Showing posts with label DMK. Show all posts
Showing posts with label DMK. Show all posts

Tuesday, 8 June 2021

CHEATING ,FRAUD, ENCHROACMENT - DMK

 



CHEATING ,FRAUD, ENCHROACMENT - DMK


கயமை… கயவாளித்தனம்… கபளீகரம்…

BY SAVUKKU · 04/04/2014



கடமை… கண்ணியம்… கட்டுப்பாடு…  இந்த வார்த்தைகளை திமுகவின் அனைத்துக் கூட்டங்களிலும் கேட்கலாம். அறிஞர் அண்ணா சொல்லிய இந்த வார்த்தைகளைத்தான் தி.மு.க. தனது கொள்கையாக பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.


10150666_764271523585055_686913784_n


“நம்மிடம் பணமில்லை கட்சி நடத்த. ஆனாலும் வழிவகை இருக்கிறது.   பணம் சம்பாதிக்க முடியும் என்று நம்பிக்கை தோன்றுகிறது. நான் திரைப்படங்களுக்கு வசனம் எழுதி நிறைய சம்பாதித்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர். நான் சம்பாதித்தது உண்மையோ பொய்யோ, அது பற்றிக் கவலையின்றி அதை அப்படியே ஏற்று அந்த வழியை கடைபிடித்தேனும் பணம் சம்பாதித்துக் கட்சி நடத்தலாம் என்ற தைரியம் பிறக்கிறது.   பணம் என்பது ஒரு சாதனமே.  அது சகல காரியங்களுக்கும் அத்தியாவசியமான ஒன்றல்ல. இருந்தே தீரவேண்டும் எல்லாக் காரியங்களுக்கும் என்ற நிர்பந்தம் இல்லை.   நமது உழைப்பின் மூலம் உறுதியின் மூலம் எவ்வளவோ பணத்தேவையை நிறுத்தலாம், குறைக்கலாம்.”


18.09.1949 அன்று திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட அன்று அறிஞர் அண்ணா ஆற்றிய உரை இது.   இதுதான் அன்றைய தி.மு.க.வின் நிலை.   பணமில்லாமல்தான் கட்சி தொடங்கப்பட்டது.   வீதிதோறும் நாடகங்கள், அறிஞர் அண்ணாவின் புத்தகங்கள், கருணாநிதியின் புத்தகங்களைத் தெருத்தெருவாக விற்று கட்சி நடத்தும் நிலையில்தான் தி.மு.க. அன்று இருந்தது.


MK_Anna_Airport_14_1474649g



இன்று தி.மு.க. அறக்கட்டளை மற்றும் முரசொலி அறக்கட்டளையில் உள்ள சொத்துக்களின் மதிப்பு மட்டும் ஆறாயிரம் கோடிகளைத் தாண்டும் என்று சொல்கின்றனர் அந்தக் கட்சியினர். அறிவாலயம், அன்பகம் என்று சென்னை அண்ணாசாலையில் உள்ள அசையா சொத்துக்கள் மட்டும் பல நூறு கோடிகளைத் தாண்டும்.  தி.மு.க.வில் உள்ள மற்றப் பதவிகளுக்கு யாரை கொண்டுவந்தாலும்  பொருளாளர் பதவிக்கு மட்டும் மிக மிக நம்பிக்கையைப் பெற்றவர்களிடம் மட்டுமே ஒப்படைக்கப்படும்.  திமுகவின் பொருளாளராக இருந்தவர் கருணாநிதி. அவருக்குப் பிறகு எம்.ஜி.ஆர் பொருளாளராக நியமிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். பொருளாளராக இருந்தபோதுதான் கட்சிப் பணத்தை கருணாநிதி கையாடல் செய்ததையும், கணக்கில் வராமல் பல கோடி ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுக் கண்டித்தார். பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆரே. கணக்குக் கேட்டதால், கருணாநிதி அவரை வெளியேற்றும் வேலைகளில் இறங்கி வெற்றி கண்டார்.  எம்.ஜி.ஆருக்குப் பிறகு, எஸ்.ஜே. சாதிக் பாட்சா பொருளாளராக நியமிக்கப்பட்டார்.  அவர் ஒரு வாயில்லா பூச்சி.  அதன் பிறகு நீண்ட நாட்கள் அந்தப் பொறுப்பில் இருந்தவர் ஆற்காடு வீராச்சாமி.  ஆற்காடு வீராச்சாமி, மின்சார வாரியத்தில் தற்காலிக தட்டச்சராக இருந்தவர். கூடுதல் வேலையாக, சென்னையில் இருந்த ஒரு காவல் நிலையத்திற்கும் டைப்பிஸ்டு வேலை பார்த்துக் கொடுத்து,  அவர்கள் வாங்கித் தரும் உணவை சாப்பிட்டு, அங்கேயே படுத்துக் கொள்வார். அப்படிப்பட்டவர்,    கருணாநிதியோடு நெருக்கமானதன் பின்னணி இங்கே எழுத முடியாத ரகம். அவரைத்தான் தி.மு.க.வில் நீண்ட நாட்களாக பொருளாளராக வைத்திருந்தார்கள். ஆற்காடு வீராச்சாமிக்குப் பிறகு பொருளாளரானவர் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின்.


இந்தியாவிலேயே, கட்சியின் சொத்துக்களை நிர்வகிப்பதற்காக, சொத்துப் பாதுகாப்புக் குழு, சொத்துத் தணிக்கை குழு என்று வைத்திருக்கும் ஒரே கட்சி தி.மு.க.தான்.  தமிழகம் முழுக்க 20 மாவட்டங்களில் திமுக அறக்கட்டளையின் சார்பில் வாங்கிப் போடப்பட்ட ஏராளமான நிலங்களும், கட்டிடங்களும், வணிக வளாகங்களும் இருக்கின்றன.   இந்த அறக்கட்டளையை ஸ்டாலின் முழுமையாகக் கைப்பற்றி விட்டார்.  ஸ்டாலின் ஆதரவாளர்களான கல்யாண சுந்தரம் போன்றோர் அறக்கட்டளையை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்டாலினின் மகன் உதயநிதி தற்போது அறக்கட்டளையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார்.


மு.க.அழகிரிக்கும் ஸ்டாலினுக்குமான மோதல் அரசியல் கொள்கை கோட்பாடுகள் குறித்ததல்ல. அறக்கட்டளை சொத்துக்களை பங்கு போட்டுக் கொள்வது குறித்ததே.   தி.மு.க. நமது குடும்பச் சொத்து. நானும், கருணாநிதியின் மகன்தானே.  ஒரு பிள்ளைக்கு மட்டும் அந்த சொத்து போனால், என்னுடைய பங்கு எங்கே? என்பது மட்டும்தான் அழகிரியின் கோபத்துக்குக் காரணம்.   நிதியே இல்லாமல் வீதிகளில் கையேந்தி வளர்ந்த கட்சிக்கு இன்று ஆயிரக்கணக்கான கோடிகளில் சொத்துக்கள்.


1998ம் ஆண்டு முதல், தொடர்ந்து மத்திய அரசில் திமுக அங்கம் வகித்து வருகிறது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக, பிஜேபி மற்றும் காஙகிரஸ் கட்சிகள் சார்பில் மத்தியில் அமைந்த அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் வகித்துள்ளது.


கருணாநிதி 2014-ம் ஆண்டின் முதல் தேர்தல் பொதுக்கூட்டத்தில், கருணாநிதி இவ்வாறு பேசினார் “இன்றைக்கு மதச்சார்பற்ற ஒரு அரசு, மதவெறியில்லாத ஒரு இயக்கம் காண வேண்டும் என்ற துடிப்போடு நாங்கள் அவர் வழி நின்று நடத்தி வருகின்ற இந்த இயக்கத்திற்குப் பெயர்தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகும்”


திடீரென்று மதச்சார்பு என்ற அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறது தி.மு.க. பிஜேபியின் மீதும், மோடியின் மீதும் இன்றளவும் மறையாமல் இருக்கும் குற்றச்சாட்டு குஜராத் கலவரம்.  அந்தக் கலவரத்தின் போது, “அது அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை”  என்று கூசாமல் பேசியவர்தான் இந்தக் கருணாநிதி.


தன்னுடைய மற்றும் தன் குடும்பத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, எந்த அரிதாரமும் பூசிக் கொள்ள சற்றும் தயங்காதவர்தான் இந்தக் கருணாநிதி. திடீரென்று பி.ஜே.பி. மதவாதக் கட்சியாகத் தோன்றுகிறது கருணாநிதிக்கு. 1998-ல் பி.ஜே.பி.யோடு கூட்டணி சேர்வதற்கு முன்பாக, பிஜேபி குறித்து கருத்துக் கூறிய கருணாநிதி, நாலு பண்டாரங்கள் சேர்ந்து தொடங்கிய கட்சி என்று பி.ஜே.பி.யை வர்ணித்தவர், அதே கட்சியின் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தபோது, அந்த அமைச்சரவையில் இணைந்து மத்திய அரசில் முக்கிய பதவிகளைப் பெற்றபோதுதான், அது அள்ளித்தரும் அட்சயப்பாத்திரம் என்பதை கருணாநிதி உணர்ந்தார்.



NARENDRA_MODI_CM_1772475f


2004-ல் தேர்தல் நெருங்கும் சமயத்தில் மதவாதம் என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்தார் கருணாநிதி. கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், அணி மாறி காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த கருணாநிதி, மத்திய அரசில் பசையுள்ள அமைச்சரவைகளைப் பெற்று, 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை கோடிகளை வாரிக் குவித்தார்.  2007-ம் ஆண்டில், கேடி சகோதரர்களோடு ஏற்பட்ட பிணக்குக்குப் பிறகு, ஆ.ராசாவை தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக ஆக்கினார்.


ஆ.ராசா, தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அலைக்கற்றை ஊழலுக்காக முதல் தவணையாக பெற்று வழங்கிய அந்த மிகப்பெரிய தொகையைப் பார்த்ததும் கருணாநிதிக்கு மாறன்களின் மீது மிகப்பெரிய கோபம் ஏற்பட்டது. இத்தனை தொகை அவனுக்கும் வந்திருக்குமே… மொத்தத்தையும் அவனே ஆட்டையைப் போட்டுவிட்டானே. ஆனால், இவன் நம்மிடம் வந்து ஒப்படைத்துவிட்டானே என்று நினைத்து ஆ.ராசாவை உச்சி முகர்ந்தார்.


அதற்குப் பிறகு நடந்த அலைக்கற்றை ஊழல் விவகாரம் வெளிவந்ததும், ஆ.ராசா மற்றும் கனிமொழியின் கைதுகளும் நாடறிந்தது. மீண்டும் அது குறித்து விளக்க வேண்டியதில்லை.    ஆ.ராசா செய்த ஊழல்கள் கருணாநிதிக்கு தெரியுமா? தெரியாதா? என்ற சந்தேகத்திற்கு விடையளித்தது ஜாபர் சேட்டின் டேப்புகள்.   ஒவ்வொரு உரையாடலிலும், ஜாபர் சேட் “தலைவரிடம் சொல்லி விடுங்கள், நான் தலைவரிடம் சொல்லி விட்டேன்” என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார். கருணாநிதியின் கண்ணசைவிலேயே ஒவ்வொரு ஊழலும் நடைபெற்றது என்பதை அந்த ஒலிநாடாக்கள் தெள்ளத்தெளிவாக நிரூபித்தன.


மத்திய அரசில் இத்தனை ஆண்டுகளாக அங்கம் வகித்தது எதற்காக என்பதற்கு, அந்த ஒலிநாடாக்கள் ஒரு சிறு உதாரணம்.  நீரா ராடியா உரையாடல்களில், அவர் குறிப்பாக ஒரு விஷயத்தைச் சொல்லுவார்.  2009-அமைச்சரவை நியமனத்தின் போது, பிரதமர் டி.ஆர்.பாலு மட்டும் வேண்டவே வேண்டாம் என்று கூறி விட்டார் என்று சொல்லுவார்.   பக்கத்தில் இடியே விழுந்தாலும் கவலையே படாமல், எருமை மாடு போலவே இருக்கும் மன்மோகன் சிங்கே டி.ஆர்.பாலு வேண்டவே வேண்டாம் என்று கூறுகிறார் என்றால் எப்படிப்பட்ட ஊழல் பேர்வழியாக டி.ஆர்.பாலு இருந்திருப்பார் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.  சேதுக்கால்வாய் தொடக்கப் பணிகளின் போது, தோண்டும் வேலைகளில் மட்டும்  1500 கோடி ரூபாயை டி.ஆர்.பாலு அபகரித்தார் என்கின்றன தகவல்கள். இது தவிரவும், கப்பல் போக்குவரத்துத் துறை மற்றும் தரை வழிப்போக்குவரத்துத் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த டி.ஆர்.பாலு பல கோடிகளை சுருட்டியுள்ளார் என்பது மன்மோகனுக்குத் தெரியும்.  டி.ஆர்.பாலுவை மீண்டும் அமைச்சராக்க வேண்டும் என்று கருணாநிதியும் பிடிவாதம் பிடிக்காததற்கு காரணம், அடிக்கும் தொகையில் டி.ஆர்.பாலு கருணாநிதிக்கு பங்கு தரமாட்டார் என்பதே.  அனைத்தையும் அவரே வைத்துக் கொள்வார். இதனால்தான் 2009-ஆம் ஆண்டு டி.ஆர்.பாலு அமைச்சராவதில் கருணாநிதி பெரிய அளவில் முனைப்பு காட்டவில்லை.  ஆனால், ஆ.ராசா மீண்டும் அமைச்சராக வேண்டும் என்றும், பெட்ரோமாக்ஸ் லைட்டான தொலைத்தொடர்புத் துறையேதான் வேண்டும் என்றும் கேட்டுப் பெற்றதன் பின்னணியில், ஏற்கனவே திருடித் தின்றதன் சுவையே காரணம்.


