Showing posts with label TOLSTOY. Show all posts
Showing posts with label TOLSTOY. Show all posts

Friday, 12 June 2020

LEO TOLSTOY - VE . LENIN




LEO TOLSTOY - V.E . LENIN




லியோ டால்ஸ்டாய் மறைந்து விட்டார்.  ஒரு கலைஞர் என்ற முறையில் அவரது உலகளாவிய முக்கியத்துவமும், ஒரு சிந்தனையாளர், பிரச்சாரகர் என்ற முறையில் அவரது உலகப் புகழும் தமக்கே உரிய வழியில் ரஷியப் புரட்சியின் உலக முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றன.
நாட்டின் அடிமை முறை ஆதிக்கம் செலுத்தி வந்தபொழுது எல்.என்.டால்ஸ்டாய் ஒரு மகத்தான கலைஞராகத் தோன்றினார். தமது இலக்கியச் செயல்பாட்டில் அரை நூற்றாண்டிற்கும் அதிகமான காலத்தில் அவர் படைத்தளித்த பல மாபெரும் நூல்களில் 1861-க்குப் பிறகும் அரை அடிமைத்தன அரசாக இருந்த பழைய புரட்சிக்கு முந்திய ரஷ்யாவை – நிலப்பிரபுவும் விவசாயியும் வாழ்ந்த கிராமிய ரஷ்யாவை – அவர் பிரதானமாயும் சித்தரித்தார்.


ரஷ்ய வரலாற்றின் இந்தக் காலகட்டத்தினைச் சித்தரிப்பதில் டால்ஸ்டாய் மிகப்பல பெரும் பிரச்சினைகளை எழுப்புவதில் வெற்றி கண்டார். கலை ஆற்றலில் மிகவும் உயர் சிகரத்தை எட்டுவதில் வெற்றி கண்டார். இதன் விளைவாக அவரது நூல்கள் உலக இலக்கியத்தில் மிகச் சிறந்தவற்றிடையே அணி செய்கின்றன. அடிமை எஜமான்களின் காலடியில் கிடந்த நாடு ஒன்றில் புரட்சிக்குத் தயாரிப்புகள் செய்யும் சகாப்தம் எழுந்ததானது, டால்ஸ்டாய் கொடுத்த அற்புதமான ஒளியின் காரணமாக, மனிதகுலம் முழுவதன் கலைச்சிறப்பின் வளர்ச்சியில் ஒரு முன்னேற்றப் படியாகியது.


டால்ஸ்டாய் ஒரு கலைஞர் என்ற முறையில் ரஷ்யாவிலுங்கூட மிக மிகச் சிறு பகுதியினரால் மட்டுமே அறியப்பட்டிருந்தார். அவரது படைப்புக்களை உண்மையிலயே அனைவரின் சொத்தாக ஆக்க வேண்டுமானால், கோடானு கோடி மக்களை அறியாமையிலும் சலிப்பூட்டும் வேலையிலும், வறுமையிலும் ஆழ்த்திவிடும் சமூக அமைப்பினை எதிர்த்துப் போராட்டம் துவக்கப்பட வேண்டும். ஒரு சோஷலிசப் புரட்சி சாதனையாக்கப்பட வேண்டும்.

படிக்க:
♦ ” நடனத்திற்குப் பின் ” – டால்ஸ்டாயின் புகழ்பெற்ற சிறுகதை!
♦ ஆயுதம் செய்யுங்கள் – நீங்களே ஏந்துங்கள் !

வெகு ஜனங்கள், நிலப்பிரபுக்கள், முதலாளிகள் ஆதிக்கத்தைத் தூக்கி எறிந்து தமக்கே உரிய வாழ்வுக்கான மனித நிலைமைகளை உருவாக்கிக் கொண்ட பிறகு, படித்துப் பாராட்டுவதற்கான கலைச்சிறப்புடைய நூல்களை மட்டும் டால்ஸ்டாய் படைக்கவில்லை. இன்றைய அமைப்பினால் ஒடுக்கப்பட்டுவரும் பெரும்பாலான வெகு ஜனங்களின் மனோநிலையினை அற்புதமான ஆற்றலுடன் விளக்குவதிலும், அவர்களது நிலைமையைச் சித்தரித்து, அவர்களிடை தானே எழும் கண்டன ஆக்குரோஷ உணர்வுகளை வெளியிடுவதிலும் அவர் வெற்றி கண்டார்.

பிரதானமாயும் 1861 – 1904 யுகத்தினைச் சேர்ந்தவராக இருந்த டால்ஸ்டாய் அவரது நூல்களில் ஒரு கலைஞர், ஒரு சிந்தனையாளர், போதகர் என்ற வகையிலும் – முதல் ரஷ்யப் புரட்சி முழுவதன் அதன் வலிமை, பலவீனம் இவற்றோடு கூடிய அதன் விசேஷ வரலாற்று அம்சங்களை அற்புதமான தெளிவுடன் உருவகப்படுத்திக் காட்டினார்.

நமது புரட்சியின் பிரதான தனி அம்சங்களில் ஒன்று அது உலக முற்றிலும் முன்னேற்றமான முதலாளித்துவ வளர்ச்சியும், ரஷ்யாவில் ஓரளவுக்கு முன்னேற்றமான வளர்ச்சியும் உடைய யுகத்தில் நடைபெற்ற விவசாயி பூர்ஷ்வா (பூர்ஷ்வா – முதலாளிகள்) புரட்சி. இது பூர்ஷவா புரட்சி, காரணம் அதன் உடனடி நோக்கம் ஜாரின் எதேச்சாதிகாரத்தை ஜாரிச மன்னராட்சியையும் தூக்கி எறிவது, நிலப்பிரபுத்துவத்தை ஒழிப்பது, ஆனால் பூர்ஷ்வா ஆதிக்கத்தை ஒழிப்பதல்ல.

குறிப்பாக விவசாயிகளுக்கு இந்தப் பிந்திய நோக்கம் தெரியாது. அவர்கள் இந்த நோக்கத்திற்கும் போராட்டத்தின் நெருக்கமான உடனடியான கோரிக்கைகளுக்கு இடையிலான வித்தியாசத்தைத் தெரிந்திருக்கவில்லை. அது ஒரு விவசாயிகளின் பூர்ஷுவா புரட்சியாக இருந்தது . காரணம் எதார்த்த நிலைமைகள் விவசாயிகளின் வாழ்வின் அடிப்படை நிலைமைகளை மாற்றுவது, நிலவுடமையின் பழைய மத்திய கால அமைப்பினை உடைப்பது, முதலாளித்துவத்திற்கான “தளத்தைத் தயாரிப்பது” என்ற பிரச்சினையை முன்னணியில் வைத்தன. இந்த எதார்த்த நிலைமைகள் விவசாயப் பொதுமக்கள் ஏறத்தாழ சுதந்திரமான வரலாற்றுப் போராட்ட அரங்கில் தோற்றமளிப்பதற்குப் பொறுப்பாக இருந்தன.


டால்ஸ்டாயின் நூல்கள் குறிப்பாகவும் விவசாயிகள் வெகுஜன இயக்கத்தின் வலிமை, பலவீனம், ஆற்றல், குறைகள் இவற்றை வெளிப்படுத்துகின்றன.
டால்ஸ்டாயின் நூல்கள் குறிப்பாகவும் விவசாயிகள் வெகுஜன இயக்கத்தின் வலிமை, பலவீனம், ஆற்றல், குறைகள் இவற்றை வெளிப்படுத்துகின்றன. போலீசுடன் சேர்ந்து நின்ற அரசு அதிகாரபூர்வமான சமய குரு பீடத்தை எதிர்த்து அவரது காரசாரமான உணர்ச்சி பொங்கும் தாட்சண்யமற்ற கடும் கண்டனம், பழமையான விவசாயிகளிடையிலான ஜனநாயக வெகுஜனப் பகுதிகளின் உணர்ச்சிகளை வெளியிட்டன. அவர்களிடை பல நூற்றாண்டுகால அடிமைத்தனம், ஆட்சிக் கொடுங்கோல், கொள்ளை, மதபீடக் குருக்கள் ஆதிக்கம், ஏமாற்று உருட்டுப் புரட்டுகள் இவற்றின் விளைவாகக் கோபாவேசமும், பகைமையும் மலைபோல் குவிந்திருந்தன. நிலத்தில் தனியுடமையினை அவர் வளைந்து கொடாது எதிர்த்ததானது இந்த வரலாற்றுக் காலகட்டத்தில் விவசாய வெகுஜனங்களின் மனோதத்துவத்தினை எடுத்துக் காட்டியது.

