Showing posts with label 1666. Show all posts
Showing posts with label 1666. Show all posts

Saturday, 5 January 2019

SHAJAKHAN,THE MOGHUL LEGEND BORN 1592 JANUARY 5 - 1666 JANUARY 22



SHAJAKHAN,THE MOGHUL LEGEND BORN 
1592 JANUARY 5 - 1666 JANUARY 22





ஷஹாபுதீன் முகம்மது ஷாஜகான் I (முழு பட்டம்: அல்-சுல்தான் அல்-ஆஸாம் வால் காகான் அல்-முக்கார்ரம், அபுல்-முஸாஃப்பர் ஷஹாபுதீன் முகம்மது, சாஹிப்-ஈ-க்யூரான்-ஈ-சானி, ஷாஜகான் I பட்ஷா காஸி ஸில்லுல்லாஹ் [ஃபிர்தௌஸ்-ஆஷியானி] ) (ஷாஹ் ஜெஹான் , ஷாஹ்ஜெஹான் , உருது: شاه ‌جہاں என்றும் உச்சரிக்கப்படுகிறது பெர்ஷியன்: شاه جهان (5 ஜனவரி 1592 – 22 ஜனவரி 1666) 1628 ஆம் ஆண்டு முதல் 1658 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் முகலாய சாம்ராஜ்யத்தின் மன்னராக இருந்தார். ஷாஜகான் என்னும் பெயர் பெர்ஷிய மொழியில் "உலகத்தின் அரசன்" என்னும் பொருளிலிருந்து வருகிறது. பாபர், ஹுமாயுன், அக்பர் மற்றும் ஜஹாங்கிர் ஆகியோருக்குப் பின்னர் இவர் தான் ஐந்தாவது முகலாய மன்னராக இருந்தார். இளமையாக இருக்கும்போது அவர் அக்பரின் அன்புக்கு உரியவராக இருந்தார்.

மிகவும் இளைமையாக இருந்தபோதே, ஜஹாங்கிரின் இறப்புக்குப் பின்னர் முகலாய சிம்மாசனத்துக்கு இவர்தான் வாரிசு என்று குறிப்பிடப்பட்டவர். 1627 ஆம் ஆண்டில் தன்னுடைய தந்தை இறந்ததைத் தொடர்ந்து அவர் அரியணை ஏறினார். அவர் மிகப்பெரும் முகலாயர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார், மேலும் அவருடைய ஆட்சி முகலாயர்களின் பொற்காலமாக சொல்லப்படுகிறது. அக்பரைப் போலவே அவர் தன்னுடைய இராஜ்ஜியத்தை விரிவுபடுத்த ஆர்வமாக இருந்தார். அவருடைய ஆட்சியின் முக்கிய நிகழ்வுகளாக இருப்பது, அஹ்மத்நகர் இராஜ்ஜியத்தின் அழிப்பு (1636), பெர்சியர்களிடம் கந்தஹார்-ஐ இழத்தல் (1653), மற்றும் டெக்கன் இளவரசிக்கு எதிராக இரண்டாவது போர் (1655). 1658 ஆம் ஆண்டில் அவர் நோய்வாய்ப்பட்டார், 1666 ஆம் ஆண்டில் அவர் இறக்கும் வரையில் அவருடைய மகன் ஔரங்கசீப்-ஆல் ஆக்ரா கோட்டையில் சிறைவைக்கப்பட்டார்.

அவருடைய அரசாட்சி காலம் முகலாய கட்டடக்கலையின் பொற்காலமாக இருந்தது. ஷாஜகான் பல அருமையான நினைவுச்சின்னங்களை எழுப்பினார், அவற்றில் மிகப் பிரபலமாக இருப்பது, ஆக்ராவில் இருக்கும் தாஜ் மஹால், இது அவருடைய மனைவி மும்தாஜ் மஹால்-இன் (பிறப்பு பெயர் அர்ஜுமண்ட் பானு பேகம்) கல்லறையாகக் கட்டப்பட்டது. ஆக்ராவிலுள்ள பேர்ல் மசூதி, தில்லியில் உள்ள அரண்மனை மற்றும் பெரிய மசூதி அவரின் நினைவாக அமைந்திருக்கிறது. புகழ்வாய்ந்த மயில் சிம்மாசனம் கூட அவருடைய அரசாட்சியின் காலத்துக்குரியது, இது இன்றைய மதிப்பீட்டில் பல மில்லியன் டாலர்கள் மதிப்புடையது. ஷாஜகானாபாத்தின் உருவாக்கியவர் அவரே, அது இப்போது 'பழைய தில்லி' என்று அழைக்கப்படுகிறது. ஷாஜகான் கட்டிய முக்கிய கட்டிடங்கள் பின்வருமாறு, தில்லி கோட்டையில் திவான்-இ-அம் மற்றும் திவான்-இ-காஸ், ஜமா மஸ்ஜித், மோட்டி மஸ்ஜித் மற்றும் தாஜ் மஹால். தில்லி அரண்மனைதான் கிழக்கு நாடுகளில் இருப்பதிலேயே மிகச் சிறப்பான ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.[2]

வாழ்க்கை வரலாறு

ஷாஜகான், பாகிஸ்தானின் லாஹூரில் 1592 ஆம் ஆண்டில் இளவரசர் குர்ராம் ஷஹாபுதீன் ஆகப் பிறந்தார், அவர் பேரரசர் ஜஹாங்கிர்-இன் தனி அன்புக்குரியவரும் அவருடைய மூன்றாவது மகனுமாவார்,[3] அவருடைய தாய் ஒரு ராத்தோர் இரஜபுத இளவரசியாவார், இளவரசி ஜகத் கோசேய்ன் என்று அறியப்பட்ட இவர் ஜஹாங்கிரின் இரண்டாவது மனைவியாவார். குர்ராம் - பெர்சியனில் 'மகிழ்ச்சிமிக்க' - என்ற பெயர் அவருடைய தாத்தா அக்பர் அவர்களால் வழங்கப்பட்டது. அவருடைய இளமை ஆண்டுகளில் அவர் பண்பட்ட, பரந்துவிரிந்த கல்வியைப் பெற்றார் மேலும் போருக்குகந்த கலைகளிலும் மற்றும் தந்தையின் எண்ணற்ற படையெடுப்புகளின் போது மீவார் (1615 ஆம் ஆண்டு, 1024 இசுலாமிய ஆண்டு), டெக்கான் (1617 மற்றும் 1621 ஆம் ஆண்டுகள், 1026 மற்றும் 1030 இசுலாமிய ஆண்டுகள்), கங்க்ரா (1618 ஆம் ஆண்டு, 1027 இசுலாமிய ஆண்டு) - இராணுவ தளபதியாகத் தலைமையேற்று போர்களை நடத்தியபோதும் தன்னை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டினார். அவருடைய தந்தையின் ஆட்சிக் காலத்தின்போது பெரும் பிரதேசங்களை வெல்வதில் இவருடைய பங்கு பெரிய அளவில் இருந்தது.[4] கட்டுமானத்தில் தனக்கிருந்து அரிய திறனையும் அவர் வெளிப்படுத்தினார், 16 வயதாக இருக்கும்போதே பாபரின் காபூல் கோட்டைக்குள்ளாகவே தன்னுடைய இருப்பிடத்தை தானே கட்டியும், ஆக்ரா கோட்டைக்கு உள்ளாக இருக்கும் கட்டிடங்களை மாற்றம் செய்தும் தன்னுடைய தந்தையைக் கவர்ந்தார்.[4]


திருமணம்

மும்தாஜ் மஹால்
1607 ஆம் ஆண்டில் (1025 இ.ஆ), தன்னுடைய பதினைந்தாவது வயதில் குர்ராம் ஒரு பெர்சிய பிரபுவின் 14 வயதுடைய பேத்தி அர்ஜுமண்ட் பானு பேகம்-ஐத் திருமணம் செய்தார். அவர்களுடைய திருமணக் கொண்டாட்டங்கள் கழிந்த பின்னர், "அந்த நேரத்தில் இருந்த அனைத்துப் பெண்களைவிடவும் தோற்றத்திலும் பண்புநலனிலும் மேம்பட்டவராக இருப்பதைக் கண்டதும்" குர்ராம் அவருக்கு மும்தாஜ் மஹால் (அரண்மனையின் மணிக்கல்) என்ற பட்டத்தை வழங்கினார்.[5]

மும்தாஜ் மஹால் 14 பிள்ளைகளைப் பெற்றார். அடிக்கடி கருவுற்றிருந்தபோதிலும், மும்தாஜ் ஷாஜகானின் பரிவாரங்களுடன் அவருடைய ஆரம்ப இராணுவ படையெடுப்பு மற்றும் அதைத் தொடர்ந்து அவருடைய தந்தைக்கு எதிரான போராட்ட காலகட்டம் முழுக்கவும் உடன் பயணித்தார். அவர் ஷாஜஹானின் நிலையான கூட்டாளியாகவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தார், மேலும் அவர்களுகிடையிலான உறவு வலுவானதாக இருந்தது.[6] ஷாஜகானின் வரலாற்றுப் பதிவாளர்களால், மும்தாஜ் எந்த அரசியல் அதிகாரத்திற்கும் ஆசைப்படாத மிகச் சிறப்பான மனைவி என வருணிக்கப்படுகிறார். இது நூர் ஜஹான் பற்றி அறிந்து கொள்ளப்பட்டதற்கு நேர் எதிரானதாக இருக்கிறது.[6]

ஆசப் கானின் மகளை இவர் மணந்தார் ;அவருக்கு முன்னமே மனைவிகள் இருந்தாலும் மும்தாஜ் என பிற்காலத்தில் அழைக்கப்பட இருக்கும் அவரின் மகளை மணந்தார்.[7]

இடைப்பட்ட ஆண்டுகளில் குர்ராம் மேலும் இரு மனைவிகளைத் திருமணம் செய்துகொண்டார், அவர்கள் அக்பராபதி மஹால் (1677 ஆம் ஆண்டு, 1088 இ.ஆ.), மற்றும் கந்தாஹரி மஹால்.