ஆனால், மத்திய கணக்காயரின் அறிக்கை, ராசா மற்றும் கருணாநிதியின் கனவுகளை தகர்த்தது.  அதன் பிறகு ராசா கைது செய்யப்பட்டபோது, பார்ப்பன ஊடகங்களின் சதி என்றார் கருணாநிதி.  2ஜி ஊழலுக்கு சாதியப் பரிமாணத்தை அளித்தார்.  ராசா தலித் என்பதால் ஊடகங்கள் அவரை குறிவைத்துத் தாக்குகின்றன என்றார். என்.சீனிவாசன் என்ற பார்ப்பனரோடு தொழில் ஒப்பந்தம் செய்து கொண்டு, அவரிடம் 60 கோடி ரூபாயை வாங்கி, கலைஞர் டிவிக்காக வாங்கிய 200 கோடி ரூபாயை அடைத்த கருணாநிதி, மீண்டும் பார்ப்பன எதிர்ப்பு என்ற அஸ்திரத்தை கையில் எடுத்தார். பார்ப்பனர்கள் அனைவரும் சேர்ந்து, அப்பாவி ஆ.ராசாவை சிக்கவைக்க பெரும் சதிச்செயலில் ஈடுபடுகிறார்கள் என்ற பிம்பத்தைக் கட்ட முயன்றார்.   அதில் அவர் வெற்றி பெற்றாரோ இல்லையோ ஆனால் ராசா சிறை சென்றார்.


311951



விசாரணை ராசாவோடு முடியும் என்று மகிழ்ந்திருந்த கருணாநிதிக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது கலைஞர் டிவிக்கு லஞ்சமாக வாங்கிய 200 கோடியையும் சிபிஐ விசாரணை வளையத்தில் கொண்டு வந்தது. பதறிப்போனார் கருணாநிதி.   200 கோடி பணம் வாங்கிய விவகாரம் தொடர்பான கூட்டத்தில், பங்கெடுத்தது தயாளு அம்மாள்தான் என்பது நன்றாகத் தெரிந்தும், கைது செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் கனிமொழியை பெயர் கொடுக்கச் சொன்னார்.   ஆனால் கனிமொழி கைது செய்யப்பட்டபோது துடித்துப் போனார் கருணாநிதி.  கனிமொழி சிறையில் இருந்தவரை, டெல்லியை சுற்றிச் சுற்றி வந்தார்.  ஆனால் ஆறு மாதங்கள் வரை அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை.  கனிமொழியின் ஜாமீன் மனுவுக்காக வாதாடிய ராம் ஜெத்மலானி, 2ஜி ஊழலில் அனைத்துத் தவறுகளையும் செய்தது ஆ.ராசாதான். கனிமொழி எந்தத் தவறும் செய்யவில்லை என்று வாதாடியபோதுதான் கருணாநிதியின் அசல் முகம் தெரியவந்தது.  தன் மகளுக்காகவும், குடும்பத்தினருக்காகவும், எந்த நிலைப்பாட்டையும் எடுக்க கருணாநிதி தயங்க மாட்டார் என்பதை இந்த சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியது.


2009ம் ஆண்டு, நடந்த இறுதி ஈழ யுத்தத்தில் கருணாநிதியும், திமுகவும் இழைத்த துரோகங்களையும், உண்ணாவிரத நாடகங்களையும் பற்றி சவுக்கு தளத்தில் பக்கம் பக்கமாக எழுதியாயிற்று.   அதைப் பற்றி மீண்டும் குறிப்பிட விரும்பவில்லை.


திமுகவின் ஊழல்களை பட்டியலிட்டால், பக்கங்கள் போதாது. கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலம் முதலாக, இன்று வரை, அவரின் மறுபெயரே ஊழல்தான்.   இப்படி கூச்சநாச்சமில்லாமல் ஊழலில் திமுகவும் அதன் அமைச்சர்களும் ஊறிப்போனதன் காரணம், கருணாநிதி, தலைமைப் பொறுப்பேற்ற நாள் முதலாகவே, திமுகவை ரிலையன்ஸ் நிறுவனம் போலவே நடத்தினார்.  திருபாய் அம்பானி தொடங்கிய ரிலையன்ஸ் நிறுவனத்தை பங்கு போட்டுக் கொள்ள அனில் அம்பானியும், முகேஷ் அம்பானியும் சண்டை போட்டுக் கொண்டது போலத்தான் இன்று திமுகவில் அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் சண்டை நடந்து கொண்டிருக்கிறது.  கருணாநிதி திமுகவை ஒரு தனியார் நிறுவனத்தைப் போலவே நடத்திக் கொண்டிருக்கிறார்.  அதன் காரணமாகத்தான் திமுகவில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரும், எப்படி சம்பாதிப்பது என்ற ஒற்றை நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


மாநாடுகள் நடத்துவதே நிதி வசூலுக்காக மட்டுமே என்பதை உருவாக்கியது திமுகதான்.   சமீபத்தில் நடந்த திருச்சி மாநாட்டில் கூட, கோடிக்கணக்கில் நிதி வசூல் செய்து கருணாநிதியிடம் வழங்கப்பட்டது.  இப்படி நிதிகள் கோடிக்கணக்கில் வசூல் செய்யப்பட்டாலும், தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கையில், 10 கோடி செலவு செய்ய முடியுமா என்பதை உறுதி செய்த பிறகே சீட் வழங்கப்படுகிறது.  வசூல் செய்து தரப்படும் தேர்தல் நிதி, எப்படி செலவு செய்யப்படுகிறது என்பது குறித்து எந்த விதமான தகவல்களும் வெளியிடப்படுவதில்லை. வசூல் செய்யப்படும் நிதிகள், திமுக அறக்கட்டளை மற்றும் முரசொலி அறக்கட்டளையில் முதலீடு செய்யப்பட்டு, அந்த அறக்கட்டளைகளின் மீது, கோழி அடைக்காப்பதைப் போல ஸ்டாலின் அமர்ந்து கொண்டுள்ளார்.


சரி. ஊழலை விடுங்கள்.   தமிழக உரிமைகளுக்காகாவது, திமுக கடந்த 15 ஆண்டுகளாக ஏதாவது செய்திருக்கிறதா என்று பார்த்தால், காவிரி நடுவர் ஆணையத்தின் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது முதல், கச்சத்தீவுக்காக வழக்கு தொடுப்பது வரை எல்லாவற்றையும் செய்தது ஜெயலலிதாதான்.   தமிழ்… தமிழ்… என்று பசப்பு வார்த்தைகளைப் பேசிய கருணாநிதி, தமிழர்களுக்கும் தமிழினத்துக்கும் இழைத்தது வெறும் துரோகமே தவிர வேறு அல்ல.


திமுக தொடக்க விழாவில் பேசிய அண்ணா, திமுகவின் நோக்கத்தை இவ்வாறு குறிப்பிட்டார் “திராவிடர் கழகமாகட்டும் – திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும். படை வரிசை வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான். கோட்பாடு ஒன்றுதான்.  திட்டமும் வேறு அல்ல.  படைவரிசை இரண்டுபட்டு விட்டது என்று எக்காளமிடும் வைதீகபுரிக்கும், வடநாட்டு ஏகாதிபத்யத்துக்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும்.  இரு கழகங்களும் இரு திக்குகளிலுமிருந்து வடநாட்டு ஏகாதிபத்தியத்தை ஒழித்து, வைதீகக் காட்டை அழித்து சமதர்ம பூங்காவை திராவிடத்தை செழிக்கச்செய்தல் வேண்டும்.  அதிலே எந்த கழகம் பூங்காவை அமைத்தாலும் அதில் பூக்கும் பூக்கள், காய்கள், கனிகள், திராவிடத்தின் எழுச்சியை மலர்ச்சியைத் தான் குறிக்கும்.  இரு பூங்கக்களும் தேவை. ஒன்றோடொன்று பகைக்கத் தேவையில்லை.  அவசியமும் இல்லை.  எது புஷ்பித்தாலும் மாலையாகப் போவது திராவிடத்துக்குத்தான் என்ற எண்ணம் வேண்டும்.”


இந்தக் கொள்கைகளுடனா இன்றைய திமுக இருக்கிறது?


2006 முதல் 2011 வரை ஆட்சியில் இருந்த திமுகவின் முக்கிய பிரமுகர்கள் எத்தனை பேரின் நிலங்களை அபகரித்தார்கள் ?   எத்தனை கோடிகள் மதிப்பிலான நிலங்கள் அபகரிக்கப்பட்டன ? இவரின் அமைச்சரவை சகாக்கள் அடித்த கொள்ளைகளுக்கு அளவு இருந்ததா ?   ஆனால், அப்படி கொள்ளையடித்த அமைச்சர்களிடம் தானே கருணாநிதி கூச்சமில்லாமல் நிதி பெறுகிறார் ?


இன்று பத்திரிக்கை சுதந்திரம் பற்றிப் பேசும் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் பத்திரிகைகளை எப்படியெல்லாம் மிரட்டி வைத்திருந்தார்? விளம்பரங்கள் என்ற எலும்புத்துண்டுகளைப்போட்டு, பத்திரிக்கை முதலாளிகளை வளைக்கும் தந்திரத்தை, கருணாநிதிதான் ஜெயலலிதாவுக்கும் அறிமுகப்படுத்தியவர்?  அவர் பத்திரிகை சுதந்திரத்தைப் பற்றிப் பேசலாமா ?   அரசு நிர்வாகமும், அதிகாரிகளும், எப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்கள் கருணாநிதியின் ஆட்சியில்?


ஜெயலலிதாவின் நீண்ட சொத்துக்களை இன்று பட்டியலிடும் கருணாநிதி, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் ஆ.ராசாவையும், தயாநிதி மாறனையும் தேர்தலில் போட்டியிடாமல் நிறுத்தி வைத்தாரா என்ன? சிறை சென்று வெளி வந்த கனிமொழியைத்தானே எம்.பி., ஆக்கினார்?  கருணாநிதி இப்படியெல்லாம் நடந்து கொள்வதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்?   இந்த மக்களை நான் அறுபது ஆண்டுகளாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இவர்கள் முட்டாள்கள். மீண்டும் மீண்டும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற இறுமாப்புத்தானே?


2014-ன் முதல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி “என்னைப் பொறுத்தவரையில் எனக்குக் கொள்கை தான் முக்கியம், குழந்தை குட்டிகள் அல்ல.


நான் அரசியலுக்கு வந்து ஏறத்தாழ 70 ஆண்டுகள் கடந்து விட்டன.


இப்போது எனக்கு வயது 90 என்றால், இன்னும் எத்தனை ஆண்டு காலம் வாழப் போகிறேன் என்று எனக்குக் கவலை இல்லை. ஆனால் மிச்சம் இருக்கின்ற இந்த ஆண்டுகளில் தமிழர்களுக்கு நான் என்ன செய்தேன்? தமிழ் மக்களுக்கு நான் என்ன செய்தேன்? என்பது தான் முக்கியம். அதைச் செய்து விட்டுத் தான் நான் கண் மூடுவேன். அதுவரையிலே காரியம் ஆற்றுவேன்.”


என்று பேசினார். குழந்தை குட்டிகள் கருணாநிதிக்கு முக்கியம் இல்லையாம். இதை யாராவது நம்புவார்களா?  அப்படியா நடந்து கொண்டிருக்கிறார்?  திமுகவில் எத்தனையோ முன்னணித்  தலைவர்கள் இருந்தும், இன்று தலைவர் பொறுப்புக்கு வந்துள்ளவர் ஸ்டாலின்தானே.   காங்கிரஸின் கையிலும் காலிலும் விழுந்து, திருச்சி சிவாவையா எம்.பியாக்கினார்?  கனிமொழியைத்தானே   ஆக்கினார்?  மகன், மகள், பேரன், பேத்தி, மருமகன் என்று திமுகவையும், ஆட்சி வந்தால் அதிகாரத்திலும் இருப்பது கருணாநிதியின் குடும்பத்தினர்தானே…?


திராவிடம், இனம், மொழி, பார்ப்பன எதிர்ப்பு என்ற புளித்துப் போன வார்த்தைகளால், தமிழகத்தைக் கொள்ளையடித்ததைத் தவிர கருணாநிதி கும்பல் செய்தது வேறு எதுவுமே அல்ல.