அந்தக் கட்டத்தில் பழைய மத்தியக் காலம் நிலவுடைமை, எஸ்டேட்டுகள் வடிவிலும் அரசாங்க  “ஒதுக்கீடுகள்” வடிவிலும் நாட்டின் வளர்ச்சிக்கு நிச்சயமாயும் சகிக்க முடியாது தடைக்கல்லாக இருந்தது. இந்தப் பழைய நிலவுடைமை முறை மிகவும் உடனடியாகவும் தாட்சண்யமின்றியும் தவிர்க்க முடியாத வகையில் அழிக்கப்படும் என்பது நிச்சயம். முதலாளித்துவத்தை எதிர்த்த அவரை இடைவிடாத குற்றச்சாட்டுக்கள் மிகவும் ஆழ்ந்த உணர்ச்சியோடும் மிகவும் ஆர்வம்நிறை ஆக்குரோஷத்துடனும் பரிணமித்த குற்றச்சாட்டுகள், நகரங்களிலிருந்தும் வெளிநாட்டின் எங்கிருந்தோ வந்த புரியாத கண்ணுக்குத் தெரியாத புதிய விரோதியின் வருகையால் தந்தைவழி  மரபு விவசாயிகள் அடைந்த பயங்கரம் அனைத்தையும் எடுத்துக் கூறின.

அந்த விரோதி கிராமிய வாழ்க்கையின் தூண்கள் எல்லாவற்றையும் அழித்து, தன்னுடன் முன் என்றும் கண்டிரா வகையில் நாசம், வறுமை, பட்டனி, காட்டுமிராண்டித்தனம், வேசத்தனம், மேகநோய் போன்ற “ஆதிகால சேகரிப்பு சகாப்தத்தின்” தொடர்ந்த எல்லாத் தீம்புகளையும் கொண்டு வந்தன. சர்வ வல்லமை பெற்ற கனவான் கூப்பனின்48 விரித்துரைக்கப்பட்ட மிகவும் நவீனமான கொள்ளை முறைகள் ரஷ்ய மண்ணில் நடவு செய்யப்பட்டதால் இவை நூறுமடங்கு உக்ரமடைந்தன.

ஆனால் இந்த ஆவேசமான கண்டனக்காரர், உணர்ச்சிமிகு குற்றச் சாட்டாளர், மாபெரும் விமர்சகர்;  அதே பொழுதில் தமது நூல்களில் ரஷ்யாவை அச்சுறுத்தி வரும் நெருக்கடியின் காரணங்களையும், அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளையும் புரிந்து கொள்ளத் தவறி விட்டார். இது தந்தைவழி மரபு அப்பாவி விவசாயியின் தனி இயல்பாக இருக்கலாம். ஐரோப்பியக் கல்வி பெற்ற ஓர் எழுத்தாளருக்கு உரியதன்று.

நிலப்பிரபுத்துவப் போலீஸ் ஆட்சியை எதிர்த்தும், மன்னராட்சியினை எதிர்த்தும் அவர் நடத்திய போராட்டம், அரசியலையே மறுப்பதாக மாறியது, “தீமையை எதிர்க்காதே” என்ற சித்தாந்தத்திற்கு அழைத்துச் சென்றது; 1905-07-லான மக்களின் புரட்சிகரப் போராட்டத்திலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தியது. அதிகார பூர்வமான சமய குருபீடத்திற்கு எதிரான போராட்டம் ஒரு புதிய சுத்தப்படுத்தப் பெற்ற சமய போதனையுடன் சேர்ந்து நடைபெற்றது. அதாவது ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களுக்கு ஒரு புதிய சுத்திகரிக்கப்பட்ட நயமான விஷமாக இருந்தது.


நிலத்திலான தனியுடைமைபாலான எதிர்ப்பு, உண்மை விரோதியான -நிலப்பிரபுத்துவம், அதன் அதிகாரத்தின் அரசியல் கருவியான அதாவது மன்னராட்சிக்கு எதிரான போராட்டமாக ஒருமுகப்படுத்தப்படவில்லை. மாறாகக் கனவு போன்ற, கலைவுற்ற, ஆண்மையற்ற ஒப்பாரிகளாகக் காட்சியளித்தன. முதலாளித்துவத்தையும் அது வெகுஜனங்கள் மீது விளைக்கும் தீம்புகளையும் அம்பலப்படுத்துவதானது, சர்வதேச சோஷலிசத் தொழிலாளி வர்க்கம் நடத்தி வரும் உலகு தழுவிய விடுதலைப் போராட்டத்தின்பாலான ஒரு முற்றிலும் உறக்க மனப்பான்மையுடன் இணைந்திருந்தது.

படிக்க :
♦ மறக்கவொண்ணா மாஸ்கோ நூல்கள் !
♦ இலக்கியம் : ஒரு அப்பாவிப் பெண் அச்சத்தை துறக்கிறாள் !

டால்ஸ்டாயின் கருத்துகளிலான முரண்பாடுகள் அவரது சொந்தக் கருத்துகளில் உள்ளார்ந்து கிடக்கும் முரண்பாடுகள் மட்டுமல்ல, மாறாகச் சீர்த்திருத்தத்திற்குப் பிந்திய ஆனால் புரட்சிக்கு முந்தியதான ரஷ்ய சமுதாயத்தின் பல்வேறு வர்க்கங்கள், பல்வேறு பகுதிகளின் மனோதத்துவத்தை நிர்ணயித்த மிக மிகச் சிக்கலான, முரண்பாடான நிலைமைகள் சமுதாயச் செல்வாக்குகள், வரலாற்று மரபுகள் இவற்றின் பிரதிபலிப்பேயாகும்.

இதனால்தான் தனது அரசியல் பாத்திரத்தால் இந்த முரண்பாடுகளின் முதல் இறுதி விளக்கமானது புரட்சி சமயத்தில், மக்களின் விடுதலைக்கும் சுரண்டலிருந்து பொதுமக்களை விடுதலை செய்யவுமான போராட்டத்தில் தலைவனாக விளங்கும் வாய்ப்பினைப் பெற்ற வர்க்கத்தின் கருத்தோட்டத்திலிருந்து மட்டுமே டால்ஸ்டாய் பற்றிய சரியான மதிப்பீடு செய்தல் முடியும். இந்த வர்க்கம் ஜனநாயக லட்சியத்திற்குத் தன்னலமின்றித் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. (விவசாயி உள்ளிட்ட) பூர்ஷூவா ஜனநாயகத்தின் குறைகளையும் முரண்பாடுகளையும் எதிர்த்துப் போராடும் ஆற்றலையும் நிரூபித்துள்ளது. அத்தகைய மதிப்பீடு சமூக – ஜனநாயகத் தொழிலாளி வர்க்கத்திடமிருந்தே சாத்தியமாகும்.

அரசாங்கச் செய்திப் பத்திரிகைகள் டால்ஸ்டாய் பற்றிச் செய்துள்ள மதிப்பீட்டைப் பாருங்கள். இந்த “மாபெரும் எழுத்தாளருக்கு தமது மரியாதையைக் காட்டுவதாகப் பாவனை செய்தபடியே “புனித” சமய பீடத்தினையும்49 ஆதரித்து முதலைக் கண்ணீர் படிக்கின்றன. இவை புனித பாதிரிகளைப் பொருத்தவரை அவர்கள் குறிப்பாகவும் ஒரு கொடிய தீம்பை இழைத்துள்ளனர். மரணத் தருவாயிலிருந்த கிழவரிடம் புரோகிதர்களை அனுப்பி மக்களை ஏமாற்றி டால்ஸ்டாய் “குற்ற மன்னிப்புக்” கோரியதாகக் கூறுகிறார்கள். புனிதத் திருச்சபை டால்ஸ்டாயைப் பிரஷ்டம் செய்தது. அதுவரையில் நல்லதே;  கிருஸ்துவிலுள்ள இந்த வஞ்சகக் கடுமுறைமையாளர் ஜாரின் கருப்பு நூற்றுவர்50 கும்பலின் யூத எதிர்ப்பு, கொலைச்செயல்களையும் இதர சாதனைகளையும் ஆதரித்து அங்கி தரித்த  இந்த அதிகாரிகளுடன் மக்கள் கணக்குத் தீர்க்கும் நேரம் வரும்போது இந்த வெற்றிச் சாகசம் பற்றி நினைவு கூரப்படும்.

