Showing posts with label HINDUS. Show all posts
Showing posts with label HINDUS. Show all posts

Friday, 26 February 2021

DMK AND ABOLISION OF HINDUS THROUGH SUPPORTING CHRISTIANITY AND MUSLIMS

 DMK AND ABOLISION OF HINDUS THROUGH

SUPPORTING CHRISTIANITY AND MUSLIMS



இந்து மதத்தை அழிக்கும் ஒப்பந்தம் 1967-இல் திமுகவிற்குத் தரப்பட்டது.

இதற்காகவே திரு.அண்ணாதுரை, கருணாநிதி 1967-இல் வாட்டிகன் சென்று வந்தனர்.

அன்னிய கைகூலியாகிய திமுகவினர்  தமிழகத்தில்  முதல் கட்ட நடவடிக்கையாக இந்து மதத்தை அழிக்க   வாடிகன் போப்பாண்டவருடன் போடப்பட்ட ஒப்பந்தம்.

அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 

1) கோவிலில் ஓதுவார்கள் 

(தேவாரம், திருவாசகம் படிப்பவர்கள், ஒதுபவர்கள்) 

பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

2)  மணியக்காரர்களாக இருந்த 

முக்கியமாக கணக்கப் பிள்ளை, பிராமணர், கொங்குவேளாளக் கவுண்டர், முதலியார் உள்ளிட்டோர் பணியிலிருந்து

நீக்கப்பட்டனர்.

ஏன் என்றால், இவர்களுக்குக் கோவில் நிலங்கள், தானம் பெறப்பட்ட நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், அதில் உள்ள மரங்கள், விளைச்சல், வருவாய் குறித்த எல்லாம்  ஞாபகத்தில் இருக்கும். 

இவற்றைத் தங்களது வாரிசுகளுக்கும் சொல்லிவிட்டுச் சென்றனர்.

காலை, மாலையில் நடக்கும் போதே நோட்டம் இடுவார்கள், யாரும் இடத்தை அபகரிக்கிறார்களா என்று. 

இந்த மணியக்காரர்களை விரட்டினால் தானே ஏமாற்றுக்காரர்கள், கோயில் நிலத்தைப் பட்டா போட முடியும்?இவர்களை விரட்டிய பின்பு தான் கோயில் நிலங்களை பட்டா போட்டு அபகரித்தனர்.

3) எல்லோரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற பிரச்சனையைக் கிளப்பிவிட்டால், இதன் மூலம் குழப்பம் ஏற்பட்டு, கோவிலில் கும்பல் / கூட்டம் வருவது குறையும்.

4) இந்துக் கோவில்களை மட்டும் அரசுடமைப்படுத்தி, இந்து சமய அறநிலையத்துறை என நாடகம் ஆடி, அரசுப் பணி என்ற பெயரில், இந்து மத நம்பிக்கை இல்லாத கிறிஸ்தவர்களையும், கடவுள் நம்பிக்கை அறவே இல்லாத திராவிடர் கழகம், திமுக., கட்சிக்காரர்களையும் நியமித்து, ஒரு பக்கம் இந்து மதத்தைச் சீரழிப்பது. 

இன்னொரு பக்கம் திமுக-விற்கு நிரந்தர கிறிஸ்தவ வாக்கு வங்கியை உண்டாக்கியது.

5) கோவில் சிறப்பு நுழைவுச் சீட்டு என்று போட்டு, பக்திக்கு உள்ள இடத்தைக் கேளிக்கை இடமாக மாற்றியது.

6) கோயில் ஆகம விதிமுறைகளுக்கு எதிராக, கோயிலுக்கு உள்ளேயே கடைகள், விடுதிகள், கட்டணக் கழிப்பறைகளை ஏற்படுத்தி, கொள்ளையர்கள் சம்பாதிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தது.

7.லட்சக்கணக்கான ஏக்கர் கோயில் மானிய நிலங்களை போலியாக பட்டா போட்டு அபகரித்தது.

இப்படி, அமைதியைத் தேடி ஆன்மீகக் காரியங்களுக்காக பக்தர்கள் வரும் கோயில்களின் நிலைமாறி, அவற்றை வர்த்தக மையங்களாக மாற்றியது திராவிட  திமுக., ஆட்சியாளர்களின் சாதனை. 

இதன் மூலம் இந்து சமயத்தை அழிப்பது. இதுதான் அன்னிய கைகூலிகளாகிய ஈவெரா, அண்ணாதுரை, கருணாநிதி உள்ளிட்ட  சக்திகளின் திட்டம்.

இதன் மூலம் அன்னிய கைகூலியாக திகவினர் லட்சம் கோடிகளுக்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளது அனைவரும் அறிந்ததே.