ஸ்டாலின் மாற்றத்தைக் கொண்டு வருவார் என்று திமுகவில் சிலர் வாதாடக் கூடும்.  சொந்த தங்கையின் வளர்ச்சியைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் அவருக்கு எதிராக அரசியல் செய்து அவரை ஒழித்துக் கட்ட முயற்சிப்பவர்தான் ஸ்டாலின்.  2ஜி ஊழலில் வந்த பணத்தில் பெரிய பங்கை பெற்றவர் ஸ்டாலின்தான்.  ஆனால், அந்த ஊழல் குறித்து எதுவுமே தெரியாதது போல இன்று நடந்து கொள்கிறார்.  இந்தத் தேர்தலில் ஸ்டாலின் தேர்ந்தெடுத்த 35 திமுக வேட்பாளர்களில் ஓரிருவரைத் தவிர மீதம் உள்ள எல்லோரிடமும் பணத்தைப் பெற்றுக் கொண்டே இடத்தை ஒதுக்கியிருக்கிறார் ஸ்டாலின். இதிலிருந்தே அவர் எப்படிப்பட்ட கடைந்தெடுத்த ஊழல் பேர்வழி என்பதை உணர்த்து கொள்ளலாம்.  கட்சியில் மூத்தவர்களுக்கோ, கட்சிக்காக உழைத்தவர்களுக்கோ இடமில்லை. பணமிருப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என்பதை அப்பட்டமாக உணர்த்தியுள்ளார் ஸ்டாலின். இவரும் கருணாநிதியின் வழித்தோன்றல்தானே…?


இன அழிப்புப் போர் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தபோது, அந்தப் போரை பின்னின்று நடத்திய காங்கிரஸ் கட்சிக்கு முட்டுக் கொடுத்து தாங்கிப் பிடித்த கருணாநிதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் என்ன பேசினார் ?


“காங்கிரஸ் கட்சி இன்றைக்கு அதல பாதாளத்திலே விழுந்து கிடக்கிறது என்றால் அதற்கு என்ன காரணம்? ஒரு மனிதனுக்கு அவன் நல்லமுறையிலே வாழ வேண்டுமேயானால் நன்றியுணர்வு இருக்க வேண்டும். அந்த நன்றி உணர்வு இல்லாமல் கடந்த காலத்திலே தங்களை கைதூக்கி விட்டவர்கள் யார் என்பதையெல்லாம் எண்ணி பார்க்காமல் திராவிட முன்னேற்றக் கழகத்தையும், திராவிட முன்னேற்றக்  கழகத்தின் தோழர்களையும் செயல்வீரர்களையும் அவர்கள் படுத்தியபாட்டுக்கு அனுபவிக்கிறார்கள்.


என்னதான் அனுபவித்தாலும் அவர்களுக்கு ஒன்று சொல்லுவேன்,  இன்னமும் சொல்லுவேன், நம்பிக்கையோடு சொல்லுவேன், இதே காங்கிரஸ் காரர்கள் நாளைக்கு மனம் வருந்தி நாங்கள் இந்த மதச்சார்பற்ற நிலைக்கு மீண்டும் திரும்புவோம், நாங்கள் மத வெறியர்களை ஆதரிக்க மாட்டோம் என்று சொல்வார்களேயானால்; என்று முன் வருவார்களேயானால்; அவர்களுக்கு போனால் போகிறது என்று திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களை ஆதரிக்கும்.


எதற்கு? ஆதரித்து ஓட்டு போட அல்ல. அவர்களுக்கு வந்த தீங்குகளை மாற்றி அமைக்க; அவர்களுக்கு வந்த தீமைகளை உடைத்து நொறுக்க; அவர்களை மன்னித்து, அவர்களை பொறுத்துக்கொண்டு இதுவரையிலே அவர்கள் செய்த காரியங்களையெல்லாம் எண்ணிப்பாராமல்; அவர்களுக்கு பொது மன்னிப்பு தருவது என்ற முறையிலே”


காங்கிரஸ் கட்சிக்கு நன்றி இல்லையாம்!!! ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்தவர்களை கைது செய்ததைத்தான் நன்றி கெட்ட செயல் என்கிறார் கருணாநிதி.  அப்போதும் நான் காங்கிரஸ் கட்சியோடு சேர மாட்டேன் என்று சொல்லவில்லை?  காங்கிரஸ் கட்சி தனது மதவாதப் போக்கை விட்டால், ஆதரவு கொடுப்பது பற்றி பரிசீலிப்பாராம்.  “அம்பாள் என்றைக்கடா பேசினாள் ?”   என்ற கருணாநிதியின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது.  காங்கிரஸ் என்று தங்களை மதவாதக் கட்சி என்று அழைத்துக் கொண்டார்கள் ?


பொய் புரட்டு,பசப்பு,அயோக்கியத்தனம்,மோசடி என்று தமிழில் உள்ள அத்தனை வார்த்தைகளும் கருணாநிதிக்கு முழுமையாக பொருந்தும்.


அறிஞர் அண்ணா சொன்ன கடமை… கண்ணியம்… கட்டுப்பாடு… ஆகியவை மறந்து போய், இன்று திமுக கடைபிடிக்கும் ஒரே கொள்கை கயமை… கயவாளித்தனம்… கபளீகரம்… மட்டுமே.


இவர்களையா மீண்டும் தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்துக்கு அனுப்பப் போகிறீர்கள்?


 

Friday, 26 February 2021

DMK AND ABOLISION OF HINDUS THROUGH SUPPORTING CHRISTIANITY AND MUSLIMS

 DMK AND ABOLISION OF HINDUS THROUGH

SUPPORTING CHRISTIANITY AND MUSLIMS



இந்து மதத்தை அழிக்கும் ஒப்பந்தம் 1967-இல் திமுகவிற்குத் தரப்பட்டது.

இதற்காகவே திரு.அண்ணாதுரை, கருணாநிதி 1967-இல் வாட்டிகன் சென்று வந்தனர்.

அன்னிய கைகூலியாகிய திமுகவினர்  தமிழகத்தில்  முதல் கட்ட நடவடிக்கையாக இந்து மதத்தை அழிக்க   வாடிகன் போப்பாண்டவருடன் போடப்பட்ட ஒப்பந்தம்.

அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 

1) கோவிலில் ஓதுவார்கள் 

(தேவாரம், திருவாசகம் படிப்பவர்கள், ஒதுபவர்கள்) 

பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

2)  மணியக்காரர்களாக இருந்த 

முக்கியமாக கணக்கப் பிள்ளை, பிராமணர், கொங்குவேளாளக் கவுண்டர், முதலியார் உள்ளிட்டோர் பணியிலிருந்து

நீக்கப்பட்டனர்.

ஏன் என்றால், இவர்களுக்குக் கோவில் நிலங்கள், தானம் பெறப்பட்ட நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், அதில் உள்ள மரங்கள், விளைச்சல், வருவாய் குறித்த எல்லாம்  ஞாபகத்தில் இருக்கும். 

இவற்றைத் தங்களது வாரிசுகளுக்கும் சொல்லிவிட்டுச் சென்றனர்.

காலை, மாலையில் நடக்கும் போதே நோட்டம் இடுவார்கள், யாரும் இடத்தை அபகரிக்கிறார்களா என்று. 

இந்த மணியக்காரர்களை விரட்டினால் தானே ஏமாற்றுக்காரர்கள், கோயில் நிலத்தைப் பட்டா போட முடியும்?இவர்களை விரட்டிய பின்பு தான் கோயில் நிலங்களை பட்டா போட்டு அபகரித்தனர்.

3) எல்லோரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற பிரச்சனையைக் கிளப்பிவிட்டால், இதன் மூலம் குழப்பம் ஏற்பட்டு, கோவிலில் கும்பல் / கூட்டம் வருவது குறையும்.

4) இந்துக் கோவில்களை மட்டும் அரசுடமைப்படுத்தி, இந்து சமய அறநிலையத்துறை என நாடகம் ஆடி, அரசுப் பணி என்ற பெயரில், இந்து மத நம்பிக்கை இல்லாத கிறிஸ்தவர்களையும், கடவுள் நம்பிக்கை அறவே இல்லாத திராவிடர் கழகம், திமுக., கட்சிக்காரர்களையும் நியமித்து, ஒரு பக்கம் இந்து மதத்தைச் சீரழிப்பது. 

இன்னொரு பக்கம் திமுக-விற்கு நிரந்தர கிறிஸ்தவ வாக்கு வங்கியை உண்டாக்கியது.

5) கோவில் சிறப்பு நுழைவுச் சீட்டு என்று போட்டு, பக்திக்கு உள்ள இடத்தைக் கேளிக்கை இடமாக மாற்றியது.

6) கோயில் ஆகம விதிமுறைகளுக்கு எதிராக, கோயிலுக்கு உள்ளேயே கடைகள், விடுதிகள், கட்டணக் கழிப்பறைகளை ஏற்படுத்தி, கொள்ளையர்கள் சம்பாதிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தது.

7.லட்சக்கணக்கான ஏக்கர் கோயில் மானிய நிலங்களை போலியாக பட்டா போட்டு அபகரித்தது.

இப்படி, அமைதியைத் தேடி ஆன்மீகக் காரியங்களுக்காக பக்தர்கள் வரும் கோயில்களின் நிலைமாறி, அவற்றை வர்த்தக மையங்களாக மாற்றியது திராவிட  திமுக., ஆட்சியாளர்களின் சாதனை. 

இதன் மூலம் இந்து சமயத்தை அழிப்பது. இதுதான் அன்னிய கைகூலிகளாகிய ஈவெரா, அண்ணாதுரை, கருணாநிதி உள்ளிட்ட  சக்திகளின் திட்டம்.

இதன் மூலம் அன்னிய கைகூலியாக திகவினர் லட்சம் கோடிகளுக்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளது அனைவரும் அறிந்ததே.

 இந்த கைகூலி திகவினர் கிறிஸ்தவர்களிடம் லட்சம் கோடிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

கீழ்காணும் இந்த சொத்துக்களை ஈரோட்டு ராமசாமி நிர்வகித்து வந்தான்.அவனுக்கு பின்பு மணியம்மை நிர்வகித்ததார் அவருக்கு பின்பு தற்போது  வீரமணி நிர்வகித்து வந்தான் அவனுக்குப்பின் பின்பு வீரமணி மகன் அன்பழகன் இதன் நிர்வாகியாக ஆக்கப்பட்டுள்ளான்.

இதன் சொத்து மதிப்பு கடந்த மாதம் வரை 1லட்சம் கோடியை தாண்டுமாம்.

பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சி

நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சி

பெரியார் தொடக்கப்பள்ளி, திருச்சி

பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி

நாகம்மையார் குழந்தைகள் இல்லம், திருச்சி

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, திருச்சி

பெரியார் நூற்றாண்டு மழலையர் பள்ளி, திருச்சி

சாமி கைவல்யம் முதியோர் இல்லம், திருச்சி

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி, திருச்சி

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, பெரியார் நகர்(வல்லம்) தஞ்சாவூர்

பெரியார்- மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, செயங்கொண்டம்

பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சில்லத்தூர்,வெட்டிக்காடு

பெரியார் சமூகத்தொடர் கல்விக் கல்லூரி, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் வணிகவியல் பயிற்சி மய்யம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார்- மணியம்மை இலவச மருத்துவமனை, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் மருத்துவமனை குடும்பநல மய்யம் பெரியார் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் ஊரக மரபு சாரா ஆற்றல் ஆய்புக் கல்வியகம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் உயிரி தொழில்நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் பால்பண்ணை, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் கணினி மய்யம், திருச்சி

பெரியார்-மணியம்மை இலவச மருத்துவமனை,திருச்சி

பெரியார் சமூகத் தொடர் கல்வி கல்லூரி,திருச்சி

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், சென்னை

பெரியார் தத்துவக்கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு, சென்னை

பெரியார் அருங்காட்சியகம், சென்னை

பெரியார்- மணியம்மை இலவச மருத்துவமனை,சென்னை

பெரியார் நகர குடும்பநல மய்யம், சென்னை

பெரியார்நகர நலவாழ்வு நிலையம், சென்னை

பெரியார் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் பயிற்சி மய்யம், சென்னை

இளைஞர் வழிகாட்டும் மய்யம், சென்னை

பெரியார் கல்வியகம், சென்னை

பெரியார் இலவச சட்ட உதவி மய்யம், சென்னை

பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம், சென்னை

பெரியார் கணினி ஆய்வுக்கல்வியகம், சென்னை

பெரியார் பயிற்சி மய்யம், சென்னை

பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம், சென்னை

பெரியார் இலவச மருத்துவமனை சோழங்கநல்லூர்

பெரியார் மருத்துவமனை- குடும்பநல மய்யம், சோழங்க நல்லூர்

டாக்டர் மரகதம் மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

பெரியார் மகளிர் மேம்பாடு- மறுமலர்ச்சி நிறுவனம், சென்னை

பெரியார் வலைக்காட்சி, சென்னை

பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை, சென்னை

பெரியார் மய்யம், பாம்நொலி, புதுடெல்லி

பெரியார் மய்யம், ஜசோலா, புதுடெல்லி.