மிதவாதப் பத்திரிகைகள் டால்ஸ்டாய் பற்றிச் செய்துள்ள மதிப்பீடுகளைப் பார்ப்போம். பூர்ஷ்வா விஞ்ஞானத்தை டால்ஸ்டாய் கண்டித்துள்ள, நியாயமாகவே கண்டித்திருக்கிற “நாகரிக மனிதகுலத்தின் குரல்”  “உலகின் ஒருமுகமான பிரதிபலிப்பு” “உண்மை நன்மைக் கருத்துகள்” போன்ற ஆழமற்ற அதிகாரபூர்வ – மிதவாத பழமைப்பட்ட ஆசிரிய பாணி சொற்றொடர்கள் அளவில் நின்று விடுகின்றன.

அரசு, சமய அமைப்பு, நிலத்தில் தனியுடைமை, முதலாளித்துவம் பற்றிய டால்ஸ்டாயின் கருத்துகள் பற்றித் தமது கருத்துகளை சாதாரணமாயும் தெளிவாகவும் அவர்களால் வெளியிட முடியாது. தணிக்கை அவர்களைத் தடை செய்வதாலன்று. மாறாகத் தணிக்கைமுறை அவர்களைச் சங்கடமான நிலையிலிருந்து தப்ப உதவுகிறது! – இதற்குக் காரணம் டால்ஸ்டாயின் விமரிசனத்தின் ஒவ்வொரு வாத முகமும் பூர்ஷூவா மிதவாதத்தின் முகத்தில் அடித்த அடியாகும்.

டால்ஸ்டாய் நமது காலத்தின் ஆறாத புண்ணாகிவிட்ட, மிகவும் சிக்கலான பிரச்சினைகளை அச்சமின்றி அப்பட்டமாயும் தாட்சாண்யமின்றியும் முன்வைப்பது நமது மிதவாதிகளின் (மிதவாத நரோத்னிக்களின்) மாமூல் சொற்றொடர்கள், பழகிப்போன சிலேடைகள் தப்பிலித்தனமான “நாகரிகப்” பொய்கள் இவற்றுக்கு உரிய பதிலடியாகும். மிதவாதிகள் அனைவரும் டால்ஸ்டாயை ஆதரிக்கிறார்கள். எல்லோரும் திருச்சபைக்கு எதிராக உள்ளனர். – ஆனால் அதே சமயம் அவர்கள் வெகிஸ்டுகளை51 ஆதரிக்கிறார்கள். அவர்களுடன் “மாறுபடுவது சாத்தியம்.” ஆனால் ஒரே காட்சியில் இசைவுடன் வாழ வேண்டுவது  “அவசியம்”,  இலக்கியம் அரசியல் இவற்றில் சேர்ந்து வேலை செய்ய வேண்டுவது “அவசியம்” எனக் கருதுகிறார்கள். எனினும் வெகிஸ்டுகளை முத்தமீந்து வரவேற்கிறார் வோல்ஹினியா பிஷப் அந்தோனி.

டால்ஸ்டாய் ஒரு “மாபெரும் மனச்சாட்சி” என்று மிதவாதிகள் முன்னணியில் வைத்தார்கள். நொவோயி விரேமியா52வாலும் இதுபோன்ற செய்தித் தாள்கள் அனைத்தாலும் ஓராயிரம் விதமாகத் திரும்பத் திரும்பக் கூறப்படுகிற ஆழமற்ற சொற்றொடர் அல்லவா இது? டால்ஸ்டாய் முன்வைத்த ஜனநாயகம், சோஷலிசம் இவற்றின் ஸ்தூலமான பிரச்சினைகளிலிருந்து தப்புவதல்லவா ? டால்ஸ்டாயின் அறிவு தீட்சண்யத்தை விட்டு அவரது வெறுப்புகளையும் எதிர்கால அம்சத்தை விட்டுப் பழம்பகுதியையும், அனைத்து வர்க்க ஆதிக்கத்தையும் எதிர்த்து அவரது கடும் கண்டனத்தை விட்டு விட்டு அவர் அரசியலை மறுத்ததையும் தார்மீகச் சுய அனுபூதி பற்றிய போதனையையும் வெளிப்படுத்தும் அம்சத்தை முன்னணியில் வைப்பதல்லவா இது ?

டால்ஸ்டாய் மரணமடைந்தார். அவரது தத்துவத்தின் வெளியீடாகி இந்த மாபெரும் கலைஞரால் தமது  நூல்களில் சித்தரிக்கப்பட்டதான பலவீனமான ஆண்மையற்ற, புரட்சிக்கு முந்தியதான, ரஷ்யா இறந்த காலமாகிவிட்டது. ஆனால் அவர் விட்டுச் சென்றுள்ள பிதுராஜ்யத்தில் பழமையாகிவிட்ட கூறுகளின்றி எதிர்காலத்திற்குரியவையும் உட்படும். இந்தப் பிதுராஜ்யத்தை ஏற்று அதன் மீது பணியாற்றுகிறது ரஷ்யத் தொழிலாளி வர்க்கம்.

உழைப்பாளி வெகுஜனங்களுக்கும் சுரண்டப்பட்டவர்களுக்கும் அரசு, சமய பீடம், நிலத்தில் தனியுடைமை பற்றிய டால்ஸ்டாயின் விமர்சனத்தின் பொருளை விளக்கிக் கூறும். எதற்காக? பொது மக்கள் சுய பூர்ணத்துவம், தெய்வீக வாழ்வில் ஆர்வம் இவற்றுடன் நிறுத்திக் கொள்வதற்காக அல்ல. மாறாக அவர்கள் எழுச்சியுற்று 1905-இல் சற்றே அழிவடைந்து முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஜாரிச மன்னராட்சியும், நிலப்பிரபுத்துவ அமைப்பையும் எதிர்த்துப் புதிய தாக்குதல் தொடுக்குமாறு கோரும், ரஷ்யத் தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவம் பற்றிய டால்ஸ்டாயின் விமர்சனத்தைப் பொது மக்களுக்கு, விளக்கிக் கூறும்.

எதற்காக? முதலாளித்துவத்திற்கும் பண ஆட்சிக்கும் எதிராக பழித்துரைகளை வீசுவதற்கு மட்டுமல்ல. மாறாகத் தமது வாழ்க்கையின் தமது போராட்டத்தின் ஒவ்வொரு படியிலும் முதலாளித்துவத்தின் தொழில்நுட்ப சமூக சாதனைகளைப் பயன்படுத்த அறிந்து கொள்ள வேண்டும். முதலாளித்துவத்தை வீழ்த்தி மக்கள் வறுமைக்கு இரையாகாத, மனிதனை மனிதன் சுரண்டாத, ஒரு புதிய சமூகத்தைப் படைப் பதற்கான லட்சோப லட்சம் சோஷலிசப் போராட்ட வீரர்களின் படையாகத் தம்மைத் தாமே இணைத்துக் கொள்ளத் தெரிந்து கொள்ள வேண்டும்.

– லெனின்

அடிக்குறிப்புகள்:

48: எம்.கூபன்- பத்தொன்பதாம் நூற்றாண்டின் எண்பதாம், தொண்ணாறாம் ஆண்டுகளின் இலக்கியத்தில் மூலதனத்திற்கு அல்லது முதலாளிகளுக்கு இடப்பட்ட ஓர் உருவகப் பெயர். இது ரஷ்ய எழுத்தாளர் கிளேப் உஸ்பென்ஸ்கியினால் “பயங்கரமான பாவங்கள்” என்னும் அவரது குறிப்புகளில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது.

49: சினட் – ரஷ்ய வைதீக குருபீடத்தின் உயர் நிர்வாக அமைப்பு இது.

50: கருப்பு நூற்றுவர்: புரட்சிகர இயக்கத்தை எதிர்ப்பதற்காக ஜார் போலீசால் உருவாக்கப்பட்ட முடியாட்சிக் கும்பல். இவர்கள் புரட்சிவாதிகளைப் படுகொலை செய்தனர். முற்போக்கு அறிவுத் துறையினரைத் தாக்கினர். யூத எதிர்ப்பு கலகங்களைத் தூண்டினர்.