 இந்த கைகூலி திகவினர் கிறிஸ்தவர்களிடம் லட்சம் கோடிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

கீழ்காணும் இந்த சொத்துக்களை ஈரோட்டு ராமசாமி நிர்வகித்து வந்தான்.அவனுக்கு பின்பு மணியம்மை நிர்வகித்ததார் அவருக்கு பின்பு தற்போது  வீரமணி நிர்வகித்து வந்தான் அவனுக்குப்பின் பின்பு வீரமணி மகன் அன்பழகன் இதன் நிர்வாகியாக ஆக்கப்பட்டுள்ளான்.

இதன் சொத்து மதிப்பு கடந்த மாதம் வரை 1லட்சம் கோடியை தாண்டுமாம்.

பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சி

நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சி

பெரியார் தொடக்கப்பள்ளி, திருச்சி

பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி

நாகம்மையார் குழந்தைகள் இல்லம், திருச்சி

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, திருச்சி

பெரியார் நூற்றாண்டு மழலையர் பள்ளி, திருச்சி

சாமி கைவல்யம் முதியோர் இல்லம், திருச்சி

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி, திருச்சி

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, பெரியார் நகர்(வல்லம்) தஞ்சாவூர்

பெரியார்- மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, செயங்கொண்டம்

பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சில்லத்தூர்,வெட்டிக்காடு

பெரியார் சமூகத்தொடர் கல்விக் கல்லூரி, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் வணிகவியல் பயிற்சி மய்யம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார்- மணியம்மை இலவச மருத்துவமனை, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் மருத்துவமனை குடும்பநல மய்யம் பெரியார் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் ஊரக மரபு சாரா ஆற்றல் ஆய்புக் கல்வியகம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் உயிரி தொழில்நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் பால்பண்ணை, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் கணினி மய்யம், திருச்சி

பெரியார்-மணியம்மை இலவச மருத்துவமனை,திருச்சி

பெரியார் சமூகத் தொடர் கல்வி கல்லூரி,திருச்சி

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், சென்னை

பெரியார் தத்துவக்கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு, சென்னை

பெரியார் அருங்காட்சியகம், சென்னை

பெரியார்- மணியம்மை இலவச மருத்துவமனை,சென்னை

பெரியார் நகர குடும்பநல மய்யம், சென்னை

பெரியார்நகர நலவாழ்வு நிலையம், சென்னை

பெரியார் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் பயிற்சி மய்யம், சென்னை

இளைஞர் வழிகாட்டும் மய்யம், சென்னை

பெரியார் கல்வியகம், சென்னை

பெரியார் இலவச சட்ட உதவி மய்யம், சென்னை

பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம், சென்னை

பெரியார் கணினி ஆய்வுக்கல்வியகம், சென்னை

பெரியார் பயிற்சி மய்யம், சென்னை

பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம், சென்னை

பெரியார் இலவச மருத்துவமனை சோழங்கநல்லூர்

பெரியார் மருத்துவமனை- குடும்பநல மய்யம், சோழங்க நல்லூர்

டாக்டர் மரகதம் மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

பெரியார் மகளிர் மேம்பாடு- மறுமலர்ச்சி நிறுவனம், சென்னை

பெரியார் வலைக்காட்சி, சென்னை

பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை, சென்னை

பெரியார் மய்யம், பாம்நொலி, புதுடெல்லி

பெரியார் மய்யம், ஜசோலா, புதுடெல்லி.

இந்து மதத்தை அழிக்க  அன்னியனுக்கு துணை போன துரோகிகள் சொத்து மதிப்பை பார்த்தீர்களா.

 விழித்துக்கொள்ளுங்கள்.



Monday, 26 March 2018

WE ARE NOT HINDUS ... WE ARE LINGAYATS





WE ARE NOT HINDUS ...
WE ARE LINGAYATS


நாங்கள் ஏன் இந்துக்கள் இல்லை’ - 
லிங்காயத்துகள் அடுக்கும் காரணங்கள்

பிரமிளா கிருஷ்ணன்

கர்நாடக மாநிலத்தில் லிங்காயத்து என்ற சமூக பிரிவை, இந்து மதத்தின் ஒரு பிரிவாக இல்லாமல், புதிய மதமாக அம்மாநில அரசு அங்கீகரித்து, லிங்காயத்து மதத்தை சிறுபான்மையினராக அறிவிக்கவேண்டும் என மத்திய அரசிடம் கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

பல ஆண்டு காலமாக கர்நாடகாவில் உள்ள லிங்காயத்து மக்கள் நடத்திவந்த போராட்டத்தின் விளைவே இந்த புதிய அறிவிப்பு என்றும், இந்து மதத்தில் இருந்து பல விதங்களில் வேறுபடும் லிங்காயத்து வழிபாடு, தனி மதம் என்பது ஆராய்ச்சி வாயிலாக நிரூபிக்கப்பட்ட உண்மை என்கிறார்கள் மதங்கள் குறித்து ஆய்வுகள் நடத்தும் ஆராய்ச்சியாளர்கள்.

