Showing posts with label DIALOGUES. Show all posts
Showing posts with label DIALOGUES. Show all posts

Thursday, 18 February 2021

KANTHAN KARUNAI -SIVAJI GANESAN DIALOGUES

 


KANTHAN KARUNAI -SIVAJI GANESAN DIALOGUES




தமிழ்க் கடவுள் முருகனின் அருமையை சுவைபடக்கூற எடுக்கப்பட்ட படம் தான் `கந்தன் கருணை’.
இந்தப் படத்தில் சிவாஜி, கவுரவ வேடத்தில் வீரபாகு தேவனாக நடித்திருப்பார்.
இந்தப் படத்தில்தான் தமிழ் எப்படி விளையாடியிருக்கிறது?
டி. ராஜேந்தர் எழுதும் வசனங்களையெல்லாம் ஏ.பி. நாகராஜன் அப்போதே புராணப் படங்களில் எழுதிவிட்டார்.
`கந்தன் கருணை’ ஒரு உதாரணத்திற்கு பார்ப்போம்!
சூரனை வதைக்கும் போரில் கந்தனின் படைத் தளபதி வீரபாகு தேவர் வேடம்தான் சிவாஜி கணேசனுக்கு !
போரில் கந்தன் வெற்றி பெற்றவுடன், பாடும் பாடல் வெற்றிவேல்
வீரவேல், சுற்றி நின்ற பகைவர் தம்மை தோள்நடுங்க வைக்கும் எங்கள் சக்திவேல், ஆதி சக்திவேல்’ பாட்டிற்கு சிவாஜி ஒரு நடை நடந்து வருவார்.
தியேட்டரே அதிரும் வண்ணம் கைத்தட்டல்! இந்த படத்தில் ஒரு காட்சி!
போருக்கு முன் சூரபத்மனிடம், வீரபாகுவை தூதாக அனுப்புவார் முருகன். இதில் சூரபத்மனாக அசோகன் நடித்திருப்பார்.
சூரனின் சபை. அங்கே சூரன் `என்னை வெல்லுமளவிற்கு அந்த குமரனுக்கு வல்லமை எங்கிருந்து வந்தது? எவர் கொடுத்த சக்தி அது? எப்படிப்பட்டவன்? அவன் யாராக இருப்பான்?’ என்று சபையில் உரக்க கேட்டுக்கொண்டிருப்பான். அப்போது தூதனாக வீரபாகு அவனது சபையில் தோன்றுவான்.
வீரபாகுவான சிவாஜி கணேசன்
பேசுவார் –`அவனையா யார் என்று கேட்கிறாய்? உன்னை ஒழிப்பதற்கென்றே உலகில் தோன்றியவன்! வேலோடு வந்திருப்பவன்! உன்னால் வேதனைப்படும் அமரர்களை விடுவிக்கப் போகிறவன்! வேலன்! வேதத்திற்கு சீலன்! பார்வைக்கு பாலன்! பகைவருக்கு காலன்!’ என்பான் வீரபாகு!
`எத்தனை பெயர்கள் அவனுக்கு ?’ இது சூரபத்மன்.
`கந்தனென்பார், கடம்பனென்பார், கார்த்திகேயனென்பார்! முருகனென்பார், குகனென்பார், சண்முகனென்பார்! உன்னையும் வதைத்த பின் சூரனையும் வதைத்த சூரன் என்பார்.’
`போதும் நிறுத்து, வார்த்தையிலே அழகு கூட்டி, வர்ணனையில் ஜாலம் காட்டி,சொல் அலங்காரத்துடன் என்னைப் பேட்டி காண வந்திருப்பவனே! யார் நீ?’
`சொல்லுக்கும் பொருளுக்கும், முத்தமிழுக்கும், தமிழின் இனிமைக்கும்,ஆயகலை அறுபத்தி நான்கிற்கும், ஆறு சாஸ்திரத்திற்கும், நான்கு வேதத்திற்கும், முன்னை பழமைக்கும், பின்னை புதுமைக்கும் தலைவன் அவன்! அவனே வேலவன்! அவன் அனுப்பிய தூதுவன்! வீரபாகு தேவன்!’
`ஓ! வேலவன் அனுப்பிய தூதுவனோ?’
`தூதுவன் மட்டுமல்ல நன்மையை எடுத்து ஓதுபவனும் கூட !’
அப்போது சூரபத்மனிடம் தம்பிமார்கள் சீற்றமாக எழுந்து `வீரபாகு’ என்று கத்துவார்கள்.