51: வெக்கி (சிறப்புக் கட்டங்கள்) -பல எதிர்ப்புரட்சி மிதவாத – பூர்ஷ்வாக்களின் பிரதிநிதிகளின் ஒரு கேடட் கட்டுரைகள் தொகுப்பு. இது 1909 வசந்த காலத்தில் மாஸ்கோவில் வெளியிடப் பெற்றது. பெலின்ஸ்கி, செர்னிஷெவிஸ்கி உட்பட ரஷ்ய மக்களின் புரட்சிகர ஜனநாயக மரபுகளின் மிகச் சிறந்த பிரதிநிகளை ரஷ்ய அறிவுத் துறையினர் பற்றிய கட்டுரைகளில் இந்த எழுத்தாளர்கள் இழிவுபடுத்த முயன்றனர்; 1905 புரட்சிகர இயக்கத்தை அவதூறு செய்தனர்; “தனது துப்பாக்கிச் சனியன்கள், சிறைகள் மூலமாக “பொதுமக்களின் கோபாவேசத்திலிருந்து” பூர்ஷாவாக்களைக் காப்பாற்றியதற்காக ஜார் சர்க்காருக்கு நன்றி தெரிவித்தனர். எதேச்சதிகாரத்தின் நலன்களுக்கு மேலும் ஆதரவளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

52: நோவயே விரெம்யா (நியூடைம்ஸ்) – 1868-லிருந்து 1917 அக்டோபர் வரை செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து வெளிவந்த ஒரு செய்திப் பத்திரிகை. முதலில் இது ஓரளவு மிதவாதப் பத்திரிகையாக இருந்தது. ஆனால் 1876-லிருந்து மேட்டுக் குடியினர், அதிகார வர்க்கத்தினரிடையேயான பிற்போக்கு வட்டாரங்களின் பத்திரிகையாக மாறிற்று.

சோஷியல்-டொமாகிராட் எண். 18
நவம்பர் 18 (29) 1910
(லெனின் தொகுப்பு நூல்கள் பக்கம் 16, பக் 323-27)

நூல்: கலை, இலக்கியம் பற்றி – வி.இ.லெனின்
தமிழாக்கம்: கே.ராமநாதன்

Monday, 12 February 2018

சூரத் காப்பிக் கடை



СУРАТСКАЯ КОФЕЙНАЯ : சூரத் காப்பிக் கடை
மூலம் : லியோ டால்ஸ்டாய்
தமிழில் : மா. புகழேந்தி

ஒரு காலத்தில் சூரத் நகரத்தில் ஒரு காபிக் கடை இருந்தது, அங்கே உலகின் எல்லா மூலையில் இருந்தும் பல வெளி நாட்டு வணிகர்கள் வந்து சந்தித்து தங்களுக்குள் அளவளாவிக் கொள்வார்கள்.

ஒரு நாள் ஒரு பாரசீக தத்துவ ஞானி அங்கு வந்தான். தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியைக் கடவுளைப் பற்றிப் படித்தும் பேசியும் ஆராய்ந்தும் எழுதியும் கழித்திருந்தான். இவ்வாறு அதிகப்படியாகச் செய்ததினால், சிந்திக்கும் திறனில் பிறழ்ந்திருந்தான், குழப்பமுற்றிருந்தான், கடவுள் என்ற ஒன்று இருப்பதையே நம்ப முடியாமல் போனான். இதைக் கேள்விப்பட்ட ஷா பாரசீகத்திலிருந்து அவனைத் துரத்திவிட்டான்.

வாழ்க்கை முழுதும் தர்க்கம் செய்தே களைத்துவிட்ட இந்தத் தத்துவ ஞானி எல்லாவற்றையும் சந்தேகம் கொள்ளலானான். அவைகளைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக தனது சொந்தக் கருத்தையே மறந்து விட்டான்.
அவன் கருத ஆரம்பித்தான், இந்தப் பேரண்டத்தினை வேறு எந்தச் சக்தியும் இயக்குவிக்கவில்லை என்று.

அந்தப் பாரசீகன் ஓர் ஆப்பிரிக்க அடிமையைக் கொண்டிருந்தான், அந்த அடிமை அவனது முதலாளியை எல்லா இடத்திற்கும் பின் தொடர்ந்தான்.
தத்துவ ஞானி காப்பிக் கடைக்குள் நுழைந்த போது அடிமை வெயிலில் கடையின் வாயிலில் கதவருகே உள்ள கல்லில் அம்ர்ந்து கொண்டு தன்னருகே பறந்து கொண்டிருந்த ஈக்களை ஓட்டியபடி இருந்தான். பாரசீகன் சாய்வாக அமர்ந்து கொண்டு தனக்கு ஒப்பியம் வெண்டுமென்று கேட்டான்.
அதை அவன் குடித்து முடித்த போது, ஒப்பியம் தனது வேலையைச் செய்ய ஆரம்பித்தது, அவனது மூளையை அது தூண்டிவிட்டது, அவன் தனது அடிமையைப் பார்த்துக் கேட்டான்:
"எனது அடிமையே, இப்போது சொல் , நீ என்ன நினைக்கிறாய் கடவுள் இருக்கிறாரா இல்லையா?"
"ஆமாம் இருக்கிறார் அய்யா ," உடனே தனது இடுப்புக் கச்சையில் இருந்து மரத்தாலான ஒரு சிறிய கடவுள் சிலையை எடுத்துக் கட்டினான்.
"இது தான்," அவன் சொன்னான் "என் கடவுள், என்னைப் பிறந்ததிலிருந்து காப்பற்றிக்கொண்டு வருகிறார்! எங்கள் நாட்டில் இதைப் போலவே எல்லோரும் புனித மரத்தாலான ஒரு கடவுள் சிலையை வைத்திருப்பார்கள் "
காப்பிக் கடையில் இருந்தவர்கள் எல்லாம் தத்துவஞானிக்கும் அவனது அடிமைக்கும் இடையில் நடந்துகொண்டிருந்த இந்த உரையாடலை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். பாரசீகனின் கேள்வியையும் அவனது அடிமையின் பதிலையும் கண்டு மிரண்டு போயினர்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஓர் அந்தணன் அடிமையைப் பார்த்து பதிலளித்தான்:
"அட முட்டாளே! கடவுள் என்ன இடுப்புக் கச்சையில் கட்டி எடுத்துச் செல்லப்படும் பொருளா? உலகில் ஒரே ஒரு கடவுள் தான் உண்டு அவர்தான் பிரம்மா. அவர்தான் எல்லாவற்றையும் விட மிகப் பெரியவர், ஏனெனில் அவர் தான் இப்பூமியைப் படைத்தார். அவர்தான் வல்லமை மிக்கவர், அவரைப் போற்றுவதற்காகத் தான் கங்கைக் கரையில் பல கோயில்கள் கட்டப்பட்டிருகின்றன. அவரின் உண்மைச் சேவகர்களான அந்தணர்கள் அவரை அங்கு வழிபடுகிறார்கள். அவர்களுக்குத் தான், அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் உண்மைக் கடவுள் யாரென்று. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது, புரட்சி மேல் புரட்சி வந்தது ஆனாலும் அந்தணர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை, பிரம்மா தான் அவர்களைக் காத்துக் கொண்டிருக்கிறார்."
அவ்வாறு அந்த அந்தணன் பேசி எல்லோரையும் சரிக்கட்ட முற்பட்ட போது அங்கிருந்த ஒரு யூத வணிகன் குறுக்கிட்டு பதிலுரைத்தான் :
"இல்லை, கடவுளின் கோவில் இந்தியாவில் இல்லை. அவர் அந்தணர் சாதியினரையும் காப்பவரில்லை. உண்மையான கடவுள் அந்தணர்களின் கடவுள் அல்ல, அவர் அப்ரகாம், ஐசாக் மற்றும் ஜேகோபின் கடவுளாவார்.
"அவர் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரேலியர்களைத் தவிர வேறு யாரையும் காக்க மட்டார். உலகம் தோன்றிய நாளில் இருந்து அவர் எங்கள் நாட்டை மட்டுமே விரும்புகிறார். நாங்கள் இப்போது உலகம் முழுவதும் சிதறி இருப்பதும் கடவுளின் திருவிளையாடலே. எங்கள் மக்களை எல்லாம் ஜெருசலத்தில் ஒன்று கூட்டி ஒரு நாட்டை உருவாக்கித் தருகிறேன் என்று கடவுள் உறுதியளித்து இருக்கிறார். பிறகு ஜெருசலக் கோவிலால் பண்டைய பெருமைகள் மீண்டும் நிலைநாட்டப்படும், இஸ்ரேலியர்கள் இந்த உலகை ஆள்வார்கள்."
அந்த யூதன் பேசப்பேசக் கண்ணீர் விட்டு அழுதான். இன்னும் அதிகம் பேச ஆசைப்பட்டான், ஆனால் இத்தாலிய கிறிஸ்தவ ஊழியன் ஒருவன் அவனை இடை மறித்தான்.