இந்து மதத்தை அழிக்க  அன்னியனுக்கு துணை போன துரோகிகள் சொத்து மதிப்பை பார்த்தீர்களா.

 விழித்துக்கொள்ளுங்கள்.



Monday, 28 September 2020

CIVILISATION OF TAMILNADU IN 3020 ( AFTER 1000 YEARS )

 





.ஹரப்பா, மொகஞ்சதாரோவை விடுங்கள்.. நம்மூர் நாகரீகம் எப்படிப்பட்டது தெரியுமா?

 1000 ஆண்டுகளுக்கு பின் 3020 தமிழர்கள் 

பற்றிய குறிப்புகள்

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


மக்களை கொலை செய்யவும் ,கொள்ளை அடிக்கவும் சிலருக்கு அதிகாரம் அளிக்கபட்டிருக்கிறது அதற்கு ஈடாக

தலைவருக்கு மரியாதையை செய்யும் வழக்கம் எகிப்திய நாகரீகத்தின் சாயலை ஒத்திருக்கிறது

@@@@@@@@@@@@@@@


பதவி இழந்த மனிதர்கள் பாத யாத்திரையும் ,கூட்டம் சேர்பதற்காக கூட்டத்திலே தங்க ,வெள்ளி நாணயங்கள் சூறையிட பட்டன .இவை ராஜராஜ சோழர் காலத்திய நடைமுறை ஆகும்


@@@@@@@@@@@@@@@@@@

இதற்கிடையே அவ்வப்போது பொழுது போகாமல் ஒரு கூட்டத்தினர் அவ்வப்போது குடிசைகளுக்கு தீ வைப்பதையும் ,கொள்ளை அடிப்பதையும் ,மிரட்டி பணம் வாங்கும் கூட்டமும் இருந்திருக்கிறது -7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கபால ஓடுகளை கையில் வைத்து பிச்சை எடுத்த காபாலிகர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஆய்வு குறிப்புகள் கூறுகின்றனர்

#####################



ஹரப்பா, மொகஞ்சதாரோவை விடுங்கள்.. நம்மூர் நாகரீகம் எப்படிப்பட்டது தெரியுமா? வாட்ஸ்அப் கலகல


சென்னை: வாட்ஸ்சப்பில் தற்போது வைரலாக சுற்றிவரும் ஒரு மெசேஜ் சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பதாக உள்ளது. அந்த தகவலை பாருங்கள்!


ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகத்தை தொல்பொருள் ஆராய்ச்சியால் கண்டறிவது போல், தற்போதைய நம்மூரு நாகரிகத்தை, அடுத்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்படும் வரலாறு எப்படிப் புரிந்துகொள்ளும் என சிந்தித்துப் பார்த்ததில் இருந்து சில சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் கற்பனை:


பொதுச் சொத்துக்களை கொள்ளையடிக்கும் உரிமை அரசாங்கத்திடமே இருந்திருக்கிறது. அப்படி கொள்ளையடிக்க விருப்பமுள்ளவர்களை தேர்வு செய்யும் பொறுப்பு மட்டும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களை அடையாளம் காண்பதற்காக அவரவர்க்கென தனித்தனி சின்னங்களும் வண்ணக் கொடிகளும் இருந்திருக்கின்றன!



வாகனப் போக்குவரத்து மிகுந்து காணப்பட்டிருக்கிறது. அரசு பேருந்துகளின் படிக்கட்டுகளில் ஊஞ்சலாடியபடி இனிதே பயணிக்கும் முறை இருந்திருக்கிறது. நடத்துநர் என்றழைக்கப்பட்டவர், விசில் என்ற இசைக் கருவியை இசைப்பதில் தேர்ச்சி பெற்றவராக இருந்திருக்கிறார். அவரது இசைக்கேற்ப பேருந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டபடி இயங்கியிருக்கின்றன!


சமையல் செய்வதற்கென மிக்ஸி, கிரைண்டர் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தியுள்ளனர். நீர் அருந்தப் பயன்படுத்திய பிளாஸ்டிக்கிலான பாட்டில் முதல், மிக்ஸி கிரைண்டர் வரை அனைத்திலும் ஒரு பெண்மணியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த உபகரணங்கள் அனைத்தையும் கண்டுபிடித்ததன் காரணமாக அவரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்!


பொதுமக்களில் வயதால் மூத்தவர்கள் மட்டுமே அரசியல் தலைவர்களாக உருவாகியிருக்கிறார்கள். அந்த அரசியல் தலைவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஊரெங்கும் சுவர்களில் அவர்களின் பெயர்களையும் உருவத்தையும் வரைந்து, மறக்காமல் அவர்களின் முதுமையை குறிக்கும்வகையில் ‘வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்!' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்!



பிளெக்ஸ்கள், பிளாஸ்டிக்குகள் போன்றவை அக்காலத்தில் நிறைய பயன்படுத்தப்பட்டுள்ளன. டன் கணக்கில் தயாரிக்கப்பட்ட அவை மண்ணில் மக்காமல் கிடந்து உலகின் அழிவுக்கே காரணமாக இருந்திருக்கின்றன.


பொதுமக்கள் சிறுநீர் கழிப்பதற்காக குட்டிக் குட்டி கழிப்பறைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்டப்பட்டுள்ளன. அவை தவிர, நகரின் முக்கிய வீதிகளில் மூத்திரச் சந்து என்ற திறந்தவெளிப் பகுதியில், எவ்வித நெருக்கடியுமில்லாமல் சிறுநீர் கழிக்கும் வசதி செய்து தந்திருக்கிறார்கள். அப்படி சிறுநீர் கழிக்கும் போது வேடிக்கை பார்ப்பதற்காக கவர்ச்சிப் பட சுவரொட்டிகளை மூத்திரச் சந்தின் சுவரெங்கும் ஒட்டும் முறையும் கையாளப்பட்டிருக்கிறது!


சாலைகளனைத்தும் கருங்கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன. அந்த கருங்கற்களின் மீது, பயணிப்பவர்களை காத்து கருப்பு அண்டக் கூடாதென்பதற்காக தார் என்ற கறுப்பு பொருளை லேசாக தெளித்து வைக்கும் சாஸ்திரம் கடைபிடிக்கப்பட்டுள்ளது!


ஒரு பக்கம் பசுமையான விவசாய வியாபாரம் அமோகமாக நடந்து வந்திருக்கிறது. இன்னொரு பக்கத்தில் விவசாய நிலங்களை பல வண்ணங்களில் அழகுபடுத்தி விவசாய நில வியாபாரமும் அமோகமாக நடந்து வந்திருக்கிறது! விவசாய நிலங்களில் வீடு கட்டி, மொட்டை மாடிகளில் தொட்டிச் செடிகளில் விவசாயம் செய்யும் அதிநவீன விவசாயத்தையும் கடைபிடித்து வந்திருக்கிறார்கள்!


ஏரிகள் என்ற பெயரிலான அபாயகரமான நீர் நிறைந்த பள்ளத்தாக்குகளை மேடாக்கி வீடுகள் கட்டவும், அந்த வீடுகள் கட்டும் கற்களுக்காக, மலைகள் என்றழைக்கப்பட்ட மேடான பகுதியை வெட்டியெடுத்து சமப்படுத்துவதும் நடந்து வந்திருக்கிறது!


மக்களின் பொழுதுபோக்குக்காக செல்வந்தர்களால் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகள், உருண்டையான பந்து என்ற ஆயுதத்தாலும், பேட் என்றழைக்கப்பட்ட மரத்தினால் செய்யப்பட்ட ஆயுதத்தாலும் மோதிக்கொள்ளும் விளையாட்டு நடைமுறையிலிருந்தது. அவர்களில் யார் ஜெயிப்பார்கள் தோற்பார்களென பந்தயம் கட்டும் முறையும் இருந்து வந்திருக்கிறது!

.

.

Saturday, 16 May 2020

RAJINIKANTH -IN A SIGHT FROM DMK



RAJINIKANTH -IN A SIGHT FROM DMK
மனிதர்களில் பலவகை ,
ஆனால் ரஜினிகாந்த் தனி வகை
ஒரு திமுக தொண்டனின் ஆற்றாமை 


மனிதர்களில் பலவகை பார்த்திருப்போம், ஆனால் ரஜினிகாந்த் போல ஒருவரை பார்த்திருக்கமாடோம்
அவர் இப்பொழுதெல்லாம் ரசிகர்களை அதிகம் சந்திக்கின்றாராம், இவ்வளவு நாள் எங்கிருந்தார் என கேட்க கூடாது, இங்குதான் இருந்தார்.

சந்தித்து பல முத்தான கருத்துக்களை தெரிவிக்கின்றார் எது தெரியுமா? 21 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அரசியல் கூட்டணியினை நான் ஆதரித்தது ஒரு விபத்து, என்னை அரசியல்வாதிகள் பயன்படுத்திகொண்டார்கள் என்றெல்லாம் அன்னார் பொன்மொழியினை அள்ளி தெளித்திருக்கின்றார்

எது விபத்து மிஸ்டர் ரஜினிகாந்த்?

திரையுலகில் நீங்கள் வளர்ந்துவிட கூடாது, என குறிவைத்து விரட்டிய எம்ஜிஆர் காலமா?

அக்காலத்தில் கலைஞர் கைகொடுத்து சூப்பர்ஸ்டார் என பட்டம் கொடுத்த காலமா?

எம்ஜிஆரின் ரகசிய போலீஸ் 100 படத்தின் பிற்பகுதியினை உங்களை வைத்து தயாரிக்க வந்த தயாரிப்பாளரை எம்ஜிஆர் ஓட விரட்டினாரே அது விபத்தா?

கத்திப்பாரா ஓட்டபந்தயம் விபத்தா? அல்லது அடுத்த எம்ஜிஆர் எனும் அடைமொழி வராமல் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் காவல் காத்தார்களே அது விபத்தா?

மணிரத்னம் வீட்டு குண்டுவெடிப்பும், அதனை தொடர்ந்த உங்கள் சீற்றமும் எல்லாம் விபத்தா?

ஜெயா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என சொன்னது விபத்தா?

மூப்ப்பனரும், சோவும் உங்களை சந்தித்து ஆதரவு கேட்டபொழுது தமிழமெங்கும் சைக்கிள் சின்னத்துடன் போஸ் கொடுத்தது விபத்தா?

அதன் பின்னும் ஆட்சி மாறியபின் அதிமுக கூட்டணிக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்ததும், என் வோட்டு அதிமுகவிற்கு என சொன்னதும் விபத்தா?

இவ்வளவு நடந்தும் கலைஞர் உங்களை சரிக்கு சமமாக தன் அருகே அமர வைத்ததும், ஜெயா ஒரு கூட்டத்தின் பின் வரிசையில் உங்களை நிற்க வைத்ததும் விபத்து என்றா நினைக்கின்றீர்கள்???

மனிதர் எவ்வளவு வன்மமாக பேச தொடங்கிவிட்டார், அரசியல்வாதிகள் பொய் சொல்வார்கள், அரசியல்வாதிகள் சந்திக்கும் நபர்களுமா பொய் சொல்வார்கள்? நல்ல வேளையாக இம்மனிதர் கட்சி தொடங்கவில்லை

நான் அரசியலுக்கு வந்தால்... என மறுபடியும் இழுத்திருக்கின்ரார். நான் அரசியலை விட்டு சென்றுவிடுவேன் என சிலநேரங்களில் கட்சிக்குள் அஸ்திரம் வீசும் தலைவர்கள் உண்டு, அரசியலுக்கு வந்துவிடுவேன் என சொல்லியே இத்தனை காலம் கடத்தும் ஒரு விசித்திர மனிதனை இப்பொழுதுதான் பார்க்கின்றோம்

பசுமாட்டின் முன் கன்றினை கட்டி பால்கறக்கும் வித்தை இது, ரசிகர்கள் முன் இப்படி சொல்லி சொல்லியே பாக்கெட்டில் இருப்பதை கறந்து கொண்டிருக ்கின்றார் இவர்

ஆனால் இம்முறை ரஜினியின் வார்த்தைகள் வழக்கமான அவரின் காமெடி அல்ல, இதன் பின் பெரும் தந்திர திட்டங்கள் இருக்கலாம், ரஜினி சும்மாவே கருப்பு பிராமணர் என்பதில் சந்தேகமில்லை
பிராமண சூதுக்கள் பொல்லாதது, ராஜாஜிக்கு பின் தமிழகத்தில் தங்கள் ஆட்சி இல்லை என்ற வன்மம் அவர்களுக்கு இருந்தது, ஆனால் எம்ஜிஆர் கிடைத்தார் ஓரளவு பயன்படுத்தினார்கள், பின் ஜெயாவின் மூலம் முயற்சித்தார்கள், ஜெயா நிச்சயம் இன்னொரு ராஜாஜியாக வந்திருக்கவேண்ட ியவர்

ஆனால் நடராஜன் ஜெயாவினை ஒரு வளையத்தில் கொண்டுவந்தார், அது தேவர் சாதி பிடியாயிற்று, இப்படித்தான் பிராமணர்கள் ஆட்சியாக வந்திருக்க வேண்டியது இன்னொரு தமிழ்சாதி ஆட்சியாக போயிற்று

இப்பொழுது பிராமண நோக்கம் இந்த கருப்பு பார்பணன் மூலம் வெளிவருகின்றது, ரஜினி இப்படி எல்லாம் பேச அதுதான் காரணம் இல்லாவிட்டால் அவருக்கு அல்மைசர் ஏற்பட்டிருக்க வேண்டும், அப்படியெல்லாம் ஏதும் மருத்துவ தகவல் இல்லை, டயலாக் நன்றாக பேசுவதாக ரஞ்சித் கூட சொல்லியிருந்தார்
இவரை, இவருக்கு சோதனையான 1980 முதல் பல இடங்களில் காத்தவர் கலைஞர், எம்ஜிஆரோ ஜெயலலிதாவோ ரஜினியிடம் முகம் கொடுத்து பேசியது கூட கிடையாது

அந்த கலைஞருக்கு 1996ல் அதுவும் தமிழகமே பொங்கிய காலங்களில் ஆதரவு தெரிவித்துவிட்டு இப்பொழுது விபத்து என்றால்...
தமிழச்சி மனோரமா முன்பு இவரை பற்றி சொன்னதுதான் நினைவுக்கு வருகின்றது, இவர் அப்படித்தான் போல..