அதிகாரப்பூர்வ அரசவை வரலாற்றுப் பதிவாளர் குவாஸினியின் கூற்றுப்படி, இதர மனைவிகளிடத்தில் ஷாஜகான் கொண்டிருந்த உறவு, "ஒரு திருமண அந்தஸ்துக்கு மேலாக எதுவும் இல்லை. மேன்மையின் இருப்பிடத்தில் [மும்தாஜ்] மீது அரசர் கொண்டிருந்த அந்தரங்கம், ஆழ்ந்த அன்பு, கவனிப்பு மற்றும் நல்லெண்ணம் மற்றவர்களிடம் கொண்டிருந்ததைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாக இருந்தது."[5][8][9] பல்வேறு ஐரோப்பிய வரலாற்றுப் பதிவாளர்கள், ஷாஜகான் தன்னுடைய மகள் ஜஹானாரா பேகமுடன் முறைதகா உறவு கொண்டிருந்ததாகக் குறிப்பிடுகின்றனர். ஐரோப்பிய பயணி ஃப்ராங்கோய்ஸ் பெர்னியர் இவ்வாறு எழுதினார், "ஷாஜகானின் மூத்த மகள், பேகம் சாஹிப் மிக அழகாக இருந்தார்... "ஒரு வதந்தியை முழுமையான இழிவுச்செயலாக பெரிதுபடுத்தி"யதில் ஔரங்கசீப்பிற்குப் பங்கு இருந்திருக்கும் என லால் குறிப்பிடுகிறார், மேலும் அவர் இவ்வாறு எழுதுகிறார்: "ஔரங்கசீப், ஷாஜகானின் ஆணைக்குக் கீழ்ப்படியாமல், அவரைப் பல ஆண்டுகளுக்குச் சிறையிலிட்டார், ஆனால் அவர் ஜஹனாராவிடம் ஷாஜகான் காட்டிய தந்தைக்குரிய பாசத்தை ஒரு இழிவுச்செயலாக திரித்துக்கூறியதில் அவர் உண்மையிலேயே உதவியிருந்தால், அது மகனுக்குரிய எல்லா செயல்களுக்கும் ஒவ்வாத கொடூரத்தன்மையாகும்.."

பதவியேற்பு

ஷாஜகானின் 19 ஆம் நூற்றாண்டு வரைபடம்.
முகலாய சாம்ராஜ்ஜியத்தில் அதிகாரத்தையும் சொத்தையும் அடைவதில் மூத்த மகனது வாரிசுரிமை மூலம் முடிவு செய்யப்படுவதில்லை, ஆனால் அது இளவரச மகன்களின் இராணுவ வெற்றிகள் மற்றும் அரசவையில் தங்களுக்குரிய அதிகாரத்தைப் பலப்படுத்துதல் போட்டி மூலமே சாதிக்கப்படுகிறது. இது அவ்வப்போது அரசுரிமைக்கான கிளர்ச்சி மற்றும் போர்களாக முடிவடைகின்றன. அதன் விளைவாக, குர்ராமின் ஆரம்பகட்ட ஆண்டுகளில் ஒரு சிக்கலான அரசியல் சூழல் முகலாய அரசவையைச் சூழ்ந்தது. 1611 ஆம் ஆண்டில் அவருடைய தந்தை, ஒரு ஆப்கான் குடியேற்றவாசியின் விதவை மகளான நூர் ஜஹான்-ஐத் திருமணம் செய்துகொண்டார்.[10] நூர் ஜஹான் விரைவிலேயே ஜஹாங்கிரின் அரசவையில் ஒரு முக்கிய உறுப்பினரானார், மேலும் தன்னுடைய சகோதரர் அசாஃப் கான் உடன் இணைந்து பெருமளவு செல்வாக்கைக் கொண்டிருந்தார். அசாஃப் கானின் மகள் தான் அர்ஜுமாண்ட், குர்ரமுடனான அவருடைய திருமணம் அரசவையில் நூர் ஜஹான் மற்றும் அசாஃப் கானின் நிலையை உறுதிப்படுத்தியது.

தக்காணத்தில், லோடிக்கு எதிராக 1617 (1026 இ.ஆ.) ஆம் ஆண்டின் குர்ராமின் தீவிரமான இராணுவ வெற்றிகள் இராஜ்ஜியத்தின் தெற்கு எல்லையை மிகவும் பாதுகாப்பாக ஆக்கியது, நன்றியைத் தெரிவிக்கும் விதமாக அவருடைய தந்தை அவருக்கு 'ஷாஜகான் பஹதூர்' (உலகின் மிக தைரியமான அரசன்) என்னும் கௌரவமான பட்டத்தை வழங்கினார், இது அவருடைய வாரிசுரிமையை பூரணமாக உறுதிப்படுத்தியது.[6] நூர் ஜஹான் தன்னுடைய முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மகளை ஷாஜகானின் தம்பிக்கு திருமணம் செய்யவும், அரியணைக்கான அவரது கோரிக்கைக்கு அவரின் ஆதரவு உட்பட அரசவை சதியாலோசனைகள், குர்ராம்மை, மஹபத் கானின் துணையுடன் அரியணையைக் கோருவதற்கு அவருடைய தந்தைக்கு எதிராக 1622 ஆம் ஆண்டில் வெளிப்படையாக கிளர்ச்சியைச் செய்யத் தூண்டியது.

இந்தக் கிளர்ச்சி 1626 ஆம் ஆண்டில் ஜஹாங்கிரின் படைகளால் முறியடிக்கப்பட்டது குர்ராம் எந்த நிபந்தனையுமின்றி சரண்டைந்தார்.[11] 1627 ஆம் ஆண்டில் ஜஹாங்கிரின் மறைவைத் தொடர்ந்து குர்ராம் முகலாய அரியணையில் ஷாஜகானாக, (உலகின் அரசர்), பதவியேற்றார், பிந்தைய பட்டப்பெயர் அவருடைய டிமுரிட் மூலத்தின் பெருமையைக் குறிப்பாகத் தெரிவிக்கிறது.[4] ஆட்சியாளராக பதவியேற்றவுடன் ஷாஜகானின் முதல் செயல் அவருடைய முக்கிய எதிரிகளுக்குத் தூக்கு தண்டனை வழங்கியதும் தன்னுடைய மாற்றாந் தாய் நூர் ஜஹான்-ஐச் சிறையிலிட்டதுமாகும்.[12] ஷாஜஹான் எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆட்சி செய்ய இதனால் இயன்றது.

ஆட்சி

மயில் அரியாசனத்தில் ஷாஜகான்

ஷாஜகானின் அரசவை

அவருடைய தந்தையின் ஆட்சி பொதுவாக அமைதியாக இருந்தபோதிலும், ஆட்சியின் இறுதிக்காலங்களில் அந்தச் சாம்ராஜ்ஜியம் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தது. ஷாஜகான் இந்தப் போக்கை மாற்றினார், அவர் அஹமத்நகரில் ஏற்பட்ட இசுலாமிய கிளர்ச்சியை முடக்கினார், போர்த்துகீசியர்களை வங்காளத்தில் துரத்தி அடித்தார், கைபர் கணவாய்க்கு அப்பால் மேற்கு மற்றும் வடமேற்கு பாக்லானா மற்றும் பண்டல்கண்ட்டின் ராஜபுத அரசாட்சிப் பகுதிகளைக் கைப்பற்றினார். அவருடைய ஆட்சியின் கீழ், நாடு ஒரு பெரும் இராணுவ இயந்திரமாக மாறியது பிரபுக்கள் மற்றும் அவர்களுடைய பரிவாரங்கள் கிட்டத்தட்ட நான்குமடங்காகப் பெருகினர், அதே போல் குடியானவர்களிடமிருந்து வருமானத்திற்கான கோரிக்கையும் பெருகியது. இருந்தபோதிலும் அது பொதுவாக ஒரு நிலையான காலமாக இருந்தது - நிர்வாகம் மையப்படுத்தப்பட்டிருந்தது மற்றும் நீதிமன்ற செயல்பாடுகள் ஒழுங்கமையப்பட்டிருந்தது. வரலாற்றிலக்கியத் தொகுப்பு மற்றும் கலைகள் பிரச்சாரக் கருவிகளாக ஆயின, இங்கு அழகிய கலை வேலைப்பாடுகள் மற்றும் கவிதைகள், மைய அதிகாரம் மற்றும் படிநிலையான வரிசைமுறை, சமநிலை மற்றும் அமைதியை ஏற்படுத்தும் என்னும் திட்டவட்டமான நாட்டுக் கொள்கைகளை வெளிப்படுத்தின. அவருடைய ஆட்சியின்போது அந்த சாம்ராஜ்ஜியம் மிதமாக விரிவடையத் தொடங்கியது ஆனால் பிந்தைய ஆண்டுகளில் பேரரசு வீழ்ச்சியின் முதல் அறிகுறிகள் காணத்தொடங்கின.[13]