"நீ என்னவெல்லாம் சொல்கிறாயோ அதெல்லாம் உண்மையில்லை, " அவன் யூதனிடத்தில் சொன்னான். " நீ கடவுளுக்குக் களங்கம் கற்பிக்கிறாய். அவர் மற்ற நாடுகளை எல்லாம் விட்டு விட்டு உன் நாட்டை மட்டும் நேசிக்க மாட்டார். அப்படியே அது உண்மை என்றாலும் அது பழைய இஸ்ரேலாகத் தான் இருக்கும். இப்போது பத்தொன்பது நூற்றாண்டுகள் ஆகிவிட்டது. நீங்கள் அவரைக் கோபம் கொள்ள வைத்து விட்டீர்கள். அதனால் தான் உங்கள் நாட்டை அழித்து உலகம் முழுவதும் உங்களைச் சிதற விட்டிருக்கிறார். அதனால் தான் அவர்களது மதத்தில் புதிதாக யாரும் சேர்வதில்லை, இருப்பவர்களும் ஆங்காங்கே செத்துக் கொண்டிருக்கிறார்கள்."
"கடவுள் எந்த ஒரு நாட்டையும் தனியாக விரும்புவதில்லை, அதனால் யாரெல்லாம் காப்பாற்றப்பட வேண்டுமோ அவர்களெல்லாம் ரோமன் கத்தோலிக்கத் திருச் சபைக்கு வாருங்கள், அதற்கு வெளியே யாருக்கும் முக்தி கிடையாது."
இத்தாலியன் அவ்வாறு பேசிக்கொண்டு போனான். ஆனால் அங்கு இருந்த ஒரு ப்ரோட்டஸ்டன்ட் கிறிஸ்த்தவன் கத்தோலிக்கனைப் பார்த்து ஆச்சரியத்துடன் கேட்டான் :
"எப்படி நீ உன்னுடைய மதம் மட்டும் முக்தி தரும் என்ரு சொல்லலாம்? கிறிஸ்த்துவே சொல்லியிருக்கிறார் கடவுளுக்கு உண்மையான அன்புடன் ஊழியம் செய்யும் தூய உள்ளம் கொண்டவர்கள் மட்டுமே முக்தி அடையமுடியும் என்று."

சூரத்தில் ஒரு சுங்கச் சாவடியில் அலுவலரான ஒரு துருக்கியன் அங்கே அமர்ந்து புகைத்துக் கொண்டிருந்தான், இரண்டு கிறிஸ்த்தவர்களையும் ஏளனமாகப் பார்த்தபின்பு பேச ஆரம்பித்தான்.
"ரோமன் கத்தோலிக்க மதத்தின் மீது உங்களது நம்பிக்கை வீணானது," அவன் சொன்னான். "அது முகம்மதுவின் வரவால் ஓராயிரத்து இரு நூறு ஆண்டுகளுக்கும் முன்னரே முறியடிக்கப்பட்டது. உங்களால் அது மறுக்கமுடியாது கவனிக்க வேண்டும், முகம்மதுவின் போதனைகள் இப்போது ஐரோப்பா, ஆசியா மட்டுமல்லாது கற்றரிந்தோர் இருக்கும் சீனாவிலும் பரவிக்கொண்டிருக்கிறது."
நீங்கள் பேசிக்கொண்டீர்கள், கடவுள் யூதர்களை கைவிட்டு விட்டார் என்று; அப்புறம், ஆதாரத்துக்காக, நீங்கள் சொன்னீர்கள் யூதர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்றும் அவர்களது மதம் வளரவில்லை என்றும். ஒத்துக்கொள்ளுங்கள் முகம்மதின் பெருமைகள், இப்போது அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியிருக்கிறது. யாரும் காப்பாற்றப் படமாட்டார்கள், முகம்மதின் தொண்டர்களைத் தவிர. அவர்தான் கடவுளின் தற்போதைய தூதர். அதில் ஒமரைப் பின்பற்றுபவர்களை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும், அலியைப் பின்பற்றுபவர்களை அல்ல. அலியைப் பின்பற்றுபவர்கள் தவறான வழியில் போகிறவர்கள்."
இதைக்கேட்ட அலியைப் பின்பற்றும் பாரசீகத் தத்துவ ஞானி, பதிலுரைக்க முற்பட்டான்; அதே நேரம் அங்கே இருந்த அனைத்துத் தரப்பு மத நம்பிக்கையாளர்களும் பெரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அங்கே அபிசீனியக் கிறிஸ்தவர்கள், திபெத்திய லாமாக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் சவ்ராஷ்டிரர்கள் குழுமியிருந்தனர். அவர்களெல்லாம் கடவுளைப் பற்றியும் அவரை வழிபடும் முறையைப் பற்றியும் விவாதித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தன்னுடைய நாட்டில் மட்டுமே உண்மையான கடவுள் அறியப்பட்டாரென்றும் சரியாக வழிபடப்படுகிறாரென்றும் கூறிக்கொண்டனர்.
ஒவ்வொருவரும் கூச்சலிட்டு வாதம் செய்துகொண்டு இருந்தனர், ஒரே ஒரு சீனப் பயணியைத்தவிர, அவன் கன்ப்யூசியசின் மாணவன், காப்பிக் கடையின் ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்து இந்த விவாதங்களில் கலந்து கொள்ளாமல் இருந்தான். அங்கே அமர்ந்து தேனீர் அருந்திக்கொண்டு மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனித்துக் கொண்டிருந்தான், ஆனால் அவனாக எதுவும் பேசவில்லை.
இதை துருக்கியன் கவனித்து விட்டான், அவனிடம் இவ்வாறு ஒரு வேண்டுகொள் விடுத்தான்:
"நான் சொன்னது சரிதானே, என்னருமை சீனப்பயணியே. நீங்கள் ஏனோ அமைதி காக்கின்றீர்கள், நீங்கள் பேசினால் என்னுடைய கருத்தினை ஒத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் உங்கள் நாட்டு வணிகர்கள், என்னிடம் உதவிக்காக வருவார்கள், சொல்லுங்கள் உங்கள் சீன நாட்டில் எவ்வளவோ மதங்கள் அறிமுகம் செய்யப்பட்டன, ஆனால் சீனர்கள் முகம்மதுவின் வழியை மிகச் சிறந்ததென்று கருதி மனமுவந்து ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். என் வார்த்தைகளை உறுதிப்படுத்துங்கள், எங்களிடம் உங்களது கருத்தினைச் சொல்லுங்கள் கடவுளையும் அவரது தூதரையும் பற்றி."
"ஆமாம், ஆமாம்," மற்றவர்கள் சொன்னார்கள், சீனப்பயணியைப் பார்த்து, " நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கின்றோம்."
கன்ப்யூசியசின் மாணவனான சீனப்பயணி கண்களை மூடி சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கினான். பிறகு கண்களைத் திறந்தான், தனது உடையிலிருந்து கைகளை நீட்டி மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு மென்மையான குரலில் பின்வருமாறு பேச ஆரம்பித்தான்.
"கணவான்களே, எனக்குப்புரிகின்றது என்னவென்றால், கடவுள் நம்பிக்கையை வைத்துப் பார்க்கும் பொழுது, வெறும் வீண் தற்பெருமைதான் ஒவ்வொருவரின் நம்பிக்கையும் மற்றவர்களின் நம்பிக்கையுடன் ஒத்துப்போகாமல் தடுக்கின்றது. நீங்கள், நான் சொல்வதைக் கவனமுடன் கேட்க முடிந்தால், உங்களுக்கு ஒரு கதை சொல்லப்போகிறேன் அது எடுத்துக்காட்டுடன் உங்களுக்கு விளங்கும்.
" நான் சீனாவிலிருந்து உலகைச் சுற்றிவரும் ஓர் ஆங்கில நீராவிக்கப்பலின் மூலம் இங்கு வந்து சேர்ந்தேன். வரும் வழியில் சுமத்ரா தீவில் நல்ல தண்ணீருக்காக நின்றோம். அது நண்பகல் நேரம், எங்களில் சிலர் கீழே இறங்கினோம், கடற்கரையில் இருந்த தென்னை மரங்களின் நிழலில் இளைப்பாறினோம், அந்த இடமொன்றும் பக்கத்திலுள்ள கிராமத்திலிருந்து ரொம்பத்தூரத்தில் இல்லை. நாங்களெல்லாம் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தோம்.
" நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்கு கண்பார்வையற்ற ஒருவர் வந்தார். பிற்பாடு அவரைப்பற்றி எங்களுக்குத் தெரியவந்தது என்னவென்றால், அவர் நீண்ட நாட்களாக தீவிரமாக சூரியனை உற்று நோக்கிக் கொண்டு அதிலிருந்து வரும் ஒளியை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்ததால் அவருக்குப் பார்வை பறிபோனது என்று.
"அவர் அதை நீண்ட நெடு நாட்களாக ஆராய்ந்து கொண்டிருந்தார், பார்வை மாறாமல் சூரியனையே கவனித்துக் கொண்டிருந்தார், முடிவில் அந்த ஒளியினால் அவரது கண்கள் பாதிக்கப்பட்டு பார்வையை இழந்தார்.
"அவர் தனக்குள் சொல்லிக்கொண்டார்:"
"கதிரவனின் ஒளி நீர்மம் அல்ல; அப்படி இருந்தால் அதை ஒரு பாத்திரத்தில் இருந்து இன்னொரு பாத்திரத்துக்கு மாற்ற முடியும், அதை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்ல முடியும். அது நெருப்பும் அல்ல அது அப்படி இருந்தால் தண்ணீரைக்கொண்டு அணைத்து விட முடியும்.
"அது அரூபம் அல்ல ஏனென்றால் அதைக் கண்ணால் பார்க்க முடிகிறதே; அது வேறு வகை தின்மப் பொருளும் அல்ல, அதை நகர்த்த முடியவில்லை அல்லவா. எனவே கதிரவனின் ஒளி என்பது நீர்மமோ நெருப்போ அரூபமோ தின்மமோ அல்ல, சொல்லப்போனால் அது எதுவுமே அல்ல!"
"இவ்வாறு அவர் தர்க்கம் செய்தார், முடிவாக சூரியனையே பார்த்துக் கொண்டு அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்ததால் அவர் தனது பார்வையையும் தனது அறிவையும் இழந்தார். அவர் தனது பார்வையை இழந்ததால் முழுதாக நம்பத்தலைப்பட்டார், சூரியன் என்ற ஒன்றே இல்லை என்று.
"இந்த மனிதருடன் ஓர் அடிமையும் வந்தான், தென்னை மரத்தடியில் அவரை அமர வைத்தான், தரையில் கிடந்த தேங்காயை எடுத்தான், இரவுக்கான விளக்கினைச் செய்தான், தேங்காயின் நாரைக்கொண்டு திரி செய்தான், கொப்பறையிலிருந்து எண்ணெயெடுத்தான், திரியை ஊறவைத்துக் கொழுத்தினான்.
" அடிமை இவ்வாறு செய்தபோது பெருமூச்சு விட்டபடி அந்த மனிதர் சொன்னார்:
" நல்லது அடிமையே, நான் சொன்னது சரி தானே சூரியன் என்ற ஒன்றே இல்லை என்று? நீ பார்க்கிறாயா இருள் என்றால் என்ன வென்று? இன்னும் கூட மக்கள் சொல்கிறார்கள் சூரியன் இருக்கிறதென்று...அப்படி இருந்தால், அது என்ன?"
"எனக்குத் தெரியாது சூரியன் என்ன வென்று", அடிமை சொன்னான், "அது என்னுடைய வேலை இல்லை. ஆனால் எனக்குத் தெரியும் ஒளி என்றால் என்னவென்று. இங்கே நான் இரவுக்கான வெளிச்சத்தை உருவாக்கி விட்டேன். இதன் உதவியுடன் உங்களுக்கு நான் சேவை செய்யமுடியும். என்னால் குடிசைக்குள் என்ன இருக்கின்றது என்று இப்போது தெளிவாக கண்டறிய முடியும்.
அடிமை இப்போது தேங்காய்த் தொட்டியை எடுத்துக் கொண்டு சொன்னான் : "இது தான் எனது சூரியன்."
ஊன்றுகோலுடன் அங்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு முடவன் இந்த வார்த்தைகளைக்கேட்டுச் சிரித்தான்: " நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுதும் குருடாகி விட்டீர்கள்," அவன் பார்வை இழந்தவரைப் பார்த்துச் சொன்னான், "சூரியன் என்றால் என்ன வென்று தெரியாமல். நான் உங்களுக்குச் சொல்கிறேன் அது என்னவென்று. சூரியன் ஒரு நெருப்புப் பந்து, ஒவ்வொரு நாள் காலையிலும் கடலில் இருந்து எழுகிறது பிறகு ஒவ்வொரு மாலையிலும் நம் தீவின் மலைகளை எல்லாம் தாண்டிச் சென்று கீழே போய் மறைகிறது. நாங்கள் எல்லாம் அதைப் பார்த்திருக்கிறோம், நீங்கள் கூடக் கண்பார்வை கொண்டிருந்தால் அதைப் பார்த்திருப்பீர்கள்.

இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த மீனவன் ஒருவன் சொன்னான்:
" இங்கே தெளிவாகத் தெரிகிறது நீங்கள் இந்தத் தீவை விட்டு வேறு எங்கேயும் போயிருக்க மாட்டீர்கள் என்று ஏனென்றால் நீங்கள் முடமானவர். அவ்வாறு இல்லை என்றால், என்னைப் போல நீங்களும் படகில் சுற்றி இருப்பீர்கள். உங்களுக்கும் தெரிந்திருக்கும் சூரியன் மலைகளுக்கிடையில் மறைவதில்லை என்று. ஆனால் அது காலையில் கடலில் தோன்றி இரவில் கடலில் மறைகின்றது. நான் என்ன சொல்கிறேனோ அது உண்மை. நான் அதை ஒவ்வொரு நாளும் என் கண்களால் காண்கிறேன்.
பிறகு எங்களுடன் வந்திருந்த ஓர் இந்தியன் அவனை இடை மறித்துப் பேசினான்:

" இப்படிப்பட்ட பகுத்தறிவாளன் மூடத்தனமாகப் பேசுவதைக் கண்டு நான் அதிர்ந்து போனேன். எப்படி ஒரு நெருப்புக் கோளம் நீரில் மூழ்கி எழுந்து அணைக்கப்படாமல் இருக்க முடியும்? சூரியன் ஒரு நெருப்புக் கோளம் அல்ல, அது சூரியதேவன், ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் தேரில் அமர்ந்திருக்கின்றார், அது மேரு மலையை வலம் வருகின்றது. சில நேரங்களில் கெட்ட பாம்புகளான ராகு கேது போன்றவை அவரைக் கவ்வும், அப்போது பூமி இருளடையும்.

"ஆனால் எங்கள் மத குருக்கள் தேவரை விடச்சொல்லி வேள்வி நடத்தி வேண்டுவார்கள். உங்களைப்போன்ற அறிவற்றவர்கள், இந்தத் தீவை விட்டு வேறு எங்கேயும் போகாதவர்கள் தான், சூரியன் தங்களது நாட்டுக்கு மட்டுமே வெளிச்சம் கொடுக்கிறார் என்று சொல்வார்கள்.
பிறகு அங்கிருந்த ஓர் எகிப்துக் கப்பல் தலைவன் தன் பங்கிற்குப் பேசினான்
"இல்லை," அவன் சொன்னான், " நீங்களும் தவறாகவே சொல்கிறீர்கள். சூரியன் தேவரல்ல, இந்தியாவையும் மேரு மலையையும் மட்டுமே அவர் சுற்றி வரவில்லை. நான் கருங்கடல் முதல் , அரேபியக் கடல் எல்லைகள் எல்லாம் பார்த்து விட்டு , மடகாஸ்கர் முதல் பிலிப்பைன்ஸ் வரை எல்லாம் சென்றுள்ளேன். சூரியன் அங்கேயும் தான் ஒளிர்கின்றார், இந்தியாவில் மட்டுமல்ல.
"அது ஒரு மலையை மட்டும் சுற்றிவர வில்லை, அது கிழக்கே நெடுந்தொலைவில் எழு கின்றது, அது எழும் இடம் ஜப்பானையும் தாண்டி இருக்கின்றது, அது மேற்கில் ரொம்ப தூரத்தில் , இங்கிலாந்தையும் தாண்டிச் சென்று மறைகின்றது. அதனால் தான் ஜப்பானியர்கள், தங்கள் நாட்டை 'நிப்பான்' என்கிறார்கள், அதன் பொருள் சூரியனின் பிறப்பிடம் என்பதாகும். எனக்கு இது நன்கு தெரியும், நான் என் கண்ணாலேயே இதைப் பல முறை பார்த்திருக்கிறேன், என் தாத்தாவால் பல முறை சொல்லக் கேட்டிருக்கிறேன், அவர் கடலின் முடிவு வரை சென்று வந்தவராக்கும்."