இவர் ரசிகர்களுக்கு மானம் இருக்கின்றதோ வெட்கம் இருக்கின்றதோ தெரியாது, ஆனால் இவருடனெல்லாம் இணைந்து குஷ்பூ நடித்தார் என்பதனை நினைத்து அவரின் ரசிகர்களான நாங்கள் பெரும் வருத்தம் கொள்கின்றோம்..

தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் என கொண்டாடபடுபவர், தமிழகத்தின் நச்சுவிதை என்ற பட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றார்...

கொஞ்சநாளைக்கு முன்புதான் இலங்கைக்கு செல்லும் வழி அந்த லைக்கா சுபாஷ்கரன் மூலம்தான் தெரிந்தது என சொன்னவர்தான் இவர், அந்த அறிக்கையின் வியப்பே இன்னும் தீரவில்லை

அதற்குள் இப்படி விபத்து அறிக்கை...
இப்படி பகிரங்க பொய்களை சொல்லும் மனிதர் இன்னும் கட்சி தொடங்காதது நல்லது, தொடங்கவும் வேண்டாம் .

Sunday, 26 April 2020

DMK HUNTED TAMILNADU AND ACCUSATIONS OF MGR




DMK HUNTED TAMILNADU AND 
ACCUSATIONS OF MGR


.கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு 1972 அக்டோபர் 10-ம் நாள் எம்.ஜி.ஆர்., தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது தி.மு.க. ஆட்சி மீதும், கருணாநிதி மீதும் பல்வேறு ஊழல் புகார்களைக் கூறினார் எம்.ஜி.ஆர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான திரு.எம்.கல்யாணசுந்தரத்துடன் தமிழக கவர்னர் கே.கே.ஷாவை நவம்பர் 4-ம் தேதியன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்து கருணாநிதி ஆட்சி பற்றிய புகார் கடிதத்தை நீட்டினார். இந்தப் புகாரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து தி.மு.க. ஆட்சி மீது விசாரணை நடத்தும்படி கோரினார்.

ஆனால் ஆளுநரோ இதனை அப்படியே கருணாநிதிக்கு திருப்பியனுப்பி அவருடைய கருத்தை கேட்டுவிட்டுத்தான் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும் என்று நேரடியாகவே சொல்லியிருக்கிறார். இதனால் உங்களிடம் கொடுத்துப் பயனில்லை. நாங்கள் நேரடியாக ஜனாதிபதியிடமே கொடுத்துவிடுகிறோம் என்று சொல்லிவிட்டு அந்த மனுவை கே.கே.ஷாவிடம் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டு வந்துவிட்டார்கள்.

நவம்பர் 6-ம் தேதி காலையில் டெல்லி சென்று குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்த எம்.ஜி.ஆரும், கல்யாணசுந்தரமும் தி.மு.க. ஆட்சி பற்றிய புகார் பட்டியலை அவரிடம் கொடுத்தார்கள்.

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் கருணாநிதி மற்றும் தி.மு.க. அரசு மீதான அந்த புகார் பட்டியல் அடுத்த 5 ஆண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருந்தது. 1976-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் தேதியன்று அப்போதைய கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்த இந்திராகாந்தி, பிப்ரவரி மாதம் 3-ம் தேதி கருணாநிதி மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி சர்க்காரியா தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்தது.

இது பற்றி நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட மத்திய உள்துறை இணை அமைச்சர் ஓம் மேத்தா, “1972-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் தி.மு.க. அமைச்சரவை மீதான புகார்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசிடம் கொடுத்தார். அதில் மொத்தம் 54 புகார்கள் அடங்கியிருந்தன. அவற்றில் முதலமைச்சர் கருணாநிதிக்கு எதிரானவை 27. மற்ற அமைச்சர்கள் மீது கூறப்பட்டவை 13. மீதி 14 புகார்களும் அதிகாரத்தை தி.மு.க. கழகம் தவறாகப் பயன்படுத்தியதாக பொதுப்படையான புகார்கள்.. இந்தப் புகார்கள் மீது நீதிபதி சர்க்காரியா விசாரணை நடத்துவார்” என்று அறிவித்தார்.

இந்த புகழ் பெற்ற சர்க்காரியா கமிஷன் விசாரணையில் கதாநாயக ஊழல் என்று சொல்ல வேண்டுமானால் வீராணம் குடிநீர்த் திட்டத்தில் நடந்த ஊழலைத்தான் சொல்ல வேண்டும்..!

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே தமிழ்நாட்டில் வீராணம் ஊழல்தான் அதிகமாக பேசப்பட்டு வந்தது..! தற்போது ஸ்பெக்ட்ரம் ஊழலின் அலை குக்கிராமத்தையும் எட்டியதுபோல 1977-ம் தேர்தலில் எம்.ஜி.ஆரின் தி.மு.க.வுக்கு எதிரான புயல்வேகப் பிரச்சாரத்தில் முக்கியக் கருவியாகப் பயன்பட்டதும் இந்த வீராணம் ஊழல்தான்..! கருணாநிதி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களை அதிகமாக கார்னர் செய்திருப்பதும் இந்த வீராணம் ஊழல் வழக்கில்தான்.

துக்ளக் பத்திரிகையில் இந்த வீராணம் ஊழல் வழக்கு பற்றிய தொடர் கட்டுரை பல ஆண்டுகளுக்கு முன்பு வெளி வந்தது. அப்போது கண் ஆபரேஷன் செய்து படிக்க முடியாமல் இருந்த எனது தந்தைக்கு அந்தக் கட்டுரையை முழுவதுமாக படித்துக் காண்பித்தது எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது..! கருணாநிதியின் ஊழல்கள் பற்றி அப்பொழுதே எனது நெஞ்சில் பதிய வைத்த எனது தந்தைக்கு நன்றி..!

இந்த ஊழல் பற்றிய இன்னொரு சுவாரசியம்.. மணிரத்னத்தின் 'இதயக்கோவில்' திரைப்படத்தில் ஊரில் இருந்து பாடகனாக வேண்டும் என்பதற்காகவே சென்னை வரும் மோகன், தங்குவதற்கு இடமில்லாமல் ரோட்டோரமாக இருக்கும் பெரிய இரும்புக் குழாயில் தங்குவார்..!

இது போன்ற 'செட்டு'களை பல படங்களில் பார்த்திருந்தாலும், இது என்னய்யா 'செட்டு' என்று அந்த வயதில் யோசிக்க வைத்திருந்தது அந்தக் காட்சிகள். இதனை முன் வைத்தே அப்போது விகடனில் வீராணம் குழாய் பற்றிய கார்ட்டூன் ஒன்றை போட்டிருந்தார்கள்.

அந்தக் குழாய்களெல்லாம் வீராணம் ஊழலின்போது கொண்டு வரப்பட்டு இப்போதும் பயன்படுத்தப்படாமல் இருப்பவை என்று அந்த நேரத்தில் பத்திரிகைகள் மூலமாகத்தான் நான அறிந்து கொண்டேன்..!

எதில் தப்பித்தாலும் வீராணம் ஊழலில் தப்பிக்க முடியாது என்ற நிலை வந்ததினால்தான் தனது மகனை அடித்து, உதைத்து, சித்ரவதை செய்த நிலையிலும், நெருக்கடி நிலையை எதிர்த்து தான் பக்கம், பக்கமாக கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தபோதிலும், தனது அரசியல் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி பல்டியடித்து 1977 சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொண்டார் கருணாநிதி.! இதனால் காங்கிரஸ் பயன் அடைந்ததோ இல்லையோ, கருணாநிதி அன்றைக்கே தப்பித்துவிட்டார்..!

இந்த வார குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்திருக்கும் அந்த வீராணம் ஊழல் வழக்கு பற்றிய செய்திகளின் முதல் பாகம் இது :

சர்க்காரியா கமிஷன் விசாரித்த வழக்குகளில் வீராணம் ஊழல் மிக முக்கியமானது. ஊழல் செய்வதற்காகவே விதிமுறைகளை மாற்றியதாகவும், அதை எதிர்த்த அதிகாரிகள் மிரட்டப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

எழுபதுகளின் தொடக்கத்தில் சென்னை நகரில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. சென்னை மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வீராணம் ஏரியில் இருந்து குழாய்கள் மூலம் சென்னைக்குத் தண்ணீர் கொண்டு வர திட்டம் தீட்டப்பட்டது. இதுதான் வீராணம் திட்டம்.

சென்னை நகரில் இருந்து 222 கி.மீ. தூரத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ளது வீராணம் ஏரி. அங்கிருந்து சுத்திகரிக்கப்படாத நீரையெடுத்து வந்து, நெய்வேலிக்கு அருகிலுள்ள வடக்குத்து என்ற இடத்தில் அமைக்கப்பட இருந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்து, 198 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்களை பதித்து அதன் மூலமாக குடிநீரை சென்னைக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் இந்த வீராணம் குடிநீர்த் திட்டம். இதற்காக பல நூறு கோடிகளில் தி்ட்டம் தீட்டப்பட்டது.

1950-களில், பொதுப்பணிக்கான ஒப்பந்தம் வழங்குவதை ஒரு சில பொறியாளர்கள் மட்டுமே முடிவெடுக்க அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. 1954-ம் ஆண்டு சுந்தரம் என்ற ஐ.சி.எஸ். அதிகாரி இது போல தனி நபர் ஒருவருக்கு அதிகாரம் வழங்குவது மக்களாட்சி முறைக்கு உகந்ததல்ல என்றும், நான்கு துறைகளின் பொறியாளர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து முடிவெடுக்கலாம் என்றும் ஆலோசனை தெரிவித்தார்.

காமராஜர் காலத்தில் கக்கன் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது பொறியாளர்கள் குழுவை அமைத்து, அதன மூலம் முடிவெடுக்கலாம் என்ற நடைமுறையைக் கொண்டு வந்தார். இதுபோல பொறியாளர்கள் குழுவை அமைத்ததினால்தான் காமராஜர் பெருந்தலைவர் ஆனார்.

காங்கிரஸ் ஆட்சி போனதும் தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சரானார். “எல்லா முடிவையும் பொறியாளர்கள் எடுத்தால், அரசியல்வியாதிகள் நாங்கள் எதுக்கு இருக்கோம்?” என்று அவருக்குத் தோன்றியதோ என்னவோ.. பொறியாளர்களிடம் கருத்தை மட்டும் கேட்டுக் கொண்டு முடிவை அரசு எடுக்கலாம் என்று புது நடைமுறையை உருவாக்க நினைக்கிறார். இது நடந்தது அண்ணாவின் ஆட்சிக் காலத்தில்..

இதன் பின்பு அண்ணாவின் மறைவுக்குப் பின்பு கருணாநிதி முதல்வரானார். இப்போது சாதிக்பாட்சா பொதுப்பணித் துறை அமைச்சராகிறார். இந்த நேரத்தில்தான் வீராணம் குடிநீர்த் திட்டம் பற்றிய வேலைகள் துவங்கின. வீராணம் தி்டடத்தில் பொறியாளர்களின் கருத்தைக் கேட்டு முடிவை நாம் எடுப்போம் என்று தி்ட்டமிட்டார் கருணாநிதி. இது தொடர்பான அரசாணையைத் திருத்தி புதிய அரசாணையும் வெளிவருகிறது.

குழாய் அமைக்க விரும்புவோர் வரலாம் என்று டெண்டர் வெளியிடப்படுகிறது. இந்த டெண்டரில் ஐந்து நிறுவனங்கள் பங்கெடுக்கின்றன. இறுதியில் சத்தியநாராயணா பிரதர்ஸ் என்ற நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

செல்போன் சேவை நடத்தும் நிறுவனங்களையெல்லாம் விட்டுவிட்டு கட்டுமானப் பணியில் உள்ள யூனிடெக், ஸ்வான் போன்ற நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரத்தை கொடுத்தவர்களல்லவா? அதே டெக்னிக்குதான் இங்கும் கடைப்பிடிக்கப்பட்டது..

