அகச் சமயம் ஆறு: சைவம், பாசுபதம், காளாமுகம், மஹாவிரதம், வாமம், பைரவம் என்று இந்த உட்பிரிவுகளைக் கூறுகிறார்கள்.
பந்மாகேஸ்வரக் கண்காணி = (பள்ளிப்படைக்) கோவிலில் நிவந்தங்களைக் கண்காணிக்கும் நிர்வாகிகள்.
தன்மம் = தருமம். தன்மத்தை தொடர்ந்து நிறைவேற்றுவதாக கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த பன்மாகேசுவரர் கண்காணித்து காப்பாற்றுவதாக  உறுதியளிக்கிறார்கள்.
காவிரிபாக்கத்து திருபன்றீஸ்வரத்துப் பிரதிவிடங்கக் கணப்பெருமக்கள் = காவிரிப்பாக்கத்து கோயில் பெருமக்கள்.

ஆதித்த சோழன் பிறந்த நட்சத்திரம் சதயம் ஆகும். எனவே சதய நட்சதிரத்து நாளிலும் ஒரு விழா எடுக்க வகை செய்யப்பட்டிருந்தது. கி.பி. 940 ஆம் ஆண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆதித்தன் மறைந்த கேட்டை (18 ஆவது நட்சத்திரம் முதல்) ஆதித்தன் பிறந்த சதயம் (24 ஆவது நட்சத்திரம் வரை) ஏழு நாட்கள். ஸ்ரீ கோதண்டராமீஸ்வரமாகிய ஆதித்தீஸ்வரத்து மூலவருக்கு புரட்டாசி மாதம் (தமிழ்) கேட்டை நட்சத்திரம் தொடங்கி  சதய நட்சத்திரம் வரை திருவிழா எடுப்பதற்கும் ஏழு நாட்களுக்கு உணவு அளிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியை முதலாம் பராந்தகனின் கல்வெட்டு பதிவு செய்துள்ளது. இக்கல்வெட்டு இந்த ஏழு நாள் விழாவை, தேவர்களின் தலைவனும், இடி மற்றும் மழையின் கடவுளுமான, இந்திரனுக்கு அர்ப்பணிக்குமாறு அறிவுறுத்துகிறது.

விளம்பி ஆண்டு புரட்டாசி மாதம் 1 ஆம் தேதி (17 – 9 – 2018) அன்று கேட்டை நட்சத்திர தினம் ஆகும். அதாவது 1078 ஆம் ஆண்டு நினைவு தினம். இன்று புரட்டாசி மாதம் 7 ஆம் தேதி (23 – 9 – 2018) அன்று சதய நட்சத்திர தினம் ஆகும். முதலாம் ஆதித்தனின் பிறந்தநாள் ஆகும்.

மகாவிரதி வாகிஸ்வர பட்டாரர் என்பவர் மேற்பர்வையிலிருந்த இக்கோவிலில் இந்திரவிழா எடுப்பதற்கான செலவினங்களுக்காக 105 கழஞ்சு (ஒரு கழஞ்சு 5.4 கிராம்) பொன்னையும் 4000 காடி (தூணி) நெல்லையும் வைப்பு நிதியாக (Deposit fund) கோவில் கருவூலத்தில் செலுத்தி அதில் வரும் பொலிசைக்காக (வட்டி) 1000 காடி நெல்லை கோவிலுக்கு அளிக்க வேண்டும்  என்பது ஏற்பாடு. இவ்வாறு வட்டியாகப் பெறப்பட்ட நெல்லிலிருந்து ஏழு நாள் விழாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேருக்கு உணவளிக்க வேண்டும் என்பது இக்கல்வெட்டு நடைமுறைப்படுத்திய செயல்முறை.