`ஏய்! சூரன் மட்டும் பேசட்டும். மற்றவர்கள் வாயடக்கி இருக்கட்டும். இருக்கையில் அமரட்டும்’ – இது வீரபாகு!
`சற்றுப்பொருங்கள். இவனை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்பான் சூரபத்மன்!
`நீ பார்த்துக் கொள்வாய்! நான் பார்த்துக் கொல்வேன்.’
`ம்! எங்கு வந்தாய்? எதற்காக வந்தாய்? வந்த விஷயத்தைக் கூறு! சுருக்கமாகச் சொல்லிவிட்டு ஓடிவிடு!’
`படிப்பையெல்லாம் கற்றாயே தவிர, பண்பை கற்க மறந்துவிட்டாய்! நீ என்ன செய்வாய் பாவம்! என்று உன் தங்கை அகமுகி அடிபட்டு வந்தாளோ அன்றே உன் அறிவு மங்கிவிட்டது! தூதாக வந்தவனை கவுரவித்து, ஆசனமளித்து, அமரச் செய்து பிறகு வந்த நல்ல விஷயத்தை கேட்பதை விடுத்து, நிற்க வைத்துக் கொண்டே பேசுகிறாயே! இதுதான் நீ கற்ற கலையோ?’
`ஹா! ஹா! ஹா! ஆசனமா? உனக்கு நான் கொடுக்கவா ? பைத்தியக்காரா! அசுர குலத்தவர் அமரும் அரசவையிலே மாற்றான் எவனுக்கும் ஆசனமில்லை என்று அன்றே ஆணையிட்டுவிட்டேன். தேவையென்றால் நின்று சொல்! அல்லது ஓடிவிடு!’
` நீ என்ன எனக்கு ஆசனம் தருவது? சரவணப் பெருமான் அருளால் உனக்கு சமமான ஓர் ஆசனத்தை நானே ஏற்படுத்திக்கொண்டு, அதில் அமர்ந்து பதில் சொல்வேனேயல்லாமல் நானாவது நின்றாவது பதில் சொல்வதாவது! பேசுவதாவது!’
`முருகா’ என்பான் வீரபாகு, சூரனுக்கு சமமான ஆசனம் வரும். அதில் அமர்ந்து கொள்வான் வீரபாகு!
`இப்போது உனக்கும் சிம்மாசனம்! எனக்கும் சிம்மாசனம்! அங்கே பணிப்பெண்கள்! இங்கேயும் பணிப்பெண்கள்! நீ சூரன்! நான் வீரன்! சரிதானா?’ என்றபடி வாய்விட்டு சிம்ம கர்ஜனையோடு சிவாஜி ...
சூரபத்மன் : வீரபாகு! இந்த மாதிரி மந்திரஜாலங்களைக் கண்டு நான் பயந்துவிடுவேன் என்று எண்ணிவிடாதே! மாயை என்பவள்தான் என்னைப் பெற்றெடுத்த தாய். தெரியுமா உனக்கு?
வீரபாகு : அந்த மாயையைப் படைத்த பரமனின் பிள்ளைதான் வேலவன். அது தெரியுமா உனக்கு?
சூரபத்மன் : அவன் தந்தையிடம்தான் உலகில் எந்த சக்தியாலும் என்னை அழிக்கக் கூடாது என்கிற வரத்தைப் பெற்றிருக்கிறேன். அதை அறிந்தாயா நீ?
வீரபாகு : வரத்தைப் பெற்றபின் உன் தரத்தில் நீ தாழ்ந்துவிட்டாயென்றுதான் பன்னிரண்டு கரத்தோடு ஆறுமுகத்தைப் படைத்திருக்கிறான் பரமன் என்பதை அறிந்தாயா நீ?
சூரபத்மன் : ஆறுமுகமானால் என்ன, ஆறாயிரம் முகம் படைத்தவனானா என்ன? இந்த சூரனை அழிக்க ஒருவன் பிறக்கவுமில்லை. இனி பிறக்கப் போவதுமில்லை.
வீரபாகு : உன்னை வெல்லவோ,கொல்லவோ குமரன் தேவையில்லை. நான் என் சொல்லினாலேயே கொன்றுவிடுவேன். ஆனால், அது வேலவனின் வேலுக்கு பெருமையில்லையே என்று உன்னை மன்னித்தேன் போ!
சூரபத்மன் : நீயா, என்னை வெல்லவா? உன்னால் என்ன செய்ய முடியும்?
வீரபாகு : என்ன செய்ய முடியுமா? உனக்காகவே தாண்டி வந்தேன் கடலை! வாங்குவேன் உன் உடலை! அணிவேன் மாலையாய் குடலை! ஆனால் என் முருகன் கட்டளை இடலை! அதனால் உன்னைத் தொடலை!