சத்தியநாராயணா நிறுவனத்தோடும் ஏறக்குறைய இதனோடு சம நிலையில் போட்டியிட்ட தாராப்பூர் நிறுவனம், மற்றும் மற்றவைகளான இண்டியன் ஹ்யூம் பைப்ஸ், கேரளா ப்ரேமோ பைப் மற்றும் யூனிவர்ஸல் பைப்பிங் கன்ஸ்ட்ரக்ஷன் போன்ற நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி டெண்டரில் குறிப்பிட்டிருக்கும் விலையைக் குறைப்பதற்காக அரசுத் தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

இதற்குப் பிறகு “சத்தியநாராயணா நிறுவனம் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களை நேரில் ஆய்வு செய்து, அந்த நிறுவனங்களிடம் இத்திட்டத்திற்குத் தேவையான குழாய்களைத் தயாரிக்கும் அளவுக்கு வசதியிருக்கிறதா என்பதை அறிய வேண்டும். அதன் பிறகு இந்நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கலாம்..” என்று பொதுப்பணித் துறையின் அப்போதைய தலைமைப் பொறியாளர் இது பற்றிய கோப்பில் குறிப்பு எழுதுகிறார்.

இந்தக் குறிப்பை அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த சாதிக்பாட்சாவிடம் அளிக்கிறார். அவர் தலைமைப் பொறியாளரை அழைத்து “முதலில் சத்தியநாராயணா நிறுவனத்துக்கு வேலைக்கான ஆணையை வழங்கிவிட்டு அதன் பிறகு தகுதியிருக்கிறதா என்று பார்ப்போம். முதலமைச்சர் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள்.. அவ்ளோதான்.. சொல்லிப்புட்டேன்..” என்று கூறுகிறார். இதன் பிறகு, இந்தக் கோப்பு அப்போதைய நிதித்துறைச் செயலாளரிடம் போகிறது.

இப்போது இருப்பதுபோலவே ஆட்சியாளர்களுக்கு காது கிழியும்வகையில் ஜால்ரா அடிக்கும் அதிகாரிகள் அப்போது இல்லை. அப்போதைய நிதித்துறைச் செயலாளர் கோப்புகளை விரிவாக ஆராய்ந்து அவரும் ஒரு அறிக்கையை அளிக்கிறார்.

அதில், “முதலில் இந்நிறுவனங்களின் தொழிற்சாலைகளை நேரில் சென்று ஆய்வு செய்தால்தான் இவர்கள் கூறும் வசதிகள் இருக்காவிட்டால், டெண்டரை நிராகரிக்க முடியும். மேலும், வெளிநாட்டில் உள்ள தொழிற்சாலையை நேரில் ஆய்வு செய்தால், அந்த நிறுவனங்களோடு நேரடியாக ஒப்பந்தம் செய்து, அரசுக்கான செலவைக் குறைக்கவும் வழியிருக்கும்” என்று சொல்லியிருக்கிறார்.

மேலும், “சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனம் அது நிறுவ இருக்கும் தொழிற்சாலைக்காக 75 சதவிகிதத் தொகையை வட்டியில்லாத முன் பணமாக வழங்க வேண்டும் என்று கேட்பது முறையற்ற செயல். ஆகவே அனைத்து நிறுவனங்களோடும், பேச்சுவார்த்தை நடத்தலாம்..” என்று எழுதியிருக்கிறார் நிதித் துறைச் செயலாளர்.

இவர் நிதித் துறைச் செயலாளராக இருப்பதால் இவர் சொன்னதையெல்லாம் கேட்க வேண்டுமா என்ன..? இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனம் அளித்த டெண்டர், தற்காலிகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதன் பிறகு பொதுப்பணித்துறை அமைச்சர் சாதிக்பாட்சா, கூடுதல் தலைமைச் செயலாளர் விஸ்வநாதன், தலைமைப் பொறியாளர் உசேன் ஆகியோர் ஈரான், மேற்கு ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஹாலந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, கிரேக்கம் ஆகிய நாடுகளுக்குச் சென்று தொழிற்சாலைகளை ஆய்வு செய்வதற்காகச் செல்கிறார்கள். அவர்களும் வெளிநாடுகளைச் சுற்றிப் பார்க்க வேண்டாமா..?

நன்றாக ஊர் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த தலைமைப் பொறியாளர் உசேன், சுருக்கமான அறி்க்கை ஒன்று அரசிடம் சமர்ப்பிக்கிறார். “அந்த அறிக்கையும் தொழில் நுட்ப அறிக்கை போல இல்லாமல், சுற்றுப் பயண அறிக்கைபோல் இருந்தது..” என்று நீதிபதி சர்க்காரியா குறிப்பிடுகிறார். அவர்கள் பேக்டரியை பார்க்கவா சென்றார்கள்? வெளிநாட்டு்க்கு ‘இன்பச் சுற்றுலா’ அல்லவா சென்றார்கள்? அவர்கள் எப்படி தொழில் நுட்ப அறிக்கையை அவர்களால் சமர்ப்பிக்க முடியும்..?

அமைச்சர்களும், அதிகாரிகளும் சுற்றுப்பயணம் முடிந்து திரும்பியதும் சத்தியநாராயணா பிரதர்ஸுக்கு நிரந்தரமான ஆணையை வழங்கலாம் என்று அரசுத் தரப்பில் முடிவெடுக்கப்படுகிறது. தற்காலிகமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட டெண்டர், இதன் பின்னர் நிரந்தரமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. தொழிற்சாலை அமைப்பதற்காக 75 சதவிகித முன் பணத்தை வட்டியில்லாமல் வழங்கவும் உத்தரவிடப்படுகிறது.

நிதித்துறைச் செயலாளர் இப்போதும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து “முன் பணம் வழங்கக் கூடாது” என்று கூறுகிறார். ஓரளவுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு தனது பணி முடிந்ததாக அவர் நினைத்திருக்கக் கூடும்.

“இது தொடர்பாக நடந்த விசாரணைகளில், வீராணம் திட்டத்தில் கருணாநிதி எடுத்த நடவடிக்கை, அதன் நோக்கம் என்ன என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது?” என்று நீதிபதி சர்க்காரியா குறிப்பிடுகிறார்.

மேலும், “வீராணம் திட்டத்திற்காக முடிந்துபோன ஒரு கோப்புக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டதும் விதிகளில் திருத்தம் ஏற்படுத்தப்பட்டதும் இத்திருத்தத்தில் உள்நோக்கம் இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது..” என்கிறார் சர்க்காரியா.

இந்த ஆணையத்தின் முன் சாட்சியமளித்த நிர்வாகப் பொறியாளர் சிவராமன் தனது சாட்சியத்தில், “முதலமைச்சர் கருணாநிதியின் விருப்பப்படி சத்தியநாராயணா பிரதர்ஸ் அனுப்பிய டெண்டரை பரிந்துரை செய்யவில்லை என்றால் எனக்குக் கடுமையான விளைவுகள் ஏற்பட்டிருக்கும். உலகில் உள்ள எல்லா நாடுகளில் இருந்தும் டெண்டர்கள் கேட்ட பிறகு, குறிப்பாக ஒரு டெண்டரை தற்காலிகமாக ஏற்றுக் கொள்வதை என்னுடைய 31 ஆண்டு காலப் பணி அனுபவத்தில் நான் பார்த்ததே இல்லை. வீராணம் தி்ட்டத்தில்தான் முதல் முறையாக இவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டது..” என்று கூறியிருந்தார்.

இதிலிருந்தே இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஒவ்வொருவரும் எப்படி மிரட்டப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

சரி.. இவ்ளோ கஷ்டப்பட்டு சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்துக்கு கருணாநிதியும், பொதுப்பணித் துறை அமைச்சர் சாதிக்பாட்சாவும் எதற்காக இப்படி வரிந்து கட்டிக் கொண்டு வேலை பார்த்தார்கள் என்று சந்தேகம் எழுதுகிறதல்லாவா..?
.

Saturday, 2 June 2018

WHY YOU ARE ALWAYS OPPOSING DMK ? IS ADMK IS DIVINE -INDIAVASAN




WHY YOU ARE ALWAYS OPPOSING DMK ?
IS ADMK IS DIVINE
-INDIAVASAN



தேர்தல் முடிவுகள் இணையத்தின் போலிப் பூச்சுக்களைக் கழுவி விட்டிருக்கின்றன. திராவிடம் ஒழிக! மாற்றம் ஒன்றே இனி வழி என்றவர்கள் எல்லாம் இப்போது முழுமையாகாச் சந்திரமுகியாக சுயரூபம் காட்டுகிறார்கள்! அவர்களில் பெரும்பான்மை யாரென்று பார்க்கும்போதுதான் அந்த அதிர்ச்சி!

வழக்கம்போல் இதிலும் ஒரு திரை மறைவு நாடகம் நடந்து முடிந்திருக்கிறது!இத்தனை நாள் வெளியே நடுநிலை பேசியவர்கள் இன்று, “ஆம், நாங்கள் அம்மா ஆதரவாளர்கள்தான்!” என்று வண்ணம் கலைகிறார்கள்!

ஒருவர் தன்னிலை விளக்கமாக, நடுநிலை என்று ஒன்று இருக்கவே முடியாது! அம்மா அல்லது ஐயா ஆதரவாளராக இருப்பதே சாத்தியம் என்று விளக்கம் தருகிறார்!

ஆனால் ஏன் இதைத் தேர்தல் முடிந்தபின் சொல்கிறார்?
முன்பே சொன்னால் நோக்கம் சிதைந்துவிடக்கூடும் என்பதால்!

நம்மைப்போல் அவர்கள் எக்காலத்தும் ஓட்டுக்களை மாற்றிப்போடுவதே இல்லை!
எப்போதும் பெரும்பான்மை சிந்தாமல் சிதறாமல் அம்மாவுக்குத்தான்!

இன்றைய ஆட்சியை, அதன் அவலங்களை விமர்சிக்கும் யாரும், நாளை எந்த ஆட்சி வந்தாலும் அதையும் இதை விட வேகமாக, நேர்மையாக விமர்சிப்பார்கள்!
அதிமுகவை விமர்சிக்கும் பலரும் அதனினும் வேகமாக திமுகவை விமர்சிப்பதுண்டு!

அவர்கள்தான் உண்மை நடுநிலைவாதிகள்!
அவர்களுக்கு மறைமுகத் திட்டங்கள் ஏதும் இருப்பதில்லை!

இந்த ஆட்சி மோசம்தான் ஆனால் ..... என்று இழுப்பவர்கள் வேறுவகை!

திமுகவின் போன ஜென்மப்பிழை வரை விமர்சிக்கும் இவர்கள் அதிமுக அவலங்களை, திமுகவை இழுக்காமல் பேசியதே இல்லை!

அவர்களின் நோக்கமே திமுக மீண்டும் தலை தூக்கிவிடக்கூடாது என்பது மட்டும்தான்!

எதனால் கருணாநிதிமேல் இத்தனை வன்மமும் காழ்ப்பும்?
எந்த வகையில் ஜெயலலிதா அவரைவிட நல்லவர்?

இவ்வளவு மோசமான, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் நிர்வாகச் சீர்கேடுகளை விமர்சிக்காமல், வீட்டிலிருக்கும் கிழவரின் வயது, ஒழுக்கம் பற்றியே அதிகம் விமர்சிக்கிறார்கள்?

எந்த நன்மையையும் செய்யாமலா அவரைத் தமிழர்கள் ஐந்துமுறை முதால்வர் ஆக்கினார்கள்? தேர்தலில் நின்ற பதின்மூன்று முறையும் சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினார்கள்?

ஏறத்தாழ அறுபது ஆண்டுக்கும் மேலாகத் தமிழக அரசியல் அவரைச் சுற்றியே இயங்க, அவரது பங்களிப்பு ஏதும் இல்லையா?

பிறகேன், அந்த மனிதரின் "குற்றங்கள் மட்டும்" இங்கு அலசப்படுகின்றன?


அது தலைமுறை தாண்டிய வன்மம்.

அதுபற்றிப் பேசுமுன் இணையத்தில் அவர்பற்றி வைக்கப்படும் விமர்சனங்கள், அதே விஷயத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நிலைப்பாடு இரண்டையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்ப்போம்!

வாரிசு அரசியல்:

கருணாநிதி செய்த மாபெரும் வரலாற்றுப்பிழை, கட்சியே குடும்பம் என்ற நிலையிலிருந்து மாறி, குடும்பம்தான் கட்சி என்று ஆனது!

மனைவி, துணைவி இவர்களின் அர்த்தமற்ற வற்புறுத்தல் காரணமாக அருகதையே இல்லாத அழகிரி, எங்கோ நிம்மதியாக இருந்த கனிமொழி, இவர்களைக் கட்சிக்குள் திணித்தார்!