உணவளிக்கத் தகுதியான ஆயிரம்பேர் யார் யார்? பக்தர்களான பல சமயத்து அந்நூற்றவர் ஆயிரம் பேரில் 500 பேர் அனைத்து சமயங்களைச் சேர்ந்த அடியார்களாக இருக்கவேண்டும். ஸ்ரீமஹாவ்ரதிகளுள்ளிட்ட ஆறுசமயத்துத்தவஸ்விகளும் மகாவிரதிகள் உள்ளிட்ட ஆறு சமயத்துத் தபஸ்விகள் 200 பேர் இருக்க வேண்டும். சைவ சமயத்தில் இருந்த ஆறு உட்பிரிவுகளாகும். பண்டைய நூல்கள் கூறும் அகச் சமயம் ஆறு: சைவம், பாசுபதம், காளாமுகம், மஹாவிரதம், வாமம், பைரவம் என்று இந்த உட்பிரிவுகளைக் கூறுகிறார்கள். ஸ்மரணர் முன்நூற்றுவருமாக துறவு பூண்டஅந்தணர்கள் 300 பேர். இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு உருவான சொல் சமணம்.

இந்திர விழாவிற்காக போலிசையாகப் பெறப்பட்ட நெல்லில் இருந்து உண்பதற்கு இலை இடுவான், நீராட்டுவான், கலமிடும் குசவன், பூவிடும் மாலைக்காரன், விறகிடுவான் ஆகியோருக்கு நெல் அளந்து கொடுத்தனர். இவர்கள் மட்டுமின்றி இக்கோவிலில் இருந்த பாடசாலைக்குக் கூட ஒவ்வொரு ஆண்டும் நெல் வழங்கப்பட்டது. இக்கல்வெட்டு காட்டும் மிக முக்கியமான செய்தி இக்கோவிலில் ஒரு அரங்கம் இருந்துள்ளது. இந்திரவிழாவை முன்னிட்டு கூத்து, நாட்டியங்கள் மற்றும் நாடகங்கள் இவ்வரங்கில் நடத்தப்பட்டன. இங்கு கூத்து நிகழ்த்தியோருக்கும் பாடகர்களுக்கும் பலிசையிலிருந்து நெல் வழங்கப்பட்டது. அரங்கத்தில் ஏற்பட்ட பழுதினை வேண்டும்போது சரிசெய்வதற்கு நியமிக்கப்பட்ட தச்சனுக்கும் நெல் வழங்கப்பட்டது.

இந்தத் தன்மத்தை பள்ளிப்படைக் கோவிலில் இருந்த மகாவிரதிகளும், பந்மாகேஸ்வரக் கண்காணியும், காவிரிப்பாக்கத்து கோவில் பெருமக்களும் காத்துத் தருமாறு கல்வெட்டு அறிவுறுத்துகிறது.

இந்திர விழா

இந்திர விழா என்பது இந்திரனை சிறப்பித்துப் போற்றும் வண்ணம் தமிழகத்தில் எடுக்கப்பட்ட விழாவாகும். இந்திர வழிபாடும் இந்திரனுக்கு விழா எடுக்கும் வழக்கமும் சங்க காலத்திலேயே இருந்துள்ளதை சங்க இலக்கியமான ஐங்குறுநூறு குறிப்பிடுகிறது.”தூங்கெயிலெறிந்த தொடித்தோள் செம்பியன்” என்ற சோழ மன்னன் இந்திர விழாவைத் தொடங்கினான் என்றும் இந்தக் காதல் விழா தான் காமன் விழா என்றும் குறிப்பிடுவர். சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் இந்திர விழா மிகவும் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. மணிமேகலை விழாவறை காதையில் இந்திர விழா தொடங்கிய முறையை அறிந்து கொள்ள முடிகிறது. புகார் நகரில் இந்திர விழாவினை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் பௌர்ணமி நாளில் தொடங்கி ,இருபத்தெட்டு நாட்கள் சிறப்பாகக் கொண்டாடும் மரபு இருந்துள்ளது. மதுரையிலும் இந்திரவிழா, வில்விழா என்ற பெயரில் கொண்டாடப்பட்டதாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. “கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல் வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும் பங்குனி முயக்கத்துப் பனியர சியாண்டுளன்” (சிலப்பதிகாரம். மதுரை: ஊர்காண்: 110 – 111.) இந்தக் கல்வெட்டில் ஆதித்தனின் நினைவைப் போற்றும் வண்ணம், ஆதித்தீசுரத்து ஆழ்வாருக்கு புரட்டாசி மாதம் கேட்டையில் தொடங்கி சதயம் வரையிலான ஏழு நாட்களுக்கு இந்திர விழாவாகக் கொண்டாட அறிவுறுத்தியது   சற்று வியப்பாக உள்ளது.