வேதம், ஆகமம் இல்லாத மதம்
''லிங்காயத்திசம்- ஒரு தனி மதம்''(Lingayatism, An independent religion) என்ற புத்தகத்தை எழுதியவரும் 29 ஆண்டுகள் தத்துவத்துறையின் பேராசிரியராக பணிபுரிந்த எம்.என். மகாதேவப்பா, மூடநம்பிக்கைகளைப் பெரிதும் எதிர்க்கும் மதமாக 12ம் நூற்றாண்டில் பசவண்ணா லிங்காயத்து மதத்தை உருவாகினார் என்கிறார்.


'வேதங்கள், புராணங்கள், ஆகமங்களை நிராகரிக்கும் மதமாகவும், யாகங்கள் தேவையற்றவை என்றும் பசவண்ணா லிங்காயத்து மதத்தை ஏற்படுத்தினார். கடவுளுக்கு பலி கொடுக்கும் வழக்கம் லிங்காயத்து வழிபாட்டில் இல்லை. 12-ஆம் நூற்றாண்டில் பசவண்ணா எழுதிய கருத்துகள், பின்னர் வந்த அக்கம்மா தேவி போன்றோர் வகுத்த நெறிகளைக் கொண்டதாக இந்த வழிபாடு உள்ளது என்பதால், தற்போது இந்து மதம் என்ற அறியப்படும் வழிபாட்டு முறையில் இருந்து லிங்காயத்து சமூகம் முற்றிலும் வேறுபடுகிறது'' என்கிறார் மகாதேவப்பா.

லிங்காயத்து வழிபாடு தொடர்பாக 18 புத்தகங்களை எழுதியுள்ள மகாதேவப்பா, ''தற்போது இந்து மதத்தின் கீழ் ஒரு சாதி பிரிவாக லிங்காயத்து வழிபாடு கருதப்படுகிறது. சாதி பாகுப்பாட்டை எதிர்த்தவர் பசவண்ணா. லிங்காயத்து மக்கள் அணிந்துள்ள லிங்கம், சைவ கோயில்களில் உள்ள லிங்க வடிவம் அல்ல. பீடம் இல்லாமல், ஆதிகால லிங்க வடிவத்தை கொண்ட அமைப்பு அது,'' என்றார் அவர்.

லிங்காயத்து வழிபாடு முறை எவ்வாறு இந்து மதத்தில் இணைக்கப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள சென்னை பல்கலைக்கழகத்தின் சைவசித்தாந்த துறையின் தலைவர் சரவணனை சந்தித்தோம்.

''லிங்காயத்து மக்கள் அணியும் லிங்கத்தை சைவ மதத்தோடு இணைத்துப் பார்ப்பதால் வரும் குழப்பம் தான் இது. வரலாற்று ரீதியாக பார்த்தால், இந்து என்ற ஒரு மதம் கிடையாது. ஆறுவகையான மதங்களை தொகுத்து தற்போது பழக்கத்தில் இருப்பது இந்துமதம். சிவன், திருமால், முருகன், கணபதி, சக்தி, சூரியன் என ஒவ்வொரு கடவுளும் தனித்தனி மதங்களாக வழிபடப்பட்ட தெய்வங்கள். அரசியல் காரணங்களுக்காகவும், திருக்கோயில்களை நிர்வாகம் செய்யவும், பூர்வ ஆச்சாரியர்கள் இந்த மதங்களை இணைத்தனர்,'' என்றார்.

அவர் தொடர்ந்து, ''வேதம், தொல்காப்பியம், சங்கநூல்கள் போன்ற எதிலும் இந்து என்ற வார்த்தையே கிடையாது என்பது வெளிப்படை. ஆறு மதங்கள் இணைக்கப்பட்டு இந்துமதம் என்று கருதப்பட்டது போல, முன்னர் ஒரு பிரிவாக கருதப்பட்ட லிங்காயத்து வழிபாடு, அரசியல் காரணங்களுக்காக தனி மதம் என்ற வாதம் தற்போது வலுத்து நிற்கிறது,'' என்று கூறினார்.