போதாக்குறைக்கு, மாறன் மீதான நன்றி உணர்ச்சியில் தயாநிதி மாறனை மத்திய அமைச்சராக்கியது இமாலயப்பிழை!

டெல்லி அரசியல் லாபியில் கொடிகட்டிப் பறந்தவர் முரசொலி மாறன்!
அவர் மறைவுக்குப்பின், தகுதி வாய்ந்த திருச்சி சிவா போன்றவர்களை ஒதுக்கி, தகுதியே இல்லாத இந்தச் சிறுவனை முன்னிறுத்தினார்!

அதன் தீவிளைவை அவரோடு கட்சியும் அனுபவித்தது!

நாற்பது வருடங்களுக்கு மேல் அரசியலில் இருக்கும் ஸ்டாலின், அரசியலில் நுழைந்தது வேண்டுமானால் வாரிசு என்பதால் இருக்கலாம்!

ஆனால் இன்று அவர் தன்னை ஒரு தலைவனாக நிலை நிறுத்திக்கொள்ளுமளவு தன்னை நிரூபித்துவிட்டார்!

இன்றைய முதல்வர் உட்பட அரசியலில் இருக்கும் பலரினும் அவருக்கு அனுபவம் அதிகம்!

ஆனாலும் இன்று அவரை வாரிசு என்றே விமர்சிப்பவர்கள், அம்மா எப்படி அரசியலுக்கு வந்தார் என்பதை வசதியாக மறந்து, மறைத்தே பேசுவார்கள்!

ஜெ வாரிசாக வந்தபோதே, அவரை உளவு பார்க்க வந்த பெண்மணியோடு, மன்னார்குடிக் கொள்ளைக் கும்பலின் ஒவ்வொரு வாரிசும் அரசியலில் ஆட்டம் போடுவதும், திவாகாரன், சுதாகரன், இளவரசி, டாக்டர் வெங்கடேஷ், எல்லாவற்றுக்கும் மேலாக சின்னம்மா என்று அரசியல் நிபுணர்கள் அதிமுகவை நிர்வகிக்க, அவர்களுக்குக் கட்சியில் இருக்கும் செல்வாக்கும், அடிக்கும் கொள்ளைகளும் ஊரறிந்த ரகசியம்!


திமுக மாவட்டச் செயலாளர்களின் வாரிசுகள் அடித்த லூட்டிக்கு நூறுமடங்கு அதிகம் அதிமுக மாவட்டக் குறுநில மன்னர்கள் அடிக்கும் கொள்ளை!

இதற்கு பணிவுச் செல்வத்தின் தம்பி ஒருசோறு பதம்!

இவர்கள் மாற்றாய்ச் சுட்டும் கட்சிகள் இன்னும் கேவலம்!
விஜயகாந்த் மைத்துனன் மந்திரிசபை இலாகாக்களை அறிவித்ததும்,
சீமான் மனைவி மாற்று வேட்பாளர் ஆனதும் அவல நகைச்சுவையின் உச்சம்!
அன்புமணி யாருடைய மகன் என்பது வாரிசில் வராது!?

வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு கருணாநிதி மேல் மட்டும் வைக்கப்படுவது உள்நோக்கம் காரணமாகவே என்பது வெளிப்படை!

ஊழல்:

இதில், கருணாநிதி நட்ட விதை, அம்மா ஆட்சியில் ஆலமரமாய் வளர்ந்தது! நாற்பது பர்சண்ட் அரசாங்கம் என்று உலகப் புகழ் பெற்றது இந்த அரசு! ஒரு சாதாரண மாவட்டச் செயலாளரும் கோடிகளில் புரள்வதும், அமைச்சர்கள் அம்பானிகளாக மாறியிருப்பதும் கண்கூடு!

சமீபத்தில் ஐந்து மூத்த அமைச்சர்களிடம் ஆயிரக்கணக்கான கோடிகள் அம்மாவால் பறிமுதல் செய்யப்பட்டது அவர் கட்சிக்காரர்களாலேயே பெரும் சாகசமாகப் புகழப்பட்டது! அது நிச்சயம் நேர்மையாக உழைத்துச் சம்பாதித்த பணமாகத்தான் இருக்கும்!

இந்தியாவிலேயே, ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு சிறை சென்ற முதல் முதல்வர் என்ற அவமானமான பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார் அம்மா! தமிழர்கள் மானம் உலக அரங்கில் கொடிகட்டிப் பறந்தது!


1.7 லட்சம் கோடி உத்தேச இழப்பு என்பதை 1.7 லட்சம் கோடி ஊழல் என்றே திரித்தன ஊடகங்கள்!
இன்றுவரை அதன் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இங்கு தீர்ப்புகளே எழுதப்பட்டுவிட்டன!
அந்த விசாரணையை இழுத்தடிக்காமல் எதிர்கொள்கிறது திமுக!
பதினெட்டு வருடம் விசாரணையை இழுத்தடித்து அதிலும் சாதனை படைத்தார் அம்மா!
இன்று அந்தக் கத்தி உச்சநீதிமன்றத்தின் தலையில் தொங்கிக்கொண்டிருக்கிறது!

இடையில் விசாரணைக் கைதி ஆனார் தடம் மாறி அரசியலுக்கு வந்த கனிமொழி!
இரண்டுமுறை, வெவ்வேறு வழக்குகளில் ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனைக் கைதியானார் அம்மா!

இரண்டையும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பதோடு, அம்மா செய்தது ஊழலே இல்லை என்றும் சாதிக்கிறார்கள் அம்மா ஆதரவு நடுநிலைகள்!

ஊழல் தராசில் இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பதும் வெளிப்படை!

சுயதம்பட்டம்:

நெல்லுக்குக் கருணா என்று நாமகரணம் சூட்டிப் பிள்ளையார் சுழி போட்டவர் கருணாநிதி!
ஆனால் அதிலும் அம்மா அறுபதடி பாய்ந்தார்!
அரசுப்பணத்தில் அத்தனை திட்டங்களிலும் அம்மா பெயர்!
சமீபத்து ஸ்டிக்கர்களும், மணமக்கள் நெற்றிப்பட்டைகளும் உலகப் பிரசித்தம்!
அம்மா கழிவறைகளும், அம்மா சாராயக்கடைகளும் மட்டுமே இன்னும் பாக்கி!

நிர்வாகச் சீர்கேடு:


அதிலும் சிகரம் தொட்டவர் அம்மா!
அரசு அதிகாரிகளையும், அமைச்சர்களையும் விருப்பம்போல் பந்தாடுவதுதான் நிர்வாகத் திறமை என்றால், அதில் அம்மாவுக்கு ஈடு இணை இல்லை!
இன்றைய மின்சாரத்துறையின் அவல நிலையும், தாறுமாறாய் எகிறியிருக்கும் மாநிலத்தின் கடன் சுமையும், மாநிலத்தைவிட்டு ஓட்டம் பிடித்த முதலீடுகளும் அம்மாவின் அரிய சாதனைகள்!
சென்னை செயற்கைப் பேரிடர் போனஸ்!

தனி மனித ஒழுக்கம்:

இதில்தான் கருணாநிதி பெரிதும் தாக்கப்படுகிறார்.

அவருக்கு வெளிப்படையாய் ஒரு மனைவியும் துணைவியும் இருப்பது முக்கியத் தாக்குதல் காரணி!
அது முற்ற முழுக்க அவரது சொந்த விஷயம்!

மற்றபடி அவர் சின்னவயதுச் சேட்டைகள் இன்று எழுபது வருடங்களுக்குப்பின் கேவலமாக விமர்சிக்கப்படுவதின் உள்நோக்கம் என்ன?

கண்ணதாசனின் வனவாசம் வேதப்புத்தகமாகக் கொண்டாடப்படும் இணையத்தில், அம்மா அவரே எழுதிய வாழ்க்கைத் தொடர் ஏன் விவாதப் பொருள் ஆவதில்லை?

சோபன்பாபுவோடு கோயிங் ஸ்டெடி என்று அவர் புகைப்படத்தோடு எழுதிய தொடரைப் பதிப்பித்த அதே குமுதம் என்ற மஞ்சள் பத்திரிக்கைதான், கார்டூனிஸ்ட் பாலா என்ற வக்கிரவாதியை வைத்துக் குஷ்புவைப்பற்றிக் கார்ட்டூன் போடுகிறது!

கருணாநிதி குஷ்பு திருமணம் என்று வயிற்றுப்பிழைப்புக்கு விபச்சாரம் செய்யும் ஏடு அது!

எம்ஜியார் என்னை வலுக்கட்டாயமாக அரசியலுக்கு இழுத்துவந்தார் என்று குமுறிய அதே பெண்மணிதான் எம்ஜியார் மறைவில் வேறு நாடகம் போட்டார்!

எம்ஜியார் என்னை மகளாகத் தத்தெடுத்துக்கொண்டார் என்றும், எம்ஜியார் என் கணவர் என்றும் ஒரே மாத இடைவெளியில் கூச்சமே இன்றி அறிக்கை விட்டார்!

எம்ஜியாரின் மறைவுக்குப்பின் அவர் மனைவியா, இல்லை மனைவி என்று தானே சொல்லிக்கொண்டவரா என்று பலப்பரீட்சை நடத்திய தேர்தலில் இருவரையுமே வீழ்த்தினார்கள் மக்கள்!

அப்போது அம்மாவை அரவணைத்துக் காப்பாற்றியவர்கள் திருநாவுக்கரசரும் கேகேஎஸ்எஸ்ஆரும் !

ஒரு மதி மயங்கிய சூழலில் தனக்கும், ஜெவுக்குமான உறவு பற்றி ஜெ முதல்வரானபின் KKSSRR உளறித் தொலைக்க, அப்போதுதான் தன்னை எம்ஜியாரின் உண்மை வாரிசு என்று நிரூபித்தார் ஜெ!

ராமாவரத் தோட்ட உத்தி என்ன வேலை செய்ததோ, ஒரே வாரத்தில் மனைவியோடு வந்து அம்மா காலில் சாஷ்டாங்கமாக விழுந்தார்!

அதைப் பின்னாலிருந்து முழு அளவு புகைப்படமாக எடுக்கச் செய்து எல்லாப் பத்திரிக்கைகளிலும் மறுநாள் வரவைத்தார் அம்மா!

இந்தியன் எக்ஸ்ப்ரஸ் டெல்லிப்பதிப்பு அதிர்ந்துபோய் இதுபற்றி எழுதிய தலையங்கம் அப்போதைய பரபரப்பு!

இன்று மேலே பறக்கும் ஹெலிகாப்டருக்குத் தரையில் விழுந்து புரளும், அம்மா வாகனத்தின் டயரை சேவிக்கும், சாதாரணக் காட்சிகளுக்கு அதுதான் பிள்ளையார் சுழி!

தன்னைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் உபயோகித்துக்கொண்ட ஆண்களை உளவியல் ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கைதான் இந்தக் காலில் விழும் கலாச்சாரத்தை ஜெ ஊக்குவிப்பது!

இத்தனை அவலங்களும் இவர்கள் கொண்டாடும் மனவாச காலத்துக்குப் பல பத்தாண்டுகளுக்குப் பின் நடந்தவை!
இதைப்பற்றி, கலைஞரின் குடும்ப வாழ்வை அலசும் யாரும் ஏன் பேசுவதே இல்லை?

சக மனிதர்களுக்கு மரியாதை:

இதைப்பற்றிப் பேச அதிமுகவினருக்கு இன்னும் அருகதை இருக்கிறதா?
மக்களால் சந்திக்கவே முடியாத மகாராணியை அவரது மந்திரி பிரதானிகள் சந்திப்பதோ, தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்வதோ களவிலும் நடக்காத விஷயம்!
திமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களில் விவாதம் அனல் பறக்கும்!
ஆனால் அம்மா முன் முணுமுணுக்கும் திராணி இருக்கிறதா இந்த மங்குனி மந்திரிகளுக்கு?
"அம்மாவின் செருப்பைப் பொக்கிஷமாய்ப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்" என்று புளகாங்கிதப் பேட்டி கொடுக்கிறார் இன்று திமுகவுக்குத் தாவிவிட்ட கொங்கு நாட்டுச் சிங்கம்!

இது ஒன்று போதும் பெருமாள் முருகனை ஓடவிட்ட இந்த ஆண்ட பரம்பரையின் உண்மை சுயமரியாதை சொல்ல!

இத்தனை அவலங்களை மீறி அம்மாவைவிடக் கூடுதலாக இவர்கள் ஏன் கருணாநிதியை வெறுத்து விமர்சிக்கிறார்கள்?

கருணாநிதி ஆட்சியில் நடந்த நல்லவை ஏன் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன?

சிப்காட்களும் டைடல் பார்க்குகளும் மேம்பாலங்களும் அரசு மருத்துவக் கல்லூரிகளும், அண்ணா நூலகம் போன்ற அறிவுச் சோலைகளும் திரை போட்டு மறைக்க முடியாதவை என்பது அவரை வேறு காரணத்தால் நிந்திக்கும் அறிவாளிகளுக்குத் தெரியும்!