Friday, 6 September 2019

SRIRANGAM,RAMANUJAR KOVIL







ஶ்ரீரங்கத்தில் 1000 -ஆண்டுகளாக பாதுகாக்க படும் பூத உடல்!

ஆதிசேஷனின் அவதாரம் 
என்றென்றும் நிலைத்திருக்கும்
இராமானுஜர்..

ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர் பூத உடல் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது.

இராமானுஜரின் பூதவுடல் கெடாமல் பாதுகாக்கப்பட்டு, இன்றளவும் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த பூத உடலுக்கு வருடத்திற்கு இரண்டு முறை மட்டும் பச்சைக் கற்பூரமும், குங்குமப்பூவும் கொண்டு அபிஷேகம் செய்து வருகிறார்கள். அமர்ந்த நிலையில் சற்றே பெரிய திருமேனியாக இராமானுஜரை இன்றும் நாம் ஶ்ரீரங்கத்தில் உடையவர் சந்நிதியில் தரிசிக்கலாம் (உடையவர் என்பது இராமானுஜரின் சிறப்புப் பெயர்).

இந்த அதிசய செய்தியை இந்துக்களிலேயே பலரும் அறிந்திருக்கவில்லை.


ஸ்ரீராமனுஜர் சன்னதி ஸ்ரீரங்கம் கோவிலில் இருப்பதே பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படியே ஸ்ரீராமனுஜர் சந்நதியை பார்ப்பவர்கள் ஸ்ரீராமானுஜரின் பூத உடல் என்று அறிவது இல்லை, சந்நதியில் உள்ளது கருங்கல் சிலை என்றே பலர் நினைத்து கடந்துப் போகிறார்கள்.

*தானான திருமேனி (இராமனுசர் பூதஉடல்) இராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தவுடன், அரங்கனுடைய வசந்த மண்டபத்திலேயே அவருடைய திருமேனியை (பூத உடலை) பிரதிஷ்டை செய்தார்கள்.

இராமானுஜர் தமது 120-ஆவது வயதில் (கி.பி. 1137), தாம் பிறந்த அதே பிங்கள வருடம் மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில், சனிக்கிழமை நண்பகலில், ஜீயர் மடத்தில் மரணம் (பகவத் சாயுஜ்யம்) அடைந்தார்.

அவருடைய சீடர்களான கந்தாடையாண்டான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், வடுகநம்பி முதலானோர் வேரறுந்த மரம் போல் விழுந்து கிடந்து துடித்தனர்.

அவரது உயிர் பிரிந்த உடனே:
தர்மோ நஷ்ட (தர்மத்திற்கே பெருத்த நஷ்டம்) என்று அசரீரி ஒலித்ததாம். அப்போது நடந்த நிகழ்வுகள் எல்லாம் அதிசயத்திலும் அதிசயமானது! என்பர்.

நம்பெருமாள் என்னும் அரங்கன் தான் உடுத்திக் களைந்த ஆடையையும், சூடிக்களைந்த துழாய் மலரினையும், எண்ணெய்க் கிண்ணத்தையும் தம் இறுதி மரியாதையாக ஒரு பொற்கிண்ணத்தில் இட்டு உத்தம நம்பி என்ற சீடர் மூலம் ஜீயர் மடத்திற்கு அனுப்பினாராம்.

உத்தம நம்பிகள் ஜீயர் மடத்தில் இருந்த சீடர்களுக்கு ஆறுதல் சொல்லி, அதன் பிறகு எண்ணெயை இராமானுசரின் திருமுடியில் தேய்த்துப் பின் அவர் திருவுடலை நீராட்டி, அரங்கன் உடுத்திக் களைந்த ஆடையையும் சூடிக்களைந்தத் தொடுத்த துழாய் மலரினையும் திருமேனியில் சாற்றினாராம்.