Saturday, 8 August 2020

KARUNANIDHI`S BULLET DIALOGUES






KARUNANIDHI`S BULLET DIALOGUES


டாக்டர் கலைஞரின் கனல் தெறிக்கும்வசனங்கள்.

"கோவில் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது": அனல் பறந்த கலைஞரின்  வசனங்கள்!

கலைஞர் முதன் முதலில் மாணவர் நேசன்,முரசொலி,
துண்டுப் பத்திரிக்கைகளை ஆரம்பித்து தனது எழுத்தாற்றலை வளர்த்துக் கொண்டார்.இவர் முதலில் வசனம் எழுதிய படம் அபிமன்யு.

முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர்  அனல் பறக்கவிட்ட சில வசனங்களைப் பார்க்கலாம்.

மந்திரிகுமாரி படத்தில் குண்டலகேசியின் ஒரு பகுதியை படமாக மாற்றினார் கலைஞர்.

அப்படத்தில் ‘போன்னா போறே வான்னா வாறே நீ போக்குவரத்து மந்திரி,

மந்திரி பதவி வந்ததும் தெரியலை போனதும் தெரியலை.’ உள்ளிட்ட வசனங்கள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியது.

பராசக்தி:
பின் பராசக்தி படத்தில்,கதாநாயகன் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் "ஓடினாள், ஓடினாள்..வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்". "என் செயலை சுயநலம் என்பீர்கள், ஆம்.. சுயநலம் தான்.ஆகாரத்திற்காக அழுக்கைத் தின்று தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன். அதுபோல என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது'‘

பகுத்தறிவு:

"கோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாராமாகி விடக்கூடாது"...... உள்ளிட்ட வசனங்கள் கருணாநிதிக்கு பெரும் புகழ் பெற்றுத் தந்தது

மனோகரா:
பொறுத்தது போதும்.. பொங்கியெழு' என்கிற தாய் கண்ணாம்பாவும், ‘என் தாயைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்"சிவாஜியும் கலைஞரின் வசனத்தில் போட்டி போட்டு நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்கள்.

அரசர்: மனோகரா! உன்னை எதற்காக அழைத்திருக்கிறேன் தெரியுமா?

மனோகரன்: திருத்திக் கொள்ளுங்கள் அரசே! அழைத்து வரவில்லை என்னை. இழுத்து வரச் செய்திருக்கிறீர்கள்.