ஷாஜகான் ஆட்சியின் கீழ் முகலாய சாம்ராஜ்ஜியம் கம்பீரத்துடன் தன்னுடைய உயர்ந்த ஒன்றிணைந்த வலிமையைப் பெற்றது. ஷாஜகானின் ஆட்சியின் கீழ் முகலாய் சாம்ராஜ்ஜியத்தின் நில வருமானம் 20¾ மில்லியன்களாக இருந்தது. ஷாஜகானின் அரசவையின் கம்பீரத்தோற்றம், ஐரோப்பிய பயணிகளின் வியத்தகு பொருளாக இருந்தது. அவருடைய மயில் சிம்மாசனம், அதன் தடத்தில் மாணிக்கங்கள், நீலமணிக்கற்கள் மற்றும் மரகதங்களின் இயற்கையான மாறும் வண்ணங்களால் ஒளிவீசியது, நகை வியாபாரி தாவெர்நீர் இதை 6½ மில்லியன் ஸ்டெர்லிங்குக்கு மதிப்பிட்டுள்ளார்.[14]

அவருடைய அரசியல் முயற்சிகள் லாகூர், தில்லி, ஆக்ரா, மற்றும் அஹமதாபாத் போன்ற மிகப் பெரும் வணிக மற்றும் கைவினை மையங்களின் உருவாக்கத்திற்கும் சாலைகள் மற்றும் நீர்வழிகள் மூலம் தொலைதூரங்களை, துறைமுகங்களுடன் இணைக்கும் வித்த்தில் தலைமையிடத்தை ஆக்ராவிலிருந்து தில்லிக்கு மாற்றியமைத்தார்.

ஷாஜகானின் ஆட்சியின் கீழ் முகலாய கலைநயமிக்க மற்றும் கட்டிடக்கலைக்குரிய சாதனைகள் அவற்றின் உச்சநிலையை அடைந்தது. உயர்ந்த நாகரிக அழகுணர்ச்சியுடன் கூடிய ஒரு படைப்புக்குரிய கட்டிடக்கலைஞராக ஷாஜகான் இருந்தார். அவருடைய கட்டிடங்களில் மிச்சமிருப்பவை, தில்லியில் செங்கோட்டை மற்றும் ஜமா மஸ்ஜித், லாஹூரின் ஷாலிமார் தோட்டங்கள், லாகூர் கோட்டையின் சில பிரிவுகள், (ஷீஸ் மஹால் மற்றும் நௌலாகா பெவிலியன் போன்றவை) மற்றும் அவருடைய தந்தையின் கல்லறை மாடம்.

ஷாஜகான் தனக்காகவே ஒரு கருப்பு தாஜ் மஹால்-ஐ கட்டிக்கொள்ள எண்ணியிருந்ததாக கட்டுக்கதைகள் இருக்கின்றன. எனினும், இந்தக் கற்பிதக்கொள்கைக்கு ஆதரவாக எந்தவித மதிப்புவாய்ந்த சான்றும் இல்லை, அதே போன்று பேரச்சமூட்டுகிற இதர கட்டுக்கதைகளான தன்னுடைய கல்லறையை வடிவமைத்துக் கட்டுவதற்குப் பொறுப்பேற்றிருந்தவர்களை முடமாக்கியதாக, குருடாக்கியதாக அல்லது கொலைசெய்யப்பட்டதாகக் கூறப்படும் அனைத்திற்குமே எந்தவித நம்பகத்தன்மையிலான சான்றுகளும் இல்லை.[15][16][17]

ஊழ்வினை
1658 ஆம் ஆண்டில் ஷாஜகான் உடல் நலமில்லாமல் போனதும் அவருடைய மகன் நஸிஃப் ஒரு கிளர்ச்சியை முன்னெடுத்து தன்னுடைய சகோதரனும் சட்டப்படியான வாரிசுமான தாரா ஷிகோவை பொதுமக்கள் மத்தியில் தூக்கிலிட்டான். தாராதான் மும்தாஜ் மஹாலின் மகன்களில் மூத்தவர். அவருடைய தந்தைக்குப் பதிலாக அரசனுக்குரிய பாத்திரத்தைத் தாரா எடுத்து நடத்திவந்தார், இது விரைவிலேயே அவருடைய சகோதரர்களிடத்தில் அவருக்கு எதிரான பகையாக மாறியது. இதைக் கேள்விப்பட்டவுடன், அவருடைய இளைய சகோதரர்கள், வங்காளத்தின் வைசிராயாக இருந்த ஷுஜா மற்றும் குஜராத்தின் வைசிராயாக இருந்த மராட் ஆகியோர் தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்திப்படுத்தி பின்னர் செல்வத்தை கைப்பற்ற ஆக்ரா நோக்கிப் படையெடுத்தனர். சகோதரர்களிலேயே மிகத் திறமையானவரும் மிகவும் துணிவுமிக்கவருமான மூன்றாவது மகனான ஔரங்கசீப் அவர்களுடன் இணைந்தார், அவர்களின் தலைமை தளபதியாக நிறுத்தப்பட்ட ஔரங்கசீப் ஆக்ராவுக்கு மிக அருகில் தாராவின் படையைத் தாக்கி அவரை முழுமையாகத் தோற்கடித்தார்.[18] ஷாஜகான் தம்முடைய உடல்நலமின்மையிலிருந்து முழுவதுமாக மீண்டபோதும், ஔரங்கசீப் அவர் ஆட்சி செய்ய இயலாதவராக இருப்பதாக அறிவித்து அவரை ஆக்ரா கோட்டையின் வீட்டுச் சிறையில் வைத்தார்.[13]

ஷாஜகானின் மூத்த மகள் ஜஹானாரா பேகம் சாஹிப், தானே முன்வந்து அவருடைய எட்டாண்டு கால சிறையடைப்பைப் பகிர்ந்துகொண்டு ஷாஜகானின் மனத்தளர்ச்சியில் அவரைப் பராமரித்து வந்தார். 1666 (1076 AH) ஆம் ஆண்டு ஜனவரியில் ஷாஜகான் ஸ்ட்ராங்குரி மற்றும் சீத பேதியால் நோய்வாய்பட்டு படுத்த படுக்கையாகிவிட்ட நிலையில் அவர் மிகவும் பலவீனமடைந்து, 22 ஜனவரி அன்று அரசவைக்குரிய பெண்களை, குறிப்பாக அவருடைய பிந்தைய ஆண்டுகளின் மனைவியான அக்பராபாடி மஹாலை, ஜஹானாராவின் பொறுப்பில் ஒப்படைத்தார். கலிமா மற்றும் குரானிலிருந்து பாடல்வரிகளை ஒப்புவித்தபின்னர் அவர் மரணமடைந்தார். ஷாஜகானின் உடலை மேம்பட்ட பிரபுக்கள் தூக்கிச்செல்லவும், அவர்களைப் பின்தொடர்ந்து ஆக்ராவின் முக்கிய குடிமக்களும், ஏழைகள் மற்றும் தேவைப்படுபவர்களுக்குக் காசுகளை இறைத்து வர அவர்களின் பின்னால் அதிகாரிகள், ஊர்வலமாக கொண்டு செல்வதுடன் தேசிய மரியாதைக்கும் ஜஹானாரா திட்டமிட்டிருந்தார். ஔரங்கசீப் அத்தகைய பகட்டு ஆரவாரங்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை, அவருடைய உடல் இசுலாமிய முறைப்படி கழுவப்பட்டு ஒரு சந்தன சவப்பெட்டியில் தாஜ் மஹால் வரையில் ஆற்றில் கொண்டுசெல்லப்பட்டது, அங்கு அவருடைய பிரியத்துக்குரிய மனைவி மும்தாஜ் மஹாலின் உடலுக்கு அடுத்து புதைக்கப்பட்டார்.[19]