அவன் அத்ற்கும்மேலே சொல்லியிருப்பான், ஆனால் ஆங்கிலேய கடல்பயணி அவனை இடைமறித்தான்:
"சூரியனின் பயணத்தை இங்கிலாந்து மக்கள் அறிந்ததைப்போல அறிந்தவர்கள் உலகில் எந்த ஒரு நாட்டிலும் இல்லை. சூரிய்ன் எங்கும் உத்திப்பதோ மறைவதோ இல்லை. அது பூமியை வலம் வருகின்றது. நாம் இதை உறுதியாகச் சொல்ல முடியும், நாம் உலகை சுற்றி வந்தோமானால், நாம் எங்கேயும் சூரியனை முட்டி நிற்க முடியாது. எங்கெங்கு நாம் சென்றாலும் அறியலாம், இங்கிருப்பதைப்போலவே சூரியன் காலையில் தோன்றி மாலையில் மறைகின்றது."
அந்த ஆங்கிலேயன் ஒரு குச்சியை எடுத்து மணலில் வட்டங்கள் வரைந்து சூரியன் எப்படி வான வீதியில் சுழல் கிறது என்று விளக்க முற்பட்டான். ஆனால் அவனால் சரியாக விளக்க முடியாமல் தடுமாறினான் காப்பலின் தலைவனைச் சுட்டிக்காட்டிச் சொன்னான்:
"இந்த மனிதர் என்னை விட நன்கு தெரிந்தவர். இவர் தெளிவாக அதை விளக்குவார்."

கப்பல் தலைவன் புத்திக்கூர்மையானவன், தன்னைப் பேசச் சொல்லும் வரை அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தான். எல்லோரும் அவனை ஆர்வத்துடன் நோக்கினார்கள், அப்போது அவன் பேசலானான்.
"நீங்கள் எல்லாம் ஒருவரை ஒருவர் தவறாக வழி நடத்துகிறீர்கள், ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்கிறீர்கள். சூரியன் உலகத்தைச் சுற்ற வில்லை, மாறாக உலகம் தான் சூரியனைச் சுற்றுகிறது, பூமி இருபத்தி நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ளவும் செய்கிறது, இது ஜப்பானுக்கு மட்டுமல்ல பிலிப்பைன்சுக்கும் தான் இப்போது நாமிருக்கும் சுமத்ராவுக்கும் தான் ஆப்பிரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் மற்றுமுள்ள எல்லா நாடுகளுக்கும் தான்.
"சூரியன் ஒரு மலைக்கு மட்டும் வெளிச்சம் கொடுக்க வில்லை, ஒரு தீவுக்கு மட்டும் ஒளி கொடுக்காவில்லை, ஓர் உலகத்துக்கு மட்டும் ஒளி கொடுக்கவில்லை, எல்லா கோள்களுக்கும் அதைக் கொடுக்கிறார் நம் உலகத்துக்கு ஒளியை அளிப்பதைப் போலவே. உங்கள் காலடியில் இருக்கும் தரையை விடுங்கள், வானில் உள்ள சொர்க்கத்தைப் பாருங்கள் நீங்கள் எல்லாம் தெளிவாவீர்கள். பிறகு உணர்வீர்கள் சூரியன் உங்களுக்கு மட்டுமே அல்லது உங்களது நாட்டுக்கு மட்டுமே ஒளி கொடுக்கவில்லை என்று.
கப்பல் தலைவன் அவ்வாறு பேசினான், அவன் கடலிலே நீண்ட தூரம் போயிருக்கிறான், நீண்ட நேரம் வானிலுள்ள கோள்களை எல்லாம் கவனித்திருக்கிறான்.
"அதனால், நம்பிகையை அடிப்படையாகக் கொண்டு பேசுவது," சீனப்பயணி தொடர்ந்தான், "வெறும் தற் பெருமையும் மூட நம்பிக்கையும் தான், மனிதர்களுக்கிடையில் தவறு ஏற்படக் காரணமாகிறது. சூரியனைப் போலவே தான் கடவுளும். ஒவ்வொரு மனிதனும் தனக்கென தனியானதொரு கடவுள் அல்லது தன் நாட்டுக்காவது ஒரு கடவுள் வேண்டுமென விரும்புகிறான். ஒவ்வொரு நாடும் கடவுளின் கோவிலைத் தன் நாட்டில் நிறுவ விரும்புகிறது. அவரது பெருமைக்கு இந்த உலகமே போதாது.
"எந்தக் கோவிலாவது கடவுளால் கட்டப்பட்ட கோவிலைப்போல எல்லா மக்களையும் ஒன்று சேர இணைக்கும் ஒரே நம்பிக்கை கொண்ட ஒரே மதத்தைப் போல இருக்கிறதா? ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு வழிபாட்டு முறை, பாதுகாக்கப்பட்ட கூறை, அதன் விளக்குகள், ஓவியங்களும் சிற்பங்களும், கல்வெட்டுகள், அதன் சட்ட திட்டங்கள், தான தருமங்கள், அதன் கோபுரங்கள், அதன் பூசாரிகள். எந்தக் கோவிலாவது கடலைப்போலவோ, சொர்க்கத்தைப் போலவோ சூரியனை, நிலவை விண் மீன்களைப் போலவோ ஒளிர்கிறதா, எந்தச்சிலையாவது வாழும் மனிதர்களுக்கு ஒப்பாகிறதா? இவர்களைப்போல அன்பு காட்டுகிறதா? மனிதர்களுக்கு உதவுகிறதா?
"கடவுளின் கருணையை எளிதில் அறிய முடிகிறதா? மனிதனுக்காக பிற உயிர்களுக்காக அவர் அளித்த ஆசீர்வாதங்களைப் புரிந்து கொள்ள முடிகிறதா? மனிதனின் இதயத்தில் எழும் கருணையை விடத் தெளிவாக எங்காவது சட்டங்கள் எழுதப்பட்டிருக்கிறதா? அன்பு செலுத்தும் ஓர் ஆணும் பெண்ணும் தங்களுக்குள் விட்டுக் கொடுக்கும் பேரன்புக்கு ஈடாக எந்த ஒரு தியாகம் இருக்கிறது? ஒரு நல்ல மனிதனின் இதயத்தை விட எந்த கோபுரம் சிறந்தது? கடவுள் இதை விட வேறு எதை விரும்புவார்?
"கடவுளைப்பற்றி எவ்வளவு உயர்வாக ஒருவன் சிந்திக்கிறானோ அவ்வளவு அதிகமாக அவரை அறிகிறான். அவரை அவன் தெளிவாக அறியும் போது அவருக்கு அருகில் அவன் செல்கிறான், அவரது நல்லெண்ணம், கருணை, பிறரிடத்தில் காட்டும் அன்பு ஆகிய நற்குணங்கள் இவனுக்கும் வருகிறது.
"சூரியன் ஒளியால் இந்த உலகம் நிறைகிறது, அதனால் சொல்கிறேன் அறியாத மனிதர்களைத் திட்டாதீர்கள், அவன் தனது மூட நம்பிக்கையால் கதிரவனின் ஒரே ஒரு ஒளிக்கீற்றினை மட்டுமே காண்கிறான். அதே போல ஆத்திகரையும் திட்டாதீர்கள் அவர்களும் பார்வை இழந்தவர்களைப் போல சூரியன் இல்லை என்று சொல்பவர்களே."
அவ்வாறு அந்த சீனப்பயணி சொல்லிமுடித்த போது, அந்த காப்பிக்கடையில் இருந்த அனைவரும் அமைதியானார்கள், அதற்குப் பிறகு அவர்கள் யாருடைய நம்பிக்கை பெரிது என்று தங்களுக்குள் வாதிட்டுக் கொள்ளவில்லை.

Friday, 9 September 2016

WORLD TOP WRITER LEO TOLSTOY - THE GURU OF MAHATMA GANDHI BORN 1828 SEPTEMBER 9


WORLD TOP WRITER LEO TOLSTOY - 
THE GURU OF MAHATMA GANDHI 
BORN  1828 SEPTEMBER 9 










Count Lev Nikolayevich Tolstoy  9 September [O.S. 28 August] 1828 – 20 November [O.S. 7 November] 1910), usually referred to in English as Leo Tolstoy, was a Russian writer who is regarded as one of the greatest authors of all time.


Leo Tolstoy
L.N.Tolstoy Prokudin-Gorsky.jpg
Tolstoy in May, 1908, four months before his 80th birthday (photographed at Yasnaya Polyana by Sergey Prokudin-Gorsky; the first colour photograph taken in Russia)
Native nameЛев Никола́евич Толсто́й
BornLev Nikolayevich Tolstoy
September 9, 1828
Yasnaya PolyanaRussian Empire
DiedNovember 20, 1910 (aged 82)
Astapovo, Russian Empire
Resting placeYasnaya Polyana
OccupationNovelist, short story writer, playwright, essayist
LanguageRussian, French
NationalityRussian
Period1852–1910
Notable worksWar and Peace
Anna Karenina
A Confession
The Kingdom of God Is Within You
Resurrection
SpouseSophia Tolstaya (m. 1862; his death 1910)
Children14

Signature


Born to an aristocratic Russian family in 1828, he is best known for the novels 

Add caption

Add caption

Add caption











War and Peace (1869) and 
Anna Karenina (1877), often cited as pinnacles of realist fiction. 