லிங்காயத்து தத்துவம் குறித்து விளக்கிய அவர்,''லிங்கத்தை அங்கத்தில் அணிந்து, அதை வழிபட்டு ஐக்கியம் அடைபவர்கள் லிங்காயத்து மக்கள். இறைவனுக்கும், பக்தனுக்கும் இடையில் யாரும் தேவையில்லை என்றும் குரு என்பவர் வழிகாட்டவே தவிர, யாரும் யாருக்கும் கீழ் நிலையில் இல்லை என்பது லிங்காயத்து வழிபாட்டில் அடிப்படையான கருத்து. சாதி படிநிலையை வலியுறுத்தும் வருணாசிரம தர்மத்தை விலக்கி வைப்பதோடு இல்லாமல் ஆண், பெண் பேதம் இன்றி இருவரும் கழுத்தில் லிங்கத்தை அணியவும், இறைவனை பூசை செய்ய அனுமதிக்கும் வழிபாடு கொண்டது லிங்காயத்து வழிபாடு,'' என்றார் சரவணன்.

Image caption
எம்.என். மகாதேவப்பா
''லிங்காயத்துகள் இந்துகள் இல்லை''

கர்நாடகாவில் உள்ள லிங்காயத்து மக்களுக்கு தனி மதஅடையாளம் தேவை என பிரச்சாரம் செய்தவர்களில் முக்கியமானவர் கர்நாடக அரசாங்கத்தின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், லிங்காயத்து தர்மா ஹொரதா சமிதியின் ஒருங்கிணைப்பாளரான எஸ்.எம்.ஜாம்தார்.

லிங்காயத்து பிரிவு புதிய மதம் என கர்நாடக அரசு தற்போது அறிவித்திருந்தாலும், காலங்காலமாக லிங்காயத்துகள் இந்துக்கள் இல்லை என்று போராடிவந்ததாக கூறுகிறார் ஜாம்தார்.

''பல கடவுள் வடிவங்களை இந்து மதத்தில் பின்பற்றுகிறார்கள். லிங்காயத்து மக்களைப் பொறுத்தவரை சிவன் ஒருவரே கடவுள். அவரை வணங்க யாருக்கும் தடை இல்லை. ஹோமம் வளர்த்து பூசை செய்யும் முறை இங்கு இல்லை. சாதி,பேதம் என எந்த வேற்றுமைகளையும் இருக்கக்கூடாது என்பதற்காக பசவண்ணர் தோற்றுவித்த இந்த மதம், இந்து மதத்தில் அடங்காது. லிங்காயத்துகள் இந்துக்கள் இல்லை,'' என பிபிசிதமிழிடம் விளக்கினார்.

கர்நாடகா மட்டுமில்லாமல், தமிழ்நாட்டிலும் விழுப்புரம், மதுரை, திண்டுக்கல், சென்னை போன்ற ஊர்களில் லிங்காயத்து வழிபாட்டைப் பின்பற்றும் மக்கள் வசித்துவருகிறார்கள்.

பசவண்ணா கூறியதுபோலவே லிங்க வழிபாடு பின்பற்றப்படுவதாகக் கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த 70 வயதாகும் வசந்தகுமாரி.

''பெண்கள் மாதவிலக்கு காலங்களில்கூட இறைவனுக்குப் பூசை செய்யலாம் என்பதை வலியுறுத்தும் வழிபாடு இது. தீட்டு காலம் கிடையாது. எப்போதும் லிங்கத்தை ஒரு பெட்டியில் மூடி, சங்கிலியில் கோர்த்து கழுத்தில் அணிந்திருப்போம், தினமும் லிங்கத்திற்கு பூசை செய்வோம். தாலிக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்களோ அதுபோலவே லிங்கத்தை அணிந்திருப்போம். தாலியைக் கழற்றினால் கூட, லிங்கத்தை கழற்றமாட்டோம்,''என்று வசந்தகுமாரி தெரிவித்தார்.

லிங்காயத்து குடும்பங்கள் தங்களது வழிபாடு இந்து மத வழிபாட்டில் இருந்து வித்தியாசமானது என்பதை தனது நண்பர்களிடமும், உறவினர்களிடமும் பலமுறை விளக்கியுள்ளதாக கூறும் வசந்தகுமாரி, தனது இரண்டு மகன்களும் லிங்காயத்து முறையை பின்பற்றுவதாகவும் கூறினார்.

''குழந்தை பிறந்தவுடன் லிங்கம் உள்ள ஒரு சங்கிலியை அணிவித்துவிடுவோம். யாரவது இறந்துவிட்டாலும், லிங்கத்துடன் அவரை புதைத்துவிடுவோம். காலம் முழுவதும் இறைவனை தொழுவதற்கு எந்த தடையும் இல்லை என்பதையே இந்த வழிபாடு சொல்கிறது,'' என்றார் வசந்தகுமாரி.

பிரமிளா கிருஷ்ணன்