ஷாஜகான் முகலாய சாம்ராஜ்ஜியத்தின் ஒரு உயர்ந்த எடுத்துக்காட்டாக இருந்ததோடல்லாமல் முகலாய சந்ததி பேரரசர்களின் வம்சவழி வீழ்ச்சியையும் முன்குறித்துக் காட்டினார். அவருடைய பதவியேற்றம் மற்றும் மகன்களின் கைகளாலேயே வீழ்ச்சியடைந்ததை ஒதுக்கிவிட்டு பார்த்தால், ஷாஜகான் தன் ஆட்சியின் காலப்போக்கில் கொஞ்சம்கொஞ்சமாக இந்தியாவின் நிலஅமைப்பை மாற்றியமைத்த தலைவராகக் காணமுடியும்; அவரை வீழ்த்திய மரபுரிமை மற்றும் அவருடைய பெரும் சாதனைகளைக் கருத்தில் கொள்ளும்போது, முகலாய சாம்ராஜ்யத்தில் அதிகாரத்தின் உரிமை மற்றும் நிலையற்ற படிநிலை முறையை குறிப்பாகத் தெரிவிக்கும் அதே வேளையில் கைப்பற்றல், கலவரம் மற்றும் சகிப்புத்தன்மை மூலம் உருவாக்கப்பட்ட ஒரு சாம்ராஜ்ஜியத்தின் உள் வேலைகள் பற்றிய போதிய அறிவை ஷாஜகான் நமக்கு வழங்குகிறார். மூர்க்கத்தனம் மற்றும் துரோகத்தால் அவர் ஆட்சிபீடத்திற்கு வந்தார் இறுதியில் அதே வழிமுறையில் அவரும் வீழ்த்தப்பட்டார், இது முகலாயர்களின் மரபுரிமையை மோசமாக்குகிறது.

ஷாஜகானுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க கட்டுமானங்கள்

ஷாலிமார் தோட்டங்கள் முகலாய பேரரசரால் கட்டப்பட்டது, இது நானூறுக்கும் மேற்பட்ட நீரூற்றுகளைக் கொண்டிருக்கிறது.

தாஜ் மஹால்
ஷாஜகான் தன்னுடைய ஆட்சி காலத்தின்போது கட்டப்பட்ட, ஒரு பெரும் கட்டடச் செல்வங்களையே விட்டுச்சென்றுள்ளார். அவர் கட்டிடக் கலையின் காப்பாளர். அவருடைய மிகப் பிரபலக் கட்டிடமாக இருப்பது தாஜ் மஹால், இது இப்போது உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கிறது, இது அவர் மும்தாஜ் மஹால் மீது கொண்ட காதலுக்காக கட்டப்பட்டது. அதன் கட்டுமானம் மிகுந்த கவனத்துடன் வரையப்பட்டிருக்கிறது மேலும் உலகெங்கிலிருந்தும் பல கட்டிடக் கலைஞர்கள் இதற்காக வரவழைக்கப்பட்டிருந்தனர். இந்தக் கட்டிடம் கட்டிமுடிப்பதற்கு இருபது ஆண்டுகள் ஆனது இது முழுக்கமுழக்க வெள்ளை பளிங்குக்கற்களால் கட்டப்பட்டது. அவர் இறந்தவுடன் அவரது மகன் ஔரங்கசீப் அவரை மும்தாஜ் மஹாலுக்குப் பக்கத்திலேயே புதைக்கச் செய்தார். அவருடைய இதரக் கட்டிடங்கள் பின்வருமாறு, தில்லியில் தில்லி கோட்டை இது செங்கோட்டை அல்லது லால் குய்லா (உருது) என்றும் அழைக்கப்படுகிறது, ஆக்ரா கோட்டையின் பெரும்பகுதி, ஜமா மஸ்ஜித் (பெரும் பள்ளிவாசல்), தில்லி, பாகிஸ்தான் லாகூர்-இல் வாசிற் கான் மசூதி, மோட்டி மஸ்ஜித் (பேர்ல் மசூதி), லாகூர், லாஹூரிலுள்ள ஷாலிமார் தோட்டங்கள், லாகூர் கோட்டையின் சில பிரிவுகள், லாகூர், ஜஹாங்கிர் கல்லறை மாடம் — அவர் தந்தையின் சமாதி, இதன் கட்டுமானப் பணிகள் அவருடைய மாற்றந்தாய் நூர் ஜகான் மேற்பார்வையில் நடைபெற்றது மற்றும் ஷாஜகான் மசூதி, தட்டா, பாகிஸ்தான். அவர் மயில் சிம்மாசனம் தக்த் ஈ தௌஸ்-ஐக் கூட வைத்திருந்தார், அது அவருடைய ஆட்சியைக் கொண்டாடுவதற்காகச் செய்யப்பட்டது.


ஷாஜகானின் குடும்பம்
அவருடைய எல்லா மூதாதையர்கள் போலவே ஷாஜகானின் அரசவையும் பல மனைவிகள், காமக்கிழத்திகள் மற்றும் நடனமாடும் பெண்களைக் கொண்டிருந்தது. அநேக ஐரோப்பிய வரலாற்று தொகுப்பாளர்கள் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். நிக்காலாவோ மனுச்சி இவ்வாறு எழுதுகிறார், "அவருடைய இன்பத்துக்கு சேவகம் செய்யும் பெண்களுக்கான தேடல் மட்டுமே ஷாஜகான் அக்கறை கொண்ட ஒரே விஷயமாக இருப்பது போல் தோன்றுகிறது" மேலும் "இதை நிறைவேற்றுவதற்கு அவர் தன்னுடைய அரசவையில் சந்தையை ஏற்படுத்தினார். இங்கு அனைத்து தரப்பு பெண்களைத் தவிர வேறு யாரும் நுழைய அனுமதிக்கபடவில்லை, அதாவது பெரிய மற்றும் சிறிய, பணக்கார மற்றும் ஏழை என எந்தப்பெண்ணாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அனைவரும அழகானவர்களாக இருக்கவேண்டும்."[20] ஆக்ராவின் செங்கோட்டையில் அவர் சிறைவைக்கப்பட்டிருந்தபோது "பாடுகின்ற மற்றும் நடனமாடுகிற பெண்கள் உடபட அவருடைய பெண் குழாம் ஒட்டுமொத்தத்தையும்" அவர் தக்கவைத்துக் கொள்ள ஔரங்கசீப் அனுமதியளித்திருந்தார்.[21] ஷாஜகான் மிகவும் வயதானபோதும் "சதைக்கான பலவீனத்தை" அவர் இழக்கவில்லை என்று மனுச்சி குறிப்பிடுகிறார்.[22] எனினும், இந்தியாவில் இருந்த பெரும்பாலான ஐரோப்பிய பயணிகள் இத்தகைய தகவல்களை அங்காடி வதந்திகள் மூலம் பெற்றுவந்தனரே தவிர நேரடியாக அல்ல.

Monday, 15 January 2018

SHAHJAKHAN , OF MUGHUL DYNASTY DIED JANUARY 15, 1666







SHAHJAKHAN , OF MUGHUL DYNASTY 
DIED JANUARY 15, 1666







ஷஹாபுதீன் முகம்மது ஷாஜகான் I (முழு பட்டம்: அல்-சுல்தான் அல்-ஆஸாம் வால் காகான் அல்-முக்கார்ரம், அபுல்-முஸாஃப்பர் ஷஹாபுதீன் முகம்மது, சாஹிப்-ஈ-க்யூரான்-ஈ-சானி, ஷாஜகான் I பட்ஷா காஸி ஸில்லுல்லாஹ் [ஃபிர்தௌஸ்-ஆஷியானி] ) (ஷாஹ் ஜெஹான் , ஷாஹ்ஜெஹான் , உருது: شاه ‌جہاں என்றும் உச்சரிக்கப்படுகிறது பெர்ஷியன்: شاه جهان (5 ஜனவரி 1592 – 22 ஜனவரி 1666) 1628 ஆம் ஆண்டு முதல் 1658 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் முகலாய சாம்ராஜ்யத்தின் மன்னராக இருந்தார். ஷாஜகான் என்னும் பெயர் பெர்ஷிய மொழியில் "உலகத்தின் அரசன்" என்னும் பொருளிலிருந்து வருகிறது. பாபர், ஹுமாயுன், அக்பர் மற்றும் ஜஹாங்கிர் ஆகியோருக்குப் பின்னர் இவர் தான் ஐந்தாவது முகலாய மன்னராக இருந்தார். இளமையாக இருக்கும்போது அவர் அக்பரின் அன்புக்கு உரியவராக இருந்தார்.


மிகவும் இளைமையாக இருந்தபோதே, ஜஹாங்கிரின் இறப்புக்குப் பின்னர் முகலாய சிம்மாசனத்துக்கு இவர்தான் வாரிசு என்று குறிப்பிடப்பட்டவர். 1627 ஆம் ஆண்டில் தன்னுடைய தந்தை இறந்ததைத் தொடர்ந்து அவர் அரியணை ஏறினார். அவர் மிகப்பெரும் முகலாயர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார், மேலும் அவருடைய ஆட்சி முகலாயர்களின் பொற்காலமாக சொல்லப்படுகிறது. அக்பரைப் போலவே அவர் தன்னுடைய இராஜ்ஜியத்தை விரிவுபடுத்த ஆர்வமாக இருந்தார். அவருடைய ஆட்சியின் முக்கிய நிகழ்வுகளாக இருப்பது, அஹ்மத்நகர் இராஜ்ஜியத்தின் அழிப்பு (1636), பெர்சியர்களிடம் கந்தஹார்-ஐ இழத்தல் (1653), மற்றும் டெக்கன் இளவரசிக்கு எதிராக இரண்டாவது போர் (1655). 1658 ஆம் ஆண்டில் அவர் நோய்வாய்ப்பட்டார், 1666 ஆம் ஆண்டில் அவர் இறக்கும் வரையில் அவருடைய மகன் ஔரங்கசீப்-ஆல் ஆக்ரா கோட்டையில் சிறைவைக்கப்பட்டார்.