தலைமுறைகளாய்த் தாங்களே உயர்ந்தவர்கள் என்று மூளைச் சலவை செய்து ஆண்டவர்களுக்கு வேறு வழி தெரியாதா என்ன?

எதைப்பற்றிப் பேசினால் இளைஞர்கள் ஈர்க்கப்படுவார்கள் என்பது அவர்களுக்கா தெரியாது?

வெறுப்புத் தீயை நையாண்டித் திரையால் மறைத்தார்கள்!

கருணாநிதியின் தனிமனித ஒழுக்கம், மனைவி, துணைவி, வாரிசுகள் என்பதைப் பிரதான காரணமாக்கி தொண்ணூற்று நான்கு வயதுக் கிழவரை, இரண்டு பெண்களுக்குத் தாயானவரோடு இணைத்துப் பேசினார்கள்!

கட்டுமரம், தள்ளுவண்டி என்று நையாண்டி செய்யப்படும் முதுமை இப்படிப் பேசும்போது மட்டும் இருபது வயது இளமை ஆனது!

முன்னாள் நடிகை என்பதால் அவர் ஒழுக்கம் கெட்டவராகத்தான் இருப்பார் என்றால், இதே அளவுகோல், குடும்பம், துணை என்று ஏதுமே இல்லாத முன்னால் நடிகைக்குப் பொருந்தாதா?

இதுதான் இவர்களின் தரம், இதைத்தான் சொல்லிகொடுத்தது இவர்களின் கல்வி, வளர்ப்பு எல்லாம்!

தாங்கள் இவ்வளவு தரம் தாழ்ந்தாவது அவரைத் தாழ்த்தும் அவசியம் இவர்களுக்கு என்ன?

காரணம் மிக எளிமையானது!

இன்றுவரை இவர்கள் அடிவயிற்றில் தீ மூட்டியிருப்பது இட ஒதுக்கீடும், சமூக நீதியும்தான்!

இட ஒதுக்கீட்டில் பலன் பெற்று முதல் தலைமுறை அரசு உயர் அதிகாரிகள் பதவிக்கு வந்தபோது இந்த ஆண்டவர்கள் செய்த விமர்சனங்களும் ஏளனங்களும் இன்றுவரை தொடரத்தான் செய்கிறது!

தன உயர்வு பிறப்பால் வந்தது என்ற மூட நம்பிக்கையும் உயர்வு மனப்பான்மையும் அடிவாங்கிச் சரிவதை அவர்களால் எப்படிச் சகித்துக்கொள்ளமுடியும்?

அந்த வலி, பழிவாங்க அவர்களுக்குக் காட்டியதுதான் இந்தக் கேவலமான வழி!

குறிப்பிட்ட அறிவுசார் தொழில்கள் தமக்கு மட்டும்தான் சொந்தம் என்று இறுமாந்திருந்தவர்கள் அந்த இடத்துக்கு மற்றவர்களும் வந்து தம்மினும் சிறப்பாக வெல்வதைப் பார்த்து வெம்பி வெதும்பிப் போகிறார்கள் .

அது, இந்த மாற்றத்துக்கெல்லாம் காரணி என்று தாங்கள் கருதுபவர்கள் மீது சாக்கடையை வாரி இறைக்கிறது!

இந்த மனநிலை படித்தவர்கள் உலவும் இணையத்தில்கூட மாறவில்லை என்பதுதான் அவல நிஜம்!

படிக்காத பாமரர்கள் மிகத் தெளிவாகத்தான் இருந்தார்கள்!

கீழ்மட்டத்திலிருந்து வந்த படித்த இளைஞர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு!

கொஞ்சம் படித்து ஒரு நிலைக்கு வந்ததும் தங்கள் இயல்பு மொழியை, பழக்கவழக்கங்களை வெறுத்து மாற்றிக்கொள்ள முனைவார்கள்!

தங்களைவிடப் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஜாதியினரைப் போலப் பேசும் உச்சரிப்புக்கு மாற்றிக்கொள்வார்கள்!

அவர்கள் பழக்க வழக்கங்களை, அவர்கள் உணவுப்பழக்கத்தை, அவர்கள் தொழும் கடவுள்களை சிலாகித்துத் தங்களை அவர்களைப்போல் காட்டிக்கொள்ள முயல்வார்கள்!

இது தன் ஜாதி, பிறப்பு பற்றி விதைக்கப்பட்ட தாழ்வு மனப்பான்மையின் பின்விளைவு!

இணையத்திலும் அதுதான் நடந்தது!

அவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று அப்படியே ஏற்றுக்கொண்டார்கள்!

எதையும் காரண காரியத்தோடு சுயமாக யோசிக்க மறந்தார்கள்!

இவ்வளவு கேவலமான ஆண்டான் அடிமை அரசை வெளிப்படையாக ஆதரிக்கக் கூசிய இளைஞர் படை, அன்புமணி, சீமான், வைகோ, விஜயகாந்த் என்று தனக்குக் கண்ணில் பட்டவர்களை மாற்றாக எண்ணி, அவர்களின் கடந்த காலச் செயல்பாட்டை சற்றும் ஆராயாமல் அவர்கள் பின்னால் போனது!
அவர்களை மறைமுகமாக வழி நடத்திய ஆண்டவர்களுக்கு இது இன்னும் வசதியாகப் போயிற்று!

ஜெயலலிதா எதிர்ப்பு ஓட்டுக்கள் சிதறுவது கருணாநிதியை வராது தடுக்கும் என்பது அவர்களுக்குப் புரிந்தது!

தங்கள் நோக்கமும் நிறைவேறும், நடுநிலை முகமூடியும் பொருந்திப்போகும் என்று இரட்டை பலனை அறுவடை செய்ய முனைந்தார்கள்!

சந்தோசம் மறைத்த புன்னகையோடு இளைஞர்களைத் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார்கள்!

அவர்கள் கொஞ்சம் யோசிக்கிறார்கள் என்று பட்டால், 2ஜி, ஈழம், வாரிசு, கட்டுமரம் என்று மடை மாற்றிக்கொண்டே இருந்தார்கள்!

இப்படி இவர்கள் அலைமோதிக்கொண்டிருக்க, தங்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அம்மாவுக்குப் போட்டார்கள்!

தேர்தல் முடிந்த கையோடு, "இந்த மாற்றம் என்று வந்த கூட்டம் அடித்த கூத்தில் நம்பிக்கை இல்லாமல், மோசம் என்று தெரிந்தாலும் அம்மாவுக்குத்தான் வாக்களித்தோம்!” என்று லஜ்ஜையே இல்லாமல் சொன்னார்கள்!

வழக்கம்போல், அதையும் கேள்வி கேட்காமல் மந்தைகளாய் ஆதரித்தது இணையம்!

நினைத்ததை முடித்த நிம்மதியில் இன்று ஏகடியம் பேசுகிறார்கள்!

ஆனாலும், அவர்களுக்குப் பல்லிடுக்கில் சிக்கிய பாக்குத் தூளைப்போல சில விஷயங்கள் உறுத்தின!

திமுக,அவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிக இடங்களைப் பெற்றது! அவர்களின் ஆதர்ஷ நாயகியின் கட்சி பெரும்பான்மை பெற்றாலும் இரண்டு இடங்களில் டெபாசிட் இழந்தது!

திமுகவுக்கு விழுந்த வாக்குகள் மக்கள் நலக் கூட்டணித் தொண்டர்கள் மாற்றிப்போட்டவை என்று கூசாமல் புளுகி, சுய ஆறுதல் அடைந்தார்கள்!

அவர்கள் எப்போதுமே இப்படித்தான்!

கருணாநிதி மட்டுமல்ல!
தலைமுறைகளாகத் தங்கள் ஆளுமையைக் கேள்வி கேட்ட எல்லோருமே அவர்களுக்கு விரோதிகள்தான்!

ஜாதி சார்ந்த வேறுபாடுகளை எதிர்த்து, இந்த அமைப்பிலிருந்து வெளியேறியவர்களைக்கூட அவர்கள் மன்னித்துவிடுவார்கள்
ஆனால் உள்ளே இருந்துகொண்டே அதை உடைக்க முயலும் கலகக்காரகள் என்றும் அவர்களுக்கு என்றும் கசப்பானவர்களே!

அப்படி வந்த கசப்பு மருந்து பாரதி!

பூணூலை அறுத்தெறிந்துவிட்டு சேரிக்குக் குடி பெயர்ந்திருந்தால் பாரதி அவர்களால் மன்னிக்கப்பட்டிருப்பான்!

நீ உன் உயர்வு எதுவென்று நினைக்கிறாயோ, அதை இவர்களுக்கும் தந்து இவர்களை உங்களுக்கு இணையாக்குவேன் என்று சேரிக்குழந்தைகளுக்குப் பூணூல் அணிவித்தும், வேதம் கற்பித்தும் அவர்களுக்கு இணையாக உட்காரவைத்ததில் அவன் அவர்களுக்குப் பரம விரோதி ஆனான்!

"பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே" என்று ஒரு பிராமணன் கூற்று அவர்களுக்கு சர்வாங்கத்தையும் எரித்தது!

அப்படிப்பட்ட தங்கள் முன்னோடியான பாரதியை, அவன் பிறந்த ஜாதியை வைத்து அங்கீகரிக்காமல் உதாசீனம் செய்தது திராவிடக் கட்சிகளின் மடமை!

இட ஒதுக்கீடு, சமூக நீதி என்று தன் முன் கூனிக்குறுகி வணங்கி நின்றவர்களைக் கை பிடித்து மேலே கூட்டிவரும் வேலையில் முனைப்புக் காட்டியதுதான் ஆரம்பகால திராவிடக் கட்சிகளின் மீதான அவர்கள் ஆத்திரத்தின் காரணி!

அதன் இன்றைய வாழும் கடைசி பிரதிநிதி கலைஞர் என்பது அவர்கள் வயிற்றில் தீ மூட்டுகிறது!

மதமாற்றத் தடைச் சட்டம், கோவில்களில் உயிர்ப்பலிக்குத் தடை என்ற நடவடிக்கைகள் அவர்களின் ஒளிவிளக்காக ஜெயை சுட்டிக்காட்டியது - தங்களவர் என்ற அடிப்படைத் தகுதிக்கு மேலாக!

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது தட்டில் விழும் பிச்சைக் காசுகளுக்காக அல்ல!

செய்யும் தொழிலை வைத்தே ஜாதிகள் தீர்மானிக்கப்படும் என்ற நிலையை மாற்றவே!
உன்பிறப்பு உன் தொழிலைத் தீர்மானிக்கும் இழிநிலை மாறட்டும், சில தொழில்கள் மட்டும்தான் புனிதமானது, அது சிலருக்கு மட்டுமே பிறப்புரிமை என்ற மூட நம்பிக்கை ஒழியட்டும் என்பதற்காகவே!

ஒருவன் வழிபடும் தெய்வம், சாப்பிடும் உணவு, செய்யும் தொழில் இவை அவனது உயர்வு தாழ்வைத் தீர்மானிக்கும் அவலத்தை மாற்றும் முயற்சி தங்கள் ஆதிக்க ஆணவத்தின்மீது விழும் பேரிடி என்றும், அதை முன்னெடுப்பவன் தங்கள் பரம் விரோதி என்றும் அவர்கள் நினைப்பது ஒருவகையில் புரிந்துகொள்ளக் கூடியதே!

ஆனால், தங்களைப் புதிய ஆதிக்க சக்தி என்று சொல்லிக்கொள்பவர்களும், இந்த மாறுதலால் பலன் பெற்ற குலத்தின் இளைஞர்களும் அவர்கள் வலையில் தாங்களே போய் விழுந்து, தங்கள் கைகளால் தங்கள் கண்களைக் குத்திக்கொள்ளும் அவலத்தை என்ன சொல்வது?

தங்கள் மீது திணிக்கப்படும் எதையும் அதற்கான காரண காரியத்தை ஆராய்ந்து முடிவெடுக்கும் பகுத்தறிவை இந்தக் கல்விமுறை கற்பிக்காதது துரதிர்ஷ்டம்!

யாரையும் நீங்கள் கொண்டாடுங்கள்!

யாரையும் நீங்கள் தூற்றுங்கள்!

ஆனால், அதற்குமுன், வெறும் இரண்டு தலைமுறை வரலாற்றை ஊன்றிப் படியுங்கள்!

உங்கள் பாட்டனுக்கும், பூட்டனுக்கும் மறுக்கப்பட்ட உரிமைகளும், கல்வியும் உங்கள் முந்தைய தலைமுறைக்கும் உங்களுக்கும் தடையின்றிக் கிடைக்க, யார், எந்த இயக்கம் காரணம் என்று கேட்டறியுங்கள்!

பிறகு, அந்த அறிவால் முடிவெடுங்கள்!

இனி வரும் இளைஞர் பட்டாளமாவது சுயமாக யோசிக்கப் பழகட்டும்!

இல்லையேல் தலைமுறைகளாகத் தாங்கள் தோற்கடிக்கப்படும் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வழக்கம்போல் வீழ்ந்துபடட்டும்!

indiavaasan at 09:25