பின்பு எண்ணெய் மற்றும் ஸ்ரீ சூர்ணங்களும் பிரசாதமாக அங்கிருந்தோருக்கு வழங்கப்பட்டதாம். இதை வைணவ மொழியில் “பிரம்மமேத ஸம்ஸ்காரம்” என்கிறார்கள்.

இதன் பின்பு இராமானுஜரின் திருமேனி ஒரு வாகனத்தில் (திவ்ய விமானத்தில்) அமர்த்தப்பட்டு, இதன் முன்னின்று அவருடைய முக்கிய சீடர்களும், ஜீயர்களும் பரஹ்மவல்லி, ப்ருகுவல்லி, நாராயணானுவாகம் போன்ற மந்திரங்களை ஓதினராம்.

பல்லாயிரக்கணக்கான சீடர்கள், பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் புடை சூழ இராமானுஜர் திருமேனி தாங்கிய வாகனம் இறுதிப்பயண ஊர்வலத்தைத் தொடங்கியது. திருவரங்கப் பெருமாளரையர் தலைமை தாங்கி திருவாய்மொழியரையர், ஆப்பான், திருவழுந்தூரரையர், திருநறையூரரையர், அழகிய மணவாரரையர் முதலிய எழுநூறு திருவாய்மொழி ஓதும் அரையர்கள் திருவாய்மொழியினை ஓதியபடி பின் தொடர்ந்தனர்.

தொடர்ந்து ‘இராமானுஜர் நூற்றந்தாதி” ஓதியபடி ஶ்ரீரங்கத்து அமுதனார், பெரியகோவில் வள்ளலார் முதலியவர்கள் வாகனத்தின் பின் வந்தனர்.

ஸ்ரீரங்கத்தில் ஜீயர் மடத்திலிருந்து நகரின் நான்கு உத்திர வீதி, சித்திரை வீதிகளிலும் வாகனம் ஊர்ந்தது. மக்கள் கூட்டம் வீதியெங்கும் நிரம்பி வழிந்தது. பெண்கள் தங்கள் வீதிகளில் நீர் தெளித்துக் கோலமிட்டுக் கூடி நின்றனர். மக்கள் பூவும் பொரியும் கலந்து தூவினார்களாம். அரங்கன் கோவில் திருநடை மூடி, கரும்பும் குடமும் ஏந்தினராம். அடியார்கள் சாமரம் வீச, வானில் கருடன் வட்டமிட இராமானுஜர் இறுதி ஊர்வலம் திரும்ப கோவில் வாயிலை அடைந்தபோது
தரிஸனத்தில் எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளினார்! என்று அசரீரி மீண்டும் ஒலித்ததாம்.

தொடர்ந்து அரங்கன்

“இராமானுஜன் என்தன் மாநிதி
என்றும்
இராமனுஜன் என்தன் சேமவைப்பு”
என்றும் திருவாய் மலர்ந்தருளினாராம்! அரங்கன்.

அதாவது இராமானுஜர், எனது மிகப் பெரும் செல்வம்; எனது சேமநிதி! என அரங்கன் திருவாய் மலர்ந்தருளினார்.

நமது பணத்தை. நாம் வங்கியில் நிரந்தர சேமிப்பு வைப்பு நிதியாகப் பாதுகாப்பதைப் போல; அரங்கன், இராமரின் தம்பி இலட்சுமணரின் அவதாரமான இராமனுஜரை என்றென்றும் பாதுகாத்து வைத்திட அருள் செய்தார்.

அப்படியானால் பிற சிரஞ்ஜீவிகளைப் போல இவரையும் ஏன் என்றென்றும் உயிரோடிருக்கச் செய்யவில்லை?