அவருடைய அரசாட்சி காலம் முகலாய கட்டடக்கலையின் பொற்காலமாக இருந்தது. ஷாஜகான் பல அருமையான நினைவுச்சின்னங்களை எழுப்பினார், அவற்றில் மிகப் பிரபலமாக இருப்பது, ஆக்ராவில் இருக்கும் தாஜ் மஹால், இது அவருடைய மனைவி மும்தாஜ் மஹால்-இன் (பிறப்பு பெயர் அர்ஜுமண்ட் பானு பேகம்) கல்லறையாகக் கட்டப்பட்டது. ஆக்ராவிலுள்ள பேர்ல் மசூதி, தில்லியில் உள்ள அரண்மனை மற்றும் பெரிய மசூதி அவரின் நினைவாக அமைந்திருக்கிறது. புகழ்வாய்ந்த மயில் சிம்மாசனம் கூட அவருடைய அரசாட்சியின் காலத்துக்குரியது, இது இன்றைய மதிப்பீட்டில் பல மில்லியன் டாலர்கள் மதிப்புடையது. ஷாஜகானாபாத்தின் உருவாக்கியவர் அவரே, அது இப்போது 'பழைய தில்லி' என்று அழைக்கப்படுகிறது. ஷாஜகான் கட்டிய முக்கிய கட்டிடங்கள் பின்வருமாறு, தில்லி கோட்டையில் திவான்-இ-அம் மற்றும் திவான்-இ-காஸ், ஜமா மஸ்ஜித், மோட்டி மஸ்ஜித் மற்றும் தாஜ் மஹால். தில்லி அரண்மனைதான் கிழக்கு நாடுகளில் இருப்பதிலேயே மிகச் சிறப்பான ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.[2]

வாழ்க்கை வரலாறு[மூலத்தைத் தொகு]
ஷாஜகான், பாகிஸ்தானின் லாஹூரில் 1592 ஆம் ஆண்டில் இளவரசர் குர்ராம் ஷஹாபுதீன் ஆகப் பிறந்தார், அவர் பேரரசர் ஜஹாங்கிர்-இன் தனி அன்புக்குரியவரும் அவருடைய மூன்றாவது மகனுமாவார்,[3] அவருடைய தாய் ஒரு ராத்தோர் இரஜபுத இளவரசியாவார், இளவரசி ஜகத் கோசேய்ன் என்று அறியப்பட்ட இவர் ஜஹாங்கிரின் இரண்டாவது மனைவியாவார். குர்ராம் - பெர்சியனில் 'மகிழ்ச்சிமிக்க' - என்ற பெயர் அவருடைய தாத்தா அக்பர் அவர்களால் வழங்கப்பட்டது. அவருடைய இளமை ஆண்டுகளில் அவர் பண்பட்ட, பரந்துவிரிந்த கல்வியைப் பெற்றார் மேலும் போருக்குகந்த கலைகளிலும் மற்றும் தந்தையின் எண்ணற்ற படையெடுப்புகளின் போது மீவார் (1615 ஆம் ஆண்டு, 1024 இசுலாமிய ஆண்டு), டெக்கான் (1617 மற்றும் 1621 ஆம் ஆண்டுகள், 1026 மற்றும் 1030 இசுலாமிய ஆண்டுகள்), கங்க்ரா (1618 ஆம் ஆண்டு, 1027 இசுலாமிய ஆண்டு) - இராணுவ தளபதியாகத் தலைமையேற்று போர்களை நடத்தியபோதும் தன்னை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டினார். அவருடைய தந்தையின் ஆட்சிக் காலத்தின்போது பெரும் பிரதேசங்களை வெல்வதில் இவருடைய பங்கு பெரிய அளவில் இருந்தது.[4] கட்டுமானத்தில் தனக்கிருந்து அரிய திறனையும் அவர் வெளிப்படுத்தினார், 16 வயதாக இருக்கும்போதே பாபரின் காபூல் கோட்டைக்குள்ளாகவே தன்னுடைய இருப்பிடத்தை தானே கட்டியும், ஆக்ரா கோட்டைக்கு உள்ளாக இருக்கும் கட்டிடங்களை மாற்றம் செய்தும் தன்னுடைய தந்தையைக் கவர்ந்தார்.[4]

திருமணம்[மூலத்தைத் தொகு]








மும்தாஜ் மஹால்

1607 ஆம் ஆண்டில் (1025 இ.ஆ), தன்னுடைய பதினைந்தாவது வயதில் குர்ராம் ஒரு பெர்சிய பிரபுவின் 14 வயதுடைய பேத்தி அர்ஜுமண்ட் பானு பேகம்-ஐத் திருமணம் செய்தார். அவர்களுடைய திருமணக் கொண்டாட்டங்கள் கழிந்த பின்னர், "அந்த நேரத்தில் இருந்த அனைத்துப் பெண்களைவிடவும் தோற்றத்திலும் பண்புநலனிலும் மேம்பட்டவராக இருப்பதைக் கண்டதும்" குர்ராம் அவருக்கு மும்தாஜ் மஹால் (அரண்மனையின் மணிக்கல்) என்ற பட்டத்தை வழங்கினார்.[5]

மும்தாஜ் மஹால் 14 பிள்ளைகளைப் பெற்றார். அடிக்கடி கருவுற்றிருந்தபோதிலும், மும்தாஜ் ஷாஜகானின் பரிவாரங்களுடன் அவருடைய ஆரம்ப இராணுவ படையெடுப்பு மற்றும் அதைத் தொடர்ந்து அவருடைய தந்தைக்கு எதிரான போராட்ட காலகட்டம் முழுக்கவும் உடன் பயணித்தார். அவர் ஷாஜஹானின் நிலையான கூட்டாளியாகவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தார், மேலும் அவர்களுகிடையிலான உறவு வலுவானதாக இருந்தது.[6] ஷாஜகானின் வரலாற்றுப் பதிவாளர்களால், மும்தாஜ் எந்த அரசியல் அதிகாரத்திற்கும் ஆசைப்படாத மிகச் சிறப்பான மனைவி என வருணிக்கப்படுகிறார். இது நூர் ஜஹான் பற்றி அறிந்து கொள்ளப்பட்டதற்கு நேர் எதிரானதாக இருக்கிறது.[6]

ஆசப் கானின் மகளை இவர் மணந்தார் ;அவருக்கு முன்னமே மனைவிகள் இருந்தாலும் மும்தாஜ் என பிற்காலத்தில் அழைக்கப்பட இருக்கும் அவரின் மகளை மணந்தார்.[7]

இடைப்பட்ட ஆண்டுகளில் குர்ராம் மேலும் இரு மனைவிகளைத் திருமணம் செய்துகொண்டார், அவர்கள் அக்பராபதி மஹால் (1677 ஆம் ஆண்டு, 1088 இ.ஆ.), மற்றும் கந்தாஹரி மஹால்.

அதிகாரப்பூர்வ அரசவை வரலாற்றுப் பதிவாளர் குவாஸினியின் கூற்றுப்படி, இதர மனைவிகளிடத்தில் ஷாஜகான் கொண்டிருந்த உறவு, "ஒரு திருமண அந்தஸ்துக்கு மேலாக எதுவும் இல்லை. மேன்மையின் இருப்பிடத்தில் [மும்தாஜ்] மீது அரசர் கொண்டிருந்த அந்தரங்கம், ஆழ்ந்த அன்பு, கவனிப்பு மற்றும் நல்லெண்ணம் மற்றவர்களிடம் கொண்டிருந்ததைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாக இருந்தது."[5][8][9] பல்வேறு ஐரோப்பிய வரலாற்றுப் பதிவாளர்கள், ஷாஜகான் தன்னுடைய மகள் ஜஹானாரா பேகமுடன் முறைதகா உறவு கொண்டிருந்ததாகக் குறிப்பிடுகின்றனர். ஐரோப்பிய பயணி ஃப்ராங்கோய்ஸ் பெர்னியர் இவ்வாறு எழுதினார், "ஷாஜகானின் மூத்த மகள், பேகம் சாஹிப் மிக அழகாக இருந்தார்... "ஒரு வதந்தியை முழுமையான இழிவுச்செயலாக பெரிதுபடுத்தி"யதில் ஔரங்கசீப்பிற்குப் பங்கு இருந்திருக்கும் என லால் குறிப்பிடுகிறார், மேலும் அவர் இவ்வாறு எழுதுகிறார்: "ஔரங்கசீப், ஷாஜகானின் ஆணைக்குக் கீழ்ப்படியாமல், அவரைப் பல ஆண்டுகளுக்குச் சிறையிலிட்டார், ஆனால் அவர் ஜஹனாராவிடம் ஷாஜகான் காட்டிய தந்தைக்குரிய பாசத்தை ஒரு இழிவுச்செயலாக திரித்துக்கூறியதில் அவர் உண்மையிலேயே உதவியிருந்தால், அது மகனுக்குரிய எல்லா செயல்களுக்கும் ஒவ்வாத கொடூரத்தன்மையாகும்.."