He first achieved literary acclaim in his twenties with his semi-autobiographical trilogy, Childhood, Boyhood, and Youth (1852–1856), and Sevastopol Sketches (1855), based upon his experiences in the Crimean War. 


Tolstoy's fiction includes dozens of short stories and several novellas such as The Death of Ivan Ilyich, Family Happiness, and Hadji Murad. He also wrote plays and numerous philosophical essays.




In the 1870s Tolstoy experienced a profound moral crisis, followed by what he regarded as an equally profound spiritual awakening, as outlined in his non-fiction work A Confession. His literal interpretation of the ethical teachings of Jesus, centering on the Sermon on the Mount, caused him to become a fervent Christian anarchist and pacifist. 



















Tolstoy's ideas on nonviolent resistance, expressed in such works as The Kingdom of God Is Within You, were to have a profound impact on such pivotal 20th-century figures as Mohandas Gandhi,


















[2] Martin Luther King, Jr.,[3] and James Bevel. 


Tolstoy also became a dedicated advocate of Georgism, the economic philosophy of Henry George, which he incorporated into his writing, particularly Resurrection

Tolstoy was born at Yasnaya Polyana, a family estate 12 kilometres (7.5 mi) southwest of Tula, Russia and 200 kilometers (120 mi) south of Moscow. The Tolstoys were a well-known family of old Russian nobility, tracing their ancestry to a mythical Lithuanian noble Indris.

[4][5] He was the fourth of five children of Count Nikolai Ilyich Tolstoy, a veteran of the Patriotic War of 1812, and Countess Mariya Tolstaya (Volkonskaya). Tolstoy's parents died when he was young, so he and his siblings were brought up by relatives. 


In 1844, he began studying law and oriental languages at Kazan University. His teachers described him as "both unable and unwilling to learn."[6] Tolstoy left the university in the middle of his studies, returned to Yasnaya Polyana and then spent much of his time in Moscow and Saint Petersburg.








 In 1851, after running up heavy gambling debts, he went with his older brother to the Caucasus and joined the army. It was about this time that he started writing.


His conversion from a dissolute and privileged society author to the non-violent and spiritual anarchist of his latter days was brought about by his experience in the army as well as two trips around Europe in 1857 and 1860–61. 

Others who followed the same path were 
Alexander Herzen, 
Mikhail Bakunin and 
Peter Kropotkin. 

During his 1857 visit, Tolstoy witnessed a public execution in Paris, a traumatic experience that would mark the rest of his life. Writing in a letter to his friend Vasily Botkin: "The truth is that the State is a conspiracy designed not only to exploit, but above all to corrupt its citizens ... Henceforth, I shall never serve any government anywhere."
MAXIM GORKY AND TOLSTOY 


[7] Tolstoy's concept of non-violence or Ahimsa was bolstered when he read a German version of the Tirukkural. He later instilled the concept in Mahatma Gandhi through his A Letter to a Hindu when young Gandhi corresponded with him seeking his advice.[8]









His European trip in 1860–61 shaped both his political and literary development when he met Victor Hugo, whose literary talents Tolstoy praised after reading Hugo's newly finished Les Misérables.
ANTAN SEGAV
The similar evocation of battle scenes in Hugo's novel and Tolstoy's War and Peace indicates this influence. 








Tolstoy's political philosophy was also influenced by a March 1861 visit to French anarchist Pierre-Joseph Proudhon, then living in exile under an assumed name in Brussels. Apart from reviewing Proudhon's forthcoming publication, La Guerre et la Paix (War and Peace in French), whose title Tolstoy would borrow for his masterpiece, the two men discussed education, 
as Tolstoy wrote in his educational notebooks: "If I recount this conversation with Proudhon, it is to show that, in my personal experience, he was the only man who understood the significance of education and of the printing press in our time."








Fired by enthusiasm, Tolstoy returned to Yasnaya Polyana and founded 13 schools for children of Russia's peasants, who had just been emancipated from serfdom in 1861. Tolstoy described the school's principles in his 1862 essay 


ANNA KAREENA - REAL LIFE
"The School at Yasnaya Polyana".[9] Tolstoy's educational experiments were short-lived, partly due to harassment by the Tsarist secret police. However, as a direct forerunner to A. S. Neill's Summerhill School, the school at Yasnaya Polyana[10] can justifiably be claimed the first example of a coherent theory of democratic education.










Tolstoy's grave with flowers
at Yasnaya Polyana

Tolstoy died in 1910, at the age of 82. Just prior to his death, his health had been a concern of his family, who were actively engaged in his care on a daily basis. During his last few days, he had spoken and written about dying. Renouncing his aristocratic lifestyle, he had finally gathered the nerve to separate from his wife, and left home in the middle of winter, in the dead of night.

[11] His secretive departure was an apparent attempt to escape unannounced from Sophia's jealous tirades. She was outspokenly opposed to many of his teachings, and in recent years had grown envious of the attention which it seemed to her Tolstoy lavished upon his Tolstoyan "disciples".


Tolstoy died of pneumonia[12] at Astapovo train station, after a day's rail journey south.[13] The station master took Tolstoy to his apartment, and his personal doctors were called to the scene. He was given injections of morphine and camphor.












The police tried to limit access to his funeral procession, but thousands of peasants lined the streets. Still, some were heard to say that, other than knowing that "some nobleman had died", they knew little else about Tolstoy.[14]
NIKOLA TSLA


According to some sources, Tolstoy spent the last hours of his life preaching love, nonviolence, and Georgism to his fellow passengers on the train.[15]













Personal life

On September 23, 1862, Tolstoy married Sophia Andreevna Behrs, who was 16 years his junior and the daughter of a court physician. She was called Sonya, the Russian diminutive of Sofia, by her family and friends.[16] They had 13 children, eight of whom survived childhood:[17]



Tolstoy's wife Sophia and their daughter Alexandra
Count Sergei Lvovich Tolstoy (July 10, 1863 – December 23, 1947), composer and ethnomusicologist
Countess Tatyana Lvovna Tolstaya (October 4, 1864 – September 21, 1950), wife of Mikhail Sergeevich Sukhotin
Count Ilya Lvovich Tolstoy (May 22, 1866 – December 11, 1933), writer
Count Lev Lvovich Tolstoy (June 1, 1869 – October 18, 1945), writer and sculptor
Countess Maria Lvovna Tolstaya (1871–1906), wife of Nikolai Leonidovich Obolensky
Count Peter Lvovich Tolstoy (1872–1873), died in infancy
Count Nikolai Lvovich Tolstoy (1874–1875), died in infancy
Countess Varvara Lvovna Tolstaya (1875–1875), died in infancy
Count Andrei Lvovich Tolstoy (1877–1916), served in the Russo-Japanese War
Count Michael Lvovich Tolstoy (1879–1944)
Count Alexei Lvovich Tolstoy (1881–1886)
Countess Alexandra Lvovna Tolstaya (July 18, 1884 – September 26, 1979)
Count Ivan Lvovich Tolstoy (1888–1895)

The marriage was marked from the outset by sexual passion and emotional insensitivity when Tolstoy, on the eve of their marriage, gave her his diaries detailing his extensive sexual past and the fact that one of the serfs on his estate had borne him a son.[16] Even so, their early married life was happy and allowed Tolstoy much freedom to compose War and Peace and Anna Karenina with Sonya acting as his secretary, proofreader and financial manager.[16]
Sophia Tolstoy Penkrat, associate director, ...


However, their later life together has been described by A. N. Wilson as one of the unhappiest in literary history. 









Tolstoy's relationship with his wife deteriorated as his beliefs became increasingly radical.
Leo Tolstoy s descendants Tatiana
left and Sergei right Stock Photo
This saw him seeking to reject his inherited and earned wealth, including the renunciation of the copyrights on his earlier works.


















Films_Tolstoy Sofya Tolstoy (Helen Mirren) and
Leo Tolstoy (Christopher Plummer). Stephan Rabold photo,


The Tolstoy family left Russia in the aftermath of the Russian Revolution and the subsequent establishment of the Soviet Union, and Leo Tolstoy's relatives and descendants today live in Sweden, Germany, the United Kingdom, France and the United States. Among them are Swedish singer Viktoria Tolstoy and Swedish landowner Christopher Paus, Herresta.