என்றால், கலியுகம் அந்தப் பாக்கியத்தைப் பெறவில்லை! எனலாம். உயிர் பிரிந்து பூதவுடலானாலும் திருமேனி எப்போழுதும் அடையாதிருப்பதே இறைபக்தி மற்றும் இறை நம்பிக்கையற்றவர்கள் இதைக் கண்ணாரக் கண்டு, அறிவு பெற்றிட வேண்டும்! என்பது திருமாலின் திருவுள்ளமாக இருக்கலாம்.

எனவே இராமனுஜரின் பூத உடல் என்ற அந்த நிதி வெளியே எங்கும் போகலாகாது என்று அரங்கன் தன் திருக்கோவில் வளாகத்திலேயே (ஆவரணத்துக்குள்ளேயே) எவ்வாறு ஒரு அரசன் தன் பெண்டிரை தன் அந்தபுரத்திலே அடக்கி வைப்பானோ அதுபோல தன்னுடைய சந்நதிக்குள்ளேயே, (யதிஸம்ஸ்காரவிதியின் படி), பள்ளிப்படுத்தினர்! பெரியோர்கள்.
பல வருடங்களுக்கு முன் வைணவ மரபில், துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக அவர்களை திருப்பள்ளிப் படுத்துவார்கள் (புதைத்தல்). இராமானுசரின் பூதவுடலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் (முன்னாள் வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில்) திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி. 
இன்றும் நாம் இவருடைய பூத உடலை தரிசிக்கலாம் இவரின் திருமேனியில் தலைமுடி கைநகம் போன்றவற்றைக் கூட எளிதாகக் காண இயலும். ஸ்ரீரங்கத்தில் இராமானுஜரின் சந்நதியில் எழுந்தருளியுள்ள திருமேனிக்கு
தானான திருமேனி என்று பெயர்.

ஆதிசேஷனின் அவதாரமல்லவோ இராமானுஜர்! இலட்சுமணரின் மறுபிறவி அல்லவோ இராமனுஜர்,(இராம+ அனுஜர்
அனுஜ = தம்பி) அவரது திருமேனி. இன்றும் நிலைத்திருக்கத் தானே செய்யும்? 
ஆயிரம் ஆண்டுகளாக ஜீவித்திருக்கும் இராமானுஜர்...

Thursday, 29 March 2018

DMK PARTY KOONS,KUNDAAS SWALLOWED KOVIL PROPERTIES






DMK PARTY KOONS,KUNDAAS 
SWALLOWED KOVIL PROPERTIES





கோயில் சொத்துகளை எல்லாம் நாத்திகம் பேசும் திராவிடக் கட்சியினர் விழுங்கி வருகின்றனர். இந்து தர்மத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், அறநிலையத்துறையிடம் இருந்து கோயில்களை பிடுங்கி, சுதந்திரமான ஆன்மீகவாதிகள் அடங்கிய வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்” என்று இந்து முன்னணி கோரி வருகிறது.

மயிலை (சென்னை) கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கும்  இந்து விரோதிகளின் பட்டியலை அக்கோயிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 473 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். ஹிந்துக்கள் 471 பேரில் சில முதலியார்கள், நாடார்கள் தவிர ஆகப் பெரும்பான்மையினர்  அய்யர்-அய்யங்கார்களாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாடகை கொடுக்காத ப்ராடுகளின் பட்டியலில் முக்கியமானது பாரதிய வித்யா பவன். கதர் அணிந்த காக்கி டவுசர் பேர்வழியும்,  காந்தி கொலைக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றியவருமான கே.எம்.முன்ஷியால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் பாரதிய வித்யா பவன். இதன் முக்கியத் தூண்களில் ஒருவர் ராஜாஜி. கல்வியைப் பரப்புவது என்ற பெயரில் பார்ப்பனியத்தையும், சமஸ்கிருதத்தையும் பரப்பி வரும் இந்த ஆர்.எஸ்.எஸ். பினாமி நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் வாடகை பாக்கி 32 இலட்ச ரூபாய்.