பதவியேற்பு[மூலத்தைத் தொகு]










ஷாஜகானின் 19 ஆம் நூற்றாண்டு வரைபடம்.

முகலாய சாம்ராஜ்ஜியத்தில் அதிகாரத்தையும் சொத்தையும் அடைவதில் மூத்த மகனது வாரிசுரிமை மூலம் முடிவு செய்யப்படுவதில்லை, ஆனால் அது இளவரச மகன்களின் இராணுவ வெற்றிகள் மற்றும் அரசவையில் தங்களுக்குரிய அதிகாரத்தைப் பலப்படுத்துதல் போட்டி மூலமே சாதிக்கப்படுகிறது. இது அவ்வப்போது அரசுரிமைக்கான கிளர்ச்சி மற்றும் போர்களாக முடிவடைகின்றன. அதன் விளைவாக, குர்ராமின் ஆரம்பகட்ட ஆண்டுகளில் ஒரு சிக்கலான அரசியல் சூழல் முகலாய அரசவையைச் சூழ்ந்தது. 1611 ஆம் ஆண்டில் அவருடைய தந்தை, ஒரு ஆப்கான் குடியேற்றவாசியின் விதவை மகளான நூர் ஜஹான்-ஐத் திருமணம் செய்துகொண்டார்.[10] நூர் ஜஹான் விரைவிலேயே ஜஹாங்கிரின் அரசவையில் ஒரு முக்கிய உறுப்பினரானார், மேலும் தன்னுடைய சகோதரர் அசாஃப் கான் உடன் இணைந்து பெருமளவு செல்வாக்கைக் கொண்டிருந்தார். அசாஃப் கானின் மகள் தான் அர்ஜுமாண்ட், குர்ரமுடனான அவருடைய திருமணம் அரசவையில் நூர் ஜஹான் மற்றும் அசாஃப் கானின் நிலையை உறுதிப்படுத்தியது.

தக்காணத்தில், லோடிக்கு எதிராக 1617 (1026 இ.ஆ.) ஆம் ஆண்டின் குர்ராமின் தீவிரமான இராணுவ வெற்றிகள் இராஜ்ஜியத்தின் தெற்கு எல்லையை மிகவும் பாதுகாப்பாக ஆக்கியது, நன்றியைத் தெரிவிக்கும் விதமாக அவருடைய தந்தை அவருக்கு 'ஷாஜகான் பஹதூர்' (உலகின் மிக தைரியமான அரசன்) என்னும் கௌரவமான பட்டத்தை வழங்கினார், இது அவருடைய வாரிசுரிமையை பூரணமாக உறுதிப்படுத்தியது.[6] நூர் ஜஹான் தன்னுடைய முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மகளை ஷாஜகானின் தம்பிக்கு திருமணம் செய்யவும், அரியணைக்கான அவரது கோரிக்கைக்கு அவரின் ஆதரவு உட்பட அரசவை சதியாலோசனைகள், குர்ராம்மை, மஹபத் கானின் துணையுடன் அரியணையைக் கோருவதற்கு அவருடைய தந்தைக்கு எதிராக 1622 ஆம் ஆண்டில் வெளிப்படையாக கிளர்ச்சியைச் செய்யத் தூண்டியது.

இந்தக் கிளர்ச்சி 1626 ஆம் ஆண்டில் ஜஹாங்கிரின் படைகளால் முறியடிக்கப்பட்டது குர்ராம் எந்த நிபந்தனையுமின்றி சரண்டைந்தார்.[11] 1627 ஆம் ஆண்டில் ஜஹாங்கிரின் மறைவைத் தொடர்ந்து குர்ராம் முகலாய அரியணையில் ஷாஜகானாக, (உலகின் அரசர்), பதவியேற்றார், பிந்தைய பட்டப்பெயர் அவருடைய டிமுரிட் மூலத்தின் பெருமையைக் குறிப்பாகத் தெரிவிக்கிறது.[4] ஆட்சியாளராக பதவியேற்றவுடன் ஷாஜகானின் முதல் செயல் அவருடைய முக்கிய எதிரிகளுக்குத் தூக்கு தண்டனை வழங்கியதும் தன்னுடைய மாற்றாந் தாய் நூர் ஜஹான்-ஐச் சிறையிலிட்டதுமாகும்.[12] ஷாஜஹான் எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆட்சி செய்ய இதனால் இயன்றது.

ஆட்சி[மூலத்தைத் தொகு]

மயில் அரியாசனத்தில் ஷாஜகான்

















ஷாஜகானின் அரசவை

அவருடைய தந்தையின் ஆட்சி பொதுவாக அமைதியாக இருந்தபோதிலும், ஆட்சியின் இறுதிக்காலங்களில் அந்தச் சாம்ராஜ்ஜியம் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தது. ஷாஜகான் இந்தப் போக்கை மாற்றினார், அவர் அஹமத்நகரில் ஏற்பட்ட இசுலாமிய கிளர்ச்சியை முடக்கினார், போர்த்துகீசியர்களை வங்காளத்தில் துரத்தி அடித்தார், கைபர் கணவாய்க்கு அப்பால் மேற்கு மற்றும் வடமேற்கு பாக்லானா மற்றும் பண்டல்கண்ட்டின் ராஜபுத அரசாட்சிப் பகுதிகளைக் கைப்பற்றினார். அவருடைய ஆட்சியின் கீழ், நாடு ஒரு பெரும் இராணுவ இயந்திரமாக மாறியது பிரபுக்கள் மற்றும் அவர்களுடைய பரிவாரங்கள் கிட்டத்தட்ட நான்குமடங்காகப் பெருகினர், அதே போல் குடியானவர்களிடமிருந்து வருமானத்திற்கான கோரிக்கையும் பெருகியது. இருந்தபோதிலும் அது பொதுவாக ஒரு நிலையான காலமாக இருந்தது - நிர்வாகம் மையப்படுத்தப்பட்டிருந்தது மற்றும் நீதிமன்ற செயல்பாடுகள் ஒழுங்கமையப்பட்டிருந்தது. வரலாற்றிலக்கியத் தொகுப்பு மற்றும் கலைகள் பிரச்சாரக் கருவிகளாக ஆயின, இங்கு அழகிய கலை வேலைப்பாடுகள் மற்றும் கவிதைகள், மைய அதிகாரம் மற்றும் படிநிலையான வரிசைமுறை, சமநிலை மற்றும் அமைதியை ஏற்படுத்தும் என்னும் திட்டவட்டமான நாட்டுக் கொள்கைகளை வெளிப்படுத்தின. அவருடைய ஆட்சியின்போது அந்த சாம்ராஜ்ஜியம் மிதமாக விரிவடையத் தொடங்கியது ஆனால் பிந்தைய ஆண்டுகளில் பேரரசு வீழ்ச்சியின் முதல் அறிகுறிகள் காணத்தொடங்கின.[13]

ஷாஜகான் ஆட்சியின் கீழ் முகலாய சாம்ராஜ்ஜியம் கம்பீரத்துடன் தன்னுடைய உயர்ந்த ஒன்றிணைந்த வலிமையைப் பெற்றது. ஷாஜகானின் ஆட்சியின் கீழ் முகலாய் சாம்ராஜ்ஜியத்தின் நில வருமானம் 20¾ மில்லியன்களாக இருந்தது. ஷாஜகானின் அரசவையின் கம்பீரத்தோற்றம், ஐரோப்பிய பயணிகளின் வியத்தகு பொருளாக இருந்தது. அவருடைய மயில் சிம்மாசனம், அதன் தடத்தில் மாணிக்கங்கள், நீலமணிக்கற்கள் மற்றும் மரகதங்களின் இயற்கையான மாறும் வண்ணங்களால் ஒளிவீசியது, நகை வியாபாரி தாவெர்நீர் இதை 6½ மில்லியன் ஸ்டெர்லிங்குக்கு மதிப்பிட்டுள்ளார்.[14]

அவருடைய அரசியல் முயற்சிகள் லாகூர், தில்லி, ஆக்ரா, மற்றும் அஹமதாபாத் போன்ற மிகப் பெரும் வணிக மற்றும் கைவினை மையங்களின் உருவாக்கத்திற்கும் சாலைகள் மற்றும் நீர்வழிகள் மூலம் தொலைதூரங்களை, துறைமுகங்களுடன் இணைக்கும் வித்த்தில் தலைமையிடத்தை ஆக்ராவிலிருந்து தில்லிக்கு மாற்றியமைத்தார்.