அரசர்: என் கட்டளையைத் தெரிந்து கொண்டிருப்பாய் நீ.

மனோகரன்: கட்டளையா இது? கரை காண முடியாத ஆசை! பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே, `வீரனே! என் விழி நிறைந்தவனே!' என்று யாரைச் சீராட்டி பாராட்டினீர்களோ அவனை அந்த மனோகரனை சங்கிலியால் பிணைத்து, சபை நடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்ற தங்கள் தணியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா தந்தையே?

அரசர்: நீ நீதியின் முன்னே நிற்கும் குற்றவாளி! தந்தையின் முன் தனயனல்ல இப்போது!

மனோகரன்: குற்றவாளி! நான் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன்?

என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார்?

அரசே! தந்தையின் முன் தனயனாக அல்ல,

பிரஜைகளில் ஒருவனாக கேட்கிறேன். கொலை செய்தேனா?

கொள்ளையடித்தேனா?

நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலை நான் செய்தேனா?

குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே, குற்றம் என்ன செய்தேன்?கூறமாட்டீர்களா? நீங்கள் கூற வேண்டாம்.

இதோ அறங்கூறும் அமைச்சர்கள் இருக்கிறார்கள்.

மறவர் குடிப்பிறந்த மாவீரர்கள் இருக்கிறார்கள்!

மக்களின் பிரதிநிதிகள் இந்த நாட்டின் குரல்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூறட்டும்... என்ன குற்றம் செய்தேன்?

சபையோர்: குற்றத்தை மகாராஜா கூறத் தான் வேண்டும்.*

அரசர்: இது உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது.

மனோகரன்: சம்பந்தம் இல்லாதது சபைக்கு வருவானேன்?

குடும்பத் தகராறு கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இன்று தான் முதன் முதலாகச் சந்திக்கிறது மகாராஜா!

அரசர்: போதும் நிறுத்து... வசந்த விழாவில் நீ செய்த தவறுக்காக வசந்தசேனையிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

மனோகரன்: அதற்குத் தான் காரணம் கேட்கிறேன்!

அரசர்: எதிர்த்துப் பேசுபவர்களுக்கு ராஜசபையில் என்ன தண்டனை தெரியுமா?

மனோகரன்: முறைப்படி மணந்த ராணிக்கு சிறைத்தண்டனை அளித்து விட்டு, மூலையில் கிடந்ததற்கு முடிசூட்டியவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையை விடக் குறைவானது தான்.

அரசர்: ஆத்திரத்தைக் கிளப்பாதே! நிறைவேற்று. அரசன் உத்திரவு.

மனோகரன்: அரசன் உத்திரவென்ன?

ஆண்டவனின் உத்திரவுக்கே காரணம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

அரசே! சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டும் தாய் என்று கேள்விப்பட்ட பின்னும் அடங்கிக் கிடப்பவன் ஆமை!

அரசன்: தாய்க்கும், தந்தைக்கும் வேற்றுமை அறியா மூடனே! தந்தையின் ஆணை கேட்டு தாயாரின் தலையை வெட்டி எறிந்த பரசுராமனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா நீ?

மனோகரன்: பரசுராமன் அவதாரம். மனோகரன் மனிதன்!"



பூம்புகார்:

யார் கள்வன் ?

என் கணவன் கள்வனா?

அவரைக் கள்வனென்று சொன்ன இந்த அவையோரே கள்வர் நல்லான் வகுத்ததா நீதி

இந்த வல்லான் வகுத்ததே நீதி

இதுகோப்பேருந்தேவியின் சிலம்பு இல்லை

இது கோவலன்தேவியின் சிலம்பு நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியனே உனக்கு செங்கோல் எதற்கு மணிமுடி எதற்கு

வெண்கொற்றக் குடை எதற்கு? என்ற பூம்புகார் வசனம் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.


பகிர்வு