அடுத்தது, மயிலாப்பூர் கிளப். ஜனவரி,1, 1903 அன்று தொடங்கப்பட்ட பெருந்தனக்காரர்களின் தனி உடைமை கிளப்பான இது,  3 அய்யர், 3 அய்யங்கார் மற்றும் ஒரு முதலியாரை உரிமையாளர்களாகக் கொண்டது. தற்போதைய இதன் தலைவர் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார். கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுகளுக்கு மேட்டுக்குடிக் குலக்கொழுந்துகளைத் தயார்படுத்தும் பயிற்சித் திடல், உறுப்பினர்களுக்குச் சீட்டாட்டம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஜிம், வட இந்தியதென் இந்திய உணவு விடுதிகள் மற்றும் 24 மணி நேர பார் போன்ற வசதிகள், சாஸ்திரி ஹால் என பல கிரவுண்டு கோயில் நிலத்தைக் குத்தகைக்கு வளைத்துப் போட்டிருக்கும் இந்த ஆன்மீக மெய்யன்பர்கள் கபாலிக்கு வைத்திருக்கும் குத்தகை பாக்கி 3.57 கோடி ரூபாய்.

‘தேசியத் தலைவர்’ எனப் ’பெத்த பேர்’ வாங்கிய தெலுங்கு பார்ப்பனரான நாகேஸ்வர ராவினால் ஆரம்பிக்கப்பட்டு, ஊருக்கெல்லாம் தலைவலி தைலம் தரும் அமிருதாஞ்சன்  நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் குத்தகைப் பாக்கி ரூ.6 கோடியே 45 இலட்சம்.

கல்விக்கும் ஒழுக்கத்துக்கும் பேர் போனதாக மெச்சிக் கொள்ளப்படுவது பி.எஸ். ஹைஸ்கூல் என்று அழைக்கப்படும்  பெண்ணாத்தூர் சுப்பிரமணிய அய்யர் மேல்நிலைப் பள்ளி. கோயிலுக்குச் சொந்தமான 76 கிரவுண்ட் நிலத்தை 1928-இல் குத்தகைக்கு எடுத்தது. பின்னர் குத்தகை ஒப்பந்தம் 1979-இல் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இன்று ஒரு கிரவுண்ட் நிலத்தின் சந்தை விலை ரூ.5 கோடிக்கும் மேலாகும். பல பிரபல உயரதிகாரிகளை உருவாக்கியதாகப் பீற்றிக்கொள்ளும் இந்தப்பள்ளி, 76 கிரவுண்டுகளுக்கு ஆண்டு குத்தகையாக ரூ. 1250 ஐ மட்டும் ஒரே ஒருமுறை தந்துவிட்டு, கபாலீசுவரரைக் கோர்ட்டுக்கு இழுத்து வாய்தாவுக்கு அலைய விட்டுக் கொண்டிருக்கிறது.

மயிலாப்பூரில் காமதேனு திரையரங்குக்கு எதிரே கபாலீசுவரருக்குச் சொந்தமான 25 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமித்திருப்பவர் பார்த்தசாரதி அய்யங்கார். இன்று அந்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல். 1901- இல் 99 வருடக் குத்தகையாக எடுத்த அய்யங்கார், இதனை உள்குத்தகைக்கு விட்டு, அது பல கை மாறி இன்று வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் எழுப்பப்பட்டு, 35 பேர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இப்படியே போகிறது பட்டியல். முதலை வாயில் சிக்கிய இந்தச் சொத்துகளை ஒவ்வொன்றாக மீட்பதற்கு நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள். பாரம்பரியமிக்க பெரிய மனிதர்களின் கிளப் என்று கூறப்படும் மயிலாப்பூர் கிளப்பின் வாசலில், “இது கபாலீசுவரர் கோயில் சொத்து” என்று போர்டு எழுதி வைத்திருக்கிறது இந்து அறநிலையத்துறை. அய்யர், அய்யங்கார்வாள்கள் இதையெல்லாம் பார்த்துக் கூச்சப்பட்டு சொத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவார்களா என்ன?