ஷாஜகானின் ஆட்சியின் கீழ் முகலாய கலைநயமிக்க மற்றும் கட்டிடக்கலைக்குரிய சாதனைகள் அவற்றின் உச்சநிலையை அடைந்தது. உயர்ந்த நாகரிக அழகுணர்ச்சியுடன் கூடிய ஒரு படைப்புக்குரிய கட்டிடக்கலைஞராக ஷாஜகான் இருந்தார். அவருடைய கட்டிடங்களில் மிச்சமிருப்பவை, தில்லியில் செங்கோட்டை மற்றும் ஜமா மஸ்ஜித், லாஹூரின் ஷாலிமார் தோட்டங்கள், லாகூர் கோட்டையின் சில பிரிவுகள், (ஷீஸ் மஹால் மற்றும் நௌலாகா பெவிலியன் போன்றவை) மற்றும் அவருடைய தந்தையின் கல்லறை மாடம்.

ஷாஜகான் தனக்காகவே ஒரு கருப்பு தாஜ் மஹால்-ஐ கட்டிக்கொள்ள எண்ணியிருந்ததாக கட்டுக்கதைகள் இருக்கின்றன. எனினும், இந்தக் கற்பிதக்கொள்கைக்கு ஆதரவாக எந்தவித மதிப்புவாய்ந்த சான்றும் இல்லை, அதே போன்று பேரச்சமூட்டுகிற இதர கட்டுக்கதைகளான தன்னுடைய கல்லறையை வடிவமைத்துக் கட்டுவதற்குப் பொறுப்பேற்றிருந்தவர்களை முடமாக்கியதாக, குருடாக்கியதாக அல்லது கொலைசெய்யப்பட்டதாகக் கூறப்படும் அனைத்திற்குமே எந்தவித நம்பகத்தன்மையிலான சான்றுகளும் இல்லை.[15][16][17]

ஊழ்வினை[மூலத்தைத் தொகு]
1658 ஆம் ஆண்டில் ஷாஜகான் உடல் நலமில்லாமல் போனதும் அவருடைய மகன் நஸிஃப் ஒரு கிளர்ச்சியை முன்னெடுத்து தன்னுடைய சகோதரனும் சட்டப்படியான வாரிசுமான தாரா ஷிகோவை பொதுமக்கள் மத்தியில் தூக்கிலிட்டான். தாராதான் மும்தாஜ் மஹாலின் மகன்களில் மூத்தவர். அவருடைய தந்தைக்குப் பதிலாக அரசனுக்குரிய பாத்திரத்தைத் தாரா எடுத்து நடத்திவந்தார், இது விரைவிலேயே அவருடைய சகோதரர்களிடத்தில் அவருக்கு எதிரான பகையாக மாறியது. இதைக் கேள்விப்பட்டவுடன், அவருடைய இளைய சகோதரர்கள், வங்காளத்தின் வைசிராயாக இருந்த ஷுஜா மற்றும் குஜராத்தின் வைசிராயாக இருந்த மராட் ஆகியோர் தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்திப்படுத்தி பின்னர் செல்வத்தை கைப்பற்ற ஆக்ரா நோக்கிப் படையெடுத்தனர். சகோதரர்களிலேயே மிகத் திறமையானவரும் மிகவும் துணிவுமிக்கவருமான மூன்றாவது மகனான ஔரங்கசீப் அவர்களுடன் இணைந்தார், அவர்களின் தலைமை தளபதியாக நிறுத்தப்பட்ட ஔரங்கசீப் ஆக்ராவுக்கு மிக அருகில் தாராவின் படையைத் தாக்கி அவரை முழுமையாகத் தோற்கடித்தார்.[18] ஷாஜகான் தம்முடைய உடல்நலமின்மையிலிருந்து முழுவதுமாக மீண்டபோதும், ஔரங்கசீப் அவர் ஆட்சி செய்ய இயலாதவராக இருப்பதாக அறிவித்து அவரை ஆக்ரா கோட்டையின் வீட்டுச் சிறையில் வைத்தார்.[13]


ஷாஜகானின் மூத்த மகள் ஜஹானாரா பேகம் சாஹிப், தானே முன்வந்து அவருடைய எட்டாண்டு கால சிறையடைப்பைப் பகிர்ந்துகொண்டு ஷாஜகானின் மனத்தளர்ச்சியில் அவரைப் பராமரித்து வந்தார். 1666 (1076 AH) ஆம் ஆண்டு ஜனவரியில் ஷாஜகான் ஸ்ட்ராங்குரி மற்றும் சீத பேதியால் நோய்வாய்பட்டு படுத்த படுக்கையாகிவிட்ட நிலையில் அவர் மிகவும் பலவீனமடைந்து, 22 ஜனவரி அன்று அரசவைக்குரிய பெண்களை, குறிப்பாக அவருடைய பிந்தைய ஆண்டுகளின் மனைவியான அக்பராபாடி மஹாலை, ஜஹானாராவின் பொறுப்பில் ஒப்படைத்தார். கலிமா மற்றும் குரானிலிருந்து பாடல்வரிகளை ஒப்புவித்தபின்னர் அவர் மரணமடைந்தார். ஷாஜகானின் உடலை மேம்பட்ட பிரபுக்கள் தூக்கிச்செல்லவும், அவர்களைப் பின்தொடர்ந்து ஆக்ராவின் முக்கிய குடிமக்களும், ஏழைகள் மற்றும் தேவைப்படுபவர்களுக்குக் காசுகளை இறைத்து வர அவர்களின் பின்னால் அதிகாரிகள், ஊர்வலமாக கொண்டு செல்வதுடன் தேசிய மரியாதைக்கும் ஜஹானாரா திட்டமிட்டிருந்தார். ஔரங்கசீப் அத்தகைய பகட்டு ஆரவாரங்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை, அவருடைய உடல் இசுலாமிய முறைப்படி கழுவப்பட்டு ஒரு சந்தன சவப்பெட்டியில் தாஜ் மஹால் வரையில் ஆற்றில் கொண்டுசெல்லப்பட்டது, அங்கு அவருடைய பிரியத்துக்குரிய மனைவி மும்தாஜ் மஹாலின் உடலுக்கு அடுத்து புதைக்கப்பட்டார்.[19]


ஷாஜகான் முகலாய சாம்ராஜ்ஜியத்தின் ஒரு உயர்ந்த எடுத்துக்காட்டாக இருந்ததோடல்லாமல் முகலாய சந்ததி பேரரசர்களின் வம்சவழி வீழ்ச்சியையும் முன்குறித்துக் காட்டினார். அவருடைய பதவியேற்றம் மற்றும் மகன்களின் கைகளாலேயே வீழ்ச்சியடைந்ததை ஒதுக்கிவிட்டு பார்த்தால், ஷாஜகான் தன் ஆட்சியின் காலப்போக்கில் கொஞ்சம்கொஞ்சமாக இந்தியாவின் நிலஅமைப்பை மாற்றியமைத்த தலைவராகக் காணமுடியும்; அவரை வீழ்த்திய மரபுரிமை மற்றும் அவருடைய பெரும் சாதனைகளைக் கருத்தில் கொள்ளும்போது, முகலாய சாம்ராஜ்யத்தில் அதிகாரத்தின் உரிமை மற்றும் நிலையற்ற படிநிலை முறையை குறிப்பாகத் தெரிவிக்கும் அதே வேளையில் கைப்பற்றல், கலவரம் மற்றும் சகிப்புத்தன்மை மூலம் உருவாக்கப்பட்ட ஒரு சாம்ராஜ்ஜியத்தின் உள் வேலைகள் பற்றிய போதிய அறிவை ஷாஜகான் நமக்கு வழங்குகிறார். மூர்க்கத்தனம் மற்றும் துரோகத்தால் அவர் ஆட்சிபீடத்திற்கு வந்தார் இறுதியில் அதே வழிமுறையில் அவரும் வீழ்த்தப்பட்டார், இது முகலாயர்களின் மரபுரிமையை மோசமாக்குகிறது.

ஷாஜகானுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க கட்டுமானங்கள்[மூலத்தைத் தொகு]

ஷாலிமார் தோட்டங்கள் முகலாய பேரரசரால் கட்டப்பட்டது, இது நானூறுக்கும் மேற்பட்ட நீரூற்றுகளைக் கொண்டிருக்கிறது.





தாஜ் மஹால்

ஷாஜகான் தன்னுடைய ஆட்சி காலத்தின்போது கட்டப்பட்ட, ஒரு பெரும் கட்டடச் செல்வங்களையே விட்டுச்சென்றுள்ளார். அவர் கட்டிடக் கலையின் காப்பாளர். அவருடைய மிகப் பிரபலக் கட்டிடமாக இருப்பது தாஜ் மஹால், இது இப்போது உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கிறது, இது அவர் மும்தாஜ் மஹால் மீது கொண்ட காதலுக்காக கட்டப்பட்டது. அதன் கட்டுமானம் மிகுந்த கவனத்துடன் வரையப்பட்டிருக்கிறது மேலும் உலகெங்கிலிருந்தும் பல கட்டிடக் கலைஞர்கள் இதற்காக வரவழைக்கப்பட்டிருந்தனர். இந்தக் கட்டிடம் கட்டிமுடிப்பதற்கு இருபது ஆண்டுகள் ஆனது இது முழுக்கமுழக்க வெள்ளை பளிங்குக்கற்களால் கட்டப்பட்டது. அவர் இறந்தவுடன் அவரது மகன் ஔரங்கசீப் அவரை மும்தாஜ் மஹாலுக்குப் பக்கத்திலேயே புதைக்கச் செய்தார். அவருடைய இதரக் கட்டிடங்கள் பின்வருமாறு, தில்லியில் தில்லி கோட்டை இது செங்கோட்டை அல்லது லால் குய்லா (உருது) என்றும் அழைக்கப்படுகிறது, ஆக்ரா கோட்டையின் பெரும்பகுதி, ஜமா மஸ்ஜித் (பெரும் பள்ளிவாசல்), தில்லி, பாகிஸ்தான் லாகூர்-இல் வாசிற் கான் மசூதி, மோட்டி மஸ்ஜித் (பேர்ல் மசூதி), லாகூர், லாஹூரிலுள்ள ஷாலிமார் தோட்டங்கள், லாகூர் கோட்டையின் சில பிரிவுகள், லாகூர், ஜஹாங்கிர் கல்லறை மாடம் — அவர் தந்தையின் சமாதி, இதன் கட்டுமானப் பணிகள் அவருடைய மாற்றந்தாய் நூர் ஜகான் மேற்பார்வையில் நடைபெற்றது மற்றும் ஷாஜகான் மசூதி, தட்டா, பாகிஸ்தான். அவர் மயில் சிம்மாசனம் தக்த் ஈ தௌஸ்-ஐக் கூட வைத்திருந்தார், அது அவருடைய ஆட்சியைக் கொண்டாடுவதற்காகச் செய்யப்பட்டது.

ஒரு பிரபல இசைவான தெய்வீக உலகஉருண்டை 1659-1660 (1070 AH) ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது, இது தட்டாவைச் சேர்ந்த சிந்தி வானாராய்ச்சியாளர் முகமத் சலிஹ் தாஹ்தாவியால் உருவாக்கப்பட்டது, இது அரபிக் மற்றும் பெர்சீய எழுத்துகளைக் கொண்டிருந்தது.

433 ஈரோஸ் சிறுகோள் மீது ஒரு நிலக்குழி ஷாஜகான் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. ஈரோஸ் மீதிருக்கும் நிலக்குழிகள் பிரபல கதை மற்றும் நிஜவாழ்க்கை காதலர்கள் நினைவாக பெயரிடப்படுகிறது.

ஷாஜகானின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய ஐரோப்பிய மதிப்பீடுகள்[மூலத்தைத் தொகு]
ஷாஜகானின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய பல்வேறு மதிப்பீடுகள் சமகாலத்திய ஐரோப்பிய எழுத்தாளர்களால் விவரித்துக்கூறப்பட்டுள்ளது.

ஷாஜகானின் குடும்பம்[மூலத்தைத் தொகு]

அவருடைய எல்லா மூதாதையர்கள் போலவே ஷாஜகானின் அரசவையும் பல மனைவிகள், காமக்கிழத்திகள் மற்றும் நடனமாடும் பெண்களைக் கொண்டிருந்தது. அநேக ஐரோப்பிய வரலாற்று தொகுப்பாளர்கள் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். நிக்காலாவோ மனுச்சி இவ்வாறு எழுதுகிறார், "அவருடைய இன்பத்துக்கு சேவகம் செய்யும் பெண்களுக்கான தேடல் மட்டுமே ஷாஜகான் அக்கறை கொண்ட ஒரே விஷயமாக இருப்பது போல் தோன்றுகிறது" மேலும் "இதை நிறைவேற்றுவதற்கு அவர் தன்னுடைய அரசவையில் சந்தையை ஏற்படுத்தினார். இங்கு அனைத்து தரப்பு பெண்களைத் தவிர வேறு யாரும் நுழைய அனுமதிக்கபடவில்லை, அதாவது பெரிய மற்றும் சிறிய, பணக்கார மற்றும் ஏழை என எந்தப்பெண்ணாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அனைவரும அழகானவர்களாக இருக்கவேண்டும்."[20] ஆக்ராவின் செங்கோட்டையில் அவர் சிறைவைக்கப்பட்டிருந்தபோது "பாடுகின்ற மற்றும் நடனமாடுகிற பெண்கள் உடபட அவருடைய பெண் குழாம் ஒட்டுமொத்தத்தையும்" அவர் தக்கவைத்துக் கொள்ள ஔரங்கசீப் அனுமதியளித்திருந்தார்.[21] ஷாஜகான் மிகவும் வயதானபோதும் "சதைக்கான பலவீனத்தை" அவர் இழக்கவில்லை என்று மனுச்சி குறிப்பிடுகிறார்.[22] எனினும், இந்தியாவில் இருந்த பெரும்பாலான ஐரோப்பிய பயணிகள் இத்தகைய தகவல்களை அங்காடி வதந்திகள் மூலம் பெற்றுவந்தனரே தவிர நேரடியாக அல்ல.

Friday, 2 September 2016

80% OF LONDON BURN`T IN ,THE GREAT FIRE 1666 SEPTEMBER 2-6

80% OF LONDON BURN`T IN  ,THE GREAT FIRE 1666 SEPTEMBER 2-6


In the early morning hours, the Great Fire of London breaks out in the house of King Charles II’s baker on Pudding Lane near London Bridge.


 It soon spread to Thames Street, where warehouses filled with combustibles and a strong easterly wind transformed the blaze into an inferno.




 When the Great Fire finally was extinguished on September 6, more than four-fifths of London was destroyed. Miraculously, 

only 16 people were known to have died.






The Great Fire of London was a disaster waiting to happen. London of 1666 was a city of medieval houses made mostly of oak timber.
Some of the poorer houses had walls covered with tar, which kept out the rain but made the structures more vulnerable to fire. 

Streets were narrow, houses were crowded together, and the firefighting methods of the day consisted of neighborhood bucket brigades armed with pails of water and primitive hand pumps. Citizens were instructed to check their homes for possible dangers, but there were many instances of carelessness.


So it was on the evening of September 1, 1666, when Thomas Farrinor, the king’s baker, failed to properly extinguish his oven. He went to bed, and sometime around midnight sparks from the smoldering embers ignited firewood lying beside the oven. 

Before long, his house was in flames. Farrinor managed to escape with his family and a servant out an upstairs window, but a bakery assistant died in the flames–the first victim.

Sparks from Farrinor’s bakery leapt across the street and set fire to straw and fodder in the stables of the Star Inn. From the Inn, the fire spread to Thames Street, where riverfront warehouses were packed full with flammable materials such as tallow for candles, lamp oil, spirits, and coal. 


These stores lit aflame or exploded, transforming the fire into an uncontrollable blaze. Bucket-bearing locals abandoned their futile efforts at firefighting and rushed home to evacuate their families and save their valuables.

It had been a hot, dry summer, and a strong wind further encouraged the flames. As the conflagration grew, city authorities struggled to tear down buildings and create a firebreak, but the flames repeatedly overtook them before they could complete their work. People fled into the Thames River dragging their possessions, and the homeless took refuge in the hills on the outskirts of London. 


Light from the Great Fire could be seen 30 miles away. On September 5, the fire slackened, and on September 6 it was brought under control. That evening, flames again burst forth in the Temple (the legal district), but the explosion of buildings with gunpowder extinguished the flames.

The Great Fire of London engulfed 13,000 houses, nearly 90 churches, and scores of public buildings.


 The old St. Paul’s Cathedral was destroyed, as were many other historic landmarks. As estimated 100,000 people were left homeless. Within days, King Charles II set about rebuilding his capital. The great architect Sir Christopher Wren designed a new St. Paul’s Cathedral with dozens of smaller new churches ranged around it like satellites. 

To prevent future fires, most new houses were built of brick or stone and separated by thicker walls. Narrow alleyways were forbidden and streets were made wider. Permanent fire departments, however, did not become a fixture in London until well into the 18th century.


In the 1670s, a memorial column commemorating the Great Fire of London was erected near the source of the calamity. Known as the Memorial, it was probably designed by the architect Robert Hooke, though some sources credit Christopher Wren. 

The column stands 202 feet above the pavement and features sculpture and engravings that tell the story of the conflagration. Even though an official inquiry into the Great Fire concluded that “the hand of God, a great wind, and a very dry season” caused it, an inscription on the Memorial (removed in 1830) blamed the disaster on the “treachery and malice of the Popish faction.”
MOMEMENT -THE GREAT FIRE 1666


In 1986, London’s bakers finally apologized to the lord mayor for setting fire to the city. Members of the Worshipful Company of Bakers gathered on Pudding Lane and unveiled a plaque acknowledging that one of their own, Thomas Farrinor, was guilty of causing the Great Fire of 1666.