அற்ப வாடகை, குத்தகை பாக்கியைக்கூடக் கொடுக்காமல், அறநிலையத்துறையை இவர்கள் கோர்ட்டுக்கு இழுப்பதன் நோக்கமே கோயில் சொத்தை விழுங்குவதுதான். ‘வாரியம் அமைத்து விழுங்கவேண்டும்’ என்பது இந்து முன்னணியின் கோரிக்கை. விழுங்கியவர்களை வைத்து வாரியம் அமைக்கலாம் என்பது பாரதிய வித்யா பவனின் கருத்து போலும். படுத்திக்கினு போத்திக்கலாம். போத்திக்கினும் படுத்துக்கலாம் என்ற கதைதான்.



சிதம்பரம் நடராசர் கோயில் விசயத்தில் நடந்தது என்ன? கோயில் சொத்துகளை கொள்ளையிடும் தீட்சிதர்களை வெளியேற்றிக் கோயிலை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வைத்தன மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் மக்கள் கலை இலக்கியக் கழகமும். நடராசன் சொத்துகளை நடராச தீட்சிதர் என்று கையெழுத்துப் போட்டு விற்றிருப்பதற்கான சான்றுகளும், நகைத் திருட்டு தொடர்பாக தீட்சிதர்கள் மீது உள்ள கிரிமினல் வழக்குகளின் விவரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் விளைவாக சென்னை உயர் நீதிமன்றம்,கோயிலை அறநிலையத்துறையிடம் ஒப்படைத்துவிட்டது.

தீட்சிதர்களாகிய தங்களில் ஒருவர்தான் நடராசப் பெருமான் என்றும், எனவே கோயிலும் அதன் சொத்துகளும் தங்கள் ஆன்மீக உரிமை என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார்கள் தீட்சிதர்கள். சு.சாமியும் இந்து முன்னணிக் கும்பலும் தீட்சிதர்களுக்கு ஆதரவு. சிதம்பரம் கோயிலுக்கு எத்தனை ஆயிரம் ஏக்கர் நிலம், எத்தனை மனைகள், கட்டிடங்கள் இருந்தன, தீட்சிதர்கள் தின்றது போக இன்று மிச்சம் என்ன இருக்கிறது, எங்கே இருக்கிறது என்ற உண்மைகளைக் கண்டுபிடிப்பது, ஸ்விஸ் வங்கி கருப்புப் பணத்தைக் கண்டுபிடிப்பதை விடக் கடினமானது.

கோயில், மடங்களின் பேரில் இருந்த சொத்துகளை பார்ப்பன, ஆதிக்க சாதிக் கும்பல் தின்று கொழுத்ததை முடிவுக்குக் கொண்டுவர சர். டி.சதாசிவ அய்யர், பனகல் ராஜா ஆகியவர்கள் முயன்று 1927ஆம் வருடத்தில் இந்துமத தர்மபரிபாலன சட்டத்தை நிறைவேற்றினார்கள். அச்சட்டப்படி தர்மகர்த்தாக்கள் அடங்கிய வாரியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு, கோயில் சொத்துகள் நிர்வகிக்கப்பட்டன. இச்சட்டம் நிறைவேறுவதை சத்தியமூர்த்தி அய்யர் முதல் எம்.கே.டி. ஆச்சாரி வரை அனைத்துப் பார்ப்பனிய சக்திகளும் கடுமையாக எதிர்த்தனர். 1951-இல் அன்றைய தமிழக முதல்வரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், இந்து சமய அறநிலையத் துறை எனும் அரசுத்துறையை உருவாக்கும் சட்டத்தைக் கொண்டுவந்தார். அதற்காக அவரை சுதேசமித்திரன் போன்ற பார்ப்பனப் பத்திரிகைகள், ’வெளியே ஒரு கருப்புச்சட்டை ராமசாமி (பெரியார்),  உள்ளே ஒரு கதர்ச்சட்டை ராமசாமி’ என திட்டித் தீர்த்தன.

“1951க்கு முன்பு தர்மகர்த்தாக்கள் வேண்டுமென்றே நிலத் தீர்வையையோ அல்லது போர்டாருக்குச் செலுத்தவேண்டிய தொகையையோ செலுத்தாது வைத்து, கோவில் நிலங்களை ஏலத்துக்குக் கொண்டுவந்து தாங்களே தட்டிக்கொண்டு போயிருக்கிறார்கள்.” என்றும் “தஞ்சாவூர் ஜில்லாவில் வேதாரண்ய ஈஸ்வரர் தேவஸ்தானத்துக்கு 16,000 ஏக்கர் நிலம் கொண்ட 45 கிராமங்கள் சொந்தமாக இருக்கின்றன. இருந்தும்கூட, இதன் வருஷ வருமானம் இன்று ரூ.75,000 என்றுதான் காட்டப்படுகிறது. வட ஆற்காடு  ஜில்லாவில்  ஒரு கோவிலின் தர்ம சொத்துக்கள் பூராவுமே ஒரு ஜாகீரின் சொந்த சொத்தாக மாறிவிட்டது. தஞ்சாவூர் ஸ்வர்க்கபுரம் மடத்தில் சுமார் ரூ.15,000 ரொக்கம் கையாடல் செய்யப்பட்டு, 26 ஏக்கர் நிலம் பராதீனம் ஆகியிருக்கிறது. திருச்செங்கோட்டிலும் வேதாரண்யத்திலும் நகைகள் காணாமல் போயுள்ளன” என்றும் குறிப்பிட்டு, இந்து அறநிலையத் துறையின் தேவையை அன்று ஓமந்தூரார் வலியுறுத்தியுள்ளார்.

இன்று அறநிலையத்துறை இருக்கிறது. சொத்துகள்தான் இல்லை. மிகவும் அரிதாக சில அதிகாரிகள் இப்படிக் களவு போன கோயில் சொத்துகளின் பட்டியலை வெளியிடுகிறார்கள். ஒரு கபாலீசுவரர் கோயில் சொத்து விவகாரம் அரைகுறையாக வெளியே வந்திருக்கும்போதே, கொள்ளையின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் என்று தெரிகிறது. பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தில் 1951-இல் இருந்த பெரிய மடங்கள் 184. பெரிய கோவில்கள் 12,232. இவற்றிற்கு சுமார் 8 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்தன. பிரிக்கப்பட்ட பின் இவை 6 லட்சம் ஏக்கர்களாகின. அந்த நிலங்கள் மற்றும் சொத்துகள் யாரிடம் இருக்கின்றன என்ற விவரத்தை அறநிலையத்துறை வெளியிட வேண்டும். அந்த சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு மக்களின் உடைமையாக்கப்பட வேண்டும். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெருநகரங்களில் விழுங்கப்பட்டுள்ள கோயில் சொத்துக்கள் பல ஆயிரம் ஏக்கர் இருக்கும். அந்தக் கோயில் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, அவற்றில் வீடற்ற ஏழைகளைக் குடியேற்ற வேண்டும்.

தமது மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை  அனைத்தையும் தீர்த்துக் கொள்ளவும், ஊர் சொத்தைக் கொள்ளையடிக்கவும், கடவுளின் பெயரைக் கவசமாகப் பயன்படுத்திய கயவர்களின் வாரிசுதான் இந்து முன்னணி முதலான அமைப்புகள். “மயிலாப்பூர் கிளப்பையும் பாரதிய வித்யா பவனையும் இடித்துவிட்டு, கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை மீட்போம்” என்று ஒருவேளை அறநிலையத்துறை அறிவித்தால், இந்து முன்னணியினர் இரவோடு இரவாக கபாலி கோயிலையே இடித்து விட்டு, அதைச் ‘சர்ச்சைக்குரிய இடம்’ ஆக்கி விடுவார்கள். கபாலிக்குக் கோயில் சொந்தம் என்று நிரூபித்த பின்னர்தானே, கோயிலுக்கு கிளப் சொந்தம் என்று பேசவே முடியும்.

_____________________________________________

– புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012
Translate
Shared publicly•View activity